பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும்

பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும்
மருது வீடியோ

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….By வினவு செய்திப் பிரிவு -September 30, 20220

ணிரத்தினம் மற்றும் அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் இவர்கள் சம்பாதிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக- ஒரே நோக்கத்திற்காக- எதோ ஒரு கதையை எடுத்து, இந்த கதைதான் தமிழர்களின் வரலாறு என்று காட்டுகிறார்கள்.

இந்த படத்தின் விளப்பரத்தில் ஜெயம் ரவி கூறுவார், நான் சோழ தேசத்தின் காவல்காரன். சோழ மக்களுக்கு வேலைக்காரன் என்று. இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு நியாயமான விசயமாக இருக்கிறதா?

ஒரு மன்னன் எந்த காலத்தில் தன்னை வேலைக்காரன் என்று சொல்லியிருக்கிறான். அப்படி சொல்லியிருந்தால் அவன் மன்னனாக இருக்கமுடியுமா? பொய்யையும் புனை சுருட்டையும் வைத்துக்கொண்டு வரலாற்றை இவர்கள் எழுதுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்த பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஒரு மிகப்பெரிய பிராடு! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அந்த நாவலின் ஒரு மையமாக விசயம் என்னவென்றால், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டுகிறார். அவரை கொன்றது யார் என்பது மிகவும் முக்கியமான அம்சம்.

பார்ப்பனர்களுக்கு ஆதித்த கரிகாலன் கட்டுப்படவில்லை என்ற காரணத்திற்காக பார்ப்பனர்கள் அவரை கொன்றுவிட்டார்கள் என்று பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதனை மறைந்து பாண்டியர்கள் தங்கள் ஒற்றர்கள் மூலம் ஆதித்த கரிகாலனை கொலைசெய்தார்கள் என்ற ஒரு பொய்யை அந்த கதையில் வைத்திருக்கிறார்கள்.

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

இவர்களுக்கு எதிரான வரலாற்றை, வள்ளலார் முதல் பெரியார் முதல் சித்தர்கள் முதல் நமக்காக உருவாக்கி தந்த பல்வேறு வரலாற்றை நாம் பின்பற்றவேண்டும். பொன்னியில் செல்வனை தூக்கி குப்பையில் வீச வேண்டும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….


சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான்
பொன்னியின் செல்வன் திரை விமர்சனம்
மருது வீடியோ

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…By வினவு செய்திப் பிரிவு -September 30, 20220

கீழடி நாகரீகம் வேத நாகரீகத்திற்கு பிந்தையது என்று கருத்துக்கூறும் ஜெயமோகன் வசனம் எழுதி, இஸ்லாமிய மக்களையும், உழைக்கும் மக்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையே இலட்சியமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் இயக்கி, தமிழர்களை இழிவு செய்யும் வகையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கம் இரண்டாம் மொழிப்போரில் எழுந்த போது, அதை கிண்டலடித்து “எலிவலைகள் எலிகளுக்கே” என்று எழுதிய – பொன்னியின் செல்வனை எழுதிய – கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு தமிழின் பெருமையை செல்லிக்கொடுக்க போகிறார்களா?

மணிரத்தினமோ, ஜெயமோகனோ கீழடி வரலாற்றை மறுத்துவிட்டு பொன்னியின் செல்வனை ஏன் வைக்கிறார்கள் என்பதற்குள்ளாகத்தான் ஒரு பார்ப்பன ஆதரவு அரசியலும் இந்த சுரண்டல் அரசியலும் முன்னிலையில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம்.

பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக கொலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வனில் என்ன வந்துள்ளது, நீங்கள் கதை எழுதினால் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? இந்த ஆதித்த கரிகாலன் சமண மதத்திற்கு ஆதாரவான ஒரு நபராக இருந்திருக்கலாம், தாங்கள் ஒரு மிகப்பெரிய உயர் பதவிக்கு வருவதற்கு அவர் பிற்காலத்தில் தடையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தின் காரணமாக, இந்த ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் தெளிவாக சொல்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் அந்த பொன்னியின் செல்வனில் இல்லை.

குறிப்பாக ராஜராஜசோழன் காலத்தில் தனக்கு ஒரு தோசம் இருக்கிறது, அதை கழிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, ஆயிரக்கணக்கான சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பனர்களை வட நாட்டில் இருந்து கொண்டு வந்து காவிரி கரையில் – தஞ்சாவூரில் – குடியமர்ந்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன் படி குடியமர்த்துகிறார். அப்போது ஒவ்வொரு கிராமத்திற்கு மகா சபை இருந்தது. இந்த மகா சபைகளுக்கு பார்ப்பனர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற சொல்லப்படாத விதி வகுக்கப்படுகிறது.

தமிழர் பண்பாடாக உயர்த்தப்பட்டு பிறகு ஒரு இந்து பண்பாடாக மாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அந்த திரைப்படத்தில் இருக்கிறது.

குந்தவை நாச்சியார் பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறுகிறார். ஏன் மாறுகிறார். இங்கே அதிகார போட்டியில் ஒருவரை ஒருவர் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள், யார் பெரியவன் யார் சின்னவன் என்ற மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. இதை பார்த்து மனம் புழுங்கி அவர் இஸ்லாமியராக மாறுகிறார்.

மக்கள் மீது அடக்குமுறைசெய்து, அவர்களை பல்வேறு சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் பிளவுபடுத்தி, நம்மை ஆட்சி செய்துகொண்டு, தன் ஆட்சியை ஒருவர் காப்பாற்றி கொள்கிறார் என்று சொல்லப்போனால் அதை பெருமையாக பேச முடியாது.

பார்ப்பனர்களுக்கு ஆரியர்களுக்கு வாரிக்கொடுத்தான் ராஜராஜசோழன். ஆனால் நிலங்களை எல்லாம் பிடுங்கி உழைத்தால் தான் உனக்கு சோறு என்று சொன்னான் எங்களுடைய மன்னன் திப்புசூல்தான். அதனால் தான் திப்பு சூல்தானை வீழ்த்தவேண்டும், அந்த வரலாற்றை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இரண்டுதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒன்று பார்ப்பனிய அடைமை மரபு, மற்றொன்று பார்ப்பன எதிர்ப்பு மரபு. சதூர் வர்ணம்- நான்கு வர்ணங்களையும் நான் தான் படைத்தேன் என்கிற ஒரு மரபு இருக்கிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என்று இந்த வேதத்தை எதிர்த்து பேசினான் எங்களுடைய வள்ளுவன். அவருடைய மரபு இருக்கிறது. நாம் எந்த மரபை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply