முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. இவர் இனி­யும் ஒன்­று­ம­றி­யாத அப்­பா­வி­போன்று வேடம் புனை­வது தேவை­யற்ற ஒன்­றா­கும். ஏனென்­றால் , அவ­ரது இரட்டை வேடம் ஏற்­க­னவே அம்­ப­ல­மாக்­கப்­பட்­டுள்­ளது.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த ஒரு­வர், ஒரு மாகா­ணத்­தின் முத­ல­மைச்­சர் பத­வியை ஏற்­ப­தென்­பது அவ­ருக்­குக் கௌர­வக் குறை­வான தொன்­றென நீதித்­து­றை­யு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் கூறு­ கின்­ற­னர். ஆனால் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இதை­யெல்­லாம் பொருட்­ப­டுத்­தா­மல், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் வந்து அமர்ந்து கொண்­டார். அமர்ந்­து­கொண்­டார் எனக் கூறு­வ­தற்­குப் பதி­லாக அமர்த்­தப்­பட்­டார் எனக் கூறு­வ­து­தான் சரி­யா­னது.

வெளி­யில் தெரிய வந்த முத­ல­மைச்­ச­ரது உண்­மை­யான முகம்

முதலமைச்சரது உண்­மை­யான முகம் தற்­போது மக்­க­ளுக்­குத் தெரிய வந்­துள்­ளது. தமி­ழர்­க­ளி­டையே குழப்­பத்­தை­யும், பிள­வை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவா இந்த முன்­னாள் நீதி­பதி கொழும்­பி­லி­ருந்து வட­ப­கு­திக்கு அழைத்து வரப்­பட்­டார்? என்ற கேள்­வி­கூ­டத் தற்­போது எழுந்து நிற்­கின்­றது. அந்த அள­வுக்கு மக்­க­ளின் நம்­ப­கத் தன்­மை­யை­வ­டக்கு முத­ல­மைச்­சர் இழந்து நிற்­கின்­றார்.

தாமே அமைத்த ­விசாரணைக் குழு­வின் பரிந்­து­ரை­க­ளைக் குப்­பைக் கூடைக்­குள் வீசிய அவ­ ரது செயல் நகைப்­புக்­கு­ரி­யது. ஆனால் ஊழல் புரிந்­த­வர்­க­ ளைக் காப்­பாற்­று­வ­தற்கு உறு­து­ணை­யாக இருப்­ப­வர்­க­ளும் குற்­ற­வா­ளி­கள்­தான் என்­பது கவ­னத்­தில் கொள்­ளத் தக்­கது.

இதே­வேளை கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்ற நான்கு கட்­சி ­க­ளில் பெரிய கட்­சி­யான தமிழ் அர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய சிறிய கட்­சி­கள் மூன்­றும் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கவே முத­ல­மைச்­ச­ரால் தொடர்ந்து பத­வி­யில் நீடிக்க முடி­கின்­றது. இதை­வி­டத் தமி­ழ் அரசுக் கட்­சி­யின் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளில் சில­ரும் முத­ல­மைச்­ச­ருக்­குப் பின்­னால் நிற்­கின்­ற­ னர். முண்டு கொடுத்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் ஒரு­வர் அமைச்­ச­ரா­கி­விட்­டார்.

இவர்­கள் அனை­வ­ரும் கூட்­ட­மைப் பின் எதிர்­கா­லம் தொடர்­பாக ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தாம் பத­விச் சுகத்தை அனு­ப­விப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு கார­ணமா? அல்­ல­து­வேறு எவ­ரா­வது கார­ணமா? என்­ப­தை­யும் அவர்­கள் ஒரு கணம் எண்­ணிப் பார்க்க வேண்­டும். தம்­மைக் கௌர­வ­மான மனி­தர்­க­ளாய் உல­வு­வ­தற்கு உத­விய அந்த அமைப்­பைக் கூறு­போ­டு­வ­தற் குச் சிலர் முயற்சி செய்­யும்­போது அதை ஆத­ரிப்­ப­தும், வேடிக்கை பார்ப்­ப­தும் இவர்­க­ளுக்கு நியா­ய­மா­ன­தா­கத் தெரி­கின்­றதா?

பத­வி­யேற்ற நாள்­மு­தல் கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான போக்கை கையா­ளுகிறார்முத­ல­மைச்­சர்

சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தாம் முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற நாளி­லி­ருந்து இன்­று­வரை, கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மா­ன­ வ­ராக, தம்­மை­யொரு மக்­கள் தலை­வ­னாக உயர்த்­திக் காட்­டும் வகை­யி­லும் தமது செயற்­பா­டு­களை வகுத்­துக் கொண்­டுள்­ளார். ஆனால் இவற்­றை­யெல்­லாம் மற்­ற­வர்­கள் புரிந்து கொள்­ளா­த­வாறு நடந்து கொள்­கி­றார். அவ­ரது இத்­த­கைய செயற்­பா­டு­களை நாம் இனி­யும் அனு­ம­திக்­க­ வேண்­டுமா? என்­ப­தைத் தமிழ் மக்­கள் தான் தீர்­மா­னிக்க வேண்­டும்.

சரி­யா­க­வும், நேர்­மை­யா­க­வும் செயற்­ப­டு­கின்ற ஒரு­வரை எவ­ருமே ஆத­ரிக்­க­லாம். அவ­ருக்கு முரண்டு கொடுக்­க­லாம். ஆனால் த­வ­றான பாதை­யில் செல்­கின்ற ஒரு­வரை ஆத­ரிப்­ப­தும், அவ­ரைக் காப்­பாற்­று­வ­தற்கு முயற்சி செய்­வ­தும் மன்­னிக்க முடி­யாத குற்­ற­மா­கும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ. சுமந்­தி­ரன் தமி­ழ் அரசுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் – ஒரு மூத்த சட்­டத்­த­ரணி. கூட்­ட­ மைப்பின் தலை­மைக்கு மிக­வும் வேண்­டி­ய­வர். விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்­குப் பெரும் பங்­காற்­றி­ய­வர். ஆனால் முத­ல­மைச்­ச­ரின் தவ­றான செயற்­பா­டு­களை கூட்­ட­மைப்­பின் தலை­மைக்கு முத­லில் சுட்­டிக் காட்­டி­ய­வ­ரும் இவர்­தான். ஆனால் அப்­போது இவர் வெளி­யிட்ட கருத்­துக்கள் மற்­ற­வர்­க­ளால் தவ­றா­கப் புரிந்து கொள்­ளப்­பட்­டன. விக்­னேஸ்­வ­ரனை முற்று முழு­தாக நம்­பி­ய­வர்­கள் இவ­ரைத் தூற்­ற­வும் செய்­த­னர். கூட்­ட­மைப்­பின் தலை­மை­கூட இவ­ரைச் சரி­யா­கப் புரிந்து கொள்­ள­வில்லை.

அன்று விக்­னேஸ்­வ ­ரன் மீதான மயக்­கம் அனை­வ­ரை­யும் கட்­டிப் போட்­டி­ருந்­தது. சுமந்­தி­ரன் அன்று கூறி­யவை மிகச் சரி­யா­னவை என்­பது இன்­று­தான் பல­ருக்­கும் புரி­கின்­றது. சுமந்­தி­ரன் கூறி­யது போன்று முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக அப்­போதே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தால் இன்று உரு­வா­கி­யுள்ள மிக மோச­மான நிலைமை உரு­வா­கி­யி­ருக்க மாட்­டாது.

கூட்­ட­மைப்­புக்குள் இருந்­து­கொண்டே  அதனை விமர்­சிப்­பது தவறு

சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­குத் தனித்­து­நின்று அர­சி­யல் செய்­வ­தற்­கான சகல உரி­மை­க­ளும் உண்டு. அவ­ரது அர­சி­யல் பய­ணத்தை எவ­ருமே தடுத்து நிறுத்­தி­விட முடி­யாது. ஆனால் கூட்­ட­மைப்­புக்­குள் இருந்­து­கொண்டு அதற்கு எதி­ராக அவர் அர­சி­யல் செய்­வதை எவர்­தான் ஏற்­றுக்­கொள்­வார் கள்?

இன்று தமி­ழ் அரசுக்­கட்­சிக்­கும், கூட்­ட­மைப்­புக்­கும் விரோ­த­மான சக்­தி­கள் யாவும் வடக்கு முத­ல­மைச்­ச­ரின் கடைக்­கண் பார்­வைக்­கா­கக் காத்து நிற்­கின்­றன. நடந்து முடிந்த தேர்­தல்
க­ளில் மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப் பட்­டவர்­க­ளும் முத­ல­மைச்­ச ­ரால் பாவ­வி­மோ­ச­னம் கிடைக்­கா­ தா­வெனக் காத்­துக் கிடக்­கின்­ற­ னர். ஆனால் பாவப்­பட்­ட­வர்­கள் மற்­ற­வர்­க­ளுக்­குப் பாவ­வி­மோ­ச­னம் வழங்­கு­வ­தென்­பது நடக்­கக் கூடிய காரி­ய­மா­கத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பும், தமி­ழ் அரசுக் கட்­சி­யும் இனி­யும் பொறுமை காப்­பது, அவற்­றின் ஆத­ர­வா­ளர்­களை வெறுப்­ப­டை­யச் செய்து விடும். இங்கே இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­க­ளை­யெல்­லாம் அவர்கள் பொறு­மை­யா­கப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­களே ஒழிய அவற்றை ஏற்­றுக் கொண்­டவர்­க­ளல்ல. ஆகவே, இனி­யும் முத­ல­மைச்­ச­ ரின் நாட­ கத்தை வேடிக்கை பார்க்­காது அதற்­கொரு முற்­றுப்­புள்ளி இடப்­ப­டல் வேண்­டும்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம். முதலமைச்சர் என்ற பதவிக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர் விக்னேஸ்வரன். எந்தக் கட்சியின் ஆதரவோடு முதலமைச்சர் ஆகினாரோ அந்தக் கட்சிக்கே துரோகம் செய்பவர். ஏறிய ஏணியை எட்டி உதைப்பவர். பாலியல் சாமி பிரேமானந்தாவின் தலைமைச் சீடர். அவரிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது.

Leave a Reply