மயிலிட்டி துறைமுகம் + 54.6 ஏக்கர் காணி விடுவிப்பு
இதேவேளை ஏனைய பகுதிகளை யும் விடுவிக்கக்கோரி மயிலிட்டி துறைமுகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.
இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் 27 ஆண்டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இராணுவத்தினர் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தையும் அதனை சூழவுள்ள 54 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளையும் விடுவித்து யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
இதேவேளை ஏனைய விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதால் அன்றைய தினம் இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்களையும் நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகமானது இலங்கையில் மொத்த மீன்பிடியில் மூன்றில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.virakesari.lk/article/21413
Leave a Reply
You must be logged in to post a comment.