ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 5

சங்ககால ஆரம்பம் – பகுதி 5

இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பி;ன்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் ஆட்சிக்காலத்தில் சங்கம் பற்றிய செய்திகள் அறியக் கூடியதாய் இல்லை. ஆனால் அகத்தியர் பேசப்படுகிறார். அவர் அக்காலத்தில் தென்னாடு போந்தமை பற்றிய வரலாறே கூறப்படுகின்றது. அகத்தியர் வருகைக்கு முன் சங்கம் இருந்ததில்லை. அகத்தியரே முதற் சங்கத்துக்கு முதன்மையானவராய் விளங்கினார். அகத்தியர் தென்னாடு போந்தமை தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்ற நோக்குடன் அன்று என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆகவே அகத்தியர் வந்தார்@ பொதிய மலையில் இருந்தார். அப்படியானால் முதற் சங்கம் ஏன்தொடங்கப்பட்டது? யார் தொடக்கினார்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்னும் வினாக்கள் எழுகின்றன. அதற்கு உய்த்துணர்ந்து விடைகள் காண்பாம்.

கடல்கோள் காரணமாக நாடு பல வழியிலும் அழிவெய்தியதனால் அதனைச் சீர் செய்வான் கருதியே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக வேண்டும். எனவே அகத்தியர் வருகைக்குப் பின் ஒர் பெருங் கடல் கோள் நடந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட அழிவைச் சீர் செய்வான் கருதியே முதன் முதலாக தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அப்பெருங்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளாக இருக்கலாம். சூரன் ஆட்சிக்காலத்தில் அகத்தியர் தென்னாடு வருகின்றார்@ பொதிய மலையில் வசிக்கின்றார். சூரன் ஆட்சி முடிவடைகிறது. கடல் கோள் ஒன்றுநடைபெறுகிறது. அதனால் சங்கம் ஒன்று நிறுவப்படுகிறது. எனவே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளின் பின்னர் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே அகத்தியனாரை முதன்மையாக வைத்துத் தலைச்சங்கம் தொடங்கப்பட்டதென்றே கொள்ள வேண்டும். வரலாற்றுண்மை அதுவேயாகும். ஆதலின் சங்ககால ஆரம்பம் சூரன் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது துணி பொருள்.

இனி, தொடங்கப்பட்ட சங்கம் தொடர்ந்து எக்காலமும் இருக்கலாமே. அவ்வாறன்றி இடையீடுபட்டு முதற்சங்கம், இடைச் சங்கம் கடைச்சங்கம் என வரவேண்டிய காரணம் என்னையோ? காரணம் இடையிடையே ஏற்பட்ட கடல் கோள்களன்றிப் பிறிதில்லை. கடல் கோள்களினால் நாடு ஒரு பகுதி கடலாகலாம்@ மக்கட் கூட்டம் ஒரு பகுதி அழியலாம்@ அதனால் மக்கள் பண்பாடு, நாகரீகம் சிதையலாம்@ நூற் சுவடிகள் அழியலாம். அப்போது நாடாளும் அரசன் மனம் கனன்று தமிழ் மொழி, அம்மொழியிலுள்ள நூல்கள் தமிழ் மரபு, பண்பாடு, நாகரிகம், கடவுட்கொள்கை இவற்றை மேலும் பேணி வளர்க்க வேண்டியே அறிவுடைப் பெரியோரைக் கூட்டி சங்கத்தை அமைப்பான். ஆதலின் அவ்வக் கால அரசர் கடல் கோள்களுக்குப் பின்னர் சங்கங்களைத் தாபித்தனர். இவ்வாறாகவே சங்கங்கள் மூன்றாயின. அவ்வாறானால் முதற்சங்கம் எப்போது ஆரம்பித்திருக்கலாம் என அறிவோம். சூரன் ஆட்சி முடிவில் ஓர் பெருங்கடல் கோள் நடைபெற்றதெனஅறிவோம். அக்காலம் அகத்தியர் பொதிய மலையில் இருக்கிறார் என வரலாறு கூறுகின்றது. அக் கடல் கோளினால் நாட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனைச் சீர்செய்வதற்கு அறிவுடைப் பெரியோர் பலரின் ஆலோசனை அவசியமாயிற்று. எனவே யாவரினதும் மேலான அறிவும். அறிவாற்றலும் படைத்தவர் அகத்தியரேயாவர். ஆதலின் அவரின் தலைமையிலே முதற் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் சூரன் ஆட்சி முடிவெய்திய சில நூற்றாண்டுகளின் பின்னர் ஆரியர் வருகைக்கு முன்னராதல் வேண்டும். எனவே சூரன் ஆட்சி முடிவுக்கும் ஆரியர் வருகைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சங்க காலம் ஆரம்பித்ததாக வேண்டும்.

அத்திலாந்திக் சரித்திரம் எழுதிய எல்லியட் என்னும் ஆங்கில பண்டிதர் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் கடல் கோள் நடைபெற்றதாகவும் அதனால் பல தீவுகள், கடற்கரை நாடுகள் சிதைவுற்றன என்றும் கூறுவர் இக்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் நிகழ்ந்த கடல்கோளாக அமையலாம். அவர் கூற்றின்படி இக்கடல் கோள் துவாபர யுகத்தின் இறுதியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது துவாபர யுகத்துக்கு அடுத்த யுகமாகிய கலியுகம் பிறந்துஇன்று 5088 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. எலியட் இற்றைக்கு எனக் குறிப்பதுதான் நூல் எழுதிய காலம் ஆகும். எனவே கலியில் நிகழும் ஆண்டாகிய 5088ல் 88ஐக்கழித் மிருதி 5000 ஆண்டுகளை 11581இல் கழிக்க வருவது துவாபரயுகத்தில் நின்ற இறுதிக்காலம் 6481 ஆண்டுகளாகும். இக்காலமே சூரன் ஆட்சி நடைபெற்று முடிவுற்ற காலம் எனக் கொள்ளலாம். (இனி ஒரு யுகம் முடிந்து பிறிதோர் யுகம் தோன்றும்போது முன் யுகத்தின் இறுதி 500 ஆண்டும் பின் யுகத்தின் தொடக்கம் 500 ஆண்டுமாக 1000 ஆண்டுகள் யுகசந்தி எனப்படும். இக் காலம் அழிவும் ஆக்கமுமான காலமாகும். ஆதலின் 6481 இல் 1000 போக மிகுதியான 5481 ஆண்டுக்குள்ளேயே சூரன் ஆட்சி முடிபு இருந்திருக்கலாம்.

ஆனால் குமரிக்கோடும் பஃறுளியாறும் கடல்வாய்ப்பட்டு அழிவெய்தி இலங்கையும் இந்தியாவும் பிரிந்தது சூரன் ஆட்சிக்காலத்துக்கு முன்னாகும்.

“முந்தொரு காலந் தன்னில் மூவுலகந் தன்னில்
வந்திடும் உயிர் செய்த வல்வினை யதனாலே
அந்தமில் மறை எல்லாம் அடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோரும் தேவரும் மருளுற்றார்”

என்பது கந்தபுராணம் பாயிரப் படலத்திலுள்ள செய்யுளாகும். இச் செய்யுளில் உள்ள
”முந்தொரு காலம்” என்பதற்கு ஆதி கற்பத்தில் துவாபர யுகத்தில் என நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது கலியுகம் பிறந்து 5088ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலியுகத்துக்கு முன்னுள்ள யுகமே துவாபரயுகம். எனவே துவாபரயுகம் அதற்கு முன்னுள்ள யுகங்களின் வரலாறுகளே கலியுகத்துக்கு வந்தனவாதல் வேண்டும். கந்தபுராணம் சூரனது வரலாறு கூறும் நூல். இவ்வரலாறு இறைவனால் நந்திக்கு உபதேசிக்கப்பட்டு, அவரால் வாதநாராயணருக்கு உணர்த்தப்பட்டு அவரால் அவர் மகன் சூத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு சூத முனிவர் யாவரும் அறியக் கூறினார் எனக் கந்தபுராணம் பாயிரப் படலம் கூறுகின்றது.

எனவே சூரன் ஆட்சிக்காலம் முடிவுற்று பல நாடுகள் கடல்கோளினால் அழிவுற்று அதனால் பல நூற்றாண்டு காலம்மறை நெறிகளும் முன்னிருந்த தெய்வீக வழிபாட்டு முறைகளும், மக்கள் வாழ்க்கை நெறியும் மறைந்து போன ஓர் நிலைமை ஏற்படுவதாயிற்று என்பது புலனாகின்றது. ஆதலின் சூரன் ஆட்சிக் காலம் துவாபரயுகத்தின் பிற்பகுதியாக வேண்டும். துவாபரயுகம் 865000 ஆண்டுகள் கொண்டது. இதி;ல் இறுதிக்காலமாகிய எஞ்சியிருந்த 6481 ஆண்டுகளுக்குள்ளேயே தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அஃதாவது எலியட் பண்டிதர் கூறும் கடல் கோளுக்குப் பின்னரே ஆக வேண்டும்.

இறையனார் களவியலுரையின்படி மூன்று சங்கங்களும் இருந்த காலம் முறையே 4440, 3700, 1850 ஆண்டுகளாகும். இவற்றில் தலைச்சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி 6481 ஆண்டுகளுக்குள்ளேயே அமையவேண்டும் . இடைச்சங்கமும் துவாபரயுக இறுதியில் தொடங்கிக் கலியுகத்தில் முடிபெய்தியது. கடைச்சங்கம் கலியுகத்தில் ஆரம்பித்து கி. பி. 3ம் நூற்றாண்டில் முடிவெய்தியது. கி. பி.3ம் நூற்றாண்டு ஏறக்குறைய 250 ஆண்டு எனக் கொண்டால் கடைச் சங்கம் முடிவெய்திய காலம் இற்றைக்கு 1738 ஆண்டுகளுக்கு முன்னாகும். எனவே இப்பொழுது கலி 5088ம் ஆண்டு நிகழ்வதால் கடைச்சங்கம் முடிவெய்திய காலம் கலி (5088 – 1738) 3350ம் ஆண்டாகும் என்க. ஆகவே கடைச்சங்கம் தொடங்கிய காலம் கலி (3350 – 1850) 1500ம் ஆண்டாகும்.

எனவே இடைச்சங்கம் முடிபெய்திய காலம் கலி 1500க்கு முன்னாக வேண்டும். இடைச் சங்கம் நிலவிய காலம் 3700 ஆண்டுகளாகும். ஆதலின் இடைச்சங்கம் தொடங்கிய காலம் (3700 – 1500) துவாபரயுக இறுதியிலுள்ள 2200 – 2300 ஆண்டுகளுக்குள் அமைய வேண்டும். எனவே தலைச் சங்கம் முடிபெய்திய காலம் துவாபரயுக இறுதி 2200 – 2300 ஆண்டுகளுக்கு முன்னாக வேண்டும். ஆதலின் தலைச் சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி (2200 + 4440) 6640, 6740 வரையிலாகலாம்.

இனி வேதகாலம் ஆரியர் வருகை பற்றி ஆராய்வாம். வேதகாலம் கி. மு. 1500க்கு முன் என்றும் அது தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800 என்றும் ஆய்வாளர் கூறுவர். வேதகாலம்; கி.மு. 1500 க்கு முன். எனவே அக்காலம் இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். ஆகவே கலி வருடம் (5088 – 3488) 1600 ஆகும். தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800. எனவே அஃது இற்றைக்கு 2788 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி வருடம் 2300 ஆகும்.

இனி ஆரியர் இந்தியாவுட் புகுந்த காலம் கி. மு. 1600 – 2000 வரையில் என்பர். அஃது இற்றைக்கு 3588 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி 1500 ஆகும். எனவே ஆரியர் வருகை இடைச்சங்க கால இறுதியில் நடைபெற்றிருத்தல் சாலும். தொகுக்கப்பட்டது கடைச்சங்க காலமாதல் வேண்டும்.

இவ் வரலாற்றின்படி நாம் அறியக்கூடிய இலங்கை வரலாறு துவாபரயுகத்திறுதிக் காலத்தே எலியட் பண்டிதர்கூறும் 11481 ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டைச் சூரன் ஆட்சி புரிந்தான் என்பதும், அதனால் ஈழ நாட்டில் துவாபரயுகத்தில் தமிழினம் வாழ்ந்து வந்தனர் என்பதும் வேத காலம் வியாசர் காலம் ஆரியர் வருகைக்கு முன்னரே ஈழ நாட்டில் தமிழர்கள் வாழ்ந்து உலகறியப் பேரரசு செலுத்தினர் என்பதுமாகும்.

இனி, சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் வேறு நாடாக வேறு வேறு அரசர் நாடாக இடையே கடல்கொண்டதாக வரலாறு கூறுதலின் குமரி நாடு கடல் கோளினால் சிதைவுற்ற காலம் சூரன் ஆட்சிக்கு முற்பட்ட காலமாகும் என்பது தெளிவு. எனவே குமரி நாடு அழிவுற்ற காலம் திரேத துவாபர சந்தியாதல் வேண்டும் என ஊகிக்க இடண்முடு.

இனித் தமிழ் மறை 3 சங்கத்திலும் நிலவியதாகக் கருத இடமுண்டு. தொல்காப்பியம் செய்யுளியலில் தமிழ் நூல் இலக்கணம் கூறுமிடத்து அவற்றை 7 வகையாக வகுத்துக் கூறும் போது வாய்மொழி (மந்திரம்) என்பதனை ஒரு வகை நூலாகக் கூறியிருப்பதினாலும் தொல்காப்பியர் பாயிரத்தில் பனம்பாரனார் “முந்து நூல்கண்டு” எனக்கூறுவதினாலும், மறை என்னும் சொல் மூன்று சங்க காலத்திலும் வழக்கில் இருந்தமையாலும் வேதம் என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு அன்று மறையாகையாலும் வேதகாலத்துக்கு முன்னரே மறை நூல்கள் இருந்தன என்பதும் வெளிப்படை.

இனி சூரன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே அகத்தியர் தென்னாடு போந்தனர் என்பது வரலாறு. அவரது வருகை முன்னாகவும் இருக்கலாம். சங்கம் பற்றிய செய்திகள் ஒன்றும் சூரன் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை ஆதலின் சூரன் ஆட்சி முடிந்த பி;ன்னரே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதென்பது உறுதியாகிறது.

கற்று வல்ல பெரியோரும், அரசனுமே சங்கத்தில் அங்கம் வகித்தனர். இலங்கை இந்தியாவினின்றும் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாகி வேறு வேறு அரசர் ஆட்சிக்குட்பட்டமையால் இலங்கை தமிழ் நாடாய் இருந்தும் அதனை வேறுபடுத்தி தமிழ்ச் சங்கம் தாபித்த இடமாகிய இந்தியாவை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எல்லை கூறுவாராயினர். அவ்வாறிருந்தும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அறிவுடைப் பெரியோர் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அங்கம் வகித்து வரலாயினர்.

அவருள் இன்று எம்மால் அறியத்தக்கவராய் இருப்பவர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர். இவர் சங்கத்தில் ஓர் உறுப்புடைப் புலவராய் இருந்த காரணத்தினால் ஈழநாட்டினின்றும் போந்து மதுரையிலே தங்கி வாழ்ந்தவராகத் தெரிகி;ன்றது. அதனால் இவர் “மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்” எனவும் அழைக்கப்பட்டார் இவரால் பாடப்பெற்ற பாண்டியன் பசும்பூற் பாண்டியன் என்பவன். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றில் மூன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றுமாகும். இவர்கடைச்சங்க காலத்தவர் என்பார்.

எனவே இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கை என்னும் பெயரா? ஈழம் என்னும் பெயரா? எது முற்பட்ட வழக்கு என்பதே. ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார் ஆதலின் ஈழம் என்பதே இலங்கையின் பூர்வீக நாமம் என்பதும் தெளிவாகின்றது. கடைச்சங்க காலத்தில் இலங்கை ஈழம் என்றே வழங்கப்பட்டிருந்ததால் முதலாம். இரண்டாம் சங்க கால வழக்கும் அதுவே என்பதில் ஐயத்துக்கே இடமில்லை என்றோ? முற்பட்ட வழக்கே தொடர்ந்து பின்வருவதன்றோ?

இனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தை ஒருவாறு சுட்டியுணர்வாம். இவராற் பாடப்பட்டவன் பசும்ப+ற் பாண்டியன். இவன் வாழ்ந்த காலம் கி. மு. 180 – 125 என்று வரலாற்றாசிரியர் கூறுவர். எனவே புலவர் வாழ்ந்த காலம் அதுவாகும். இக்காலத்தில் ஈழநாட்டை (இலங்கை) ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசன் எல்லாளன் ஆவான். இப்பொழுது இலங்கையில் புத்த மதம் வந்து 164 ஆண்டுகளேயாகும். விஜயன் வந்தது புலவர் காலத்துக்கு முன் 363வது ஆண்டாகும். இக்காலமே அநாகரிகமான இயக்கர் நாகர் வாழ்ந்த காலம்@ உணர்மின். இன்னும் இலங்கை தூய தமிழ்மொழி நாடே என்பதனை தமிழை தென் தமிழ் எனக்கூறும் பண்டைய வழக்கே வலியுறுத்துவதாகும். என்னை? தென் தமிழ் எனக் கூறுவதனால் தமிழின் உற்பத்தியிடம், தென்பகுதி என்பது பெற்றுக் கொள்ளப்படும். தமிழ்தெற்கே பிறந்து வட திசை நோக்கி வளர்ந்து பரந்தது என்பதே உலகறிந்த உண்மை. இதற்குச் சான்றாக தற்கால இந்தியாவிலும் தென்பகுதியே சிறந்த தென் தமிழ்நாடாக அமைகிறது. இதற்கு ஆதாரமாக 3 தமிழ்ச் சங்கங்களும் இருந்த இடங்களே சான்று பகருகின்றன. முதலாவது சங்கம் அக்கால இந்தியாவில் தென்கோடியில் தென்மதுரை என்ற இடத்திலும், பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாக அழிவுற்றதும் எஞ்சிய இந்தியாவில் தென்கோடி கபாடபுரம் என்ற இடத்திலும் பின்னர் அடுத்த கடல்கோளினால் அப்பகுதியில் சிதைவுற மூன்றாவது சங்கம் தென் பகுதியில் மதுரை என்ற இடத்திலும் நிறுவப்பட்டன என வரலாறு கூறுகின்றது எனவே தமிழின் உற்பத்தியிடம் தென்பகுதியேயாம் என்பது தெளிவு.

அவ்வாறானால் இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் இருந்த காலத்தில் இலங்கையே தென் தமிழ் நாடாகும். ஆதலின் தமிழின் உற்பத்தி இடம், செந்தமிழ் செழிப்புற்றிருந்த இடம் இலங்கையே என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இன்று. ஆதலின் இலங்கை அன்றும், இன்றும், என்றும் தமிழ் நாடே அன்றி வேற்று மொழி எதற்கும் உரிய பிறப்பிடம் அன்று. இன்னும் இவ்வுண்மையை எந்த மொழிக்கும் இல்லாத, தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பாகவுள்ள “ழ’கர ஒலியைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற அதன் பெயரே அங்கைநெல்லி என எளிதில் யாவரையும் உணர வைக்கின்றது. அன்றியும் இலங்கையில் வேறு மொழிகளோ, வேற்று மொழியாளர்களோ வாழ்ந்தார்கள் என்பதற்கும். வேற்று நாட்டில் இருந்து இங்கு வந்து குடியமர்ந்தார்கள் என்பதற்கும் விஜயன் வருகைக்கு முன் வரலாறே கிடையாது.

தலைச் சங்கம் இருந்த தென்மதுரை இலங்கைக்கு மிக மிக அண்மையில் இருந்திருக்க வேண்டும். தென் மதுரை கடல்வாய்ப்பட்ட பின்னர் பாண்டிதன் மணற்றி என்ற இடத்தில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. வான்மீகி இராமாயணத்திலும் கூறப்படுகின்றது. தென்மதுரை அழிவுற்ற பின்னர் கபாடபுரம் அமைக்கப்படுவதற்கு முன்னர்சில காலம் மணற்றியைத் தலைநகராகக் கொண்டிருக்கும் காலம். மணற்றி என்பது அந்நாட்டின் இயற்பெயர் ஈழநாட்டில் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் பண்டைக்காலத்தில் மணற்றி என்றே அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வருவதற்கு முன்னர் அக் குடாநாட்டின் பழைய பெயர்களுள் மணற்றியும் ஒன்றாகும். எனவே அழிவுற்ற தென்மதுரை யாழ்ப்பாணம் ஆகிய மணற்றிக்கு மிக மிக அண்மையில் இந்தியாவின் தென் கோடியில் இருந்த தென்பதனை இயற்கையும் சுட்டி உணர்த்துகிறது.

இலங்கை கடலால் பிரிக்கப்படாமல் இருக்குமாயின் இன்று பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவோ, அன்றிச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போல் இந்தியாவுக்குட்பட்ட ஓர் தமிழ்; நாடாகவே அமைந்திருக்கும். ஆதலின் இலங்கையில் வாழ்ந்த பூர்வ மக்கள் தூயசெந்தமிழ் பேசிய பழங்குடி மக்களே என்பது எவ்வாற்றானும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் எப்பாகத்திலாயினும் பண்டுதொட்டு வேற்றுமொழி பேசிய பகுதி இருந்ததேயில்லை. சிங்கள மொழி பேசும் ஓர் பகுதி இருக்கிறதே எனில் அம்மொழி இங்கு வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் மொழியும், பிக்குகள் பேசியும், பயிற்றியும் வந்த பாலி மொழியும் கலந்து ஏற்பட்ட ஒர் கலப்பு மொழியாகும். இம் மொழியின் ஆரம்ப காலம் கி. மு. 304க்குப் பின்னாகும்.

இனிவடமொழியை நோக்குவோம். அஃது இன்றும் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வளர்ந்து செல்வதைக் காணலாம். அஃது தமிழ் நாட்டில் தமிழ் வழக்கில் இன்றும் வடமொழி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தொல்காப்பியனார், “வடசொற் கிழவி, வடவொழுத்தொரீஇ” எனக் கூறியிருப்பதை அறிக. வடமொழி எனக் கூறும்போது சமஸ்கிருதத்தின் குடும்ப மொழிகள் அத்தனையும் அடங்கும், இவ்வுண்மைகளை ஒப்புநோக்கி ஆராயும் போது தமிழின் பிறப்பிடம் தமிழன் பிறப்பிடம் இலங்கையும், இந்தியாவும் ஒன்றாய் இருந்த காலத்துத் தென்பகுதியிலும் தென்பகுதி என்றே கொள்ளக் கிடக்கின்றது.

எனவே, அப்பகுதி எதுவாயிருக்கலாம் என அறிவாம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டபோது அஃதாவது ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்கொண்ட காலத்து 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. அப்போது கடல்வாய்ப்படாது எஞ்சியிருந்த நாடே இலங்கையாகும். (ஈழம்) எனவே அதுவே 50 ஆவது நாடெனக் கூறலாம். எனவே 49 நாடுகளுக்கும் தெற்கே பண்டைக் காலத்து ஒரு நாடாய் இருந்து பின்னர் பிரிந்த இலங்கையே ஈழம் (தமிழினி) தமிழனின் பிறப்பிடம் எனக் கூறல் தகும்.

இனி ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எழுதிய எனதுகுரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்கள் அந்நூலின் முகவுரையில் “தமிழ் மொழி முற்காலத்து எங்கும் சென்றுபரவி வழங்கியது” என்றும், “தொல்காப்பியர் காலத்துக்கு முன்னேயே எல்லைக்குட்பட்டு வழங்கியது” என்றும் மு. இராகரவயங்கார் கூற்றை எடுத்துக் காட்டினார்கள். இது சிந்தனைக்குரியது.

இன்னும் அம் முகவுரையின் ஆரம்பத்தில் “ஈழ நாடெனும் இலங்கைத் தீவு எனினும் ஒக்கும்” என அவர்கள் கூறியிருப்பது இலங்கைத் தீவின் பழைய பெயர் ஈழ நாடே என்பது அவர்கள் கருத்தாகும். அன்றியும் இலங்கையில் உள்ள புலவர்கள் வரலாறு எழுதிய அவர்கள் இலங்கைப் புலவர் சரித்திரம் எனப் பெயர் சூட்டாது ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எனப் பெயர் ச+ட்டியிருப்பதே இலங்கையின் முன்னுள்ள பழமையான ஒரேயொரு பெயர் ஈழமே என்பது அவர்கள் கருத்து என்பதனை நன்கு ஐயத்துக்கிடமின்றித் தெளிவாக வலியுறுத்துவதாகும்.

எனவே மக்களின் ஆதிப் பிறப்பிடம் இலங்கையே (ஈழம்) என்பதும்; உலகில் தோன்றிய ஆதி மொழி தமிழே என்பதும், மக்கள் வாழ்க்கைக்கும் நாகரீகத்துக்கும் அடியெடுத்து வைத்தவர்கள் தமிழரே என்பதும் நாம் அறியக் கூடிய உண்மையாகும்.

ஆதிமக்கள் இலங்கையிலே தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கொரல் பாதிரியாரது கருத்துமாகும். அவர் சாகவத் தீவில் காணப்பட்ட பழைய நூல் ஒன்றில் ‘இலங்கையில் ஆதி மக்கள் தோன்றிச் சாவக முதிலிய நாடுகளிற் குடியேறிப் பெருகினார்கள்’ எனக் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கந்தபுராண வரலாற்றை ஒப்புநோக்குமின்! சூரன் ஆட்சிக்காலத்தில் அவனது தலைநகர், தற்போதும் உள்ள முருகன் பாசறையாகிய கதிர்காமத்திற்குத் தெற்கே சில மைல் தூரத்தில் இருந்ததாகவும், அஃது சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல்கோளினால் கடல்வாய்ப்பட்டது என்றும் கூறும். அதுவே வீரமகேந்திரம் எனப்படுவது இதனால் சூரனது ஆட்சி நகர் இலங்கையின் தென்கோடியில் குமரிமலை அந்தத்தில் இருந்தமை புலப்படுகின்றதன்றோ? சூரன் ஆட்சிக்;காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒப்புநோக்கும்போது இலங்கையும், மக்கள் வாழ்க்கையிலும் நாகரீகத்திலும் கடவுட் கொள்கை (சிவநெறி) யிலும் சிறந்து விளங்கியமை புலப்படுகின்றது. சூரன் ஆட்சிக்காலம் 3 சங்கங்களும் தோன்றுவதற்கு முன் உள்ள காலம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தென்பகுதியே சிறப்புற்று விளங்கியிருக்கின்றது. ஆகவே பண்டைக்காலத் தமிழ் மக்களின் குடிப்பரம்பல், அவர்கள் பேசிய தமிழ் மொழி, நகரீகம் ஆகியன காலப்போக்கில் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வளர்ந்ததெனவே உணர முடிகின்றது.

எனவே நாம் உணரக்கூடிய உண்மை வரலாறு: இலங்கை(ஈழம்) இந்திய நிலப்பரப்போடு ஒரு காலத்தில் இணைந்து ஒரேநாடாய் இருந்தது என்பதும், இலங்கையே ஆதி மக்களின் பிறப்பிடம் என்பதும். அவர்கள் பேசிய மொழி தமிழே என்பதும், வரலாற்றுக்கெட்டிய வலையில் தமிழரின் ஆதித் தலைவன் சூரன் அதியோரே என்பதும் ஆகும்.

வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களும் தாம்எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் ஓரிடத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்பது எவராலும் ஒப்புக் கொள்ளப்படக் தக்கதேயாகும்” எனக் கூறியுள்ளார். (5)

இனிக் குமரி என்ற சொல் வாயிலாக அறியக்கூடிய வரலாற்றுண்மைகளை அறிவாம். குமரி என்னும் வழக்கு தொல்காப்பியம் முதலாம் இலக்கண நூல்களிலும், சங்ககால இலக்கியங்களிலும், பிற நூல்களிலும், உலக வழக்கிலும் பரக்கக் காணலாம். ஆனால் அஃது யாறு என்பாரும் கோடு (மலை) என்பாரும், கடல் என்பாரும், நாடு என்பாருமாய் பல படக் கூறுவராயினர் அஃது எவ்வாறு இருப்பினும், குமரி என்ற வழக்கும் அது சுட்டி அறிவிக்கும் இடமும் உண்மை என்பது உறுதியாகும். எனவே அப்பல திறப்பட்ட கூற்றில் யாதோ ஒன்றை அப் பெயர் சுட்டுமானால் ஏனையவற்றையும் அப் பெயரால் அழைத்தல் சாலுவதாகும்@ குமரி என்பது மலையே. அம் மலை செறிந்த இடம் குமரிநாடு எனப்படும். அம் மலையினின்று பாயும் ஆற்றை குமரியாறு என்றலும்;. குமரி மலையை மோதும் கடலைக் குமரியங்கடல் என்றலும் சகசமே. அதனால் ஒரு முரண்பாடும் இல்லையே.

சிலப்பதிகாரம் “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்றே கூறுகின்றது. சிவதருமோத்திரத்தில் குமரி மலையே மகேந்திர மலை எனக் கூறப்பட்டுள்ளது. ஆதலின் குமரி என்பது மலை குறித்ததென்பது உறுதியாகிறது.

தொல்காப்பியர் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி” எனக் கூறப்படுகிறது. இங்கே குமரி எனச்சுட்டிய இடம் இந்தியாவின் தென்கோடி முனையே யாகும். எனவே சிலப்பதிகாரம், சிவதருமோத்தரம், தொல்காப்பியம் இவற்றின் கூற்றை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து, அழிவெய்திய 49 நாடுகளும், இலங்கையும் சேர இந்தியாவோடு இலங்கை ஒன்றாயிருந்த காலத்து குமரி நாடெனப் பெயர்கொண்ட பெருநாடு ஒன்று இந்துமாக் கடலுள் இருந்ததென்பதே உண்மையாகும்.

குமரி நாடு இந்துமாக் கடலுள் பரந்து இருந்ததென்பதையும், அது கடற் பெருக்கினால் கடல் வாய்ப்பட்டு சிதைந்து பல தீவுகளாகவும் இடையிடையே சிறு கடல்களாகவும் உரு மாறினதென்பதையும் அதனால் இந்தியாவினின்றும் இலங்கை துண்டிக்கப்பட்டதென்பதையும் வரலாற்றாசிரியர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

ஆகவே குமரி நாட்டின் பெரும்பகுதி அழிந்து குமரிக்கோடும் கடல்வாய்ப்பட்ட பின்னர் எஞ்சிய பரந்த நிலப் பரப்பையுடைய இந்தியாவின் தென்கோடி முனையை ஞாபகார்த்தமாகப் பின்னுள்ளோர் குமரி எனக் கூறிவரலாயினர் என்பது போதரும். குமரி மலையின் அதி உயர்ந்த பகுதியே ஈழ நாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்ற சிவதருமோத்தரம் குறிப்பிடும் மகேந்திர மலையேயாகும். இம் மகேந்திர மலையின் தென்கோடியில் ஈழநாட்டின் தென்னந்தத்தில் இருந்த சூரனது அரசதானி மகேந்திரபுரி என அழைக்கப்பட்டமையும் அதனாலன்றோ?

ஆதலின் குமரிநாடு இருந்த காலத்தில் அக் குமரிநாட்டில் இருந்த ஓர் உள்நாடே ஈழம் என்னும் பெயரோடு இருந்ததாக வேண்டும். சிவதருமோத்திரக் கூற்றே அதனை வலியுறுத்துகின்றது. குமரிநாடு கடல்வாய்ப்பட்ட போது ஈழம் தனித் தீவாக மாறியது. ஆகவே ஈழநாட்டின் மேல்ஓங்கிநின்ற மலையடுக்குகள் குமரி மலையின் பகுதிகளே என்பது தெளிவு. குமரி மலை பல மலை அடுக்குகளைக் கொண்டதெனச் சிலப்பதிகாரம் கூறுகி;ன்றது. சிவதருமோத்தரம் மிகவும் தெளிவாக மகேந்திரமலையின் அடிவாரத்தே பொன்மயமான இலங்கை உள்ளது” எனக் கூறுகின்றது.

கடற் பெருக்கினால் குமரி நாடு அழிவெய்திய ஞான்று அந்நாட்டின் தாழ்வான பகுதிகளே கடலாதல் நேரிடும். எனவே ஈழநாட்டில் உள்ள சிவனொளி மலை ஆதியாம் மலைகளே குமரிமலையின் அதி உயர்ந்த பகுதி என்பது புலனாகிறது.

ஓர் குமரிக் கோட்டினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றின் படுக்கையே தற்போதிருக்கும் பாக்கு நீரிணையின் ஆழமான நடுப்பகுதியாக அமையலாம். அப்பஃறுளியாற்றின் இரு கரை மருங்கும் இருந்த செழிப்புற்ற நாடுகளே கடலுள் அமிழ்ந்திய 49 நாடுகளாகும். ஈழத்தின் வடகோடி பாக்குநீரிணையின் கரையோரமாக இருப்பதே கீரிமலை என அழைக்கப்படும் குன்றும் நன்னீருற்றும் கொண்ட புண்ணிய தலமாகும். இதன் பழமைக்கு காலவரையறை இன்று. எனவே பாக்குநீரிணையின் நடுப்பகுதி குமரியாற்றின் நடுப்பகுதியாக அக்கடலின் வட கரையில் பிரசித்தி பெற்ற பொதியமலைச்சாரலும், திருக்குற்றாலமும், அக்கடலின் தென்கரையில் பிரசித்தி பெற்ற பழமையான கீரிமலைக் குன்றும் சிவனாயலமும் இன்றும் காட்சியளிப்பது காண்போம். ஆதலின் இளங்கோவடிகளால் சுட்டப்பட்ட குமரிக்கோடு பண்டைக்காலத்தில் கடல்கோட்படுவதற்கு முன் தெய்வீகம் நிறைந்த ஒர் இடமாக இருந்திருக்க வேண்டும். அழிவெய்திய குமரிக்கோட்டில் குமரித்தெய்வம் குடிகொண்டு அருள்பாலித்திருக்க வேண்டும். குமரிக்கோடு கடலுள் அமிழ்ந்தியபின் அம் முனைப் பகுதியில் குமரி அம்பாள் வழிபாடு நடைமுறையில் வரலாயிற்று என்பதே உண்மையாகும். அம் முனைப் பகுதியில் அம்பாள் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்றோ.

இனிக் குமரி என்னும் சொல் பற்றி ஆராய்வாம். குமரி என்பது தமிழ் மொழி. இதனைக் கற்றோரும் மற்றோரும் நன்கறிவர். இம் மொழி பெண்பாலரின் வாலைப் பருவத்தைக் குறிக்கும் ஒர் அழகிய சொல். கன்னி என்பதும் அப்பொருட்டே. குமரி என்பது தமிழ்மொழி. எனவே அப்பெயர் கொண்ட நாடும் பிறவும், தமிழ் நாடும் அதன் பகுதிகளுமாம் என்பது கூறவேண்டியதில்லை. இனி அப்பெயர் சூட்டி அழைத்த காரணத்தை அறிவாம்.

தமிழ் மக்களின் கடவுட் கொள்கை சிவ வழிபாடே. சிவ வழிபாடெனவே சக்தி வணக்கம், விநாயக வணக்கம், முருகன் வணக்கம் ஆகியவையும் சிவ வழிபாட்டுக் கோட்பாடே. அவற்றுள் சக்தி வழிபாடு, தத்தமது வாழ்க்கையில் தாம் வேண்டும் வாழ்க்கைப் பேறுகளைப் பெற்று நல்வாழ்வு பெறுதற்கு அநுகூலமானது. இதனால் சக்தி வழிபாடும் தமிழ் நாட்டில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அவ்வியல்பினை இன்றும் தமிழ் மக்களிடையே காணலாம். சக்தி வாழிபாட்டில் சிறந்த நோன்புக் காலம் நவராத்திரி காலமாகும். பெரும்பான்மையும் பெண் மக்களே சத்தி வாழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

விநாயக, முருக வணக்கமும் மேற்போந்த சக்தி வழிபாடே போன்று இகபர சுகங்களை வேண்டியவாறு பெற்று நல்வாழ்வு பெறுதற்கு வேண்டப்படுவதாகும். சிவ வழிபாடு உலகப் பற்று நீங்கி வீடுபேறு மாத்திரம் கருதிய உயர் நிலையாளரிடத்தே கைக்கொள்ளப்படுவது இன்றும் என்றும் அவ்வாறே. நாயன்மார் நால்வர். சித்தர்கள், முனிவர்கள், பட்டினத்தார், தாயுமானவர் முதலிய ஞானவான்களின் வாழ்கையே சான்றாகும்.

ஆன்ம கோடிகளின் மாதாவாகிய சத்தி, சேய்க்குத் தாய் போன்று ஆன்ம கோடிகளுக்கெல்லாம் அவரவர் பக்குவம் அறிந்து போக போக்கியங்களை ஊட்டி வாழ்க்கையில் உலக இன்பங்களைத் துய்ப்பித்து பின் பசி தணிந்தவர்க்கு உணவில் வேட்கை செல்லாதவாறுபோல உலகப் பற்று நீங்கிப் பரிபக்குவ நிலையடைய அத்தருணத்தில் பரம பிதாவாகிய சிவனை சுட்டி உணர்த்திக் காட்டி சிவ வழியில் நிலைக்கச் செய்யும்.

“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சத்தி
பின்னமில்லான் எங்கள் பிரான்”

ஆதலின் சக்தி வாழிபாடு எல்லோராலும் மிகுதியும் வேண்டப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பாலும் தமது உலக வாழ்வில் இட்ட சித்திகளைப் பெறும் நோக்கமாகச் சத்தி வாழிபாட்டையும் முருகன், விநாயகன் வழிபாட்டையுமே மேற்கொண்டு வந்தனர். ஆதலின் குமரிக் கோட்டில் (உச்சி) பண்டைக்காலத்தில் சத்தி வழிபாடே பிரசித்தி பெற்றிருந்தது என்பது புலனாகும். ஆங்கு குமரி அம்மனுக்கு ஆலயம் இருந்திருக்க வேண்டும். அவ் வழக்கே இன்றும் குமரியில் அம்பாள் வணக்கம் இருந்து வருவதற்குக் காரணமாகும்.

சிவ வழிபாட்டில் இளமையும், அழகும் ததும்பக் காட்டும் அழகிய கருத்துப் பொதிந்த சொல் முருகன் என்பது. எனவே இறைவனை என்றும் இளையவனாகவும் அழகெல்லாம் ஒருங்கே திரண்டு முற்றிய ஒருவனாகவும் கருத்திற் கொண்டு முருக வழிபாட்டைக் கைக்கொள்வாராயினர். அவ்வாறே சத்தி வழிபாட்டில் பெண்மையின் கோலமும் பெண்மையின் ஒப்பிலா அழகும் ஒருங்கே அமையக் காட்டும்இளமைப் பருவச் செவ்வையை முற்ற உணர்த்தும் சொல்லே குமரி என்பது.

மக்கள் எவராயினும் இளமையும், அழகையும் விரும்புவாரன்றோ? அவை இரண்டையும் விரும்பாதார் யாரும் உளரோ? பண்டைத் தமிழ் மக்கள் கடவுள்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும், அன்பினாலும் தம்மை எல்லாம் காத்து அருள் செய்யும் கருணை வள்ளல் கடவுள் ஒருவரே என்ற அசையாத உணர்ச்சிப் பெருக்கினாலும் கடவுட் பெயர்களையே தமக்குப் பெயராகவும் வைத்து என்றும் கடவுள் ஞாபகத்தோடேயே வாழ்ந்தார்கள். அம்மரபில் உலகை ஈன்று அளிக்கும் உலக மாதாவாகிய சத்தியை என்றும் குன்றாத இளமையும் அழகும் பொலிந்து காட்டும் குமரி என்னும் சொல்லால் அழைத்து அப் பெயரையே தம்மை எல்லாம் தாங்கி உணவூட்டி அளித்து இகபர சுகங்களைத் தரும் பூமி தேவியாகிய தாய்க்கும் சூட்டி வழங்கி வரலாயினர் என்பது சாலவும் பொருத்தமானதே. பூமியைப் பெண்ணாகவே உருவகித்து வழங்கி வந்தமை, பண்டுதொட்டு தமிழரின் தொன்று தொட்ட மரபாகும். அதனால் பூமிதேவி என்றும். நிலமகள் என்றும் தாய்நாடு என்றும் கூறுவரன்றோ? அன்றி வேறு எக்காரணமும் கூற இடமின்றி@ ஏற்புடையதுமாகாது.

இனிச் சில வரலாற்றாசிரியர்கள் கருத்தினை இங்கு தருவோம். தற்போது இந்தியாவின் தென்பாலுள்ள இந்து மாக்கடலுள் இந்தியா, இலங்கை உட்பட ஓர் பெருந்தரைப்பாகம் இருந்ததென்றும், அதனை லெமூரியாக் கண்டம் (குமரிநாடு அல்லது குமரி கண்டம்) என்றும் அது கடல் கோளினால் கடல் வாய்ப்பட்டு மறைந்துவிட்டதென்றும்;, எஞ்சிய பகுதியே இந்தியாவும், இலங்கையும், ஏனைய தீவுகளுமாம் என்றும், அங்கேதான் மக்கள் குலங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக மக்கட் பெருங் குழுவினர் தோன்றியிருந்தார்கள் என்றும், அவர்கள்கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறம் உள்ளவர்களாக இருந்தார்களென்றும் எச்.ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூறுவார்.

ஆதிமக்கள் இலங்கையிலேதான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கெரஸ் பாதிரியார் கருத்து என்பதனை முன்னர் காட்டியுள்ளாம். இனி ஏச். சி. உரோலின்சன் எழுதிய இந்தியர் பண்பாட்டு வரலாற்றுச் சுருக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் கி. மு. 1500க்கு முன் உச்சநிலை அடைந்திருந்ததென்றும், கி. மு. 1500க்குப் பின் அதன் நாகரீகம் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்றும் அவ்விரு நாட்டு மக்களும் கொள்ளையர்களால் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்கள் என்றும், அவ்வாறு கொள்ளையடித்தோர் ஆரியராய் இருத்தல் வேண்டும் என்றும், அவ் விரு நாடுகளிலும் சிவ வழிபாடே இருந்ததென்றும், பெரிது அன்னை வணக்கமே கைக்கொள்ளப்பட்டு வந்ததென்றும், சிந்துநதியைச் சூழ்ந்த நாட்டைப் பேர்சியர் இந்தியா என்று அழைத்தனர் என்றும், அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியர், இந்துக்கள் என அழைக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூற்றில் இருந்து பல உண்மைகள் சந்தேக விபரீதம் இன்றி வலியுறுத்தப்படுகின்றன. என்னை? இலங்கை உட்பட இந்தியா இமயமலை பரியந்தம் முழுமையும், தமிழ்ப் பழங்குடி மக்களே வாழ்ந்தார்கள் என்பதும், அங்கெல்லாம் ஒரே சிவ வழிபாடே இருந்ததென்பதும், அதிலும் சக்தி வணக்கமே மேலோங்கி இருந்ததென்பதும், ஆரியர்கள் கி. மு. 1500 – 1600 வரையில் இந்தியாவுட்குட் புகுந்தது உண்மையே என்பதும், அவர்கள் அங்கு வாழ்ந்த தமிழ்ப் பழங்குடி மக்களை கொள்ளையடித்தும், கொன்றும், அடாத்தாகக் கங்கைக் கரையோரப் பக்கங்களில் குடியேறினார்கள் என்பதும், அதனால் தமிழ் மக்கள் தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையே.

வேதகாலமும் ஆரியர் வருகையோடு தொடங்கியதேயாகும். இனக் கால ஒப்பீட்டை நோக்குவோம். இன்று கலி 5088 நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கி. மு. 1500க்கு முன் தமிழர் நாகரீகம் உச்ச நிலை அடைந்தும், பின் வீழ்ச்சி நிலை அடைந்தும் வந்திருக்கிறது. எனவே கி. மு. 1500 என்றால் கலி 1600ஆகும். அஃதாவது இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். 5088 (1500 + 1988) இக்காலம் தென்னாட்டில் இடைச் சங்கம் நிகழ்ந்து கொண்டிருந்த காலமாகும். எனவே தலைச்சங்கம் இருந்த காலம் இலங்கை உட்;பட இமயமலை பரியந்தம் தமிழர் உச்சநிலையடைந்திருந்த காலம் என்பது எச். ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூற்றால் தெளிவாக அறியக் கிடக்கின்றது. எனவே வரலாற்றுக் கெட்டியவரையில் சூரன் ஆட்சிக்காலம் தொடக்கம் அஃதாவது துவாபரயுக இறுதி சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உள்ள கால இடைவெளியிலும் தமிழர் நாகரீகமே உச்சநிலை அடைந்திருந்த காலமாகும் என்பதும் தெளிவாகிறது. எனவே தமிழர் நாகரீகம் சீருற்றிருந்த உச்ச காலம் சூரன் ஆட்சிக் காலமும், தலைச்சங்க காலமும் (அகத்தியர் காலம்) இடைச்சங்க காலமும் ஆகும். சூரன் ஆட்சிக் காலம் எலியட் பண்டிதர் கூறும் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே குமரிக்குத் தெற்கே முன் ஒன்றாய் இருந்து பிரிந்த இலங்கை தமிழ் நாடே. அதைத் தமிழர்நாடு அல்ல எனக் கூற முடியுமா? முடியுமானால் அது எந்த மொழி வழங்கிய நாடு? கூறுமின்! ஆரியர் வருகை இமயம் வரை பரந்து வாழ்ந்த தமிழ் இனத்தைத் தெற்கு நோக்கி ஒதுங்கி வாழச் செய்தது அல்லவா? மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே குமரிநாடு அழிவுற்று 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டு பிரிந்தனவன்றோ? இந்தியா என்னும் பெயரும் அந்நாட்டின் பூர்வீக நாமம் அன்றே. இதனை ஏச். சி. உரோலின்சன் கூற்றே வலியுறுத்துகிறதல்லவா? இனி சுவாமி விவேகானந்தரும், இந்தியா, இந்தியர், இந்துக்கள் என்னும் பெயர் பேர்சியரின் வழக்கத்தில் இருந்து வந்ததே எனக் கூறியுள்ளார்.

குமரி நாடு கடல் வாய்ப்பட்ட பின்னும் ஈழம் இந்தியா வோடிணைந்து ஒரே நாடாய் இருக்கும். ஆனால் ஈழத்தின் தென்அந்தமே குமரி முனையாக அமையும். குமுரிக் கோயிலும் அங்கேயே காண்போம். ஏன்? குமரி மலையின் முடிபு ஈழ நாட்டின் தென் அந்தமே. இதன் விளக்கம் முன் கூறப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் கருத்தும் இதுவே. அவர்கள் மகேந்திரம் என்று கூறப்படும் குமரி மலைத் தொடர் தற்கால இந்தியாவின் மேற்கு மலைத் தொடரின் தெற்கே இருந்து ஆரம்பித்து, தெற்கு, தென் கிழக்காக ஈழநாட்டை நடுவாக ஊடறுத்துச் சென்று பின் மேற்காகச் சென்று மடகாஸ்கார் தீவுவரை சென்றதாகக் கூறுவார்கள். இக் கூற்றுக்கு ஆதாரமாக சூரனது ஆட்சி நகர் வீரமகேந்திரம் ஈழத்தின் தென் அந்தத்திலேயே இருந்து கடல் வாய்ப்பட்டதாக வரலாhறு கூறுகின்றது. குமரி மலைமீது அவனது நகர் அமைந்திருந்தமையினாலேயே மகேந்திரம் எனப்பட்டது. ஈழம் இந்தியாவினின்று பிரிந்தமையினால் இந்தியாவின் தென்னந்தம் குமரிமுனை எனப்பட்டது.

ஆகவே குமரி நாடு, குமரி; கண்டம் எனப்படுவது கடல் வாய்ப்பட்ட 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டாத ஈழமும், இந்தியாவும் அண்மையில் உள்ள ஏனைய தீவுகளும் அடங்கிய பாரிய நிலப்பரப்பைக் குறித்த பூர்வகாலப் பெயராகும் என்பது தெளிவு.

இவ் வரலாற்றுண்மையை இன்னும் தெளிவாகச் சிந்தனை செய்துபார்ப்போம். இந்தியா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் இதுதானா அந்த நாட்டின் பெயர் என நாடினால் இல்லை என்று எளிதாகவிடை காண்போம். இச் சொல்லாட்சியைப்பண்டைத் தமிழ் நூல்களுள் யாண்டும் கண்டிலேம். இது பிற்கால வழக்கு இவ்வழக்குப்பற்றி முன்னர் கூறினோம். பரத கண்டமோ எனின் அஃது ஆரிய மொழி, எனவே அப் பெயர் ஆரியர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட பெயராகும். ஆதலின் இப் பெயர்கள் வருவதற்கு முன்னர் அந்தநிலப்பரப்பைக் குறிக்கும் ஓர் பெயர் இருந்தேயாக வேண்டும். அதுவும் தமிழ் மொழியாதல் வேண்டும். ஏன் ஆரியர் வருகைக்கு முன் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடங்கித் தமிழ் நாடாகவும், தமிழ் மொழி தோன்றி லழங்கிய நாடாகவும் இருந்த காரணத்தினால் தமிழ்ப் பெயராகவே அமைய வேண்டும். ஆனால் இந்நிலப்பரப்பைக் குறிக்கும் தமிழ்ப்பெயர் குமரியைவிட வேறொன்று இருந்ததாக அறிய முடியவில்லை. ஆனால் இந்தியாவை நாவலந் தீவெனக் கூறும் ஓர் வழக்குண்டு. அதைப் பற்றி ஆராய வேண்டும்.

ஆதலின் தமிழ் நிலம் முழுமையும் கடல் கோட்கு முன்னர் குறிக்கும் பெயர் குமரி நாடென்பதே. ஆனால் குமரி நாடெனப் பெயர் கொண்டிருந்த அக்காலத்தில் நாட்டின் உட்பகுதிகளைக் குறிக்கும் பெயர்கள் வழக்கில் இருந்ததுண்டு. அப் பெயர்கள் பல இன்றும் வழக்கில் இருக்கலாம். அவை எவையென ஆராய்ந்து காணவேண்டும். ஆனால் ஈழம் என்பது அத்தகைய, அஃதாவது குமரி நாடு இருந்த காலத்தில் அதன் ஒர் உள்நாட்டுப் பகுதியைக் குறிப்பிட்டு வழங்கிய ஓர் உள்நாட்டுப் பெயரேயாகும். இதனை சிவதருமோத்தரம் தெளிவாகக் சுட்டி உணர்த்துகின்றது. இதன் விளக்கம் முன்னர் கூறப்பட்டது.

குமரிநாடு அழிவெய்திய பின்னர் இந்தியா, இமய மலை பரியந்தம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆட்சிபண்ணப்பட்டு வந்தது ஏன்? கடல் கோட்கு முன்னரும் இந்தியா நிலப்பரப்பை அவர்களே ஆட்சி செய்திருக்க வேண்டும். பின்னர் ஆரியரின் நெருக்கடியால் அவர்களின் ஆட்சிப்பரப்பு தென்பகுதியாகச் சுருங்கியது வடபகுதியில் ஆரியர் குடியேறித் தமது ஆட்சியில் கொண்டுவந்தனர். சேர, சோழ. பாண்டியர் என்ற குடிப்பெயர், படைப்புக் காலந்தொட்டு வழங்கிய பழங்குடி மக்கள் என்றே உரையாசிரியர்கள் கூறுவார்கள். எனவே அப் பெயரின் தொன்மையும் பெயர்க் காரணமும் புலப்பட்டில எனக் கூறுவர். இதனாலும் தமிழரின் தொன்மை நன்கு புலனாவதோடு குமரி நாடு அழவெய்த முன்னரும் இம் முக்குடி மன்னர் ஆட்சி இருந்ததென்றே கொள்ள வேண்டும்.

சேர மன்னர்கள் கன்னியாகுமரி தொடக்கம் மேலைக் கடற்கரை ஒரமாகத் திபெத்துவரை ஆட்சி புரிந்தார்கள் என வரலாறு கூறுகின்றது. அதற்காதாரமாக சேர மன்னர்கள் இமய வரம்பன் என்றும், வான வரம்பன் என்றும் பட்டப் பெயர் பூண்டு இமயம், தீபெத்து வரை ஆட்சி புரிந்தமையை அப் பெயர்கள் தெளிவாக சுட்டி உணர்த்துகின்றன.

இனி, நாடு இந்தியா எனப் பெயர் எய்திய காலத்து அதன் தென்பாலுள்ள கடலும் இந்துமாக்கடல் என வழங்கப்படுதல் போல பண்டைக்காலத்துக் குமரி நாட்டின் தென்பாலுள்ள கடல் குமரிக்கடல் என சிலர் எல்லை கூறுதலும் உண்டு.

இனி குமரி என்ற சொல் தமிழ்மொழி தானா என்பதனைச் சந்தேக விபரீதமற தெளிவாக அறிவாம். மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகம் உச்ச நிலையடைந்து மக்கள் வாழ்ந்த காலம் கி.மு. 1600க்கு முன்னாகும். கி. மு. 1600 வரையிலேயே ஆரியர் என ஒரு வகுப்பார் கைபர் கணவாய் வழியாக இந்தியாவினுட் புகுந்து குடியேறினர் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு. ஆரியர் வருகைக்காலம் இலங்கையும் இந்தியாவும் இரு வேறு நாடுகளாகவே இருந்தன. எனவேஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டது குமரி நாடாதலின் குமரி என்னும் சொல் அந்நாட்டு மொழியினின்றும் தோன்றிய சொல்லேயாகும். அந்நாட்டு மொழி தமிழ் என்பதும், வாழ்ந்தோர் தமிழர்களென்பதும் முன்னரே விளக்கியுள்ளாம். ஆதலின் முன்னிருந்த நாட்டுக்கும், பின் வந்து குடியேறியவர்கள் பெயர் சூட்டினார்கள் என்பது பொருந்துவதன்று. சரி ஆரியர்களால் அழைக்கப்பட்ட பெயர்தான் குமரி என்றால் இவர்கள் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பிரபல்யம் உற்றிருந்த ஒரு நாட்டுக்கு முன்னிருந்த பெயர்யாதோ? ஆதலின் அக் கூற்று எவ்வாற்றானும் பொருந்துவதன்று. அஃது தந்தைக்கு மகன் நாபகரணம் செய்தான் என்பது போலாம். ஆதலின் குமரி என்னும் சொல் தூய தமிழ் மொழியாகும்.

இனி, இமயமலை பரியந்தம் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்கும் குமரி என்ற சொல் தமிழர் வழக்கே என்பதற்கும் இந்தியா என்ற பெயரே சான்றாகும். இமயத்தில் இருந்து ஆறுகள் ஊற்றெத்துப் பாய்கின்றன. அவற்றுள் ஒன்று சிந்து நதி. சிந்து என்பது தூய தமிழ் மொழி. அச் சொல் ஆற்றையும் கடலையும் குறிக்கும் கருத்துடையது. எனவே சிந்து நதிப் பக்கம் வாழ்ந்த பண்டைக்காலத் தமிழ் மக்கள் அவ்வாற்றைச் சிந்து நதி எனப் பெயரிட்டு அழைக்கலாயினர் பிற்காலத்தில் அச்சிந்து என்ற தமி;ழ் மொழியை பாரசீகர் தமது உச்சரிப்பு முறையில் ஹிந்து என்று அழைக்கலாயினர். அதனால் அவ்வாற்றின் பக்கம் வாழ்ந்த மக்களை அவர்கள் ஹிந்துக்கள் என்றே அழைத்தனர் ஹிந்து என்னும் சொல் தமிழ் மொழி மரபின்படி இந்து என்றாகும். எனவே மக்கள் இந்துக்கள் என்றும், நாடு இந்தியா என்றும், சமயம் இந்து சமயம் என்றும், யாறு இந்து நதி என்றும், கடல் இந்து சமுத்திரம் என்றும் வழங்கி வரலாயிற்று என்பதே வரலாற்று உண்மையாகும். எனவே சிந்து என்னும்தமிழ் மொழி வாயிலாகவே பாரசீகர் மூலம் அப்பெயர்கள் வரலாயின என்பது கண்டாம்.

இவ்வாறானால் நாட்டுக்குரிய பழைய பெயர் என்னையோ? பாரசீகரால் சூடப்பட்ட பெயர் தானா? ஆரிய மொழியில் உள்ள பெயர்கள் யாவும் ஆரியர் வருகைக்குப் பின்னர் எற்பட்ட பெயராகும். எனவே இந்நாட்டிற்குரிய தமிழ்ப் பெயர் என்னையோ?

மக்களினம் உற்பத்தியான இடம், அவர்கள் வாழ்ந்த பூமி, பல்வேறு இடங்களுக்கும் சென்று பரவுவதற்கு ஊற்றிடமாய் இருந்த நாடு, இவை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டவை. ஆதலின் இந்தியாவைக் குறிக்கும் பழைய பெயர் குமரி என்றே எண்ணிக்கிடக்கின்றது. இதைவிட நாவலந்தீவு என்ற வழக்கும் இருந்திருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற குடிப்பெயர்களும் குமரி நாட்டுக்கால வழக்கென்றே கருத வேண்டியிருக்கிறது.

ஆதலின் குமர நாடு இந்துமாக் கடலுள்பரந்த ஒரு நிலப்பரப்பை அடக்கிய ஒரு கண்டம் என்பதும் அக் குமரி கண்டத்தில் பல்லாயிரக்கணக்கான உள்நாடுகள் வேறு வேறு தனித் தனிப் பெயரால் அழைக்கப்பட்டிருந்தன என்பதும் அப் பெயர்களில் பெரும்பாலானவை இன்னும் வழக்கில் இருக்கலாம் என்பதும் உய்த்துணர்வார்க்குப் புலனாகும்.

இனி கர்ண பரம்பரைக் கதைகளைப் பொய்யெனத் தள்ளுதலும், கட்டுக் கதை என எள்ளுதலும் ஆகாது ஏன்? பண்டைக்காலத்தில் நூலாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வேறு கற்றமைந்த சான்றோர்கள், முனிவர்கள், அடியார்கள் ஆன்மீக நலன் கருதியே வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டியும், தாம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியும் வாழ்ந்தார்கள். இதுவே மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என உணர்ந்தார்கள்@ உணர்த்தினார்கள். அவர்கள் ஞானம் நூற் குறிப்புகளாலும், உலக நோக்கினாலும். கேள்வியாலும், சிந்தித்துத் தெளிதலாலும் விருத்தியடைந்தது. அச்சுப் பொறி சுமார் 15ம் நூற்றாண்டிலேயே வந்ததாகும்.

எனவே அக் காலக் கல்விமுறை செவி வாயிலாகக் கற்றலே. குரு, சீடர் முறையிலும், அறிவுப் பெரியோர் வாய்மொழி மூலமும். பெற்றார், சுற்றத்தார் ஆகியோர் உபதேசமுறையிலும் அறிய வேண்டிய யாவற்றையும் கற்று வந்தார்கள். மிகவும் முக்கியமான பகுதிகள் ஏட்டுச் சுவடிகளில் பொறிக்கப்பட்டன. அச்சுவடிகளும் செல்லுக்கிரையாகி அழிந்து போதலும் சகசம். அன்றிக் காலத்துக்குக் காலம் கடற்பெருக்கினால் அழிந்தனவும் பல. பெரும்பாலும் வரலாறுகள் கேள்வி மூலமே போற்றப்பட்டு வந்தன. ஆதலின் கர்ணபரம்பரைக் கதைகளில் பெரும்பாலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆதலின் கர்ணபரம்பரைக் கதைகளைப் போற்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டும்.

குறும்பனை நாடு முதல் 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. இதனைத் தென்னிந்திய வட இலங்கையின் இயற்கை அமைப்புப் புலப்படுத்துகின்றதன்றோ? இந்தியாவின் தென்பகுதியிலும் இலங்கையின் வடபகுதியிலும் இன்றும் இயற்கைத் தாவரம் பனையாகவே இருக்கிறது. அழிவுற்ற நாடுகளுள் குறும்பனை நாடும் ஒன்றல்லவா? பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் இன்றும் பனையே இயற்கைத் தாவரமாகச் செழித்து வளர்தலையறிக. இதனாலும் இந்தியாவும் ஈழமும் ஒன்றாயிருந்து பிரிந்த நாடுகளே என்பது தெளிவு.

அன்றியும் இரு நாட்டு மக்களினது உருஅமைப்பு, உடை, நடை, பாவனை, வாழ்க்கை முறைகள், கடவுட் கொள்கை யாவும் ஒன்றே. சிவ வழிபாடும், சக்தி வழிபாடும், விநாயகர் வழிபாடும், முருகன் வழிபாடும், திருமால் வழிபாடும் ஈழத்தின் தென்அந்தம் தீவாந்தர முனை தொடக்கம் இமயமலைப் பரியந்தம் வரலாற்றுக் கெட்டாத காலம் தொடக்கம் ஒரே தன்மையாகவே இருந்துவருதலை அறிவோம். ஈழ நாட்டிலே வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் சிவன், விநாயகன், முருகன், சக்தி, திருமால் வழிபாட்டுக்குரிய ஆலயங்களும் இன்றும் இருந்துவருகின்றனவன்றோ? இவ் வழிபாட்டு முறைகளில் புத்தம், கிறீஸ்தவம், இஸ்லாம் வருகையால் மக்களிடையே இடைக்காலத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதாயிற்று. அன்றி ஈழநாட்டுக் கடவுட் கொள்கை அன்றுபோல் இன்றும் நிலவி வருகின்றது.

ஈழநாட்டின் வடகோடியில் கீரிமலைத் தீர்த்தம் உள்ளது. அதன் பழமை அறிய முடியாதது. கீழைக் கரையில் கோணேஸ்வரம், வெருகல், வல்லிபுர ஆழ்வார் கோயில் முதலாக பல தலங்கள் உள்ளன. தென் கோடியில் கதிர்காம முருகன் ஆலயம் இன்றும் பிரபல்யமாக விளங்குகிறது அன்றி ஈழத்தின் தென்கோடியில் ஓர் பழமையான சிவனாலயமும், அம்பாள் ஆலயமும் மறைந்து மங்கிவிட்டன மேல் கரையில் திருக்கேதீச்சரம், முனீஸ்வரம் ஆகிய சிவாலயங்கள் காலத்தைக் கடந்து காட்சியளிக்கின்றன. மத்தியில் தற்காலம் எல்லா மதத்தினராலும் போற்றப்படும் சிவனொளிபாதமலை உள்ளது. இதுவும் கால எல்லைக்கு அப்பாற்பட்டது. இம் மலை குமரி மலைத் தொடரில் ஒரு கூறாவதுமன்றி குமரிமலைத் தொடரில் அதி உயர்ந்தபகுதியுமாக இருந்தாக வேண்டும். இதன் பழமையும், பெருமையும் அறியமுடிகின்றது. திருமூலர் ஈழநாட்டைச்சிவபூமி என்றே கூறுவர். அவர் கூற்றை இன்னும் சுட்டி உணர்த்துவது இந்தச் சிவனொளிபாதமலையே. இங்கேயே நான்கு முனிவர்களுக்கு சிவபெருமான் ஆகமப் பொருளை உபதேசித்திருக்க வேண்டும். விளக்கம் பின்னர் கூறப்படும்.

இனிச் சிவதருமோத்தரம் என்னும் உபாகமம் பொதிய மலைக்குத் தென்பால் மகேந்திரம் என்ற மலை இருந்த தென்றும், அதன் அடிவாரத்தில் பொன்மயமான இலங்கை இருந்ததொன்றும் கூறுகின்றது. மகேந்திரமலையின் அடிவாரத்தில் பொன்மயமான இலங்கை இருந்ததென்பதால் இலங்கையை ஊடறுத்து வானளாவி உயர்ந்து பரந்து பல அடுக்குகளை உடையதாக இருந்ததென்பது பெறப்படும். ஈழம் என்ற பெயர்க் காரணத்தைச் சிவதருமோத்திரம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது என்னை? ஈழம் என்ற சொல்லின் சிறப்புடைப் பொருள் பொன் என்பது சிவதருமோத்திரம் பொன்மயமான இலங்கை எனக் கூறுவதால் அக் காரணம் பற்றியே அந்நாட்டுக்குப் பண்டைக்கால மக்கள் ஈழம் என பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பது பெறப்பட்டது.

சிவதருமோத்தரம் ஈழம் எனக் கூறாது இலங்கா எனக் கூறியிருப்பது ஏன் என்ற சந்தேகம் உண்டாகிறதன்றோ? ஆம், சிவதருமோத்தரம் ஈழம் என்ற சொல்லை லங்கா என்றே கூறவேண்டும். ஆதலின் லங்கா, ஈழத்தின் மொழி பெயர்ப்பேயன்றி வேறன்று. இதுபற்றிய விளக்கம் பின்னர் கூறப்படும்.

ஈழம் மலையடிவாரம் ஆதலின் பொன் மிகுதியாக இருந்த காரணத்தினாலே, அன்றிப் பொன் கொழிக்கும் வாய்ப்புள்ள நாடு என்ற காரணத்தினாலோ பொன் நாடு என்னும் பொருள் கருதி பண்டைத் தமிழர் ஈழம் எனப் பெயரிட்டு அழைக்கலாயினர் என்பதே வரலாற்று உண்மையாகும். ஆனால் இவ்ஈழம் என்ற பெயர் குமரி நாடிருந்த காலத்தில் வழக்கில் இருந்த பெயர் என்பதை நினைவில் உறுத்த வேண்டும். சிவதருமோத்தரச் செய்யுள் வருமாறு:-

“துங்கமலி பொதியத் தென்பால் தொடர்ந்த அடிவாரத்தில்
அங்கனக லங்கையு மேழ்வரைச் சாரலடித்தே” என்பது.

எனவே இதுவரை நாம் அறியக் கூடிய உண்மைகள் இவையாகும் குமரி நாட்டில் தமிழராகிய ஒரின மக்களே வாழ்ந்தார்கள் என்பதும், உலகில் மக்கள் கூட்டத்தின் ஆதிப்பிறப்பிடம் குமரி நாடே என்பதும், அவர்களே மக்கள் நாகரீகத்துக்கு முன்னோடிகளாய் இருந்தனர் என்பதும், சிவழிபாடே அவர்களின் கடவுட் கொள்கை என்பதும், கடல்கோள் காரணமாக குமரிநாடு அழிவுற்றுச் சிதைந்தது என்பதும், அப்பொழுது ஈழமும் இந்தியாவும் பிரிந்து வேறு வேறு நாடாயின என்பதும், ஆரியர் வருகையால் தமிழினம் சிதைந்து சிறுமை எய்தினர் என்பதும் அன்றி ஒரு பகுதியார் ஆரியரோடு கலப்புற்று ஆரியர் ஆயினர் என்பதும், தமிழ் இனம் தென் பகுதிக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் ஆரியர் வருகையால் பல இன, பல மொழிப் பாகுபாடுகள் ஏற்பட்டன என்பதும், ஈழம் என்னும் சொல் லங்கா என மொழிபெயர்க்கப்பட்ட தென்பதும், அவ் லங்கா தமிழ்மரபின்படி இலங்கை என உருத் திரிந்தது என்பதும் ஆகவே லங்கா, இலங்கை என்ற பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட பெயர் என்பதும் வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்ளக் கூடிய சந்தேக விபரீதம் அற்ற மறுக்க முடியாத பேருண்மைகளாகும்.

இக் குமரிநாட்டைப் பூதத்துவ நூலார் “காண்டுவபூமி” எனவும், ஐரோப்பியர் “லெமூரியாக் கண்டம்’ என்றும் அழைப்பர். இக் குமரி நாடு தென் அமெரிக்காவில் இருந்து ஒளஸ்திரேலியா வரையும் விந்திய மலையில் இருந்து தென் கடல் வரையும் பரவியிருந்ததாக ஆய்வாளர் கூறுப.

2. ஈழமும் வரலாறும்

ஈழத்துக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன என முன்னர் கூறினாம் அவற்றுள் ஈழம் என்ற பெயரும். மணிபல்லவம் என்ற பெயரும் தவிர்ந்த ஏனைய பெயர்கள் வடமொழியாளராலும், அராபியராலும். ஐரோப்பியராலும் வழங்கப்பட்ட பிற்பட்ட வழக்காகும்.

இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளில் ஆரியர் வருகைக்குப் பின்னரோ? அன்றி முன்னரோ தமிழர் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறினர் என்றோ? தமிழரை விட வேறுமொழியாளர் அங்கு வாழ்ந்தனர் என்றோ கூறுவதற்கு உண்மையான ஆராய்ச்சி முடிபோ, வரலாறோ வேறு எவ்வித ஆதாரமோ யாதும் இன்று. இதனை எவரும் களங்கமற ஒப்புக் கொள்வர்.

இனி ஈழம் என்ற சொல்லைப்பற்றி ஆராய்வாம். இச் சொல் ஒலிவடிவினாலும் பொருட் தன்னையிலும் ஓர் தனித்துவம் உடையதாகச் சிறந்துவிளங்குகின்றது. ஈழம் தூய தனித் தமிழ்ச் சொல். காலத்தால் மிக மிகப் பழமையுடைய சொல். குமரி நாடிருந்த காலத்தில் அந்நாட்டில் ஒர் உள்நாட்டைக் குறிக்கும் பெயராக இருந்ததாக வேண்டும். தமிழுக்குச் சிறப்பு ஒலியாக உள்ளதும், ஏனைய உலக மொழிகள் எவற்றிற்கும் இல்லாததுமாகிய “ழ”கர ஒலியைத் தன்னகத்தே கொண்டது. ஈழம் என்ற சொல் தரும் பொருள் பொன், கள் என்னும் இரு பொருள்களுமாகும். இப்பொருள் இரண்டையுமோ அன்றி மிகுதியும் சிறப்பும் நோக்கி ஒன்றையோ கருதி அதனை எவரும் எளிதில் உணரத்தக்கதாக ஈழம் எனப்பெயரிட்டு அழைக்கலாயினர். இச்சொல் இன்று திரிசொல்லாகி அரிதுணர் பொருளதுவாய், அகராதிச் சொல்லாய் கற்றோர் மாத்திரம் அறியத்தக்கவகையில் வழக்கு அருகி விட்டது. காரணம் வழக்கு வீழ்ந்தமையே, வழக்கு வீழ்ந்தமைக்குக் காரணம் “லங்கா” என உருமாறி லங்கா இலங்கையென வழங்கப்பட்டமையே.

இனி, ஈழம் சிவதருமோத்தரத்தில் கனகமயமான இலங்கை என்றும், அது மகேந்திரமலையின் அடிவாரத்தில் உள்ளது என்றும் கூறப்படுகின்றது. எனவே அம்மலை அடிவாரத்தில் பொன் மிகுதியாகக்காணப்பட்டது என்பது போதரும். பொன் ஈழநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகப் பழைய விவிலிய நூல் கூறும். விவிலிய நூலில் “ஓவிர் தேசத்தில் இருந்து பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, தோகை கொண்டு வரப்பட்டன” எனக் குறிப்பிட்டிருக்கிறது. அக்காலத்தில் கடல் கடந்து வியாபாரம் செய்தவர்கள் அராபியர். இவர்கள் பழைய இலக்கியங்களில் யவ்வனர் என அழைக்கப்பட்டனர். ஒவிர் தேசம் என்பது மாதோட்டப்பகுதியைக் குறித்த பெயர் ஈழம் முழுமையையும் குறிப்பதாயிற்று. பண்டைக்காலத்தில் ஈழநாட்டின் சிறந்த பிரபல்யமான கடற்றுறைமுகம் மாதோட்டமே. இவ்விடம் சூரன் ஆட்சிக்காலம் தொடக்கம் நாகர் குலத் தமிழரின் வதிவிடமாய், ஆட்சி நகராய் பல்லாயிரம் ஆண்டு சீரும் சிறப்புமுற்று விளங்கியது. சூரன் மனைவி பதும கோமளையும் மாதோட்ட நாக அரசர் குலக் கன்னிகையே இராவணன் மனைவி மண்டோதரியும் மாதோட்ட அரசபரம்பரையைச் சேர்ந்த ஓர் அரச கன்னிகையே. எனவே சூரன்தொடக்கம் ஓர் சிறந்த அரசதானியாகவும் சிறந்த கடற்றுறைமுகமாகவும் விளங்கியதென்பது அங்கை நெல்லி. காந்தக் கோட்டையும் இங்கேயே அமைந்திருந்தது. இவ்வரச பரம்பரையினர் ஒவியக் கலையில் சிறந்த வல்லுனர்@ ஒவியக் கலையை வளர்த்தவர்கள் அதனாலேயே “ஓவிர்” தேசம் எனப்பட்டது. கால வரையறை இல்லாத திருக்கேதீச்சரம் என்னும் சிவாலயம் மாதோட்டத்திலேயே உள்ளது.

இன்னும் ஈழநாட்டிலுள்ள பொன்னாலை பொன்னாவெளி, பொன்னாலைக்கட்டுவன் என்னும் இடங்கள் பண்டைக்காலத்தில் பொன் அகழ்ந்தெடுத்த நாடுகளாகவும் இருக்கலாம். இவைகள் பழைய பெயர்களே.

இனி, ஈழம் என்பது “கள்” என்னும் பொருளையும் தரும் என்றாம். பண்டைக்காலத்தில் ஈழநாட்டில் “கள்” இறக்கும்தொழில் முக்கியமான தொழிலாகக் கொள்ளப்பட்டிருக்கிறது இன்றும் கள் இறக்கும் தொழில்விசேடமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட பண்டைத்தமிழ் மக்களை பிற்காலத்தில் சாணார் என நாமம் சூட்டி அழைக்கலாயினர். அவ்வாறு அழைக்கப்பட்ட காலம் இந்தியாவில் இருந்து மக்கள் இலங்கையின் யாழ்ப்பாண அரசு தோன்றிய காலத்தில் குடியேறியவர்களால் சுட்டி உணர்த்தப்பட்ட பெயராகும். சுமார் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் எனக் கூறலாம். ஆனால் சாணார் எனப்பட்ட அவர்கள் இன்று அத்தொழில் செய்வதில்லை என்றாலும் அவர்கள் பரம்பரையினர் சாணார் எனவே அழைக்கப்படுவார்கள். இவர்களே ஈழநாட்டின் பூர்வ குடிகள். இவர்கள் ஈழவர் என்றும் அழைக்கப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அழைக்கப்படுவதே, அவர்கள் ஈழநாட்டின் பூர்வ குடிகள் என்பதைச் சந்தேக விபரீதம் இன்றி தெளிவாக உணர்த்துகின்றது. ஈழநாட்டில் பூர்வ நாட்டின் பூர்வ குடிகள் என்பதைச் சந்தேக விபரீதம் இன்றி தெளிவாக உணர்த்துகின்றது. ஈழநாட்டில் வடகீழ்ப் பகுதிகளில் கரையோரமாகக் காணப்படும் இயற்கைத் தாவரம் பனையே. பனையிலிருந்து பெறப்படுவதும், மக்களால் மிகுதியும் விரும்பப்படுவதும் அவர்கள், மனதைக் கவருவதும் ஆகிய ஒருபொருள் கள்ளே. எனவே கள் இயற்கையாக மிகுதியாகப்பெறப்படும் நாடு என்னும் கருத்திலும் ஈழம் என்னும் சொல்லை நினைவு கூரலாம். ஆகவே மக்களுக்குத் தேவையான சிறப்புடைப் பொருளான பொன்னையும். கள்ளையும் மிகுதியாகத் தரும் வளங்கொழிக்கும் நாடு பொன்னாடு எனக் கருதி ஈழம் என்ற பெயரைச் சூட்டி அழைத்து வரலாயினர் என்றே கொள்ளக் கிடக்கி;ன்றது.

இரு பொருட்களும் மக்கள் உள்ளத்தைக் கவரும் பொருட்களே. மனதைக் கவரும் பொருட்களில் ஆசையும் மதிப்பும் அதிகம் அல்லவா? அதனால் அப் பொருட்களைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற சொல்லைப் பெயராக வைத்து மகிழ்;ந்தனர் என்பது மிகவும் சால்புடையதேயாகும். அன்றி வளம் செறிந்த செழிப்புள்ள நாட்டைப் பொருள் கொழிக்கும் பொன்னாடு என்று கூறுதலும் மரபன்றோ? எனவே ஈழம் என்ற பெயர் காரணமும் அதன் பழமையும் புலனாயிற்று.

ஆனால் சிவதருமோத்தரம் கனக இலங்கை எனக் கூறியிருப்பதினாலும், விவிலிய நூலில் ஈழத்திலிருந்து பொன் ஏற்றுமதியானது எனக் கூறியிருப்பதினாலும் கள் இறக்கும் தொழில் வடகீழ்ப் பகுதியில் மிகுதியும் நடைபெற்றிருப்பதனாலும், அத்தொழிலோர் குடும்பங்கள் ஈழத்தின் பூர்வ குடிகள் ஆனதினால் ஈழவர் என அழைக்கப்பட்டமையாலும் அவ்விருவகைப் பொருள் வளங்களையும் கருத்திற் கொண்டே ஈழம் எனப் பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பதே கொள்ளற் பாலதாகும்.

இனி, ஈழம் என்ற சொல்லே மிகவும் பழைய வழக்கு என்பதை அது தமிழ்ச் சொல்லாய் இருக்கும் காரணத்தினாலும் தமிழரே ஆதிக் குடிகள் ஆனதினாலும் ஐயமின்றித் தெளிவாம். தமிழ்நாட்டுக்கு ஆரியர் வருகை மிக மிகப் பிற்பட்ட காலமாகும். ஆதலின் ஆரியர் வழக்கினால் ஏற்பட்ட ‘லங்கா’ என்ற பெயர் ஈழம் என்ற சொல்லின் வடமொழி உருவமே என்பது தெளிவு. லங்காவைப்போன்று ஏனைய வடமொழி உருவமே என்பது தெளிவு. லங்காவைப்போன்று ஏனைய வடமொழிப் பெயர்களும் பிற்பட்ட வழக்கே. சங்க கால வழக்கு ஈழம் என்பதே அன்றிப் பிற்காலம் கி. பி. 12ம் நூற்றாண்டு வரை பிற்காலச் சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் ஈழம் எனவே வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை என்ற வழக்கு உயர்ந்தோர் வழக்கில் இடம்பெறவில்லை 1ம் இராசேந்திர சோழன் சாசனத்தில் “பெருங்கடல் ஈழத்தரசர்தம் முடியும்” எனக் கூறப்படுகிறது. 1ம் இராசராசன் காலத்தில் அவனது சாசனத்தில் ‘முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்” எனவே கூறப்பட்டுள்ளது. ஆதலின் ஈழம் என்பதே நாடு முழுவதையும் குறி;க்கும் பழமையான பெயர் என்பதை அறிக. இன்னும் பட்டினப்பாலையில் “ஈழத்துணவும் காழகத் தாக்கமும்” எனக் கூறியிருப்பதை உணர்க.

இனி ஈழம் என்பதற்கு யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய முதலியார் இராசநாயகம் அவர்கள் “இந்நாட்டின் பண்டைக்காலத்தில் ஈழு என்றொரு மொழி பேசப்பட்டு வந்ததென்றும் அதனால் இந்நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வரலாயிற்று” எனக் கூறுவர்.

ஈழு என ஒரு வேற்றுமொழி இருந்தமைக்கு என்ன சான்று? நாட்டில் பேசிய தமிழ் மொழியை நாட்டின் பெயரால் ஈழு எனக் குறிப்பிடலாம் அல்லவா? ஈழ நாட்டு மொழி ஈழு என அந்நியரால் வழங்கியிருக்கலாம். அவ் வழக்கு எவ்வகையாலும் பொருத்தமானதல்லவா? ஈழநாட்டு மொழி ஈழு அது ஈலு என வழங்கப்பட்டதே உண்மை வரலாறு ஈழு என ஒரு மொழி தமிழின் வேறானதாயின் அம் மொழி பேசிய மக்களினம் யாரோ? அவ்வாறு வேறு இனம் இருந்தமைக்கு ஆதாரம் உண்டா? ஈழு என ஒரு வேறு பாஷை இருந்ததென்பதற்கு யாதாயினும் ஆதாரம் சான்று காட்டுவாரா? அம் மொழி பேசியவர்கள் தமிழரின் வேறானவர்களா? வேறானவர்களாயின் அக் குழுவினர் இன்றுயாரோ? தமிழர்கள் இந்நாட்டிற்கு எங்கிருந்து வந்தனரோ? ஆகவே தமிழரின், தமிழின் உற்பத்தியிடம் யாதோ? ஆதலின் முதலியார் கூற்று முயற்கொம்பாகும். உண்மையை வாசகர்கள் ஆராய்ந்து சிந்திக்க வேண்டுகின்றேன். ஈழநாட்டில் தமிழ்மொழி ஒன்றே தவிர வேற்றுமொழி ஒன்று இருந்த தென்பதற்கு வரலாற்;றுக் கெட்டிய காலம் தொடங்கி இன்றுவரை எவ்வித ஆதாரமும் இல்லை.

புத்த மதத்தோடு இங்கு வந்த புத்த பிக்குகள் ஈழநாட்டில் ஈழநாட்டு மக்களால் பேசப்பட்ட தமிழ் மொழியை நாட்டின் பெயரால் சுட்டி ஈலு மொழியெனக் கூறியிருக்கலாம். இது அவர்களுடைய வழக்கென்றே கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஈழு என உச்சரிக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஈலு என வழங்கினார்கள். அஃது பின்னும் காலக்கிரமத்தில் எலு என்று உரு மாறலாயிற்று. எனவே அவர்கள் ஈலு என்றும் வழங்கிய பெயர் ஈழநாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியைக் குறித்தேயன்றி ஈழு என ஒரு மொழி பேசப்பட்டு அதனால் நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வந்ததன்று. இதுவே உண்மை வரலாற்று நிகழ்ச்சியாகும். இன்னும் எலு என்னும் சொல்லாகிய பெயர் சிங்கள மொழியிலேயே காணக் கிடப்பதாலும் வேறு உலக மொழிகள் எதினாலும் அப்பெயர் கூறப்படாமையினாலும் மேற்போந்த உண்மை இன்னும் தெளிவாகிறதன்றோ?

இனி. ஈழு என்னும் பெயருடைய ஒரு மொழியை அங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் பேசினார்கள் என முதலியார் இராசநாயகம் அவர்கள் கூறுவதற்கு என்ன சான்று? தாம் எழுதிய நூலில் ஆதாரம் காட்டியுள்ளாரா? இயக்கர், நாகர் யார்? அவர்கள் ஈழநாட்டின் பூர்வீக தமிழர் அன்றோ? அவர்கள் பேசிய மொழி தமிழே. ஈழு என்றொரு வேறான மொழி ஒன்று இருந்திருக்குமானால் இலங்கை இந்திய வரலாற்றில் அல்லது தமிழ்ப் பழைய சங்க இலக்கியங்களில் எங்கேனும் பேசப்பட்டது உண்டா? ஏன்இந்தியாவிலும் இயக்கர், நாகர் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மக்கள் குழுவினர்கள் வாழ்ந்தார்கள் அன்றோ? அப்படியானால் இந்தியாவிலும் ஈழு மொழி பேசப்பட்டிருக்க வேண்டுமே. சங்க காலத்தில் இருந்த கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்றில் இலக்கிய இலக்கண நூல்களில் ஈழம் என்னும் மொழி தமிழ் என என்றுமே கூறப்படுகின்றது.

அன்றியும் ஈழு என்னும் சொல்லே முற்பட்ட வழக்காயிருந்து பின் அச் சொல்லே எலு என வழக்கில் வந்தது எனக் கூறும் முதலியார் கூற்றே ஈழு என்னும் சொல் தமிழ் என்பதனை வலியுறுத்துவதாகும். ஈழ என்னும் சொல் தமிழ் மொழியின் சிறப்பொலியாகிய “ழ’கர ஒலியைக் கொண்டுள்ளது. ஆதலின் ஈழு என்னும் சொல் தமிழ் மொழியில் உள்ள ஓர் சொல் என்பதனை மறுக்க முடியாது. எனவே ஈழு என முதலியார் குறிப்பிடும் மொழி தமிழ் மொழியே அன்றி வேறல்ல. ஆதலின் இயக்கர் நாகர் பேசிய மொழி தமிழ்மொழி என்பதற்கு யாதொரு ஐயப்பாடும் இன்று. ஆதலின் இயக்கரும் நாகரும் இலங்கையின் (ஈழம்) பூர்வீகத் தமிழர் என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இன்று.

இன்னும் ஈழு என ஒருமொழி தமிழை விட வேறாகப்பட்டதாயின் அம்மொழியின் சொற்கள் யாவும் அது வழங்கிய நாட்டினின்றும் முற்றாக அழிந்தொழிதல் நிகழக்கூடாததொன்று. அதனால் அம்மொழிகளிற் சிலவேனும் தமிழிற் கலந்திருத்தல் வேண்டும். தமிழ் மொழியில் வடமொழியை தவிர வேறு மொழிச் சொற்கள் சங்க காலத்து இறுதிவரை கலந்திருந்ததாகக் கருதுவது முயற் கொம்பே. ஆனால் சில வேற்றுமொழிக் கலப்பு ஏற்பட்ட ஞான்று அவற்றைத் திசைமொழியென்று வேறு காட்டினர். அம் மொழிகளில் தானும் ஈழு மொழி என்றொரு மொழி பேசப்படவில்லை.

தமிழில் பிறமொழிக்கலப்பு ஏற்படாதவாறு சங்கத்தார் தமிழை வரையறுத்து வரம்பு செய்து வளர்த்தனர் அன்றோ? தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார் அக்காலத்து வடமொழி வருகையை அறிந்து முன் எச்சரிக்கையாக வடமொழி கலந்து மயங்கா வகையில் நூல் செய்தார் அன்றோ? அப்படியிருக்கத் தொல்காப்பியனார் முதலாந் தொல்லாசிரியர்கள் ஈழு மொழி பற்றி யாதும் கூறாதது என்னே? அஃது அப்படி ஒரு மொழி இருக்கவில்லை என்பதைத் தெட்டத் தெளிவாக அங்கை நெல்லியெனப் புலப்படுத்துகின்றது அன்றோ?

அன்றித் திருத்தமற்ற தமிழை ஈழு மொழியென முதலியார் கருதினார் என்றால் திருத்தமற்ற தமிழுக்கு ஈழு என்றொரு வழக்கு இருந்ததில்லை. திருந்திய தமிழைச் செந்தமிழ் என்றும், திருத்தமற்ற தமிழைக் கொடுந்தமிழ் என்றும் வழங்கினார்கள். ஆகவே ஈழு எனத் தமிழைவிட வேறு மொழி இருந்ததும் இல்லை. திருத்தமற்ற தமிழுக்கு ஈழு என ஒரு வழக்கு இருந்ததும் இல்லை. எனவே அவர் கூற்று எவ்வாற்றாலும் பொருத்தமற்றதும் உண்மைக்கு மாறானதும் ஆகும்.

அன்றி முதலியார் அவர்கள் எலு என்னும் சிங்கள வழக்கை வைத்துக்கொண்டு அதுதான் ஈழு ஈழம் ஆக வந்ததென்பது உண்மையறியாது கூறும் வெற்றுரை ஆவதன்றி மகனுக்குத் தந்தை பிறந்தான் என்பது போலாம்.

விசயன் நாடோடியாக வந்த காலத்தில் அவர்களை வரவேற்று வாழ உதவியவர்கள் ஈழநாட்டு மக்களே அது மாத்திரம் அன்று. பெண்கொடுத்து நாடாளும் உரிமை கொடுத்து தமது உறவினன் ஆக்கி ஒரே சுற்றமாக வாழ்ந்தார்கள் அன்றோ? அன்றேல் நாடோடியாக வந்த விசயனுக்கு ஈழ நாட்டு மக்களின் ஈழ நாட்டு அரச பரம்பரையினரின் ஆதரவு இல்லையானால் ஆளும் உரிமை எவ்வாறு கிடைக்கும்? போர் தொடுத்து ஈழ நாட்டு அரசை வெற்றி கொண்டு நாடாளும் உரிமை பெற்றானா? அல்லது விசயன் வந்த காலத்தில் (கி. மு. 548) ஈழ நாட்டில் தமிழ் பேசும் மக்கள் இருக்கவில்லையா? அவர்களுக்கென ஒர் அரசு இருக்கவில்லையா? அன்றி விசயன் வருகைக்குப் பின்தான் தமிழினம் ஈழத்தில் குடியேறினார்களா? எங்கே இருந்து வந்தார்கள்? இதற்கு ஒர் வரலாறு உண்டா? இயக்கர், நாகர் இருந்தார்கள் என விசயன் வரலாறு கூறுகின்றது அவர்கள் யார்? அவர்கள் தமிழரின் வேறானவர்களா? அப் படியானால் அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்கள் பரம்பரையினர் இப்போது எங்குற்றனரோ? விசயன் வந்த காலம் தமிழ் மக்கள் நாகரீகம் படைத்தவர்களாய் வாழ்ந்த காலம். இக்காலத்தில் தென்னிந்தியாவில் 3ஆவது தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச் சங்கத்தில் தான் ஈழத்துப் பூதன் தேவனார் உறுப்பினராக இருந்தார். பசுபூட் பாண்டியனைப் பாடியுள்ளார். இவன் காலம் கி;. மு. 180 – 125 ஆகும். விசயன் வருகைக்கு 350ம் ஆண்டுவரை வாழ்ந்துள்ளார்கள். இக் காலத்தின் பின் எல்லாளன் ஆட்சி ஈழநாட்டில் நடைபெறுகிறது. எனவே இத்தனை சீரும் சிறப்பும், புலமையும், அரசும் எய்தியிருந்த தமிழர் 350 ஆண்டுகளுக்குமுன் காட்டுமிராண்டி வேடர்களாக வாழ்ந்தார்களா? அரசின்றி இருந்தார்களா? விசயன் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே காந்தக் கோட்டை கட்டி அரசேச்சிய ஈழத் தமிழர்கள் விசயன் வந்த காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்தார்களா? சிந்தியங்கள்.

விசயனும் தமிழனே, இவன் கலிங்கநாட்டுத் தமிழன், இவன் சிங்கவாகு என்னும் கலிங்க அரசன் மகன். இவனது அட்டாதுட்டித்தனத்தால் தந்தையால் நாடுகடத்தப் பட்டவன். இவன்தமிழன் ஆனதினாலேயே ஈழநாட்டு மக்களோடு உறவினனாய் வாழும் வாய்ப்புக் கிடைத்தது. விசயனைப்பற்றிய விளக்க வரலாறு பி;ன்னர் விபரிக்கப்படும்.

ஆரியன் வருகையின் பின் ஈழநாட்டு பூர்வீகத் தமிழர்கள் இயக்கர்கள் என்றும், நாகர் என்றும் அவர்களால் அழைக்கப்பட்டனர். எனவே ஈழநாட்டின் பூர்வீக குடிகளுக்கு ஆரியர் சூட்டிய பெயரே இயக்கரும், நாகரும் என்பது.

இன்று, இலங்கை ஸ்ரீலங்கா என்ற பெயரே வழக்கத்தில் இருக்கின்றது. ஈழம் என்ற வழக்கு கி.பி. 12ம் நூற்றாண்டுக்குப்பின் வழக்கு ஒழிந்துவிட்டது. ஆதலின் இந்நாடு ஈழமா? அல்லது ஸ்ரீலங்காவா? இல்லாவிடில் இலங்கையா? அன்றி இவை வேறு வேறு நாடுகளா? அன்றி ஈழம் தான் லங்கா ஆனதா? இந்த வினாக்களுக்கு காய்தல், உவத்தல் இன்றி நடு நின்று ஆராய்ந்து உண்மை காண்பாம்.

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply