மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது

மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்  நூற்றாண்டு கடந்துள்ளது

நக்கீரன்


தமிழ்க் கடல் மறைமலை அடிகளால் திருவள்ளுவர் ஆண்டு 1947 இல் (ஆங்கில ஆண்டு 1916)  தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் கண்டுள்ளது. இந்த நூற்றாண்டு விழா  தமிழகத்தில்  உள்ள தமிழ்ச்  சங்கங்கள், பேரவைகள்   மாநாடுகள், பட்டிமன்றங்கள் நடத்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடி  வருகின்றன.

மறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை”  எனப் போற்றப்படுகிறார்.  மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம்.   பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படித் தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.


மறைமலை அடிகளார் மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார்.  அவர்களுக்கு  நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார். சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலை அடிகளாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.


தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.


தமிழ், சைவம்  இரண்டையும் தனது  இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம்,  ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,
அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி  அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார்.  மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.

தமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் சொற்களுக்குப் பஞ்சமா? பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.

தனித்தமிழ் என்றால் என்ன? தனித்தமிழ் ஏன்? எதற்கு? தனித்தமிழின் வரலாறு யாது? தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா? தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா? தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருகிறது.  தமிழ்மொழியைப் படிப்பிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும்  பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ‘தனித்தமிழ்’ என்பதைப் பெரும்பாலும் தவறாகவே  கணித்து வைத்துள்ளனர்.
 

தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள்  மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச்  சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது  அதனை மாற்றியமைக்க  முனைந்த பலருள்  மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார்.  இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவர்.

ஒரு நாள் தோட்டத்தில்  மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற  சொல்  வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.

தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு. மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது.  அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.

மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆளுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.

மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா? என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால்  எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.


இவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.  திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
தமிழர் மதம்
பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
சிறுவருக்கான செந்தமிழ் நூல்
மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
மரணத்தின் பின் மனிதர் நிலை
தனித்தமிழ்மாட்சி
பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
உரைமணிக்கோவை
 

இவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்.

சமயநெறி, இலக்கியத்தில்  தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.


1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

தமிழ்மொழி சீர்கெட்டு   தாழ்வுற்று விளங்கிய  காலத்தில் வீறுகொண்டு எழுந்து  பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.

மறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை” எனப் போற்றப் படுகிறார். மறைமலை அடிகள். மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம். பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.

மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் “சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.

தமிழ், சைவம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,

அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார். மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.

தமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் சொற்களுக்குப் பஞ்சமா? பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.

தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள் மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது அதனை மாற்றியமைக்க முனைந்த பலருள் மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார்.

ஒரு நாள் தோட்டத்தில் மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற சொல் வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.

தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு..மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது; அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.

மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.

மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா! என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.

இவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை

தமிழர் மதம்

பழந்தமிழ்க் கொள்கையே சைவம்

சிறுவருக்கான செந்தமிழ் நூல்

மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்

மரணத்தின் பின் மனிதர் நிலை

தனித்தமிழ்மாட்சி

பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்

உரைமணிக்கோவை

இவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்.

சமயநெறி, இலக்கியத்தில் தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.

1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

தமிழ்மொழி சீர்கெட்டு தாழ்வுற்று விளங்கிய காலத்தில் வீறுகொண்டு எழுந்து பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.

மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை. தனித் தமிழ் இயக்கம் தோன்றியதன் காரணமாக வட மொழிச் சொற்கள் களையப்பட்டு அதற்கு ஈடான இனிய தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அக்கிராசனர் போய் தலைவர் வந்துவிட்டார். காரியதரிசி கைவிடப்பட்டு செயலாளர் வந்துவிட்டார். பொக்கிதாசர் மறைந்து பொருளாளர் வந்து விட்டார். இதேபோல் *பிரதமர்/ தலைமை அமைச்சர், *அபிஷேகம்/ திருமுழுக்கு, *கும்பாபிஷேகம்/குடமுழுக்கு, *தேகம், சரீரம்/யாக்கை, உடல், *சருமம்/தோல், *ரத்தம்/குருதி, தம்பதியர்/வாழ்விணையர், *Coffee/குளம்பி, *Tea/தேனீர், *சந்திரன்/நிலா, மதி, *பூஜை/வழிபாடு, *விபூதி/திருநீறு, *ஜலதோஷம்/தடிமன், *மாமிசம்/இறைச்சி, *போஜனம்/விருந்து *வீரம்/மறம், *வேதம்/மறை, *சிருஷ்டி/படைப்பு, *அங்கம்/உறுப்பு, *தேசம்/நாடு, நாசம், *சேதம்/அழிவு, *பலம்/ஆற்றல், *சம்பந்தி/மருவினோர், *ஜாதி/வகுப்புப் பிரிவு, *ஜாதகம்/பிறப்புப் குறிப்பு, *மரணம்/இறப்பு, *ஜனனம்/பிறப்பு, *நட்சத்திரம்/விண்மீன், *யோகம்/நல்லோரை, *லக்னம்/நன்முழுத்தம், *சித்தம்/உள்ளம், *பக்ஷி/பறவை, *விருக்ஷம்/மரம், *நதி/ஆறு, *லாபம்/வருமானம், *லஞ்சம்/கையூட்டு, -பாக்கியம், புண்ணியம்/நற்பேறு, *அதிர்ஷ்டம்/நல் ஊழ், *சூரியன்/கதிரவன், பரிதி, ஞாயிறு, *துர்திஷ்டம்/தீயூழ், *ஷணம்/நொடிப் பொழுது, *நிபுணர்/வல்லுநர், *கிரி/குன்று, *கர்மம்/வினை, *சக்கரம்/திகிரி, *யாகம்/வேள்வி, *சோதனை/ஆய்வு, *வாயு/வளி, காற்று, *சகோதரர்/உடன் பிறப்பு, *சகோதரி/உடன்பிறந்தாள், *உதிரம்/குருதி, *ஞாபக சக்தி/நினைவாற்றல், *ஓதுதல்/படித்தல், *கல்யாணம், விவாகம்/திருமணம், *இரட்சித்தல்/பாதுகாத்தல், *பிரார்தனை/வேண்டுதல், *நமஸ்காரம்/வணக்கம், *வார்த்தை/சொல், கிளவி, மொழி, *தினம்/நாள், *ஆசிர்வாதம்/அருள், *சாஸ்திரி/கலைஞர், *சபை/அவை, *ராசா/அரசன், மன்னன், *ஸ்நானம்/குளியல், *ஆஸ்தி/சொத்து/உடைமை, *பிரதி வாரம்/வாரந்தோறும், *குஞ்சித பாதம்/தூக்கிய திருவடி, *புத்தகம்/நூல், *வியாபாரம்/வணிகம், *தாமதம்/காலம் தாழ்த்துதல், *சேவை/தொண்டு, *சகாயம்/உதவி, *ஆகாயம்/வானம், *கிரகம்/கோள், *ராத்திரி/இரவு, *மத்தியானம்/நண்பகல், *சப்தம்/ஒலி, *கரகோஷம்/கைதட்டல், கையொலி, *ஆகாரம்/உணவு, *விமானம்/வானூர்தி, *திருஷ்டி/கண்ணேறு, *ஜனாதிபதி/குடியரசுத் தலைவர், *விஞ்ஞானம்/அறிவியல், *வாக்கியம்/சொற்றொடர், *பிரசங்கம்/சொற்பொழிவு, *துவிபாஷி/இருமொழியாளர், *துவஜஸ்கம்பம்/கொடிமரம், *மஹோற்சவம்/திருவிழா, *ராஜா/அரசன், மன்னன், *ராணி/அரசி, *மந்திரி/அமைச்சர், *வாகனம்/ஊர்தி, *புத்தி/அறிவு, *சிரம்/தலை, *அலங்காரம்/அணி, *வீரம்/மறம், *தானம், தருமம்/கொடை, *கனிஷ்ட புத்திரி – இளைய மகள், * சிரேஷ்ட புத்திரி/மூத்த மகள், *புத்திரன்/மகன், *வருஷம்/ஆண்டு, *சமூகம்தந்து/வருகை தந்து, *பந்துமித்திரர் /உறவினர், *விஜயம்/வருகை, செலவு.

தனித்தமிழை முன்னெடுப்பவர்கள் ‘தமிழ் வெறியர்கள்’ என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.

‘நயனம்’ என்ற வலைப்பதிவில் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாக அவர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க வேண்டும். (http://thirutamil.blogspot.ca/2008/04/blog-post_28.html)

தனித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பிற மொழிக் கலப்புத் தமிழ் மொழியில் ஏற்பட்டு மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல் ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை குன்றாது தமது எழுத்தைக் காத்துக் கொள்ளும் தமிழை தனித்தமிழ் எனலாம்.

செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், தொல்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல் மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும் தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது, அதன்விளைவு மலையாளம் என்ற மொழி தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு முன்னர். ஏறத்தாழ கிபி 1300 க்குப் பின்னர்அது தனி நாடாகவும் ஆகிப்போனது.

தமிழ்நாட்டில் இன்று தமிழ்மொழி வீட்டில் பிள்ளைகள் வேலைக்காரியோடு பேசும் மொழி எனத் தாழ்ந்துவிட்டது. கற்கை மொழி ஆங்கிலமாக இருக்கிறது. திரைப்பட நடிக, நடிகர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் தமிங்கிலம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிவரும் யூனியர் விகடன் அளவுக்கு அதிகமாக ஆங்கிலச் சொற்களை கையாள்கிறது.

மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது, மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.

தமிழ்மொழியின் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால்,

        1. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, கல்விமொழி, உயர்நீதிமன்ற மொழி, வழிபாட்டுமொழி ஆகியவற்றை உடனடியாகச் செயற்பாட்டுக்குத் தமிழக அரசு கொண்டுவரவேண்டும்.

        2. தமிழில் ஆங்கிலம் உட்பட பிறமொழிக் கலப்பை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும்.

        3. மொழித் தூய்மை காக்க, இரான், உருசிய நாடுகள் போல் சிறப்புக் காவல் படையை உருவாக்க வேண்டும்.

        4. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, நுண்கலைகள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கத் தமிழக அரசு ஆசிரியர்கள், பாடநூல்கள் போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால் தமிழ்நாடு என்பது வரலாற்றில் கரைந்திருக்கும். இன்றைக்கு இந்த அளவு கூட தமிழ் இருந்திருக்காது. இன்றைய தமிழ்நாடு கேரளம் போல் மணிப்பிரவாள மாநிலதாக மாறியிருக்கும்.

மறைமலை என்றொரு மனிதர் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.


பெற்றோர்கள் குறைந்த பட்சம் தங்களது குழுந்தைகளுக்கு அழகான, பொருளுள்ள தூய தமிழ்ப் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு வைக்கமாட்டோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் சரி, தமிழீழத்தில் சரி பெற்றோர்கள் சமஸ்கிருதம் கலந்த பொருள் விளங்காத பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். சுகாஷ், சுபாஷ், அகிலேஷ், நிரோஷ், நாகேஷ்,சொபீசன், மதீசன், அஜித்குமார், தனஞ்சன், ரஜீவன், தேனுஜன், விதுஷன், டிலக்ஷ்ன், ஸ்கந்தா, சுதாகரன், யசீந்திரன், யசிவண்ணன், வாகீசன், பவீ கோபிநாத், சகிலா, அனுஜா, சிந்துஜா, விம்சியா, விதூஷா, விதுசா, நீரஜப்பிரியா, யசீதா, யுரேனியா, ஜென்சிகா, தீபிகா, டிலானி, டிலோசினி, கஜிந்தினி, அபினோசா, அஸ்மிலா, பவீனா, சர்மிளா, தர்ஜிகா, ஷஜிதா, றோமிலா, றோஜனா, பிரசாளினி, நிரோஜினி. இந்தப் பெயர்கள் ஒரு யாழ்ப்பாணக் கல்லூரி முகநூலில் இருந்து திரட்டியவை. தமிழ்த் தேசியம் பேசும் பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்களை (ஜ,ஜி,ஷ,ஸ், ஸ்ரீ) சூட்டுகிறார்கள். பெயர்தான் ஒருவனது அல்லது ஒருத்தியின் அடையாளம். அதை நாம் இழந்து வருகிறோம். ஒரு முஸ்லிம் தனது பிள்ளைகளுக்கு பொறுக்கி எடுக்கப்பட்ட அராபு மொழிப் பெயர்களையே வைக்கிறான். அதில் மாற்றம் கிடையாது. அதன் காரணமாக உலகில் அதிகமானவர்களுக்கு உள்ள பெயர் மொகமது!

தமிழ்ப் பண்பாட்டை ஒழிப்பது தினமலர், துக்ளக் ஆக இருக்கலாம். ஆனால் தமிழர்களும் தமிழ்ப் பண்பாட்டை கைவிட்டு வருகிறார்கள். மொழி எங்களது அடையாளம். அது போலவே எமது பெயர்களும் எமது அடையாளம். பெயரை வைத்து ஒருவர் தமிழரா அல்லது தமிழர் அல்லாதவரா எனக் கண்டு பிடித்து விடலாம். இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர்கள் வைக்கிறார்கள். தமிழ்-சைவ கலாச்சாரத்தின் தலைநகரம் எனக் கொண்டாடும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு நாளேடு சிறுவர்களுக்கு சித்திரப் போட்டி நடத்துகிறது. அதில் கலந்து கொண்டு தரமான சித்திரங்களைத் தீட்டியவர்களது பெயர்களை வெளியிடுகிறது. அதில் காணப்பட்ட ‘தமிழ்’ப் பெயர்களில் உதாரணத்துக்குச் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியேஷ், பவிசான், கிதுஷா, அஷா, சகானா, சம்யுக்தா, கனுபன், திகேசன், ஜரினி, தர்சன், அவின்யா, அயிஷிகன், சிந்தூரிகா, அயினித், ஐகிஷ், ரஞ்சன்,  ரோஷித், ஹரிஷ், ஹரிஷ்மன், ரிஷானன், அக்சன்யா.

உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் இந்தச் சிறார்கள் தமிழர்களா?

புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் பிட்டு, தோசை, இட்லி சாப்பிடுவதில்லை. மாறாக பிற்சா, பேர்கர், சான்ட்விச் சாப்பிடுகிறார்கள்!

இந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் தேர்வில்  வடக்கு மாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198),

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195),

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாவணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195),

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.


அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி முரளிதரன் அஸ்விகன் (196), வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா (196),
கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் இல.1 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரன் நிதுசன் (195),
மன்னார் மாவட்டத்தில் சென்.சேவியர் பெண்கள் கல்லூரி மாணவி ரவீந்திரன் றொசானா சைலின் (195)
ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் வடமாகாண கல்வி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தி எய்திய மாணவ, மாணவிகளின் பெயர்களில் ஒன்றேனும் தமிழ் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதில் ஏதாவது பொருள் உண்டா? புதுமை செய்கிறோம் என நினைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம் புறமாகப் பெயர்களை வைத்து தமிழ்மொழிக்கு கேடு தேடுகிறார்கள்.

HTML clipboard

முகேஸ், சுப்பிரமணி, ராவன்யா, மகிஷா, சுவர்ணா, கணேஷ், அக்க்ஷன், மதுபாலா, வைஸ்ணவி, உத்தரா, ரிஷா, ஜரிஷ, சாரங்கா, ரஜனி, வாசதேவன், ஜெயமூர்த்தி, உத்தரா, நர்த்தனா, ராவன்யா, சகிலன், சினேகா, கவினாளி………

தமிழ்த் தேசியம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். தமிழ்மொழி வாழ்த்துப் பாடுகிறார்கள். ஆனால் தமிழ்ப் பெற்றோர்கள் புதுமை என்ற போர்வையில் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர் வைக்கிறார்கள். அவற்றை எங்கிருந்து பொறுக்குகிறார்களோ யாம் அறியோம். சமற்கிருத்த எழுத்துக்களான ஹ,ஸ்ரீ, ஜ,ஸ,ஷ  போன்றவற்றில் பெற்றோர்களுக்கு அளவுகடந்த மோகம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் ஒரு கவிதைப் போட்டி நடந்தது. அதில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு இருந்தன:

அபிநயா, பிரதாயினி, நிறோசனா, கரஜன்,

டிலுக்கா, சத்யசனாதன், நிசாந்தினி,  பவிசாயினி,

அபிவர்மன், லோஜினி, ஜிஸ்ணுகா,தர்சினி, சோபிகா,

நிலுக்ஷனா, ரானுகா, பாரதப்பிரியா, சுதர்ணியா, ஸ்ரீலங்கரூபன் ஜஸ்மிகா,

ரானுகா, அபிவர்ணா, சரணியா, புஸ்பராசா, சிந்துஜா, சக்தீனா, யகிர்தா, 

நருமதா, கோஜியா நவரூபன், தவேதன், மாதுரி, அஸவினா,  ஹிருத்திக், மேருயா,

பானுஜன், பிருந்தாஜினி, சாருஜா, ஹிசோன்.

இரண்டே இரண்டு பெயர்கள் மட்டும் தமிழில் இருந்தன.
 

தமிழ்வாணி, தமிழினி.

போலித்தேசியம் பேசுபவர்களின் பார்வைக்கு  முன்வைக்கப்படுகிறது. 

3000/- :- அன்னலிங்கம் அபிநயா,
நாவற்கிணற்றடி,
குப்பிளான் தெற்கு,
குப்பிளான்.
2ம் பரிசு – 2000/- :- அம்பிகை சண்முகலிங்கம்,
அம்பலவாணர் பாதை,
திருநெல்வேலி.
3ம் பரிசு – 1000/- :- இம்தியாஸ் பாத்திமா இன்´பா
4/சி /2,
மடவலி றோட்,
பொல்கொல்ல
2. பெரியவர்களுக்கானது (வயது எல்லை கிடையாது)
“”முகத்தின் முகவரிகளைத்
தொலைத்தோம்….”
1ம் பரிசு – 5000/- :- பிரதாயினி ஸ்ரீராகவராஜன்,
35பி, விவேகானந்தா வீதி,
கொழும்பு – 06
2ம் பரிசு – 3000/- :- லோ.மேரி நிறோசனா,
தாதியர் பயிற்சி கல்லூரி,
யாழ்ப்பாணம்.
3ம் பரிசு – 1000/- :- ஏ.கரஜன்,
சண்டிலிப்பாய் வடக்கு,
சண்டிலிப்பாய்.

அமரர் பேணாட் மதுரநாயகம் நினைவுக்கவிதைப் போட்டியில் பெருமெண்ணிக்கையான போட்டியாளர்கள் பங்குபற்றியமை
யையிட்டு நினைவுப்போட்டிக்குழுவினர் பெருமகிழ்வு அடைவதுடன் தாங்கள் தமிழ் மீதும், கவிதை மீதும் கொண்டிருக்கும் அன்பையும்,
ஆதரவையும் கெளரவிக்கும் வகையில் மிகச்சிறந்த 25 போட்டியாளர்களுக்கு சான்றிதழ் கெளரவத்தை வழங்கி கெளரவிக்கின்றோம்.
மேற்படி வெற்றியாளர்களின் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை 24.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு காலைக்கதிர்
அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
கெளரவ சான்றிதழ் பெறுவோர்
“”கை கழுவினார்கள்…..”
01. பவானந்தமூரத்தி சங்கவி, யா/இணுவில் மத்தியகல்லூரி
02. ஜெ.தவேதன், தொட்டிலடி,சங்கானை
03. மோ.மாதுரி, யா/வேலணை மத்திய கல்லூரி
04. ம.ஹிருத்திக், –
05. ய்ழிமிஜுஷ்துழி ரீeeஐழி, ம்ஜுழிrதுழிஸ்ரீற்rஷ்தீழி, லுழிஐdதீ
06. பா.அஸ்வினா, –
07. மதியாபரணம் மேருயா, மன்/இலுப்பைக் கடவை தமிழ்மகா
வித்தியாலயம்.
08. பா.அபிநயா –
09. ம.பானுஜன் –
 

டிலுக்கா, சத்யசனாதன், நிசாந்தினி,  பவிசாயினி, அபிவர்மன், லோஜினி, ஜிஸ்ணுகா,தர்சினி, சோபிகா, நிலுக்ஷனா, ரானுகா, பாரதப்பிரியா, சுதர்ணியா, ஸ்ரீலங்கரூபன் ஜஸ்மிகா,ரானுகா, அபிவர்ணா, சரணியா, புஸ்பராசா, சிந்துஜா, சக்தீனா, யகிர்தா,  நருமதா, கோஜியா நவரூபன், கரஜன்,

தமிழ்வாணி, தமிழினி,

10. பிருந்தாஜினி புவனேந்திரன், யா/ வேம்படி மகளிர் உயரதர
பாடசாலை
11. மோ.சாருஜா, இல. 46/02, விநாயகர் வீதி, நல்லூர் வடக்கு,
யாழ்ப்பாணம்.
12. வேலாயுதபிள்ளை ஹிசோன், நாவற்காடு, வரணி.
13. ம.டிலுக்´கா, கிராம்புவில், சாவகச்சேரி.
14. சரணிகா புவீந்திரன், அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.
15. ப.கயலினி, இல.எம்3, மாவடி, இராமநாதபுரம், கிளிநொச்சி.
16. சத்தியகுமார் தமிழினி, புகழேந்திநகர, நமணங்குளம்,
துணுக்காய், முல்லைத்தீவு.
17. சந்திரகுமார சரண்யா, சரவணை மேற்கு, வேலணை
18. ற.சத்யசனாதன், சாயி இல்லம், அரசடி வீதி, தாவடி வடக்கு,
கொக்குவில்
19. ரவிச்சந்திரன் நிசாந்தினி, 8ம் வட்டாரம், வேலணை மேற்கு,
வேலணை
20. சிவசுந்தரம் பவிசாயினி, அச்சுவேலி தெற்கு
21. வினாயகமூர்த்தி அபிவர்மன், மூங்கிலாறு வடக்கு,
உடையாரகட்டு, முல்லைத்தீவு
22. கிருஸ்ணகுமார லோஜினி, இல. 19/1, தாளையடி லேன்,
யாழ்ப்பாணம்
23. குகேந்திரன் ஜிஸ்ணுகா, டாக்டர்.செல்லத்துரை வீதி,
சங்கரத்தை, வட்டுக்கோட்டை
24. விவேக்கா சற்குணேஸ்வரன், இல. 47, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
01. தர்சினி ஞானேந்திரன், இல. 30, கிருஸ்ணபிள்ளை வீதி,
ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம்
02. டி.அகல்யா, இல. 66/5, 5ம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்.
03. ஸ்ரீ.சோபிகா, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை
04. நிலுக்´னா சந்திரகுமார், கலட்டி வீதி, கொக்குவில் மேற்கு,
கொக்குவில்
05. க.பேரின்பநாயகம், இல. 17/1, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
06. ரானுகா கண்ணன், ஞானாசாரியார் வீதி, துன்னாலை மேற்கு,
கரவெட்டி
07. சே.யோசப்பாலா, இல. 10/2, மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணம்.
08. நா.பாரதப்பிரியா, இல. 111/4, கந்தசாமி கோவில் வீதி,திருமலை
09. ர.மதுமிதன், இல. 158/79, குட்செட் வீதி, வவுனியா.
10. தம்பிராசா சுதர்ணியா, பழைய பேக்கரி வீதி, நாகபுரம், மகிழூர்,
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
11. அ.சேவியர் றவ்பாயயல், ஐயனார வீதி, சுன்னாகம்.
12. வ.சசிகுமார், செல்வபுரம், கச்சாய்வெளி,பளை.
13. ஸ்ரீலங்கரூபன் ஜஸ்மிகா, வுல்லியாவத்தை, கரணவாய்
மேற்கு, கரவெட்டி
14. அபிவர்ண்ணா வினாயகமூர்த்தி, மூங்கிலாறு வடக்கு,
உடையாரகட்டு, முல்லைத்தீவு
15. கே.எஸ்.சிவஞானராஜா, இல. 115/1, ஆடியபாதம் வீதி,
கொக்குவில் மேற்கு, கொக்குவில்
16. எஸ்.கே.கணேசவேல், பிரசித்த நொத்தாரிஸ், இல. 25,
ஓட்டுமடம் வீதி, யாழ்ப்பாணம்
17. ச.சரணியா, இல. 36/16, ஜே.சுமேதகமே, திருகோணமலை
18. புஸ்பராசா கோபிகா, சாந்தா வீதி, தையிட்டி, காங்கேசன்துறை.
19. சிவராமலிங்கம் சிந்துஜா, 4ம் வட்டரம், கோம்பாவில்,
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
20. செ.சக்தீனா, ஊரெழு கிழக்கு, ஊரெழு.
21. யிகிர்தா சந்திரசேகரன், பொன்னாலை வீதி, மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
22. டி.தமிழ்வாணி, பேராதனைப்பல்கலைக்கழகம், கண்டி
23. நருமதா சாரங்கன், அமுதசுரபி பாடசாலை வீதி, நெல்லயடி,
கரவெட்டி
24. கோஜியா நவரூபன், இல. 273/07, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
25. இந்திரன், சூரிச், சுவிற்சர்லாந்து

தினம் – நாள்

தினமும் – நாளும் / நாள்தோறும்

(‘நாடோறும்’ என்பது சரியான புணர்ச்சி வடிவம்!)

திதி – (திங்கள்) கலை

வாரம் – கிழமை

பட்சம் / பக்கம் / பக்கம் – (சுக்ல பட்சம்) வளர்பிறை / (கிருஷ்ணபட்சம்) தேய்பிறை

மாதம் / மாசம் – திங்கள்

வருஷம் – ஆண்டு

ருது – பருவம்

மத்யானம் – நண்பகல் (நன்பகல் அல்ல! ‘நள்’ – நடு)

சாயங்காலம் – மாலை / எற்பாடு (எல் – பகலவன்)

ராத்திரி – இரவு / அல் / கங்குல்

சமயம் – வேளை / நேரம்

புதன் – அறிவன்

சனி – காரி

(மற்ற கிழமைப் பெயர்கள் தமிழில்தான் வழங்குகின்றன!)

வானியல் / சூழல்:

சூரியன் – கதிரவன் / பகலோன் / பகலவன் / ஞாயிறு

சந்திரன் – மதி / திங்கள்

(‘நிலா’ என்பது திங்களின் ஒளி, ஞாயிற்றின் ஒளி ‘வெயில்’)

நட்சத்திரம் / நக்ஷத்ரம் / தாரகை – மீன் / வீண்மீன் / நாள்மீன்

கிரகம் – கோள் / கோள்மீன்

பிரபஞ்சம் – அண்டம் / பேரண்டம்

ஆகாயம் – வெளி / விண்

ககனம் – வானம்

மேகம் – முகில் / மஞ்சு / கொண்மூ / கார்

லோகம் / புவனம் / பூமி / தரணி – உலகம் / ஞாலம் / புவி / தரை / நிலம் / பார்

அக்னி – தீ

ஜ்வாலை / சுவாலை – நெருப்பு (அனல் / தணல் / கனல்)

ஜலம் / தீர்த்தம் – நீர்

வாயு – வளி / காற்று

(தென்றல் / வாடை)

திசை – திக்கு

உடல்:

சிரம் / சிரசு – தலை

கரம் / புஜம் – கை

நேத்ரம் / நயனம் – கண்

இரத்தம் – குருதி / செந்நீர்

பாதம் – கால் / அடி

கண்டம் – கழுத்து

நகம் – உகிர்

அகரம் / உதடு (ஓஷ்டகம்) – இதழ்

தந்தம் – பல்

கேசம் – மயிறு / தலைமுடி

வதனம் – முகம்

நாசி – மூக்கு

மொழி:

வார்த்தை – சொல்

வாக்கியம் – தொடர் (சொற்றொடர்)

பாஷை – மொழி / பேச்சு / உரை

அர்த்தம் – பொருள்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள்

அகதி – ஏதிலி
அக்கினி நட்சத்திரம் – எரிநாள்
அங்கவஸ்திரம் – மேலாடை
அங்குலம் – விரலம்
அசரீரி – உருவிலி
அஞ்சலி – கும்பீடு, இறுதி வணக்கம்
அத்தியாவசியம் – இன்றியமையாமை
அதிகாரபூர்வம் – அதிகாரச் சான்று
அதிசய மனிதர் – இறும்பூதாளர்
அதிர்ஷ்டம் – ஆகூழ்
அத்வைதம் – இரண்டன்மை
அநேக – பல
அநேகமாக – பெரும்பாலும்
அந்தரங்கம் – மருமம், கமுக்கம், மறைமுகம்
அந்தஸ்து – தகுதி
அபயம் – ஏதம், கேடு
அபராதம் – தண்டம்
அபாயம் – இடர்
அபிப்ராயம் – கருத்து, ஏடல்
அபிமானம் – நல்லெண்ணம்
அபிவிருத்தி – மிகுவளர்ச்சி
அபிஷேகம் – திருமுழுக்கு
அபூர்வம் – அருமை
அப்பியாசம் – பயிற்சி
அமரர் – நினைவில் உரை, காலஞ் சென்ற
அமாவாசை – காருவா
அமோகம் – மிகுதி
அரபிக்கடல் – குட கடல்
அராஜகம் – அரசின்மை
அர்ச்சகர் – வழிபாட்டாசான்
அர்த்தம் – பொருள்
அலட்சியம் – புறக்கணிப்பு
அவசகுனம் – தீக்குறி
அவசியம் – வேண்டியது, தேவை
அவதாரம் – தோற்றரவு
அவயவம் – உடலுறுப்பு
அற்புதம் – இறும்பூது, நேர்த்தியான
அனுபல்லவி . துணைப் பல்லவி
அனுபவம் – பட்டறிவு
அனுபவித்தல் – நுகர்தல்
அனுமானம் – உய்த்துணர்வு
அனுஷ்டி – கடைபிடி, கைக்கொள்
அன்னாசி – செந்தாழை
அன்னியம் – அயல்
அஸ்திவாரம் – அடிப்படை
 ஆகாய விமானம் – வானூர்தி
ஆகாரம் – உணவு, உண்டி
ஆசனம் – இருக்கை
ஆசித்தல் – விரும்புதல்
ஆசிர்வாதம் – வாழ்த்து
ஆச்சரியம் – வியப்பு
ஆச்சாரம் – ஒழுக்கம்
ஆடம்பரம் – பகட்டு
ஆடி (மாதம்) – கடகம்
ஆட்சேபனை – மறுப்பு, தடை
ஆதங்கம் – மனக்கவலை
ஆதரவு – அரவணைப்பு, களைகண்
ஆதரி – தாங்கு, அரவணை
ஆதாரம் – நிலைக்களம்
ஆத்திசம் – நம்புமதம்
ஆத்திரேலியா – தென்கண்டம்
ஆபத்து – இடுக்கண், இடையூறு
ஆபரணம்- அணிகலன்
ஆப்பிள் – அரத்தி
ஆமோதி – வழிமொழி
ஆயத்தம் – அணியம்
ஆயுள் – வாழ்நாள்
ஆரம்பம் – துவக்கம், தொடக்கம்
ஆரோகணம் – ஆரோசை
ஆரோக்கியம் – உடல்நலம்
ஆலாபனை – ஆளத்தி
ஆலோசனை – கருத்து
ஆவணி (மாதம்) – மடங்கல்
ஆனந்தம் – மகிழ்ச்சி, களிப்பு
ஆனி (மாதம்) – ஆடவை
ஆன்மா (ஆத்மா) – ஆதன்
ஆஸ்தி – செல்வம்
ஆஷேபி – தடு
 

இங்கிதம் – குறிப்பு, குறிப்பறிதல்
இதிகாசம் – மறவனப்பு
இந்திரன் – வேந்தன்
இந்தியா – நாவலம்
இந்துக்கள் – தென் மதத்தார்
இமயமலை – பனிமலை
இரகசியம் – மந்தணம்
இரசவாதம் – பொன்னாக்கம்
இராசதம் – மாந்திகம்
இராசி – ஒப்புரவு
இராஜேந்திரன் – அரசேந்திரன்
இருதயம் – நெஞ்சம்
இலட்சியம் – குறிக்கோள்
இலட்சுமி – திருமகள்
இஷ்டம் – விருப்பம்
ஈஸ்வரன் – இறைவன்
 

உச்சரிப்பு – பலுக்கல்
உத்தியோகம் – அலுவல்
உத்தேசம் – மதிப்பு
உபகாரம் – நன்மை
உபச்சாரம் – வரவேற்பு
உபதேசம் – ஓதுவம்
உபதேசியார் – ஓதுவார்
உபயம் – கொடை (நன்கொடை)
உபவாசம் – உண்ணா நோன்பு
உபாத்தியாயர் – ஆசிரியர்
உபாயம் – ஆம்புடை, சூழ்ச்சி
உல்லாசம் – மகிழ்ந்திருத்தல்
உலோகம் – மாழை
உலோபி – இவறி
உற்சாகம் – ஊக்கம்
உஷ்ணம் – வெப்பம்
ஊர்ஜிதம் – உறுதி
 

  • எஜமான் – தலைவன், முதலாளி
  • ஏக்கர் – குறுக்கம்
  • ஏதேன் தோட்டம் – கனிமரக்கா தோட்டம்
  • ஐப்பசி (மாதம்) – துலாம், துலை
  •  

கதாபாத்திரம் – நடிகலம்
கருணாநிதி – அருட்செல்வன்
கருணை – அருள்
கருமி – கஞ்சன்
கர்நாடக சங்கீதம் – தமிழிசை
கர்வம் – செருக்கு
கர்ஜனை – முழக்கம்
கலாநிதி – கலைச்செல்வன்
கவி – பாட்டு, செய்யுள்
கவியோகி – பாவோகி
கஷ்டம் – துன்பம்
கிருபை – இரக்கம்
 

காரணம் – கரணியம்
காரியம் – கருமியம்
கார்த்திகேயன் – அரலன்
கார்த்திகை (மாதம்) – நளி
கார்த்திகை (விண்மீன்) – ஆரல்
காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்
காளமேகம் – கார்முகில்
 

கிருபை – அருள்
கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
 

கோத்திரம் – சரவடி
கோவனம் – நீர்ச்சீலை
 

சகலம் – எல்லாம்
சகலன் – ஓரகத்தான்
சகஜம் – வழக்கம்
சக்தி – ஆற்றல்
சகாப்தம் – ஆண்டுமானம்
சகுனம் – குறி
சகோதரன் – உடன்பிறந்தான்
சக்கரவர்த்தி – பேரரசன், மாவேந்தன்
சங்கடம் – தொல்லை, இடர்ப்பாடு
சங்கம் – கழகம்
சங்கற்பம் – மனவுறுதி
சங்கிலி – தொடர், இருப்புத் தொடர்
சங்கீதம் – இன்னிசை
சட்னி – துவையல்
சதி – சூழ்ச்சி, கெடுப்பு
சத்தம் – ஓசை, ஒலி
சத்தியம் – உண்மை
சத்துரு – பகைவன்
சந்ததி – வழி மரபு, பிறங்கடை
சந்தர்ப்பம் – சமயம், சூழல்
சந்திரன் – மதி, நிலை
சந்தேகம் – ஐயம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
சந்நிதி – முன்னிலை
சந்நியாசி – துறவி
சப்போட்டா – உருளையன்
சமத்துவம் – சமன்மை
சமாச்சாரம் – செய்தி
சமீபம் – அண்மை
சமுதாயம் – குமுகாயம்
சமுத்திரம் – வாரி, பெருங்கடல்
சமூகம் – இனத்தார்
சம்பந்தம் – தொடர்பு
சம்பவம் – நிகழ்ச்சி, நிகழ்வு
சம்பாஷனை – உரையாட்டு
சம்பிரதாயம் – சடங்கு
சம்பூரணம் – முழு நிறைவு
சரஸ்வதி – கலைமகள்
சரணம் – அடைக்கலம்
சரீரம் – உடம்பு
சர்பத்து – மட்டு
சர்வதேசம் – பன்னாடு
சல்லாபம் – உரையாட்டு (களிப்புடன்)
சவால் – அறைகூவல்
சனி –காரி
சன்மார்க்கம் – நல்வழி
சஷ்டி – அறமி
 

சாட்சி – சான்று, சான்றாளர்
சாதகம் – சார்பு
சாதம் – சோறு
சாதாரணம் – பொதுவகை
சாதனை – வெற்றிச் செயல்
சாதனையாளர் – ஆற்றலாளர்
சாந்தம் – சமந்தம், அமைதி
சாபம் – சாவம்
சாமானியன் – எளியவன்
சாலகம் – சாய்கடை
சாஸ்திரம் – கலை நூல்
 

சிங்காசனம் – அரியணை
சித்தாந்தம் – கொண்முடிபு
சித்திரவதை – நுண் சிதைப்பு
சித்திரா பௌர்ணமி – மேழ வெள்ளுவா
சித்தரிரை (மாதம்) – மேழம்
சித்திரை (விண்மீன்) – அறுவை
சிநேகிதம் – நட்பு
சிந்தனை – எண்ணுதல், கருதுதல்
சிபாரிசு – பரிந்துரை
சிப்பந்தி – பணியாளர்
சிலுவை – குறுக்கை
சின்னச்சாமி – சின்னாண்டான்
சீக்கிரம் – விரைவு
சீலர் – மேலோர்
 

சுகம் – நலம், உடல் நலம்
சுகவீனம் – உடல் நலக்குறைவு
சுதந்திரம் – விடுதலை, உரிமை
சுத்தம் – துப்புரவு
சுந்தரம் – அழகு, அழகனார்
சுபம் – மங்கலம்
சுபாவம் – இயல்பு
சுமை – பொறை
சுயமரியாதை – தன்மானம்
சுயமாய் – தானாய்
சுயராஜ்யம் – தன்னாட்சி
சுரணை – உணர்ச்சி, உணர்வு
சுலபம் – எளிது
சுலோகம் – சொலவம்
சுவாசம் – மூச்சு
சுவாமி – ஆண்டவன், கடவுள்
சுவாமிகள் – அடிகள்
சுவீகாரம் – தெத்து
சூது – விகற்பம்
 

செல்வாக்கு – சாய்கால்
சேவகன் – இளயன்
சேவை – தொண்டு, ஊழியம்
சேனாபதி – படைத் தலைவன்
சேஷ்டை – குறும்பு
 

சைவ உணவு – மரக்கறி உண்டி
சைவம் – சிவனியம்
சொகுசு – மகிழ்வு
சொப்பனம் – கனா
சொரூபம் – உண்மை வடிவம்
சொர்க்கம் – விண்ணுலகு
 

சௌகரியம் – ஏந்து
சௌக்கியம் – உடல் நலம்
ஞாபகம் – நினைவு
ஞானம் – அறிவு
ஞானியார் – ஓதியார்
 

தசமி – பதமி
தட்சணாமூர்த்தி – தென்முக நம்பி
தட்சனபூமி – தென்புலம்
தட்சனை – காணிக்கை
தத்துவம் – மெய்ப்பொருள்
தந்தம் – மருப்பு
தந்திரம் – வலக்காரம்
தயவு – இரக்கம்
தயார் – அணியம்
தருமம் – அறம்
தருமசங்கடம் – அறத்தடுமாற்றம்
தருணம் – சமயம்
தற்காலிகம் – இடைக்காலம்
தனுசு – சிலை
 

தாசி – தேவரடியாள்
தாரகமந்திம் – மூலமந்திரம்
தாவரம் – நிலைத்திணை
தானம் – கொடை
தானியம் – தவசம்
 

தியாக சீலன் – ஈகச் செம்மல்
தியாகம் – ஈகம்
தியாகி – ஈகி
தியானம் – ஊழ்கம்
திராட்சை – கொடி முந்திரி
திரிமூர்த்தி – முத்திருமேனி
திருப்தி – பொந்திகை
தினம் – நாள்
 

தீபாவளி பண்டிகை – விளக்கணி திருவிழா
தீர்க்கதரிசி – முற்காணி
தீபம் – சுடர்
தீட்சிதர் – தீர்க்கையர்
தீவிரவாதி – கொடுமுனைப்பாளி
 

துக்கம் – துயரம்
துப்பாக்கி – துமுக்கி
துர்க்கை – காளி
துரோகி – இரண்டகன்
துஷ்டன் – தீயவன்
 

தேகம் – உடல்
தேதி – பக்கல்
தைலம் – எண்ணெய்
தை (மாதம்) – சுறவம்
தைரியம் – துணிவு
 

நடராசன் – நடவரசன்
நட்சத்திரம் – வெள்ளி, விண்மீன்
நதி – ஆறு
நந்தி – காளை, விடை
நபி – முன்விளம்பியார்
நமஸ்காரம் – வணக்கம்
நரபலி- நரக்காவு
நவரசம் – தொண்சுவை
நஷ்டம் – இழப்பு
 

நாசம் – அழிவு, சேதம்
நாதசுரம் – இசைக்குழல்
நாதம் – ஒலி
நாத்திகம் – நம்பாமதம்
நாவல் – புதினம்
 

நிகண்டு – உரிச்சொற்றொகுதி
நிசப்தம் – அமைதி
நிச்சயம் – உறுதி
நித்தியானந்தம் – நித்திலின்பன்
நித்திரை – தூக்கம்
நியதி – நயன்மை
நியமி – அமர்த்து
நியாயம் – நேர்மை, முறை
நிருபணம் – மெய்ப்பு
நிர்ணயம் – தீர்மானம்
நிர்மூலம் – வேரறுப்பு
நிர்வாகி – ஆட்சியாளர்
நிஜம் – மெய், உண்மை
நீசபாஷை – இழிமொழி
நீதி – நயன்மை
நீதிக்கட்சி – நயன்மைக்கட்சி
 

பகதூர் – ஆண்டகை
பகிரங்கம் – வெளிப்படை
பக்குவம் – பருவம், தெவ்வி
பக்தன் – அடியான்
பக்தி – இறை நம்பிக்கை
பகிஷ்காரம் – புறக்கணிப்பு
பங்குனி (மாதம்) – மீனம்
பசலி – பயிராண்டு
பசு – ஆவு
பசுப்பால் – ஆவின் பால்
பஞ்சாங்கம் – ஐந்திரம்
பஞ்சாமிர்தம் – ஐயமது
பஞ்சேந்திரியம் – ஐம்புலன்
பதார்த்தம் – பண்டம், கறி
பதிலாக – பகரமாக
பத்திரிகை – இதழ், இதழிகை
பத்திரம் – ஆவணம்
பத்தினி – கற்புடையாள்
பத்மபூஷன் – தாமரைச் செல்வர்
பத்மவிபூஷன் – தாமரைப் பெருஞ்செல்வர்
பத்மஸ்ரீ – தாமரைத்திரு
பந்து – இனம்
பரதநாட்டியம் – தமிழ் நடம்
பரமாத்மா – பரவாதன்
பரம்பரை – தலைமுறை
பரவாயில்லை – தாழ்வில்லை
பரஸ்பரம் – தலைமாறு, இருதலை
பரிகாசம் – நகையாடல்
பரிகாரம் – கழுவாய்
பரியந்தம் – வரையில்
பக்ஷி – பறவை
பஜனை – தொழுகைப் பாடல்
 

பாகவதர் – பாடகர்
பாத்திரம் – கலம்
பாயாசம் – கன்னல்
பாரத ரத்னா – நாவன்மணி
பாரம் – சுமை, பொறை
பாவம் – கரிசு, அறங்கடை
பாவனை – உன்னம்
 

பிடிவாதம் – ஒட்டாரம்
பிரக்ஞை – உணர்ச்சி
பிரசங்கம் – சொற்பொழிவு
பிரசன்னம் – திருமுன்னிலை
பிரசாதம் – அருட்சோறு, திருச்சோறு
பிரச்சாரம் – பரப்புரை
பிரச்சினை – சிக்கல், தொல்லை
பிரபந்தம் – பனுவல் (கலை நூல்)
பிரபு – பெருமகன்
பிரதிபலன் – கைமாறு
பிரத்தியோகம் – தனிச்சிறப்பு
பிரமாணம் – அளவு, ஆணை
பிரயோகம் – ஆட்சி, வழங்கல்
பிராண வாயு – உயிர்வளி
பிராது – முறையீடு, வழக்கு
பிரியாணி – புலவு
 

புதன் – அறிவன் (கிழமை)
புரட்டாசி (மாதம்) – கன்னி
புராணம் – பழங்கதை
புராதனம் – பழமை
புரோகிதர் – சடங்காசிரியர்
 

பூசுரர் – நிலத்தேவர்
பூமத்திய ரேகை – நண்ணிலக்கோடு
பூமி – வையகம்
பூரணம் – முழுமை, நிறைவு
 

பெங்களூர் – வெங்காலூர்
பேட்டி – நேர்வுரை
போதி மரம் – அரச மரம்
 

மகத்துவம் – பெருமை
மகாசமுத்திரம் – மாவாரி
மகாத்மா – பேராதன்
மகாமகோபாத்தியாயர்- பெரும் பேராசிரியர்
மகாவித்துவான் – பெரும் புலவர்
மகிமை – மாண்பு, மாட்சிமை
மத்திய அரசு – நடுவணரசு
மத்திய தரைக்கடல் – நண்ணிலக்கடல்
மரியாதை – மதிப்புரவு
மனிதன் – மாந்தன்
 

மாசி (மாதம்) – கும்பம்
மாத்திரை (மருந்து) – முகிழம்
மார்கழி (மாதம்) – சிலை
மாலுமி – வலவன்
மாஜி – மேனாள்
 

மிதுனம் – ஆடவை
மிராசுதார் – பண்ணையார்
மிருதங்கம் – மதங்கம்
முகஸ்துதி – முகமன்
முகூர்த்தம் – முழுத்தம்
முக்கியமான – இன்றியமையாத
மூர்க்கன் – முரடன்
 

மேகம் – முகில்
மேஷம் – மேழம்
மேஜை – நிலை மேடை
மோசம் – கேடு, ஏமாற்றம்
மோட்சம் – பேரின்ப வீடு
மைத்துனர் – கொழுந்தன், அளியர்
மையம் – நடுவம்
 

யதார்த்தம் – உண்மை
யாகம் – வேள்வி
யுகம் – ஊழி
யுத்தம் – போர்
யோகம் – ஓகம்
யோகி – ஓகி
யோக்கியம் – தகுதி
யோசி – எண்ணு
 

ரகசியம் – மறை பொருள்
ரங்கராஜன் – அரங்கராசன்
ரசம் – மிளகு நீர்
ரதம் – தேர்
ரத்தம் – குருதி, அரத்தம்
ரத்தினம் – மணி
ரதி – காமி
ரம்பம் – வாள்
ராகம்- பண்
ராசி – ஓரை
ராணி – அரசி
ராவ்சாஹிப் – அராவ அண்ணல்
ராவ்பகதூர்- அராவ ஆண்டகை
ராஜாசர்- அரசவயவர்
ரிஷபம் – விடை
 

ருசி – சுவை
ரொட்டி – அப்பம்
 

லக்னம் – ஓரை
லஞ்சம் – கையூட்டு
லக்ஷ்மி – திருமகள்
லாபம் – ஊதியம்
லாயம் – மந்திரம்
 

லிங்கம் – இலங்கம்
லுங்கி – மூட்டி
லோபி – கருமி, இவறி
 

வசதி – ஏந்து
வசனம் – உரைநடை
வசூல் – தண்டல்
வம்சம் – மரபு
வயது – அகவை
வர்க்கம் – இனம்
வர்த்தகம் – வணிகம்
வருமானம் – சம்பளம்
வருஷம் – ஆண்டு
 

வாகனம் – ஊர்தி, இயங்கி
வாக்காளர் – நேரியாளர்
வாக்கு – சொல்
வாக்கு – தொடரியம்
வாக்குச்சீட்டு – குடவோலை, நேரி
வாசஸ்தலம் – இருப்பிடம்
வாதம் (நோய்) – வளி, ஊதை
வாதம் – தருக்கம், போராட்டு
வாரிசு – பிறங்கடை, வழி மரபு
வார்த்தை – சொல்
 

விகற்பம் – வேறுபாடு
விசனம் – வருத்தம் – துக்கம்
விசித்திரம் – வியப்பு
விசாரி – வினவு, உசாவு
விசுவாசம் – நம்பிக்கை
விசுவநாதம் – உலக நம்பி
விதி – நெறி
வித்தியாசம் – வேறுபாடு
விநோதம் – புதுமை
வியாபாரம் – வணிகம்
வியாப்தி – பரவல்
விரக்தி – பற்றின்பை
விரதம் – நோன்பு
விரோதம் – பகை
விவகாரம் – வழக்காரம்
விவசாயம் – பயிர்த் தொழில்
விவரம் – விளத்தம்
விவேகம் – அறிவுடைமை
விஷம் – நஞ்சு
விஷேசம் – சிறப்பு
விஸ்தீரனம் – பரப்பு
 

வீதம் – மேனி
வீதி – தெரு
வேசி – விலைமகள்
வேதம் – திருமறை
வைகாசி – விடை
வைணவம் – திருமாலியம்
வைத்தியம் – மருத்துவம், பண்டுவம்
 

ஜமீன்தார் – குருநில மன்னர்
ஜம்பம் – தற்பெருமை
ஜலம் – தண்ணீர்
ஜலதோஷம் – நீர்க்கோவை
ஜல்தி – விரைவு
ஜவான் – இளயன்
ஜனன மரணம் – பிறப்பு இறப்பு
ஜன்னல் – பலகணி
ஜாக்கிரதை – விழிப்பு, எச்சரிக்கை
ஜாதகம் – பிறப்பியம்
ஜாதி – குலம்
ஜாமம் – யாமம்
 

ஜீரணம் – செரிமானம்
ஜீவனம் – பிழைப்பு
ஜீவன் – உயிர்
ஜீவியம் – வாழ்க்கை
ஜெயம் – வெற்றி
ஜென்மம் – பிறவி
 

ஜோசியர் – கணியர்
ஜோதிடம் – கணியம்
ஷோக்கு – பகட்டு, தளுக்கு
 

Acknowledgement – பெறுகைச் சீட்டு
Acre – குறுக்கம்
Agent – முகவர்
Air-condition – செந்தனப்பு
Air-condition room – செந்தனக் கட்டுப்பாட்டு அறை
Alarm – எழுப்பு மணி
Apple – அரத்தி
Appointment Order – அமர்த்தோலை
Atlas – ஞாலப்படப் புத்தகம்
Attestation – ஒப்பிட்டுச் சான்று
Aeroplane – வானூர்தி
 

Bacteria – குச்சிப்பூச்சி
Banian – உள்ளொட்டி
Bank – வைப்பகம்
Biscuit – ஈரட்டி
Bishop – மேற்காணியர், கண்காணியர்
Blood – அரத்தம், குருதி
Boiler – வேம்பான்
Bonus – நன்னர்
Book – Keeping – கணக்கு வைப்பு
Botany – நிலைத்திணை
Brake – தகைப்பான்
Bulb – குமிழி
Bungalow – வளமனை
Bureau – நிலைப்பேழை
Bus – பேரியங்கி
 

Cake – பணியம்
Camp – பாளயம்
Capsule – முகிழம்
Case – வழக்கு
Ceiling Fan – முகட்டு விசிறி
Cement – சுதைமா
Census – குடிமதிப்பு
Century – நூற்றகம்
Certificate – சான்றிதழ்
Chain – தொடரி
Champion – ஆற்றலாளர்
Cheque – காசோலை
Circus Show – வட்டரங்குக் காட்சி
Club – மன்றம், மகிழ்மன்றம்
Coat – குப்பாயம்
Coffee – குளம்பி
Communism – கூட்டுடமை
Concrete – கற்காரை
Conduct Certificate – நன்நடத்தைச் சான்றிதழ்
Congress Party – பேராயக் கட்சி
Contonement – படை வீடு
Convent – கன்னித்துறவியர் மடம்
Course – கடவை
Crown – மணிமுடி
Cyber – சுன்னம், சுழி
Cycle – மிதிவண்டி
 

Delegate – விடை முகவர்
Deposit – இட்டு வைப்பு
Dictionary – அகர முதலி
Director – இயக்குநர், நெறியாளர்
Doctor (Medical) – பண்டுவர் (மருத்துவர்)
Doctor (Scholar) – பண்டாரகர் (அறிஞர்)
Dozen – எல்லன்
Draft – வரைவோலை
 

Easy Chair – சாய் நாற்காலி
Encyclopaedia Britanica – பிரிதானியக் கலைக்களஞ்சியம்
Engaged – ஈடுபாடுள்ளது
Engineer – பொறியாளர்
Equal – ஒத்த, சம
Equivalent – நிகர்மதிப்பான்
Evidence – சான்று
Experience – பட்டறிவு
Express – விரைவான்
 

Faith – நம்பகம
Fiddle – கின்னரி
Fortnightly – அரைமாதிகை
Fountain Pen – ஊற்றுத்தூவல்
Fruit Salad – பழக்கூழ
Furlong – படைச்சால
Funnel – வைத்தூற்றி
 

Grape – கொடி முந்திரி
Gun – துமுக்கி
 

Hearing – கேட்பாடு
His Excellencey – மேதகு
His Highness – மேன்மைமிகு
His Holiness – தவத்திரு
His Majesty – மாட்சிமிகு
Horlicks – பான்மா
Hotel – உண்டிச்சாலை
Hybrid – இருபிறப்பி
Hydrogen – நீர்வளி
 

Idea – ஏடல்
Index – பொருளட்டவணை
Inspector – உள்னோட்டகர்
Intermediate – இடைநடு
Interview – நேர்காணல்
 

Jeep – மலையியங்கி
Judge – தீர்ப்பாளர்
Justice Party – நயன்மைக் கட்சி
 

Key – திறவுகோல்
Kilo – அயிரம்
Kilometre – அயிரமாத்திரி
 

Late – மேனாள்
Layout – இடுவமைப்பு
Lift – மின்தூக்கி
Limited – மட்டிட்டது
Logic – ஏரணம்
Lorry – சரக்கியங்கி
 

Machine – பொறி
Memorandum – நினைவுக்குறிப்பு
Memento – நினைவுப் பரிசு
Metal – மாழை
Microscop – நுண்காட்டி
Milkmaid – இடைச்சி
Miracle – இறும்பூது
Mission – விடையூழியம்
Mixer – கலவை
Money Order – பணவிடை
Monthly – மாதிகை
 

Nation – நாடு
Nationality – நாட்டினம்
Nile River – நீல ஆறு
Non-Vegetarian Food – புலால் உணவு
 

Orange – நரந்தம்
Order – ஏவம்
Organizer – அமைப்பாளர்
Ovaltin – முட்டை வடிவி
Oxford University – எருதந்துறைப் பல்கலைக்கழகம்
Oxigen – உயிர்வளி
 

Pacific Ocean – அமைதி மாவாரி
Passport – கிள்ளாக்கு, கடவுச்சீட்டு
Pen – தூவல்
Pencil – கரிக்கோல், எழுதுகோல்
Pendulum – தொங்கட்டான்
Peon – ஏவலர
Personification – ஆட்படுத்தம்
Petrol – கன்னெய்
Plan – திட்டம்
Platinum Jubilee – ஒள்ளி விழா
Pleasure Car – இன்னியங்கி
Post Office – அஞ்சலகம்
Practial – புரிவியல், நடைமுறை
Prayer – மன்றாட்டு
Problem – சிக்கல்
Project – வினைத்திட்டம்
 

Radium – கதிரியம்
Ready – அணியம்
Red Cross – செங்குறுக்கை
Refrigirator – தண்மி
Representative – படிநிகராளி
Reverend (Rev) – அருட்திரு
Rickshaw – இழுவண்டி
Rose – முளரி
Rose Milk – செம்பால்
 

Sacrifice – ஈகம்
Savage – விலங்காண்டி
Seat – இருக்கை
Shaving – முகம் மழித்தல், முகம் மழிப்பு
Sir – வயவர்
Soap – சவர்க்காரம்
Society – கழகம்
Sofa – மெத்தை இருக்கை
Squad – சதளம்
Stainless Steel – வெள்ளிரும்பு
Stamp – அஞ்சல் தலை, முத்திரை
Stool – முட்டான்
Sub-Divison – உட்பிரிவு
Summer Season – வேனிற்காலம்
Surgeon – அறுவையர்
Suspenson – இடைநீக்கம்
Sweater – வேர்ப்பான்
Syllabus- பாடப்பட்டி
 

Table – நிலைமேடை (மேசை)
Taperecorder – நாடாப்பதிவான்
Tea – தேனீர், கொழுந்துநீர்
Theory – தெரிவியல்
Thesis – இடுநூல்
Telegram – தொலைவரி
Toilet – கழிப்பறை
Train – தொடர்வண்டி
Treatment – பண்டுவம்
Tubelight – குழாய் விளக்கு
Tumbler – குவளை
Typoid – குடற்காய்ச்சல்
 

Undergo – ஊறுபாடு
Univeristy Chancellor – பல்கலைக்கழக வேந்தர்
Urgent – சடுத்தம்
 

Vegetarian Food – மரக்கறி உணவு
Vice-Chanceller – துணைவேந்தர்
Visa – அம்பகம் Volume – மடலம்
Vote – நேரி, குடவோலை
Vulgar – இடக்கர்
 

Waybill – கடத்தச்சாத்து
Weekly – கிழமையன்
Will – வேண்முறி
Window – பலகனி
 

Youth – இளந்தை
Zero – சுன்னம், சுழி
Zoo – விலங்கினச் சாலை

சமஸ்கிருதத்தில்: “ஏகம் சத், விப்ர பஹூத வதந்தி,” இதுவே தமிழில் “உண்மை ஒன்றே, ஞானிகள் அதை பல்வேறாக வருணிக்கின்றனர்.”
 
 

  • அகங்காரம் – செருக்கு
  • அக்கிரமம் – முறைகேடு
  • அசலம் – உறுப்பு, மலை
  • அசூயை – பொறாமை
  • அதிபர் – தலைவர்
  • அதிருப்தி – மனக்குறை
  • அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
  • அத்தியாவசியம் –இன்றியமையாதது
  • அநாவசியம் -வேண்டாதது
  • அநேகம் – பல
  • அந்தரங்கம்- மறைபொருள்
  • அபகரி -பறி, கைப்பற்று
  • அபாயம் -இடர்
  • அபிப்ராயம் -கருத்து
  • அபிஷேகம் -திருமுழுக்கு
  • அபூர்வம் -அரிது ,அரிய
  • அமிசம் -கூறுபாடு
  • அயோக்கியன் -நேர்மையற்றவன்
  • அர்த்தநாரி -உமைபாகன்
  • அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
  • அர்த்தம் -பொருள்
  • அர்த்த ஜாமம் – நள்ளிரவு
  • அர்ப்பணம் -படையல்
  • அலங்காரம் -ஒப்பனை
  • அலட்சியம் – புறக்கணிப்பு
  • அவசரமாக – உடனடியாக, விரைவாக
  • அவஸ்தை – நிலை, தொல்லை
  • அற்பமான – கீழான, சிறிய
  • அற்புதம் – புதுமை
  • அனுபவம் – பட்டறிவு
  • அனுமதி – இசைவு

  • ஆச்சரியம் – வியப்பு
  • ஆக்ஞை – ஆணை, கட்டளை
  • ஆட்சேபணை – தடை, மறுப்பு
  • ஆதி – முதல்
  • ஆபத்து – இடர்
  • ஆமோதித்தல் – வழிமொழிதல்
  • ஆயுதம் – கருவி
  • ஆரம்பம் -தொடக்கம்
  • ஆராதனை -வழிபாடு
  • ஆரோக்கியம் – உடல்நலம்
  • ஆலோசனை – அறிவுரை
  • ஆனந்தம் – மகிழ்ச்சி

  • இஷ்டம் – விருப்பம்
  • இங்கிதம் – இனிமை

  • ஈன ஜன்மம் – இழிந்த பிறப்பு
  • ஈனஸ்வரம் – மெலிந்த ஓசை

  • உக்கிரமான – கடுமையான
  • உபசாரம் – முகமன் கூறல்
  • உபயோகம் – பயன்
  • உதாசீனம் – பொருட்படுத்தாமை
  • உத்தரவாதம் – பிணை, பொறுப்பு
  • உத்தரவு – கட்டளை
  • உல்லாசம் – களிப்பு
  • உற்சாகம் – ஊக்கம்

  • ஐதீகம் – சடங்கு, நம்பிக்கை

  • கர்ப்பக்கிருகம் – கருவறை
  • கர்மம் – செயல்
  • கலாச்சாரம் – பண்பாடு
  • கலாரசனை – கலைச்சுவை
  • கல்யாணம் – மணவினை, திருமணம்
  • கஷ்டம் – தொல்லை, துன்பம்
  • கீதம் – பாட்டு, இசை
  • கீர்த்தி – புகழ்
  • கீர்த்தனை- பாமாலை, பாடல்
  • கோஷம் – ஒலி

  • சகலம் – எல்லாம், அனைத்தும்
  • சகஜம் – வழக்கம்
  • சகி – தோழி
  • சகோதரி – உடன் பிறந்தவள்
  • சங்கடம் – இக்கட்டு, தொல்லை
  • சங்கதி – செய்தி
  • சங்கோஜம் – கூச்சம்
  • சதம் – நூறு
  • சதவீதம், சதமானம் – விழுக்காடு
  • சதா – எப்பொழுதும்
  • சதி- சூழ்ச்சி
  • சத்தம் – ஓசை, ஒலி
  • சந்தானம் – மகப்பேறு
  • சந்தேகம் – ஐயம்
  • சந்தோஷம் – மகிழ்ச்சி
  • சபதம் – சூளுரை
  • சம்சாரம் – குடும்பம், மனைவி
  • சம்பந்தம் – தொடர்பு
  • சம்பவம் – நிகழ்ச்சி
  • சம்பாதி – ஈட்டு, பொருளீட்டு
  • சம்பிரதாயம் – மரபு
  • சம்மதி – ஒப்புக்கொள்
  • சரணாகதி – அடைக்கலம்
  • சரித்திரம் – வரலாறு
  • சரீரம் – உடல்
  • சருமம் -தோல்
  • சர்வம் – எல்லாம்
  • சாதாரணம் – எளிமை, பொதுமை
  • சாதித்தல் – நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
  • சாதம் – சோறு
  • சாந்தம் – அமைதி
  • சாகசம் – துணிவு, பாசாங்கு
  • சாராமிசம் – பொருட்சுருக்கம்
  • சாயந்திரம் – மாலை வேளை, அந்திப் பொழுது
  • சாவகாசம் – விரைவின்மை
  • சாஸ்திரம் – நூல்
  • சாசுவதம் – நிலை
  • சிகிச்சை – மருத்துவம்
  • சித்தாந்தம் – கொள்கை, முடிவு
  • சித்திரம் – ஓவியம்
  • சிநேகிதம் – நட்பு
  • சிம்மாசனம் – அரியணை
  • சிரத்தை – அக்கறை, கருத்துடைமை
  • சிரமம் – தொல்லை
  • சின்னம் – அடையாளம்
  • சீக்கிரமாக – விரைவாக
  • சுதந்திரம் – தன்னுரிமை, விடுதலை
  • சுத்தமான – தூய்மையான
  • சுபாவம் – இயல்பு
  • சுலபம் – எளிது
  • சுவாரஸ்யமான – சுவையான
  • சேவை – பணி,தொண்டு
  • சேனாதிபதி – படைத்தலைவன்
  • சௌகர்யம் – வசதி, நுகர்நலம்
  • சௌக்கியம் – நலம்

  • தசம் – பத்து
  • தத்துவம் – உண்மை
  • தம்பதியர் – கணவன் மனைவி, இணையர்
  • தரிசனம் – காட்சி
  • தர்க்கம் – வழக்கு
  • தர்க்க வாதம் – வழக்காடல்
  • தாபம் – வேட்கை
  • திகில் – அதிர்ச்சி
  • திருப்தி – நிறைவு
  • தினசரி – நாள்தோறும்
  • தினம் – நாள்
  • தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
  • துரதிருஷ்டம் – பேறின்மை
  • துரிதம் – விரைவு
  • துரோகம் – வஞ்சனை
  • துவம்சம் – அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
  • தேகம் – உடல்
  • தேசம் – நாடு
  • தைரியம் – துணிவு

  • நட்சத்திரம் – விண்மீன், நாள்மீன்
  • நமஸ்காரம் – வணக்கம்
  • நர்த்தனம் – ஆடல், நடனம்,கூத்து
  • நவீனம் – புதுமை
  • நவீன பாணி – புது முறை
  • நாசம் – அழிவு, வீண்
  • நாசூக்கு – நயம்
  • நாயகன் – தலைவன்
  • நாயகி – தலைவி
  • நிஜம் – உண்மை, உள்ளது
  • நிசபதமான – ஒலியற்ற, அமைதியான
  • நிச்சயம் – உறுதி
  • நிச்சயதார்த்தம் – மண உறுதி
  • நிதானம் – பதறாமை
  • நித்திய பூஜை – நாள் வழிபாடு
  • நிரூபி – மெய்ப்பி, நிறுவு
  • நிருவாகம் – மேலாண்மை
  • நிதி – பொருள்,செல்வம், பணம்
  • நீதி – அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

  • பகிரங்கம் – வெளிப்படை
  • பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
  • பரவசம் – மெய்மறத்தல்
  • பராக்கிரமம் – வீரம்
  • பராமரி – காப்பாற்று , பேணு
  • பரிகாசம் – இகழ்ச்சிச் சிரிப்பு
  • பரிசோதனை – ஆய்வு
  • பரீட்சை – தேர்வு
  • பலவந்தமாக – வற்புறுத்தி
  • பலவீனம் – மெலிவு, வலிமையின்மை
  • பலாத்காரம் – வன்முறை
  • பாணம் – அம்பு
  • பாதம் – அடி
  • பாரம் – சுமை
  • பால்யம் – இளமை
  • பிம்பம் – நிழலுரு
  • பிரகாசம் – ஒளி, பேரொளி
  • பிரகாரம் – சுற்று
  • (அதன்)பிரகாரம் – (அதன்)படி
  • பிரசங்கம் – சொற்பொழிவு
  • பிரசுரம் – வெளியீடு
  • பிரச்சினை – சிக்கல்
  • பிரதிநிதி – சார்பாளர்
  • பிரதிபலித்தல் – எதிரியக்கம்
  • பிரதிபிம்பன் – எதிருரு
  • பிரத்தியோகம் – தனி
  • பிரபலம் – புகழ்
  • பிரமாதமான – பெரிய
  • பிரமிப்பு – திகைப்பு
  • பிரயோகி – கையாளு
  • பிரயோசனம் – பயன்
  • பிரவாகம் – பெருக்கு
  • பிரவேசம் – நுழைவு, புகுதல், வருதல்
  • பிரார்த்தனை – தொழுகை,
  • பிரியம் – விருப்பம்
  • பிரேமை – அன்பு
  • பீடிகை – முன்னுரை
  • புண்ணியம் – நல்வினை
  • புத்தி – அறிவு
  • புத்திரன் – புதல்வன்
  • புனிதமான – தூய
  • புஷ்பம் – மலர், பூ
  • புஜபலம் – தோள்வன்மை
  • பூஜை – வழிபாடு
  • பூர்த்தி – நிறைவு
  • பூஷணம் – அணிகலம்-
  • போதனை – கற்பித்தல்

  • மகான் – பெரியவர்
  • மகாயுத்தம் -பெரும்போர்
  • மத்தியஸ்தர் – உடன்படுத்துபவர்
  • மத்தியானம் – நண்பகல்
  • மந்திரி – அமைச்சர்
  • மனசு – உள்ளம்
  • மனிதாபிமானம் – மக்கட்பற்று
  • மானசீகம் – கற்பனை
  • மல்யுத்தம் – மற்போர்

  • யந்திரம் – பொறி
  • யூகம் – உய்த்துணர்தல்
  • யூகி – உய்த்துணர்
  • யோக்யதை – தகுதி

  • ரதம் – தேர்
  • ரத சாரதி- தேரோட்டி
  • ராணி – அரசி
  • ராத்திரி – இரவு
  • ராச்சியம் – நாடு,மாநிலம்
  • ராஜா – மன்னன்
  • ரசம் – சாறு, சுவை

  • லட்சம் – நூறாயிரம்
  • லட்சணம் – அழகு
  • லட்சியம் – குறிக்கோள்

  • வதம் – அழித்தல்
  • வதனம் – முகம்
  • வம்சம் – கால்வழி
  • வஸ்திரம் – துணி, ஆடை
  • வாஞ்சை – பற்று
  • வாயு – காற்று
  • விக்கிரகம் – வழிபாட்டுருவம்
  • விசாரம் – கவலை
  • விசாலமான – அகன்ற
  • விசித்திரம் – வேடிக்கை
  • விஷேசம் – சிறப்பு
  • விஞ்ஞானம் – அறிவியல்
  • விஷயம் – செய்தி
  • விதானம் – மேற்கட்டி
  • விநாடி – நொடி
  • வித்தியாசம் – வேறுபாடு
  • விபூதி – திருநீறு , பெருமை
  • விமோசனம் – விடுபடுதல்
  • வியாதி – நோய்
  • விரதம் – நோன்பு
  • விவாகம் – திருமணம்
  • விவாதி -வழக்காடு
  • வேகம் – விரைவு
  • வேதம் – மறை
  • வேதவிற்பனன்ர் – மறைவல்லார்
  • வேதியர் – மறையவர்

  • ஜனநாயகம் – குடியாட்சி
  • ஜனம் – மாந்தர், மக்கள்
  • ஜனனம் – பிறப்பு
  • ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
  • ஜாலம் – வேடிக்கை
  • ஜூரம் – காய்ச்சல்
  • ஜோதி – ஒளி
  • ஜோடி – இணை
  • ஜோடித்தல் – அழகு செய்தல்

  • ஸந்ததி – கால்வழி
  • ஸமத்துவம் – ஒரு நிகர்
  • ஸமரசம் – வேறுபாடின்மை
  • ஸமீபம் – அண்மை
  • ஸம்ஹாரம் – அழிவு
  • ஸோபை – பொலிவு
  • ஸௌந்தர்யம் – பேரழகு
  • ஸ்தாபனம் _ நிறுவனம்
  • ஸ்தானம் – இடம்
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply