என்னவொரு நெஞ்சழுத்தம்!!

என்னவொரு நெஞ்சழுத்தம்!!

வடக்கு மாகா­ண­ச­பை­யின் 130ஆவது அமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்­பெற்­றது. வடக்­கில் சர்ச்­சை­யு­டன் தொட­ரும் அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை பற்­றி­யும், பளைக் காற்­றாலை விவ­கா­ரம் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட இருந்­த­தாக மாகா­ண­ச­பை­யின் நிகழ்ச்சி நிர­லில் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதைவிட, அர­சி­யல் ரீதி­யான மிக முக்­கிய நகர்­வான தீர்­மான வரை­வும் சபை அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

மிக முக்­கி­ய­மான இந்தச் சபை அமர்­வில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கலந்து கொள்­ள­வில்லை. தவிர்க்க முடி­யாத ‘மிக முக்­கி­ய­மான’ வேறு ஒரு நிகழ்வு இருப்­ப­தால் இதில் தன்­னால் பங்­கேற்க முடி­யாது என்று சபைக்கு விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருந்­தார்.

அன்­றைய தினம் அவ­ரது அமைச்­சில் பணி­யாற்­றும் பெண் பணி­யா­ளர் ஒரு­வ­ரின் திரு­ம­ணம் செல்­வச் சந்­நிதி ஆல­யத்­தில் நடை­பெற்­றி­ருந்­தது. முத­ல­மைச்­சர் அதில் பங்­கேற்­றி­ருந்­தார். மண­மக்­களை ஆசீர்­வ­தித்­தி­ருந்­தார். இந்த விட­யம் மறு நாள் பத்­தி­ரி­கை­யில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

கேள்வி– பதிலில் காரணம்

பாட்­டும் நானே பாவ­மும் நானே என்­ப­தைப்போல கேள்­வி­யும் நானே பதி­லும் நானே என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஊடகங்களுக்குத் தயா­ரித்து அனுப்­பும் கேள்வி– பதில் அறிக்­கை­யில் மேற்­படி விட­யத்தை ஒட்டி அவர் தயா­ரித்த கேள்­விக்­கு அவரே பதி­ல­ளித்­தி­ருந்­தார். அந்­தப் பதி­லில், ‘‘தமி­ழர்­கள் வாழ்­வில் பொது­வாகத் திரு­ம­ணம் ஒரு தட­வை­தான் வரும். மாகா­ண­சபை அமர்­வு­கள் மாதத்­தில் இரண்டு தடவைகள் வரும்’’ என்று கூறி­யி­ருந்­தார். முத­ல­மைச்­ச­ரின் இந்­தப் பதில் சிறு பிள்­ளைத்­த­ன­மா­ னது என்­ப­தை­யும் தாண்டி, ஒரு மக்­கள் பிரதிநிதி தன்­னைத் தேர்வு செய்த மக்­க­ளுக்கு, அது­வும் கொஞ்ச நஞ்­ச­ மல்ல ஒரு லட்­சத்து 32 ஆயி­ரம் வாக்­கு­களை வழங்­கிய மக்­க­ளுக்குக் கூறும் பதிலாக இல்லை?

மாகா­ண­சபை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து கடந்த 130ஆவது அமர்வு வரை­யிலான பல அமர்­வு­க­ளில் முத­ல­மைச்­சர் பங்­கேற்­கா­மல் ‘கட்’ அடித்­தி­ருக்­கின்­றார். இத­னை­ யும் தாண்டி அவர் பங்­கேற்ற அமர்­வு­க­ளில்கூட தேநீர் இடை­வேளை முடிந்து சிறிது நேரத்­தில் பறந்து விடு­வார். முத­ல­மைச்­சர், தான் பங்­கேற்ற ஓர் அமர்­வில்கூட இது­வரை முழு­மை­யாக இருந்­தது கிடை­யாது. விதி­வி­லக்­காக முத­லா­வது அமர்வை மாத்­தி­ரமே கூற முடி­யும்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அசண்டையீனமாக அமர்­வு­க­ளில் பங்­கேற்­கா­மல் விடு­வ­தும், பங்­கேற்ற அமர்­வு­க­ளி­லும் அரை நேரத்­து­ட­னும் ஓடு­வ­து­மாக இருந்­த­தால்­தான் அமைச்­ச­ரவை பிரச்­சினை இன்று பூதா­கா­ர­மா­கி­யி ­ருக்­கின்­றது.

ஊழல், மோசடி விவகாரம்

வடக்கு மாகாண சபை­யின் அப்­போ­தைய அமைச்­ச­ராக இருந்த ஐங்­க­ர­நே­ச­னுக்கு எதி­ராக, மாகா­ண­சபை உறுப்­பி­னர் லிங்­க­நா­தன் ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ ளைச் சுமத்தித் தீர்­மான வரைவைச் சபை­யில் முன்­வைத்­தி­ருந்­தார். தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்குச் சில நிமிட நேரங்­க­ளுக்கு முன்­ன­தாக மாகா­ண­சபை அமர்­வி லி­ருந்து முத­ல­மைச்­சர் வழ­மை­போன்று வெளி­யே­றி­யி­ருந்­தார்.

சபை­யின் அன்­றைய அமர்­வில் முதலமைச்சர் பங்­கேற்று, அந்­தத் தீர்­மான வரை­வுக்குத் தீர்க்­க­மா­கப் பதி­ல­ளித்­தி­ருந்­தால், அந்­தப் பிரச்­சினை இன்­றைய வடக்கு அமைச்­ச­ரவை முடக்­கம் வரைக்கும் வராமல் போயி­ருக்­க­லாம்.அதை­வி­டுத்து சபை அமர்­வி­லி­ருந்து ஓடி விட்டு, மறு நாள் பொது நிகழ்­வில் வைத்து, குற்­றம் சுமத்­தப்­பட்ட ஐங்­க­ர­நே­ச­னுக்­கான வக்­கீ­லாகக் கறுப்­புக் கோர்ட்டை எப்­போது முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அணிந்­தாரோ, அப்­போதே அவரது நடு­நி­லமை, நீதி தவ­றாமை மீது கரும் புள்ளி விழுந்­து­விட்­டது.

முத­ல­மைச்­ச­ரின் முறை­த­வ­றிய செயற்­பாட்­டால் நடந்த குழப்­பங்­கள் எல்­லாவற்றையும் மக்­கள் நன்­றாக நினை­வில் வைத்­தி­ருப்­பார்­கள்.
இப்­போ­தும் சுற்­றிச் சுழன்று கொண்­டி­ருக்­கும் வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பான சர்ச்­சையை எதிர்­கொள்ள முடி­யா­ம­லேயே முத­ல­மைச்­சர் ஒளித்து ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றார். வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பில் ஜூன் மாதம் 29ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. அதன் பின்­ன­ரான ஒவ்­வொரு சபை அமர்­வு­க­ளி­லும் ஏதோ­வொரு வடி­வத்­தில் அமைச்­ச­ர­வைச் சர்ச்சை கிளப்­பப்­பட்­டுக் கொண்­டு­தான் இருக்­கின்­றது.

130ஆவது அமர்­வி­லும் அது எழுப்­பப்­ப­டும் என்­ப­து முத­ல­மைச்­ச­ருக்கு நன்கு தெரி­யும். அதை­யும் தாண்டி, பளைக் காற்­றாலை தொடர்­பான விவா­தச் சூறா­வளி வீசும் என்­ப­தை­யும் அறிந்தே, முத­ல­மைச்­சர் அன்­றைய அமர்­வில் பங்­கேற்காமல் தவிர்த்­தி­ருந்­தார். அன்­றைய சபை அமர்­வி­லி­ருந்து ஓடி ஒளித்துத் திரு­மண நிகழ்­வுக்­குச் சென்­றமை அம்­ப­ல­மா­னது, சபை அமர்வைவிட திரு­மண நிகழ்­வு­தான் முக்­கி­யம் என்ற அவ­ரது பதில்­தான் இங்கே விவா­தத்­துக்­கு­ரி­யது.

மாகா­ண­ச­பை­யின் ஒவ்­வொரு அமர்­வை­யும் நடத்­து­வ­தற்கு 3 லட்­சம் ரூபா செலவு செய்­யப்­ப­டு­கின்­றது. இவை மக்­க­ளின் வரிப் பணம். சபை அமர்­வு­க­ளி­லேயே மக்­க­ளின் பிரச்­சி­னை­களை உறுப்­பி­னர்­கள் எழுப்­பு­கின்­றார்­கள். அவற்­றுக்­குப் பதி­ல­ளித்துத் தீர்த்து வைக்க வேண்­டி­யது முத­ல­மைச்­ச­ரின் கடமை. அமைச்­ச­ர­வை­யின் தலை­வ­ரான முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், மாகா­ண­ச­பைக்குப் பொறுப்­புக் கூற­வேண்­டி­ய­வர். இப்­ப­டிப்­பட்ட ஒரு­வர் சபை அமர்வை விடத் திரு­ம­ணம்­தான் முக்­கி­யம் என்று கூறு­வது பொருத்­தமாகுமா?

பொறுப்­புக்­கூ­று­வ­தைப் பற்­றி­யும், மக்­கள் பிர­தி­நிதியொரு வர் எப்­படி இருக்க வேண்­டும் என்­பது பற்­றி­யும், 2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்பு நிகழ்­வில் வடக்கு முத­ல­மைச்­சர் உரை­யாற்­றி­யி­ருந்­தார். மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கிய அறி­வு­ரையை முத­லில் தான் பின்­பற்­றி­னாரா? என்­பதை முத­ல­மைச்­சர் தனது மனச்­சாட்­சி­யி­டம் கேள்வி எழுப்பிப் பதி­லைப் பெற்­றுக் கொள்­ள­வேண்­டும்.

முத­ல­மைச்­ச­ரின் சொல்­லும் செய­லும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்­பது மீண்­டும் நிரூ­ப­ண­மா­கின்­றது. தனக்கு வாக்­க­ளித்து மாகாண சபைக்கு அனுப்­பிய மக்­கள் முட்­டாள்­கள் என்­றும், தான் அதி­மே­தாவி என்­றும் அல்­லது தான் எது சொன்­னா­லும் கேட்­டுக்கேள்வி இன்றி, மக்­கள் ஏற்­றுக் கொள்­வார்­கள் என்ற அகங்­கா­ர­முமே முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் நடத்­தை­யில் தெரி­கின்­றது.

2016ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் எழுக தமிழ் பேரணி நடத்­தப்­பட்­டது. அங்கு வந்திருந்த மக்­கள் முன்­பாக முத­ல­மைச்­சர் உரை­யாற்­றி­னார். ‘‘அதா­வது இன்­றைய கால­கட்­டத்­தில் நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­வு செய்யப்­ப­டு­வ­தாலோ, மாகா­ண­ச­பை­க­ளுக்­குத் தெரி­வு செய்யப்பவ­தாலோ, எமது உரி­மை­களை நாம் வென்­றெ­டுத்­துக் கொள்ள முடி­யாது. மக்­கள் சக்தி எமது அர­சி­யல் பய­ணத்­துக்கு அவ­சி­யம்’’ என்று கூறி­யி­ருந்­தார்.

ஏன் பாடாய்ப்படுத்துகிறார்?

மாகா­ண­ச­பை­யால் சாதிக்க முடி­யாது என்று கூறி­ய­ ஒருவர், மாகா­ண­சபை அமர்­வு­களை விடத் திரு­ம­ணமே அதி முக்­கி­யம் என்று கூறிய ஒரு­வர், மீண்­டும் ஏன் முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்குத் துடி­யாய் துடிக்­கின்­றார்? அந்­தப் பத­வியை அடை­வ­தற்கு ஏன் பாடாய்­ப­டுகின்றார்? இயல்­பாக எழும் இந்­தக் கேள்­வி­க­ளுக்­குப் பதில் என்ன? தமிழ் மக்­க­ளின் ஒற்­று­மையைக் குலைப்­ப­தற்கு முத­ல­மைச்­சர் முயல்­கின்­றாரா? அல்­லது சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளி­லி­ருந்து தான் தப்­பித்­துக் கொள்ள அந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளில் பேசிய பேச்­சுக்­களைக் கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டாம் என்­கி­றாரா?

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் மிக அண்­மை­க் காலத்தில் உரை­யாற்­றும்­போது, தனக்கு முன்­னால் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­கக் கூறி­னார். அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­கு­வதை முத­லா­வது தெரி­வாக முன்­வைத்­தார். புதிய கட்சி ஆரம்­பிப்­பது அல்­லது ஏதா­வது ஒரு கட்­சி­யு­டன் கூட்­டணி வைப்­பது என்­பதை இரண்­டா­வது மூன்­றா­வது தெரி­வுகளாக முன்­வைத்­தார். நான்­கா­வது தெரி­வாகக் கட்சி அர­சி­ய­லி­ருந்து ஒதுங்கி, மக்­கள் இயக்­கத்­தைப் பலப்­ப­டுத்­து­வ­தைக் கூறி­யி­ருந்­தார்.

மக்­கள் பிர­தி­நி­தி­யாக இருப்­ப­தற்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் பொருத்­த­மற்­ற­வர். மாகா­ண­சபை அமர்வை விடத் திரு­ம­ணம் முக்­கி­யம் என்ற பதி­லும், மாகா­ண­ச­பை­யால் எது­வும் சாதிக்க முடி­யாது என்ற எழுக தமிழ் உரை­யும் முத­ல­மைச்­சர் மக்­கள் பிர­தி­நி­தி­யாக இருப்­ப­தற்கு தகு­தி­யற்­ற­வர் என்­பதையே வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

ஆக, இப்­போது அவர் முன்­பாக இரண்டு தெரி­வு­கள்­தான் இருக்கின்றன. அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­கு­வது. அல்­லது கட்சி அர­சி­ய­லி­ருந்து ஒதுங்கி, மக்­கள் இயக்­கத்­தைப் பலப்­ப­டுத்­து­வது. அவர் இதில் எதைத் தெரிந்­தெ­டுத்­தா­லும் தமிழ் மக்­க­ளின் ஒற்­றுமை குலை­யா­மல் காக்­கப்­ப­டும்.

https://newuthayan.com/story/18/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html

 


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply