இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு’ – இலங்கையில் மத சர்ச்சை
10 யூலை 2020

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த விகாரை இருந்தமைக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அந்த இடத்தில் அமைந்திருந்த பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேச்சரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இரண்டாவது இராசதானி இருந்த காலப் பகுதியிலேயே இந்த விகாரை அமைந்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த காலப் பகுதியில் போர்த்துகேயர் திருகோணமலையில் கோகண்ண விகாரையை உடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு உடைக்கப்பட்ட கோயிலின் சிதைவுகளை எடுத்து, அந்த இடத்தில் திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.