No Image

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

November 20, 2017 VELUPPILLAI 0

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல் பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் […]

No Image

மணிமேகலையில் நிலையாமை

November 8, 2017 VELUPPILLAI 0

மணிமேகலையில் நிலையாமை மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை: நிலையாமை – விளக்கம்: […]

No Image

“நாங்கள் தொட்டு பூஜை செய்த சாமிக்குத் தீட்டு ஆகிவிட்டதாம்!”

October 17, 2017 VELUPPILLAI 0

“நாங்கள் தொட்டு பூஜை செய்த சாமிக்குத் தீட்டு ஆகிவிட்டதாம்!”  சி.மீனாட்சி சுந்தரம்  வி.ஶ்ரீனிவாசுலு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் வேதனை சமூக நீதிக்கான முதல் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது கேரளா. பிராமணர் அல்லாத 36 […]

No Image

தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?

October 15, 2017 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்? கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்திருக்கும் […]

No Image

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

October 8, 2017 VELUPPILLAI 0

புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா?  அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன்  தங்கவேலு (தலைவர்,  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்  வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள்  என்றறியாத  இயல்பினள் எனத்  தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது.  எதிர்காலத்தில் தமிழ்  மெல்லச்சாகும்   மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்  என்ற அச்சம்  அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார்  பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது.   இன்றும்  அப்படியான கருத்து  ஆங்கிலம் கற்ற  பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று  உலகில் வாழுகின்ற 600  கோடி மக்கள்  மொத்தம் 6,000  மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000  மொழிகளிலே வெறுமனே 600  மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400  மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள்.  மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000  மொழிகளை 1,000  க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள்.  அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும்  அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப்  பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு  மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக  மாறிவிடுவது. (ஈ)  […]

No Image

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன்

September 29, 2017 VELUPPILLAI 0

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன் January 2, 2017 335 Views மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பாராளுமன்ற நிதியில் அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலை தொடர்பில் நேற்றுமுதல் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. […]

No Image

மட்டக்களப்பில் இஸ்லாமிய இளைஞர்களால் சீரழியும்  தமிழ்ப் பெண்கள்! மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

September 29, 2017 VELUPPILLAI 0

மட்டக்களப்பில் இஸ்லாமிய இளைஞர்களால் சீரழியும்  தமிழ்ப் பெண்கள்! மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! http://www.jvpnews.com/srilanka/04/142886