தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்!

தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்!

Wed, 24/01/2018 
உள்ளூராட்­சித் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு ஆரம்­பித்­து­விட்­ட­போ­திலும்­கூட, வடக்கு மாகா­ணத்­தில் தேர்­தல் மும்­மு­ரத்­தை­யும் பர­ப­ரப்­பை­யும் காண­மு­டி­ய­வில்லை. அந்­த­ள­வுக்­குக் களம் அமை­தி­யா­கவே கிடக்­கின்­றது.

விர­விக்­கி­டக்­கும் இந்த அமை­தி­யைக் குலைத்­துத் தேர்­தல் கல­க­லப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் எழுப்­பிய குற்­றச்­சாட்டு வந்­தது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­குப் பதி­ல­ளிக்­கப்­போக, அது ஒரு பர­ப­ரப்­பா­கத் தொற்­றிக்­கொண்­டது.

தேர்­தல் காலங்­க­ளில் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கு­வ­தும் துரோ­கிப் பட்­டங்­க­ளைச் சூட்­டு­வ­தும் தமிழ் கூறும் நல்­லு­ல­கில் ஒன்­றும் புதி­தில்­லைத்­தான். என்­றா­லும் சிவ­சக்தி ஆனந்­தன் கூறி­யி­ருப்­பது அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்டு என்­ப­து­டன், ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யி­னர் தமது சொந்த அர­சி­யல் நல­னுக்­கா­கத் தமிழ் மக்­க­ளின் நலன்­க­ளைக்­கூ­டத் தமது காலில் தூக்­கிப் போட்­டுக் மிதிக்­க­வும் தயங்­க­மாட்­டார்­கள் என்­ப­தை­யும் நிரூ­பித்­தி­ருக்­கி­றது.

தமி­ழ­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அபி­வி­ருத்­திக்­காக வழங்­கப்­பட்ட 2 கோடி ரூபா நிதி அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட லஞ்­சம் என்­ப­து­தான் அவர் கிளப்­பி­விட்ட குற்­றச்­சாட்டு. அடிப்­ப­டை­யில் தேர்­த­லுக்­காக அவர் திட்­ட­மிட்­டுப் பரப்­பிய பொய் அது என்­ப­தில் மாற்­றுக் கருத்­தில்லை.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சி­னால் இந்த 2 கோடி ரூபா நிதி முத­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டது. பின்­னர் அது சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் விரி­வாக்­கப்­பட்­டது.

இவ்­வாறு அந்­தக் கட்­சி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­க­ள­வில் நிதி ஒதுக்­கப்­ப­டு­வது தேசி­யக் கட்­சி­களை வடக்­கில் வளர்ப்­ப­தற்­கான மறை­மு­கத் திட்­டம் என்று அச்­சப்­பட்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், இந்­தப் பிரச்­சி­னையை தலைமை அமைச்­ச­ரி­டம் காட்­ட­மாக எழுப்­பி­னர்.

இதை­ய­டுத்தே கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் அந்­த­ள­விற்­கான நிதியை ஒதுக்­க­வேண்­டிய நிலமை தலைமை அமைச்­ச­ருக்கு ஏற்­பட்­டது.
இந்த நிதி ஒதுக்­கீடு என்­பது பணத்­தைத் தூக்கி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கைக­ளில் கொடுப்­பது அல்ல என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.

அது சிவ­சக்தி ஆனந்­த­னுக்­கும் தெரி­யும். ஏனெ­னில் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வரவு செல­வுத் திட்­டத்­தின் கீழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­ப­டும் ஒதுக்­கீட்டு நிதி­யைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளில் அவ­ரும் ஒரு­வர். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சால் ஒதுக்­கப்­பட்ட நிதி­யும் அவ்­வா­றா­னதே.

நிதி ஒதுக்­கீடு என்று சொல்­லப்­பட்­டா­லும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதில் கிடைக்­கக்­கூ­டிய ஆகக்­கூ­டு­த­லான சலுகை, தமது பகு­தி­க­ளில் செய்­யக்­கூ­டிய அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு அடை­யா­ளம் காட்­டு­வது மட்­டுமே.

அதற்கு மேல் அவர்­க­ளுக்கு அதில் எந்­தப் பங்­கும் கிடை­ யாது. அவர்­கள் கொடுக்­கும் திட்­டம் ஏற்­பு­டை­யது என்­றால் அமைச்சு அதனை அங்­கீ­க­ரித்து வழக்­க­மான அரச நடை­மு­றை­க­ளின் கீழ் அதனை ஓர் அரச அபி­வி­ருத்­தித் திட்­ட­மா­கச் செயற் படுத்­தும்.

ஆக மொத்­தத்­தில் வடக்­கில் தமிழ் மக்­க­ளுக்­குக் கொழும்பு அரசு செய்­யும் அபி­வி­ருத்­தித் திட்­டத்தை கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடை­யா­ளப்­ப­டுத்­தி­னார்­கள் என்­ப­தைத் தவிர இதில் வேறு சலு­கை­கள் எது­வும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­காது. அப்­ப­டிச் சொல்­வ­தும் முழுப் பொய்.

போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அரசு அதி­க­ அள­வில் நிதி ஒதுக்­கீட்டை வழங்­க­வேண்­டும் என்று தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், வடக்கு மாகாண சபை­யி­ன­ரும் வரு­டா­வ­ரு­டம் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­ற­னர். கடந்த ஆண்டு நடந்த வரவு செல­வுத் திட்ட விவா­தத்­தின் போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன்­கூட இதே கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

ஆனால், அத்­த­கைய அதிக நிதிக்­கான சிறி­ய­தொரு வாய்ப்­புக் கிடைக்­கும்­போது, அத­னைத் தமது சொந்த அர­சி­ய­லுக்­காக மிக மோச­மான விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்­கக்­கூ­டிய சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­வர்­கள் உண்­மை­யி­லேயே மக்­க­ளுக்­கா­கத்­தான் பேசு­கி­றார்­களா என்­பதை மக்­கள் உய்த்­து­ண­ர­வேண்­டும்.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் நிதி 2 கோடி ரூபா­வுக்­கான திட்­டங்­களை சிவ­சக்தி ஆனந்தன் முன்­வைத்­தால் அவ­ருக்­கும் அது கிடைக்­கும். அதை­யும் செய்­யா­மல், தனது மக்­க­ளின் அபி­வி­ருத்­தி­யைத் தடுப்­பது மட்­டு­மல்ல, அதைத் தமது கீழ்த்­த­ர­மான அர­சி­ய­லுக்கு அவர் பயன்­ப­டுத்­து­வ­தை­யு­மிட்டு அவ­ருக்கு வாக்­க­ளித்த மக்­கள் சிந்­திக்க வேண்­டும்.

http://newuthayan.com/story/64302.html


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply