பல்லவராச்சியம்

கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்லவராச்சியம்


Page 1


Page 2

Uல்லவராச்சியம்
நிகழ்வுகளின் பதிவுகள் கி.பி. 1948ம் ஆண்டுவரை
உயர் இராச மதிப்பிற்குரிய பல்லவராசசேகரம்

Page 3
வெளியீடு
நூல்
6flulb
ஆசிரியர்
முகவரி
us LifeCDLD
முதல் பதிப்பு
பக்கங்கள்
&61T6
வெளியீடு
அச்சுப்பதிப்பு
ബിങ്ങബ
ISBN
நூல் விபரப்பட்டியல்
28
பல்லவராச்சியம்
வரலாறு
பல்லவராசசேகரம்
மூளாய் 8ബങ്ങാങ്ക
ஆசிரியருக்கு
2OO7
262
70 Gsm Bank, 5’ x 7'
ஈழத்து இலக்கியச் சோலை 21, ஒளவையார் வீதி, திருக்கோணமலை இலங்கை, O714185943
ரெயின்போ மினிலாப் (பிரிஇ)லிமிடட் 43. திருஞானசம்பந்தர் வீதி திருக்கோணமலை O26-2227498, 22273.54
35O.OO
955 - 117O - O2 - 4
- 2 -

பல்லவம்
谢驾全為禮{
「シュ*ggen
n李u-3 �
*きまa

Page 4
உள்ளடக்கம்
பேராசிரியர்வே, இராமகிருஷ்ணன் m முன்னுரை
முத்தமிழ்மாமணிசித்திஅமரசிங்கம் பதிப்புரை
சமூகஜோதிஆ. கந்தசாமி அணிந்துரை
நூலாசிரியரின் அறிமுகம்
1. ஈழத்தமிழ் இராச்சியங்கள்
2. இயக்கராச்சியம்
நாகராச்சியம்
வண்னிராச்சியம்
கண்டிராச்சியம்
u6b606 ਈuip
வெளிநாடுகளில் usbsosult ஆட்சி
பல்லவமன்னர் ஆட்சியியல்
9. பல்லவ குடிமக்கள்
10. பல்லவ மக்களின் வாழ்வியல்
1.
பல்லவர் நாணயங்கள்

δε χοί άπας Οτό
இலங்கைத் தமிழ்ராச்சியத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகவும், தன்மானம் காப்பதற்காகவும் போராடிய வீரவேந்தர்களுக்கும், வீரமறவர்களுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்

Page 5

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் GugrmáFrfufir Soufræ56úfsár முன்னுரை
பரராசசேகரன் அரசபரம்பரையைச் சேர்ந்த கலாநிதி கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழர் வரலாறு சம்பந்தமான பல நூல்களை இயற்றி வெளியிட்டவர். இத்தொடரில் அடுத்து வருவதே கூடிகூடியல்லவராச்சியம்; எனப்பெயர் கொண்ட இந்நூல். இது வரலாறு வாயிலாக தமிழ்த் தேசியத்தின் அடிமுடி தேடும் முயற்சி எனக் கருதுவதற்கும் இடமளிப்பதாக உள்ளது. அறிவு என்றதும், அதனைப் பெற உதவும் ஆய்வுமுறை எத்தகையது என அறிவுலகம் கேட்பதும் முறையே. இதன் உண்மையை உறுதிப்படுத்தக் கையாண்ட முறையைத் தெளிவுபடுத்தினால் வரவேற்கத்தக்கதாம். ஆனால் பல நூற்றாண்டுகள் மேற்கு ஐரோப்பியரது ஆட்சிக்குட்பட்ட காரணத்தால் அவர்கள் கூறுபோட்டு நிபுணத்துவம் பெற்று நிட்சயத்தன்மையை அடையலாம் எனும் நம்பிக்கை எங்கள் ஆய்வாளர்கள் மத்தியிலும் வேரூன்றிக் கொண்டுவிட்டது. அரசியல் சுதந்திரம் அடைந்த பின்னரும் காலனித்துவக் கருத்துக்களே தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதாக இருக்கிறது. சுதந்திரமாகச் சிந்தித்து வாழ்ந்தோம் என்பதையும் மறந்த நிலை.
அறிவு எள்பதும் செயல்களோடு பின்னிப் பிணைந்த நிலை. அறிவாளியை அவனது ஒழுக்கம் வாயிலாக இனங்காணலாம். சமுகத்தையே நெறிப்படுத்துபவர்களாக இருப்பர். அவர்கள் தேடுவது மெய்ப்பொருளாகும். மேற்கு நாட்டவர் இன்று அறிவுக்குக் கொடுக்கும் விளக்கத்திற்கும் நாம் முன்னர் கொடுத்திருந்த விளக்கத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. மேற்கு நாட்டு விஞ்ஞானம் செயலளவில் நுகர் பண்டங்களோடு தம்மை நிறுத்திக் கொள்கிறது. බුෂ් 606)
- 7

Page 6
எமது அறிவுப் பாரம்பரியம் பாசஞானம் எனக் கூறும் பொருள்களோடு மெய் (உண்மை) கலந்த அறிவைச் சுட்டுவதே பதிஞானம். இவ்வுலகு என்றும் அவ்வுலகு என்றும் வேறுபடுத்துவது தவறு இரண்டையும் நாம் வாழும் இப்பூவுலகிலேயே இளைத்துக்கொள்ள முயல்வதுவே இலட்சிய மாகின்றது. ஆகவே பேரிள்பத்தை நாடிய ஞாளிகளும் சிற்றின்பத்தை வெறுக்கவில்லை என்கிறார் நம் ஆசிரியர். வேறு ஒரு நூலாள "இராவனேசுவரன் இந்திர உலர பக்கம் 10 - 11ல் கூறியுள்ளார். கோள்களின் நல்ல நேரங்களில் உத்தமகுமாரர்களை உலகினைக் காக்க உவந்தளித்தார்கள். உலகம் உய்வதற்கும் நிலை பெறுவதற்கும் மனித இனம் விருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றியமை யாததாகும் என்கிறார்.
காலம் என்னும் அளவையிலேயே வரலாற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மேற்கு நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கொள்வது பேரிலல்லாது அதற்கும் அப்பாற்பட்ட யுகப்பிரிவைக் கொண்டுள்ளது. யுகத்திற்கேற்ப யாழ்தடா நாடு வெவ்வேறு பெயர்களைக் கொண்டதாய் இருந்தது. (துவாபரயுகத்தில் காசியர் மகனான தாரகள் ஆனைக் கோட்டையிலிருந்து அரசாட்சிசெய்தாள் என ஆசிரியர் கூறுவதும் அதே இடத்தில் கலாநிதி யொன் இரகுபதி அகழ் ஆய்வு செய்து கண்ட முடிவுகளுக்கும் இடையே உடன்பாடு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). காக்கை என்னும் சமையற்கரன் காட்டிக் கொடுத்ததன் விளைவாக போர்த்துக்கேயர் கால்வைத்துக் கோட்டை கட்டி ஆளத் தொடங்கிய பின்னரே யாழ்ப்பான ராச்சியம் என அழைக்கப்படலாயிற்று. போர்த்துக்கேயரது வருகையோடு தாள் தேசவழமைகள் புறக்களிக்கப்பட்டு சமயநிலை பிறழ்ச்சியடைந்தது எள்கிறார் ஆசிரியர். நவீன போராயுதங்களுடாக தாடு அழிக்கப்பட்டு வரலாற்று அழிப்பு நடவடிக்கைகளும் தீவிரம் அடைந்தன. இதற்கு முள்ளர் பல்லவராட்சியில் அரசமுறை, மக்கள் குடிகள் என சமுகமாய் வாழ்ந்து இன்பங்கொண்டதும்,
-8-

அவர்களது பிரதிநிதிகள் அரசவையில் “பெருமகன்" என்ற பட்டத்துடன் ஆட்சியில் பங்குபற்றிய விபரங்கள். மக்களாட்சி (Democacy) அரசு (State)இநீதிபரிபாலனம் என்பவற்றுக்குக் கொடுத்த விளக்கம் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் ஆழஅகலங்களைத் தேடுவதற்கு உதவுவதாய் உள்ளது.
ஆசிரியர் வரலாறுபற்றிக் கூறமுற்படுவது வெறுமனே என்ன நிகழ்ந்தது என்பதல்ல. எத்தகைய ஆட்சி, ஏன் எனும் விசாரணை முறையைக் கொண்டதாய் இருக்கிறது நடந்து முடிந்த காரியமல்ல. எதனை இழந்தோம் என்பதை உணரவைக்கவும் உதவுவதாக இருக்கிறது. அரச குடும்பத்தாரின் பல்லவராச்சியம் இழக்காத ஆட்சி உரிமை, இறைமை, எத்தகைய ஆட்சி எத்தகைய ஒழுக்க நெறி என எதிர்காலத்தில் நடத்த வேண்டிய கருத்துப் போராட்டத்திற்கும் உதவக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம் என்பது முன்னர் குறுகிய ஊரையும், பின்னர் பரந்த நிலப்பரப்பையும் சுட்டுவதாக இருக்கிறது. அது பல்லவம் என அழைக்கப்பட்டது என்பதும் நினைவுறுத்தப்படுகின்றது. வரலாறுபற்றி நடாத்தும் விசாரணை முறைகளும் மாற்றங்கான வேண்டிய அவசியத்தை மறைமுகமாகச் சுட்டுவதாய் இருக்கிறது. யார் ஆண்டது? எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் என்னும் நுனிப்புல் மேயாது, அரசனாக வருவதற்கு பல கலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. பல கலைகளையும் கொண்ட படைப்பாக இருப்பதால் வரலாற்றுநூல் வாசகர் எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு வைத்தியகலாநிதி வரலாற்று நிகழ்வுகள் பற்றி எழுதுகிறார். வெறுமனே தகவல்கள் அல்ல. வாசித்து சுவைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. வரலாறு பற்றி எழுதும் போது, வரலாறு எழுதுவது பற்றியும் புதிய பாதையைக் காட்ட முற்படுகிறார். இதனால் வரலாறு ஊடாகவும்,
- 9

Page 7
மாணவர்களது வளர்ச்சியையும் நெறிப்படுத்தலாம் என்பதும் இந்நூல் வாயிலாக உய்த்தறியக் கூடியதாக இருக்கிறது. தமிழர் வரலாறு தொன்மை வாய்ந்தது என்பதை இந்நூல் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. 1619ம் ஆண்டு யாழ்ப்பாணராச்சியம் என அழைக்கப்படுவதாகிய பல்லவராச்சியம் தள் இறைமையை இழக்கவில்லை. அரசின் இறைமையைப் பேணுவதற்காகத் தொடர்ச்சியாக அரச தலைமுறை வழியாக குலசேகரம் இராசசேகரம் என்ற பட்டப்பெயர்களுடன் போராடி வந்துள்ளனர். அந்த வழியில் மூளாய் இராஜா சுப்பிரமணியம் தேசாதிபதி மக்கலத்தை எதிர்த்துப் போராடித் தமது இறைமையைப் பறைசாற்றியதுடன் அதில் வெற்றியும் கண்டார் என்பதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி கைவிடப்படவில்லை என்பதற்குச் சான்று பகர்வதாகும். இப்போராட்டம் அந்நியன் கைப்பற்றிய அதிகாரத்திற்கு எல்லை விதிப்பதாக இருந்தது.
ஆசிரியர் பல்லவராசசேகரனை நான் நன்கு அறிவேன். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு அவரது முயற்சியில் வெளிவந்த சித்தவைத்தியம், அதன் தித்துவப் பின்னணி சுழிபுரம் பெரிய பரிகாரியாரான இராஜா ஆறுமுகம் வரலாறு பற்றிய நூலின் வெளியீட்டில் ஒத்துழைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழரது விஞ்ஞான பாரம்பரியத்தை நினைவுறுத்துவதாக இருந்தது. அதன் பின்னர் அவரது முயற்சி மேலும் வளர்ந்து முனைப்படைந்திருந்ததை நான் நன்கு அறிவேன். தேசிய விடுதலைப் போராட்டம் ஆழமான தேசியக் கருத்துக்களை அத்திவாரமாகக் கொண்டிருத்தல் வேண்டும். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த தேசப்பற்றும், தேசியப்பற்றும் அத்திவாரமாக இருத்தல் வேண்டும். தமிழ்க் கலைகளினுTடாக தமிழ்த்தேசியம் பரிமளிக்கின்றது. அவருடைய நாட்டுப்பற்றுக்கும், தமிழ்ப்பற்றுக்கும். அவர் தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள பற்றுக்கும் வடமாகாணத்தில் அவர் அமைத்த சித்தா சுகாதார சேவை சிறந்த சான்றாகும். மேலும் அதற்கு இந்நூல் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறது.
- 10

முத்தமிழ்மாமணி சித்தி அமரசிங்கம் அவர்களினி பதிப்புரை பல்லவராச்சியம் என்னும் இந்நூல் ஈழத்து இலக்கியச் சோலையின் இருபத்தெட்டாவது வெளியீடு ஆகும். இவரது "இராவனேசுவரன் இந்திர உலா” எமது பதினேழாவது நூலாக வெளியிட்டிருந்தோம் என்பதனை எமது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதன் வெளியீடு திரிகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடை பெற்றன.
இவருடைய தனி ஆற்றலும் தேடலும் நாட்டுப் பற்றும் சமயப் பற்றும் மற்றவர்களை விட சற்று அதிகமாகவே இருக்கிறது.
இன்றைய நவீன விஞ்ஞான உலகில் படித்தவர் முதற் கொண்டு படியாதவர் வரை தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் சமூக அந்தஸ்திற்காவும் போராடுவதிலுமே காலத்தையும் கவனத்தையும் செல வழிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும், இந்தச் சமுக சிந்தனைகளுக்கு மத்தியிலும் இவர் மாறுபட்டவராகவே காணப்படுகிறார். பணத்தைப்பற்றிய சிந்தனைக்கு அப்பால் இனம், மொழி, மதம் என்ற சிந்தனையோடு ஆண்ட இனம் அடிமைப்படுவதைக் கண்டு சகியாது மீண்டும் எழுச்சியுற்று தலை நிமிர வேண்டும் என்ற வேட்கையில் நம்முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை, ஆண்ட அரசர், அவர்களின் வீரதீரச்சாதனைகளை நம் சமுகம் உணர வேண்டும். உலகமும் அறிய வேண்டும் என்ற அடங்காத ஆவலால் தன் தொழிலுக்கு மத்தியிலும் பல வருடங்கள் இரவு பகலாக பல நூல்களைத் தேடித் தந்த அரும் பெரும் படைப்பே இந்தப் பல்லவராச்சியம். இந்நூல் ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்நூலைப் பற்றியும் இந்நூலாசிரியரைப் பற்றியும் இரு பல்துறை விற்பன்னர்கள் கூறி இருக்கும்போது மேலும் இதுபற்றி எழுத விரும்பவில்லை. ஆனால் அந்த இருவரும் எத்தகையவர்கள் என்பதை ஒரு குறுகிய வட்டத்தினரே அறிந்திருப்பர்.எந்த அளவுக்கு அறிந்திருப்பார்கள் என்பதும் தெரியாது. எனவே இவர்கள் பற்றிய தகவலை வெளிக்கொணர்வதினூடாக எமது வாசகர்கள்
- 11 -

Page 8
மட்டுமன்றி இன்னும் பலருக்கும் அறியத்தருவதற்கு ஆவணப்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமைப்பாடுடையவனாக இருக்கிறேன். எமது முன்னோர் சரியான ஆவணப்பதிவுகளை வைக்காமல் போனதால் சில விசயங்களை வெறும் தடயங்களை வைத்து ஊகித்து எழுதும் போது அது உண்மையாக இருந்த போதும் நம்பகத் தன்மையை இழந்தன. எனவே தான் ஆவணப்படுத்தலை நானும் அதிகம் விரும்புகிறேன்.
பேராசிரியர் இராமகிருஷ்ணன் அவர்கள்1957, 58 காலப் பகுதியில் திரிகோணமலை இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், அன்று நானும் அவருடைய மாணவர்களுள் ஒருவனாக இருந்துள்ளேன். கலாநிதி வேலுப்பிள்ளை இராம கிருஷணன் அவர்கள், தங்கோடை காரைநகரைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளுக்கு மேல் பல பல்கலைக் கழகங்களில் அரும்பணி ஆற்றியவர்.
இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமது முதுமானிப் (ஆயு) பட்டத்தையும், இலங்காஸ்ரர் பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டத்தினையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். கிழங்கிலங்கைப் பல்கலைக்கழகத்திலும் கலைப் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், காசி அனைத்துலக இந்துப் பல்கலைக் கழகத்திலும், சைவசித்தாந்தம், சமய ஒப்புவியல் துறைகளில் வருகை தரும் பேராசிரியர் ஆகவும் செயலாற்றியவர், இவருடைய திறமைகளையும் ஆற்றலையும் கண்டு, நியூசிலாந்து வைக்காட்டோ பல்கலைக்கழகம் சமய ஆய்வுகளில் கெளரவ உறுப்பினராக நியமித்தது.
இலங்கையில் இந்துசமய விவகார அமைச்சு இவரை பாடநூல் ஆக்கக் குழுவின் தலைவராக நியமித்தது. பேராசிரியர் இராமக்கிருஷணன், யாழ்ப்பாணக் கலாச்சாரம், சுவாமி விபுலானந்தரின் கல்விக் கொள்கை, சித்த வைத்திய பரம்பரை ஆகிய நூல்களை இயற்றினார். இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தின் கெளரவ ஆலோசகராக இருந்து தமிழ்
- 12

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவில் மேற்படிப்பிற்கான இராதாக்கிருஷ்ணன் நிலையத்தில் சைவத்தினையும் பெளத்தத்தினையும் ஒப்பிட்டு ஐந்து நாட்கள் விரிவுரை நிகழ்த்த அழைக்கப்பட்டு உரையும் நிகழ்த்தினார்.
பெங்களுர் பல்கழைக்கழகம், கல்கத்தாப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வெளிக்களப் பரீட்சகராக கடமை யாற்றியவர். இத்தனை சிறப்புக்களும் கெளரவமும் பெற்ற பேராசிரியர் அவர்கள் இந்நூலைப் படித்து அணிந்துரை வழங்கியுள்ளார் என்றால் இந்நூலின் சிறப்பு எத்தகையது என்று நான் கூறவேண்டியதில்லை. மேலும் தமது அணிந்துரையில் நூலாசிரியரின் கூற்றுக்களை அலசி ஆய்ந்து தமது கருத்துக்களையும் கூறியுள்ளார். அவை இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஆக அமைந்துள்ளன. பேராசிரியரினால் சிறப்பாக விதந்துரைக்கப்பட்ட இந்நூலைச் சிறப்பாகக் கொள்ளுவதற்கு வேறு என்ன வேண்டும்?
அடுத்து சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அணிந்துரையாகும். கடந்த பல வருடங்களாக தமிழ்ப்பணி சமுகப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துப் பணி புரிந்து வருகின்றார். இவர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்ட பொழுது இரவு பகல் உறக்கமின்றிப் பல நாட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்துப் பல சுமையூர்திகளில் வடமாகாணம், கிழக்குமாகாணம் மற்றும் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி வைத்ததில் முன்னின்று உழைத்தவர். சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ் அறிஞர்களை உலகின் பலபாகங்களிலும் இருந்து அழைத்து அவர்களுடைய அறிவை. அனுபவத்தைச் தமிழ்ச்சங்கத்தில் பகிரவைத்துப் பலரும் கேட்டு மகிழும் வாய்ப்பைத் தந்தவர்.
- 13

Page 9
தற்பொழுது நீர் கொழும்பில், சைவத்திருமுறை அடியார் சங்கம் அமைப்பிலிருந்து சைவப்பணி ஆற்றி வருபவர் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலயத்திருப்பணிச் சபையின் துணைப் பொருளாளராகப் பணி ஆற்றி வருகின்றார். இவ்விரு பெரியார்களின் அணிந்துரைகளும் இந்நூல் பற்றியும் ஆசிரியர் பற்றியும் அறிவதற்குப் போதுமானது என்று கருதுகின்றேன்.
பல்கலைக் கழகத்தினுள் இருந்து நூல்களைப் புரட்டி நுணுகி ஆராய்ந்து நுண்ணறிவு கொண்டு எழுதுவது ஒரு வகை. மக்களோடு வாழ்ந்து, மக்களின் அன்றாட வாழ்வின் இன்பதுன்பங்களில் கலந்து, நல்லது கெட்டதுகளில் பங்கு கொண்டு அன்றாட தேவைகளின் அவசியத்தை உணர்ந்து உதவுவது மட்டுமன்றி வருங்கால சந்ததியினரின் தேவைகளையும் மனதில் கொண்டு அதற்காகிய வழிவகைகளைக் கண்டு செயற்படுத்துவதும், நம்நாட்டின் வளங்கள் சீர்குலையாமல் செழிப்பான முறையில் பயன் பெற்றுக்கொள்ள நல்ல பல திட்டங்களை முன்னெடுத்துச் சென்று செயற்படுத்தித் தன்னை அர்ப்பணித்து மனித வாழ்வினூடாக மானிடம் வாழவும், வாழவைக்கவும் பரிச்சயத்தினூடாக பெற்றுக் கொண்ட அறிவினூடாக பல்கலைக்கழகத் தொடர்பின்றி எழுதுவது இன்னுமொரு
ᏮᎧlᎾ8ᎠᏑ.
இவர் வெறுமனே ஒரு புத்தகப் பூச்சி அல்ல அதற்கு மேலாக மானுடத்திற்காகப் பாடுபட்டுழைத்த மகாள் ஆவர், தமிழ் மக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காக முந்திரிகைப்பழரசம் தயாரிக்கும் தொழிற்சாலை, கூட்டுறவு மருந்துச்சாலை, கரைச்சி சித்த மருந்துச்சாலை, யாழ் மாநகரசபை மருந்துச்சாலை, மாங்குளம் மருந்துச்சாலை. இவரின் திட்டங்களாகும். சித்தங்கேணி பனஞ்சீனி ஆலை, கல்லுண்டாய் உப்பளம், தீப்பெட்டித் தொழிற்சாலை, போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை போன்ற பல தொழிற்சாலைகளை உருவாக்க உழைத்தவர். முளாய் மீன்வலைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படக் காரணமாக இருந்தவர். ஆனால் அது நாட்டின் பிரச்சினைக்களால் பாதியில் மூடப்பட்டது. வடகிழக்கில் பல இடங்களில் மூலிகைத் தோட்டங்களை ஏற்படுத்தி உள்ளார்.
- 14

சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ் மருத்துவப் பரம்பரையில் வந்தவர்களுக்கு மூன்று வருடங்கள் கற்பித்து வைத்தியகலாமணி என்ற பட்டம் வழங்கினார். தமிழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கு ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துக்கலவையாளர் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி 1992ல் மருந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று மாதங்கள் சுகாதார சேவையாளர்களாக பயிற்சி அளித்து சான்றிதழும் வழங்கி சித்தா சுகாதார சேவையில் ஈடுபடுத்தினார். மருந்து வசதிகள் இல்லாத காலத்தில் ஆறு வருடங்கள் இச்சேவை மக்களுக்கு ஏற்பட்ட வேதனையை நீக்கியது. பல அரசியல் தலைவர் களோடு மக்களின் பிசிேனைகளைக் கலந்துரையாடி நல்ல தீர்வு கிடைக்க உழைத்து வந்துள்ளார்.ஆன்மீகத்திலும் ஆழந்த பற்றுடையவர். மக்கள் சேவையே மகேசன் சேவையாக எண்ணிப்பணிசெய்பவர். அரச குடும்பத்தில் இளவரசராகத் தோன்றினாலும் எல்லா மக்களோடும் அன்பாகப் பழகுபவர். தமிழ்த்துறைகள் அறுபத்தினான்கினையும் வளர்க்க வேண்டும் என்று உழைத்து வருபவர். தாம் கடமை யாற்றிய இடங்களில் எல்லாம் சமயம், வரலாறு. தமிழ், மருத்துவம் மூலிகை போன்றவைபற்றி பல ஆய்வுகளை நிகழ்த்தியவர். தன் ஆய்வின் முடிவுகளை தொகுத்துப் பின்னர் நூல்களாக வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவரால் தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி அமைந்துள்ளார். இது ஒரு தகவல்களின் தொகுப்பாகும். இது பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தல் வேண்டும்.
இவரின் புறச் செயற்பாடுகளை விளக்குவதற்கே மேற்கூறிய தகவல்களைத் தந்தேன். நான் கூறத்தவறின் இவர்பற்றிய ஒரு முழுமையான பார்வை கிட்டாமல் போய் விடும். அவருடைய சேவைகள், செயற்பாடுகள், சிந்தனைகள் பதியப்படாமற் போவதை தவிர்க்கவே ஆவணப்படுத்தியுள்ளேன். நாம் இருப்பவர்களின் பெருமைகளை ஏற்று எடுத்துரைப்பதில்லை. இத்தகவல் தேவைப்படும் காலம் வரும், அப்பொழுது பயனுள்ளதாக இருக்கும். நாட்டு மக்களைக் காப்பாற்றுவதையும் நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதையும் தமது கடமையாகக்கருதி
- 15

Page 10
இந்தச் சேவைகளை ஆற்றி வந்துள்ளார்.
1932si) by eitG “The days of Sampasiva' (The ancient story of Trincomalee) 6T6 (D stiá6) DIT606) Rev. Dr. Issac Thambiya என்பவர் எழுதியுள்ளார். பலவருடங்களின் தேடலுக்குப் பின் அந்த நூல் அண்மையில் எனக்கு கிடைத்தது. அதில் அதன் ஆசிரியரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை வெறுமனே இந்நூல் ஒரு றெவறெண்டுக் குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியரைப்பற்றி அறியும் ஆவலில் இங்கும், கொழும்பிலும் விசாரித்த போதும் எல்லோரும் கைவிரித்து விட்டனர். அவர் 1932ம் ஆண்டு அனைவராலும் அறியப் பட்டவராக இருந்திருக்கலாம். (இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் அறியத்தரவும்). அன்று அவர் தன்னைப்பற்றிய ஒரு சிறு குறிப்பைத் தானும் எழுதியிருந்தால் என் போன்றோருக்கு அறியக்கூடிய ஒரு தடயமாவது கிடைத்திருக்கும். எனவே தான். எங்கெங்கு தகவல்களைத் தரமுடியுமோ அங்கெல்லாம் பதிய வைத்து விடுவேன். சிலருக்கு ஏற்புடையதாகவும், சிலருக்கு ஏற்றுக்கொள்ளமுடியாமலும் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.
வழி வழி வளர்ந்து வந்துள்ள மரபுகளை காக்கும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு. அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு உள்ள கடமை வரலாற்றைத் துரக்கிப் பிடிப்பதுதான். அதைச் செய்யாதவர்கள் இருப்பது எதற்கு? என்றார். மாணிக்கவாசகர். "தமிழ்ச் சமுதாய மரபிலே ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் வாழ்வர். பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்ந்தனர்” என்றார் குன்றக்குடி அடிகளார்.
குலவெறுபாடுகள் ஒழுக்கத்தின்பாற்பட்டவை. பிறப்பிலே கீழ்சாதி, மேல்சாதி என்று பிரிப்பதில்லை. படித்த மேதைகள், புத்திசாலிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்பவர்கள், உண்மையை, இயலாமையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் பொருந்தும் படியாகப் பொய்கள் பல சொல்லி அறியாமையை அறிவு என்று வாதிடுவர் என மேலும் கூறினார்.
- 16

"கடந்த காலத்தை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? கடந்த காலத்தை நன்கு பயின்று. தேர்ச்சி பெற்று, அவர் புரிந்து கொள்ளும் விதமே நிகழ்காலத்தைப் பற்றி அறியும் திறவு கோலாக விளங்க வேண்டும். ஒரு வரலாற்று ஆசிரியரின் கடந்த காலத்தைப் பற்றிய தீர்க்கமான பார்வை, நிகழ்கால பிரச்சினைகளுள் ஊடுருவி நுண்ணறிவால் ஒளிவிடும் போது, ஒரு பெரிய வரலாறு நுட்பமாக எழுதப்படுகிறது. நிகழ்காலத்தைப் பற்றிக் கடந்த காலத் தெளிவுடன் அறிவது, கடந்த காலத்தை நிகழ்காலத் தெளிவுடன் அறிந்து கொள்வதற்குச் சேர்த்து ஒப்பாகும். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டிற்கும் உள்ள உறவு வாயிலாக ஆழ்ந்த அறிவு பூர்வமான தெளிவு நிலையை விளக்குவதே வரலாற்றின் பண்பு அகும்." என்றார் அறிஞர் டி. டி. கோசாம்பி
வரலாறு மாறலாம். மாறுதல் அழிவதற்கில்லாமல் வளர்ச்சியின் பாற்பட்டதாகும். வரலாறு தொடராக நிகழவில்லை என்றால் வரலாற்றின் உயிர்ப்புத் தன்மையை பாதுகாக்கும் திறமை வாழ்வோருக்கு இல்லை என்றே கருத வேண்டும். உயர் ஆற்றல்களையும் இயக்கும் மனிதன் உயிர்ப்புடன் வாழ்ந்தால் நடக்க இயலாதது என்று ஒன்றும் இல்லை. இது குன்றக்குடி அடிகளாரின் கூற்று.
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் வரலாறு ஒரு வீதம் தான் எழுதப்பட்டுள்ளது. மிகுதி தொண்ணுற்றொன்பது வீத வரலாறு எழுதப் படவில்லை, வரலாற்றை எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இலட்சியங்களின் அடிப்படையில் பெரும் ராசமதிப்பிற்குரிய பல்லவராச சேகரன் அவர்கள் தமிழர்களின் பதிவுகளைத் தடயங்களைத் தொகுத்து எழுதியுள்ளார். வரலாற்று ஆவணங்கள் பேணப்பட வேண்டியவை. ஒவ்வொரு தமிழனும் தமது வரலாற்றினை அறிந்து அதனைப் பேணாது வரலாறு படைப்பது சிரமமே. எனவேதான் பாலர் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை இந்நூல் கற்பிக்கப்பட வேண்டும் என்பது எமது அவா. இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதற்குப் பலர் அவரை அணுகிய போதும் அவர் எம்மிடம் வழங்கியதற்கு, பதிப்பு, வெளியீடு.
سے 17 -۔

Page 11
எழுத்துத்துறைகளிள் நான் பெற்றிருந்த நற்பெயரே காரணமாகும். அதற்காக என் நன்றியை அவருக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அவர் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும், தமிழ்த் தேசத்தின் மீதும் அளவற்ற அன்பும் ஈடுபாடும் கொண்டவர். எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவன் இராவனேசுவரன். எங்களுக்கிடையே உறவை ஏற்படுத்தியது தமிழ். அவருடைய இராவனேசுரவன் இந்திர உலா பல அறிஞர்களாலும் பாராட்டப் பெற்றது. நாட்டு மக்களிடம் அமோகமான வரவேற்பைப் பெற்றிருந்தது. உலகின் பல நாடுகளிலும் திரிகோணமலையின் பழைய வரலாற்றினை ஒரு முறை மீட்டிப் பார்க்க வைத்தது அந்த நூலாகும்.
அந்த வகையில் இந்நூல் தமிழர்களை, தமிழர்மீது பற்றுக் கொண்டவர்களை ஒரு முறை வியந்துபார்க்க வைக்கும் என்பது திண்ணம். இது போன்ற பல்துறை நூல்களை வெளிக்கொணர உறுதுணையாக இருக்கும் என் உயிருக்கும் மேலான ஆதரவை நல்கிக் கொண்டிருக்கும் என் ஆதரவாளர்கட்கும், அழகிய முறையில் அட்டைப் படத்தை வரைந்துதந்த ஓவியர். ச. ஞான குருபரன் அவர்கட்கும், பல பிரச்சினைகள் மத்தியிலும் இந்நூலை வடிவமைத்து அச்சேற்றித்தந்த றெயின்போ நிறுவனத்தின் உரிமையாளருக்கும் அதன் உண்மை ஊழியர்கட்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
நன்றி
“யாழ் அகம்" 21, ஒளவையார் சாலை திரிகோணமலை O9.O82OO6
- 18

சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் அவர்களின் அணிந்துரை
ஈழத் தமிழ் இராச்சியங்கள் பற்றியும், தமிழரசர்களின் ஆட்சிபற்றியும், தமிழர்களின் நாகரிக வளர்ச்சி பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பல்லவம்தான் மணி பல்லவம், நாகதீவு, என்ற பெயர்களின் வரலாறு காணப்படுகிறது. தமிழ்ப் பேரவைகள் அவைகளை வளர்த்த அரசர்கள், புலவர்கள் அக்கால நூல்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்காபுரி மன்னான குபேரன் அளபுரியிலிருந்து ஆண்டது முதல் ஈழப்பல்லவர்கள் காஞ்சியில் பேரரசு அமைத்து ஆண்டது சறாகப் பல்லவர்களின் வீர வரலாறுகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. தென்னிலங்கைத் தமிழர்களின் அரசாட்சி அநுராதபுரத்தில் தமிழர்களின் ஆட்சி, கலிங்கர்களின் வருகை, கண்டிராச்சியத்தில் தமிழர்களின், தமிழரசர்களின் ஆட்சி பற்றி எல்லாம் காணப்படுகிறது.
அரச நெறிமுறைகளோடு அரசகுடும்ப மரபுகளோடு ஆட்சியியல் பற்றியும் அரசர்களின் பெயருடன் வரலாறு எழுதப்பட்டுள்ளது. அரசர் பண்பு, ஆட்சிக் கொள்கை, நாட்டாரியல், ஐம்பெருங்குழு, என்பேராயம். பதினெண் குடிகள் அவர்கள் அரசவையில் உறுப்பினராக இருந்து ஆட்சியில் பங்கு கொண்ட விதம், ஈழத்தமிழர் வெளியிட்ட நாணயங்கள் எல்லாம் விபரமாக உள்ளது. கடந்த காலத்தில் எமது முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் மரபுகள் எவ்வாறு அமைந்திருந்தன? அவர்களுடைய பழக்க வழக்க நாகரிகங்கள் என்ன? என்பது தான் இன்றைய வரலாறு ஆகும். பல்லவராச்சியம் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதிலும் பல உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை. பல்லவம் பற்றிய தகவல்கள் போதுமானதாக அமைந்திருக்கவில்லை. சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி களின் வழித்தோன்றலும் இருபதாம் நூற்றாண்டில் அரசனாக
- 19

Page 12
ஆட்சிசெய்த சுப்பிரமணியத்தின் பேரனுமாகிய பல்லவராசசேகரன் எழுதிய இந்நூல் பல்லாயிரமாண்டுகளாக மணிபல்லவ மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அரசர்களின் தலைமுறை ஆட்சியியல், குடிகளின் உரிமை, கலைகளின் வளர்ச்சி, சமய நிலை, தமிழ்மொழி உலகமெல்லாம் பரவிய வகை, தமிழ்ப் பேரவைகள் தமிழ் வளர்த்த வரலாறு பற்றிய செய்திகள் பற்றித் தெரிவிக்கின்றது. சங்ககாலத்திற்கும் முற்பட்டது மூன்று தமிழ்ப் பேரவைகளின் காலமாகும். அரசனுக்கும் குடிமக்களுக்கும் உள்ள உறவுபற்றி வரலாறுபற்றி அறிய விரும்புபவர்களுக்கு ஆவலைத்தூண்டும் வகையில் தமிழ் மானங்காக்க நடந்த போர்கள் பற்றியும் தொகுக்கப் பட்டுள்ளது. பல்லவராச்சியம் அந்நிய ஆட்சியாளர்களிடம் இறைமையை இழக்கவில்லை என்ற செய்தியும் காணப்படுகிறது. பல்லவராசசேகரன் அவர்கள் அறுபத்தினான்கு கலைகளையும் அறிந்தவர். இருபது கலைகளிற்குமேல் தேர்ச்சி உள்ளவர். தமிழ்க் கலைகைளையும் தமிழ் கலைஞர்களையும் வளர்ப்பதிலும் ஆர்வமுடையவர். சிறந்த ஆய்வாளர், தனித் தமிழ்ப்பற்று மிக்கவர். பல நூல்களின் ஆசிரியர். புதியகோணங்களில் சிந்திப்பவர். பல வருடங்களாகச் சேகரித்த தகவல்களைத் தொகுத்து அவற்றிற்கான மூலங்களுடன் இந்நூலை எழுதித் தமிழ் மக்களுக்கு, தமிழர் வரலாற்றினை அறிய வேண்டும் என்ற பேரவாவுடன் அளித்துள்ளமை தமிழர்கள் செய்த பெரும் பேறாகும்.
பல்லவராச்சியம் என்னும் இந்நூல் சரித்திர ஆய்வாளர்க்குப் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. சிந்தனையைத் தூண்டி ஆராய்ச்சிக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் இந்நூலின் கட்டுரைகள் அறிவுக்கு விருந்தாக உள்ளன. இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச் சிலவே உள்ளன. தமிழ் பற்றுள்ளவர்களுக்கும், தமிழ் நாட்டுப் பற்றுள்ளவர்களுக்கும், தமிழ்நாட்டாரியலை நேசிப்பவர்களுக்கும் இந்நூல் பெருவிருந்தாக அமைந்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகம் இதனை வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன்.
- 20

நூன்முகம் வாழ்க தமிழ் வளர்க தமிழர்
அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கிணங்க உலகின் முதல் மொழியான தமிழில் எல்லா எழுத்துக்களுக்கும் கூடிகூடிஅ; முதல் எழுத்தாக உள்ளது. தமிழினத்தின் அன்றைய நிகழ்வுகள்தான் இன்றைய வரலாறு ஆகும். இன்று நடப்பவை நாளைய செய்திகள். அவற்றை பொருத்தமான இலக்கியவகையில் சொல்லுவர். அவை தொண்ணுாற்றாறு இலக்கிய வகையில் ஒன்றாக இருக்கும். தமிழ் இலக்கியங்கள் கூறுவது வரலாறு ஆகும். அதனை ஆவலோடு படிப்பதற்கும் பேணுவதற்கும் ஆக, அதில் ஒன்பது சுவைகளும், கற்பனை உவமைகளும், காவிய வருணனைகளும் சேர்த்துக் கொள்வது தமிழ் இலக்கிய மரபு ஆகும்.
ஆட்சி செய்த பல்லவ அரசர்களின் பெயர்களில் தவறுகள் காணப்படுகின்றன. காலிங்கன், விசயகாலிங்கன், காலிங்க மாகோன் என்ற தமிழ்ப் பெயரை கலிங்க மாகன் என்று கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது. காலிங்கன் திரிபுவன சக்கரவர்த்தி என்றே அழைக்கப்பட்டான். அவன் மகனான குலசேகரனே சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்று முதலில் பாராட்டப் பெற்றவன். செயவீரன்தான் முதலில் செகராசசேகரன் எனப் புகழ் பெற்றவன். இவன் மகன் குணவீரன் என்பவனே முதலில் பரராசசேகரன் என்று போற்றப்பட்டவன். இவை விருதுப் பெயர்களாகும், பட்டப் பெயர்கள் அல்ல. சங்கிலி ஆட்சியாளனாக இருந்த பொழுதிலும் மன்னன் என்று யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசன் என்று அழைக்கப்படவுமில்லை. மன்னனுக்கு உரிய தகுதிகளை அவன் பெற்றிருக்கவில்லை. இந்தச் சங்கிலி கிபி 1620 ஆண்டு வரை ஆட்சி செய்ததாகவும் பின் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பானது. கிபி 1619ல் பறங்கியருடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்த வேறொரு சங்கிலியையும் முன்னைய சங்கிலியையும் ஒருவராகக் காட்டப்பட்டுள்ளது தவறாகும்.
- 21 -

Page 13
இலக்கியங்கள் நடந்த நிகழ்வுகளையே பதிவு செய்தன. அவற்றிளை சரியாக விளங்கிக் கொள்ளாதவர்கள். அவை புனைகதை என என்னுவதில் வியப்பில்லை. தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் வரலாறுகளே. இன்று தமிழ் மரபுகள் குன்றி புனைகதை இலக்கியங்களே அதிகமாக இயற்றப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலை பொய்யும் புனைகதைகளும் நிறைந்த தாரை தப்பறைகளே என்றார் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர். பறங்கியரும் அவர்களுடன் வந்த பாதிரிமாரும் நம் அரசர்களுக்கு எதிராகவும், கத்தோலிக்க மதத்திற்கும், பறங்கியருக்கும் சார்பாகவும், பறங்கியரை எதிர்த்தவர்களை மறைத்தும் எழுதியுள்ளார்கள். அந்நியர்களுடன் சேர்ந்து அடிமைச் சேவகம் செய்தவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளும் உண்மைகளை மறைத்தும் அந்நியருக்குச் சார்பாகவும், புனைந்து எழுதப்பட்டவையாகும். ஆனால் எப்படிச் சூரியனைக் கைகளால் மறைக்க முடியாதோ அதுபோல பல்லவ அரசர்களின் பெரும் புகழையும் ID6P[Döð (UDiquITÖl.
ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றினைச் சரியான முறையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்கள். ஏடுகள், பட்டயங்கள், சாசனங்கள், ஒவியங்கள், காவியங்கள், கதைகள், நாட்டியம், நாடகம், விழா என்று பல்வேறு வழிகளில் வரலாற்றைப் பதிவு செய்தார்கள். கோவில்களும், அரண்மனைகளும் அந்நியராலும் மாற்று மதத்தவர்களினாலும் அழிக்கப்பட்ட போது அங்கே பேணப்பட்டுவந்த ஏடுகள் முதலான இவ்வாவணங்கள் எல்லாவற்றினையும் அழித்துவிட்டார்கள். அந்த இடங்களில் மாற்றுமத வழிபாட்டு நிலையங்களையும் அந்நியரின் மாளிகைகளையும் அமைத்து வரலாற்றுத் தடயங்கள் மறைக்கப்பட்டன.
உண்மை ஒருநாள் வெளியாகும். உண்மைகள் உறங்குவதில்லை. இலக்கியச் சான்றுகள் ஏட்டுத்தகவல்கள், நாணயங்கள், எனது முன்னோரான பரராசசேகர சக்கரவர்த்தி 1520ல் சுழிபுரத்தில் எமது அரசமனையில் தங்கி வாழ்ந்ததுமுதல் அரசராக இருந்த இராசா சுப்பிரமணியம்வரை அரசர்களால் தொகுக்கப்பட்ட இராசமுறை, அரச
- 22

குடும்பத்தவர்களால் பேணப்பட்டு வந்த கதை, செவி வழி வரலாற்றுக் குறிப்புகள் முதலியவற்றிலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்களை, தமிழ் விஞ்ஞான முறையில் ஆய்வுசெய்து ஒழுங்கு படுத்தித் தொகுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். அரசதலைமுறைபற்றியும் அரசகுடும்பம் பற்றியும் சிலர் புனைகதை எழுதுவது கண்டிக்கப்படத்தக்கது. உரிமையை இழந்தோம் உடமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
ஊர்மக்கள் சிலர் உணர்வினை இழந்து பறங்கியருடன் சேர்ந்ததால் நாட்டை இழந்தோம். தமிழ்ப்புலவர்கள் சொற்குற்றத்தை மன்னித்தாலும் பொருட்குற்றத்தை ஏற்றுக் கொள்ளாது மறுத்தே வந்தார்கள். புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டதால் மாற்றாரினதும் அந்நியரினதும் கருத்துக்கள் இலகுவாக ஊடுருவின. ஒருவர் தமது வரலாற்றினை அறியாது இருப்பது இழுக்கு. தமது வரலாற்றைப் படித்துத் தெரிந்து வைத்து அதனை வாழையடி வாழையாக கற்பிக்காத இனம் உயர்ச்சி பெற முடியாது. விழுந்த இடத்திலிருந்து எழும்பி நிற்பதற்கு எமது முன்னோரின் வீரவரலாறுகளை அறிந்து கொள்வது அவசியமானது.
எமது வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டிலே தோன்றியது. அதற்கு முன்வெறும் மணற்றிடராக இருந்தது. ஆரியச்சக்கரவர்த்திகள் ஆரியர், காலிங்கனை கலிங்கன் என்றும் வரலாற்றுச் சதிகள் இடம் பெற்றுள்ளன. இவை புனையப்பட்ட கதைகளாகும். வரலாறு பற்றிய அறிவில்லாதவர்களின் நூல்களே வரலாறு படித்தவர்களுக்கும் ஆதாரமாக உள்ளது வேடிக்கையானது. பதின் மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்த பாண்டி மழவனும் செண்பக மழவனும் அரசியற்றினார்கள் என்ற புனைகதைகளையிட்டு வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
ஏற்றமிகு பல்லவர் மணிமுடியும் செங்கோலும் தாங்கி நந்திக் கொடியோடு பொன்னும் மணியும் பதித்த சிங்காதனத்தில் அமர்ந்து சிங்கை நகரிலிருந்து உலகின் பல நாடுகளையும் வென்று பேரரசர்களாக
- 23

Page 14
ஆட்சிசெய்த பெரும் புகழை நாம் மறந்தோமா? பல்லவ மக்கள் தொழில் வழியாக அரசசபையில் உறுப்பினராக அமர்ந்து பெருமகன் என்று பெருமையுடன் நடாத்திய மக்களாட்சியின் மகிமையை நினைத்தோமா? பல்லவ அரசர்களின் ஆட்சிக்காலத்தில் உலக வணிக மொழியாகத் தமிழ் சிறந்து விளங்கியதைச் சிந்தித்தோமா? ஏழுகடல் சீர்மை எங்கும் ஏலேல மகாராசனின் கப்பல்கள் நந்திக் கொடியோடு, அச்சமின்றி ஏலேலோ பாடி உலா வந்த அழகினை எண்ணிப் பார்த்தோமா? கிபி 1621ல் பறங்கியர் யாழ்ப்பாண நகரில் கோட்டைகட்டி ஆளத் தொடங்கியதுடன் யாழ்ப்பாண ராச்சியம் எனப் பெயர் இட்டனர். யாழ்ப்பாண ராச்சியம் பறங்கியர் ஒல்லாந்தர் ஆங்கிலேயரால் ஆளப்பட்டு வந்துள்ளது. தமிழர்களால் யாழ்ப்பான ராச்சியம் ஆளப்படவில்லை. யாழ்ப்பாணராச்சிய வரலாறு தமிழரசர் வரலாறு
S66).
ஐயத்திற்கிடமின்றி பல்லவர்களின் திறமைகளை உணர்த்தும் வகையிலும் தமிழரின் சிறப்புக்களை வெளிக்கொணரும் வகையிலும் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பல்லவ அரசர்களின் வரலாறுகளை தணியாததாகம் கொண்ட தமிழ்ப்பற்று மிக்கவர்கள் படித்துப் பயன் பெறுவதற்கு வசதியாக எழுதியுள்ளேன். ஆரியச் சக்கரவர்த்திகளை பாண்டியவம்சம், சோழ வம்சம், கலிங்கவம்சம், பிராமணவம்சம் என்று குறிப்பிட்டதில் எள்ளளவு உண்மைகூட இல்லை. உண்மைகளை மறைக்கப்போய் பல பொய்யை நுாறுதரம் சொன்னாலும் அது உண்மையாகிவிடாது. ஆரியச் சக்கரவர்த்திகள் பல்லவ அரச வம்சத்தினராவர். கிருதாயுகம் தொடங்கி பல்லவத்தில் தமிழ் அரசர்களின் ஆட்சி தொடர்ச்சியாக இடம் பெற்று வந்துள்ளது.
ஒருமித்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பேராசிரியர்களான சி. பத்மநாதன், சி.க.சிற்றம்பலம், செ. கிருஷ்ணராசா, கலாநிதி புலப்பரட்ணம் ஆகியோரின ஆய்வுகள், கருத்துக்கள் பெரிதும் உதவியுள்ளன. தமிழறிஞரும் ஆர்வலர்களுமான பண்டிதரத்தினம் சி.எஸ். நவரத்தினம், பொ. சங்கரப்பிள்ளை ஆகியோரின் ஆராய்ச்சிகளும்
-24

கருத்துக்களும் பயன்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு சொல்லிற்கும் தனித்தனி பொருளுண்டு. ஆறாம் ஜோர்ஜ் மன்னன் இந்தியச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டதால் அவர் இந்தியன் ஆகிவிட முடியாது. அவர் இந்தியாவின் சக்கரவர்த்தி என்பது பொருளாகும். அதுபோல ஆரியச் சக்கரவர்த்தி என்ற விருது இராமேசுவரத்தின் பிராமணச் சிற்றரசர்களான சேதுபதிகளை வென்றுபல்லவத்தின் கீழ் கொண்டு வந்ததால் புலவர்கள் வழங்கியது.

ஒராமல் ஒன்றையும் கூறக்கூடாது. செகராசசேகரன் பரராசசேகரன் ஆகிய மன்னர்களின் மருத்துவ நூல்களை வடமொழி யிலுள்ள நூல்களின் தமிழாக்கம் என்று குறிப்பிட்டது தவறாகும். இவை பல்லவ நாட்டின் பாரம்பரிய மருத்துவக் கலைபற்றிக் கூறும் சிறப்பான நூல்கள். எந்த வடமொழி நூல்களையும் தமிழாக்கம் செய்யப்பட்டவை அல்ல. அப்படியானால் எந்தவடமொழிநூல்கள் இவ்வாறு தமிழாக்கம் செய்யப்பட்டன என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். இது பல்லவ மருத்துவ மாண்புகளைப் பற்றிய அறியாமையைக் காட்டுகிறது.
ஒளவியம் பேசுவதால் பயனில்லை. கி.மு. 600ம் ஆண்டுகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இலங்கை முழுவதும் சைவர்களான தமிழர்கள் மட்டுமே வாழ்ந்திருந்தனர். அக்காலத்தில் நகுலேசுவரம், திந்க்கோணேசுவரம், திருக்கேதீச்சரம், முனிச்சரம், தண்டே சுவரம் ஆகிய ஐந்து சிவாலயங்கள் மிகவும் சிறப்புற்று விளங்கின என வெளிநாட்டு உள்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கோவில்களைச் சூழ பெருந்தொகையான தமிழர் உயர் நாகரிகத்துடன் வாழ்ந்திருந்தனர். அந்த இடங்களில் தமிழரசர்களின் தனியாட்சி சிறந்து விளங்கியது. சைவர்கள் நாமார்க்கும் குடி அல்லோபம், பணிவோம் அல்லோம் என்றிருந்தனர். சைவ நெறியை கைவிட்டதால் அடிமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டார்கள். இந்நூலில் கிபி 1948ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவு வரை எழுதியுள்ளேன். இராசா குலசேகரம் 1972ல் எம்மை இளவரசனாக நியமித்த வகையில் இராசமுறையிலிருந்து முதன்முதலாக
- 25

Page 15
அரசர்களின் விபரங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
இராமன், அருச்சுனன், சேர சோழ பாண்டியர் படை எடுத்து வந்து பலமுறை போரிட்டதால் ஈழத்தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். முந்நூறுக்கு அதிக ஆண்டுகள் அந்நியர்களுடன் போரிட்டதால் பெருந்தொகையான தமிழ்படையினர் இறந்தனர். போரின் வடுக்கள், விளைவுகள் ஏற்படுத்திய இழப்புக்கள் சொல்லுந்தரமன்று போர்களினால் பெரும் அழிவு ஏற்பட்டதால் தமிழர் மக்கட் தொகை மோசமாகக் குறைந்துவிட்டது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி முத்த தமிழ்க்குடி” எவ்வாறு நலிவடைந்து அடிமைப்பட்டார்கள் என்பதை சிந்திக்கத் தவறிவிட்டார்கள். பல்லவத்தின் வரலாற்றினை பல்லவராச்சியம் என்ற பெயரில் அக்கால வாழ்க்கைமுறை, தனிமனித தன்னாதிக்கம். தமிழ் மரபுகள், சமயநிலை, தொழில்கள் அறுபத்தினான்கு தமிழ், ஆட்சியியல், அரசதலைமுறை, அரசநீதிபற்றி எல்லாம் தொகுத்துள்ளேன். இந்நூலைத் தொகுக்க உதவியவர்களுக் கும், யாருடைu நூல்களில், கட்டுரைகளில் பேச்சுக்களில், ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டதோ அத்தனை பேருக்கும் அணிந்துரை வழங்கிய பேராசிரியர் இராமகிருஷ்ணன். திருஆ, கந்தசாமி அட்டைப்படம் வரைந்த ஒவியர் ஞானகுரு, பதிப்புரை வழங்கிய முத்தமிழ்மாமணி சித்தி அமரசிங்கம் இந்நூலை அழகாக அச்சிட்டு உதவிய வானவில் பதிப்பக பணியாளர்களுக்கும், அதிபர் சிவபாலனுக்கும், பல்லவராச்சியத்திற்காக காத்திருக்கும் வாசக நேயர்கட்கும் என்னை என்றும் ஆதரிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் எeர் நன்றி உரித்தாகுக.
23.12.2OO5 6 -ui gy Def LD5ific ful
பல்லவராசசேகரம் பல்லவ இளவரசர்.
- 26

1. ஈழத்தமிழ் இராச்சியங்கள்
ஈழத்தில் நல்லுள் இராச்சியம், வன்னிஇராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின் போது, 1505ம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது. போர்த்துக்கீசர் வருகையின் போது பேரரசன் பரராசசேகரன் நல்லுTரில் அரியணையில் வீற்றிருந்தான். போர்த்துக்கீசரினால் வெல்ல முடியாத படைபலமும், நாட்டுப் பற்றும், மக்களின் அரசு பக்தியும் காணப்பட்டதால், அவர்களால் பல்லவத்தினை வெற்றிகொள்ள முடியவில்லை. நூற்றுப் பதினைந்து வருடங்களின் பின்னர். நாட்டுப்பற்றற்ற நயவஞ்சகர்கள் போர்த்துக்கீசருடன் உறவாடி ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவர்களுடைய கொடுமைதாங்க முடியாமல் மக்கள். போர்த்துக்கீசரால் ஆட்சிக்கு வந்தசங்கிலியைகி.மு. 1620இல் போரின்போதுகாட்டிக்கொடுக்கப்பட்டுச்சிரச்சேதம் செய்யப்பட்டான். சங்கிலி தமிழ் ஆள்பதி மட்டுமே அரசுரிமை இல்லாதவன் அரசகுடும்பத்தில் தோன்றாதவன். நல்லூரில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்தது.
வன்னிராச்சியம் குலசேகரம் வைரமுத்து அரசனால் ஆட்சி செய்யப்பட்டது. பண்பாரவன்னியன் என்றபட்டப்பெயருடன்ஆட்சிசெலுத்தினான். 1803இல் போர்த்துக்கீசதளபதியால் தோற்கடிக்கப்பட்டானும் அவர்களிடமிருந்து தப்பியோடி பனங்காமத்திலிருந்து 1811 வரை பண்டாரவன்னியன் வன்னியின் மன்னனாக இருந்து ஆட்சிசெலுத்திய வீரவேந்தன். கரிகட்டுமூலை முதலியாரின் காட்டிக் கொடுப்பினால் வன்னியும் போர்த்துக்கீசர் வசமாகியது. கதிர்காமம், சந்தனகாமம் உட்பட 18 குறுநில அரசுகள் ஈழத்தில் இருந்துள்ளன.
மத்திய மலைநாட்டில், கண்டியை இராசதானியாகக் கொண்டு தமிழ் மன்னர்கள் தொடர்ச்சியாக ஆண்டு வந்தனர். 1815இல் கூட, ஆங்கிலேயரால் கண்டியை வெல்ல முடியவில்லை. கண்டி இராச்சியத்தில் இருந்த ஒரிரு சிங்கள அதிகாரிகள், ஆங்கிலேயரின் கைக்கூலிகளாக மாறி, தமிழ் மன்னனான முரீ விக்கிரமராசசிங்கனை காட்டிக்கொடுத்துநயஞ்சகமாகத் தமிழ் மன்னனையும், தமிழ் இராச்சியத்தையும் அழித்துவிட்டனர் என்று கூறப்படுவது சரியல்ல. மன்னரின் தவறுகளே. மன்னனை அழித்துவிட்டது.
- 27

Page 16
பல்லவராச்சியம்
கண்டி அரசனால், தனது மைத்துனருக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு, கோட்டைராச்சியமாகும். தமிழ் மன்னனான அழகக்கோனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு, அழகக்கோன்கோட்டை என்றே அழைக்கப்பட்டது. பின் அது ஜெயவர்த்தனக் கோட்டை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1505ல் போர்த்துக்கீசர் போரின்றி. கோட்டைராச்சியத்தைத்தம் மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர் என்பதை, அந்நியர் வரலாற்றுக் குறிப்புக்களினால் அறிய முடிகிறது.
போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபொழுது இலங்கையில் நான்கு இராச்சியங்கள் இருந்துள்ளன. ஐரோப்பியர் இலங்கையைப் பிடித்தபோது, நான்கு தமிழ் மன்னர்களின் தமிழ் ராச்சியங்கள் இருந்துள்ளன. கோட்டை இராச்சியம் மிகக்குறுகிய நிலப்பரப்பினைக் கொண்டிருந்தது. இலங்கை தமிழர்களின் ராச்சியங்களாக தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டு வந்தது என்பதை வெளிநாட்டு உள்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் தெரிவிக்கின்றன. எனவே அக்காலத்தில் அதாவது 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.
தமிழரசர் ஆட்சி
வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிகாலம் தொடக்கம் தமிழர் அரசாட்சிசெய்து வந்துள்ளனர். நாகரிகம் தோன்றியது ஈழநாட்டின் மேற்கு கரையில் அமைந்திருந்த பாலாவி. தங்கமாபுரிபட்டினம் (பொன்பரிப்பு) குதிரைமலை, மாதோட்டம் ஆகிய இடங்களில் ஆகும். தமிழ் நூல்களில் காணப்படுகின்ற வரலாற்றுக் குறிப்புக்களை நோக்கும் போது கிரேதாயுதம் கி.மு.499OO ஆண்டு தொடங்கி கி.மு. 331OO வரையான காலமாகும். அக்காலாத்திலே ஈழத்தின் மேற்குப்பகுதியில் நாகர்களும் மாவலியாற்றுக்கு கிழக்கே இயக்கர்களும் ஆட்சி செலுத்தினர். நாகர் வசித்த பகுதிநாகநாடு என்று அழைக்கப்பட்டது.
இயக்கர் ஆட்சி
புலத்தியநகள், மட்டக்களப்பு. பொத்துவில், சந்தனகாமம். கதிர்காமம் பகுதிகளை இணைந்து இயக்கர்களின் ஆட்சி நடைபெற்றது. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மக்கள் இயக்கர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் ஆட்சி அமைந்திருந்த இடம் இயக்க ஊர் என்று அழைக்கப்படும், புலத்தியநகள் அருகிலிருந்த இடமாகும். இயக்கர்கள் வேட்டையாடியும், காய்கனிகிழங்குகளை உணவாகக் கொண்டும் வாழ்ந்தார்கள். வேடர்களாகக் காடுகளிலே. காடுகளை
- 28

பல்லவராசசேகரம் அண்மித்த இடங்களில் இருப்பிடங்களைக் கொண்டிருந்தனர். மரவுரிகளையும் இலைதழைகளையும் ஆடையாக அணிந்தனர். மீன், இறைச்சி முதலியவற்றை நெருப்பில் வாட்டியும். தேனில் ஊறவைத்தும் உணர்டனர். சேனைத் தானியங்களான தினை. சாமி, வரகு தானியங்களையும் உணவாகப் பயன்படுத்தினர். பின்னர் காலம் செல்லச் செல்ல மண்னாலும், மரங்களினாலும் இருப்பிடங்களையும் ஆயுதங்களையும் அமைத்தனர். வெயில், காற்று. மழை, நெருப்பு இவர்களுடைய இருப்புக்களைப் பாதித்தது. இயற்கையைக் கண்டு பயந்தார்கள். அதனால் பஞ்சபூதங்களான மனன்,நீர், தீ வளி, வெளிஆகியவற்றை வணங்கினர். பாதுகாப்பிற்காக மரங்கிளைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தனர். விலங்குகள். பறவைகளைப் பழக்கிபயன்படுத்திக் கொண்டனர். இயற்கையைத் தெய்வமாக வணங்கினர். மக்கள் குழுக்களாகவே வாழ்ந்தனர்.
இவர்களின் சந்ததியினர் இன்றும் வேடராக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் பேசும் மொழி ஆதித்தமிழ் ஆகும். இன்று வளர்ச்சி பெற்ற தமிழ் மொழியை நாகவம்சத்தவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் வேடர்களோ ஆதித்தமிழ்பேசிவருகிறார்கள். ஆதித்தமிழ் மொழியை சிலர் எலுமொழிஎன்றும் சொன்னார்கள். அவர்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்களே பொரும்பான்மையாகக் காணப்படுகின்றன. அவர்கள் பேசுவது பேச்சுத்தமிழ் ஆகும். இயக்கர்கள் தமது வரலாற்றினை எழுதி வைப்பது குறைவு. நாகர்கள் எழுதிய வரலாறுகளில் இயக்கர் பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. கால ஓட்டத்தில் இயக்கர்களும் நாகர்களைப் பின்பற்றி நாகரிகத்தில் மேம்பாடு அடைந்தனர். இயக்கர் என்பது ஒரு இனமோ, ஒரு குலமோ அல்ல. அவர்களும் நாகரிக மரபுகளைப் பின்பற்றி நாகர்கள் ஆயினர். இன்றும் இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் வாழ்க்கை வசதிகளை. தேவைகளை பெற்றுக்கொள்ள நகர்ந்து சென்றார்கள்.
சிறப்பான ஒழுங்கில் அமைக்கப்பட்டு திறமையுடன் நன்றாகச் செயற்பட்டு வந்த முடியாட்சி அரசினைக் கொண்ட இயக்க, நாகராச்சியங்கள் இராமாயண காலத்திற்கு முன்பே ஈழத்தில் இருந்துள்ளன. நாகர்களின் இராசதானிகள் அரண்களுடன் கூடிய கோட்டைகளைக் கொண்டநகரங்களாகும். கோட்டைகளைக் கட்டுவதிலும், அதில் ஆயுதங்களைச் சேர்ப்பதிலும், தாக்கவும், காக்கவும் கூடிய ஏவுகணைகளைப் பொருத்துவதிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை, வலிமையை நாகர்கள் அடைந்திருந்தார்கள் கல் தோன்றி மண்
- 29

Page 17
பல்லவராச்சியம் தோன்றாக்காலத்தேவாளேடு முன்தோன்றிமூத்த குடி என்றான் சங்கப்புலவன். ஏனைய குடிகள் தோன்றுவதற்கு முன்னர், மிகத் தொன்மையான காலத்தில் தமிழினம் தோன்றியது. வீரத்துடன் முதல் தோன்றியவர்கள் தமிழ்க்குடிகள் வீரத்தோடு பிறந்தவர்களை மறவர் குழுவாக பண்டைக்காலம் முதல் பல்லவ பேணிவருகிறது.
நாக அரசு
ஆதிகாலத்தில் ஈழத்தின் மேற்குக் கரையில் பாலாவி, பொன்பரிப்பு. குதிரைமலை, மாதோட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக நாகநாடு அமைந்திருந்தது. இதன் தலைநகரம் பொன்பரிப்பு ஆற்றங்கரையிலே அமைந்திருந்ததங்கமாபுரிப்பட்டினம் ஆகும். பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, உலோகங்கள்முதலில் ஈழத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. பொன்விளைந்த படியால் இந்த நாடு பொன்னாடு என்ற பொருளில் ஈழநாடு என அழைக்கப்பட்டுவந்தது. ஈழம் என்றால் பொன் ஆகும். மக்களின் தேவைகளுக்காக முதன் முதலாக உலோகங்களைப் பயன்படுத்தியவர்கள் ஈழத்தமிழரான நாகர்களே, இயற்கையின் பாதிப்பு ஏற்படாத இடங்களைத் தெரிவு செய்து அங்குநகர்ந்து சென்று அமர்ந்தார்கள். அதுநகர்எனப்பட்டது. நகர்ந்தவர்கள் நாகர் எனப்பட்டனர். இயற்கைக்கும் அதன் தாக்கத்திற்கும் மாறாக அவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கைமுறைநாகரிகம் எனப்பட்டது.
ஆற்றோரங்களில் நீர்ப்பாய்ச்சி வெள்ளாண்மை செய்து (நீர்முகாமைத் துவம்) எப்பொழுதும், எல்லாப் பருவகாலத்திற்கும் உணவினைப் பெற்றுக் கொண்டனர். மேட்டுநிலங்களில் வீடுகட்டி வாழ்ந்தனர். உற்பத்திசெய்த உணவுப் பொருட்களைப் பாதுகாத்துப் பேணினர். இயற்கையிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் தம்மைப்பாதுகாப்பதற்கு ஏற்றவீடுகளைக் கட்டினார்கள். குடும்பமாக வாழத் தலைப்பட்டனர். சொத்துக்களைச் சேர்த்தனர். இயற்கைக்கு மேலாக இறைவன் ஒருவன் இருப்பதை தெரிந்து வணங்கினர். இருப்பிடங் களைக் கட்டி நகரினை நிர்மாணித்தார்கள். உணவினை எல்லோருக்கும் பங்கிட்டு வழங்கினார்கள்.
உணவு உற்பத்திக்கே முதலிடம் கொடுத்தார்கள். உணவில் தன்னிறைவு கண்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்கள். s
- 30

பல்லவராசசேகரம்
égatl Ple મનો Sg. 4a a ero — 3 2100 ዛማቸrማ تملك به دس
تکنسیوی نمی به وسlکذیب
2مراكى ما
[9ܫܟ݂ ܘܶܝܼܵ2
* Lor تھا۔سان &و {G-:ووی ܝܢܓܳܘܝܐ
ضیح دهد قابع
C e Far ons, N t l l వీబ్ల
„ e>4m51 شرين Sh
تا کند: نامهٔ نه s و / اند فیلمه ‘۹T فنیات نےسیع نام لمس

Page 18
பல்லவராச்சியம்
நாகர்கள் என்றால் பாம்புத்தலையுடையவர்கள், பாம்பு உடனுடை யவர்கள் என்றபஞ்சசீலரின் கதைகளும் உள்ளன. நாகர்கள் என்றால்நாகத்தை வழிபடுபவர்கள் என்றும் ஒரு விளக்கம். நாகர்கள் என்றால் நாகரிகத்தினை உருவாக்கியவர்கள் ஆவர்.நாகர்களினால் ஏற்படுத்தப்பட்ட பழக்க வழக்கமரபுகள் நாகரிகம் என அழைக்கப்படுகின்றது. நாகர்களின் வாழ்க்கைமுறை நாகரிகமாகும். மனிதநேயமிக்க, மனிதமேம்பாட்டுக்கான விழுமியங்களைக் கொண்ட சீர்திருத்தமான பழக்க வழக்கங்களே நாகரிகம் எனப்படும். ஒரு இனத்தின் வாழ்க்கை முறையை நாகரிகம் என்பது தவறாகும்.
ஈழத்தில் இயக்க அரசு, நாக அரசு, பல்லவ அரசு என்று மூன்று தமிழரசுகள் இராமாயண காலத்திற்கு முந்தியகிருதாயுகமான ஆதிகாலந்தொட்டு இருந்து வந்துள்ளன. முத்தமிழரசுகளில் முத்தமிழ் வேந்தர்களின் ஆட்சி நிலவியது. இராவணன் காலத்தில் தரைப்படை, வான்படை, கடற்படை இருந்ததாகக் காணப்படுகின்றது. நாகதீவினை தனிராச்சியமாகக் கொண்டு நாகர்கள் இராமாயண காலத்திற்கு முன்பிருந்தே ஆண்டுவந்துள்ளர்கள். பாரத காலத்தில் நாகதீவு அரசின் கொடியில் சிங்கம் பனை இலச்சினை பொறிக்கப் பட்டிருந்தது. பனை கொடியிற் பொறிக்கப்பட்டுள்ளதால் பனைநாடு என அழைக்கப்பட்டதும் நாகதீவாக இருக்கலாம்.

நாகதீவு. மணிபல்லவம், மணிபுரம். மணிக்கரை. பல்லவம். கண்டிநாடு என்ற பெயர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டினைக் குறிக்கின்றன. மணிபுரம், ஆமையுர். சோழியபுரம், மணிபல்லவம், இந்திரநகள் (இந்திரானை) என்பன சுழிபுரத்தைக் குறிக்கும் பெயர்கள் ஆகும். சிங்கநகள், சிங்கைநகர், சிங்கைநாடு, கண்டி, கண்டிநாடு என்ற பெயர்கள் சங்கை நகரினை (சங்கானையை)க் குறிக்கின்றன. பல்லவநாட்டு அரசர்கள் பல்லவர் எனப்பட்டனர். சிங்கை மன்னர் எனப்பட்டனர். பல்லவர்களின் அரசு பல்லவராச்சியம் ஆகும். நாகநாடு வன்னிமரத்தினால் வன்னிநாடு ஆகியது. வன்னிகுறுநில மன்னன் வன்னியன் ஆனான்.
இரணியன் கிருதாயுகத்திலே (கி.மு 499OO - கி.மு 331OOபாலாவிமண்டலம் என்ற நாட்டிலே பொன்பரிப்பில் இவன் ஆட்சி இடம் பெற்றிருந்தது. மேற்குக் கரையை அண்டி தங்கமாபுரிப் பட்டினத்தில் இராசதானி அமைந்திருந்தது. - 32

பல்லவராசசேகரம் 6) 35 ğb60d61T 6)ğb (I Lö5 é5u D LDITG3ğ5[TLLLD 6)j60DJ luT 6VoT6)]l LD600TL6VDLD
என்றழைக்கப்பட்டது. இரணியன் என்றால் பொன்னன் என்று பொருளாகும். பொன் போன்றவன், பொன்னைப் பெருமளவில் கொண்டிருந்தவனும் பொன்னுக்கு அதிபதியுமாவான். இரணியன் தன் புயபலத்தினாலும் வர பலத்தினாலும் பலநாடுகளையும் வென்றுதன்காலடியின்கீழ்கொண்டுவந்தான். பூமியைத் தோண்டி தங்கத்தினை அகழ்ந்து எடுத்துப் பயன் படுத்திய தோடல்லாமல் பிற நாடுகளுக்கும் பொன் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இரணியாட்சனி

இரணியன் தம்பியாகிய இரணியாதன் அல்லது இரணியாட்சன்
என்றழைக்கப்பட்ட மன்னன் ஈழத்தின் கிழக்கில் முத்தூரில் மாவலியாற்றுக்கு அருகில் இருந்து ஆட்சி செய்தான். அவனுடைய அரண்மனை அமைந்திருந்த குன்று இரணியாதன்மலை என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. அந்தக் குன்றின் உச்சியிலே பெரிய மாளிகை போன்ற கட்டிடம் அமைந்திருந்ததற்கான சான்றுகளாக இடிபாடுகள். கருங்கற்கள். செங்கற்கள் அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கல்உரல், சிறிய நீர்நிலை காணப்படுகின்றது. அம்மலையின் அடிவாரத்தில் பாறையில் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது. அத்துடன் திரிகலம் குறியும் பொறிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்படாத காரணத்தினால் சிதைவுகளுடன் காணப்படுகிறது. வாசித்துக்கொள்வதற்கு சிரமமானநிலையில்உள்ளது. இத்துடன் இணைந்த குன்றின்மேல் கல்லில் செதுக்கிய கட்டில், இருக்கை உள்ளதாக அதனைப் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதலாவது தமிழ்ப் பேரவை
மக்களுக்கு கல்வியை புகட்டுவதற்காகவும், நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதற்காகவும். தமிழ் மொழியையும். தமிழ்க்கலைகளையும் மக்களுக்குப்போதிப்பதற்காகவும். இறைவனேசிவபெருமானாக மனித உருவில் தோன்றி அவர்களுக்குத் தலைமைதாங்கி முதலில் தமிழ்ப் பேரவையை மகேந்திரமலை (மிகுந்தலை)யில் அமைத்து. அதன் தலைவராக இருந்து மக்களுக்கு அறிவினை வளர்த்தார். கி.மு. 35000 ஆண்டு முதல் கி.மு. 30000 ஆண்டுவரை, முதலாவது தமிழ்ப் பேரவை 5OOO ஆண்டுகள் நடை பெற்றிருந்தது. வேறுசில ஆய்வாளர் கி.மு. 29950 ஆண்டு முதல் கிமு 24950 வரை இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். அனைத்துலக தமிழாராய்ச்சி
- 33

Page 19
பல்லவராச்சியம் மாநாட்டு மலரில் ஆய்வாளர்கள் மிகுந்தலையில் சிவனின் குகைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதலாவது தமிழ்ப் பேரவையில் சிவன் சிவசாலம் என்ற நூலினை அருளிச் செய்தார். தமிழில் எழுந்த முதல்நூல் சிவசாலம். அதில் தமிழ் யாப்பு தமிழ்க்கலைகள் பற்றியும் இருந்தது என தெரிவிக்கின்றது. மகேந்திர மலையிலிருந்து சைவத் தமிழ் நால் வேதங்களும் சிவனால் அருளப்பட்டது. அகத்தியர் இத்தமிழ் பேரவையிலிருந்து சிவனிடம் தமிழ் கற்றார். சிவனிடம் பார்வதி, நந்திதேவரும் இங்கே அமர்ந்து தமிழ் கற்றார்கள். அகத்தியர் மேலும் பார்வதி. நந்திதேவரிடமும் தமிழ்க்கலை ஞானங்களைக் கற்றார்.
சிவனே நாட்டுமக்களின் ஆட்சியையும் நடாத்தியுள்ளார். நாட்டின் மன்னனே தமிழ்ப் பேரவைகளின் தலைவராகவும் இருந்துள்ளார்கள். மக்கள் நல்லாட்சியை அறிந்து கொள் வதற்காகவும் தமிழரின் அரசாட்சியின் விழுமியங்களை எடுத்துக் காட்டவும் ஆட்சியையும் நடாத்திக் காட்டி அரசியல் விஞ்ஞானத்தையும் போதித்தார்.
ஆதிகாலத்தில் இலங்கையுடன் சேர்ந்த பெருநிலப்பரப்பு இந்து சமுத்திரம் முழுவதும் பரவியிருந்தது. பெருவளநாடு என்ற அந்த நாட்டிலேயே ஈழமணடலம் என்ற இன்றைய ஈழம் அமைந்திருந்தது. முதலாவது கடற்கோளில் இந்தப் பெருவள நாட்டிலிருந்து ஒரு சிறுதுண்டு பிரிந்தது. இது குமரிக்கண்டம் என அழைக்கப்பட்டது. இது ஏழு நாடுகளைக் கொண்டது. பிரிந்த சிறுதுண்டுதான் வேங்கடத்திலிருந்து கூடல் நகள் (கடல் கொண்ட பாண்டிய தலைநகர்) வரை உள்ள நாடுகளாகும். அக்காலத்தில் இந்தியாவோ. இந்து சமுத்திரமோ இருக்கவில்லை.
இரண்டாவது கடற்கோளின்போது, இமயமலை (முன்பு கடல்) தோன்றியது. இந்தியா தோன்றியது. பெருவளநாடு (ஈழமணடலம் தவிர்த்து) அழிந்தது. மேருமலை அழிந்தது. இந்து சமுத்திரம் அவ்விடத்தில் தோன்றியது. இவை இரண்டும் கிரேதாயகத்திலே நடைபெற்றவை. இந்தியா தோன்றிய போது கூடல்நகள்கபாடபுரம்பஃறுளி ஆறு. பன்மலைகள்எல்லாம்கடல்கோள்கொண்டது. பெருவளநாட்டிலும் குமரிகண்டத்திலும் வாழ்ந்த மக்கள் தெற்கே அழிவுகள் ஏற்பட ஏற்பட வடக்கே நோக்கி நகர்ந்தனர். ஆகவே இந்தியாவின் முதற்குடிகள்
-34

பல்லவராசசேகரம் தமிழரேயாவர். அது மட்டுமல்ல சிந்துவெளி தொடக்கம் பாபிலோனியா மிசிரம் என்ற எகிப்து நாடு. பாரசீகம், சாலதேயம். (சால்டிய) சுமேரு (சுமேரியா) கிரேக்கத்தீவு, யவனபுரம் (கிறீஸ்) பழைய இத்தாலி, ஐபீரியா எனப்பட்ட ஸ்பெயின் நாட்டிலும் சென்று வாழ்ந்து நாகரிகம் பரப்பினர். பழந்தமிழர் இயற்கைச் சீற்றங்களால் எங்கெல்லாம் சென்று குடியேறினர் என்று முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் யாழ்நூலில் சொல்லியுள்ளார்.
இலங்கை, திருநாடு என்றும் அழைக்கப்பட்டது (Tronate). இற்றைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த மகாசித்தர், திருமூலர். ஈழநாட்டினை சிவபூமி என்றே அழைத்துள் ளார்கள். சிவபூமி என்பதால் ஈழம் திருநாடு. திருவிடம், திராவிடம் எனவும் அழைக்கப்பட்டது. இலங்கையில் அநேகம் கல்வெட்டுக்கள்கிமு. 3ம் நூற்றாண்டுக்குரியவை கூடிசிவ: என்னும் பெயர் தொடர்புடையனவாக காணப்படுகின்றன.
பண்டைய நாகரிகங்களான எகிப்தியம், சுமேரியம், பாபிலேனியம், யூதம், கிரேக்கம், உரோமானியம் என்பன எல்லாவற்றிற்கும் முந்தியது திராவிட நாகரிகமாகும். கி.மு. ஆறாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே திராவிடர்கள் வட இந்தியாவிலும் உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தாயகமாக விளங்கியது. லெமூரியாக்கண்டம் என்றநிலப்பரப்பாகும். பழம்பெரும் தமிழகமாக விளங்கிய லெமூரியாக்கண்டம் தான் தமிழர்களின் பூர்வீக தாயகமாகும். திராவிடம் என்பது தமிழ்மொழியே. திருநாட்டில் பேசிய மொழியே திராவிடம் ஆகியது. திருநாட்டு, திருவிடத்தில் தோன்றிய நாகரிகமே திராவிட நாகரிகம் எனப்பட்டது.
இமையமலையும் கங்கையும் தோன்றாமல் இந்தியாவின் வடகோடி கடலாக இருந்தது. திராவிடநாகரிகம் செழித்தோங்கிய அக்காலத்தில் இன்றைய வடஇந்தியா என்றநிலப்பரப்பு இருக்கவில்லை. சிந்துகங்கை சமவெளிப்பிரதேசம் போன்ற இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதற்கான காரணம் வடஇந்தியா பின்னரே தோன்றியது என்பதற்கு சான்றாதாரங்கள் ஆகும் என சுவாமி விவேகானந்தர், சர்ஜார்ஜ் அரிசன். போப்மாக்ஸ் முல்லர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளதை நோக்கலாம். லெமூரியாக் கண்டம் காலத்திற்குக் காலம் கடற்கோளினால் இந்துமாகடலுள் மூழ்கியதை நிலநூலாரும் கடல் ஆராய்ச்சியாளரும் உறுதிசெய்கின்றனர்.
- 35

Page 20
பல்லவராச்சியம்
கி.மு 18000ம் ஆண்டளவில் ஈழத்தின் கோணமாமலையிலிருந்து இமயமலை சென்று குபேரன் அளகாபுரியை அமைத்து அங்கிருந்து ஆட்சிசெய்து வந்தான். அளகாபுரியின் எல்லையிலிருந்து தெற்கே குமரிநாடுநாடுவரை இராவணன் வென்று அவன் உறவினர்களை அரசர்களாக இருத்தினான். அயோத்தி, தாடகைவனம், கலிங்கம், மகதம், ஆந்திரா. கன்னடம், சேர, சோழ பாண்டிநாட்டுப் பகுதிகளிலும் இராவணன் மேலாட்சிநிலவியது.
பொன்பரிப்பு. அனுராதபுரம், கந்ரோடை, மாமடு, மட்டக்களப்பு. கதிரவெளி இடங்களில் காணப்பட்ட ஈமச்சின்னங்களை ஆராய்ந்த மானிட வியளரான கென்னடி கூடிகூடிஇன்றைய திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களின் மூதாதையர்கள். இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்களே” என்று நவீன ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கும் வரலாறுகளுக்கு சான்று பகருவதாக அமைந்துள்ளது. கூர்ந்து நோக்கத்தக்கது.
"இலங்க்ை தமிழகமாகவே இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும், வட இலங்கை தமிழ்நாட்டை விடத்தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவரான இலங்கைத் தமிழர். இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர். அவர்கள் இலங்கை நாட்டு மக்களாவர்." என பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரை தெரிவித்துள்ளார். தமிழர் பண்பாடு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலந்தொடங்கி இலங்கையில் நிலைகொண்டுள்ளது. எனவன தனிநாயகம் அடிகள் தனது நூலில் தெரிவித்துள்ளார். “உலகின் முதல் மொழி தமிழ். முதல் இனம் தமிழினம் முதல் நாகரிகம் தமிழர்களின் நாகரிகம்" என்று முனிவர் பா. இறையரசன் தமிழர் நாகரிக வரலாறு என்னும் நூலில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய குலங்குடிகள் பற்றி ஆய்வு செய்த அமெரிக்க சமூக வியலாளர்களுடைய முடிவுகள் இலங்கைத் தீவிலிருந்தும் குடிப்பெயர்வுகள் தீபகற்ப இந்தியா நோக்கி இடம்பெற்றது என்பதனைக் காட்டுகின்றன. நெற்பயிர்ச் செய்கை, ஆடை நெய்யும் கைத்தொழில் இலங்கையுடாகவே தீபகற்ப இந்தியாவைச் சென்றடைந்தது என எடுத்துக் காட்டுகின்றனர். ஆகவே புராதன இலங்கையிலிருந்தும் குடிப்பெயர்வும் பண்பாட்டு பெயர்வாகவும் தீபகற்ப இந்தியாவை நோக்கி ஏற்பட்டுக் கொண்டமையை ஏற்றுக்கொள்ள முடிகின்றது எனப் பேராசிரியர் செ. கிருஷ்ணராசா தெரிவித்துள்ளார்.
-36 -

பல்லவராசசேகரம் இவ்வாறான குடிப்பெயர்வுகள் எந்தக் காலங்களில் மேற் கொள்ளப்பட்டன என்றுதமிழிலக்கியங்கள் தெரிவிக்கின்றன. முதலில் இலங்காபுரி குபேரன் இமயமலை அளகாபுரியில் குடியேறினான். பின்னர் இராவணேசன் ஏற்படுத்திய குடியேற்றங்களும், அரசுகளும் காணப்படுகின்றன. பின்னர் கி.மு. 10000ம் ஆண்டுக்குமுன் அகத்தியர். தொல்காப்பியர் முதலான சீடர்களுடனும் மாயோன் வழிவந்த அரசர்கள். பதினெட்டுப் பேர். வேளிர் 18 பேர் முத்தூர் அகத்தியர் நூலில் பதினெண் குடிகளுடனும் இந்தியா சென்று காடுகளை வெட்டி வளநாடு ஆக்கினார் என்று காணப்படுகிறது.
கி.பி.முதலாம் நூற்றாண்டிலிருந்துவில்லிஆதன் பல்லவத்திலிருந்து இந்தியா சென்று சேர, சோழ, பாண்டிய களப்பிரர்களை வென்று, தண்டை மண்டலம் அமைத்து, ஆதன் தண்டைச் சக்கரவர்த்தியினால் ஏற்படுத்தப்பட்ட அரசு, பல்லவ அரசும் குடியேற்றமும் ஆகும். அவனைத் தொடர்ந்து கி.பி. 12ம் நூற்றாண்டுவரை குடிப்பெயர்வு தொடர்ந்து பல்லவ மன்னர்களினால் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது. மணிமேகலை முதலிய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்த இலக்கியங்களில் காணப்படும் குடிப்பெயர்வுகளுக்கு அமெரிக்க ஆய்வுமுடிவுகள் இலங்கை வரலாறு) தகுந்த சான்று ஆகும்.
கடற்கோளினால் இடம்பெயர்ந்துசென்றஒரு குழுவினர் வடக்கேசிந்து நதிக் கரையில் அமர்ந்து சிந்துவெளி நாகரிகத்தை தோற்றுவித்தனர். வடி இந்தியாவிலும் கி.மு. 4000ம் ஆண்டளவில் திராவிடர் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தனர். சிந்துவெளி நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களே என்பதை கரப்பா, மொகஞ்சோதாரோ, அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன. டாக்டர் ஆல், டாக்டர் கால்டுவெல் போன்றோர்நிறுவியுள்ளனர். இன்னோரு குழுவினர் சுமேரியாவில் கி.மு.4OOO ஆண்டளவில் குடியேறினர். இதனை சுமேரியாவில் ஊர் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அரப்பன் முத்திரைச்சின்னங்கள் தெளிவுபடுத்துகின்றன.
லெமூரியாக்கண்டம் இந்துமாக்கடலில் பரந்திருந்த காலத்தில், லெமூரியாக் கண்டத்தின் பெருநிலப்பரப்பின் ஒரு பகுதியாக இலங்கை, ஈழம் அமைந்திருந்தது. சம்புத்தீவு. மூனாடு. ஒளிநாடு என்ற பெயர்களும் வழங்கப்பட்டது. பழம்பெரும் தமிழ்க் கண்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையும் அடங்கியிருந்ததென்பதை நிலநூலாரும் உறுதி செய்துள்ளனர் என, நா. நவநாமூர்த்திதிராவிடரின் பூர்வீகதாயகம், என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
سد 37 سب

Page 21
பல்லவராச்சியம்
சிவன் ஒளியாகத் தோன்றியது சிவனொளிபாத மலையின் உச்சியிலாகும் அக்காரணத்தினாலேயே அது சிவன்+ ஒளி+ பாதம்+ மலை என்பது, சிவனொளிபாதமலை ஆகியது. பிரம்மாவிட்டுணுவின் அகந்தையை அடக்க சிவன் பேரொளியாகத் தோன்றிய இடம் இலங்கையின் சிவனொளிபாதமலையாகும். அந்தப் பாதம் பதிந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் சிவனின் பாதம் பதிந்த சுவடுகள் காணப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் மலையேறி அந்தப் பாதச்சுவடுகளை தரிசித்துவந்தார்கள். சிங்களத்திலும் சமந்த கூட என்று சிவன் பெயராலேயே அம்மலை அழைக்கப்படுகிறதுசான்றாம்.
திருமாலும் பிரமாவும் தாங்களே முழுமுதற்கடவுள் என வாதிட்டுப் போரிட்டனர். அப்பொழுது சிவபெருமான் பெருஞ் சோதியாகத் தோன்றி அவர்களைச் சோதியின் அடியையும், முடியையும் காணச் சொன்னார். அடி, முடிகளில் ஒன்றை முதற்காண்பவரே முழுமுதற் கடவுள் என்று வானொலி ஒலித்தது. பிரம்மா அன்னப்பட்சியில் ஏறி முடியையும். திருமால் பன்றி உருக்கொண்டு அடியையும் தேடினார்கள். காணாது திரும்பிவந்து ஒன்று சேர்ந்து சிவனை வேண்டிப் பூசை செய்தார்கள். சிவன் அவர்கள் முன் தோன்றினார். தங்கள் அறியாமையினாற் செய்ததவறினை மன்னிக்குமாறு வேண்டினார்கள். சிவன் உங்கள் பூசனையை உவந்தோம். அன்னாரில் உங்களுக்கு தந்த பதங்களை (பதவிகளை) இன்னும் தந்தோம். வேண்டிய வரங்களைக் கேண்மின் என்று அருளிச் செய்தார். யாங்கள் சிதாகாசத்திலே தாண்டவம் செய்கின்ற கடவுளே தேவரீருடைய திருவடிகளே புகலிடமாகக் கொண்டு வழிபடுகின்ற தலையன்பைத் தாரும் என்று பிரார்த்திக்க. அவர் அதனை ஈந்து அக்கினிச் சோதியிலே மறைந்தருளினார்.
பரமசிவன் மறைந்த பொழுது, யாங்கள் வணங்கி எழ சோதிசுருங்கிச்சுருங்கிஉலகமெல்லாம் துதிக்கும்படிமலையானது. அதில் அவர் திருவடி பதிந்த சிவலிங்க வடிவான மலையை மும்முறை வணங்கித் துதித்து எங்கள் பாதங்களில் சென்றோம். அவர் அருள் செய்து பாதம் பதிந்த இடம் ஒளிமலை. சிவன் ஒளி மலை என அழைக்கப்பட்டது. அதுவே சிவனொளி பாதமலை ஆகும். (கந்தபுராணம் தெரிவிக்கிறது. இதனை இந்தியர்கள் திருவண்ணாமலை அருணாசலம் என்று தெரிவிப்பது பொருத்தமில்லை. இதன் காரணமாகவே இலங்கை ஒளிநாடு, எல்நாடு எனப் பெயர் பெற்றது. எல் நாட்டின் அரசன் ஏலேலன், எல்லாளன் என அழைக்கப்பட்டான்.
- 38.

பல்லவராசசேகரம் 2. இயக்கராச்சியம்
೫uoro
இயக்க வேந்தனான சுமாலி திரேதாயகத்தில் (கி.மு. 33100 முதல் கி.மு. 17500 வரை) ஈழத்தின் கிழக்குப்பகுதியை புலத்திய நகரிலிருந்து ஆண்டு வந்தான். கி.மு. 22000 ஆண்டளவில் இவன் ஆட்சி இடம்பெற்றிருந்தது.
Dmgöughinger
மன்னன் சுமாலியின் மறைவுக்குப் பின்னர் கி.மு. 21000ம் ஆண்டளவில் மகன் மாலியவான் ஆட்சிமிக நீண்டகாலம் இடம்பெற்றிருந்தது. விச்சிரவசு சித்தரின் மூத்தகுமாரன் வச்சிரவாணன் மாலியவானுடன் போரிட்டு அரசைக் கைப்பற்றினான்.
வச்சிரவாணனி
இளமையும் துடிப்பும் கொண்டவச்சிரவாணன், முக்கூடல்மலையிலே அகத்தியரின் வழிகாட்டலில், தமது மாமன் முறையான மயனைக் கொண்டு ஒரு நகரினைப் புதிதாக நிர்மாணித்தான். ஒளிவீசி இலங்கிக் கொண்டிருந்த அந்நகர் இலங்காபுரி என்று அமைக்கப்பட்டது. இலங்காபுரியிலே தனது இராசதானியை அமைத்தான். மாதோட்ட மன்னன் துவட்டா மகள் சித்திர லேகாவை மணந்தான். நாகரிகமான ஒரு சிறப்பான நல்லாட்சியை குபேரன் நடாத்தி வந்தான். விச்சிரவசு சித்தர் மனைவி இளி மகன் குபேரனுடன் இலங்காபுரிக்கு வந்து விட்டதால், விச்சிரவசு மாலியவான் மகள் கேகசியை மனந்தார். கேகசியின் வயிற்றில் இராவணன், கும்பகர்ணன். விபீடணன், காமவல்லிஎனநான்கு பிள்ளைகள் தோன்றினர். புலத்திய மகா சித்தர் வாழ்ந்த இடம் புலத்தியநகர் என்று அழைக்கப்பட்டு வந்தது. இன்று பொலனறுவா என்று பெயர் மருவி உள்ளது. மகாசித்தர் புலத்தியரின் மகனே விச்சிரவசு சித்தர் ஆவர். இராவணன் குபேரனுடன் போரிட்டு இலங்காபுரியைக் கைப்பற்றினான்.
(503uprgr 96massrurf
வச்சிரவாணன் இலங்காபுரியைவிட்டு வெளியேறி சிவனை நோக்கித்
தவம் செய்து வரம் வேண்டிப் பரதகண்டம் சென்று. இமயமலையில் புதிதாக
ஒரு நகரினை அகத்தியர் ஆலோசனைப்படி மயனைக் கொண்டு
- 39

Page 22
பல்லவராச்சியம் நிர்மாணித்தான். இமயமலை, வட இந்தியா முழுவதும் தன்னாட்சியின்கீழ் கொண்டுவந்தான். இமயமலைக்கு வடக்கே இருந்த கடல்வரை அவன் ஆட்சி பரவியிருந்தது. பெரும் செல்வனான குபேரன் செல்வம் கொழிக்கும்நகள் என்ற பெயரில் அளகாபுரிஎன்று பெயரிட்டான். செல்வத்திற்கு அதிபதியானதால் குபேரன் எனப்பட்டான். வடதிசைக் காவலனாகவும் நியமிக்கப்பட்டான். குபேரனுக்கும் சித்திரலேகாவிற்கும் நளகூபரன் என்ற மகன் இருந்தான். ஈழத்தமிழ் மன்னனான குபேரனின் இராசதானி அளகாபுரி இமயமலையில் தற்பொழுதும் உள்ளது. குபேரனுக்குப் பின் அவன் மகன் நளகூபரன் ஆட்சி அளகாபுரியில் நடைபெற்றுவந்தது.
இராவனேசுவரன்
இராவணன் வளர்ந்து குபேரனுடன் (8ւյTrflւ (6 இலங்காபுரியையும் புட்பக விமானத்தையும் கைப்பற்றினான். இலங்காபுரியை அளகாபுரி, அமராவதி நகர்களைவிடச் சிறப்பான நகராக மாற்றியமைத்தான். இராவணன் மாதோட்ட மன்னன் மகள் வண்டோதரியை மணமுடித்தான். உலகில் ஆயிரம் சிவாலயங்களைக் கட்டினான். இந்திரன் முதலான அட்டதிக்கு பாலகர்களுடனும் போரிட்டு வென்று அவர்களை அடிபணிய வைத்தான். இலங்காபுரியை பாதுகாக்க ஈழத்தின் வடக்கில் நாகதீவிலும், தெற்கில் பாதாள மலையிலும் (கதிர்காமத்திற்கு தெற்கே) மேற்கில் முன்னேச்சரத்தினும், மணிமலையி (முல்லைத்தீவு) லும் மாதோட்டத்திலும் தன் உறவினர்ளின் ஆட்சியை நிலை நிறுத்தினான்.
நவக்கிரகங்களை வென்று அடக்கினான். இமயமலையில் குபேரன் ஆட்சி நடைபெற்றது. அங்கே சென்று வென்று பின் அண்ணன் என்பதால் ஆட்சியை அவனிடமே ஒப்படைத்தான். அயோத்தியில் அநரணியன் என்ற சூரிய வம்ச அரசனைக் கொன்றான். தாடகை, மாரீசன். சுபாகு ஆகிய தன் உறவினர்களை இந்தியச் சமவெளியில் அரசர்களாக நியமித்தான். ஆந்திராவில் பெரும் கோட்டை கட்டி தனது தம்பி மகாதரனை பெரும்படையுடன் அரசனாக நியமித்தான். இதனால் ஆந்திரா அன்று திருலங்கா என்றே அழைக்கப்பட்டது. கன்னடநாட்டில் நண்பன்வாலியை ஆட்சி நடாத்த அனுமதித்தான். சோழ நாட்டில் கரனையும், பாண்டி நாட்டில் திரிசிரனையும் அரசர்களாக இருத்தினான். கரன் இருந்து ஆண்டஇடம் கரனூர் என்று அழைக்கப்பட்டது. பின் கருவுர் என்று மருவிக் காணப்பட்டது. திரிசிரன்
- 40

பல்லவராசசேகரம் இருந்து ஆட்சி செய்த இடம் திரிச்சிராப்பள்ளி என்று அழைக்கப்படுகின்றது.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஈடு இணையற்ற வீர வேந்தனாக இராவனேசுவரன் திகழ்ந்தான். இந்தியா முழுவதும் இலங்கைப் பேரரசு அவன் காலத்தில் பரவியிருந்தது. இவனுக்கு தேவலோகத்தில் நடந்த போரின்போது தேவலோக இராசகுமாரிதானியமாலினிஇவனைக்கண்டு விரும்பிஇரண்டாவது மனைவியாக மணந்து கொண்டாள். நூற்றுக்கு மேற்பட்ட அரசர்களுடன் போரிட்டு வென்று இந்திரனாக முடிகடினான்.
இவன் சிவபக்தி மிக்கவன். திருஞான சம்பந்தப் பெருமான் இவனுடைய சிவபக்தியை மெச்சி72 பதிகங்களிலும் 72 பாடல்களை இவனைப் போற்றிப் பாடியுள்ளார். ஏனைய திருமுறைகளிலும் அநேக பாடல்கள் இராவணன் புகழ்பாடுகின்றன என்பதால். இவன் சிவனால் பெரிதும் விரும்பப்பெற்ற அரசனாவான்.
தமிழ்க்கலைகள் அறுபத்தினான்கிலும் மிகவும்கிறந்து விளங்கியவன். நீதி தவறாதவன். நெறி பிறழாதவன் பெற்றதாய்க்காக கயிலை மலையைப் பெயர்த்தவன். அகத்தியகுருவுடன் இசைப்போட்டி நடாத்தியவன். எமனை அடக்கியவன். இந்திரனை தோற்கடித்தவன். பஞ்சபூதங்களை ஏவல் கொண்டவன். நவக்கிரகங்களை சிம்மாசனத்தின் படிகளாக படுக்க வைத்து அவற்றின் மீதாக ஏறிச்சென்று சிம்மாசனத்தில் அமர்ந்தவன். முக்கோடி வாணாளைப் பெற்று அயோத்தியின் முப்பது தலைமுறை அரசர்களுக்கும் இந்திரனாக இருந்தவன். மகளான சீதையை சோதிடர் கூற்றால் மிதிலையில் விட்டவன். புலத்திய சித்தரின் பேரன்.விச்சிரவசு முனிவருக்கும் கேகசிக்கும் மூத்த மகனாகத் தோன்றியவன். ஆட்சிக்காலம் திரேதாயுகமாகும். இவன் மகன் தேவலோக அரசனாக இந்திரசித்தன் என்ற பெயருடன் ஆட்சி செய்தவன். வண்டோதரி ஏழு சிறந்த பெண்களில் முதலாவதாக கணிக்கப்படுபவள்.
மணிமலைராச்சியம்
செங்கோன் என்ற மன்னன் திரேதாயுகத்தின் முற்பகுதியில் (கி.மு 25,000 ஆண்டளவில், மணிமலையை ஆண்டு வந்தான். அவன் வேற்று நாட்டுஅரசனுடன் போர்நடாத்திவெற்றிபெற்றான். அவன் வெற்றியை தனியுற்று சேந்தன் என்ற புலவர் “செங்கோன் தரைச்செலவு" என்ற காவியமாக பாடினார். - 41 -

Page 23
பல்லவராச்சியம் அந்நூலிற்கு முத்தூர் அகத்தியர் பாயிரம்பாடினார். அந்நூல் இரண்டாவது தமிழ் பேரவையில் அரங்கேற்றப்பட்டது.
இரணர்டாவது தமிழ்ப் பேரவை
பேராற்றருகில் பிறங்கு மணிமலையில் சீராற்றுஞ்செங்கோறிறற்செங்கோ - நேராற்றும் பேரவையிலே நுாற் பெருமக்கள் சூழ்ந்தேத்த பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி என்று தமிழ்விடுதூதுஎன்றநூல் தெரிவிக்கிறது. பேராற்றின் அருகிலே மணிமலையிலே செங்கோலாட்சியில் சிறந்த செங்கோன் தலைமையிலேநடந்த தமிழ்ப்பேரவையிலே புலவர் பெருமக்கள் பலர் கூடிப் புகழ்பாட உலகம் முழுவதையும் தமிழ்ப் பைந்தேவி ஆட்சி செய்தாள் என எடுத்துரைக்கின்றது. அன்று உலகம் முழுவதும் தமிழ்தான் ஆட்சிமொழியாக அரசு செய்து கொண்டிருந்ததை இது தெரிவிக்கின்றது.
செங்கோன் தரைச்செலவு என்ற நூலிற்கு அகத்தியர் பாடிய பாயிரம் செங்கோன் தரைச்செலவைச் சேந்தன் தனியுரான் துங்கன் தமிழ்தாப்புலிதொடரால் - அங்கிசைத்தான் சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவழி அக்கரக்கோநாமஞ்சுவோம். செங்கோல் ஒச்சிய செங்கோன் மன்னருடைய தரைச்செலவு, போர் வெற்றியை தனியுற்று சேந்தன் என்ற புலவன் தாப்புலிப்பா தொடரால் சக்கரன் என்ற மன்னன் தலைமையில் இரண்டாவது தமிழ்ப்பேரவை கூடியபோது அவன் முன்னிலையில் அரங்கேற்றினான் என்று குறிப்பிடுகின்றது. இந்நூல் அரங்கேற்றப்பட்ட காலம் கி.மு. 14,000 ஆண்டுக்கு முற்பட்டது என்று திருமந்திரத்தில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது தமிழ்ப்பேரவையில் இருந்த தமிழ் இலக்கண நூல்கள் நெடுந்துறையன் பெருநூல். இடைகழிச்செங்கோடன் இயல்நூல் ஆகும். இந்த மணிமலையில் நடந்த தமிழ்ப் பேரவையில் மன்னன் சக்கரன் தலைமையில் நடைபெற்ற காலத்தில் கூடிய புலவர்களுள் தனியுர்ச் சேந்தன். முத்தூர் அகத்தியன், பேராற்று நெடுந்துறையன். இடைகழிச் செங்கோடன் சிலராவர்.
- 42

பல்லவராசசேகரம்
கும்பகர்ணனி
சக்கரன் ஆட்சிக்கு பிறகு கும்பகர்ணன்மணிமலையின் வேந்தனாக இராவனேசுவரனால் முடிகட்டப்பட்டான். கும்பகள்ணருடைய ஆட்சிக்காலத்தில் அவனுடைய நாட்டின் கொடியில் சிங்கம் இலச்சினையாக பொறிக்கப்பட்டிருந்தது. சிங்கக்கொடி மணிமலை அரண்மனையில் ஒளிவீசிப்பறந்து கொண்டிருந்தது. முதன்முதலில் சிங்கக்கொடி இலங்கையில் தமிழ்வேந்தன் கும்பகள்னனால் மணிமலை இராச்சியத்தின் கொடியாக அமைக்கப்பட்டது. திரேதாயுகத்தில் (கி.மு.2OOOO) ஆகும். மணிமலை முல்லைத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.
மதுவகரனி
இராவணனால் நாகநாட்டில் அரசனாக நியமிக்கப்பட்டவன். இவன் ஆட்சிசெய்யும் இடம்மதுவாட்சி, மதவாச்சிஎன மருவியுள்ளது. மதுவகரன்கேகசி தங்கை கணவனாவன்.
மயில்ராவணனி ஆட்சி
இலங்காபுரிக்குத் தெற்கே பாதாளமலையில் மயில்ராவணன் என்ற இராவணனின் தம்பி முறையானவனின் ஆட்சி இராவணன் காலத்தில் நடைபெற்றது. இம்மன்னனின் கோட்டை தற்பொழுது கடலுள் மூழ்கிவிட்டது. சின்னராவணன்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. புதைபொருளாளர்கள் கடலின் கீழ் அந்தக் கோட்டை இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். மேலும் அக்கோட்டைக்கு மேலால் கப்பல்கள் செல்லும்போது ஆட்டம் கொடுக்கின்றதாக சொல்கிறார்கள். இவை முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. இக்கோட்டை கதிர்காமத்திற்கு தெற்கே, கிழக்காக சற்றுத்தள்ளி கரைக்கு அண்மையாக அமைந்துள்ளது.
திரேதாயுகத்தில் முனிச்சரம் என்ற சிவன் கோவிலை அங்குள்ள மக்களிற்காக கட்டி தனது சிற்றரசு ஒன்றையும் நிறுவினான் இராவணவேந்தன். சைவப்பெருமக்களுமான நாகரிகமிக்க தமிழர்கள் அங்கு வாழ்ந்திருந்தனர். சட்டமுனி என்ற முனிவர் வழிபட்ட காரணத்தினால் முனிச்சரம் எனப்பெயர் பெறலாயிற்று. பதினெண் சித்தர்களில் ஒரு சித்தராக சட்டமுனிவர் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இப்பகுதி பாலாவி மண்டலம் என்ற நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. பெருமளவில் மக்கள் நெருக்கமாக காணப்பட்ட ତd நகரமாக இருந்துள்ளது.
- 43

Page 24
பல்லவராச்சியம்
3. நாகராச்சியம்
மாதோட்டத்தில் இராவனேசுவரன் காலத்தில் மயன் என்ற மன்னனின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மகரமீன் கொடியில் சின்னமாக பறந்து கொண்டிருந்தது. மயன்மகள் வண்டோதரியை இராவணன் மனம் செய்துகொண்டான். மயன் கட்டிய சிவாலயம் பின்னாளில் கேது வழிபட்டதால் திருக்கேதீச்சரம் ஆயிற்று. மயனின் முன் னோர்களே நாகரிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களாலே அமைக்கப்பட்டதுதான் இராட்சதக்குளம். திரேதாயுகத்தில் ஆரம்பகாலத்தில் நாகர்களினால் இது கட்டப்பெற்றது. இது பீனிசிய வாணிபர்களையும் எகிப்திய, அராபிய வணிகர்களையும் கவர்ந்த இடம். ஆரம்பகால நாகரிகத்தின் சின்னமாகவும் நாகர்களின் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் இருந்தது.
முனிச்சரம் இருந்து தொடர்ச்சியாக வடக்கு நோக்கி சிலாபம், புத்தளம், பொன்பரிப்பு. நானாட்டான். முசலி மாதோட்டம், விடத்தல்தீவு. பல்லவராயன்கட்டு, பூநகரி, கல்முனை (பூநகரி). யாழ்ப்பாணம் வரை நாகரிகத்துடன் முன்னேற்றமாக வாழ்ந்த மக்களின் பெருந்தொகையான, அழிந்து போன இடிபாடுகள், கரையோரம் நெடுகிலும் காணப்படுகிறது. சிதைந்து போன சிவாலயங்கள் முனிச்சரம், உடப்பு. காரைதீவு (புத்தளம்), கல்லாறு. மாதோட்டம் மற்றும் அரசபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. முற்காலத்தில் சைவர்கள் தான் அங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாகும். மறிச்சுக் கட்டியி லிருந்து ஏழரைக் கல்தொலைவிலுள்ள கல்லாறு கோவில் காணப்படுகின்றது.
டீகுவேராதமது இலங்கை வரலாற்று நூலில் தெரிவித்திருப்பதாவது, 1574ம் ஆண்டு மாதோட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடாத்திய பொழுது உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும். அழிவு இடிபாடுகளை அத்திவாரத்திலிருந்து அகற்றும்போது ஒரு கல்லின் அடியில் இரும்பு சங்கிலி கிடைத்தது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேறெங்கும் காணாத மிக அருமையான வடிவம். தான் இந்தியா முழுவதும் முயன்றும் அதைப்போல ஒன்றைவடிவமைக்கக்கூடிய ஒருவரை தன்னால் கண்டுகொள்ளமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மாந்தை நாகர்களான மயன் வம்சத்தாரின் கைத்திறம் ஆகும். ஈழத்தமிழர்களின் கலைத்திறன் ஆகும். மெகஸ்தனிஸ் என்ற
- 44

பல்லவராசசேகரம் சந்திரகுப்ஜத்திலிருந்த கிரேக்கதூதுவர் கி.மு.3ம் நூற்றாண்டில் பணியாற்றியவர் தமது எழுத்துக்களில் பொன் உற்பத்தியிலும் பெரியமுத்துக்களின் உற்பத்தியிலும் இந்தியாவை விட இலங்கையில் அதிகம் உற்பத்திசெய்யப்படுகிறது. இதனால் மேனாட்டுவணிகர்கள்வடஇலங்கைக்கு வருகிறார்கள்என்றும்குறிப்பிட்டுள்ளர்.
துவாபரயுகத்தில் தமிழ் அரசுகள் (கி.மு 17500-கி.மு 3100)
ஈழத்தின் வீரமகேந்திரபுரத்தில் சூரபதுமன்ஆட்சிநூற்றெட்டுயுகங்கள் நடந்ததாக கந்தப்புராணம் தெரிவிக்கிறது. வீரமகேந்திரபுரம் என்பது கதிர்காமத்திற்கு தெற்கே அமைந்திருந்தது. கந்தசுவாமியாரால் கடலுள் அமிழ்த்தப்பட்டது. கடலின் கீழ் காணப்படும் பெரிய ராவணன் கோட்டை என அழைக்கப்படும், கோட்டை சூரன் கோட்டையாகும். கதிர்காமத்தில் சில வருடங்களிற்கு முன்னர்வரை கரன்கோட்டை என்ற கொத்தளம் காணப்பட்டது. அது தற்பொழுது அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது. வீரமகேந்திரபுரம் இலங்கையின் தெற்கில் கிடந்த ஒரு சிறு தீவு ஆகும் என பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை தெரிவித்துள்ளார்.
காசியமுனிவரின் அறிவுரை
சூரபதுமன், சிங்கமுகன், தாரகன். அசமுகி தந்தையாகிய காசியர், தன்பிள்ளைகளை நோக்கிக் கூறிய அறிவுரை. அறிவால் அமைந்த பெரியோர்கள் ஆராயத்தக்கவை. பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் வேதாகமங்கள் எல்லாவற்றிலும் உணர்த்தப்படுவன இவையே. நித்தியராய், வியாபகராய், ஞானானந்தமயராய், உயிர்கள் பொருட்டுப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்யும் சிவபெருமானே பதிஎனப்படுவர். வேண்டுதல் வேண்டாமையிலாத சிவபெருமா னுடைய இலக்கணத்தைச் சொல்லுதல் யாவரிற்கும் அரிது. வேதங்களினாலும் துணியப்படாத அவருடைய இலக்கணத்தை இத்தன்மையது என்று நாம் பேச அல்லோமா? ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாகிய பாசங்களாலே பாதிக்கப்பட்டுள்ள பசுக்களகிய உயிர்கள் எண்ணிலாதன. அவை தாம்தாம்செய்தநல்வினைதீவினைகளினாலே இடையறாது பிறந்தும் இறந்தும் உழலும், கல்வியும் வீரமும் செல்வமும் வலிமையும் பிறவும் நீர்க்குமிழிபோல நிலையில்லாதனவாம். அறம் என்று ஒரு பொருளுணர்டு. அது
- 45

Page 25
பல்லவராச்சியம்
இருமையின்பத்தையும் எளிதிற் பயப்பது. அது அருமையின் எய்தும் பொருள். அறத்தைச் செய்தால் அன்பும் அருளும் உண்டாகும். அவை உண்டாக தவம் உண்டாகும். அஃதுண்டாக அவ்வுயிர் சிவபிரானை அடையும். பிறவிக்கு காரணமானமும்மலங்களின்றும் நீங்கிபேரின்பத்தை அனுபவிக்கும். ஆதலால் தவம்போல சிறந்தது வேறொன்றுமில்லை. தவம் செய்தே தேவர்களாகிய பிரம்மா, விட்டுணு, மேலான இருமையின்பத்தைப் பெற்றார்கள். பாவத்தை விலக்குங்கள். தவத்திற்கு உயர்வானது மில்லை, ஒப்பானதுமில்லை. தருமத்தைச் செய்யுங்கள். சிவபெருமானை தியானித்து பெரும் தவம் புரியுங்கள் என்றார். தாயாரோ. தவம் செய்து வரம் பெற்று உவகை ஆட்சிசெய்யுங்கள் என்றார்.
சூரபதுமன்
சூரபதுமன் காசிபமுனிவரிற்கும் மாயைக்கும் பிறந்த மூத்தமகன். காசியர் புலத்திய நகரிலே வாழ்ந்தவர். வரத்தினாலும் பலத்தினாலும் 1008 அண்டங்களையும் 108 யுகங்கள்ஆட்சிசெய்ததாக கூறுகிறது. இங்கு அண்டங்கள் என்பது ஒருநில அளவு அகும். அதுபோல 108 யுகங்கள் என்பதும் 108 ஆண்டு களைக் குறிப்பிட்டதாகக் கூட இருக்கலாம். யுகங்கள் தோறும் சொற்களின் பொருளும், மனிதனின் வயதும் மாறுபட்டுக் காணப்படுகிறது. கலியுகத்தில்தான் மனிதனின் வயது 100-120ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. மனிதனுடைய தோற்றமும் அவ்வாறே பருமனும் வேறுபடுகின்றது. கிருதாயுகத்தில் மனிதனின் வாழ்நாள் ஆயிரமாண்டுகளாக இருந்துள்ளதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
நவீன விஞ்ஞானிகள் தற்பொழுது கி.மு.30000ஆம் ஆண்டுகால மனித உடலை பழுதுபடாதநிலையில் ஆபிரிக்காவில் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த உடல் எட்டு அடி உயரமாகக் காணப்பட்டது. அந்த உடலைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் அந்தக்கால மனிதரின் வயது காலம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் நமது தமிழ் வரலாற்று உண்மைகளை மேனாட்டு விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. எமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் ஆய்வுகள் மேனாட்டினரால் நடுநிலையான ஆய்வு செய்யப்பட்டால் மேலும் பல ஆதார உண்மைகள் வெளிவரலாம்.
சூரபதுமன் மாதோட்டத்தில் அமைந்திருந்த அரசின் விசுவண்ணா
- 46

op ܚ பல்லவராசசேகரம்
فشار ۳ نه رای éq 1, *15 oo — 3 DO
دو مست کم 6 بجائے سمص۔
یہ لیتی طلاقی شوی لأنھا وجھ فاولمسمو@ با نام سه» نsh> .
ಟೆಸ್ಲಿ...೬ O - ;ނލ"
ston Paese lar
os دخط ہییے ہو
نة ما نعساكسوي
ثم 5 مهما هي واسمه: gesoro o
N V 、曾] ડે૭. છને \ سیاه» سوء ا
' ... ܢܠ ܘ s \ مع نانوم
ہوrnنمونہء لاهیم شده، نه بهع
v s علدم كونكمrnفه 58*్య) Pe. Allom
د - - - كمعلمزدولة Anok 岛 4པ་མabམཁག་ 34, l-or
e مل ټولمنليکنه ستايم
- 47

Page 26
பல்லவராச்சியம் BTC LCCCCL LCCCCCCLC LTTLLCLMMMC CTT TCCTLLTLLL LLLLCCTTTBTTS
இவர்களை சுராபானம் அருந்திய மாற்று மதத்தவர்கள் அசுரர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது மது அருந்தாதவர்கள் அசுரர்களாவர். மது அருந்துபவர்கள் சுரர் எனவும் அழைக்கப்பட்டனர். காசிபமுனிவரின் மக்களான சூரபதுமன். சிங்கமுகன், தாரகன் எல்லாரும் சிவனை வழிபடும் சைவமார்க்கத்தில் ஒழுகியவர்கள் ஆகும். மது அருந்தாது வெறுத்த இவர்களை அசுரர் என்றனர் சிவநிந்தனையாளர்.
சிங்கமுகனி
திரேதாயுகத்திலே ஈழத்தின் நடுப்பகுதியிலே சிங்கமுகன் கோட்டை இருந்துள்ளதாக கந்தபுராணம் தெரிவித்துள்ளது. சிங்கமுகன் போரிலே தோற்கடிக்கப்பட்டாலும் அவனுடைய அரண்மனை சிங்கத்தின் வடிவிலே ஒரு குன்றிலே அமைக்கப்பட்ட இராசதானிமுருகப்பெருமானால் அழிக்கப்படவில்லை. அமர்ந்திருக்கின்ற சிங்கத்தின் வடிவிலே அந்த அரண்மனை அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. சிங்கமுகன் கொடிசிங்கக்கொடியாகும். கந்தன்கருணை என்ற கந்தனின் வரலாற்றினை கூறும் திரைப்படத்தில் சிங்கமுகன் கோட்டையின் அமைப்புநல்ல வடிவாகக் காட்டப்பட்டது. அவர்கள் வசித்த அந்தக்கோட்டையில் சிங்கமுகன் இறப்பிற்குப்பின்னர் வம்சபுத்திரர்களால் ஆளப்பட்டுவந்தது. அவ்வாறு குன்றில் சிங்கவடிவில் அமைத்து சிங்கமுகாசுரனால் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டகோட்டையே சிங்ககிரிக்கோட்டைஎன அழைக்கப்பட்டுவந்தது. இன்று சிங்களத்தில் சிகிரியா என அழைக்கப்படுகின்ற இடமாகத்தான் இருத்தல் வேண்டும். இவர்களின் வழிவந்தவர்கள் அசுரர்கள் என அழைக்கப்பட்டனர் அசுரேந்திரனால் அமைக்கப்பட்ட இராசதானிஅசுரபுரிஎன பெயரிடப்பட்டிருந்தது. அவர்களால் கட்டப்பட்ட சிவால யத்தின் மூலவர் அசுரேசர் என்றே அழைக்கப்பட்டார். அநுராதபுரியில் காணப்படும் சிவாலயத்தின் மூலவர் முற்காலத்தில் அசுரேசர் என்றே அழைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. தற்பொழுது அநுரேசர் என்று அழைக்கப்படுவதாக அறிகிறோம்.
“சிங்ககிரியின் பளிங்குச் சுவர்களில் பொறிக்கப்பட்ட ஒவியங்களை
ப்பற்றிய பாடல்கள் குறிப்பிடத்தக்களவு தமிழ்மொழியில் உள்ளன. தமிழ்ப்
பாடல்கள் இன்னும் பிரதி செய்யாமல் காணப்படுகின்றன. இவை 8.9.10.ம்
நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். சில இக்காலத்திற்கு முற்பட்டவையாகவும்
உள்ளன. இவை அநுராதபுரகாலப்பண்பாட்டுவரலாற்றிற்கு முற்பட்டவையாகவும் - 48

பல்லவராசசேகரம்
உள்ளன" என்று பேராசிரியர் செ.கிருஷ்ணராசா இலங்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார். இவை பல்லவ நாகர்களின் கைவண்ணமாக இருத்தல் வேண்டும். பல்லவ அரசர் காலத்தில் இவ்வாறான ஒவியங்கள் அவர்களால் தீட்டுவிக்கப் பெற்றன.
இதனை உறுதிசெய்வதுபோல அமைந்துள்ளது. சிகிரியாக் குன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டத்தில் ஏழுவரிகளில் தமிழ் எழுத்துக்கள் காணப் படுகின்றன. இது தமிழரசர்கள் அக்குன்றில் வாழ்ந்தார்கள் என்பதையும் அங்கே தமிழ் நாகரிகம் நிலவியது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. மலைக்குன்றுகளைக் குடைந்து ஓவியம் தீட்டும் மரபுபல்லவர்களினுடையதாக காணப்படுகின்றது. தென் இலங்கையில் காணப்படும் சிங்கச்சிலை வடிவம் பல்லவர்களுடையதாக காணப்படுகின்றது. ஈழநாகர்களின் கைச்சித்திரங்களாகிய கற்சிலைகளும் குகை ஓவியங்களும் இன்றும் மேலைத்தேசத்தவர்களாற் புகழ்ந்து கொண்டாடப் படுவனவாய் இந்தியாவிலும் இலங்கையிலும் பல இடங்களில் காணப்படுகின்றன.
சிங்ககிரியில், 23 விதமாக பெண்களைச் சித்தரிக்கும் ஒவியங்கள். பாறைகளில் தீட்டப்பட்டுள்ளன. அப்பெண்கள், காசியப்பனின் அரச சபையில் இருந்தவர்களே எனக் கூறுகிறார்கள். சிலர் மென்மையான பூக்களைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலவும், வேறுசிலர் பூவிதழ்களைத் தட்டுக்களில் ஏந்திக் கொண்டிருப்பதையும் காணப்படக்கூடியதாக உள்ளது. அவர்களது இடையழகும், கையழகும் எழிலுருவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காசியப்பன் ஒவ்வாத சாதிப்பரம்பரையைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. அவன்தாய்தமிழ்ப்பெண் என்றும் சிலர் கூறுகிறார்கள் தன் சகோதரன் படையெடுப்புக்கு அஞ்சி ஓடிவந்து கி.பி. 473லிருந்து கி.பி 491வரை, 18 வருடங்கள் பயத்துடன் வாழ்ந்தவனால், இப்படியான குன்றினைக்குடைந்து கோட்டை அமைத்து. அதில் இவ்வளவு சிறந்த ஓவியங்களைத் தீட்டுவித்தல்நடைமுறையில்சாத்தியமில்லை.
மகாவம்சத்தில் சிகிரியாக் கோட்டை போன்று ஒரு பாரிய வேலைப்
பாட்டைப்பற்றி ஒரு சிறு விவரமேனும் கூறப்படாததை எவ்வாறு விளக்குவது?
என்றுகைகள் மொழிபெயர்த்தமகாவம்சத்தில் தன்முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த வேலைப்பாடுகள் பற்றி மகாவம்சத்தில் ஒரு
வியழமும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஓவியமரபுகள் பாணிகள் எல்லாம் தமிழ்ப்
பாணியாகவும் ஈழ ஒவியநாகர்களின் தமிழ் மரபாகவும் காணப்படுகின்றன. سب 49 --

Page 27
பல்லவராச்சியம் நூற்றுக்கணக்கான ஒவியங்கள் சிங்களப் பகுதிகளில் காணப்பட்டாலும் இதை ஒத்ததாக இல்லை. இந்தியாவில் பல்லவர்களின் ஒவியங்களை ஒத்துக் காணப்படுகிறது. வயிற்றின் மடி. தசை முதலியவற்றிலிருந்தும் இளமுலைகளின் வட்ட வடிவிலிருந்தம் உயிர்பின் இனிமை புதுமை காணப்படுகிறது. சிங்கமுகன் காலத்தில் பணிப் பெண்களாக கடமையாற்றிய தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமையாக இருக்கலாம். இவ்வோவியங்களின் முகக்கூறுகள் மனித இன வகையைக் குறிக்க மற்றைய பகுதிகள் ஏதோ பழைய நியமத்தைக் குறிக்கின்றன. மிகைப்படுத்தியமுலைகளும் இடுப்பும். ஒடுங்கிய ஒருசானன் அளவு இடையும் தமிழ் இலக்கிய மரபுகள் சார்ந்தவையாகக் காணப்படுகின்றன. தமிழ்க்கலைகள் அறுபத்திநாண்கினில் ஒன்றான காமக்கலையில்வர்ணிக்கப்படும் பெண்களை ஒத்திருக்கின்றன. மஞ்சள் அரளி, செந்தாமரை, நீலோற்பலம், அல்லி, சூரியகாந்தி. செண்பகப்பூஎன்பவற்றைத் தட்டுக்களில் ஏந்திய வண்ணம் காணப்படுகிறார்கள். இவை காதலைத் தூண்டும் மலர்கள் ஆகும். காமன் அம்புகள் போன்றவை. காமத்தை வளர்க்கவல்லன. காதல் நிலைகளைத் தெரிவிப்பன எனலாம். இவைபற்றிய தமிழ் எழுத்துக்களிலான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை இன்று சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விட்டன என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் களரிச்சுவர்களில் காதல் வாசகங்களே பொறிக்கப்பட்டுள்ளன. இக்கலைப் படைப்புகளை திருத்துவதற்கு சிங்களக் கலைஞர்களால் முடியாத நிலையில் இந்தியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு திருத்தப்பட்டன. பின் இத்தாலியரான லூசியானோ மாரன்சி என்பவரால் மறுசீரமைக்கப்பட்டது. இக் குன்றில் மலையைக் கல்லி கோட்டையை நிர்மாணிக்கவும், சுவரோவியங் களைத் தீட்டவும் குறைந்தது 50 வருடங்கள் ஐம்பதினாயிரம் தொழிலாளர்கள் தேவையாகும். எனவே 18 ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த காசியப்பனால் இவை செய்வித்திருத்தல் சாத்தியமில்லை. சிறிய தாஜ்மகாலை 40000 தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் வேலை செய்து கட்டினார்கள். ஒரு பிரமிட்டை50000 தொழிலாளர் வேலை செய்து 25 ஆண்டுகளில் கட்டினார்களாம். எனவே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்த காசியப்பனால் மிக குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இந்தக் கோட்டையை கட்டுவது சாத்தியமில்லை. ஆகவே இது சிங்கமுகனால் கட்டப்பெற்ற கோட்டையாகத்தான் இருத்தல் வேண்டும். அதனாற்தான் சிங்ககிரிக் கோட்டை என பெயர் பெற்றது. இதனைக் கட்ட 30-40 வருடங்கள் சென்றிருக்கலாம். ஒழிந்து கொள்ள வந்தவன். ஒழிந்து கொள்ளும் இடத்தை நிர்மாணிக்க
ー50ー

பல்லவராசசேகரம் இவ்வளவுகாலம் செலவு செய்வது சாத்தியமற்றது. சிங்கமுகன் கோட்டையைக் கண்டு அதில் ஒழிந்திருந்த வேளையில் அதனைத் திருத்தியிருக்கலாம். கி.பி ஏழாம் நூற்றாண்டில் சிங்கபூதரன் என்ற தமிழ் அரசன் அங்கிருந்து ஆட்சி செய்ததாகவும் திருமங்கலாய் இளவரசியை திருமணம் செய்து திருப்பணியும் செய்தான் என்று அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.
மூன்றாவது தமிழ்ப் பேரவை
துவாரயுகத்திலே கி.மு 15500 ஆண்டுகள் தொடக்கம் கி.மு. 10500 ஆண்டுகள்வரை பொதியிலில் முருகப்பெருமான் தலைமையில் தமிழ்ப்பேரவை ஐயாயிரம் ஆண்டுகள் நடைபெற்றதாக தெரிகிறது. மூன்றாவது தமிழ்ப் பேரவையில் முதன்மைப் புலவராக முத்துள் அகத்தியர் இருந்தார். அவருடன் புலத்தியர் (புலத்திய நகள் - பொலநறுவை) சிகண்டி (சித்தாண்டி) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். மூன்றாவது தமிழ்ப் பேரவையில் அகத்தியர் இயற்றிய அகத்தியம் (21,000 பாடல்களைக் கொண்ட பேரகத்தியம்) என்ற நூல் அரங்கேற்றப்பட்டது. சிகண்டி, இசைநுணுக்கம் என்ற இசைத்தமிழ் நூலை இயற்றினார். அதுவும் இங்கே அரங்கேற்றப்பட்டது. இன்னும் சித்தர் கோரக்கர், மச்சமுனி சட்டமுனி, போகள். காலங்கிநாதர். சுந்தரானந்தர். கருவுரர் போன்ற ஈழத்துச் சித்தர்கள் பலரும் கலந்து பேரவையில் கூடியவர்களாக இருக்கலாம். பொதியில் என்பது பொத்துவில் ஆகும். இவை அக்காலத்தில் முருகப்பெருமான் உகந்த இடம் உகந்தை ஆகும். உகந்தை பொதியிலுக்குச் சமீபமாகவுள்ள இன்றைய முருகத்தலமாகும். இந்தியாவில் அகத்தியம் அரங்கேற்றப்படவில்லை. முத்தூர் அகத்தியர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் நூல் பொதியில் எனப்பட்ட பொத்துவிலில் தான் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.
பாலாவி இராசதானி காலசேனனி
காலசேனன் என்ற மன்னன் திரேதாயுகத்தின் முடிவில் பாலாவி மண்டலத்தில் கி.மு 3200 ஆண்டளவில் குதிரை மலையில் ஒரு நல்லாட்சி நடாத்தி வந்த நாகவேந்தன் ஆவான். இவன் மகளே அல்லி என்ற இளவரசியாகும். மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் இந்த அல்லியைப்பற்றிக். கேள்விப்பட்டு, அவள் அழகில் மயங்கி, இங்கு வந்து அவளை மணந்ததாகவும், பின்னர் காலசேனன் என்ற மன்னனை கொன்றதாகவும். அக்கதைகூறுகின்றது. சிலகாலத்தில் அருச்சுனன் அத்தினாபுரம் மீண்டதால் அல்லியே பின்னர்
- 51 ۔

Page 28
பல்லவராச்சியம் பாலாவியில் ஆட்சிநடாத்தினாள். அதனால் அல்லிராணி ஆட்சிசெய்த கோட்டை இன்றும் அல்லிராணி கோட்டை என்று அவள் பெயராலேயே அழைக்கப் படுகின்றது. இது அல்லிஅருச்சுனா என்றுநாடகமாகவும்நடிக்கப்பெற்றுவந்தது. இக்கதை விஜயன் கதையாக எடுத்தாளப்பட்டுள்ளது. அருச்சுனனுக்கு விஜயன் என்றும் ஒரு பெயர் இருந்துள்ளது.
காலசேனன் வழிவந்தசேனன். கொற்றன் என்ற குதிரைமலை அரசர்களே அனுராதபுரத்தை கி.மு.177-155வரை ஆண்டார்கள். அல்லி, எழினி பிட்டங்கொற்றன். குமணன் என்றும் நாகஅரசர்கள் குதிரைமலையிலிருந்தும், ஆந்தை, ஆதனழிசி. நல்லியற்கோடன். வில்லிஆதன், மாந்தையிலும் இருந்து அரசாண்டார்கள் என அகநானூறு, புறநானூற்றுப் பாடல்கள் தெரிவிப்பதாக முதலியார் செ. இராசநாயகம் கூறுகிறார்.
(S6rräzGasmo.L6r Caß.(up. 2600)
தெட்சணகைலாசபுராணம், தெட்சணகைலாயமான்மியம்நூல்களில் கி.மு 2600இல் குளக்கோட்டன் என்ற மன்னன் (கலி. 500இல்) திருக்கோணேசுவரம்கோவிலையும், கந்தளாய்க்குளத்தையும்கட்டினான் என்று கி.பிபதினாலாம் நூற்றாண்டில் எழுந்த நூல்களில் காணப்படுகிறது.
குளக்கோட்டன் கல்வெட்டு:
முன்னே குளக்கோட்டன் முட்டுந்திருப்பணியை பின்னே பறங்கி பிடிப்பானே - மன்னாகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண் மாறி தானே வடுகாய் விடும் (தானுள் தமிழாய் விடும்)
திரிகோணமலையிலிருந்து சிறப்புடன் ஆட்சிசெய்ததிரிகோணமலை மன்னன் குளக்கோட்டன் ஆவான். வரலாற்று ஆய்வாளர் கொட்றிங்ரன் கி.மு 2590 ஆண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிங்கைச் செகராசசேகரன் தெட்சணகைலாசபுராணத்தில் தெரிவித்த காலமும், மேனாட்டு ஆய்வாளர் கொட்றிங்ரன் தெரிவிக்கும்காலமும்பொருந்திவருவதால், தமிழ்அரசர் நூல்களின் காலக்கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன எனக் கொள்ளலாம்.
- 52 س

பல்லவராசசேகரம் மனுராசா (கி.மு 1300)
போர்த்துக்கேயர் திருக்கோணேசுவரத்தின் ஆலயத்தினை இடிக்க முன்னர் அவ்வாலயத்திலிருந்த கல்வெட்டினை வாசிப்பித்தடிகுவேராஸ் அதில் மனுராசா என்ற இலங்கைச்சக்கரவர்த்தி கி.மு 1300 வருடங்களிற்கு முன்பு கட்டியுள்ளார். இந்ததிருக்கோணேசுவரம்போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்டபொழுது அந்த தளபதி கொண்ஸ்ரம் டீ சா போர்த்துக்கல் அரசனுக்கு அனுப்பிய செய்தியிலிருந்து அறியவருவது. இக்கோவில் 3600 அடிநீளம் கொண்டிருந்தது. சில இடங்களில் 80 அடியும் சில இடங்களில் 30 அடியும் அகலம் கொண்டிருந்தது. அக்கோவிலின் கற்தூண்களில் தமிழ் வாக்கியங்கள் வெட்டிப் பொறிக்கப் பட்டிருந்தன. திரிகோணமலையில் கி.மு. 1300 வருடங்களிற்கு முன் மனுராசா ஆட்சி செய்துள்ளார். அவருடைய ஆட்சிமொழி தமிழாகும். அதனால் தமிழ்க் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாகரிக மேம்பாடும். பொருளாதார வளமும், கலைவளர்ச்சியும் பெற்ற ஒரு நாடு. அரசு அக்காலத்தில் திரிகோணமலையில் இடம்பெற்றிருந்தது என்பதனை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.பல்லவத்தின் மாணிக்கராசாதான் இந்தமனுராசா என்ற கருத்தும்நிலவுகின்றது. கி.மு1588இல் இக்கோவில் கட்டப்பட்டதாக டாக்டர் மா. பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
திருக்கோணேசுவரம் ஆலயம் கி.மு 18000ம் ஆண்டில் திரிகோணமலை இலங்கைநகர் மன்னன் இராவணேந்திரனால் முதலில் கட்டப் பெற்றதாக தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இவ் ஆலயம் கடல் கொண்டு விட்டது. கோவிலின் வடக்கேயுள்ள கடலின் அடியில் இவ்வாயலயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கடலோடிகள் லிங்கம் முதலிய வற்றை கடலினடியில் இருந்து எடுத்துள்ளனர். இது முன்பு கோவில் இருந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கால ஓட்டத்தில் கோவில் சேதமடைந்திருக்கலாம் அல்லது கம்பராமாயணம் தெரிவிப்பதுபோல இலங்கை நகரினை இராமன் கடலுள் அமிழ்த்தியபோது அமிழ்ந்திருக்கலாம்.
கி.மு 2600இல் குளக்கோட்டன் என்ற மன்னனால் மீண்டும் அவ்விடத்தில் ஆலயம் கட்டப்பெற்றுள்ளது. அதுவும் காலத்தினால் காவு கொள்ளப்பட்டிருக்கலாம்.
கி.மு.1300இல் மநுராசா என்ற திருகோணமலை மன்னன் மீண்டும் அவ்விடத்தில் கோவிலைக் கட்டியுள்ளான். கிழக்கு இலங்கை மக்கள் சைவ சமய
- 53 -

Page 29
பல்லவராச்சியம் நம்பிக்கையும் அவர்கள் வழிபாடும் அங்கு அவர்களால் நிறைவேற்றப்பட்டு வந்தது. அக்கோவிலையே போர்த்துக்கீசர் கி.பி.1624இல் இடித்து அழித்தார்கள்.
திருக்கோணேசுவரத்தில் கோனை நாயகனிற்கு 3600 அடி நீளத்திற்குள் மூன்று கோவில்கள் இருந்தன. மற்றைய இரு கோவில்களும் கி.பி 13ம், நூற்றாண்டில் வெற்றிநாகன் தளபதியான சோடங்கனால் கட்டப்பெற்றதும். கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் சிங்கை பேரரசர்களான செகராசசேகரன் பரராச சேகரனால் கட்டிமுடிக்கப்பெற்ற கோணை நாயகன் கோவிலாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளை வில்வமரச்சிவன் கோவில் திருக்கோணேசுவரத்தின் முகப்பில் அமைந்திருந்த ஒரு சிவாலயமாகும். இதனை யார் கட்டினார்கள் என்பதனை அறிய ஆய்வுகள் தேவை. இதிலிருந்து தான் கோணேசுரம் ஆரம்பிக்கின்றது. திருக்கோணேசுவரம் ஆலயத்தில் 1000 கால் மண்டபமும் எட்டு கோபுரங்களும் இருந்ததாக 16ம் நூற்றாண்டிற்குரிய திருப்புகழில் காணப்படுகிறது.

குறுநில அரசுகள்

இந்நாட்டில் வரலாற்றிற்கு முற்பட்டகாலம் தொடங்கி தனித்தன்மை வாய்ந்த குறுநில அரசுகள் பல இருந்தன. அக்காலத்தில் மன்னார். திருக்கோவில் (நாகர்முனை). மண்டூர், உகந்தை. புத்தளம். கோட்டையாறுபுரம். மகாகமம் ஆகிய பிராந்தியங்களிலும் சிறுசிறு அரசுகள் இருந்துள்ளன. நாகர்குல முதல்வர்களின் ஆட்சியின் கீழிருந்த இச்சிற்றரசுகள் பற்றி பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் களனியில் நாக அரசு இருந்தது. உறுகுணையில் கதிர்காமத்தில் ஒரு தமிழ் அரசு இருந்தது. கல்லாற்றில் (மட்டக்களப்பு) சந்தனகாமம் என்ற இடத்திலும் ஒரு அரசு இருந்துள்ளது என்பதை ஈழத்து இந்துசமய வரலாறு தெரிவிக்கிறது. கிழக்கே அல்லைப்பகுதியின் சிவ என்பவனின் சிற்றரசு இருந்ததாக பிராமிக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. வடக்கே பூநகரில் ஒரு குறுநில அரசு இருந்ததாக "பண்டைய ஈழத்தில் வேளி” என்ற நூல் தெரிவிக்கின்றது. இந்த சிற்றரசர்களும் குறுநில மன்னரும் சைவசமயத்தைக் கடைப்பிடித்த தமிழ் மன்னர்களாவர்.
பல்லவராச்சியம் கி.மு 2000 தொடங்கிகி.மு 600 வரை இலங்கை
- 54

பல்லவராசசேகரம் முழுவதும் பரவியிருந்தது. பல்லவத்திலிருந்து நேரடியாக மன்னாள் உட்பட நீர்கொழும்புவரையும். திரிகோணமலை, மலைநாடு கதிர்காமம் வரையும் பரவியிருந்தது. மேலும் பதினெட்டுக் குறுநில அரசுகள் மீதும் பல்லவ அரசு மேலாதிக்கம் செலுத்தியது. சிலகாலத்தில் தன்னாதிக்கம் உள்ள அரசுகளாகவும், சிலகாலத்தில் பல்லவ அரசுக்குத் திறை செலுத்தியும் ஆட்சிசெய்து வந்தனர். சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர்கள் இந்த சிற்றரசர்களே. இவர்களின் ஆட்சிக்காலத்தில் சைவமும் தமிழும் சிறப்புடன் விளங்கிவந்தன.
இலங்கைத்தமிழர் இந்தியாவில் இருந்து வந்தேறு குடிகள் அல்லர் 6T60tu605 LisLit (SuTei). Sfeito 1917&6) (Naga Deepa and Buddhist remains in Jaffna) தெரிவித்துள்ளார். விஜயன் இலங்கைக்கு வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்னரேயே இலங்கையில் கருத்திற்கொள்ளத்தக்கனவும். முழு இந்தியாவினதும் வழிபாட்டிற்குரியனவுமான ஐந்து சிவாலங்கள் இருந்தன. அவையாவன மகாதீர்த்தம் அருகிலுள்ள திருக்கேதீஸ்வரம். முத்துசிலாபத்தில் பிரசித்தி பெற்றிருந்த முன்னேச்சரம், மாந்தோட்டைக் கருகில் தண்டேச்சரம், கொட்டியாரக் குடாவிற்கு எதிரேயுள்ள திருக்கோணேசுவரம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள நகுலேச்சரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஐந்து சைவத்திருத்தலங்கள் தமிழர்களால் ஆதியில் கட்டப்பெற்று. பின் தமிழர்களால் பூசிக்கப்பட்டு, தமிழர்களால் வழிபடப்பெற்றுவந்த இடங்களாகும். அங்கே தமிழ்மக்கள் செறிவுடனும் நாகரிகத்துடனும் வாழ்ந் தார்கள். பேய்கள் தான் வாழ்ந்தார்கள் என சொல்லப்படுவது பேய்க்கதைகள் ஆகும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வராட்சிகள் மாந்தை. மாங்குளம், திசைமகாராம. பலாங்கொடை திராவிடரின் குறுணிக்கற் கால பண்பாடும். பெருங்கற்காலப் பண்பாகும், இடைக்கற் காலபண்பாடும் இருந்தமையை அமெரிக்க பென்சில் வேனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன். காஸ்வெல் குவாட்ஸ் கல்லாநியதங்களை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். தோற்றக்காலம் கி.மு. 28000 ஆண்டுகள் என கணிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் கி.மு. 28000 ஆண்டுகளிலிருந்து இலங்கையில் வாழ்ந்துவருகிறார்கள்.
வேளிர் ஆட்சி
கி.மு நான்காம், மூன்றாம் நூற்றாண்டில் அம்பாந் தோட்டை, மொனறாகலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கதிர்காமம்.
- 55

Page 30
பல்லவராச்சியம் சந்தனகாமம். சாகாமம் ஆகிய இடங்களிலிருந்து தமிழ் அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளதை சாகாமம் மொட்டையாகல் இடக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
சாங்க மன்னனிர்
சங்க மன்னன் கட்டியநகள். சங்கமன்கண்டிஎன அழைக்கப்படுகிறது. சங்கமன்னன் மாயோன் வழிவந்தவனா? நாகர் வழி வந்தவனா? என்பது ஆய்வுக்குரியது. கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட விஜயன் காலடி வைத்தவேளையில் நாகர் ஆட்சிநிலவியது. சங்கமன்னன் ஒருநாகவேந்தன் என்று நவநாயகமூர்த்தி(8.02.1996 வீரகேசரி) தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக சங்கமன் கண்டி இராசதானியாக சிறப்புடன் இருந்துவந்துள்ளது. கி.பி. 2ம் நூற்றாண்டில் சங்கமன் கண்டி தொடக்கம் கூடிகூடிதாடகிரி: வரை அரசு பரந்திருந்ததாக மட்டக்களப்பு மான்மியம் தெரிவிக்கிறது. பழைய சங்கமன் கண்டிப்பகுதியில் கட்டிட இடிபாடுகள், செங்கற்கள், மதிலின் சிதைவுகள் காணப்படுகின்றன.

உலகநாச்சி

மண்முனையை இராசதானியாகக் கொண்டு பாணகை வரையான பகுதியை கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் உலகநாச்சி ஆட்சிபுரிந்தாள். தான்தோன்றீசுவரர் ஆலயத்தில் திருப்பணிகளை நிறைவேற்றினாள் என ம.க. அந்தனிசில் (20.06.1999வீரகேசரி) கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தேவநாகனி

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தேவநாகன் என்ற வேளிர் ஆட்சி ஏறாவுரில் இடம் பெற்றிருந்தது. சங்கமன் கண்டி நகரிருந்த இடத்தில் உடைந்த மட்பாண்டங்களின் துண்ைடுகள் போன்ற தொல்லியல் சான்றுகளை இன்றும் காணமுடியும். அத்துடன் சிறிய குளங்களும் இதில் அடங்கும் இவற்றின் வாயிலாக தொடர்ச்சியான நாகரிகம் நிலவியிருந்த ஒரு பண்டைய நகரம் இது என்பதை éĐÓluu Uppc66öppgj. 6. ÚN. 9Lib. 1Oub, 11 b. 12Lb þTDDT60ÖTCB856f6ò öfffa5LD6öT 560örg நகரம் உன்னதறிலையில் இருந்துள்ள தென்பதற்குத் தொல்லியல் சான்றுகள் உள என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இங்கேயும் சங்கமன்னன் தன் இராசதானியாகிய தலைநகரில் குளங்களையும் அமைந்துள்ளான். அரண்மனைகளுடன் குளங்களை அமைப்பது தமிழரசர் மரபு ஆகும். அதனால்

- 56

பல்லவராசசேகரம் தான் அந்நகள் சங்கமன்கண்டி என்று பெயர் பெற்றது. மூன்றாவது தமிழ்ப் பேரவை பொத்துவிலில் நடைபெற்றுள்ளது. இந்தமன்னன் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மன்னனாக இருத்தல் கூடும். அதனால் சங்கமன்னன் என அழைக்கப் பட்டிருக்கலாம். சங்கமன்னன் என்பதே சங்கமன் என அழைக்கப்பட்டதாகும்.
asu6hTres
நாகர்குல திராவிட மன்னனான கயவாகு என்ற சிற்றரசன் கி.பி.1ம் நூற்றாண்டில் ஆட்சிநடத்தினான். அவனுக்குப்பின் கி.பி. 2ம் நூற்றாண்டில் மனுநேய கயபாகு என்ற மன்னன் சங்கமன் கண்டியிலிருந்து ஆட்சிசெய்தான்.
ஆடக செளந்தரி
கி.பி. 3ம் நூற்றாண்டில் ஆடகசவுந்தரியின் ஆட்சிநடைபெற்றது. சிவபக்தையாக இருந்து திருக்கோவில் திருப்பணிகளைச் செய்தார்.
கதிர்சுதனி
கி.பி 10ம் நூற்றாண்டில் சோழர் மேலாதிக்கத்தின் கீழ் சிற்றரசனாக இருந்துநாகர்முனையில் ஆட்சி செலுத்தினான்.
மதிகதனி
கி.பி. 11ம் நூற்றாண்டில் நாகர்முனையில் சிற்றரசனாக இருந்து ஆட்சி செய்தான். கி.பி. 163 முதல் 1215 வரை மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இலங்கையிலும் அவன் மேலாதிக்கம் இருந்தது. அக்காலத்தில் மட்டக்களப்பில்நாதன் என்ற சிற்றரசனின் ஆட்சிநிலைபெற்றிருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கித்தியில் சிங்கள அரசனை வென்ற சேதிகாணப்படுகிறது.
“சிங்களவன் தலை மலையாற் தென்னிழங் கொள்கவெனத் திரை கடலை அடைக்கவென்ன"
உலோகீசுவரனி
பொலனறுவையில் உலோகீசுவரன் என்ற தமிழ்ச்சிற்றரசன் ஆட்சி செலுத்தினான். அவன் சமயத்தை வளர்த்தான். மாகமையில் அமைந்திருந்த இவனது அரசமாளிகையில் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு விருந்து கொடுத்தான் என்றுதொல்லியல் ஆய்வாளர் திருமதிஜிதனபாக்கியம்(மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சிபக்கம் 76) குறிப்பிட்டுள்ளார்.
- 57

Page 31
பல்லவராச்சியம் 66rgofumar afrasoor
கிழக்கிலங்கையில் கி.பி. 15ம் நூற்றாண்டில் சிங்காரபுரி இராச தானியாக விளங்கியது. அதில் வன்னியராசசிங்கன் என்றதமிழ்மன்னன் குறுநில அரசனாக இருந்து ஆட்சிசெய்தான். இவன்மடத்துமீனாட்சிஅம்மன் கோவிலைக் கட்டினான். சிங்காரபுரிஇன்று அட்டப்பள்ளம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சிங்காரபுரிதமிழ் இராசதானியில் காணப்படுகிற எச்சங்களாவது மிஞ்சுமா? என்று என். ஜீவேந்திரன் (1.01.1998 வீரகேசரி) வினா எழுப்பியுள்ளார்.
சைவ சமயத்தையும் தமிழ்மொழியையும் போற்றிப் பேணிய இம்மன்னன் பல சைவக் கோயில்களைத் தன்னாட்சிக் காலத்தில் கட்டியுள்ளான். அவன் மனைவி கோதையின் அந்தப்புரம் இருந்த இடம் அழகாபுரி என்று அழைக்கப்பட்டது. மன்னனது பாசறை, படைகள் இருந்த இடம் செங்கண்படை என்ற பெயரால் விளங்குகிறது.நீதிவிசாரணை நடந்த இடம்சங்கிருந்தார் காடு. இது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் சங்கமிருந்தார் காடு என்பதா? மன்னன் நீர்பாசனத்திற்காக வெட்டிய காளி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் நிலம், தட்டான் பிட்டி. முரசு அறைபவர்களுக்கு வழங்கிய நிலம் பறையன் வெளி என அழைக்கப்படுகிறதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
காரைதீவுகண்ணகை அம்மன் கோவிலுக்கு அரசன் 135 ஏக்கள்நிலம் வழங்கினான். கண்ணகை வெளிஎன்ற இந்நிலம் கண்ணவெளி கணம்வெளி என மருவிக் காணப்படுகிறது. இக்கோவில் இனக்கலவரத்தின் போது மாற்று மதத்தவரால் சேதமாக் கப்பட்டது. அக்கோவிற் இன்று 7 ஏக்கள் நிலத்துடன் காணப்படுகிறது. கோயிலுக்கான நெல் வயல்களும் பிறமதத்தவர்களினால் கைப்பற்றப்பட்டு செய்கை பண்ணப்பட்டு வருகிறது. கோவில் காணி கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றப்பட்டு வந்துள்ளது.
வேளிர்
அம்பாறையை உள்ளடக்கிய மட்டக்களப்பில் தன்னாதிக்கமுள்ள சிற்றரசாக, வேள் விளங்கினான். பழுகாமம், அட்டப்பள்ளம், பாணகை ஆகிய இடங்கள்வேள்களின் ஆட்சிமையமாக விளங்கியது. கிபி 1505ல்சைவத்தையும் தமிழையும் பேணிப் பாதுகாத்து தம்மளவில் பலம் பொருந்தியவர்களாகச் செயற்பட்டு வந்தனர். சம்மாந்துறை. வீரமுனை. மல்வத்தை, வளத்தாப்பிட்டி. மல்லிகைத்தீவு, மனுக்கம் பிட்டி, ஆகிய இடங்களை இம்மட்டக்களப்பு அரசு உள்ளடக்கியிருந்தது. கல்முனை. நாற்புட்டிமுனை, கிட்டங்கிஆகிய இடங்களை
- 58

பல்லவராசசேகரம் உள்ளடக்கிய பகுதி வணிகமையமாக இருந்தது. காரைதீவு நிந்தவுர், அட்டப்பள்ளம், காளிஓடை, செங்கற்படை, ஒலுவில் நாகமேடு, திராய்க்கேணி, மீனோடைக் கட்டு பகுதிகளில் தமிழர் நாகரிகம்நிலைத்திருந்ததுடன், சைவமும் செழித்திருந்தது என நா.நவநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வல்லவன்
புத்தளம் தனியான தமிழ்ச்சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கி.பி1412ல் கோட்டையில் ஆறாம் பராக்கிரமபாகுமன்னன் ஆட்சியில் அமர்ந்தார். இவன் புத்தள சிற்றரசு பலமுள்ள சிற்றரசாக இருப்பதனால் தமக்கு ஆபத்துவரலாம் எனப் பயந்தும், செண்பகப் பெருமாள் கோட்டை ஆட்சியைக் கைப்பற்றாமற் தடுப்பதற்கும் புத்தள அரசன் மேல் அவனை ஏவினான். கி.பி 1450ம் ஆண்டளவில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கடும் போர் நடைபெற்றதன் பின் தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். திரும்பிச் சென்ற செண்பகப் பெருமாளை சிங்கை அரசின் மேல் ஏவினான். கி.பி.1468ல் பராக்கிரமபாகு மறைந்த பின்னர் மீண்டும் நல்லூர் அரசின் மேலாதிக்கமுள்ள பலமுள்ள சிற்றரசாக செயற்பட்டு வந்தது. புத்தளம் வீழ்ந்ததால் தான் செண்பகப் பெருமாளிடம் சிங்கைநகர் வீழ்ந்தது. போர்த்துக்கீசர் காலடி வைத்த வேளையில் கி.பி. 1505ல் புத்தளத்தில் தமிழ் சிற்றரசர்களின் ஆட்சி சிறந்திருந்தது. கற்பிட்டி, புத்தளம், சலாபம், நீர்கொழும்பு, வத்தளை வரை புத்தள அரசு பரவியிருந்தது. தமிழர் தாயகமான வன்னியின் சிற்றரசுகள் கதிர்காமம் வரை பரவிதமிழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
தமிழரசர்காலத்தில் இலங்கை ஆறுகளின் பெயர்கள் தமிழிலேயே இருந்தன. சில பெயர்கள் வருமாறு:-
1. அருவியாறு மல்வத்து ஒயா 2. LD600Tsong a வெலி ஒயா 3. பட்டிப்பளையாறு - கல் ஒயா 4. Dru660TTg, D தெதுறு ஒயா 5. கழனியாறு D களனிகங்கா 6. மாவலியாறு a பமாகாவலிகங்கா 7. பொன்பரிப்பு ஆறு - கால ஒயா 8. கமலியாறு மகா ஓயா 9. பொக்கணையாறு - குமுக்கன் ஒயா
- 59

Page 32
பல்லவராச்சியம்
4. வன்னிராச்சியம்
வன்னிமரம் நின்றதனால் ஒரு சிறுநிலப்பகுதி வன்னிநாடு என அழைக்கப்பட்டது. அதனை ஆட்சி செய்த வேள், வன்னியன் என அழைக்கப்பட்டான். நாகநாடு என அழைக்கப்பட்ட அக்காட்டுப்பகுதிமுழுவதுமே காலப்போக்கில் வன்னிநாடு எனப்பெயர் பெற்றது. வன்னிநாட்டவர்கள் வன்னியர்கள் என அழைக்கப்படலாயினர். வன்னி என்றால் வனம் என்றும் ஒரு பொருள் உண்டு. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு ஈழத்தில் பதினெட்டுச் சிற்றரசுகள் இருந்து வந்துள்ளன. நாகநாட்டின் ஒரு பகுதி அபங்காப்பற்று எனவும் அழைக்கப்பட்டது. சிங்கை குலசேகர அரச குடும்பத்தவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே பலம் பொருந்திய வீரமிக்க சிற்றரசர்களாக வன்னியில் விளங்கினார்கள். பதினேழாம் நூற்றாண்டில் பறங்கியரால் நல்லூர் கைப்பற்றப்பட்ட பின்னர் இராசசேகர மன்னன் மகன் குலசேகரம் தனியரசான வன்னியின் மன்னனான். கி.பி. 1620க்கு பின் வன்னி சிற்றரசு என்ற நிலை மாறித்தனியரசானது.
மனினனி குலசேகரம்
நல்லூர் இராசகுடும்பத்தின் குலசேகரம் கி.பி 1819ல் பல்லவ மன்னனாக முடிகடி ஆட்சிசெலுத்திவந்துள்ளதற்கு வண்ணிவேள் குலசேகரம் ஆதரவளித்து துணையாக இருந்துள்ளான். வன்னிவேந்தனாகக் குலசேகரம் கி.பி.1620 முதல் 1650 வரை ஆட்சிசெய்தான்.
மனினனி கயிலைவனினியனி
குலசேகரம் மகளின் கணவனான கயிலை வன்னியன் கி.பி 1650 முதல் கி.பி 1678 வரை வன்னி மன்னனாக ஆட்சி செய்துள்ளான். இவனிடம் திறை பெற்றுக்கொள்ள பறங்கியர் ஒல்லாந்தர் பலமுறை முயன்றும் வெற்றி அளிக்கவில்லை. வன்னியரசுகளின் பெரும்பகுதியை, இவன் ஆட்சிசெய்தான். கதிர்காமம் வரை ஆட்சி பரவியிருந்தது. இந்தியாவிற்கு யானைத்தந்தம், மயிற்தோகை, கறுவா ஏற்றுமதி செய்தான். ஒல்லாந்தர் போரிட்டபோது அவர்களைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினான்.
- 60

பல்லவராசசேகரம் மனினனி வன்னியராச சேகரம்
கிபி 1678லிருந்துகி.பி. 1710 குலசேகரம்மகன்வன்னியராசசேகரம் வன்னி அரசனாக விளங்கினான்.
மன்னனி வைரமுத்து
கி.பி.1710 முதல் கி.பி. 1740 வரை இவன் மகன் வைரமுத்துவன்னி
வேந்தனாக வீற்றிருந்தான். ஏனைய வன்னிச் சிற்றரசர்கள் இவ்வரசர்களின்
மேலாதிக்கத்தின் கீழ் ஆட்சிசெலுத்தினர்.
17ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த ஒல்லாந்தரான அட்றியன் ஹேலன்ட, தமிழர் பிரதேசங்கள் பற்றி கூறுவது.
இத்தீவின் பெரும்பகுதி தமிழரின் வசிப்பிடமாகும். கயிலை வன்னியனால்ஆட்சிபுரியும்நாடு என அவன்நாடு அழைக்கப்பட்டது. சிங்களவரின் ஆட்சிக்கோ ஒல்லாந்தரின் ஆட்சிக்கோ இப்பிரதேசம் உட்பட்டிருக்க வில்லை. கரைப்பிரதேசங்கள் இவ்வரசனுக்கே உரியவை. கரைப்பகுதியில் பெரும்பான்மையினர் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். நீர்கொழும்பிலிருந்து தெற்கே தேவேந்திர முனைவரை சிங்கள மொழி பேசப்படுகின்றது. யாழ்குடாவிலும் துணைக் கண்டத்தின் அண்டிய பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகின்றது. நொபேட் நொக்ஸ் தனது நூலில் கயிலை வன்னியன் ஆட்சி எல்லைகளைப் புவியியற் படம் மூலம் குறித்துக்காட்டியுள்ளார். அடங்காப்பற்று. கொட்டியாரப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை இவன் ஆட்சியின் கீழ் இருந்தது. கதிர்காமமும் இவன் ஆட்சியின் கீழ் இருந்தது.
கி.பி. 1700ல் இலங்கைக்கு வந்த கிறிஸ்தோபர் சுவைட்சரும் தமிழர், காலி, மட்டக்களப்பு:திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு மற்றும் கற்பிட்டியிலிருந்துநீர் கொழும்புவரை வாழுகின்றனர் என்பதோடு வன்னிநாடு தனியான சுதந்திர அரசினை கொண்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாகோன்காலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த தமிழர் தாயக எல்லைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முடிவு (1947)வரை பேணப்பட்டிருந்தன.
- 61

Page 33
பல்லவராச்சியம் மன்னனிர் குலசேகரம்
கி.பி. 1740ல் வைரமுத்து மகன் குலசேகரம் மன்னனாக முடிகடினான். இவன் காலத்தில் பறாளை விநாயகர் ஆலய தேர்த்திருப்பணிக்கு இவன் உறவினனான பல்லவ மன்னன் குலசேகரம் மரங்களைக் கொண்டு செல்கையில் இயக்கச்சியில் ஒல்லாந்தருடன் சண்டை நடந்தது. வன்னி மன்னனிடம் கப்பம் பெறச் சென்ற ஒல்லாந்த வீரர்களை ஓட ஓடத் துரத்தியடித்தான். கி.பி 1777ல் இவன் இறந்த பொழுது இவனுடைய மகளின் கணவனான நல்ல மாப்பாணன் வண்ணியின் அரசு கட்டில் ஏறினான். 1790லிருந்து நல்ல மாப்பாணன், மனைவியான குலசேகரம் மகள் நல்ல நாச்சி பனங்காமத்தின் சிற்றரசிஆனாள். இவள் ஆட்சிசெய்த அரண்மனை இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. இவள் குளித்த கிணறு சந்தன மரங்களால் எட்டுப்பட்டமாக கட்டப்பட்டிருந்தது.
1978ம் ஆண்டு பனங்காமத்தில் சேதமடையாமல் அக்கிணறு காணப்பட்டுள்ளது.
ஆளும் உரிமையில்லாதவர்களையும், அரச தகுதியில்லா தவர்களையும் மன்னார்ப் பகுதியில் 1690ல் ஒல்லாந்தர் வன்னிமை களாக நியமித்தார்கள். 1750ல் வவுனன் என்ற சிற்றரசனின் இராசதானி இருந்த இடம் பின் வவுனியா என பெயர் பெற்றது.
நந்தி என்ற (நல்லூர் அரசு குடும்பத்தைச் சேர்ந்த வேள்) குறுநில மன்னரின் புத்திரிகள் ஏழுவர். நாச்சிமார் என அழைக்கப் பட்டவர்கள். வன்னி நாட்டின் சிற்றரசிகளாக. இருந்து, வீரத்துடன் போராடி வீரசுவர்க்கம் சென்றார்கள். வேள், முதலிமாரின் பெண்கள் நாச்சிமார் என விளங்கினர். அதுபோல வன்னிமையின் பெண்கள் வன்னிச்சி எனப்பட்டனர்.
பணிடார வண்னியன் வைரமுத்து மன்னனிர்
வைரம் நிறைந்த நெஞ்சனாய், வீரம் செறிந்ததோளனாய், வன்னிச் சிற்றரசுகள் எல்லாவற்றினதும் தலைவனாய். அந்நிய அரசினருக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த மானமிக்க மறவர் படையின் வீரவேந்தன் குலசேகரம் வைரமுத்து. ஆரம்பத்தில் கிழக்குமூலை தெற்கின் சிற்றரசனாக பட்டத்திற்கு வந்து 1790ல் எல்லா வன்னிச் சிற்றரசுகளுககும் மன்னனாக முடிசூடிக்கொண்டவன்.
- 62

பல்லவராசசேகரம் வன்னியின் தமிழ்ப் பாவலர்கள் அவனை வன்னிநாட்டின் தலைவன் என்ற பொருளில் பண்டார வண்ணியன் என்று புகழ்ந்து பாடினர். தலைமையின் இலக்கணமாய் ஆளுமையில் சிங்கமெனத் திகழ்ந்தவன். ஒல்லாந்தருக்கும் ஆங்கிலேயருக்கும் நடுக்கத்தினை ஏற்படுத்தியவன். அவர்கள் பலமுறை எதிர்த்துப் போராடிய போதும் அவர்களைத் தோற்கடித்தவன்.
நல்லநாச்சி. ஊமைச்சிநாச்சிஎன்ற அவனுடைய இரு சகோதரிகளும் அவனுக்குத் துணையாக இரு வன்னிச் சிற்றரசுகளில் ஆட்சி நடத்தினார்கள். பனங்காமம்,திரிகோணமலை, மன்னார்ச்சிற்றரசுகள் இவர்களினால் ஆளப்பட்டு வந்தன. வற்றாப்பளைகன்ைனகை அம்மன் இவர்கள் குலதெய்வமாகும். பலம்மிக்க அரசாக இருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம். தமிழினத்தின் இறைமையைப் பறிக்க முனைந்தபோது. அந்த இனம் வீறுகொண்டு எழுந்து, தனது உரிமையைக் காக்கப் போராடியது என்பது வீர வரலாறு ஆகும். மணன்பற்றுமிக்க மக்களும், அரசின்மீது பற்றுக் கொண்ட அரசனும் தமிழர்களின் தன்னாட்சியைக் காப்பாற்றுவதற்காகப் போராடினர். அதில் வெற்றியும் கண்டனர். மகாவன்னி என்ற நுவரகலாவிய சிற்றரசும் வைரமுத்துவினால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது.
காக்கை வன்னியன் (இது உண்மையான பெயர் இல்லை) மதுவுக்கும் பனத்திற்கும் அடிமையாகி பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தான். கரிக்கட்டுமூலை வன்னியன்தான். தானும் வண்ணியின் அரசன் ஆகலாம் என்ற நப்பாசையில் அடங்காப்பற்று என்ற நாகநாட்டினை கைப்பற்ற வசதியாகத் தகவல் அனுப்பினான். கரிக்கட்டுமுலை வன்னியன் என்பதே காலப்போக்கில் காக்கை வன்னியன் என திரிபடைந்துள்ளது.
வைரமுத்து உள்ளத்தைக் கவர்ந்த காதலிகுருவிச்சிநாச்சியார். இந்த வீராங்கனை மண்ணையும் நேசித்தாள். மன்னனையும் நேசித்தாள். வன்னியை மன்னன் காப்பதற்காக அவனுடன் சேர்ந்து போரிட்டு தன்னுயிர் ஈந்தது வீரவரலாறு. பல்லவ மன்னன் சுப்பிரமணியம் இவனுக்கு உதவியாகவும், வைரமுத்துசுப்பிரமணியத்திற்கு உதவியாகவும் பொது எதிரியான ஐரோப்பியரை எதிர்த்து. இருவரும் போராடினர். இருவரும் ஒரே குடும்பத்தவர்கள் ஆவர்.
கண்டி அரசன் விக்கிரமராசசிங்கனும், வைரமுத்துவும். தமிழ்ப்பற்று. தமிழினம் என்ற உணர்வுமிக்கவர்கள். உள்ளத்தால். உடலால் ஒன்றுபட்ட உயிர்
- 63 -

Page 34
பல்லவராச்சியம் நண்பர்கள். இவர்களும் ஒருவருக் கொருவள்துணையாகநின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். கண்டியரசனுடன் சேர்ந்து போரிட்டபோது பண்டாரவன்னியன் வீரத்தை அறிந்த ஆங்கிலேயர், பண்டாரவன்னியனை ஒழித்தாற்தான். கண்டியைப் பிடிக்கலாம் என்று உணர்ந்தார்கள். இவர்கள் அடிக்கடி ஒன்று கூடுவதும், அல்லது தூதன் வாயிலாகத் தகவல் பரிமாறிக் கொள்வதும் வழக்கமாகும். இவர்கள் இருவரினதும் ஆட்சியும் தமிழின் உணர்ச்சிப் பிழம்பாக உயர்ந்துநின்றன. தமிழர்களின் நாட்டுப்பற்றையும் இன உணர்வையும் நாட்டுமக்களின் அரச பக்தியையும் பார்த்து ஆங்கிலேயர் வியந்தார்கள். சுப்பிரமணியம், வைரமுத்து. விக்கிரமராசசிங்கன் ஆகிய மூன்று மன்னர்களும். உறவினர்களாக ஒற்றுமையாகவும். ஒன்றாகவும் இயங்கினார்கள். வன்னிப் படைகளின் காவலிலேயே கண்டிராச்சியத்தின் இறைமை பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆங்கிலேயரிடம் உறுமும் பீரங்கியும். வெடிக்கும் துப்பாக்கிகளும் துணை இருந்தும், இரு ராச்சியங்களையும் பிடிக்க முடியவில்லை என்பது அவர்களுக்குப்பெரும்தலையிடியாக இருந்தது. நல்லூர்.திரிகோணமலை வீழ்ந்த பின்பும் அடங்காப்பற்று அடங்கவில்லை. பல்லவ அரசனை பிடிக்கமுடியவில்லை. வன்னி அரசன் பண்டார வன்னியனும், வன்னியின் ஏனைய சிற்றரசர்களும் அவனைச்சார்ந்து மண்ணின்மானம் காத்துநின்றனர். ஆங்கிலேயரிடம்நவீன போர்க்கருவிகள் இருந்தும் பாயும் புலியான பண்டாரவன்னியனை தோற்கடிக்க முடியவில்லை. வீரம், விவேகம், துணிவு மன்னன் வைரமுத்துவிற்கு அணிகலனாக அமைந்திருந்தது. பல்லவ வங்கம் வன்னியின் துறைமுகமாக சிறந்து விளங்கியது.
கரிக்கட்டுமுலை வன்னியன் 31.10.1803ல் வைரமுத்துவை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்தான். ஆங்கிலேயர் வளைத்துப் பிடித்தனர். விசாரணை நடாத்தினர். கைகள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, ஆங்கிலேயத்தளபதி முன்நிறுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. "எனது மண்ணில் எனக்கு விசாரணை வைக்க அந்நியனான உனக்கு அதிகாரமில்லை. வியாபாரம் செய்து பொருட்களை விற்கவும், வாங்கவும் வந்த நீ. பொருட்களை வாங்கிப் போ. எனது நாட்டை வாங்க உன்னால் முடியாது. என்னுயிர் இருக்கும்வரை அடங்காப்பற்றினை உங்களால் அடக்க முடியாது. இனியும் அடங்கிவிடும் என்று கனவு காணாதே. எனது நாட்டின் ஆண்மகன் ஒருவன் இருந்தாலும் உங்களை ஓட ஓட விரட்டி
- 64

பல்லவராசசேகரம்

Page 35
பல்லவராச்சியம் அடிப்பான். ஏன்? எனது நாட்டுப் பெண்களே புலிகளை முறத்தால் விரட்டியவர்கள் என்பதை நீஅறிவாயோ? அடங்காத மதயானைகளை அடக்கிக் கட்டி இழுத்து வந்த பெண் சிங்கங்கள் எனது நாட்டுப்பெண்கள். அவர்கள் உங்களையும் விரட்டி அடிப்பார்கள். கட்டி இழுப்பார்கள். இராச்சியம் என்ன விற்கின்ற பொருளா? நான் விற்கவும், நீவாங்கவும்" என்று கர்ச்சித்தபடியே தளபதியையும் வீரர்களையும் கையில் கட்டப்பெற்றசங்கிலிகளால் திடீரெனத்தாக்கிவிட்டுத்தப்பியோடிவிட்டான். கண்டி மன்னன், பல்லவமன்னன் படையுடனும் இவன் மீண்டும் ஆங்கிலேயரை தோற்கடித்தான். 1810ம் ஆண்டில் கண்டி அரசனுக்குப்படைகள் தேவைப்பட்ட போது. தன் படைகளை அனுப்பி வைத்தான். 1810 மே மாதம் வவுனியாவில் ஆங்கிலேயப் படைகளுடன் போரிட்டான். இவன் படை எடுப்பினைக் கண்டு பிரித்தானிய ஏகாதிபதிகள் நடுங்கினர். இதனை வவுனியா அருகே பண்டார வன்னியன் பிரித்தானிய அரச களஞ்சியங்களை கொள்ளை அடித்தான் என ஆங்கிலேயர் அறிக்கைகள் தெரிவித்தன. முல்லைத்தீவு நாடு. ஒல்லாந்தர் அரசுக்குட்பட்டிருந்த காலத்தில், பண்டாரவன்னியனே அதனை ஆண்டு வந்தான். கண்டி அரசனின் படையுதவியுடன் ஆங்கிலேயரைத் தாக்க ஆயத்தமானான். மேல்பற்று கிழக்கு முதலியார் கதிர்காமநாயகம், வன்னிப்பகுதி கலக்டர் ரேணருக்கு, கண்டி திசாவையின் உதவியுடன் மீண்டும் பண்டார வன்னியன். வன்னியைத் தாக்க இருப்பதாக செய்தி அனுப்பினார். ரேனருக்கு திருமலை. யாழ்ப்பாணத்திலிருந்து படைகள் வந்தன. அதனால் வன்னியை கைப்பற்றும் போரில், கைப்பற்ற முடியவில்லை. மிகச்சிறு படையுடன் வெற்றிகரமாகப் போராடினான். 1811ல் உடையாவுரில் நடந்த போரில் படுகாய மடைந்தான். மற்ற வீரர்களினால் பனங்காமத்திற்கு கொண்டுவரப்பட்டான். சில நாட்களில் வீரசுவர்க்கம் அடைந்தான். வண்ணியில் கர்ச்சனை புரிந்த சிங்கம் ஓய்ந்தது. ஆனாலும் அடங்காப்பற்று அடங்கவில்லை.
வன்னிமை, வண்ணிபம், உடையார். முதலி ஆகிய சொற்பதங்கள் ஒரே கடமைகளை நிறைவேற்றும், பதவிகளைக் குறிப்பன. இவர்கள் அரசர்க ளினால் நியமிக்கப்படும் அதிகாரிகளாவர். ஆரம்ப அடிமட்ட ஆட்சியாளர்களாவர். இவர்களுக்குப் பட்டம், பதவி. விருது அரசனால் வழங்கப்படும். தாமே முடி கடி மிகக்குறுகியநிலப்பகுதியை ஆள்பவர் குறுநில மன்னர். திறை செலுத்திஆள்பவர் சிற்றரசர். மணிமுடியும். செங்கோனும், சிங்காதனம் படைத்தவர்கள் அரசர்கள். திறைபெற்று ஆள்பவர் பேரரசர். எல்லோருக்கும் மேலாண்மை பெற்ற அரசன் இந்திரன்.
- 66

பல்லவராசசேகரம்: மாகல் நாகனி (மாகல் நிக்கவராட்டியா பகுதி)
தமிழ் வணிக நகரம் 11ம், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அங்கு ஒரு புராதன சைவ ஆலயம் இருந்ததன் இடிபாடுகள் காணப்படுகின்றன. 17ம் நூற்றாண்டு கட்டப்பட்ட ரஜமகாவிகாரையில் சிவன்கோவில் இடிபாடுகள், கட்டிடப் பொருள்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. விகாரத்திலுள்ள பிரதிமாகரத்தின் சுவரொன்றில் சிவலிங்கம் காணப்படுகிறது. பிரதிமேகாரத்தின் பின்புறமாக உள்ள மண்டபத்திலே அமைந்துள்ள தூண்கள் முற்காலத்தில் சிவாலயம் ஒன்றில் இடம் பெற்றவை என்று கருதமுடிகின்றது. அவற்றுள் இரண்டிலே 12ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் உண்டு. இவை தமிழ்ச்சாசனங்கள் ஆகும். விக்கிரம சலாமேகபுரம் என வழங்கிய பட்டினம்தான் மாகல் என இன்னுமொரு தமிழ்ச் சாசனம் தெரிவிக்கின்றது. அங்குள்ளபோதிமரத்தின்கீழ்தமிழ் எழுத்துக்களாலான வாசகம் பொறிக்கப்பட்ட பெருங்கல் ஒன்று 1988இல் காணப்பட்டது. 1993ෂිෆ් அதுவும் ஒரு கட்டிடத்தில் சுவரின் பாகமாக காணப்பட்டது என புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் சி. பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு வீரமாகாளம். பதினெண்பூமி. ஐநூற்றுவன் பள்ளி என்னும் சொற்கள் அந்த வாசகத்தில் உள்ளன. கற்பலகையானது முரட்டுத்தனமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சாசனத்தின் பெரும் பகுதி சிதைவுற்றுள்ளது. இருபத்தேழு வரிகளைக்கொண்ட இச்சாசனத்தின் இறுதிப் பகுதியினை வாசித்தறியலாம். வாசிக்கப்பெறாத இரண்டு சாசனத்துண்டங்கள் அங்கு காணப்பட்டன. அங்கு ஐந்து தமிழ்சாசனங்கள் காணப்பட்டன என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளனர். (12.01.1997 வீரகேசரி)
தமிழ் மானாபரணனின் தேவியான சுந்தமல்லிஆழ்வார் சிவாலயம் ஒன்றுக்குக் கொடுத்த தானம் பற்றி இச்சாசனம் கூறுகின்றது. அக்கோயில் மாகலான விக்கிரம சலாமேகபுரத்து விக்கிரம சலாமேகாசுவரம் என்று ஒரு சாசனத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. மாகல் என்பது பாளியில் மஹாகல்ல என்றும் சிங்களத்தில் மாகல என்றும் அழைக்கப்படுகின்றது.
இதில் மஹாகல்லநாகன் என்று ஒரு அரசன் மகாவம் சத்தில் குறிப்பிடப்படுகிறான். இந்த நகள் மகா நாகன் என்பவனால் அமைக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். நாகர்கள் எல்லாரும் தமிழர்களே என்பது ஆய்வாளர்களின் முடிவு. ஆகவே மாகநாகனும் ஒரு தமிழ் மன்னனே மாகநாகன் யாழ்ப்பாண
س 67 ـ

Page 36
பல்லவராச்சியம் அரசன் என செ.இராசநாயகம் தெரிவித்துள்ளார். சாசனங்கள் தமிழ்மொழியில் தமிழ் வருடத்தைக் குறிப்பிட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழரசர்களின் வழக்கமாகும். கண்டெடுக்கப்பட்ட அச்சானத்தில் பதினெண்பூமிஎன்றபதம்காணப் படுகிறது. பதினெண்பூமிஎன்பது பல்லவதமிழரசுகள்நகர்நிர்மானத்தின்போது பதினெண் குடிகளுக்கும் வழங்கப்படும் நிலத்தைக் குறிப்பதாகும். பல்லவ ஆட்சி முறையில் குடிமக்கள் பதினெண் குடிகள் எனச் சிறப்பாக குறிக்கப்படுவது வழக்கமாகும். ஆகவே அந்த நகரில் மாகநாகன் என்ற மன்னனால் தமிழ் பதினெண் குடிகளுக்கும் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
வீரமாகாளம் என்பது தமிழரசர்களின் படைப்பிரிவுகளில் ஒன்றாகும். ஆகவே அங்கு தமிழ்ப்படைநிலை கொண்டிருந்துள்ளது. அங்கே ஒரு சைவத் தமிழ் அரசு ஒன்று நிலைபெற்றிருந்ததை இச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சாசனத்தில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. மீதிசிலவரிகள்தரும் இச்சாசனத்தில் தகவல்களே இவையாகும். கற்பலகையின் அழிக்கப்பட்ட பகுதியில் மேலும் பல அவசியமான உண்மைகள் இருந்திருத்தல் வேண்டும். காலிங்க மாகன் என்ற தமிழ்மன்னன் சிங்க நகரிலும் புலத்திய நகரிலும் பேரரசனாக இருந்தவன். காலிங்கன் என்றால் நாக எனவே, மாகநாகன் என்பவன் காலிங்கமாகனாகவும் இருக்கலாம். ஆய்வுசெய்யவேண்டும்.
வேளைக்காரப்படை பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. வேளைகாரப் படை என்பது தமிழரசர்கள் தேவைப்படும் வேளையில் மட்டும் பயன்படுத்தும் கூலிப்படைகளாகும். புராதன பழம் பெருமை வாய்ந்த சிவாலயம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பெளத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அல்லது சிவாலயமே விகாரமாக மாற்றபட்பட்டுள்ளதையே இந்தத் தடயங்கள் தெரிவிக்கின்றன. மகாவம்சம் கூறும் அநுராதபுரகால முப்பத்திரண்டு தமிழ்ச்சிற்றரசுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
ஏலேலன் ஆட்சிக் காலத்தில் முப்பத்திரன்ைடு தமிழ்ச்சிற்றரசர்களின்
ஆட்சி இலங்கையில் இடம்பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவர்களின்
பெயர். இராசதானி இருந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏலேலன்
பேரரசனாக அநுராதபுரத்தில் இருந்து ஆட்சி செலுத்திய காலத்தில் கி.மு. 145 -
கி.மு 101 முழு இலங்கையிலும் முப்பத்திரண்டு தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி
இடம்பெற்றிருந்துள்ளது. கோதாபயன் கதிர்காமத்தில் ஆட்சிசெய்து வந்த பத்துத்
- 68

பல்லவராசசேகரம் தமிழ் அரசர்களைக் கொன்றான் என்றுதட்டுவம்சம் என்றநூல் குறிப்பிட்டுள்ளது. ஆயினும் கதிர்காமத்தில் தமிழர்களின் ஆதிக்கம் தொடர்ந்தும் இருந்துவந்துள்ளது. இறந்துபோன பத்து அரசர்களின் மூத்த மன்னனின்வாரிசான தர்மராஜா ஆதிக்கம் செலுத்திவந்துள்ளான். அவன் மகன் மகாதீசன் ஆதிக்கம் இடம்பெற்றிருந்தது என நா. நவநாயகமூர்த்தி(28.9.96 வீரகேசரி) தெரிவித்துள்ளார்.
urmissisruDumés Casbu(8:56,orum)
கி.பி.131Oல் போசராச பண்டிதர் என்ற பிராமணப் புலவர் தமிழ்மொழியில் சரசோதிமாலை என்ற சோதிடநுாலை ஆக்கிப்பராக்கிரமபாகுவின் அரச சபையில் அவன் முன்னிலையில் அரங்கேற்றினான் என்று காணப்படுகிறது. குருநாகலில் 14ம் நூற்றாண்டில் நடந்த அரசசபையில் தமிழ் அரசிருந்தாள். தென்னிலங்கை வேந்தர்களான தமிழ் நாகர்களின் வழிவந்தவர்கள். தமது அரசசபையில் தமிழ்நூலை அரங்கேற்றினார்கள். தமிழை நன்கு அறிந்திருந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். தமிழ் மொழியை நன்கு நேசித்தார்கள். அதனை மதித்துப் போற்றினார்கள். பராக்கிரமபாகு பண்டிதன் என்று அழைக்கப்பட்டான் என குருநாகல் எழுத்தாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பண்டிதம், பண்டிதர்என்ற சொல்ஆதியில் அகத்தியரால்தமிழில்
B6) st85UULL.BT5LD.
பண்டைய பாண்டுவாசநகர் என்ற ஹெட்டிய பொல என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களிலும் சின்னங்களிலும் தமிழ்மொழி காணப் படுகிறது. அண்மையில் குருநாகல்பகுதியில்கண்டுபிடிக்கப்பட்டகல்வெட்டுக்களில் துட்ட கைமுனு மன்னன். தன்னுடைய தமிழ்த்தளபதிகளுக்கு வழங்கிய அன்பளிப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன என்பதால் தமிழர்கள் துட்டகைமுனுபடையில், தளபதிகளாக இருந்துள்ளதையும், அவர்களுக்கு அவன் அன்பளிப்பு வழங்கியதையும் அவன் தமிழர்களை நேசித்ததையும். தமிழ்த் தளபதிகளின்மேல்அதிகநம்பிக்கை கொண்டிருந்ததையும் எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கின்றது. அவன் தமிழ் நாகர்களின் வம்சத்தில் தோன்றியவன் தமிழ் விரோதக்கொள்கையைக் கொண்டவன் அல்லன். துட்டனனான அவனை தமது மதவெறிக்கும். மொழிவெறிக்கும்பாளித்துறவிகள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
- 69

Page 37
பல்லவராச்சியம் சைவமும் தமிழும் செழித்திருந்த குருநாகல் இராசதானி
குருநாகல் ஏறக்குறைய 49 ஆண்டுகள் தலைநகராக இருந்தது. நான்கு மன்னர்கள்ஆட்சிசெய்தனர். சிவனொளிபாதமலை உச்சியில் காணப்படும் அடிச்சுவட்டைப்போன்ற ஒரு அடிச்சுவடு காணப்படுகின்றது. குருநாகல் இராசதானி காலத்தில் சிவவழிபாடு சிறந்து விளங்கியது. யாப்பகூவ அரண்மனையின் வெளிப் பகுதியில் சிவாலயம் ஒன்று காணப்பட்டது. இன்று சிதைவடைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் பலரிற்கு இன்றும் தமிழ்ப்பெயர்கள் இருப்பதைக் காணலாம். பண்டைக்காலத்தில் இப்பகுதி முழுவதும் சிவ எனத்தொடங்கும் பெயர்கள் காணப்பட்டன. குருநாகல் கொழும்புபாதையில் ஐந்துகல் தொலைவில் வில்பாவ என்ற இடம் காணப்படுகிறது. இந்தக் கிராமம் முன்னர் வீரபாகுபுரம் என அழைக்கப்பட்டது. இங்கு காணப்படும்கண்ணகிஅம்மன் ஆலயம் குருநாகல் மன்னர்களினால் போற்றப்பட்ட ஆலயமாகும். வருடம் தோறும் நடைபெறும். நீர்வெட்டுத்திருவிழா பண்டைய பாண்டிய நாட்டில் காணப்பட்ட முறையை ஒத்ததாக உள்ளது. இப்பகுதி முழுவதும் தமிழின் ஆதிக்கம் இருந்துள்ளது என்றும் எஸ். ரமேஸ் தெரிவித்துள்ளார்.
உலக யாத்திரிகள் இபின் பதூதா குருநாகல் ஊடகச் சென்றபோது தமிழ்மொழி இப்பகுதியில் பேசப்பட்டதாம். ஏனெனில் வடமேல் மாகாணத்தில் சில பகுதிகள் தமிழ் மன்னர்கள் வசம் இருந்துள்ளது என்பது வரலாறு. பிந்திய வரலாறுகளில் இந்த உண்மைகளைத்திட்டமிட்டு மறைத்துள்ளனர். உண்மை கள் எப்போதும்உறங்காது. வரலாறுகள் உண்மைகளை வெளிப்படுத்துவனவாக eങ്ങഥuഖങ്ങBb.
கதிர்காம அரசு நம்பிராசனி
துவாபரயுகத்தில் நம்பிராசன் என்ற வேட்டுவராசன் கதிர்காமத்தில் ஆட்சிபுரிந்தான். சூரன் போர் முடிந்த பின்னர் மகாகைலாயம் சென்ற முருகன் மீண்டும் வந்து பொத்துவில் மூன்றாவது தமிழ்ப் பேரவைக்குத்தலைமை தாங்கினார். தமிழ் வளர்த்தார். அகத்தியர் முதலான சித்தர்கள் அங்கு தமிழ் பயின்றனர். அக்காலத்தில் வள்ளியின் அழகைப்பற்றிக்கேள்விப்பட்டுக்கதிர்காமம் வந்து வள்ளியை மணந்து கொண்டார். வள்ளி திருமணம் கதிர்காமத்தில் நடைபெற்றது. நம்பிராசன் மகளே வள்ளிப்பிராட்டியார் ஆவார். இன்றும்
- 70

பல்லவராசசேகரம் வள்ளிமலை, வள்ளியம்மன் குகை, வள்ளிப்புனம் என்று கதிர்காமத்தில் காணப்படுகிறது. முருகன் சூரனுடன் போர் செய்த இடத்தில் கந்தன் வேல் கோவிலாக வழிபாடு நடைபெறுகிறது. அங்கே வள்ளியம்மனுக்கும் கோவில் காணப்படுகிறது.

கதிர்காமத்தலம் சித்தர் போகரினால் உருவாக்கப்பட்டது. மூன்றாவது தமிழ்ப்பேரவையில் கலந்து கொண்டவர்களில் மாதோட்டமன்னன் மயன்மகன் போகரும் ஒருவராவர். அவர் தமிழ்ப்பேரவையின் பிற்பகுதிக்காலத்தில் கதிர்காமத்தில் முருகன் கோவிலைக் கட்டினார். அதன் பின்னர் போகர் இந்தியா சென்றார். போகள் இந்தியாவிலிருந்து கி.மு. ஆறாயிரம் ஆண்டளவில் சீனா சென்று. அங்கே நாகரிகத்தைப் பரப்பினார் என்று காணப்படுகிறது. சீனாவில் டாவோ எனப் போற்றப்படுபவர். போகள் சித்தர் என்று யோகி இராமையா தெரிவித்துள்ளார்.

கதிரமலை குறிஞ்சித்தினை சார்ந்தது. தமிழ்ப் பாரம்பரியத்தின்படி குறிஞ்சிமுருகனுக்கு உரிய இடம் குறிஞ்சிக்கு தேவர்சேயோன் என்று சொல்லப் பட்டுள்ளது. குறிஞ்சி மக்கள் வேடர் எனவும் காணப்படுகிறது. வேட்டுவராசாவினாலும், வேடர்களினாலும் கதிர்காமம் ஆதரிக்கப்பட்டும். பூசைகள் செய்யப்பட்டும் வந்தன. வேடர்கள் வள்ளியின் உறவினர்கள். கதிர்காமத்தில் வள்ளிக்குத்தான் முதன்மை கொடுக்கப்படுகிறது. காலத்திற்குக் காலம் நாக அரசர்கள் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியும். புதிதாகக்கட்டியும், மானியங்கள் வழங்கிஆதரித்தும்வந்துள்ளனர். கதிர்காமம்நாகர்களின் ஆட்சியின் கீழ் வந்த பின்னரும், கதிர்காமத்தில் வேடர்களின் பூசைகளே நடைபெற்று வந்தன. கி.மு 5ம், 4ம், 3ம், நூற்றாண்டுகளில் நாகர்களின் சிற்றரசுகள் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். கி.மு 247இல் அநுராதபுரியில் நடந்த வெள்ளரசுமரம் நாட்டும் விழாவில் கதிர்காமத் தமிழ் அரசனும் கலந்து கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது.
சிங்கைத்தமிழரசு உன்னத நிலையிலிருந்த காலத்தில் கி.பி. பதின்மூன்றாம். பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் கதிர்காமம் சிறப்புடன் விளங்கியுள்ளதை அறியமுடிகின்றது. கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் இந்திய சோழநாட்டுப் புலவரான புகழேந்தி சிங்கை அரசனின் காவலருடன் கதிர்காமம் சென்றுமுருகனை வழிபட்டுள்ளார். நாவலர் சரிதையின்
- 71

Page 38
பல்லவராச்சியம் பாடலில் காணப்படுகிறது. கி.பி பதினாறாம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் வழிபட்டு திருப்புகழ் பாடியும் உள்ளர். இவற்றைநா. நவநாயகமூர்த்தி(விரகேசரி 16.07.2OOO) குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1581ம், ஆண்டில் கண்டி அரசன் முதலாம் இராசசிங்கன். தற்பொழுதுள்ள கதிர்காம கோயிற்திருப்பணியை தொடக்கி வைத்தான் என்று வரலாற்றுக் குறிப்புக் காணப்படுகிறது. தற்பொழுதுள்ள ஆலயத்தை கட்டி முடித்தவன் கண்டி அரசன் இராசசிங்கன் கி.பி.1635 - 1687 இவன் ஆட்சிக்காலம் என்றும் குலசபாநாதன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் தமிழர், பல்லவர். பாண்டியர். சோழர், கலிங்கள், நாயக்கர்களே ஆட்சி செய்துள்ளார்கள். சிங்களவர் அரசராக இருக்கவில்லை (பூம.செல்லத்துரை)
தெனி இலங்கை தமிழரசர் ஆட்சி
கி.பி. 11ம் நூற்றாண்டில் விஜயபாகு மன்னனின் தங்கை மித்தா தமிழ் இளவரசன் ஒருவனிற்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இந்தத் தமிழ் இளவரசன் பாண்டி நாட்டைச் சேர்ந்தவனென்றும் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால் அவன் பெயர் காணப்பட வில்லை மறைக்கப்பட்டுள்ளது. இத்தமிழ் இளவரசனின் பிள்ளைகள் மானாபரணன், கீர்த்திருநீமேகன், முரீவல்லவன் ஆகியோர். இந்தத் தமிழ் இளவரசன் பல்லவசிங்கை அரசகுடும்பத்தைச் சேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் பல்லவன். வல்லவன் என்பது தமிழில் ஒரு விதமாக வழங்கப்படும் பெயராகும். அதனாற்றான் தன் மகனுக்கு முறிபல்லவன் என்று பெயரிட்டு இருத்தல் வேண்டும். மானாபரணன் மாயரட்டையின் சிற்றரசன் ஆவான்.
தமிழ் அரசனான மானாபரணன் மகனே மகாபராக்கிரம பாகு, சைவக்கோவிலில் நேர்த்திக் கடன்களின் விளைவாகவே அவன் பிறந்தான் என்பதை மகாவம்சம் உறுதிசெய்கிறது. கி.பி.1118-9 ஆண்டோடு சம்பந்தப்படும் நிக்கவரரெட்டியா சிலாசாசனம்மாணாபரணனை வீரப்பெருமாள் என்ற பெயரால் குறிப்பிடுகிறது. இவன் சிற்றரசன் ஆனபிறகு வீரவாகு எனப் பிரசித்தமானான். இவன் குலோத்துங்க சோழன் மகளையும் இரண்டாவது மனைவியாக மணந்தான். இந்த சிலாசாசனம் புதுமுத்தாவ கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
- 72 -

பல்லவராசசேகரம் பூர்வீக தமிழ்லிபியில் இது அமைந்துள்ளது. பராக்கிரமபாகு சைவத்தமிழ்ப் பண்புகளையும் கைக் கொண்டுள்ளான். றுகுனையில் புதிதாக 24 தேவாலயங்களை (சைவ) உருவாக்கினான். மகாவம்சம் குறிப்பிடுகிறது என்ற விபரங்களை லயனல் சரத்பூர்வீக இலங்கையில் தமிழ் சிங்கள உறவுகள் என்ற நூலில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாண்டியருக்காக அவர்களுடன் சேர்ந்து சோழருக்கு எதிராகப் போரிட்டான். ஒரு பெளத்த தர்மநூலான மகாவம்சத்தில் இந்தயுத்தம் பற்றி இரண்டு அத்தியாயங்கள் காணப்படுகின்றன. தமிழரைக் கொன்று” என்ற சொல் கணக்கின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழருக்கு எதிரான சிங்களவர் மேற்கொண்ட யுத்தமல்ல என்பது தெளிவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மகாவம்சத்தை எழுதியவரின் உள்மன வக்கிரத்தின் வெளிப்பாடு தான் அவர் தமிழரைக்கொன்று" என்ற சொல்லைக்கணக்கின்றி பயன்படுத்தியது. அதுவும் இந்தியாவில் சோழ பாண்டியருக்கிடையே நடந்தபோரில் பாண்டியர் களுக்காக அவர்களுடன் சேர்ந்து சோழருக்கு எதிராகப் பராக்கிரமபாகு போர் புரிந்தான்.
தமிழ்நாகவேந்தன் முத்துச்சிவனின் பிள்ளைகள் திசை. மகாநாகன், மகாசிவன், சூரத்திசை அசேலன் ஆவர். மூத்தசிவன் மகாசிவன் பெயர்கள். அவர்கள் சிவவழியாடுடையவர்கள். நாகவம்சத்தவர்கள் என்பதனையும் உறுதிப்படுத்துகிறது. நாகர்கள் கட்டிய விகாரைகள் பெரும்பாலும் நாகவிகாரை என்றே அழைக்கப்பட்டன. முத்துசிவன், மகாநாகன். யத்தாளதீசன் கோதாபயன் காகவன்னதீசன். துட்டகாமினி முறையே வழித்தோன்றல்களாவர். எனவே முத்துசிவனின் கொள்ளுப்பேரெனே துட்டகைமுனு என்றும் அவன் விஜயனின் அரசவம்சத்தை சோந்தவனல்ல. இதனை E.T. கன்னங்கார என்பவர் தனது "யாழ்ப்பாணமும் சிங்கள பாரம்பரியமும்” (1984) என்ற நூலில் துட்டகைமுனு கல்யாணிநாக அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜயனின் அரசபரம்பரையைச் சேர்ந்தவனல்ல என்பது தெளிவாகிறது. உண்மையில் எல்லாளன் துட்டகைமுனு போர்இருதிராவிட அரசர்களுக்கிடையே நடந்தபோரேயன்றிசிங்களவர் தமிழருக்கிடையேநடந்த போரல்ல. தீபவம்சமும், மகாவம்சமும் சொல்லியிருப்பது புனைகதைதான் என்றும் அந்தனிசில் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்துமாப்போல ஆங்கிலேயர் களான எமர்சன்ற் ரெனற். எச்.பாக்கள் தமது சிலோன், ஏன்சன்ற் சிலோன் நூல்களில்
- 73 -

Page 39
பல்லவராச்சியம்
நாகர்கள் மனிதர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் சாற்றியுள்ளனர். கி.பி 5ம், 6ம் நூற்றாண்டுகளில் கலிங்க அரசர்களும், அரச குடும்பத்தவர்களும் பெளத்த தேரர்களும். பெளத்த சமயத்தவர்களும் விரட்டி அடிக்கப்பட்டுநாடுகடத்தப்பட்டும், சித்திரவதைகளுக்குப்பயந்தும் அஞ்சிஓடி எமது நாட்டில் வந்து குடியேறமுன்னர் இலங்கையில் தமிழரான இயக்கர்களும் நாகரும் மட்டுமே மன்னர்களாக இருந்துள்ளனர். பின்பும் தமிழ் நாகர்களின் ஆட்சியே தென்னிலங்கையில் பெரும்பாலும், இடம்பெற்றுள்ளதை தமிழ்பிராமிக் கல்வெட்டுகளும், அவர்களின் சாசனங்கள். நூல்களும் தெரிவிக்கின்றன. மாத்தளை தல்கங்கொட விகாரை கல்வெட்டு கி.மு. 2ம் நூற்றாண்டு தமிழ்ப்பிக்குகளுக்கு சொந்தமான குகைகள் பற்றிகுறிப்பிடுகின்றது.
கி.பி 1ம் நூற்றாண்டு 4ம் மகிந்தனின் சிலையடியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் “அம்கம்குளி என்ற இடத்தில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாக குறிப்பிடுகின்றது.
கி.பி 1409ல் சீன அரசன் யுங்லோ தளபதி செங்கே மூலம் அளித்த ானங்கள் பற்றிக் காலியில் காணப்படும் மும்மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சீனம், பர்சியன். தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. சிங்களம் அக்காலத்தில் அங்கெ வழக்கில் இல்லாதபடியால் இடம்பெறவில்லை. பல தமிழ்க்கல்வெட்டுக்கள் களுத்துறை, மாத்தறை, கந்தப்பளை கோட்டகமவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாண்டுவாசுநுவர 12ம்நூற்றாண்டுத்தமிழ்க்கல்வெட்டு பொலனறுவா வேளைக்காரர் சாசனம் தமிழ்ப்படைகள் பற்றிக் கூறுகிறது. விஜயபாகு 1070 -11 தமிழ் எழுத்தாளர்களை நிர்வாகத்தில் அமர்த்தியிருந்ததை இவை தெரிவிக்கின்றன.
அநுராதபுர சைவசாசனம் கி.பி 6ம் நூற்றாண்டில் தமிழில் செதுக்கப்பட்டுள்ளது. கங்குவேலிக் கல்வெட்டு யாழ்ப்பாண மன்னரின் மேலாட்சி யின் கீழ் திருகோணமலை வன்னிமைகள் இருந்தன என்று குறிப்பிடுகிறது. மகாபராக்கிரமபாகுவின் தந்தை மானாபரணன் பொறித்த தமிழ்க் கல்வெட்டில் குருநாகல் மாவட்டத்தில் தமிழ் வண்ணார், கொல்லர் இடையில் ஏற்பட்ட பிணக்கினைக் குறிக்கிறது.
- 74

பல்லவராசசேகரம் p6oTLb 6 fl:BuuLungö. 6 slä GóULDLuTg. SJ6Oor Lmb 6nsuu UT5 மன்னர்களின் ஆட்சியில் தமிழ் மட்டுமே அரசமொழி, அவர்களது பதிவேடு பெரும் பான்மையானவை தமிழில் காணப்படுகிறது. திரியாய்க் கல்வெட்டு பல்லவ அரசர்களின் 7ம் நூற்றாண்டு தமிழ்கிரந்த எழுத்துக்களில் காணப்படுகிறது.
சிகிரியாக்குன்றில்கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டத்தில் ஏழுவரிகள் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. பதவியாசிவன்கோவில் செங்கற்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.
16ம் நூற்றாண்டு வெருகல்கல்வெட்டு, 14ம் நூற்றாண்டுகங்குவேலிக் கல்வெட்டு, தென்னிலங்கை மன்னர்களின் 12ம் நூற்றாண்டு 14ம்-16ம் நூற்றாண்டுக்கால கல்வெட்டுக்கள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழி இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் வழக்கில் இருந்துள்ளதை இக்கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
முனிச்சரம் சிவன் கோவிலுக்கு கீர்த்தி ழுநீ ராசசிங்கன் அரசனால் கொடுக்கப்பட்டநில தானங்கள் தமிழிலேயே இருந்தன.
இதுவரை வாசிக்கப் பெறாத தமிழ்க் கல்வெட்டுகள் அதிகம் உண்டு.
தேவநம்பியதீசன் காலமாகிய கி.மு. 3ம் நூற்றாண்டுமுதல் கிபி 5ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்களும், பிராமி எழுத்து க்களுமே காணப்படுகின்றன. பிராமி எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்களின் முந்திய வரிவடிவமாகும்.
எல்லாளனி காமினி யுத்தம்
இனரீதியான மோதல் அல்ல எனப் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர ஹிமி தெரிவித்துள்ளார். மேலும் எமது நாட்டுக்கு நேர்மையான நடைமுறைகளை முதலில் அறிமுகப் படுத்தியவன் எல்லாளன் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தர்மாசோக சிலாசனக்குறிப்புகளின் படி எல்லாளன் சமயபக்தி உடையவன். திராவிடனான எல்லாளன் பிற சமயத்தவரதும் விரோதி அல்ல என்பது தர்மாசோக பெளத்த பிக்குவின் ஆதாரம்.
- 75.

Page 40
பல்லவராச்சியம்
விகாரமாதேவி என்ற பெளத்த பக்தை துட்டகாமினியின் தாய் உயிர் கொலைக்கு ஆசைப்படுவது குரூரக் குனம். எல்லாளனின் முதலமைச்சரது தலையை அறுத்து இரத்தம் தோய்ந்த வாளைக் கழுவி அந்த இரத்த நீரை உயிரற்றமுண்டத்தின் மீது ஏறிநின்று கொண்டு குடிக்க வேண்டுமென்று அவள் ஆசைப் பட்டாளாம். இப்படியான குரூர ஆசைக்குணம் ஏற்பட்டதென்று மகாவம்சம் குறிப்பிடுவதன் மூலம் அவளின் பாத்திரத்தைச் சிதைத் துள்ளது. இப்படி மகாவம்சம் வரலாற்றைச் சிதைத்து விடக்காரணம் என்ன? தமிழ் மக்களுக்கு இவ்வகையில் மகாவம்சம் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லாளன் செங்கோல் அரசனாக நாற்பத்திநான்கு வருடங்கள் திகழ்ந்தான்.
துட்டகாமினி மதத்தையே முன் வைத்தான். பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கிறேன் என்று கவர்ச்சிகரமான சுலோகத்தை முன்வைத்தான். மக்கள் ஆதரவைப் பெற நுட்ப உபாயத்தை பிரயோகித்தான். பெளத்தபிக்குகளோடு இணைந்து செயற்பட்டான். இவற்றின் வாயிலாக மக்கள் ஆதரவைப் பெற்றான். பெளத்த பிக்குகள் யுத்தத்தில் சம்பந்தப்பட்டு போர்முனைக்குச் சென்றார்கள். புனித தந்தம் போர்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புத்தபெருமான் யுத்தத்தை ஒருபோதும் ஆதரித்தவுரல்லர். எல்லாளன் காமிணிநேரடி யுத்தம் நடைபெற்றது. மக்கள் கொல்லப்படவில்லை. வரலாற்றில் பல இடங்களில் சிங்களமக்கள் தமிழ்மக்களை எதிர்த்துப் போராடியதாகத் குறிப்பிடப்படுகிறது. இதற்குத்தமிழர் விரோதம் காரணம் அல்ல. ஓர் இலங்கையனே நாட்டின் அரசனாக இருக்க வேண்டும் என்ற அரசியல் உணர்வே இதற்குக் காரணம் என்றும் கும்புருகமுவே வஜிர ஹிமி. இலங்கை பாளி, பெளத்தபல்கலைக்கழகப் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கூழகூடிசிங்களதமிழ் நட்புறவை வெளிப்படுத்தும் வரலாற்றினை ஏன் மறைக்க வேண்டும். என்று லங்காதீய பத்திரிகையில் 04.09.96ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு (26.05.1996 தினகரனில் வெளியாகியது) துட்டகுணம். துட்ட செயல்களுக்காக, லாலா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, தோணிகளில் வந்து, களவாகநாட்டுக்குள் புகுந்த விஜயனும் தோழர்களும் இலங்கைக்கு அந்நியர்களே. இலங்கையிலும் அவர்களின் குணம், செயல்கள் மாறாமல் இருந்துள்ளதையே குவேனி வரலாறு தெரிவிக்கிறது. விகாரமாதேவி இரத்த வெறியும் கொலைவெறியும் குரூரகுணமும் கொண்டவளாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
- 76 س

பல்லவராசசேகரம் நாகர்கள் தமிழர்களே.
மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசர்களின் பெயர்களில் கல்லாடநாகன், சோரநாகன். மகாநாகன், இளநாகன், மாகலநாகன், குஞ்சநாகன், குடநாகன், அபயநாகன், சிறிநாகன், போன்றோர் நாகவேந்தர்களே. மாகல்லநாகன்மருமகன்கயவாகுவும்ஒருநாகவேந்தனே என ம.க. அந்தனிசில் குறிப்பிட்டுள்ளார். (O9.01.2OOOதினக்குரல்) கூடிகூழபழந்தமிழ்க்கல்வெட்டுக்கள் பல அநுராதபுரியில் பிற்காலத்திற்தகர்க்கப்பட்டமை மறந்த செய்தியல்லவே. கிபி 9ம் நூற்றாண்டுவரைசிங்கள மொழிவடிவம் தோன்றியிருந்திருக்கவில்லை. என ஆங்கிலேயரான முன்னாள் தொல்லியல் ஆணையாளர் டாக்டர் எட்வெட் up66)st 360's Ancient Inscription in Ceylon (b. 1656) 18836 தெரிவித்துள்ளார் என்பதையும் ம.க. அந்தனிசில் எடுத்துக்காட்டுகிறார்.
மூத்தசிவன்(கி.மு. 307-247) அநுராதபுரியில்60 ஆண்டுஆட்சியில் சைவமும் தமிழும் தொனிப்பதால் பாளியில் எழுதும்போது மூட்டசிவ என திரிபுபடுத்தப்பட்டதாக அந்தனிசில் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களமொழி தோன்றுவதற்கு முன்னர் தமிழ் மொழி மட்டுமே வழக்கில் இருந்துள்ளது. சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னர் சிங்களவர் என்று யாரும் இருந்திருக்கவில்லை. சிங்களமொழி தோன்றுவதற்கு முன்னர் ஈழநாட்டில் வாழ்ந்தவர்களும், நாட்டை ஆண்டவர்களும் தமிழர்களே. அப்படி என்றால், அதற்கு முன்னர். அரசர்களுக்கிடையே நடைபெற்ற போர்கள் எல்லாம் பாளி இலக்கியங்கள் கூறுவது போன்று மொழிப் பகையால் ஏற்பட்டன அல்ல. தவறாது விகாரைப்புராணங்களை எழுதிவரும் பெளத்தபிக்குகள். பெளத்தமதம் இலங்கையில்தோன்றியதாக கருதப்படும்காலத்தில் இருந்து சிங்களத்தில் எதுவும் எழுதப்படவில்லை. ஏனென்றால் தமிழ் பெளத்தபிக்குகளால்தான்முதலில் இங்கு பெளத்த மதம் பரப்பப்பட்டது. விஜயன் சிங்களவனுமல்ல. கி.பி. 6ம் நூற்றாண்டுவரை பெளத்த வரலாறு இலங்கையில் எழுதப்படவில்லை.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து மாநாமதேரர் பாளியில் ஒரு பெளத்த
வரலாற்றைத் தயாரித்தார். அதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து
ஆரம்பித்தார். கலிங்கத்துறவிக்கு இலங்கை வரலாறோ இலங்கை மொழியோ
தெரிந்திருக்கநியாயமில்லை. கலிங்கத்து பெளத்ததுறவிகள் அவர்கள் வந்தபோது
- 77 -

Page 41
பல்லவராச்சியம் இலங்கையில் வாழ்ந்த சைவதமிழர்களிடையே அதைப்பரப்பினார்கள். அதனால் தமிழும்பாளிசமஸ்கிருதமும் கலந்தது. மொழிக்கலப்பு ஏற்படத் தொடங்கினாலும் ஒருசில பாளித்துறவிகளால் சிங்கள மொழியை உருவாக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்தும் பாளிமொழியில் மகாவம்சத்தை எழுதினார். மூன்று நூற்றாண்டுகளில் சிங்களம் பிறந்தது என்பதை ஆங்கிலேய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 14ம் நூற்றாண்டிலேதான் சிங்கள மொழிக்கு மகாவம்சம் மாற்றிஎழுதமுடிந்தது. கிபி 10-13ம் நூற்றாண்டுகளில் கலிங்கள்களின் ஆடசியிலே சிங்களமொழி உருவாக்கம் எழுத்து உருவாக்கம் நடைபெற்றது. இலங்கையிலேதான் சிங்கள மொழி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களுக்கும் கள்ளத்தோணியில் வந்தவர்களுக்கும் இலங்கையே தஞ்சம் கொடுத்துள்ளது.

கி.பி. மூன்றாம். நாலாம்நூற்றாண்டுகளில் வடக்கே தமிழர்களிடையே தென்னிந்திய தமிழ்ப் பெளத்த துறவிகளால் பெளத்தம் பரப்பப்பட்டாலும், அது விரைவாக வழக்கொழிந்து போய்விட்டது. சுத்தமான தமிழ்ப் பேசி வந்த தென்னிலங்கைத் தமிழர்கள் கி.பி ஆறாம் நூற்றாண்டில் பாளிப் பெளத்த வரவினால் தமிழும்பாளியும் கலந்து பேசினார்கள். இலங்கைக் கறுவாவுக்குப் பேர்போன நாடாக இருந்தது. அதனால் கறுவாத்தீவு என்றும் அழைக்கப்பட்டது. கறுவா சமஸ்கிருதத்தில் சிங்களம் என குறிப்பிடப்படுகிறது. வட இந்தியர்கள் இலங்கையை கறுவாத்தீவு என்னும் பொருளில் சிங்களத்தீவு என அழைத்தார்கள். அத்தோடு கறுவாச்செய்கையில் ஈடுபட்டவர்களையும் சிங்களவர் என்றும் அழைத்தார்கள். அவர்கள் பின்னர் பேசிய மொழியை சிங்களம் என்று சமஸ்கிருதம் பேசிய வட இந்திய பார்ப்பானர்களே குறிப்பிட்டார்கள். ஆரியக்கவி பாரதி இலங்கையைச் சிங்களத்தீவு என்றே குறிப்பிட்டுள்ளதை நோக்கலாம்.
மகதத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்க அரசர்கள் தென்னிலங்கையில் தமது ஆட்சியையும் சில காலங்களில்நடத்தியுள்ளார்கள். பெளத்தத்தை தழுவிய தமிழர்கள் தமது இனத்தையும் மொழியையும் மறந்து விட்டார்கள். சிங்கள் இனத்தை உருவாக்கதிராவிடர்கள் பெரிதும் உதவினார்கள்என G.L. மென்டிஸ்
Early Hiotory of Ceylon 6T6irports56) infusiréifnir.
இருந்த போதிலும் பெளத்தத்தைத் தழுவிய தென்னி லங்கை
அரசர்கள் தமிழ் சைவ அரசர்களிடம்திருமண உறவுகளையும்,நட்புறவுகளையும்
ஒத்துழைப்பு ஆதரவுகளையும் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. - 78

பல்லவராசசேகரம் ஒருபோதும் மொழிகாரன மாகவோ, மதம் காரணமாகவோ அவர்கள்
போரிடவில்லை. மண்ணாசை பிடித்த அரசர்கள். எல்லையை விரிவாக்கப் போரிட்டார்களே தவிர, மொழிவெறியாலோ அல்லது மதவெறியாலோ இல்லை. பரதேசிகளான பாளித்துறவிகள் மதவெறியை மொழிவெறியை தூண்டுவதாகக் கதை புனைந்துள்ளார்கள் என்பதை ஆய்ந்தறிந்து கொள்ளலாம். மொழி வெறியையும், மதவெறியையும் தூண்டுபவர்களினால்நாட்டின் அமைதி மகிழ்ச்சி போய்விட்டது.
“கி.பி 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரரினால் புனையப்பட்ட கற்பனைச் சித்திரம் உருவாக்கப்பட்ட கதை முன்னுக்குப் பின் முரண்படும் கருத்துக்கள், உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை மகாவம்சத்தில் தெரிவித்துள்ளார்" என சட்டத்தரணி சி.வி. விவேகானந்தன் (O1.02.2004 வீரகேசரியில்) தெரிவித்தள்ளார். மேலும் இந்தியாவிலும் நாகர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். கிபி முதலாம்நூற்றாண்டில் சோழராச்சியமும், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பிராந்தியமும் (தொண்டை மணடலம்) நாகவேந்தர்களால் ஆளப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. சோழ மண்டலக் கரையில் நாகர்கள் வாழ்ந்தார்கள் என்பதும், பாண்டி நாட்டிலும் சோழநாட்டி லும் உரகடரம் என்றழைக்கப்பட்ட நகள் இருந்ததிலிருந்து மேலும் பலப்படுத்தப்படுவதாக (3576óp6515á360762 sig5u gñá5TT sin pápitñ. Cines Chandra Sircar, The Successors of Satavakana in Lower Deccan Calcutla 1939.
இந்த இடங்களில் பல்லவத்தைச் சேர்ந்த பல்லவர்களின் ஆட்சி இக்காலத்தில் இடம்பெற்றுள்ளது. பல்லவம் முன்னர் நாகதீவு என்ற பெயரால் விளங்கியது. பல்லவ அரசர்கள் எனப்படுவோர் பல்லவத்தின் அரச வம்சத்தவர்களேயாம். நாகர்களை மனிதர்கள் அல்ல என்றும் மாயப்பிறவிகள் என்றும்பாளிநூல்கள் தெரிவித்ததில் உண்மையில்லை என்பது உறுதியாகிறது.
கி.பி. 4ம் நூற்றாண்டிற்குரிய தோணிகல கல்வெட்டில் நியம என்ற வர்த்தகக் குழுக்கள் பற்றிய குறிப்புக்கள் தமிழ்க்கல் வெட்டுக்களில் காணப் படுகின்றன. வணிக கணங்களைப் பல்லவர்களே நியமித்தார்கள்.
தெய்வேந்திர முனையில் காணப்படும் உபுல்வன் கோயிலிலும், மலாயா தீபகற்பகத்தில் தகுவா - பா என்ற இடத்தில் காணப்படும் விஷ்ணு
- 79

Page 42
பல்லவராச்சியம் கோவிலிலும் மணிக்கிராமத்தார் கல்வெட்டும் பல்லவர்களது அரச ஆணையைப் பெற்றவர்த்தக நடவடிக்கைக்குரிய மையங்களாகக் காணப்பட்டன. மணிக்கிரா மத்தார் மகியங்கனைப் பகுதியில் மிகவும் செல்வாக்குப் பெற்ற வணிகக் குழுக்களாக தொழிற்பட்டிருந்தனர். புகழ்பெற்ற மணிக்கிராமத்தார் எனப்படுபவர் மணிபுரத்தை சேர்ந்தவர்கள். பல்லவர் ஆட்சியில் வணிகக் குழுக்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பல்லவ வணிகர் உலகம் எங்கும் வாணிபம் செய்தனர்.
பல்லவர் அரச ஆணை பெற்ற வர்த்தக மையங்களாக மகியங்கனையும். தேவேந்திரமுனை (மாத்தறையும் இருந்தபடியால் அக்காலத்தில் மணிபுர பல்லவ அரசர்களின் ஆட்சி அங்குநிலை பெற்றிருந்தன என்பதை தண்டீச்சரம் சிவாலயம் உறுதிசெய்கின்றது.
ஏலேலன் இறந்தவுடன் துட்டகாமினி யானையிலிருந்து இறங்கி இறந்த உடலுக்கு மரியாதை செலுத்தினான். அவன் தளபதிகள், படையினர் பேரரசர் உடலுக்கு பமரியாதை செலுத்தினார்கள். துட்டகாமினிபடையில் ஏராளம் தமிழ் வீரர்கள் இருந்தனர். தமிழர் தமிழருடன் போரிட்டுள்ளனர். போர் வெற்றியை கொண்டாடும் முகமாக துட்ட காமினி, தனது தமிழ்த் தளபதிகளுக்கு பரிசுகள் வழங்கியதாக கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. ஏலேலண் வீழ்ந்த இடத்தில் துட்டகாமினி நினைவுச் சின்னம் எழுப்பி அந்த வழியால் செல்வோர் அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். அன்று தொடக்கம் அரசர்களும் தமது வாத்தியங்களை நிறுத்தி வணங்கினர். எல்லாளன் சேனை என்ற இடத்தில் நினைவுச்சின்னம் இருந்தது.
தமிழ்நாக அரசர் இருவர், மோதிக் கொண்டனர். தமிழ் படைகளுடன் தமிழ்ப்படைகள் மோதிக் கொண்டன. எல்லாரும் தமிழர் என்பதனால் தான் ஏலேலன் சமாதிக்கு எல்லாரும் மரியாதை செலுத்தினர். எனவே ஏலேலன் வெளிநாட்டவன் அல்ல. பல்லவ அரசனே. அங்கே மதவெறியோ, மொழிவெறியோ போருக்குக் காரணமாக இருக்கவில்லை. மண்ணாசையும் அதிகாரவெறியுமே துட்டகாமினிபோர் தொடுக்கக் காரணம் ஆகும். கழனியில் ஆட்சி செய்த தமிழ் மாணிக்கநாகனின் வழித்தோன்றல் துட்ட காமினிஆவான்.
- 80 -

பல்லவராசசேகரம் அநுராதபுரத்தில் தமிழர்களின் ஆட்சி
அநுராதபுரியில் தமிழரசர் ஆட்சி பற்றி, பாளி இலக்கி யங்கள் குறிப்பிடுகின்றன. மகாவம்சம் புத்த சமயத்தவர்களையும் புத்த சமயத்தை வளர்த்த அரசர்களினதும் வரலாற்றினையே கூறினாலும், ஆங்காங்கே தவிர்க்க முடியாத காரணத்தினால் சைவசமயத்தவர்களையும், தமிழர்களையும் பற்றியும் சிலசில தகவல்கள் காணக்கிடக்கின்றன.
சேனன், குட்டன் என்ற இரு தமிழரசர்கள் கி.மு. 177 இலிருந்து கி.மு. 155 வரை 22 வருடங்கள் நீதிதவறாது ஆட்சிபுரிந்துள்ளார்கள். குட்டன் மேற்கு நாடான மாந்தை அரசனாவான். சேனன் என்பது குதிரைமலை அரசர்களின் பெயராகும்.
அடுத்து ஏலேலன் என்ற அரசன் கி.மு. 145 தொடக்கம் கி.மு 101வரை தொடர்ந்து 44 வருடங்கள் ஆட்சிபுரிந்தான்.
கொலம்பகலா (கொழும்பு) என்ற இடத்தில் தமிழரசர்கள். ஐவர் கி.மு. 102 தொடக்கம் கி.மு. 87வரை ஆட்சிசெய்தனர். புலகத்தா, பாகியா, பணயமாற. பிளயமாற. தாடிக எண்போர் மாறி மாறி 14 வருடங்கள் 7 மாதங்கள் ஆட்சி செய்தனர்.
கி.மு. 47 இல் வடுக என்ற தமிழரசன் ஒருவருடம் 2 மாதங்கள் அனுராதபுரியில் ஆட்சிசெய்தான்.
இவனுக்கு பின் கி.மு. 46இல்நீலன் என்றதமிழரசனின் ஆட்சிஆறு மாதங்கள் நடந்தது.
மகாசாத்தன், கபதிகன், மகாஆய், மகாஉதி, கிமு 2ம், 1ம்நூற்றாண்டு சேர்ந்த தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டநாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ள. இவை ஈழத்தில் பலநகரங்களிலும் வாழ்ந்த நாகச் சிற்றரசர்களினால் அல்லது தமிழ் வணிகக் குழுத்தலைவர்களினால் வெளியிடப்பட்டவையாகும்.
இந்நாணயங்கள் பிராமிக்கல்வெட்டுக்கள். தமிழர்கள் இலங்கையின்
-81 -

Page 43
பல்லவராச்சியம் பல பாகங்களிலும் செறிவுடனும். செல்வாக்குடனும் பண்டு தொட்டு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனைக் காட்ட வலுவான சான்றாதரங்கள் ஆகும்.
அசேலன். ஏலேலன் போன்றதமிழ் அரசர்களுடையதாயக பூமியை நாகதீவு அல்லது பல்லவமே என்பது அண்மைக்காலமாக தொல்லியல் கண்டு பிடிப்புக்கள் உறுதிப்படுத்திவருகின்றன.
கி.பி 835 - 858இல் பாண்டியன் போரிட்டு வென்று ஆண்டான். அநுராதபுர அரசின் வீழ்ச்சிக்கு சோழப்படை எடுப்பே காரணம். 5ம் சேனன் காலத்தில் நடந்த போரில் தென்னிந்திய கூலிப்படைகள் நிர்வாகத்தை தம்வசமாக்கினர். 5ம் மகிந்தன் உயிரைக்காக்க தப்பி ஓடினான். அநுராதபுரராச்சியத்தின் படைபலம் பெருமளவில் தென்னிந்தியத் தமிழ் கூலிப்படைகளிலேயே தங்கி இருந்தன.
வீரப்பெருமாள் என்ற தமிழன் வீரவாகு என்ற பட்டப் பெயருடன் ஆண்டான். அவனே மானாபரணன், முதலாம் விஜயபாகு வழிவந்த பாண்டு மன்னனின் பரம்பரையினன் ஆவன். பாண்டு என்பவன் பாண்டிய மன்னனாக இருத்தல் வேண்டும்.
அநுராதபுர அரசர்களின் காலத்தில் பெருமகன் எனப்படும் கெளரவத் திற்குரிய மக்கள் குழுக்களின் தலைவர்களாக தமிழர் வாழ்ந்தனர். அரச வகையிலும், நியாய தலங்களிலும் பெருமகன் குழுவினர் அங்கம் வகித்தனர். கல்வியறிவு எழுத்தறிவு, முகாமைத்துவப்பண்பு. கிராமிய தலைவர்களை விட உயர்ந்தோர் குழாமாக வாழ்ந்திருந்தனர். இக்குழுவினருக்கும் ஆட்சியிலிருந்த அரசகுடும்பங்களுக்கும் இடையே திருமணவம்சத்தொடர்புகள் காணப்படுகிறது. அவர்களுக்கு விசேட அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தன எனக் கல்வெட்டுச்சான்றுகள் உறுதிப்படுத்தகின்றன. கி.மு. 9ம்நூற்றாண்டுக்குப்பிற்பட்ட சாசனங்களில் அடிக்கடி பரவணி என்று பரம்பரை சொத்துரிமைகள் பொறிக்கப்பட்டுள்ளன. பெருமகன் என்பது பதினெண்குடி சார்ந்த அரசவை உறுப்பினர்கள் ஆகும். இது தமிழரசர் ஆட்சியின் சான்றாகும்.
பிராமிக்கல்வெட்டுக்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களைக்
- 82 -

பல்லவராசசேகரம்
கொண்டு கி.மு. 800 ஆண்டு தொடக்கம் பெருங்கற்காலபண்பாட்டுக்குரியதிராவிட மக்கள் இலங்கையில் பல வட்டாரங்களிலும் வாழ்ந்திருந்தார்கள் எனக்கலாநிதி புஸ்பரட்ணம் தெரிவித்தள்ளார்.
ஆரம்பகாலத்தில் சிங்களம் என்னும் சொல் தென்னிலங்கையில் வசித்து வந்த ஒரு குழுவினரையே குறித்தது என R.A.L.H குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார். ஏனைய மற்ற குழுவாக தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்ந்திருந்தனர். மாகோனின் சிற்றரசனாக சந்திரபானு ஆனூர்புரியிலிருந்து ஆட்சிசெய்தான். அவனுக்குப் பின் மகன் ஆண்டான். (அநுராதபுரி) ஆனுள்புரி என்றால் நந்திக்கொடிபறக்கும்நகர் (குடுமியான்மலை கல்வெட்டு.
அநுராதபுரத்தில்வாழ்ந்த தமிழர்களேயார் மன்னனாக வரவேண்டும் என்பதனை தீர்மானித்ததாகச் சூளவம்சம் கூறுகிறது. தமிழர்கள் பெரும்பான்மை யாகவும் பலத்துடனும் வாழ்ந்திருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்துள்ளது. அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மண்படை ஆராய்ச்சிமுதல் மண்படைகி.மு. 4500 ஆண்டுக்குரிய செயற்கை நீர்த்தேக்கம் இருந்துள்ளதைச்சுட்டிக்காட்டுகிறது. அக்காலத்தில் அங்கே தமிழர் ஆட்சி நிலவியுள்ளது. கி.மு. 1000 ஆண்டில் அநுராதபுரத்தில் கதம்பநதிக் கரையில் தமிழ் நாகர்களின் தலைநகர் இருந்துள்ளது. அகழ்வாராய்ச்சியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (A). அதுமுந்திய அசுரபுரி என்ற தலைநகர் தொடர்ச்சியாக கி.மு 4500 முதல் தமிழர் ஆட்சிஇடம் பெற்றிருந்ததை இதுகாட்டுகிறது. கிபி6ம்நூற்றாண்டிற்குரிய அனுராதபுரசைவத் தமிழ் சாசனம்கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்துள்ளதைக் காட்டுகின்றது.
கிபி 1679ல் றோபேட்நொக்ஸஎன்றஒல்லாந்தபடை அதிகாரிகண்ைடி அரசனின் சிறையில் 18 வருடம் இருந்து. தப்பி ஓடி வந்த வேளையில், அநுராதபுரத்தில் சிங்களத்தில் அவன் உரையாடியபொழுது அங்கிருந்தவர்களி னால் அதைவிளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட இனத்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழியாக தமிழ்மொழி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே 17ம் நூறாறானடில் அனுராதபுரியில் தமிழ் மக்களே வாழ்ந்துள்ளனர். 18ம் 19ம் நூற்றாண்டில் குலசேகரம். வைரமுத்து வன்னி அரசர்களால் நுவரகலாவிய பிரதேசம் ஆட்சி செய்யப்பட்டது.
- 83

Page 44
பல்லவராச்சியம் சத்ததீசனின் தமிழ்க் கல்வெட்டு
பொன்னன் வெளியில் காணப்பட்ட தீர்த்தக்குளம் திகவாபி ஆக மாற்றப்பட்டுள்ளது. பட்டிப்பளை ஆறு கல்லோயா ஆகமாற்றப்பட்டு. சிங்களக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்ட போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து அம்பாறை மாவட்டம் என பெயரிடப்பட்டது. தமிழில் வாவி என்னும் சொல்லே சிங்களத்தில் வாபி என்றும், வேவ என்றும் அழைக்கப் படுகிறது. இது நடுக்காடுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு தொன்று தொட்டு தமிழர்களே விவசாயம் செய்து வந்தனர். 1952ல் நிகழ்ந்த பெளத்த, முஸ்லிம் கலவரத்தினால் தமிழர்களும் வெளியேற நேர்ந்தது. கொண்ட வெட்டுவானில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய தமிழ்ப்பிராமிக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டள்ளது. துட்டகாமினி தம்பியான சத்ததீசனால் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இதுவாகும். துட்ட கைமுனுவும். சத்ததீசனும் தமிழர்கள் என்பது இதனால் தெரிகின்றது.
கலிங்கர் வருகை
இந்தியாவில் குப்தவம்ச அரசன் காலமான கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொடுமை. குரூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு மிலேச்சத்தனமாக ஆங்காங்கே பழிவாங்கப்பட்டபோது. உயிருக்கு அஞ்சி. பல்லாயிரக்கணக்கான பெளத்தர்கள் வட இந்தியாவிலிருந்து தெற்கே தப்பி வந்தனர். பீகார், ஒரிசா வங்காளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெளத்தர்கள் பயந்து, கலவரமடைந்து ஒழிந்து. உயிரைக் காப்பாற்றி இலங்கையில் வந்து குடியேறினர் என்று ம.க. அந்தனிசில் (13.12.1998 வீரகேசரி) தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களின்வரலாற்றை இருட்டடிப்புச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகாவம்சத்தை எழுதிய மாநாம தேரரும் அப்பொழுது தப்பிவந்த ஒருவரே. அவர்களுக்கு இந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமையான. குரூரமான சித்திரவதைகளின் வேதனைகள் அவர்களின் மனதில் உறைந்து போய்விட்டது. முதலில் இக்காலத்தில் தான் பெளத்தர்கள் கதியற்றவர்களாக ஒளிவுமறைவாக வந்துகளவாகக் குடியேறினார்கள். அதனால் தானோ என்னவோ மாநாமரின் எழுத்துக்களிலும் கொடுமையான குரூரமான சிந்தனைகள் இழையோடிக் காணப்படுகிறது.
- 84 -

பல்லவராசசேகரம் மீண்டும் கி.பி. 10ம், 11ம். 12ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்கள் படைஎடுத்துவந்துகலிங்கம், மகதம், வங்காளத்தில் பெளத்தத்தை பெருமளவில் சிதைத்தனர். பெளத்த மடாலயங்களும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெளத்த குருமார்கள் அவர்களது மடாலயங்களில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்கள். பலர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். பெளத்தப் பள்ளிகள் சூறையாடப்பட்டன. பீகார் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக பெளத்தமதக்கல்வியையும் பெளத்த கலாசாரத்தினையும் போதித்துவந்ததாகும், ஒரேசமயத்தில் 40000 மாணவர்களைக் கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய நாலந்தா பல்கலைக்கழகம் 197ல் முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டது. விலைமதிக்க முடியாத இலக்கிய செல்வங்களான நூல்களும் அழிக்கப்பட்டன. உலகத்திற்கு பேரிழப்பாகும் என டாக்டர் எஸ் தியாகராசா (வீரகேசரி 24.8.05) தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் கொடுமை கொலை குரூரங்களைத் தாங்க முடியாத நிலையில் உயிரைக்காப்பாற்றி கொள்வதற்காக கலிங்கத்தினிலிருந்து பெளத்த குருமார்கள். கலிங்க அரசர்கள். அரச வம்சத்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு களவாக தோணிகளில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். இது இரண்டாம் வருகையாகும். ஏற்கனவே தப்பிவந்தவர்கள் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்ததால், அவர்களும் கதியற்றவர்களாக இங்கு வந்தனர். இங்குள்ள பெளத்த பிக்குமாரும் பெளத்தர்களுமாக வந்தேறுகுடிகளை ஆதரித்தனர். இலங்கையர் பலர் இருந்தபோதும் பெளத்த குருமார் பெளத்தமத வளர்ச்சிக்காகவே இந்தியாவிலிருந்து வந்த கலிங்கர்களை தென் இலங்கையில் அரசராக்கினர். மேலும் கலிங்கர்களான பெளத்த குருமார். தமது பாதுகாப்பிற் காகவும் கலிங்கள்கள் அரசராவது நல்லது என எண்ணியே அவ்வாறு செய்தனர். தென்னிலங்கையில்சிங்கள அரசவம்சம்ஒன்று இல்லாதகாரணத்தினால் அந்நிய நாட்டவரான கலிங்கர்கள் அரசர் ஆக வரமுடிந்துள்ளது. தென்னிலங்கையில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் (10-12 நூற்றாண்டு கலிங்கர்களும், மகதர்களும் இலங்கைக்கு வந்தனர்.
- 85

Page 45
பல்லவராச்சியம் கலிங்க மன்னர்களின் விபரம்.
மகிந்தன் ി.Lി 956 - 972 ജുഞ്ഞ് ഖങ്ങ] விஜயபாகு கி.பி.1055 - 1110 ஆண்டு வரை விக்கிரமபாகு கி.பி 16 - 1137 ஆண்டு வரை நிசங்கமல்ல கி.பி 1187 - 1196 ஆண்டு வரை விக்கிரமபாகு 5.31196 - 12OO &60cirG 616DJ
FTS3D66) கி.பி12OO - 1202 ஆண்டு வரை
தென்னிலங்கையில் ஆட்சிசெய்தனர். மேலும் கல்யாணவதி வீரபாகு, சோடகங்கன் ஆகியோர் படையெடுப்பின் காரணமாக வந்தனர். இதனால் கலிங்கப் பெயர்களான நிசங்க, விஜய, மகிந்த, விக்கிரம, திரிலோக சுந்தரி, லீலாவதி. சுந்தரி ஆகிய பெயர்கள் சிங்களவர் மத்தியில் நிலை கொண்டுள்ளன. கலிங்கள் இந்திய திராவிட இனத்தவர் ஆவர்.
கி.பி. 956ல் வந்த கலிங்க இளவரசன் மகிந்தன் பெளத்த சமயத்தை இங்கு பரப்பினான். கி.பி.1055ல் வந்த விஜய என்ற கலிங்க மன்னன் இங்கு அரசனானான். விஜய மகதத்திலிருந்துவந்தவன் என்றும் வேறு கருத்து உண்டு. சிங்களவர் என்று பூரண அடையாளம் பெறத் தொடங்கியது கி.பி.1200 அளவில் தான் என்று பேராசிரியர் இந்திரபாலா தெரிவித்துள்ளார்.
அழகேசுவரனி ४
அழகேசுவரன் கோட்டை என்பது கோட்டை இராசதானியாகும். கம்பளை மன்னன் விக்கிரமபாகுவின் இனத்தவனும், கம்பளை அரசில் படைத்தலைவனாகவும், மந்திரியாகவும் இருந்தவனுமான அழகக்கோன் அல்லது அழகேசுவரன் என்ற தமிழனை மன்னனாக்குவதற்காக கி.பி 13406) கோட்டை ராச்சியம் அமைக்கப்பட்டது. தொடர்ந்தும் செண்பகப்பெருமாள் போன்ற தமிழ் அரசர்களல் ஆட்சிசெய்யப்பட்டுவந்தது. சுனித்திராதேவிதமிழரசி மருமகள் தமிழரசி, பேத்திதமிழரசி என்று தமிழர்களின் ஆட்சியிலிருந்த காரணத்தினால் கோட்டை இராசதானியில் தமிழ் அரச மொழியாக இருந்துள்ளது. H.W. கொட்றிங்ரன்"சிலோன் என்றநூலில் கோட்டை அரசினை ஆண்டமன்னர்களது அரசமொழியாக தமிழ் மொழியே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். - 86

பல்லவராசசேகரம் அழகக்கோன் முதலாக தருமபாலன் வரை கோட்டையை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் தமிழர்களே. அழகக்கோன்கோட்டை அமைந்த இடம் ஜெயவர்த்தன புரமாகும்.
இலங்கையில் அகழ்வாராச்சிகளில் தென்கரைவளவகங்கை பகுதி, கிழக்குக் கரை கதிரவெளி, மேற்குக்கரை பொன்பரிப்பு மாதோட்டம் மாந்தை, வடக்குக்கரை வல்லிபுரம், மத்திய இலங்கையின் வவுனியா. அநுராதபுரம், முதலிய இடங்களில்திராவிடச்சின்னங்களாகிய முதுமக்கட்தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கோட்டகம சங்கிலிக்கான தரவை. பாண்டுவாசநகர். மாத்தளை, கந்தப்பளை, புதுமட்டவாவி, முதலிய தென்னிலங்கை ஊர்களில் பழைய தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட சிவாலய இருப்பிடங்களையும். அவற்றின் பின்னைய வரலாற்றினையும் ஆராயு மிடத்து இந்நாடு தமிழ் இலங்கையான சிவபூமியே என்று தி.க.இராசேசுவரன் (5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சிமாநாட்டு மலர்) தெரிவித்துள்ளார்.

கி.பி. 13ம் - நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வீரசோழியம் என்ற தமிழ் இலக்கணநூல் இந்திய தமிழ் பெளத்த பிக்கு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சித்தசங்கராவ என்ற பெயரில் சிங்களமொழி இலக்கணமாக உள்ளது தமிழ் வைத்திய சிந்தாமணி என்ற நூலை செயசிங்கம் என்ற தமிழ் வைத்தியர் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்கள வைத்திய நூலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ص 87 -

Page 46
பல்லவராச்சியம்
5. Ֆ60մIIջIIII&&luԱն)
சேனரத் என்ற கண்டி தமிழ் மன்னனுக்கும் இராணி டோனா கதரினாவுக்கும்மூன்றுமக்கள் தோன்றினார்கள். அவர்கள்முறையே குமாரசிங்க, விஜயபால, ராஜசிங்க ஆவர். குமாரசிங்கவும். விஜயபாலவும், நல்லூர் இளவரசிகளை மணந்தனர். ராஜசிங்க மதுரை தமிழ் இளவரசியை மணந்தான் என சி.எஸ். நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார். சேனரத் மன்னன் கி.பி 1604 தொடக்கம் கி.பி 1635 வரையும் கண்டியில் ஆட்சி நடத்தியவன். இவன் மனைவிக்கு இருந்த குன்மநோயை ஒரே மருந்தில் நீக்கியவன். நல்லூரின் பரராசசேகரன் மருகன் குலசேகரன் ஆவன். அக்காலத்தில் நல்லூரில் அரசனாக இருந்தவன் பரராசசேகரன் என்றழைக்கப்பட்ட, எதிர்மன்ன சிங்கன் ஆவன். நெடுங்காலம் வருந்திய கண்டி அரசியும் சேனரத்மன்னனும் நோய்நீங்கியதால், அளவற்றமகிழ்ச்சியடைந்து பொன்னும் நவமணிகளும் இரத்தினச் சிவிகையும் குலசேகரனுக்கு பரிசளித்து பரராசசேகரனுடன் நெருக்கமான உறவினை வளர்த்துக் கொண்டனர். சேனரத்மன்னனின் மக்கள் மணமுடித்தது எதிர்மன்னசிங்கனின் குமாரத்திகளையாகும். கி.பி 1613ல் நல்லூர் அரசனின் தூதுவர் நவசர் (நமசிவாயம்) கண்டி அரசசபையில் இருந்தார்.
தமிழ்மொழி மட்டும் அறிந்திருந்த நல்லூரின் அரச குமாரத்திகளை கண்டி அரசகுமாரர்கள் மணம் முடித்துள்ளார்கள். கண்டி அரசகுமாரர்கள் தமிழர்களே. தமிழ் இராசகுமாரிகளை விரும்பி மணந்துள்ளனர். கண்டி அரசகுடும்பமும் நல்லூர் அரசகுடும்பமும் திருமணங்களினால் இணைக்கப் பட்டிருந்தது. அங்கே இரு அரசர்களுக்கிடையேயும் பகைமை இருக்கவில்லை. நட்பு நிலவியது. கண்டி அரசகுடும்பமும் நல்லூர் அரச குடும்பமும் நெருங்கிய உறவினர் ஆகினர். 1691ல் பறங்கியர் அதிகாரத்தை கைப்பற்றிய போது. குலசேகரனை நல்லூரின் மன்னனாக முடிகட்ட சேனரத் உதவிபுரிந்து ஆதரித்தான்.
நெருங்கிய ஒத்துழைப்பும் இருந்துள்ளது. சேனரத் மன்னன் இறந்த பின்னர். அவன் மகன் இராசசிங்கன் கி.பி 1635ல் அரசனாக முடிகடினான்.
இராசசிங்கன் ஆட்சிகிபி 1687வரைநடைபெற்றிருந்தது. தந்தைக்குபின் தனயன் 2ம் விமலதர்மகரியனின் ஆட்சி1687 தொடக்கம் 1707வரை இடம்பெற்றிருந்தது.
- 88

பல்லவராசசேகரம் இவனும் மதுரைத் தமிழ் இளவரசியை மணந்து தன் தமிழ்ப் பற்றினையும் தமிழர் உறவினையும் பேணினான். இவனுடைய மகன் நரேந்திர சிங்கனும், நாயக்க வம்ச தென்னிந்திய தமிழ் இளவரசியை மணந்தான். கி.பி 1707 தொடங்கிகி.பி 1739 வரை ஆட்சிசெய்தான். தமிழரசியை பட்டத்துராணி ஆக்கி தமிழ்ராணியின் வயிற்றிற் பிறந்த தமிழ் மகனான நரேந்திர சிங்கனுக்கு முடி சூட்டப்பட்டது. 1709ல் யாலேகொடநிலமேயும்ஆட்சியை கவிழ்க்க முயற்சிசெய்தார். 1732லும் அரசினைக் கவிழ்க்க கிளர்ச்சி செய்தனர். நரேந்திர சிங்கனுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. இவர்கள் தமிழரசர் என்பதனாலேயே தமிழ் அரசிகளை பட்டத்துராணியாக ஆக்கி தமிழ் மக்களையே தமக்குப்பின் அரசராக நியமித்தனர்.
விஜயராச சிங்கனி
கி.பி 1739ல் நரேந்திரசிங்கனின் ராணியின் தம்பியாகிய முத்துராசா, விஜயராசசிங்கன் என்ற பட்டப் பெயருடன் அரசனானான். நரேந்திரசிங்கன் இறக்கும் போது, தன்மைத்துனன் முத்துராசாவைதன் வாரிசாக நியமித்தான். இந்த அரசர்கள் தமிழ் மொழியைப் பேசினர் தமிழ்ப் பழக்க வழக்கங்கள். தமிழ் உடை அலங்கார முறைகளை கொண்டிருந்தனர். கண்டியின் அரசமொழியாக தமிழ் விளங்கியது. தமிழ் அரசனான முத்துராசா. தமிழ்நாயக்க வம்சத்தில், தமிழ் இளவரசியை மணந்தான். சைவ தமிழ் மரபுகள், அரச பாரம்பரியங்கள் அரசசபையில் பேணப்பட்டன. சிங்கக்கொடி கண்டியில் பறந்தது.
சைவத் தமிழ்த் தெய்வங்களுக்கு மட்டுமே பிரகார விழா எடுத்து ஆடம்பரமாக வீதிஉலா வரச் செய்து மகிழ்ந்தான். முதன் முதலில் தமிழ்த் தெய்வங்களுக்காகவே பிரகார விழா எடுத்தனர். அதுவே பெரகரா என சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது. வன்னி மன்னன் குலசேகரனுடன் நெருங்கிய உறவினை பேணி வந்தான். அந்நிய ஒல்லாந்தரை எதிர்க்கவும் பலத்தை அதிகரிக்கவும்:உறவு அவசியமாக இருந்தது. சிங்களநிலமேயின் சதியை முறியடித்துக் குழப்பத்தை அடக்கினான். குழப்பகாரனுக்கு தண்டனை வழங்கினான். வன்னிமன்னன் குலசேகரன்படையே மன்னரின் பாதுகாப்பிற்க்கும் கண்டிராச்சியத்தின் பாதுகாப்பிற்கும் பெருந்துணையாக இருந்தது.
- 89

Page 47
பல்லவராச்சியம்
ਸੰ5 (ਗਈa56
கி.பி.1747ல் இம்மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுக்கும் வன்னி அரசனின் உதவிகிடைத்ததால் மிகப்பலத்துடன்ஆட்சிசெய்தான். இவனது ஆட்சி கிபி 1782ம் ஆண்டுவரைநடைபெற்றது. சிலர் குழப்பம் விளைவித்தனர் அதனை வன்னிப்படைகள் எளிதில் முறியடித்தனர். தமிழர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது தொடர்பாகச் சில சிங்களவருக்கு அதிருப்தியிருந்தாலும், உண்மையில் தம்மில் ஒருவர் இருப்பதைவிட இதுவே மேல் என நினைத்தனர் என்று. கண்டிராச்சியம் பற்றிய விபரங்களைக் கலாநிதி ஜே.பி. கெலேகம (தமிழில் எஸ்.எம்.நெளர் தினகரன் 01.02.1998) தெரிவித்துள்ளார். இதிற் சில உண்மைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. கண்டி மன்னர் தமிழ் அரச மரபுகளையே பின்பற்றி வந்துள்ளார்கள். சில சிங்களத் தீவிரவாதிகள் குழப்பம் விளைவித்த போதும் தமிழர்களையே அரசர்களாக முடிகட்டிவந்துள்ளார்கள். சிங்களவர்களும்தம்மில் ஒருவர் ஆட்சியிலிருப்பதை விட தமிழ் அரசர்களின் ஆட்சி மேலானது என (தமிழரசர்களின் ஆட்சிநடைமுறையை பார்த்து தெரிந்துகொண்டதால்) ஏற்றனர். தமிழரசர்கள் நீதி வழுவாதவர்களாகவும், மனிதநேயம், மனித மேம்பாட்டு விழுமியங்களைப் பேணியும், குடிமக்களின் உரிமைகளை மதித்தும், அவர்ளைக் காத்தும் திறமையாக ஆட்சி செய்தபடியாலும் சிங்கள மக்கள் அவ்வாறு ஒத்துழைத்தனர். கலிங்கத்திலிருந்துவந்த திராவிடர்களை தேசியவாதிகளாகவும், தமிழகத்திலிருந்து வந்த திராவிடர்களை அந்நியர்களாகவும் எழுதியது வேடிக்கையானது. இவன் ஆட்சிக்காலத்திலும் பிரகார விழா மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்தது. ஆட்சியின் பிற்காலத்தில் பெளத்தர்கள், புத்தரின் சின்னமும் பிரகார விழாவில் எடுத்துச்செல்லப்பட ஆவணசெய்யுமாறு வேண்டினார்கள். மன்னன் புத்தரின் சின்னத்தையும் எடுத்தச் செல்ல உத்தரவிட்டதால் பின்னர் எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. சைவ நிர்வாகத்திலிருந்து சிவனொளி பாதமலையை பெளத்தர்களிடம் ஒப்படைத்தான் மன்னன்.
இராஜாதி இராசசிங்கனி
இராஜாதிராசசிங்கன் கி.பி1782 முதல் 1798 வரைகண்டிமன்னனாக தமிழ்ப்பாரம்பரிய மரபுகளை பேணி ஆட்சி செலுத்தினான். இவன் தமிழ் இளவரசியை மணந்தான். தமிழ். கண்டியின் அரச மொழியாக விளங்கியது. 1798ல் இவன் இறந்தான்.
-90 -

பல்லவராசசேகரம் முதி விக்கிரமராஜசிங்கன் கி.பி. 1798 - 1815
மன்னன் இறந்தபோது அவனது தமிழ்பட்டத்து ராணியின் தம்பி முத்துச்சாமிக்கு முடிகட்ட விரும்பினர் சிலர். வேறுசிலர் அரசனின் சகோதரி மகனான கண்ணுச்சாமியை அரசன் ஆக்கினார். இதில் முத்துச்சாமி. கண்ணுச்சாமி இருவரும் இலங்கைத்
தமிழர்களே. கண்ணுச்சாமியின் தாய் தந்தையர்களும் தமிழர்களே. கண் ணுச்சாமியை அரச அவையினரில் அதிகப்படியானோர் ஆதரித்தனர். அவன் விக்கிரமராஜ சிங்கன் என்ற பெயரில் அரசனாக பதவி ஏற்றான். முநீ விக்கிரமராஜசிங்கன்தமிழ்மொழியிலே யே ஆட்சிநடத்தினான். கடிதத்தொடர்பு
களை வைத்திருந்தான். அரசன் பிரதானிகளினதும், பெளத்த குருமாரி னதும் ஆதிக்கத்தைக் குறைத்துமக்களுக்கு நல்லதை செய்யவே முயற்சித்தான்.
இளைஞனான அரசனைக் கொல்லப் புரட்சிகள் நடந்தன. முதலில் தலைமைப்பிரதானியான பிலிமத்தலாவ எதிரியாக மாறி மன்னனுக்கு எதிராகச் சிங்கள மக்களைத் தூண்டி விட்டான். மன்னன் கண்டி வாவியை இராசகாரிய முறையில் மக்களைக்கொண்டு கட்டினான். 1805ல் புரட்சி செய்தனர். அது முறியடிக்கப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவனும்தம் உறவினனாகிய பண்டாரவன்னியன் வைரமுத்து அரசனின் பெரும்படையைக் கண்டியில் நிலைகொள்ளச் செய்தான். மீண்டும் பிலிமத்தலாவ 1812ல் புரட்சி செய்தான். அதுவும் முறியடிக்கப்பட்டது. வன்னி அரசன் படைபலம் புரட்சிகளை முறியடித்தது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் அவன்படையில்வீரர்களாக இருந்த படியால் குழப்பங்கள் மன்னனைப் பாதிக்கவில்லை. புரட்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. தலதா மாளிகையில் இரண்டுமாடி மகாமனுவ, பாத்திருப்புவ கட்டிடங்கள் கண்டித்தமிழ் அரசர்களினால் அமைக்கப்பட்டது. புனித தந்தம் 6ம் நூற்றாண்டில் ஒரிசா இளவரசியினால் தலை முடிக்குள் ஒளித்து வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று நூற்றாண்
-91 -

Page 48
பல்லவராச்சியம் டுக்கு மேற்பட்ட கண்டித்தமிழ்ராச்சியம் காட்டிக் கொடுப்பினாலும், போதையில் செய்ததவறுகளினாலும், அரசபிரதானிகள் சிலரின் நயவஞ்சகத்தினாலும் வீழ்ச்சி யடைந்தது. கைது செய்யப்பட்டு ஆளுனர் முன்னிறுத்தப்பட்டபோது அரசன் ஆற்றிய உரை உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. அந்த உரை பின்வருமாறு.
“சிங்கள மக்கள் பிரதானிகள் என்னைக் காட்டிக் கொடுத்தமையிட்டு நான் அவர்களைக் குறைகூறமாட்டேன். அவர்கள் என்னைப்பற்றித்தவறாகச் சிந்தித்துவிட்டனர். நான் அரசபதவி ஏற்றநாளிலிருந்து, பிலித்தலாவை, தன் குறுகிய எண்ணங்களை நிறை வேற்றிக் கொள்ள. எனக்குச் சதா துரோகமிழைத்தான். நீண்டநாட்கள் இதுபற்றிஎனக்குத் தெரியாது. நான் அறிந்து கொண்ட போது எச்சரித்தேன். என்றாலும் நாட்செல்லச்செல்ல அவன் துரோகமிழைப்பது அதிகரித்தது. மீண்டும் விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. என்றாலும் மன்னிப்புவழங்கினேன். உப அதிகாரி அரவாவுல என் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன். இராச்சியத்தையும் என்னையும் பாதுகாத்தவன். அவனையும் என்னையும் பிரிக்க சதிகள் மேற் கொள்ளப்பட்டன. அவன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிராகரித்தேன். அந்தத் துரோகிகள் அவனைக் கொல்லும்படி ஒலை எழுதி என் கையொப்பத்தைப் போலியாக இட்டு மரணதண்டனை நிறைவேற்றுபவனுக்கு கொடுத்துள்ளனர். அவன் என்கட்டளை என்றெண்ணி மரண தண்டனைக்கு முகம் கொடுத்துள் ளான். கண்டி வாவியை குடிசனங்களைக் கொண்டு நிர்மாணித்தேன். இது குடிமக்களை கொடுமைப்படுத்தும் செயல் எனவும் நான் சிங்களவருக்கு எதிரானவன்” எனவும் பிலிமத்தலாவ பிரசாரம் செய்து தன் இனத்தவரை நம்ப வைத்தான்.
பிலிமத்தலாவையால் நாட்டிற்குப் பிரயோசனமில்லை என்று அவனைப் பதவியிலிருந்து நீக்கினேன். இனவாதமும் எமது ராச்சியத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், எல்லேபொலவும் சிறிது காலம் மேன்மையாக பணி புரிந்தவன். அத்துரோகிகளின் பேச்சைக்கேட்டு எதிராக செயற்படதொடங்கினான். அவனுக்குத் துரோகிகளின் பேச்சு பெரிதாகிவிட்டது. மன்னித்தேன். பின்னரும் எல்லேபொல துரோகமிழைக்கத் தொடங்கினான். அவனைக் கண்டியிலிருந்து சப்பிரகமுவாவிற்கு மன்ைடலேசுவரப் பதவி வழங்கி அனுப்பினேன். அங்கும் அவன் எனக்கு எதிராகச் செயற்பட்டான். எனது மேன்மையை உணர்ந்த பல
- 92

Lusidad6AI JITFGềaras JÚ நிலமேக்கள் என்னோடு இருந்தனர். இந்த நேரத்தில் என்னை அழிக்க முயல்வதாக கேள்விப்பட்டேன் சித்தம் கலங்கினேன். இரவு நேரங்களில் எனக்கு நித்திரை வரவில்லை. பதவி மோகத்துடன் என்னோடு இருந்த பலர் இதற்கு பரிகாரமாக மதுவருந்தும்படி கூறினார். சந்தர்ப்பம் சூழ்நிலை என்னை மதுவுக்கு அடிமையாக்கியது. எனவே எமது இராச்சியம் சிதற மதுவும் ஒரு காரணம்.
எல்லோபொல நிலமே அரசபதவிக்கு ஆசைப் படுகின்றான் என. ஏனைய நிலமேக்கள் என் மனதில் பதித்துவிட்டனர். நீதிச்சபை மூலம் எடுக்கும் ஏகமனதான தண்டனை வழங்கல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். நான் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்தேன். இருந்தும் எல்லேபொலவின் பரம வைரி என, தன்னைக் காட்டியிருந்த புஸ்ஸல்ல மூலம், இந்தப் பாரிய தண்டனையை வழங்க நான் உந்தப்பட்டேன். ஒரு நாள் மதுபோதையில் இருந்த வேளை, எல்லேபொல நிலமேயின் எதிரி ஒருவன். அரசபணியாள் போன்று வேடம் தரித்து. தண்டனையை நிறைவேற்றும் ஒலையை என்னிடம் நீட்டினான். போதையில் இருந்த நான் அதற்கு கையொப்பமிட்டுள்ளேன். எது எப்படி இருந்தபோதிலும் அரசதுரோகிகளுக்கு நான் சட்டப்பிரகாரம் தண்டனை வழங்கியுள்ளேன். ஆங்கிலேயரின் சட்டப்படி அரசதுரோகிகளுக்குதண்டனை கொடுக்காமல் விடுவார்களா? நான் சட்டத்தை மீறவில்லை. எனமனச்சாட்சி சுதந்திரத்திற்கு இதுவே போதும். இது எனக்குத்திருப்திஅளிக்கிறது என, மன்னர் உரையை முடித்துக் கொண்டார்.
கண்டிராச்சியத்தின் மன்னனான முரீ விக்கிரமராசசிங்கனுக்கும். ஆங்கிலேயருக்குமிடையே நடந்த போரில், ஆங்கிலேயப் படை பரிதாபமாக தோற்கடிக்கப்பட்டது. தோற்றுப்போன ஆங்கிலேயப்படை வெள்ளைக் கொடிகளை தூக்கிப்பிடித்தது. பின்னர் திரும்பிச் செல்கையில் ஆற்றங்கரைக்கு அப்பால் பின் தொடர்ந்த விக்கிரமராசசிங்கனின் சேனை வீரர்கள் ஆங்கிலேய தளபதி யொருவனையும். அவரது படையணிவீரர்கள் சிலரையும் கொன்றொழித்தனர். கண்டியின் அரசின் கொடி சிங்கக்கொடியாகும். சிங்கத்தின் கையில் வாளைச் சேர்த்தவன் விக்கிரமராசசிங்கன். பாளிமொழியில் எழுதப்பெற்றிருந்த மகாவம்சம், முதன்முதல் 1837ல் ஜோர்ஜ் ரேனர் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் பேராசிரியர் கெய்கர் மகாவம்சத்தையும் சூளவம்சத்தையும் மொழிபெயர்த்தார். அன்றைய ஆங்கிலேய அரசு, கெய்கருக்குராணிமாளியையில் விருந்து வைத்துச் சன்மானமும் கொடுத்தது.
- 93 -

Page 49
பல்லவராச்சியம்
கண்டி மன்னர்கள் தமது வெளிநாட்டுத்தொடர்புகளைத் தமிழிலேயே வைத்திருந்தனர். சரித்திரவரைவு ஆணையம் 66 தமிழ் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.
1505லிருந்து சிங்கள அரசான கோட்டைராச்சியம் போர்த்துக்கீசர் வசமானதும், ஏனைய மூன்று தமிழ் ராச்சியங்கள், பெரும் எதிர்ப்புக் காட்டி போரிட்டதாலும், ஆங்கிலேய ஆட்சியாளர். சிங்களவர்களும். தமிழர்களுக் கிடையேயும், சிங்கள அரசுக்கும் தமிழ் அரசுகளுக்கிடையேயும் இருந்த பகைமையை ஊதிப் பெரிதாக்கி, எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தார்கள். ஒற்றுமையாக இருந்தால் கோட்டையை விட்டும் வெளியேற நேரலாம். என்ற படியால் பிரித்தாளும் தந்திரத்தை நன்கு பயன்படுத்தினார்கள். மேலும் மற்றைய மூன்று அரசுகளையும் கைப்பற்றக், கோட்டை அரசினையும் பயன்படுத்தி னார்கள்.
இந்தியத் தமிழ்ப் பெளத்த துறவிகள்
இலங்கையில் தமிழ்ப் பெளத்தர்களின் வரலாறு வெளிக் கொணரப்படவில்லை. ஆதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தென்னிந்தியாவில் பெளத்த சமயத்தை வளர்த்தவர்கள் தமிழர்களே. கெளதமபுத்தரின் உருவ வழிபாடு. பெளத்தர்களினால் ஆதியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதற்குக் கட்டுப்படாமல். கெளதம புத்தரின் உருவச் சிலைகள் வழிபாட்டிற்காக முதன்முதல் மதுரையிலே தான் உருவாக்கப்பட்டது. தமிழ்ச்சிற்பிகளால் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள் வட இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான புத்தர் சிலையும் மதுரையில் செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும். இன்று அச்சிலை தாய்லாந்தில் உள்ளது. அகளங்கர் என்னும் சமணர் காஞ்சி காம கோட்டத்திலிருந்த பெளத்தர்களை வாதில் வென்று இலங்கைக்கு விரட்டினார் என்று குண்டலகேசிநீலகேசி தெரிவிக்கிறது.
முதலில் தமிழ்நாட்டு தமிழ்ப்பெளத்த தேரர்கள் சிலர் அடிக்கடி
இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருந்து சமயப்பணி ஆற்றியிருப்பதுடன், பாளி
நூல்களுக்கு உரை நூல்களும் எழுதி உள்ளனர். கி.பி. 13ம் நூற்றாண்டில்
சூளவம்சத்தின் முதற்பாகத்தை எழுதியவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மகீர்த்தி
- 94 -

பல்லவராசசேகரம் என்ற தமிழ் பெளத்த தேரராவர். "தென்னிந்தியாவின் பெளத்த சமயம்" என்ற பண்டித ஹிஸ் ஜெல்ல தம்மரட்ன தேரர் எழுதிய, ஆங்கில நூலில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்க மித்திரர்
சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெளத்த தேரர், மகாயான பெளத்த பிரிவைச் சேர்ந்தவர். கி.பிமூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்தவர்.
ஆச்சார்ய தர்மபாலர்
இவர் கி.பி. 796இல் வாழ்ந்த தமிழ்ப் பெளத்ததேரர். இலங்கையில் அநுராதபுரிமகாவிகாரையில் தங்கிவாழ்ந்த காலத்தில், பாளிமொழிநூல்களான தேரதேரிகாதா. உதான, இற்றிவுத்தக, பெற்றவத்து. விமானவத்து. கரிகாப்பிட்டக, நெற்றியக்கரான போன்றவற்றிற்கு உரைநூல்கள் எழுதினார். இவ்வுரை நூல்கள் பரமத்தாதீபனி என வழங்கப்படுகிறது. விசுதிமக்கா, பாளி நூலுக்கு, மஞ்ஞசா என்ற உரை எழுதினார்.
வஜ்ரபோதி
பாண்டி நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெளத்த தேரர், அநுராதபுரியில் அபயகிரிவிகாரையில் ஆறுமாதங்கள் தங்கியிருந்தார்.
தீபாங்கர புத்தாப்பியதேரர்
இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழநாட்டில் வாழ்ந்த தமிழ்ப்
பெளத்த தேரர் ஆவர். சிலகாலம் இலங்கையில் வாழ்ந்தார். தீவின்
U6AouTasmája565&& b &FLDuMT FLDuub 65F6örgy 6556T6ITITÄT.
தமிழ்பெளத்த தேரர்
கிபி 14ம் நூற்றாண்டில் பண்டிதபராக்கிரமபாகு, பாளிஜாதக நூலைச். சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் முகமாக, இவரை வரவழைத்திருந்தான்.
இவர்கள் இலங்கையில் பலபாகங்களிலும் புத்தசமயத்தைப்
பரப்பினார்கள். ஆதியில் சைவர்களாக இருந்த பின், பெளத்தத்தை தழுவிய
தமிழர், பிறகு மீண்டும் சைவத்தை தழுவிக் கொண்டார்கள். தமிழ்ப்பகுதிகளில் - 95 س

Page 50
பல்லவராச்சியம் தமிழர்களே பெளத்தர்களாக இருந்தார்கள் என்ற விபரங்களை ம.க அந்தனிசில் 14.11.1999 இல் வீரகேசரி) தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய தமிழர்களான சோழன் பராந்தகன், ராசராசன். ராசேந்திரன்காலங்களிலும். தமிழ்ப் பெளத்ததேரர்கள் இலங்கை வந்துகுடியேறி, தமிழ்ப்பகுதியில் பெளத்தமத பிரசாரம் செய்ய, மானியங்களை வழங்கியுள்ளார்கள். திருகோணமலையில் ராஜராஜப் பெரும்பள்ளி என்று ஒரு பள்ளிஇருந்தது. அதுதான் இன்றுவில்கம்வெகரை என்றழைக்கப்படுகின்றது.கி.பி 14ம் நூற்றாண்டில் பாளிஜாதக கதைகளைச் சிங்களமொழிக்கு மாற்றுவதற்கு தென்னிந்திய தமிழ்ப் பெளத்த துறவிகள் அரசனால் வரவழைக்கப்பட்டார்கள். இங்குள்ள பெளத்த துறவிகள் பாளியிலிருந்த பெளத்த நூல்களை சிங்களத்திற்கு மொழிமாற்றம்செய்யும் வல்லமை இருக்கவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பெளத்தம் செயற்பட, தென்னிந்திய தமிழ்ப் பெளத்த துறவிகளும் பெருமளவு உதவியுள்ளார்கள். அவர்களை தென்னிந்திய அரசர்களும் ஆதரித்துள்ளார்கள். கொப்பிலே நின்று கொப்பைத்தறித்தவர்கள்.
போர்த்துக்கீசர் வருகை
கி.பி 1505ல் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தகாலத்தில் கோட்டேயில் வீரபராக்கிரமபாகுவும். பல்லவத்தில் பரராசசேகரனும் அரசியற்றி வந்தனர். கொழும்பில் கப்பலைநிறுத்திஅதில் அடிக்கடி பீரங்கி முழங்கியது. கோட்டைக்குச் சென்ற போர்த்துக்கீசரை வீரபராக்கிரமபாகு மகிழ்ச்சியுடன் வரவேற்றான். போர்த்துக்கீசர் கோரிக்கையை ஏற்று வர்த்தகசாலை அமைப்பதற்கு அனுமதித்ததுடன், ஆண்டு தோறும் 150 நிறையளவு கறுவாவை திறையாகச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டு. முதல் திறையையும் செலுத்தினான். பல்லவ அரசுக்குதிறைசெலுத்துவதைத்தவிர்க்கவே பறங்கியருக்குதிறைசெலுத்தினான். எக்களிப்பு கொண்டபோர்த்துக்கீசர். கொழும்பில் வர்த்தகசாலை அமைத்தனர். 1505லிருந்து போர்த்துக்கீசர் திறைபெற்று வந்தனர். 1507ல் முஸ்லிம்கள் போர்த்துக்கீசரின் வர்த்தகசாலையை சேதமாக்கினர்.
1518ல்போர்த்துக்கிசருக்கு கோட்டைகட்டுவதற்கு. தர்மபராக்கிரமபாகு
மன்னன் அனுமதி வழங்கினான். ஆண்டு தோறும் 400 பகள் கறுவாவும்,
மாணிக்கக்கல் பொறித்த 20 மோதிரங்களும், 10 யானைகளும் திறை செலுத்த
ஒப்புதலளித்து பொன்தகட்டில் உடன் படிக்கை எழுதிக் கொடுத்தான். நாடுபிடிக்க
- 96 -

பல்லவராசசேகரம் வந்த போர்த்துக்கீசருக்கு எதிர்ப்பின்றி எல்லாம் நடந்தது என ம.அந்தனிசில் (தினகரன் 21.04.1996) தெரிவித்துள்ளார். முஸ்லீம்களுக்கும் போர்த்துக் கீசருக்கும் இடையே வியாபாரப் போட்டியால் கலகம் ஏற்பட்டது. பகைமை வளர்ந்தது. 1578 இல் போர்த்துக்கேசர் மடுமாரியம்மன் கோவிலை இடித்துவிட்டு. அவ்விடத்தில், மேரிமாதா தேவாலயத்தினைக் கட்டினார்கள் என. ஈகுவேர்ஸ் என்னும் ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கீசருடன் இணைந்து செயற்பட்ட கோட்டை அரசன். கோட்டைராச்சியத்திலிருந்த முஸ்லிம்கள் அனைவரையும் கி.பி.1628முதல் 1636 வரை வெளியேற்றினான். 1628ற்கு முன் முஸ்லீம்கள் கோட்டை இராச்சியத்தில் மட்டுமே வாழ்ந்து வந்தனர். பின்னர் கண்டிராச்சியத்திலும் கண்டியரசன் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்புச் சிற்றரசன் அங்கும் குடியேற அனுமதி வழங்கினான். கோட்டை ராச்சியத்திலிருந்த முஸ்லிம்கள் 1636ல் கிழக்கு மாகாணம் சென்று குடியேறினர்.
பறங்கியர்கள் 1575ல் முனிச்சரக் கோவிலையும், 1578ல் மடுமாரியம்மன் கோவிலையும் (மன்னார்) கி.பி1588ல் தெய்வந்துறை விட்டுணு கோவிலை (தண்டேச்சரம்)யும். 1621ல் நல்லூர் கந்தசாமி கோவில் முதலானவற்றையும் 1624ல் திருக்கோணேசுவரத்தையும் இடித்தழித்தார்கள். பறங்கியர் சைவாலயங்களைச் சூறையாடி அவற்றைப் பாழாக்கிய பின்னர், அக்கோயில்களிருந்த இடங்களிலேயே தங்கள் தேவாலயங்களைக் கட்டினார்கள். பாதிரியார் பேதுரு தேவெற்றன்சோர் (கண்ணாடிப்பாதிரியார்) கத்தோலிக்க தேவாலயங்களைக் கட்டினார். ஏனைய மக்களின் வழிபாட்டுத்தலங்களை அழிப்பதற்கு அஞ்சாது நெருப்பு வைப்பித்தனர்.
பறங்கிகளோடு நெடுங்காலமாக செய்த யுத்தத்தினால், காணிகள் செய்கையற்று. வேளாண்மை கைவிடப்பட்டு, ஊர் பாழாகப் போய்விட்டது. பறங்கிகளும் வேளாண்மைத் தொழிலை விருத்தி செய்ய முயற்சிகள் செய்தாரல்லர். இதனால் வைகரி, பேதி நோய்கள் பலமுறை தோன்றிநாட்டில் மக்கள் அழிவை ஏற்படுத்தின. பறங்கியரிடம் தலையாரி முதலிய பதவிகளை பெற்றுக் கொண்டவர் அடிமைகளுக்கும். மற்றவர்களுக்கும் செய்து வந்த அக்கிரமங்கள் மிகப்பல என்று யாழ்ப்பாணச்சரித்திரம் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணக்கிராமங்களிலும் கடற்கரைப்பட்டினங்களிலும், பறங்கிகள் பலமுறை
- 97

Page 51
பல்லவராச்சியம் நுழைந்து கொள்ளையடித்துச் சூறையாடிப் போவர். பெண்களும் இம்சைக்குள்ளாகினர்.
வன்னியின் கிழக்கு, மேற்கு பாதைகளினூடாக பறங்கிப்பட்டாளங்கள் திருக்கோணமலைக்கும் மன்னாருக்கும் பலமுறைகள் போய்வந்தபடியால், கரையோராமாக இருந்த ஊர்கள் குடிசனமற்ற பாழ்நிலமாயின. வன்னியில் உடைந்துவரும் குளகட்டுகளை திருத்திக் கட்டுவாரின்மையால், வேளாண்மை குறைந்து வந்தது. காட்டுக் காய்ச்சலின் உக்கிரத்தை தடைபண்ண வேண்டிய முயற்சிகளில், பறங்கியரசு தலையிடாதபடியால், செழிப்பும் செல்வமும் பெற்று உன்னத நிலையிலிருந்த வன்னிநாடு. இவர்களின் வருகையின் பின் மனித சஞ்சாரமற்றவனாந்தரமாகி, யாழ்ப்பான குடாநாட்டு வளனை ஓங்க விடாது சீர் கெடச் செய்யும் ஓர் உதிரமற்ற உடலாக கிடக்கின்றது என, செ. இராசநாயகம் அறைந்துள்ளார்.
பறங்கியர் பொருள் வாஞ்சையினால் செய்த கொடுஞ் செயல்களும், வன்கண்மையும் அவர்கள் புரிந்த கொடுங்கோன்மையும், குரூரச் செயல்களும் குன்றின் மேலிட்டதீபம் போல நூல்களில் காணப்படுகிறது.
கி.பி 1505ம் ஆண்டளவில் கோட்டை இராசதானி மிகச் சிறிய ஆள்புலத்தைக் கொண்டிருந்தது. போத்துக்கீசருக்கு திறை செலுத்தியதால் போர் நிகழவில்லை. மக்கள் இழப்பு ஏற்படவில்லை. மாறாகப் பொருளாதாரத்தை. கல்வியை மேம்படுத்த போர்த்துக் கீசரின் உதவி கிடைத்தது. அதேநேரம் 1518லிருந்து 100 வருடங்கள் பலதடவைகள் பல்லவ அரசர்கள் போர்த்துக்கீசருடன் கடும் போர் நிகழ்த்தினர். இதனால் பெருந்தொகையான தமிழ்ப்படைகள் அழிந்தனர். இதன் விளைவாக தமிழர் தொகையில் பாரிய சரிவு ஏற்பட்டது. பின் அதற்கும் மேலாக ஒத்துழைக்க மறுத்த நாட்டுப்பற்றா ளர்கள் போர்த்துக்கீச அரசினை எதிர்த்துக் கலகம் விளைவித்தார்கள் எனக்கூறிகொல்லப்பட்டார்கள்.

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர். ஆங்கிலேயர்களுடன் 1505 தொடக்கம் 1811 வரை வன்னி அரசர்கள் பெரும் போர் நடாத்திக் கொண்டிருந்தார்கள். முந்நூறு ஆண்டுகளில் வன்னி நாட்டு மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் போரினாலும் போரின் விளைவுகளினாலும் இறந்துபட்டார்கள்.
- 98

பல்லவராசசேகரம் அதேபோலக் கண்டி அரசர்களும் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களுடன் முந்நூற்றுப்பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக போரிட்டனர். அதன் காரணமாக மலைநாட்டில் மிகப் பெருந்தொகையான தமிழர். தமிழ்ப்படையினர் கொல்லப்பட்டனர். முந்நூறு வருடங்களுக்கு மேலான அந்நிய எதிர்ப்புப்போராட்டங்களினால் இலங்கை வாழ்தமிழ்மக்களின் தொகை சரிபாதிக்கு மேலதிகமாக குறைந்தது. இருந்தும் தமிழர் இலங்கையில் பெரும்பான்மையி னராக இருந்துள்ளனர். அந்நிய அரசு சுதேசிகளுக்கு அரசாங்கப் பதவிகளை வழங்க முன்வந்தது. இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் செறிந்திருந்த தமிழர்கள் அரசாங்க பதவிகளை பெறுவதற்காக கிறிஸ்தவராக மதம் மாறினர். மதமாற்றங்கள் தமிழினத்தைப் பலவீனப்படுத்தியது. தமிழ்த் தொடர்புகள் குறைந்தமையாலும் மேனாட்டுக் கலாசாரத்தினாலும் மதம் மாறியவர்கள் காலப்போக்கில் பறங்கிகளாகவும், சிங்களவராகவும் மாற நேர்ந்தது.
1833ல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சுதேசிகளுக்கு வழங்கிய அரச பதவிகள் அந்நிய அரசு காலூன்றதுணைபுரிந்தது. 1930 அரசியல்சீர்திருத்தங்கள் தமிழருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தின. போரில் ஈடுபடாதபடியினாலும் அந்நியர்களின் கலப்பினாலும் சிறுதொகையாக இருந்த சிங்களவர் பெரிதாக வளர்ந்து கொண்டனர். அந்நிய அரசுகளின் தவறினால் நான்கு தமிழ் ராச்சியங்களின் அதிகாரமும்தமிழர்களிடம் வழங்குவதற்குப்பதிலாக சிங்களவர் களின் கோட்டே அரசிடம் கைமாறியது. இது சிங்களவர்கள் தமிழரை ஆட்சி செய்வதற்கு வழிகோலியது. இதனால் இலங்கை எங்கும் பரந்து சிறு சிறு தொகையினராக வாழ்ந்த தமிழர்கள் சிங்களமும் பேசினார்கள். வேறு சிலர் இந்தியத்தமிழ் இஸ்லாமியர்களை மணந்து. இஸ்லாம் மதத்தைத் தழுவி. தமிழ் இஸ்லாமியராக மாறினார்கள். மதம் மாறியவர்கள் தாய்மொழியையும் மறந்து, காலப்போக்கில் தமிழர் என்ற நிலையிலிருந்து. இனத்தையும் மாற்றிக் கொண்டார்கள். கத்தோலிக்கராகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறியவர்கள், மேனாட்டுக் கலாசாரத்தினை பின்பற்றி. ஐரோப்பியருடன் திருமண உறவுகளையும் மேற்கொண்டு. தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் பேசினர். காலவோட்டத்தில் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்ததாலும், திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதாலும், சிங்களவராகக் கணிக்கப்பட்டனர். தமிழரிடையே பரப்பப்பட்ட மாற்று மதங்கள் அவர்களைத் தமிழ்மக்கள் அல்ல என்று மாற்றி விட்டன. இவை சைவமதம் இந்துவாக மாறியதாலும், தமிழ் ஐயர்மார் இல்லாமற் போய், பிராமணர் ஐயராக வந்ததாலும் பூசைகளில் தமிழ் வழக்கு ஒழிந்த
- 99

Page 52
பல்லவராச்சியம்
படியாலும், தமிழருக்கு அவர்களின் மொழியை, இனத்தைக் காப்பாற்றுவதற்கு எந்தமதமும் உதவவில்லை. சைவமதம் இருந்த பொழுது தமிழரே ஐயராக இருந்து. தமிழுக்காகவும் தமிழருக்காகவும் உழைத்து வந்தனர். முந்நூறு வருடத்திற்கு மேலாக நடந்தபோரோ, அந்நிய ஆட்சியின் பாதகமான விளைவுகள் கூட. தமிழ் சைவ தேசியத்தை கட்டி எழுப்பவில்லை. அதனைச் செய்யக்கூடிய புத்திமான்களும் செய்யவில்லை. மாறாக தமிழர் சமயரீதியில் கிறீஸ்தவர். இஸ்லாமியர்.இந்துக்கள். சைவர் என பிளவுபட மேலும் பலவீனம் அடைந்தார்கள்.
ஒல்லாந்தரின் குரூரம்
ஒல்லாந்து நாட்டுபிலிப்பாஸ் போல்டேயஸ் பாதிரியாரால் கி.பி 1672ல் டச்சு மொழியில் எழுதப்பட்ட பெருந்தீவான இலங்கையில் உண்மையானதும் சரியானதுமான விவரணம் எனும் நூலிலிருந்து. கி.பி 1638ல் மட்டக்களப்பில் தமக்கு எதிராகக் கலகம் செய்த உள்ளுர் வாசிகளுக்கு மரண தண்டனை, கழுவேற்றிநிறைவேற்றபட்டது. கி.பி1658ல் யாழ்ப்பாணத்தில் தமக்கு எதிராகச் செயற்பட்ட போர்த்துக்கீசர்களையும். அவர்களுடன் ஒத்துழைத்த உள்ளுர் வாசிகளையும் தூக்குமரத்தில் ஏற்றியதுடன், தரபோன்றசின்னத்தில் ஒருவனின் கைகால்களைக் கட்டி அவன் நெஞ்சினை ஒல்லாந்தனொருவன் குத்தவாள் கொண்டு பிளப்பதையும், அப்படி நெஞ்சு பிளக்கப்பட்ட பிறிதொரு சடலத்தையும் இன்னொருவன் தலை வேறு. முனிடம் வேறாகக் கோட்ரியால் இரு துண்டுகளாக்கப்பட்டிருப்பதையும் போன்றதான கோரக்காட்சிகளை இரண்டாவது படத்திலும் காணலாம். மேற்படி பிலிப்பஸ் பால் டேயஸ் இலங்கை யிலிருந்த ஒல்லாந்தருக்கான மதக் கடமைகளைச் செய்யவும். உள்ளுர் வாசிகளுக்கு. மதபோதனை செய்து மனந்திரும்பவும். ஒல்லாந்திலிருந்து அனுப்பப்பட்டவராவர். இலங்கையில் ஒன்பதாண்டு. தங்கியிருந்த அவர். அதிககாலம் யாழ்ப்பாணத்தில் தங்கினார்.
ஒரு சிலரைத்தவிர, மட்டக்களப்பு மக்களும் யாழ்ப்பாண மக்களும் இதனை இன்றுவரை அறிந்திருக்கவில்லை என ம.க. அந்தனிசில் (26.05.1998 தினகரன்) தெரிவித்துள்ளார். இவை எல்லாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற. மறுத்தவர்களின் மீது வஞ்சம் தீர்க்க. குழப்பம் விளைவித்தார்கள் என்ற பொய்க் குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில், ஒல்லாந்தர் படைகள் நடாத்திய கொடூரக் கொலை வெறியாகும்.
- 100

Lusidade Jaras Gafab Jüd வேளாண்மையில் அதிக நயமின்மை கண்டு அநேகர் தங்களுக்கு உவந்த வேறு தொழில்களைக் கைக்கொண்டனர். வெள்ளாளர் நட்ட மடைந்தாலும், மக்களின் நன்மைக்காக தொடர்ந்தும் வெள்ளாமை செய்து வந்தார்கள். நம்நாட்டு வணிகர் வியாபாரம் செய்யாதவாறு தடுக்கப்பட்டனர். முஸ்லிம்களும்நாட்டிற்க்குள்வந்து வியாபாரம்செய்வது தடைபண்ணப்பட்டதால், இந்திய முஸ்லிம்கள். துறைமுகங்களுக்கு மட்டும் பொருட்கள் கொண்டு வர இடமளிக்கப்பட்டது. ஒல்லாந்தர், செமினேரி அமைத்து, ஏழு மொழிகளில் கிறிஸ்தவம் பயிற்றுவித்தனர் கிறிஸ்தவ பாதிரிமாருக்கு கம்பனியரால் வீடுகட்டிக் கொடுக்கப்பட்டது. பாதிரிமார் சமய பிரசாரத்திற்காக செல்கையில், ஊழியக்காரர் அவர்களின் சாமான்களைச் சுமக்க வேண்டும் என்றும். ஊரார் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கவேண்டும் என்றும்விதிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்லவேண்டும் எனக் கட்டளை இட்டனர். கிறிஸ்தவ மதவிரோதியாக ஒருவன் சைவசமயியாக ஒழுகிவந்தது காணப்படின், அவனுக்கு கடுந்தனன்டனை விதிக்கப்படும். சைவப்பெண்களை மணந்ததற்காக, கிறிஸ்தவ ஆடவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதென பால்தேயஸ் பாதிரிஎழுதியிருக்கிறார்.
1697 கென்றிக் சுவாடி குறுான் யாழ்ப்பாணக் கம்மந்தோர் அறிக்கையில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இவ் வன்னியர்கள் பிறப்பால் கம்பனியின் பிரசைகளாய் இருந்தும், சாதியில் பொதுவான வேளாளராக இருந்தும் காலகதியில் மிகவும் செருக்குற்றோராய் வன்னியன் என்னும் பதவி மிகவும் மேம்பாடுடைய தொன்றென நினைத்திருக்கின்றார்கள். கம்பனியையாவது, அதன் மேலுத்தியோகத்தரையாவது கனம்பண்ண வேண்டுமென்று நினைக்கிறாரில்லை என்று எழுதியுள்ளார்.
மேற்பற்று வன்னிச்சி. இலங்கை நாராயணன் என்னும் மடப்பள்ளியை மணந்து பெற்றபிள்ளைகளுக்கு வன்னியப் பதவி உரித்தில்லை யென 1765ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம்திகதி அரசாட்சியார்தீர்ப்புச் செய்தனர். இதனால் நல்லமாப்பாணனே மேற்பற்றுக்கும் வன்னியனானான். அதாவது மடப்பள்ளியாருக்குவன்னியன் பதவிக்கு உரித்தில்லை என்றுதீப்பளிக்கப்பட்டது. தாய் வன்னிச்சியாக இருந்தபோதும் மடப்பள்ளி பரம்பரையானபடியால் ஏற்கப் படவில்லை.
- 101 -

Page 53
பல்லவராச்சியம்
ஒல்லாந்தர்காலத்தில் யால, புத்தளம், மகாவன்னி, திரிகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு. பாணமை உட்பட29 தமிழ் வன்னிமைகளின் ஆட்சி இடம் பெற்றிருந்தது என்று ஈழ வரலாற்றுப் பதிவு நூலில் காணப்படுகிறது. அடிமைகள் மற்றைய பண்டங்களைப் போல விலைக்கு விற்கப்பட்டனர். பணமுடையோர் அடிமைகளை வாங்கிதங்களுக்கு ஊழியஞ் செய்வித்தார்கள். இந்திய நெல்லிலும் பார்க்க அடிமைகளே மலிவாக இருந்தார்கள். இதனால் கம்மன்தோர் ஜூவாடக்குறுண்"அடிமை ஒருபிடி அரசியின்விலை" எனக்கூறினார். ஒல்லாந்தர் அடிமை வியாபாரத்தில், நெல்லிலும் பார்க்க அதிகலாபம் பெற்றனர். 1695ம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து விற்கப்பட்டார்கள். இவர்களே கூடிகூடிவடசிறைக்கோவியர்: எனப்பட்டார்கள். இவர்களையே வடக்கர், வடுகர் எனவும் அழைத்தனர். அடிமைகளை மிருகங்களைப்போல் கந்திற் பிணைத்து விற்கக் கொண்டு போனார்கள். அரசாட்சியரின் அடிமைகள். அடிமை விலையைக் கொடுத்து தம்மை மீட்டுக் கொள்ளலாம். ஊரவர்களின் அடிமைகள் விலை மீட்சியுடன் அரசினர் உத்தரவுப் பத்திரமும் பெறவேண்டும். அடிமைகளின் ஒழுக்கங்களுக்கு ஒல்லாந்தர் சட்டம் வகுத்துநடத்திவந்தனர். அப்பிரமாணங்களை தேசவழமைச்சட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். கி.பி 1824ல் 15341சிறைகள் யாழ்ப்பானநாட்டில் இருந்தார்கள்.
யாழ்ப்பாணம், பூநகரி, மன்னாரில் விளைந்த நெல் இத்தேச உணவுக்குப் போதியதாக இருந்ததுமன்றி. மிகுதியான நெல். மதுரை, நாகப்பட்டினத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. திரிகோணமலை, மட்டக்களப்பில் விளைந்த நெல் கொழும்பு காலிக்கு ஏற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் வருவிக்கப்பட்டு, கம்பனி குறி இடப்பட்டு வயல் வேலைகளில் இருத்தப்பட்டனர். பறங்கிப் படையினர் உணவினால் குறைந் திருந்தமாடுகளுக்காக. இந்தியாவிலிருந்துமாடுகள் கொண்டுவரப்பட்டன. பல்லா யிரக்கணக்கில் பனை மரங்களைத் தறித்து கைமரங்களாக்கி கொழும்புக்கும் காலிக்கும் ஏற்றினார்கள். 1677ம் ஆண்டில் 50687 கைமரங்களும் 26O40 சலாகைகளும்நாகப்பட்டினத்திற்கு மாத்திரம் ஏற்றுமதிசெய்யப்பட்டன. ஒல்லாந்தர் நமது நாட்டு வளங்களை சூறையாடி, பிறநாடுகளுக்கு விற்றுப்பணம் பெற்றனர்.
யானை, சாயவேர். பருத்தி, புடவை, முத்து. சங்கு, முதலியவற்றை கைப்பற்றி விற்று பெருந்தொகையான லாபம் அடைந்தனர். 1746ல் முத்துக்குளிப்பை. இந்திய முகமதியருக்கு குத்தகைக்கு விட்டனர். அதனால்
سے 102 ۔

பல்லவாசசேகாம் இந்திய முஸ்லீம்கள் இலங்கை வளங்களில் கண் வைத்து, இங்கே வந்தனர். அநியாய வரிகளை விதித்துமக்களை ஒட்டாண்டிகளாக்கினர். தலைவரி,நிலவரி. மரவரி, புடவைவரி, பூணரவரி அதிகாரிவரி, ஊழியவரி, மீன் வரி, மான்தோல் வரி ஆகியன அவற்றுட் சிலவாகும். சனங்களிடமிருந்து மாடுகளை, பசுக்களை வலிந்து பற்றிஉண்டு வந்தனர். இன்ன காலத்திற்கு இன்னார் இவ்வளவுமாடுகள் கொடுக்கவேண்டுமென்றுகட்டளை பிறப்பித்தனர். 1762ல் கம்மந்தோராக இருந்த அந்தோனி மோயாட் என்பவரின் இருபிள்ளைகள் அம்மை நோய்க்கு இரையானார்கள் என்றால், மற்றை ஏழைச்சனங்களின் கதி எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறவும் வேண்டுமா? காட்டுக்காய்ச்சலும் யாழ்ப்பான நாட்டினுள் நுழைந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி
ஆங்கிலேயர் ஆட்சியில் படிப்படியாக நாட்டு மக்களிடம் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டன. அரசியல் சீர்திருத்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப் பட்டு, அவற்றின்சிபார்சுகள் செயற்படுத்தப்பட்டன. 1798ல் பல்லவம், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ்வந்தது. 1811ல் வன்னிச் சிற்றரசுகள் அவர்களால் கைப்பற்றப் பட்டது. 1815ல் கண்டிராச்சியம் ஆங்கிலேயர் வசமானதுடன் முழு இலங்கையும் அவர்களின் ஆளுகைக்குட்பட்டது எனலாம். 1815ன் பின்னரும் பல்லவ அரசர்கள் அதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்தாலும் இறைமையை இழக்காது. இழந்த அதிகாரத்தைமீட்கப்போராடிவந்துள்ளார்கள். குடியேற்றநாட்டுமக்களின் அரசியல் உரிமைகளை ஆங்கிலேயர் மதித்தார்கள். நான்கு தனி அரசுகளாக இருந்த ஆட்சிகள் எல்லாம் 1833ல் ஒன்றாக இணைக்கப்பட்டன. தமிழர்களின் நல்லூர், வன்னி, கண்டி தலைநகர்கள் இல்லாது ஒழிக்கப்பட்டு. சிங்களவர் இடமான கோட்டே ஆட்சித்தலைநகள் ஆக்கப்பட்டது தமிழர் ஆட்சி அதிகாரத்தினை இழக்க காரணமாக அமைந்தது. குடியேற்றநாட்டு ஆட்சிமுறை இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயர்களிடம் நாகரிகம். சீர்திருத்தம் காணப்பட்டது. ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டு ஒற்றையாட்சியின் கீழ் இருந்தாலும், பல்லவ அரசர்கள்தனியாட்சி நடத்திவந்துள்ளனர். பல்லவராச்சியத்திற்கு இறைமை, தன்னாட்சிஉண்டு. கி.பி. 1799இல் யாழ்ப்பான அரசின் நீதிநிர்வாகத்தின் கீழ், மேற்கே புத்தளப்பிரதேசம் தொடக்கம்வடக்கு. கிழக்கு. தெற்கே குமணப்பகுதிவரை பரவியிருந்தது. மத்தியில் முறிவிக்கிரமராஜசிங்கன் ஆட்சிநிலவியது. தென்பகுதிகண்டி அரசனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவை எல்லாம் தமிழ் நீதிமுறைகளின் படி முன்பு தமிழ் மன்னர்களினால் ஆளப்பட்டு வந்ததாலும், தனியானதொரு நீதிநிர்வாக
- 103 -

Page 54
பல்லவராச்சியம் முறைகளை கொண்டிருந்ததாலும், ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் தனி நீதிநிர்வாக மாவட்டமாக இருந்துள்ளது. 1832வரை இந்நிலை தொடர்ந்து இருந்தது. 1833ல் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டு ஐந்து மாகாணங்களாக இலங்கை பிரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு. மேற்கு, தெற்கு. மத்திய மாகாணங்களாகும். அக்காலத்தில் மேல்மாகாணம் தவிர்ந்த மத்திய, தென் மாகாணங்களில் தமிழர் அதிகமாக காணப்பட்டார்கள். வடக்கும் கிழக்கும் முற்றினும்தமிழர்களே வாழ்ந்தார்கள். மேல்மாகாணத்திலும் கணிசமான அளவு தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள். கிழக்குமாகாணம் தமன்கடுவே. பிந்தனைப் பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாகாணமாகவிருந்தது. 1837இல் பிந்தனை, மத்திய மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 1837இல் தமன்கடுவ கிழக்கு மாகாணத்திலிருந்து பிரித்தும், வடமாகாண நுவரகலாவியவும் பிரித்து ஒன்றாகச் சேர்த்து, வடமேல்மாகாண தெமிளபற்றுஉருவாக்கப்பட்டது. (அதாவது தமிழ்பற்று ஆக வடமேல் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது)
கி.பி 1833இல் நுவரகலாவிய (அநுராதபுரம்) வடமாகாணத்துடன் இணைந்த பகுதியாக இருந்தது. கி.பி181ல்நுவரகலாவிய குலசேகரம்வைரமுத்து என்றவன்னிதமிழ் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அரசியல் மாற்றங்கள் காரணமாகப் படிப்படியாக நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கண்டி, இரத்தினபுரி, குருநாகல், அநுராதபுரம், பொலநறுவா, கதிர்காமம், காலி, வாழ்ந்த தமிழர்கள் தமிழுடன் சிங்களமொழியையும் பேசியதால், சிங்களவராகவும் கணிக்கப்பட்டனர் எனலாம். சிங்களம் பேசும் மக்களுடன் கலந்து வாழ்ந்த தமிழர் பலர், சிங்களவரு டன் திருமண உறவுகளை மேற்கொண்டதால் சிங்களவராக கணிக்கப்பட்டனர்
சேர். கியூ கிளைகோன்பிரித்தானிய குடியேற்றநாட்டு செயலாளரிற்கு, 1799ம் ஆண்டு அனுப்பிய அறிக்கையில், தனிவேறான இரண்டுநாட்டின் மக்கள் இலங்கைத்தீவை மிகப்பழங்காலந்தொட்டேதம்முடன் பிரித்துத் தன்னாட்சிசெய்து வந்துள்ளனர். இவர்கள் சிங்களவரும்மலையாள (தமிழ்த்வருமாவர். சிங்களவர் நாட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளிலும் மலபாளிகள் எனப்படும் தமிழர் வடக்கு. கிழக்கு மாவட்டங்களில் வாழ்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது தவறு.
தங்கள் பெருந்தோட்ட வேலைகளுக்காக பிரித்தானிய ஆட்சியாளர் தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்துவந்துகூலிக்கு அமர்த்தினார்கள். அவர்கள் இலங்கையின் குடிமக்களாக ஆக்கப்பட்டனர். ஆட்சி உரிமையும் * வழங்கப்பட்டது.
- 104

பல்லவராசசேகரம் அனகாரிக தர்மபாலா 1915இல் முஸ்லிம் பெளத்த கலவரத்தின்போது, மோசமாகப் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களைக் காப்பாற்ற ஒரு சிங்களத்தலைவர் இருக்கவில்லை. தமிழரான இராமநாதனால் முடியும் என்றும், ஏழைச் சிங்கள மக்களைக் காப்பாற்றுமாறு கோரியும், அவர் எழுதிய கடிதத்தின் அவசியமான
பகுதிகளின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
அன்புள்ள திரு. இராமநாதன்!
ழுநீசத்சர்ம மந்திர் 44. கல்லூரிச்சதுக்கம் கல்கத்தா
ஒக்டோபர் 21, 1915
என்னால் "சிலோனிஸ்" பத்திரிகையிலிருந்து வாசிக்கப்பெற்ற, இலங்கையின் சட்டசபையில் தங்களால் நிகழ்த்தப்பட்டு சரித்திரம் படைத்த, தங்களின் பேச்சிற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்களைத், தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இலங்கையிலிருந்து வெளியே சென்ற அந்தநாள் தொடக்கம். கவனிப்பாரற்ற ஏழைச்சிங்களவர்களைப் பாதுகாக்க, அங்கே ஒருவருமில்லை. வழிநடத்தவும், பாதுகாக்கவும், ஒருவருமில்லாது. அம்மக்கள் பயங்கரமான முடிவினை எதிர்நோக்கி உள்ளனர். குடியேற்றநாட்டு அலுவலகத்தின் கீழ், சிங்களவர்களும் தமிழர்களும் பிரித்தானிய குடியேற்ற வாசிகளிடம், ஒரு காலமும் சமநீதியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
கி.பி. 10 ஆம், 12ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் படையெடுப்பு ஆக்கிரமிப்பின்போது முழு இந்தியாவும் அடிபணிந்தது. பிரித்தானிய அதிகாரிகளின் உதவியுடன் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இலங்கை வரும்போது. புத்த சமயத்தின் முடிவும் வந்துவிடும். பாரம்பரிய மரபுகளின் ஆட்சியும், மன்னிக்கும்தன்மையும் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் செய்வீர்கள். நான் நினைக்கிறேன் அநீதிகளிலிருந்துமக்களைக்காப்பாற்ற முயற்சிசெய்வதன் ஊடாக, ஏழைப்பெளத்தர்களைக் காப்பாற்றஉங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். தேசாதிபதிஒருபாளிவல்லுனர். வேறு எந்தத் தேசாதிபதிகளையும் விட, பெளத்தர்களிற்கு அவரால் கூடுதலாக உதவமுடியும். அவர் அதனைச் செய்வாரா? அல்லது பெளத்தர்களின் மரணத்திற்கான ஆணையில் ஒப்பமிட்டு இலங்கையைவிட்டுச்செல்வாரா? பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மனுக்களும்,
- 105

Page 55
பல்லவராச்சியம் பத்தாயிரம் பெளத்த குடும்பங்களில் வாழும் பெளத்த மாதர்களின் பெரும் அவல அழுகுரல்களினாலும், அவரின் இதயம் இளகும் என்று நம்புவோம். அவரின் இதயத்தை மென்மைப்படுத்துவதில் வெற்றி அடைவீராக.
&6OTSITsfas prLDUITGOIT
போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியர் டிகுவேறாஸ் அடிகள். இலங்கை பற்றிய தமது நூலில் புத்தளம். சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகள் தமிழரின் வதிவிடங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சட்டநிரூபணசபை அமைக்கப்பட்டு பிரதிநிதிகள் நியமிக்கவும், தெரிவு செய்யவும்பட்டனர். 1924ம், ஆண்டில் சட்ட நீரூபணசபையில் தமிழ் மக்களது பிரதிநிதிகளின் தொகை 17 ஆகவும். சிங்களமக்களது பிரதிநிதிகள் தொகை 16 ஆகவும் இருந்தது. பேரினவாதிகளின் சூழ்ச்சியால் தமிழர்களிற்குள் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தமிழினம் மூன்றாகப் பிளவுபட்டதனால் அவர்களின் தொகையைக் குறைப்பதற்கு வசதியாகப் போய்விட்டது. ஒற்றுமையே பலம். பிரிவினையே பலவீனம் என்பதை உணர்த்தியது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது எனச் சமபலப் பிரதிநிதித்துவம் கேட்க, 1924ல் சட்டநிரூபண சபையில் தமிழர் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருந்ததுவும் ஒரு காரணம். அக்காலத்தில் இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்கள் தமிழ் மக்களிடமே இருந்துள்ளன என்பதற்கு. இது ஒரு பெரும் ஆதாரமாக இருந்துள்ளதை நோக்கலாம். 1915ம் ஆண்டில் நடந்த பெளத்த முஸ்லீம் மதக்கலவரத்தினால், சிங்கள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதன் விளைவாக விழிப்படைந்திருந்த சிங்கள பெளத்த தேசியம் சட்டநிருபணசபையில், சிங்கள பிரதிநிதிகள் சிறுபான்மையாக இருந்தது கண்டு அஞ்சியது.
சிங்கள பெளத்த தேசியவாதிகளான அநகாரிக தர்மபால போன்றோரும், சிங்கள அரசியல் தலைமைகளும், சிங்களவர் சட்ட நிருபன உறுப்பினர்களில் சபையின் பெரும்பான்மையினராக வருதல் வேண்டும் என சிந்தித்துத்திட்டமிட்டு செயற்பட்டனர். வெற்றியும்கண்டனர். அந்த நோக்கத்தினை நிறைவேற்ற1931களில் தனிச் சிங்களவரைக் கொண்ட, மந்திரிசபை அமைத்து அதிகாரம் முழுவதையும் கைப்பற்றினர். அதனால் அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கோட்டைராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவர், பல்லவ தமிழ்ராச்சிய'
- 106 -

பல்லவராசசேகரம் மண்ணில் குடியேற்றப்பட்டார்கள். கோட்டை ராச்சிய எல்லைக்குள் இருந்த சிங்களவரின் ஆதிக்கத்தினை தமிழ் ராச்சிய மண்ணிலும் விரிவுபடுத்த விளைந்தனர். தமிழர்களின் பொருளாதார வளங்கள் கைப்பற்றப்பட்டது. தமிழர்களை சிறுபான்மையினராக காட்டுவதற்கு, தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, சிங்களவர்களாகக் காண்பிக்க முயற்சிஎடுத்துக்கொண்டனர். சிங்கள அரசியற் தலைமைகள் அதிகாரத்தினையும், படைபலத்தினையும் பயன்படுத்தி, சிங்களத்தை வளர்த்து தமிழை அழித்தனர். அரச உத்தியோகங்களையும் கைப்பற்றினர். அக்காலத்தில் தமிழரைப்பற்றி தொலை நோக்குடன் சிந்தித்து அதிகாரத்தை தாமும் பெற்றுக் கொள்ளவோ, தமிழ் மண்ணைக் காக்கவோ, தமிழரைக் காப்பாற்றவோ தமிழ்த் தலைமைகள் தவறிவிட்டன.
- 107 -

Page 56
பல்லவராச்சியம்
6. பல்லவராச்சியம் நாகதீவு
சிவனொளிபாதமலையில் உற்பத்தியாகிய மனித இனம், அங்கிருந்து உற்பத்தியாகிதிரிகோணமலைக் கடலில் கலந்த மாவலியாற்றின் இருபக்கமும் பரவியது. ஆற்றின் மேற்கே பரவியவர்கள்நாகர்களாகவும். கிழக்கே பரவியவர்கள் இயக்கர்களாகவும் வாழ்ந்தனர். ஈழத்தின் மேற்குப் பகுதியாகிய பாலாவி மண்டலத்தில் நாகர்கள் அமைத்த நாக அரசினைத் தொடர்ந்து மாதோட்டம், இலங்காபுரி, மணிமலை, நாகதீவிலும் நாகர்களின் நாகரிக அரசுகள் முறையே தோன்றின. நாகர்கள் வாழ்ந்த தீவு. நாகதீவு என்ற பெயரால் விளங்கியது. நாகதீவு கிருதாயுகத்தில் புண்ணியபுரம் என்று அழைக்கப்பட்டது. திருத் தம்பலேசுவரம் என்ற சிவாலயதலம் கிருதாயகத்திலேயே பண்ணியரசனால் கட்டப்பெற்றது. புண்ணியரசன் ஆட்சிசெய்தபடியால் புண்ணியபுரம் ஆயிற்று.
கிரேதாயுகத்தில் புண்ணியபுரத்தில் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்துள்ளர்கள். கிரேதாயகத்தில் நாகதீவில் ஒரு பெரிய அரசு இருந்துள்ளது. அக்காலத்திலே யாழ்ப்பாணக்குடா நாடு. தீவுக்கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து அதனை விட மூன்று மடங்கு பெரியதாக நாகதீவு இருந்துள்ளது. இராமாயண நூல்களில் திரேதாயுகத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய அரசு நாகதீவில் அமைந்துள்ளதென்றும் அங்கும் சீதையைத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் இராமன் அநுமனிடம் கூறினான். நாகரிகத்தில் மேம்பாடடைந்த மக்கள் வாழ்ந்தார்கள். அரண்களுடன் கூடிய பாதுகாப்பான கோட்டை இராசதானியில் அமைந்திருந்தது. இராவணன் திசை உலாவந்து அரசனை வென்று தன் உறவினனை அரசனாக்கினான். திருத்தம்பலை சிவாலயத்தினைக் கட்டினான்.
திரேதாயுகத்தின் இறுதியில் கி.மு. 18000ம் ஆண்டளவில் இராவணன் இறந்தபின்னர்.இராவணனின் உறவினன் சித்திராங்கதன் அவன் வீணையை இலங்காபுரியிலிருந்துஎடுத்துவந்துதிருத்தம்பலேச்சரத்தில் அமர்ந்து, வினையை வாசித்து சிவனை வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. புண்ணியபுரம் என்ற நாடு இதன் பின், வீணாகானபுரம் என்றும் அழைக்கப்பட்டது. எனவே மாரீசன் இறந்தபின்னர் சித்திராங்கதன் வீணாகான
سے 108 م=

பல்லவராசசேகரம் புரத்தின் வேந்தனானான். நாகர்களின் குலதெய்வமாகச் சிவபெருமான் வீற்றிருந்தபடியால் திருத்தம்பலேசுவரம் நாகதலஈச்சரம் என்றும் அழைக்கப் பட்டது. நாகசூலாச்சரம்காலஞ்செல்லச்செல்லநகுலேசுவரம் என்றுமருவியுள்ளது. நாககுலாச்சரர்என்ற இறைவன்நாமம்நகுலேசுவரன்என்று அழைக்கப்படுகிறது. நாககுல அம்பிகை என்ற அம்மன் பெயர்நதலாம்பிகை என அழைக்கப்படுகிறது. முன்புநாகுலம் (ஈச்சரம்) என்ற பழைய நாமம். நகுலம் என மருவி. பின் தமிழில் கீரிமலை என்றாயிற்று. நாகுலம், நகுலம் என மாறி வழங்கிய காலத்தில், கட்டிவைத்த நகுலமுனியின் கதை, பிற்காலத்தில் உண்மையென ஏற்கப்பட்டது. இதுபோலவே. மாருதப்புரவீகவல்லிக்குக் குதிரைமுகம் இருந்த தென்பதும். புனைந்தகதை எனவும் செ. இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
துவாபரயுகம் (கி.மு.17500 - கி.மு 3100வரை) தாரகன்
காசிபமுனிவரின் இளைய குமாரனான தாரகன், நாகதீவைக் கைப்பற்றி. கோட்டைகட்டி பலம் பொருந்திய படையுடன் ஆட்சி செய்தான். ஆனைமுகம் படைத்த தாரகன். ஆனைமுகன் என்று அழைக்கப்பட்டான். தாரகன் கோட்டை கட்டிய இடம், ஆனைக்கோட்டை என வழங்கலாயிற்று. புலத்தியநகர் காசிய முனிவரிற்கும். மாயாதேவிக்கும் மூன்றாவது மகனாகத் தோன்றியவன். தாரகன். சிவனை நோக்கி தவமிருந்து வரம்பல பெற்று. பல்லாயிரமாண்டுகள்ஆனைக் கோட்டையிலிருந்து ஆட்சிசெய்ததாகப், புராணம் தெரிவிக்கிறது. அக்காலத்தில், மக்களின் வாழ்நாளும் அதிகமாகவே இருந்தது. தாரகன் செளரி என்றவளை மணந்து. அரசியாக்கினான். இருவரிற்கும் அசுரேந்திரன் என்ற மகன் தோன்றினான்.

தேவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை. தேவர்கள் மகாகைலாயம் சென்று சிவனை மனமுருகி வேண்டினார்கள். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. சிவன் கட்டளைப்படி அக்கினியும் வாயுவும் அவற்றை எடுத்துச் சென்று (தீப்பொறிகளை) ஆற்றில் விட்டனர். ஆறு அவற்றை எடுத்துச் சென்று. சரவணப் பொய்கையில் (தாமரைக்குளம்) விட்டது. தீப்பொறிகளை ஆற்றில் சேர்த்ததால். ஆறு வற்றி விட்டதாம். அவ்வாறு வற்றிய ஆறு, வழுக்கை ஆறு ஆகும். வழுக்கை என்பது வெற்று என்று பொருள்படும். அதாவது நீரில்லாத ஆறு ஆகும். 
- 109

Page 57
பல்லவராச்சியம் பொய்கையில், கார்த்திகைப் பெண்கள், முருகனைப் பானுட்டி வளர்த்த செவிலித்தாய்கள் ஆவர். சரவணப் பொய்கை இருந்த இடம் சரவணை என்று அழைக்கப்படுகின்றது. பொய்கை சரவணைக்கும் வழுக்கை ஆற்றிற்கும் இடையில் மாறி கடலாகி உள்ளது.
முருகன் வளர்ந்து பாலனாகிய பின். அன்னை பார்வதி அனைத்து. வேல் கொடுத்த இடம் வேலணையாகும். வேலனுர் வேலணையாக மருவியுள்ளது. வளர்ந்த முருகன் மீண்டும் தாயுடன் மகா கைலாயம் சென்று தந்தையாகிய சிவனைப் பணிந்தான். பின்னர் சிவன் கட்டளைப்படி, முருகன் போர்க்கோலம்பூண்டு வந்து. தாரகனுடன் போர்புரிந்தான். தாரகன் கிரெளஞ்ச மலையுள் புகுந்து ஒளிந்து கொண்டான். கிரெளஞ்சமலையின் வாய், இருண்ட வாய், அதனால் அல்வாய் எனப்பட்டது. அல்வாயிலிருந்து வடகிழக்காக இருந்தது கிரெளஞ்சமலை. மாயக்குகைதான் மாயக்கையாகும். மகா கைலாயத்திலிருந்து தன்படை பரிவாரங்களுடன் முருகன் வந்து தங்கிய இடம் செந்திற்சந்நதி, செல்வச்சந்நிதி ஆகும். அங்கிருந்துதான் பாலசுப்பிரமணியன், கிரெளஞ்ச மலையை அழித்தார். தாரகன் வெளிப்பட்டான். அருகிலிருந்து மாயாபுரி (வெளி இடம்)யில் இருவருக்கும்போர் உக்கிரமாகநடைபெற்றது. முருகனின் வேலினால் தாரகன் தாக்கப்பட்ட பொழுது, அவன் கழுத்துமாலையில் பதக்கமாக இருந்த மாலின் சக்கராயுதம், தெறித்து நிலத்தில் வீழ்ந்தது. முடிவில் பலசாலியான தாரகவேந்தன். வீரசுவர்க்கம் அடைந்தான். போர்நடந்த இடமே வடமாராட்சியின் மாயக்கை. சக்கராயுதம் தெறிந்து வீழ்ந்த இடம் வல்லி நாச்சியின் ஊராகும். பிற்காலத்தில் வல்லிநாச்சியரால் கண்டெடுக்கப்பட்ட அந்த சக்கராயுதம். ஆலயம் அமைக்கப்பட்டு. வழிபாடியற்றிய இடம் வல்லிபுரம். சக்கரத்தாழ்வார் கோவிலே 60 166ólp! é86ou jLDIf(gLb.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற அறிஞர்கள் கந்தபுராணக் கலாசாரமே யாழ்ப்பாணக் கலாசாரம் என்று கூறியது. இவ்வரலாறு காரணமாக இருக்கலாம். தாரகன் போரின்போது, முருகப்பெருமான்பாடிவீடமைத்த இடத்தில். அவன்சின்னமாகவேல் வைத்து. முருகன் அடியார்கள் கோவில் கட்டி வழிபட்ட இடமே செல்வச்சந்நிதி. அதுபோல திருமாலின் சின்னமாகிய சக்கரத்தை, வல்லிநாச்சி வைத்து அமைத்தகோவில் வல்லிபுரக்கோவிலாகும்.இறைவனின் சின்னங்களை வைத்து வழிபாடு செய்வது. தமிழ்மக்களின் வழிபாட்டு முறையாகும். இவை வடமொழிஒழுங்குப்படி அமையாத ஆலயங்கள் ஆகும். இன்றும் அருள்பொங்கும் தலங்களாக உள்ளன.
سے 110 =

பல்லவராசசேகரம் தேவர்களை வென்று அவர்களை தாரகன் சிறைப்படுத்திய போதும், அடிமைகளாக வைத்திருந்த போதும் தேவர்களிற்காக தேவர்களினால் பூசிக்கப்பட்ட திருமால், தாரகனுடன் போர்புரிந்தார். தாரகனால் திருமால் தோற்கடிக்கப்பட்டார். அப்பொழுதுதாரகன், திருமாலின் ஆயுதமான சக்கரத்தினை, அவரிடமிருந்து பறித்துக் கொண்டான். சக்கராயுதம் திருமால் சிவனை நோக்கித் தவம் செய்து பூசை செய்தபோது. ஆயிரம் மலர்களில் ஒன்று குறைவாக இருந்தபோது, திருமால், தமது கண்ணைப் பிடுங்கி ஆயிரமாவது மலராகச் கட்டினார். அதனால் மகிழ்ந்த சிவன் வலிமைமிக்க சக்கராயுதத்தை திருமாலிற்கு வழங்கியிருந்தார்.
அசுரேந்திரனி
தாரகன் கொல்லப்பட்ட செய்தியை, மகனான அசுரேந்திரன். சிங்ககிரிக் (சிகிரியா) கோட்டைக்குச் சென்று. தண்பெரிய தந்தையாகிய சிங்கமுகாசுரனிற்கு தெரிவித்தான். அவன் மிகுந்த கவலையுற்று. அழுது அரற்றினான். பின் தேறி ஆனைக்கோட்டை இராசதானிக்கு மன்னனாக அசுரேந்திரனை நியமித்து, மீண்டும்ஆனைக்கோட்டைக்கு அனுப்பிவைத்தான். அசுரேந்திரன் கி.மு.15000 ஆண்டளவில் ஆனைக்கோட்டை இராச்சியத்தின் அரசனாகிறான். நூற்றிற்கு மேற்பட்ட ஆண்டுகள் மன்னனாக இருந்து சைவ சமயத்திற்கும். தமிழிற்கும் தொண்டு செய்தான். அவனுக்குதாரகாட்சன். கமலாசுரன். வித்தியன்மாலிஎன மூன்று ஆண்மக்கள் தோன்றினர். அசுரேந்திரன் சிவப்பேறு அடைந்தான்.
அவனுடைய புதல்வர்கள் மூவரும் சிவனை நோக்கி தவம் செய்தார்கள். அதற்கு மகிழ்ந்த சிவபெருமான். அவர்களிற்கு பெரு வரங்களை அளித்தார். சூரபதுமன் இறந்தபின், தாரகாட்சன் வீர மகேந்திர புரத்தின் மன்னனாக முடிகடினான். கமலாசுரன் மாதோட்டமன்னன் ஆனான்.
வித்தியுணிமாலி
வித்தியுண்மாலி ஆனைக் கோட்டைக்கு அரசனானான். கி.மு 14,OOOம், ஆண்டளவில் வித்தியுண்மாலி ஆட்சி இடம் பெற்றதாக கொள்ள முடியும். மிகுந்த பலத்துடன் நீண்ட காலம் அரசாண்டதாக நூல்கள் தெரிவிக்கின்றன.
- 111 -

Page 58
பல்லவராச்சியம்
சமதக்கினி முனிவர். குன்மநோய் காரணமாக வருத்தப்பட்டார். குன்மநோய் காரணமாக அவர்முகம் விகாரமடைந்து இருந்தது. சமத்துஎன்றால் பலம் அதிகம், வலிமை எனப்பொருளாகும். அக்கினி என்றால் சடராக்கனி என்ற பசித்தீயாகும். அதிகபசி வயிற்றுஎரிவு, வயிற்றுப்புண் காரணமாக சமதக்கினி என அழைக்கப்பட்டார். அவரின் முகம் விகாரமடைந்து ஒடுங்கியது. கீரிபோன்று சாயல் இருந்திருக்கலாம். இறை அருளால் புண்ணியேச்சரம் வந்து. அங்குள்ள மலைக்குகையில் வசித்துத் தினமும் மலையில் உள்ள கண்டகி தீர்த்தத்தில் நீராடித் திருத்தம்பலேசுவரத்தின், நாகதலஈசுவரர். நாகுல அம்பிகையையும் வழிபட்டு வந்தார். திருத்தம்பலேச்சுரர் அருளால் நோய் நீங்கியதாக தெட்சன கைலாசமான்மியம் என்ற நூல் கூறுகிறது. அவர் வசித்தமலை, கீரிமலை என விளங்குகிறது. கீரிமலையின் கண்டகி தீர்த்தத்திற்குத் தெற்கே, கீரிமலை மாவிட்டபுரம் வீதிக்கு தெற்காக, திருத்தம்லேசுவரர் ஆலயம் அமைந்திருந்தது. அவ்விடம் காலபரிணாமத்தினால் மண்மேடாகிவிட்டாலும், அவ்விடம் இன்றும் ஊர்மக்களல், கோயிற்கடவை என்றே அழைக்கப்படுகின்றது. 50 வருடங்களிற்கு முன்னர், கல்தோண்டும்போது, திருத்தம்பலேசுவர லிங்கப்பெருமான் வெளித்தோன்றினார். அது இன்று கீரிமலை சிவன் கோவிலில் வைக்கப் பட்டுள்ளது. புதைபொருள் ஆய்வாளர்கள். முறையாக ஆராய்ந்திருந்தால், பல வரலாற்று உண்மைகள் வெளிவந்திருக்கும். தற்பொழுது கீரிமலையில் காணப்படும் சுனை, கேணி கண்டகி தீர்த்தம் அல்ல அருகில் காணப்படும் சிவாலயம் மக்களால் நூறுவருடங்களுக்கு முன் கட்டப்பெற்றதாகும்.
கி.மு. 1OOOO ஆண்டுகளில் ஈழத்திலிருந்து மீண்டும். அகத்தியர் பரதகண்டம் சென்றார். செல்லும் போது, வீணாகானபுரத்திலிருந்து, சமதக்கினி முனிவரின் குமாரன்திரனதுமாக்கினியையும்,தம்முடன் அழைத்துச் சென்றார். திரனதுமாக்கினியே, அவருடைய மொழிஇலக்கியத்துறைமுதன்மாணாக்கராக இருந்து, தொல்காப்பியம் என்ற நூலை இயற்றியவர். இதன் காரணமாகவே, தொல்காப்பியர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை தெரிவித்திருந்தார். நவீன ஆராய்ச்சியாளர்களும், தொல்காப்பியத்தில் காணப்படும் மொழிவழக்கும் சொற்களும், இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கத்தில் இருப்பதால், தொல்காப்பியர் பல்லவத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், கருத்துத் தெரிவித்துள்ளார்கள். ஐது, அதர், வியழம், கியாழம், பனாட்டு, பன்னாடை, நொய்து ஆகிய சொற்களை உதாரண LDTēå Bosp6omuld.
- 112

பல்லவராசசேகரம் கி.மு. 10000ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் நாகதீவு. நாகநாடு, மணிபுரம் என்ற பெயர்களாலேயே அழைக்கப்பட்டது. இந்தியாவில் குடியேற்றி வளநாடாக்குவதற்காக. ஈழத்திலிருந்து மாயோன் வழிவந்த அரசர்கள் 18 பேருடனும், வேளிர்கள் 18 பேருடனும், 18 குடிகளுடனும் அகத்தியர் சென்றார். இலங்கையில் திரேதாயுகத்தில் மாலியவான் ஆட்சிக்கு முன்னர், சக்கரன் (மாயோன்) என்ற மன்னன் முல்லைத்தீவின் மணிமலையில் இருந்து ஆட்சி செய்தான். முல்லைநிலம் மாயோனுக்கே உரியது. அங்கே மாயோன் அரசனாகவும், இரண்டாவது தமிழ்ப்பேரவைத்தலைவனாகவும் இருந்து. தமிழ் வளர்த்தவன். அதுபோல. மணிபுரத்திலேதான் வேள். வேளாளர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சிமுறை இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் மன்னராட்சிக் காலத்தில், இவர்களே சிற்றரசர்களாக இருந்தவர்கள். வேள் வேளிர் என அழைக்கப்பட்டவர்கள். நாகநாட்டின் ஆட்சிமுறையிலும் வேள் வேளாளர் முதலிடத்தைப் பெற்றிருந்தனர். அதனால் அவர்களை முதலிஎன அழைத்தனர்.
தமிழ் நாகரிகத்தினையும் தமிழ் மரபுகளையும் தமிழ் பாரம்பரியங் களையும் பரதண்டத்தில் பரப்பியவர்கள் ஈழத்தமிழர்களே. இவ்வாறு பரதகண் டத்தினை வளப்படுத்தியவர்களுள், அகத்தியர், புலத்தியர் முதலான ஈழத்துச் சித்தர்கள். மாயோன் வழிவந்த அரசர்கள். பதினெட்டு வேளிர்கள், மணிபுரத்தைச் சேர்ந்த பதினெண் குடிமக்கள் முதன்மை பெறுகிறார்கள். குமரிகண்டத்திலிருந்த பாண்டிநாட்டில் முதலாவது தமிழ்ச்சங்கத்தினை. அகத்தியர் புலத்தியர் தொல்காப்பியர் முதலானோரும் சேர்ந்து கி.மு. 9999ம் ஆண்டளவில். கூடல் நகரில் அமைத்தார்கள் என. சுவாமிவிபுலானந்த அடிகளார் தமது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார். அவருடைய ஆய்வுகள். தமிழ் விஞ்ஞானமுறையை அடியாகக் கொண்டு செய்யப்பட்டவையாகும்.
இந்திரனி
துவாபரயுகம் தொடங்கிய காலத்திலிருந்து. நாகதீவில் தொடர்ச்சியாக அரசு நிலைபெற்று இருந்ததை வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. கி.மு. ஆறாயிரம் ஆண்டளவில் இந்திரன், தான் பெற்ற சாபத்தினால் மணிபுரத்தில் மீனவனாகப்பிறந்தான். மணிபுரக்கடலில் மீன்பிடித்துவந்தான். சாபவிமோசனம் பெறவேண்டிய காலம்வந்தது. மணிவண்ணன், பெரிய சுறவடிவமாகத் தோன்றி மீனவனை அலைக்கழித்தது. இறுதியாக எல்லா வலைஞர்களும் சேர்ந்து இழுத்துச் சுறாவினை கரை சேர்ந்தார்கள். என்ன அதிசயம். சுறா மறைந்து - 113 -

Page 59
பல்லவராச்சியம் விட்டது. அவ்விடத்தில் மணிவண்ணன் சங்கு சக்கரதாரியாகநின்றார். மீனவன் இந்திரனாகக் காட்சியளித்தான். இந்திரன் மகிழ்ச்சி பொங்க வணங்கினான். திருமாலே! எம் பெருமாளே! எனக்குக் காட்சி கொடுத்துச் சாபம் தீர்த்த இடம். எல்லாருடைய சாபத்தையும் தீர்க்கும் இடமாக விளங்க வேண்டும். தாங்கள் நின்ற இடத்தில் பதிந்த தங்களின் பாதச்சுவடுகள், என்றும் நிலைத்திருத்தல் வேண்டும். இந்தச் சமுத்திர நீரில் நீங்கள் நீந்தி மிதந்து விளையாடியபடியால், இந்தப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள். எல்லாம் தொலைந்து இம்மையில் சகல செல்வங்களையும் பெற்று. மறுமையில் இறையடி சேர வேண்டும் என்று. வரம் கேட்டான். மணிவண்ணனும், மகிழ்ந்து வரம் கொடுத்தான். மணிவண்ணன் பாதச்சுவடுகள் பதிந்து காணப்பட்டது. அதனால் திருவடிநிலை, மணிபல்லவம் என அழைக்கப்பட்டது. சிலகாலம் இந்திரன் மணிபுரத்திலிருந்து மணிபல்லவத்தை ஆண்டான். அன்று தொடங்கி அங்கு வருடாவருடம் இந்திரவிழாக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திரன் ஆட்சிசெய்த இடம், இந்திரவிழா நடைபெற்றுவந்த இடமும் இந்திரநகள் என அழைக்கப்பட்டது. இந்திரநகள் மருவி இன்று இந்திரானை என அழைக்கப்படுகிறதாக முதியோர் தெரிவிக்கிறார்கள். சிங்கைநகள் இன்று சங்கைநகர், சங்கானை என மருவியுள்ளது.

மணிமேகலையில் நாகதீவுதான் பல்லவம் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. வல்லிபுர ஆழ்வாரின் வல்லைத்திருப்பதிகம் பல்லவத்தினை பல்லவம் என்றே குறிப்பிடுகிறது. செல்வச்சந்நிதி கந்தன் திருப்புராணத்தில் மணிபுரம் என்பது மணிக்கரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது யாழ் தீபகற்பமே. அதாவது மணிபுரம் என்ற பதம், யாழ்குடாநாடு முழுவதையும், ஒருகாலத்தில் குறித்திருந்தது. தண்டையணிந்த மால் பாதங்கள் பதிந்ததால், திருவடிநிலைத் துறையானது, திருவடிநிலைத்துறைஎன்ற பொருளிலே, பல்லவத்துறைஎன்றும் அது குறிப்பிடப்பட்டது. கி.பி1225ம் ஆண்டு தைமாதம் 20ம் திகதிதிருக்கோவில் கல்வெட்டு விசயகாலிங்கச் சக்கரவர்த்திபல்லவத்தின் அரசன். ஈழத்தின் இயக்க, நாக. இராசரட்டை அரசுகளின் திரிபுவனச்சக்கரவர்த்திஎன்றும் குறிப்பிட்டுள்ளது. எனவேதான் பல்லவம் என்ற நாட்டின் அரசர்கள் பல்லவர் என பெயர் பெற்றார்கள். சிங்கைநாடு என்று செகராசசேகர நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கைநகள் கண்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சிங்கநகரில் கண்டி (வாவி) அமைக்கப்பட்டிருந்ததால் கண்டிநாடு என்று. தமிழ் நாவலர் சரிதம்
- 114

பல்லவராசசேகரம் பல்லவத்தினை குறிப்பிடுகிறது.
மணிபுரம் (சுழிபுரம்) முதல் சிங்கைநகள் (சங்கானை) ஊடாகநல்லூர் வரை உள்ள தெரு. பெருந்தெரு என அழைக்கப்பட்டுவருகிறது. சிங்கை வேந்தர் களின் இரதங்கள் போக்கு வரத்துச் செய்த தெருவாகும். தேரோடும் பெருவீதி யாகும். பின்னர் இராசா சுப்பிரமணியம் காலத்திலிருந்து மூளாயிலிருந்த சிங்கைநகள் ஊடாக நல்லுள்வரை பெருந்தெரு என்று அழைக்கப்பட்டுவருகிறது. இராசாக்களின் இரதங்கள் ஓடுகின்ற வீதிகளை பெருந்தெரு என்ற பெயரால் அழைப்பது நாட்டு வழமை. கி.பி. நாலாம் நூற்றாண்டில் இங்கு வந்த சீன யாத்திரிகள். திருவடிநிலையில் பாதச்சுவடுகள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 16ம் நூற்றாண்டு வரை பாதச்சுவடுகள் காணப்பட்டது. தற்பொழுது கடல்விழுங்கி விட்டது. மணிவண்ணன் அக்கடலில் சுறவமாகத் தீர்த்தமாடியதால் பொன்னாமையுர் மணிவண்ணன் இன்றும் அங்கே தீர்த்தமாடுவது வழக்கம். “
மணிவண்ணனின் தளிபோன்ற பாதங்கள் பதிந்தபடியால் நாகதீவு, மணிபல்லவம் என பெயர் பெற்றது. மணிபல்லவம் காலப்போக்கில் பல்லவம் என்றே அழைக்கப்பட்டது. மணிபுரத்திலே கிமு. 5000 ஆண்டளவில் திருமாலின் அற்புதம்நிகழ்ந்தது. பல்லவ தீர்த்ததில் மீனவர்கள்மீன் பிடித்தார்கள். அப்பொழுது ஒரு பொன்னாமைதோன்றிவலையில் அகப்படாது மீனவரை அங்கும் இங்குமாக வெகுநேரம் இழுத்தும் ஓடவைத்தும்வலையில் அகப்படாது வேடிக்கை காட்டியது. மீனவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வலைவீசிப்பிடித்துக் கரைசேர்ந்தார்கள். மீண்டும் அவர்கள் பிடியிலிருந்துதம்மை விடுவித்துக் கொண்டு ஆமை மேற்குப் பக்கமாக ஓடியது. மீனவர்களும் துரத்திக்கொண்டு பின்னால் ஓடிவந்தார்கள். இரண்டு கல் தூரத்தில் அந்த ஆமை ஓடாது நின்றது. நின்றவுடன் ஆமை கல்லாகிவிட்டது. அவ்விடத்தில் தமக்கு ஆலயம் எழுப்புமாறுமணிவண்ணனின் குரல்வானில் ஒலித்தது. மணிபுரமன்னன் மணிவண்ணனிற்குக் கோவில் எழுப்பினான். பொன்னாமை பிடிபட்டதால் மணிபுரம் பொன்னாமையூர் என்றும், ஆமையுர் என்றும் அழைக்கப்பட்டது. தற்பொழுது ஆமை கல்லாகிய இடமே பொன்னாமையுர் என்பது மருவி பொன்னாலையுர் என்று வழங்கி வருகிறது. மன்னன் கல்லான ஆமையின் மேல் மாலின் சிலையை நிறுத்தி ஏழுமாடவீதிகளைக் கொண்டகோவில் ஒன்றைக் கட்டினான்.
- 115

Page 60
பல்லவராச்சியம்
ஏழாவது வீதியின் வாயிலில் ஒரு குளமும் அமைத்தான். ஒருவாயிற் பிள்ளையாரும் அமைத்தான். பொன்னாமையில் இருந்து தோன்றியபடியால் அவ்வாலயம் பொன்னாலயம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆலயம் அமைந்துள்ள காணி சதுரங்க மணற்திடல் என்று அழைக்கப்படுகிறது. மாயவனார், தீர்த்தம் ஆடுவதற்காக, வருடத்தில் இருமுறை பல்லவ தீர்த்தக் கரைக்கு (திருவடிநிலை)செல்வது வழக்கம்.
துவாபரயுகத்தில் (கி.மு 4500) சோழநாட்டை ஆணிட சோழமாமன்னன், முசுகுந்தன் சக்கரவர்த்திஇந்திரனுடன் சேர்ந்து போர்புரிந்த வரலாறு காணப்படுகிறது. அம்மன்னனுக்கு சாபத்தினாலோ, நோயினாலோ, அவன் அழகிய முகம், குரங்கின்முகம்போல விகாரப்பட்டது. அதனால் முசுகுந்தன் என்ற பெயர். காரணப்பெயராகவே அமைந்தது. இந்தியாவில் அதனை மாற்றிக் கொள்ளாத நிலையில், அம்மன்னன் மணிபல்லவம் வந்து, திருவடிநிலையில் தீர்த்தமாடி, சுழிபுர சிவாலயத்தில் வழிபாடு செய்து வந்ததால். குரங்குமுகம் நீங்கியதாகக் கூறப்படுகிறது. அவ்வாலயம் இன்று மண்மூடிக்கிடக்கிறது. அவ்வாலயம், வீமராசன் கொல்லை என்ற, அரண்மனையிருந்த இடத்திலிருந்து, சம்புகோவளத்துறைக்குச் செல்லும் பாதையின் அருகில் பறாளை வெளியில் இருந்தது. மன்னன் குரங்குமுகத்துடன் வழிபட்டுச் சுகமடைந்ததால், அச்சிவாலயம், சம்பேசுவரம் என்று அழைக்கப்படாலாயிற்று. சோழன் வந்து இறங்கிய இடம். இவ்வாலயத்திற்கு சமீபமாக, புலியன்துறை என்று அழைக்கப்படும் இடமாகும். சம்பேசுவரம் இன்றும் மீட்கப்டாதது பெருங்குறையே. ஆனால் யோகி கார்த்திகேசு என்பவர், சம்பேசுவரத்திற்கு அருகில், 20ம் நூற்றாண்டில், ஒருசிவன் கோவிலை சம்பேசுவரத்தின் சின்னமாகக் கட்டினார். அதுவே இன்று.நாம் காணும் சுழிபுரம் சிவாலயமாகும்.
வட இந்தியதுறைமுகமான தாம்பிரலிப்திக்கும் பல்லவத்தின் பெருந்துறைமுகமான சம்பு கோவளத்திற்கும் இடையே, அடிக்கடிகப்பற்போக்கு வரத்துகள் இடம்பெற்றிருப்பது பற்றியும், கெளடில்யரின் அர்த்தசாத்திரத்தில், கி.மு. 3ம். நூற்றாண்டில், ஈழத்து முத்துக்கள், மகதப் பேரரசுக்கு கொண்டு செல்லப்பட்டமை பற்றியும். குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
- 116

பல்லவராசசேகரம் afgSmrasassir
கி.மு. 3500 ஆண்டளவில் பஞ்ச பாண்டவர்களின் ஆட்சி, வட இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சந்தர்ப்பகழ்நிலையால்,தருமனை அவசரமாக சந்திப்பதற்கு, விஜயன் திரெளபதையின் அந்தப்புரம் சென்றான். பொருந்திக் கொண்டதற்கு மாறாக அந்தப்புரம் சென்றதற்கு பரிகாரமாக ஒரு வருடகாலம் தெற்கேயுள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி புனித தலங்கை தரிசித்துவருமாறு பணிக்கப்பட்டான். இந்திரன் மகனான விஜயன், இந்திரனின் சாபம் நீங்கிய, புண்ணிய தீர்த்தமான திருவடிநிலையில், தன்பாவம் நீங்க தீர்த்தமாடுவதற்காக வந்தான்.
மணிபுரத்தின் எல்லையிலிருந்த பல்லவ (திருவடிநிலை) தீர்த்தத்தில் (பல்லவதித்த) நீராடினான். வழமையாக அங்கே நீராட வந்த சித்திராங்கதை என்ற மணிபுர (சுழிபுர) இளவரசியைக் கண்ட விஜயன், காதல் கொண்டான். மணிபுர அரசனான சித்திராங்கதன். விஜயனைக் கைதுசெய்து சிறையிலிட்டான். பின் விஜயன் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் என அறிந்து, சித்திராங்கதைக்கு அருச்சுனனை மணமுடித்து வைத்தான். சிலகாலம் இங்கு தங்கிமீண்டான். அக்காலத்தில், மணிபுரநாட்டின் கொடியில், சிங்கமும்பனையும் பொறிக்கப்பட்டிருந்தது என மகாபாரதம் தெரிவிக்கிறது.
சித்திரவாகனனி
சித்திரவாகனன் தருமன் ராசசூயயாகம் செய்த போது. யாக குதிரை மணிபுரம் வந்தபோது, சித்திராங்கதன் மகன் சித்திரவாகனன். குதிரையைப் பிடித்துக் கட்டிப் போட்டான். அதனைப் பிடிக்க வந்த அருச்சுனனையும் தோற்கடித்தான். சித்திராங்கதை வந்து அருச்சுனனைக் காப்பாற்றினாள். சித்திராங்கதை கணவன் என்பது தெரியவந்ததினால் உயிர் பிழைத்தான்.
சித்திரசேனனி
சித்திராங்கதனுககு பின் அவன் மகன் சித்திரவாகனன் ஆட்சி நடைபெற்றது. அவனுக்கு பின் அவன் மகன் சித்திரசேனன் ஆட்சிசெய்தான்.
வயிரவாகனனிர்
சித்திரசேனன் ஆட்சிக்குபின், கலியுகம்31OOம் ஆண்டளவில், அவன்
- 17

Page 61
பல்லவராச்சியம் மகன் வயிரவாகனன் ஆட்சி நடைபெற்றது. மணிபுரக்கொடியில் பனை இடம் பெற்றிருந்ததால், பனை நாடு என்று பெயர் வந்திருக்கலாம்.
அருச்சுனன் மீண்டும் ஒருமுறை. ஈழநாட்டுக்கு பவளமணி வாங்குவதற்காக வந்தான். ஈழநாட்டு அரசனின் அனுமதியின்றி. கடற்கரையில் பவளத்தை எடுக்க முயன்றபோது, கைது செய்யப்பட்டு அரசனால் சிறைவைக்கப்பட்டான். அங்கு பவளக்கொடி என்ற இளவரசியைக் கண்டு. காதல் கொண்டு. மணம் முடித்து. சிலகாலம் இங்கு அவளுடன் வாழ்ந்திருந்தான். சம்புகோவளத்துறை, நவமணிகளின் வாணிபத்தில், உலகப் புகழ் பெற்று விளங்கியது. பிறநாட்டு வணிகர்கள். அரசர்கள் வந்து விலை மதிக்க முடியாத சிறந்த மணிகளை வாங்கினர்.
D60fpstras6r
கி.மு. 2500ம் ஆண்டளவில், மணிநாகன் என்ற மன்னன், மணிபல்லவத்தினை ஆட்சி செய்தான். நவமணிகளும் கிடைக்கப் பெற்றதால், நாகதீவு மணிபுரம் என அழைக்கப்பட்டது. வீரத்துடனும் சிறப்புடனும் ஆட்சி நடாத்திய மணிநாக மன்னன்.தனது பெயரினை இராசதானிக்குச் சூட்டினான். அதன்பின் மணிநாகநகள் என்றும். மணிநாகபுரம்நாகநகள் என்றும் விளங்கியது.
grO360606ir
இம்மன்னன் கி.மு 2000ம் ஆண்டளவில் பல்லவ அரசனாக விளங்கியவன். மணிபுர வணிகர்கள் முத்து, பவளம் முதலிய மணிகளை இந்தியா, மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். கடல் வாணிபம் இவன் ஆட்சியில் சிறந்து விளங்கியது. அதனைப் பாதுகாக்க வலிமை மிக்க கடற்படை இருந்தது. ஏழுகடல் சீர்மையெங்கும். பல்லவத்தின் கடற்படைக் கப்பல்கள். நந்திக் கொடியுடன் சுற்றிவந்தன.
நந்திக்காசுகள் புழக்கத்திலிருந்தன. பிறநாடுகளுடன் நடந்த வாணிபத்தில் பொற்காசுகள் பரிமாறப்பட்டன. நந்தி, அரசஇலச்சினையாக இருந்தது. ஏலேலன் புகழ்பாடி, அவன் கப்பல்கள். எல்லாக் கடல்களுக்கும் சென்று வந்தன. ஏலேலோ ஏலேலோ என்று கடலில் பாடுவார்கள். கோவளம் பிறநாட்டு வாணிபர்கள் காத்துக் கிடக்கும் பெரும் வாணிபத் துறையாக சிறப்புற்று விளங்கியது. ஏலேலோ பாடும் கப்பல்களை கடற் கொள்ளையர்களோ,
= 118 من

பல்லவராசசேகரம் வேற்றுநாட்டுக் கப்பல்களோ கொள்ளையடிப்பதில்லை. வீரம் செறிந்த கடற்படையே காரணமாகும். ஏலேலன் கப்பல் ஏழுகடல் சென்று வரும் என்று கப்பல் ஒட்டிகள் கூறுவது வழக்கம், முத்துக்குளிப்பிலும், கடல் வாணிபத்திலும், சேர சோழ பாண்டியர்களின் போட்டியை முறியடிக்கவே. பல்லவ அரசர்கள் பலம்மிக்க கடற்படையை உருவாக்கினர். இவர்கள் ஒன்று சேர்ந்து. பல்லவத்தை தாக்க விளைந்ததால். அவர்களை கடலில் வைத்தே அழித்து வந்தனர். பல்லவ அரசர்.
நெடுந்தீவு. ஊராத்துறை. காரைதீவு, பல்லவத் துறை (திருவடிநிறைத்துறை) கோவளம் (சம்புத்துறை) பருத்தித்துறை நாகர் கோவில் ஆகிய ஏழு இடங்களில் கடற்காவல்தளங்கள் இருந்தன. கடற்படை, கடற்கலங்கள். கடற்காவற்தளங்கள் ஏலேலன் காலத்தில் வலிமை மிக்கதாக இருந்தன. ஈட்டி, வேல், அம்பு, வாள் போன்ற பாரம்பரிய ஆயுதங்களே படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்தன. கட்டுமரம். ஊரா. தோணி, வள்ளம், நாவா, திமில், வத்தை, படகு, மச்சுவாய், கப்பல், வங்கம், ஓடம் என்று தேவைக்கும் இடத்திற்கும் தக்கதாக கடற்கலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கப்பல் கட்டுவதில் வல்வெட்டித்துறைமிகச் சிறந்த தளமாக விளங்கியது. ஏழுகடல் தாண்டினாலும், ஏலேலன் கப்பல் திரும்பிவரும் என்பது நாட்டார் மொழியாகும்.

பல்லவ மாலுமிகள் கப்பல் ஒட்டுவதில் சிறந்த விற்பன்னர்கள். அது போல ஆழ்கடலிலும் கப்பலைக்கரை சேர்ப்பதில் சிறந்த மீகாமன் (கப்பற்தலைவர்) கள் இருந்தார்கள். கப்பல் ஒட்டியை குகன், மாலுமிஎன்றும் அழைத்தார்கள்.

பல்லவத்தின் இலச்சினையாக நந்தி என்பதாலும், பல்லவநாட்டின்
கொடி நந்தி என்றதாலும், பல்லவ அரசனை நந்திராசா என்றும் அழைத்தனர்.
கி.மு. 1900ம் ஆண்டளவில் நந்திராசா பல்லவத்தினை ஆட்சிசெய்தான்.

மாணிக்கநாகனி 

பல்லவநாட்டினை மாணிக்கநாகன் என்ற வேந்தன் கி.மு 18OOம் ஆண்டளவில்ஆண்டுவந்தான். மாணிக்கராசா அல்லது மணிராசா என்ற பல்லவ மன்னன்தான்திரிகோணமலை கோணமாமலைக்கோவிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. மணிகிராமத்தில் மாணிக்கக்கல் உற்பத்திசெய்வித்தான்.

- 119

Page 62
பல்லவராச்சியம் 

கோவேந்தனி

கி.மு 1600ம் ஆண்டளவில் பல்லவத்தின் அரசனாக கோவேந்தன் ஆட்சிசெய்தான். கோவேந்தன் என்றானும் பல்லவ அரசர்களையே குறிக்கிறது. கோ என்றால் நந்தி, எருதுவேந்தன் என்றால் அரசன். எனவே கோவேந்தன் என்பது நந்திராசா என்பதாகும். ஆனைக்கோட்டையில் எடுக்கப்பட்டநாணயங் கள். அரசமுத்திரைச் சான்றுகள் இவனுடைய ஆட்சிப்பற்றித் தெரிவிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கன்றனர். கோவேந்தனால் இந்நாணயங்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வரசன் மணிபுரத்திலிருந்தா (சுழிபுரம்)? ஆனைக்கோட்டையிலிருந்தா? ஆட்சிசெய்தான்என்பதுநிறுவப்படவில்லை. கி.மு. 15ம் நூற்றாண்டில் மணிபுரத்தில் ஒரு அரசு இருந்துள்ளதை கண்டெடுக்கப்பட்ட புராணக்காசு உறுதி செய்கிறது. (AJ) தாரகன் முதல் வித்தியுண்மாலிவரை ஆனைக் கோட்டை இராசதானியாக இருந்து வந்துள்ளது.

கி.மு. 1300ம் ஆண்டளவில் பல்லவத்தில் இவன் ஆட்சி இடம் பெற்றிருந்தது. இரத்மலானை நந்தீச்சரம் சிவாலயம், இம்மன்னனால் கட்டப் பெற்றிருத்தல் வேண்டும். அக்காலத்தில் ஈழம் முழுவதும் பல்லவர்களின் ஆட்சியிலிருந்தது. இப்பகுதியில் தமிழர்களான சைவசமயத்தவர்கள் பெருமளவில் வாழ்ந்தார்கள். அவர்களின் வழிபாட்டுக்காகநந்திராசா இக்கோவிலைக்கட்டினான். ராகுலதேரர்என்ற சிங்கள பௌத்ததுறவி. கி.பி. 1454ல்கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில், சலவிஹறினி சந்தேசய என்ற சிங்கள காவியத்தை இயற்றினார். அதில் நந்தீசுவரம் ஆலயம் பற்றிக்குறிப்பிட்டுள்ளார். இந்த ஈசுவரன் கோவிலில் நடைபெறும் பூசை வழிபாட்டுமுறைகள் சிறப்பாகவும்விளக்கமாகவும் பாடியுள்ளதுடன், மக்கள் விரும்பும் இனிமையான தமிழில் தோத்திரம் பாடி வழிபாடு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். நந்திராசா காலம் தொடக்கம் கி.பி.1454ம் ஆண்டு வரையும் தொடர்ச்சியாக இப்பகுதியில் தமிழும் சைவமும் செழித்தோங்கியிருந்தது. பெருந்தொகையான தமிழர் சீரோடும் சிறப்போடும் கி.பி 1454லிலும் அங்கு வாழ்ந்திருந்தார்கள் என்பதனை, சலவிஹறினி சந்தேசய கட்டியம் கூறிநிற்கிறது.
u6th606hprimarim
இடைக்காலத்தில், தொடர்ச்சியாக மன்னர் பெயர்கள் கிடைக்காத
- 120

பல்லவராசசேகரம் படியால் அவர்கள் புகழ் பெயர்நிலைக்கும் அளவுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இருந்த போதிலும், பல்லவநாட்டில் தொடர்ச்சியாக ஒரு அரசும் அரசாட்சியும் இருந்து வந்துள்ளது. கி.மு. 100 ஆண்டளவில் பல்லவராசா என்ற அரசனின் ஆட்சி இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை அரசினை. தொலமி என்ற மேனாட்டு ஆசிரியர், ஆக்கோட்டே (Aakote) என்றும் ஆமையூர் என்ற இடத்தினை, ஆமூர் (Amur) என்றும் நாகதீவு என்பதை, நாகதீபோய் (Nagadiboi) என்றும் நிற்சாமம் என்பதனை. நிகாமம் (Nikama) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நிகாமம் சிங்கைநகரில்(சங்கானை) அமைந்துள்ள வணிகக் குழுவினரின் இருப்பிடமாகும்.
ஏலேலணி
ஏலேலண் ஆட்சி கி.மு. 1000ம் ஆண்டளவில் இடம் பெற்றிருந்தது. அக்காலத்தில் சால்டியா (சோழதேயம்) என்ற நாட்டை ஆண்டிருந்த சாலமன் (சோழமன்னன்) என்ற வேந்தனின் கப்பல்கள், வியாபாரத்திற்காக கிழக்கு நாடுகளுக்கு வந்தபோது, ஒபீர் நாட்டில் தாசீஸ் துறைமுகத்தில், பொன்னும் நவமணியும், அகில், யானைத்தந்தம் மயிற்தோகை கொள்வனவு செய்தார்கள். (A.J.) ஒபீர் என்றால் ஒளிநாடு. சிவன் ஒளியாகத் தோன்றிய சிவனொளிபாத மலைநாடு ஈழமாகும். தாசீஸ் என்பது திருக்கேதீசுவரத்துறையாகும். அக்காலத்தில் இலங்கை முழுவதிலும் பல்லவர் ஆட்சிபரந்திருந்தது. அதனால் பல்லவர்களைக் குறிக்கும் பெயர்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் ஏற்பட்டன. பல்லவராசன் கட்டு (வன்னி). நந்தீசுவரம் (கொழும்பு). பல்லவ வங்கம் (திரியாய்). நந்திக்கடல் (புல்மோட்டை), தண்டேசுவரம் (தெய்வந்துறை, மாத்தறை ஆகிய பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. கப்பலோட்டிகளின், மாலுமிகளின், மீகாமன்களின் பாரம்பரியநம்பிக்கை, ஆழ்கடலில் ஏலேலன் பெயரைச் சொல்லி, ஏலேலோ பாடுவதனால், கொந்தளிக்கும் கடலைக் கடந்து. கப்பல் உறுதியாகக் கரை சேரும், பிரயாண அலுப்பு. களைநீங்கும்.

ஏலேலசிங்கன் கி.மு. 8OOம் ஆண்டளவில் பல்லவத்தினை ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் பல்லவம் கடல் வாணிபத்தில் மிகவும் சிறந்து விளங்கியது. அக்காலத்தில், ஈழத்தில் பதினெட்டு வேள்களின் ஆட்சி இடம் பெற்றிருந்தது. அவை ஏலேலசிங்களின் மேலாண்மையின் கீழ் இருந்துவந்தன. - 121 -

Page 63
பல்லவராச்சியம்
கழற்சிங்கனி
இவன் ஏலேலசிங்கன் மகனாவான். இவன் கி.மு. 750ம்
ஆண்டளவில் ஆட்சிசெய்திருந்தான்.
தனிடை மன்னனி
பல்லவத்தில் கி.மு 700ம் ஆண்டளவில் கழற்சிங்கன் மகனாகிய இவன் ஆட்சி நிலவியது. இலங்கை முழுவதும் இவன் ஆட்சி பரந்திருந்தது. மகாதுறையின் தேவநகரில் சிவாலயம் ஒன்றினைக் கட்டினான். அக்கோவில் தண்டேசுவரம் என அழைக்கப்பட்டது. இக்கோவிலின் கோபுரம் திசைகாட்டியாக இருந்தது என்று. கிரேக்க மாலுமிகளினால் வரையப்பட்ட தேசப்படத்தில் காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முடியில், பெறுமதி வாய்ந்த மாணிக்கக்கல் ஒன்று. கீரிடமாக பதிக்கப் பட்டிருந்தது. கோவில் விமானம் தங்கத்தகடுகளால் வேயப்பட்டிருந்தது. அதனால் சூரிய ஒளிபட்டு ஒளிவீசியது என போர்த்துக்கேய எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வொளி மாலுமிகளுக்கு உதவியாக இருந்துள்ளது. 16ம் நூற்றாண்டில் பறங்கியரால் சூறையாடப்பட்டுப்பின் அழிக்கப்பட்டது. 1998ல் விசித்தராம விகாரையில் இச்சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4அடி உயரமும் 2 1/2அடி அகலமும் கொண்டுள்ளது. தண்டேசுவரத்தின் மூலமூர்த்தியாக இருந்துள்ளது. லிங்கத்தின் அளவினைப் பார்க்கும் போது. தண்டைமன்னன் சிவனுக்குப் பெருங்கோயில் கட்டியுள்ளான் என்பது புலனாகின்றது. நந்தியும்கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றுதண்டேசுவரம் திருமால்கோவிலாக காட்சியளிக்கிறது. அங்கே சமன் என்ற பெயரில், சிவனாரும் உள்ளார். பழம்பெரும் கோவில், சிவன்கோவிலாக இருந்துள்ளதை, நந்திச்சிலை தெரிவிக்கிறது. தண்டேசுவரம் இன்றுதொண்டேசுவரம்என அழைக்கப்படுகிறது. தணடை மன்னன் கட்டியதால், தண்டேசுவரம் என்ற பெயர் வந்தது.
மகாதரனி
நாக அரசகுடும்பத்தைச்சேர்ந்தமகாதரன் கி.மு. 600ம் ஆண்டளவில் LLLTTTTTTLT sTTTCTTS sLMTTTLL LLL LLLLLLLT LLLTT நாகன், கழனியில் இருந்து அக்காலத்தில் ஆட்சி செய்தான். மகாதரனின் மருகனான சோழாதரன். கந்தமாதனம் என்று அழைக்கப்படும் இராமேசு வரத்தில் சிற்றரசனாக இருந்தான்.
- 122

பல்லவராசசேகரம் up6.arrmarr
மணிராசாகிமு. 550ம் ஆண்டளவில்மணிபுரத்தின் அரசனாக ஆட்சி செய்தான். திரிகோணமலை மணிராசகுளம், மணிக்கிராமகுளம் (மின்னேரியா) இவ்வரசனால் கட்டப்பெற்றதாகும்.
கோவேந்தனி
மணிபல்லவத்தின் அரசனாக கி.மு. 500ம் ஆண்டளவில் கோவேந்தன் கோலோச்சினான். பல்லவ மன்னர்கள் தங்கள் கொடி, இலச்சினை, நாணயம், எல்லாவற்றிலும் நந்தியை பொறித்தார்கள். பல்லவர்களை நந்திராசாக்கள். கோவேந்தர்கள் என்றும் அழைப்பர். கி.மு. 500ம் ஆண்டளவில் நந்திச்சின்னத்துடன் பொறிக்கப்பட்ட அரசுமுத்திரை. கல்வெட்டு இவ்விபரத்தைக் கூறுகிறது. “கி.மு. ஆறாம் நூற்றான்டு தொடங்கி, ஒரு பலமான அரசு, பல்லவத்தில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையும், மணிபல்லவத்தின் நாக அரசர்களினால் ஆளப்பட்டது." (A.J) பீனிசியஸ் வரலாறு என்ற நூலில் நாகதீவு அரசுபற்றிய மேனாட்டினரின் முதலாவது பதிவு காணப்படுகிறது. கி.மு. 5ம் நூற்றாண்டிலே மூன்று அரசுகளிலிருந்தாலும், இலங்கையின் முத்துக்குளிப்புநாகதீவு அரசின்: கட்டுப்பாட்டிலே இருந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லநாகன் «ጵ°
நல்லநாகன் கி.மு. 400 ஆண்டளவில்பலமான ஒரு அரசினை ஆட்சி செய்து வந்தான். பிறநாட்டு இலக்கியங்களில், தென்கிழக்காசியநாடுகளுக்கும், பல்லவத்திற்கும் இடையே, மிகவும் முற்பட்ட காலத்தில் நடைபெற்ற வர்த்தகக் கப்பல் போக்குவரத்துப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
முடிநாகராசர்
நாகதீவினை முடிநாகராசர் என்ற அரசன் கி.மு 350ம் ஆண்டளவில் ஆட்சி செய்தான். இவன் தமிழில் பெரும் புலவராவர். இவர் இயற்றிய பாடல்கள் பாண்டிநாட்டுத்தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
uprudnirg56
கி.மு.முன்னூறாம் ஆண்டளவில் ஆட்சி செய்த முடிநாகராசர் மகன் ஆவர். தமிழ்ப்பாக்கள் பலவற்றை யாத்தவன்.
- 123

Page 64
பல்லவராச்சியம் gŠuprmaFm
நாகதீவினை தீபராசா கி.மு. 250ம் ஆண்டளவில் ஆண்டான் என அறியவருகிறது.
மாணிக்கநாகனி
மாணிக்கக்கல் வாணிபம் இவன் ஆட்சியில் செழிபுற்றிருந்தது. சிறந்த மாணிக்கக்கற்களை மணிபுரத்தில் பெற்றுக்கொள்ள, பிறநாட்டினர் வந்தனர். மாசாத்துவான் செட்டி, தன்மகள் கண்ணகைக்கு காற்சிலம்பு செய்வதற்காக, மாணிக்கப்பரல் வாங்கமீகாமனை மணிபுரம் அனுப்பினான். மாணிக்கநாகனின் கடற்படைத்தளம் நெடுந்தீவில் அமைந்திருந்தது. அதில் கடற்படைத்தலைவனாக வெடியரசன் இருந்தான். வெடிகளை எறிந்து. எதிரிகடற்கலங்களை அழிப்பதில், தேர்ச்சி பெற்றவன் வெடியரசன். சோழநாட்டு மீகாமனுடன் வெடியரசன் போரிட்டான். போரில் திருவடிநிலை கடற்படைத்தள தலைவன் வீரநாராயணன் கொல்லப்பட்டான். அதனை அறிந்த மன்னன் போரினை நிறுத்தி. மீகாமனை தம்மிடம் அழைத்துவருமாறு வெடியரசனுக்கு ஆணையிட்டான். மன்னன் மாணிக்கபரல்களை மீகாமனுக்கு விற்பதற்கு உத்தரவிட்டான். நெடுந்தீவு எயிற்பட்டினம் என அழைக்கப்படுவதற்கு அங்கிருந்த கடற்கோட்டை காரணமாகும். மன்னன் மாணிக்கநாகன். வெடியரசனை நெய்தல் நிலத் தலைவனாக பட்டங்கட்டி வைத்தான்.
மெகஸ்தனிஸ்என்பவர். கிரேக்கநாட்டுத்தூதுவராக, சந்திரகுப்தனிடம், இந்தியாவில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பணியாற்றியவர். "தங்க உற்பத்தியிலும், பெரியமுத்துக்களின் உற்பத்தியிலும். இந்தியாவைப்பார்க்கிலும் இலங்கை அதிகமாக உற்பத்தி செய்கிறது. முத்துக்குளிப்பு. வட இலங்கையின் மேற்கு கரைப்பட்டினங்கள், பெருந்தொகையான மேனாட்டு வணிகர்களைக் கவர்ந்திருந்தன. அக்காலத்தில் இந்நாட்டில் செழிப்புற்றிருந்த மன்னர்களினால், இந்த முத்துக்குளிப்பு வருமானம் ஒதுக்கப்பட்டிருந்த கோயில்களும் கவர்ந்தன."; என்று அவர் தமது குறிப்புக்களில் தெரிவித்துள்ளார். (A.I) நெடுங்காலமாக சுன்னாகத்தில் சங்குகள் அறுக்கப்பட்டு வந்தன. இதனை D.PE பீரிஸ் அகழ்வாய்வுகள் மூலம் நிறுவியுள்ளார். சுன்னாகம் முத்துத்தம்பிப்பிள்ளை என்பவர் வண்டில் கணக்கான அறுக்கப்பட்ட சங்கு முதலானவற்றைச் சுட்டு சுண்ணாம்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார். இது முற்காலம் தொடக்கம் அங்கு
- 124

uábaoalJT369 35Júb சங்குகள் அறுக்கப்பட்டு வருவதை மேலும் உறுதிப்படுத்துகிறது. சங்கினை அறுத்து மோதிரம் வளையல்வேறுநகைகள் செய்து அணிவது தமிழர்வழக்கம். சங்கினை அறுப்பவர்களைக் கீரன் என்று அழைப்பர்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த நாணயங்கள், கல்வெட்டுகள், தமிழில் விளங்குகின்றபடியால், இவை அதிகாரத்திலிருந்த தமிழரால் வெளியிடப்பட்டவை. இவற்றின் அமைப்பு தனித்தன்மை வாய்ந்தவை. இதில் வரும் பெயர்கள் தமிழருக்கு உரியதாக இருந்ததற்கு. சமகால இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் சான்றுகள் கானப்படுகின்றன என, கலாநிதிபுஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஏலேலணி
பல்லவத்தின் வேந்தனாக ஏலேலன் கி.மு. 151ல் முடிகழனான். கி.மு. 145ல் அநுராதபுரியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் தன்னாட்சியின் கீழ் கொண்டு வந்து. 44 வருடங்கள் நல்லாட்சிபுரிந்தான். சைவ சமயத்தவனான மன்னன். சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்தான். சந்தனகாமத்து காகவந்தீசன் முதலான சிற்றரசர்கள். கப்பம் செலுத்தப். பேரரசனாக ஆண்டான். இலங்கை முழுவதும் நந்திக் கொடி பறந்தது. அநுராதபுரியில் ஏலேலன் சிவன் கோயிலைக்கட்டினான். இவன்மாணிக்கநாதன் மகன் ஆவன். துட்டகாமினியால் இவன் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான். அவன் மருமகன் பல்லவன் 6000 வீரருடன் பல்லவத்திலிருந்து அநுராசபுரிசென்று போரிட்டான். s
உத்திரனி
கி.மு. 101 முதல் கி.மு 40 வரை இவன் ஆட்சி நடைபெற்றுள்ளது. கி.மு.முதலாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்களில் நாகநகர் என்று மணிநாகநகள் (சுழிபுரம்) பெயர் உள்ளது. இவனால் உத்திரன் என்று பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டநாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் நூற்றாண்டுக்குரியவை என்றும் நாகநகர் தமிழ் மன்னனால் வெளியிடப்பட்டவை என்றும், ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏலேலன் மகன் இவனாவன்.
பெருநாகனிர்
உத்திரன்மகன் பெருநாகன் கி.மு. 40ம் ஆண்டளவில் பல்லவத்தின்
- 125

Page 65
பல்லவராச்சியம் அரசு கட்டில் ஏறினான். இவன் பல்லவத்தில் மிகப்பெரியகுளத்தைக் கட்டினான். அக்குளம் நாகநகள் (சுழிபுரம்) தொல்புரம், மூளாய். பொன்னாலை, நெல்லியான் ஆகிய கிராமங்களை எல்லையாக கொண்டது. இவனை புலவர்கள் குளராசா, வாவிராசா என்றும் அழைத்தனர். உடுத்துறையில் கி.மு. முதலாம் நூற்றாண்டுக் குரியதான நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் சடணாகராசன் என்று தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் பெருணாகராசனால் வெளியிடப்பட்டதாக இருக்கலாம்.
இளநாகனி
பெருநாகன் மகன் இளநாகன் கி.மு. பதினான்காம் ஆண்டிலிருந்து 44 வருடங்கள் பல்லவத்தை ஆட்சி செய்தான் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் நாணயங்களில் தசபீடன் என பொறிக்கப்பட்டுள்ளது. இவன் கதிர்காமத்தைச் சேர்ந்த பத்துச் சிற்றரசுகளின் மன்னனாக இருக்கலாம். மகாசாத்தன். மகா ஆய், மகாஉதிவணிகக்குழுவினராக இருக்கலாம்.
நல்ல நாகனி (நல்லியற்கோடனி)
இளநாகன் மகன் நல்லநாகன் புயபலத்துடன் சிறப்புடனும் வாழ்ந்து, தமிழ் புலவர்களை ஆதரித்த பெரும் புரவலன். இதனால் இந்திய தமிழ் புலவர்கள். பாண்டிநாட்டு தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவனிடம் வந்து பாடிப் பரிசு பெற்றுச் சென்றனர். புலவர் நற்றத்தனார் இந்தியாவிலிருந்து வரும் போது பல்லவத்தின் இரு நகரங்களைத் தாண்டி வந்தார். ஒன்று எயிற்பட்டினம் அது பல்லவ அரசனின் காவற்கோட்டையாக தென்னிந்தியாவிற்கும் பல்லவத்திற்கும் இடையில் அமைந்திருந்த எயிற்பட்டினம் நெடுந்தீவுக் கோட்டை ஆகும். அடுத்தது வேலுTர். அங்கெ பெரிய குளத்தில் தாமரைகள் புத்துக்குலுங்கியதாம். அது வேலணை எனப்படுகிறது. நல்லியற் கோடனின் தலைநகள் ஆமூர் ஆகும். அதாவது ஆமையர் என்ற இன்றைய சுழிபுரம் ஆகும். இன்றும் வயல்களில் கட்டுப்பெட்டி ஆமைகள் உலாவுவதைக்காணலாம். பொன்னாமை சுழிபுரத்தில் பிடிபட்டதால், பொன்னாமையூர் எனவும் குறிப்பிடப்பட்டது. இவனது ஆட்சிக்காலம் கி.பி 30ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி. 80°ஆண்டுவரையாகும். சிறுபாணாற்றுப்படையில் அவர் பாடலில் இந்த விபரம் காணப்படுகிறது.
- 126

பல்லவராசசேகரம் "திறல் வேனுதியிற் பூத்த கேணி விறல் வேல் வென்றிவேலூர்”
கி.பி 50இல் கிளடியஸ் என்ற ரோமாபுரியின் சக்கரவர்த்தியின் கப்பல், காற்றால் அடிபட்டு. நாகநாட்டின் மேற்கு கரையிலிருந்த, குதிரைமலையில் கரை தட்டியதாம். அக்கப்பலில் வந்தவர்களை ஆதரித்து. அவர்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு. யாழ்ப்பாண மன்னன், ஆராய்ச்சியினை அவர்களுடன் ரோமிற்கு அனுப்பி வைத்தான் என. காசிச்செட்டி தெரிவித்துள்ளார். எனவே முதலாம் நூற்றாண்டில் புத்தளத்திற்கு சமீபமாகவுள்ள குதிரைமலை. பல்லவ அரசனின் ஆட்சியிலிருந்தது.
(கோடன்-நாகன்)
வில்லி ஆதனி
நல்லியற்கோடன் மகன் வில்லி ஆதன், கி.பி 80ம் ஆண்டில், பல்லவத்தின் அரசனாக சிம்மாசனம் ஏறினான். ஈடு இணையற்ற மிகச் சிறந்த வில்லாளி என்பதால், வில்லி என்ற புகழ் பெற்றவன். ஆதன் இயற்பெயராகும். தரைப்படையும் கடற்படையும் கொண்டு. மிகச்சிறந்த மன்னனாகவும், ஈழத்தின் பேரரசனாகவும் விளங்கியவன். பல்லவம் உணவு உற்பத்தியிலும், ஆடை உற்பத்தியிலும், முத்து, பவளம், யானைத்தந்தம் போன்றவற்றின் வாணிபத் திலும், சிறந்து விளங்கியது. இவனுடையவில்லாண்மை, வீரம். படைபலம் மற்ற நாடுகளுடன் போரிட்டு, வெற்றிவாகை கடவைத்தது. தென்னிந்தியாவுக்குப்படை எடுத்துச் சென்று. களப்பிரர்களையும். சாளுக்கியர்களையும் வென்று. அந்த நாட்டுக்கு. தண்டைமண்டலம் என்று பெயரிட்டு, ஆதன் தண்டைச் சக்கரவர்த்தி என்ற பெயரில் முடிசூடி அங்கிருந்து ஆட்சிசெய்து வந்தான்.
தண்டைமண்டலத்திலும் தனது பல்லவநாட்டுக் கொடியாகிய நந்திக் கொடியையே. கோட்டைமீது பறக்க விட்டான். பல்லவத்தின் அரச முத்திரையே பயன்படுத்தி வந்தான். பல்லவத்தின் நாணயமான நந்திக்காசுகளே புழக்கத் திலிருந்தன. சேர சோழ பாண்டியர்களை வென்று. பல்லவ ஆதன் பல்லவப் பேரரசினைக் காஞ்சியில் அமைத்தான். பல்லவ அரச மரபுகளே தனிடை மனன்டலத்தில் பேணப்பட்டு வந்தது. பல்லவகோட்டை நகர அமைப்பினை. முன்னுதாரணமாகக் கொண்டே காஞ்சிநகரினை அமைத்தான். பல்லவர்களின் நந்திச்சின்னம் அரசர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பல்லவத்தின்
- 127

Page 66
பல்லவராச்சியம்
நாகரிகம் இந்தியாவில் பல்லவ அரசர்களால் பரவியது.
பல்லவ அரசர்கள் இந்தியாவில் பெற்ற போர் வெற்றிகளே, பல்லவத்திற்கு பெரும்புகழை ஈட்டித்தந்தது. பல்லவ அரசர்கள் பல்லவத்திலிருந்து சென்று. பல்லவ இராசதானிஅமைப்பிலே, காஞ்சிநகரினை அமைத்தார்கள் என்ற விபரம். மணிமேகலையில் காணப்படுகிறது.
பாரக வீதியிற் பண்டையோரிழைத்த கோமுகி யென்னும் கொழுநீரிலஞ்சியொடு மாமணிப் பல்லவம் வந்த தீங்கெனப் பொய்கையும் பொழிலும் புனைமீன்னென் றறைந்தார்.
- DeOOf(SuDasebao. ஆதன் தண்டைச்சக்கரவர்த்தியின் பெயர்பிற்காலத்தில், ஆதண்டைச் சக்கரவர்த்தியாக சுருங்கிவிட்டது. இந்தியாவின் முதற் பல்லவ அரசன். ஆதன் தண்டைச் சக்கரவர்த்தியே. இந்தியாவில் தண்டைமண்டலம் தான் தமிழ்நாடு. திராவிடம் என்று மற்ற நாட்டவர்களால் அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழைச் சிறக்க வைத்தவர்கள் பல்லவர்கள் என்பதால் தான், பல்லவநாடு, தமிழ்நாடு, திராவிடம் என அழைக்கப்பட்டது. சேர சோழ பாண்டி நாடுகள் அக்காலத்தில் தமிழ்நாடு என்ற சிறப்பைப் பெற்றிருக்கவில்லை. பல்லவநாடு, தண்டையநாடு. பல்லவதேசம், தண்டைமண்டலம், திராவிடம், தமிழ்நாடு என்ற பெயர்கள் எல்லாம் இந்நாட்டின் பெயர்களாகும். செந்தமிழின், செங்கோலாட்சி செழிப்புற்று விளங்கிய காரணத்தால் தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. காஞ்சி. சென்னைப் பகுதிகளில் செந்தமிழ் பேசப்படவும், செழித்தோங்கவும் தமிழிசை சிறந்து விளங்கவும் வைத்தவர்கள் பல்லவ அரசர்களேயாம்.
ஆந்திராவில் சில இடங்களுக்கு ஈளமுருகு (கிருஷ்ணா)ஈழப்போத்தம் (கரீம்நகர்) லங்கா, ஈளவாரு (தண்டுர்) ஈழபஞ்சிபாகு (நெல்லூர்) லங்காபுரம், லங்கேசுவரம் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. கேரளம், தொன்மா இலங்கை எனப்பட்டது. கேரளத்தின் வடமேற்பகுதிஈழம் என்ற பெயரால் காணப்படுகிறது. கருநாடகத்தில் ஈழத்தூர் (தென்கன்னடம்) ஈழகள்ளி (ஹசன்) என்ற ஊர்களும் உண்டு. தமிழ்நாட்டில் திண்டுக்கல்லுக்கு வடகிழக்கில் இலங்காக்குறிச்சிஎன்ற இடம் உண்டு. தமிழ்நாட்டில் ஈழவுர் (செங்கற்பட்டு, ஈழகிரி(வடஆற்காடு ஈளகிரி (சேலம்), ஈழமலை கோயமுத்தூர்), ஈழக்குறிச்சி (திருச்சி) ஈழத்தூர் (தஞ்சை). ஈழுக்குளம் (திருநெல்வேலி). ஈழத்தூர் (நீலகிரி). என்ற ஊர்கள் உள்ளன.
- 128

பல்லவராசசேகரம் தண்டைமண்டலம், பல்லவநாடு. பல்லாவரம், அளகாபுரி (குபேரன் இமயமலை). திரிசிராப்பள்ளி, கரனுர், வைத்தியநாத ஈச்சரம் (இராவணன்). திருலங்கா (ஆந்திரா) மாமல்லபுரம், ஈழத்தவர்களினாலும் பல்லவர்களினாலும் சூட்டப்பெற்ற பெயர்களாகும்.
இலங்கையில் பல்லவத்தில் காணப்படும் ஊர்ப்பெயர்கள் மலையாள, கருநாடக, ஆந்திர. தமிழ்நாடு மாநிலங்களில் உள்ளன. இங்கிருந்து சென்று குடியேறியோர் தமது பழைய ஊர்ப்பெயர்களை இந்த இடங்களுக்கும் இட்டனர் என, கதிர் தணிகாசலம் தனது இடப்பெயராய்வு நூலில் தெரிவித்துள்ளார். பல்லவமன்னர்கள் காஞ்சியில் பேரரசு அமைத்த காலத்தில் அவர்களாலும், உடன் சென்றபல்லவநாட்டவர்களினாலும் இப்பெயர்கள் வந்தது. குபேரன்.இராவணன், திரிசிரன். கரன்,துடனன். தாடகை, சுபாகு இமயமலை தொடங்கி தென்னிந்தியா வரை ஆண்ட காலங்களில் அப்பெயர்கள் இடபட்டிருக்கலாம். பல்லவர் பேரரசு தென்னிந்தியா முழுவதும் வடஇந்தியாவின் பெரும் பகுதியிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் பல்லவர்களினால் இப்பெயர்கள் வைக்கப்பட்டன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பல்லவர்களின் பலம்மிக்க பேரரசின் ஆட்சிநடைபெற்றுள்ளது. கி.பி. பதின்மூன்றாம்நூற்றாண்டுவரை இந்தியாவில் ஆங்காங்கே பல்லவ அரசர்களின் ஆட்சி இடம்பெற்றிருந்தது. பல்லவ வம்சத்தினருடைய செப்பேடு, பட்டயங்களில் அவர்களுடைய தோற்றத்தினை பல்லவத்துடன் எடுத்துக்காட்டுவதாக பேராசிரியர் செ. கிருஷ்ணராசா குறிப்பிடுகிறார். பல்லவர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவில் தமிழ், சைவத்தின் பொற்காலம் ஆகும்.
usio606bprimar
இவன் கி.பி. 100ம் ஆண்டிலிருந்து கி.பி145ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் மகளான நாகதேவி என்ற இளவரசி சோழமன்னன் கோகிள்ளியை மணந்தான். இவர்கள் மகன் சோழநாகன் என அழைக்கப்பட்டவன். இக்கால நாணயங்களில் சிவலிங்கம். மயில் பொறிக்கப்பட்டுள்ளன. இவன் மகன் வளைவணன் ஆவன்.
வளைவணன்
இவனது ஆட்சிக்காலம் கி.பி. 145 தொடக்கம் கி.பி. 185 வரையாகும்.
س 129 -

Page 67
பல்லவராச்சியம் சீருடனும் சிறப்புடனும் விளங்கிய வளைவனன் வாசமயிலை என்ற இளவரசியை மணமுடித்தான். இவனுக்கு அழகும் எழிலும் கொண்டபீலிவளை என்ற மகள் இருந்தாள் சோழ அரசன் கிள்ளிவளவன் உறவின் காரணமாக பல்லவம் வந்த பொழுது இளவரசி பீலிவளை அழகில் மயங்கித் திருமணம் செய்தான். இவர்கள் மகனான இளந்திரையன் கிள்ளிவளவனுக்கு பின் சோழ அரசனானான். இவனையே முதற்பல்லவ அரசனாகச் சிலர் தவறுதலாகத் தெரிவித்துள்ளனர். சோழன் மகன் சோழனே. அவன் சோழ அரசமரபுகளையே பின்பற்றினான். இவன் பல்லவன் அல்ல சோழனே.
asn'6örfairnram
கி.பி 185ம் ஆண்டு தொடக்கம் கி.பி. 226ம் ஆண்டு வரை இவன் பல்லவ அரசனாக விளங்கியவன். வளைவணன் மகனான இவன் காலத்தில் சோழ அரசுடன் பல்லவம் நட்புடன் திகழ்ந்தது. கிள்ளிவளவன் மைத்துனாக இருந்தபடியால் இவனுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டான்.
வீரநாகனிர்
காலிங்கராசாவுக்குப்பின் அவன் மகன் வீரநாகன் கி.பி 228ம் ஆண்டில் அரசு கட்டில் ஏறினான். இவன் ஆட்சிகி.பி268ம் ஆண்டு வரை இடம் பெற்றிருந்தது
p55$rmraFr
வீரநாகனுடைய மகன் நந்திராசா கி.பி 268ம் ஆண்டு தொடங்கி பல்லவத்தினை ஆண்டு வந்தான். கி.பி 306ம் ஆண்டு வரை இவன் ஆட்சி நிலை பெற்றிருந்தது.
uprGB Dai6npr Lu6öl6O66r
மணிபுரத்திலிருந்து நந்திராசா பரமேசுவரபல்லவன் கி.பி 306ம் ஆண்டிலிருந்து கி.பி348ம் ஆண்டு வரை பல்லவத்தினை ஆட்சி செய்தான்.
LDngs6ergoLLU6r
இவ்வரசன் கி.பி 348ம் ஆண்டிலிருந்து கி.பி 39Oம் ஆண்டுவரை, பல்லவத்தை ஆண்டு வந்தான். பரமேசுவரபல்லவனின் மகனான இவன்,
- 130 م۔

பல்லவராசசேகரம் பெரும் வீரக்கழலினை கால்களில் அணிந்திருந்த காரணத்தினால், மாதண் டையன் என்று அழைக்கப்பட்டான். பல்லவர்கள் வீரக்கழலினை அணியும் வழக்கமுள்ளவர்கள். பெரும் பல்லவன் என்ற பொருளில், போர் வெற்றிக்காக புலவர்கள் மாதண்டையன் என வாழ்த்தினர். அதுவே மார்த்தாண்டன் என்றும் மருவியுள்ளது.
வெற்றிநாகனி
வெற்றிநாகன் மார்த்தாண்டன் மகனாவான். இவன் கி.பி 39oம் ஆண்டிலிருந்து கி.பி 441ம் ஆண்டுவரை மணிபுரத்தை ஆண்டு வந்தான். இதனை உறுதிசெய்யுமாறுபோல, கொஸ்மாஸ் என்ற கிரேக்க எழுத்தாளர். கிபி 5ம் நூற்றாண்டில் நாகதீவில் தனிராச்சியம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்
கழற்சிங்கனி
வெற்றிநாகன் மகன் கழற்சிங்கன் பல்லவமன்னனாக கி.பி. 442ல் முடிகடினான். கி.பி 485ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான்.
இராசசிங்கனி
இவன் கி.பி 485ம் ஆண்டில் பல்லவராச்சியத்தின் வேந்தனாக ஆனான். வடக்கே பெருந்துறைமுகங்களையும். பெரும் வாணிபப் பொருட்களை யும் பெருமளவில் கொண்ட பெருந்துறையும் மணிபுரமன்னன் கொண்டிருந் தான். உலக நாடுகளுடன் வாணிபம் செய்யுமளவுக்கு உற்பத்திகள் பெருகி இருந்தது. பொருளாதாரப்பலம் இருந்தது. உலக வணிகர்கள் கொள்வனவிற்காக வந்து காத்துக் கிடந்தனர் என்றும், கிரேக்க எழுத்தாளரான ஆறாம் நூற்றாண் டைச் சேர்ந்த கோஸ்மாஸ் இண்டிக்கோ புளுஸ்ரஸ், இலங்கையைப்பற்றி விபரிக்கும் போது, இரு அரசர்கள் ஆட்சி செய்வதாகவும். வடக்கே யாழ்ப்பான அரசும் அதன் துறைமுகங்களும் பலமிக்கதாகவும். உலக வாணிபத்தில் செல்வாக்குடன் விளங்கியதாகவும் தெரிவித்துள்ளது. தமிழர் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அவர் மேலும் மணிபுரம், ஊர்காவற்துறை, கோவளம் (சம்புகோவளம்), ஆனைக்கோட்டை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சிறு வள்ளங்கள் மூலமாக, நாட்டின் உட்பகுதிக்கு. துறைமுகத்திலிருந்து பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சம்பு கோவளத்தி லிருந்து மணிபுரத்திற்கு பறாளை வரை, சிறு வள்ளங்களில் பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய, நீர்
- 131 -

Page 68
பல்லவராச்சியம் வழிப்போக்குவரத்து. நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டிலேதான். பல்லவ இராசதாணி மணிபுரத்தி(சுழிபுரம்) லிருந்து சிங்கை நகருக்கு (சங்கானை) மாற்றப்பட்டது.

கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல். கிபி ஆறாம் நூற்றாண்டுவரை உள்ள. இடைப்பட்ட காலத்திற்குரியதாக கண்டெடுக்கப்பட்ட ஈழக் கல்வெட்டுக்கள். சாசனங்கள் எல்லாம். தமிழ்பிராமி எழுத்திலும், ஆதித்திராவிடமொழியின் தமிழ் எழுத்துக்களிலும்தான் காணப்படுகின்றன. இவை அக்காலத்தில். அரசர்களாக இருந்தவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதனால், அக்காலத்தில் தமிழர்களே பெருந்தொகையாக அவ்விடங்களில்வாழ்ந்துள்ளார்கள். அக்காலத்தில் அவ்விடங் களில் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழியே விளங்கியுள்ளது. தமிழ்மன்னர்களின் ஆட்சியே அக்காலத்தில், அவ்விடங்களில் இடம்பெற்றிருந்தது என்பதை உறுதிப் படுத்துகின்றது. கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80க்கும் அதிகமான கல்வெட்டுக்களில் "நாக” என்ற பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்காலத்தில் ஈழத்தின் பல பாகங்களிலும். தமிழ் நாகர்களே ஆட்சி செய்தார்கள் இக்கல் வெட்டுகள், நாக அரசர்களினால் பொறிக்கப்பட்டவையாகும். கிபி55Oம் ஆண்டில் சோபாக்கள் என்ற கிரேக்க வர்த்தகர். இலங்கையின் வடமுனையில் தனியான ஒரு ராச்சியம், தனியாக ஒரு அரசனானல், ஆட்சிபுரியப்பட்டிருந்தது எனக் கூறியுள்ளார்.
இராசபல்லவனி
இராசசிங்கனின் மகனான இவன் கி.பி 527ம் ஆண்டு தொடக்கம் கி.பி 571வரை பல்லவத்தினை ஆட்சி செய்தான் கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளில் "ஈழக்காசு"நம்நாட்டில் புழக்கத்திலிருந்துள்ளது. இவை இம்மன்னன் வெளியிட்ட நாணயங்களாக இருக்கலாம்.
சிங்கை மனினனி இராசசிங்கனி
இராசபல்லவன் மகன் இராசசிங்கன் கி.பி 572தொடக்கம் கிபி 610
வரை இந்நாட்டை ஆட்சி செய்தான். சிங்கன் நகள் என்றுதன் பெயரால் சிங்கை
நகரினை அமைத்து. மணிபுரத்திலிருந்து இராசதானியை மாற்றினான். இவன்
காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில், அவற்றின் சின்னங்களில் தனித்
தன்மை காணப்படுகின்றன. சதுரவடிவம், இரட்டைமீன் சின்னம், மூன்றுமீன்
சின்னம்சிங்கம்பொறித்தநாணயங்கள் காணப்படுகின்றன. மாதோட்ட அரசினை - 132

பல்லவராசசேகரம் பாண்டிய அரசினை. வென்று ஆட்சிசெய்த அடையாளமாக, வெளியிடப்பட்ட நாணயங்களாகும்.
சிறிநாகனிர்
இராசிங்கன் மகன் சிறிநாகனின் ஆட்சிகி.பி 61 தொடங்கிகி.பி 630 வரை நடை பெற்றது. இவன் இந்தியாவை ஆண்ட பல்லவ அரசர்களுடன் நெருங்கிச்செயற்பட்டவன். காசாக்குடி செப்பேட்டில், இவன் நெருங்கிஒத்துழைத்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதன் தண்டைச்சக்கரவர்த்தி காலம் தொடங்கி, பல்லவத்தின் அரசர்களும். தண்டை நாட்டு அரசர்களும், ஒரே குடும்பத்தவர்களாகையினால் ஒன்றாகச் செயற்பட்டு, ஒருவருக்கு மற்றவர் பக்கபலமாக இருந்து வந்துள்ளனர். சிறிநாகன், கதிர்காமம் வரை எல்லையாகக் கொண்டு ஆட்சிசெய்தான். தென்னிலங்கை அரசன்சிறிநாகனுடன் போரிட்டபோது, பல்லவ பேரரசன் சிம்மவிஷ்ணு வந்து தென்னிலங்கை அரசினை வென்றான். எனக் காசாக்குடி செப்பேடு தெரிவிக்கின்றது. தென்னிலங்கை இளவரசன் மான பாதுகாப்புத்தேடிநாகதீவுக்கு வந்துதங்கி, பின்னர் இந்தியா சென்றான் என்பதால், தென்னிலங்கையை விட பலமான பாதுகாப்பானதாக, நாக தீவு அரசாட்சி விளங்கியுள்ளது.
மாணவர்மனி
சிறிநாகன் மகனான இவன் கி.பி 630-668 வரை பல்லவ அரசனாக ஆட்சி செலுத்தினான். கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் சிங்கை மன்னர்களின் நாணயங்களில், இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டிநாட்டின்சின்னமாக உள்ளது இரட்டைமீன். பல்லவர்கள் பாண்டிநாட்டை வென்று ஆட்சிசெய்த காலத்தில், பாண்டியனை வெற்றிகொண்டதைச் குறிக்கும் முகமாக. தாம் வெளிட்டநாணயங்களின், இரட்டைமீன்சின்னத்தினைப் பொறித் தார்கள். தாம் வெற்றி கொண்ட நாட்டின் சின்னத்தையும், தமது வெற்றியைக் குறிப்பதற்காக, தமது நாணயங்களில் சேர்த்துப் பொறித்து வெளியிடுவது, பல்லவ அரச மரபு ஆகும். தண்டை மண்டலத்தில் செங்கோலோச்சிய பேரரசர்களான, பல்லவத்தின் அரசர்களால் இவை வெளியிடப்பட்டவையாகும்.
நந்திவர்மனி
இவன் மாணவர்மன் மகன் ஆவான். கி.பி 669 முதல் 707 வரை சிங்கைநகரிலிருந்து பல்லவத்தினை ஆட்சிசெய்தான்.
- 133

Page 69
பல்லவராச்சியம்
கழற்சிங்கனி
நந்திவர்மன் மகனான இவன் கி.பி 708 முதல் கி.பி 748 வரை
பல்லவத்தின் அரசனாக இருந்தான்.
மல்லன்
இவன் கி.பி 749 முதல் கி.பி 785 வரை பல்லவத்தினை ஆண்டான். சுழிபுரத்தில் வீமராசன் கொல்லையில், இவன் அரசமாளிகை நந்தவனம் இருந்தது. வீமராசா என்றால், மல்லனாக இருந்த அரசன், என்று பொருளாகும். பல்லவர்கள், மற்போரில் புகழ்பெற்றவர்கள். இவ்வரசனே ஆமூர் மல்லன். திசை மல்லன், என்றும் அழைக்கப்பட்டவன். ஆமூர் என்பது ஆமையர் என்றழைக்கப் பட்ட சுழிபுரமாகும். திசை மல்லை என்ற இடமும் சுழிபுரத்தின் குறிச்சியாகும். திசைமல்லையிலிருந்து ஆண்டவன் திசைமல்லன்என அழைக்கப்பட்டிருந்தான். திசைமல்லை இன்று திசமழுவை என மருவிக்கானப்படுகிறது.
உக்கிரசிங்கனி
வீமராசன் என்ற பல்லவமல்லன் மகனான உக்கிரசிங்கன் கி.பி 785 பல்லவத்தின் மன்னனானான். சிங்கைநகள் வேந்தனான இவன் கீரிமலையில் மாருதப்புரவீவல்லி என்ற சோழ இராசகுமாரத்தியைக் கண்டு மனபுரிந்தான். மாருதம்-வாயு. புரவி-குதிரை. ஈகம்-இழுப்பு, வல்லி அவள் பெயர். குதிரைவலி வாயுவினால் பாதிக்கப்பட்ட வல்லிஎன்பதே கருத்தாகும். தமிழ் தெரியாதவர்கள் மாருதபுரவீகவல்லி என்றால், குதிரை முகம் படைத்தவர் என்று. தவறாகப் பொருள் கொண்டனர். இவர்களின் மகன், வரராசசிங்கன் என்ற மன்னனாவன். வீரமுனைப்பிள்ளையார் ஆலயச் செப்பேட்டில்உக்கிரசிங்கன் தலைநகள், கண்டி என்று காணப்படுகிறது. கண்டி என்று குறிப்பிட்டப்பட்டது. சிங்கைநகள் என நா. நவநாயகமூர்த்தி (8.02.96 வீரகேசரி) தெரிவித்துள்ளார். திருக்கோவில் செப்பேட்டிலும், துறை நீலாவனைச் செப்பேட்டிலும், சிங்கைநகள் கண்டி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டி என்றால், நீரை மறித்துக்கட்டித்தேக்கியுள்ள இடம் எனப் பொருள்படும். சிங்கைநகருக்குள் நீரை மறித்துக்கட்டிய, வாவி இருந்துள்ளது. சிங்கைநகள் அரண்மனை இருந்த இடத்திற்கு அருகில், நகர எல்லைக்குள், வாவி இன்றும் உள்ளது. பறாளைவிநாயகர் பள்ளும், பரராசசிங்கன் நகள் கண்டி என்றே தெரிவித்துள்ளது. அன்றைய சிங்கை நகர் தான் இன்றைய சங்கைநகள் என்பதை, இவைமேலும் உறுதிப்படுத்துகின்றன.
- 134

பல்லவராசசேகரம் 6hrma afras6or
சிங்கைநகரில் கி.பி 822ல் பல்லவ மன்னனாக வரராசசிங்கன் முடிதரித்தான். இவ்வரசனால் ஆதிகோணேசர் ஆலயம்4OOவருடங்களுக்குமுன் கட்டப்பட்டது என. திருக்கோணாசலபுராணம் தம்பைநகர் படலம் தெரிவிக்கிறது. வரகுணபாண்டியன் இவனைத்தோற்கடித்தான் எனச் சின்னமனூர் செப்பேடு பகர்கிறது கொல்லப்படவில்லை. பல்லவத்தின் பெருந்தொகையான வீரர்கள் வெளிநாடுகளில் இருந்த பல்லவ அரசுகளை பாதுகாப்பதற்காகத் தாங்க வைக்கப்பட்டதால் பாண்டியனுக்கு சாதகமாக அமைந்தது.
வாலசிங்கனி
வரராசசிங்கன் மகன் வாலசிங்கன் கி.பி 861 ல் சிங்கை மன்னனானான். இவனுடைய ஆட்சி ஈழம் முழுவதிலும் பரவியிருந்தது. கதிர்காமம் இவன் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. உண்ணரசு கிரியில் ஒரு அரசமாளிகை இருந்துள்ளது. வீர்முனைப் பிள்ளையார் ஆலயத்தினைக் கட்டுவித்தான். கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீசுவரர் கோவில் செப்பேடு இதனை உறுதிசெய்கிறது. முனிச்சர கோவிலில் திருப்பணிசெய்துநிலங்களைத் தானமாக வழங்கியுள்ளான். முனிச்சரக் கோவில் பிரதேசறிலங்கள், இவன் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
பல்லவ மன்னன் வாலசிங்கமகாராசா, தன்னாட்சிக் காலத்தில், முனிச்சரம் (சிலாபம்) கோவிலில் திருப்பணிகளை செய்து, குடமுழுக்குச் செய்தான். இவன் தன்னாட்சியின் கீழிருந்த அறுபத்திநான்கு ஊர்களைக் கோவிலுக்கு எழுதிக்கொடுத்தான். அவை - கிழக்கே - வீரபாண்டியம். பிராமணபுரம், கழுவாமடு. தெற்கே - மருதங்குளம், காக்காப்பள்ளி, இரட்டைக்குளம், மணற்குளம், பூக்குளம், தாமரைக்குளம், பொத்துவில். மேற்கே - இரணைவில், சலாபம். வடக்கே - கருக்குப்பனை, மாம்புரி. கோட்டைகாட்டி, குசலை, மானாவாரி, ஆனைவிழுந்தான், தரங்கட்டு, பாலாவி, பூஞ்சோலை, ஆணைஇறக்கம், தொங்கற்காடு. உடப்பு. வண்ணாத்திவில்னு பிரப்பங்குளம், புளிச்சாக் குளம், ஆண்டிமுனை. பூனைப்பிட்டி, ஒற்றைப்பனை. கட்டை க்காடு, கொத்தாந்தீவு. முண்டல், மங்கல வெளி, மதுரங்குளி, பொன்பரப்பிப்பற்று. தேத்தாப்பளை,
- 135 -

Page 70
பல்லவராச்சியம் கற்பிட்டி, சுரிவில். பனையடிக்குளம், மண்டை கொண்டான். தீர்த்தக்கரை, கழுவாமடு, முத்துப்பந்தி, கரைவெட்டி, மருதஞ்சோலை இன்னும் பல.
இவ்விடங்களில் தமிழரே வசித்துவந்தனர். கி.பி 1576ல் போத்துக்கீ சரால் ஆலயம் இடிக்கப்பட்டது. கி.பி1753ல் கண்டி மன்னன் கீர்த்திழுநீராசசிங்கன் மீண்டும் கட்டினான். அயலில். மானாவாரிசிவன் கோவில் அழிந்த நிலையில் இருந்தது. மாயவனாறு அருகில் ஒடுகிறது.
நல்லூர் அரசு வீழ்ந்த பின்னர், கண்டி அரசனின் ஆட்சியின் கிழ் வந்தபொழுதும், அவனும் அதே நிலங்களை தானமாகக் கொடுத்தான். தொடர்ந்தும் கோவிலுக்கு விட்டான்.
இராசசிங்கனி
பல்லவத்தின் மன்னனாக கி.பி 895ம் ஆண்டு முதல் கி.பி 930ம் ஆண்டு வரை ஆட்சிநடாத்தினான். வாலசிங்கன் இவன் தந்தையாவன்.
(3araspirmam
இராசிங்கன் மகன் சேகரராசா கி.பி 93Oம் ஆண்டு தொடக்கம் கி.பி 949ம் ஆண்டு வரை ஆட்சி செலுத்தினான். பராந்தக சோழன் படை எடுத்து வந்து போரிடுகையில் இவன் வீரசுவர்க்கம்புகுந்தான். இறையனார் அகப்பொருள் கோவை நூற் செய்யுள் சிங்கை மன்னன் கொல்லப்பட்ட வரலாற்றினை குறிப்பிடுகின்றது. சோழன் தனது தளபதியை மணிபுரத்தில் ஆட்சித்தலைவனாக நியமித்து விட்டு மணிபுரத்திற்கு கூடிகூடிசோழபுரம்; என்று பெயரிட்டான். பராந்தகன்வன்னிசென்று வென்று புலத்தியநகருக்கு சனநாத மங்கலம், எனப் பெயரிட்டு அங்கு இராசதானியை அமைத்து ஆட்சி செய்து வந்தான்.
இராசசேகரனி
இவன் சோழத்தளபதியை கொன்று பல்லவத்தின் அரசனாக கி.பி 950ல் முடிசூடி செங்கோலோச்சினான்.
இராசசேகரன் பல்லவத்தில் வலிமை மிக்க பெரும்படையை
உருவாக்கியிருந்தான். பல்லவ அரசினைப் பலம் பொருந்தியதாக கட்டி
எழுப்பினான். பாண்டிய சோழர் படைஎடுக்க அஞ்சும் அளவிற்கு, சிறப்பாக ஆட்சி - 136

பல்லவராசசேகரம் செலுத்தினான். பராந்தகன் வன்னி சென்றதும், மீண்டும் பல்லவத்தைக் கைப்பற்றியவன் கி.பி 998ம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான். புலத்திய நகரினை விட்டு, சோழன் மீண்டும் வரவில்லை. வந்தால் இரு அரசுகளும் பறிபோகும் என்பதை அறிந்தான்.
இராசபல்லவனி
இராசசேகரன் மகனான இவன் கி.பி 999ம் ஆண்டிலிருந்து கி.பி 1038ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். சோழன் இராசாதிராசன் கி.பி. 1038ம் ஆண்டில் சிங்கை அரசனைக் கொன்றான். புலத்திய நகள் இராசதானியிலிருந்து தன் ஆட்சியை முழு ஈழத்திற்கும் விரிவுபடுத்தினான். பல்லவத்தில் தன் தளபதிகளை ஆட்சித் தலைவனாக நியமித்தான்.
afnisoasi uprprirarno
காலிங்கராசா என்ற பல்லவமன்னன் சோழத் தளபதியை கொன்று கி.பி1038ம் ஆண்டில் சிங்கை அரசனாக முடிகடினான். சிங்கைப்பரராசா என்றும் காலிங்கனை அழைத்தார்கள். இராசேந்திர சோழனால் கி.பி.1042ம் ஆண்டில் இவன்வீரசுவர்க்கம் சென்றான். அடுத்தடுத்து சோழர்களினால் பல்லவமன்னர்கள் கொல்லப்பட்டதனால் பல்லவ அரசகுடும்பமும், மக்களும் சோழர்களை ஈழத்திலிருந்தே விரட்ட உறுதி பூண்டு செயற்பட்டனர்.
குலசேகரன்
பரராசா மகன் குலசேகரன் கி.பி 1042ல் பல்லவத்தின் ஆட்சியைப் பிடித்தான். சோழர் பல்லவத்தை தாக்கி அழித்ததோடுநில்லாமல், பல்லவத்தின் பொன் பொருள் நவமணிகளை கொள்ளையிட்டு சூறையாடிக் கொண்டு சென்றார்கள். பொருளாதார வளம் குன்றியது. சோழப் பேரரசர்கள் பெரும் படையுடன் கி.பி 949 லிருந்து அடிக்கடி வந்து தாக்கியதால், மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அல்லது கொல்லப்பட்டார்கள். அடிக்கடி ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததால், அரசு பலம் அற்றதாகவும். நிலையற்றதாகவும் நலிவடைந்து காணப்பட்டது. அக்காலத்தில் சோழர்களின் நிலையான ஆட்சி. புலத்திய நகரில் நடைபெற்றுவந்தது. சோழ இராசேந்திரன் கி.பி.1054ம் ஆண்டில் குலசேகரனை சொர்க்கத்திற்கு அனுப்பினான். மணிமங்கலம் சாசனத்தில் சோழர் படை எடுப்பில் மூன்று சிங்கை மன்னர் கொல்லப்பட்டார்கள் என்று உள்ளது.
- 137 -

Page 71
பல்லவராச்சியம்
இராசபல்லவன்.
பல்லவத்தின் அரசனாக கி.பி.1054ம் ஆண்டிலிருந்து கி.பி 1063 வரை குலசேகரன் மகனான இராசபல்லவன் ஆட்சிசெய்தான். அடிக்கடி நடந்த சோழர் பாண்டியர் படை எடுப்புக்களினால், பல்லவ ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழத்தில் இதன் விளைவாகத் தமிழ் மக்களின் தொகை வெகுவாக குறைந்தது. சோழர்களின் மேலாதிக்கத்தினை ஏற்க மறுத்துப் போரிட்டதால் பல்லவத்தின் அரசர்கள் பலர் வீரசுவர்க்கம் அடைந்தனர். சேகரராசா கி.பி 949லும். இராச பல்லவன் கி.பி.1038லும். பரராசா கி.பி 1042லும் குலசேகரன் 1054லும், பல்லவர் படைபணியாது எனப் போரிட்டு இறந்தனர். இவனும் பத்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சிசெய்தான். இராசசேந்திர சோழர் படையெடுப்புக் காரணமாகக் கொல்லப் பட்டான். புலத்தியநகரில் ஒரு மாபெரும் சோழர் படைதரித்துநின்றதால், பல்லவ அரசர்களைக் கொல்வதற்கு உதவியாக இருந்தது.
ஏலேலசிங்கனிர்
சோழப்படைகளைக் கொன்று. சோழர்களை வென்று கி.பி 1064 ல் ஆட்சிப்பீடம் ஏறினான். பல்லவநாட்டில் ஒருநிலையான பலமான நல்லாட்சியை ஏற்படுத்தினான். புயவலிமையும். பொருளாதார பலமும் கொண்டு விளங்கி னான். வருவோர்க்கு வரைவின்றி வழங்கிய வள்ளல். இறவாப் புகழ் பெற்ற மான மறவன். ஆயகலைகள் அறுபத்தினான்கையும் பேணிக்காத்து வளர்த்தவன். கலைஞர்களை ஆதரித்து அவர்தம் கலியினைப் போக்கியவன். ஏலேல சிங்கன் புகழ் இந்தியாவிலும் பரவி இருந்தது. இராசபல்லவன் மகனே
தென்னிந்தியாவில் அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த இராகவன் என்ற குருட்டு யாழ்பாடி தன்வீட்டு வெளித் திண்ணையில் இருந்து யாழ் வாசித்துப் பாடுவான். தெருவால் செல்லும் வழிப்போக்கள்கள். அவன் பாட்டினையும், யாழிசையையும் கேட்டு மகிழ்ந்து இரங்கி அவன் விரித்ததுண்டின் மீது பணம் போட்டுச் செல்வது வழக்கம். அப்பணத்தினைக் கொண்டு அவன் மனைவி உணவு சமைத்துப் பரிமாறுவாள். ஒருநாள் பணம் எதுவும் கிடைக்கவில்லை. இராகவனுக்கு பசி வந்தது. மனைவியை அழைத்து உணவு பரிமாறச் சொன்னான். அவள் அவனைப் பரிகாசம் பண்ணி, உனது இசைக்குடி பாடலுக்கும். ஊரும் யானையும் தருவார்கள் என்று இகழ்ந்தும், இன்று பணம்
- 138 -

பல்லவராசசேகரம் சேரவில்லை. அதனால் உணவு இல்லை என்றும் கடிந்து கொண்டாள். மனைவியின் வெஞ் சொல்லும். அவளிடம் பட்ட அவமானத்தையும் தாங்க முடியாத இராகவன், தமது இசைத்திறமையையும், அதன் வலிமையையும் மனைவிக்கு, உணர்த்த வேண்டும் என்று. கோபத்துடனும், மன வைராக்கியத் துடனும் வீட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் ஒவ்வொரு நாடாகத் திரிந்து பாடினான். ஒரு அரசராவது அவன் இசையை மதித்துக் கேட்கவுமில்லை. பரிசு வழங்கவும் இல்லை. இதனால் மனம் மிக நொந்து போனாலும் இராகவன்தன் நம்பிக்கையை இழக்கவில்லை.
தமிழ்நாட்டுப் புலவர்களினால் பல்லவ அரசர்களின் கொடைத்திறம் பற்றியும். கலாரசனை பற்றியும், அறிந்து படகில் ஏறி பல்லவம் வந்தான். மன்னனைச் சந்தித்து தன் குறையை எடுத்துரைக்க சிங்கைநகள் சென்றான். அரண்மனைப்பணியாளர்களிடம் இராகவன் கூறியதை அவர்கள் அரசனுக்குத் தெரிவித்தார்கள். இராகவன் பார்வை அற்றவன் என்பதால், திரை போட்டு பின்னாலிருந்து அவனைப் பாடவிடுமாறும். தான் எதிர்ப்பக்கத்திலிருந்து அவன் இசையைக் கேட்பதாகவும் கூறினான். மன்னன் வீற்றிருந்தான். திரைக்குப் பின்னாலிருந்து யாழை வாசித்து இராகவன் பாடினான்.
நரைக் கோட்டிளங் கன்று நல்வளநாடு நயந்தளிப்பான் விரைப்பூட்டுதார்புய வெற்பீழ மன்னனென்றே விரும்பிக் கரையோட்டமீதின் மரக்கலம் போட்டுன்னைக்கான விந்தால் திரை போட்டுநீயிருந்தாய் ஏலேல சிங்க சிரோமணியே.
இவன்பாட்டினைக் கேட்டமன்னன் ஆச்சரியப்பட்டான். பார்வையற்ற இராகவன் திரை போட்டிருந்ததை எவ்வாறு அறிந்திருந்தான்? இதனை அறிவதற்காக மன்னன் அம்பு வில் தாங்கிப் போருக்கு செல்லும் வேடத்தில் வந்தமர்ந்தான். இராகவன் தன்னுணர்வால் அறிந்து அதனை பாடினான்.
வாழுமிலங்கைக்கோமானில்லை மானில்லை ஏழு மராமரமுமீங்கில்லை - ஆழி யலையடைத்த வெற்புயத்து வாதித்தாநின்கைச் சிலை யெடுத்தவாறேது செப்பு.
- 139

Page 72
பல்லவராச்சியம்
இராகவன் பாட்டினால் மகிழ்ச்சியடைந்த ஏலேல சிங்கன் திரையைநீக்கச் சொல்லி, என்ன வேண்டும் என வினவினான்? அவன் தனது மனவேதனையையும், தான்பட்ட அவமானத்தையும் கூறி. ஊரும் யானையும், வேண்டும் என்று கேட்டான். மன்னன் பொன்னும், மணியும், ஊரும், யானையும், பரிசாக கொடுத்தான். மணற்றிடர் என்ற அவ்வுபூர். யாழ்ப்பாணனுக்கு பரிசாக வழங்கப்பட்டதிலிருந்து, யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. நாவாந்துறை, பாசையூர், கரையூர்ப்பகுதிகளே அக்காலத்தில் மணற்றிடர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஊராகும். அன்றிலிருந்து அந்நிலம்பாணர் குடும்பத்தவருக்குச் சொந்தமாக இருந்து வந்தது. அங்கே வீடு கட்டி, ஆனையையும் கட்டி மனைவியையும் அழைத்து வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தான். இதனால் சிங்கைநகர் பல்லவ மன்னர்களின் மதிப்பும் புகழும் வேகமாகப் பரவியது. சோழர்களை வென்று ஈழத்தையும் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான்.
யாழ்ப்பாணபட்டினத்தில் அக்காலத்திலிருந்து. பாணர் குடும்பங்கள் மட்டுமே, வாழ்ந்து வந்தன. மன்னர் ஆட்சி போனபின் 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் யாழ்ப்பான பட்டினத்தில் கோட்டை கட்டி, பறங்கியரே. முதலில் தமது அரசுக்கு. யாழ்ப்பாணராச்சியம் என்று பெயரிட்டு வழங்கிவரலானார்கள். அதன் பின் குடாநாடு முழுவதும் யாழ்ப்பாணக்குடாநாடு என அழைக்கப்பட்டது. செம்மண்நிறைந்த யாழ்மாவட்டம் முழுவதையும், மணற்றிடர் என்று. தவறாக எண்ணினார்கள். பணிணைக் கடலை அடுத்துள்ள பிரதேசத்தினை யாழ்ப்பாணனுக்கு வழங்கியதாக புலவர் பொ.ஜெகனாதன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணனுக்கு கொடுக்கப்பட்ட நிலம் பாசையர் கரையர் தான் யாழ்ப்பாணப்பட்டினம் என அழைக்கப்பட்ட தாக செ. இராசநாயகம்
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணனுக்கு அரசனென்னும் பட்டம் கட்டி வைத்ததுமன்றி. பொன்பற்றியர் பாண்டி மழவன். இந்தியா சென்று சோழராச குமாரனை. பாண்டியராசகுமாரனை கொணர்ந்து அவனுக்குமுடிசூட்டிவைத்தான் என்னும் புரட்டுக்கதையை சரித்திர ஆசிரியர்கள் கட்டிவிட்டார்கள் என செ.இராசநாயகம் தெரிவித்துள்ளார். சிங்கை ராச்சியத்திற்கும், நல்லுர் ராச்சியத்திற்கும் அப்பெயர்களை குறிப்பிடாது. யாழ்ப்பாணராச்சியம் 13ம் நூற்றாண்டில் தோன்றியதாக, ஒரு வித மலைப்பினை மயக்கததினை, மாறாட்டத்தினை * ஏற்படுத்திவிட்டார்கள்.
- 140

பல்லவராசசேகரம் uprimarafriassir
ஏலேலசிங்கன் மகன் பரராசசிங்கன் என்ற வீரவேந்தன்காலத்திலும் ஈழம் இவன் ஆட்சியின் கீழ் இருந்தது. கவிவீரராகவன் ஆரூர் உலாவை பரராசசிங்கன் மேல் பாடினார்.
புவியோ பெறுந்திருவாரூருலாவைப் புலவர்க் கெல்லாஞ் செவியே சுவை பெறுமாறு செய்தான் சிவஞான வனு பவியே யெனுநங்கவிவீரராகவன் பாடியநற் கவியே கவியவனல்லாத பேர் கற்கவியே
த.நா.ச பொங்கு மிடியின் பந்தம் போயதே யென் கவிதைக் கெங்கும் விருது பந்த மேற்றதே - குங்குமந்தோய் வெற்பந்தமான புயவீர பரராசசிங்கம் பொற் பந்த மின்றளித்த போது
த.நா.ச
புயவீரபரராசசிங்கன் ஆரூர் உலாவைக் கேட்டு பொற்காசுகள் யானை பரிசளித்தான் என்றும் காணப்படுகிறது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1096ம் ஆண்டு தொடங்கிகி.பி. 140ம் ஆண்டு வரையாகும். இந்தியாவிலே தனது வீட்டு வாசலில் அந்தக்கவியானையைக் கட்டிவைத்தான். இதனை அறிந்தபுகழேந்திப் புலவர் தாமும் சிங்கைநகர் சென்று மன்னனைப் பாடி பரிசு பெற விழைந்தார். இந்த மன்னன் கண்டியிலிருந்து அரசாண்டதாக பறாளை விநாயகர் பள்ளு என்ற நூல் தெரிவிக்கிறது. வீரமுனைப்பிள்ளையார் கோயில் செப்பேடு. திருக்கோவில் செப்பேடு, துறை நீலாவனைக் கோயிற் சாசனம் எல்லாம் சிங்கை நகரினை கண்டி என்றே குறிப்பிட்டுள்ளன. யாழ்ப்பாணக்குடாநாட்டினை கண்டிநாடு என்று பன்னிரண்டாம் பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் அழைத்துள்ளனர்.
இராசசேகரனி
பரராசசிங்கன்மகன் இராசசேகரன் கி.பி140ல் பல்லவத்தில் அரசனாக முடிகடினான். இராமேசுவரம் முன்பு சிங்கை மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. அதனைச் சோழப் பேரரசர்கள் கைப்பற்றி பிராமணர்களைத் தமக்குக்கீழ் சிற்றரசர்களாக நியமித்தனர். அவர்களைச் சேதுபதிராசாக்கள் என்று அழைத்தனர். சோழர்ஆட்சிஈழத்தில் முடிவுக்கு வந்தபின்னரும் இராமேசுவரம்
- 141 -

Page 73
பல்லவராச்சியம் சோழர் ஆட்சியில் இருந்தது. இராசசேகரம் இராமேசுவரத்திற்கு படை எடுத்துச் சென்று சேதுபதிராசாவை வென்று மீண்டும் சிங்கைநகள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் இவன் புகழ் சேர சோழ பாண்டிய, தொண்டைமண்டலங் களிலும் பரவியது. புகழேந்திப்புலவர்சிங்கைநகள்வந்து இம்மன்னனை புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாக தமிழ் நாவலர்சரிதை தெரிவிக்கிறது. அவர் பாடல்.
பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப்படி புரக்குங்காவலர் நிற்கும்படி வைத்தவர் கண்டியொன்பதிலும் மேவலர் மார்பினுந் திண்டோளினுஞ் செம்பொன்
- மேருவினுஞ் சேவெழுதும் பெருமான்சிங்கையாரிய சேகரனே.
தமிழ்நாட்டுப்புலவர்களும் தம்கலிதீர தேடிவந்து பாடிப்பரிசு பெற்றுச் சென்றார்கள் என்றால் சிங்கைநகர் வேந்தர்களின் தமிழ்ப்பற்றும். கொடைக்குணமும் இறும்பூதெய்த வைக்கிறது. இராசசேகரன். சேதுபதிகளான ஆரிய பார்ப்பனர்களை வென்றதால், சிங்கை ஆரிய சேகரனே எனப் புகழ்ந்த புகழேந்திக்கு. ஆயிரம் பொற்காசுகளும் ஒரு யானையும் பரிசளித்தான். சேதுவை வென்றதால் நாணயங்களில் இராஜசேகரன் சேது என்றும் பொறித்தான். மன்னரின் உருவப்படங்களையும் நாணயத்தில் பொறிக்கும் வழக்கம் இவன் காலத்தில் ஏற்பட்டது.

இராசசேகரன் இறந்த பொழுது புகழேந்திப் புலவர் மனம் வருந்திப்பாடியபாடல்,
அஆவிதியோ வடலாரியர் கோமான் எஏவலரா லிழந்த நாள் - ஒஓ தருக்கண்ணிலுங் குளிர்ந்த தண்ணளிதந்தாண்ட திருக் கண்ணினுஞ் சுடுமோ தீ பேராசிரியர் செ. கிருஷ்ணராசாவால், ராசசேகரன்வெளியிட்டநாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், நந்திஇடதுபுறம் நோக்கிபடுத்திருப்பது போன்றும், அதன். முன் வலதுகால் சற்று நீட்டிக்கப்பட்ட முறையில் மடிந்து காணப்படுகிறது. நீட்டுப் போக்கான நந்தியின் பருத்த ஏரிப்பகுதி காணப்படுகிறது சிறப்பம்சம். நந்தியின். முன்னும் பின்னும். இருகுத்து விளக்குகள். நந்தியின் மேல் நீண்ட பிறை, நந்திக்கு கீழ் மூன்று இணை கோடுகள் காணப்படுகின்றன. நாணயத்தின் பின் பக்கத்தில். வரிவடிவ இரண்டு வரிகளில் காணப்படுகின்றன.
- 142

பல்லவராசசேகரம் எழுத்துக்களுக்கு கீழே, புள்ளிகள் ஒரே சீராக இடப்பட்டுள்ளன. சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் நாணயம் என்றும், முதன்முதலாக, அவர்களாலேயே அவ்வகை நாணயம் வெளியிடப்பட்டது எனவும். ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார். அதில் முரீ ராஜசேகர என்று காணப்படுவதால், சிங்கை அரசன் ராசசேகரன் கி.பி1250க்கு முன்னர் வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராசசேகரன்தான் அந்த நாணயத்தை வெளியிட்டவன். பிறை சைவர்களினால் வணங்கப்படும்சிவன் தலையில் அணிந்த சின்னமாகும். மூன்று கோடுகளும் திருநீற்றுக் குறிகளை குறிக்கின்றன. இடபம் சிவன் கொடியாகும். குத்து விளக்குகள் மங்கலச் சின்னங்கள் ஆகும். ஆகவே இவன் ஒரு சிவநெறியாளன். சிவன் மேல் அளவற்ற அன்பு பூண்டவன் எனலாம். இரத்மலானை திருநந்தீச்சரம் என்ற சிவாலயம் பல்லவர்களினால் கட்டப் பெற்றதால் ராசசேகரனால் மீண்டும் கட்டப்பெற்றதாக இருத்தல் வேண்டும். ஆய்வாளர்கள் கி.பி. 11ம், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
GarFasrmraromr urrmragFafnas6r
இராசசேகரன் மகன் பரராசசிங்கன் கி.பி176ல் பல்லவ மன்னனாக, சிங்கைநகரில் சிம்மாசனம் ஏறினான். இவனது காலத்திலே. பெரும் பஞ்சம் வந்தது. அப்பஞ்சத்தைப் போக்குவதற்காகச் சடையப்ப வள்ளல் ஆயிரம் கப்பல் நெல், பரராசசிங்கனுக்கு அனுப்பி வைத்தார். அதனைப் பற்றி சோழமண்டல சதகம் என்று நூலில் காணப்படும் பாடல்.
தேனார் தொடையார் பரராசசிங்கப் பெருமான் செழுந்தமிழுக்குக் கானார் நெல்லின் மலை கோடி கண்டிநாடு கரைசேரக் கூனார் கப்பல்லாயிரத்திற்கொடு போயளித்த கொடைதடக்கை. மானகரன் சங்கரன் சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே” இதிலே வரும் கண்டிநாடு எனப்படுவது சிங்கை நாடு ஆகும். அக்காலத்தில் மலைநாட்டில் கனன்டிநகள் நிர்மாணிக்கப்படவில்லை.
விசயகாலிங்கச் சக்கரவர்த்தி
காலிங்கன் சிங்கை அரசனாக கி.பி1210ம் ஆண்டில் முடிதரித்தான்.
செகராசா மகனான இவன், ஒரு போர்ப்பிரியன். தென்னிலங்கை சிற்றரசர்களை
வென்று வாகை கடினான். இதனால் விசயகாலிங்கச் சக்கரவர்த்தி என்று.
- 143

Page 74
பல்லவராச்சியம் புலவர்களால் புகழப்பட்டான். விசய-வெற்றி காலிங்கன் - நாகன், சக்கரவர்த்திபேரரசன். மாகோன் என்று பொருளாகும். பல்லவத்தில் தொடர்ச்சியாக.நாக அரச மரபினர் ஆண்டுவந்துள்ளனர். காலிங்கனுக்கும் கலிங்கனுக்கும், வேறு வேறு பொருளாகும். காலிங்கனை தவறாக கலிங்கன் என எழுதினர். கலிங்கன் 1215ல் கலிங்கத்திலிருந்து வந்தான் என குறித்தனர். பொதுவாகப் பல்லவ அரசர்களை இந்தியாவிலிருந்து வந்தவர்களாக காட்ட முயன்றுள்ளனர். பல்லவ அரசர்கள் எல்லாரும் நாகரிகத்தில் மேம்பாடடைந்தநாகர்களாவர். தனக்கு திறை செலுத்திய சிற்றரசர்களை ஆள்வதற்கு அனுமதித்தான். பல்லவத்தின் மன்னனாகவும் ஈழநாட்டின் பெருங் கோன் ஆகவும் சைவசமயத்தின் காவலனாகவும் தமிழ் மொழியை பாராள வைத்தும் மாமன்னனாக திகழ்ந்தவன் விசயகாலிங்கன்.
வலிகாமம், தெமிளப்பட்டினம் இவன் படைகள்இருந்தன. ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் தமிழர்கள் இருந்தார்கள். சிங்கைநகள், மகாகமம், புலத்தியநகள் பெரும்படைத்தளங்கள் இருந்தன. மாகோன்மணிபுரத்தில் இருந்து தோப்பாவையைக் கைப்பற்றி, கதிர்காமத்திலும் விஜயதுவீபகத்திலும், இராமேசுவரத்தையும். இலங்கையோடு சேர்த்து ஆண்டான். புலியமாறன் மந்திரியாயிருந்து. ஊரில் செங்கல்லால் கோட்டை சுகதிரனுக்கு, கொடுத்தான். சிங்கைநகரிலிருந்த பரராசசேகரனும், பராக்கிரமபாகுவும் விஜயகாலிங்கன் கீழ் இருந்த சிற்றரசர்களே. வெற்றிநாகன் என்ற விஜயகாலிங்கன் சிங்கைநகர் அரசவம்சத்தில் வந்தவன். உக்கிரசிங்கனின் உறவினன் என்று. வையாபாடல் தெரிவிக்கிறது.
இராஜரட்டைப்பகுதியில் பெரும்பான்மையினராக தமிழர்கள் இருந்தனர். படையெடுத்து வந்த தமிழர்களிற்கு ஆதரவு நல்கினர் எனப் சததர்மரட்னாகாரயறுால் தெரிவிக்கிறது. ராசரட்டை, மாயரட்டை உறுகுனரட்டை மூன்றினையும் வென்றதால் திரிபுவனச் சக்கரவர்த்தி என புகழப்பட்டான். மாகோன் சைவசமயத்தினை ஏற்க வைத்தான். சைவக்கோவில் திருப்பணி களை நிறைவேற்றினான். சைவர்களையே பூசை செய்வதற்கு நியமித்தான். மாகோனின் பாண்டிய, சோழ, சேரன் வீரர்கள். மணிபுரத்தில் வந்திறங்கி உள்ளனர்.
மூன்றாம் விஜயபாகு தமது மகன் இரண்டாம் பராக்கிரமபாகுவுக்கு” வழங்கிய அறிவுரை "தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக வாழவேண்டும்.
- 144

பல்லவராசசேகரம் U6b6b6lignöálujLb சிங்கைநகள். விசயகாலிங்கன் படைத்தளங்கள், ஆட்சிமனைகள் இருந்த இடங்கள்
○ ့် အိုရုံ 13ம் நூற்றாண்டு நன்றி - மாகோன்
ہیمبرج சிங்கை நகர் sarruga, fersion? .
6) Jalong
ખ્રિાઉઝિએ مرج منهما இருப்ளக் -sno
༤ཛོད་ டுஃைடி
على الترميتي بسط
مساکہنا
லிபி. GY vص'
நிசிகோ 8ܝܐܗ
ماتالونداسلام کامی
متصانیف
@@@ht
| !ဒဏိ!--၏) . عثمانہ ہی
4ộm til As op- * കമ്: ടൂം السينية عنه، وفروع الثدي لم نائم
GG-ré? Langశrtan
* okégéနှ၏ဒါယ* حط شمو86ر \
uتھمه
ઉઠત... ; (2)

Page 75
பல்லவராச்சியம்
தமிழர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்கள். ஆகையால் அவர்களுடன் யுத்தத்தில் இறங்கக் கூடாது" என்பதாகும். தமிழர் அக்காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சிலாபம், முன்னேசுவரம் மாகோனின் ஆட்சிக்குட்பட்டி ருந்தது. இலங்கை முழுவதும் மாகோனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதனால் திராவிட சால்புகளும், சைவசமய பழக்கவழக்கங்களும், எல்லா கிராமங்களிலும் வேரூன்றின. மட்டக்களப்பு பகுதியிலே, மாகோன் வகுத்த வெள்ளாளர் வன்னி மைகள், இன்றும்நிலைத்துநிற்கின்றன என்று. க.தங்கேசுவரிதெரிவித்துள்ளார். பதினான்கு குடித்தொழில்களும் அங்கு காணப்பட்டுள்ளன.
சம்புகோவளம், ஊராத்துறை, பிறநாட்டு வணிகர்களின் கப்பல்களின் வாணித்துறைமுகங்களாக. மாகோன் காலத்தில் விளங்கின. என்று நாக பூஜாவலிய நூல் தெரிவிக்கின்றது. மாகோன் படையில் 24000 போர்வீரர்கள் இருந்தார்கள். சிங்கள மன்னர்கள் பலர் ஒன்று சேர்ந்து. பலமுறை முயன்றும் முறியடிக்க முடியவில்லை. அவன் ஆட்சியில் திணறினார்கள். கலிங்கவம்ச அரசர்களையும் கலங்கடித்தான். 1215 - பொலநறுவை அரசனை வென்றான். அங்கிருந்து இலங்கை முழுவதையும் 44 வருடங்கள் ஆட்சி செலுத்தினான். விசயகாலிங்கச்சக்கரவர்த்திஎன்று போற்றப்பட்டான். சிங்கள நூல்களில் இவனை விஜயபாகு என்று குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் சுதந்திரமானதமிழ் அரசின் ஆட்சியை மாகோன் அமைத்தான்.
இவன் படைகள் ஊராத்துறை, காங்கேசன்துறை, சிங்கைநகர், இலுப்பைக்கடவை. கோட்டையாறுபுரம், திருகோணமலை, கந்தளாய், பெரியகுளம், மன்னார், மாதோட்டம், புலத்தியநகர். கொலம்பகலா (கொழும்பு), மகாகம ஆகிய இடங்களில்கோட்டை கொத்தளங்களுடன்நிலை பெற்றிருந்தன. சூளவம்சம் புலத்தியநகரை தலைநகராகக்கொண்டு ராஜரட்டை முழுவதையும் ஆட்சிசெய்தான். மாயரட்டையிலும் இவன் ஆட்சி விரிந்திருந்தது எனத் தெரிவிக்கிறது. கொத்மலை, தம்பதெனியா, வத்தளை, களனி, அத்தனகலை, இடங்களிலும், இவன் ஆட்சி இருந்ததைச். சூளவம்சம் குறிப்பிடுகிறது. காலக்கிரமத்தில் மாகோன் படையில் 44OOO வீரர்கள் இருந்தார்கள். இவனுடைய சிற்றரசனாக திரிகோணமலையிலிருந்த அரசாண்ட குளக்கோட்டனி (ஜெயவாகு)டம் 40,000 படைவீரர்கள் இருந்தார்கள். இருவரும் தமிழரசர்கள்
س 146 -

பல்லவராசசேகரம் என சூளவம்சம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கவுதிலு, பதிவியா. குருந்தன்குளம், மானாமட்ட, புலச்சேரி, கந்தப்புலு, மாட்டுக்கொனா (தமிழ்ப்பட்டினம்), கொழுது, முரீபா தொட்ட மண்டலி ஆகிய இடங்களில் இவன் படைநிலைகள் இருந்ததாக நிக்காயசங்கிரக தெரிவிக்கிறது.
மாகோனை திராவிடராஜா, தெமிளராஜா என்றே சூளவம்சம் சிங்களநால் குறிப்பிடுகிறது. அவனைக் கலிங்கன் என்று தமிழ் ஆய்வாளர்கள் சிலர் கூறுவது தவறாகும். கி.பி1256இல் பராக்கிரமபாகு II, புவனேகபாகு, வீரபாகு, விஜயபாகு IV ஆகிய மூன்று அரசர்களும் ஒரு இளவரசனும் மூன்று பாண்டியர்களும் சேர்ந்து மாகோனுக்கு எதிராகப் படைநடாத்தினர். மாகோன் காயமடைந்தாலும் வெற்றிபெற்றான். மாகோன் அவனது கை வெட்டுப்பட்டதால் கூழங்கைச்சக்கரவர்த்திஎனக் அழைக்கப்பட்டான் என கருத இடமுணடு. மூன்று பாண்டியர்களான சடையவர் மண் சுந்தரபாண்டியன். 1ம், சடையவர்மன் வீரபாண்டியன், 2ம், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் 2ம் பராக்கிரம பாகுவின் வேண்டுகோளின்பேரில் சேர்ந்து போர் புரிந்தனர் என மாகோன் வரலாறு குறிப்பிடுகிறது.

மாகோனை, கலிங்கன் என்று. தவறாக கணித்துள்ளனர். மாகோன் படையில் ஒரு கலிங்கவீரன் கூட இருக்கவில்லை. கலிங்கர்கள் மொழி தமிழாக இருக்கவில்லை. கலிங்கர்கள் இலங்கையில் புத்தசமயத்தையும் பாளி மொழியையும் புகுத்தினார்கள். ஆனால் மாகோன் பேரரசன்) சைவசமயத்தை யும் தமிழ் மொழியையும் பேணி அரசாட்சிபுரிந்தான். தமிழ் வீரர்களே அவன் படையில் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே. உண்மையாகும். தென்னிந்தியாவிலிருந்து எவ்வித உதவிகளும்பெறாமலே மாகோனுடைய ஆட்சி மிகநீண்டகாலம்நிலவியது என. ராஜரட்ணாகாரய. சத்தர்மரட்னாகரயநூல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்த கலிங்க மன்னர்களோ, அவர்களின் உறவினர் களோ மாகோனுக்கு ஆதரவளிக்க வில்லை. மாகோன் கலிங்கன் இல்லாத படியால் கலிங்கரின் ஆதரவுகிடைக்கவில்லை. மாகோன்காலிங்கனே, காலிங்கன் என்றால் நாகன். சிங்கைநகர நாகப்பெருங்கோன் என்பதையே காலிங்க மாகோன் என்று குறிப்பிட்டுள்ளார்கள். சிங்கை வேந்தன் இல்லை என்று திரிபு படுத்தியுள்ளர்கள். அதுபோல, ஜெயவாகுஎன்றகுளக்கோட்டன்.திரிகோணமலை
- 147

Page 76
பல்லவராச்சியம் மன்னன் ஆவான். அவன் சோடகங்கனும் அல்ல. இந்தியாவிலிருந்த வந்தவனும் அல்ல.
கி.பி1256ல் பாண்டியர்கள். சிங்கைநகரினைத்தாக்கி குலசேகரனை தோற்கடித்தபடியால், விசயகாலிங்கன் சிங்கை நகர் சென்று. பாண்டியர்களை வென்று. ஒடஒடவிரட்டினான். உடல்தளர்ச்சிகாரணமாக பின்சிங்கைநகரிலேயே தங்கிவிட்டான.
uprgrmarm'
காலிங்கச் சக்கரவர்த்தி, தான் புலத்தியநகரில் முடிசூடியபோது, சிங்கைநகரில் தனது தம்பியாகிய பரராசாவை, கி.பி1215ல் பல்லவ அரசனாக நிலைப்படுத்தினான். காலிங்க மாகோன், காலிங்க பேரரசன் எனவும் அழைக்கப்பட்டான். காலிங்கனின் மேலாண்மையின் கீழ் பரராசா கி.பி1224ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவனை சுந்தரபாண்டியன் கொன்றான். பாண்டியன் சோழனுடன் சேர்ந்து, பல்லவம் வந்து போரிட்டான்.
ஜெயதேவனி
கி.பி1224ல்நாக அரசகுடும்பத்தினைச்சேர்ந்த ஜெயதேவன், காலிங்க மாகோனால் சிற்றரசனாக நியமிக்கப்பட்டான். இவனும் பாண்டியனால் கி.பி1246ல் கொல்லப்பட்டான்.
விசயகாலிங்கன், தன் மகன் குலசேகரனை, கி.பி. 1246ல் பல்லவத்தின் அரசனாக முடிகட்டினான்.
விசயகாலிங்கன் புலத்தியநகரில் அரசாண்ட காலத்தில், சிங்கை நகரிலிருந்து புலத்திய நகர் வரை, பெருந்தெருவை பல்லவத்தின் கிழக்குக் கரையோரமாக, நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, வண்ணான் குளம் ஊடாக அமைந்திருந்ததான். இவ்விடங்களில் காவற்தளங்கள் அமைந் திருந்தன. காலிங்கப்பேரரசனின் கோட்டைகள், புலத்தியநகள் (பொலநறுவா) புலைச்சேரி (பூநகரி), கோட்டையாறுபுரம் (மூதூர்), கந்தளை, கந்தப்பளை நுவரெலியா) குருந்து குருநாகல்). பதவியா (வன்னி). மாதுளேன (மாத்தளை) தமிழ்ப் பட்டினம் (சிங்கநைகர்), ஊராத்துறை, கோமுது, மன்னார், மீபதொட்ட மண்டலி. கொலன்துவர (கொழும்பு) மகாகம (மாகமை கதிர்காமம்). ஆகிய
- 148

பல்லவராசசேகரம் இடங்களில் இருந்தன. சைவர்களான தமிழர்களை துன்புறுத்தல்களிலிருந்தும், பெளத்தர்களின் ஒடுக்குதல்களிலிருந்தும் காப்பாற்றினான். அவன் படையில் தமிழர்களே இருந்தனர்.
குலசேகர சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
விசயகாலிங்கன்மகன்குலசேகரம், கி.பி.1246ல்சிங்கநகரில்ஆட்சிபீடம் ஏறினான். பேரரசனாக, புலத்தியநகரில் அரசாணட தந்தையால் முடிசூட்டி வைக்கப்பட்டான். வீரமும், துணிவும் மிக்க சக்கரவர்த்தியாக விளங்கியவன். இராமேசுவர சேதுபதி மன்னர்களை வென்று, மீண்டும் பல்லவத்துடன் இணைத்தான். அந்த வெற்றியைப் பாராட்டி புலவர்கள். சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்று புகழ்ந்து போற்றினார்கள். சேதுவை வென்றதை கொண்டாடு முகமாகத் தங்கள் நானயங்களில் "சேது" என்ற பெயரையும் பொறித்தான். தந்தை. தென்னிலங்கை அரசர்கள் எல்லாரையும் வென்று. விசயகாலிங்கச்சக்கரவர்த்தியாக புலத்தியநகரிலிருந்து ஆட்சிசெய்தவேளையில், மகன் குலசேகரன், சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்ற பெயருடன், சிங்கை நகரிலிருந்து ஆட்சிசெய்தான். இக்காலத்தில் இவன் வெளியிட்டநாணயங்களில், முற்பக்கம்மன்னரின் உருவப்படமும், பிற்பக்கம்நந்தியும் காணப்படுகிறது. வேறு நாடுகளில், மன்னரின் உருவம் பொறித்தநாணயங்கள் பிழக்கத்திற்கு வருமுன். சிங்கை அரசர்கள் தங்கள் உருவப்படத்தினை. தாம் வெளியிட்டநாணயங்களில் பொறித்துள்ளார்கள். *
பாண்டியர்கள். பிராமணர்களை சேதுபதிமன்னராக நியமித்தார்கள். ஏற்கனவே விசயகாலிங்கன் புலத்திய நகரில் சக்கரவர்த்தியாக இருந்ததினால், அதே நேரத்தில் மகன் குலசேகரமும் சக்கரவர்த்தியாக இருந்துள்ளதை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே. இராசதானி பெயரான சிங்கையையும், ஆரியரான பிராமண மன்னனை வென்றதால், ஆரியச்சக்கரவர்த்தி என்றும் அவன் பெயருடன் சேர்த்துப், புலவர்கள் குலசேகரசிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என இவனைப்பாரட்டிக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றானும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டேயார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை என்றதற்கிணங்க குலசேகரம்புகழை மறைக்கவோ, குலசேகர இராசபரம்பரையினரின் ஆட்சியை நிறுத்தவோ முடியாது என்பது நிரூபணமாகிறது. தங்களின் மேலாட்சியின் கீழ் இருந்த பிராமணச் சேதுபதியை வென்று. இராமேசுவரத்தை குலசேகரம் கைப்பற்றியதால், ஆத்திரமடைந்த
- 149 -

Page 77
பல்லவராச்சியம் மன்னன் சுந்தரபாண்டியன், பெரும்படை திரட்டி வந்து உக்கிரமாக போரிட்டு. கி.பி.1256ல். பல்லவவேந்தன் குலசேகரனை தோற்கடித்தான். இதனை அறிந்து தந்தை விசயகாலிங்கன். புலத்திய நகரிலிருந்து படைநடத்திவந்து, கடும் போர் புரிந்து, சுந்தரபாண்டியனை தோற்று ஓடவைத்தான். இதனால் சேது தொடர்ந்தும் சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழ் இருந்துவந்தது. விசயகாலிங்கன் பல்லவம் வந்தபின். மீண்டும் புலத்தியநகரை பாண்டியரும் தென்னிலங்கை அரசர்களு மாக கைப்பற்றினர். அதனால், விசயகாலிங்கச் சக்கரவர்த்தி பல்லவ சிங்கை நகரிலிருந்து மேலாட்சி நடத்தினான். 1259ல் மீண்டும் சடாவர்மன் 2ம் வீரபாண்டியன். ஏனைய சிற்றரசர்களையும் சேர்த்து பெருஞ்சேனையுடன் வந்து போரிட்டான். பல்லவ அரசர்கள் பலமாக இருந்த காலத்தில், தென்னிந்திய சேர சோழ பாணர்டிய அரசர்களை வென்று. அங்கு பேரரசு காஞ்சியில் அமைத்திருந்தார்கள். பல்லவர்களைப் பலவீனப்படுத்தி, தமக்கு எதிராக படை எடுக்காத நிலைக்குத் தள்ளவே, தென்னிலங்கை அரசர்களுக்கு, பாண்டிய அரசர்கள் உதவினார்கள். 11ம் நூற்றாண்டில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கள்ளத்தோணியாக வந்தவர்களுக்கு தஞ்சம் கொடுத்தார்கள். என்நாட்டில் ஆட்சி நடாத்த முடியாது. கொழும்புக்கும் காலிக்கும் இடையில் தமிழருடன் சேர்ந்து சிங்களவர் வாழ எல்லை வகுத்து இருக்கவிட்டான். கி.பி.1948 வரை மாகோன் எல்லை பேணப்பட்டு வந்தது.
கி.பி1259ல் நடந்த போரில், சிங்கமெனச் சீறிப்பாய்ந்து உக்கிரமாகப் போராடிய காலிங்கச் சக்கரவர்த்தி கொல்லப்பட்டான். பெருமளவு செல்வங்களை வீரபாண்டியன் கொள்ளையடித்துக் கொண்டு. திரிகோணமலை சென்று. கோணேசர்கோவிலில் இரட்டைக்கயல் பொறித்து. தமது வெற்றியை அடையாளப்படுத்தி, திரிகூடகிரியில் தமது இரட்டைக்கயல் கொடியையும் பறக்கவிட்டான். திரிகோணமலை அக்காலத்தில், சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் ஆட்சியில் இருந்தது. குலசேகரம் மீண்டும் போரிட்டு. வீரபாண்டியனை தென்னிந்தியாவிற்குத் துரத்தியடித்தான். தொடர்ந்தும் கி.பி1262ம் ஆண்டுவரை, குலசேகரன் திறைபெற்று பேரரசனாக இருந்து ஆட்சி செலுத்திவந்தான்.
குலோத்துங்க சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
குலசேகரன் மகன் குலோத்துங்கன், கி.பி. 1262ல் சிங்கைநகரில், ஆரியச்சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் பேரரசனாக முடிதடினான். நாட்டின் வெள்ளாமையைப் பெருக்கினான். வருமானத்தை அதிகரித்தான். இலங்கையில்
- 150 -

பல்லவராசசேகரம் மேற்கில், கறுவா உற்பத்தி, சிங்கை மன்னர்களினால் செய்யப்பட்டுவந்தது. கறுவா வியாபாரம் பல்லவத்திற்கு நல்ல வருவாயைத் தேடிக் கொடுத்தது. இலங்கையில் மேற்குக் கரையில், சிங்கை மன்னர்களின் கட்டுப்பாட்டில், முத்துக்குளிப்பு நடைபெற்று வந்தது. அதனைக் கைப்பற்ற, முதலாம் புவனேகபாகு போர் தொடுத்தான். இலங்கை முழுவதும், குலோத்துங்கன் ஆட்சியின் கீழ் வந்தது. இலங்கை முழுவதும். சிங்கை மன்னனின் பலத்தினை அறியச் செய்தான். மிகவும் சிறந்த அறிஞன். கி.பி1264 லிருந்த இலங்கை முழுவதும் 19வருடங்கள் சிங்கை மன்னர் ஆட்சி இடம் பெற்றிருந்தது. என சரசோதிமாலை தெரிவிக்கிறது.
H.W. கொட்றிங்க்ரன் 20 வருடங்கள். தென்னிலங்கையில் அரசன் இல்லை என்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண வைபவமாலையிலும் இதுபற்றிக் காணப்படுகிறது. மகாவம்சம் இதுபற்றி எதுவும் கூறவில்லை. அதன் பின்னர் இவனுக்கு திறை செலுத்தி தென்னிலங்கையில் ஆள அனுமதித்தான் என காணப்படுகிறது. கூடுதல் காலத்திற்கு சிங்கை மன்னர்களின் ஆட்சி மேலாதிக்கம் முழு இலங்கையிலும் நிலவியது.
விக்கிரமசிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
குலோத்துங்கன் மகன் விக்கிரமசிங்கன் சிங்கைநகரில் கி.பி. 1283ல் ஆரியச்சக்கரவர்த்தியாக சிம்மாசனம் ஏறினான். கி.பி 1284ல் சம்புகோவளத் தினூடாக, சிங்கை நகருக்கு வருகை தந்த மார்க்கோ போலோ, முழு இலங்கையும், சந்தடoயின் என்ற யாழ்ப்பான அரசனின் ஆட்சியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளான். சிங்கை மன்னன் என்பதனையே சந்தமயின் என்று தெரிவித்துள்ளான். இவனது ஆட்சி, இலங்கை முழுவதும் நிலவியதால், தென்னிலங்கையில் சிங்களவர் சிலர் கலகம் விளைவித்தார்கள். அவர்கள் பதினேழு பேரும், கைது செய்து, விசாரணை செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்ப்பட்டனர். கி.பி 1284 முதல் கி.பி 1303 வரை யாப்பகுவவில். ஒரு அரசனோ, அல்லது அரசோ இருக்கவில்லை என மார்க்கோ போலோ கூறியுள்ளர்.
சீனா. அராபியா, முதலிய தூரதேசங்களிலிருந்தும், கப்பல்கள் வியாபாரம் காரணமாக சம்புகோவளம் துறைக்கு வருவது வழக்கம். வேறு இடங்களிலிருந்து அகில் கொண்டுவரப்பட்டு, கோவளம் துறைமுகத்தில் வைத்து பிறதேசங்களுக்கு ஏற்றப்பட்டது எனவும் மார்க்கோ போலோ மேலும் தெரிவித்துள்ளார்.
- 151 س

Page 78
பல்லவராச்சியம்
சிங்கைநகர அரசர்களுக்கு திறை அளிப்பதற்குப் பயந்தே. தென்னி லங்கை அரசர்கள் தங்கள் இராசதானியை குருநாகலுக்கும். தம்பதெனியாவிற்கும். கம்பளைக்கும்மாற்றிவந்தார்கள். என யாழ்ப்பான சரித்திரம் நூல் தெரிவிக்கிறது. இலங்கையின் மேற்கு கடலில் முத்துக்குளிக்கும் உரிமை, சிங்கை நகர அரசர்களுக்கே இருந்துவந்தது. யாப்பகூவ மன்னன் புவனேகபாகு போரிட்டான். சிங்கை மன்னன் போரில் வென்றான். புவனேகபாகு குமாரன். குலசேகர பாண்டியனிடம் வேண்டினான். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிங்கை மன்னன் திறைபெற்றுக் கொண்டு, யாப்பகூவாவில் மீண்டும் ஆட்சியைத் தொடங்க அனுமதித்தான் என்றும். காணப்படுகிறது.
வரோதய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
விக்கிரமசிங்கன் மகன் வரோதயன் கி.பி 1302ல் சிங்கை நகரில் ஆரியச்சக்கரவர்த்தியாக முடிகடினான். சந்திரசேகர பாண்டியன், மாற்றாரினால் தோற்கடிக்கப் பட்டு. மதுரையை விட்டுத் துரத்தப்பட்டான். புகலிடம் தேடி, நண்பனான சிங்கை மன்னன் வரோதயனிடம் வந்தான். தனது பெரும் படையுடன் பாண்டியனையும் அழைத்துக் கொண்டு. கடல் தாண்டிச் சென்று. இரத்தம் சிந்திய பெரும் போர் செய்து, மதுரையைக் கைப்பற்றி, பாண்டியனை, சிம்மாசனத்தில் வரோதயன் மீண்டும் அமர்த்தினான்.
இவன் இந்தியாவில் இருந்த பொழுது வன்னிச் சிற்றரசர்கள், கலகம் செய்து திறை செலுத்தவதை நிறுத்த முயன்றனர். இதற்கு தென்னிலங்கை அரசரின் உதவியையும் கோரினர். ஆனால் முன்னைய போர்களின் பரிச்சயத்தினால் தென்னிலங்கை அரசன் உதவ முன்வரவில்லை. இதனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. வரோதயன் இந்தியாவிலிருந்து வந்து, விசாரணை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டித்தான். கி.பி 1322ல் பிறையர் ஒடோறி என்ற கத்தோலிக்கப்பாதிரியார் பிரயாணத்தின் போது, சிங்கை அரசின் துறைமுகத்திற்கு வருகை தந்தார். அவர் தாம் கண்ட சிங்கை அரசனைப்பற்றியும் அவனது ஆபரணங்கள்அணிகலன்கள்பற்றியும்விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவித்தள்ளார்.
மாதண்டைச் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
வரோதயன் மகன் மாதண்டையன், கிபி 1325ல் பல்லவராச்சியத்தின்
- 152

பல்லவராசசேகரம் மன்னனாக சிங்கைநகரில் முடிகடினான். இவன் காலத்திலும், இலங்கை முழுவதும் இவன் ஆட்சிநடைபெற்றிருந்ததை.இபின்பதுதாஎன்ற யாத்திரிகளின் குறிப்புத் தெரிவிக்கின்றது. சிங்கை நகரிலிருந்து, இபின்பதுதா, சிங்கை மன்னன் காவற்துணையுடன், சிவனொளிபாதமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். சிங்கை அரசர்களின் கடலாதிக்க வலிமை பற்றியும். இபின் பதூதா குறிப்பிட்டுள்ளார். சிங்கை அரசர்கள் 13ம், 14ம், 15ம் நூற்றாண்டுகளில், தென்னிலங்கை அரசர் மேல் மேலாதிக்கம் செலுத்தினார்கள்.
இவன் வந்த பொழுது முத்துக்குளிப்பு நடை பெறுமிடத்தில், அரச மாளிகையில் மன்னன்தாங்கியிருந்தான். அது பத்தள என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலாபத்தில் தான் முத்துக்குளிப்பு இடம்பெறும். எனவே அது புத்தளமாக அல்லது வத்தளையாக இருத்தல் வேண்டும். கடற் கொள்ளைக்காரர்களிட மிருந்தும், தென்னிலங்கை அரசர்களிடமிருந்தும் முத்துக்களை காப்பாற்றுவதற்கும். பிறநாட்டு வணிகர்களுக்கு விற்பதற்கும் ஆக. மன்னரின் நேரடி மேற்பார்வையில் முத்துக் குளிப்பு நடை பெறுவது வழக்கம். புலவர்களுக்கு ஒரு தனிச்சபை அமைத்து அதற்கு ஆதரவு வழங்கித்தமிழ்க்கலைகள் அறுபத்திநான்கினையும் நன்கு வளர்த்தான். ஆங்கிலேயரின் குறிப்புக்களில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் வரை தமிழ் மொழி பேசுவோர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இடங்கள் முற்காலத்தில், புத்தளம் சிற்றரசின் ஆட்சிக்குட்டப்பட்ட பகுதிகளாகும். ,
மணிமுடி சிரமேந்த, சிங்காசனம் அமர்ந்து செங்கோல் கரமேந்தி, சிங்காரத்தமிழ் கமழ, பல்லவராச்சியத்தில் கோலோச்சிய அரசர் பலர். இலங்கைத் தமிழ்ராச்சியம், கொடியும் முடியும் செங்கொலும் கொண்டு திகழ்ந்த ஒரு சுயமான ராச்சியம். விடையும் பிறையும் பொறித்த காசுகள், சேது பொறித்தநாணயங்கள் யாழ்ப்பாண அரசர்களின் நாணயங்கள் என்பதை வண ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமிய யாத்திரிகர் இபின்பதுதா சிவனொளிபாதமலையைத் தரிசிக்க கி.பி. 1344ல் இலங்கை வந்தார்.
இபின் பதுரதா குறிப்பிலிருந்து.
கடற்பயணத்தில் ஒன்பதாம் நாள். இலங்கைத் தீவின் பத்தளாகரையை அடைந்தோம். நாம் கரையிறங்கியதும். எம்மை நோக்கி முன்னேறி வந்த உருவ வழிபாடுடையோர் நீங்கள் யார்? என்று வினவினர்.
- 153 س

Page 79
பல்லவராச்சியம் நான் கோரமண்டல மன்னனின் மைத்துனனும். நண்பனும் என்று அவர்களிடம் தெரிவித்ததுடன். அவனைச் சந்திக்கச் செல்லும் வழியில் இங்கு வந்ததாகவும், கப்பலில் அம்மன்னனுக்காக கொண்டுசெல்லப்படும் வெகுமதிப் பொருட்கள், இருப்பதாகவும் சொன்னேன். அவர்கள் தம் மன்னனிடம் சென்று செய்தியை அறிவித்தனர். மன்னன் அங்கே இருந்தபடியால் உடனே அறிவிக்க முடிந்தது.

ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். அந்த இடம் துப்பரவாகவும் சுற்றுமதிலையும் கொண்டிருந்தது. அண்மையான கரைப்பகுதியில் கறுவா அடிமரங்கள் நிறைந்திருந்தன. பட்டை உரிக்கப்பட்ட கறுவாக்கள். ஏற்றுமதிக்காக, கரையில் குவிக்கப்பட்டிருந்தன. கறுவா மரங்கள் நிறைந்திருந்ததால், வத்தளைப்பகுதியாக இருந்திருக்கலாம். உருவவழிபாட்டு மன்னனின் சமூகத்தில்.நான் சென்றபோது, அவன் தன்னருகில்என்னை அமரச் செய்து, கனிவுடன் உரையாடினான். உமது நண்பர்களும் பாதுகாப்பாக கரையிறங்கட்டும். திரும்பிச்செல்லும்வரை அவர்கள் எனது விருந்தாளிகளாவர் என்றான்.
அதன்பின். எனக்குத்தங்குமிடவசதிசெய்து கொடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான். அங்கு நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். எனக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது. நாளுக்கு நாள் அது அதிகரித்தது. மன்னன் பாரசீகமொழியை அறிந்திருந்தான். நான் பிறநாடுகள். மன்னர்கள் பற்றிசொன்ன கதைகளை அதிக விருப்புடன் செவிமடுத்தான். ஒருநாள், மன்னன் கரங்களில் முத்துக்களை வைத்திருந்த சமயத்தில், அவன் முன்னிலையில் சென்றேன். அம்முத்துக்கள், அவனது ஆளுகைக்குட்பட்ட கடற் பிராந்தியத்தில். முத்துக் குளிப்பால் பெறப்பட்டவை. மன்னனின் பணியாட்கள் அங்கு முத்துக்களைத்தரம் பிரித்துக் கொண்டிருந்தனர்.
நீர் சென்று வந்த நாடுகளில், எங்கேனும் முத்துக்குளிப்பைப்
பார்த்திருக்கிறீரா? என்று மன்னன் கேட்டான். ஆம். இபின் அஸ்லாமலிக்குச்
சொந்தமான கொயிட்திவில், முத்துக்குளிப்புநடைபெறுவதைக் கண்டிருக்கிறேன்
என்றேன் நான். மன்னன் தன்கை யிலிருந்த முத்துக்களைக் காண்பித்து
அத்தீவில் இத்தகைய முத்துக்களுக்கு ஈடிணையாக யாதாயினும் முத்துக்கள்
- 154

பல்லவராசசேகரம் இருக்கின்றனவா? என்று கேட்டான். இப்படியான சிறந்த முத்துக்கள் ஒன்றைத் தானும் நான் பார்க்கவில்லை என்றேன். எனது பதிலால் மகிழ்ச்சியடைந்த மன்னன். இவை உம்முடையதே என்றான். அத்துடன் நீர் விரும்பும் எதனையும் என்னிடம் கேட்கலாம். நானமுற வேண்டாம் என்றும் மன்னன் கூறினான்.
அதற்கு நான் ஆதாமின் பாதத்தினை தரிசிப்பதை ஆவலாகக் கொண்டுள்ளேன் என்றேன். அது சுலபமானது என்று சொன்ன மன்னன். வழிகாட்டுவதற்கு ஆட்கள் அனுப்பி வைப்பதாக சொன்னான். மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்தான்.

கோநகரி(குருநாகல்)ல் ஒரு மன்னனின் இராசதானிஇருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தீவின் இரத்தினக் கற்கள் பற்றியும். இரத்தினபரணங்கள் பற்றியும் சபையர் என்ற கல், நீலம் என்று அழைப்பர் என்பதையும், தேவநகரில் (மாத்தறையிலிருந்து 7கல் தெவிநுவர பெரும் சைவக் கோவில் இருந்ததாகவும் அக்கோவிலில் உள்ள தெய்வச்சிலை. ஒரு ஆள் அளவு தங்கச்சிலை என்பதையும், அச்சிலையின் கண்கள் சிவப்புமாணிக்க கற்களால் அமைக்கப்பெற்றிருந்ததையும், அச்சிலையின் பெயராலேயே அந்நகர் தெய்வநகள் என அழைக்கப்பட்டதென்பதையும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தீவிலுள்ள பெண்கள் கழுத்தணிகள், கைகளில் காப்பு. கால்களில் கொலுசு அணிவர் (தமிழர் நகைகள் என்றும்) பசுக்களைக் கொல்வது சைவசமயத்திற்கு ஒவ்வாது, அகழ்ந் தெடுக்கப்படும் இரத்தினக் கற்களில் 100 பணம் பெறுமதி (காசு)யான இரத்தினக்கற்கள் அரசனுக்கு கொடுக்கப்படும். இரத்தினக்கற்கள் இழைத்த முடிகளை அரசர் தலையில் சூடுவர் என்பவைபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியச்சக்கரவர்த்தியிடம் சிவப்பு மாணிக்கக் கல்லினால் ஆன உள்ளங்கை அளவுதட்டு இருந்தது என இபின் பதூதா குறிப்பிட்டுள்ளார். இபின் பதூதா கல்விமான், மார்க்க அறிஞர். டில்லி மன்னரின் நீதிபதியாகக் கடமையாற்றியவர் தாம் கண்டவற்றை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பல்லவத்தின் மன்னன் சலாபம் முத்துக்குளிப்பை நேரில் பார்வையிடுவதற்காக பத்தளவில் தமது அரசமாளிகையில் தங்கி உள்ளார். சலாபம் என்பது முத்துக்குளிக்கும் இடமாகும்.
- 155

Page 80
பல்லவராச்சியம்
இபின்பதுதாவிற்கு மாலைதீவுமாலுமிகள் என்ற பரதேசிகள் சிங்கை மன்னனைப் பற்றியும் பல்லவராச்சியத்தையும் பற்றியும் கூறியவை. எல்லா வணிகர்களும் பாதுகாப்பாக செல்லக்கூடிய துறை அல்ல. அநீதியும் மூர்க்க குணமும் கொண்ட ஆரியச்சக்கரவர்த்தி மன்னனின் நாடென்றும் அம்மன்னனிடம் ஆழ்கடலில் கடற்கொள்ளைக்கு பயன்படுத்தப்படும் கப்பல்கள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்து சமுத்திர முத்துக்குளிப்பில்வேறுயாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது புலனாகிறது. மற்றபடி கடற்கரையில் நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் நின்றதைக் கண்டதாகக் கூறும் இபின்பதுதா கடற்கொள்ளைக் கப்பல்களை ஒன்றைத்தானும் கண்டதாக குறிப்பிடவில்லை.
கோட்டை இராச்சியம் தோன்றுவதற்கு முன்னர் காலிதேவநகள்வரை இவன் ஆட்சி நிலவியகாலத்தில் தான் இபின்பதுதா வந்துள்ளார். நந்தீச்சரம் இரத்மலான சிவாலயத்தை இவன் திருத்திக் கட்டியுள்ளான். மாத்துறை வரை இவனது ஆட்சி பரவியிருந்த படியாற்தான் சிங்கை மன்னனின் உதவியுடன் தெய்வநகர் வரை சென்று தண்டேசுவரம் சிவாலயத்தைத் தரிசித்துள்ளான். அக்கோவில் சிலை விபரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.
குணபூசண சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
மாதண்டையன் மகன் குணபுசணன் கி.பி. 1346இல் பல்லவராச்சியத்தின் வேந்தனாக சிங்கை நகரில் முடிகடிக்கொண்டான். தனது இராச்சியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பல தொழிலகங்களை உருவாக்கினான். துணிகளை உற்பத்தி செய்ய பல நேசவாளர்களை
அமர்த்தினான்.
ஜோன்.டி.மரியநொலிரோமிலிருந்து சீனாவிற்குப் போகும் வழியில், யாழ்ப்பான அரசனிடம் சிலநாட்கள் தங்கிச்சென்றான்.தனது பிரயாணக்குறிப்பில் தான் அரசமாளிகைக்கு விருந்திற்கு சென்றதாகவும், அங்கு இராணியைக் கண்டதாகவும், அங்கு தனக்கு ஏற்பட்டநாட்பட்ட வயிற்றுளைவிற்கு இராணியின் சேடிகள்நாட்டு மூலிகைகளைப்பயன்படுத்திசுகப்படுத்தினார்கள். இராணிஇரதம், யானைகளில் சவாரிசெய்தார். தானும் ஒருமுறையானையில் பயணம் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இராணி இவனுக்கு தங்க ஒட்டியாணம், விலை உயர்ந்த துணிவகைகள் 150ம் பரிசாக வழங்கினார். இவற்றைத் தான் தென்னிலங் கையில் பிரயாணம் செய்கையில் பேருவளையில் கொள்ளையடித்துவிட்டார்கள்.
- 56

Lusidador:JfTas Garais Jú குணபூசணன் பராயமடையாத வயதில் கி.பி 1343இல் அவன் தாய் இராணி அதிகாரம் செலுத்துகையில் இவர் வருகை அமைந்துள்ளது. இதனை காட்லான் படம் 1375 இலங்கை ஈழலான் என்று இலங்கை குறிக்கப்படுகிறது. அது ஈழம் எனலாம். அத்தோடு அதில் வட இலங்கையை ஒரு இராணிஆட்சிசெய்வதாகக் காட்டப்பட்டுள்ளது.
விரோதய சிங்கை ஆரியசக்கரவர்த்தி
குணபு,சணன் மகன் வீரோதயன் பல்லவ இராச்சியத்தின் மன்னனாக கி.பி. 1371இல் சிங்கை நகரில் ஆட்சிபீடம் ஏறினான். இவன் தன் காலத்தில் விவசாயம், தொழில்வளம், கல்விமேம்பாடுகளை மேற்கொண்டான். விசயநகர வேந்தன்சிங்கைநகள் அரசனிடம்படை உதவிபெற்று. தென்னிலங்கை அரசனை வென்று அவனிடம் திறைபெற்று மீண்டான் என்று ஆரியுர்ச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
(3uprarser Gharasrira (3arasrsor
விரோதயன் மகன் செயவீரன் பல்லவத்தின் அரசனாக கி.பி 1394ல் சிங்கைநகள் சிம்மாசனம் ஏறினான். முதலில் செகராச சேகரன் என்ற விருதுப் பெயர் பெற்ற மன்னன் செயவீரன் ஆவன். தட்சன கைலாசபுராணம் இவனால் இயற்றப்பட்டது. செகராசசேகரம்என்றமருத்துவநூல், செகராசசேகாமாலை என்ற சோதிட நூல் இவனால் இயற்றப்பட்டதாக காணப்படுகிறது. இவன் பெயரால் பாடப் பெற்றதாகவும் ஒரு கருத்துநிலவுகிறது.

“கந்தமலை ஆரியர்கோன்செகராசசேகரமன்" என்று செகராசசேகரம் சிறப்புப்பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தமலை என்பது கதிர்காம கதிரமலை ஆகும். அங்கே ஆட்சி செய்த சிற்றரசர்களை வென்று கதிர்காமத்தையும் சிங்கைநகர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் எனத் தெரிவித்துள்ளது.
"சேது காவலன் விஞ்சை விஞ்சு செகராச சேகரன்” என்று செகராச சேகரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செகராசசேகரன் ஆட்சி சேதுகரையிலும் விரிந்து பரந்திருந்தது. என்பதாகும். இவன் வெளியிட்ட நாணயங்களில், விடையும் பிறையும் அழகாக பொறிக்கப்பட்டிருந்தது. தட்சண கைலாச புராணத்திலும்: சிங்கை ஆரியன் சேதுகாவலன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேசுவரத்தை ஆட்சிசெய்தவர்களை சேதுபதி, சேதுகாவலன் என்றழைப்பூசிங்கை அரகர்கள்
- 157

Page 81
பல்லவராச்சியம்
சிங்ஐைத قl.کltقشی نخاعی شد ت
ჯt గుజ్రr "yes
- མ་ཚུད་པ་བ་ ༽ནི་བག་ཡི-ཅི་ గరెబ్రిడ40: kدي
قام به هلوهلة ناج شا وع کے بع جالک *る ܪܶܗܗܶܝܐ kontris oro? ༄༽ /ો. ثم دع
؟ A Resa ornati, bتا و حت به تحت عن
و معقومي "." طی حلقه است ننمایی ano {ہد یوتھ ہو
్యసి 6-X قه عه سامة يمد "
Gan Sari@wn ki
\ " \ኗይE” نام به بیرجی ایدئو شده،
திெலில்
kuroror como o . ക് / / f گاتعاعی مایه
wat Sile ) امر به
" مسير
4 4డ8238 గశాT , تمتهنوعا
oħra u ml (Aer?
V) o Gas as no lá ,6 ,5 هما شاه مس - همه ۲) 6
- 158
 
 
 
 

பல்லவராசசேகரம் தமது நாணயங்களிலும், தமது கீர்த்திகளிலும் சேது என்று பொறித்தார்கள். இராமேசுவரம் கோவிலில் காணப்பட்ட கல்வெட்டு இராமேசுவரம். சிங்கைநகள் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றது.
தென்னிலங்கை அரசன் புவனேகபாகு இலங்கையின் முத்துக்குளிப்பு சிங்கைஅரசர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து செயவீரன், சிலாபத்தில் முத்துக்குளிப்பை கண்காணிக்கத் தாங்கியிருந்த வேளையில் போரிட்டான். செயவீரன் புவனேகபாகுவைத் தோற்கடித்தான். இலங்கையின் முத்துக்குளிப்பு முழுவதும் செயவீரனின் சிங்கக் கொடி பறந்துகொண்டிருந்தது. (ԼՔ{Աք இலங்கையிலும் பன்னிரண்டு வருடங்கள் இவன் ஆட்சிநடைபெற்றது. பின்னர் புவனேகபாகு பாண்டிய மன்னனூடாக திறை செலுத்தி ஆள்வதற்கு விருப்பம் தெரிவித்தான். பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி திறை பெற்றுக் கொண்டு ஆட்சி செய்வதற்கு புவனேகபாகுவை செயவீரன் அனுமதியளித்தான். தொடர்ந்து பல மன்னர்கள் சிங்கை நகர அரசருக்கு திறை செலுத்தி ஆட்சி செய்தனர். வரலாற்றின் பெரும்பகுதியான காலம் முழு இலங்கையும் பல்லவ அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அல்லது திறை பெற்றுக்கொண்டு பெரு வேந்தனாக மேலாண்மை செலுத்திவந்தனர்.
பதினான்காம் நூற்றாண்டில் மிகவும் பலம் பொருந்தியதாக சிங்கை அரசு விளங்கியது. செயவீரன் தூதுவர்களுக்கு கோட்டை அரசன் திறைகொடுக்க மறுத்து அவமதித்தான். கம்பளைக்கும் கோட்டைக்கும் ஒரே நேரத்தில் தனது படைகளை அனுப்பிப்போரிட்டு வென்று தனது சிங்கக் கொடியைப் பறக்கவிட்டான். மீண்டும் இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். நமது வெற்றியை சிலாசாசனத்தில் பொறியுங்கள். அவர்கள் நம் சுதந்திரத்தில் தலையிடாதிருத்தல் வேண்டும். திறைசெலுத்தாவிட்டால் இப்பொழுது நிகழ்ந்தது போன்ற அழிவுகளை எதிர்நோக்க நேரிடும் என்ற எச்சரிக்கை அழியாதிருக்க எமது வெற்றியை சிலாசாசனத்தில் பொறியுங்கள் என்று வெற்றிமுழக்கமிட்டான். செயவீரன் வெற்றிச்சின்னம் கல்லில் பொறிக்கப்பட்டது.
அந்தச் சாசனம் கோட்டகம கல்வெட்டு. "சேது"
“கங்கனம் வேற்கண்ணினையாற்காட்டினார் காமர்வளைப் பங்கையக்கை மேற்றிலதம் பாரித்தார்-பொங்கொலிநீற்ச் சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள் மடமாதர்தாம்"
ب 159 -

Page 82
பல்லவராச்சியம்
இந்தக் கல்வெட்டு 15ம் நூற்றாண்டுக்குரியது என H.C.PBELL குறிப்பிட்டுள்ளார். அழகேசுவரன் இறக்க, சிங்கள அரசர் செயவீரனுக்கு திறை செலுத்தி ஆண்டு வந்தனர். பிற்காலத்தில் கம்பளையில் இக்கல்வெட்டு கண்டெ டுக்கப்பட்டது. இந்த வியழம் மகாவம்சத்தில் இல்லை, மாறாக உள்ளது.

காரிவையாவின் கணக்கதிகாரம் என்னும் கணித நூலையும்
இயற்றுவித்தவன். வைத்திய நூலில் -

“இலங்கை வேந்தர் சீரிய பொன் திறையளக்கச் செங்கோலோச்சுஞ் செகராசசேகரமன் சிங்கை மேவு மாரியர் கோன்”
என இவன் புகழ் பாடப்பட்டுள்ளது. இவனுடைய ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள் எவ்வாறு உடற்கூற்றியலைப் படித்தார்கள் என்பதைப் பற்றிய பாடல் காணப்படுகிறது. இவனுடைய செகராசசேகரம் மருத்துவ நூல் 2000 பாடல்களைக் கொண்டதாகும. தற்பொழுது 200 பாடல்கள் காணப்படுகின்றன. செகராசசேகரன் மிகவும் திறமை பெற்ற அறுவை மருத்துவனாகத் திகழந்தவன். மருத்துவத்தில் சிறந்த அறிஞன். கே.எம்.டி.சில்வாவின் கூற்றுப்படி பல்லவ இராச்சியம் கழனியாறுவரை நீண்டிருந்தது. மாத்தளை மாவட்டத்திற்குள்ளும் ஊடுருவியிருந்தது. பாணந்துறைவரை கடற்படைகளும் அனுப்பப்பட்டன.
சிங்கை பரராசசேகரச் சக்கரவர்த்தி
செயவீரன் மகன் குணவீரன் பல்லவ வேந்தனாகச் சிங்கை நகரில் கி.பி. 1414ல் முடிசஞ்டினான். முதலில் பரராசசேகரன் என்ற பட்டப் பெயருடன் ஆட்சி செய்தவனும், சிங்கைப் பரராசசேகரன் என அழைக்கப்பட்டவனும் குணவீரன் ஆவன். சிங்கைநகள் மன்னன் இராமேசுவரக் கோவிலை கி.பி.1414ல் கட்டுவித்தான் என்ற கல்வெட்டு கோவில் சுவரில் இருந்து வந்தது. கி.பி. 19OOம் ஆண்டளவில் இக்கற்சாசனம் அழிக்கப்பட்டுவிட்டது.
இலங்கையின் அதி சிறந்த தழிழ் மருத்துவ நூலான பரராசசேகரம் 12OOO என்ற நூல் இவன் காலத்தில் இயற்றப்பட்டது. இந்நூலை பரராசசேகரன் இயற்றினான். என்றும். அவன் அரசவைப் புலவர்களைக் கொண்டு இயற்றுவித்தான் என்றும், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ் வளம்" சிறந்து விளங்கும் பல்லவத்தின் மருத்துவம் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறும் - 160 -

பல்லவராசசேகரம் பன்னிராயிரம் பாடல்களைக் கொண்டதாகும். மேலும் பரராசசேகரம் அங்காதிபாதம், பரராசசேகரம்நயனவிதிஎன்றநூல்களும் இவனுடைய பெயரால் காணப்படுகிறது. சிங்கைப் பரராசசேகரன் என்று புலவர்களினால் புகழ்ந்து பாடப்பட்டவன் இம்மன்னவன். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சிங்கை பேரரசு பெரும் பலத்துடன் விளங்கியது.
கனகசூரிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
குணவீரன்மகன்கனககரியன் பல்லவராசாவாக சிங்கைநகரில் கி.பி 1440°ஆட்சிப்பீடம் ஏறினான். இவனுக்குகி.பி1440°பரராசசேகனும் கி.பி1445ல் செகராசசேகரனும் தோன்றினார்கள். கி.பி 1450ல் சண்பகப் பெருமாள் சிங்கை நகர்மீது படை எடுத்தான். சண்பகப் பெருமாள் கரும்புரவி மீதமர்ந்து. ஆயிரக்கணக்கில் தமிழ்ப்படைவீரர்களைக் கொன்றான். சிங்கைநகர் எங்கும் இரத்த ஆறு ஓடியது. மதங்கொண்ட யானைபோல கண்டவர்களை எல்லாம் வெட்டிக்கொன்றான். அரண்மனை உடைத்துச் சேதமாக்கப்பட்டது. கனக சூரியனும், அவன் குடும்பமும், மந்திரி உதவியினால், இந்தியாவுக்குச் தப்பிச் சென்றனர். அரண்மனை கொள்ளையடிக்கப்பட்டு செல்வங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன.அரசமாளிகைகளை, வணிகமாளிகைகளை, இடித்தான். சிங்கைநகள் பாழ்படுத்தப்பட்டது. மக்கள் காட்டிய எதிர்ப்பினால், கொள்ளை யடித்தவற்றோடு கோட்டேக்குத் திரும்பிச் சென்றான். ஆனால் பராக்கிரமபாகு மன்னன் சிங்கை நகள் சென்று அங்கிருந்து ஆட்சி செய்யுமாறு பணித்தான். கொண்டு போன செல்வங்களை ஒப்படைத்துவிட்டுத்திரும்பிபல்லவம் வந்தான். மாவிட்டபுரக்கோயிற்பிராமணர்கள் சண்பகப் பெருமாளை வரவேற்றுவிருந்து கொடுத்தனர்.
கனகசூரியனி.
கி.பி. 1467ல் கனகசூரியன் பெரும் படை திரட்டி வந்து மீண்டும் போரிட்டு சண்பகப்பெருமாளைத் தோற்கடித்தான். சண்பகப் பெருமாளின் தளபதியான விஜயபாகுவை கொன்றான். சண்பகப்பெருமாள் மீண்டும் கோட்டைக்குத்தப்பிச் சென்றான். அழிந்த சிங்கைநகரிலிருந்தே கனகசூரியன் ஆட்சி நடாத்திவந்தான். இவன் மகனான பரராசசேகரன் நல்லூரில் ஒரு புதிய நகரினை அமைத்து வந்தான். அழிந்து போன சிங்கைநகரினை மீண்டும் கட்டிமீளமைக்க முயற்சி செய்யவில்லை. பரராசசேகரன் தென்னிலங்கை அரசர்களை1468ல் வென்று திறை பெற்றான்.
- 61 -

Page 83
பல்லவராச்சியம் சண்பகப் பெருமாள்
தென்னிந்திய தமிழ் பணிக்கனான சதாசிவப் பெருமாளுக்கும் கோட்டை பராக்கிரமபாகு சகோதரிக்கும் பிறந்தவன் சண்பகப் பெருமாள். சிங்கைநகள் மீது படைஎடுத்துமுதல் முறை வந்தபோது, புத்தளம் வன்னிராசன் வேள் இவனைத்தோற்கடித்து திரும்பிச் செல்ல வைத்தான். இரண்டாவதுமுறை பெரும்படையுடன் வந்து கி.பி 1450ல் சிங்கை நகரினை முற்றுகையிட்டு கணக சூரியனைத் தோற்கடித்து அந்நகரினையும் அழித்தான். சிங்கைக் கோட்டை, பெறுமதிமிக்க வரலாற்றுச் சின்னங்கள். அரிய பெரிய அரண்மனை ஏடுகள், சாசனங்கள், ஒவியங்கள் விலைமதிக்க முடியாத அழகு சாதனங்கள் எல்லாம் நாசமாக்கப்பட்டன. தமக்குத் தேவையான பொன் நவமணிகள் கொள்ளை யிடப்பட்டன. படைகள் ஊருக்குள் சென்று கொள்ளையடித்தன. சிங்கைநகள் 6Tifu. Lull-gi.
சண்பகப் பெருமாள் கந்தரோடையில் தமது பாடிவீட்டினை அமைத்து சிலகாலம் ஆட்சிநடத்தினான். சில வருடங்களில் கனகசூரியன் பெரும் தாக்குதல் நடத்தினான். காயமடைந்த சண்பகப் பெருமாள் தெய்வாதீனமாக உயிர் தப்பினான். இதனால் யாழ்ப்பாணப்பட்டினத்தில் பாடிவீடமைத்து ஆட்சிசெலுத்தி வந்தான். அக்காலத்தில் சைவசமயத்தவனான சண்பகப் பெருமாள் நல்லூரில் கந்தக்கடவுளுக்கு சிறு ஆலயம் கட்டி மக்களின் நன்மதிப்பை பெற முனைந்தான். அக்காலத்தில் தான் சிங்கள இலக்கியங்களில் (15ம். 16ம் நூற்றாண்டில்) யாழ்ப்பாணம் யாப்பாபட்டுன என்று முதலில் குறிப்பிடப்பட்டது. மக்களுடன் நட்பாக பழகினான். மீண்டும் கனககரியன் தாக்கியதனால் யாழ்ப்பாணத்தி லிருந்து அரசிருக்கையை கிழக்கேயும், தெற்கேயும் மாற்றினான். சண்பகப் பெருமாள் ஓரிடத்தில் நிலையாக இருந்து ஆட்சி செய்ய முடியவில்லை. அடிக்கடி தாக்குதல் நடாத்தியும். கனகசசூரியன் வெற்றிபெற முடியவில்லை. கோட்டேக்குச் சென்றசண்பகப் பெருமாளை பாராக்கிரமபாகு மீண்டும் மீண்டும் பல்லவத்திற்கு திருப்பியனுப்பினான். 1467ல் கனகசசூரியனால் தோற்கடிக்கப்பட்டுதப்பி ஓடினான். தளபதிவிஜயபாகுவும் படையினரும் கொல்லப்பட்டனர்.

கனக சூரியன் மகனான இவன் கி.பி. 1478ல் நல்லூரில் புதிய கோட்டை கட்டி அதில் ஆட்சிப்பீடம் ஏறினான். நல்லைப் பரராசசேகரன் என்று,
- 162

பல்லவராசசேகரம் குறிப்பிடப்பட்டவன் இவனே. இவனது பட்டத்துராணி சோழ இளவரசி இராச லட்சுமியாவர். வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த வள்ளியம்மை வேறு மனைவி யாவள். அச்சுவேலி மங்கதம்மாள் இவனுடைய காமக்கிழத்தியாகும். இராச லட்சுமிக்கு சிங்கசவாகு. கி.பி 1468. பண்டாரம் கி.பி 1475. கதிர்காம சேகரன் கிபி 1480 தோன்றினார்கள். வள்ளியம்மைக்குகி.பி.1470ல் பரகிருபசிங்கமுதலி தோன்றினான். கி.பி 1485ல் மங்கதம்மாளுக்கு சங்கிலிபிறந்தான்.

புலவர் புகழ்ந்து பாட வீரபராக்கிரமத்துடன் பரராசசேகரன் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தான். தமிழ் நூல்களில் கதிர்காமசேகரன் பெயர் இடம் பெறவில்லை. சிறுவயதிலிருந்தே சங்கிலி மனத்தில் தீய சிந்தனைகளும் பழிவாங்கும் உணர்ச்சியும் காணப்பட்டது. சங்கிலிதான் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று சூழ்ச்சித்திட்டம் போட்டான். மர்மமான முறையில் சிங்கவாகு பண்டாரம் இவனால் கொல்லப்பட்டனர். அதனால் கதிர்காமசேகரனுக்கு சங்கிலியால் உயிராபத்து ஏற்படாது தடுப்பதற்காகவே. இளவரசனாக்கிப்பலமான மெய்ப்பாதுகாப்பினை ஏற்படுத்தினான். இருந்த போதிலும் மங்கதம்மாளும் சங்கிலியும் எப்படியும் அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்கு நயவஞ்சமாகச் செயலாற்றிவந்தனர்.
பரராசசேகரச்சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினி இராசலட்சு மிக்கும் தோன்றிய கதிர்காமசேகரன் மட்டும்தான் அரசவம்சம், அரச பரம்பரையாகும். அதனால்தான் அவன் மகன் இராசசேகரத்திற்கு அரசசபையினரும் நாட்டு மக்களும் கி.பி. 1561இல் முடிசூட்டினார்கள். அரசர்கள் அரசகுலப்பெண்களையே மணமுடிப்பது வழக்கம் வேறு குலப்பெண்கள் அரண்மனையில் வசிக்கமுடியாது. பரராசசேகரனுக்கும் வெள்ளாளகுலத்தில் பிறந்தவள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த பரநிருபசிங்க முதலிஅரசபரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல. அரசகுலத்தில் பிறந்த தாய்க்குப் பிறவாதபடியால் அரசகுடும்பத்தைச் சேராதவன். அரசர்கள், விரும்பினால் எல்லாக்குடிகளிலும் பெண்களை கந்தர்வமணம் செய்து கொள்ளலாம். அரசர்களிற்கும் அரண்மனைச்சேடிகளிற்கும் உறவு இருக்கலாம். இவற்றின் மூலம் அநேகம் பிள்ளைகள் பிறக்காலம். மரபுத்திருமணம் செய்து கொள்ளாமல் பிறக்கும் அவை எல்லாம் அரசபரம்பரை என்று அழைக்கப் படுவதில்லை. அரசகுலத்தில் அரச குடும்பத்தில் பிறந்ததாயின் பிள்ளைகள் மட்டுமே அரசபரம்பரையினர்ஆவர். பட்டத்துராணிவயிற்றில் தோன்றியவர்களே இளவரசர்கள் எனப்படுவர். அவர்களில் ஒருவனே முடிக்குரிய இளவரசனாவான். r
- 1 6 R --

Page 84
பல்லவராச்சியம் முடிக்குரிய இளவரசனுக்கே முடிகட்டப்படும். எக்காரணத்தைக் கொண்டும் அரச குடும்பத்தில் பிறவாதவன் இளவரசன் ஆக முடியாது.
சரியான முறையில் தோன்றாத குழந்தைகள் பிழையாகவே நடந்து கொள்ளும். ஒரு மனிதன் நல்லவனா? உயர்ந்தவனா? இல்லைக் கெட்டவனா? தாழ்ந்தவனா? என்பதை அவன் செயல்களே தீர்மானிக்கின்றன. கி.பி 1440ல் பிறந்த பராசசேகரன் கி.பி 1621இல் கொல்லப்பட்டது கி.பி 1470 இல் பிறந்த பரநிருபசிங்கம் கி.பி 1630 இறந்ததாகவுள்ளது. கி.பி 1485 இல் பிறந்த சங்கிலி 1621 வரை ஆட்சி செய்த கடைசி மன்னனாக உள்ளது. முற்றிலும் பொய்யான தகவல்களாகும். நடைமுறைச்சாத்தியமற்ற புனைகதைகளாகும். கி.பி 1560 இலிருந்து கி.பி 1770 வரை ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. எல்லாம் புலவர் செய்த குழறுபடியான மாற்றங்களாகும். எத்தனைமுறை சொன்னாலும் ஒரு பொய் உண்மையாகிவிடாது.
கதிர்காமசேகரன் பட்டத்திற்குரிய இளவரசனாக முடிகட்டப்பெற்றான். சங்கிலியின் நயவஞ்சகமும் சூழ்ச்சிகளும் தெரியவந்தன. சைவசமயத்தினை வளர்ப்பதில் பேரார்வம் கொண்ட மன்னன் சிவபெருமானின் திருப்பாத கமலங்களைத்தன் நெஞ்சில் சுமந்தான். நல்லைநகரினை நீர்மாணித்த தோடு, சட்டநாதர் கோவில், கைலாயநாதர் கோவில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், வீரமாகாளி அம்மன் கோவிலையும் நல்லைநகரின் நாலாபக்கமும் கட்டினான். நல்லூர் கந்தவேளுக்கும் பெரிய ஆலயம் அமைத்தான்.
தமிழ்ச் சங்கத்தினை மீண்டும் நல்லூரில் அமைத்தான். சண்பகப் பெருமாளின் காலத்தில் தமிழ்ச்சங்கம் செயலிழந்திருந்தது. நல்லூர் தமிழ்நூலகம் ஒன்றைநிறுவினான். தமிழ் அறிஞர்களை தமிழ்நாட்டிலிருந்தும் அழைத்துவந்து தமிழ் வளர்த்தான். ஒலைச்சுவடிகளை மீண்டும் சுவடி எடுத்துச் சுவடிக்கூடத்தில் சேமித்தான்.
இரகுவம்சம் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டது. இவன் தென்னிலங்கைப் போர் வெற்றியைப் பாராட்டி பரராச சேகரன் உலா என்ற நூலைப் புலவர்கள் இயற்றினார்கள். கல்வியங்காட்டில் மருத்துவமாமலை என்னும் மூலிகைத்தோட்டம் அமைத்தான். வைத்திய சாலைகளை அமைத்து இலவச மருத்துவம் மக்களுக்கு கிடைக்கச் செய்தான்.
- 164

பல்லவராசசேகரம் நல்லூர் நகரினை மிகச் சிறப்பாக அமைத்தான். குதிரைப்படை யானைப்படைகொட்பாரங்கள், சிங்காரவனம் என்றநந்தவனம். ஆனைக்குளம், பலவகைச் சாளரங்களோடு கூடிய மாளிகைகள் வணிகர் மாளிகைகள், கட்டினான். தொழில் வழியாக நெசவாளர். தச்சர். கொல்லர். ஒவியர். தட்டார். இரத்தினவணிகர். புலவர். பாணர், என வேறு வேறு இருக்கைகளை தனித் தனியாக அமைத்தான்.நிலப்பிரபுகளின் மாடங்களும், மருத்துவர் சோதிடர் வாழ்மனை வீதிகளும், உழவர் குடிகளும் வெவ்வேறு தெருக்களில் அமைத்து இந்திரன் நகரோ, குபேரன் நகரோ என வியக்கும் அளவுக்கு கவின் பொலிந்திலங்கு நகராக நல்லுள்விளங்கியது. கிபி 1519ல் பறங்கியர் போரிட்டனர். அவர்களைப்புறமுதுகிட்டோடவிரட்டினான்.
arriasso
பரராசசேகரனுக்கும், காமக்கிழத்தியான அச்சுவேலி மங்கதம் மாளுக்கும், பிறந்த சங்கிலி தீய சிந்தனை செயல்கொண்டவன். தான் அரசினைக் கைப்பற்றுவதற்காக மர்மமான முறையில் அரசகுமாரர்களான பண்டாரம், சிங்கவாகுவை கொன்றவன். இளவரசன் கதிர்காமசேகரன், கலகம் அடக்குவதற்காக வன்னிக்குச் சென்ற சமயம், ஆயிரக்கணக்கான தந்தைக்கு விசுவாசமான படையினரைக் கொன்று.தந்தை பரராசசேகரனை சிறையிலிட்டு, மணிமுடியும் செங்கோனும் இல்லாது 1520ல் சங்கிலி சிம்மாசனம் ஏறினான். இளவரசன் கதிர்காம சேகரன் திரும்பி வந்து சங்கிலியுடன் போருக்கு ஆயத்தமானான். கதிர்காம சேகரனையும் இழக்க விரும்பாத மன்னன், சங்கிலி நயவஞ்சகன் நீ அவனுடன் போர்புரிய வேண்டாம். இப்போதைக்கு சுழிபுரம் சென்று பழைய இராசதானியில் இருந்துகொள்என்று கதிர்காமசேகரனிடம் கூறிப் போரைத் தவிர்த்தான்.
அரச சபையினர். சங்கிலியை மன்னனாக ஏற்றுக் கொள்ளவில்லை. சங்கிலி அரசகுடும்பத்தைச் சேராதவன். இளவரசன் இருக்கும்போது இப்படி ஒரு சதியா? சூழ்ச்சியினால் அதிகாரத்தினைக்கைப்பற்றி முடியும் செங்கோனும் இன்றி. ஆள்பதியாக ஆட்சி செலுத்தி வந்தான். அரண்மனை பணியாளர்களில் ஒரு பகுதியினர். சங்கிலியுடன் இணைந்து கொண்டனர். நாட்டு மக்கள் பரராசசேகரனையே மன்னனாகப் போற்றினர். இதனால் சங்கிலி அவமான மடைந்து மனம் வருந்தினான். பரராசசேகரனுடன் பணியாற்றிய பிராமண மந்திரியும், சங்கிலியுடன் சேர்ந்து கொண்டான். பரராசசேகரன் சங்கிலியின்
- 165

Page 85
பல்லவராச்சியம் சிறையிலிருந்து தப்பித்து சுழிபுரம் சென்று. முடியையும் செங்கோலையும் இளவரசன் கதிர்காம சேகரனிடம் ஒப்படைத்துவிட்டு. அங்கு வாழ்ந்து வந்தான்.
பரராசசேகரன் இருக்கும் வரை. மக்கள் உம்மை மதிக்க மாட்டார்கள் என, பிராமணமந்திரி சங்கிலிக்கு ஆலோசனை வழங்கினான். சங்கிலி, பரராசசேகரன்தலைக்குஆயிரம் பொற்காசுகள்பரிசளிப்பதாக அறிவித்தான். ஆசை வந்து வேதியனை ஆட்டிவைத்தது. பிராமணமந்திரி, பரராசசேகரனை கொலை செய்வதற்கு புறப்பட்டான். இதனை அறிந்த மன்னன் பரராசசேகரன் சுழிபுரத்திலிருந்து வன்னிக்குத்தப்பி ஓடினான்.
அங்கு தொடர்ந்து சென்ற மந்திரியான பிராமணன், மாறு வேடத்திலிருந்து மன்னன்நீர் அருந்திய வேளையில், நயவஞ்சமாக தலையை வெட்டிக் கொன்றான். கி.பி 1521ல் இவன், கொன்ற மன்னனின் தலையைப், பரிசு பெறுவதற்காக சங்கிலியிடம் கொண்டு வந்து காட்டினான். தந்தையின் தலையைப் பார்த்ததும், திடீரென உணர்ச்சி வசப்பட்ட சங்கிலி. பார்ப்பானின் தலையைச் கொய்தான். 1521ல் பரராசசேகரன் கொலை செய்யப்பட்டதனை. 181 வயதில் பறங்கியர் காலத்தில் கி.பி 1621ல் கொல்லப்பட்டதாக மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.
சங்கிலி வீரத்துடன் கொடியவனாகவும் காணப் பட்டான். கொலை மேற்கொண்டாரிலும் கொடியதே அல்லவை செய்தொழுகும் வேந்து. இராசமடப்பள்ளியினர் தந்தைக்கு விசுவாசமாக இருந்தபடியால் நீக்கிவிட்டு, புதிதாக சமயற்காரர்களைக் கொண்டுவந்துதன் பெயரில் குமாரமடப்பள்ளி என்று பெயரிட்டு அரண்மனையில் நியமித்தான். இதனால் இராசமடப்பள்ளிக்கும் குமாரமடப்பள்ளிக்கும் பகைநிலவியது. 1531ல் பறங்கிக்கப்பலை மறித்து பெரும் திரவியங்களையும் துப்பாக்கிகள் வெடிமருந்துகள் எல்லாவற்றையும் கைப்பற்றி னான். பறங்கியர் போருக்குச் செல்லவில்லை. புனித சவேரியார். சங்கிலியுடன் போர்புரிய போர்துக்கீசர் வலுவின்றி இருந்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். கொலைக்கு அஞ்சாதசங்கிலி, யாருக்கும் முதலிப்பட்டம் வழங்கவில்லை. அப்படி வழங்குவது வழக்கமுமில்லை. அரசபரம்பரையினரை முதலிஎன்று அழைப்பது இல்லை. அரசனுக்கும் அரசகுல பெண்ணுக்கும் பிறந்தவன் தான் அரசனாக முடியும். அரசபரம்பரையில் சேர்த்துக் கொள்ள முடியும்.
- 166 -

பல்லவாசசேகரம் பரராசசேகரனுக்கும் வெள்ளாள குடும்பத்தில் தோன்றிய வள்ளியம்மைக்கும் பிறந்த மகன்தான் பரநிருபசிங்க முதலி அது வெள்ளாளருக்குரிய பட்டம். அதனை சங்கிலி வழங்கினான் என்பது தவறு. வெள்ளாள பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதனால் பரநிருபசிங்கமுதலி என அழைக்கப்பட்டான். அவன் அரசபரம்பரையில் தோன்றியவன் இல்லை. வெள்ளாண்மைத் தொழில் செய்யும் வெள்ளாளருக்குரிய முதலிப் பட்டத்தை சங்கிலி மடப்பள்ளி குடும்பத்தினருக்கு வழங்கவில்லை. அரசமடப்பள்ளிக்கு குமாரமடப்பள்ளி என்று பெயர் சூட்டிப்புதிதாக ஆட்களை நியமித்தான்.
கி.பி 1543ல் பறங்கித்தேசாதிபதிமார்திம் அல்போன் சோஷதகசாக்கு. தமக்கும் ஆட்சியில் அதிகாரம் வழங்க உதவினால், பறங்கியரோடு நட்பாக நடந்து கொள்வதாகவும், மதம் பரப்பவும். வாணிபம் செய்யவும். கோட்டை கட்டவும் உதவுவதாகவும். பரநிருபசிங்கமுதலி, கத்தோலிக்கப் பாதிரியார் மூலம் தகவல் அனுப்பினான். எதிர்பாராதவிதமாக நெடுந்தீவு வந்த பறங்கிக் கவர்னர், பரநிருபசிங்கமுதலிக்கும் ஆட்சியில் அதிகாரம்வழங்கவேண்டும். அல்லாதுவிடின் பறங்கிப்படைகள் நல்லூரைத்தாக்கும் என்று பாதிரியார் ஊடாக சங்கிலிக்குத் தூது அனுப்பினார். அதனைக்கேட்ட சங்கிலி சற்றும் பயப்படாமல் வெள்ளாள குலத்தாய்க்குப்பிறந்த பரநிருபசிங்க முதலிக்கு அரசுரிமை இல்லை. அவன் அரச பரம்பரையுமில்லை. எனது ஆட்சியில் பரநிருபசிங்க முதலிக்கு எந்தப் பதவியும் வழங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அரசுரிமை பெற்ற அரசகுடும்ப வாரிசுகளே என்னோடு போரிட முடியாத அளவுக்கு வலுவிழந்து தம் பாட்டில் இருக்கிறார்கள் என்று கூறி மறுத்து விட்டான். கி.பி 1543ல். தாம் கைப்பற்றிய கப்பல் திரவியங்களுக்காக, தேசாதிபதிக்கு பணத்தை அனுப்பி வைத்தான். பரநிருபசிங்க முதலியின் செய்கை யைால் ஆத்திரமடைந்து சங்கிலி உடன் அவனைக் கொன்றான். தமக்கு அனுசரணையாகச் செயற்பட்ட பரநிருபசிங்க முதலியை கொன்றதற்காக சங்கிலியைத் தண்டிப்பதற்கு கி.பி. 1543ல் பறங்கியர் சங்கிலியுடன் போர் தொடுத்தனர். பறங்கிப்படைகளை வன்னிவரை ஒட ஓடவிரட்டியடித்தான் சங்கிலி
பரராசசேகரமன்னனோ அல்லது சங்கிலியோ பரநிருபசிங்க முதலிக்கு
எந்தப் பதவியும் வழங்கியிருக்கவில்லை. என்பதைத் தெரிவித்து, கி.பி 1543ல் பரசிருபசிங்கமுதலி பறங்கியரிடம் பாதிரியாரை தூதாக அனுப்பினான். அதிற் பறங்கியர் தமக்கு உதவினால் தாம் பறங்கியருக்கு ஆதரவளிப்பதாக
- 167 -

Page 86
பல்லவராச்சியம் தெரிவித்தான். பாதிரியாரின் கடிதம் இவற்றுக்குச் சான்றாக உள்ளது. உண்மை யில் வைப்பாட்டி பிள்ளையான சங்கிலியும். வழக்கத்திற்கு மாறாகப்பிறந்த வள்ளியம்மை பிள்ளையான பரநிருபசிங்கமுதலியும் அரசகுடும்பத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்கள். அரசுரிமைக்கு உரிய தகுதி அற்றவர்கள், அரசபரம்பரையைச் சேராதவர்கள். அரசுரிமைக்கு உரித்து இல்லாதவர்கள். அரசனுடைய விந்தில் பிறப்பவர்கள் எல்லாரும் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இல்லை. அரசபரம்பரை என்று பேசப்படுவது மில்லை.
கி.பி 1544ல் மன்னாரில் பிரான்சிஸ் சேவியர் என்ற பாதிரியார் கத்தோலிக்க மதத்தினைப் பரப்பி வரலானார். விவிலியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது பறங்கிய படைகளின் ஒடுக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என அச்சமூட்டிக், கரையோர மக்களை மதமாற்றம் செய்து வந்தார். சங்கிலி, பறங்கியருக்குப்பணியவேண்டாம்? பயந்து மதம் மாறவேண்டாம் என எச்சரித்தான். மதம் மாறுவது நாட்டைக் காட்டிக் கொடுப்பது போலாகும் எனக் கடிந்து கொண்டான். அதுமட்டும் மல்ல, இன்று கத்தோலிக்கள்களின் பதாகையில் சேர்ந்து கொண்டவர்கள். நாளை போர்த்துக்கல் மன்னனின் பதாகையில் சேர்ந்து கொள்வார்கள். அவர்களின் வாயிலாக மன்னாரின் முத்துக்குளிப்பைக் கைப்பபற்றுவதே பறங்கியரின் உள்நோக்கம் என்பதனை தூர நோக்குள்ள சங்கிலிஉணர்ந்திருந்தான்.
கி.பி1544 மார்கழிமாதம். மன்னார் சென்ற சங்கிலி கத்திமுனையில் கரையோர மக்களை யார் மதமாற்றம் செய்தாரோ அவரையும், மதம் மாறிய அறுநூறு பேரையும், தேசத்துரோகிகள் எனத் தீர்ப்பளித்து, வாளுக்கு இரையாக்கினான். போர்த்துக்கல் மன்னரினாலும், பறங்கிப் படைகளினாலும் இந்த அதிர்ச்சியைத் தாங்கவோ, அதிலிருந்து மீளவோ முடியவில்லை. கோட்டை மன்னர் பறங்கியரைப்பணிந்து நடந்த வேளையில், பலமான முடியரசின் சங்கிலி பறங்கியரை விரட்டி அடித்தான். பறங்கியர். கத்தோலிக்க மதத்தை தழுவ மறுத்தவர்களை வேறு காரணங்களைக் காட்டி கொடுமைப்படுத்தினார்கள். கலகம் விளைவித்தார் என்று கூறி கொடூரமாக கொன்றார்கள். கொல்லப் பட்டவர்கள் தமிழர்களே.
கி.பி1547ல் சீதாவாக்கையிலிருந்தமாயாதுன்னை சங்கிலியிடம்படை உதவிகோரினான். இவனும் படை உதவிபுரிந்தான். திரிகோணமலை சிங்கை
- 68

பல்லவராசசேகரம் நகரின் நேரடி ஆட்சியின் கீழும் சில சிற்றரசர்களினாலும் ஆளப்பட்டடு வந்தது. முன்னர் பரராசசேகரன் ஆட்சியில் திரிகோணமலை இருந்துள்ளதனால் 1551ல் திருகோணமலை சிற்றரசன் இறந்த பொழுது, தானே அரசுரிமை பெற்றவன் என்று சங்கிலிதனது நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தான். அப்பொழுது இறந்த வன்னிராசன் மகன் பறங்கியர் உதவியுடன்தான்திரிகோணமலை ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான். பறங்கியர் அவனையே யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் அரசனாக நிலைப்படுத்தத் திட்டம் தீட்டியிருந்தனர். அதனை அறிந்த சங்கிலிதிருகோணமலை ஆட்சியை அவனிடம் ஒப்படைத்துச் சமாதானம் செய்து கொண்டான். பரநிருபசிங்கன் (முதலி) பரமபதம் அடைந்து விட்டான். கி.பி 1551ல் அவன் உயிருடன் இருக்கவில்லை என்பதனாலேயே வன்னிராசனை யாழ்ப்பாணத்திற்கு அரசனாக முடிகட்டுவதற்கு பறங்கியர் நடவடிக்கை எடுத்தனர் எனப் பாதிரியார் ஞானப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.
கி.பி. 1560ல் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசர் படை ஊடுருவித் தாக்கியது. மன்னாரிலிருந்து கேரதீவு ஊடாகவும், கோவாவிலிருந்து கோவளத்துறை (சம்புகோவளம்) ஊடாகவும். கொழும்பிலிருந்து பண்ணைத் துறை ஊடாகவும் மூன்று அணிகளாக பறங்கிப்படைகள் நல்லூரை நோக்கி முன்னேறின. போர்த்துக்கீசர் படைகள் வழியில் சிங்கை நகர் என்ற எல்லைக் கல்லினக் கண்டதாக குறிப்பிட்டுள்ளனர் கோவளத்துறையிலிருந்து சென்ற வழியில் தான் சிங்கை நகர் (சங்கைநகர்) அமைந்துள்ளது. கோவளத்துறை என்பதை கொழும்புத்துறை எனக் காசிச் செட்டி நம்பினார் என ஞானப்பிரகாசர் தெரிவித்துள்ளார். கி.பி.1478 வரை சிங்கை நகர் (சங்கானை) பல்லவ அரசின் இராசதானியாக விளங்கியது.
மூன்று படையணிகளும் நல்லூருக்கு நகர்ந்து ஒரே நேரத்தில் கோட்டையைத் தாக்கியதால் போரினை வெல்வதற்கு வலிமையற்றநிலையில் சங்கிலி நல்லூரிலிருந்து வெளியேறிச் சென்றான். சங்கிலி கோட்டையையும் அரசினையும் விட்டுத்தப்பிச் சென்றுவிட்டான் என்று எண்ணிபறங்கிப்படைகள், பரவலாகிநாட்டுக்குள் புகுந்து வெறியாட்டம் புரிந்தன. ராஜபக்தியும் தேசபக்தியும் மிக்க பல்லவ மக்கள் ஆயுதபாணிகளாகச் சங்கிலியுடன் சேர்ந்து திடீரெனத்தாக்கி நல்லூரை கைப்பற்றினர். தமிழர்கள் ஊரெங்கும், ஆயுதபாணிகளாக சினந்தெழுந்து பறங்கியரும் அவர்களுக்கு அனுசரணையாயுள்ளோரும் எாங்கெங்கே காணப்பட்டனரோ அங்கங்கெல்லாம் அன்னாரை சின்னாபின்னமாக
۔ 169 -

Page 87
பல்லவராச்சியம் வெட்டிச்சரித்தனர். பறங்கிவீரர்களுடன் பண்டமாற்றுச் செய்தோரும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ வேதத்தைப் போதித்துக் கொண்டு நின்ற பாதிரியாருக்கும் அவர்களோடு சேர்ந்துநின்ற கிறிஸ்தவர்களுக்கும் இக்கதியே நேர்ந்தது.
அரசனுக்கும் நாட்டுக்கும் எதிராக செயற்பட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. தாய் நாட்டைக் காட்டிக்கொடுப்பது பெற்றதாயைக் கூட்டிக் கொடுப்பது போலாகும் என்று கூறியே சங்கிலி, காட்டிக்கொடுத்தவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். சங்கிலிமூத்தமகன் பரநிருபசிங்கனும் (வீரசிங்கனும்) அவன் படை 1500 வீரரும் போர்த்துக்கீசரால் பிடித்துச்செல்லப்பட்டனர். பரநிருபசிங்கனும் கிறிஸ்தவனாக மாறிபறங்கியருடன் சேர்ந்துகொண்டான்.
பறங்கியர் தப்பினோம் பிழைத்தோம் என்று காயப்பட்டவர்களையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று கப்பலேறி கோவா சென்றனர். கி.பி 1571ல் இப்பரநிருபசிங்கன் கோவாவில் இறந்தான். வைபவமாலையார் இவனை பரராஜ சேகரன் மகன் பரநிருபசிங்கனாக ஏற்றி வரைந்து வைத்தனர் போலும் என ஞானபிரகாசர் தெரிவித்துள்ளார். இவன் குடும்பமும் பறங்கியருட்ன் சோந்து கிறிஸ்தவமதம் தழுவினர்.
கி.பி 1560ல் நடந்த போரில் சங்கிலி பெருமளவு படையினரை இழந்திருந்தான். அத்துடன் நோய் வாய்ப்பட்டிருந்தான். இந்த சூழ்நிலையை பயன்படுத்திகொழும்பிலிருந்த பறங்கிப்படை மன்னாரைக் கைப்பற்றியது. சங்கிலி தன் மகன் கைதுசெய்யப்பட்டதால் மனமுடைந்திருந்தான். அதனால் அவனால் மன்னாரில் போரிட இயலவில்லை. கி.பி.1561ல் மன்னாரைக் கைப்பற்ற பெரும் போர் நடத்தினான். பெருந்தொகையான பறங்கிய படைகளை அழித்தான். ஆயினும் சங்கிலியால் வெற்றி பெற முடியவில்லை. சங்கிலியின் படைகளும் பெருமளவு அழிந்துபட்டன. சங்கிலியும் காயமடைந்தான். பறங்கியர்நல்லூரையும் தாக்குவதற்கு ஆயத்தமாகினர். சங்கிலியின் மகன்மார் பெரியபிள்ளை, காசிநயினார் தாம் அரசினைக் கைப்பற்ற முயற்சி எடுத்தனர். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த கதிர்காம சேகரன் பிள்ளைகளான இராச மகாராசா இராசசேகரம், தம்பி பண்டாரம் சேர்ந்து நல்லூரைத் திடீரென தாக்கி அரண்மனையைக் கைப்பற்றினார்கள். பெரியபிள்ளையும் காசிநயினாரும் பறங்கியருடன் சேர்ந்து
- 170 -

பல்லவராசசேகரம் கொண்டனர். பெரியபிள்ளையை அரசனாக்குவதற்கு பறங்கியர் முயற்சிசெய்தும் முடியவில்லை. சங்கிலி நோய்வாய்ப்பட்டு 1565ல் இறந்தான்.
அரசகுடும்பத்தில் பிறக்காதபடியாலும் கணிகை குலகாமக்கிழத்திக்கு பிறந்தபடியாலும் சங்கிலி அரசுரிமை இல்லாதவன். சங்கிலி மணிமுடியும் செங்கோனும் இன்றி சிங்காசனம் ஏறி ஆட்சிஅதிகாரம் செலுத்தியவன். அரசின் தலைவனாக இருந்தவன். சங்கிலி மன்னனாகத் தகுதி இல்லாதவன் என்ற படியால் அவனுக்கு முடிகட்டப்படவில்லை. சங்கிலியை மன்னன் என்று அழைக்கவில்லை.
மாறாக சங்கிலியன் என்றே அழைத்தார்கள் அரச சபையினரும் நாட்டுமக்களும் சங்கிலியோ, சங்கிலி பிள்ளைகளோ அரசகட்டில் ஏறுவதை விரும்பவில்லை. வெறுத்தார்கள். சூழ்ச்சியினால் அதிகாரத்தினைக் கைப்பற்றினாலும் சங்கிலி அரசன் என்ற பட்டத்தினைப் பெறமுடியவில்லை. காசிநயினார். குஞ்சிநயினார் என்பது வெள்ளாளரைக் குறிக்கும் பதங்களாகும்.
Srmafudaism marr Srma (8aasrub
போர்த்துக்கீசர் சங்கிலிமகன் பரநிருபசிங்கனை தம்மோடுசேர்த்துக் கொண்டனர். அவனுக்கு மக்களிடத்தில் மதிப்பு இருக்கவில்லை. போர்த்துக்கீசரும் சங்கிலி மகன் பரநிருசிங்கனைப் பொம்மை அரசனாக்க விரும்பினர். சங்கிலியின் இரண்டாவது மகன் பெரியபிள்ளை அதனை எதிர்த்தான் பெரியபிள்ளைக்கு சங்கிலிகாலத்து அரண்மனை ஊழியர், தாய்வழிஆதரவு இருந்தது. இவர்களின் ஆதரவை வைத்துக் கொண்டு போர்த்துக்கீசர் தாம் ஆட்சியைப்பிடிக்க முனைந்தனர். சங்கிலியின் மக்கள் போர்த்துக்கீசரின் ஆதரவைப்பயன்படுத்தி தாம் தாமே ஆட்சிக்கு வரமுயன்றனர். சங்கிலியன் வாரிசுகளான பரநிருபசிங்கன் பெரியபிள்ளை. குஞ்சிநயினர் காசிநயினார் பறங்கியருடன் சேர்ந்து கிறிஸ்தவர் களாக மதம் மாறி தாய் நாட்டை பறங்கியருக்கு காட்டியும் கொடுத்தனர். பறங்கியரும் அவர்களுக்கு பதவிவழங்கிச் சேர்த்துக் கொண்டார்கள்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து வந்த முடிக்குரிய வாரிசு இராசசேகரம் இவர்களைத் தோற்கடித்து 1561ல் அரசனாக முடிகடினான். அப்பொழுது பரராசசேகரனின் முடி இராசசேகரத்திற்கு சூட்டப்பெற்றது. அரச அவையினரும் நாட்டு மக்களும் அரசகுடும்பத்தில் பிறந்தவர்கள் நாட்டை
- 171 -

Page 88
பல்லவராச்சியம் ஆளவேண்டும் என்று விரும்பினார்கள். சங்கிலியினால் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டு புதிதாக பல்லவ நாட்டினரை பணியாளர்களாக நியமித்தான். குமாரமடப்பள்ளியினரையும் நீக்கினான். மீண்டும் பல்லவத்தின் இராச மடப் பள்ளியினரை அரண்மனைச் சமையற்காரர்களாக நியமித்தான். தாயக மண்ணில் அந்நியன் காலடி படலாமா? ஆர்ப்பரித்தான்.அரச குடும்பத்தில் பிறந்ததால் வீரதீர பராக்கிரமம் நிறைந்தவனாக இருந்தும் அரசபண்புகளை மதித்துநடந்தான். 1570ல் மன்னாரைக் கைப்பற்ற பெரும் போர் நடாத்தினான். பெருமளவில் போர்த்துக்கீசப்படைகளைக் கொன்று குவித்தான்.
பல்லவம் பணிந்து விடாது. தாய்நாட்டை தமிழ் மறவர் காப்பாற்றுவர் என முழங்கினான். அதேநேரத்தில் நல்லூரில் போர்த்துக்கீசர் போர் தொடுத்தனர். நல்லூருக்கு மன்னார். கோவா, கொழும்பிலிருந்தும் போர்த்துக்கீச படைகள் வந்து சேர்ந்தன. சங்கிலிபரநிருபசிங்கனும், போர்த்துக்கீசருடன் சேர்ந்து போரிட்டான். கழ்ச்சியால் போரில் காயமடைந்தான். இராசசேகரம் வீரசுவர்க்கமடைந்தான். பறங்கியர் அவன் தலையை வெட்டிக் காட்சிக்கு வைத்தனர். அவன் மகன் சிறுவனாக இருந்தபடியால் அவன் பராயம் அடையும் வரை மன்னனின் தம்பி பண்டாரம் ஆட்சிசெய்தான்.
Lq6íipTmragFmr u60airLlmrprib
இளவரசன் கதிர்காம சேகரனின் இரண்டாவது மகனே புவிராசா பண்டாரம். அரச குடும்பத்தவனான இவ்வேந்தன் கி.பி 1571 இல் நல்லூர் அரசனாக முடிகழனான். பெரியபிள்ளையும் குஞ்சிநயினாரும் அரசராகவரஎடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இவர்களை அரசினைக்காட்டிக்கொடுத்த கீழ்த்தரமானவர்களாகவே நாட்டுமக்கள் மதித்தனர். உள்நாட்டில் கலகத்தினை உண்டுபண்ணி போர்த்துக்கீசர் வருகைக்கு கதவை திறந்துவிட முயன்றனர். 1582 இல் இந்தியாவின் நாயக்க அரசர்களின் உதவியுடன் மன்னன் மன்னாரைக் கைப்பற்றப் போரிட்டான். அப்போரில் வெற்றி கிடைக்கவில்லை 1590 இல் மீண்டும் பெரும் படைதிரட்டி மன்னார்த் தீவினைக் கைப்பற்ற முயன்றான். இருபகுதிப் படைகளும் பெருமளவில் அழிந்தன. மன்னாரைக் கைப்பற்ற முடியவில்லை.
புவிராசபண்டாரம் தன்னையும் பரராசசேகரச் சக்கர வர்த்திஎன்றே அழைத்தான். 1591இல் ஆவணிமாதம் இந்தியாவிலிருந்து கூலிப்படைகளை - 172 م.

பல்லவராசசேகரம் வரவழைத்தான். மன்னார் மீது போர் தொடுத்தான். இந்தியப்படைகளை கடலில் வைத்து போர்த்துக்கீசர் அழித்து விட்டனர். உதவிக்கிடைக்காத படியால் மன்னனின் படைகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. 1591 இல் ஐப்பசிமாதம் கத்தோலிக்க குருமாரின் ஆசிர்வாதத் தோடும் கத்தோலிக்கர்களாக மதம் மாறியவர்களுக்காகவும் பெரியபிள்ளை, குஞ்சிநயினார் என்ற சங்கிலியின் மக்க ளுக்காகவும். போர்த்துக்கீசர் நல்லூரில் படை எடுத்தனர். பெரும் இரத்தம் சிந்திய போர் நடந்தது. போரில் காயமடைந்த மன்னன் சில நாட்களில் இறந்தான். போர்த்துக்கீசரால் எமது நாட்டைக் கைப்பற்றமுடியவில்லை.
எதிர்மனினசிங்க பரராசசேகரனி
இராசசேகரம் மகன் எதிர்மன்னசிங்கன் பரராசசேகரன் என்ற பட்டத்துடன் கி.பி 1591ல் அரசு கட்டில் ஏறினான். இவன் பேரனான இளவரசன் கதிர்காமசேகரனால் கி.பி 1520ல் கட்டப்பெற்ற பறளைவிநாயகர் ஆலயம் பழுதடைந்துவிட்டதால், அதனை இடித்து புதிதாகக்கட்டி திருமஞ்சனக்கிணறும் வெட்டி கி.பி1615ல் குடமுழுக்குச் செய்தான். பறங்கியருடன் 100 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்த போர்களில் வெற்றி பெற்றாலும், பெருந்தொகை வீரர்கள் சுவர்க்கம் சென்றதனால் அரசுக்கும் நாட்டுக்கும் பெருமளவு குடிமக்கள் இழப்பு ஏற்பட்டது. படைபலம் குறைந்தாலும். மன்னன் ஆட்சியைத் திறமாக நடாத்தி வந்தான். மேலும் படை இழப்பினை ஏற்படாமல் தடுப்பதற்கும். போரினைத் தவிர்ப்பதற்குமாக, எதிர்மன்னசிங்கன் பறங்கியர் வியாபாரம் செய்யவும், மதம் பரப்பவும் நாட்டில் இருந்த தடையை நீக்கினான். இதனை நாட்டுமக்கள் வெறுத்தார்கள். மதம் மாற்றம் செய்வதற்கு முனடியடித்த பாதிரியார்கள் மக்களால் கொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கத்தோலிக்க மதத்தினை தமது இராச்சியத்துள் ஊடுருவ விடுவதன் மூலம் கத்தோலிக் மதத்திற்கு மாறியவர்கள் தமது நாட்டுக்கு விசுவாசிகளாக இருக்காது புதிய மதத்தினை புகுத்திய வருக்கும் பறங்கியருக்கும் விசுவாசமாக இருக்கின்றனர். அதன் மூலம் நல்லூர் அரசின் தன்னாதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்மன்னசிங்கன்நம்பினான்.
தமது பலத்தை அதிகரிப்பதற்காக, கண்டி அரசன் சேனரத்துடன்
நட்புக்கொண்டு. பொது எதிரியான பறங்கியரை ஒழிக்க ஒன்றாக இணைந்தனர்.
ஒருவருக்கு ஒருவர்படையுதவிபுரிந்தனர். இதனை அறிந்த பறங்கிகள் பயந்தனர்.
நட்புறவை நிரந்தரமாக்க இரு மன்னர்களும் விரும்பிசேனரத்மன்னன் தனது - 173 -

Page 89
பல்லவராச்சியம் குமாரர்களான குமாரசிங்கனையும் விஜயபாலனையும் எதிர்மன்னசிங்க மன்னன் குமாரத்திகளில் இருவருக்கு மனம் முடித்து வைத்தான். இதனைக் கண்டuறங்கிகள் நடுக்கடுமுற்றுபடை எடுக்க அஞ்சினர். எதிர்மன்னசிங்கனின் மூத்த குமாரத்திசுந்தரவல்லிசிங்கை அரசகுடும்பத்தின் குலசேகரனை மணஞ் செய்தாள். கண்டி அரசியின் குன்மநோயை ஒருநேர மருந்தில் நீக்கியவன் இந்த குலசேகரன் ஆவன். அதற்காக கண்டி மன்னன் குலசேகரனுக்கு பொன்னும் நவமணியும் இரத்தின சிவிகையும் பரிசாக அளித்தான்.
கத்தோலிக்க மதம் பரப்பப்படுவதை மன்னன் விரும்ப வில்லை. அதற்கு எதிராக மன்னன் செயற்பட்டான். மதம்மாறியவர்கள் போர்த்துக்கீசருடன் சேர்ந்து கொண்டனர். மன்னன் இறக்கும்போது தனது பதினொரு வயது மகனை வாரிசாக நியமித்ததால் அவனுக்கு முடிகட்டினர். தாய் மாமன் பாதுகாப்பாக இருந்தான்.

தாய் மாமனான அரசகேசரியின் உதவியுடன் பதினொரு வயது இராசசிங்கனுக்கு கி.பி1619ல் முடிகட்டினார்கள். காசிநயினாரும் சங்கிலி(2)யும் போர்த்துக்கீசருடன் ஒப்பந்தம் செய்தனர்.போர்த்துக்கீசப் படைகளின் உதவியுடனும் சங்கிலி (2) அரசகேசரியையும். இராசசிங்கன் என்ற மன்னனையும் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். காசிநயினாரும் போரில் கொல்லப்பட்டான். முடிக்குரிய வாரிசுவும் எதிர்மன்னசிங்கன் மகளின் கணவனுமான கோமகன் குலசேகரன் பொன்முடியையும் செங்கோலையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டான். வாரிசு உரிமை அற்றவனும் அரசகுடும்பத்தைச் சேராதவனுமான சங்கிலி(2) தனது முன்னோனான சங்கிலி போல நயவஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்தினான். பரம்பரை அலகுகளின் தன்மையை மாற்றமுடியாது தொடரும் என்பதற்கு இது சான்று. போர்த்துக்கீசர் முடிக்குரிய வாரிசு ஆட்சிக்கு உரிமை கோரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உண்மையில்லை. குலசேகரன் படைதிரட்டி பல்லவத்தின் மன்னனாக தான் அரச சபையினருடைய ஒத்துழைப்புடனும் மக்களின் ஆதரவுடனும் முடிகடி போட்டியாக ஆட்சி நடத்தினான். சங்கிலி (2) அரசனாக இருக்கவில்லை. ஆள்பதியாக போர்த்துக்கீச அரசின்கீழ் செயற்பட்டான். அதனாற்தான் சிலர் 1819ல் போர்த்துக்கீசர் ஆட்சி ஆரம்பமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.
- 174 -

பல்லவராசசேகரம் agamass6 (II) (1619 - 1620)
பெரிய சங்கிலியின் பீட்டனான இவன் இரண்டாவது சங்கிலியாவன். இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் 1619ல் பறங்கியருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். போர்த்துக்கல் அரசனை ஏற்றுக்கொள்வதாகவும், திறை செலுத்து வதாகவும். கோட்டைகட்டவும், வாணிபம் செய்யவும், கிறிஸ்தவமத போதனை செய்யவும். தேவாலயங்களைக் கட்டவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டதால், போர்த்துக்கீசரின் படைகள் இவனுடன் சேர்ந்து போரிட்டு 1619ல் மன்னன் இராசசிங்கனைக் கொன்று, ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றி, போர்த்துக்கல் அரசரின் ஆள்பதியாக இருந்து அதிகாரம் செலுத்தினான். அரசசபையினர் அரண்மனைப் பணியாளர்கள் அரசினைக் காட்டிக் கொடுத்த சங்கிலியை வெறுத்தனர். எதிராக இருந்தனர். சங்கிலி அரண்மனையில் மடப்பள்ளியாக இருந்த பரநிருபசிங்கன், பரராசசிங்கன் ஆகியோர் கத்தோலிக்கப்பாதிரியாருடன் உறவுபூண்டு போர்த்துக்கீசருக்கு ஆதரவாகச் செயற்பட்டனர். ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாது பறங்கியரை சங்கிலிஏமாற்றிவந்தான்.
சங்கிலி. மக்களைத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தி வந்தான். போர்த்துக்கீசருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை மீறியதால் கி.பி 1620ல் போர் தொடுத்தனர். போரின்போது பரநிருபசிங்கன்.பரராசசிங்கன்பறங்கியரோடு: சேர்ந்து செயற்பட்டு. சங்கிலியை காட்டிக்கொடுத்து, அவன் கைதுசெய்யப்பட்டான். சங்கிலியை இந்தியாவுக்குக் கொண்டு சென்று சிரச்சேதம் செய்தனர். சங்கிலி மனைவி பிள்ளைகள் பறங்கியரிடம் சரணடைந்து கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறினார்கள். இந்தச்சங்கிலிஅரசகுடும்பத்தில் தோன்றாதவன். அரசவம்சத்தைச் சேராத காசிநயினார் மகன். இவனைக் காட்டிக்கொடுத்த 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பரநிருபசிங்கனுக்கும் அரசகுடும்பத்திற்கும் எவ்வித உறவும் இருந்த தில்லை. இவனுக்கு இராசமடப்பள்ளிகுமாரமடப்பள்ளியே உறுதிச் சுற்றம் என்று காணப்படுகிறது.
சங்கிலியை கைது செய்த பின்னர் பறங்கிப்படைகள் தமது வெறியாட்டங்களை தொடங்கினார். பறங்கிகள் மக்களை அச்சுறுத்திமதமாற்றம் செய்தனர். குடிகளை கிறிஸ்தவர் ஆகுமாறு நெருக்கினர். அது செய்யாதவரை ஒறுத்தனர். அவர்களின் பொருளைக் கவர்ந்தனர். கிறிஸ்தவர் ஆகினார்க்கு பலவித உத்தியோகங்களைச் கொடுத்தனர் என முத்துத்தம்பிள்ளை தெரிவித்துள்ளார். மன்னனுக்கு வெற்றியைத்தருவது வேல் போன்ற ஆயுதங்கள் - 175 -

Page 90
பல்லவராச்சியம் இல்லை, வளையாத செங்கோல் ஆகும்.
பறங்கியர்நல்லூர் அரண்மனையை சூறையாடினர். பெறுமதிமிக்க செல்வங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தானர். நவமணிகள் இழைக்கப் பெற்ற நல்லூரின் தங்கச் சிம்மாசனத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். ஏழுபடிகளுடன் கூடிய சிம்மாசனத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. இருக்கையை மட்டும் உடைத்து எடுத்துச் சென்றனர். இது போர்த்துக்கலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயங்கள் உடைக்கப்பட்டு விலை மதிக்க முடியாத பொன்னாபரணங்கள் கொள்ளையிடப்பட்டன. நகரமாந்தர்களின் நகைகள் பணம் பறிக்கப்பட்டன. இந்த அநியாயங்களை, அட்டூழியங்களை பறங்கியர் புரிவதற்கு பரநிருபசிங்கனும், பரராசசிங்கனும் அவர்களுடன் உடந்தையாகவும், உறுதுணையாகவும் இருந்தனர். சைவ ஆலயங்களை பறங்கியர் இடித்தது தவறு. அதனை ஞானப்பிரகாசர் நியாயப்படுத்த முற்பட்டது அதனை விட பெரியதவறு.
இராசதுரோகிகளுக்குப் பரிசு
பறங்கியருக்கு ஆட்சிகிடைக்கச் செய்தமைக்காகப் பரநிருபசிங்கனுக்கு தலைமை முதலியார் (திரவியசாலைப் பொறுப்பு) பதவியும். மகன் பரராசசிங்கனுக்கு முதலியார் (கிராம அதிகாரம்) பதவியும் கொடுத்துத் கொள்ளையடித்த செல்வத்தில் பெருந்தொகையான பணத்தையும் பறங்கிகள் கொடுத்து கணப்படுத்தி வந்தனர். பறங்கியருக்கு உவப்புடையவராக இவர்கள் விளங்கினர். இவர்களுடைய எண்ணப்படியே அரசு புரிந்து வந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதனால், பறங்கிய அரசு. காட்டிக் கொடுத்த இருவருக்கும். மிக உயர்ந்த அதிகாரமிக்க பதவிகளைக் கொடுத்து மதிப்பளித்துள்ளது. சுயநலத் திற்காகவும், சுயலாபங்களுக்காகவும்நாட்டைக்காட்டிக்கொடுத்ததோடுநில்லாமல், அந்நியர் ஆட்சி சொந்த மண்ணில் நிலைக்கவும் கோடரிக்காம்பாக செயற் பட்டுள்ளனர். பரநிருபசிங்கனுக்கு முதலிப்பட்டமும் பரராசசிங்கனுக்கு மடப்பள்ளி என்னும் பட்டம் கட்டி பறங்கியர் கணப்படுத்திவந்தார்கள். மடப்பள்ளியாக பட்டம் சூட்டும்போது பரராசசிங்கனுக்கு 500 கிராமங்களை பறங்கியர் வழங்கவில்லை என்பதனால், முதலியார் மடப்பள்ளிபதவிகொடுத்துள்ளார்கள். மேலும் சங்கிலி (2) அரசில் அவன் வகித்த பதவியை, பறங்கிகளும் வழங்கினார்கள் என்று காணப்படுவதனால், முன்பும் இருவரும் மடப்பள்ளியாக வேலை" செய்தார்கள். இவர்களில் ஒருவன்தான்மரபாலுயர்ந்த முதலியாகபதியப்பட்டவன் - 176

பல்லவராசசேகரம் என்ற மயக்கம் காணப்படுகிறது. 1470ல் பிறந்த வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த வள்ளியம்மை மகன் பரநிருபசிங்க முதலி வேறு. நாட்டைக்காட்டிக்கொடுத்த மடப்பள்ளி வேலைசெய்த பரநிருபசிங்கன் வேறு. பறங்கியர் காக்கை என்றவன்தான் காட்டிக்கொடுத்தான் அவனுக்கே திரவியசாலைத் தலைமை முதலிபதவிவழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். வள்ளியம்மை மகன், பரநிருபசிங்கமுதலி 160 ஆண்டுகள் வாழ்ந்து காட்டிக் கொடுத்துப்பதவிபெற்றான் என்பது வெறும் புனைகதையாகும்.
போர்த்துக்கீச மன்னன் லிஸ்பனில் இருந்துதான் ஆட்சிநடத்தினான். அதனால் அவன் மந்திரிகள் லிஸ்பனில் தான் இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் படைத்தளபதி, ஆளுநர் ஆகியோரே ஆட்சி செய்தனர். படைத்தளபதியோ ஆளுநரோ மந்திரிப்பதவி வழங்கியதாக காணப்படவில்லை. அக்காலத்தில் யாழ்ப்பானத்தவருக்கு வழங்கிய அதி உயர் பதவி திரவியசாலைத் தலைமை பதவி, முதலியார் மட்டுமே ஆகும். புலவர் வைபவமாலையில் 90ம் பக்கத்தில் மரபாலுயர்ந்த முதலிக்குத்தான் பறங்கியர் திரவியசாலைத் தலைமைப்பதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார். நூறு வருடங்களுக்கு முன்னர் இறந்து போன பரநிருபசிங்கமுதலிக்கு இல்லாத பதவியை பறங்கியர் வழங்கியதாகக் காணப்படுகிறது.
பரராசசிங்கன் சந்ததியினர் பற்றியும் அவர்கள் அந்நியரை ஆதரித்து அந்நியரின் ஆட்சியில் பெற்றுக் கொண்ட உயர்பதவிகள், பட்டங்கள். வெகுமானங்கள்பற்றியும் விபரமாக புலவர் தெரிவித்துள்ளார். அந்நியரான பறங்கி அரசினர் எமது நாட்டை அடிமைப்படுத்தவும் தொடர்ந்து ஆட்சி நடாத்தவும் மடப்பள்ளிபரராசசிங்கனும் அவன் சந்ததியினரும் ஆதரவாக இருந்துள்ளனர். துணை போயுள்ளனர். சங்கிலி உயிருடன் இருந்திருந்தால் அரசினைக்காட்டிக் கொடுத்தராஜதுரோகிகளுக்கும், நாட்டைக்காட்டிக்கொடுத்ததேசத்துரோகிகளுக்கும் நிச்சயம் தண்டனை வழங்கியிருப்பான். பரநிருபசிங்கன் சம்பந்தமான காலம் ஆதாரமற்ற வெறும் கதைகள் (என யா. ச. பக் 10) காக்கையை காக்கை வன்னியன் என மாறுதலான கதைகளை வரைந்ததோடு பல வருடங்களின் முன்னர் இறந்து விட்ட சங்கிலி பரநிருபசிங்கன்முதலியவர்களை 1620ல் வாழ்ந்ததாகக் காட்டி வினோதமான சரித்திர மொன்றை ஏற்படுத்திவிட்டது (யா.வை.கெள. பக். 56) மயில் வாகனப் புலவர் பறங்கியர் காலத்து அரசர்களைப்பற்றி வரைந்து வைத்தன எல்லாம் தலைதடுமாற்றமான
... 177

Page 91
பல்லவராச்சியம் தப்பறைகளேயன்றிசரித்திரமல்ல(யா. வை. வி. 144 பக்). பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.
இராசா குலசேகரனி
கி.பி. 1819ல் சங்கிலி சூழ்ச்சியால் மன்னன் இராசசிங்கனைக் கொன்றான். போர் நடந்துகொண்டிருந்த வேளையில் எதிர் மன்ன சிங்கப்பரராசசேகரனின் மூத்த மகளான சுந்தரவல்லியின் கணவனும் மன்னன் இராசசிங்கனின் மைத்துனனும் அரசின் முடிக்குரிய வாரிசுவுமாகிய கோமகன் குலசேகரன் அரசின் செங்கோலையும் மணிமுடியையும் எடுத்துக் கொண்டு அரண்மனையிலிருந்து வெளியேறினான். நல்லுTரின் அரசவையைச் சேர்ந்தவர்களும், அரசகுடும்பத்தவர்களும்நல்லூர் இராச்சியத்தின்மணிமுடியை கி.பி 1619ல் குலசேகரனுக்குச் சூட்டினர். எதிர்மன்னசிங்கப் பரராசசேகர சக்கரவர்த்தியின் சம்பந்தியான கண்டி அரசன் சேனரத்ம், அவனுடைய குமாரர்களும் குலசேகரனுடைய சகலருமான குமாரசிங்கவும், விஜயபாலவும், உறவினராகிய வன்னி அரசன் குலசேகரமும் முடி சூட்டுவதற்கு ஆதரவு நல்கி அதில் கலந்துகொண்டனர். குலசேகரன் படை கொடி, குடை, குடி, முரசு, குதிரை, யானை, இரதம், தார் எல்லாவற்றுடனும் முடிகடி சுழிபுரத்தில் இருந்து ஆட்சி செலுத்தினான். சேரைத்மன்னன் குலசேகரனுக்கு ஆதரவாக முடிகட்டுவிழாவில் பங்குகொண்டதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு கி.பி 1619 லிருந்து நல்லுள் இராச்சியம் கி.பி 1634 வரை கண்டி அரசனின் ஆட்சி இடம் பெற்றதாக தெரிவித்துள்ளது தவறாகும். படைபலம் குறைவாக இருந்தபடியால் Ф ц60ї போரிடவில்லை. அதனால் பறங்கியர்நல்லூர் இராச்சியத்தின் முடிக்குரிய வாரிசு அரசுக்கு உரிமை கோரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வன்னிமன்னனின் படை உதவியைப் பெற்று பறங்கியருக்கு எதிராக தொண்டைமானாற்றிலும், தென்மராட்சியிலும் போரிட்டாலும் வெற்றிபெற வில்லை. அதேவேளை பறங்கியரின் ஆட்சிஅதிகாரியாக சங்கிலிIஅதிகாரம் செலுத்தினான். குலசேகரன்நல்லூர் இராச்சியத்தின் இறைமையை அந்நியரிடம் இழக்கவில்லை. சுழிபுரத்திலிருந்து இழந்த அதிகாரத்தினை மீட்கப்போராடினான். பல்லவம்பறங்கியர் ஆட்சிக்குட்பட்டிருந்ததாயினும்கண்டி அரசன் ஆதரவினாலும் வன்னி அரசின் ஆதரவினாலும், குலசேகர மன்னனே அதனை ஆண்டு வந்தான். கண்டி அரசனும், வன்னி மன்னனும் நல்லூர் அரசு அந்நியரின் அதிகாரத்தின் கீழ்வருவதை எதிர்த்தார்கள். நல்லூரின் ஆட்சிக்குரிய வாரிசான
- 178 -

பல்லவராசசேகரம் அரசன் ஆளவேண்டும் என்று கருதிச் செயற்பட்டார்கள். நல்லுள்வீழ்ந்துவிட்டால் அடுத்துவன்னி, கண்டி அந்நியர் வசமாகும் என்பதை அறிந்திருந்தனர்.
குடிமக்கள் பெரும்பாலும் குலசேகரனுக்குவிசுவாசமாக இருந்தார்கள். பல்லவ அரசமரபுகளைப் பேணி போட்டியாக ஆட்சி செலுத்தினான். 1655ல் பறங்கியருடன் சுழிபுரத்தில் சண்டை நடந்தது. வெல்லமுடியாத நிலையில் விநாயகரை வேண்ட காகங்கள் பறந்து பறங்கியரின் கண்களைக் கொத்திக் காயப்படுத்தியது. பறங்கியரை குலசேகரன் கொன்றிருக்கலாம் கொல்லாதபடியால் பறங்கியர் குலசேகரனை தம்பக்கம் சேருமாறும், ஆட்சிநடத்த உதவுவதாகவும் அரசுரிமை கோரவில்லை என்று எழுதித்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மன்னன் அதனை ஏற்க மறுத்து விட்டான். "யாரொருவர் தங்களுடைய நிகழ்காலப் பாதுகாப்புக்காக சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து விடுகிறார்களோ அவர்கள் சுதந்திரத்திற்கு உரியவர்கள் அல்லர்” என்று பெஞ்சமின் பிராங்லின் கூறினான். தமதுபாதுகாப்புக்காக நாட்டினை இறைமையை விட்டுக் கொடுக்காது. தமது தன்னாதிக்கத்தினை இழக்காது குலசேகரன் போராடினான். அக்காலத்தில் வன்னியில் அரசர்களாக இருந்த குலசேகரம். கயிலைவன்னியன் சிங்கை அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்களாவர். குலசேகரனுக்கு அவர்கள் உறவினர்களாக இருந்தபடியால் ஆதரவு, படை உதவி செய்து பல்லவத்தில் குலசேகரன் ஆட்சி நிலைத்துநிற்க வன்னிஅரசர்கள் உதவினார்கள்.
அரசவம்சத்தினர் யாரும் நாட்டைப் போர்த்துக்கீசரிடம் காட்டிக் கொடுக்கவில்லை. அரசபரம்பரையினர் அந்நியரிடம் அடிமைச் சேவகம் செய்யவில்லை. உண்மையான அரச குடும்பத்தவருக்கோ அரச தலைமுறையி னருக்கோஎதிராகவோ, மாறாகவோ காட்டிக்கொடுக்கவோ மடப்பள்ளிபணியாளர் செயற்படவில்லை. போர்த்துகீச அரசில் பரநிருபசிங்கன் தலைமை முதலியாராக, பரராசிங்கன் கிராமதிகாரப் பதவி வகித்த காலத்தில்தான். போர்த்துக்கீசர் நல்லூர்கந்தசாமி கோவிலை இடித்து தரைமட்டமாக்கி விட்டு அவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கட்டினர். நாட்டின் செல்வம், அரண்மனைச் சேமிப்புக்கள், செல்வங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன, சைவ கோவில்கள் இடிக்கப்பட்டன.நாட்டுப்பற்றாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
“கி.பி 1518, கிபி 1543. கி.பி 1561. கி.பி 157O, கி.பி 1592 ஆகிய
ஆண்டுகளில் போர்த்துக்கீசர் நிகழ்த்திய பெரும் படையெடுப்புகள் தோல்வி
கண்டன. உள்ளிருந்த குரோதங்கள் இறுதியில் ஆக்கிரமிப்புக்கான கதவுகளை سه 179 -

Page 92
பல்லவராச்சியம் திறந்துவிட்டன. கப்பம்செலுத்துதல்வர்த்தகத்தில் ஆதிக்கம், மதமாற்றம் என்பன முக்கியபிரச்சினைகளாக இருந்தன” என பாக்டர் இ.மு.வி நாகநாதன் (1.3.2002 வீரகேசரி) தெரிவித்துள்ளார் 1620ல் நல்லூரின் ஆட்சிஅதிகாரத்திலிருந்த சங்கிலி கைது செய்யப்பட்ட போது அவனைக் காட்டிக் கொடுத்தவன் காக்கை என்று போர்த்துக்கீசர் குறிப்புகள் தெரிவித்துள்ளன. காக்கையும் அவனும் உறவினரும் கிறிஸ்தவர்களாக மாறி போர்த்துக்கீச அரசில் இணைந்து நிதிப்பண்டாரம் திரவியசாலைத் தலைமை மாதாக்கன், முதலியார், மணியகாரன், உடையார் பதவிகளை பெற்றுக் கொண்டனர். செல்வம் செல்வாக்கு பட்டம், பதவி. சொத்து, அதிகாரம் எல்லாம் இந்நியமனங்களுடாக பெற்றுக் கொண்டனர். காக்கை என்றால் அரண்மனைச் சமையற்காரன் என்று கூறப்படுகிறது. காக்கை (தம்பியை புலவர் காக்கை வன்னியன் என்று குறிப்பிட்டது சில உண்மைகளை மறைப்பதற்காகவா? ஒல்லாந்தரின் கொடுமைகளையும். கொடூரங்களையும்மூடி மறைத்துவிட்டு அவர்கள் நல்லாட்சிநடத்துகிறார்கள் என புலவர் தெரிவித்தது ஏன்?
கி.பி 1478ல் ஆட்சிப்பீடம் ஏறிய பரராசசேகர சக்கரவர்த்திக்கும் வெள்ளளகுடும்பத்தைச்சேர்ந்தவள்ளியம்மைக்கும் 1470ல் பரநிருபசிங்கமுதலி பிறந்தான். இவன் 1620ல் சங்கிலியைக' காட்டிக் கொடுத்தான் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினான். கி.பி.1621ல் முதலியாராக நியமிக்கப்பட்ட மடப்பள்ளி குடும்பத்தைச் சேர்ந்த பரராசசிங்கன் இவனுடைய மகன் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.நடைமுறைச் சாத்திய மற்றது. உண்மைக்கு முரணானது. அத்தோடு வித்தில்லாச் சம்பிரதாயம் ஆகும். ஏனெனில் பரநிருபசிங்க முதலி கி.பி 1543ல் சங்கிலியால் கொல்லப்பட்டதாக ஞானபிரகாசர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே 1621ல் அவன் 16O வருடங்கள் வாழ்ந்து பறங்கி அரசில் உயர்பதவிவகித்தான். அவன் மகன் பரராசசிங்கன் முதலியாராக பதவிவகித்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல புனையப்பட்ட கதையாகும். பரநிருபசிங்க முதலி இறந்து பல வருடங்களின் பின் பிறந்தவன் பரராசசிங்கன் என்பதனால் பரராசசிங்கன் இந்த பரநிருபசிங்கமுதலியின் மகன் அல்ல. 1560க்கு பின் ஆட்சியிலிருந்ததமிழரசர்களையும், இளவரசர்கதிர்காமசேகரனையும் மறைத்து விட்டு வழமைக்குமாறாக பிறந்த பரநிருபசிங்க முதலியை அரசசந்ததிஎனபுலவர் குறிப்பிட்டுள்ளார்
மடப்பள்ளியார் இந்தியாவில் இருந்து வந்த சாதியினர் என்று ஒரு
- 180

பல்லவராசசேகரம் நூல் கூறுகிறது. யாழ்ப்பானவைப மாலையார் சங்கிலி மன்னன் 500 கிராமங்டுமடப்பம்)களை பரநிருபசிங்கனுக்கு வழங்கி மடப்பள்ளி என்று பட்டம் சூட்டியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 500 கிராமங்களை எவை என்று தெரிவிக்கவில்லை. சங்கிலி இவர்களை மடப்பள்ளியாகநியமித்துள்ளான். சங்கிலி காலத்தில் அவன் ஆட்சியின் கீழ் 158 கிராமங்கள் மட்டுமே இருந்துள்ளன என்பதால் 500 கிராமங்களை அவன் வழங்குவது இயலாதது. எனவே அதில் உண்மை இல்லை. மடப்பம் என்ற சொல்லுக்கும்மடப்பள்ளிஎன்று சொல்லுக்கும் வேற்றுமை உண்டு. புலவருக்கும்வித்தியாசம் தெரியாமல் போனதா? இவ்வாறு மடப்பள்ளி பற்றி பல கதைகள் புனையப்பட்டுள்ளன.
“அந்தப்புரத்தின் அடுக்களையில் சமையல் வேலை செய்ததாய்க்கும், முன்னாள் அரசருக்கும், திருமணபந்தம் இன்றித்தோன்றிய ஒருவித்தியாசமான சாதியினர், மடப்பள்ளியார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத் தில் மட்டுமே காணப்படுகின்றனர். மடப்பள்ளியில் வேலை செய்தவர்களே மடப்பள்ளியார் என் வெள்ளாளர் தெரிவிப்பதாகவும்.” சைமன் காசிக் செட்டி குறிப்பிட்டுள்ளார். மடப்பள்ளியார் இந்தியாவில் இருந்து வந்தனர் என்பதை இவர் மறுத்துள்ளார். அவ்வாறு திருமணபந்தம் இல்லாத உறவு கூட இருந்தாக இல்லை. ஒல்லாந்த தேசாதிபதி வான்றி மன்னர் காலத்தில் பிராமணர்களின் சமையற்கூடத்தில் வேலை செய்தவர்கள். மடப்பள்ளியார் என அழைக்கப்பட்டனர் என்று தமது நினைவேட்டில் தெரிவித்துள்ளார். சுன்னாகம் கு.முத்துக்குமார சுவாமிப்பிள்ளை மடப்பள்ளியார் இந்தியாவிலிருந்து வரவில்லை. அரசகுடும்பங் களுக்கு சமையல் செய்தவர்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளார். இருவர் செய்த துரோகத்திற்காக மடப்பள்ளி குடியினர் எல்லோரையும் துரோகம் செய்தவர்களாக கருதக்கூடாது.
ஒரு நூலில் காக்கை காட்டிக் கொடுத்து உயர் பதவி பெற்றதாகவும் வேறு நூலில் பரநிருபசிங்கன் காட்டிக் கொடுத்து உயர்பதவி பெற்றதாகவும் காணப்படுவதால்மடப்பள்ளிபரநிருபசிங்கன் சங்கிலியை காட்டிக்கொடுத்துபறங்கி அரசில் உயர்பதவி பெற்றான் என்ற முடிவுக்கே வரமுடிகிறது. பல்லவநாட்டு மரபுகளின்படி முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை கூறியதுதான் உண்மையாகும். தமிழ் வழக்கப்படி பதினெட்டுக்குடிகளில் மடப்பள்ளியார் ஒரு குடியாகும். காட்டிக் கொடுத்தவர்களை பண்புடையோர். உயர்ந்தோர், நாட்டுப் பற்றுள்ளோர் இகழ்ந்தனர். தாழ்த்திப் பேசினர். மடப்பள்ளியரை முதலிகளாகப் பதிந்து பதவி
- 181 -

Page 93
பல்லவராச்சியம் களையும் போர்த்துக்கீசர் வழங்கியதால் வெள்ளாளருக்கும் மடப்பள்ளியாருக்கும் பனிப்போர் நடந்தது. இந்தப் பணிப்போர் பறங்கியருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்தது.
முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை மேலும் தெரிவிக்கையில் வெள்ளாருக்குப் போட்டியாக மடப்பள்ளியாருக்கு கிராமதிகார உத்தியோகம் கொடுக்கப்பட்டபோதும் அவர்களுக்கு வெள்ளாளருக்குரிய முதலிப்பட்டம் கொடுக்கப்பட்டபோதும் இரு பகுதியாருக்கும் இடையில் தீராப்பகை ஏற்பட்டது என்று கூறியுள்ளார். பறங்கியருக்கு பரராசசிங்கன்நாட்டைக்காட்டிக்கொடுத்ததால் மடப்பள்ளியாரின் செல்வாக்கு உயர்ந்தது. அடுத்து நூறு வருடங்களுக்கு மேலோங்கியது. ஒல்லாந்தர் ஆட்சியின் போது வெள்ளாளருக்கு மடப்பள்ளியாரிலும் கூடின உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டன. மடப்பள்ளியார் தாமும் வெள்ளாளருக்குச் சமம் என்று வாதாடி 1694ல் சகல உரிமைகளையும் பெற்றனர். மடப்பள்ளியாருக்கு உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டதை மறுத்து வெள்ளாளர் கலகம் விளைவித்தனர். மடப்பள்ளியார் செல்வாக்கு நாளடைவில் குறைந்தது. உலக்கை தேய்ந்து உளிப்பிடியான வாறாய் உழவர் தாமும் மடப்பள்ளியாரைத் தாழ்த்திப் பேசவும் தலைப்பட்டனர் என்று ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
கி.பி 1621ல் வழமைக்கு மாறாக மடப்பள்ளியாருக்கு முதலி பட்டம் வழங்கப்பட்டபோதே உழவர் இவர்களைத் தாழ்த்திப் பேசினார்கள். அதன் காரணமாக இவர்கள் முதலியார் உத்தியோகத்தைப் பயன்படுத்தி இந்தியா விலிருந்து தமது பணிவிடைகளுக்கு சிறை அடிமைகளை வரவழைத்தனர். கி.பி 1834ல் மடப்பள்ளியான் என்று ஏசியதற்காக வைக்கப்பட்ட வழக்கில் நீதிவான் தீரிப்புமடப்பள்ளியாருக்கு பாதகமாக அமைந்திருந்தது. மடப்பள்ளியார், சுத்தமான தமிழர் இராசமடப்பள்ளியாரும், குமாரமடப்பள்ளியாரும். பரநிருபசிங்கனுக்கும் பரராசசிங்கனுக்கும் உறுதிச்சுற்றத்தினராக விளங்கினர் என்றும் முத்துக்குமார சுவாமிப்பிள்ளை தெரிவித்துள்ளார். எனவே சங்கிலியை பறங்கியருக்குக் காட்டிக் கொடுத்த பரநிருபசிங்கன். பரராசசிங்கன் மடப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். கி.பி 1543ல் கொல்லப்பட்ட பரநிருபசிங்க முதலிக்கும் கி.பி.1630ல் இறந்த பரநிருபசிங்க முதலி என பதிந்தவனுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. இருவரும் வேறு வேறு நபர்களாவர். வெவ்வேறு காலத்தவருமாவர்.
- 82

பல்லவராசசேகரம் அந்நிய அரசுக்கு ஆதரவளித்து புதியதாக முதலிகளாக பதிந்தவர் களும், நாட்டைக்காட்டிக் கொடுத்து பதவி. பட்டம், அதிகாரம் பெற்றவர்களும். போர்த்துக்கீசரால் இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்டு முதலிகளாக பதியப்பட்டவர்களும். போத்துக்கீச அரசின் மேல் பக்தியாக இருந்ததால் நம்நாட்டு குடிமக்கள் அவர்களை வெறுத்தார்கள். இந்தப்புதிய அதிகாரம்படைத்தவர்களும், அரச ஆதரவாளர்களும், இந்தியாவிலிருந்துகொண்டுவந்து விலைக்கு விற்கப்பட்ட அடிமைகளை நடாத்தியதுபோல, நாட்டு மக்களையும் நடாத்த முற்பட்டார்கள். இது நாட்டுப்பற்றுமிக்க குடிமக்களைக் கொதிப்படையச் செய்தது. மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர். போர்த்துக்கீச அரசில் அதிகாரம் மிக்க பதவிகளை வகித்தவர்கள், நாட்டுப்பற்று மிக்க குடிமக்களை, அடக்கி, ஒடுக்கி அவர்களைத் தாழ்த்தி, தம்மை உயர்த்தி, பலவிதமான ஒடுக்குமுறைகளை அவர்கள் மீது திணித்தார்கள். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி. அந்நிய அரசுக்கு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முனைந்தனர்.
நாட்டின் சீரிய ஒழுங்குகள் பிறழ்ந்தன. சீமை கெட்டதுமட்டுமல்லாமல் வர்க்க குரோதமும், வர்க்க முரண்பாடுகளும் அதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களும் ஆரம்பமாயின. ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வாழ்ந்த தமிழினம். கூட்டுறவாக ஒரு தொழில் செய்வோர் மற்றத் தொழில்களைச் செய்வோருடன் சேர்ந்து ஒத்துழைத்து வாழ்ந்த தமிழினம், அடிமைமுறை அறிமுகப்படுத்தப்பட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒற்றும்ை குலைந்தது. ஏற்றத் தாழ்வு தலைவிரித்தாடியது. தொழில்கள் மறைந்தன தீண்டாமை நஞ்சு புகுத்தப்பட்டு மக்கள் மாசுபடுத்தப்பட்டனர். இந்திய அடிமைகளின் வரவால் இந்தியாவின் கீழ்த்தரமான பழக்க வழக்கங்களும் வந்து சேர்ந்தன. நமது நாட்டினைப்பற்றி அறியாத சிலர். இந்தக் கேவலங்களைத்தான் பல்லவநாகரிகம் என்று நினைப்பது. வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.

காக்கை, போர்த்துகீசருக்கு காட்டிக் கொடுத்தபடியால்தான். போர்த்துக் கீச தளபதிக்கும் அவனுக்கும் நெருங்கிய உறவு நிலவியது. மடப்பள்ளியான காக்கை முதன் முதலாக மரபாலுயர்ந்த முதலி என்று தம்மை பதிந்தான். மரபுக்கு மாறாக பதிந்தபடியால், தலைவன் பெயரில்லாமலே பதிந்தார்கள். இருந்தால் தானே அவன் பெயரைப் பதிவு செய்ய முடியும். பரநிருபசிங்கனும் மரபாலுயர்ந்த முதலியும் ஒருவரா, அல்லது இருவரா ஆய்வுக்குரியது. போர்த்துக்கீசர் பணம் பெற்றுக் கொண்டு தமக்கு ஆதரவளித்த கள்ளர், மறவர்.
- 183 -

Page 94
பல்லவராச்சியம் கணக்கர் அகம்படியார், மடப்பள்ளியார் எல்லாரையும் முதலிகளாகப் பதிந்தனர். மடப்பள்ளியான பரநிருபசிங்கனையும். பரராசசிங்கனையும் முதலி எனப் பதிந்தனர். புதுமுதலிகளுடன் மற்றக் குடிமக்கள் சேர்ந்து இயங்க மறுத்துவிட்டனர். இந்தியாவிலிருந்து சிலரைக் கொண்டுவந்து"வடசிறைக்கோவியம் என்று பதிந்து, புதுமுதலிகளுக்கு விற்பனை செய்தார்கள். மடப்பள்ளியாரையும், மற்ற புதுமுதலிகளையும் முதலிகளாகநிலைப்படுத்தவே. மேலும் அடிமைகள் கொண்டு வந்து விற்கப்பட்டனர். அந்நியரால்தான். முதன்முதலில், பணத்திற்கு அடிமைகள் விற்கப்பட்டார்கள். அப்பொழுது தான் சிறை என்ற அடிமை முறை நம்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. விலைக்கு வாங்கிய அடிமைகளையே சிறை என்று அழைத்தனர்.
இவை பல்லவ மக்களின் நாகரிகமான வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்தது. இழிவுபடுத்தியது மலினப்படுத்தியது. நம் நாட்டார். இந்தியர்கள் அந்நியரை ஆதரித்தபடியாலும், அடிமைகளாக வேலை செய்ததாலும், வடக்கள் என்று தாழ்வாகவும் மதிப்பில்லாதவர்களகவும் வெறுத்தனர். தமிழராக இருந்தும் அவர்கள் போர்த்துக்கிசரை ஆதரித்தனர். வெள்ளாளருக்குத்தான் முதலிஎன்ற பெயர் தொன்று தொட்டு இருந்து வருகிறது. போர்த்துக்கீசர் காலத்தில் பெரும்பிரயத்தனத்தினால் காக்கை மடப்பள்ளி தன்னை முதலி என்று பதிந்து பெருமதிப்பானதாக ஏற்றுக் கொண்டனர். அந்த நேரத்தில் அது அவர்களுக்கு மிக உயர்வானதாக இருந்தது. பின்னர் தமது பரம்பரையினரையும் முதலிகளாக பதிந்தனர். முதலிஉடையார் நயினார்நாச்சியார் என்று பெயர் வைப்பதன் மூலம் அந்தநிலையை யாரும் அடையமுடியாது.
அத்தகுதி உள்ளவர்கள் முதலி என்றோ, நயினார் என்றோ பெயர் வைப்பது வழக்கமில்லை. அரசபாரம்பரியங்கள் நாட்டுமரபுகள் தெரியாதவர்கள் பல குழறுபடிகளைச்செய்துள்ளார்கள். மரபுகளும்பண்புகளும், பாரம்பரியங்களும் குழறுபடிகளை இலகுவாக காட்டிக்கொடுத்துவிடும். இவை பற்றிஎழுதுபவர்களும் நாட்டார் வழக்குகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அறியாதிருப்பது வருத்தத்திற்குரியது. முதலிஎன்ற பெயருக்கும் ஒரு மரபு உண்டு. முதலிகளாக இருந்தவர் அதனை அறிவர். புதிய முதலிகளுக்கு மரபு தெரியாத படியால் அவர்களின் செயற்பாடு காட்டிக் கொடுத்துவிடும். நாட்டாருக்குத் தானே நாட்டு வழமை தெரியும். அந்நியரின்தங்கக்கூடு என்றாலும், மந்திரிப்பதவி என்றாலும் அந்நியர் ஆட்சியில் அது அடிமை வாழ்வுதான், தன்னாட்சியில் மட்டுமே தமிழன்
- 184 -

பல்லவராசசேகரம் தன்மானத்துடன் வாழமுடியும். மானம் ஒன்றே உயிரிலும் உயர்வானது. அடிமைச் சேவர்களுக்கு தன்மானம் இருப்பதில்லை. அரசகுடும்பத்திற்கும் நாட்டுக்கும்எதிராகராஜத்துரோகம், தேசத்துரோகம்இழைத்துசிலர் பறங்கியருடன் சேர்ந்து பணம். பட்டம், பதவி பெற்றார்கள். தன்மானமில்லாத புலவர்கள் அதனையும் புகழ்ந்து பாடினார்.
மடப்பள்ளி குடும்பத்தவன் என்று பெருமையாகத் தன்னை பரராசசிங்கன் தெரியப்படுத்தி உள்ளான். இராசமடப்பள்ளியாரும் குமாரமடப்பள்ளியாரும் பரராசசிங்கனின் உறுதிச் சுற்றமாக விளங்கினார்கள். மடப்பள்ளியினரை, 147Oன் பரநிருபசிங்க முதலிபரம்பரையில் வந்தவர்களாகக் காட்டுவதற்கு, பல கதைகள் புனையப்பட்டுள்ளன. அரச பரம்பரையினரை மறைத்து சந்ததியை திரிபுபடுத்திஅரசகுலத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி உள்ளனர். நாட்டைக்காக்கப் போராடியவர்களை மாசுபடுத்தி,நாட்டைக் காட்டிக்கொடுத்தவர் களை விதந்தும் எழுதியிருப்பது ஏமாற்று வேலையாகும். பரநிருபசிங்க முதலி என்றாலே வெள்ளாளர் என்பதாகும். வெள்ளாளரிலிருந்து, அரசபரம்பரையினர் தோன்றுவது இல்லை.
போர்த்துக்கீச தளபதிக்கு கோட்டைக்குள் சென்று தலைமயிர் வெட்டி வந்தவன், கோப்பாய் வேலன். போர் மூள இருந்த நேரத்தில், பயத்தினால் வன்னிக்குத்தப்பிஓடினான். அவன் அங்கு ஒல்லாந்த படைகளிடம் பிடிப்பட்டான். அவர்கள் தமக்கு உணவுக்காக மாடுவாங்கித்தருமாறு வேலைக்கு அமர்த்தினர். படையினருடன் வந்து இரவு வேளையில் போர்த்துக்கீச கோட்டையின் பின் கதவுவழியை காட்டிக்கொடுத்தான். ஒல்லாந்தர் படை உள் சென்று அப்படியே கோட்டையை கைப்பற்றியது. 1658 ல் போரின்றிநித்திரையிலிருந்தவர்களை ஒல்லாந்தப்படை கைப்பற்றியது. வேலனுக்கு பரிசாக, தலைமை முதலியார் பதவி. வழங்கப்பட்டது. மரபானுயர்ந்த முதலியை, ஒல்லாந்தர் நிதிப்பொறுப்பில் இருந்து நீக்க முனைந்தனர். மரபாலுயர்ந்த முதலி. தொடர்ந்தும் பதவி வகிப்பதற்காக, தன் சகோதரியையோ, சகோதரிமகளையோ, வேலனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து, மரபாலுயர்ந்த முதலி (காக்கைத்தம்பி) தனது பதவியை ஒல்லாந்தர் ஆட்சியிலும் தக்கவைத்துக் கொண்டதாக சிவானந்தயோகி (யாழ்ப்பாணக் குடியேற்றம்) தெரிவித்துள்ளார். ஒல்லாந்தர் வேலனுக்கு உலககாவல முதலி என்றபட்டத்தினை வழங்கினர். உண்மையில் முதலிமரபுக்கு முரணாக, உலக காவலமுதலிஎன்று தங்களைக் காப்பாற்றியதற்காக பதிந்தனர். திருமணத்தால்
- 185

Page 95
பல்லவராச்சியம் காக்கைத்தம்பியும் வேலனும் உறவினராயினர்.
ஒல்லாந்தர்காலத்திலும் தங்களது பதவி. பட்டம் பணம். செல்வாக்கு. அதிகாரத்தைப் பயன்படுத்தி இராசமடப் பள்ளியினர் வெள்ளாளரிலும் தம்மை முதன்மைப் படுத்துமாறு பெரிய கரைச்சலை கொடுத்தனர். இதனைச் சமாளிப்பதற்கு, ஒல்லாந்த தேசாதிபதிகள், ஒரேமாதிரியாக இரு குடிகளுக்கும். ஒரே இடம் வழங்கினார்கள். வெள்ளாளரில் ஒருவருக்கும் மடப்பள்ளியில் ஒருவருக்கும் ஒல்லாந்த அரசபதவிகளை வழங்கியதாக ஒல்லாந்த தேசாதிபதி வான்றீ1697ல் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
"யாழ்ப்பாணப்பட்டினத்தில் வெள்ளாளருக்கும் மடப்பள்ளியாருக்கும் இடையில் ஒரு கசப்பான தீவிக்க முடியாத பிரச்சனையாக, வெள்ளாளர் பாரம்பரிய மாகத் தாமே உயர்பதவிகளை வகித்தவர்கள், உயர்ந்தவர்களாகையால் தம்மிலும் உயர்ந்தவர்களாகத், மடப்பள்ளியார் நியமிக்கப்படக்கூடாது என்றும் மறுத்தார்கள். மடப்பள்ளியார் வெள்ளாளரிலும் மேலாக தாங்கள் அரசபதவிகளில் நியமிக்கப்பட வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் தாங்களே உயர்வாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தி வந்ததால், இந்த துர்ப்பாக்கிய நிலை எப்பொழுதும் நீடித்தது" என்று எழுதியிருந்தார். இதனால் குழப்பம் நிலவியது. உலகுக்கு உணவளித்தவர்களைச் சமுதாயமும் கற்றோரும் போற்றி மதிப்பளித்தனர். வழமைக்கு மாறாக நடந்ததால் வந்த வினை.
பூதத்தம்பிமுதலியார். பொன்னாலைக்கோவிலின் ஏழுமாடவீதிகளின் மதில்களை இடித்து. அக்கற்களைக் கொண்டு ஊர்காவற்றுறையில் பூதத்தம்பி கோட்டையையும், சிங்கைநகரில் ஒல்லாந்த தேவாலயத்தையும் கட்டினான். கோயிலை இடித்தபழ. அந்திராசியால் நயவஞ்சகமாக சதிசெய்யப்பட்டு. பூதத்தம்பி கொலை செய்யப்பட்டான். அப்பொழுது மழுவண் பூதத்தம்பிகழுத்தினை வெட்ட வெட்ட அறுபடவில்லை. நண்பனாக நடித்த கயவனான அந்திராசி பூதத்தம்பி தலை மயிருள் வெட்டறா மூலி உள்ளது. அதனை எடுத்து விட்டு வெட்டுங்கள் என்று கூறி. அதனை எடுப்பித்து விட்டு வெட்டியபோது இறந்தான். பின் அந்திராசியும் அழகவல்லிசாபத்தினால் அவமாக செத்தான். "உள்ளியர் மெல்லியர் ஆனாலும் ஊழ்வினை மெல்ல வந்து ஊட்டும்” என்பது பொய்யா மொழி
- 186 -

பல்லவராசசேகரம் Spram Srma-C3a asprub
இலங்கைத் தமிழ்ராச்சியமான பல்லவத்தின். அரச இறைமையை இழக்காது இருப்பதற்கும். இழந்த அதிகாரத்தினை மீண்டும் கைப்பற்றவும். குலசேகரம் மகன் இராசசேகரன், கி.பி.1665ல்நல்லூர் இராச்சியத்தின் அரசனாக முடிசஞ்டினான். போர்த்துக்கீசர் காலத்தில்நடந்ததுபோலவே, இவர்களும்தனியாக ஆட்சியினை நடாத்தி வந்தார்கள். இவர்கள் மக்களிடம் வரிவசூலிப்பதை. தடுப்பதற்கு, ஒல்லாந்த அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இவர்களிடம், ஒல்லாந்தர் வரிபெற்றுக்கொள்ளமுயன்றும் முடியவில்லை. வன்னி அரசர்கள். இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலும், இவ்வரசனால் கம்பனியாருக்கு ஆபத்து ஏற்படாது என கருதிபடியாலும், இவனுடைய ஆட்சி நடவடிக்கைகளையிட்டு ஒல்லாந்த படைகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஒல்லாந்தரும் பெருமளவு சைவாலயங்களை இடித்தார்கள். அந்த இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களை அமைத்தார்கள். கீரிமலை சிவன் கோவில் மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில் பொன்னாலை கிருஷ்ணன்கோவில் எல்லாமே இடிக்கப்பட்டன. படைபலம் போதாமையால் இராசசேகரனால் ஆலயங்களை இடிக்காது காப்பாற்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல காட்டிக் கொடுத்தவர்களுக்கும். மதம் மாறியவர்களுகும் ஒல்லாந்தருடன் சேர்ந்து துணை புரிந்தனர்.
Syrman (56003arasrub
சிங்கைநகள் குலசேகர அரசகுடும்பத்தில் தோன்றிய குலசேகரம், 1716ல் நல்லூர் இராச்சியத்தின் இறைமையுள்ள இராசாவாக முடிகடினான். இவன் காலத்தில் ஆட்சிஅதிகாரத்தில் ஒல்லாந்தருக்கு இணையாக பலம்பெற்றிருந்தான். இவனுடைய சிறிய தந்தை முறையான இன்னுமொரு குலசேகரன் வன்னியின் காவலனாக அக்காலத்தில் விளங்கினான். இருவருமாக ஒருமுறை இயக்கச்சிப் பகுதியில் மரங்களை விற்பனை செய்யும்போது ஒல்லாந்தப்படையுடன் மோத வேண்டி நேர்ந்தது. அவர்கள் அந்த மரங்கள் ஒல்லாந்த அரசுக்கு சொந்த மானவை என்று கூறி அவற்றைக் கைப்பற்றமுனைந்தனர். குலசேகரம் எதிர்த்து அவர்களை விரட்டி விட்டுத்தானே விற்பதற்கு உரிமை உள்ளவன் என்று கூறி மரவிற்பனையை நடாத்தி வந்தான். ஒல்லாந்தர் நாட்டுமக்களிடையே தமக்கு ஆதரவுகுறைந்துவருவதை நிவர்த்திசெய்வதற்கு இந்தியாவிலிருந்து பலரையும் அழைத்துவந்து வெள்ளாண்மை செய்யும் முதலிகள் ஆக 15 பேரை கச்சேரியில் பதிந்தனர். இந்திய முதலிகளை தமிழ்க்குடிகள் முதலிகளாக ஏற்றுக் கொள்ள - 87 -

Page 96
பல்லவராச்சியம் வில்லை. அவர்களுக்கு இந்தியாவிலிருந்து அடிமைகளை ஏற்றிவந்து கொழும்பு கம்பனித் தெருவில் இறக்கிவைத்து விற்பனை செய்தனர். இருந்தும் அவர்களு டைய பெயர் அவர்களைக் காட்டிக்கொடுத்தது. ராயர் என்ற பெயரின் முடிவு இருந்தால் கள்ளர் தொழில், தேவர் என்று பெயரின் முடிவு இருந்ததால் மறவர் தொழில், ஒல்லாந்த தேசாதிபதியை மகிழ்விக்க மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலை பாடினார். இவர்கள் ஒல்லாந்த அரசு நிலை பெற, அவர்களுக்கு உதவியளித்தவர்கள். இவனுடைய காலத்தில், அந்நிய அரசின் முதலியார்தாமும் இராசகுடும்பத்தவர்கள் செல்வது போல தண்டிகையில் செல்ல முற்பட்டனர். அவர்களைத்தண்டிகையில் செல்லவிடாது தடுத்து, இறக்கி, தண்டிகையையும் சேதமாக்கிஅழித்து. இதில் சம்பந்தப்பட்டவர்களையும்தண்டித்தான் குலசேகரன். இதனால் இவன்தண்டிகைச்சத்துருக்குலசேகரன்என்று போற்றிப்புகழப்பட்டான். அதன் பிறகு அவர்கள் தண்டிகையைப் பயன்படுத்த எண்ணவில்லை. பறாளை விநாயகர் ஆலய சித்திரத் தேர்த்திருப்பணியை செய்தவன் இம்மன்னனே.
இராசா கப்பிரமணியம்
கி.பி.1770ல் சுப்பிரமணியம். நல்லூர் இராச்சியத்தின் இறைமையை நிலைநாட்டி இராசாவாக முடிகட்டினான். ஆய தமிழ்க் கலைகள் அறுபத்தினான்கிலும் சிறந்து விளங்கினார். ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் அளவுக்கு கொடுமை புரியவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோவிலை, தொன்யுவான் மாப்பாண முதலியார் என்று. ஒல்லந்த அரசில் வேலை பார்த்த முதலியார். இன்றைய நல்லூர்கந்தன் ஆலயத்தினை கட்டுவித்தார். இவர்கள் ஒல்லாந்த அரசில் வேலை செய்தாலும், நல்லூர் இராச குடும்ப அரசர்களுக்கும். நேர்மையாக நடந்து கொண்டார்கள். இவருடைய காலத்தில் நல்லூர் அரசுக்குச் சொந்தமான நிலங்கள். இவருடைய ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் விளைவுகளை, இராசா சுப்பிரமணியம் பெற்றுவந்தார். இவருடைய காலத்தில், சிங்கை குலசேகர அரச குடும்பத்தை சேர்ந்த வைரமுத்து குலசேகரம், வன்னி அரசனாகத்திகழ்ந்தான். இராசாசுப்பிரமணியமும், இராசா குலசேகரமும் ஒரே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆனபடியாலும், கிட்டிய உறவினர் என்றபடியாலும், நெருங்கிய நண்பர்களாக தமிழ் இராச்சியத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினார்கள்
மக்களிடம் வரிவசூலித்தும், நீதிவிசாரணை நடத்தியும், குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கியும், இராசாதிகாரம் செலுத்தி ஆட்சிநடத்தினான். இவனுடைய காலத்தில், பண்டாரவன்னியன் என்றழைக்கப்பட்ட குலசேகரம் - 188

பல்லவராசசேகரம் வைரமுத்து. வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தினான். பண்டார வன்னியனின் இறப்பு. நாட்டை மீண்டும் கைப்பற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இராசா வைரமுத்து
இராச சுப்பிரமணியம் மகனாகத் தோன்றியவன் வைரமுத்து. கி.பி.1823ல் இராசா வைரமுத்துஇராசாவாக முடிகருடினான். இவரும்தந்தையைத் தொடர்ந்து, தானும் வரி வசூலித்து, நீதி வழங்கி, தண்டனை வழங்கி இராசமுறைகளைப் பேணி ஆட்சிநடத்திவந்தார். அரசனாக இருந்து, நாட்டின் இறைமையை இழக்காது. தமிழ் அரசமுறைகளைபப் பேணி வந்தான். புது வருடப் பிறப்பின் போது, கலைஞர்களுக்கு பொற்காசுகள் வழங்குவார். நாளேர் அடித்து. நாட்டின் பயிர் உற்பத்தியை ஆரம்பித்து வைப்பார். நாட்டின் முதன்மையும், முன்னுரிமையும் அரசர்களுக்கு இருந்து வந்துள்ளது.
நால்வகைப்படைகளுடன் இருந்து இராசாதிகாரம் செலுத்தி வந்துள்ளார். தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதிலும், அதனைப் பேணுவதிலும், வைரமுத்து அதிக கவனம் செலுத்தினார்.
இராசா குலசேகரன் 1854 - 1910
இராசா வைரமுத்து மகனாக கி.பி 1822ல் ஆறுமுகம் தோன்றினார். இவர் கி.பி 1854ல் முடிசூடினார். நந்திக்கொடி. படை, இரதம், குதிரை, ஆகியவற்றோடு செங்கோலும் முடியும் தரித்து ஆட்சி செய்து வந்தார். ஆயகலைகள் அறுபத்தினான்கிலும் தேர்ச்சிபெற்றுவிளங்கினார். அரசகுடும்பத்தினர் தலைமுறைவழியாக நல்லூர் இராச்சியத்தின் இறைமையை இழக்காமல் முடிகடி ஆட்சி செய்து வந்தனர். ஆட்சியை முழுவதுமாக அந்நியரிடமிருந்து கைப்பற்றவும் போராடி வந்தனர். ஆறுமுகம் குலசேகரன் என்ற பெயரால் விளங்கினார்.
- 189

Page 97
பல்லவராச்சியம்
ஆறுமுகம் கிறிஸ்தவமதம்பரப்பியமிசனரிமார்களை எதிர்த்தார். மதம் பரப்பப்படுவதை தடுத்தார். பிறவிக் கிறிஸ்தவர்களை சைவசமயத்திற்கு மாற்றினார். அமரிக்கமிசனரிடாக்டர்களை பின்வாங்கவைத்தார். அவர்களினால் குணமாக்கமுடியாத நோய்களை அவர்களின் முன்னிலையிலேயே குணமாக்கிக் காட்டினார். அமரிக்க-டாக்டர் அந்த சிகிச்சை முறையை அறிய ஒரு வருடமாக முயற்சி செய்தார். போட்டியிட்டு மருத்துவம் செய்யமுடியாத நிலையில் டாக்டர் கிறீன் 1873ல் அமெரிக்கா திரும்பிச் சென்றார். அரச மரபுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப் புதுவருடம் பிறக்கும்போது, இசைக்கலைஞர், நாட்டியக் கலைஞர், நாக சின்னகலைஞர்களுக்கு முதற் சேவகத்திற்காக பொற்காசுகள் வழங்கி வந்தவர். தமிழராச்சியம் நிலை பெற வேண்டுமானால் தமிழ்த்தேசியம் பேணப்பட வேண்டும். அறுபத்தினான்கு தமிழ்க்கலைகளி னுாடாக தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர். தமிழ்க்கலைஞர்களை தண்ணளி போலக் காத்து நின்றவர். ஆனை ஏற்றம், குதிரை ஏற்றம். வாட்பயிற்சி. போர்முறை. இரதம் செலுத்தல் முதலியவற்றில் சிறந்து விளங்கியவர். மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். மன்னனுக்குரிய முதல் மரியாதையையும் முன்னுரிமையையும் மக்கள் இவருக்கு வழங்கி ஆதரித்து வந்தனர். வரிவகலித்தல், நீதி வழங்குதல், தண்டனை வழங்குதல் முதலிய அரசனின் கடமைகளையும் நிறைவேற்றிவந்தார். பிரித்தானிய அதிகாரிகள் இவரிடம் வரி பெற்றுக்கொள்ளப்பலமுறைமுயன்றும் தோல்வியடைந்தனர். அந்நிய ஆட்சிக்குப் பணிய மறுத்த வனங்கா முடியாவார். வன்னி அரசர்களின் உதவியில்லாவிட்டாலும் தனித்துப் போராடியவர்.
புதுவருடம் பிறந்தவுடன் நாட்டில் நாளேர் அடிப்பது அரசர்களாவர். பல்லவத்தில் அந்நியர் ஆட்சி ஏற்பட்டாலும் மன்னர்களே நாளேர் அடிப்பது வழக்கம். ஆறுமுகம் காலத்தில் வெள்ளை அதிகாரிகளின் ஆதரவுடன் உடையார் நாளேர் அடிக்க முனைந்தார். இதனை அறிந்த ஆறுமுகம் தன் வீரர்களுடன் சென்று உடையாரையும் அவர் மைத்துனரையும் ஏரில் பூட்டி அவ்வருடம்நாளேர் அடித்தார். உடையாரோ வெள்ளை அதிகாரிகளோ அவருக்கு எதிராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
நல்லுர் ராச்சியத்திற்கு சொந்தமான மாதகல் காணியில் வேளாண்மை செய்வித்து வந்தார். பிரித்தானிய அரசின் மாதகல் மணியகாரன் வெள்ளைக்காவலர்களின் உதவியுடன் கைப்பற்ற முற்பட்டார். ஆறுமுகம் தமது
- 190

பல்லவராசசேகரம் வாள்வீரர்கள் அறுபது பேருடன் சென்று மணியகாரனை வென்று தமது அரசுரிமையை நிலைநாட்டினார். அந்த வெற்றியைக் கொண்டாடுமுகமாக போரிட்டவீரர்களுக்கு ஒரு நிலத்தை அறுபது கத்திக்கார பள்ளவளவு என்று பெயரிட்டுபட்டயமாக வழங்கினார். 1615ல் எதிர்மன்ன பரராசசேகரனால்கட்டப்பட்ட பறாளை ஈசுரவிநாயகர்கோவிலை இடித்து புதிதாக 1915ல் கட்டினார்.தமது 90வது வயதில் பேரன்சுப்பிரமணியத்திற்கு முடி கட்டினார். தொண்ணுற்று ஐந்துவயதில் சிவனடி சேர்ந்தவர்.
grarr Srnarfibudgar (1911 - 1920)
இராசா ஆறுமுகம் மகன் தம்பிப்பிள்ளையின் மகனாக சுப்பிரமணியம் கி.பி.1888ல் அவதாரித்தார். இவர் துணிவும் வீரமும் பரராக்கிரமமும் உடைவராக திகழ்ந்த படியால் இராசா ஆறுமுகம் கி.பி 1911ல் இவருக்கு முடிகட்டினார். இவர் வீரத்துடனும் விவேகத்துடனும் தமிழ் ராச்சியத்தின் ஆட்சியை முழுமையாக கைப்பற்றப் போராடினார். வெள்ளையருக்கு éflbLD GeFITÜU6OTLDIT55-supp556)ñ.5l. L'î191OLb ஆண்டு தைமாதம் நடந்த சம்பவம் அவர் வீரத்தையும் ஆளுமையையும் ஆங்கிலேய அரசுக்கு உணர்த்தியது. அவர் தமது நெல்வயல்களை பார்வையிட்ட பின் வில்லு மாட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீதியில் பிரித்தானிய அரச அதிபர் பிறைஸ் அவர்களின் குதிரைக்காடி முன்னால் சென்று கொண்டிருந்தது. சுப்பிரமணியம் சினங் கொண்டு அதனை முந்திக்கொண்டுவிடு சென்றார்.
ஆத்திரமடைந்த பிறைஸ் தந்திரமாக மாட்டு வண்டியைக் கைப்பற்றுவதற்காக
யாழ்முற்றவெளி மைதானத்தில் வண்டிச்சவாரிக்கு ஏற்பாடு செய்தார். இந்தச்
செய்திகாற்றுவாக்கில் நாடெங்கும் பரவியது. காளை குதிரையை வெல்லுமா?
என்பதைக்கான முற்ற வெளியில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
மூளாயிலிருந்து அரச குடும்பத்தினர் பலகுதிரை வண்டிகளில் சென்றனர்.
சுப்பிரமணியனின் வீரர்கள் ஆயுதங்களுடன் இருபது மாட்டு வண்டிகளில் - 191 -

Page 98
பல்லவராச்சியம் அவருக்கு பாதுகாப்பாகச் சென்றனர். போட்டி நடந்தது. மாட்டு வண்டி குதிரைவண்டியை முந்திச் சென்று வென்றது.
மாடும் வண்டியும் பிரித்தானிய அரசுக்கே சேரவேண்டும். அதனைக் கைப்பற்றுமாறு பிறைஸ் காவலர்களைப்பணித்தார். இவை இராசகுடும்பத்திற்கு சொந்தமானவை. முடிந்தால் பெற்றுக்கொள்ளும் என்று பிரபுகளுரைத்து மூளாய் சென்றார். அவரின் வீரர்கள் ஆகாயத்தை நோக்கிவெடிவைத்த வண்ணம் வர. அவர் வட்டுக்கோட்டைக்கு வந்தார். வெள்ளையரின் காவலர்கள் வணடியை நெருங்க முடிவில்லை. வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் மகத்தான வரவேற்பு கொடுத்தனர். வட்டுக் கோட்டையிலிருந்து முரசு முழங்கவும். கொடி குடை ஆலவட்டம் தாங்கிய வீரர்கள் முன் செல்ல, இராசவரிசைகளுடன் தண்டிகையில் உலாச் சென்றார். மாடும் வண்டியும் அலங்காரங்களுடன் முன்னால் சென்றது. வாழை, கமுகு. மாவிலை, தோரணங்களால் அலங்கரித்து. ஊர்விழாக்கோலம்பூண்டது. மங்கல கும்பம் வைத்து. மலர்மாலை கட்டி. மங்கல ஆரத்தி எடுத்து. மக்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். பிரித்தானிய அரச அதிபரின் அதிகாரம் செல்லாக்காசு ஆனது. அந்தவண்டிச்சவாரி நினைவாக வருடாவருடம் வண்டிச்சவாரிமுற்றவெளியில் நடந்து வருகிறது.
இந்த சம்பவம் அவருக்கு முடி சூட்டுவதற்கு ஏதுவாக அமைந்தது.
நந்திக்கொடி. படை, குடி, முரசம், குதிரை, இரதம், தார் ஆகியவற்றுடன் 1911ல் நல்லூரின் முடிதரித்து ஆட்சி செலுத்திவந்தார்.1619ம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தவர்கள்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் முழுமையாக கைப்பற்றுவதற்கு பலமுறை போராடினார்கள். நல்லூர் இராச்சியத்தின் இறைமை சேகரராசவம்சத்து மன்னர்களிடமே இருந்து வந்துள்ளது. நல்லூர் இராச்சியத்தின் மணிமுடியும், செங்கோலும் இவர் தரித்து வந்துள்ளார். நல்லூர் இராச்சியம் இறைமையை இழக்கவில்லை என்பதை நிலைநாட்டிய வெற்றித்திருமகன் இராசா சுப்பிரமணியம். மூளாயைச் சேர்ந்த கனவான் ம.நி. சின்னப்பா. தேசாதிபதி மக்கலத்திற்கு வரவேற்பு அளிக்கவும் தமது உறவினருக்குதலைப்பாகை கட்டவும் ஏற்பாடு செய்தார். அந்நியரான கொழும்பு தேசாதிபதிக்கு. தமிழ் ராச்சிய மண்ணில் வரவேற்பளிப்பதையோ, முன்னுரிமை அளிப்பதையோ, இராசா சுப்பிரமணியம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமது அதிகாரத்தையும். இறைமையையும், தேசாதிபதிக்கு உணர்த்த விரும்பி, தேசாதியின் வரவேற்பை நிறுத்தமுடிவு செயதாா.
- 192 -

பல்லவராசசேகரம் மக்கலம் மூளாயில் வந்து இறங்கவும். இராசா சுப்பிரமணிய மும், நந்திக்கொடி தாங்கிய தன் வீரர்களும், குதிரைகளில் வந்து இறங்கினார்கள். தமிழ்ப்படையினர் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்கள் தீர்த்தனர். தேசாதிபதியும் அவரின் காவலர்களும் செய்வதறியாது திகைத்தனர். இராசா, சின்னப்பா வைக் கண்டித்தார். தமிழ் இராச்சிய மண்ணில் முதல் மரியாதை  அரசர்களுக்கு மட்டுமே உண்டு. சிங்கள தேசத்தின் தேசாதிபதியின் அதிகாரம். தமிழ்ராச்சியமண்ணில் செல்லாது. தமிழ்த்தேசத்தின் மன்னன்நானே. அந்நிய ஆட்சியாளருக்குத் தமிழ்த்தேசத்தில் வரவேற்பு அளிக்கக்கூடாது. விழா எடுக்கக்கூடாது என்று இராசாஉத்தரவிட்டார். மக்கலம் பிரித்தானிய அரசபிரதிநிதி எனது நண்பர் அதனால் என்று சின்னப்பா கூறினார். எனது நாட்டின் வெள்ளையர் கைப்பற்றிய அதிகாரத்தினை மீட்க நான் போராடுகிறேன். நீர் அந்நியருக்கு துணை போகக்கூடாது. உமது வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டுத்திருப்பிஅனுப்பிவிடும். எந்த விழாவும் நடத்தக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். பிரித்தானிய கொடி மேடையிலிருந்து இறக்கப்பட்டது. நந்திக் கொடி ஏற்றிப்பறக்கவிடப்பட்டது. இராசா சுப்பிரமணியம், கவர்னர் வைக்கவந்த தலைப் பாகையை எடுத்து. நாகலிங்கத்திற்கு கட்டினார். அலங்காரங்கள் சேதமாக்கப்பட்டன. தேசாதிபதிஎதுவித பாதிப்புமின்றிஉயிர்தப்பி கொழும்பு சென்றார். சுப்பிரமணியத்திற்கு வழக்கில் சேர். பொன். இராமநாதன் தேசப்பற்றுடன் உதவினார்.
ஒரு சில படைவீரர்களுடன் தேசாதிபதிவந்திருந்தும் தமிழ்ப்படைகள் நூற்றுக் கணக்கில் தம்மிடம் இருந்தும், தேசாதிபதியை தாக்கவில்லை, கொலை செய்யவில்லை. ஊறுவிளைவிக்கவில்லை. பாதுகாப்பாகத்திரும்பிச்செல்ல இராசா சுப்பிரமணியம் அனுமதித்தார். தேசாதிபதிக்கு தமிழ்ராச்சிய மண்ணில் அதிகாரம் இல்லை என்றும் அவருக்கு விழா எடுக்ககூடாது என்றும் தடுத்து நிறுத்தினார். நந்திக் கொடி தமிழ் மண்ணில் பறக்கவேண்டும் என்று ஏற்றிவைத்தார். அந்நிய அரசின் தேசாதிபதி மக்கலம், தன் எதிரியாக இருந்தபோதும், எந்தக்கெடுதலும் விளைவிக்கவில்லை. அவள் நினைத்திருந்தால், மூளாயிலேயே தேசாதிபதியை - 193 -

Page 99
பல்லவராச்சியம் கொன்றிருக்கமுடியும் ஆனால் அப்படிச் செய்யவில்லை. கொல்லர் பெருமகன் ஆறுமுகம் பல்லவப்படையினருக்கு வெடிபொறிகளை செய்து வழங்கினார்
ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கிவிடுமானால் அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. இந்தப் போராட்டங்களினால் தேசம் விழிப்படைந்தது. சிந்திக்கத்தொடங்கியது. தாயகமண்ணின் தன்னாதிக்கத்தாகம் தமிழ்மக்களுக்கு எற்பட்டது. இவ்வெற்றியை மக்கள் கொண்டாடி மகிழவும், தன் பேரனான பழையராசா ஆறுமுகத்திற்கு தெரிவிக்கவும். இராசாசுப்பிரமணியம் நான்கு குதிரைகள் பூட்டியரதத்தில் உலாச் சென்றார். வழி எங்கும் மங்கல கும்பங்கள், மாவிலை தோரணங்கள். வாழ்த்தொலிகள். வெற்றிமுரசின் முழக்கம், இன்னிசைப்பாட்டுக்கள். ஆட்டங்கள் குதூகலமாக உலாச்சென்றார். மங்கையர் ஆரத்தி எடுத்து வெற்றித்திலகம் சூட்டி மகிழ்ந்தனர். வீரர்களுக்கு பொற்காசு பரிசளித்தார். கொண்டாட்டத்தின் போது வெற்றியினால் மகிழ்ந்த மக்கள், புலவர். இராசசிம்மன் என்று இவரைப் பாராட்டிப்புகழ்ந்தனர்.
தேசாதிபதி, சுப்பிரமணியத்தைக் கைது செய்யுமாறு பணித்தார். அவரைக் கைதுசெய்யவோ, நீதிமன்றில் நிறுத்தவோ, பிரித்தானிய படையினரால் முடியவில்லை. மக்கள் இராசவிசுவாசத்தினால் அவரைக்காட்டிக் கொடுக்கவோ, சாட்சியமளிக்கவோ முன்வரவில்லை. சின்னப்பாவே சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்.
சுப்பிரமணியம், பல்லவராசசிம்மன் ஆக விளங்கினார். தன் ஆட்சிக காலத்தில், வரிவசூலித்தும்,நீதிவழங்கியும், குற்றம் புரிந்தவர்களுக்குதண்டனை வழங்கியும், தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள அரசனாக திகழ்ந்தவர். பல்லவ அரசர்களின் மரபுகளையும் பாரம்பரியங் களையும் பேணி, நாளேர் அடித்தும். புது வருட பிறப்பில் முதற்சேவகம் புரிந்த கலைஞர்களுக்கு பொற்காசு வழங்கியும் வந்தவர். அறுபத்தினான்கு கலைகளிலும் சிறந்து விளங்கியவர். போரில் காயமடைந்த வீரர்களுக்கு அறுவைச்சிகிச்சை அளித்துகாப்பாற்றுவதில் வல்லவர் என்று புகழ்பெற்றவள். ஆங்கில மருத்துவர்களினால் சீர் செய்யமுடியாத வெட்டுக்காயத்தினை உடைய வேலுப்பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியவர்.
கலைஞர்களுக்கு பொன், பொருள்.நிலம் வழங்கியவர். மூளாய் தவில்
- 194

பல்லவராசசேகரம் கலைஞர் ஆறுமுகத்தின் மகன் உலகம் புகழ் தவில் மேதை வலங்கைமான் இந்தியா) சண்முகசுந்தரத்தின் பேரன் நாகசின்னக் கலைஞர் பொன்னாலை சுப்பிரமணியத்திற்கு திறமையை பாராட்டிதங்கநாக சின்னமும் கலைமாமணி விருதும் 1918ல் வழங்கி அவரை அரச மாளிகைக் கலைஞராக நியமித்தார். நாட்டிய மாமணி கண்னிகாவிற்கு திறமையைப் பாராட்டி பொன்னும் நிலமும் வழங்கிதமது அரசமாளிகை நர்த்தகியாக நியமித்தார். கி.பி 1920ம் ஆண்டில் தனது 32லது வயதில் திடீரென இறந்தார். இறக்கும் போது தனது மகன் கந்தசாமியை முடிக்குரிய இளவரசனாக நியமித்தார். பல்லவச் சிங்கத்தின் வீர கர்ச்சனை ஓய்ந்தது. இவருக்குப்பின்பும் நல்லூரின் மணிமுடியும் செங்கோலும் இளவரசர் கந்தசாமியால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இராசா குலசேகரம்
1920ம் ஆண்டிலிருந்து இளவரசனாகவும் முடிக்குரிய வாரிசாகவும் 1972 வரை கந்தசாமி விளங்கினார். ஏழுவயதாக இருக்கும்போது சுப்பிரமணியம்தன் மகன் கந்தசாமியை நியமித்ததால், இவரால். தந்தையை தொடர்ந்து படையினருக்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்த முடியவில்லை. 1930ல் டொனமூர் ஆனைக் குழு வந்தபொழுது. தமிழ் ராச்சியம் தனியாக தன்னாதிக்கத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும், பல்லவ அரசின் அதிகாரத்தினை மீட்க வேண்டும் என்று தமது கருத்தினை முன் வைத்தார். தமிழ் அரசியற் தலைவர்களின் கருத்து வேறு விதமாக இருந்ததால் அக்கருத்து வெற்றிதரவில்லை1935ல்தானே பல்லவராச்சியத்தின் இராசா என்று பிரகடனம் செய்தார். மீண்டும்1947ல்பல்லவ அரசகுடும்பம் இறைமையை இழக்கவில்லை, இழந்த அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இராசாதிகாரம் செலுத்தி தமது இறைமையை நிலைநாட்டினார். அவரது முயற்சிகள் பலமற்றபடியாலும் அவருடன் சேர்ந்து அரசியல் தலைவர்கள் சிந்திக்காதபடியாலும் தமிழரசின் பிரச்சினை தீரவில்லை. தொலைநோக்கு தமிழ்த்தலைமைகளுக்கு - 195

Page 100
பல்லவராச்சியம் இருக்கவில்லை. இழக்காத இறைமையை கொண்டிருந்ததால், மக்கள் அரச மதிப்பையும். இராச மரியாதையையும் வழங்கினர். நல்லூர் அரசு. அரச குடும்பத்தவர்கள். ஐரோப்பியர்களிடம் தங்கள் இறைமையை இழக்காது இராசாதிகாரம் செலுத்திவந்தனர்.
தங்களிடம் இல்லாதநாட்டின் இறைமையை, பிரித்தானிய அதிகாரம், தவறாகச் செயற்படுத்தி விட்டது. தமிழ்த் தலைவர்களின் தவறே காரணம். நல்லூரின் அரசகுடும்பம். அரசன் போர்த்துக்கீசரிடம் இறைமையை இழக்க வில்லை என்பதை மு. திருச்செல்வம் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். இருந்தும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்த தவறிவிட்டனர். பிரித்தானியா தம்மிடம் இல்லாத இறைமையை வேறு ஒருவருக்கு கையளிக்க முடியாது. அப்படியிருக்கும் போது தாம் கைப்பற்றிய அதிகாரத்தினை. இறைமையைக் கொண்டிருந்த இராசாவிடம் கையளித்திருக்க வேண்டியது நீதியும் நியாயமு மாகும். அவ்வாறு அதிகாரத்தினை வழங்காது மாறாகச் செயற்பட்டது தவறான செயலாகும்.
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் 1948ல் ஆங்கிலேயர் ஈழத்தை விட்டுச் சென்றபோதுவடபகுதிமக்களிடம் அவர்களது இறைமைசென்றிருக்கவேண்டும். மாறாக சிங்களமக்களிடம் சென்றதே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமாகும். (4.4.2002 வீரசேகரி) என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ்ராச்சியம் மக்கள் தமது இறைமையை அந்நியர்களிடம் இழக்கவில்லை. இதனை திரு.மு. திருச்செல்வம் எடுத்துக்காட்டியிருந்தார். வலுவிழந்ததால் அதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்தனர். முடியாட்சியின் இறைமை பல்லவ மன்னர்களிடம் தொடர்ந்தும் இருந்துவந்தது. பல்லவமன்னர்கள் இறைமையை இழக்கவில்லை.
"1948ல்பிரித்தானியாதனது முடிக்குரிய குடியேற்றநாட்டு உரிமையை கைவிட்ட போது வடக்கின் அரசு சட்டரீதியாக தமிழ் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.அன்றிருந்த தமிழ்த்தலைமைகள் உணர்வு பூர்வமாக நடந்து கொள்ளாதது இமாலயக்குற்றம். அவர்கள் மீது என்றும் உள்ள நீக்க முடியாத கறையாகும்" என்று டாக்டர் இ.மு.வி நாகநாதன் (1.3.2003 வீரகேசரி) தெரிவித்திருந்தார்.
"நல்லூரின் இராசவம்சம் 1620ம் ஆண்டில் அழிந்துவிடவில்லை,
- 196 -

பல்லவராசசேகரம் அரசபரம்பரையினர் செங்கோலும் மணிமுடியும் தாங்கி நந்திக் கொடியோடு நாட்டை மீட்க தொடர்ந்தும் போராடி வந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சுப்பிரமணியம் முடியோடும் கொடியோடும் அரசனாக இருந்து ஆட்சியை கைப்பற்றப் போராடினார். அந்த அரசரின் பேரனான பாலசுப்பிரமணியம் பரராசசேகரன் அரசபரம்பரையில் வந்தவர். அரச பரம்பரையினர் நாட்டின் உரிமைக்காக உணர்வோடு உழைத்து வருகிறார்கள். பேரறிஞர் பாலசுப்பிரமணியம் அவர்களுடைய தோற்றம் நம்நாட்டு அரசபரம்பரையினர் அரச மரபுகளோடு இன்றும வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது." என கெளரவ மா.க. ஈழவேந்தன் பா.உ கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பேசும் போது (22.6.2004) தெரிவித்தார்.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் 1939ல் பேசும் போது, இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர் கிளையே நாங்கள் இந்த நாட்டின் வாழுநர்கள். நாங்கள் இங்குதான் தொடர்ந்து வாழ்ந்துவருகிறோம். ளங்களின் ஒரு கிளைஇந்தநாட்டில் சிங்களவர் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருந்து வருகிறது. தன்னாட்சிவேறு. ஒரு குழு ஆட்சி வேறு. இங்கு ஒரு குழுவினர் ஆட்சியைக் கைப்பற்ற எத்தனிக்கிறார்கள் என சிங்களவர் மட்டும் அமைச்சர் அவை ஏற்படுத்தப் பட்டுள்ளதை கண்டித்தார். ஆளுநருக்கு அந்தரங்கத்தில் அறிவுரைகள் வழங்கி பெரும்பான்மை இனத்தவருக்கு வேண்டியதை சாதிக்க விழைந்ததை இந்நாட்டின் அப்பாவிச் சிறுபான்மையோருக்கு இழைத்தப்பட்டதுரோகம் என்ற வகையில் அரசாங்கத்தைச் சாடினார். அரசியல் யாப்பின்படி அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும் அறிவுரைகள் அரசசபையில்விவாதிக்கப்பட்டுஒப்புதல் பெறப்பட்ட பின்னரே ஆளுநரால் குடியேற்ற நாட்டுச் செயலருக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அரசசபையில் உறுப்பினர்களுடன் அளவளாவாது ஆங்கிலேய அரசுக்கு அனுப்பி வைத்தமை ஒரு அடாத செயல் என்றார். (7.12.2006 தினக்குரல்).
- 197 -

Page 101
பல்லவராச்சியம்
7. வெளிநாடுகளில் பல்லவர் ஆட்சி
யாவாவில்
கி.பி 732ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் பல்லவர்கள் சைவர் என்றும் சிவலிங்கங்கள் அமைத்தார்கள். சைவசமயம் உச்சநிலையில் இருந்தது என்றும் காணப்படுகிறது. இக்கல்வெட்டுயாவாவில் கண்டெடுக்கப்பட்டது.
போர்னியோ, பார்லி,
தீவுகளில் சைவர்களின் தொடர்பு தொன்று தொட்டு இருந்துவருகிறது. தென்னிந்தியக்கல்வெட்டுக்களை ஒத்தகல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சைவ ஆசாரங்களும், சடங்குகளும் வேரூன்றிஇருந்துள்ளன. போர்ணியோவில் சிவபெருமான் சிலை காணப்படுகிறது. தமிழிசை, தமிழ்நாடகம், தமிழ்நாட்டியம் நன்கு பரவியிருந்ததற்கு சான்றுகள் உள. பல்லவர்கள் ஆட்சியின் அடையாளங்களாக உள்ளன.
பூணானும் சென்லாவும்
சைவமத ஆசாரங்கள் காணப்படுகின்றன. சிவலிங்கம் 5ம், 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. காணப்படுகின்றன. ஜயவர்மன், உருத்திரவர்மன் அரசர்கள் ஆண்டுள்ளனர்.
காம்போஜம்
சைவம்ஓங்கிவளர்ந்திருந்துள்ளது. அரசர்கள், சம்புமுனிவர்மரபினர். என்று கூறப்படுகிறது. பலவர்மா, சித்திரசேனன் அரசர்களது ஏழாம் நூற்றாண்டுக் ல்வெட்டுகள்காணப்படுகின்றன. பல்லவரது கல்வெட்டுக் ஒத்திருக்கின்றன. மகேந்திரவர்மன். ஈசானவர்மன், ஜெயவர்மன் கல்வெட்டுக்களில் காஞ்சி பல்லவர்களைப் பற்றிகுறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கல்வெட்டு தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி350ல்
ஆட்சிபுரிந்த பத்திராவர்மனின் கல்வெட்டு காணப்படுகிறது. தர்மகாராசா என
அழைக்கப்பட்டான். சிறந்த சிவபக்தன் 1000 ஆண்டுகள் சம்பாவில் பல்லவர்கள்
ஆட்சி, சைவ ஆட்சி தழைத்தோங்கியிருந்தது. சைவமதம், சைவப்பண்பாடு
- 198 -

பல்லவராசசேகரம் வேரூன்றியிருந்தது. நால்வேதங்கள். தொண்ணுற்றாறு தத்துவங்கள், அறுபத்தினாலு கலைகள் பற்றிப் பல கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. தமிழர்களைப் போல பனை ஓலைகளில் எழுதிவைத்தனர் கோவில்கள் கொத்தளங்கள் காஞ்சிபுரத்தில் காணப்படுவனவற்றை ஒத்திருக்கின்றன.
இந்தியா
களப்பிரர் சாளுாக்கியர் ஆள்நிலப்பரப்பினை கைப்பற்றி தண்டை மண்டலம் என பெயரிட்டு சக்கரவர்த்தியாகப்பேரரசு அமைத்து பல்லவர்கள்தான் முதலில் சிறந்து விளங்கியவர்கள். கட்டிடக்கலை, குடவரைக் கோவில்கள், சுதை ஒவியங்கள். கற்றளி சிற்பங்கள். காலத்தால் அழியாதவகையில் முதன்முதலில் அமைத்துக்காட்டியவர்கள் ஈழத்திலிருந்து சென்ற பல்லவ அரசர்களே. தமிழிசை, தமிழிசைக் கருவிகள். தமிழிசையில் பாடல்கள். பாமாலைகள். தேவாரங்கள். பாசுரங்கள் எல்லாம் பேணி வளர்த்து தமிழினத்திற்காக அருமருந்தன் பனுவல்களை தந்தவர்கள். பல்லவ மன்னர்களே. ஆதண்டைச்சக்கரவர்த்தி முதலாக மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் என்று புகழ்க் கொடிநாட்டியவர்கள். பல்லவ நாட்டியம். நாடகம், நடனம் என்று புதிய பாணிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திவர்கள். நாகசின்னம், தவில். வீணை என்ற வாத்தியக் கருவிகளை அறிமுகப்படுத்தினார்கள். பல்லவர்களது ஆதிதத்தாயகம் புராதன யாழ்ப்பாணம் இங்கிருந்து நகர்ந்து காஞ்சியில் பேரரசு அமைத்தார்கள் என பேராசிரியர் செ. கிருஷ்ணராசா (வீரகேசரி12.2.95) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்லவர்களின் ஆட்சியில் தமிழ் மொழியே சிறந்த வளப்பம் பெற்றது. பல்லவர்கள் இந்தியாவிலிருந்து ஆட்சி செய்த போதும் தென் இலங்கை அரசனை தோற்கடித்தனர். சோழமண்டலத்தைக் கைப்பற்றினர். களப்பிரர்களையும் மூன்று தமிழ்வேந்தர்களையும் தோற்கடித்தனர். பல்லவர்கள் தமது காலம் முழுவதுமே குப்தர், வாகடர், கதம்பர். சாளுக்கியர், சோழர் முதலானவர்களுடன் ஒய்வின்றிப் போர் செய்தனர். போரின் வெற்றியை பறை சாற்றும் வீரக்கழல்களை அணிந்ததாலும் பல்லவர்கள் எனப்பட்டனர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தந்தை அறிஞர் அண்ணா திராவிடநாடு என்று கோரிக்கை விடுத்தது பல்லவ பேரரசர் அரசாண்டபூமியையே ஆகும்.
மகேந்திரவர்மன் மீது சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் படையுடன் தாக்கினான். புலிகேசியின் பெரும் படையைக் கண்டு அஞ்சி,
- 199

Page 102
பல்லவராச்சியம் மன்னன் காஞ்சிக்கோட்டையினுள் புகுந்து கொண்டான். ஒற்றர் மூலம்ஈழபல்லவ வேந்தனுக்கு ஒலை அனுப்பினான். ஈழபல்லவ வேந்தன் படையுடன் காஞ்சி சென்று. புலிகேசியை பின்னாலிருந்து தாக்கும் போது, கோட்டையிலிருந்து புலிகேசியை முன்னாலிருந்து தாக்கு, என ஒற்றணிடம் பதில் அனுப்பினான். இருவரும் ஒரே நேரத்தில் தாக்கி புலிகேசியைத் தோற்கடித்தனர். பல்லவ வேந்தர்களுக்கும்.இந்தியப்பல்லவர்களுக்குமிடையே நெருங்கிய உறவு இருந்தது. கப்பல்கள் சென்று வந்தன. வாணிபம் இடம்பெற்றது. காஞ்சியை திராவிடம் எனவும் மக்கள் அஞ்சா நெஞ்சினர். உண்மைக்கு உறைவிடமானவர்கள் கற்றவர்களையும் உயர்ந்த கொள்கைகளையும் போற்றுவர் என்று யுவான் சுவாங் இன் குறிப்பிலிருந்து பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் தெரிவிக்கிறார். பல்லவர்கள் திருமாலின் மரபினர் என்று பட்டயங்கள் கூறுகின்றன. திருமால் மரபினர் என்பதனால் திரையடுண்)ர் எனவும் அழைக்கப்பட்டனர். திருமாலின் வழிவாந்த மன்னர்கள் 18 பேரை அகத்தியர் இந்தியாவுக்கு அழைத்துச் சென்ற வரலாற்றினை. முன்பு பார்த்தோம் (முகத்தூர் அகத்தியர்நூல்). தென்னிந்தியா முழுவதும் வடஇந்தியவின் பெரும்பகுதியும் பல்லவ பேரரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இராசசிம்மன் என்ற பல்லவன் (கி.பி 686 - 705) சைவ சித்தாந்தத்தில் பேரறிவு உடையவன். இசைக்கலைஞன். இசைக் கருவிகளை இசைப்பதில் விஞ்சயனை ஒத்தவர். பல்லவர்களின் சமய அடையாளமாக திரிகலம் அல்லது முத்தலைவேல் பயன்படுத்தப்பட்டது. சிவனது படைக் கலங்களில் ஒன்று திரிகலம். பரமேசுவரர் கொடியில் நந்தியுடன்திவிகநலம் இடம் பெற்றிருந்தது. தங்கநரம்புகளாலான பரிவாதினி என்னும் வீணை மீட்டுபவன். சங்கீரணம் என்ற தாளவகையை புதிதாகக் கண்டவன். கி.பி முதலாம் நூற்றா ண்ைடில் பல்லவத்திலிருந்து சென்ற ஆதண்டைச்சக்கரவர்த்தி முதலில் ஆட்சி ஏற்படுத்தினான் கி.பி 250 முதல் கி.பி 890 வரை 650 ஆண்டுகள் பல்லவப் பேரரசு இருந்தது. கி.பி 13ம் நூற்றாண்டு வரை பல்லளிக் கோட்டத்தையும் மைகரில் ஒரு பகுதியையும் ஆண்டனர். மூன்றாம் நந்திவர்மன் மீது நந்திக் கலம்பகம் பாடி அவன் இறந்தான். ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்ம பல்லவன் மாமல்லபுரத்தை நிர்மாணித்தவன்.
LTIDIT
5ம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க ஓடுகளில் மன் என்றமைந்த பல்லவர் கல்வெட்டை ஒத்திருக்கிறது பிரபுவர்மமன்னன் கல்வெட்டு.
سے 200

பல்லவராசசேகரம்
D
சிவன்கோவில் கட்டடக்கலை பல்லவரைப் பின்பற்றியிருந்தது. மாமல்லபுரத்து இரதங்களை ஒத்திருந்தது அவனி நாரணன் ஏரி மூன்றாம் நந்திவர்மன் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. மலையநாடுதான் மலாயாநாடு
(e.g5d.
சிங்கபுரம்
மலைய நாட்டினை கைப்பற்றி ஆட்சி செய்தபொழுது பல்லவர்கள் அத்தீவிற்கு சிங்கபுரம் (சிங்கப்பூர்) என பெயரிட்டனர்
சுமாத்திரா
பல்லவமன்னர்களை பெலவி என்று குறிக்கப்பட்டுள்ளது. கல்
வெட்டுக்கள் பல்லவ எழுத்தில் பொறித்துள்ளனர். தமிழ் பஞ்சாங்கமுறையை
பின்பற்றிநாள் திங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 5ம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை பாண்டுங்க்கு வடக்கே சிறிதெப் ஊரில் கிடைத்திருக் கின்றன. சிவன், விஷ்ணு. இந்திரன் சிலைகள் காணப்படுகின்றன. சையாம் மன்னர்களின் முடிசூட்டுவிழாவில் தமிழ்பாட்டுபாடப்பட்டு வந்தது. *
பல்லவத்திலிருந்து இந்தியா சென்றது போலவே ஏனைய நாடுகளுக்கும் பல்லவ அரசர்கள் சென்று வென்று நந்திக்கொடியையும் சிவன் கோவிலையும் தமிழ் மொழியையும் ஆங்கே பரப்பிவந்தார்கள் என்பதை இந்தக் கல்வெட்டுக்களும்தகவல்களும்உறுதிப்படுதுகின்றன. ஆதிகாலம்தொட்டுஈழநாடு திருஇடம் என அழைக்கப்பட்டு வந்தது. பல்லவர்கள் பல்லவத்தில் இருந்து சென்றதால் தண்டைமண்டலமும், பிற்காலத்தில் திராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர்களால் அமைக்கப்பட்ட பேரரசு, திராவிடப் பேரரசு ஆகும். அந்த திராவிடப் பேரரசின் ஆள் நிலங்களே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிடநாடு கோரிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது. திராவிட நாடு என அறிஞர் அண்ணா அழைத்தது பல்லவ பேரரசின் ஆட்சி நடை பெற்றுவந்தநாடுகளையே ஆகும்.
- 201 -

Page 103
பல்லவராச்சியம்
8. பல்லவ மன்னர்களின் ஆட்சியியல்
பல்லவர்களின் ஆட்சிமுறை தமிழ் நாகரிகத்தின் உச்சக் கட்டமாக திகழ்ந்தது. பல்லவர் ஆட்சியில் குடிகள் பதினெட்பாக வகுக்கப்பட்டிருந்தனர். குடிகள் எல்லோருக்கும்எல்லாவிதமான உரிமைகளும்இருந்தன. எல்லாரும் சமமாகவே மதிக்கப்பட்டனர். குடிமக்களின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் அரசனே உத்தரவாதம் அளித்தான். பெருமக்கள் வாயிலாக குடிமக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்தே ஆட்சிசெய்துவந்தான். குடிமக்களை தம்மக்கள் போல பேணிக்காத்து வந்தான். மன்னன். இறைவனுக்கு அடுத்தவனாக மன்னன் போற்றப்பட்டான். செங்கோலாட்சி நிலவியது. மக்கள் இராசபக்தி மிகுந்தவர்களாகவும் நாட்டுப்பற்று மிக்கவர்க ளாகவும் விளங்கினார்கள். மன்னனும் மக்களின் மேல் அன்பு செலுத்தினான். மன்னன் கொலு மண்டபத்தில் அல்லது அத்தாணி மண்டபத்தில் இருந்து மக்களைச் சந்தித்து வந்தான். ஞானிகள். தவசிகள். அருள் பெற்ற அடியார்கள் மன்னனுக்கு அறிவுரை கூறுவார்கள். மக்களின் காவலனாகவே மன்னன் செயற்பட்டுவந்தான். மக்களின் உயிருக்கும். உடமைகக்கும் மன்னனே காவலன். மகிமைக்காக மன்னன் மணிமுடிதாங்குவதில்லை, மக்களின் பாரத்தை மன்னன் தலையில் சுமந்தான்.
பாதிக்கப்பட்டவர்கள் மன்னனிடம் முறையிட்டால் சாட்சிகள் இல்லா விட்டாலும். ஏழை என்றாலும், பாதிப்பினை ஏற்படுத்தியவர்களை யார் என்று அறியாதுபோனாலும் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டனை வழங்குவதும். பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்குவதும் மன்னனின் பொறுப்புக்களாகும். நாடு மன்னரின் உடமை அதன் பயனைப் பெறும் உரிமையை மன்னன் மக்களுக்கு அளித்தான்.நாட்டுக்காக போர்புரிவதை மக்கள் கடமையாக கருதினர். போரில் விழுப்புண் அடைவதும் அரசனுக்காக உயிர் கொடுப்பதும் பெருமை என எண்ணினர்.
மன்னனே நாட்டின் நிறைவேற்று அதிகாரியாகத் திகழ்ந்தாலும் மன்னன் அரசவைக்கு பதில் சொல்லக்கடமைப்பட்டவன். அரசன்சிங்காதனத்தில் வீற்றிருப்பான். அவனுடைய ஐயர் அருகிருப்பார். மன்னனுக்கு வலது பக்கமாக்கமாக ஐம்பெரும் குழுவினர் அமர்வர். இடதுபக்கமாக சேனாபதி வேளிர், ஒற்றர். வீரர். நகரமாந்தர் அமருவார்கள். அரசசபையின் ஒப்புதலுடனேயே
- 202

பல்லவராசசேகரம் மன்னன் தன் கடமைகளைச் செய்வது வழக்கம். அரச குடும்பத்தில் தோன்றாதவனையும், அரச குடும்பத்தாய்க்கு பிறவாதவனையும். தகுதியில்லாத வனையும் அரசசபை அரசனாக ஏற்றுக்கொள்ளாது. முடி சூட்டமாட்டார்கள். மன்னன் கையில் செங்கோல் வழங்குவது நீதி வழுவாது இருப்பதற்கே. நீதிகோணினால் செங்கோல் வளைந்துவிடும்.நீதிதவறிய மன்னனை மக்கள் நிராகரித்துவிடுவார்கள்.
நல்லூர் இராசதானியில் பேரரசர் பரராசசேகரன் முதிர்ச்சியடைந்த காலத்தில் சங்கிலி ஆட்சியை கைப்பற்றிதந்தையாகிய அரசனைச் சிறையிலிட்டு தான் சிம்மாசனம் ஏறினான். அரசசபையினரோ, அரண்மனைச் சேவகர்களோ அவனை அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. முடியும் செங்கோலுமின்றிஅதிகாரம் செலுத்தினான். தமிழில் அநேக நீதி நூல்கள் இருந்தன. நீதி தவறாத மன்னர்களின் வாழ்க்கை முன்னுதாரணமாக ஏற்று ஒழுகப்படும். சித்தர் ’களினாலும் ஞானிகளினாலும் தவசிகளாலும் அறிஞர்களாலும் புலவர்களாலும்
நீதிநூல்கள். நீதிமரபுகள், நீதிநெறிகள் உருவாக்கப்பட்டன.
தமிழ்த்துறை ஒவ்வொன்றிலும் புலமை பெற்றவர்கள் அரசவையில் இருந்தனர். மன்னன் இருக்கும் போதே இளவரசன் நியமிக்கப்படுவான். அரசகுடும்பத்தில் பட்டத்து ராணி வயிற்றில் தோன்றி அறுபத்தினான்கு கலைகளிலும் தேர்ச்சிபெற்ற ஒரு வீரனே இளவரசனாக முடிகட்டப் பெறுவான். நியமிக்கப்படாது. போனால் அரசனின் இராணியின்மூத்தமகன் முடிக்குரிய வாரிசு உரிமை உடையவன். அரசகுமாரர்களிடையே போட்டிப்பரீட்சைகள் வைக்கப்பட்டு திறமைமிக்கவன் தேர்ந்து எடுக்கப்படுவது வழக்கம். அரசகுடும்பத்தில் ஆட்சிக்கு வாரிசுகள் இல்லாது விட்டால், அரசவம்சத்திலிருந்து ஆட்சிக்கு தெரிவுசெய்வர். ஐம்பெருங் குழுவினர் அரசர்களை தெரிவுசெய்வதிலும் முடிசூட்டுவதிலும் பங்கு கொள்வர் அரசசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனுக்கே முடிகட்டப்பெறும். இந்த தேர்வுமுறைகள் கைவிடப்பட்டு மன்னன் மகனே மன்னனாக வரவேண்டும். தகுதி அவசியமில்லை என்ற நிலை தோன்றியதால் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்ததற்கு அதுவும் காரணமாக இருந்தது. அரசகுடும்பத்தில் திறமைசாலியே அரசனாக நியமிக்கப்பட வேண்டும். அரசன் தன் விருப்பப்படி அரச குடும்பத்தில் ஒருவனை இளவரசனாக நியமிக்கலாம். இளவரசனே அரசனுக்கு பின் அரசனாவான். அரசனுக்கும் பட்டத்துராணிக்கும் தோன்றி சிவநெறியை சார்ந்தவன் தான் இளவரசனாகவோ அல்லது அரசனாகவோ
- 203 -

Page 104
பல்லவராச்சியம் வரமுடியும் மற்றவர்கள் அரசகுடும்பம், அரசன். இளவரசன். அரசபரம்பரை என்று குறிப்பிட அருகதை அற்றவர்கள். இதுநாட்டு வழக்கு ஆகும்.
அவ்வாறே அரசில் ஏற்படும் வெற்றிடங்கள் எல்லாம் கல்வியில் தகுதியையும் திறமையையும் கணிக்கப்பட்டு நியமனம் செய்து நிரப்பப்படும். குடிமக்கள் அறுபத்தினான்கு கலைகளையும் பயின்று வந்தனர். வருடாவருடம் கலைகளில் திறமையைக் காட்டுபவர்களுக்கு. இந்திரவிழாவில் மன்னன் பரிசு வழங்குவான். ஒருமுறை நியமிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முடியும் வரை அல்லது தள்ளாமை ஏற்படும் வரை கடமையில் இருப்பார்.
பல்லவநாட்டின் அரசியலமைப்பாக எழுதப்படாத சட்டங்கள் இருந்து வந்தன. அதுதான் தேசவழமை அல்லது நாட்டுவழக்கு ஆகும். நீதிநூல்களைத் தழுவி ஞானிகளின் கருத்துக்களையும் இணைத்து. மனித விழுமியங்களைப் பேணுவதற்காகவும் மக்களின் மேம்பாட்டுக்காகவும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்காறுகளே தேசவழமையாகும். இவை பண்டுதொட்டு பரம்பரையாக தலைமுறை வழியாக பேணப்பட்டு வந்த ஒழுங்குகளாகும். மன்னனும் தேசவழமையை ஏற்றுக்கொண்டான். அரச சபையின் தீர்மானங்களை நிறைவேற்றும் நிறை வேற்று அதிபதியாக மன்னன் செயற்பட்டு வந்தான். அரசன் எப்பொழுதும் வருமுன் காப்போனாக இருந்து வந்தான். சித்தரோ. ஞானியோ, தவசியோ, இறைசித்தம் கொண்டவராக மன்னனுக்கு உறுதுணையாகச் செயற்பட்டு வருவார். மிருகங்கள் நீர் அருந்துவதற்கு கேணிகள். குளங்கள். தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆவுரஞ்சிக்கல்நட்டு வசதி செய்யப்பட்டது. நாட்டினை, பயிர்களை அழிக்கும் விலங்குகளை அரச அனுமதியுடன் வேட்டையாடுவர். மற்றபடி மிருகங்களை கொலை செய்ய
(UppusTs).
அரசன் வலிமையுள்ள படைகளை எப்பொழுதும் வைத்திருப்பதிலும், அவை எப்பொழுதும் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதற்கும் கவனம் செலுத்திவந்தான். பல்லவர்களிடம் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஒற்றர்படை, கடற்படை என ஆறுவகையான படைகள் இருந்தன. தினமும் ஆயுதங்கள் சரிபார்க்கப்பட்டு அவை கொல்லனுலையில் செப்பனிடப்படும். போர்களின் போது ஊனமுற்றவர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் கழித்து விட்டு புதிதாக இளைஞர்கள் படையில் வருடா வருடம் இணைத்துக்
- 204

uábaja JT989 35Júb கொள்ளப்படுவர். ஒற்றர்படை நேரடியாக மன்னனின் மேற்பார்வையில் செயற்பட்டுவரும். அரசனின் பாதுகாப்பிற்கென தனியான படை இருந்தது. போர்க்காலங்களில் கூலிக்குப் போராடும் வேளைக்காரப்படையும் இருந்தது.
அரசர் பண்பு
எங்கள் தலைவன் பல்லவ குலத்தை தாங்கி நிறுத்துவதில் கெட்டிக்காரன். சாந்தம் நிறைந்தவன், அழகன், பிறவியாலேயே சக்கரவர்த்தி, மல்வித்தையின் பொருள், விநயம் முதலிய குணங்களின் குரு. மேன்மையோடு கூடவே வளருபவன், பொன்மயமானவன். பீமனுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவன். சிவன். திருவடிகளில் பற்றுக் கொண்டவன். தூய்மையான அரசகுலத்தில் பிறந்ததாயிடம் தோன்றியவன். நல்ல உடல்வாகு உடையவன் என்று புகழ் பெற்றநற்பண்புகளை கொண்டிருந்தார்கள். எல்லாவிதமான தமிழ் வித்தைகளின் நூல்களின் பொருளையும் அறுதியிட்டு அறிவதில் வல்லவன். சினக்கலியின் வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான். அறம் பெருகு நனிச் செங்கோல் மாயன். பகையின்றிப்பார்காக்கும் பல்லவர் கோன். செங்கை முகில் அனைய கொடைச் செம்பொன் பெய் ஏகத்தியாகிஎன போற்றப்பட்டவர்கள்.
சத்துருக்களுக்கு எமன். மங்கையருக்கு மன்மதன். அயோக்கியர் களால் ஏமாற்ற முடியாதவன். குணங்கள் குறையாதவன். குடிமக்களுக்குப் புகலிடம்,நல்லோர்க்கு கற்பக விருட்சம், சமர்த்தன், குடிதழியீகோலோச்சுபவன் ஆக இருந்தனர். பல்லவத்தின் அரசர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் ஆட்சியாண்டு அவர்களின் சாதனை போர் வெற்றிகள் ஆகியவற்றினைவு ஒலைகளில் எழுதியோ புலவர்களைக் கொண்டு எழுதுவித்தோ அரண்மனைச் சுவடிக்கூடத்தில் வைப்பது வழக்கம். சுவடிக்காப்பாளர்களினால் அவை கால ஒழுங்கின் அடிப்படையில் ஏடுகளாக சேர்த்துக் கட்டிவைக்கப்படும். இது ஒரு புலவராலோ ஒரே காலத்திலோ எழுதப்படுவதில்லை இவ்வாறு அரசர்களைப் பற்றி எழுதிவைக்கும் முறை இராசமுறை எனப்பட்டது. சிறப்பான வியழங்கள் உலோகங்களிலும், கற்களிலும் வெட்டப்படும். கீர்த்திநூல்களாக வடிக்கப்படுவதும் அரசர்களுக்கு, படை, கொடி, குடி, முரசு, குதிரை, யானை தேர்தார்.முடிஆகியவை உரிமையாகும். மக்களின்எண்ணங்களையும், ஆவல்களையும்,நிறைவேற்றக் கூடியவனாக மன்னன் இருக்கவேண்டும். முறைசெய்து - 205

Page 105
பல்லவராச்சியம் காப்பாற்றும் மன்னர்களாக பல்லவர்கள் இருந்தார்கள். மக்கள் அரசர்களை தெய்வமாகப் போற்றினார்கள். மக்கள் சக்தியின் தந்தையே மன்னவன். மன்னனும் நீதிக்கும் அறத்திற்கும் கட்டுப்பட்டவனாவன். குடிதழிஇ கோலோச் சுபவர்களாக மன்னர்களும், அவர்களின் அடிதழிஇ நிற்பவர்களாக குடிகளும் வாழ்ந்தனர். நிமிர்ந்த செங்கோல் ஆட்சிநடந்ததால் அந்தக் கோலைப் பணிந்து வாழ்ந்தனர் குடிகள்.

குறுநில மன்னனின் ஆசனம் ஒரு அலங்கார வேலைப்பாடமைந்த இருக்கையே. சிற்றரசனின் ஆசனம்மூன்றுபடிகளுடன் கூடிய சிம்மாசனம்ஆகும். திறை செலுத்தி ஆள்பவர் சிற்றரசர். மணிமுடியும் செங்கோலும் சிங்காதனமும் படைத்தவர்கள் வேந்தர்கள். வேந்தர்களின் சிம்மாசனம் ஐந்து படிகள். திறை பெற்று ஆளும் பேரரசர் சிம்மாசனம் ஏழு படிகள், இந்திரன் சிம்மாசனம் ஒன்பது படிகளாகும். இவை தமிழ் அரசமரபுகளாகும்.

எந்நேரமும் அரச பரிபாலனத்திலும் போர்களிலும் ஈடுபடும் மன்னனுக்கு மனஇறுக்கம் குறைந்து மனச்சாந்தி பெறுவதற்கு மனஅமைதி, மனமகிழச்சிஅவசியமாக இருந்தது. மன்னன் கவின்கலைகளை இரசித்தான். வீணை, யாழ், குழல், நாகசின்னம், மேளம், மத்தளம், இசை,நடனம், நாட்டியம் முதலியவை வாயிலாக பாணர். விறலியர், சேடியர், அந்தப்புரமகளிர், மன்னனை மகிழ்வித்த வண்ணமாக இருப்பர். பட்டத்துராணிக்கு மேலதிகமாக அரச குலப்பெண்கள் மனைவிகளாக இருந்தனர். அந்தப்புரத்தில் மன்னன் இருக்கும்பொழுது. யாரும் மன்னனை பார்க்க முடியாது. அந்தப்புர மகளிஇனிய மொழிகளாலும் தேனூறும் வதனங்களாலும், பாணம் போன்ற தனங்களலும், வேய் போன்ற தோள்களினாலும் வேல் போன்ற விழிகளாலும் மன்னனை இன்பலோகத்திற்கு அழைத்துச் செல்வர். சிற்றின்பத்தில் பேரின்பம் கண்டனர், மன்னனின் மகிழ்ச்சிக்கு இவை அவசியமாகும்.

கடவுளிடம் என்றும் நிறைந்த பக்தியினால் அனைத்து மங்கலங்களையும் அடைந்தவர்கள். ஐம்பொறிகளையும் அடக்கியவன். முன்னோர் வழியைப் பின்பற்றுவதில் ஈடுபட்டவன். முன்னர் திகழ்ந்த ராஜதவசிகளின் குணங்களையும் ஆற்றல்களையும் அடைந்தவன். தன் குழந்தைகளிடத்தில் தோன்றும் அன்பை தன் குடிகளிடத்தில் எப்போதும்,
- 206

பல்லவராசசேகரம் கொண்டவன். கலிகாலத்தில் குற்றத்தினால் தாழ்ந்த அறத்தினை உயர்த்துவதிலேயே எப்பொழுதும் முனைந்து நிற்பவன். ஆசையும். கோபமும், குரோதமும் , காமமும், அச்சமும் அறவே அற்றவன். தாழ்ந்து போன அரச குலங்களை நிலைநிறுத்துவதை தொழிலாகக் கொண்டவன். அறிஞர்களுக்கு கற்பகமரம் போன்றவன். அறத்தினுக்கு இருப்பிடம், செல்வத்தின் இருக்கை, இறையையும். இராசாக்களையும், குரவர்களையும், முதியவர்களையும் போற்றுபவன். வெற்றிநிறைந்து நிற்பவன். அமுதத்திற்கு சமமான அன்பையும், விசத்திற்கு சமமான கோபத்தையும் உடையவன். பிரபுசக்தி, மந்திரசக்தி, மான உற்சாகசக்தி என்ற மூன்று சக்திகள் நிறைந்தவன். தன் புயவலியால் அரச மண்டலங்களை வணங்கியவன். வாய்மைக்கு எடுத்துக்காட்டானவன். ஒழுக்கம் நிறைந்தவன் அறம் பெருக விரும்புவோன். அரசருக்கு விதிக்கப்பட்ட எல்லாக் குனங்களையும் உடையவன் என்று பல்லவமன்னர்களை புலவர்கள் போற்றி
6ireTTfrasoir.
வழி வழி மக்களால் பேணப்பட்டு வரும் வாழ்க்கை முறையும் நாகரிகமும் காலப்போக்கில் மரபு என குறித்தனர். நாகரிக மரபு பேணுவது பல்லவ ஆட்சியினரின் கொள்கையாம். தமிழ் மக்கள் மிகப்பழங்காலத்திலிருந்தே மரபு வழி வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர். தமிழரின் வாழ்வியனும் தொழிலியலும் அரசியலும் மரபு நெறிகளிலேயே வளர்ந்து வந்துள்ளன. பல்லவ அரசின் ஆட்சிஇம்மரபுகளைப் பேணிவந்துள்ளது பல்லவ அரசமரபு ஆகும்.
சிவபெருமான் அருளிய தமிழ் வேதங்களுக்கும். அறத்திற்கும் ஆதியாகநின்றது மன்னன் செங்கோலாகும். அஞ்சாமை, ஈகை, அறிவு ஊக்கம் இவை இயல்பாகவே அரசர்களுக்கு நிறையவே உண்டு. அறத்திற்கு இழுக்கு ஏற்படாது அறம் அல்லாதவற்றைநீக்கிவீரத்திற்கு இழுக்கில்லாத மானமுடையது
அரசு
தமிழ் மன்னர்கள் மண், பெண். பொன் காரணமாகவே போர்
தொடுப்பது வழக்கம். பல்லவ மன்னர்கள் தமிழ் நாகரிகம் பரப்பவும். மானம்
காக்கவும் வீரத்தைப் பறைசாற்றவும் போர் தொடுத்தார்கள். இந்தியாவில் தமிழ்
நலிந்த போது, அங்கு பேரரசு அமைத்து தமிழ் வளர்த்தார்கள். பல்லவ
நாகரிகத்தை நிலை நாட்டினார்கள். அறம் தழுவிய போர்கள், புலவர்களால்
- 207 -

Page 106
பல்லவராச்சியம் புகழ்ந்து பாடப்பட்டன. போரின் போது, நிராயுதபாணிகளான குடிகள், பெண்கள், சிறுவர். மதநெறிநிற்கும் அடியார்கள். நோயாளர்கள் பாதுகாக்கப்படுவர். முரசு ஒலிப்பது இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தம்மை சேர்ப்பதற்காகவேயாகும். பணிந்தவர்கள். பயந்தவர்கள், புறமுதுகிட்டோடியவர்களை, தோல்வியை ஒப்புக்கொண்டவர்களை தாக்குவதில்லை.
பகை அரசன் ஆனிரை கவர்தல் கரந்தை, அதனைமிட்டல் வெட்சி, பகை அரசன் நாட்டின் மீது படை எடுத்துச்சென்று தாக்குதல் வஞ்சி, எதிர் அரசன் கோட்டைமதிலை முற்றுகையிடுதல் உழிஞை, இரு பெரும் மன்னர்கள்களத்தில் செய்யும் கடும் போர் தும்பை, அப்போரில் வெற்றி பெறுதல் வாகை எனப்படும். மன்னரும் படைகளும் அப்பூக்களைச் சூடிக்கொள்வர். போரில் வீரர்கள் கண்ணிமைத்தல். புறமுதுகிடல் கூடாது. கண்ணிமைக்கும் பகை வீரர் மீது போர்க்கருவிகளை ஏவக்கூடாது. மனம் சோர்ந்தவனையும், காலைப் பின்வைத்தவனையும், படைக்கலம் இழந்தவனையும். ஒத்தபடை எடாதவனையும் கொல்லாது விடுதல், பல்லவ அரசர்களின் போர்மரபுகளாகும். வென்ற மன்னன், வெற்றிக் கொடி எடுத்து விழா கொண்டாடுவர். வீரர் திறமைகளை பாராட்டி, பட்டம் பரிசில் வழங்குவர். விழுப்புண்பட்டு இறந்த வீரனுக்கு.நடுகல்நட்டு, அவன் வீரம் புகழ் பொறிக்கப்படும்.
அண்ணனையும் தம்பியையும் அடிபடவிட்டு, இனம் காண மாலையை போட்டு, மறைந்திருந்ததுதாக்கியது அயோத்திமரபு. பல்லவர் போர் மரபுகள் நயத்தக்க நனிநாகரிகம் மிகுந்தவை.
நாட் O
பல்லவ நாட்டுப்பற்று மிக்க பண்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதே. பல்லவநாட்டியல் ஆகும். பல்லவ நாட்டின் உயர்வுக்கும். பல்லவ மக்களின் மேம்பாட்டுக்கும் பல்லவ கலைகளினுடாகவும், வழக்காறுகள் வாயிலாகவும், நாட்டின் தனித்தன்மையைப் பேணிக் காத்து பற்றுடன் உழைத்து வருதல் நாட்டியல் ஆகும். இன்னும் சிலர் இதனை நாட்டாரியல், தேசியம் என்றும் அழைப்பர். நாட்டியலைப் பேணுவதன் வாயிலாகவே, நாட்டைப் பாதுகாத்தல் இயலும். அதுபோல, நாட்டுப்பற்றும், நாட்டு இயல் பற்றும் உள்ளவர்களினால் தானர்.நாட்டில் தன்னாதிக்கத்தினைக் காப்பாற்றிக் கொள்வது சாத்தியமாகும்.
- 208 -

பல்லவராசசேகரம் உணவு உற்பத்தியே நாட்டின் முதல் தொழிலாக இருந்தது. உணவின்றி அமையாது உடல். உடலின்றி இருக்காது உயிர். காடு திருத்தி நாடாக்கிநீர்ப்பாய்ச்சிவிவசாயம் செய்து நெல் விளைவித்தனர். ஒருவருடத்திற்கு, மக்களுக்குத் தேவையான நெல், சேமித்து வைக்கப்படும். புதிய நெல்லை அறுவடைசெய்து பழைய நெல்லைப்பாவனைக்கு கொடுப்பது. மன்னர் வழக்கம் அரண்மனை. கோயில்களில் நெல் சேமிக்கப்படும். நெல்லுடன் துணை உணவுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டுவரை நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது. குளங்கள், கேணிகள், வாவிகள் வெட்டப்பட்டு கட்டப்பட்டு. நன்னீர் எக்காலத்திற்கும் தேவையான அளவுக்கு மழைநீர் சேமிக்கப்பட்டு. பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆற்றினை மறித்துக்கட்டி வெள்ளாண்மை செய்யப்பட்டு வந்தது. கூலங்கள் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படட்டது.
விலங்கு வளர்ப்பு சிறப்பாக இருந்தது. மாடும், ஆடும் மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்தன. பசுப்பால் ஆட்டுப்பால், உணவுக்குப் பதிலீடாக, பயன்படுத்தப்பட்டது. பொருட்களை, இடத்திற்கு இடம் எடுத்துச் செல்ல, பார வண்டிகளை மாடுகள் இழுத்தன. வயல் வேலைக்கு மாடுகள் இன்றியமையாதவை. பட்டி அடைத்து மாட்டின் சாணமும், ஆட்டின் பிழுக்கையும், உரமாக உபயோகப்பட்டன. பால், தயிர், மோர், வெண்ணெய் நெய், அவசியமான உணவுப் பண்டங்கள். இறந்த மாட்டில் தோல், கோரோசனை எடுக்கப்பட்டது. மாடு மிகவும் உயர்வாகப் போற்றிமதிக்கப்பட்டதுடன், தைப்பொங்கலின் அடுத்த நாள், மாட்டுப்பொங்கல் நடாத்தி, உற்பத்திக்கு செய்த உதவிக்காக, நன்றி பாராட்டப்பட்டு வந்தது. உணவு பயிர்களை அழிக்கும. நாட்டை அழிக்கும். விலங்குகளைப்பிடிக்கமுடியாது போனால் மட்டும். அவை வேட்டையாடப்பட்டன. யானைகள் வளர்க்கப்பட்டு. பயிர்செய்கை,பாரந்தூக்கல் வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
கடல் வளங்களைப் பயன்படுத்தி, கடல்படு திரவியங்களான சங்கு, முத்து, பவளம், மீன். அம்பர். பொன்னாம்பர் சேகரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது. முத்துக்குளிப்பு சிறப்பாக நடைபெற்றது. வருடாந்தம் முத்துச் சந்தை கூடும். உலகின் மணிவியாபாரிகள் மணிபுரத்தின் சம்புகோவளத்திற்கு வருவது வழக்கம். கடற் திரவியங்களைப் பாதுகாக்க, கடற்படை அமைப்பு கடற்காவலை மேற்கொண்டுவந்தது. பல்லவநாட்டுக்கு கடல்வளம், மூன்றாவது
- 209

Page 107
பல்லவராச்சியம் வளமாக இருந்தது. பருத்தி ஏற்றுமதி செய்ததுறை. பருத்தித்துறையாகும். மயிலிட்டி, பொன்னாலை. நாவாந்துறை, கரையூர். பாசையூர். சிறந்த மீன்பிடி இடங்களாகும். வல்வெட்டித்துறை பல்லவ நாட்டின் கப்பல் கட்டும் தளமாகும். சிறிய கட்டுமரம் முதற்கொண்டு. பெரியசமுத்திர புரவிகள். கடற்புறாக்கள் வரை அவர்களின் கைவரிசையே. போர்க்கப்பலைத் தயாரிப்பதிலும் அவர்கள் வல்லவர்களாவர். பல்லவ பேரரசர் காலத்தில் போர் கருவிகளை கப்பல்களில் இணைத்துவிசைப்பொறிமூலம் அவற்றை இயக்கவும் வசதிசெய்திருந்தார்கள். வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி, எறிகணைகளை கப்பல்களில் பொருத்தியிருந்தார்கள் என்பதை, வெடியரசன் கதையில் அறிந்தோம். வியாபார நோக்கத்துடனும், கப்பல்களைக் கட்டி விற்பனை செய்து வந்தார்கள். இந்தியா முதலிய வெளிநாட்டாருக்கும். கப்பல்கள் விற்பனை செய்யப்பட்டன. கி.பி1938ம் ஆண்டு. அமெரிக்க மீன்பிடி கம்பனிக்கு விற்கப்பட்ட பாய்க்கப்பல். அன்னபூரணி அதனை வல்வெட்டித்துறையிலிருந்து ஒட்டிச் சென்று. ஆழ்ந்த சமுத்திரங்களைக் கடந்து, அமெரிக்காவின் குளோசெஸ்டர் துறையில் சேர்த்தவர்கள். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகளும் மீகாமன்களுமாவர். மீகாமன் தம்பிப்பிள்ளை மாலுமிகளான சபாரத்தினம், இரத்தினசாமி. நடராசா, நவரத்தினராசா, சிதம்பரப்பிள்ளை.சுப்பிரமணியம்,தில்லையம்பலம், சாண்போர் சங்கரதாஸ் ஆவர். குளோசெஸ்ரர் துறைமுகத்தை அன்னபூரணிசென்றடைந்த போது அமெரிக்கர்கள் அமர்க்களமாக வரவேற்றார்கள். பொஸ்ரன் குளோப் என்ற நியுயோர்க் தினசரி "அமெரிக்கா வந்துள்ள இலங்கையின் முதல் உத்தியோகப்பற்றற்ற தூதுவர்கள் என்று பாராட்டி எழுதியது. நான்கு மாதங்கள் இவர்கள் கெளரவ விருந்தினராக அங்கேதங்க வைக்கப்பட்டார்கள்.
தமிழ்க்கலைகளையும் அவற்றின்நுணுக்கங்களையும்நன்கு அறிந்த அறிஞர் பெருமக்களே புலவர் எனப்பட்டனர். நாடு நல்வழியில் செல்வதற்கும். மன்னன் நேர்வழியில் நடப்பதற்கும், புலவர்கள் ஆற்றிய சேவை அளப்பரியது. அறுபத்தினான்கு தமிழ்த்துறைகளில் ஒன்றில், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் புலமை பெற்று. திறமை மிக்க அறிஞர்களையே. புலவர் என அழைத்தனர். மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள். தமிழ்ப்புலவர்கள். தமிழ் அறுபத்தினான்கு பிரிவுகளுடையது. அதில் மூன்றுதான் மிஞ்சியுள்ளது. இலக்கியங்கள். நூல்கள் புலவர்களால் விவாதித்து அரங்கேற்றப்பட்டன. சொற்குற்றம், பொருட்குற்றம்.தவிர்க்கப்பட்டன. புலவர்கள். மரபுக்கு வழுவாக செயல்படவிட மாட்டர்கள். நூல் என்பது, விஞ்ஞானம் பற்றிக்
- 210 -

பல்லவராசசேகரம்
கூறுவதாகும். மருத்துவநூல் என்றால். மருத்துவ விஞ்ஞானம் என்று பொருள்படும். இலக்கியங்களில் அரசர்களின் வீரத்தைப்பற்றியும், போர்களைப்பற்றியும் தெரிவிப்பவை, புற இலக்கியங்கள் என்றும், இல்வாழ்க்கை, காதல்பற்றிக்கூறுபவை. அகப்பொருள் இலக்கியங்கள்என்றும் அழைக்கப்பட்டன. புலவர்கள் கூடுவது புலவர் அவை என்றும், புலவர் சபையில் மன்னனும் தலைமைவகித்துக் கலந்து கொள்ளும் போது, அது தமிழ் பேரவை என்றும் வழங்கப்பட்டது. அறுபத்தினான்கு கலைகளின் வளர்ச்சி பாதுகாப்பு எல்லாம், தமிழ்ச்சபையின் பொறுப்பில் இருந்து வந்தது. நாட்டில் பழக்க வழக்கம், மரபுகள், பாரம்பரியங்கள் பண்புகள், வழமைகள். உயர்நாகரிகம் எல்லாம்புலவர்களாகிய, அறிஞர்களின் சபையிலேயே கூடித்தீர்மானிக்கப்பட்டன.
மக்கள் வருமானத்தில் ஒருபகுதியை வரியாகச் செலுத்தினர். நந்திக்காசுகள் புழக்கத்திலிருந்தன. இவற்றில் செப்பு, வெள்ளி, பொன் நாணயங்களும் அடங்கிருந்தன. ஒற்றர்கள் நாட்டு நடப்புக்களை மன்னனுக்கு தெரிவிப்பார்கள். அமைச்சர், வேளிர்களும் சாதாரண செயற்பாடுகளை தெரிவிப்பார்கள்.
வாள். கேடயம், தோமரம். சக்தி, பிராசம், தண்டம், கலாயம், கார்ப்பணம், சக்கரம். வேல், அம்புவில், போரில் பயன்படுத்தப் பட்டன. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் தண்டநாதன். இரதங்களில் சேனாபதி ஏறி போர்புரிவர். அறக்கொடைகள் கோவில் அறப்பணிகளுக்காக வசூலிக்கப்பட்டன. கட்டாயமாக வசூலிக்கப்பட்ட அறக் கொடைகள், மகண்மை எனப்பட்டது. மக்களிடமிருந்துபெற்றவரி ஆலயங்களைநிர்வகித்திடவும், ஆலயங்களைசர்ந்த மடங்களை நிர்வகித்திடவும், அங்கு தங்கிருந்த தவசிகளுக்கு உணவு வழங்கிடவும், விழாக்காலங்களில் கூடுகின்ற மக்களுக்கு உணவு அளிக்கவும் பயன்படுத்தப்பட்டன. ஆலயங்கள் அருட்பணி மட்டுமன்றி அறப்பணி சமூதாயப்பணிகளையும் செய்தன. பஞ்சகாலங்களில் மக்களுக்கு உணவளிக்கும் நிறுவனமாக அவை விளங்கின.
கோயில்களும், மபங்களும், கல்விச்சாலைகளக விளங்கின. அங்கு சிற்பம். ஒவியம், இசை,நடனம், நாடகம், சைவநெறி அறிவியற்கல்விமுதலியன கற்பிக்கப்பட்டு வந்தன. பட்டயப்பதிவு, கல்வெட்டுப்பதிவு இடம் பெற்றன. பெரிய (35mufletó66rfeó ugègüLD60fLuLń. bl60TLD60óLuLib. 5TU-8LD600 Lutó.
- 211 -

Page 108
பல்லவராச்சியம் தருக்கமண்டபம் முதலியன இருந்தன. இதற்காக பல வீதிகளும் இருந்தன. மடங்கள் மாணவர்களுக்கு உண்டியும் உறையுளும் அளித்து கல்வி புகட்டும் கலைக்கூடங்கள் ஆகவும். துறவிகளும், சான்றோர்களும், உண்மை அறிவு நிறைந்த பெரியோர்களும. உறையும் இடங்களாகவும், இருந்தன. தமிழ் மந்திரங்களும் தமிழ் மொழியுமே பூசை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. தமிழ் மந்திரங்கள். திருமந்திரங்கள் என்ற விதந்துரைக்கப்பட்டன. ஏழைகள், திக்கற்றவர் முதலியோர்க்கும் புகலிடங்களாகவும் இருந்தன. மடத்துக்குழுக்களின் ஆட்சியில், மடங்களும் கோவில்களும் இருந்தன. ஏழு அறிஞர். அல்லது சான்றோர் அக்குழுவில், இடம் பெற்றிருந்தனர். தமிழ்க்கல்வி நன்கு வளர்க்கப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி மொழியாக தமிழ் திகழ்ந்தது. வடமொழி வேத வேள்விகள் இல்லாத பழைய சிவ வழிபாடு. சிவபூசைகள் நிலவியது. உயிர்பலி முறைகள் இருக்கவு மில்லை, அவற்றை அவர்கள் ஆதரிக்கவுமில்லை வடமொழி வேதத்துடன் ஆரியப்பார்ப்பனர். உயிர்பலி, மிருகபலி, வேள்வி, அறிமுகமாயின.
கோவில்களில் யாழ், வீணை, குழல், கின்னரி, கொக்கரி, முதலான இருபது இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு வந்தன. மாயோன் வழிபாடு. அம்பிகை வழிபாடு, சேயோன் வழிபாடு. இந்திரவழிபாடு, வருணவழிபாடு எல்லாம் தினைத்தேவர்களாகப் போற்றப்பட்டு, வழக்கிலிருந்து வந்தன. இவற்றைவிட, மிக உயர்ந்த ஒரு தெய்வமாக, சிவவழிபாடு நிலவியது. கடவுள் அல்லது இறை. V என்ற தெய்வக் கொள்கை அன்பே சிவம் என்று போற்றப்பட்டுவந்தது.
ஐம்பெருங்குழு
பெருமக்கள் குழு, அறவோர் குழு, மருத்தர் குழு, நிமித்தர் குழு, அமைச்சர் குழு ஆகியவை ஐந்தும் ஐம்பெரும் குழுவினர் ஆவர்
பெருமக்கள்குழு
நாட்டின் குடிமக்கள் தொழில் அடிப்படையில் பதினெட்டுக் குடிகளாக
இருந்தனர். ஒவ்வொரு குடியினரின் சார்பினும் ஒருவர் அரச சபையில்
உறுப்பினராக இருந்தனர். அவர் பெருமகன் என அழைக்கப்பட்டார். ஒவ்வொரு
குடியினரினதும்,நன்மதிப்பைப் பெற்ற ஒருவர். அத்தொழில் சம்பந்தமாக நன்கு
பரிச்சயமுள்ளவர், வேளாளரினால் தெரியப்பட்டு அனுப்பிவைக்கப்படுவர்.
குறிப்பிட்ட குடிமக்கள் வாழும்பிரதேசத்திற்கு, வேள் சென்று. அவர்களின் எல்லாக்
-212

பல்லவராசசேகரம் குடும்பத்தலைவர்களையும் ஒரு பொது இடத்திற்கு அழைத்து. நீங்கள் உங்கள் சார்பாக, யாரை அரச சபைக்கு அனுப்பப் போகறிர்கள்? என்று வினவுவார். ஒன்றுக்கு மேல்பட்ட பெயர்களை தெரிவித்தால், உங்களில் எத்தனை பேர் ஒவ்வொருவரையும் ஆதரிக்கிறீர்கள்? என்று பெயர்களைக் கூறுவார். கூடியிருந்த மக்கள் தங்கள் கைகளை உயர்த்தி, ஆதரவினைத் தெரிவிப்பார்கள். கூடுதலான ஆதரவைப் பெற்றவர். பெருமகனாக நியமிக்கப்படுவார். ஒருவரின் பெயரை மாத்திரம் தெரிவித்தால், அவரே பெருமகன் ஆவார். இந்த முறை, இருபதாம் நூற்றாண்டிலும், கிராமத்தலைமைக்காரன், உடையார் தெரிவு செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுதான் பல்லவத்தில் மக்களாட்சிஇடம்பெற்றிருந்த முறையாகும்.
குடிமக்களின் அக, புற வாழ்க்கைபற்றியும், தேவைகள் பற்றியும், நடப்புகள் பற்றியும், அவர்களின் சார்பில் உறுப்பினராக இருந்து, அரச சபையில் பெருமகன் எடுத்து உரைப்பார். பெருமக்கள் குழு. தொழில் வழியாக பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. எல்லாத்தொழில் செய்வோருக்கும். எல்லாத் தொழில்களுக்கும் அரசவையில்உறுப்புரிமை இருந்துவந்துள்ளது. பெருமகனுக்கு அரசில் சிறப்பான இடமும், அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது.
அறவேர் குழு
தேசவழமை. நீதிநூல்கள், அறன் வலியுறுத்தும் இலக்கியங்கள். அரச நெறிமுறைகள் தெரிந்த சான்றோர். புலவர்கள் ஐவர்கொண்டது. அறவோர் குழு. அறவோர் குழுதான். அறங்கூறு அவையை நடாத்திவந்தது. அறங்கூறு அவை, நீதிமன்றம்,நடுவர் மன்றம், பஞ்சாயம் என்று எல்லாம் அழைக்கப்பட்டது. நாட்டு மக்களின் உரிமைகளைப் பேணுவதற்காகவும், உடமைகளைப் பாதுகாப்பதற் காகவும், அதனை மீறுவோரை தண்டித்து திருத்துவதற்காகவும் குடிமக்களை சான்றோராகநிலைப்படுத்தவும். செங்கோல்வளையாது இருப்பதற்கும். நீதியை நிலைநாட்டவேண்டியது அரசன் கடமையாக இருந்துள்ளது.
த்துவர் குழு
அரண்மனையின் இராச மருத்துவனது தலைமையில் அறிவில் மேம்பட்டநன்கு பரிச்சயமுள்ள மருத்துவர் ஐவர் கொண்டகுழு ஆகும். இவர்கள். அரண்மனை வாசிகள், அரண்மனைப் பணியாளர்கள், படையினர் முதலாக நாட்டு மக்களினதும், சுகாதாரத்தினைப் பேணி வந்தனர். மருத்துவர்களை.
- 213 -

Page 109
பல்லவராச்சியம் பண்டிதர் என்றும் அழைத்தனர். பண்டு இதம் தெரிந்தபடியால், பண்டிதர்எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவத்துறையுடன் மாந்திரிகம். சோதிடம், இலக்கணம் ஆகிய நான்கு கலைகளையும் கற்றவர்களே பணடிதர் என. அகத்தியர் தெரிவித்துள்ளார். நாட்டின் மூலிகை உற்பத்தி, மருந்து உற்பத்தி, நோய்த்தடுப்பு, நாடுநகர சுகாதாரம் பேணுதல், நோயாளர் சிகிச்சை நோயாளர் பராமரிப்பு முதலியவற்றைக் கண்காணித்து வந்தனர்.
போரில் காயப்பட்ட படையினரை தனிமைப்படுத்தல், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை அளித்தல், அவர்களின் உயிரைக் காப்பாற்றுதல் படையினரின் உடல்வலிமை, மனவலிமையைப் பேணுதல். மருத்தர் குழுவின் செயற்பாடுகளாக இருந்தன. போரில் கைகால்களை இழந்தவர்களுக்கு, மீள வாழ்வழிக்க பொய்க்கை, பொய்க்கால்பொருத்தும் வேலைகளையும், இவர்களே செயற்படுத்திவந்துள்ளனர்.
நிமிர்த்தர் குழு
ஐந்து சோதிடர்களைக் கொண்ட குழு. அரண்மனைச் சோதிடர் தலைமையில், நிமிர்த்தர் குழுவாக பணியாற்றி வந்தனர். சோதிடம் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. அவை நிமித்தசோதிடம், சாதக சோதிடம். பூப்பு சோதிடம், மனையடி சோதிடம், மருத்துவ சோதிடம் ஆகும். மன்னர்களினால் நிமித்த சோதிடம் நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. எந்த நேரத்தில் என்ன திக்கில் போருக்குச் சென்றால் வெற்றிபெறலாம். போரில் வெற்றிபெற மன்னரின் சாதகம் பலமாக உள்ளதா? என்ன நாளில் போரினைத் தொடங்கவேண்டும்? நாட்டில் ஏற்படும் சகுனங்கள் கூறுவது என்ன? மழை பெய்யுமா? வெள்ளாண்மை விளையுமா? மக்கள் நலமாக வாழ்வார்களா? என்பதை எல்லாம், கிரகங்களின் நகர்வுகளைக் கொண்டு. மன்னருக்கு சோதிடர்கள் தெளிவாக எடுத்துக் கூறிவருவது அவர்களின் கடமையாகும். மன்னருக்கு குழந்தைகள் பிறந்தவுடன் நாட்டுக்கு நன்மை விளையுமா? அரசுக்கு நன்மை ஏற்படுமா? என்றவற்றை எல்லாம் பார்த்துக் கூறுவது. சோதிடக்குழுவின் பணிகளாகும். நாடுநகர நிர்மாணத்திலும், என்ன திசைகளில் எவை அமைதல் வேண்டும் என்பதிலும், சோதிடர் குழு கவனம் செலுத்திவந்துள்ளது எனலாம்.

அமைச்சர் குழு s ஐம்பெருங்குழுவில், அமைச்சர் குழு, ஆட்சி அதிகாரத்தில் அதிக பங்கு
- 214

பல்லவராசசேகரம் வகித்தது. அமைச்சர்குழுபற்றிய விபரங்கள். வெவ்வேறுவிதமாக காணப்படுகிறது. மதி நுட்பம் வாய்ந்த அமைச்சர் ஒருவரின் தலைமயில், வேறு நான்கு தகுதியுள்ளோர். துணை அமைச்சர்களாக இருந்தனர். தலைமை அமைச்சரின் பணிகளை நிறைவேற்றவும், அவருக்குத் துணையாக செயற்படவும், துணை அமைச்சர்கள் நால்வர் இருந்தனர். நாட்டின் விளைவு. வருமானம், வரிவசூலித்தல், அறச்சாலைகள். மக்கள் நலமேம்பாடு. பாதுகாப்பு. ஏனைய அரண்மனை கருமகாரர்களின் பணிகள் ஏனைய குழுக்களின் செயற்பாடு, மன்னரின்நலம்போர்திறைபற்றிய எல்லாவியழங்களும் ஆராய்ந்துவிவாதித்து திவிட்மானிப்பர். அமைச்சர் குழு என்பது. ஒரு அமைச்சரைத் தலைவராகக் கொண்டு இயங்கிய, ஐந்து பேர் கொண்ட குழுவாம். அதில் படைத்தலைவர், ஆன்மிக குரு, தூதுவர். ஒற்றர் ஆகியோர் உறுப்பினராக இருந்தனர். இது சிற்றரசு, அரசு, பேரரசு என்ற அரசின் தன்மைக்கேற்ப இருந்திருக்கலாம் என்று. கருத வேண்டியுள்ளது. அரசருக்கு அடுத்தபடியாக இளவரசரே ஆட்சி அதிகாரம்படைத்தவர். இளவரசருக்கு அடுத்தபடியாக குழுவின் தலைவரே அதிகாரம் படைத்தவர். போர்காலத்தில் சேனாதிபதியும், அதிகாரம் படைத்தவராக இருப்பார். கடைக்காப்பாளர் மன்னரினதும் கோட்டையினதும், அரண்மனையினதும்பாதுகாப்புக்கடமைகளை நிறைவேற்றி வந்தார்கள். நாட்டில் சட்டங்களை ஆக்குவதிலும். அதனை நடைமுறைப் படுத்துவதிலும், பராமரிப்பதிலும் முரண்பாடு ஏற்படும் போது தீர்ப்பு வழங்குவதிலும், தீர்ப்பினை செயற்படுத்துவதிலும், அரச அவையே, செயலாற்றியது. அரச அவையில் ஐம்பெருங் குழுவினரே. பெரும் பங்கு வகித்தனர்.

அரச அவை

அரச அவையில் பெருமக்கள் குழு பதினெண்பேர். அமைச்சர் குழு ஐவர், அறவோர் குழு ஐவர், நிமித்தர் குழு ஐவர், மருத்தர் குழு ஐவர், நகர மாந்தர் என்னும் வணிக கணத்தினர் ஐவர், அரசகுல ஐயரான சித்தர் அல்லது தவசி ஒருவர். பல்லவத்தின் வேள்கள் ஐவர், சேனாபதி, ஒற்றர் தலைவர், யானைப்படைத் தலைவர் குதிரைப்படைத்தலைவர், கடைக்காப்பாளர், இளவரசன் ஆகியோர் பல்லவ இராச சபை கூடும் போது கலந்து கொண்டு வந்தனர். அவசிய நிலமைகளில் பெருமக்கள் குழு, அமைச்சர்குழு. மற்ற குழுக்களினதும் தலைவர்கள் படைத்தளபதிகள் கூடினர்.
-- 215 ست

Page 110
பல்லவராச்சியம் அரச பேரவை
இவர்களோடு இலங்கையின் பதினெட்டு சிற்றரசர்களும். வருடத்தில் ஒருமுறை, அரசஅவை கூடும்தினத்தில் கலந்து கொள்வர். சிற்றரசர்களும் சேர்ந்து கூடும் போது அரச பேரவை என்று அழைக்கப்படும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பல்லவர்களுக்கு திறை செலுத்தி ஆண்ட காலத்தில், கலந்து கொண்டனர். சேதுவைக் கைப்பற்றிய நாள் முதல், சேதுபதி என்ற குறுநில அரசர்களும், அரச பேரவை கூடும் போது கலந்து கொண்டனர்.
எண் பேராயம்
அரச நிர்வாகம் எட்டுத் துறைகளாகப் பிரிக்கப்பட்டு. அதற்குப் பொறுப்பானவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்சித் தீர்மானங்களையும், அரச தீர்ப்புக்களையும், ஆணைகளையும் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்கள் கணக்கள். கருமகாரர். (செயற்படுத்தும் அலுவலர்கள்)கனக சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர். சேனாபதி. யானைப்படைத் தலைவர். குதிரைப்படைத்தலைவர் ஆகியோராவர்.
கணக்கார் - வருமானங்கள். வரிகள். செலவு. இருப்பு ஆகியவற்றின் கணக்குகளைப் பதிந்து பேணியவர்.
கருமகாரர் - அரண்மனை நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சர் மாணிக்கப்பண்டாரம் (நிதிப் பொறுப்பாளர்). களஞ்சியப் பொறுப்பாளர், வரி சேகரிப்பாளர். காசு அடிப்பவர்கள். முரசு அறைப்பவர்கள், இராசமடப்பள்ளி(உணவு சமைத்து வழங்குவோர்) அரண்மனைப்பாணன். அரண்மனை நாட்டியக் காரி ஏவலாளர்கள்ஆகியோராவர்.
கனகசுற்றம் - அரண்மனை மருத்துவன், அரண்மனை சோதி டன். அரண்மனைப் புலவர், அரண்மனை ஐந்தாம்படை, தூதுவர்கள் ஆகியோர் அரசரின் நெருங்கிய உறவினர்களாவர்.
கடைக்காப்பாளர் - கோட்டைக்காவலர்கள். அரசனின் மெய்காவலர்கள், ஆயுதசாலைக் காவலர்கள். நகர காவலர்கள். சிறைக்காவலர் ஆகியோராவர்.
நகரமாந்தார் -நகரத்து வணிக கணத்தினர். இராசப் பிரபுக்கள்.
- 216

பல்லவராசசேகரம் சேனாபதி - எல்லாப்படைகளுக்கும் தலைவர், தலைமைத்தளபதி
யானைப்படைத்தலைவர் - யானைப்படைபராமரிப்பு, பணிக்கர்கட்டுப்பாடு, வீரர்களின் தலைவர்.
குதிரைப்படைத்தலைவர் - குதிரை வீரர்களின் தலைவர். இவர்கள் அன்றாடம் அரண்மனைப் பணிகளை நிறைவேற்றினார்கள்.
சாந்து.பூ கச்சு, ஆடை, பாக்கு, இலை. கஞ்சுகம், நெய் உற்பத்திசெய்து அரண்மனைக்கு விநியோகிப்பவர்களும் தொடர்புடைய தொழிளார்கள் ஆவர்.
அரச குடும்பத்தில் இராசபரம்பரையில் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு அரசில் முதன்மையான பதவிகள் வழங்கபட்டுவந்தன. அவர்கட்கு அரண்மனையில் பதவிகள் வழங்கி வந்தனர். அரண்மனைக்கு வெளியே வழங்கிய பதவிகளுள், வேளாளர் பதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது. குறுநில மன்னர் பதவியாகும். இவர்களுக்கும் வில், வேல், தண்டை, கண்ணி, தார், தேர். குதிரை உரியதாக இருந்தது. வரிவசூலித்து அரசருக்கு வழங்குவது பிரதான பணியாகும். உணவுஉற்பத்தியை பெருக்குவது. அதற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மழைநீரைத் தேக்கி வைப்பது, குடிகளுக்கு இடையே ஒற்றுமையை, ஒத்துழைப்பினை ஏற்படுத்துவது. அரச சட்டங்களை அமுல் படுத்துவது, ஒழுங்கை நிலைநாட்டுவது.நீதி வழங்குவது. உணவு உடையில் தன்னிறைவும் காண்பது. அறம் பொருள் இன்பம் மக்கள் நுகர வாய்ப்பளிப்பது, தமிழ்க் கலைகளை வளர்ப்பது. தமிழ்க்கலைஞர்களை காப்பது, மடங்கள், தவச் சாலைகள், ஆலயங்களை நடாத்தி ஞானிகளையும், சித்தர்களையும், தவசிகளையும் ஆதரித்தல், மடங்களினூடக கல்விபோதனை செய்தல் இவற்றிற்கு மானியங்கள். நிதிவழங்குதல், ஆதுலர்சாலைகளை அமைத்து நோயாளருக்கு மருத்துவவசதி கிடைக்கச் செய்தல், அன்னசத்திரம் ஏற்படுத்தி ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உணவளித்தல் ஐந்து கல் தொலைவிற்கு ஒரு இளைப்பாறு மடம், கிணறு, நீர்த் தொட்டி, ஆவுரஞ்சிக்கல் அமைத்து போக்குவரத்திற்கு உதவினார்கள். பல்லவத்தில் ஐந்து வேள்கள் பதவிவகித்தனர். வலிகாமம் கிழக்கு. வடமராட்சி. தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வலிமேற்கு அரண்மனை ஆகியவை வேளிர்களின் ஆட்சிப்பிரிவுகள் ஆகும். பிறவியால்
- 217

Page 111
பல்லவராச்சியம் ஏற்படும் பெயரல்ல வேளாளர் என்பது. அரசனால் வழங்கப்படும் ஒரு வரையறுக்கப்பட்ட பதவியாகும். வெள்ளாளர் என்ற தொழிலையும் வேளாளர் என்ற பதவியையும் பலர் ஒன்றாக நினைத்து தவறாக கருத்துத் தெரிவித்துள்ளனர். வேளின் ஆட்சிப்பிரிவு இறை எனப்படும்.
பல்லவ நீதிமுறை
மன்னனே நீதி வழங்கக்கடமைப்பட்டவன் என்றாலும் நாட்டுப் புறத்தில் வேளிர்களும், கிராமப்புறத்தில் உடையாரும், நகரில் அறங்கூறு அவையும், அரண்மனையில் மன்னனும் நீதி வழங்கினர். ஆட்சியால், ஆவணத்தினால், அயலவர்கள் சாட்சியால், நீதிதீர்மானிக்கப்பட்டுவந்தது.நாட்டில் குடிகள் எல்லாரும், ஒரே மாதிரியான தேசவழமை என்ற எழுதாத சட்டப்படி நீதிவழங்கப்பட்டு வந்தது. தொழில் வழி 18 குடிகளுக்கும். ஒரே விதமான குற்றத்திற்கு, ஒரே விதமான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் உரிமை சமமாக இருந்துள்ளது. இந்தியாவிலுள்ள பாரம்பரிய அரசுகள். பிராமணருக்கு வேறுநீதி, சூத்திரருக்கு வேறு நீதி என்றும் மனுதர்மம் என்ற குலத்திற்கு ஒரு நீதி, பிறப்பால் ஏற்றத்தாழ்வு காட்டி வழங்கிவந்தன. இந்த அநாகரிக முறை பல்லவர்களின் ஆட்சியில் இல்லை. இதனை அறிந்துகொள்ளாத பலர். இந்தியா போலேயே இலங்கையிலும் இருந்தது என்று. எணர்னலாம் அல்லாவா? பிற்காலத்தில் தேச வழமையும், அந்நியராட்சியில் மாற்றி அமைக்கப்பட்டு. சட்டமாக, ஒல்லாந்தரினால் அமுல் செய்யப்பட்டது. தங்களுக்கு வசதியானவற்றை சேர்த்தும், பாதகமானவற்றை நீக்கியும், அந்நிய ஆட்சியாளர் நீதிமுறையை மாற்றியமைத்துச் சட்டமாக்கினர். அக்காலத்தில் அந்நியரின் ஆட்சியில் இணைந்திருந்தவர்களும், இதில் பெரும் பங்கு வகித்தனர். எனவே, ஒல்லாந்தரின் தேசவழமைச்சட்டம்தான். பல்லவ மன்னர்களின் தேசவழமை அல்ல, என்பதை தெரிந்து கொள்வது நல்லது. ஒல்லாந்தர் ஆட்சியின்போது, இறக்குமதி செய்யப்பட்ட இந்திய அடிமைகளின் பராமரிப்பு சம்பந்தமான ஒழுங்குவிதிகளையும் இயற்றி, தேசவழமைச்சட்டத்தில் சேர்த்தார்கள்.
"தற்போது தேசவழமை என்று அறியப்படுவது, குடியேற்ற ஆட்சியாளர்களினால்தங்கள் தேவைகளுக்கென தொகுகக்கப்பட்டதும், அன்றாட
ஆட்சி பரிபாலன வியழங்களுக்கு அவசியமாக தேவைப்பட்டதுமான வழக்காறுகளாகும். பின்னர் சட்டமாக்கப்பட்டன. அந்நிய ஆட்சியாளர்களினால்
- 218

பல்லவராசசேகரம் தொகுக்கப்படாதுவிடப்பட்ட வழக்காறுகள் நிறையவே உள்ளன. தேசவழமைச் சட்டத்தின் குறைபாடுகளினாலும், வழக்கு ஒழிந்து போன தேசவழமைகள் ஏராளம், ஆட்சியாளர்களினால், மனம் போன போக்கில், தேச வழமைச் சட்டமானது பலமுறை திருத்தப்பட்டுள்ளது. தேசவழமை. ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மட்டும். வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. தேசவழமை என்பது. தமிழ் மக்களது இனக்குழும அடையாளத்தின் பிரதிபலிப்பு. என்பதை நாம் எக்கட்டத்திலும் மறந்து விடக்கூடாது" என வி.ரி. தமிழ்மாறன் சட்ட விரிவுரையாளர் தெரிவித்துள்ளார். தேசவழமை என்ற பல்லவ அரசியல் யாப்பு. அந்நிய ஆட்சியாளர்களினால் பல மாற்றங்களுக்குட்பட்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

முழு இலங்கைக்கும் ஏற்புடையதாக தேசவழமை அந்நியர் வருகைக்கு முன்னர் இருந்துள்ளது. பின்னர் தேசவழமை இலங்கையில் வடக்கு காணிகளுக்கும், வடக்கு, மக்கள்எங்கு வாழ்கிறார்களே. அங்கெல்லாம்.இச்சட்டம் ஏற்புடையதாக உள்ளது.
தேசவழமை சட்டவழக்காறுகளில், ஆடவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்டிரை, மனைவிகளாக வைத்திருக்கும் உரிமை, அளிக்கப்பட்டிருந்தது. எல்லாப் பெண்களுக்கும் வாழ்வளிக்க வேண்டும் என்ற நல்நோக்கத்திற்காக இவ்வழக்கு ஏற்பட்டிருக்கலாம். விவாகரத்து. விதவைகள் மறுமணம் பற்றிய முறைமையும் இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கும் தாம் மகிழ்ச்சியாக வாழும் உரிமை, விவாகரத்துச் செய்தவர்களும். விதவைகளும். மறுமணம் செய்ய விரும்பினால்தாம் விரும்பும் ஆடவணை மணக்கும் உரிமை இருந்தது என்னும் போது, தேசவழமை பெண்ணுரிமையை எந்தளவுக்கு மதிப்பளித்துள்ளது என்பது தெளிவாகிறது.
பல்லவ நாட்டில் கல்லாதவர்கள் இல்லை. எல்லோரும் கல்வியில் மேம்பட்டவர்கள். அறுபத்தினான்கு கலைகளும், அவ்வக்கலைஞர்களினால் தங்கள் தங்கள் கலைக்கூடங்களிலோ, அல்லது இல்லங்களிலோ தமது பிள்ளைகளுக்கும். தம்மிடம் விரும்பி வந்து கற்கும் மாணாக்கள்களுக்கும். போதிக்கப்பட்டு வந்தது. கற்பவர்கள் கற்பிப்பவர்களுக்கு, உணவு. உடை, முதலியன வழங்குவர். கற்றுத்தேறி தொழில் செய்யச் செல்லும்போது, கற்பித்தல்
- 219 -

Page 112
பல்லவராச்சியம் கூலிவழங்குவர். பொன், பொருள். நெல் வழங்குவது வழக்கம் மொழிப்புலவர்கள் இலக்கண இலக்கியங்களையும், சோதிடப்புலவர்கள். சோதிடத்தையும் மருத்துவப்புலவர்கள் மருத்துவத்தையும் வாத்தியபுலவர்கள் வாத்தியங்களை யும் கற்றுக் கொடுப்பது வழக்கம். எல்லோருக்குமே ஒரு தொழிற் கல்வியும், தொழிலும் நிச்சயமாக கிடைக்கும். அதனால் வேலையில்லை என்று upിങ്ങാണു.
மடங்கள், ஆலயங்கள். சித்தர்களுடைய தாபனங்கள் இலவசமாக எல்லாக்கலைகளையும்போதித்துவந்த இடங்களாகும். அங்கே யாரும் விரும்பிய கல்வியைகற்கலாம். இடையிடையே ஐயர்வைக்கும் சோதனைகளில் மாணவன் தமது திறமையை நிரூபித்தல் வேண்டும், அல்லது தொடர்ந்து கற்பது சிரமம். சிற்பம், ஒவியம். நடனம், நாட்டியம், காவியம், இசை, வாத்தியங்கள். கட்டிடம், சோதிடம் முதலியவை பெரும்பாலும் கோவில்களிலே பயிற்றுவிக்கப்பட்டுவந்தன. திறமையுள்ளவர்கள். சாதனைகளால் தமக்கு என தனியிடத்தைப்பிடித்தார்கள். பெருமளவில் பணம் சம்பாதித்தார்கள். கலைகளின் நாயகன் சிவபெருமான் ളുഖit.
பல்லவதமிழ் அறுபத்தினான்கு
தமிழின் பிரிவுகள் இடத்திற்கு இடம் வேறுபாட்டினைக் கொணர்டுள்ளன. இருந்த போதிலும் பெரும் அளவில் ஒற்றுமை காணப்படுகின்றன. பல்லவத்தில் வழக்கிலிருந்த தமிழ் கிளைகள் அறுபத்தினான்கு ஆகும். அவை.
1. எழுத்து இலக்கணம் 2. எழுத்து இயல் 3. செய்யுள் இலக்கணம் 4. நாடகம் 5. காப்பியம் 6. தமிழ் இலக்கணம் 7. கணக்கு 8. தமிழ் நால்வேதம் 9. மருத்துவம் 10. மாந்திரிகம்
- 220

பல்லவராசசேகரம் 11. சோதிடம் 12. Fg56OTib 13. LD6CD60Tug 6,5556) 14. நளபாகம் 15. ஆடல் 16. UITL6) 17. வீணை (நரம்பு கருவி 18. குழல் (துணைக்கருவி 19. மத்தளம் (தோற்கருவி) 2O. gp16Tub 21. காமத்துப்பால் 22. CSLDITs6OT b
23. வசியக்கலை
24. தோட்டக்கலை 25. நீர்ப்பாசனம் (குளம்) 26. நெசவு (தையல், சாயம்) 27. 85 (pL, basp. 960LDL 28. ápULb 29. ஓவியம் 30. தச்சு (மரவேலை) 31. கொல் (இரும்பு வேலை) 32. பொன் வேலை 33. பொன் மதித்தல் 34. மணி சோதனை 35. உலோக வார்ப்பு 36. அரசியல் 37. அறநீதி 38. அம்புபயிற்சி 39. ஆனை ஏற்றம் 40. குதிரை ஏற்றம் 41. தேர்ப்பயிற்சி 42. மற்போர் 43. போர்க்கலை
است 221 -

Page 113
பல்லவராச்சியம்
44. இரசவாதம்
45. (Burias b
46. நட்டம்
47. முட்டி
48. பறவை ஊர்வன அறிவு 49. LD60TLDépátfeld besig56) 50. வானவெளியிற்போதல் 51 கூடுவிட்டு கூடு பாய்தல் 52. பிறர் கண்னுக்கு தெரியாது உலாவுதல். 53. இந்திரசாலம் (உருமாறும்) 54. மகேந்திரசாலம் (அற்புதம்) 55. அனல் மேலிருத்தல் 56. நீர் மேல் நடத்தல்
57. பேச்சுக்கலை 58. மண் பொருட்கள் செய்தல் 59. வாய் கட்டல்
60. கண் கட்டுவித்தை
61. விந்து கட்டல்
62. 6m8oofsb 63. பகைவர் ஆயுதம் பயன் அற்றுப் போகச் செய்தல் 64. ஐவகை அவத்தைகளால் உயிரை நிறுத்தல்
தமிழின் துறைகள் அறுபத்தினான்கும் பதினெட்டுத் தொழலவழிக் குடிகளினாலும் பேணப்பட்டு வந்தன.
- 222

பல்லவராசசேகரம்
9. பல்லவ குடிமக்கள்
மனித நாகரிகத்திற்கும். வாழ்க்கைக்கும், உறுதுணையாய் அமைந்தவை தொழில்களாகும். தொழில்கள் சீமை பெற்று வளர்ந்தபோதுதான் நாகரிகம் வளர்ச்சிபெற்றது. மனிதவாழ்வை வளப்படுத்தவும்மனிதநாகரிகத்தைச் சீபடுத்தவும் பல தொழில்கள் சாதனங்களாய் அமைந்தன. தொழில்வளம்கண்ட தமிழர், ஒவ்வொரு தொழிலின் மூலம் வாழ்வின் இன்பம் நுகர்ந்தனர். தொழில் வழிவாழ்வில் ஆக்கம் பெற்றான். தொழிலின் தேவை உணர்ந்து, தொழிலின் திறமுணர்ந்து, தொழில்களை நலிய விடாமல் மென்மேலும் பெருக்கி பேன முற்பட்டான். தொழில்கள் மூலமே மனிதன் தனது வாழ்விற்கு தேவையான உணவு,உடை,உறையுள் ஆகியவற்றை அடைந்து அகமகிழ்ந்தான். தொழில் மனித வாழ்வின் உயிர் நாடியாகும்.
நாகரிகமடைந்த மக்கள் சில நெறிமுறைகளை வகுத்தனர். எதிர்கால வாழ்வும். வழிவழி மக்கள் வாழ்வும். செம்மையாக இருப்பதற்காக வகுத்த பாதுகாப்பு நெறிமுறைகளே, நாகரிக மரபுகள் ஆகும். கூடிகஷபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்: என்பது போல், மக்களை பிறப்பால் சமமானவர்களாக கண்டனர். பல்லவத்தில் நனி சிறந்த நாகரிகம் நிலவியது. வழிவழியாக வந்த மக்கள் தம் முன்னோர் வாழ்க்கை முறையையும், நாகரிகத்தையும் சிறப்பாகப் பேணிவந்தனர்.
குடிகளின் எணர்னங்களும், ஆவல்களும், அரசசபையில் பெருமகனால் எடுத்துரைக்கப்படும். அரசசபையும், அரசனும் குடிதழியீகோலோச்ச பெருமக்கள் குழு சாதனமாக இருந்துள்ளது. குடிகளுக்கும் ஆட்சியில் பங்கு இருந்துள்ளது. தங்கள் சார்பில், அரசவைக்கு உறுப்பினர் ஒருவரைதெரிவுசெய்யும் உரிமை, குடிகளுக்கு இருந்து வந்துள்ளது. மன்னனை தெரிவு செய்வதிலும், பெருமக்கள் குழுவுக்கு பங்கிருந்தது. மன்னன் தலைமையில் பல்லவத்தில் மக்களாட்சியே இடம் பெற்றிருந்தது எனலாம். இதனை அறிஞர் அண்ணா குடிக்கோனாட்சிஎன்று சிறப்பித்துக் கூறினார்.
பல்லவ நாட்டில். தமிழ்ச் சமுதாயம் நாகரிகத்தில் சிறந்து விளங்கிய அக்காலத்தில், அறிஞர்கள் தொழில்களை பதினெட்டுப் பிரிவுகளாக
- 223

Page 114
பல்லவராச்சியம் வகுத்திருந்தனர். பதினெட்டு தொழில் புரிவோருக்கும். பதினெட்டுப் பூமியை வழங்கியிருந்தனர். நாட்டின் குடிகள் அனைவரும் இந்தப் பதினெட்டுப்பிரிவில் ஒன்றில் அடங்குவர். ஒவ்வொரு தொழில்வழிகுடிமக்களின்சார்பிலும், அக்குடியைச் சேர்ந்த ஒருவர், அரசவையிலே உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். ஈழநாட்டின் எழுதப்படாத அரசியலமைப்பின், நாட்டு வழமை என்ற சட்டம் இதுவாகும். குடிகளின் சார்பில் அரசசபைக்கு தெரியப்பட்டோர் கூடிகூடிபெருமகன்: எனப் போற்றிப் புகழப்பட்டனர். சங்க இலக்கியங்களில் பாணர் பெருமகன், மறவர் பெருமகன் குயவர் பெருமகன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே அவர்கள் அரசவை உறுப்பினராக இருந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. பதினெண் பூமியர். பதினெண் வியழத்தார் என்றதுவும் பதினெண் குடிகளையே குறிக்கிறது.
முப்பர்
அரச அறிவித்தல்களை முரசறைந்து மக்களுக்கு அறிவித்தவர்கள். போர்க்காலங்களில் போர்முரசினை அறைவோரும், அரச விழாக்களில் இராசபேரிகை முழக்குவோரும், அரசனின் ஊர்வலங்களிலும். ஆலய ஊர்வலங்களிலும் முன்னால் முரசு அடித்துச்செல்வர். மூப்பர். பறை அறைவோர் என அழைக்கப்பட்டனர். அரச ஊர்வலத்தில் கொடி, குடை, ஆலவட்டம்தாங்குவர்.
உழவி
வயலில் உழுது விதைத்து, களை பிடுங்கி. நாற்று நட்டு, அருவி வெட்டியும், நெல்விளைவித்தும் வயல் ஓரங்களில் வாழ்ந்தவர்கள். பள்ளமான இடங்களில் உழவர் வாழ்ந்ததால் பள்ளர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களின் வாழ்க்கையைப் புகழ்ந்து புலவர்கள் பள்ளு இலக்கியங்களைப் பாடினார்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று மதிப்பு பெற்றவர்கள். முதன்மை உணவாகிய நெல் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தநாகரிகமான குடிகள்.
ஆயர்
ஆயர்கள் முல்லை நிலத்திலும் அதனை அண்டியும் வாழ்ந்த மக்களவர். இவர்கள் பசுக்களை வளர்த்து பெருக்கிநாட்டுமக்களுக்கு பால், தயிர். மோர், நெய் வழங்கிவந்த மக்களாவர்.நாட்டில் பாரவண்டிகளை இழுப்பதற்கு. காளைகளை வழங்கினார்கள். பாற்பசுக்களை விற்பவர்கள். வழிப்பயணத்தில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு, மோர் வழங்கி தாகசாந்தி அளிப்பவர்கள்.
- 224

பல்லவராசசேகரம் அக்காலத்தில் விருந்தினருக்கு. ஏழைகள் மோரும், வசதிபடைத்தவர்கள் பாலும் வழங்கிவந்தனர். இவர்களுடைய தொழில். விலங்கு வளர்ப்பு ஆகும். வண்டி களை வைத்துப்போக்குவரத்திற்கு உதவினார்கள். எல்லா விலங்குகளையும் பிடித்துப்பழக்கி வேலை செய்வித்தார்கள். ஆடுகளையும் வளர்த்துப்பயன் பெற்றார்கள். இவர்களுடைய தலைவன் ஆய் என்று அழைக்கப்பட்டான். ஆயர். ஆய்ச்சியர். இடையர், இடைச்சியர் என்று இவர்களை அழைப்பர். மகாபாரதத்தில் கண்ணன் கதையில் கோவியர் என்று குறிப்பிடப்பட்டனர்.
வானுவா
வித்துக்களை ஆட்டி நெய் எடுப்பவர்களை வானுவர் என அழைத்தனர். எண்ணெய், தேங்காநெய், இருப்பை நெய், ஆமணக்கநெய், வேப்பநெய். கடுகுநெய், புங்குநெய், முதலியவற்றைஆட்டிஎடுத்துநாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விற்று வந்தார்கள். உணவுக்கும். உடலுக்கும். விளக்கு எரிப்பதற்கும் இந்த எண்ணெய்களே மக்களின் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டுவந்தது. அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் இரவும் பகலும் தீபங்கள் எரிந்த வண்ணமிருந்தன. ஆலயங்களிலும் விழாக்களிலும் பெருந்தொகையான தீபங்களை மக்கள் ஏற்றினார்கள்.
பரவர்
கடல் வளத்தினைப்பயன்படுத்தி, கடற்கரையில் வாழ்ந்த மக்கள், பரவர்கள் என்றும், நெய்தல்நிலமக்கள் என்றும், பொதுவாக அழைக்கப்பட்டனர். முத்துக்குளிப்பு, சங்குகுளிப்பு, பவளம் சேர்த்தல், அவற்றினை அறுத்து பாவனைக்கு ஏற்றதாகச் செய்தவர்கள். கடலின் தன்மைக்கு ஏற்பவும் கடற் தொழில்களின் வசதிக்கு ஏற்பவும்கடற்கலங்களை உருவாக்கியவர்கள். கட்டுமரம், ஒடம், வள்ளம், தோணி, திமில். படகு. ஊரா. மச்சுவா. நாவா. கப்பல், வங்கம் பாய்க்கப்பல் எல்லாம். பல்லவத்தில் உருவாக்கட்டன. மீன் பிடித்தல், வலை பின்னுதல். கருவாடு போடுதல், கடற்பாசி அள்ளுதல் எல்லாம். இவர்களின் தொழில்களாகும். இவர்களுள் முற்குகள், கரையார், திமிலர் என்றும் தொழில் வழி பிரிவுகள் இருந்தன. நெய்தல் நிலமக்களின் தலைவன் பட்டங்கட்டி என அழைக்கப்பட்டான். நாட்டு மக்களின் கடலுணவுத் தேவைகளை இவர்கள் நிறைவுசெய்து வந்தார்கள்.
முற்காலத்தில் கடலோடிகளாக செயற்பட்டு. பல்லவத்தின் கடல்
- 225

Page 115
பல்லவராச்சியம் வாணிபம் சிறப்பாக செழித்திருந்ததற்கு. இவர்கள் பெரும்பங்காற்றியிருந்தார்கள். முற்காலத்தில் குகன்ஆக இருந்தவர்களே முற்குகள்எனப்பட்டனர். இவர்கள் பெரும் கப்பல்களைச் செலுத்துவதிலும் திறமைசாலிகளாக இருந்தனர். கப்பற் தலைவர்களான மீகாமன்களாக இருந்தவர்களும் இவர்களே. கடல் களநிலைவரம். வானசாத்திரம்நன்கு தெரிந்தவர்கள். கப்பல் மாலுமிகளை குகன் என்றும் அழைத்தார்கள். ஏழுகடல் சீமை எங்கும். ஏலேல மகராசன். கப்பல்கள் ஏலேலோ பாடிவாணிபம் செய்து வந்தன. பல்லவத்தின் கடற்படையில் இவர்களே வீரர்களாகவும், பெருந்தொகையிலும் இருந்துள்ளார்கள். பல்லவம் கடல்படு திரவியங்களின் வாணிபத்தினால் பெருந்தொகையான லாபம் அடைந்தது.
சேணியர்
இதுவரை நெல்லுணவு, விலங்கிலிருந்து பெறப்படும் உணவு, கடலுணவு. உணவுக்குப் பயன்படும் நெய்வகைகள் முதலிய உணவுகளை. நாட்டுக்கு விநியோகித்தவர்களைப் பற்றியதாக இருந்தது. உணவுக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அவசியமானது உடையாகும். ஆடைகளுக்கான துணிகளை நெய்தவர்கள். நெசவாளர்கள் என்றும் சேணியர் என்றும் அழைக்கப்பட்டனர். நாட்டு மக்கள் எல்லோருக்கும் உணவு எவ்வளவு அவசியமோ, அந்தளவுக்கு நாகரிகமான, மேம்பாடான வாழ்க்கைக்கு ஆடை அவசியமாகும். ஆடையில்லாதவன் அரைமனிதன், பல்லவத்திலிருந்து பருத்திஆடைகள், பருத்தித்துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பட்டுத்துணிகள் நெய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். முற்காலத்தில் இவர்கள் தொழிலில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இதனால் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தையும், மதிப்பையும் பெற்றுத் தந்தார்கள். நகரில் இவர்களுக்கு வழங்கிய பகுதி சேணியதெரு என அழைக்கப்பட்டது. இவர்களை செங்குந்தர் என்றும் அழைத்தனர்.
உணவு. உடைக்கு அடுத்ததாக சுத்தம் முதன்மை பெறுகிறது. துணிகளிற்கு சாயம் போட்டவர்கள் வண்ணக்கர் அல்லது வண்ணார் எனப்பட்டனர். நெசவு செய்யப்பட்டதுணிகளிற்கு வண்ணம் தோய்த்தவர்களவர். அவுரி, சாயவேர், மரப்பட்டைகள் சாயங் காய்ச்சப் பயன்பட்டன. அரண்மனை உடுப்புக்களை சாயம் போகாது கழுவித்தோய்த்தவர்கள் இவர்களே. நீலம்
- 226 -

பல்லவராசசேகரம் தயாரித்து உடுப்புக்களை வெண்மையாக பளிச்சிடவைத்தவர்கள். ஆடைகளை துவைத்து வெளுக்க வைத்தவர்கள். சிங்கைநகர் ஆட்சியில் சித்தங்கேணியைச் சேர்ந்த வண்ணக்கள் ஒருவரிற்கு அரசன் கூடிகூடிசாயக்கார பெரு வண்ணான் என்று அவருடைய திறமையைப்பாராட்டி பட்டமும் பரிசுகளும் கொடுத்த வரலாறு காணப்படுகிறது. அத்துடன் வண்ணக்கர் பெருமகனாக அரச அவையிலே நியமிக்கப்பட்டிருந்தார். இவர்களிற்கு வழங்கிய நிலம் வண்ணார்பண்ணை என அழைக்கப்பட்டது.
பட்டம் தரிப்பதற்காகவும். முடிகட்டுவதற்காகவும். தலைப்பாகை வைப்பதற்காகவும். மயிரை அழகுபடுத்தியவர் அம்பட்டர் எனப்பட்டனர். பட்டம் சூட்டு விழாக்களும், முடிகட்டு விழாவும், சிகை அலங்காரம் செய்வதிலிருந்தே ஆரம்பிக்கப் பட்டன. அவற்றின் ஆரம்ப ஒழுங்கு அதுவாகும். முற்காலத்தில் இராசகுடும்பத்தவர்களும். அரசகுலத்தினரும் அரசஅவையில் பணியாற்றிய வர்களும், உறுப்பினராக இருந்தவர்களும் அரச அவைக்குரிய ஆடைகளை அணிந்தே சென்றனர். மற்றவர்களுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை. அவரவர்களின்பதவிற்கேற்பஆடைஅணிகள் அமைந்திருந்தன.
தமிழ் மக்களின் சடங்குகளை அவர்களைக்கொண்டு வழிநடாத்தி செய்வித்தவர்களும் அம்பட்டரே. பிறந்தவுடன் துடக்குக்கழித்தல், பூப்புநீராடலில் வாழ்த்துப்பாடுதல். கல்யாணத்திற்கு வாழ்த்துப்பாடுதல், சாவீட்டில் துக்கத்தை வெளிப்படுத்த மொட்டை அடித்தல் ஆகியவை அவர்களால் செய்யப்பட்டு வந்தனவே. இவர்களிற்கு வழங்கியநிலம் அம்பட்டகலட்டி ஆகும்.
தச்சர்,
வீடு கட்டுதல், கூரைவேலை, கதவுநிலை, மாடி, தளபாடங்கள் செய்தல், சமையல் கருவிகள், தேர் (குதிரை), இரதம் (குதிரை), வண்டி(மாடு, பாரவண்டி இன்னோரென்ன பிறமரவேலைகள் எல்லாம் அவர்களால் செய்யப்பட்டு வந்தன. காளியை தமது தெய்வமாக பூசித்து வந்தனர். ஆலயங்களில் கூரை, வாகனம். ஆலயதளபாடங்கள் எல்லாம் தச்சர்களினால் செய்யப்பட்டு வந்தன. இவர்களை பஞ்சகம்மாளர்களில் ஒருவராக வைத்து எண்ணுவர். இவர்களுடைய குடியிருப்புகள் தச்சன்தோப்பு, தச்சன்காடு என்ற பெயர்களால் விளங்கியது.
- 227

Page 116
பல்லவராச்சியம்
கொல்லர்
இரும்பு வேலைகளை, அரசர்க்குரிய வாள், இளவரசர்க்குரிய வாள், சேனாதிபதிக்குரிய வாள் அரசபடைகளிற்குரிய வாள், வேல், ஈட்டி, அம்பு, தண்டம் முதலான போர்க்கருவிகள். கேடயங்கள், பூட்டுகள், சுடுபொறிகள்.வீட்டுக்கருவிகள், சமையல் பாத்திரங்கள், எறிகணையந்திரங்கள், காலஇயந்திரங்கள். வண்டிகளிற்குரிய வில்லு. அச்சு, இரதம். தேர்களிற்குரிய அச்சு, வேக வண்டிகளிற்குரிய சில்லுகள், ஆலயங்களிற்குரிய விளக்குகள், தீபங்கள் முதலியவைகளை உற்பத்திசெய்தார்கள். இன்னும் விசைப்பொறி விமானம், மயிற்பொறி, பறக்கும் யந்திரங்கள். எல்லாமே கொல்லர்களின் கைவரிசையில் பிறந்தவையாகும். இவர்களிற்கு வழங்கிய நிலமே கொல்லன் கலட்டி என்ற இடமாகும்.
வெள்ளி, செம்பு, பித்தளை. வெண்கலம்உலோகங்களிலிருந்துநகை. நாணயம், பாத்திரம், கிடாரங்கள், தாம்பாளம், தட்டம், விளக்குகள், செப்புகள், சேர்ப்புக்கள். லோட்டா, தூக்குச்சட்டி, குண்டா. அன்ைடா, உணவு உண்ணும் பாத்திரங்களை செய்து தந்தவர்கள் கன்னார் எனப்படுவர். சிம்மாசனம், செங்கோல், மண்டபங்களில் மின்னிடும் அலங்காரங்கள், குத்தி விளக்குகள். தூண்டாமணி விளக்குகள், உலோகச்சிலைகள், சாசனங்கள், பட்டயங்கள். செப்பேடுகள், எல்லாமே கன்னாரமக்களின் கைவண்ணமே.நகரில் இவர்களிற்கு வழங்கிய இடம் கன்னாதிட்டி. கன்னார் தெரு ஆகும். இவர்களே உலோகத்தில் சிலைகளை வார்த்து உலகம் முழுவதும் தமிழ் வார்ப்புச்சிலைகளினால் பல்லவத்திற்கு புகழ் தேடித்தந்த கலைஞர்கள்
8
5ULTIT
தட்டு. தாலி, இராசமுத்திரை. அரசரின் பொன்முடி, நாணயங்கள், நகைகள். அரசனின் தங்க ஆபரணங்கள் தயாரித்தல், காதுகுத்துச்சடங்கு, மூக்குக்குத்துதல் போன்ற சடங்குகளை செய்தல், அரசனின் பட்டங்களை பொன்னேட்டில் பொறித்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றிவந்தார்கள். பொன் உற்பத்தி, உற்பத்திசெய்த பொன்னை தனிப்பொன்னாக தரம்பிரித்தல், அதாவது மாசறு பொன்னை அரித்து தட்டாக அடித்துதட்டுக்களாக (தகடுகளாக) அதனை விற்பனை செய்தல். நவமணிகளை விற்பனை செய்தல். பட்டை தீட்டுதல், தரம்பிரித்தல், பொன் ஆபரணங்களில் பதித்தல். ஆணிற்கும். பெண்ணிற்கும்.
- 228

பல்லவராசசேகரம் அரசனிற்கும் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை அணியும்நகைகள் அனேகம் உள்ளன. அத்தனையும் இவர்களின் சாதனைகளே. நாகர்களின் காலத்திலிருந்தே பொன்னை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தும் வந்தார்கள். உலகிலே முதலில் ஈழத்தமிழ் நாகர்களாகிய பஞ்சகம்மாளர்களில் ஒருவரான தட்டார்களே. நாணயங்களைத்தயாரித்தவர்கள். பல்லவ அரசர்கள் பலவிதமான நாணயங்களை வெளிட்டுள்ளார்கள். தட்டு என்பது விற்பதற்காக தங்கம் அடித்து செய்யப்படும் தகடுகளே. தங்கத்தட்டுகளைதயாரித்துவிற்பனை செய்துவந்ததால் அவர்கள் தங்கத்தட்டிற்குரியவர்கள், என்பதால் தட்டார் என அழைக்கப்பட்டனர். நகரில் இவர்கள் வசித்த இடம்தட்டாதெரு ஆகும்.

கோட்டை கொத்தங்களையும், அரண்மனை அரசனின் அத்தாணி மண்டபம், கொலு மண்டபம், அந்தப்புரம் எல்லாவற்றையும் நிர்மானித்தவர்கள் சிற்பிகளே. ஆலயங்களை, கோபுரங்களை. மாடங்களை, மாளிகைகளை எல்லாம் கட்டிநமது சிற்பக்கலையை பல்லவநாகரிகத்தினை உலகிற்குபறைசாற்றியவர்கள் சிற்பிகளே. மேலும் சிற்பங்கள் ஒவியங்களை உருவாக்கியவர்களும் இவர்களே. மாமல்லபுரத்தில் குகைச்சிற்பங்களையும் குடவரைக்கோயில்களை முதலில் அமைத்துக்காட்டியவர்கள் பல்லவத்துச் சிற்பிகளே. சாந்தும் கல்லும் மண்ணும் இல்லாமல் சிற்பங்களை அமைத்தவர்கள், பல்லவ சிற்பிகளே. சாதாரணமாக வீடுகள் முதல் மாளிகைகள் வரையில் சிற்பிகளே அமைத்தார்கள். அரச வரலாறுகளையும் வீரர்களின் வரலாறுகளையும் கற்களில் வெட்டி. கல்வெட்டுக்களை தயாரித்தவர்கள் சிற்பிகளே. சான்றோர்க்கும் பண்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடுகற்களை வடித்தவர்களும், ஆலய சிலைகளை வடித்தவர்களும் சிற்பிகளே. கோவில்களிலும், அரண்மனைகளினும் வரலாறுகளை கல்லில் பொறித்தவர்கள் சிற்பிகளே. சிங்ககிரியில் சுதை ஓவியங்களை தீட்டியவர்களும் இவர்களே. சித்தன்னாவாசல், மாமல்லபுர ஒவிய சிற்பங்களும் பல்லவ ஒவியநாகர்களின் கைவண்ணமே.

குயவர் மண்ணினால் செய்த சட்டி, யானை, பாத்திரங்கள், விளக்கு, சுட்டி, அடுப்பு, வாலை, குண்டான், அண்டா, அகல். கலயம், சாடி, கூசா, கெண்டி, ஒடு, செங்கல்முதலிய எல்லாம் அன்றாடம்மக்களின் வாழ்க்கைக்கு தேவையானவை. இவற்றை உற்பத்திசெய்துமக்களிற்கு வழங்கியவர்மண்வினைஞரான குயவர்
سے 2

Page 117
பல்லவராச்சியம் ஆவர். ஏழை எளிய மக்களிற்கும், சமையல் பாத்திரங்களும், விளக்குகளும், தண்ணிர் குடங்களும், செய்து கொடுத்தவர்கள். சமுதாயம் உணவைச் சமைப்பதற்கும். நீரை அள்ளி பேணி வைக்கவும் வகை செய்த கலைஞர்கள். எண்ணெய் உணவுவகைகளை பத்திரப்படுத்த, தேவையான பெரிய சாடிகளை மூடிகளுடன் உற்பத்திசெய்தனர். 30, 40 நாழிஎண்ணெய்களை சேமிக்கலாம். காடி மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான 60, 90 நாழி கொள்ளக்கூடிய பெரிய குண்டாக்களை வழங்கியவர்கள். மருத்தெண்ணெய் காய்ச்சுவதற்கு அவசியமான 20 முதல் 30 நாழி கொள்ளக்கூடிய அண்டாக்களை செய்தனர்.நாகரிகமடைந்த தமிழ் சமுதாயத்தினர். ஒரு தொழில் குடியை, மற்றத் தொழில் குடியினர். நன்றியோடு அன்பு காட்டி மதித்தனர். சிங்கை மன்னனும் அரச அவையில் அவர்களின் சார்பில், அவர்களின் மதிப்பை பெற்ற ஒருவரை உறுப்பினராக அமரச் செய்து மதிப்பளித்தான்.
LDL i draf
மடப்பள்ளி என்றால் சமையல் அறை. சமையற்காரர் என்றும் பொருள். இவர்கள் நளபாகத்தில் தேர்ந்தவர்கள். வாய்க்கு உருசியாகவும் வயிற்றுக்கு பொருத்தமாகவும் காலம், நேரம், வயதிற்கு ஏற்றதாகவும் உணவைத் தயாரிக்கும் வல்லமைபடைத்தவர்கள். உணவின்மாறுபாடுகளையும், உணவு நஞ்சாதலையும், எதிர்எதிரான பண்டங்களையும் அறிந்திருந்தனர். மேலாளரிற்கும் மக்களிற்கும் விசுவாசமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். பல்லவத்தில் இவர்களிற்கு தனி மதிப்பு இருந்தது. அரண்மனையில் நளபாகம் செய்தவர்கள் இராசமடப்பள்ளி என்றும், ஆலயங்களில் அமுது படைப்பவர்கள் சங்கு மடப்பள்ளி என்றும், பொதுவாக எல்லாருக்கும் எல்லா நிகழ்வுகளிற்கும் விருந்து படைப்பவர்கள் சருகுமடப்பள்ளி என்று சாதாரணமாகவும் அழைப்பர். இவை பல்லவநாட்டுமரபாகும். சங்கிலிமன்னனாக அரசவையினராலோ அரண் மனை அதிகாரிகளினாலோ ஏற்றுகொள்ளப்படவில்லை. அதனால் இராசமடப்பள்ளி சமையற்காரர்களை நீக்கிவிட்டுப் புதிதாக இந்தியாவிலிருந்து புது சமையற்காரர்களை அழைத்து வந்து நியமித்து குமாரமடப்பள்ளி என்று பெயரிட்டான் என, சிவானந்தயோகிதமது நூலில் தெரிவித்துள்ளார். 1697 இல் ஆளுநர் கென்றி, வெளியிட்ட நினைவேடுகளினும், பால்டேயஸ் பாதிரியாரின் குறிப்புகளிலும் 40 சாதிகள்பற்றிகுறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மடப்பள்ளிஎன்றால் மன்னர் காலத்தில் சமையற் கூடத்தில் வேலை செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரண்மனை சமையற்காரர்கள் இருபிரிவாக
- 230

பல்லவராசசேகரம் இருந்து முரண்பாடுகளை வளர்ந்தனர். இராசமடப்பள்ளி பரராசசேகர சக்கரவர்த்திக்கும். குமாரமடப்பள்ளிசங்கிலிக்கும் விசுவாசமாக இருந்தார்கள்.
வெள்ளளர்
இவர்கள் வெள்ளாண்மை செய்தவர்கள். ஏற்று நீர்ப்பாசனம்; குளநீர்ப்பாசனம். ஆற்றுநீர்ப்பாசனம் செய்து பயிர் விளைவித்தவர்கள். நாட்டு மக்களிற்கு அத்தியாவசியமான உணவை உற்பத்தி செய்து, நாட்டு மக்களை உயிர்வாழ வைத்தவர்கள். வெள்ளண்மை என்பதுநீர்முகாமைத்துவம் ஆகும். நாகரிகமுறையில் உணவுற்பத்தியை செய்து மன்னருக்கும் மற்றக்குடிகளுக்கும் வழங்கியவர்கள். உணவுற்பத்திக்கு முதன்மை அளித்து பெருமளவு நிலங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை நாட்டார் எனவும் அழைத்தார்கள். இவர்கள் கங்கை குலத்தவர்கள், வம்சத்தவர் அதனாலும் வெள்ளாளர் எனப்பட்டனர். இவர்களில் இன்னொரு பிரிவினர் வரம்புகட்டிமழையை நம்பியும் கேணி, துரவுகளில் நீரைத் தேக்கியும் விவசாயம் செய்து வந்த கார் காத்த வெள்ளாளர் ஆவர். இவர்கள் விவசாயம் செய்தால்தான் உலகினருக்கு உணவு கிடைக்கும். உணவு உற்பத்தியால் மதிப்பு பெற்றனர்.

இவர்களுக்கு வழங்கிய நிலம் வெள்ளாளர் கமம். அது வெளிகமம் என மருவிவலிகாமம் ஆகியது. இவர்கள் மருதநிலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தலைவன் வேள் என்றும், வேளாளர் என்றும் அழைக்கப்பட்டான். எல்லாக் குடிகளிடமிருந்தும் வரிவசூலித்து அரண்மனையில் கட்டுவது வேள் ஆகும். வெள்ளாளர் எல்லாரும் வேள் போலநடந்து கொள்ளமுடியாது. அந்நியராட்சியில் வேள்களின் வரிசைகளை வெள்ளாளர் பயன்படுத்த முற்பட்டதால் குழப்பங்கள். முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. பல்லவ மரபுகள் சீர்குலைந்தன. பதினெண் குடிமக்களும்தாய்நாட்டின் பிள்ளைகளே. ஒரு குடியை இன்னுமொரு குடி அடக்கியாள்வதற்கு இடமிருக்கவில்லை, அப்படிஒருவழக்கம்இருக்கவில்லை.
வெள்ளண்செட்டிகள்என அழைக்கப்பட்டவர்கள் வெள்ளாளரில் ஒரு பிரிவினராவர். நெல். கூலம், முதலிய வற்றை விளைவிக்கவும், விற்கவும். தேவையானவற்றை கொண்டு வந்து விற்கவும் அரச அனுமதிபெற்ற குழுவினர். நகரமாந்தர். வணிக கணத்தினர். செட்டிகள் எனவும். இவர்கள் அழைக்கப் பட்டார்கள். நாட்டுநலனை காப்பற்றவாணிபம் செய்தவர்கள். மணிபுரச் செட்டிகள் மணிக்கிராமத்தார் எனவும் வழங்கப்பட்டனர். முத்து, மணி, பவளம் கடல் வாணிபம் செய்த செட்டிகள் பரதவர் எனவும் பரதர் எனவும் அழைக்கப்பட்டனர்.
- 231 -

Page 118
பல்லவராச்சியம்
பல்லவத்தின் அரசர்கள் உலகின் பல நாடுகளையும் வென்று. ஆட்சி செய்த காலத்தில், மணிக்கிராமத்தார் என்றழைக்கப்பட்ட வணிக்கணத்தினர் அந்நாடுகளுடனும் அந்நாடுகளிலும் வாணிபம் செய்வதற்கு பல்லவ மன்னர் களால் அனுமதிக்கப்பட்டவர்கள். உலக வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள். அந்தந்தப் பொருட்களை உற்பத்தி செய்தவர்களால் அவை விற்பனை செய்யப்பட்டன. ஐநூற்றுவன். நானாதேசிகன் என்ற பெயர்களிலும் வணிகக் குழுக்கள் பல்லவத்தில் செயற்பட்டு வந்துள்ளனர். இவர்கள் நாணயங்களை அச்சடிக்கும் உரிமை பெற்றவர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க காவற்படை வைத்திருக்கும் தகுதிபெற்றவர்கள்.
இசைக் கலைஞர்கள். நாட்டிய கலைஞர்கள். நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் எல்லாரும் பாணர் வகுப்பில் அடங்குவர். பல்லவத்தில் சிங்கைநகள் மன்னனால் பாணனுக்கு வழங்கப்பட்ட கிராமமே யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுகிறது. பண்டு தொட்டு பரம்பரை பரம்பரையாக பாணர்குடும்பங்கள் யாழ்ப்பானத்திலும் சிங்கை இராசதாணியை அண்மித்த இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். பல்லவ நாகர்களின் தலைசிறந்த வாத்தியக் கருவி நாகசின்னம் ஆகும். பல்லவத்தின் அரசர்கள் இந்தியாவில்பேரரசு அமைத்து ஆட்சிசெய்த காலத்தில் பல்லவத்தின் சிற்பக்கலை ஓவியக்கலை, நாகசின்னம், பல்லவ நாட்டியம் ஆகியவற்றை அங்கே அறிமுகப்படுத்தினார்கள். பாணர்நடனம், நாட்டியம்,நாடகம் போன்றவற்றினை நட்டுவாங்கம்பனண்ணியும் இயக்கியும்வந்ததால்,நட்டுவர் எனவும் அழைத்தனர். பல்லவ மக்களின் மனக்களைப்பைப் போக்கவும், கலாரசனைக்குதீனிபோடவும் பணியாற்றியவர்கள், மக்களுக்கு கவின்கலைகளை வழங்கி இயந்திரம் போல உழைக்கும் இதயங்களுக்கு புத்துணர்வினையும் புத்தெழுச்சியையும் வழங்கி வந்தவர்கள் பாணர்களே. சுழிபுரம், சங்காளை, மூளாய் ஆகிய அரசமனைகளை அண்மித்த கிராமங்களில் நெடுங்காலமாகப் பானர் பரம்பரையினர் வாழ்ந்து வருகிறார்கள்.
மறவர்
மக்களின் மானங்காத்தும், நாட்டினை அந்நியப் படைகளிடமிருந்து பாதுகாத்தும் வந்தவர்கள் மறவர்களே. பல்லவத்தில் மக்களின் உயிர் உடைமைகளுக்கு, மன்னனின் உத்தரவாதம் இருந்தது. அதனை நிறைவேற்றி
- 232

பல்லவராசசேகரம் வந்தவர்கள் அரசபடையினரே. படைவீரர்களே. மறவள் என அழைக்கப்பட்டனர். நாட்டின் கணிசமான அளவு நிலம் வீரமறவர்களுக்கு. வேந்தன் வழங்கியிருந்தான். பல்லவ மக்களின் நாடுநகர அமைப்பின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு தொழிலுக்கும், அதனை செய்வோருக்கும், தனித்தனியாக, நிலம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு மறவர்களுக்கு மன்னர் வழங்கிய நிலம், மறவராட்சிஎன விளங்கியது. அதுவே இன்றுவடமராட்சி தென்மராட்சிஎன மருவி காணப்படுகிறது.
மறவர்களுடைய பெயர் முடிவில் தேவர் என்று குறிப்பிட்டிருக்கும். இவர்களுக்குள் படையாட்சி, பள்ளிவிலி என்ற போர் வீரர்களின் பிரிவுகளும் இருந்துள்ளன. உடலில் உள்ள பலத்தில்தான் வீரம் தங்கியிருந்தது. எமனே வந்து எதிர்த்தாலும் அஞ்சாதவீரர்கள். எதிர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள். பல்லவ படைவீரர்கள். மறவர்களில் ஒருவன் தெரிவு செய்யப்பட்டு. அரச சபை உறுப்பினராக கலந்து கொள்வான். இதன் வாயிலாக, பதினெட்டுக் குடிகளும் ஆட்சியில்பங்குகொண்டிருந்தனர். அரசநிருவாகத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் உரிமை, இந்த பதினெட்டு குடிமக்களுக்கு மட்டுமே இருந்துவந்துள்ளது.
நாகரிக சமுதாயத்தில் பதினெட்டுக் குடிகளும் உயர் மக்களாகவே வாழ்ந்தனர். அவர்களுள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப் படவில்லை. தமிழர்களான வேறு குடிகளும் இருந்தார்கள். நாகரிகம் அடையாத வேடர்களான இயக்கர்கள். இவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இவர்கள் குன்றுகளிலும், மலைசார்ந்த இடங்களிலும் வாழ்ந்தனர். பல்லவத்தில் வேடர்கள்
புலையர், விலங்குகளை கொன்று புசிப்பவர்களும். இறைச்சி விற்பவர்களும் ஆவர். இந்த இழி தொழிலைச் செய்பவர்களை. உயர் சமூகம் மதிப்பதில்லை. நாகரிகமடைந்த குடிகள், இவர்களை தம்மோடுசேர்ப்பதில்லை. கொலைத் தொழிலும், புலால் உண்பதும் மிக மோசமான, கொடூரமான, பாவச் செயல்களாக, பண்புமிக்க சான்றோர் தெரிவித்துள்ளனர். ஊரின் எல்லையில், காட்டினை அண்டிய பகுதிகளில், மக்களால் ஒதுக்கப்பட்ட ஒதுக்குப்புறங்களில் இவர்கள் வசித்தனர். நாகரிகம் படைத்த மக்களைப் பொறுத்தவரை, உயிரைக் கொல்லுவதும், புலாலை உண்பதும் ஈனச்செயல்கள் ஆகும்.
- 233

Page 119
பல்லவராச்சியம்
தென்னிந்திய அரசர்களின் படைகளுடன் வந்து. தப்பியோடிய வீரர்கள். நழுவிகள். நழுவர் எனப்பட்டனர். போரின் போது கைது செய்யப்பட்ட இந்திய வீரர்கள். உயிர் பிழைப்பதற்காகச் சரணடைந்த தென்னிந்திய வீரர்களும். பல்லவத்தின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காலப் போக்கில், பல்லவத்தின் மக்களாக இணைந்து கொண்டார்கள்.
இந்தியப் பிராமணர்கள் வந்தார்கள். இவர்கள் ஆரியப் பார்ப்பனர் களாவர். வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். எங்கள்நாட்டுக்கு பிழைப்புத்தேடிவந்தவர்கள். வடமொழியை மறவாது பேணிவருபவர்கள். தமது வடமொழி. சமஸ்கிருத மந்திரங்களைப் பயன்படுத்த. எமது தமிழ்க்கோவில்களை நன்றாக பயன்படுத்திக்கொண்டவர்கள். இவர்கள் வருகையால் வடமொழி, இந்து மதம். சமஸ்கிருத பூசைகள், ஆரியச்சடங்குகள். இந்நாட்டில் அறிமுகமாகின. தமிழ் மொழி இருந்த இடத்தினை, வட மொழி. வேத சம்பிரதாயங்கள் பிடித்துக் கொண்டன. சைவ நெறிபிறழ்ந்தது.
இவர்களால், வழிபாட்டுக்குரிய தமிழ் மொழியான இனிய மொழி, படிப்படியாக ஒதுக்கப்பட்டு வந்தது. அறிவிலிகள் அதனையும் ஆமோதித்து வந்தனர். கி.பி 15ம் நூற்றாண்டளவில் வரத்தொடங்கி னாலும், 1950 வரை தமிழர் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தவறான வழிபாட்டுமுறைகளால் தமிழினம், தமிழ்ராச்சியம் அழிவுற்றது. பிராமணர் பறங்கியராட்சியில் கத்தோலிக்க மதத்தை தழுவி அதன் பாதிரியாராக பயிற்சி பெற்றார்கள் உ+ம் ஜோசப்வாஸ் එligහ6it.
சைவர் என்று ஒரு தொழில் செய்பவர் கிடையாது. சைவ ஆசாரசீலராக, சிவநெறியில்நின்றவர்கள். சைவசமயத்தின் வழிபாடுகளைசடங்குகளை தமிழில் நிறைவேற்றிவந்த தமிழர்கள். எல்லாக்குடிமக்களிலும் சைவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். இது பிறப்பால் ஏற்படுவதில்லை. ஒழுக்கத்தினால் வருவது.
தொழில் அடிப்படையில் மக்களிடம் வரிகள் வகலிக்கப்பட்டு வந்தன.
அந்நியர் ஆட்சியில் பல்லவத்தின் உயர் மக்களாகிய குடிகள் அந்நிய அரசினை
ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஒரு சிலர் அடிமை வேலைகளைப் பெற்று தமது
சுயநலத்தினை, தமது பொருளாதாரத்தை உயர்த்துவதில் முன்னின்றார்கள்.
அதனால் அந்நிய ஆட்சியினர் இந்தியாவிலிருந்து கண்ட கண்டவர்களை எல்லாம்
- 234

பல்லவராசசேகரம் கொண்டு வந்து முதலியாகவும், வடசிறைக்கோவியராகவும். அடிமைச் சிறைகளாகவும் தமக்கு ஆதரவாக வைத்துக் கொண்டார்கள். இந்த குடியேற்ற விபரங்களை கச்சேரிபதிவுகளிலும், யாழ்ப்பாணக்குடியேற்றம் என்ற நூல்களிலும் 5TeOOT6Tib.
கள்ளர், களவினைத் தொழிலாகக் கொண்டவர்கள், கணக்கள். அரண்மனையில் கணக்கர் ஆகப்பதவிவகித்தவர்கள், தம்மையும் ஒரு பிரிவாக பதிந்தார்கள். அரண்மனையில் சிவிகை காவிய ஏவலாளர்கள். சிவிகையாளர் என்று அழைக்கப்பட்டனர். உண்மையில் இவர்கள் அரண்மனைத் தொழிலாளர்களே. காலப்போக்கில் சிவிகையாளர் என்ற பெயர். சிவியார் என மருவி விட்டது. அவர்களும் தம்மை ஒரு தனிப்பிரிவாக பதிந்தனர். அரசரின் மெய்காவலர்கள். தம் உயிரினைக் கொடுத்தும் அரசனின் உயிர்காக்கும் வீரர்கள். அகம்படியார் எனப்பட்டனர். வாட்படைவீரர்கள் கைக்கோளர் எனப்பட்டனர்.
இவற்றில் கவனிக்க வேண்டிய வியழம் என்ன வென்றால் இந்தப் பதினெட்டு தொழில்களும், தொழில்வழிக் குடிகளும், தொழில்களை பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக செய்துவந்தார்கள். ஏனெனில் அதில் ஒரு தொழில்நுட்பம் அவர்களது விந்தில் கலந்திருந்தது. ஆனால் ஒருவன் தனக்கு விரும்பிய வேறு தொழில்களையும், முறைப்படி பயின்று செய்து வரலாம். அதற்கு தடையிருக்கவில்லை அவ்வாறு செய்துமுள்ளனர். பரம்பரை வழியாக வந்தவர்களிடம் தொழிற்திறமை ஆற்றல் அதிகரித்துக் காணப்பட்டது. இவர்கள் எல்லோரும் நாகரிகமான நலமிக்க தமிழ்ச்சமுதாயத்தின் உறுப்புக்களாகும். இவை பல்லவநாட்டு தொழில் மரபுகளாகும்.

அந்நியராட்சியிலே கச்சேரியில் தம்மை உயர்வாகப் பதிந்ததன் மூலம், தாம் உயர்ந்து விட்டவர்களாக எண்ணி, மற்ற குடிகளை தாழ்வாக அடக்க நினைத்தவர்கள். நாகரிக சமுதாய ஒழுங்குகளை அறியாத இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அந்நியர். வேறு வேறு தொழிலாளர்களாக இருந்தும் முதலிகளாக பதிந்தவர்களும், இந்தியப் பார்ப்பனர்களும் இங்கும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்தனர். தீண்டாமை என்ற நஞ்சினை விதைத்தவர்கள் இவர்களே. ஆலய வழிபாடுகளில் பிறப்பால் உயர்வுதாழ்வுகாட்டி தடுத்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல. புதிதாக வந்தவர்களும் புதிதாக அதிகாரத்தை பெற்றவர்களும் தான். இதனால் நாகரிக சமூதாயம் சீரழிந்து போனது.
- 235

Page 120
பல்லவராச்சியம் மக்களிடையே பிரிவினை வளர்ந்தது. உண்மையில் உயர்ந்தவர்கள் யாரெனில் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று எண்ணாதவர்களே. பிறப்பால் எல்லோரும் தமிழரே என்ற ஒரேகுலத்தவர்களாகவே முன்பு இருந்தனர். ஒருவர் இன்ன தொழில்தான் செய்யவேண்டும், இன்னாருக்குத்தான் செய்யவேண்டும். இப்படித்தான் செய்யவேண்டும். என்று ஒரு குடிமகனுக்கு மன்னரினால் கூட உத்தரவிடமுடியாது. உழைப்பின் பலனை அனுபவிக்கவும். அவனுக்கு உரிமை இருந்தது. அந்தளவுக்கு தொழில் சுதந்திரம் உரிமையை மக்கள் கொண்டிருந்தார்கள் என்பது, மனிதமேம்பாடு மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு தொழிலுக்கும், தனித்தனி ஒழுக்கக்கோட்பாடுகள் இருந்தன. ஆபிரகாம் லிங்கனும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னிச்சைப்படி தொழில் நடாத்தவும், தன் உழைப்பின் பலனை அனுபவிக்கவும், உரிமை இருத்தல் வேண்டும் என்றார்.
س- 236 -

பல்ல an
10. பல்லவ மக்களின் வாழ்வியல்
தமிழ் மரபுகள். தமிழ்ப் பாரம்பரியங்கள். தமிழ்ப் பண்பாடுகள் பல்லவத்தில் சிறந்து விளங்கின. தமிழர் தம் வாழ்க்கையை அகம், புறம் என கண்டனர். புலவர்களினால் போற்றிப் பாடப்படும் விதமாக பல்லவத்தில் தமிழர்களின் அக, புற வாழ்வு சிறப்புற்றிருந்தது. காதலும் வீரமுமே மரபாகக் கொண்டிருந்தனர். அகழ்வாழ்க்கையை காதலாகவும் புறவாழ்க்கையை வீரமாகவும், கொடைத்தன்மையும், புகழ் கொண்டதாகவும் கணித்தனர். வாழ்க்கை அறம். பொருள். இன்பம், வீடு என்ற நான்கு படிமுறைகளை கொண்டிருந்தது. நன்நெறிகளின் அடிப்படையாகவே வாழ்வியல் பழக்க வழக்கங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
மக்களின் வாழ்க்கை ஒழுக்கத்தையே பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் எழுந்தன. பழம் பெரும் தொல் நூலாகிய தொல்காப்பியம், பல்லவத்தின் கீரிமலை சமதக்கினிகுமாரன்திரனதுமாக்கினிஎன்ற, தவசியால் பாடப்பெற்றதாக தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். எந்த வேலைகளையும் தமிழ்ப்பண்பாடியே செய்தார்கள். குடிமகனுக்கு சொத்துரிமை இருந்தது. அதுமுதுசம், தேடிய தேட்டம், சீதனம் என்று மூன்றாகும். நிலவுடமை இருந்தது. நிலங்களை விற்கும் போதும், வாங்கும் போதும், நிலப்பட்டா எழுதப்பட்டது. பல்லவ மன்னர்கள் நிலங்களை அளந்து எல்லை வகுத்தார்கள்.
அகவாழ்வு
ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் கண்டு. காதலுறவு கொண்டு. உள்ளத்தால் ஒன்றுபட்டு. மணம் புரிந்து கொண்டு. மனையறம் காத்தல், அகவாழ்வாகும். அகவொழுக்கம், ஐந்தினை, கைக்கிளை. பெருந்திணை என ஏழு வகையாம். தலைவன் தலைவி இருவரும் தம்முள் கூடி மகிழ்தல் குறிஞ்சி எனப்படும். உலக கடமைகளுக்காக தலைவன் தலைவியை சிலநாள் பிரிந்து வாழ்தல் பாலையாகும். சென்ற கணவன் வரும் வரை தலைவி அப்பிரிவுத் துன்பத்தை பொறுத்தல் முல்லையாகும். தலைவன் குறித்த நாளில் வரத்தாமதிப்பின் ஆற்றாமை மிகுந்து மனைவி இரங்குதல், நெய்தல் என்றனர். கணவன் வந்தபோது மனைவி அன்பினால் பிணங்குதல் ஊடல் மருதமாகும். அன்பின் ஐந்தினை என வகுத்தனர்.
- 237

Page 121
பல்லவராச்சியம் தலைவன் தலைவி பொருத்தம்
மணம் புரிந்து வாழவிரும்பும் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பத்து பண்புகள் ஒத்திருத்தல் வேண்டும். 1. இருவரும் ஒத்தகுடியில் பிறந்தவராதல் 2. தம்குடி ஒழுக்கமுடையவராதல் 3. குடும்ப வாழ்க்கையை செவ்வனே நடத்தும் ஆள்வினைத்திறம் உடையராதல் 4. வயதும்பொருந்தல் ஆடவன் 16 ஆண்டும்,பெண் 12 ஆண்டும்நிரம்பியவராதல் 5. ஒத்த தோற்றம் உடையவராதல் 6. ஒத்த அன்புடையராதல் 7. மனத்தை ஒரு வழிப்படுத்தும் பண்பு உடையவராதல். 8. அருளுணர்வு இருவரிடத்தும் உடையவராதல் 9. அறிவினாலும் ஒத்திருப்பவராதல் 10. செல்வம். வறுமை காலத்திலும். ஒத்த மனமுடையவராதல்.
ஒரு அவசியமான சமூகக்கடமையாக, நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாக, திருமணம் ஆக்கப்பட்டிருந்தது. தங்கள் பிள்ளைகளை உரிய காலத்தில் மணமுடித்து வைப்பதற்குக் தாய்தந்தையர் அக்கறை காட்டினர். ஒரு பெண்ணை மணம் முடிக்காதவன். உண்மை மனிதனல்ல. திருமணத்தின் மூலம் சந்ததியை பெருக்க வேண்டும். திருமணம் செய்து சந்ததியை பெருக்க விரும்பாதவர்கள். கொலையாளிகளை விட சிறந்தவரல்லர். நாட்டுக்காக பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது.தலையாய கடனாக இருந்தது.
திருமண மரபு
ஒன்று காதல் திருமணம். மற்றது பேசி செய்யும் திருமணம், மணவினை நாளில் உற்றார். உறவினர். நண்பர்கள். பலரும் வந்திருப்பர். மணமகன் வீட்டார் சென்று மணமகளுக்கும். மணமகள் வீட்டார் சென்று மணமகனுக்கும் மங்கல நீராட்டுவர். நீராட்டும் போது வாழ்த்துப் பாடப்படும். மங்கல இசைகள் முழங்கும். மங்கல கும்பம் வைத்து விளக்கேற்றி வைத்து மாவிலை, தோரணம். மாலை தொங்க விடுவர். மணமகளை மாப்பிள்ளை வீட்டாரும். மணமகனை பெண்வீட்டாரும் பட்டாடை அணிவித்து. நகை அணிவித்துமாலைசந்தனம் ஒப்பனை செய்வர். மணமகனை பெண்வீட்டுக்குத் தோழன் அழைத்து வந்து கால் கழுவி. ஆரத்தி எடுத்து. மாலையிட்டு, மலர்ச் செண்டு கொடுத்து மணவறைக்கு அழைத்துச்செல்வர். மணமகளும், மங்கலப் பெண்களால் அழைத்துவந்து இருத்தப்படுவார். குடும்பத்தில் மூத்தவர் மூன்று - 238 -

பல்லவராசசேகரம்
தலைமுறைப் பெயர்களையும் சொல்லிதிருமணம் செய்யப்போவதாக சபைக்கு அறிவிப்பார். சபையோர் ஏற்றுக் கொண்ட பின் பெண்ணின் பெற்றோர் பெண்ணை மாப்பிள்ளையின் கையில் ஒப்படைப்பர். பெண் தான் மனக்க விருக்கும் மணாளனுக்கு மாலையிடுவாள். மாப்பிள்ளையின் தகப்பன் தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன்தாலிகட்டுவர். மங்கல இசைக்கருவிகளின் ஒலி வாழ்த்தொலி ஒலிக்கும். பின் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வர். எல்லோருக்கும் சிறந்த உணவு விருந்து அளிக்கப்படும். சங்ககால பாடல்கள், இம்மண வீனை நடைபெற்றமரபினை விவரிக்கின்றன. தமிழர் மணவினை மரபில் தீவளர்த்தல், அதனை வலம் வருதல், முதலிய வடமொழிமரபுகள் இருக்கவில்லை. இவை பின்னர் சேர்க்கப்பட்டவையாகும். இல்லறம் சிறக்கமனையாள், கற்பு நெறியில் பிள்ளைகளைப் பெற்றும் கணவனுக்கு இன் முகம் காட்டி, களைப்பைப்போக்கி அன்புடன் வாழ்பவள். இறைவனை வேண்டி, கணவன் போரில் வெற்றிபெற, வழிபடும் மாண்பினள்.குடிக்கு பெருமைசேர்ப்பவள்.
புறவாழ்வு
புறவாழ்க்கை நாகரிகத்தை, பண்புகளை, மரபுகளை பேணிக்காப்பது கணவன். கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் கற்பொழுக்கம் இல்லறமாகும். கணவன் புறவாழ்க்கையின் பொருட்டு பிரிந்து செல்வதுண்டு. அவ்வாறு பிரிந்து செல்வதை சான்றோர் ஆறுவகையாக பகுத்தனர். அவை உயர்கல்வியின் நிமித்தம், நாடுகாக்கும் பொருட்டு, இருவேந்தர் போரின்போது தூது செல்வது. பொருள் ஈட்டச்செல்வது. அரசனுக்கு உதவச்செல்வது. பரத்தையர் பொருட்டு செல்வது ஆகும். புறவாழ்க்கையை வீரமாகக் கொண்டிருந்தனர். நாடுகாத்தல் தூதுசெல்லல், அரசனுக்கு உதவுதல் வீரச்செயல்களாம்.
அகவாழ்வால் இன்பம் நுகர்ந்தவர்கள் வீடுபேற்றை நாடி துறவறத் திற்கு செல்வதுண்டு. புறவாழ்வில் வெற்றியும் புகழும். பெற்றவர்களும், துறவு நாடுவதுண்டு. இவை பல்லவ மக்களின் வாழ்வியல் வழக்கமாகும்.
சைவசமயம்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டது சைவ சமயம். அன்பே சிவம் என்ற கொள்கையுடையது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு. பதி, பசு, பாசம் என்ற மூன்றும் அநாதியானவை. TTTTTSseTLTT TTS sMTTTS TMTTLLLLS LLLLLLMLLLLLLS LLLLTMLT TTS
- 239 -

Page 122
பல்லவராச்சியம் சிவனுடைய சக்தி. ஆன்மாக்கள் சிவத்தை அடைய துணைபுரிவது. சிவனைப் பூசிப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. சிவலிங்கவழிபாடு இகபர சுகங் களைக் கொடுக்கும். சிவலிங்கம் வழிபாடு செய்வதற்கு பூவும்,நீரும், தூபம், தீபம், தமிழ் மந்திரங்கள் தேவை.
கல்லாதவரும்கற்றவரும்செய்யக்கூடியது சிவசின்னவழிபாடு. பல்லவ நாட்டில் வீட்டுக்கு வீடு முத்தலை வேல் (திரிசூலம்) வைத்து விளக்கேற்றிபூச்சாத்தி வழிபடுவார்கள். அப்பனே என்றழைத்தாலும் ஆண்டவன்வருவான். வருடத்தில் ஒரு நாள் பொங்கி எல்லோருக்கும் உணவு வழங்குவர். ஆன்மா நான்கு வழிகளால் சிவப்பேறு அடையலாம், அவை சரியை. கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். உடலால் செய்யும் வழிபாடு சரியையாம். வாக்கினால் செய்யும் வழிபாடு மந்திரங்களை சொல்லிச்செய்வது கிரியை. மனத்தினால் செய்யப்படும் வழிபாடு யோகம், இறைவனால் ஆன்மாவுக்கு உணர்த்தப் பட்டு வழிபடுவது
S5/TSOTLD.
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் படிநிலையாக அனுபவித்தல் வேண்டும். அறம் என்பது ஈதல் ஆகும். நல்லவழியில் சம்பாதிப்பது பொருள். ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு ஒன்றாக இணைவது இன்பம். வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய். இறைவன் கேட்டதைக் கொடுப்பவன். இவ்வாறு நன்றாக நடந்தவர்களுக்கு இறைவன் முத்திஎன்னும் வீடுபேற்றை அருள்கிறான்.
ஆலயங்கள் ஞானிகளாலும், தவசிகளாலும், அடியார்களினாலும், அமைக்கப்பட்டு பூசைகளும் அவர்களால் செய்யப்பட்டு வந்தன. இறைவனின் அருளைப் பெற்றவர்களே ஆலயங்களை நடாத்தி, மற்றவர்களும் இறை அருளைப் பெற வழிகாட்டி, ஐயராக (குரு) செயற்பட்டனர். இவை இரு மண்டபங்களை கொண்டமைந்தவை. சித்தர்கள். தவசிகள். அடியார்கள் தமிழ் மந்திரங்களைக் கூறிCேவயநம.நமசிவாய) தமிழில் பாமாலைகளை சூடி, பூவும் நீரும் கொண்டு. பூசைகளை நிறைவேற்றிவந்தனர். பெரும்பாலும் மடங்களில் சித்தர்கள், ஞானிகள். தவசிகள் வசித்து, ஆன் மீகத்துடன் வாழ்வியற் கலைகளையும் போதித்து வந்தார்கள். வருடம் ஒரு முறை விழாக்கள் நடை பெறும். ஆலயங்களில் சிவலிங்கம், திரிகலம், வேல், சக்கரம் ஆகியவற்றில்" ஒன்றினை வைத்து வழிபாடு செய்வர். உருவ வழிபாடு செய்யப்படுவதில்லை.
- 240

பல்லவராசசேகரம் விழாக்காலங்களில் இறைவனின் திருவிளையாடல்களை அற்புதங்களைப் பேசுவார்கள். பாடுவார்கள். உருவகப்படுத்தி ஆடுவார்கள். அத்தினங்களில் பொங்கல், குளிர்த்தி, மகேசுர பூசை நடைபெறும். சிவபெருமானால் தமிழில் அருளிச் செய்யப்பட்ட நால் வேதங்களும் சைவசமய முதனூலாக இருந்தன. எல்லோரும் இறைவன் முன்னால், ஒன்றாக.ஒரே மண்டபத்தில் கூடியிருந்து, வழிபடுவர். சிறப்புக்காலங்களில் மக்கள் ஆலயத்தில் கூடி, கூட்டாக
வழிபாடியற்றினார்.
கோவில் என்பது. மன்னர்களினால் அரண்மனை வடிவில் கட்டப் பெற்ற, இறை இல்லங்களாகும். கோயில் என்பது அரண்மனையாகும். கோவில்கள் அரும் பெரும்பணிகளைச் செய்துவந்தன. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அரசனே செய்துவந்தான். அங்கும்தமிழ் மந்திரங்கள். தமிழ்ப்பூசைகளே இடம்பெற்றிருந்தன. பல்லவத்தில் மன்னர்கள். திருமாலையும் வணங்கினார்கள். அதனால் மணிபுர மன்னனால், ஏழு மாடவீதிகளுடன் கட்டப் பெற்ற மணிவண்ணன் கோவில், பொன்னாலையில் அமைந்திருந்தது. சைவ சமயத்தில் சிவனின் காத்தல் சக்தியாக மைத்துனனான திருமால் இடம் பெற்றுள்ளார். தமிழ் நால்வேதங்கள் சிவபெருமானால் மகேந்திரமலையில் அருளப்பெற்றவை. அவையாவன,
1. இறைவேதம் - இறைவனைப்பற்றியது. 2. ஆன்மவேதம் - ஆன்மாபற்றியது 3. LDTuuGoogLb - DITuumLD6pb Ö5uugi 4. சாமவேதம் - இறைவனை அடையும் வழிபற்றியது.
மன்னர்கள் அரச வருமானத்தைப் பாதுகாத்து வைக்கும் திறைசேரியாக, பெருங்கோவில்கள் எழுந்தன. பல்லவர்கள் போர்ப்பிரியர்கள். அதனால், போர்க்காலங்களில் மக்களையும், கலைகளையும், ஆன்மிகத்தையும் பேணுவதற்கு அவர்களுக்கு கோவில்கள் தேவைப்பட்டன. கோவில்கள் பெருவீதிகளுடன் கூடிய, ஏழுசுற்றுக்களையும், மதில்களையும், மாபங்களையும் கொண்டிருந்தன. கோவில்கள். மன்னனின் அதிகாரிகளினால் நிர்வகிக்கப் பட்டுவந்தன. அருட்பணி, அறப்பணி, சமுதாயப்பணி, மருத்துவப்பணி, கலைப்பணி கல்விப்பணிதமிழ்ப்பணி, ஆகியவற்றை கோவில்கள் செவ்வனே செய்துவந்தன. அறுபத்தினான்கு தமிழும்வளர்ந்தது. பஞ்சம், வரட்சிகாலங்களில்,
- 241 -

Page 123
பல்லவராச்சியம் கோயில் பண்டாரங்களிலிருந்து. மக்களுக்கு உணவு. தானியங்கள். வழங்கப்பட்டன. விதைகளை வாங்கி பயிர்விளைவிப்பதற்காக,தங்கம். வெள்ளி ஆபரணங்கள், வெள்ளாமை செய்யும் மக்களுக்கு வழங்கப்பட்டது. பல்லவ மன்னர்கள் இந்தியா, மலாயா, சாவகம், இந்துசீனம், சம்பாநாடு. ஆகியவற்றை கைப்பற்றிஅங்கேயும், சிவன்கோவில்களைக்கட்டிசைவத்தைதங்கள்ஆட்சியில், வளர்த்தார்கள். ஊர்கள் தோறும் கோயில்கள் அரசனின் பணிமனைகளாக செயலாற்றின. பல்லவர் ஆட்சியில் கோயிற்பற்று என எல்லைகள் ஏற்படுவதற்கு கோயில்களில் இடம்பெற்ற அரசபணிகளே காரணமாகும். அரசன்தங்குவதற்காக கோயில்களில் கோமாடம் என்னும் அரசனின் மாளிகை இருந்தது. இதன் காரணமாகவே கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என பழமொழி ஏற்பட்டது. கோயிலின் திருமணக்கூடத்தில் இடம் பெற்ற திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. கோயில்கள் நூல்காப்பகமாகவும், தேர்தல் சாவடியாகவும், ஆவணக் களரியாகவும் செயற்பட்டன. போர்க்காலங்களில் மன்னின் பாதுகாப்பு இடமாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு கோயிற்பற்றுக்கும் ஒரு கோயில் இருந்தது.
ஒவ்வொரு தொழில் செய்வோரும் தத்தமது தொழிலுக்கு, ஒரு சிறு தேவரை வைத்து வணங்கினார்கள். குறிஞ்சிக்கு குமரனையும், முல்லைக்கு மாயவனையும், மருதத்திற்கு இந்திரனையும், நெய்தலுக்கு வருணனையும், பாலைக்கு கொற்றவையையும் சிறுதேவராக வணங்கினர். உழவர் ஐயனார். அண்ணமாரையும், ஆயர்கள் மாயவனையும், கிருஷ்ணனையும். மறவர் துர்க்கை, கொற்றவையையும், பரவர் ஆழிக்கண்ணனையும், கடலம்மனையும், மச்சாவதாரம், கூர்மாவதாரத்தையும், பஞ்சகம்மாளரும் காளியையும், வணணக்கர்பெரியதம்பிரானையும், அம்பட்டர் பேச்சியம்மனையும், பாணர்கள் நடராசரையும், வெள்ளாளர் இந்திரன், சூரியன், மாரியையும். வேடர்கள் வேலனையும் தங்கள் தொழில் வளம்பெறவேண்டிவணங்கினர். இவர்களின் தெய்வமாக எங்கும்நிறைந்த, சிவன்வழிபாடு, காணப்பட்டது. எல்லாவற்றையும் கடந்து நிற்பதால், கடவுள். எங்கும் தங்கியிருப்பதால் இறை, என்றும் சிவை போற்றினர்.
பல்லவநாட்டில் சிவ வழிபாடு சிறந்தோங்கி யிருந்துள்ளதற்கு திருத்தம்பலேச்சரம், சம்பேச்சரம், ஆகிய மூர்த்தி தல, தீர்த்தச்சிறப்பு பெற்ற கோவில்கள் சான்றாகும். சிவனையும் சக்தியாகிய அம்மனையும் வழிபட்டனர்.
- 242 -

uásadajTatčeas Jíb சோழர் வருகையுடன் பிராமணர் வரத்தொடங்கினர். பிராமணர் வருகையால் வடமொழி, சமஸ்கிருதம், ஆரிய பூசை முறைகள் தமிழ்க் கோவில்களுக்குள் படிப்படியாக புகுந்து கொண்டன. (17ம் நூற்றாண்டில் கிறிஸ்தவமும், 18ம் நூற்றாண்டில் இஸ்லாமும் வந்தது). பழந்தமிழர் சமயநெறியில், வடமொழிச் சமயக்கலப்பு ஏற்பட்டது. இந்துசமயம், பிராமணியம், பரவியதால் வருணாச்சிரம தர்மம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறப்பினால் உயர்ந்தவன். தாழ்ந்தவன். தீண்டத்தகாதவன், வேள்வி. யாகம், மிருகபலி எல்லாம் வந்ததால், சைவசமயம் மாசுபடுத்தப்பட்டது.
ஆதியுமந்தமுமில்லா எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, பரிபூரணமான சிவனுக்கு இணையாக, மற்ற தேவர்களையும், தெய்வங்களாக வைத்து. அக்கினி வழிபாடு செய்து, ஆகுதி. வழங்கி. சிவநிந்தனை செய்யப்பட்டதால், மன்னருக்கு கேடு விளைந்தது. தமிழ்ராச்சியங்கள் அழிந்து போயின. திருமந்திரத்தில் கூடிகூடிமுன்னவனார் கோவிற் பூசைகள் முட்டிற் மன்னர்க்குத் தீங்குள: என்று திருமூலர் தெரிவித்துள்ளார். தமிழ் இராச்சியம், தமிழ் மக்கள். தமிழ்த்தெய்வம், வடமொழிப்பூசை விளைவித்த கேடுகள், மக்களை துன்பத்திற்குள்ளாக்கியது. வடமொழிபூசை, மந்திரங்கள் ஆரியர்வாழ்வு வளம்பெறச் செய்வதற்காக இயற்றப் பட்டவை. அவை தமிழருக்கும், தமிழ் இராச்சியங்களுக்கும்எதிரானவை. பரம்பொருளை இழிவுபடுத்தின. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம் என்று நாவேந்தர் பாடினார். தாமார்க்கும் குடியல்லா சங்கரனை சரணடைந்ததால் அவர் வல்லமை பெற்றார். தேவாரதிருவாசகதிருமந்திரங்கள் சைவநுால்களாகும். வடமொழி, சமஸ்கிருதம் இறந்த மொழிகள். தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என்றார் அப்பர். பிறகு வடமொழி, வழிபாட்டிற்கு தேவையா?

பல்லவ நாட்டில் மருத்துவ விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி யடைந்திருந்தது. பல்லவ அரசர்கள் மருத்துவக்கலையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். பல்லவத்தினை, மாற்றார் போரில் வெல்ல முடியாது இருந்தமைக்கு, மருத்துவ வளர்ச்சியும், ஒரு சிறப்பான காரணமாகும் தனிமனித சுகாதாரம், சமுதாய மருத்துவம், சுற்றுச் சூழல பராமரிப்பு, நோய்த்தடுப்பு. முறைகள் எல்லாம் உயர்ந்தநிலையில் பேணப்பட்டுவந்தன. நோயுற்றபோது -243

Page 124
பல்லவராச்சியம் அதிசக்தி வாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி, இலகுவில் குணமடையச் செய்தார்கள். அறுவைச் சிகிச்சையிலும். மிகவும் கைதேர்ந்தவர்களாக, பல்லவ அரசர்கள் விளங்கிவந்தனர். செகராசசேகரன் என்ற பேரரசன், செகராசசேகரம் என்ற மருத்துவ நூலினை இயற்றினான். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலே, பல்லவத்தில் மருத்துவர்கள் உடற்கூற்றியலை எவ்வாறு கற்றார்கள் என்றவிபரம் அந்நூலில் உள்ளது.
இயம்பியவுடலுமூணு மென்புநாடிகளுமற்றும் செயம்பெறுசிங்கைநாடன் செகராசசேகரன்மா லுயர்ந்த வாள் வடக்கராக முருட்டிய களத்தின் மீதே அயஞ்சிறிதுள தீர வளந்தளந்தறிந்த தாமே
செகராசசேகர மன்னனின் வீரவாள். போர்க்களத்தில் வெட்டிவீழ்த்திய வடக்கர்களின் சேர சோழ பாண்டியர்களின்) உடல்களை கீறி, ஒவ்வொரு உறுப்பாக அளந்து ஆராய்ந்து. ஐயம் சிறிதுமின்றித்தீரும்படியாக, கற்றார்களாம் என்று, பதின்மூன்றாம் நூற்றாண்டு மருத்துவக் கல்வியை அப்பாடல் தெரிவிக்கிறது.
பரராசசேகர பேரரசன் காலத்தில், சிங்கைநகரில் எழுந்த மாபெரும் வைத்திய நூல், பரராசசேகரம் 12000 என்பதாம். பரராசசேகரம் அங்காதிபாதம், பரராசசேகரம் நயனவிதி, பதார்த்த சூடாமணி, அமிர்தசாகரம். நாகமுனிநயன விதி. வைத்திய விளக்கம், நாடி தர்ப்பணம், சர்ப்பசாத்திரம், சுதேச வைத்திய அவுடதத்திரட்டு ஆகிய நூல்கள், பல்லவ மருத்துவ முறைகளைச் சிறப்பாக பறைசாற்றுகின்றன. பல்லவ மருத்துவர்கள் சிறந்த மருந்துகளை கொண்டிருந்ததாக, பல நூல்களிலும் காணப்படுகின்றது.
மேலும் செகராசசேகரன் என்ற ஒரு பல்லவ மன்னனின் மருந்துகளின் ஆற்றல் பற்றி குறிப்பிடுகையில், சிங்கை நகள் செகராச சேகரன் முன் எதிர் கொண்படைகள் அழிவதுபோல, அம்மருந்திற்கு, நோய்கள் தீரும் என்று. இந்திய நூலான, யூகிமுனிவைத்திய சிந்தாமணியில் காணப்படுகிறது. அன்று. மருத்துவம் படித்து தேறியவர்கள், நாட்டிலே மருத்துவம் செய்வதை அனுமதிப்பதற்காக, செம்பினாலே செய்த செப்பில், அவசியமான மருந்துகள் எல்லாம் சிறிதளவு வைத்து, அதனை வழங்கியவர். அதனைப்
- 244

பல்லவராசசேகரம் பெற்றுக்கொண்டவர். வழங்கிய காலம் பொறிக்கப்பட்டுவைத்தியம் கற்பித்தவரால் வழங்கப்பட்டு வந்தது. அதுவே அவர் மருத்துவம் படித்ததற்கு சான்றாகவும், தகுதியாகவும், அனுமதியாகவும் விளங்கியது எனலாம். இதனால், முறைப்படி மருத்துவம் கல்லாதவர்கள், மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. சிங்கைநகர் மருத்துவ நூல்களில், அறுவைச் சிகிச்சைப் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
காப்பு. நீக்கம், நிறைப்பு என்ற மூன்று பிரிவுகளை மருத்துவம் கொண்டிருந்தாலும், மானிடமருத்துவம், தேவமருத்துவம். இராக்கதமருத்துவம் என்ற அறுவைச் சிகிச்சை தனி ஒரு பிரிவாக இருந்து வருகிறது. காப்பு சிகிச்சை சிறந்து விளங்கியதால். மக்கள் நோய் பிணியின்றி வாழ்ந்தார்கள். மருத்துவம் பதினான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது என செகராசசேகர ஏடுகள் தெரிவிக் கின்றன. அவை
1. பொது மருத்துவம்
2. மாதர் மருத்துவம் (மகப்பேறு உட்பட)
3. குழந்தை மருத்துவம்
4. தலைநோய் மருத்துவம் (காது. மூக்கு, தொண்டை உட்பட)
5. 35600r LD55giell b
6. தோல் நோய் மருத்துவம்
7. மனநோய் மருத்துவம்
8. நஞ்சு மருத்துவம்
9. முறிவு நோவு மருத்துவம்
10. அறுவை மருத்துவம்
11. வசீகர மருத்துவம்
12இரசாயன மருத்துவம்
13. காயகற்ப மருத்துவம்
14. அகால மரண மருத்துவம்
அட்டவித பரீட்சைகளால், நோய்களைக் கண்டறிந்தார்கள். மூலிகை, உலோக, சீவபதார்த்தங்களிலிருந்து. அறுபத்தினான்கு விதமான மருந்துகளை தயாரித்தார்கள். மணி மந்திரங்களையும், அவிழ்தங்களுடன் சேர்த்து செய்து வந்தார்கள். மக்களின் உணவு பழக்கவழக்கங்களும். தமிழ் மருத்துவ முறைப்படியே இருந்து வந்துள்ளன.
- 245

Page 125
பல்லவராச்சியம்
வாதம், பித்தம், கபம், உயிர்த்தாதுக்களாகும். இரசம். இரத்தம், தசை கொழுப்பு, எலும்பு, எலும்புமச்சை, மூளை. நரம்பு, வெண்ணிர். தோல் ஆகிய பத்தும் உடற்தாதுக்களாகும். உணவு, அரிசிமுதன்மையான ஆகாரம். கீரைகள், தானியங்கள், காய்கறிகள், கிழங்குகளும் உணவாகும். பால், தயிர், மோர். நெய், வெண்ணெய் உணவில் சேர்த்தார்கள். கடலுணவு, விலங்குணவும் e 6oir-Tilaser.
1008 மூலிகைகள். 9 லோகங்கள். 9 மணிகள், 64 பாசானங்கள். 12O காரசாரங்கள், 118 விலங்குப் பொருட்கள், மருந்துகளுக்கு மூலப் பொருட்களாகப் பயன்படுத்தினார்கள். மூலிகைகளினால் மானிட சிகிச்சையும். உலோக தாதுக்களினால் தேவசிகிச்சையும். கத்திமுதலிய கருவிகளினால், அறுவைச்சிகிச்சையும் செய்து வந்தார்கள். மருந்து அளவைகள், பல்லவத்தில் வேறுபட்டவை. ஒரு பலம் என்பது, பதினாறு களஞ்சு கொண்டது. ஒரு பறை, என்பது 30 கொத்துக் கொண்டது. அது போல, பல்லவத்தில் காணப்படும் பல மருந்து முறைகள், இந்தியாவில் காணப்படவில்லை. மிகவும் சிறந்த மருந்துகளாகக் காணப்படும் பெரிய வெற்றிவேலாயுதம். விட்டுணுசக்கரம். பெரிய பறங்கிக்கிழங்கு பற்பம் காணப்படவில்லை. இந்திய நூல்களில் காணப்படும் மருந்துகளை விட, பல்லவ மருந்துமுறைகள். காலத்தினால் முந்தியவை. பரராசசேகரம் 12000. செகரரசசேகரம் நூல்கள், பல்லவ மருத்துவம் பற்றி விரிவாகத் தெரிவிக்கின்றன. தமிழ் மருத்துவம், மூன்று பருவகாலங்களைக் கொண்டது. அவை கோடை காலம், மாரிகாலம், பனிகாலம் ஆகும். அவை முன்கோடை. பின்கோடை முன்மாரி. பின்மாரி, முன்பணி பின்பணி என ஆறாகப்பகுத்தார்கள். தை, மாசி பின்பணியாகும். இவை தனித்தன்மை வாய்ந்தவை.
தமிழ் இசை
பல்லவர் காலத்தில், பல்லவத்தில் தமிழிசை சிறப்புற்றிருந்தது. தமிழிசைப் பாடல்களே அரங்குகளில் ஒலித்தது. அரச மண்டபங்களில் ஒலித்தது. ஆலயங்களில் ஒலித்தது. பல்லவத்தின் அரசர்களினால், தேன் மதுரத்தமிழிசை உலகமெல்லாம் ஒலித்தது. தமிழ்ப்பாக்கள் இயற்றப்பட்டன. இசைக்குத் தனி இலக்கணம் கண்டவர்கள் தமிழர்கள். இந்தியாவிலும், தமிழ்ப்பாமாலைகள், கோவில்களை அலங்கரித்த காலம், பல்லவ மன்னர்களின் காலமாகும். தமிழ்ப்பண்களின் ஒழுங்கிலேயமைந்த பாடல்கள், தேவாரதிருமுறைகள் ஆகும்.
- 246 -

பல்லவராசசேகரம் தமிழிசை ஏழு பதங்களைக் கொண்டுள்ளது. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை. இளி விளரி. தாரம் எனப்பெயர் பெற்றன. ஏழு பதங்களும் ஏழிசை எனப் போற்றப்பட்டு வந்தது. ஏழுபதங்களும் தனித்தனி ஒசைகளை கொண்டிருந்தது. தமிழில் குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண். நெய்தல்பண், பாலைப்பண் என, பெரும்பணன்கள் ஐந்தாகும்.
தமிழிசையில், தமிழர்களால் முப்பத்திரண்டு கருவிகள் தமிழிசைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பல்லவத்தின் இசைக்கருவிகளில், நந்தியாழ் சிறப்பிடம் வகித்திருந்தது. நாகசின்னத்தை உருவாக்கியவர்கள் பல்லவநாகர்களே. பல்லவத்தின் அரண்மனை வாத்தியமாக, நாகசின்னம் மதிப்புப் பெற்றிருந்தது. தழிழர்கள் தமிழிசையை மறந்துவிட்டார்கள். தமிழிசைக் கலைஞர்கள். தமிழிசைக்கருவிகளை மறந்து போனார்கள். தமிழிசைக்கருவிகள், பல்லவத்தை விட்டு மறைந்துபோய் விட்டன.

சிவனே தமிழிசையை அருளிச் செய்தவர். அவர் உருத்திர வீணைய இசைத்து பாடி ஆடுகிறார். தமிழ்ப்பண்கள் 1991இருந்தன. தாய்ப்பண்கள் 108 ஆகும். தமிழ்ப் பண்ணோடு பாடப்பட்டவை தமிழ்ப்பாக்கள். முதுகுருகு. முதுநாரை, இசைநுணுக்கம். இராவணியம், யாழ்நூல் இசை இலக்கண நூல்களாகும். மத்தளம். உடுக்கு. பறை, பேரிகை, முழவு. தாரை. தப்பட்டை, வீணை, யாழ், குழல், நாகசின்னம். ஒத்து, கொம்புவாத்தியம், தவில், பம்பை, நையாண்டிமேளம். முரசு பல்லவத்தில் வழங்கிய சில இசைக்கருவிகளாகும்.
தமிழ்ப்பணி ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உண்டு. பாரிய விளைவுகளை ஏற்படுத்த வல்லன. புறநீர்மை பாடினால் விடிகிறது. மேகராகக் குறிஞ்சி பாடினால் இருள்கிறது. காந்தாரப்பண் பாடினால் வெப்பம் தணிகிறது. 

கெளசிகப்பண்பாடினால் நோய் நீங்குகிறது. கொல்லிப்பண்பாடினால் வேதனை போகிறது. பல்லவத்தில் தமிழிசை மரபு பேணப்பட்டு வந்தகாலம், தனித்தமிழ் இசை எங்கும் ஒலித்த, உன்னதமான காலம், மங்கலப் பண்கள் -16, பகற்பண்கள் -10 இராப்பண்கள் -8, பொதுப்பண்கள் 4 வழங்கியுள்ளன. அரசர் உலாச்செல்லும் போது வாத்தியங்களில் திசைக்கொரு பண் வாசிக்கப்பட்டது. அவை கிழக்கு காந்தாரம், தென்கிழக்கு - கொல்லி , தெற்கு- கெளசிகம், தென்மேற்கு-நட்ட பாடை, மேற்கு - சீகாமரம், வடமேற்கு - தக்கேசி, வடக்கு - தக்கராகம், வடகிழக்கு-சாதாரிபண்ணும் இசைக்கப்பெற்றன. பொழுதுக் கொரு
- 247

Page 126
பல்லவராச்சியம் 

பண் பாடினார்கள். காலையில் மருதப்பண். மாலையில் செவ்வழிப்பண். யாமத்தில் குறிஞ்சிப்பண். சந்தியில் காந்தாரம், மத்தியானம் நட்டராகம், பிற்பகல் - 6a56TéSLb, elB5ã85&556Lib. eiñ555 Dub - u60õTU658LDLb UTLGubps.
நால்வர் பண்ணோடு இசைபாடினார்கள், அற்புதங்கள் நிகழ்ந்தன. நக்கீரர் பாடிய தமிழ் கூடிகூடிமுரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி: என்ற பாடல் இறக்கவும், கூடிக்ஷஆரிய நன்று தமிழ் தீதென உரைத்தா என்ற பாடல், உயிர்க்கவும் செய்தது. அகத்தியர் தமிழ்மேல் ஆணை என்றார். அது நடந்தது. இராவணன் தமிழ்ப்பண்பாடி சிவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்தான். சம்பந்தப் பெருமான் பண்ணோடு இசைபாடி, படிக்காசு பெற்றார். 18ம் நூற்றாண்டிலே அபிராமிபட்டர் பாடிய தமிழ்ப்பண். அமாவாசையில் முழுநிலா எறிக்கச் செய்தது. அருமருந்தன்ன உயிருள்ள தமிழ்ப்பணிகளை மறந்து, செத்த வடமொழி சுலோகங்களைப் பாடியதால், கோவில்கள் மூடப்பட்டன. ஆட்சி அகன்றது. பண்ணோடு இசை பாடவேண்டும்.
அறுபத்தினான்கு தமிழினை. இந்தியாவில் மூன்று தமிழ் ஆக்கிவிட்டார்கள். தமிழ் அரசர்களாக சேர, சோழ, பாண்டியர்களை, முத்தமிழ் வேந்தர்கள் என்று குறிப்பிட்டனர். முதலில், பேரரசு அமைத்து. இந்தியா முழுவதும் தமிழ் வளர்த்தவர்கள் பல்லவர்களாக இருந்தும், பல்லவநாடு, திராவிடம், தமிழ்நாடு என்று சிறப்பித்துக் கூறுமளவிற்கு, உலக நாடுகளில் தமிழ் வளர்த்தவர்கள், பல்லவ தமிழ் வேந்தர்களாக இருந்தும். அவர்களை தமிழ் வேந்தர்களுள் ஒருவராகக் கொள்ளத், தவறிவிட்டார்கள். தமிழ் நிறைவானது. தமிழ் கலைகள் நிறைவானவை. வெளியிலிருந்து எதுவும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழில்முன்னர், பதினாறு உயிர் எழுத்துக்களும், முப்பந்தைந்து மெய்யெழுத்துக்களும் இருந்துள்ளதாக, திருமந்திரம் கூறியுள்ளது. பழைய தமிழ் எழுத்துக்களை, மீண்டும் வெளிக் கொணரல் வேண்டும். பயன்பாட்டிற்கு வசதியாக, உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக, சுருக்கி விட்டார்கள். அந்நிய மொழி ஊடுருவல். அந்நிய மொழி கற்றவர்களின் தலையீடுகள். தமிழுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பேரிகை, படகை. இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை,
திமிலை. குடமுழா, தக்கை. கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, கந்தரி,
முழவு, மொந்தை. முரசு, கண்விடுதூம்பு. நிசானம், துடுமை, சிறுபறை, அடக்கம், - 248

பல்லவராசசேகரம் தகுணிச்சம். விரவேறு. பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை ஆகியவை தோற்கருவிகளாகும். புல்லாங்குழல், நாகசின்னம். முகவீணை. ஒத்து, மகுடி, தாரை. கொம்பு, எக்காளை, சின்னம், வங்கா, சங்கு, துளைக்கருவிகளாகும். ஆதியாழ் வில்யாழ். பேரியாழ். சீறியாழ். மகரயாழ். சகோடயாழ், செங்கோட்டியாழ். நந்தியாழ். ஆயிரநரம்புயாழ், இராவணவீணை. சரசுவதிவீணை, உருத்திரவினை. மருத்துவயாழ். பரிவாதினி வினை முதலியகருவிகள் பல்லவநாட்டு இசையில் பயன்படுத்தப்பட்டுவந்தன.
பல்லவர்கள், கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினார்கள். பல்லவர் கட்டிய கோயில்களில், பல்லவக் கட்டிடக்கலை மிளிர்கிறது. கோபுர அமைப்புக்கள், அவற்றின் சிற்பமுறைகள், மிகவும் நுட்பம் வாய்ந்தவை. குன்றுகளை குடைந்து. குடவரைக்கோயில்களை அமைத்துக்காட்டியவர்கள். பல்லவ சிற்பிகளே. கல்லும் மண்ணும் சாந்தும் இன்றி. கட்டிடங்களை பல்லவர்கள் நிர்மாணித்தார்கள். அழியாத புகழ் படைத்த சுவரோவியங்கள். பல்லவர்களின் கைவண்ணமே. வானுயர்ந்த கோபுரங்களை. ஒவ்வொரு வரியின் கற்களும். தனித்தனி சூத்திரத்தில் வடித்து அடுக்கிக் கட்டினார்கள்.
நந்நீர்க் கிணறுகளை அதற்கேற்றாப் போல், கற்களை வெட்டி, பனங்களியும் பனங்காய் தோலும் பயன்படுத்திக் கட்டினார்கள். அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோவில்களையும் கற்களை வெட்டி வைத்துக்கட்டினார்கள். முருகைக்கல்,சுண்னம், சர்க்கரை, கற்றாளை, பனங்கழி, போட்டுத்துவைத்துச் சாந்து செய்தார்கள். மூலிகைச் சாறுகளைப் பயன்படுத்தி, மைதயாரித்து, ஓவியம்திட்டினார்கள். கூம்புமுறையில் கற்களை அடுக்கிச்சாளரம், வாசல், பலகணி அமைத்தார்கள். பனை வயிரத்தையும். இருப்பைத் தீராந்திகளையும் பயன்படுத்தி, மாடிகளை கட்டினார்கள். எதிரொலி ஏற்படாத வகையில், மனைகளுக்குநீள அகலங்களை வகுத்திருந்தனர்.
வீடுகள் பலவிதம், அவை மால்வீடு. ஒற்றைச் சட்டவீடு, வீடுகூடம், நடைகூடம் வீடு. நாற்சார் வீடு. எட்டுச்சார் வீடு, தலைவாசல் வீடு என பல அமைப்புகளில் நிர்மாணித்தனர். ஆலயங்கள் எல்லாவற்றினையும் இரு மண்டபங்களை கொண்டதாக அமைத்தனர். அரசர்களினால் கட்டப் பெற்ற கோயில்கள். அரண்மனையை ஒத்த வடிவில். ஏழு அரண்களைக்கொண்டதாக
- 249

Page 127
பல்லவராச்சியம் அமைந்திருந்தன. அக்கோவில்களில், ஏழுவீதிகள் அமைத்தனர்.
சோதிடம்
சோதி-ஒளி சூரியன் ஆகும். சோதியிலிருந்து பிறந்த கலை. சோதிடம் ஆகும். இலங்கைச் சோதிடகலை. தனித்தன்மை வாய்ந்தது. செகராசசேகர மன்னன் பெயரால். செகராசசேகரமாலை என்ற சோதிடநூல் இயற்றப்பட்டு. அரச அவையில் அரங்கேற்றப்பட்டது. சர்ப்பசாத்திரம் ஒரு பாடல் -
பாரிலுள்ள சூத்திரனாம் பாம்பு புற்றிற்
பரிந்திருக்கு மிரையெடுக்கிற் பலவுந்தின்னு மேருடனேதானாடிற்பத்மராக
மிலங்கு மணிமுடிபுனையுமிலங்கை வேந்தர் சீரிய பொன் திறையளக்கச் செங்கோலோச்சுஞ் செகராசசேகரன் மன்சிங்கை மேவு மாரியர் கோன் வெண்குடையினிழலே செய்யு
மவனிதனைப் பார்த்துநின்றே யமர்ந்தாடும் மே.
அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்களினால் கணிக்கப் பெற்றவை, தமிழ்ச்சோதிடம் ஆகும். அதன் கணிப்புமுறைகளும் பலன்களும். காலப்பகுப்புக்களும், வடமொழிநூல்களிலிருந்து வேறுபட்டவை. அகத்தியர்நாடி சோதிடம், நந்திவாக்கியம் முதலானவை தமிழ்ச் சோதிடமுறை நூல்களாகும். கந்தபுராணம் இலங்கை நடுநாடியாக இருந்ததை தெரிவிக்கிறது. அதாவது இலங்கைத் தமிழர்களே அக்காலத்தில் சோதிடம், வானவியல், அறிவியல் விஞ்ஞானத்தை உருவாக்கினார்கள் என்பதை இது எடுத்துகாட்டுகிறது. தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழியும் தெற்கிலிருந்துதான் வடக்கு நோக்கி பரவின. நாகரிகத் தொடக்கம் ஏற்பட்டது தென்னிந்தியாவிற்குத் தெற்கிலாகும் என்று பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை. குமரிகண்டம் என்ற நூலில் கூறியுள்ளார்.
காலவாய்ப்பாடு
60 தற்பரை 1விநாடி 60 விநாடி dwp 1 நாழிகை 60 நாழிகை o 1நாள் зо дbп6ії 1 uDT5 b
- 250

பல்லவராசசேகரம்
60 நாள் as 1 பருவம் 6 பருவம் (36Oநாள்) 16).ld 5Lub 6O eibLlib 1வருடவட்டம் 168OO6)Jg5LIb ー 1 கிரேதாயுகம் 156OO 6J bullib asas 1திரேதாயுகம் 144OO6)Jg5LIb 1துவாபரயுகம் 132OO 6dBLub 1கலியுகம் 6OOOO 6Jclub a 1யுக வட்டம்
சூரியன் முதலான ஒன்பது கிரகங்களையும், ஒன்பது துணைக்கிரகங் களையும், அவற்றின் சுழற்சியைக் கொண்டும் காலக்கணிப்புக்களை ஏற்படுத்தினார்கள். சித்தர்கள் வருடத்தினைக் கணிக்கும் போது 360 நாட்கள் கொண்டதாக ஒரு வருடம் இருந்துள்ளது. இன்று பூமிசுற்றும் வேகம் குறைந்து வருவதால் ஒருவருடம் 3651/4 நாட்கள் கொண்டதாக இருக்கிறது. இதனை விஞ்ஞான முறையில் கணக்கிட்டால், இத்தமிழ் சோதிடமுறை கணிக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாகின்றது என்ற உண்மை தெளிவாகும். சோதிட மலர், சுந்தர சேகரம். சரசோதிமாலை, செகராச சேகரமாலை. அளவெட்டி சின்னப்பு சோதிடநூல் முதலாக, பலநூல்நமதுநாட்டு சோதிடமுறையின் தனித்தன்மைகள் விரிவாக கூறுகின்றன.
சோதிடம் ஐந்து பிரிவாகும். அவை பிறப்பு சோதிடம், பூப்பு சோதிடம், நிமித்தசோதிடம், மருத்துவ சோதிடம், மனையடி சோதிடம் ஆகும். சாதாரணமாக குழந்தை பிறந்த நேரத்தினைக் கொண்டு, கிரகநிலைகளைக் கணித்துப் பலன் கூறுவது பிறப்புச் சோதிடம் ஆகும். பெண் பிள்ளை பூப்படைந்த நேரத்தினை கணித்து. எழுதுவது பூப்பு சோதிடம். அதில் மணவாழ்க்கை, குழந்தை, முதலியவை பற்றிக்கூறுதல் ஆகும்.நிமித்தசோதிடம் என்ன கிழமையில், என்ன நாளில் வருடம்பிறந்தால், என்ன பலன், ஆரூட பலன். கேட்கின்ற நேரத்தினைக் கொண்டு கணிக்கிற பலன் சகுனபலன். முதலியவை நிமித்த சோதிடத்தில் அடங்கும். அதுபோல என்ன நாளில், என்ன வாரத்தில், என்னதிகதியில் நோய் வந்தால் என்ன நிகழும். எப்பொழுது அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும். என்ன நாளில் நோய் ஆரம்பித்தால், சாவு ஏற்படும். என்ன நாளில் மருந்து செய்தால் அது சித்தி பெறும். அதனை என்ன நாளில் கொடுத்தால் நோய்தீரும், தூதன் குறி. என்ன நாட்களில் மருந்து உண்ணுதல் கூடாது. இவை தெளிவாக
- 251 -

Page 128
பல்லவராச்சியம் மருத்துவ சோதிடத்தில் காணப்படுகின்றன.
மனையடி சோதிடம் என்பது சாதாரணமாக வீடு. கிணறு. முதலியவற்றுக்குநிலம் எடுப்பது. நீள அகலங்கள், வாசல், அறைகளின் அமைப்பு பற்றி தெரிவிக்கிறது. இவற்றுக்குரிய நிலம் எவ்வாறு அமையவேண்டும். இல்லாளுக்கும்பதிக்கும் என்னவாசல் வீடு பொருத்தமானது. எங்கே அடுக்களை அமைதல் வேண்டும். படலை அமைய வேண்டிய இடம். ஆலயம், கோயில், வாகன நிர்மானங்கள், இரத பரிமாணங்கள் எல்லாம் மனையடி சோதிடத்தில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
- 252

பல்லவராசசேகரம் 11. பல்லவர் நாணயங்கள்
ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழரசர்களின் நாணய அமைப்பு. வடிவம், சின்னங்கள், அளவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு. முப்பது வகையாகப்பிரிக்கலாம் என. கலாநிதிபுஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ஆயினும், இவற்றை இரு பிரிவுகளுள் அடக்கலாம்.
1. முதலாவது பிரிவிலுள்ள நாணயத்தின் முற்புறத்தில், இடம் அல்லது வலப்புறம் பார்த்தநிலையில், பீடத்தின்மேல் அமர்ந்திருக்கும் காளை, பிரதான சின்னமாக உள்ளது. இதற்கு இருபுறமும் குத்துவிளக்கும். இவற்றிற்கு மேலே விளிம்பை ஒட்டிப்பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில், பீடத்தின்மேல் கிடையாக அல்லது பக்கவாட்டில் இருகுத்துவிளக்கிற்கு, இரு மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. பாண்டிநாட்டை வென்றதற்கு அடையாளமாக, வெளியிட்ட பல்லவநாணயம் ஆகும்.
2. இவ்வகையைச் சேர்ந்த வேறுசில நாணயங்களின் முன் புறத்தில், காளை அல்லது. தனி ஒரு மீன் சின்னம் காணப்படுகிறது. இவை பெரிதாகவும் அழகாகவும் உள்ளன. பின்புறத்தில் ஒன்று. அல்லது இரண்டு மீன்சின்னத்துடன் சங்கு, பூரணகும்பம். செண்டு. தாமரைக்கொடி போன்ற சின்னங்களும் இடம் பெற்றுள்ளன. இவை, மட்டக்களப்பை பல்லவ மன்னர்கள் ஆண்டபோது,
வெளியிட்டியிருக்க வேண்டும்.
3. வேறுசிலவற்றில், காளைக்குப்பதிலாக, குதிரை. பின்புறத்தில் இரண்டு அல்லது மூன்று மீன் சின்னம் காணப்படும். குதிரைமலை தமிழ் அரசர்களின் அல்லது குபேரனின் நாணயமாக இருக்கலாம். இவை. காலவேறுபாட்டை அல்லது நாணயங்களை வெளியிட்ட மன்னர்களிற்கிடையிலான காலவேறுபாட்டைக், காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது பிரிவில்
1. இடப்புறம்பார்த்தநிலையில் நிற்கும் குதிரை. இதன்முகத்திற்கு கீழே பலிபீடம் காணப்படுகிறது. விளிம்பையொட்டி, மேற்புறமாக இடப்பக்கத்தில் சந்திரனும். மத்தியில் சங்கும் காணப்படுகின்றன. பின்புறத்தில் பீடத்தின் மேல்.
- 253 -

Page 129
பல்லவராச்சியம் கிடையாகவுள்ள மூன்று மீன் சின்னங்கள். இரு குத்து விளக்குகளிற் கிடை யிலுள்ளன. இவ்வகை நாணயங்கள் சிலவற்றின். பின்புறத்தில் வரும் பீடத்துடன் காணப்படும், மீன் சின்னங்கள். சில நாணயங்களில், கடலினுள் இருக்கும் தாவரபட்சியை உண்பது போல, வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் சிலநாணயங்களில்கூடினக: என்றும், சிலவற்றில்கூடிநஎன்றும் அல்லது கூடிஓம்: என்றும் வாசிக்ககூடிய எழுத்துக்களும் காணப்படகின்றன. இவை நாகநாட்டை அல்லது நாக அரசவம்சத்தைக் குறிக்கலாம். (மாதோட்டம். பூநகரியில் கிடைத்துள்ளன) மன்னார் அரசர்களுடையதாக இருத்தல் வேண்டும்.
1. தமிழகத்தில் கி.பி 4ம் நூற்றாண்டுவரை, வெளியிட்டநாணயங்களில், மீன் கோட்டுருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈழத்தில் வெளியிட்ட நாணயங்களில்மின் முழு உருவமாகவே வார்க்கப்பட்டுள்ளன.
2. பல்லவநாட்டில் கிடைத்த எல்லாக்காலகட்டநாணயங்களிலும், இரண்டு முதல் ஐந்து வரையிலான மீன்சின்னம் காணப்படுகிறது.
3. பல்லவநாட்டில் கிடைத்த பெரும்பாலான நாணயங்களில் மீன்சின்னம்மூன்று கோடுகளாலான பீடத்தின் மீதே பொறிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைத் தமிழ் மன்னர்களின் வெளியிட்ட நாணயங்களின் சிறப்பான அடையாளம் ஆகும். இதனை தமிழக இந்தியநாணயங்களில் காணமுடியவில்லை
4. நாக நாட்டு நாணயங்களில், மீன் முழு உருவமாகவும் தனித்தும் காணப்படுகிறது. மாதோட்ட மன்னர்களின் கொடி, மகரமீன் ஆகும். தனி மீன் சின்னம்மாதோட்ட அரசிற்கு உரியதாகும்.
3. நாக நாட்டு நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள நுட்பமான வடிவமைப்பும் அழகும் தெளிவும் தமிழக நாணயங்கள் எதிலும் காணப்படவில்லை.
6. தமிழகத்தில், பாண்டியர் ஆட்சிநடைபெறாத காலகட்டத்தில் கூட, நாகதீவில்
மீன்சின்னம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதற்கு சான்றுகள்
உண்டு. குறிப்பாக கிபி 4ம். நூற்றாண்டிற்கும் 9ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்திலும், சோழரிற்கு அடிபணிந்து திறை செலுத்திய கி.பி 10ம்,
நூற்றாண்டிற்கும். 12ம், நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திலும், பாண்டியர் - 254

பல்லவராசசேகரம் நாணயங்கள் வெளியிட்டதற்கு. எந்தச்சான்றுகளும் இதுவரைகிடைக்கவில்லை. ஆனால். இக்காலத்தில் எல்லாம் நாக நாட்டில் பல்லவத்தில் மீன் பொறித்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியிட்டதற்கு சான்றுகள் உண்டு. அக்காலங்களில், பல்லவ அரசர்களினால், பாண்டி நாடு ஆளப்பட்டிருந்தது. அதனைக்குறித்து வெளியிடப்பட்டநாணயங்களாகும்.
7. சங்ககால நாணயங்களில் அரிதாகப் பொறிக்கப்பட்ட குதிரை, பிற்காலத்தமிழக நாணயங்களில், பெரும்பாலும் இடம் பெறவில்லை. ஆனால், நாகநாட்டு நாணயங்களில் அவை ஒவ்வொரு காலப்பகுதியிலும். காளையைப் போல, முதன்மைச்சின்னமாக பொறிக்கப பட்டுள்ளன. இவை குதிரைமலைத்தமிழ் சிற்றரசர்களினால் வெளியிடப்பட்டவை. இலங்கையை குபேரன் ஆட்சி செய்தகாலத்தில், அவனது இலட்சினை குதிரையாக இருந்தது. அக்காலத்தில் வெளிட்ட நாணயங்களாகவும் இருக்கலாம். மேற்கொண்டு ஆய்வு செய்யப்பட வேணடும்.
8. தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு கி.பி 13ம் நூற்றாண்டுவரை. பாண்டியர், சோழர் வெளியிட்ட பல நாணயங்கள் நாகநாட்டில் கிடைத்துள்ளன. ஆனால், நாகநாட்டில் ஆயிரக்கணக்கில் கிடைத்தநாணயங்கள் (அண்மையில் காளையும் மீன்சின்னமும் பொறித்த நாணயங்கள் தமிழகத்தில் மதுரை. இராமேசுவரப் பகுதியில் அரிதாகக்கிடைத்துள்ளன) இவை தமிழகத்தில் கிடைத்ததாக இதுவரை வெளிவந்த எந்த ஆய்விலும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவை தமிழ்நாட்டு வம்சங்களினால் வெளியிடப்பட்டிருந்தால், நாகநாட்டை விடத். தமிழகத்தில் தான். கூடுதலாகக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இவை பல்லவ அரசர்கள். பாண்டிநாட்டை ஆட்சிசெய்தபோது, வெளியிடப்பட்டவையாகும்.
காளையை நாணயங்களில் பொறிக்கும் மரபு. ஈழத்தமிழரிடம் பணடுதொட்டு இருந்து வந்ததற்கு. பல சான்றுகள் உண்டு. அவற்றில், சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களில் நிற்கும் நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காளை காணப்படுகிறது. பண்டைக்காலத்திலேயே இலங்கையில் இவ்வடிவம் ஏற்பட்டதை, அவற்றிற்குரிய அச்சுக்கள் கிடைத்திருப்பதைக் கொண்டு. உறுதிப்படுத்த முடிகிறது. நாகநாட்டு நாணயங்களில் காணப்படும் இன்னொரு சிறப்பு. மூன்று கோடுகளால் ஆன பீடத்தின்மேல் படுத்திருக்கும் நிலையில்
- 255

Page 130
பல்லவராச்சியம் காணப்படுகின்றது. மூன்று கோடுகள் திருநீற்றுக்குறியையும், சைவசமயத் தையும் புலப்படுத்துகின்றன. பல்லவ இராசசிம்மன் பயன்படுத்திய நாணயங் களிலும் கொடியிலும், காளை நிற்கிற வடிவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நாணயங்களில் பொறிக்கப்பட்ட காளையில் கழுத்தும், ஏரியும் சமகாலதமிழக நாணயங்களிலிருந்து வேறுபட்டதாகநீண்டும் உயர்ந்தும் காணப்படுகின்றன. தமிழ் நாட்டு நாணயங்களில் கொடுக்கப்படாத அளவிற்கு, நாக நாட்டு நாணயங்களின், முன்பக்கத்தை முழுமையாக அலங்கரிக்கும் வகையில் காளை பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவ, மணிபுர, சிங்கைநகர.நல்லுள் அரச இலச்சினை நிற்கிற காளையாகும். நாகநகள் என்பது, மணிநாகநகள் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டாலும், முன்னாள் மணிபுரம் என்றும் அழைக்கப்பட்ட துமான சுழிபுரம் ஆகும். இலங்கைத் தமிழர்கள் கி.மு 3ம் நூற்றாண்டு முதல், கி.பி 17ம் நூற்றாண்டு வரை. பலவகை நாணயங்க ைவெளியிட்டுவந்துள்ளனர். என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. என கலாநிதி புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளர்.
இவை, இவர்களது பணிடையகால மொழி. எழுத்து, அரசு உருவாக்கம், குடியிருப்பு, வர்த்தகம், அயல்நாட்டு உறவு போன்ற பல அம்சங்களைப் பற்றி அறிவதற்கு பெரிதும் உதவும். இவற்றில் பலவகையான குறியீடுகள், சின்னங்கள், தெய்வ வடிவங்கள். தெய்வப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை நாணயங்களை. வெளியிட்ட மன்னர்களினதும், அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களினதும், சமயநிலையினையும் வெளிக்காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவற்றுள் முருகவழிபாட்டுடன் தொடர்புடைய வாகனம், ஆயுதம், சின்னங்கள் தெய்வப் பெயர்கள் என்பன சிறப்பாக குறிப்பிடத்தக்கன. அவற்றினடிப்படையில், கி.பி2ம். கி.பி5ம் நூற்றாண்டிற் கிடைப்பட்ட காலத்தில். இலங்கைக்கே தனித்துவமான நீள்சதுர நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவற்றில் ஓம்.ழுநீவத்சா.இலக்குமி, தாமரை. சூலம், காளை, சிவலிங்கம் போன்ற சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. கி.பி 13ம். கி.பி 17ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள். வெளியிட்ட நானங்களில் சிலவற்றின் முன்புறத்தில், மன்னன் உருவமும் பின்புறத்தில் நந்தியும். நந்திக்கு முன்னால் நந்தியைப்பார்த்த வண்ணம் சிறிய மயில் சின்னமும், நந்திக்கு கீழே தமிழில் சேது என்ற வாசகமும் காணப்படுகின்றது. சில நாணயங்களில் நந்திக்கு முன்னால் முருகனின் உருவமும் காணப்படுகின்றது. மயில் சின்னம்சந்தனகாமத்தினைமொனராகல) - 256

பல்லவராச்சியம் ஆண்டதை குறிக்கிறது. முருகன், வேல், கதிர்காமத்தினை ஆட்சி செய்ததை குறிக்கிறது. சில நாணயங்களில் மயிலோடு முருகனும் காணப்படுகிறது. சில நாணயங்களில்நந்திக்கு மேல் ஆலயத்தின் வடிவம் காணப்படுகிறது.
இந்த வாசகங்களில் "கந்”, “ஆ“ என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்ட சில நாணயங்கள் காணப்படுகின்றன. கி.பி 14ம் நூற்ாண்டிற்கு பின் வெளியிடப் பட்ட நாணயங்களில். முன்புறத்தில் மேலே சந்திரனும், கீழே இடம் அல்லது வலம் பார்த்தநிலையில் மயிலும் காணப்படுகிறது. அதன் வாயில் பாம்பும், சில நாணயங்களில் பல்லிபோன்ற உருவமும் காணப்படகின்றன. நாணயத்தின் பின்புறத்தில், வலப்புறமாக வேல் சின்னமும், மத்தியில் "கந்” என்ற பெயரும் அதனுடன் இணைந்த வகையில், மணிகளைக் குறிக்கும் கால் பகுதியும் காணப்படுகிறது.
இரண்டாவது வகை நாணயங்கள், முதலாவது வகையை பெருமளவு ஒத்திருந்தாலும் மயிலின் வாயிலுள்ள பாம்பு தெளிவாக இருப்பதுடன், பின்புறத்தில் "கந்” என்ற பெயரிற்குப் பதிலாக "ஆ" என்ற தனி எழுத்து மட்டும் காணப்படுகிறது.
கி. பி6ம் நூற்றாண்டிற்கும் கி.பி.10 நூற்றாண்டிற்கும் இடைப்பட்டகால நாணயங்களை மூவையாக பிரிக்கலாம். 高
முதலாவதுவகையில் இரு குத்துவிளக்கிற்கிடையில் இருபுறமும்மீன் சின்னம் காணப்படுகின்றன.
இரண்டாவது வகையில் இரு குத்துவிளக்கிற்கிடையில் முன்புறத்தில் காளை அல்லது யானையும். பின்புறம் குதிரை அல்லது மீன் காணப்படுகின்றன. இந்த மூன்று வகையிலும், சதுர வடிவிலும் வட்ட வடிவிலும் சின்னங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை காலமாற்றத்தையும் வேறுபட்ட மன்னர்களால் வெளியிடப்பட்ட தையும் சுட்டுவதாக அமையலாம். கழனி நாகர்களின் கொடி. யானையாகும்.
மூன்றாவது வகை நாணயங்கள் சில காலங்களில் பல்லவத்தின் அரசர்கள் சிங்க இலச்சினையை தங்கள் நாணயங்களில் பொறித்துள்ளார்கள்.
- 257

Page 131
பல்லவராசசேகரம் போர்க்கலங்களில் சிங்கம் பொறித்தநாணயங்களை வெளியிட்டுள்ளார்கள்.
பெண் தெய்வங்கள் பொறிக்கப்பட்ட நீள்சதுர நாணயங்கள் கி.மு 32ம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்பதை, அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்து கின்றன. உடுத்துறையில் கிடைத்த நாணயங்களில், ஆண்தெய்வமும் பொறிக் கப்பட்டுள்ளது. கி.பி 8-9 ம் நூற்றாண்டு நாணயங்களில் கூடிஓம்; என்ற தமிழ் எழுத்துக்கள் காணப்படுவது ஒரு வளர்ச்சியே பல்லவத்தின் நாணயங்கள்

 
 

முன்பக்கம்
- 259 -

Page 132


பல்லவராசசேகரம்
உசாவிய நூல் ஆதியன
செகராசசேகரம் செகராசசேகர மாலை தட்சிண கைலாச புராணம் பரராசசேகரம் 12000 தமிழறிஞர் பொ. சங்கரப்பிள்ளை, நாம் தமிழர் சித்தள் வால்மீகி, இராமாயணம் கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம் வியாசமுனிவர், மகாபாரதம் இராமாஜா சாரியார் பதிப்பு பல்லவ அரசர்களின் இராசமுறை ஈழவரலாற்றுப் பதிவு முதலியார் செ. இராசநாயகம், யாழ்ப்பாணச் சரித்திரம் முதலியார் முத்துத்தம்பி, யாழ்ப்பாணச் சரித்திரம் சிவானந்தயோகி, யாழ்ப்பாணக் குடியேற்றம் 1982 தமிழ்நாவலர் சரிதம் பண்டாரவன்னியன் விழா மலர் - 1981 பேராசிரியர் சி. பத்மநாதன், யாழ்ப்பான ராச்சியம் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாண இராச்சியம் பேராசிரியர் செ. கிருஷ்ணராசா, இலங்கை வரலாறு 1 & 11 புலவர் சின்னத்தம்பி பறாளை விநாயகள் பள்ளு,1998 பதிப்பு பறாளை விநாயகள் கோவில் குடமுழுக்கு மலர் -2003 இராசா இராசசிம்மன் குடும்பப்பதிவுகள் பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம், முத்தூர் அகத்தியர் பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம்,
இராவனேசுவரன் இந்திர உலா யாழ்ப்பாண வைபவமாலை வையாபாடல் ஞானப்பிரகாசப் பாதிரியர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
- 260

பல்லவராச்சியம் 27. புலவர். ஜெகநாதன்
யாழ்ப்பாண தமிழரசர் வரலாறும் காலமும் 28. உயர்திரு சோ. அருணாசலம் CAS,
பிரபு ஆறுமுகம் பெரிய பரிகாரியார் சரித்திர ஆராய்ச்சி. 29. பண்டிதரத்தினம் C.S.நவரத்தினம், தமிழரும் இலங்கையும் 30. பண்டிதரத்தினம் C.Sநவரத்தினம், வன்னியும் வன்னியரும் 31. திரு. கு.முத்துக்குமாரசுவாமிபிள்ளை
யாழ்ப்பாணக் குடியேற்றம் 32. கதிர் தணிகாசலம், இலங்கை இடப்பெயர் ஆய்வு 38. தினக்குரல், வீரகேசரி, தினகரன் கட்டுரைகள் 34. யூகிமுனி, வைத்திய சிந்தாமணி 35. பி.டி. சீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு 36. ம. இராசசேகர தங்கமணி, பாண்டியர் வரலாறு 37. பாக்டர் மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு 38. மா. பாலசுப்பிரமணியம்,
சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு 39. புலவர் சொ. முருகேசனார், பல்லவர் ஆட்சி 40. புலவர் நற்றத்தினார், சிறுபாணாற்றுப்படை 41. புலவர்உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படை 42. கலாநிதிப. புஸ்பரட்ணம், தொல்லியல் நோக்கில்
இலங்கைத் தமிழர் பண்பாடு, 43. Ancient Jaffna (A.J) 44. DR. P. Ragupathy, Early Settlements in Jaffna. 45. DR. P. Pushparatnam, Ancient Coins of SriLankan Tamil
Rulers
- 261 -






Page 134


Page 135
இலங்கையில் த் பதிக்கப்பட்டது
 

https://noolaham.net/project/45/4494/4494.html

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply