ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 1

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு
ஆ. சின்னத்தம்பி

காப்பு

கடவுள் வணக்கம்

உலகினை ஓம்பும் உமையொரு பாகன்
நிலவிடுஞ் சத்தி நிறையருள் மலரடி
அலகிலாக் கருணை அற்புத விநாயகன்
இலகு பேரொளி யருள் இன்ப வாரிதி
குலவிய குழந்தை குழை கழலடியினை
நலமுடன் நாவிடை நவிலும் நாமகள்
குலமுடன் பொருள் தருந் திருமகள்
நலமுடன் காப்ப நானிலத் தெமையே

குரு வணக்கம்

பூண்ட இருபதாந் நூற்றாண்டிற் பூமிதனில்
ஆண்ட தமிழ்க் கலையின் ஆசானாம் வேண்டு புகழ்
மேவுங் கணேசனார் மேவும் மலரடிக் கண்
மேவுங் குழைந்து மனமே.

எனது குரு வித்துவ சிரோன்மணி
சி. கணேசையா அவர்கள்
எனக்கு மனம் உவந்தளித்த

குருவாக்கு

சீரோங்கு யாழ்ப்பாண நாட்டின் கீழ்ப்பால்
சேர்ந்ததொரு வரணியெனும் பதியின்மேய
ஏரோங்கு கருக்காய்ப் பேரூரிற் கோயில்
எழுந்தருளும் சித்திவிநாயகனார் மீதில்
பேரோங்கு மிரட்டைமணி மாலை தன்னைப்
பேணிவழி படுவோர்கள் ஓதியுய்ய
ஆரோங்கு மன்பினுடன் அழகிற் பாடி
யளித்திட்டா னவனெவ னென்றுரைப்பக் கேண்மோ.

வரணியெனு மப்பதியிற் தம்பா னூரில்
விசிகுமர வேற்சூர்யா மரபில் வந்தோன்
பரவுநிறை யார்வமுடன் தமிழைக் கற்றோன்
பரனடிகள் தனைப்பேணும் பான்மையுற்றோன்
விரவுபெருங் குணமுடையோன் கொக்குவிற்கண்
மேவுகல்லூரியினிற் பண்டிதனா யுற்றோன்
கரவுபெறா நெஞ் சுடையன் தமிழ்நூல் பல்ல
கவினு மதியுடனென்பாற் கற்றுமிக்கோன்.

மன்னுசைவ மரபினில் வந்துளோன்
சென்னியிற்பிறை சூடும் சிவன்தரு
முன்னவன் தனக்கன்பு முதிர்ந்துளான்
சின்னத்தம்பி எனும் பெயர்ச் செம்மலே


சிவமயம்

பண்டித வித்துவான்
ஆ. சின்னத்தம்பி

பிறந்த நாள்
10 – 09 – 1911

ஈழநாட்டாராய்ச்சி வரலாறு
உள்ளுறை

குமரிகண்டத்தில் இருந்த ஓர் உள்நாடு ஈழம். ஈழம் என்னும் பெயர் குமரிகண்ட காலத்தில் வழக்கில் இருந்த பெயர். ஈழத்தின் தற்போதுள்ள மலைத் தொடர்கள் குமரிமலையின் பகுதிகளே. குமரிகண்ட காலத்தில் அதி உயரமாய் இருந்த தெய்ளீகமான மலை சிவனொளி மலை. சிவனொளி மலையிலேயே இறைவன் த~ணாமூர்த்தியாக எழுந்தருளி இருந்துநான்கு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். ஈழம் சிவபூமி. சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் குமரி மலையின் தென்னந்தம் ஈழநாட்டுப் ப+ர்வீகக் குடிகள் தமிழர். ஈழத் தமிழ் நாடு: முதன் முதல் மக்கள் இனம் தோன்றிய இடம் ஈழம்@ ஈழத்தின் கடவுட் கொள்கை சிவநெறி@ அசுரர், இயக்கர், நாகர் என்னும் பெயர்கள் ஆரியர் வருகைக்குப்பின் வடமொழியில் அவர்களால் தமிழருக்கு இடப்பட்டு வழங்கிய பெயர். விசயன் கலிங்க நாட்டுத் தமிழன், குவேனி ஈழநாட்டு அரச கன்னிகை. விசயன் பேசிய மொழி தமிழ்@ சமயம் சிவநெறி. ஈழநாட்டு அரச பரம்பரை இரண்டுபிரிவானது. இவற்றில் அரச பரம்பரையாவது ஈழநாட்டு பூர்வீக அரச பரம்பரையும் கலிங்க நாட்டு அரச பரம்பரையும் (விசயன்) ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரையாகும். அடுத்தது விசயனோடு வந்த விசயன் கூட்டாளிகளும் (கலிங்க நாட்டுத் தமிழர்) ஈழ நாட்டுத் தமிழரும் ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரை. சிங்களம் என்ற சொல் புத்த பிக்குகளால் புனையப்பட்ட பெயர். சிங்களம் இனம், சிங்கள மொழிஎன வழக்கு ஏற்படலாயிற்று. சூரன் ஆதியோரும் மாதோட்ட மன்னர்களும் பூர்வீகத் தமிழ் மக்களின் அரச பரம்பரையினர். சூரன் ஆதியோரின் பெண்வழி மாதோட்ட மன்னர்பரம்பரையே. சிங்களவர் எனத் தற்போது உள்ள இனத்தவர்கள். ஈழநாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, கலிங்கநாட்டைச் சேர்ந்த தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களேயாவர். ஈழநாட்டுத் தமிழரின் கொடி சிங்கக்கொடி, பனைக்கொடி, ஈழநாட்டில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.

பாட அட்டவணை

பக்கம்.
பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும் 1
சங்ககாலம் ஆரம்பம் 19
ஈழமும் வரலாறும் 46
விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் 90
படை எழுச்சிகளும் விளைவும் 111
கலிங்க மாகன் படை எழுச்சி 132
ஈழமும் தமிழர் ஆதிக்கமும் 139

குறிப்பு:
கலியுக ஆண்டுகளும், அவற்றோடு ஒப்புநோக்கிக் கூறிய கிறிஸ்துவ ஆண்டுகளும் நூல் எழுதிய காலத்தை எல்லையாக வைத்துக் கூறப்பட்டுள்ளன என்பதை வாசகர்கள் உணர வேண்டும். பின் காலப்போக்கில் காலம் வளர்ந்து கொண்டே செல்லும்.


சிவமயம்

நூலாசிரியர் வரலாறு

எழுதியவர்:
ஸ்ரீமான் பண்டிதர் இ. நவரத்தினம் அவர்கள்
உரும்பிராய்

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் இவ்வரிய ஆய்வு நூலை ஆக்கியவர் வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் இவர் வரணி வடக்குக் குறிச்சி தம்பான் என்னும் இடத்தில் வசித்த வல்லியப்பர் ஆறுமுகம் என்பவரும், அவரது இல்லக்கிழத்தி மங்கை நல்லாள் பொன்னர் மகள் கற்பாத்தை என்பவரும் சேர்ந்து செய்த தவத்தின் பயனாய் தோன்றியவர்.

இவர்களுடைய வமிசாவழி மிகவும் புகழ் பெற்றது. அஃதாவது சைவத்தின் உறைவிடமாகிய வரணி வடக்குக் குறிச்சி வேளாண் பிரபு திரு. அம்பல முதலியார் மகள் அங்கயற் கண்ணி அம்மையார் புலோலி வேளாண் தோன்றல் பெருமையினான் குமாரவேலர் வமிசாவழியில் வந்த குமாரவேலர் சூரியர் முருகர் வழித்தோன்றலே பண்டித வித்துவான் சின்னதம்பி அவர்கள்.

இவர் 10-09-1911ல் பிறந்தார். இவருக்கு ஆசிரியர் கந்தையா, ஊர்காவலர் வேலுப்பிள்ளை. கூட்டுறவுச் சங்க ஊழியர் குமாரவேலு எனும் மூன்று ஆண் சகோதரர்களும், சின்னாச்சிப்பிள்ளை என்னும் ஒரேயொரு பெண் சகோதரியுமாக நால்வர் உடன்பிறப்பாளர் ஆவர்.

கல்விப்பருவத்தில் வரணி வடக்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஜே. எஸ். சீ வரை படித்த பின் சுன்னாகம் பிராசீன பாடசாலையில் 1928, 1929ம் ஆண்டுகளில் படித்து 1939ம் ஆண்டில் யாழ்ப்பாணம் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார். அப்போது இவருக்கு வயது பத்தொன்பதாகும். இவ்விளமைப் பருவத்தில் பண்டித பரீட்சையில் தேறியமை இவரது திறமையை எடுத்துக் காட்டும் ஒரு பெருஞ் சாதனையாகும். இவருக்கு ஆசிரியராக வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களே அமர்ந்திருந்தார்.

பின்னர் 31ம், 32ம் ஆண்டுகளில் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்டு 2ம் ஆண்டு பயிற்சி முடிவதற்கு முன்னாக அப்பயிற்சி நிலையம் மூடப்பட்டதால் இவரது ஆசிரியப் பயிற்சி நிறைவேறாதாயிற்று. அதனால் தராதரம் அற்ற ஆசிரியராக அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில் படிப்பித்து வந்தார்.

இவ்வாறு படிப்பித்து வருங்காலத்தில் 1950 ஆண்டு மதுரைப் பண்டித பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார். 1956ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடாத்தும் வித்துவான் பரீட்சையிலும் தோற்றிச் சித்தியடைந்தார்.

இவர் தராதரம் அற்ற ஆசிரியராகக் கடமை ஆற்றும் காலத்தில் 21ஆவது வயதில் மந்துவில் வைரவநாதர் சின்னையாவின் மகள் அரிவையர்திலகம் அன்னம்மா அம்மையாரைத் திருமணம் செய்தார். பத்து வருட காலம் பாலும் தேனும் போல இயைந்து இல்லறம் நடாத்தியும் பிள்ளைச் செல்வம் கிடைக்கவில்லை. பாரியாரும் பாருலகு நீத்தார்.

பின்னர் இரண்டாந் தாரமாக கரணவாய் தெற்கு சோழங்கன் ஐயா உடையாரின் சகோதரி பெரியநாச்சனுக்கும், மணியந்தோட்டம் கந்தையாவுக்கும் மகனான வல்லிபுர நாதர் மகள் மங்கையரில் மாண்பு மிக்குடைய தங்கம்மா அம்மையாரை 34ஆவதுவயதில் வதுவை அயர்ந்து சிங்கேறு எனத் தகும் இரு ஆண் மகவைப் பெற்றார். அவர்களில் முதன் மகனான செல்வன் மாணிக்கத் தியாகராசாவைச் சிவபதம் அடையவிட்டு சிவன் செயல் என்று இருந்தார். அடுத்த மகன் செல்வன் புவனேந்திரநாதனையே பற்றுக்கோடாகப் பேணி கல்வி பயிற்றி வந்தார்.

அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்து க. பொ. த (உயர்தர) வகுப்பில் சித்தியடைந்தார். பின்னர் அவர் றேடியோ கிறாவர் (சுயனழை புசயிhநச) ஆகப் பயிற்றப்பட்டு பதவி பெற்று பணியாற்றிவருகின்றார்.

பண்டித வித்துவான் சின்னத்தம்பி அவர்கள் ஆரம்ப காலத்தில் அம்பன், வரணி, வரணி இயற்றாலை, நவக்கிரி, அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளிலும், பின் கொக்குவில் இந்துக்கல்லூரியில் 8 வருட காலமும், உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் 2 வருட காலமும் ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் 50 ஆவது வயதில் திருநெல்வேலி பயி;ற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராகப்பதவியும் பெற்றார். பின்னர் 52 ஆவது வயதில் தான் பிறந்த இடமாகிய வரணியில் உள்ள வரணி மகா வித்தியாசாலையில் கடமையாற்றி 60 ஆவது வயதில் இளைப்பாறினார்.

ஆசிரியராகக் கடமையாற்றுங் காலங்களில் மக்கள் சேவையிலும் ஈடுபாடு உடையவர் ஆகத்திகழ்ந்தார். வரணிக் கிராமச் சங்கத்தில் உறுப்பினராக 12 வருடம் கிராமத்துக்குச் சேவையாற்றினார். கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராக இருந்து 10 வருடம் வரணி, கச்சாய், மிருசுவில் கிராமங்களுக்குச் சேவை புரிந்தார்.

நூலாசிரியரின் குரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையராலும். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலும் சிறப்புப் பாயிரம் ஈயப்பெற்ற வட வரணிக்குரிய கறுக்காய்ச் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை என்னும் நூலே இவரால் முதன் முதல் வெளியிடப்பட்டது.

இவர் இரு தேசப் பண்டிதராயும் சென்னை வித்துவானுமாய் இருப்பதில் இருந்தே தமிழில் இவருக்குள்ள ஆழ்ந்த புலமை தெரிகிறது. 19வயதிலேயே முதல் பண்டிதர் ஆனார் எனில் இவரது கூரிய மதிநுட்பம் புலனாகின்றதல்லவா? ஆசிரியத்துவத்திலும் யாருக்கும் பின்நிற்பவரல்லர். மாணவருக்கு விடய விளக்கம் அளிப்பதில் மிகவும் திறமை படைத்தவர்.

செய்யுட்சவை நனிசொட்டச் சொட்டப் பாக்களை யாப்பதில் வல்லுநர். எதிரிகளோடு வாதிடுவதிற் சிங்கேறு போலப் பாய்வார். ஆயினும் மிக சாந்த குணம் உள்ளவர். நேர்மை வழி தவறாதவர். நட்புக்கினியவர். நாநலம் மிக்கவர். முப்பொருள் உண்மை முற்றும் உணர்ந்தவர். சித்தாந்த சாகரத்தே மூழ்கித் திளைத்து முத்துக்கள் எடுத்து மொழிவார். கேட்போர் வயிற்றை மறந்திடுவர். எனது சீரிய நண்பர். இவரது தமிழாக்க முயற்சி மேன் மேலும் ஒங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அணிந்துரை

வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் எழுதிய ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் நூல் பல சுவையான தகவல்களைத் தருவதுடன் எம்முடைய நாட்டின் வரலாறு பற்றி ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டுகின்றது.

ஈழநாடு ஒரு காலத்தில் குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனவும், அது பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாகத் தனித் தீவாகியது எனவும், குமரிக் கண்டத்து மக்கள் தமிழரே@ அதுபோல் ஈழத்து மக்களும் தமிழரே எனவும் ஆசிரியர் இந்நூல் வாயிலாக நிறுவ முற்படுகின்றார்.

“பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்னும் சிலப்பதிகாரச்செய்யுளடி மூலம் குமரி எனப் பெயரிய ஒரு பெரிய மலையும் பஃறுளியாறும் கடலுக்கள் அமிழ்ந்தன என அறிகிறோம். இக் கடல்கோள் காரணமாகவே குமரிக்கண்டம் சிதைவுற்று தமிழ் நாட்டின் தென் கோடியிலே ஈழம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுகள் ஏற்பட்டன என நூல் ஆசிரியர் கூறுவர் பொருத்தமானது எனவே எண்ணுகிறேன்.

இந்நூலில் வரலாற்றுத் தரவாக இலக்கியச் சான்றுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகள் கிடைப்பின், அவற்றுடன் இவ்விலக்கியச் சான்றுகளை ஒப்புநோக்கிக் கூறுவர் அவசியமாகும். எனினும் குமரிக்கண்டம் பற்றியும், ஈழம் பற்றியும் நாம் சிந்திக்கக் கூடிய பல தகவல்களை ஆசிரியர் இந்நூலிலே தொகுத்துத் தருகிறார். “குமரி என்பது மலையே, அம்மலை செறிந்த இடம் குமரி நாடு எனப்படும். அம் மலையினின்று பாயும் ஆற்றை குமரியாறு என்றலும், குமரி மலையை மோதும் கடலை குமரிக்கடல் என்றலும் சகசமே…. குமரிநாடு இந்துமாக்கடலுள் பரந்து இருந்த தென்பதையும், அது கடற்பெருக்கினால் கடல்வாய்ப்பட்டு சிதைந்து பல தீவுகளாகவும், இடையிடையே சிறுகடல்களாகவும் உருமாறின தென்பதையும் அதனால் இந்தியாவினின்றும் இலங்கை துண்டிக்கப்பட்டதென்பதையும் வரலாற்றாசிரியர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர்” (பக்.29-30) என ஆசிரியர் கூறிச் செல்கிறார். திராவிட மொழிகளைப் பிறமொழிகளுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்ததனால், திராவிடப் பண்பாட்டுக்கும் பிறபண்பாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் ஐயம் கொண்டுள்ளனர். மேலைப் பக்கத்தில் சுமேரிய (இது குமரியின் திரிபு ஆக இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்) நாகரிகம் பற்றியும் ஈழம்மொழி பற்றியும் அறிகிறோம். கிழக்குப் பக்கத்தில் யப்பானில் பண்டைக் காலத்தில் குமரி (முருஆயுசுஐ லுயுஆயு) என்று ஒருமலைக்குப் பெயரிருந்தது. இவை குமரிக்கண்டத்தின் சிதைவினால் ஏற்பட்ட விளைவுகளோ என ஐயப்படவும் இடமுண்டு. எனவே குமரிக்கண்டம் பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டிய தொன்றாகும். அத்தகைய ஆய்விலே இந்நூலாசிரியர் குமரிக்கண்டம் பற்றிக் கூறுவன நுணுகி நோக்கப்படும் என்பதிலே ஐயம் இல்லை.

ஈழம் தொடர்பாக ஆசிரியர் கூறும் கருத்து ஒன்றினை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய முதலியார் இராசநாயகம் இந்நாட்டில் பண்டைக்காலத்தில் ஈழு என்றொரு மொழி பேசப்பட்டுவந்த தென்றும் அதனால் இந்நாட்டிற்கு ஈழம் எனப்பெயர் வரலாயிற்று” எனக் கூறியுள்ளார். முதலியார் இராசநாயகம் கூறிய இக் கருத்தினை இந்நூல் ஆசிரியர் பண்டிதவித்துவான் சின்னத்தம்பி மிக வன்மையாகக் கண்டிக்கிறார். இது தொடர்பாக ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்:

“புத்த மதத்தோடு இங்கு வந்த புத்த பிக்குகள் ஈழநாட்டின் ஈழ மக்களால் பேசப்பட்ட தமிழ் மொழியை நாட்;டின் பெயரால் சுட்டி ஈலு மொழியெனக் கூறியிருக்கலாம். இது அவர்களுடைய வழக்கென்றே கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஈழு என உச்சரிக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் ஈலு என வழங்கினார்கள். அஃது பின்னும் காலக்கிரமத்தில் எலு என்று உருமாறலாயிற்று. எனவே அவர்கள் ஈலு என்றும் வழங்கிய பெயர் ஈழநாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியைக்குறித்தேயன்றி ஈழு என ஒருமொழி பேசப்பட்டு அதனால் நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வந்ததன்று. இதுவே உண்மை வரலாற்று நிகழ்ச்சியாகும். இன்னும் எலு என்னும் சொல்லாகிய பெயர் சிங்கள மொழியிலேயே காணக் கிடப்பதாலும்வேறு உலக மொழிகள் எதினாலும் அப் பெயர் கூறப்படாமையினாலும் மேற்போந்த உண்மை இன்னும் தெளிவாகிறதன்றோ?”

ஆசிரியருடைய இக்கருத்து எம்முடைய சிந்தனையைத் தூண்டவல்லது.

பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது:

1. பூர்வகாலம் – குமரி நாடும் ஈழமும்
2. ஈழமும் வரலாறும்.
ஐ) இலங்கை
ஐஐ) ஈழமும் விசயனும்
ஐஐஐ) ஈழமும் சிங்களமும்
ஐஏ) ஈழமும் பழைய நூல்களும்
ஏ) தமிழரும் திராவிடரும்
ஏஐ) சூரன், சிங்கன், தாரகன்
3. விசயன் வருகை
ஐ) விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும்
ஐஐ) படை எழுச்சிகளும் விளைவும்
ஐஐஐ) கலிங்கமாகன் படை எழுச்சி
ஐஏ) ஈழமும் தமிழர் ஆதிக்கமும்.

இப்பிரிவுகளின் அடிப்படையிலே, ஈழத்தினுடைய, ஈழத் தமிழருடைய வரலாற்றை ஆசிரியர் தமக்கேயுரிய பாணியிலே விவரிக்கின்றார்.

இந்நூலிலே ஒருபுதிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. அது விசயனும் அவனுடைய கூட்டாளிகளும் இத்தீவிலே இறங்கி ஆட்சி நகர் ஒன்றை அமைத்தது பற்றியதாகும்.

“விசயனும் கூட்டாளிமாரும் சிங்கபுரத்துக்கு மிகவும் அணித்தான துறைமுகமாகவுள்ள கற்கோவளக் கரையில் இறங்கி இருக்கலாம் என்பது பலவாற்றாளும் பொருத்த முடையதாகும்”

இவ்வாறு சிங்கை நகருக்கு வந்த விசயன் வரணியில் உள்ள தம்பான் என்னும் இடத்தைத் தன்னுடைய உறைவிடமாகக் கொண்டு அரசதானி அமைத்தான் என்னுஞ் செய்தி புதியதொன்றாகும். வரலாற்றாசிரியர்களின் சிந்தனைக்கு இது விருந்தாக அமையுமென நம்புகிறேன். எனினும், தம்பான் பகுதியில் இது தொடர்பான அகழ்வாராய்வுச் சான்றுகள் கிடைப்பின் இச் செய்தி தொடர்பான ஆய்வுமேலும் விரிவடைய வாய்ப்புண்டு.

இத்தகைய வரலாற்று நூல்களைக் கண்டவுடன் பலர் இது மரபுவழிப்பட்ட எழுத்து எனக் கூறுவது வழக்கம் . ஆனால் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ள முடியுமாயின், இத்தகைய எழுத்துக்களையும் நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். புராணக்கதைகள், சில வரலாற்றுத் தரவுகள், ஊகங்கள் ஆகியனவற்றை அடிப்படையகக் கொண்டு இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டது. ஈழ வரலாற்றைச் செம்மையுற எழுதவுள்ள கல்வியாளர்களுக்கு வித்துவான் சின்னத்தம்பி அவர்களுடைய இந்நூல் பெரிதும் உதவவல்லது.

பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ்
தலைவர்,
தமிழ்த்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
12 – 11 – 1993.



சிவசமயம்
ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு

காப்பு
நற்குஞ்சரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்
வேழ முகத்து விநாயகரைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்@

1. பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும்

நாம் வசிக்கும் நாடு இலங்கை. இதன் பழமையான ஒரே ஒரு பெயர் ஈழம் என்பதே. இந்நாட்டின் செழிப்பும் பலப்பல சீரும் நோக்கிப் பல நாட்டினராலும் காலத்துக்குக்காலம் பலப்பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்திக்கின்றன. அவை லங்கா, இலங்கை, மணி பல்லவம், இரத்தின துவீபம், நித்தில துவீபம், சேரன்றிப், சிலோன் முதலாயின.

இப் பெயர்கள் சில ஓரோர் காரணத்தைக் கருத்திற் கொண்டு. வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டார் தத்தம் மொழி இயல்புக்கமைய இட்டு வழங்கிய பெயர்களாகும். ஆதலின் இப் பெயர்களின் வழக்காட்சியையும் மொழி ஆக்கத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து நம் நாட்டின் பழமையை ஒருவாறு தெளிவாக அறிய முடியும்.

முன்னர் காட்டிய பெயர்களுள் ஈழம். லங்கா, இலங்கை என்ற பெயர்கள் பற்றிப் பின்னர் விரிவாக விளக்குவோம். அடுத்தது மணிபல்லவம் என்னும் பெயர் ஆகும். இப்பெயர் எழுந்த வகை பற்றி ஆராய்வோம். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்பவர் இப் பெயரை எடுத்தாண்டுள்ளார். இவர் சேரன் செங்குட்டுவன் காலத்தவர். இவர் காலம் கி.பி. 150 – 180 வரையிலான காலமாகும். இக்காலத்தில் ஆட்சி புரிந்த இலங்கை அரசன் 1ம் கசபாகு என்பவன். இவனே கண்ணகி வணக்கத்தை இலங்கையில் பரப்பியவன். சிலப்பதிகாரம் அதனை வலியுறுத்துகின்றது. எனவே மணிபல்லவம் என்னும் பெயர் சித்தலைச்சாத்தனார் எடுத்தாளுவதற்குப் பன்னெடுங் காலம் முன்னதாகவே வழக்கில் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் கடைச்சங்க காலத்து அப்பெயர் வழக்கு இருந்திருக்க வேண்டும். கௌதம புத்தர் காலத்திலேயே (கி. மு. 543) இவ் வழக்கு இருந்தமை புத்தர் வரலாற்றில் காணப்படுகின்றது. எனவே ஈழ நாட்டில் மணிபல்லவம் என்பது மிகமிகப் பழமையான பெயர் என்பது புலனாகும். விசயன் வருகைக்கு முற்பட்ட வழக்காகும்.

இனி இப் பெயர் எழுந்தமைக்கு என்ன காரணம் இருந்திருக்கலாம் என ஊகித்தறிவோம் மணிபல்லவம் என்னும் பெயர் மணி – பல்லவம் என்னும் இரு சொற்களால் ஆயது. மணி என்றால் அழகைக் குறிக்கலாம். அன்றி ஒன்பது வகையான நவரத்தினங்களையும் குறிக்கலாம். அன்றேல் மாணிக்க இரத்தினத்தைக் குறிக்கலாம். இலங்கை பண்டுதொட்டு இரத்தினக்கல் அகழ்ந்தெடுக்கும் ஓர்நாடு என்பதை உலகம் அறியும். அன்றி சிறந்த முத்துக்கும் பேர்போன நாடு. இவ்வுண்மையை இரத்தினதுவீபம். நித்திலதுவீபம், இரத்தினபுரி, முத்துச்சலாபம் என்ற பெயர் வழக்கே புலப்படுத்துகின்றது. ஆதலின் இரத்தினம் முத்து முதலான மேலான பொருட்கள் கிடைக்கும் ஓர் செழிப்புள்ள நாடு என்னும் கருத்தமைய மணிபல்லவம் எனப் பண்டைக் காலத்து தமிழ் மக்கள் தம்மொழியில் பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பது போதரும்.

இனி இப் பெயர் தூய தமிழ் மொழியாய் இருத்தலினால் இந்நாட்டுப் பூர்வீக தமிழ் மக்களே இப் பெயரைத் தம் நாட்டிற்கு இட்டு வழங்கினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தமிழரே இலங்கையின் பூர்வ குடிகள் ஆனதினாலும் தமிழர் வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து இலங்கையில் குடியேறினர் அல்லர் ஆனதினாலும் இலங்கையில் தமிழர் அல்லாத வேற்று மொழியாளர் வசித்தனர் என்பதற்கு வரலாறு இன்மையாலும். அதற்கு வேறு எந்தவிதமான சான்றுகள் இன்மையாலும், மணிபல்லவம் என்னும் தமிழ்த் தொடர் தமிழர் வழங்கிய வழக்கே என்பதும் அஃது மிகவும் காலவரையறைக்கப்பாற்பட்ட வழக்கு என்பதும் நாம்தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

அடுத்த பெயர்கள் இரத்தினதுவீபம், நித்திலதுவீபம் என்பன. இவை இத் தீவில் இரத்தினமும், முத்தும் மிகுதியாகக் கிடைத்த காரணத்தினால் வழக்கில் வரலாயின. இப் பெயர்களில் உள்ள இரத்தினம், நித்திலம், துவீபம் என்ற சொற்கள் வடமொழிச் சொற்களாகும். எனவே வடமொழியாளரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவை என்பது பெற்றாம். அவ்வாறானால் அப் பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின்னர் அவர்களால் சூட்டப்பட்ட பெயராதல் வேண்டும். ஆதலின் அப் பெயர்கள் பிற்கால வழக்கென்பது வெளிப்படை. எனவே பன்னெடுங்காலம் முன்னதாகவே தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பெயர் மணிபல்லவம் என்பது தாமே போதரும் உண்மையாகும்.

இனி செரன்றிப் என்ற பெயரை எடுத்துக்கொள்வோம். இப் பெயர் அராபிய தேசத்து வணிகர்களால் இலங்கையைக் குறிப்பிட்ட பெயர்ஆகும். இங்கே சேரன் என்பது சேரநாட்டைக் குறிப்பதாகும். திவ்றிப் என்பது தீவு என்ற சொல்லின் திரிந்த உருவம். அஃதாவது வாய்ஒலி மாற்றமாகும். இனி அவ்வாறு அவர்கள் இலங்கையைக் குறிப்பிட்டமை பற்றி விளக்குவோம். இலங்கையை நோக்கி அரபிக் கடலின் ஊடாக வரும் அராபிய வணிகர் முதல் சந்திக்கும் நிலப்பகுதி சேரநாட்டுக் கரையோரமாகும். அப்பால் அதனைக் கடந்துசெல்ல வருவது இலங்கைத் தீவே. ஆகவே சேரநாட்டை அடுத்த தீவு என்னும் கருத்தை உடையராய் சேரன்றீவ் என அழைக்கலாயினர். அஃது சேரன்றீவ் சேரன்றிப் என வருதல் சகசமே. எனவே அரபு மொழியைத் தம் மொழியாகக் கொண்ட அராபிய வணிகரே சேரன்தீவு என்னும் தொடரைத் தம் மொழியியல்பின் கூறும் பொழுது ஏற்பட்ட வாய் ஒலி மாற்றமே சேரன்றிப் என்பது போதரும். வாயொலி மாற்றம் – உச்சரிப்பு வேறுபாடு. இப் பெயர் இலங்கையோடு வியாபாரத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயரேயாகும். அராபியர் இலங்கைக்கு வந்த காலம் பந்துகாபயன் ஆட்சி காலமாகும். பந்துகாபயன் காலம் கி. மு. 437 – 367 ஆகும். பந்துகாபயன் வரலாற்றில் பரசமயிகள் ஐந்நூற்றுக்கு அதிகமானோருக்கு இவ்விடங்கொடுத்து உதவினான் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வரவில்லை. புத்த மதம் இலங்கைக்கு வந்தது கி. மு. 304ல். பந்துகாபயன் காலத்தில் கிறீஸ்த சமயம் தோற்றவில்லை. எனவே பரசமயிகள் எனக்குறிப்பிடப்படுபவர் அராபியரே என்பது தேற்றம். பந்துகாபயன் காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வருதற்கு முன்னர் இலங்கையில் நிலவிய சமயம் இந்து சமயமேயாகும். ஆதலின் இவர்களுடைய கடவுட் கொள்கைக்கு வேறான கொள்கை உடையவர்களான அராபியர்களைப் பரசமயிகள் எனக் குறிப்பிட்டனர். அன்றி அக்காலத்தில் முகம்மதுவின் கோட்பாடாகிய இஸ்லாம்; மதமும் தோற்றவில்லை. எனவே சேரன்றிப் என்னும் வழக்கு அராபியர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட வழக்காதலின் அதுவும் பிற்பட்ட வழக்கேயாகும். சிலோன் என்பது மேலைத் தேயத்தவர்களால் வழங்கப்பட்ட பெயராகும். இஃது சுமார் 15ம் நூற்றாண்டுக்குப்பின் உள்ள வழக்கேயாகும்.

இனி இந்நாட்டின் பழமைக்கு வருவோம். இந்நாடு ஒருகாலத்தில் வடக்கே உள்ளதும், பரந்த நிலப்பரப்பை உடையதுமான இந்தியாவோடு ஒரே நாடாக ஒன்றிணைந்து இருந்ததாகும். இதனை இலங்கை – இந்தியா இயற்கை அமைப்பே இன்றும் நமக்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ளது ஒர் ஒடுங்கிய நீரிணை. நீரிணையாவது இரு பெரும் நீர்ப்பாகத்தை ஒன்றிணைப்பது: எனவே இந்நீரிணை தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றுபட்டு ஒன்றாகவே இருந்தது என்பது எவரும் எளிதில் உணரக்கூடிய உண்மையாகும் ஆதலின் இவ்விரு நாடுகளும் ஒரு காலத்தில் ஒரு நாடாகவே இருந்தன என்பதை இன்றைக்கும் எவருக்கும் புலப்படுத்திக் காட்டும் ஒருபெரிய சான்று இப் பாக்கு நீரிணையேயாகும். இஃது சுமார் 30 மைல்களுக்குட்பட்ட அகலமுடையதும், ஆழமற்றதும், முருகைக் கற்பார்ச் செறிவுடையதுமாகும்.

இந்நீரிணை ஏற்பட்டு நாடு கடலானமைக்கும் அதனால் இந்தியாவும் இலங்கையும் வேறு வேறு நாடாகப் பிரிந்தமைக்கும் காரணம் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட கடற் பெருக்கேயாகும். இக்கடற்பெருக்கு கடல்கோள் பற்றி பின்னர் ஆங்காங்கு விபரிப்போம். இன்னும் இதனை வலியுறுத்திக் காட்டுவன இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பரந்து கிடக்கும் பலப்பல தீவுகளும், அவற்றின் இடையேயுள்ள பரவைக் கடல்களுமாகும்.

அவை யாழ்;ப்பாணக்குடாநாட்டை அடுத்துள்ள ஏழு தீவுகளும், மன்னார்த்தீவு, இராமேஸ்வரத் தீவு, கச்சதீவு, மாலைதீவு, அந்தமான் தீவு முதலியனவாகும். இத்தீவுகள் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாய் இருந்து கடல்வாய்ப்பட்டதி;னால் ஏற்பட்ட சிதைவேயாகும் என்பதில் ஐயமே இல்லை. இந்தியாக் கரையில் இந்துமாக் கடலில் பலமுறை கடல்கோள்கள் நடைபெற்றன என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் பறைசாற்றுகின்றன. மேலை, கீழைத்தேய வரலாற்றாசிரியர்களும் அதனை ஒப்புக் கொள்வர்.

இனிதமிழ் நாட்டில் (இந்தியா) மூன்று சங்கங்கள், இருந்தனவன்றோ? அவை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பன. முதன் முதலாகத் தொடங்கப் பட்ட ஒரு சங்கம் தொடர்ந்து இருக்குமானால் சங்கங்கள் மூன்றாவதற்கில்லை. சங்கங்கள் மூன்றாகக் கூறப்படுவதினால் இடையிடையே இடையீடுபட்டு சங்கங்கள் மூன்றானமை கடல் கோள்களின் அழிவினால் ஏற்பட்ட மாற்றமேயாகும் என்பதில் ஐயமே இல்லை. எனவே கடல் கோள் காரணமாக இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்து தற்போதிருக்கும் நிலையில் ஒரு தனித் தீவாக மாறியது.

இலங்கை இந்தியாவோடு ஒன்றாய் இருந்த ஆதிகால வரலாற்றை அறிதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிடைத்தில. ஆனால் குமரிகண்ட ஆராய்ச்சி முடிபுகள் அதற்கோர் ஒப்பற்ற சான்றாகும். குமரிகண்ட முடிபுகள் பற்றிய ஈழநாட்டு வரலாறு பி;ன்னர் விபரிக்கப்படும்.

தமிழ் நாட்டைப்பற்றி (இந்தியா, இலங்கை) அறிதற்குரிய மிகப் பழைய வரலாற்று நூல்கள் கந்தபுராணம், இராமாயணம், பாரதம், சங்க நூல்கள் என்பனவே. இவை யாவும் இலங்கையும் இந்தியாவும் பிரிந்த பின்னர் உள்ள வரலாற்றையே கூறுகின்றன. என்றாலும் இவற்றின் மூலம் ஆதி வரலாற்று நிலையை ஒருவாறு அறிய முடியும்.

இவற்றுள் கந்தபுராண வரலாறே மிகமிகப் பழமையானது. அதனை எவரும் ஒப்புக்கொள்வர். இதன் உதவி கொண்டு சில உண்மைகளை அறிய முடியுமானால் அஃது இலங்கை இந்தியாவினின்றும் துண்டிக்கப்பட்ட பின்னர் உள்ள ஆதி வரலாறு என்றே கொள்ள வேண்டும். சூரன் ஆட்சிக்கால முடிவிலும் ஓர் பெரிய கடல் கோள் நடைபெற்றதாகக் கந்தபுராணம் கூறும். அக் கடல் கோளினால் முன்னிருந்த இலங்கையின் பெரும் பகுதி, சூரன் ஆட்சி நகர் வீருமகேந்திரம் உட்படகடல்வாய்ப்பட்டன. அக்காலத்திலேயே இராமேஸ்வரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயுள்ள பகுதி கூடுதலாகச் சிதைவுற்று இடையே சிறு கால்வாயாக மாறி இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. சூரன் வரலாற்றுக்கு வெகுகாலம் பிற்பட்டதே இராமர் வரலாறு ஆகும். எனவே இராமேஸ்வரம் என்னும்பெயரும் இராமர் காலத்திலோ பின்போ ஏற்பட்ட பிற்கால வழக்கேயாகும். அவ்விடத்தின் பழைய பெயர் அறிய வேண்டியதாகும்.

கந்தபுராண வரலாற்றின்படி சூரன் ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரமும் இந்தியாவும் ஒன்றாய் இருந்ததாக அறிகிறோம். வீரவாகு தேவர் சூரனிடம் தூதாக வீரமகேந்திரம் சென்ற போது இராமேஸ்வரத்தின் வடகோடி கந்தமாதனத்தில் இருந்தே கடலைத் தாவி இலங்கைக்குச் சென்றதாக அறிகிறோம். எனவே கந்தமாதனம் வரையும் வீரவாகுதேவர் தரைமார்க்கமாகவே சென்றார் என்பது துணிபொருள். அன்றியும் பிற்பட்ட இராமர் காலத்தில் அணைகட்டிச் செல்லத்தக்கதான சிறுகால்வாயாக இருந்தமை இராமாயண வரலாற்றில் இருந்து அறிகிறோம். எனவே வீரவாகுதேவர் சென்ற காலத்தில் தரையாக இருந்து சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளினால் அத்தரைப் பகுதி சிறு கால்வாயாக மாறியது என்பதே தெளிவான உண்மை.

ஆதலின் எவ்வாற்றானும் இலங்கையும், இந்தியாவும் ஒருகாலத்தில் ஒன்றாய் ஒரே நாடாய் ஒரே தேசமாய் இருந்ததென்பதை மறுக்கமுடியாது. ஒன்றாய் இருந்த அக்காலத்தில் இலங்கையின் பூர்வ குடிகளும், இந்தியாவின் பூர்வ குடிகளும் ஒரே நாட்டு மக்களே என்பதில் ஐயமே இல்லை. அப்பொழுது ஒரே மொழி ஒரே கடவுட் கொள்கை. ஒரே பண்பாடு உடையவர்களாக இருந்திருப்பார்கள். அதற்குச் சான்றாக எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியாவின் தென்பகுதியும், ஈழமும் இன்றும் ஒரே மொழி (தமிழ்) ஒரே கடவுட் கொள்கை (சைவம்) ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை அறிக. ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை மொகஞ்சதாரோ ஆராய்ச்சி முடிபும் வலியுறுத்துவதாகும். ஆரிய மொழி, சிங்களமொழி புத்தமதம், கிறீஸ்தவ மதம். இஸ்லாம் மதம் இவை இடைக்காலத்தே வந்து புகுந்தனவன்றோ? இவைபற்றிப் பின்னர் விபரிப்போம்.

அன்றியும் ஆரியர் இடைக்காலத்தே இந்தியாவினுட் புகுந்தமையினாலும், அவர்கள் இந்தியப் பூர்வ குடிகளோடு (தமிழர்) உறவாடிக் கலந்தமையினாலும், பல மொழித்தோற்றம் ஏற்பட்டுப் பல இன மக்களாக இந்தியாவில் வாழ்ந்த போதிலும், எல்லோரும் ஒரே கடவுட் கொள்கையும், பண்பாடும் உடையவர்களாக இற்றை வரைக்கும் இருந்துவருதலே. ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றாகும். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் கி; மு. 1600 – 2000 வரையிலென வரலாற்றாசிரியர் கருதுவர். அஃதாவது இற்றைக்கு 3588 – 3988 ஆண்டுகளுக்கு முன்னாகும்.

எனவே கி. மு. 1600 – 2000 க்கு முன் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் வாழந்த மக்களினம் தமிழர்களே என்பதில் யாதாமொரு ஐயப்பாடும் இல்லையே. இலங்கையில் சிங்கள மொழியும் புத்த மதமும் ஏற்படுவதற்கான காரண கருத்தாவாக இருந்தவன் தேவநம்பியதீசன் ஆவான். இவன் காலத்திலேயே புத்த மதம் இலங்கைக்கு வந்தது.

ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழினமே வாழ்ந்தார்கள் என்பதற்கு 1922ல் மொகஞ்சதாரோ, கரப்பா என்னும்சிந்துநதிப் பள்ளத்தாக்கில் புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தியபோது அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் இனமே என ஆய்வாளர்கள் முடிபு செய்துள்ளனர். அப்பகுதியின் நாகரீக மக்கள் கி. மு. 3300 – 2900 என்பர். அஃது இற்றைக்கு 5288 – 4888 ஆண்டுகள் முன்னாகும். எனவே துவாபரயுகத்தின் இறுதிக் காலம் ஆகும். எனவே துவாபரயுகத்தில் இந்தியா, ஈழத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. சமயம் இந்து சமயம்.

எனவே ஆரியர் வருகைக்குப்பல நூறு வருடங்களுக்கு முன்னாகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பது வெளிப்படை. இவ்வாறாயின் இத்தகைய தமிழினத்தின் முன்னோர் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்திருக்க வேண்டும். உணர்மின்!

இன்னும் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் குமரி நாட்டின் ஒரு பகுதியாய் இருந்த காலத்திலேயே இக் கடல் கோள் நடைபெற்றிருக்கிறது. அப்போது குமரிக்கோடும் அதனின்றும் ஊற்றெடுத்துப் பாயும் பஃறுளியாறும் கடல் வாய்ப்பட்டுக் கடலானது என்பது பெற்றாம் அக்கடலின் தென்கரையில் உள்ளதே இலங்கை. வடகரையில் உள்ளதே இந்தியா. இதனால் ஒரே நாடாயிருந்த இந்தியாவும் இலங்கையும் இக்கடல் கோளினால் வேறு வேறு நாடாகப்பிரிக்கப்பட்டு இடையே கடல் புகுந்ததன்றோ? எனவே அக்கடலாகிய நீரிணையின் ஆழமான பகுதியே பஃறுளியாற்றுப் படுக்கையாக அமையலாம் அல்லவா? அந் நீரிணைப் பகுதியின் இரு கரைப் பகுதிகளும் குமரிமலையின் சாரலாக மக்கள் வாழ்ந்த நாடுகளாக இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக இறையனார் களவியலுரையில் 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன எனக் கூறப்பட்டிருத்தலை உணர்க. ஏனைய உரையாசிரியர்களும் இக்கூற்றை ஆங்காங்கே வலியுறுத்தியுள்ளனர்.

குமரிக்கோடு கடல் வாய்ப்பட்ட தென்பதனை குமரிமுனை, குமரியங்கடல் என்னும் இன்றைய வழக்கில் இருந்து வரும் பெயர்களே சான்று பகருகின்றன. குமரிமுனையில் குமரித் தெய்வம் குடிகொண்டிருக்கின்றது. குமரியங்கடல் ஓர் புண்ணிய தீர்த்தமாக மிளிர்கின்றது. இதனால் குமரி மலை இருந்த காலத்தில் அம் மலைமீது குமரிக்கோயில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதும் மக்கள் அதனை வழிபட்டு அம்மலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றிலே தீர்த்தமாடி வந்தனர் என்பதும் அறிய முடிகின்றதல்லவா? அவை கடல்வாய்ப்பட்ட பின்னர் அக் கடலின் வடகரையும். இந்தியாவின் தென்கோடியும் ஆகிய அம்முனையில் குமரிக்கோயிலும் வழிபாடும் தீர்த்தமாடுதலும் நடைபெற்று வருகின்றதென்றே கொள்ள வேண்டும்.

இன்னும் அக்கடலின் (பாக்குநீரிணை) தென்கரையை நோக்குவோம். அஃது இலங்கையின் வட கரையாகும் இங்கே கீரிமலை எனப்படும் குன்றும் நன்னீருற்றுமுடைத்தாய் அறியாத பண்டைக்காலம் தொட்டுப் புண்ணிய தீர்த்தமாக இன்றும் விளங்கி வருகின்றது. இத் தீர்த்தத்தில் கீரிமுகம் உடைய ஒர் முனிவர் தீர்த்தமாடி அக் குன்றில் தவஞ் செய்து தமக்கிருந்த கீரிமுகம் மாறப் பெற்றார் என்பதும் அதனால் அக்குன்று அன்று தொட்டு கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகும்.

இன்னும் கி. பி 8ம் நூற்றாண்டிலே குதிரை முகம் உடைய மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ அரசன் மகளானவள் கீரிமலை நன்நீரூற்றில் தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் அதனால் மாவிட்டபுரம் எனப் பெயர்சூட்டி ஒரு முருகன் ஆலயத்தை அமைத்து ஆனி உத்திரத்தில் கொடியேற்றி ஆடி அமாவாசையில் தீர்த்தவிழா எடுப்பித்தாள் என்றும் வரலாறு கூறுகின்றது. இதனால் அத் தீர்த்தத்தின் மகிமை புலனாகிறது. எனவே கீரிமலை எனப்படும் இக் குன்று குமரி மலையின் ஒரு பகுதியென்றே கொள்ளக் கிடக்கின்றது.

இனி குமரிமலைச் சாரலும் பஃறுளியாற்றின் இரு கரைநாடுகளும் செழிப்புள்ள வளம் நிறைந்த மக்கள் நெருங்கிய இடங்களாக அமைய வேண்டும். குமரிக்கோடு கடல்வாய்ப்பட்டபோது 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என சிலப்பதிகாரமும் இறையனார் களவியலுரையும் கூறுகின்றன. 49 நாடுகளாவன: ஏழ் தெங்கு நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பானை நாடு, குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடு என்பனவாம்.

இனி குமரி என்பது மலையைக் குறித்ததா? அன்றி ஆற்றைக் குறித்ததா? என்னும் ஐயப்பாடும் உண்டாகலாம். சிலப்பதிகாரம், குமரிக்கோடு (மலை) என்றே கூறுகின்றது. இக்கூற்றைச் சிகனடியார் கூற்றும் வலியுறுத்துகின்றது. என்னை?

“வேங்கடங்குமரி தீம்புனற் பௌவம் என்றும்
இந்நான் கெல்லை தமிழது வழக்கே”

என்பது வடக்கு வேங்கடமும் தெற்கு குமரி இரண்டையும் ஒரே இயல்பாக “வேங்கடம்குமரி” வேங்கட மலையோடு குமரியைச் சேர்த்துக் கூறி மேற்கும் கிழக்கும் “தீம்புனற் பௌவம்” என விதந்து கடலைக் கூறுதலின் குமரிமலை என்பதே ஆசிரியர் கருத்தாகும்.

ஆசிரியர் காலத்துக் குமரிமலை இருக்கவில்லையேயெனின் ஆம், குமரிமலை கடல்வாய்ப்பட்ட பின் அதனின் முனைப்பாகிய எஞ்சிய பகுதியை ஆசிரியர் குறித்தனர் ஆதல் வேண்டும். எனவே குமரிமுனையைக் குறிப்பதாகும் என்க. எனவே குமரி என ஒர் மலையிருந்து, அது கடல் வாய்ப்பட்டபின் அதன் ஞாபகார்த்தமாக தென்கோடி முனையை குமரி முனையென வழங்கி வரலாயினர் என்பதே வரலாற்றுண்மையாகும். குமரி என்பது ஆற்றைக் குறித்தது என உரையாசிரியர்கள் கூறுவதற்கு அவர்கள் கூற்றேயன்றி வேறு சான்றுகள் கிடைத்தில. தொல்காப்பிச் சிறப்புப் பாயிரச் செய்யுளும் “வடவேங்கடம் தென் குமரி” என்றே கூறும். கடல் என்றோ யாறென்றோ சுட்டவில்லை. இதனாலும் குமரி மலையைக் குறிக்கிறது என்பதே வலியுறுத்தல் காண்க.

இனி இந்தியாவும் இலங்கையும் குமரிமலைத் தொடரை உடையதாய் ஒன்றாய் இருந்துபின் கடல் கோளினால் இடையே 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்றால் எஞ்சியிருந்த இன்றைய இலங்கையே (ஈழம்) ஐம்பதாவது நாடாம் என்பது துணிபாம். இக்கடல் கோள் எப்போது நடைபெற்றிருக்கலாம் என்பது பற்றிப் பின்னர் கூறுவாம்.

ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் தமிழ் மக்களைத் தென்பக்கம் நோக்கிக் குடிபெயரச்செய்தும், அவர்களுள் ஒரு பகுதியாரோடு உறவாடிக் கலந்தும் இந்தியாவின் வடபகுதியில் குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

தற்போது உள்ள இந்தியாவில் சங்கம் ஆரம்பித்த காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே வேங்கடமும் ஆகிய எல்லைக்குட்பட்ட இடம் தமிழ் மொழி வழங்கிய செந்தமிழ் நாடாம். பண்டைய சங்க காலத் தமிழ் நூல்கள் யாவும் அதனைவலியுறுத்துகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களுள் மிகவும் பழமையானதும், யாவற்றுக்கும் முதனூலாக விளங்கும் பெருமையுடையதுமான ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின் பாயிரத்திலே பனம்பாரனார் என்பவர் தமிழ் வழங்கும் நாட்டின் எல்லையை வரையறுத்து “வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” எனக் கூறுகின்றார். காக்கை பாடினியாரும்,

“வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்று
அந்நான் கெல்லை ஆவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்”

எனக் கூறியிருப்பது காண்க சிகண்டியார் கூற்று முற்கூறப்பட்டது. இவைகள் மாற்றவோ மறைக்கவோ முடியாத பெருஞ் சாசனங்களாகும்.

தெற்கே குறிப்பிட்ட எல்லை குமரி. அக் குமரிக்குத் தெற்கே உள்ளது பாக்கு நீரிணை. ஆகவே வடக்கே வேங்கடம் தொடக்கம் தெற்கே கடல் எல்லையாகத் தமிழ் வழங்கிய நாடாகும். இவ்வெல்லை சங்ககாலத்திலே தொல்காப்பியர் காலத்துத் தமிழ் நாட்டின் விரிவை எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலமாவது மூன்று சங்கங்களும் நிலவிய காலமாகும். இவ்வெல்லை வேங்கடம் வரையும் வரையறுக்கப்பட்டமையினால் தொல்காப்பியர் காலத்தில் ஆரியர் வேங்கடத்துக்கு வடக்கே குடியமர்ந்திருந்தமை புலப்படுவதாகும். எனவே ஆரியர் வருகை தொல்காப்பியர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக வேண்டும் என்பது தெளிவு.

இக்காலத்தில் வேங்கடத்துக்கு அப்பாலும் பரந்த நிலப்பரப்பும் மக்கள் சமுதாயமும் இருக்கவும் வட வேங்கடத்தை எல்லையாக வரையறுத்தமை, அப்பால் வேற்று மொழி மக்கள் வசித்தனர் என்பதை எடுத்துக் காட்டுவதன்றோ? இங்கே நாம் ஒருவரலாற்று உண்மையை அறிய முடிகின்றது. என்னை?

தொல்காப்பியனார் தொல்காப்பியம் செய்கின்ற காலத்தில் ஆரியர் வடபகுதியில் குடியமர்ந்து வாழ்ந்தனர் என்பதேயாகும். எனவே ஆரியர் வருகை கி. மு. 1600 – 2000 என வரலாற்றாசிரியர் கூறுவதினால் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் கி. மு. 1600 க்கும் சில நூற்றாண்டுகள் பின்னாகக் கொள்ளலாம்.

இனி தென்குமரியை எல்லையாகக் கூறுவதினால் தெற்கே அதற்கு அப்பாலும் வேற்று மொழிநாடாம் எனின்? அற்றன்று. ஏன்? குமரிக்குத் தெற்கே கடல் இருந்து இந்தியாவையும், இலங்கையையும் வேறு வேறு நாடாகப் பரித்தலின் அது கடாவன்மை அறிக. தெற்கே கடலால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த இந்தியாவின் தென் பகுதியை முக்குலத் தமிழ் மன்னர் ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் ஆவர். அம் மூவரும் தமிழ் மொழியை வளர்ப்பான் கருதியும் கற்று வல்ல பெரியோரை ஒன்று கூட்டிச் சங்கம் அமைத்து, சங்கத்தில் தாமும் அங்கம் வகித்து சங்கத்தை வளர்த்த தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் வளம் படுத்தினர் ஆதலின் அம்மூவர் நாடும் அகப்படத் தமிழ் வழங்கிய இடத்துக்கு எல்லை கூறுவாராயினர். அதனால் குமரிக்குத் தெற்கே கடலுக்கு அப்பாலுள்ள நாடாகிய இலங்கை வேற்று மொழி நாடெனப்படாமை காண்க.

எனவே, இலங்கை இந்தியாவினின்றும் பிரிபட்ட பின்னர் ஆரியர் வருகைக்குப் பின்னர், தமிழ் வழங்கிய எல்லை இதுவானால் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையும் அகப்படத் தமிழ் நாடே என அறிக. அன்றியும் பிரிபட்ட பின்னும், ஆரியர் வருகைக்கு முன் இலங்கையும் சேர இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் மக்கள் வாழ்ந்த இடமேயாகும்.

இனி, குமரிக்குத் தெற்கேயும் கடல் இன்றி நிலப்பரப்பும் மக்கள் கூட்டமும் இருக்க அதனை வேறு பிரித்து குமரியையே தமிழ் நாட்டின் எல்லையாக வரையறுத்திருந்தால் வேங்கடத்துக்கு அப்பாலுள்ள வடபகுதியே போன்று இலங்கையும் வேற்று மொழி நாடாம் எனக் கோடல் தகும். ஆதலின், கடல் தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் நாடே என்பது தெளிவு. இதுபற்றி முன்னரும் கூறியுள்ளாம்.

இதுவரை யாம் கூறியவற்றில் இருந்து பிறிதோர் வரலாற்றுண்மை வலியுறுத்தப்படுகின்றது. என்னை? சங்க கால எல்லை வடவேங்கடம்@ அதற்கப்பால் உள்ளது. சிந்துவெளி, அங்குள்ள மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பது ஆய்வாளர் கருத்து என்பதனை முன் உணர்த்தியுள்ளேன். எனவே சங்ககாலத்துக்கு முன்னர் தமிழர்கள் இலங்கை அகப்பட இமயமலை பரியந்தம் வாழ்ந்தார்கள் என்பதும், வேறு எந்த ஒரு இன மக்களோ வாழவில்லை என்பதும் ஆகும்.

ஆரியர் வருகைக்குப்பின்னரே இடைச்சங்கம் இருந்த காலமாகும். அதனாலேயே தொல்காப்பியர் வடஎல்லை வேங்டமாகக் கூறியதுமன்றி, வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் வந்து விரிவாதிருத்தற் பொருட்டும் பொது எழுத்தாலாய வடமொழிகள் தமிழில் வழங்குதற்கும் வரையறுத்து இலக்கண வரம்பும் செய்துள்ளார்.

இனி, தென் எல்லையாகக் கூறப்பட்ட குமரி என்பது மலையன்று@ யாறும் அன்று@ கடலும் அன்று@. அஃது குமரி மலை கடல் வாய்ப்பட்டபோது எஞ்சிய குமரிமலையின் முனைப்பே என்பதை முன் கூறியவற்றில் இருந்து நாம் உணருகிறோம். இவ்வுண்மையை இன்னும் அகல நோக்கித் துணிவாம்.

“வடா அத பனிப்படு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடா அது தோன்று முதிர் பௌத்தின் குடக்கும்”

எனப் புறநானூறு கூறுவதில் இருந்தும் அவ்வுண்மையை அறியலாம். இப்பாட்டு பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி மேற் பாடப்பட்டது. பாடியவர் புலவர் காரிகிழார் என்பவர். இவ்வரசன் புகழ் தமிழ்நாட்டில் மாத்திரமன்று. அதற்கப்பாலும் பரவியது என்பதைப் புலவர் எடுத்துக் காட்டுகின்றார். இப் பாட்டில் கிழக்கும், மேற்கும் கடல் என விதந்து கூறி, குமரியை வாளா உருகெழு குமரி எனக் கூறுதலினால் அஃது கடலும் அன்று@ மலையும் அன்று என்பது பெற்றாம். எனவே குமரி என்னும் பெயர் குமரிமலையின் நினைவுச் சின்னமாக இந்தியாவின் தென்கோடி முனையைச் சுட்டி உணர்த்துவதாகும். புறம் 17வது செய்யுளில்,

“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

குமரியாற்றைக் குறிப்பதென வைத்துக்கொண்டு அதுபற்றிச் சிந்திப்போம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டு அழிவெய்திய பின்னர் தமிழ்நாட்டின் தென்எல்லை குமரி என்பது இது யாறானால் இப்போதும் அப்படி ஓர்யாறு ஓடிக் கொண்டிருக்கிறதா? அழிவெய்த முன்னர் குமரி என்பது யாறு எனக் கூறின் அதற்கு எவ்வித ஆதாரமும் இன்று.

புறம் 67ஆவது செய்யுள் குமரி கடற்கரையிலுள்ள ஓர் இடம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. அது “குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்பதுஇதில் துறை என்பது கடற்றுறை எனக்கோடலே பெரு வழக்கும் இயல்பாய பொருள் கோளுமாம். அன்றி வலிந்து யாதொரு ஆதாரமும் இன்றி யாற்றுத்துறை எனக் கொள்வார் சிலர். அங்கேயோர் யாற்று முகத்துவாரம் இல்லாமையே அவர் கூற்றுப் பொருந்தாமையை வலியுறுத்துவதாகும்.

எனவே சிலப்பதிகாரம் தெளிவாக “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனக் கூறியிருப்பதனால் கடல்கோள்ப்பட்ட பின்னர் குமரிமலையின் நினைவாக இன்றும் அழிவின்றி நிற்கும் அம்மலைப் பகுதியின் முனைப்பையே குமரிமுனை, குமரி எனக் கூறிவரலாயினர் எனத் தொல்லாசிரியர் கூற்றில் இருந்து நாம் அறியக்கூடிய உண்மையாகும்.

குமரிகோடு என்பது குமரி மலையின்உச்சி என்று கொள்ளலாம். ஏன்? “பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடு” என்றலின் அஃது பல மலை அடுக்குகளைக் கொண்ட குமரி மலையின் உச்சி எனப்பொருள்படும்.

இக் குமரிக்கோடு அக்காலத்தில் தற்போது இமயமலை இருப்பது போன்று தெய்வீகம் நிறைந்த பலவகையான பெருமைகளை உடையதாக அக்கால மக்களால் போற்றப்பட்டு வந்திருக்க வேண்டும். அக் குமரிக்கோட்டின் உச்சியில் குமரித்தெய்வம் வீற்றிருந்து அருள்பாலித்திருக்க வேண்டும். அதனால் அம்மலை குமரிமலை என மக்களால் போற்றப்பட்டதாக வேண்டும். அதனாலேயே அம்மலை கடல்வாய்ப்பட்ட பின்னும் அவ்விடத்திலே குமரிக் கோயிலும், அம்பாள் தரிசனமும் தீர்த்தமாடுதலும் பண்டுதொட்டு இன்று காறும் நடந்துவருகின்றது.

இத்தகைய தெய்வீகம் நிறைந்த குமரிமலை இமயமலைக்குக் கங்காநதி போன்ற பஃறுளியாற்றைக் கொண்டிருந்தது எனக் கொள்ள இடமுண்டு. இவ்வாற்றையே குமரி ஆறு என வழங்கி இருக்கலாம். ஏன் குமரிமலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த காரணத்தால் அவ்வாறு அழைத்தலும் சாலும். அன்றிப் பிறிதோர் குமரியாறு இருந்தமைக்கு எவ்வித ஆதாரமும் இன்று. அக்காலத்தில் குமரி மலை கொண்டிருந்த சிறப்பால் அம்மலையுடைய நாட்டையும் குமரிநாடென அழைக்கலாயினர் என்பது போதரும். குமரிமலை முழுமையும் கடல்வாய்ப்பட்டதன்று. வடக்குத் தெற்காக நீண்டிருந்த குமரிமலைத் தொடரின் வடபகுதியாகிய குமரிக்கோடும், பஃறுளியாறும், அவற்றைச்சார்ந்த இடங்களுமே கடல்வாய்ப்பட்டன. அப்பகுதியே தற்காலம் பாக்குநீரிணை எனக் கூறப்படும் கடற் பகுதியும் மன்னார்க் குடாக்கடலுமாகும்.

இனி, குமரி மலையை மொழியாளர் மகேந்திரமலை என்பர். சைவ உபாகமமாகிய சிவதருமோத்திரத்தில் பெரியமலைக்குத் தெற்கே மகேந்திரமலை உண்டென்றும். அது தெற்கு வடக்காக நீண்டு பரந்து உயர்ந்திருந்ததென்றும், அதன் அடிவாரத்தில் கனகமயமான இலங்கை உள்ள தென்றும் கூறப்படுகிறது. அன்றியும் அஃது ‘உன்னதத் தென்மகேந்திரம்’ எனவும் கூறப்படுகிறது. இம் மகேந்திரமலையின் தென்கோடியிலேயே (ஈழம்) சூரனுடைய இராசதானியாகிய வீரமகேந்திரம் இருந்திருக்கிறது.

எனவே மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை உள்ளது எனக் கூறப்படுவதாலும் இலங்கையின் தென்கோடியில் மகேந்திர மலையில் சூரனது இராசதானி வீர மகேந்திரம் இருந்ததாகக் கூறப்படுவதாலும், குமரிமலைத் தொடர் (மகேந்திரம்) தற்போதுள்ள இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஆரம்பமாகி பாக்கு நீரிணை மன்னார்க் குடாக்கடலை உள்ளடக்கித் தெற்கு நோக்கிச் சென்று இலங்கையின் மத்தியில் மலை அடுக்குகளாய்ப் பரந்து உயர்ந்து இருக்கும் காலத்தில் அம்மலையின் மத்திய பகுதியே ஈழமாகும். (இலங்கை) இம் மகேந்திரமலை பலவிதமான அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இம் மகேந்திரமலையிலேயே (குமரிமலை) இறைவன் எழுந்தருளியிருந்து நான்கு தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களை உபதேசஞ் செய்தருளினார் என்பது புராண வரலாறு. அம்மலை தற்போது தெய்வீகம் நிறைந்த இடமாகக் காணப்படுவதும் சிவன் நாமத்தினால் அழைக்கப்படுவதுமான சிவனொளிபாதமலை என்றே கருத இடமுண்டு.

“மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்”

எனக் கீர்த்தித் திருஅகவலிலும் “மந்திர மாமலை மேவினாய் போற்றி” எனப் போற்றித் திரு அகவலிலும் மாணிக்கவாசக சுவாமிகள் கூறியிருப்பது காண்க. மந்திரமாமலை எனக் கூறப்படுவது மகேந்திரமலையே. மகேந்திரமலையின் அடிவாரத்தில் உள்ள இலங்கையைத் திருமூலநாயனார் சிவ பூமி எனக் கூறுவர். அவர் கூறுவதற்கு ஆதாரமாக இன்றும் நின்று காட்சி அளிப்பது சிவனொளி மலையே இது பிற்காலம் சிவனொளிபாதமலை என வழங்குவதாயிற்று. இஃது எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டுவரும் தெய்வீகச் சக்தி நிறைந்தது இம் மலை பண்டைக்காலம் தொட்டு சிவனின் உறைவிடமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அதனாலேயே பின் வந்தவர்களான புத்தர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் அம் மலையைத் தத்தம் கடவுளின் இருப்பிடமாகக் கருதி வழிபட்டு வருகின்றார்கள். வழிபடுவது மாத்திரமல்ல, தத்தம் சமய கோட்பாட்டுக்கும், மொழிக்கும் ஏற்ப வேறுவேறு பெயர் சூட்டியும் வணங்குவாராயினர்.

எனவே இலங்கையின் மத்தியில் அதன் தென்கோடி வரை பரந்து உயர்ந்திருக்கும் மலைத்தொடர்கள் யாவும் மகேந்திர மலையின் பகுதிகளேயாகும். இதனை சிவதருமோத்திரத்தில் “மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை இருக்கிறது” எனக்கூறப்பட்டிருத்தலினாலும் தென்கோடியில் சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் இருந்ததெனக் கூறப்படுவதாலும் அறியலாம். எனவே மகேந்திரமலை இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஈழநாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்றது என்பது புலனாகும். அம் மலையின் அடிவாரமே ஈழம். எனவே இந்தியாவோடு இணைந்து தென்புறமாகப் பரந்திருந்த நாடே குமரிநாடென்பதும், அந்நாட்டில் கடல்கோட்பட்டவை போக எஞ்சியுள்ள குமரி நாடே ஈழம் என்பதும், குமரி நாடு இருந்த காலத்தில் வழங்கி வரப்பட்ட ஒரு உள்நாட்டின் பெயரே ஈழம் என்பதும், எனவே ஈழம் என்னும் பெயர்குமரி நாடு இருந்த காலத்தில் வழக்கில் இருந்த தென்பதும் அவ்வீழமே தற்போது இலங்கை என அழைக்கப்படும் தீவு என்பதும் குமரி நாட்டில் உள்நாடாய் இருந்த ஈழம் குமரி நாட்டைக் கடல்கொண்டதால் தீவானது என்பதும் நாம் தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

இனிக் குமரிமலை பல அடுக்க மலைகளைக் கொண்ட ஒருதொடர் என்பதனை இளங்கோவடிகள் கூற்று உறுதிப்படுத்துகின்றது. “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என்கிறார். ஆதலின் குமரிமலைத் தொடரின் வடபால் உள்ள உயர்ந்த மலையும் அதனின்று ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாறு கடல்வாய்ப்பட்டன என்பது உண்மையாகும்.

2. சங்ககால ஆரம்பம்

இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பி;ன்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் ஆட்சிக்காலத்தில் சங்கம் பற்றிய செய்திகள் அறியக் கூடியதாய் இல்லை. ஆனால் அகத்தியர் பேசப்படுகிறார். அவர் அக்காலத்தில் தென்னாடு போந்தமை பற்றிய வரலாறே கூறப்படுகின்றது. அகத்தியர் வருகைக்கு முன் சங்கம் இருந்ததில்லை. அகத்தியரே முதற் சங்கத்துக்கு முதன்மையானவராய் விளங்கினார். அகத்தியர் தென்னாடு போந்தமை தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்ற நோக்குடன் அன்று என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆகவே அகத்தியர் வந்தார்@ பொதிய மலையில் இருந்தார். அப்படியானால் முதற் சங்கம் ஏன்தொடங்கப்பட்டது? யார் தொடக்கினார்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்னும் வினாக்கள் எழுகின்றன. அதற்கு உய்த்துணர்ந்து விடைகள் காண்பாம்.

கடல்கோள் காரணமாக நாடு பல வழியிலும் அழிவெய்தியதனால் அதனைச் சீர் செய்வான் கருதியே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக வேண்டும். எனவே அகத்தியர் வருகைக்குப் பின் ஒர் பெருங் கடல் கோள் நடந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட அழிவைச் சீர் செய்வான் கருதியே முதன் முதலாக தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அப்பெருங்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளாக இருக்கலாம். சூரன் ஆட்சிக்காலத்தில் அகத்தியர் தென்னாடு வருகின்றார்@ பொதிய மலையில் வசிக்கின்றார். சூரன் ஆட்சி முடிவடைகிறது. கடல் கோள் ஒன்றுநடைபெறுகிறது. அதனால் சங்கம் ஒன்று நிறுவப்படுகிறது. எனவே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளின் பின்னர் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே அகத்தியனாரை முதன்மையாக வைத்துத் தலைச்சங்கம் தொடங்கப்பட்டதென்றே கொள்ள வேண்டும். வரலாற்றுண்மை அதுவேயாகும். ஆதலின் சங்ககால ஆரம்பம் சூரன் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது துணி பொருள்.

இனி, தொடங்கப்பட்ட சங்கம் தொடர்ந்து எக்காலமும் இருக்கலாமே. அவ்வாறன்றி இடையீடுபட்டு முதற்சங்கம், இடைச் சங்கம் கடைச்சங்கம் என வரவேண்டிய காரணம் என்னையோ? காரணம் இடையிடையே ஏற்பட்ட கடல் கோள்களன்றிப் பிறிதில்லை. கடல் கோள்களினால் நாடு ஒரு பகுதி கடலாகலாம்@ மக்கட் கூட்டம் ஒரு பகுதி அழியலாம்@ அதனால் மக்கள் பண்பாடு, நாகரீகம் சிதையலாம்@ நூற் சுவடிகள் அழியலாம். அப்போது நாடாளும் அரசன் மனம் கனன்று தமிழ் மொழி, அம்மொழியிலுள்ள நூல்கள் தமிழ் மரபு, பண்பாடு, நாகரிகம், கடவுட்கொள்கை இவற்றை மேலும் பேணி வளர்க்க வேண்டியே அறிவுடைப் பெரியோரைக் கூட்டி சங்கத்தை அமைப்பான். ஆதலின் அவ்வக் கால அரசர் கடல் கோள்களுக்குப் பின்னர் சங்கங்களைத் தாபித்தனர். இவ்வாறாகவே சங்கங்கள் மூன்றாயின. அவ்வாறானால் முதற்சங்கம் எப்போது ஆரம்பித்திருக்கலாம் என அறிவோம். சூரன் ஆட்சி முடிவில் ஓர் பெருங்கடல் கோள் நடைபெற்றதெனஅறிவோம். அக்காலம் அகத்தியர் பொதிய மலையில் இருக்கிறார் என வரலாறு கூறுகின்றது. அக் கடல் கோளினால் நாட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனைச் சீர்செய்வதற்கு அறிவுடைப் பெரியோர் பலரின் ஆலோசனை அவசியமாயிற்று. எனவே யாவரினதும் மேலான அறிவும். அறிவாற்றலும் படைத்தவர் அகத்தியரேயாவர். ஆதலின் அவரின் தலைமையிலே முதற் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் சூரன் ஆட்சி முடிவெய்திய சில நூற்றாண்டுகளின் பின்னர் ஆரியர் வருகைக்கு முன்னராதல் வேண்டும். எனவே சூரன் ஆட்சி முடிவுக்கும் ஆரியர் வருகைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சங்க காலம் ஆரம்பித்ததாக வேண்டும்.

அத்திலாந்திக் சரித்திரம் எழுதிய எல்லியட் என்னும் ஆங்கில பண்டிதர் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் கடல் கோள் நடைபெற்றதாகவும் அதனால் பல தீவுகள், கடற்கரை நாடுகள் சிதைவுற்றன என்றும் கூறுவர் இக்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் நிகழ்ந்த கடல்கோளாக அமையலாம். அவர் கூற்றின்படி இக்கடல் கோள் துவாபர யுகத்தின் இறுதியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது துவாபர யுகத்துக்கு அடுத்த யுகமாகிய கலியுகம் பிறந்துஇன்று 5088 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. எலியட் இற்றைக்கு எனக் குறிப்பதுதான் நூல் எழுதிய காலம் ஆகும். எனவே கலியில் நிகழும் ஆண்டாகிய 5088ல் 88ஐக்கழித் மிருதி 5000 ஆண்டுகளை 11581இல் கழிக்க வருவது துவாபரயுகத்தில் நின்ற இறுதிக்காலம் 6481 ஆண்டுகளாகும். இக்காலமே சூரன் ஆட்சி நடைபெற்று முடிவுற்ற காலம் எனக் கொள்ளலாம். (இனி ஒரு யுகம் முடிந்து பிறிதோர் யுகம் தோன்றும்போது முன் யுகத்தின் இறுதி 500 ஆண்டும் பின் யுகத்தின் தொடக்கம் 500 ஆண்டுமாக 1000 ஆண்டுகள் யுகசந்தி எனப்படும். இக் காலம் அழிவும் ஆக்கமுமான காலமாகும். ஆதலின் 6481 இல் 1000 போக மிகுதியான 5481 ஆண்டுக்குள்ளேயே சூரன் ஆட்சி முடிபு இருந்திருக்கலாம்.

ஆனால் குமரிக்கோடும் பஃறுளியாறும் கடல்வாய்ப்பட்டு அழிவெய்தி இலங்கையும் இந்தியாவும் பிரிந்தது சூரன் ஆட்சிக்காலத்துக்கு முன்னாகும்.

“முந்தொரு காலந் தன்னில் மூவுலகந் தன்னில்
வந்திடும் உயிர் செய்த வல்வினை யதனாலே
அந்தமில் மறை எல்லாம் அடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோரும் தேவரும் மருளுற்றார்”

என்பது கந்தபுராணம் பாயிரப் படலத்திலுள்ள செய்யுளாகும். இச் செய்யுளில் உள்ள ”முந்தொரு காலம்” என்பதற்கு ஆதி கற்பத்தில் துவாபர யுகத்தில் என நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது கலியுகம் பிறந்து 5088ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலியுகத்துக்கு முன்னுள்ள யுகமே துவாபரயுகம். எனவே துவாபரயுகம் அதற்கு முன்னுள்ள யுகங்களின் வரலாறுகளே கலியுகத்துக்கு வந்தனவாதல் வேண்டும். கந்தபுராணம் சூரனது வரலாறு கூறும் நூல். இவ்வரலாறு இறைவனால் நந்திக்கு உபதேசிக்கப்பட்டு, அவரால் வாதநாராயணருக்கு உணர்த்தப்பட்டு அவரால் அவர் மகன் சூத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு சூத முனிவர் யாவரும் அறியக் கூறினார் எனக் கந்தபுராணம் பாயிரப் படலம் கூறுகின்றது.

எனவே சூரன் ஆட்சிக்காலம் முடிவுற்று பல நாடுகள் கடல்கோளினால் அழிவுற்று அதனால் பல நூற்றாண்டு காலம்மறை நெறிகளும் முன்னிருந்த தெய்வீக வழிபாட்டு முறைகளும், மக்கள் வாழ்க்கை நெறியும் மறைந்து போன ஓர் நிலைமை ஏற்படுவதாயிற்று என்பது புலனாகின்றது. ஆதலின் சூரன் ஆட்சிக் காலம் துவாபரயுகத்தின் பிற்பகுதியாக வேண்டும். துவாபரயுகம் 865000 ஆண்டுகள் கொண்டது. இதி;ல் இறுதிக்காலமாகிய எஞ்சியிருந்த 6481 ஆண்டுகளுக்குள்ளேயே தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அஃதாவது எலியட் பண்டிதர் கூறும் கடல் கோளுக்குப் பின்னரே ஆக வேண்டும்.

இறையனார் களவியலுரையின்படி மூன்று சங்கங்களும் இருந்த காலம் முறையே 4440, 3700, 1850 ஆண்டுகளாகும். இவற்றில் தலைச்சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி 6481 ஆண்டுகளுக்குள்ளேயே அமையவேண்டும் . இடைச்சங்கமும் துவாபரயுக இறுதியில் தொடங்கிக் கலியுகத்தில் முடிபெய்தியது. கடைச்சங்கம் கலியுகத்தில் ஆரம்பித்து கி. பி. 3ம் நூற்றாண்டில் முடிவெய்தியது. கி. பி.3ம் நூற்றாண்டு ஏறக்குறைய 250 ஆண்டு எனக் கொண்டால் கடைச் சங்கம் முடிவெய்திய காலம் இற்றைக்கு 1738 ஆண்டுகளுக்கு முன்னாகும். எனவே இப்பொழுது கலி 5088ம் ஆண்டு நிகழ்வதால் கடைச்சங்கம் முடிவெய்திய காலம் கலி (5088 – 1738) 3350ம் ஆண்டாகும் என்க. ஆகவே கடைச்சங்கம் தொடங்கிய காலம் கலி (3350 – 1850) 1500ம் ஆண்டாகும்.

எனவே இடைச்சங்கம் முடிபெய்திய காலம் கலி 1500க்கு முன்னாக வேண்டும். இடைச் சங்கம் நிலவிய காலம் 3700 ஆண்டுகளாகும். ஆதலின் இடைச்சங்கம் தொடங்கிய காலம் (3700 – 1500) துவாபரயுக இறுதியிலுள்ள 2200 – 2300 ஆண்டுகளுக்குள் அமைய வேண்டும். எனவே தலைச் சங்கம் முடிபெய்திய காலம் துவாபரயுக இறுதி 2200 – 2300 ஆண்டுகளுக்கு முன்னாக வேண்டும். ஆதலின் தலைச் சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி (2200 + 4440) 6640, 6740 வரையிலாகலாம்.

இனி வேதகாலம் ஆரியர் வருகை பற்றி ஆராய்வாம். வேதகாலம் கி. மு. 1500க்கு முன் என்றும் அது தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800 என்றும் ஆய்வாளர் கூறுவர். வேதகாலம்; கி.மு. 1500 க்கு முன். எனவே அக்காலம் இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். ஆகவே கலி வருடம் (5088 – 3488) 1600 ஆகும். தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800. எனவே அஃது இற்றைக்கு 2788 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி வருடம் 2300 ஆகும்.

இனி ஆரியர் இந்தியாவுட் புகுந்த காலம் கி. மு. 1600 – 2000 வரையில் என்பர். அஃது இற்றைக்கு 3588 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி 1500 ஆகும். எனவே ஆரியர் வருகை இடைச்சங்க கால இறுதியில் நடைபெற்றிருத்தல் சாலும். தொகுக்கப்பட்டது கடைச்சங்க காலமாதல் வேண்டும்.

இவ் வரலாற்றின்படி நாம் அறியக்கூடிய இலங்கை வரலாறு துவாபரயுகத்திறுதிக் காலத்தே எலியட் பண்டிதர்கூறும் 11481 ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டைச் சூரன் ஆட்சி புரிந்தான் என்பதும், அதனால் ஈழ நாட்டில் துவாபரயுகத்தில் தமிழினம் வாழ்ந்து வந்தனர் என்பதும் வேத காலம் வியாசர் காலம் ஆரியர் வருகைக்கு முன்னரே ஈழ நாட்டில் தமிழர்கள் வாழ்ந்து உலகறியப் பேரரசு செலுத்தினர் என்பதுமாகும்.

இனி, சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் வேறு நாடாக வேறு வேறு அரசர் நாடாக இடையே கடல்கொண்டதாக வரலாறு கூறுதலின் குமரி நாடு கடல் கோளினால் சிதைவுற்ற காலம் சூரன் ஆட்சிக்கு முற்பட்ட காலமாகும் என்பது தெளிவு. எனவே குமரி நாடு அழிவுற்ற காலம் திரேத துவாபர சந்தியாதல் வேண்டும் என ஊகிக்க இடண்முடு.

இனித் தமிழ் மறை 3 சங்கத்திலும் நிலவியதாகக் கருத இடமுண்டு. தொல்காப்பியம் செய்யுளியலில் தமிழ் நூல் இலக்கணம் கூறுமிடத்து அவற்றை 7 வகையாக வகுத்துக் கூறும் போது வாய்மொழி (மந்திரம்) என்பதனை ஒரு வகை நூலாகக் கூறியிருப்பதினாலும் தொல்காப்பியர் பாயிரத்தில் பனம்பாரனார் “முந்து நூல்கண்டு” எனக்கூறுவதினாலும், மறை என்னும் சொல் மூன்று சங்க காலத்திலும் வழக்கில் இருந்தமையாலும் வேதம் என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு அன்று மறையாகையாலும் வேதகாலத்துக்கு முன்னரே மறை நூல்கள் இருந்தன என்பதும் வெளிப்படை.

இனி சூரன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே அகத்தியர் தென்னாடு போந்தனர் என்பது வரலாறு. அவரது வருகை முன்னாகவும் இருக்கலாம். சங்கம் பற்றிய செய்திகள் ஒன்றும் சூரன் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை ஆதலின் சூரன் ஆட்சி முடிந்த பி;ன்னரே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதென்பது உறுதியாகிறது.

கற்று வல்ல பெரியோரும், அரசனுமே சங்கத்தில் அங்கம் வகித்தனர். இலங்கை இந்தியாவினின்றும் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாகி வேறு வேறு அரசர் ஆட்சிக்குட்பட்டமையால் இலங்கை தமிழ் நாடாய் இருந்தும் அதனை வேறுபடுத்தி தமிழ்ச் சங்கம் தாபித்த இடமாகிய இந்தியாவை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எல்லை கூறுவாராயினர். அவ்வாறிருந்தும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அறிவுடைப் பெரியோர் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அங்கம் வகித்து வரலாயினர்.

அவருள் இன்று எம்மால் அறியத்தக்கவராய் இருப்பவர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர். இவர் சங்கத்தில் ஓர் உறுப்புடைப் புலவராய் இருந்த காரணத்தினால் ஈழநாட்டினின்றும் போந்து மதுரையிலே தங்கி வாழ்ந்தவராகத் தெரிகி;ன்றது. அதனால் இவர் “மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்” எனவும் அழைக்கப்பட்டார் இவரால் பாடப்பெற்ற பாண்டியன் பசும்பூற் பாண்டியன் என்பவன். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றில் மூன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றுமாகும். இவர்கடைச்சங்க காலத்தவர் என்பார்.

எனவே இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கை என்னும் பெயரா? ஈழம் என்னும் பெயரா? எது முற்பட்ட வழக்கு என்பதே. ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார் ஆதலின் ஈழம் என்பதே இலங்கையின் பூர்வீக நாமம் என்பதும் தெளிவாகின்றது. கடைச்சங்க காலத்தில் இலங்கை ஈழம் என்றே வழங்கப்பட்டிருந்ததால் முதலாம். இரண்டாம் சங்க கால வழக்கும் அதுவே என்பதில் ஐயத்துக்கே இடமில்லை என்றோ? முற்பட்ட வழக்கே தொடர்ந்து பின்வருவதன்றோ?

இனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தை ஒருவாறு சுட்டியுணர்வாம். இவராற் பாடப்பட்டவன் பசும்ப+ற் பாண்டியன். இவன் வாழ்ந்த காலம் கி. மு. 180 – 125 என்று வரலாற்றாசிரியர் கூறுவர். எனவே புலவர் வாழ்ந்த காலம் அதுவாகும். இக்காலத்தில் ஈழநாட்டை (இலங்கை) ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசன் எல்லாளன் ஆவான். இப்பொழுது இலங்கையில் புத்த மதம் வந்து 164 ஆண்டுகளேயாகும். விஜயன் வந்தது புலவர் காலத்துக்கு முன் 363வது ஆண்டாகும். இக்காலமே அநாகரிகமான இயக்கர் நாகர் வாழ்ந்த காலம்@ உணர்மின். இன்னும் இலங்கை தூய தமிழ்மொழி நாடே என்பதனை தமிழை தென் தமிழ் எனக்கூறும் பண்டைய வழக்கே வலியுறுத்துவதாகும். என்னை? தென் தமிழ் எனக் கூறுவதனால் தமிழின் உற்பத்தியிடம், தென்பகுதி என்பது பெற்றுக் கொள்ளப்படும். தமிழ்தெற்கே பிறந்து வட திசை நோக்கி வளர்ந்து பரந்தது என்பதே உலகறிந்த உண்மை. இதற்குச் சான்றாக தற்கால இந்தியாவிலும் தென்பகுதியே சிறந்த தென் தமிழ்நாடாக அமைகிறது. இதற்கு ஆதாரமாக 3 தமிழ்ச் சங்கங்களும் இருந்த இடங்களே சான்று பகருகின்றன. முதலாவது சங்கம் அக்கால இந்தியாவில் தென்கோடியில் தென்மதுரை என்ற இடத்திலும், பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாக அழிவுற்றதும் எஞ்சிய இந்தியாவில் தென்கோடி கபாடபுரம் என்ற இடத்திலும் பின்னர் அடுத்த கடல்கோளினால் அப்பகுதியில் சிதைவுற மூன்றாவது சங்கம் தென் பகுதியில் மதுரை என்ற இடத்திலும் நிறுவப்பட்டன என வரலாறு கூறுகின்றது எனவே தமிழின் உற்பத்தியிடம் தென்பகுதியேயாம் என்பது தெளிவு.

அவ்வாறானால் இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் இருந்த காலத்தில் இலங்கையே தென் தமிழ் நாடாகும். ஆதலின் தமிழின் உற்பத்தி இடம், செந்தமிழ் செழிப்புற்றிருந்த இடம் இலங்கையே என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இன்று. ஆதலின் இலங்கை அன்றும், இன்றும், என்றும் தமிழ் நாடே அன்றி வேற்று மொழி எதற்கும் உரிய பிறப்பிடம் அன்று. இன்னும் இவ்வுண்மையை எந்த மொழிக்கும் இல்லாத, தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பாகவுள்ள “ழ’கர ஒலியைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற அதன் பெயரே அங்கைநெல்லி என எளிதில் யாவரையும் உணர வைக்கின்றது. அன்றியும் இலங்கையில் வேறு மொழிகளோ, வேற்று மொழியாளர்களோ வாழ்ந்தார்கள் என்பதற்கும். வேற்று நாட்டில் இருந்து இங்கு வந்து குடியமர்ந்தார்கள் என்பதற்கும் விஜயன் வருகைக்கு முன் வரலாறே கிடையாது.

தலைச் சங்கம் இருந்த தென்மதுரை இலங்கைக்கு மிக மிக அண்மையில் இருந்திருக்க வேண்டும். தென் மதுரை கடல்வாய்ப்பட்ட பின்னர் பாண்டிதன் மணற்றி என்ற இடத்தில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. வான்மீகி இராமாயணத்திலும் கூறப்படுகின்றது. தென்மதுரை அழிவுற்ற பின்னர் கபாடபுரம் அமைக்கப்படுவதற்கு முன்னர்சில காலம் மணற்றியைத் தலைநகராகக் கொண்டிருக்கும் காலம். மணற்றி என்பது அந்நாட்டின் இயற்பெயர் ஈழநாட்டில் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் பண்டைக்காலத்தில் மணற்றி என்றே அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வருவதற்கு முன்னர் அக் குடாநாட்டின் பழைய பெயர்களுள் மணற்றியும் ஒன்றாகும். எனவே அழிவுற்ற தென்மதுரை யாழ்ப்பாணம் ஆகிய மணற்றிக்கு மிக மிக அண்மையில் இந்தியாவின் தென் கோடியில் இருந்த தென்பதனை இயற்கையும் சுட்டி உணர்த்துகிறது.

இலங்கை கடலால் பிரிக்கப்படாமல் இருக்குமாயின் இன்று பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவோ, அன்றிச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போல் இந்தியாவுக்குட்பட்ட ஓர் தமிழ்; நாடாகவே அமைந்திருக்கும். ஆதலின் இலங்கையில் வாழ்ந்த பூர்வ மக்கள் தூயசெந்தமிழ் பேசிய பழங்குடி மக்களே என்பது எவ்வாற்றானும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் எப்பாகத்திலாயினும் பண்டுதொட்டு வேற்றுமொழி பேசிய பகுதி இருந்ததேயில்லை. சிங்கள மொழி பேசும் ஓர் பகுதி இருக்கிறதே எனில் அம்மொழி இங்கு வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் மொழியும், பிக்குகள் பேசியும், பயிற்றியும் வந்த பாலி மொழியும் கலந்து ஏற்பட்ட ஒர் கலப்பு மொழியாகும். இம் மொழியின் ஆரம்ப காலம் கி. மு. 304க்குப் பின்னாகும்.

இனிவடமொழியை நோக்குவோம். அஃது இன்றும் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வளர்ந்து செல்வதைக் காணலாம். அஃது தமிழ் நாட்டில் தமிழ் வழக்கில் இன்றும் வடமொழி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தொல்காப்பியனார், “வடசொற் கிழவி, வடவொழுத்தொரீஇ” எனக் கூறியிருப்பதை அறிக. வடமொழி எனக் கூறும்போது சமஸ்கிருதத்தின் குடும்ப மொழிகள் அத்தனையும் அடங்கும், இவ்வுண்மைகளை ஒப்புநோக்கி ஆராயும் போது தமிழின் பிறப்பிடம் தமிழன் பிறப்பிடம் இலங்கையும், இந்தியாவும் ஒன்றாய் இருந்த காலத்துத் தென்பகுதியிலும் தென்பகுதி என்றே கொள்ளக் கிடக்கின்றது.

எனவே, அப்பகுதி எதுவாயிருக்கலாம் என அறிவாம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டபோது அஃதாவது ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்கொண்ட காலத்து 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. அப்போது கடல்வாய்ப்படாது எஞ்சியிருந்த நாடே இலங்கையாகும். (ஈழம்) எனவே அதுவே 50 ஆவது நாடெனக் கூறலாம். எனவே 49 நாடுகளுக்கும் தெற்கே பண்டைக் காலத்து ஒரு நாடாய் இருந்து பின்னர் பிரிந்த இலங்கையே ஈழம் (தமிழினி) தமிழனின் பிறப்பிடம் எனக் கூறல் தகும்.

இனி ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எழுதிய எனதுகுரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்கள் அந்நூலின் முகவுரையில் “தமிழ் மொழி முற்காலத்து எங்கும் சென்றுபரவி வழங்கியது” என்றும், “தொல்காப்பியர் காலத்துக்கு முன்னேயே எல்லைக்குட்பட்டு வழங்கியது” என்றும் மு. இராகரவயங்கார் கூற்றை எடுத்துக் காட்டினார்கள். இது சிந்தனைக்குரியது.

இன்னும் அம் முகவுரையின் ஆரம்பத்தில் “ஈழ நாடெனும் இலங்கைத் தீவு எனினும் ஒக்கும்” என அவர்கள் கூறியிருப்பது இலங்கைத் தீவின் பழைய பெயர் ஈழ நாடே என்பது அவர்கள் கருத்தாகும். அன்றியும் இலங்கையில் உள்ள புலவர்கள் வரலாறு எழுதிய அவர்கள் இலங்கைப் புலவர் சரித்திரம் எனப் பெயர் சூட்டாது ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எனப் பெயர் ச+ட்டியிருப்பதே இலங்கையின் முன்னுள்ள பழமையான ஒரேயொரு பெயர் ஈழமே என்பது அவர்கள் கருத்து என்பதனை நன்கு ஐயத்துக்கிடமின்றித் தெளிவாக வலியுறுத்துவதாகும்.

எனவே மக்களின் ஆதிப் பிறப்பிடம் இலங்கையே (ஈழம்) என்பதும்; உலகில் தோன்றிய ஆதி மொழி தமிழே என்பதும், மக்கள் வாழ்க்கைக்கும் நாகரீகத்துக்கும் அடியெடுத்து வைத்தவர்கள் தமிழரே என்பதும் நாம் அறியக் கூடிய உண்மையாகும்.

ஆதிமக்கள் இலங்கையிலே தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கொரல் பாதிரியாரது கருத்துமாகும். அவர் சாகவத் தீவில் காணப்பட்ட பழைய நூல் ஒன்றில் ‘இலங்கையில் ஆதி மக்கள் தோன்றிச் சாவக முதிலிய நாடுகளிற் குடியேறிப் பெருகினார்கள்’ எனக் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கந்தபுராண வரலாற்றை ஒப்புநோக்குமின்! சூரன் ஆட்சிக்காலத்தில் அவனது தலைநகர், தற்போதும் உள்ள முருகன் பாசறையாகிய கதிர்காமத்திற்குத் தெற்கே சில மைல் தூரத்தில் இருந்ததாகவும், அஃது சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல்கோளினால் கடல்வாய்ப்பட்டது என்றும் கூறும். அதுவே வீரமகேந்திரம் எனப்படுவது இதனால் சூரனது ஆட்சி நகர் இலங்கையின் தென்கோடியில் குமரிமலை அந்தத்தில் இருந்தமை புலப்படுகின்றதன்றோ? சூரன் ஆட்சிக்;காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒப்புநோக்கும்போது இலங்கையும், மக்கள் வாழ்க்கையிலும் நாகரீகத்திலும் கடவுட் கொள்கை (சிவநெறி) யிலும் சிறந்து விளங்கியமை புலப்படுகின்றது. சூரன் ஆட்சிக்காலம் 3 சங்கங்களும் தோன்றுவதற்கு முன் உள்ள காலம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தென்பகுதியே சிறப்புற்று விளங்கியிருக்கின்றது. ஆகவே பண்டைக்காலத் தமிழ் மக்களின் குடிப்பரம்பல், அவர்கள் பேசிய தமிழ் மொழி, நகரீகம் ஆகியன காலப்போக்கில் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வளர்ந்ததெனவே உணர முடிகின்றது.

எனவே நாம் உணரக்கூடிய உண்மை வரலாறு: இலங்கை(ஈழம்) இந்திய நிலப்பரப்போடு ஒரு காலத்தில் இணைந்து ஒரேநாடாய் இருந்தது என்பதும், இலங்கையே ஆதி மக்களின் பிறப்பிடம் என்பதும். அவர்கள் பேசிய மொழி தமிழே என்பதும், வரலாற்றுக்கெட்டிய வலையில் தமிழரின் ஆதித் தலைவன் சூரன் அதியோரே என்பதும் ஆகும்.

வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களும் தாம்எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் ஓரிடத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்பது எவராலும் ஒப்புக் கொள்ளப்படக் தக்கதேயாகும்” எனக் கூறியுள்ளார்.

இனிக் குமரி என்ற சொல் வாயிலாக அறியக்கூடிய வரலாற்றுண்மைகளை அறிவாம். குமரி என்னும் வழக்கு தொல்காப்பியம் முதலாம் இலக்கண நூல்களிலும், சங்ககால இலக்கியங்களிலும், பிற நூல்களிலும், உலக வழக்கிலும் பரக்கக் காணலாம். ஆனால் அஃது யாறு என்பாரும் கோடு (மலை) என்பாரும், கடல் என்பாரும், நாடு என்பாருமாய் பல படக் கூறுவராயினர் அஃது எவ்வாறு இருப்பினும், குமரி என்ற வழக்கும் அது சுட்டி அறிவிக்கும் இடமும் உண்மை என்பது உறுதியாகும். எனவே அப்பல திறப்பட்ட கூற்றில் யாதோ ஒன்றை அப் பெயர் சுட்டுமானால் ஏனையவற்றையும் அப் பெயரால் அழைத்தல் சாலுவதாகும்@ குமரி என்பது மலையே. அம் மலை செறிந்த இடம் குமரிநாடு எனப்படும். அம் மலையினின்று பாயும் ஆற்றை குமரியாறு என்றலும்;. குமரி மலையை மோதும் கடலைக் குமரியங்கடல் என்றலும் சகசமே. அதனால் ஒரு முரண்பாடும் இல்லையே.

சிலப்பதிகாரம் “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்றே கூறுகின்றது. சிவதருமோத்திரத்தில் குமரி மலையே மகேந்திர மலை எனக் கூறப்பட்டுள்ளது. ஆதலின் குமரி என்பது மலை குறித்ததென்பது உறுதியாகிறது.

தொல்காப்பியர் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி” எனக் கூறப்படுகிறது. இங்கே குமரி எனச்சுட்டிய இடம் இந்தியாவின் தென்கோடி முனையே யாகும். எனவே சிலப்பதிகாரம், சிவதருமோத்தரம், தொல்காப்பியம் இவற்றின் கூற்றை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து, அழிவெய்திய 49 நாடுகளும், இலங்கையும் சேர இந்தியாவோடு இலங்கை ஒன்றாயிருந்த காலத்து குமரி நாடெனப் பெயர்கொண்ட பெருநாடு ஒன்று இந்துமாக் கடலுள் இருந்ததென்பதே உண்மையாகும்.

குமரி நாடு இந்துமாக் கடலுள் பரந்து இருந்ததென்பதையும், அது கடற் பெருக்கினால் கடல் வாய்ப்பட்டு சிதைந்து பல தீவுகளாகவும் இடையிடையே சிறு கடல்களாகவும் உரு மாறினதென்பதையும் அதனால் இந்தியாவினின்றும் இலங்கை துண்டிக்கப்பட்டதென்பதையும் வரலாற்றாசிரியர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

ஆகவே குமரி நாட்டின் பெரும்பகுதி அழிந்து குமரிக்கோடும் கடல்வாய்ப்பட்ட பின்னர் எஞ்சிய பரந்த நிலப் பரப்பையுடைய இந்தியாவின் தென்கோடி முனையை ஞாபகார்த்தமாகப் பின்னுள்ளோர் குமரி எனக் கூறிவரலாயினர் என்பது போதரும். குமரி மலையின் அதி உயர்ந்த பகுதியே ஈழ நாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்ற சிவதருமோத்தரம் குறிப்பிடும் மகேந்திர மலையேயாகும். இம் மகேந்திர மலையின் தென்கோடியில் ஈழநாட்டின் தென்னந்தத்தில் இருந்த சூரனது அரசதானி மகேந்திரபுரி என அழைக்கப்பட்டமையும் அதனாலன்றோ?

ஆதலின் குமரிநாடு இருந்த காலத்தில் அக் குமரிநாட்டில் இருந்த ஓர் உள்நாடே ஈழம் என்னும் பெயரோடு இருந்ததாக வேண்டும். சிவதருமோத்திரக் கூற்றே அதனை வலியுறுத்துகின்றது. குமரிநாடு கடல்வாய்ப்பட்ட போது ஈழம் தனித் தீவாக மாறியது. ஆகவே ஈழநாட்டின் மேல்ஓங்கிநின்ற மலையடுக்குகள் குமரி மலையின் பகுதிகளே என்பது தெளிவு. குமரி மலை பல மலை அடுக்குகளைக் கொண்டதெனச் சிலப்பதிகாரம் கூறுகி;ன்றது. சிவதருமோத்தரம் மிகவும் தெளிவாக மகேந்திரமலையின் அடிவாரத்தே பொன்மயமான இலங்கை உள்ளது” எனக் கூறுகின்றது.

கடற் பெருக்கினால் குமரி நாடு அழிவெய்திய ஞான்று அந்நாட்டின் தாழ்வான பகுதிகளே கடலாதல் நேரிடும். எனவே ஈழநாட்டில் உள்ள சிவனொளி மலை ஆதியாம் மலைகளே குமரிமலையின் அதி உயர்ந்த பகுதி என்பது புலனாகிறது.

ஓர் குமரிக் கோட்டினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றின் படுக்கையே தற்போதிருக்கும் பாக்கு நீரிணையின் ஆழமான நடுப்பகுதியாக அமையலாம். அப்பஃறுளியாற்றின் இரு கரை மருங்கும் இருந்த செழிப்புற்ற நாடுகளே கடலுள் அமிழ்ந்திய 49 நாடுகளாகும். ஈழத்தின் வடகோடி பாக்குநீரிணையின் கரையோரமாக இருப்பதே கீரிமலை என அழைக்கப்படும் குன்றும் நன்னீருற்றும் கொண்ட புண்ணிய தலமாகும். இதன் பழமைக்கு காலவரையறை இன்று. எனவே பாக்குநீரிணையின் நடுப்பகுதி குமரியாற்றின் நடுப்பகுதியாக அக்கடலின் வட கரையில் பிரசித்தி பெற்ற பொதியமலைச்சாரலும், திருக்குற்றாலமும், அக்கடலின் தென்கரையில் பிரசித்தி பெற்ற பழமையான கீரிமலைக் குன்றும் சிவனாயலமும் இன்றும் காட்சியளிப்பது காண்போம். ஆதலின் இளங்கோவடிகளால் சுட்டப்பட்ட குமரிக்கோடு பண்டைக்காலத்தில் கடல்கோட்படுவதற்கு முன் தெய்வீகம் நிறைந்த ஒர் இடமாக இருந்திருக்க வேண்டும். அழிவெய்திய குமரிக்கோட்டில் குமரித்தெய்வம் குடிகொண்டு அருள்பாலித்திருக்க வேண்டும். குமரிக்கோடு கடலுள் அமிழ்ந்தியபின் அம் முனைப் பகுதியில் குமரி அம்பாள் வழிபாடு நடைமுறையில் வரலாயிற்று என்பதே உண்மையாகும். அம் முனைப் பகுதியில் அம்பாள் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்றோ.

இனிக் குமரி என்னும் சொல் பற்றி ஆராய்வாம். குமரி என்பது தமிழ் மொழி. இதனைக் கற்றோரும் மற்றோரும் நன்கறிவர். இம் மொழி பெண்பாலரின் வாலைப் பருவத்தைக் குறிக்கும் ஒர் அழகிய சொல். கன்னி என்பதும் அப்பொருட்டே. குமரி என்பது தமிழ்மொழி. எனவே அப்பெயர் கொண்ட நாடும் பிறவும், தமிழ் நாடும் அதன் பகுதிகளுமாம் என்பது கூறவேண்டியதில்லை. இனி அப்பெயர் சூட்டி அழைத்த காரணத்தை அறிவாம்.

தமிழ் மக்களின் கடவுட் கொள்கை சிவ வழிபாடே. சிவ வழிபாடெனவே சக்தி வணக்கம், விநாயக வணக்கம், முருகன் வணக்கம் ஆகியவையும் சிவ வழிபாட்டுக் கோட்பாடே. அவற்றுள் சக்தி வழிபாடு, தத்தமது வாழ்க்கையில் தாம் வேண்டும் வாழ்க்கைப் பேறுகளைப் பெற்று நல்வாழ்வு பெறுதற்கு அநுகூலமானது. இதனால் சக்தி வழிபாடும் தமிழ் நாட்டில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அவ்வியல்பினை இன்றும் தமிழ் மக்களிடையே காணலாம். சக்தி வாழிபாட்டில் சிறந்த நோன்புக் காலம் நவராத்திரி காலமாகும். பெரும்பான்மையும் பெண் மக்களே சத்தி வாழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

விநாயக, முருக வணக்கமும் மேற்போந்த சக்தி வழிபாடே போன்று இகபர சுகங்களை வேண்டியவாறு பெற்று நல்வாழ்வு பெறுதற்கு வேண்டப்படுவதாகும். சிவ வழிபாடு உலகப் பற்று நீங்கி வீடுபேறு மாத்திரம் கருதிய உயர் நிலையாளரிடத்தே கைக்கொள்ளப்படுவது இன்றும் என்றும் அவ்வாறே. நாயன்மார் நால்வர். சித்தர்கள், முனிவர்கள், பட்டினத்தார், தாயுமானவர் முதலிய ஞானவான்களின் வாழ்கையே சான்றாகும்.

ஆன்ம கோடிகளின் மாதாவாகிய சத்தி, சேய்க்குத் தாய் போன்று ஆன்ம கோடிகளுக்கெல்லாம் அவரவர் பக்குவம் அறிந்து போக போக்கியங்களை ஊட்டி வாழ்க்கையில் உலக இன்பங்களைத் துய்ப்பித்து பின் பசி தணிந்தவர்க்கு உணவில் வேட்கை செல்லாதவாறுபோல உலகப் பற்று நீங்கிப் பரிபக்குவ நிலையடைய அத்தருணத்தில் பரம பிதாவாகிய சிவனை சுட்டி உணர்த்திக் காட்டி சிவ வழியில் நிலைக்கச் செய்யும்.

“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சத்தி
பின்னமில்லான் எங்கள் பிரான்”

ஆதலின் சக்தி வாழிபாடு எல்லோராலும் மிகுதியும் வேண்டப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பாலும் தமது உலக வாழ்வில் இட்ட சித்திகளைப் பெறும் நோக்கமாகச் சத்தி வாழிபாட்டையும் முருகன், விநாயகன் வழிபாட்டையுமே மேற்கொண்டு வந்தனர். ஆதலின் குமரிக் கோட்டில் (உச்சி) பண்டைக்காலத்தில் சத்தி வழிபாடே பிரசித்தி பெற்றிருந்தது என்பது புலனாகும். ஆங்கு குமரி அம்மனுக்கு ஆலயம் இருந்திருக்க வேண்டும். அவ் வழக்கே இன்றும் குமரியில் அம்பாள் வணக்கம் இருந்து வருவதற்குக் காரணமாகும்.

சிவ வழிபாட்டில் இளமையும், அழகும் ததும்பக் காட்டும் அழகிய கருத்துப் பொதிந்த சொல் முருகன் என்பது. எனவே இறைவனை என்றும் இளையவனாகவும் அழகெல்லாம் ஒருங்கே திரண்டு முற்றிய ஒருவனாகவும் கருத்திற் கொண்டு முருக வழிபாட்டைக் கைக்கொள்வாராயினர். அவ்வாறே சத்தி வழிபாட்டில் பெண்மையின் கோலமும் பெண்மையின் ஒப்பிலா அழகும் ஒருங்கே அமையக் காட்டும்இளமைப் பருவச் செவ்வையை முற்ற உணர்த்தும் சொல்லே குமரி என்பது.

மக்கள் எவராயினும் இளமையும், அழகையும் விரும்புவாரன்றோ? அவை இரண்டையும் விரும்பாதார் யாரும் உளரோ? பண்டைத் தமிழ் மக்கள் கடவுள்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும், அன்பினாலும் தம்மை எல்லாம் காத்து அருள் செய்யும் கருணை வள்ளல் கடவுள் ஒருவரே என்ற அசையாத உணர்ச்சிப் பெருக்கினாலும் கடவுட் பெயர்களையே தமக்குப் பெயராகவும் வைத்து என்றும் கடவுள் ஞாபகத்தோடேயே வாழ்ந்தார்கள். அம்மரபில் உலகை ஈன்று அளிக்கும் உலக மாதாவாகிய சத்தியை என்றும் குன்றாத இளமையும் அழகும் பொலிந்து காட்டும் குமரி என்னும் சொல்லால் அழைத்து அப் பெயரையே தம்மை எல்லாம் தாங்கி உணவூட்டி அளித்து இகபர சுகங்களைத் தரும் பூமி தேவியாகிய தாய்க்கும் சூட்டி வழங்கி வரலாயினர் என்பது சாலவும் பொருத்தமானதே. பூமியைப் பெண்ணாகவே உருவகித்து வழங்கி வந்தமை, பண்டுதொட்டு தமிழரின் தொன்று தொட்ட மரபாகும். அதனால் பூமிதேவி என்றும். நிலமகள் என்றும் தாய்நாடு என்றும் கூறுவரன்றோ? அன்றி வேறு எக்காரணமும் கூற இடமின்றி@ ஏற்புடையதுமாகாது.

இனிச் சில வரலாற்றாசிரியர்கள் கருத்தினை இங்கு தருவோம். தற்போது இந்தியாவின் தென்பாலுள்ள இந்து மாக்கடலுள் இந்தியா, இலங்கை உட்பட ஓர் பெருந்தரைப்பாகம் இருந்ததென்றும், அதனை லெமூரியாக் கண்டம் (குமரிநாடு அல்லது குமரி கண்டம்) என்றும் அது கடல் கோளினால் கடல் வாய்ப்பட்டு மறைந்துவிட்டதென்றும்;, எஞ்சிய பகுதியே இந்தியாவும், இலங்கையும், ஏனைய தீவுகளுமாம் என்றும், அங்கேதான் மக்கள் குலங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக மக்கட் பெருங் குழுவினர் தோன்றியிருந்தார்கள் என்றும், அவர்கள்கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறம் உள்ளவர்களாக இருந்தார்களென்றும் எச்.ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூறுவார்.

ஆதிமக்கள் இலங்கையிலேதான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கெரஸ் பாதிரியார் கருத்து என்பதனை முன்னர் காட்டியுள்ளாம். இனி ஏச். சி. உரோலின்சன் எழுதிய இந்தியர் பண்பாட்டு வரலாற்றுச் சுருக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் கி. மு. 1500க்கு முன் உச்சநிலை அடைந்திருந்ததென்றும், கி. மு. 1500க்குப் பின் அதன் நாகரீகம் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்றும் அவ்விரு நாட்டு மக்களும் கொள்ளையர்களால் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்கள் என்றும், அவ்வாறு கொள்ளையடித்தோர் ஆரியராய் இருத்தல் வேண்டும் என்றும், அவ் விரு நாடுகளிலும் சிவ வழிபாடே இருந்ததென்றும், பெரிது அன்னை வணக்கமே கைக்கொள்ளப்பட்டு வந்ததென்றும், சிந்துநதியைச் சூழ்ந்த நாட்டைப் பேர்சியர் இந்தியா என்று அழைத்தனர் என்றும், அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியர், இந்துக்கள் என அழைக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூற்றில் இருந்து பல உண்மைகள் சந்தேக விபரீதம் இன்றி வலியுறுத்தப்படுகின்றன. என்னை? இலங்கை உட்பட இந்தியா இமயமலை பரியந்தம் முழுமையும், தமிழ்ப் பழங்குடி மக்களே வாழ்ந்தார்கள் என்பதும், அங்கெல்லாம் ஒரே சிவ வழிபாடே இருந்ததென்பதும், அதிலும் சக்தி வணக்கமே மேலோங்கி இருந்ததென்பதும், ஆரியர்கள் கி. மு. 1500 – 1600 வரையில் இந்தியாவுட்குட் புகுந்தது உண்மையே என்பதும், அவர்கள் அங்கு வாழ்ந்த தமிழ்ப் பழங்குடி மக்களை கொள்ளையடித்தும், கொன்றும், அடாத்தாகக் கங்கைக் கரையோரப் பக்கங்களில் குடியேறினார்கள் என்பதும், அதனால் தமிழ் மக்கள் தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையே.

வேதகாலமும் ஆரியர் வருகையோடு தொடங்கியதேயாகும். இனக் கால ஒப்பீட்டை நோக்குவோம். இன்று கலி 5088 நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கி. மு. 1500க்கு முன் தமிழர் நாகரீகம் உச்ச நிலை அடைந்தும், பின் வீழ்ச்சி நிலை அடைந்தும் வந்திருக்கிறது. எனவே கி. மு. 1500 என்றால் கலி 1600ஆகும். அஃதாவது இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். 5088 (1500 + 1988) இக்காலம் தென்னாட்டில் இடைச் சங்கம் நிகழ்ந்து கொண்டிருந்த காலமாகும். எனவே தலைச்சங்கம் இருந்த காலம் இலங்கை உட்;பட இமயமலை பரியந்தம் தமிழர் உச்சநிலையடைந்திருந்த காலம் என்பது எச். ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூற்றால் தெளிவாக அறியக் கிடக்கின்றது. எனவே வரலாற்றுக் கெட்டியவரையில் சூரன் ஆட்சிக்காலம் தொடக்கம் அஃதாவது துவாபரயுக இறுதி சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உள்ள கால இடைவெளியிலும் தமிழர் நாகரீகமே உச்சநிலை அடைந்திருந்த காலமாகும் என்பதும் தெளிவாகிறது. எனவே தமிழர் நாகரீகம் சீருற்றிருந்த உச்ச காலம் சூரன் ஆட்சிக் காலமும், தலைச்சங்க காலமும் (அகத்தியர் காலம்) இடைச்சங்க காலமும் ஆகும். சூரன் ஆட்சிக் காலம் எலியட் பண்டிதர் கூறும் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே குமரிக்குத் தெற்கே முன் ஒன்றாய் இருந்து பிரிந்த இலங்கை தமிழ் நாடே. அதைத் தமிழர்நாடு அல்ல எனக் கூற முடியுமா? முடியுமானால் அது எந்த மொழி வழங்கிய நாடு? கூறுமின்! ஆரியர் வருகை இமயம் வரை பரந்து வாழ்ந்த தமிழ் இனத்தைத் தெற்கு நோக்கி ஒதுங்கி வாழச் செய்தது அல்லவா? மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே குமரிநாடு அழிவுற்று 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டு பிரிந்தனவன்றோ? இந்தியா என்னும் பெயரும் அந்நாட்டின் பூர்வீக நாமம் அன்றே. இதனை ஏச். சி. உரோலின்சன் கூற்றே வலியுறுத்துகிறதல்லவா? இனி சுவாமி விவேகானந்தரும், இந்தியா, இந்தியர், இந்துக்கள் என்னும் பெயர் பேர்சியரின் வழக்கத்தில் இருந்து வந்ததே எனக் கூறியுள்ளார்.

குமரி நாடு கடல் வாய்ப்பட்ட பின்னும் ஈழம் இந்தியா வோடிணைந்து ஒரே நாடாய் இருக்கும். ஆனால் ஈழத்தின் தென்அந்தமே குமரி முனையாக அமையும். குமுரிக் கோயிலும் அங்கேயே காண்போம். ஏன்? குமரி மலையின் முடிபு ஈழ நாட்டின் தென் அந்தமே. இதன் விளக்கம் முன் கூறப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் கருத்தும் இதுவே. அவர்கள் மகேந்திரம் என்று கூறப்படும் குமரி மலைத் தொடர் தற்கால இந்தியாவின் மேற்கு மலைத் தொடரின் தெற்கே இருந்து ஆரம்பித்து, தெற்கு, தென் கிழக்காக ஈழநாட்டை நடுவாக ஊடறுத்துச் சென்று பின் மேற்காகச் சென்று மடகாஸ்கார் தீவுவரை சென்றதாகக் கூறுவார்கள். இக் கூற்றுக்கு ஆதாரமாக சூரனது ஆட்சி நகர் வீரமகேந்திரம் ஈழத்தின் தென் அந்தத்திலேயே இருந்து கடல் வாய்ப்பட்டதாக வரலாhறு கூறுகின்றது. குமரி மலைமீது அவனது நகர் அமைந்திருந்தமையினாலேயே மகேந்திரம் எனப்பட்டது. ஈழம் இந்தியாவினின்று பிரிந்தமையினால் இந்தியாவின் தென்னந்தம் குமரிமுனை எனப்பட்டது.

ஆகவே குமரி நாடு, குமரி; கண்டம் எனப்படுவது கடல் வாய்ப்பட்ட 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டாத ஈழமும், இந்தியாவும் அண்மையில் உள்ள ஏனைய தீவுகளும் அடங்கிய பாரிய நிலப்பரப்பைக் குறித்த பூர்வகாலப் பெயராகும் என்பது தெளிவு.

மரபினில் வந்துளோன்
சென்னியிற்பிறை சூடும் சிவன்தரு
முன்னவன் தனக்கன்பு முதிர்ந்துளான்
சின்னத்தம்பி எனும் பெயர்ச் செம்மலே


சிவமயம்

பண்டித வித்துவான்
ஆ. சின்னத்தம்பி

பிறந்த நாள்
10 – 09 – 1911

ஈழநாட்டாராய்ச்சி வரலாறு
உள்ளுறை

குமரிகண்டத்தில் இருந்த ஓர் உள்நாடு ஈழம். ஈழம் என்னும் பெயர் குமரிகண்ட காலத்தில் வழக்கில் இருந்த பெயர். ஈழத்தின் தற்போதுள்ள மலைத் தொடர்கள் குமரிமலையின் பகுதிகளே. குமரிகண்ட காலத்தில் அதி உயரமாய் இருந்த தெய்ளீகமான மலை சிவனொளி மலை. சிவனொளி மலையிலேயே இறைவன் த~ணாமூர்த்தியாக எழுந்தருளி இருந்துநான்கு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். ஈழம் சிவபூமி. சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் குமரி மலையின் தென்னந்தம் ஈழநாட்டுப் ப+ர்வீகக் குடிகள் தமிழர். ஈழத் தமிழ் நாடு: முதன் முதல் மக்கள் இனம் தோன்றிய இடம் ஈழம்@ ஈழத்தின் கடவுட் கொள்கை சிவநெறி@ அசுரர், இயக்கர், நாகர் என்னும் பெயர்கள் ஆரியர் வருகைக்குப்பின் வடமொழியில் அவர்களால் தமிழருக்கு இடப்பட்டு வழங்கிய பெயர்.

விசயன் கலிங்க நாட்டுத் தமிழன், குவேனி ஈழநாட்டு அரச கன்னிகை. விசயன் பேசிய மொழி தமிழ் சமயம் சிவநெறி. ஈழநாட்டு அரச பரம்பரை இரண்டுபிரிவானது. இவற்றில் அரச பரம்பரையாவது ஈழநாட்டு பூர்வீக அரச பரம்பரையும் கலிங்க நாட்டு அரச பரம்பரையும் (விசயன்) ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரையாகும். அடுத்தது விசயனோடு வந்த விசயன் கூட்டாளிகளும் (கலிங்க நாட்டுத் தமிழர்) ஈழ நாட்டுத் தமிழரும் ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரை. சிங்களம் என்ற சொல் புத்த பிக்குகளால் புனையப்பட்ட பெயர். சிங்களம் இனம், சிங்கள மொழிஎன வழக்கு ஏற்படலாயிற்று. சூரன் ஆதியோரும் மாதோட்ட மன்னர்களும் பூர்வீகத் தமிழ் மக்களின் அரச பரம்பரையினர். சூரன் ஆதியோரின் பெண்வழி மாதோட்ட மன்னர்பரம்பரையே. சிங்களவர் எனத் தற்போது உள்ள இனத்தவர்கள். ஈழநாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, கலிங்கநாட்டைச் சேர்ந்த தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களேயாவர். ஈழநாட்டுத் தமிழரின் கொடி சிங்கக்கொடி, பனைக்கொடி, ஈழநாட்டில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.


பாட அட்டவணை

பக்கம்.
பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும் 1
சங்ககாலம் ஆரம்பம் 19
ஈழமும் வரலாறும் 46
விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் 90
படை எழுச்சிகளும் விளைவும் 111
கலிங்க மாகன் படை எழுச்சி 132
ஈழமும் தமிழர் ஆதிக்கமும் 139

குறிப்பு:
கலியுக ஆண்டுகளும், அவற்றோடு ஒப்புநோக்கிக் கூறிய கிறிஸ்துவ ஆண்டுகளும் நூல் எழுதிய காலத்தை எல்லையாக வைத்துக் கூறப்பட்டுள்ளன என்பதை வாசகர்கள் உணர வேண்டும். பின் காலப்போக்கில் காலம் வளர்ந்து கொண்டே செல்லும்.



சிவமயம்

நூலாசிரியர் வரலாறு

எழுதியவர்:
ஸ்ரீமான் பண்டிதர் இ. நவரத்தினம் அவர்கள்
உரும்பிராய்

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் இவ்வரிய ஆய்வு நூலை ஆக்கியவர் வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் இவர் வரணி வடக்குக் குறிச்சி தம்பான் என்னும் இடத்தில் வசித்த வல்லியப்பர் ஆறுமுகம் என்பவரும், அவரது இல்லக்கிழத்தி மங்கை நல்லாள் பொன்னர் மகள் கற்பாத்தை என்பவரும் சேர்ந்து செய்த தவத்தின் பயனாய் தோன்றியவர்.

இவர்களுடைய வமிசாவழி மிகவும் புகழ் பெற்றது. அஃதாவது சைவத்தின் உறைவிடமாகிய வரணி வடக்குக் குறிச்சி வேளாண் பிரபு திரு. அம்பல முதலியார் மகள் அங்கயற் கண்ணி அம்மையார் புலோலி வேளாண் தோன்றல் பெருமையினான் குமாரவேலர் வமிசாவழியில் வந்த குமாரவேலர் சூரியர் முருகர் வழித்தோன்றலே பண்டித வித்துவான் சின்னதம்பி அவர்கள்.

இவர் 10-09-1911ல் பிறந்தார். இவருக்கு ஆசிரியர் கந்தையா, ஊர்காவலர் வேலுப்பிள்ளை. கூட்டுறவுச் சங்க ஊழியர் குமாரவேலு எனும் மூன்று ஆண் சகோதரர்களும், சின்னாச்சிப்பிள்ளை என்னும் ஒரேயொரு பெண் சகோதரியுமாக நால்வர் உடன்பிறப்பாளர் ஆவர்.

கல்விப்பருவத்தில் வரணி வடக்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஜே. எஸ். சீ வரை படித்த பின் சுன்னாகம் பிராசீன பாடசாலையில் 1928, 1929ம் ஆண்டுகளில் படித்து 1939ம் ஆண்டில் யாழ்ப்பாணம் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார். அப்போது இவருக்கு வயது பத்தொன்பதாகும். இவ்விளமைப் பருவத்தில் பண்டித பரீட்சையில் தேறியமை இவரது திறமையை எடுத்துக் காட்டும் ஒரு பெருஞ் சாதனையாகும். இவருக்கு ஆசிரியராக வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களே அமர்ந்திருந்தார்.

பின்னர் 31ம், 32ம் ஆண்டுகளில் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்டு 2ம் ஆண்டு பயிற்சி முடிவதற்கு முன்னாக அப்பயிற்சி நிலையம் மூடப்பட்டதால் இவரது ஆசிரியப் பயிற்சி நிறைவேறாதாயிற்று. அதனால் தராதரம் அற்ற ஆசிரியராக அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில் படிப்பித்து வந்தார்.

இவ்வாறு படிப்பித்து வருங்காலத்தில் 1950 ஆண்டு மதுரைப் பண்டித பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார். 1956ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடாத்தும் வித்துவான் பரீட்சையிலும் தோற்றிச் சித்தியடைந்தார்.

இவர் தராதரம் அற்ற ஆசிரியராகக் கடமை ஆற்றும் காலத்தில் 21ஆவது வயதில் மந்துவில் வைரவநாதர் சின்னையாவின் மகள் அரிவையர்திலகம் அன்னம்மா அம்மையாரைத் திருமணம் செய்தார். பத்து வருட காலம் பாலும் தேனும் போல இயைந்து இல்லறம் நடாத்தியும் பிள்ளைச் செல்வம் கிடைக்கவில்லை. பாரியாரும் பாருலகு நீத்தார்.

பின்னர் இரண்டாந் தாரமாக கரணவாய் தெற்கு சோழங்கன் ஐயா உடையாரின் சகோதரி பெரியநாச்சனுக்கும், மணியந்தோட்டம் கந்தையாவுக்கும் மகனான வல்லிபுர நாதர் மகள் மங்கையரில் மாண்பு மிக்குடைய தங்கம்மா அம்மையாரை 34ஆவதுவயதில் வதுவை அயர்ந்து சிங்கேறு எனத் தகும் இரு ஆண் மகவைப் பெற்றார். அவர்களில் முதன் மகனான செல்வன் மாணிக்கத் தியாகராசாவைச் சிவபதம் அடையவிட்டு சிவன் செயல் என்று இருந்தார். அடுத்த மகன் செல்வன் புவனேந்திரநாதனையே பற்றுக்கோடாகப் பேணி கல்வி பயிற்றி வந்தார்.

அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்து க. பொ. த (உயர்தர) வகுப்பில் சித்தியடைந்தார். பின்னர் அவர் றேடியோ கிறாவர் (Radio Grapher) ஆகப் பயிற்றப்பட்டு பதவி பெற்று பணியாற்றி வருகின்றார்.

பண்டித வித்துவான் சின்னத்தம்பி அவர்கள் ஆரம்ப காலத்தில் அம்பன், வரணி, வரணி இயற்றாலை, நவக்கிரி, அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளிலும், பின் கொக்குவில் இந்துக்கல்லூரியில் 8 வருட காலமும், உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் 2 வருட காலமும் ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் 50 ஆவது வயதில் திருநெல்வேலி பயி;ற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராகப்பதவியும் பெற்றார். பின்னர் 52 ஆவது வயதில் தான் பிறந்த இடமாகிய வரணியில் உள்ள வரணி மகா வித்தியாசாலையில் கடமையாற்றி 60 ஆவது வயதில் இளைப்பாறினார்.

ஆசிரியராகக் கடமையாற்றுங் காலங்களில் மக்கள் சேவையிலும் ஈடுபாடு உடையவர் ஆகத்திகழ்ந்தார். வரணிக் கிராமச் சங்கத்தில் உறுப்பினராக 12 வருடம் கிராமத்துக்குச் சேவையாற்றினார். கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராக இருந்து 10 வருடம் வரணி, கச்சாய், மிருசுவில் கிராமங்களுக்குச் சேவை புரிந்தார்.

நூலாசிரியரின் குரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையராலும். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலும் சிறப்புப் பாயிரம் ஈயப்பெற்ற வட வரணிக்குரிய கறுக்காய்ச் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை என்னும் நூலே இவரால் முதன் முதல் வெளியிடப்பட்டது.

இவர் இரு தேசப் பண்டிதராயும் சென்னை வித்துவானுமாய் இருப்பதில் இருந்தே தமிழில் இவருக்குள்ள ஆழ்ந்த புலமை தெரிகிறது. 19வயதிலேயே முதல் பண்டிதர் ஆனார் எனில் இவரது கூரிய மதிநுட்பம் புலனாகின்றதல்லவா? ஆசிரியத்துவத்திலும் யாருக்கும் பின்நிற்பவரல்லர். மாணவருக்கு விடய விளக்கம் அளிப்பதில் மிகவும் திறமை படைத்தவர்.

செய்யுட்வை சுவை நனிசொட்டச் சொட்டப் பாக்களை யாப்பதில் வல்லுநர். எதிரிகளோடு வாதிடுவதிற் சிங்கேறு போலப் பாய்வார். ஆயினும் மிக சாந்த குணம் உள்ளவர். நேர்மை வழி தவறாதவர். நட்புக்கினியவர். நாநலம் மிக்கவர். முப்பொருள் உண்மை முற்றும் உணர்ந்தவர். சித்தாந்த சாகரத்தே மூழ்கித் திளைத்து முத்துக்கள் எடுத்து மொழிவார். கேட்போர் வயிற்றை மறந்திடுவர். எனது சீரிய நண்பர். இவரது தமிழாக்க முயற்சி மேன் மேலும் ஒங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply