அண்ணாவின் ஆரியமாயை

சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”

தேமொழி

Apr 28, 2018

oct25

முன்னுரை:

சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைதண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

இந்த நூல், விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில், 1941ல் அண்ணாதுரையால் எழுதப்பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டது. முன்னுரையில் அவர், “இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். ஆபி டியூபா, சர். ஜான் மார்ஷல், ஹாவல்,  பி. டி. சீனிவாச  ஐயங்கார், பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், எம். எஸ். இராமசாமி ஐயங்கார், அறிஞர் கால்டுவெல், டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, பி. வி. கிருஷ்ணாராவ், ஏ. கெ. சாண்டர்ஸ், பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் (இவ்வரிசைப்படுத்துதல், நூலில் இடம்பெறும் கருத்து வரிசையை ஒட்டி அமைகிறது)  என்று அண்ணாதுரை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்கள் பட்டியலும் மிக நீளம்; அவர்கள் கூறியதாக அண்ணாதுரை சுட்டும் கருத்துகளும் பன்முகத் தன்மை வாய்ந்தவையாக ஆரியர் குறித்தும், ஆரியமாயை குறித்தும் பலகோணங்களை நம்முன்வைக்கிறது.

siragu annadurai2

ஆரிய மாயை  போற்றி பாடல்:

ஆரிய மாயை

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கோழையே போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந் திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அந்தி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

ஆரியர் இயல்பு:

கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? என்போருக்கு, “ஆரிய மாயையில்” வீழ்ந்துள்ள திராவிடர் சிலர் (சற்சூத்திரர்கள்) அவர்களைப் போற்றுவது வழக்கம்தானே. அது போல எழுதப்பட்டது இந்தப் போற்றிபாடல். அவர்கள் போற்றிடும் “‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்கள்” இவையென  நான் சொல்லவில்லை. “ஆபி டியூபா/ஆபே டூபே (Abbe J. A. Dubois, 1765-1848)” எனும் அறிஞர் தம் நூலில் கூறியது. நான் செய்தது ஆரிய மாயையின் பிடியில் இருப்போர் கூறிக்கொண்டிருக்கும் போற்றிபாடல் போல அதை எழுதியது மட்டுமே,  என்று கூறும்  அண்ணாதுரை,  “நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்” என்ற விளக்கத்துடன் நூலைத் தொடங்குகிறார்.

Avarice, Ambition, Cunning, Wily, Double Tongued Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue போன்ற சொற்களைக் கொண்டு ஆபி டியூபா தமது நூலில் (Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois*) பார்ப்பனர்களின் இயல்பை விவரிப்பதை எடுத்துக் காட்டுகிறார் அண்ணாதுரை. நூலில் “தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவிபெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார்.” (“Naturally cunning, wily, double-tongued, and servile, they turn these most undesirable qualities to account by insinuating themselves everywhere; their main object, upon which they expend the greatest ingenuity, being to gain access to the courts of princes or other people of high rank.”) என்று ஆபி டியூபா பார்ப்பனர்களை தம் நூலில் விவரித்துள்ளார். பிரெஞ்சுப் பாதிரியாரான ஆபி டியூபா இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, பயணங்கள் செய்து, இந்திய மக்களின் வாழ்வு முறையை ஆய்வு செய்து தனது முடிவுகளை 1806 இல் வெளியிட்ட நூல் இது.

“இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் சாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை.” என்று கழிவிரக்கம் கொள்கிறார் அண்ணாதுரை. இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய “இந்து”  நாளிதழும், இன்றும் பாதிரியார் கண்ட நிலையில்தான் மக்கள் இங்கு உள்ளனர் என்றும் குறிப்பிடுவதால், இது குறுகிய மனப்பான்மை கொண்ட பாதிரியாரின் விவரிப்பு எனவும் கொள்ள வழியில்லை. இதையேதான் வரலாறும் நமக்குக் காட்டுகிறது, இன்றும் அரசு உயர்பதவிகளில் இருப்பவர் பார்ப்பனரே என்று சுட்டிக் காட்டுகிறார் அண்ணாதுரை. பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்பதற்காக மட்டும் அரசர்கள் அவர்களுக்குப் பதவிகள் அளிக்கவில்லை, அவர்களிடம் மற்றவர் பணிந்து போகும் இயல்பைக் கொண்டிருப்பதும் அதற்குக் காரணம் என்றும்,  இந்த அமைப்பு அரசர்களுக்கு தொல்லைகளைக் குறைத்தது என்பதை அந்நூல் குறிப்பிடுவதைக் காட்டுகிறார்.

ஆரியர் திராவிடர் கலாச்சாரங்கள் வேறு வேறு:

ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடர் கலாச்சாரம் வேறு  என்பதை ஆய்வுகள் தெளிவாகவே காட்டுகின்றன. முதலில் மாக்ஸ் முல்லர் போன்ற ஆய்வாளர்கள் இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்றும்  கருதினர்.  பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் போன்றோர் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான், ஆரியர் வருகைக்கு முன்னரே ஓர் இந்திய நாகரிகம் இருந்ததை ஆய்வாளர்கள் பின்னரே  உணர்ந்தனர். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து,  வீரம் போன்ற இயல்புகளுடன், அறிவு சார்ந்தும், அறம்  சார்ந்தும் வாழ்ந்த திராவிடரின் கோட்பாடுகள், ஆரியரின் கற்பனைப் புனைவுகள் கொண்ட தொன்மங்கள் சார்ந்த கொள்கைகளால் சீர்குலைந்தது என்பதை  ஆய்வாளர்கள் உணர்ந்தனர் என்று குறிப்பிடுகிறார் அண்ணாதுரை.

ஆனால் இந்த வரலாற்று உண்மை நம் மக்களைச் சென்றடையவில்லையே,  மாறாக உண்மையை எடுத்துச் சொல்வோர்தான், மேதாவி எனத் தங்களை நினைத்துக் கொள்ளும் நம்மவர்களால்  நையாண்டி செய்யப்படுகிறார்கள் என வருந்துகிறார். புரோகிதத் தொழிலுக்கு முழுஉரிமை பெற்றுக் கொண்டு மந்திரம் மாயம் என்று மன்னர்களை ஆட்டுவித்ததுடன் மக்களையும் அடிமைப்படுத்தினர், சுரண்டிப் பிழைத்தனர் பார்ப்பனர்கள் என்று “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்ற நூலில் ‘ஹாவல்’ எழுதியதை எடுத்துரைக்கிறார் அண்ணாதுரை.

ஆரியர், திராவிடர் வரலாறும் போராட்டமும்:

வரலாற்று ஆசிரியர் பி. டி. சீனிவாச  ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923 இல் பதிப்பிக்கப்பட்ட “இந்திய சரித்திரம்” என்ற நூலின் முதற் பாகத்தில் கூறப்பட்டுள்ள இந்திய வரலாற்றைச் சுருக்கமாக கொடுத்துதவுகிறார் அண்ணாதுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்தவர் திராவிட இனமக்கள். வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்த அன்னியர் (ஆரியர்) தீயால் கடவுளை வணங்கும் வழக்கம் கொண்டவர். அதை ஏற்காத பூர்வீகக் குடிகளான திராவிடர்களை தஸ்யூக்கள் அல்லது ராட்சதர்கள் என்று அவர்கள் அழைத்தனர். வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது யாகங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து சமயம் என்ற கோட்பாடு வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கத் தொடங்கியது. வர்ணாசிரமக் கொள்கையின்படி சத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்தபொழுது, சத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின. இவர்களும், இவர்கள் பயன்படுத்திய மொழிகள் முறையே அர்த்த மகதி, பாலி ஆகிய மொழிகளும் ஆரியர்களுக்கும் அவர்களின்  சமற்கிரத மொழிக்கும் எதிரிகளாகக் கருதப்பட்ட நிலை உருவாகியது.  மௌரியர் காலத்தில் வளர்ச்சியடைந்து செல்வாக்கு பெற்று, பெரும் போட்டியாக மாறிய இப்புதுச்சமயங்களை தொடர்ந்து வந்த ஆரிய அரசர்கள் அடியோடு ஒழித்துக் கட்ட முற்பட்டனர்.

siragu annadurai4

ஆனால் தமிழகம் வடவர்கள் ஆதிக்கத்திற்கு உட்படாது, அவர்கள்  ஊடுருவல் இன்றி தொடர்ந்து தனித்தே இயங்கியது. யாகங்களை விரும்பிய தமிழக அரசர்களின் வழி பார்ப்பனர் தமிழ அரசுகளிடம் செல்வாக்கு பெற்றனர். மன்னர்களும் தங்களை சந்திர சூரிய குலங்கள் என்றெல்லாம் ஆரியர் அடியொட்டி அடையாளப்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். இருப்பினும் கி.பி.400 வரை தமிழர் ஆரியர் வலையில் விழவில்லை என்பதை அண்ணாதுரை தொகுத்து வழங்குகிறார்.  “சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடம் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேத காலம் முதற்கொண்டு வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம்வரை, திராவிடம் தனிநாடாகவே இருந்தது!” என்றும்; ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் ‘பொற்காலம்’ என்று புகழ் பெற்ற நேரமும், அந்தப் பொற்காலத்திலும் திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது என்றும்; வடக்கே இசுலாமியர் ஆட்சிக் காலத்திலும் திராவிடம் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது திராவிடம் தனித்து நடைபோட்டது என்றும்; திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை வரலாறு  மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு அண்ணாதுரை சுட்டிக்காட்டுவதுடன்; மேற்கொண்டு ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு நூற்பட்டியலையும் தருகிறார் (கட்டுரையின் இறுதியில் காண்க) அண்ணாதுரை.

அத்துடன், ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும்  ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்றும்; ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து மொழியியல், மானுடவியல் அடிப்படையில் பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன் போன்றோர் ஆய்வுகளைக் குறிப்பிட்டும்; இந்து சமூகத்தில் உயர்ந்த சாதிகள் எனப்படுவோர் தங்களுக்குப் பெருமை தருமென்று கருதி தங்களை ஆரியர் என்று கூறிக் கொள்கிறார்களா என்றும் வியக்கிறார்.

ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை என்பது உண்மையே:

ஆரியர் திராவிடர் பிரிவுகள் வெறும் கற்பனை என்போருக்குப் பதில் அளிக்கும் விதத்தில் எவ்வாறு நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது என்றும்;  ஸ்மிருதியில் கண்டதே சட்டமாகக் கருதும் நிலை ஏற்பட்டதால் அந்தச் சட்டம், ஸ்மிருதி அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும், அதன் அடிப்படையில் பொருத்தமற்ற வகையில் நீதி வழங்கப்படுகிறது என்றும் சான்றுகள் பல தரும் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உரை ஒன்றிலிருந்தும் மேற்கோள்களுடன் காட்டுகிறார் அண்ணாதுரை.

“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பிவிடப் படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?”  என்பது இங்கு இவரால் வைக்கப்படும் மிக முக்கியமான கேள்வி. சிந்தனைக்குரிய ஒரு கேள்வியும் கூட.

தங்கள் பெருமை மறந்த தமிழர்:

Dec-23-2017-newsletter1

கட்டுக்கதைகள் கூறும் சமயக் கருத்துக்களை, தன்மதிப்பை அழிக்கும் வழிபாட்டுச் செயல்களை, உழைப்பின்றி அடுத்தவரைச் சுரண்ட உருவாக்கப்பட்ட  ஆரியச்சடங்குகளை ஏன் தொடர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால் முன்னோர்கள் செய்ததைத் தொடர்வதாகக் கூறுகிறார்கள் நம் தமிழ் மக்கள். ஆனால் நம் தமிழ் மூதாதையர் இத்தகைய செயல்களைச் செய்ததில்லை. அவர்களிடம் சாதிபேதங்கள் இருந்ததில்லை, அவர்களிடம் சமத்துவமும் சகோதரத்துவமும் இருந்தது என்று கூறும் அண்ணாதுரை தனது கூற்றுக்குச் சான்றாக வரலாற்று ஆசிரியர்  எம். எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள மதுரை ஜில்லா பூவருணனை நூலில் கூறியுள்ள பின்வரும் கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார்.

“ஆதி காலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவந்தார்கள். பின்பு ஆரியர் திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய “நாகரிகம்” பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன” எனவும், சங்க இலக்கியங்கள் வழி இக்கருத்துகள் புலப்படுவதாகவும், அக்காலத்தில் தமிழகத்தில் பெளத்த சமண மதங்கள் தமிழரிடம் பரவியிருந்ததாகவும் கூறும் எம். எஸ். இராமசாமி ஐயங்கார், மேலும், “தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக்கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை. ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால், அவனுக்கு, யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது (அக்காலத்) தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும், நாகரிக உயர்வையும் காட்டுகிறது” என்றும் கூறுகிறார்.

தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களிலும் ஆரிய ஊடுருவல்:

“இலக்கியங்களிலே பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பொய்ம்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க, புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன?” என்று வினவும் அண்ணாதுரை, இலக்கண நூல்களிலும் ஆரிய வர்ணாசிரமபேதம் நுழைந்துள்ளதைக் காட்டுகிறார். “பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது” என்ற குறிப்பை எடுத்துக்காட்டி, “‘ல, வ, ற, ன”என்ற நான்கும் வைசிய எழுத்துகளாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துகளாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது,” என்று கூறும் அண்ணாதுரை, தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ஆனால்  வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன? என்றும் கேட்கிறார்.

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டும் என்று (இலக்கியத்தில்  வழக்கற்று இருக்கும் ஒரு முறை இது) இலக்கணத்தில் விதியாகப் புகுத்தப்பட்டுள்ளதையும்; கலம்பகத்தில் “தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95-உம், அரசருக்கு 90-உம், அமைச்சருக்கு70-உம், வணிகர்க்கு 50-உம், மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமென்பது” பாட்டியல் விதிகளாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டும் அண்ணாதுரை “தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும், ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா?” என்றும், “மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது?” என்றும் வினா எழுப்புகிறார்.

ஆரியர் பண்பாடும் தமிழர் பண்பாடும்:

ஆரியம் கலக்கா பழந்தமிழர் காலம் எது?  என்று அறிய விரும்பினால், சோமசுந்தர பாரதியார் மொழியாய்வின் வழி கூறும், “ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்தமுடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு. அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம்.  அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது.  அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம். ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்துவிட்டது” என்றும் கருத்தை அண்ணாதுரை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

ஆரியம் கலக்கும் முன் தமிழர் வாழ்வின் சடங்குகள் எவ்வாறு ஆரியரிடம் இருந்து வேறுபட்டிருந்தன என்பதையும்பழந்தமிழர் வாழ்ந்த தற்சார்புகொண்ட, காதல், இல்லறவாழ்வு, வாழ்வியல் முறைகளையும்;   அடிப்படையில் ஆரியர் குடும்ப அமைப்பும் கொள்கைகளும் தமிழரிடம் இருந்து  வேறுபட்டிருந்ததையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிடும் சோமசுந்தர பாரதியார், “எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது” என்று காட்டும் கருத்துகள்  தமிழர் தம் கருத்தில் இருத்த வேண்டியவை.

உள்ளதைத்தான் எழுதினார் அண்ணாதுரை:

“கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களு மாவது, இந்தத் துறைகளிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்துபோனது போல, ஒரு காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்” என்று விழ்ப்புணர்வு வர அறிவுரையும் கூறி எச்சரிக்கையும் விடுக்கிறார் அண்ணாதுரை. புரட்சிக் கவி பாரதிதாசனின் ஆரிய அடிவருடியாக இருக்க மாட்டேன் என்று முழங்கும்  பாடல் வரிகளைக் கொடுத்து எழுச்சியூட்டுகிறார். “ஆரியத்தைக் குறித்து இங்குத் திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விசயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! ” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார் அண்ணாதுரை.

காதலுக்குத் தகுதியற்ற ஒரு அழகியிடம் மயங்கி, நண்பனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது காதல் வலையில் சிக்கிக் கட்டுண்டு, உடல் நலம் சீரழிந்த பின்னர் நண்பனிடம் புலம்பும் ஒருவராக ஆரியமாயையில் வீழ்ந்து அழிவுற்ற தமிழரையும்,அவருக்கு நல்லுரை கூறும் நண்பராகக் கழக இயக்கத்தினரை ஒப்பிட்டு உருவகப்படுத்தி  அண்ணாதுரை எழுதியுள்ள பகுதி இலக்கியச்சுவை மிக்கதும் கூட.

நர்மதை ஆற்றுக்கு மேலேதான், வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை போன்ற குறிப்புகள் மூலம் அண்ணாதுரை வடக்கு தெற்கு என்று திசைகள் குறிப்பதற்குப் பதிலாக,  வரைபடங்களில் காணுவதைப் போல மேல் கீழ் எனத் திசையைக் குறிப்பிடும் வழக்கமுள்ளவர் என்ற தகவல் வியப்பளிக்கிறது. தனது கருத்துகள் சராசரி மக்களையும் சென்றடையச் செய்யும் நோக்கத்தினால் இது போன்ற சொற்பயன்பாடுகள் கொண்டதா அவரது முயற்சி எனத் தெரியவில்லை.

திராவிட நாட்டுப் பிரிவினை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை போன்ற அக்கால திராவிட இயக்கக் கொள்கைக் கருத்துகளின் தாக்கமும் நூலில் ஆங்காங்கே விரவப்பட்டுள்ளது. “மிக்க தந்திரத்தோடு, ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணைகொண்டோ, வெள்ளையரின்  துணை கொண்டோ, திராவிட மறுமலர்ச்சியைத் தடுக்க முயன்றால் “தாமதம்”, ஏற்படக் கூடுமே தவிர, ”தடை” யேற்படாது. முடிவு  பிரிவினைதான்!” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும்;  “பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிட ஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச்சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும், இந்த நூல் எழுதப்பட்ட காலம்,  இந்தியா விடுதலைப் பெறாத காலம் என்பது தெளிவானாலும், அண்ணாதுரை நூலுக்காகத் தண்டனை பெற்றது விடுதலைப் பெற்ற இந்தியாவில் எனப் பிற குறிப்புகள் சுட்டுகின்றன.

முடிவுரை:

நூலைப் படித்த பின்னர் எஞ்சியிருப்பது, மனதில் நிழலாடுவது… தனது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர, யாரையும் ஏசாத, ஆய்வாளர்கள் கண்ட உண்மைகளை மேற்கோள்களுடன் கொடுத்த ஒரு சிறு நூலுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் சரியா என்ற கேள்வி மட்டுமே. இக்காலத்தில் யூடியூப் காணொளிகள் வழி, சமூக வலைத்தளங்கள் வழி தரக்குறைவான எத்தனை எத்தனையோ பொய் புரட்டுக் கருத்துகளை, காது கூசும் வசைகளைத் தினசரி எதிர்கொள்வது வாழ்க்கையாகிவிட்டது. அவ்வாறு மக்களிடையே கலகம் கிளப்புவதற்குச் சான்று காட்ட எச். ராஜா என்பவர் மட்டுமே போதும்.

அண்ணாதுரை எதிரியையும் மதித்துப் பேசும் பண்பாளர் என்பதும் கூட அவரை நன்கு அறிந்த பலர் முன்வைக்கும் தகவல். யாரையும் அவமதிக்காதவாறு பிறரின் ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, தமிழக மக்கள் அறிய வேண்டிய வரலாற்று “உண்மைகளை” மக்கள் முன் வைத்த ஒரு நூலுக்காகச் சிறைத் தண்டனை என்பது என்றென்றும் நீதிக்கு உறுத்தல் தரக்கூடிய ஒரு தீர்ப்பு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்த நூலைத் தடை செய்வதற்கான முறையில் நூலில் எதுவும் எழுதப்படவுமில்லை.  மாறாக இது பரிசு கொடுத்துப் பாராட்டப்பட்டிருக்க வேண்டிய ஒரு நூல் என்பதே சான்றோர் முடிவாக இருந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதில் முதன்மையானவராக இருந்தவராம் அண்ணாதுரை. உடல்நலம் குன்றிய நிலையில், அறுவைச்கிச்சைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்தை மாற்றினால் அதற்குள் படிக்கும் நூலை முடித்துவிடலாம் என்று கருதி மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தவர் அண்ணாதுரை என்பது தமிழகம் அறிந்த செய்தி. அத்தகைய நூலார்வலரான அண்ணாதுரை சிறைத் தண்டனையை இடையூறின்றி நூல்களைப்படிக்க, தாம் நினைத்ததை எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே மாற்றிக் கொண்டிருந்திருப்பார் என்பது திண்ணம். ஆம், சிறையில் ஆரியமாயை எதிர்க்கும் தமது வாளை அண்ணா இடையூறின்றி கூராகப் பட்டை தீட்டிட அவரது  எதிர்ப்பாளர்களே உதவி செய்துள்ளார்கள் என்பதை எவராலுமே ஊகிக்க முடியும்.

ஆரிய மாயை-நூல்:

ஆரிய மாயை, அறிஞர் அண்ணா அறக்கட்டளை

http://annavinpadaippugal.info/katturaigal/aariyamaayai.htm

அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

சி.என்.அண்ணாதுரை 

 June 6, 2019

பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 1.

திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !

சி.என்.அண்ணாதுரை 

 June 10, 2019

படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 2.

ஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை !

சி.என்.அண்ணாதுரை 

June 13, 2019

ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே… அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 3.

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

சி.என்.அண்ணாதுரை –

 June 20, 2019

ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 5.

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

சி.என்.அண்ணாதுரை – July 25, 20190 ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 15.

June 24, 2019

வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 6.

ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !

சி.என்.அண்ணாதுரை –

July 1, 20190

கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 8.

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

சி.என்.அண்ணாதுரை 

July 15, 2019

தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 12.

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

சி.என்.அண்ணாதுரை 

July 18, 2019

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 13.

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

சி.என்.அண்ணாதுரை 

July 22, 2019

இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் – திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 14.

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

சி.என்.அண்ணாதுரை 

 July 25, 2019

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 15.

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

சி.என்.அண்ணாதுரை 

 July 29, 2019

கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 16.

ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !

சி.என்.அண்ணாதுரை 

August 1, 2019

அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 17.

தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !

சி.என்.அண்ணாதுரை 

 August 5, 2019

‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 18.

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

சி.என்.அண்ணாதுரை – August 8, 20190ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 19.

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

சி.என்.அண்ணாதுரை 

August 12, 2019

ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 20.

திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !

சி.என்.அண்ணாதுரை 

 June 10, 2019

படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 2.

ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !

சி.என்.அண்ணாதுரை – July 11, 20190பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள். … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 11.

அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் !

சி.என்.அண்ணாதுரை 

July 8, 20190வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 10.

ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை !

சி.என்.அண்ணாதுரை

July 4, 2019

இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம். … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 9.

திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !

சி.என்.அண்ணாதுரை

 June 27, 2019

வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 7.

இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?

சி.என்.அண்ணாதுரை 

June 24, 2019

வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 6.

மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

சி.என்.அண்ணாதுரை – June 17, 20190‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 4.

மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

சி.என்.அண்ணாதுரை – August 15, 20192விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … இறுதிப் பகுதி !

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

சி.என்.அண்ணாதுரை – August 12, 20190ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 20.

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

சி.என்.அண்ணாதுரை – August 8, 20190ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 19.

ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !

சி.என்.அண்ணாதுரை – August 1, 20190அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 17.

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

சி.என்.அண்ணாதுரை – July 29, 20190கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 16.

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

சி.என்.அண்ணாதுரை – July 22, 20190இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் – திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 14.

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

சி.என்.அண்ணாதுரை – July 15, 20190தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 12.

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

சி.என்.அண்ணாதுரை – July 18, 20191தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 13.

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

சி.என்.அண்ணாதுரை – June 20, 20193ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 5.

ஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை !

சி.என்.அண்ணாதுரை – June 13, 20193ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே… அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 3.

திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !

சி.என்.அண்ணாதுரை – June 10, 20190படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 2.

அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

சி.என்.அண்ணாதுரை – June 6, 20192பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 1.

தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !

சி.என்.அண்ணாதுரை 

August 5, 2019

‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம் … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … பாகம் – 18.

விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! … அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் … இறுதிப் பகுதி !

By சி.என்.அண்ணாதுரை 

August 15, 2019

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 21

சி.என்.அண்ணாதுரை

னி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியவர், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை . எனவே “Hospitality”தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா ? ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா?’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன? ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு’’ என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.

காதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது . Warm Reception என்று ஆங்கிலர் சொன்னால், நாம் Cool Reception என்றுதான் கூற வேண்டும்.

பல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு தனிச் சிறப்பு – தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல்லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.

நிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக் குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன்? பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா? எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா?

படிக்க:
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
♦ ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

எனவே, ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத்தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.

ஆனால் ஒருவன், மக்கள் தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே, “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரை யாம் கண்டதில்” (குறள்) என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும், “தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்” என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்டுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.

தமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.

மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

சரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூட மதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்! மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்! விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்துப் பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல், ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது.

ஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா? தமிழ் இன வீரர்களே! தன்மானத் தீரர்களே! வலிவில்லாதவன் வலிமையுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர்! இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்!

ஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே. ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல!

இணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன் வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ? சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம்! ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒரு புறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு! வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு”

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!

முற்றும்.

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

http://annavinpadaippugal.info/katturaigal/aariyamaayai.htm

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply