கோத்­த­பாயவிடம் ஓடிய கஜேந்­தி­ர­ன்!! வெளிவரும் பல உண்மைகள்…

கோத்­த­பாயவிடம் ஓடிய கஜேந்­தி­ர­ன்!! வெளிவரும் பல உண்மைகள்…

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் பிரிட்­ட­னில் நிரந்­த­ரக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கின்­றார். இங்கு ஏதா­வது பிரச்­சினை என்­றால் அங்கு ஓடி­வி­டு­வார்.
ஆனால் அவர்களின் குழப்­பி­ய­டிக்கும் வேலை­க­ளால் பாதிப்­ப­டை­யப்­போ­வது என்­னவோ, இங்­குள்ள தமிழ் மக்­கள் ­தான்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.

வட­ம­ராட்­சி­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ர­னின் தம்பி கடத்­தப்­பட்ட போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் ஓடி­போய் கடத்­தப்­பட்ட சகோ­த­ரனை கஜேந்­தி­ரன் மீட்டு வந்­தார்.

ஆனால் ஊரான் வீட்­டுப் பிள்­ளை­கள் வெள்ளை வானில் கடத்­தப்­பட்­டார்­கள். அப்­போது கடத்­தப்­பட்­ட­வர்­களை காப்­பற்ற என்ன செய்­தார்­கள்.

வடக்கு மாகாண சபைத் தேர்­தல் இடம்­பெற்­றி­ருந்த வேளை அத­னைப் புறக்­க­ணித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் இப்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் ஆத­ரவை எதிர்­பார்த்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது.

அவர்­கள் கூறி­யி­ருந்­தது போல நாங்­க­ளும் மாகாண சபை தேர்­தலை நிரா­க­ரித்து இருந்­தால் எமக்­கான முதல்­வர் கிடைத்­தி­ருக்க மாட்­டார். நாம் மாகாண சபைத் தேர்­தலை நிரா­க­ரித்து இருந்­தால் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த வெற்­றி­லைக்­கா­ரர்­கள், யானைக்­கா­ரர்­கள் இங்கு முதல்­வ­ராக வந்­தி­ருப்­பார்­கள்.

நாம் மாகாண சபை தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைந்­த­மை­யால் மாகாண சபை­யில் இனப்­ப­டு­கொலை தீர்­மா­னத்தை நிறை­வேற்றி இருந்­தோம்.

2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­லில் போர் உச்­சக்­கட்ட நிலை­யில் இருந்­த­போது மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­னு­டன் கஜேந்­தி­ர­கு­மார் பேசி இடைத்­த­ர­கர் வேலை பார்த்து பின்­னர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கிய உறுப்­பி­னர்­கள் புலித்­தே­வன், நடே­சன் போன்­ற­வர்­கள் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் சர­ண­டைய சொன்­னீர்­கள். அவர்­க­ளும் வெள்­ளைக் கொடி­யு­டன் சர­ண­டைய வந்­தி­ருந்­தார்­கள்.

அவ்­வாறு சர­ண­டைய வந்­த­வர்­கள் கொடூ­ர­மாக படு­கொலை செய்­யப்­பட்­டார்­கள்.அப்­போது நீங்­கள் என்ன செய்­தீர்­கள்?. இந்த கொடூ­ர­மான விட­யத்தை பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு உட­ன­டி­யாக தெரி­வித்­தி­ருக்க வேண்­டும். எப்­போ­தா­வது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு இதைப் பற்­றிக் கூறி­யி­ருக்­கின்­றீர்­களா?.

கஜேந்­தி­ர­கு­மார் அதைச் ஒரு சில நாடு­க­ளுக்கு கூறி­ய­னார் என்று சொல்­லி­வ­ரு­கின்­றார். அது­வும் உண்­மையா? இல்­லையா? என்று கட­வு­ளுக்­குத்­தான் தெரி­யும்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் தமிழ், சிங்­கள, ஆங்­கில மொழி ஊடாக இங்கு நடந்த இனப் படு­கொலை தொடர்­பாக ஏதா­வது சாட்­சி­யங்­கள் இருந்­தால் தாருங்­கள் என்று கோரி­யி­ருந்­தார்­கள். அப்­போது நீங்­கள் எத்­தனை சாட்­சி­யங்­களை வழங்­கி­னீர்­கள்?.

நீங்­கள் எது­வும் கொடுக்­காது சும்மா இருந்­தீர்­கள். ஆனால் நானும் சில மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் இணைந்து பல சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தோம்.

ஒரு பக்­கக் கட­தா­சி­யி­லா­வது இங்கு இனப்­ப­டு­கொலை நடந்­தது என்றுசாட்­சி­யம் வழங்­கி­யி­ருக்­கின்­றீர்­களா?.

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள். இது­வரை காலத்­தில் மகிந்த பத­வி­யில் இருந்த போது இங்கு இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என்று தைரி­ய­மாக எப்­போ­தா­வது கூறி­யி­ருக்­கின்­றீர்­களா?. எனக்­கும் மக்­க­ளுக்­கும் தெரி­யும். நீங்­கள் ஒழித்து விளை­யாடி வரு­கின்­றீர்­கள்.

இலங்கை போர்க்­குற்­றம் தொடர்­பாக பன்­னாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­நாட்டு விசா­ரணை என்று மாற்­றம் செய்து தீர்­மா­னம் வந்­த­போது நாம் அதனை ஆத­ரித்­தோம். அப்­போது எம்மை துரோ­கி­கள் என்­ற­வர்­கள் நீங்­கள் என்ன செய்­தீர்­கள்?.

பேரா­சி­ரி­யர் சொர்­ண­ரா­ஜாவை நாம் சந்­தித்த போது, அவர் எங்­க­ளி­டம் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 30ஃ1 தீர்­மா­னத்­தின் ஊடா­கவே நாம் பன்­னாட்டு விசா­ர­ணையை செய்ய முடி­யும் என்று கூறி­னார்.

அப்­போது சந்­திப்­பில் இட­து­பக்­கம் என்­னு­டன் இருந்த சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை நான் பார்த்த போது அவர் மறு பக்­கம் திரும்­பி­னார். மற்­றப் பக்­கம் இருந்த கஜேந்­தி­ர­கு­மாரை நான் திரும்பி பார்த்த போது அவர் அடுத்த பக்­கம் பார்த்­தார்.

நான் வெளிப்­ப­டை­யா­கக் கேட்­கின்­றேன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் தலை­வர் சம்­பந்­த­னும் ஐ.நாவின் 30ஃ1 தீர்­மா­னத்­திணை ஏற்­றுக் கொண்­டமை துரோ­கத்­த­னமா அல்­லது நீங்­கள் செய்­தது துரோ­கத்­த­னமா? என்று கூறுங்­கள் என்­றார்.

http://sltnews.com/archives/9848


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply