வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?

30.8.2018அன்று வட­மா­காண நிதி முகா­மைத்துவச் செயற்­தி­றன் விருது வழங்­கும் நிகழ்­வில் வட­மா­காண முதல்­வர் சி.வி. விக்­கி ­னேஸ்­வ­ரன் உரை­யாற்­று­கை­யில் ‘‘சிங்­க­ள­வர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்த் தலைமை உரு­வாக வேண்­டும்’’ என்­றொரு புதிய கருத்தை முன்­வைத்­தி­ருந்­தார். தமது அந்த உரை­யில் தமி­ழர்­கள் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­கள் என்­ப­தால் சிங்­க­ள­வர்­கள்­கூ­டப் பொரு­ளா­ளர் பத­வி­யைத் தமி­ழ­ருக்கே கொடுப்­பார்­கள் என­வும் பெரு­மை­யா­கக் கூறி­யி­ருந்­தார்.‘‘அர­சி­யல் ரீதி­யா­க­க் கணக்கு வைப்­ப­தில் நாம் சிறந்­த­வர்­க­ளா­க­வும், கணக்கு விடு­வ­தில் பெரும்­பான்­மை­யி­னர் பெரும் வல்­ல­வர்­க­ளா­க­வும் இருப்­பது உண­ரப்­பட்­டுள்­ளது ’’ என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார். அவ்­வா­ றெ­னில், வடக்கு மாகாண சபை­யில் கணக்கு வைத்­தது யார்? கணக்கு விட்­டது யார்?

விக்னேஸ்வரனின் தலை­மை­யி­லான வடக்கு மாகா­ண­ச­பை­யின் நிலை

2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­சபை அமைக்­கப்­பட்­ட­போது விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக்கி, பெரும்­பான்­மை­யி­ன­ரான ஆளும் கட்­சி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரு­மி­தம் அடைந்­தது. அதில் மக்­க­ளின் பங்கு பெரும் பங்­கா­கும். இத்­த­கைய ஒரு பெரும் பொறுப்பை விக்­கி­னேஸ் வரனை நம்பி வட­க்கு மா­கா­ணத் தமிழ் மக்­கள் கைய­ளித்­த­னர் என்­ப­து­தான் சரி­யா­னது.

இந்­தச் சபை­யில் பெரும்­பான்­மை­யி­ன­ரான விக்­கி­னேஸ்­வ­ரன் தலை­மை­யி­லான உறுப்பினர்கள் கணக்கு விட்­ட­தால் தான், முத­லா­வது வட­மா­காண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளும் ஊழல்­வா­தி­கள் என முதலமைச்சராகலேயே உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இங்கு கேள்வி என்­ன­வென்­றால், தமி­ழர்­கள் எப்­போ­தும் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­கள், கணக்கு வைத்­தல் விட­யத்­தில் நேர்­மை­யா­ன­வர்­கள் என்­பது தனது தலை­மை­யி­லான வட மாகா­ண­ச­பை­யில் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் விக்­கி­னேஸ்­வ­ரன்.

குறித்த ஊழல் விட­யத்­தில், நிதிக் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வுக்கு இந்­தத் தக­வல்­களை வழங்கி, ஊழல் செய்­த­வர்­க­ளைத் தண்­டிக்­காது, மக்­க­ளின் பணத்தை மீளப்­பெ­றாது, மக்­க­ளுக்­குக் கணக்கு விட்­ட­வர் முத­ல­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன்­தான். அவர் சிங்­க­ள­வரா?

விக்­கி­னேஸ்­வ­ர­னின் புதிய ஊடக வடி­வம்

ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இத்­த­கைய கேள்­வி­க­ளைக் கேட்­டுச் சங்­க­டப்­ப­டுத்தி விடு­வார்­கள், அல்­லது மூக்­கு­டை­பட நேரி­டும் என்­ப­தால் தான் ‘கேள்­வி­யும் நானே பதி­லும் நானே’ என்ற புதிய ஊடக வடி­வம் ஒன்றை விக்­கி­னேஸ்­வ­ரன் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ஆனால், விக்­கி­னேஸ்­வ­ரன் மற்­ற­வர்­க­ளி­டம் கேள்வி கேட்டு அவர்­க­ளின் பதில் என்­ன­வென்று அறி­வ­தற்­காக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது ஒரு முதிர்ச்­சி­ய­டைந்த மனி­த­ருக்கு அழ­கல்ல. ஊட­கங்­க­ளுக்­குச் செய்தி வழங்­கா­மல் ஒரு மூடிய அறைக்­குள் இருந்து கதைத்து முடி­வெ­டுக்க வேண்­டிய விட­யம் இது. இந்த விட­யத்­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் மிக­வும் பொறுப்­பு­டன் நடந்து கொள்­வது தெரி­கி­றது. இந்த இரண்டு மூத்த தலை­வர்­க­ளது நிலையை நோக்­கும்­போது ஒரு உறைக்­குள் இரண்டு வாள்­கள் இருப்­பதை ஒத்­த­தா­கக் காணப்­ப­டு­கின்­றது. சம்­பந்­த­ரின் அர­சி­ய­லில் குறை கண்­டு­பி­டித்த பலர், விக்­கி­னேஸ்­வ­ர­னின் ஒப்­பீட்­டு­டன் சம்­பந்­தர் நல்ல தலை­வர் என்ற முடி­வுக்கு வந்­துள்­ள­னர். இது­பற்றி சாதா­ரண மக்­கள் மத்­தி­யில் நில­வு­கின்ற கருத்து இது. (நேநீர்க் கடை ஒன்­றில் நின்­று­கொண்­டி­ருந்த நாற்­பது வயது மதிக்­கத்­தக்க மூவ­ரின் சம்­பா­ச­னை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது) “எனக்­குச் சம்­பந்­த­ரைப் பிடிக்­காது. ஆனால், அந்த மனிசன் தமி­ழ­ரைச் சிங்­க­ள­வர் அடிக்­கும் அள­வுக்­குச் சிங்­க­ள­வ­ரைச் சீண்­ட­வில்லை, ஆனால் விக்­கி­னேஸ்­வ­ரன் தமி­ழ­ருக்கு அடி­வாங்­கித் தரப்­போ­கி­றார்’’ என்று கூறி­னார் அதில் ஒரு­வர்.

இந்த வகை­யில் பார்த்­தால், ஏனைய தமிழ்த் தலை­வர்­களோ, முஸ்­லிம் தலை­வர்­களோ, சிங்­க­ளத் தலை­வர்­களோ திராணி உள்­ள­வர்­கள் என்ற முடி­வுக்கு வர­மு­டி­யும்.
மறைந்து வாழ்ந்த பிர­பா­க­ரன்­கூட உண்­மை­யைச் சொல்­வ­தற்­காக ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தி­ருந்­தார்.

ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கப் பயப்ப­டு­கின்ற ஒரு கோழை மனி­தர் எவ்­வாறு தமிழ் மக்­க­ளுக்­குத் தலைமை தாங்க முடி­யும்? புதிய தமிழ்க் கட்­சியை உரு­வாக்க முடி­யும்? தமிழ் மக்­கள் பேர­வையை தகுந்த மக்­கள் பேரி­யக்­க­மாக இவ­ரால் எப்­படி மாற்ற முடி­யும்? விக்­கி­னேஸ்­வ­ரன் சிங்­க­ள­வர் என்­ப­தாலா தமிழ்க் கட்­சி­க­ளைப் போட்­டிக்கு இழுக்­கி­றார்? “தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு துரோ­கி­க­ளு ­டன் கூட்­டுச் சேரக்­கூ­டாது ’’ எனக் கூறு­வ­தன் மூலம் தமிழ் மக்­கள் எப்­போ­தும் பிரிந்­தி­ருப்­ப­தையே அவர் விரும்­பு­ கி­றார்.

நீண்ட கால ஆயு­தப் போராட்­டத்தை நடத்­தித் தலை­ம­றைவு வாழ்க்­கையை வாழ்ந்த விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன்­கூட ஒரு பன்­னாட்­டுப் பத்­தி­ரிகை மாநாட்டை நடத்­தி­யி­ருந்­தார். பல நியா­யங்­க­ளைக் கருத்­தில் எடுத்துப் பல தீர்ப்­புக்­களை வழங்­கிய ஓர் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரால் ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யா­தி­ருப்­பது என்­பது வேடிக்­கை­யா­னது. கையில் இருந்த இயன்­ற­ளவு அதி­கா­ரத்­தைக் கொண்டு மக்­க­ளுக்­குத் தொண்­டாற்­றா­மல், ஒதுக்­கப்­பட்ட நிதி­யைத் திருப்­பி­ய­னுப்­பி­ ய­வர்­க­ளும், கோழை­க­ளும் இனி­மே­லும் தமிழ் மக்­க­ளுக்­குத் தலைமை தாங்க நினைப்­பது தவறு. அந்த அள­வுக்­குத் தமி­ழி­னம் பாதிக்­கப்­பட்டு விட்­டது.

தன்­னைக் கெட்­டிக்­கா­ர­னா­க காட்­டு­வ­தைக் கைவிட வேண்­டும்

பட்டி மன்றங்கள், விவாத மேடை­க­ளில் வாய்ப்­பேச்­சால், வேறு யாரை­யாவது நக்­க­ல­டித்­துத் தன்­னைக் கெட்­டிக்­கா­ர­னா­கக் காட்­டிக்­கொள்­ளும் நிலை­யைக் கையில் வைத்­தி­ருக்­கின்ற விக்­கி­னேஸ்­வ­ரன் முத­லில் அதைக் கைவிட வேண்­டும்.
கடந்த ஐந்து வருட காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு அவர் எத்­த­கைய சேவையை ஆற்­றி­யி­ருக்­கி­றார் என்­பதை ஒவ்­வோர் ஊர­வர்­க­ளும் நன்கு அறி­வர். பல விட­யங்­க­ளில் மக்­கள் தெளி­வாக உள்­ள­னர் என்­பதை இனி வரு­கின்ற தேர்­தல்­க­ளின்­போது முத­ல­மைச்­சர் புரிந்து கொள்ள வாய்ப்­பி­ருக்­கும்.

பிரிட்டன் ஆளு­கைக்­குட்­பட்ட நாடு­க­ளின் தலை­வர்­க­ளி­டம் மற்­ற­வரை அடி­மைப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற மனப்­பாங்கு எப்­போ­தும் இருப்­ப­துண்டு. பிரிட்டன் மீது விசு­வா­சம் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­ச­ருக்­கும் அந்த மன­நிலை இருப்­ப­தா­லேயே சிங்­க­ள­வரை அடக்­கும் அல்­லது கட்­டுப்­ப­டுத்­தும் மன­நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.இந்த நாட்­டில் சிங்­க­ள­வர்­கள் 80வீதம் என­வும், தமி­ழர்­கள் 12 வீதம் என­வும் எனைய இனங்­கள் 8 வீதம் என­வும் சாதா­ரண தமிழ் மக்­க­ளுக்கே நன்கு தெரிந்­தி­ருக்கிறது. இந்த விட­யம் முத­ல­ மைச்­ச­ருக்­குத் தெரி­யா­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யம்­தான். இந்த நிலை­யில் 12 வீத­மான சிறு­பான்மை மக்­கள் 80வீத­மான பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு­போ­தும் தலைமை தாங்­கவோ, அல்­லது கட்­டுப்­ப­டுத்­தவோ முடி­யாது. சிங்­க­ளத் தலை­வர்­கள் 80 வீத­மான பெரும்­பான்மை மக்­கள் மத்­தி­யில் இருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வ­தால், அவர்­க­ளின் தலை­மைத்­து­வத்தைச் சிங்­கள மக்­கள் ஏற்­பர்.

ஒரு முனிவ­ரின் கதை

மற்­ற­வர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறு­வ­தற்கு முன்னர், அவ்விதம் ஆலோ­சனை கூறு­ப­வர் அதற்­குத் தக செயற்­ப­டு­ப­வ­ராக இருப்­பது அவ­சி­யம். தம்மை ஒரு ஆத்மிக வாதியாகக் கூறிக்­கொள்­வ­தால், ஒரு முனி­வ­ரின் கதை முத­ல­மைச்­ச­ருக்கு மிக­வும் பய­னு­டை­ய­தாக இருக்­கும் என நம்­பு­கி­றேன்.

ஒரு தாய் தனது மகனை இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் எனப் பல­முறை கேட்­டும் அவன் இனிப்­பைச் சாப்­பிட்­டுக்­கொண்டே இருந்­தான். அந்­தத் தாய் தனது மகனை ஒரு முனி­வ­ரி­டம் கூட்­டிச்­சென்று, ‘‘இவனை இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் என்­று­கூ­றுங்­கள் சுவாமி ’’ என்று கேட்­டி­ருக்­கி­றார். அதற்கு முனி­வர் ஒரு தவணை கொடுத்து அந்த நாளன்று மக­னைத் தன்­னி­டம் அழைத்து வாருங்­கள் என்று தாயி­டம் கூறி அனுப்­பி­னா­ராம். அந்­தத் தவ­ணைக்­குச் சென்­ற­போது மீண்­டும் ஒரு தவணை கொடுத்­தா­ராம். பின் மூன்­றாம் தட­வை­யும் தவணை கொடுத்து அனுப்­பி­னா­ராம். அதன் பின்­னர் தான் முனி­வர் அந்­தப் பைய­னுக்கு “நீ இனி­மேல் இனிப்­புச் சாப்­பி­டக்­கூ­டாது ’’ என்று கட்­ட­ளை­யிட்­டி­ருக்­கி­றார்.

இதைக்­கேட்ட தாய் ‘‘சுவாமி இதை முதல் நாளே நீங்­கள் மக­னுக்­குச் சொல்­லி­யி­ருக்­க­லாமே? ’’ என்று கேட்­ட­போது முனி­வர் ‘‘நான் முத­லா­வது தடவை தவணை கேட்­டது ஏன் என்­றால், முத­லில் நான் இனிப்­புச் சாப்­பி­டு­வதை நிறுத்­து­வ­தற்­கா­கவே.இப்­போ­து­தான் நான் இனிப்­புச் சாப்­பி­டு­வதை நிறுத்­தி­யி­ருக்­கி­றேன். அதன் பின்­னர்­தான் அதற்கு முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கும் நான், உங்­கள் மக­னுக்கு இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் என்று பணிப்புரை விடுக்க முடிந்­தது’’ என்­றா­ராம்.

முத­ல­மைச்­சர் முத­லில் தனது தலை­மை­யில் உள்ள வடக்கு ­மா­காண சபைக்­குச் சரி­யா­கக் கணக்­குக் காட்­டி­ய­பின்பே, கணக்கு விடு­ப­வர்­கள் பற்­றிப் பேச முடி­யும். வெறும் வாய்ப்­பேச்­சால் பய­னில்லை. முன்­னு­தா­ர­ண­மாக அவர் இருக்­க­வேண்டும். ‘தீதும் நன்­றும் பிறர்­தர வாரா’ என்­ப­தை­யும் அவர் அறிந்­தி­ருப்­பார். தமி­ழரே தமி­ழ­ருக்­குக் கணக்கு விட்­டு­விட்­டுச் சிங்­க­ள­வர்­க­ளைக் கெட்­ட­வர் க­ளா­கக் காட்­டு­வது நல்­ல­தல்ல.

https://www.tamilwin.com/articles/01/192941?ref=rightsidebar-article


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply