நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி

ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது

நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி
     
இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். 

அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.

அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். 

அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள்.

பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள்.

அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.      இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.

கடவுள் வாழ்த்து 

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே. 

1 அவையடக்கம் 

நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே. 

2  தூய மனம் வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம். 

3 போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான். 4  பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ! 5 அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக்கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார். 

6  யாக்கை நிலையாமை 

போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டாகாதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார். 

7  இரக்கமில்லாத கூற்றுவன் அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மைமருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்குஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார். 

8  பல நிலைகளைக் கடக்கும் சரீரம் 

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!

9  நிலையில்லா வாழ்க்கை

கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றேமீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா! 

10  ஊனுடம்பின் இழிவு நன்கணம் நாறும் இது என்று இவ் உடம்பு நயக்கின்றது ஆயின்ஒன்பது வாயில்கள் தோறும் உள் நின்று அழுக்குச் சொரியத்தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின்இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகை யாற்கொள்ள லாமே. 

11 மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்கு எழு என்றும்தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின்பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின்ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ! 

12 உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பைமறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரியவெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ ! 

13 எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகிநுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்டஇனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ! 

14  மன்னனைப் போற்றுதல் இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடைஅறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான் 

15 சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணைமாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான். 

16  குற்றப்படாத வண்ணம் காத்தல் மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மைநண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகாவிண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்தகண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார். 

17  ஆதலும் அழித்தலும் மறிப மறியும் மலிர்ப மலிரும்பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்அறிவது அறிவார் அழுங்கார் உவவார்உறுவது உறும் என்று உரைப்பது நன்று. 

18 வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான். 

19  [கீழ்க்காணும் பாடல்கள் குண்டலகேசியின் பாடல்களாக கருதப்படுகின்றன]   குண்டலகேசி பாடிய பாடல்கள்  அறுசீர் ஆசிரிய விருத்தம் 

வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே. 

1 நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போதுநன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால். 

2 அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டுமண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கேநண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான். 

3 அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடுமலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசிநலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காகஉலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன். 

4 துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகிமுறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம். 
5.2 நூல் நுவலும் பொருள்‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்னும் அளவிற்குப் பெரும்பாலான காப்பியங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதில் முனைந்து செயல்படுகின்றன. இதற்குக் குண்டலகேசியும் விதிவிலக்கு அல்ல. கிடைத்துள்ள பாடல்களில் தீவினை அச்சம், கூடா ஒழுக்கம், புணர்ச்சி விழையாமை, யாக்கை நிலையாமை, தூய தன்மை, இறைமாட்சி, குற்றம் கடிதல், இடுக்கண் அழியாமை முதலான உலகியல் நீதிகள் வலியுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

5.2.1 யாக்கை நிலையாமைஇளமை மற்றும் யாக்கை நிலையாமை குறித்த பாடல் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுது புலம்பாத நாம், இவ்வுடலை விட்டு உயிர் பிரிகிறபோது மட்டும் அழுவது ஏன்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ


(பாளையாம் = இளமை; நாளும் நாள் சாகின்றாமால் = தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்)

5.2.2 அறிவுடையார் செயல்எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.

மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று


(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)பொருள்:நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.5.2.3 குற்றம் கடிதல்‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என இறைவனோடு வாதாடிய நக்கீரன் வாழ்ந்த மண் இது. எனவே இங்கு யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்?


பொருள்:சாதாரண மனிதர்க்கு மட்டுமன்றி, வாய்மை மிக்க சான்றோர் தவறு செய்யினும் தவறுதான். நெற்றிக் கண்ணன் சிவன் கண்டத்திலுள்ள கறை கறைதான்; அன்று என்று யாரும் சொல்லார்.
About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply