இந்து மதம் எங்கே போகிறது? 3

இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறிஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்” என்ற முகமனோடும் “மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்.”‍ என்ற அறிவுரையுடன் “இந்து மதம் எங்கே போகிறது?”என்ற நூல் எழுதியுள்ளார்.

இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்… இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்… ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.

 

 
கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?
*இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால்? *இறைச்சியுண்ட கடவுள் இராம.
*காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும். 
*மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்
*இராமனுடைய மனைவிமார்கள்.
இந்துக்களே! விழிமின்! எழுமின்!. ஆசிரியர் DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)  

கல்வி மக்களின் பிறப்புரிமை 4.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல்;, மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மட்டுந்தான் ஆண்டவனின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.

ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.

அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.

இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.

இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது.

அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்களிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களே! இந்த அநீதிகளுக்கெதிராக போராட வேண்டாமா? நமது எதிர்கால சந்ததிகளை இந்த அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்திட வேண்டாமா?

எனவே உங்கள் நெடுந்தூக்கம் கலைந்து விழிமின்! எழுமின்!!

ராமா! ராமா!!  பிராமணீயத்தின் குருபக்தி!
பிராமணர்கள் ஏனைய இந்தியர்கள் பின்பற்றிடும் மதங்களையும், மார்க்கங்களையும் விமர்சிக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தங்களது மதத்தை, அதில் புனிதமாகப் போற்றப்படும் நூல்களை அறிவுக்கண்ணோடு பார்க்க மறுக்கின்றனர்.

அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் சார்லஸ் என்பவர் ஹிந்து அல்லது பிராமணர் என்பதை இப்படி விரித்துரைக்கின்றார்.

ஹிந்து என்பதை வரையறுத்துக் கூறிவிடுவது மிகவும் எளிது.

ஹிந்து என்பவன் கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவான். அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான்.

பிராமணர்கள் சொல்லுகின்றார்கள்: கடவுள் இராமன அவதாரம் எடுத்து அதாவது மனிதனாகப் பிறந்து பூமிக்கு வந்தான். காரணம் அவன் மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பினான்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா?

கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்ப துயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

தன்னால் படைக்கபட்வைகளின் பரிதாபத்தைப் படைத்தவனால் புரிந்திட இயலாதா?

இந்தக் கடவுள் இராமன் தான் இராமாயணம் என்ற கற்பனைக் காவியத்தின் கதாநாயகன்.

இந்தக் காவியத்தை படைத்தவர் எழுத்தாளர் – கவி வால்மீகி.

இந்தக் காவிய நாயகன் இராமன், தசரன் என்பவரின் மகன். தசரதன் பனாரஸ் என்ற மாநிலத்தின் அரசன்.

கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.

கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.
இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர்.

தொடர்புடையது.
ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.



அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

 

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

 

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

 

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை ( ராமனின் தாய் )மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

 

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

 

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

 

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?
யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

 

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? – – பா.வே. மாணிக்கவேலர் . 
SOURCE: விடுதலை

சுட்டியை சொடுக்கி படிக்கவும்
———-

கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று. 

தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

சுக்ரீவனிடம் – கடவுள் இராமன் கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.

இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.

ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான். தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோரதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.

இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.

சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.

இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.

இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.

ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.

ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான்.

பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?

இறைச்சியுண்ட கடவுள் இராமன்.

இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.  

‘அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எனல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்.(அயோத்தியா காண்டம் 20,26,94 ஆகிய அத்தியாயங்கள்)

தொடர்புடையது.
 
இராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே!

 

தி. பரமசிவ அய்யர் நூலில் வால்மீகி இராமாயணத் தகவல் 1940-ம் ஆண்டு பெங்களூரிலிருந்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சி நூலை பிரபல இராமாயண ஆராய்ச்சியாளர் டி. பரமசிவ அய்யர் (இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்து அறநிலையத் துறை கமிஷனருமான டி. சதாசிவ அய்யரின் தம்பி ஆவார்). எழுதியுள்ளார்.

 

பழுத்த ஆத்திகரான டி. பரமசிவ அய்யர் எழுதிய ஆங்கில நூலில் `வால்மீகியின் இராமன், தெய்வம் போல கருதப்பட்டாலும் மனிதனாகவே காணப்படுகிறான் என்ற தலைப்பில் எழுதியுள்ள வால்மீகி தரும் தகவல் இதோ:

 

ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.

 

லட்சுமணனையும் வானப் பிரஸ்த வாழ்க்கை வாழச் சொல்லிக் கங்கையைக் கடந்தான். நடு ஆற்றில் வரும்போது, நதியை வணங்கி சீதை தன் சங்கல்பத்தைக் கூறினாள்:

 

காட்டிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால் நதிக்கு 1000 குடம் மதுவையும் (ஒயின்) மாமிச உணவும் படைப்பதாக உறுதியளித்தாள். (அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)


நதியின் தெற்குக் கரையை அடைந்தபோது, அவள் இதை உறுதிப்படுத்தினாள். சகோதரர்கள் இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது; காட்டில் இருக்கும் நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர் (அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102)

 

சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறினான், “இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1)

 

ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி `கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும் மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. பம்பா ஏரியில் தெளிந்த நீரில் நீந்தி விளையாடும் மீன்களைக் கூரிய அம்புகளை எய்து லட்சுமணன் பிடித்து வரவேண்டும் என்று கபந்தன் விரும்பினான்….
அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். 

 

கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் – தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையாசன உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

 

இத்துடன் முடியவில்லை. “இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

 

தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். 

அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் 
– சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

 

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141).

 

இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார்.

 

வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப்படுகிறது. 

 

இந்த லட்சணத்தில் `ராமனை எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?
– சார்வாகன்.Source: “viduthalai” news 20.10.2007.
——-
மாமிச ராமன்பற்றி ஆச்சாரியார்! 
 
 
இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் இராம லட்சுமணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த_அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார்.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கமாக எழுதியிருக்கிறார்.இதைப் பற்றி நாம் குழப்பம் அடைய வேண்டியதில்லை.

க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி, மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.

 
காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துக்கு பொது தருமம். — இராஜகோபாலாச்சாரியார் – சக்கரவர்த்தி திருமகன் – பக்கம் 88
SOURCE:http://viduthalai.periyar.org.in/asuranmalar/snews10.html
————–

இராமனுடைய மனைவிமார்கள்.

வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானர் உயர்திரு சீனிவாச அய்யங்கார்.

அவர் தன்னுடைய மொழி பெயர்ப்பில் இப்படிக் கூறுகின்றார்:

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமயணத்தில் பல பகுதிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன் இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான்.

அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான்.

எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்: பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் ‘சம்புகா” என்பவனைக் கொன்றான்.

அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்.

இராமன் ஒரு சாதாரண மனிதனை போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் – 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார்.

பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?

எல்லாமே கேலிக் கூத்து. ஏன்?

இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் கடவுளே இல்லை.

ஒரு கவியின் கற்பனையில் உதித்த காவிய நாயகன்.

காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும்.

சீதை இராமனிடம் கூறினாள்: ‘தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்”

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்: ‘நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி”

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பை பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் – 97)

குருவதி – இராமனிடம் இப்படிச் சொன்னாள்: பெரியவரே! நீங்கள் எப்படி சீதையை உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கின்றீர்கள்?

என்னொடு வாருங்கள் நீங்கள் அவ்வளவு ஆழமாக நேசிக்கும் மனைவியின் மனதில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.

இராவணனை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை. அவள் தன் கைவிசிறியில் இராவணனின் படத்தை வரைந்து வைத்திருக்கின்றாள். அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துக் கொள்கின்றாள். அவள் படுக்ககையில் படுத்திருக்கின்றாள்.

ஆனால் கண்ணை மூடிக் கொண்டு இராவணனின் சிங்காரத்தை நினைத்து சிலிர்த்துக் கிடக்கின்றாள். இதனை செவிமடுத்ததும் இராமன் சீதையினிடம் ஓடினான்.

அங்கே சீதை படுத்திருந்தாள், மார்போடு அணைத்திருந்த கைவிசிறியில் இராவணனின் படம் இருந்தது. (திருமதி சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணத்தில் பக்கஙகள் 199, 200 ஆகியவற்றில் காணப்படுகின்றது)


 

சோரம் போன சீதை பற்றி அண்ணா
 
சீதையைப்பற்றி கம்பர் கூறும்போது, ஒரு கவியிலே சீதை மனத்தாலும் வாக்காலும் குற்றம் செய்திலள் என்று கூறுகிறார்.
 
காயத்தை விட்டுவிடுகிறார். ஏன்? காயம் (உடல்) கெட்டு விட்டது என்ற பொருள் தொக்கி நிற்கவில்லையா?
 
இவ்வளவு முக்கியமான பிரச்சினையிலே அவர் தவறுதலாகவோ, மறந்தோ, காயத்தைப் பற்றிக் கூறாமல் விட்டிருப்பாரா என்று கேட்டால் கோபித்துப் பயன் என்ன?
பதில் கூறித்தானே ஆகவேண்டும்?
 
கவி தவறிழைத்தான் என்று கூறுங்கள், ஜானகியைக் காப்பாற்ற வேண்டுமானால்!
 
கம்பனையா குறை சொல்வது என்று தோன்றினால், ஜானகியைக் கைவிடுங்கள்!
 
இரண்டும் இஷ்டமில்லை என்றால், சிதம்பரநாதரிடம் சொல்லிப் பாடலை ரிப்பேர் ஷாப்புக்கு அனுப்பி வையுங்கள். உள்ளதை நாங்கள் சொல்லும்போது எங்கள் மீது கோபித்து என்ன பயன்? — அறிஞர் அண்ணா. மறுமலர்ச்சி பக்கம் – 17
SOURCE: http://viduthalai.periyar.org.in/asuranmalar/snews04.html
—–

கடவுள் இராமனைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

‘என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல” – மகாத்மா காந்தி.

‘இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல” – ஜவஹர்லால் நேரு.

‘இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்!” -இராஜகோபாலாச்சாரியார்.

‘இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்.” கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார். — அன்புடன் தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.)தொடருகிறது. மீண்டும் வாருங்கள்,


.இந்துக்களே! விழிமின்! எழுமின்!? 1, நமக்கு எத்தனை கடவுள்கள்? முன்னுரை.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 2.பிராமிணர்களுக்கிடையே பிளவு.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா? 

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

http://thathachariyar.blogspot.com/2011/02/4.html


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply