உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம் 

உல­கத்­த­மி­ழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13 ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்­க­ழகக் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் நேற்று  ஆரம்­ப­மா­­னது.
கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வி.எஸ்.இரா­த­கி­ருஸ்­ணன் மாநாட்டை ஆரம்­பித்து வைத்­தார்.  முதல் நாள் நிகழ்­வு­கள் 10 அமர்­வு­க­ளாக இடம்­பெற்­றன.    கல்விக்­கான  நிதி­யு­தவி, மலர் வெளி­யீடு, ஆய்­வு­ரை­கள் உள்­ளிட்ட நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. மாநாட்­டில் 66 ஆய்­வுக் கட்­டு­ரை­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.
விருந்­தி­னர்­கள் சிறப்­புரை நிகழ்த்­தி­னர். முனை­வர் பாஞ்.இரா­ம­லிங்­கம் தலை­மை­யில்  நிகழ்வு இடம்­பெற்­றது.   மாநாட்­டில் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணைவேந்­தர் இ.விக்­னேஸ்­வ ­ரன், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட்­குரே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா, இந்­திய, இலங்­கைப் பேரா­சி­ரி­யர்­கள்,பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.
”தமிழ் மொழியைப் பாது­காப்­ப­தற்­காக நூற்­றுக்­க­ணக்­கான பாட­சா­லை­களை புலம் பெயர் நாடு­க­ளில் உரு­வாக்­கி­ய­வர்­கள்  தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள்.  அவ்­வாறு அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான தமிழ்ப் பாட­சா­லை­கள் புலம்­பெ­யர் நாடு­க­ளில் இன்­றும் இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றன.
தமிழை வளர்ப்­ப­தில் அவர்­க­ளும் பெரும் பங்­காற்­றி­னார்­கள். ” என்று உல­கத்­த­மிழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் அகி­ல­த­லை­வர் வி.சு.துரை­ராஜா  தனது உரை­யில் தெரி­வித்­தார்.
 ”உலகத் தமி­ழர் பண்­பாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்க முயற்சி எடுத்து வரும் இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கு எமது நன்­றி­கள். அதற்­காக யாழ்ப்­பா­ணம் மற்­றும் கண்­டிப் பகு­தி­க­ளில் இருந்து ஆசி­ரி­யர்­கள் தெரிவு செய்­யப்­பட்டுப் பயிற்­சிக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ள­னர்.
இந்த முயற்சி வெற்­றி­ய­டைய வேண்­டும்” என்று  தமிழ் பண்­பாட்டு இயக்கத் தலை­வர் பாஞ்.இரா­ம­லிங்­கம் தனது உரை­யில் தெரி­வித்­தார்.அதே­வேளை மாநாட்­டின் இரண்­டாம் நாள் நிகழ்­வு­கள் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை  காலை 9 மணிக்கு  யாழ். ரில்கோ விடு­தி­யில் இடம்­பெ­றும்.  சென்னை முனை­வர் வா.மு.சேது­ரா­மன் தலை­மை­யில் நடை­பெ­றும் நிகழ்­வில்  கவி­ய­ரங்­கம், பேரா­ளர் கருத்­த­ரங்­கம், பேரா­ளர்­க­ளின் கருத்­து­ரை­கள், இலக்­கி­யத் திரைப்­ப­டக்­காட்சி, கலை­நி­கழ்­வு­கள் இடம்­பெ­றும். நிகழ்­வில் பேரா­ளர்­க­ளுக்­குச் சான்­றி­தழ்­க­ளும் வழங்­கப்­ப­டும்.

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் ஆரம்­பம்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply