‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி

‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி

 2017-10-10

நேர்காணல் :- ஆர்.ராம்

ஐக்­கிய இட­து­சாரி முன்­னணியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­ வாக்க செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ள முக்­கி­யஸ்­த­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன  வழங்­கிய விசேட ­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி ந­டத் தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் நாட்டின் தன்­மை­யா­னது ஏகிய ராஜ்ய என்று சிங் கள மொழி யிலும் தமிழில் ஒரு­மித்த நாடு என்றும் ஆங்­கி­லத்­ திலும் இதே­சொற்­பி­ர­யோ­கங்கள் பயன்ப­டுத்­தப்­பட் டுள்­ள­மை­யா­னது பாரிய சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி யுள்­ளதே?

பதில்:- இது­வொரு முக்­கி­ய­மான விட­ய­மாகும். நான் ஏகிய ராஜ்ய என்ற சொற்­ப­தத்­தினை பயன்­ப­டுத்தும் போது பல தமிழ் ஊட­கங்கள் ஒற்றை ஆட்சி என்றே பயன்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்த விட­யத்தில் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏகிய ராஜ்ய என்ற சொற்­பதத்­தினை ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் தான் நான் கருத்­துக்­களை முன்­வைக்­கின்றேன்.

இந்த விடயம் சம்­பந்­த­மாக நாம் நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களை செய்தோம். தமிழ் தரப்­பி­லுள்ள சில கடும்­போக்­கு­வாத தரப்­புகள் ஏகிய ராஜ்ய என்­ப­தற்கு ஒற்றை ஆட்சி என்ற சொற்­ப­தத்­தினை இடைக்­கால அறிக்­கை­யிலும் தொடர்ச்­சி­யாக பேணு­வ­தற்கு விருப்பம் வெளியிட்­டார்கள். காரணம் அதில் ஒரு நாடு என்று எங்கும் கூறப்­ப­ட­வில்லை. ஆகவே தான் அவர்கள் அதனை விரும்­பி­னார்கள்.

அதா­வது ஒற்றை ஆட்சி என்­பது வன் கவர்மண்ட் (one government) என்றே பொருள்­ப­டு­கின்­றது. ஆகவே ஒற்றை ஆட்சி என்­பதில் ஒரு நாடு என்ற பொருள்­கோ­டலை செய்­ய­மு­டி­யாது. அந்த அடிப்­ப­டையில் தான் ஒரு­மித்த நாடு என்ற சொற்­பதம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

நாம் இந்த விடயம் தொடர்பில் ஆலோ­சனை பெற்­றுக்­கொண்ட தமிழ்­த­ரப்பின் விசேட நிபு­ணர்கள் ஏகிய ராஜ்ய என்­ப­தற்கு ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத்­தினை பயன்­ப­டுத்த முடியும் என்றே பரிந்­து­ரைத்­தனர்.

ஏகிய ராஜ்ய என்­ப­தற்கு ஒரு­மித்த நாடு என்­ப­தனை விடவும் மிகச் சிறந்த சொற்­பதம் காணப்­ப­டு­கின்­றது என யாரா­வது கூறு­வார்­க­ளாயின் அது தொடர்பில் நாம் பரி­சீலனை செய்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

அதே­நேரம் உதா­ர­ண­மொன்­றையும் குறிப்­பிட விரும்­பு­கின்றேன். பிரித்­தா­னிய இராஜ்­ஜியம் ஒற்றை ஆட்­சியை (unitary state) கொண்­ட­தாகும். ஆனால் அதன் கீழ் அயர்­லாந்து, ஸ்கொட்­லாந்து, வட அயர்­லாந்து போன்­றவை பிரிந்து செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதி­யுச்ச அளவில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டுள்­ளன.

ஆகவே யுனிற்­றரி ஸ்ரேட் (unitary state) என்ற சொற்­ப­த­மா­னது ஒரு நாடாக இருப்­ப­தற்­கான காப்­பீட்டை முழு­மை­யா­னதாக கொண்­ட­தல்ல. அந்த அடிப்­ப­டையில் தான் இடைக்­கால அறிக்­கையில் சொற்­ப­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு அதற்­கான வரை­வி­லக்­க­ணங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஏகிய ராஜ்ய என்­பது பிரிக்­கப்­ப­டாத மற்றும் பிரிக்­கப்­பட முடி­யாத நாடு எனும் பொரு­ளாகும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்­புக்­கான திருத்தம் அல்­லது நீக்கம் அல்­லது மாற்­றீடு அர­சி­ய­ல­மைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள வித­மாக பாரா­ளு­மன்­றத்­தாலும் இலங்கை மக்­க­ளாலும் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும் என்­றுள்­ளது.

அத்­துடன் நாட்டின் இறை­மை­யா­னது மக்­க­ளுக்­கு­ரி­ய­தாக இருப்­ப­தோடு பார­தீ­னப்­ப­டுத்த முடி­யா­த­தா­கவும் பிரிக்­கப்­பட முடி­யா­த­தா­கவும் இருத்தல் வேண்டும். அந்­த­வ­கையில் பிரிந்து செல்­லு­தலை தடுக்கும் வகை­யி­லேயே விசேட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதனை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்த அடிப்­ப­டை­வாத தரப்­புகள் பிர­யத்­தனம் செய்­கின்­றன.

கேள்வி:- முன்னாள் நீதி­ய­ர­சரும் தற்­போ­தைய வட­­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ் வரன் இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யாக நிரா க­ரித்­துள்­ள­தோடு சிங்­க­ளத்தில் ஏக்சத் ரட்ட என்றும் ஆங்­கி­லத்தில் யுனைட்டட் கன்ரி (united country) என்றும் தமிழில் ஐக்­கிய இலங்கை என்றும் பயன் ப­டுத்த முடியும் என்றும் பரிந்­துரை செய்­துள்­ளாரே?

பதில்:- விக்­கி­னேஸ்­வரன் எம் அனை­வ­ரி­னதும் கௌரவம் மிக்­க­வ­ராக இருந்தார். அவர் கொழும்பில் இருக்கும் போது ஒரு கடும்போக்காளர்களாக செயற்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது அவர் மாற்­ற­ம­டைந்து விட்டார். அவர் கடும்­போக்­கு­வாத சிறைப்­பி­டிக்குள் இருக்­கின்றார். அத்­துடன் விக்­கி­னேஸ்­வரன் பிர­பல்­ய­மா­கு­வ­தற்­கான கூற்­றுக்­க­ளையே அண்­மைக்­கா­ல­மாக முன்­வைக்­கின்றார்.

விக்­கி­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில் அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை அவர் விரும்­ப­வில்லை. அச்­செ­யற்­பா­டுகள் நடை­பெ­றா­தி­ருக்க வேண்டும் என்­பதே அவரின் நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாது இடை­நி­றுத்தி நாட்டில் கடும்­போக்­கு­வாத தீயை ­மூட்­டி­வாறு இருக்க வேண்டும் என்றே விரும்­பு­கின்றார். வடக்கில் அவர் அத்­த­கைய செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும் அதே­நேரம் தெற்­கிலும் கடும்­போக்­கு­வா­திகள் தீ மூட்­டி­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும் அவ­ரு­டைய சொற்­பி­ர­யோ­கங்­களை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. யுனைட்டட் கன்ரி (united country) என வரும்­போது வேறு­பட்ட இராஜ்­ஜி­யங்கள் ஒன்­றி­னை­கின்­றன என்றே பொருள் ­கோடல் செய்­யப்­படும். அது தெற்கில் அதனை ஏற்றுக்கொள்­வ­தென்­பது மிகவும் கடி­ன­மாக விட­ய­மாகும். ஆகவே விக்­கி­னேஸ்­வரன் ஏற்­க­மு­டி­யாத யோச­னை­க­ளையே முன்­வைக்­கின்றார்.

கேள்வி:- இடைக்­கால அறிக்­கை­யா­னது தமது நீண்­ட­கால கோரிக்­கை­யான சமஷ்டி, சுய நிர்­ணய உரிமை போன்ற அடிப்­படை அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­வ­தாக அமைந்­தி­ருக்­க­வில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் உள்­ளிட்ட பல தரப்­புகள் கடு­மை­யாக விமர்­சிக்கின் ற­னவே?

பதில்:- தமிழ் தலை­வர்­க­ளுக்கு ஒரு விட­யத்­தினை நான் கூற விரும்­பு­கின்றேன். சொற்­பி­ர­யோ­கங்கள், வாச­கங்­களை தூக்­கி ­பி­டித்­து­கொண்­டி­ருப்­பது தற்­போ­தைய நிலை­மையில் பொருத்­த­மற்­ற­தொன்­றாகும்.

சுய­நிர்­ணய உரிமை என்ற சொற்­பதத்­தினை நேர­டி­யாக பயன்­ப­டுத்­தினால் தெற் கில் உள்ள மக்­களை கடும்­போக்­காளர்கள் குழப்­பி­ய­டித்து எதிர்ப்­பு ­கோ­ஷத்தை வலுப்­ப­டுத்­தி­வி­டு­வார்கள்.

மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கி அவற்றை வலு­வூட்­டு­வ­தா­னது அதா­வது தமது செயற்­பா­டு­களை தாமே கையா­ளக்­கூ­டிய வகையில் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வது சுய­நிர்ணய உரி­மைக்கே சம­னாக அமை­கின்­றது. இத­னை ­வி­டுத்து நேர­டி­யாக சுய­நிர்­ணய உரிமை என்ற சொற்­ப­தத்­தினை பயன்­ப­டுத்­து­மி­டத்து பிரிந்து சென்று வேறு இராஜ்­ஜியம் உரு­வா­கப்­போ­கின்ற தோற்­றப்­பாட்­டையே ஏற்­ப­டுத்தும்.

அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் முப்­பது வரு­டங்கள் எமக்கு அனு­பவம் உள்­ளது. ஆகவே அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்­தினை அர்த்­த­புர்ஷ்­டி­யாக்­கு­வ­தற்­காக செயற்­ப­ட­வேண்டும். தற்­போது தெற்கில் உள்ள முத­ல­மைச்­சர்­களும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்­டு­மென்றே கூறு­கின்­றார்கள்.

தெற்கில் உள்ள சுதந்­தி­ரக்­ கட்­சியின் நான்கு முத­ல­மைச்­சர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த எதிர்க்­கட்­சித்­த­லை­வர்­களும் இடைக்­கால அறிக்­கையில் முன்­மொ­ழி­வு­களைச் செய்­துள்­ளார்கள். மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வதன் ஊடாக தமது பகு­தி­களை மேம்­ப­டுத்த முடியும் என்ற சிந்­தனை அவர்­க­ளுக்குள் ஏற்­பட்­டுள்­ளது.

இதே­போன்று தான் தெற்கில் உள்ள கடும்­போக்­கா­ளர்கள் வாச­கங்­களை தூக்கிப் பிடித்­துக்­கொண்டு இருக்­கின்­றார்கள். வடக்கில் உள்­ள­வர்­களும் இவ்­வாறு இருப்­பார்­க­ளே­யானால் இந்­தப்­ப­ணியை செய்து முடிக்க முடி­யா­த­வொரு நிலை­மையே ஏற்­படும் அபா­ய­முள்­ளது.

கேள்வி:- வழி­ந­டத்தல் குழுவில் பங்­கேற்­றி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் சொற்­பி­ர­யோ­கங்­களில் அதி­யுச்ச விட்­டுக்­கொ­டுப்பைச் செய்­தி­ருக்­கின்றார். ஆனால் அதற்கு ஈடான நெகிழ்­வுப்­போக்­கினை ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட தென்­னி­லங்கை தலை­மைகள் காட்­ட­வில்லை.

பதில்:- கூட்­ட­மைப்­பினர் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான பிராந்­தி­யங்­களின் கூட்டு என்ற விட­யத்­தினை கோரி­யி­ருக்­கின்­றார்கள். அத்­துடன் பிர­தான அறிக்­கையில் உள்ள விட­யங்­களை பிர­தான கட்­சிகள் ஏற்­றுக்­கொள்­கின்­ற­போது அதனை தாமும் ஏற்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி, பிர­தமர் ஏகிய ரஜ்ய பாது­காக்­கப்­படும் என்று கூறு­வது உண்­மைதான். ஏகிய ராஜ்ய என்­பது பிரிக்­க­மு­டி­யாத ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் தான் அவர் கள் அவ்­வாறு குறிப்­பி­டு­கின்­றனர். மேலும் ஜனா­தி­பதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தனி­யான முன்­மொ­ழிவில் தமி­ழிலும், சிங்­க­ளத்­திலும் ஏகிய ராஜ்ய என்று குறிப்­பிட வேண்டும் என்று சொல்லப்­பட்­டி­ருக்­கின்­றதே தவிர யுனிற்­றரி ஸ்ரேட் என்­பது நீக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் ஏகிய ராஜ்ய என்­பதன் அர்த்­தப்­ப­டுத்­தலை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். ஆகவே உள்­ள­டக்­கத்­தி­னையே பார்க்க வேண்டும்.

கேள்வி:- தென்­னி­லங்கை தளம்­பலை தடுப்­ப தற்கும் கூட்டு எதிர்க்­கட்­சிக்கு முகங்­கொ­டுப்­ப­தற் கா­கவும் ஒற்றை ஆட்சி பாது­காக்­கப்­படும், பௌத்தம் முன்­மை­யா­னது என்று திரும்­பத்­தி­ரும்பக் கூறு­வ தா­னது கூட்­ட­மைப்­பி­னுள்ளும் தமிழ் மக்கள் மத் தி­யிலும் சம்­பந்­த­னுக்கு கடு­மை­யான நெருக்­க­டி­க ளை­யல்­லவா ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் இருப்­ப­வர்­களில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான அணி­யினர் தமது முதன்மை தன்­மை­யான பிர­பல்­யத்­தி­னையே விரும்­பு­கின்­றார்கள். சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தேசியப் பட்­டியல் விட­யத்தில் கூட்­ட­மைப்­புடன் கோபத்தில் இருக்­கின்றார். ஆகவே எதிர்ப்­பு­களை விடு­கின்றார்.

அதே­நேரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை தெளிவு­ப­டுத்த வேண்டும். பிரச்­சி­னைகள் ஏற்­படாது என்று அமை­தி­யாக இருக்க முடி­யாது. சிறு குழு­வினர் தவ­றான நிலைப்­பாட்டில் இருப்­பார்­க­ளாயின் அவர்­க­ளுக்­கு­ரிய தெளிவு­ப­டுத்­தல்­களை செய்­ய­வேண்­டி­யது கூட்­ட­மைப்பின் பொறுப்­பாகும்.

கூட்­ட­மைப்­பிற்கு இத்­தனை காலமும் இந்த விட­யத்­தினை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போயி­ருக்­கலாம். ஆனால் தற்­போது இடைக்­கால அறிக்கை வெளியா­கி­யுள்ள நிலையில் அவர்கள் அனைத்து தரப்­பி­ன­ருக்கும் தெளிவுப­டுத்தும் பாரிய கடப்­பாட்­டினை கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும் தெற்­கிலும் இது­போன்ற பாரிய தெளிவு­ப­டுத்தும் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. முன் னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் காலத்தில் வெண்­டா­மரை இயக்கம் என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு பாரிய பிர­சாரம் அளித்­தது. அனைத்து தலை­வர்­களும் ஒரு மேடைக்கு வந்­தார்கள்.

அது­போன்று தற்­போதும் தெற்கில் உள்ள பிர­தான கட்­சிகள் இரண்டும் விரை­வாக ஒன்­றி­ணைந்து இந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். பிர­தான கட்­சிகள் இணைந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அதில் தாம­தங்­களும் குறை­பா­டு­களும் உள்­ளன.

நாம் தனித்­தனி நபர்­க­ளாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். ஆனால் அது போதாது. பிர­தான கட்­சி­களும் இந்த விட­யத்­தினை முழு மன­தோடு ஏற்று செய்ய வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- உள்­ளூராட்சி மன்றம், மாகாண சபை கட்­ட­மைப்­புகள் காணப்­ப­டு­கின்­ற­போது இடைக்­கால அறிக்­கையில் இரண்­டா­வது மந்­திரி சபை அல்­லது செனட் சபை முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. இதனால் கிடைக்­கப்­போகும் நன்மை என்ன?

பதில்:– மாகா­ணங்­க­ளுக்கு அல்­லது பிராந்­தி­யங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டுள்ள உலக நாடு­களில் இரண்­டா­வது மந்­திரி சபை காணப்­ப­டு­கின்­றது. அதி­கா­ரங்கள் பகி­ரங்­கப்­பட்ட பின்னர் மாகா­ணங்கள் அல்­லது பிராந்­தி­யங்கள் தமக்கு வேண்­டி­யதைச் செய்து கொண்டு செல்ல முடியும் என்று விட்டு விட­மு­டி­யாது.

ஆகவே தான் மத்­திய அர­சாங்­கத்­துடன் மீண்டும் அதி­கா­ரங்கள் தொடர்­பான இணைப்பைக் கொண்­டி­ருக்கும் வகையில் இரண்­டா­வது மந்­திரி சபை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இது மாகா­ணங்கள் அல்­லது பிராந்­தி­யங்­களின் கட்­ட­மைப்பு அல்ல. இது மத்­திய அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்­பாகும். ஆகவே மாகா­ணங்கள் அல்­லது பிராந்­தி­யங்கள் மத்­திய அர­சாங்­கத்­துடன் மீண்டும் நேர­டி­யாக தொடர்­பு­ப­டு­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தில் அவ­ச­ர­மாக சட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு செக் வைக்கும் கட்­ட­மைப்­பா­கவும் காணப்­ப­டு­கின்­றது. அத­வாது சட்ட மூலங்கள் தொடர்பில் இரண்­டா­வது மந்­திரி சபை தமது ஆலோ­ச­னை­களை வழங்க வேண்டும். அதே­நேரம் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான திருத்­தங்­க­ளின்­போது இரண்­டா­வது மந்­திரி சபையின் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அனு­மதி அவ­சியம். தற்­போ­து­வ­ரையில் இரண்­டா­வது மந்­திரி சபையா அல்­லது செனட் சபையா என்று பெயர் சொல்­லப்­ப­டப்­போ­கின்­றது என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:- இரண்­டா­வது மந்­திரி சபை­யிலும் பெரும்­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களே அதி­க­மாக காணப் ப­டப்­போ­வதால் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு நன்­மை கள் கிடைக்கும் என எவ்­வாறு எதிர்­பார்க்க முடி யும்?

பதில்:- இந்த கட்­ட­மைப்பில் 55 உறுப்­பி­னர்கள் இருப்­பார்கள். இதில் 10 பேர் பாரா­ளு­மன்­றத்­தினை சேர்ந்­த­வர்கள். ஏனைய 45 பேரும் 9 மாகா­ணங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­ய­வர்கள். இவர்கள் வடக்கு கிழக்கில் மலை­ய­கத்தில் சிறு­பான்மை பிர­தி­நி­தி­களே அதி­க­மி­ருப்­பார்கள்.

ஏனைய மாகா­ணங்­க­ளிலும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்கள் இடம்­பெ­றலாம். அத்­துடன் அதி­கா­ரங்­களை பகிர்­வ­தற்கு விரும்பும் மாகாண சபை பிர­தி­நி­தித்­து­வங்­களே இங்கு காணப்­படும். ஆகவே பெரும்­பான்­மை­யா­ன­வர்­களால் மட்டும் முடி­வுகள் எடுக்­கப்­படும் என கொள்ள முடி­யாது.

கேள்வி:- அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை நீங்கள் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாகா­ணங்­க ளுக்­கான அதி­கா­ரங்கள் 13 ஆவது திருத்­தச்­சட் டத்தில் குறிப்­பிட்­ட­வற்றை விடவும் மேல­தி­க­மாக இருக்­குமா?

பதில்:- நிச்­ச­ய­மாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மாகா­ணங்­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களை மையப்­ப­டுத்­திய அவற்றை வலு­வூட்­டு­வ­தா­கவே அமையும். ஆகவே அது நிச்­சயம் 13பிளஸ் ஆகும்.

உதா­ர­ண­மாக கூறு­வ­தாயின் தேசி­ய­கொள்­கை­களை உரு­வாக்­கு­கின்­ற­போது மாகா­ணங்கள் தொடர்­பு­ப­ட­வேண்டும் என்று முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களின் பிர­காரம் சுற்­ற­றிக்­கைகள் ஊடாக எதிர்­கா­லத்தில் தேசிய கொள்­கை­களை உரு­வாக்க முடி­யாது.

அதி­கா­ரங்கள் பகிர்வு தொடர்­பாக பாரா­ளு­மன்றம் சட்­டத்­தினை இயற்­றினால் அந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­காரம் மாகா­ண­ச­பை­க­ளுக்கே காணப்­படும் என்ற முன்­மொ­ழிவும் காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய நிலையில் அவ்­வா­றில்லை.

கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு சம்­பந்­த­மாக இரண்டு வேறு­பட்ட முன்­மொ­ழி­வுகள் இடைக்­கால அறிக்­கையின் பின்­னி­ணைப்பில் உள்­ளன. இந்த விடயம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் எவ்­வாறு அமை யப்­போ­கின்­றது?

பதில்:- வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த விடயம் சம்­பந்­த­மாக நீண்ட கலந்­து­ரை­யாடல் அவ­சி­ய­மா­கின்­றது. இடைக்­கால அறிக்­கையில் பொது­வா­க­வுள்ள பிர­தான விட­யங்­க­ளு­ட­னேயே நான் இசை­கின்றேன். மேலும் இந்த விட­யத்தில் குறித்த இரண்டு பிர­தே­சங்­க­ளிலும் உள்ள மக்­களின் விருப்­பினை வெவ்­வே­றாக அறிய வேண்டும். அவ்­வா­றில்­லாது சட்­ட­மி­யற்ற முடி­யாது.

தற்­போது நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மாகா­ணங்கள் இணைய வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்டால் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மி­யற்ற முடியும் என்று கூறப்­பட்­டுள்­ளது. அதன் பிரா­கரம் சட்டம் இயற்­றப்­பட்­டது. ஆனாலும் ஒரு வரு­டத்­திற்கே அந்தச் சட்டம் நடை­மு­றையில் இருந்­தது. தொடர்ந்­தி­ருக்க வேண்­டு­மாயின் 1988 டிசம்பர் 31ஆம் திக­திக்கு முன்­ன­தாக அந்த பிர­தே­சத்தில் மக்கள் வாக்­கெ­டுப்பை நடத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

தற்­போ­தைய நிலையில் மாகா­ணங்கள் இணைப்பு குறித்து சட்டம் இல்லை. பாரா­ளு­மன்­றத்தில் புதி­தாக சட்டம் இயற்­றப்­பட வேண்டும். அவ்­வாறு இயற்­றப்­ப­டாது விட்டால் என்­றுமே அது சாத்­தி­ய­மா­கப்­போ­வ­தில்லை. ஆனால் அவ்வாறான சட்டம் இயற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மாகாணங்களிலோ அல்லது அந்த மாகாண மக்களே இணைய வேண்டும் என்று எத்தனை யோசனைகள் முன்வைத்தாலும் பயனில்லை. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

கேள்வி:- ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறைமை நீக்கம் சம்பந்தமாக வெவ் வேறு நிலைப்பாடுகள் பிரதான கட்சிகளுக்குள் காணப்படுகின்றதே?

பதில்:- இடைக்கால அறிக்கையின் பிரகாரம்சுதந்திரக்கட்சி மட்டுமே வேறுபட்ட நிலைப்
பாட்டில் உள்ளது. ஏனைய கட்சிகள் நிறை வேற்று அதிகாரத்தினை நீக்கவேண்டும். பாராளுமன்றம் வலுவாக்கப்படவேண்டும் என்றே கூறுகின்றன.

70ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர் வின் போது உரையாற்றிய ஜனாதிபதி பாராளுமன்றத்தினை வலுப்படுத்த வேண்டும் என்றே கூறுகின்றார். ஆகவே ஜனாதிபதி மைத்திரிபாலவின் நிலைப்பாடு மாறுபடவில்லை என்பதே எனது நம்பிக்கையாகவுள்ளது.

ஜனாதிபதிக்கு தற்போதுள்ள மாகாண சபைகள் தொடர்பான அதிகாரங்கள் போன்று விசேட அதிகாரங்கள் அளிப்பது தொடர் பாக மேலும் கலந்துரையாடல்களை செய்ய முடியும். அதேநேரம் ஜனாதிபதி பிரதமரு டன் ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொள்வ தென்ற ஏற்பாடும் சிறந்த தொன்றாகும்.

கேள்வி:- இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்பாகவுள்ள கட்சிகளின் தனிப்பட்ட முன்மொழிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன. இடைக்கால அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப் படவுள்ளது. சிவில் அமைப்புகள், மக்களுடன் கலந்துரையாடல்கள் அவசியமாகின்றன இச்சவால்களுக்கு முகங்கொடுத்து அடுத்த இரண்டரை வருடங்களுக் குள் நிறைவு செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எவ்வளவு தூரம் நம்பு கின்றீர்கள்?

பதில்:- இரண்டரை வருடங்கள் வரையில் பொறுத்திருக்க முடியாது. மேலும் காலதாம தப்படுத்தப்படும் பட்சத்தில் தேர்தல் காலம் வந்துவிடும். அச்சமயத்தில் இந்த விடயம்வேறு கூறுகளால் சீர்குலைந்து விடும். ஆகவே அடுத்த வருடத்திற்குள் இப்ப ணியை நிறைவு செய்ய வேண்டும். அதனை செய்து முடிக்க முடியும். அதற்கான உணர்வு எனக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

http://tnaseiithy.com/interviews/wiki-into-extimist-s-prison-jayampathy-wickramaratne-chevavi

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply