இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!

வடக்கு மாகாண சபையின் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா- ரவிகரன் இதுவரை சுரேஸ் பிறேமச்சந்திரன் தலமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பினைப் பிரதிநிதித்துவப் படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமைமீது அதிருப்தி தெரிவித்து மாற்றுத் தலமை கோரிவரும் சுரேஸ் பிறேமச்சந்திரன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதோடு க.குமாருடன் இணைந்து புதிய முண்ணனி உருவாக்கியே போட்டியிடப்போவதாகவும் பகிரங்கமாகவே தெரிவித்து புதிய முண்ணனி உருவாக்கத்தில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளது.

குறித்த உறுப்பினர் ஓர் நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பால் நிற்பார் என எதி்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில்உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து முறைப்படி தமிழரசுக் கட்சியில்  இணைந்துகொண்டார்.

About VELUPPILLAI 3320 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply