கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் – அரசியல் அலசல்

என்.கண்ணன்

 06-ceba253b8d5fb0e9dc9a0d07355ec7a26e5d0917.jpg

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் 

காலியில் நடந்த, புதிய அர­சி­ய­ல­மைப்பு யோசனை குறித்து விளக்­க­ம­ளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்து பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்றும், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை விட சற்று கூடு­த­லான அதி­கா­ரங்­க­ளையே அவர்கள் கோரு­வ­தா­கவும் சுமந்­திரன் அந்தக் கூட்­டத்தில் கூறி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

எனினும், அவர் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், தாம், தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை என்றே குறிப்­பிட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

தாம் சார்ந்த தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னது கொள்கை சமஷ்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது என்றும் அதி­லி­ருந்து விலக முடி­யாது என்றும் சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விரிசல், உச்­சக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்கும் சூழலில், விக்­னேஸ்­வ­ரனின் முன்னாள் மாண­வ­னா­கவும், தற்­போ­தைய பிர­தான அர­சியல் எதி­ரி­யா­கவும் இருக்கும் சுமந்­திரன், சமஷ்டி பற்றிக் கூறிய கருத்து இன்னும் எரியும் நெருப்பில் எண்­ணெயை வார்த்­தி­ருக்­கி­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மற்றும் அவ­ரது பக்­கத்தில் இருக்­கின்ற சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள், சுமந்­தி­ரனின் கருத்தை வலு­வாகக் கண்­டித்தும், கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்றி விட்­டது, துரோகம் செய்து விட்­டது என்றும் அறிக்கை வெளி­யிட்டு வரு­கின்­றனர். செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்தி வரு­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார்.

எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அடுத்து நடக்­கப்­போகும் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கவும், சுமந்­தி­ர­னுக்கு எதி­ரா­கவும், முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் இந்த துருப்­புச்­சீட்டை வைத்து, நன்­றா­கவே பிர­சாரம் செய்­வார்கள் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என சுமந்­திரன் மறுத்­தி­ருந்­தாலும், சமஷ்டி என்ற விட­யத்தில், அவர் வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள், அவ­ருக்கு எதி­ரான அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் இருந்தே, சமஷ்டி விட­யத்தில் சுமந்­திரன் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தி­ருக்­கிறார்.

ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற சொற்­க­ளுக்கு அவர் அளிக்க முயன்ற விளக்­கங்­களும், அதற்குக் காரணம்.

எவ்­வா­றா­யினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டி­ருந்த சமஷ்­டியை விட்டு விலகி, ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் சுமந்­திரன் கணி­ச­மா­கவே பங்­க­ளித்­தி­ருக்­கிறார்.

அத்­த­கைய குற்­றச்­சாட்டு வரும்­போ­தெல்லாம் அவர், தன்னைக் காத்துக் கொள்­வ­தற்கு, சமஷ்டி என்ற பெயர்ப் பலகை முக்­கி­ய­மல்ல, அதன் உள்­ள­டக்கம் தான் முக்­கியம் என்ற கவ­சத்தைப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

அதா­வது சமஷ்டி முறையில் உள்­ளது போன்ற அதி­கா­ரப்­ப­கிர்வு தான் முக்­கி­யமே தவிர, சமஷ்டி என்ற அடை­யாளம் தேவை­யில்லை என்று அவர் நியா­யப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவில் ஆட்சி முறை பற்­றிய பதங்கள் பெரும்­பாலும் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த விட­யத்தில் சுமந்­தி­ரனின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது.

ஆனால், அவ்­வாறு பெயர்ப்­ப­லகை இல்­லாத அதி­கா­ரப்­ப­கிர்வு சமஷ்­டிக்கு இணை­யா­ன­தாக இருக்­குமா என்றால், அது­வு­மில்லை.

சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்ல ை என்று, சுமந்­திரன் கூறி­னாலும், அத்­த­கைய ஒரு தீர்வை ஏற்க சிங்­களத் தலை­மைகள் தயா­ராக இல்லை என்­பதே உண்மை.

அதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பு 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­திலும் சற்று அதி­க­மான அதி­காரப் பகிர்வை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்தால் போதும் என்ற வகையில் சுமந்­திரன் கருத்து வெளி­யிட்­டது உண்­மை­யானால், நிச்­ச­ய­மாக அவ­ரது கட்­சியின் சமஷ்டி பற்­றிய கொள்கை கேள்­விக்­கு­ரி­யதே.

சமஷ்டி என்­பதை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை என்று சுமந்­திரன் ஏற்­க­னவே கூறி விட்டார். ஆனால் அதில் உள்ள அடிப்­படை அம்­சங்­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்றும் அவரே கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைவு, சமஷ்டி முறையில் உள்ள அதி­காரப் பகிர்வை ஒத்­த­தா­கவே இருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இருக்­கி­றதா என்றால் அதுவும் இல்லை.

காலியில் நடந்த கருத்­த­ரங்­கிலும் சரி, தெற்கில் நடக்கும் கருத்­த­ரங்­கு­க­ளிலும் சரி, சுமந்­திரன் மற்­றொரு விட­யத்தை கூறி வரு­கிறார். அதா­வது, புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முழு­மை­யாகத் தீர்க்­காது, அவர்­களின் அபி­லா­ஷை­களை முற்­றி­லு­மாக நிறை­வேற்­றாது என்­பதே அது.

அவ்­வா­றாயின், சமஷ்­டியும் இல்­லாத- தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் முற்­றி­லு­மாக தீர்க்­காத, அவர்­களின் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்­றாத புதிய அர­சி­ய­ல­மைப்பு எதற்­காக என்ற நியா­ய­மான கேள்வி இருக்­கி­றது.

இப்­போது, உள்­ளதை விட முன்­னேற்­ற­க­ர­மான ஒரு அர­சி­ய­ல­மைப்பு என்ற வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும், அது தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களைக் கைவிட்டு விட்­டார்கள் என்ற வாதத்­துக்குத் துணை போகு­மானால் பேரா­பத்­தாக அமையும்.

அதா­வது, சமஷ்டி என்ற பெயர்ப்­ப­ல­கையும் இல்­லாத- சமஷ்­டியின் பண்­பு­களை ஒத்த அதி­கா­ரங்­களும் இல்­லாத ஒரு வெற்றுக் கூட்­டுக்கு தமிழ் மக்கள் இணங்கி விட்­டார்கள், அதனை ஏற்­றுக்­கொண்டு விட்­டார்கள் என்ற கற்­பி­தத்­துக்கு கார­ண­மாகி விடும்.

சுமந்­தி­ரனைப் பொறுத்­த­வ­ரையில், யதார்த்த அர­சி­யலை அதிகம் பேசு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தற்­போ­துள்ள சூழலில் சமஷ்டி அர­சியல் யாப்பை உரு­வாக்க முடி­யாது. அதே­வேளை, சமஷ்டித் தீர்வு இல்­லாமல் தமிழ் மக்­களைத் திருப்­திப்­ப­டுத்­தவும் முடி­யாது.

எனவே இந்த இரண்­டுக்கும் நடுவே, அங்­கு­மிங்கும் நெகிழ்ந்து ஒரு அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதே சாலப்­பொ­ருத்தம் என்று அவர் நினைக்­கிறார்.

இத்­த­கைய ஒரு நழு­வ­லான நிலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­வார்­களா- அதனை அங்­கீ­க­ரிப்­பார்­களா? இதனை எந்த அர­சி­யல்­வா­தியும் முடிவு செய்ய முடி­யாது. மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றார்கள்.

எது எவ்­வா­றா­யினும், ஒரு காலத்தில் தனி­நாடு கோரிய தமிழ் மக்கள், தமது பிரச்­சி­னை­க­ளுக்கு சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

காலியில் போய் சுமந்­திரன், சமஷ்டி வேண்டாம் என்று கூறி­யி­ருந்­தாலும், கூறி­யி­ருக்கா விட்­டாலும், சமஷ்டி வேண்டாம் என்று முடிவு செய்யும் அதி­கா­ரத்தை தமிழ் மக்கள் அவ­ருக்கு அளித்­தி­ருக்­க­வில்லை.

அதே­வேளை, சமஷ்டி தான் தீர்வு, அதற்கு இம்­மி­ய­ளவும் விட்டுக் கொடுக்க முடி­யாது என்ற நிலையில் இருக்கும் தரப்­புகள் ஒன்றும், யோக்­கி­ய­மா­னவை என்றும் எடுத்துக் கொள்­ள­மு­டி­யாது.

விடு­தலைப் புலிகள் தனி­நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­னார்கள். அவர்­களைப் போலவே மேலும் பல தமிழ் இயக்­கங்கள் ஆயு­தங்­களை ஏந்­தின. ஆனால், புலி­களால் மட்டும் தான் அதனை தொடர்ந்து நடத்த முடிந்­தது.

தனி­நாட்­டுக்­கான கட்­டு­மா­னங்­களை உரு­வாக்கி, நடை­முறை அரசு ஒன்றைக் கொண்டு நடத்­தவும் முடிந்­தது.

அதா­வது தனி­நாடு தான் தீர்வு என்­பதை செய­லிலும் காட்­டு­வதில் அவர்கள் உறு­தி­யாக இருந்­தார்கள்.

ஆனால், சமஷ்டி தான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்­கின்ற தமிழ் தரப்­புகள் எவற்­றி­ட­முமே, அதனை அடை­வ­தற்­கான மூலோ­பா­யமோ, செயற்­திட்­டங்­களோ கிடை­யாது.

தேர்தல் மேடை­க­ளிலும், ஊடக மாநா­டு­க­ளிலும், அறிக்­கை­க­ளிலும் மட்டும் தான், சமஷ்­டியில் பிடித்துத் தொங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, சமஷ்டி தீர்வு ஒன்றை எட்­டு­வ­தற்­கான சாத்­தி­ய­மான வழி­மு­றையை கண்­ட­றி­யவும் அவர்கள் தயா­ராக இல்லை.

தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வைத் தான் வலியுறுத்துகிறார்கள். அதனையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், அதனையே அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் தான் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஏனைய தரப்புகளும் சரி இந்த விடயத்தில், பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

சமஷ்டி என்ற கோஷத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இந்த நிலை தொடரப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனால், வரும் காலத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்கும் என்பதால், சமஷ்டி அரசியல், உணர்ச்சி அரசியல் எல்லாமே கொளுந்து விட்டு எரியப் போகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அந்த நெருப்பில் தான் அவர்கள் எப்போதும் குளிர்காய்ந்து வருகிறார்கள்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-1


மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்…

2 weeks 2 days ago

மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்…

Mahi-laughing.jpg?resize=600%2C450
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை.

கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.

இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது? எப்படித் திரட்டுவது? யார் திரட்டுவது? எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது? வாகன ஒழுங்குகளை யார் செய்வது? சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது? போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா? மதுவைக் கொடுப்பதா? அல்லது வேறெதைக் கொடுப்பதா? போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.

மகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும். மகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்று கருதப்படுகிறது.

புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.

எதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன?

வருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.

அரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம்? எப்பொழுது காட்டக்கூடாது? இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.

இவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்களுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்?

மகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும்? இந்தியா எப்படிப் பார்க்கும்? நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.

இது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார்? தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்?

மக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெடுத்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். பேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.

எனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.

உதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா? இது அவருக்கு விளங்காதா?

விளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள். இதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அளவு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா?

http://globaltamilnews.net/2018/94813/


மறுக்கப்படும் உரிமைகள்…!

பி.மாணிக்­க­வா­சகம்

2 weeks 3 days ago

மொழி­யு­ரி­மையும், காணி உரி­மையும் மறுக்­கப்­ப­டு­வது, இனப்­பி­ரச்­சி­னையின் அடி­நா­த­மாகத் திகழ்­கின்­றது. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, அவர்கள் ஆளும் தரப்­பி­னரால் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே இனப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யது. உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்­காத கார­ணத்­தி­னா­லேயே போராட்­டங்கள் தலை­யெ­டுத்­தன.

உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான போராட்­டங்கள் பல்­வேறு வழி­களில் திசை­தி­ருப்­பப்­பட்டு, அடக்­கு­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. அதி­கார வலு­வுடன் கூடிய சட்ட ரீதி­யான அடக்­கு­மு­றைகள் ஒரு­பக்­க­மா­கவும், குழுக்­களின் ஊடாக வன்­மு­றை­களைப் பயன்­ப­டுத்தி மறை­மு­க­மான அச்­சு­றுத்­தல்­க­ளுடன் கூடிய அடக்­கு­மு­றைகள் மற்­று­மொரு பக்­க­மா­கவும் காலம் கால­மாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்கு முறைகள் கடந்த காலங்­களில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன.

சிங்­களம் மட்டும் என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்ற சிங்­க­ளத்தை அர­ச­க­ரும மொழி­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து மொழியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன. இந்த அடா­வ­டித்­தனம்,1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா சிங்­களம் மட்டும் என்று குறிப்­பிட்டு சிங்­க­ளத்தை தனித்­து­வ­மான அரச கரும மொழி­யாகப் பிர­க­டனம் செய்­ததைத் தொடர்ந்து, தலை­வி­ரித்­தா­டி­யது.

வாக­னங்­களின் இலக்­கத்­த­க­டு­களில் ‘ஸ்ரீ’ என்ற சிங்­கள எழுத்தை அன்­றைய அர­சாங்கம் வலிந்து திணித்து, தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மொழி ரீதி­யான வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டி­ருந்­தது. சிங்­களப் பகு­தி­களில் வர்த்­தக நிலை­யங்­களைக் கொண்­டி­ருந்த தமிழ் மக்­க­ளு­டைய நிறு­வ­னங்­களின் பெயர்ப்­ப­ல­கை­களிலிருந்த தமிழ் எழுத்­துக்கள் தார் பூசி அழிக்­கப்­பட்­டன.

சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்­பட்­டதன் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய மொழி­யு­ரிமை மறுக்­கப்­பட்டு, அவர்­க­ளு­டைய சுய­கௌ­ர­வத்­திற்குப் பாதகம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சம்­ப­வங்கள் நடந்­தே­றின. இந்தச் சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் குதித்த தமிழ் அர­சியல் தலை­வர்கள் மீது காடைத்­தனம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. பொலிஸார் அவர்­களைத் தாக்கி இழுத்­தெ­றிந்து அரா­ஜகம் புரிந்­தார்கள்.

கல்­லோயா பகு­தி­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த சிங்­களக் குடி­யேற்றப் பகு­தி­களைச் சேர்ந்த கும்­பல்கள் அங்கு பண்­ணை­களில் பணி­யாற்­றிய தமிழ்த் தொழி­லா­ளர்­களைத் தாக்­கி­யதில் 150 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர். இந்தச் சம்­பவம் கல்­லோயா படு­கொலை என வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. இத­னை­ய­டுத்து, நாடெங்­கிலும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், வீடெ­ரிப்­புக்கள், கொள்­ளைகள், ஆட்­கொ­லைகள் என்­பன இடம்­பெற்­றன. இந்த வன்­மு­றை­களில் 300 தொடக்கம் 1500 பேர்­வ­ரையில் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மக்­களின் மொழி உரி­மையை அர­சியல் ரீதி­யாக இல்­லாமற்செய்யும் வகையில் கொண்­டு­வ­ரப்­பட்ட சிங்ளம் மட்டும் என்ற மொழிச்­சட்டம் பல்­வேறு அனர்த்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து சுதந்­திரம் பெற்­றதன் பின்னர் முதற் தட­வை­யாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இன ரீதி­யான வன்­மு­றையை நாடெங்­கிலும் வெடிக்கச் செய்­தி­ருந்­தது.

மொழி­யு­ரிமை மறுக்­கப்­பட்­டதன் விளை­வாகப் பாரிய உயி­ரி­ழப்­புக்­களும், உடமை இழப்­புக்­களும் ஏற்­பட்­டி­ருந்­தன. இழப்­புக்கள் மாத்­தி­ர­மல்ல, இன ரீதி­யான வெறுப்­பு­ணர்வு தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் எழுந்­தது. ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­ப­தற்கு இந்த வெறுப்­பு­ணர்வு தூண்­டு­த­லாக அமைந்­தி­ருந்­தது.

அதன் பின்னர் தமி­ழுக்கும் அரச கரும மொழி அந்­தஸ்து வழங்­கப்­பட்டு, சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளுக்கு மொழி உரிமை வழங்­கப்­பட்­ட­தாக வெளி உல­குக்குக் காட்­டப்­பட்­டது. ஆனால் உண்­மை­யான, நடை­முறைச் சாத்­தி­ய­மான மொழி உரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டான வழி­களில் அர­சி­ய­ல­மைப்பின் சரத்­துக்கள் அமைக்­கப்­பட்டு, தமிழ் மொழிக்கு வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய உரிமை நடை­மு­றையில் கடி­ன­மா­ன­தாக அல்­லது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட முடி­யாத நிலைமை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

சிக்­கல்­களை உரு­வாக்­கு­கின்ற சிங்­களக் குடி­யேற்­றங்கள்

மொழி உரி­மைக்கு அடுத்­த­தாக காணி உரி­மைகள் தமிழ் மக்­க­ளுக்கு அப்­பட்­ட­மாக மறுக்­கப்­ப­டு­வது காலம் கால­மாகத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. மொழி உரி­மையை மறுப்­ப­தற்­கான சிங்களம் மட்டும் என்ற சிங்­கள மொழிச்­சட்டம் கொண்டு வரப்­பட்ட 50­க­ளி­லேயே தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­ச­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பிர­தே­சத்தில் குறிப்­பாக கிழக்கில் கல்­லோயா பகு­தியில் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. அன்று தொடங்­கிய தமிழர் பிர­தே­சங்­களில் காணி­களை அப­க­ரிக்கும் கைங்­க­ரியம் காலத்திற்கு ஏற்ற வகையில் வெவ்வேறு வடி­வங்­களில் மிகவும் சாது­ரி­ய­மா­கவும், நுணுக்­க­மான முறை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கிழக்கு மாகாணம் அம்­பா­றையை மைய­மாகக்கொண்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன. வடக்கும், கிழக்கும் தமிழ் மக்­களின் பூர்­வீகத் தாயகப் பிர­தேசம் என்ற தாயகக் கோட்­பாட்டை உடைத்து நொறுக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­கின்ற சிங்­களக் குடி­யேற்­றங்கள் கையா­ளப்­பட்டு வந்­தன. இன்றுவரை­யிலும் அது தொடர்­கின்­றது.

சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளுக்கு மூலா­தா­ர­மாக மகா­வலித் திட்டம் தந்­தி­ரோ­பாய ரீதியில் உரு­வாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. நாட்டின் அதி நீள­மான ஆறா­கிய மகா­வலி கங்­கையை வரண்ட பிர­தே­சங்­களை நோக்கி திசை­தி­ருப்பி நீர்­வ­ளத்தைப் பகிர்ந்­த­ளிப்­பதை இலக்கு வைத்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் காட்­டப்­பட்­டது. உண்­மையில் அந்தத் திட்­டத்தின் நோக்கம் அது­வல்ல. தமிழர் பிர­தே­சங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வதை உள்­நோக்­காகக் கொண்டு அந்தத் திட்டம், நீண்­ட­கால அடிப்­ப­டையில்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. ஆளும் தரப்­பி­ன­ரா­கிய பேரி­ன­வா­தி­களின் இந்த நோக்கம் முல்­லைத்­தீவில் மகா­வலி திட்­டத்­திற்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்த மக்கள் எழுச்­சியின் மூலம் வெளிச்­சத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டது.

இந்தப் போராட்­டத்­திற்கு முன்னர், மகா­வலி அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் தமிழர் பிர­தே­சங்கள் அடா­வ­டித்­த­ன­மாக சிங்­களக் குடி­யேற்­றங்­களின் மூலம் சூறை­யா­டப்­ப­டு­கின்­றன என பொது­வான முறை­யி­லேயே குற்றம் சாட்­டப்­பட்டு வந்­தது. ஆனால் மகா­வலி எல் வல­யத்தின் கீழ் முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய மாவட்­டங்­களின் காணி­களை அடா­வ­டித்­த­ன­மாக சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே, இந்தக் காணி அப­க­ரிப்பின் விப­ரீ­தமும், ஆபத்­தான நிலை­மையும் வெளிச்­சத்­திற்கு வந்­தது.

இது ஒரு­பக்கம் இருக்க, யுத்த மோதல்­க­ளின்­போதும், அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் தமி­ழர்­க­ளுக்கு, காணி உரிமைச் சட்­டத்தின் கீழ் உரித்­து­டைய காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும், தொல்­லியல் திணைக்­க­ளமும், அலுங்­காமல் நசுங்­காமல் அப­க­ரித்து உரிமை கோரு­கின்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலத்தில் பௌத்த விகா­ரை­களை அமைப்­பதன் ஊடா­கவும், மழைக்­கா­லத்தில் காளான்கள் முளைப்­பதைப் போன்று புத்தர் சிலை­களை நிறு­வு­வதன் ஊடா­கவும் காணி­களை ஆக்­கி­ர­மிக்­கின்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலை­மைகள் யுத்­தத்தில் வெற்­றி­கொண்ட முன்­னைய அர­சாங்­கத்­தை­விட அதன் பின்னர், சிறு­பான்மை இன மக்­களின் பேரா­த­ர­வுடன் ஆட்சிப்பீடம் ஏறிய புதிய அர­சாங்க காலத்தில் தீவி­ரம் ­பெற்­றி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

இடம்­பெ­யர்வும் காணி அப­க­ரிப்பும்

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்குமிடையில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்த யுத்­த­மோ­தல்­க­ளின்­போது பொது­மக்கள் குறிப்­பாக தமிழ்­மக்­களின் பாது­காப்பு பெரும் அச்­சு­றுத்­த­லுக்காளா­கி­யி­ருந்­தது. உயிர் தப்­பு­வ­தற்­காக உடமை­களைக்கைவிட்டு, உறை­வி­டங்­க­ளையும் வர­லாற்று ரீதி­யாக உரித்­து­டைய காணி­களைக்கைவிட்டு பாது­காப்புத் தேடி மக்கள் அடி­யோடு இடம்­பெ­யர்ந்­தார்கள்.

இந்த இடம்­பெ­யர்வை, தமக்கு சாத­க­மான நிலை­மை­யாகக்கொண்டு பேரி­ன­வா­திகள் தமிழ் மக்­க­ளு­டைய காணி­க­ளையும் கிரா­மங்­க­ளையும் வன­ப­ரி­பா­லன திணைக்­களம் மற்றும் தொல்­லியல் திணைக்­களம் என்­ப­னவற்றின் ஊடாகக் கப­ளீ­கரம் செய்­துள்­ளனர். அந்தத் திணைக்­க­ளங்­களின் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அடா­வ­டித்­த­ன­மாக இந்த காரியம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

மக்கள் இடம்­பெ­யர்ந்­ததன் பின்னர், தேசி­ய பா­து­காப்பு என்ற போர்­வையில் அரச படைகள்  நிலை­கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சி­யத்தை முதன்­மைப்­ப­டுத்தி, தமிழ் மக்­க­ளுக்குச் சட்ட ரீதி­யாகச் சொந்­த­மான பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்ட காணிகள் இரா­ணு­வத்தின் பிடிக்குள் கொண்டு வரப்­பட்­டன.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், ஆயுத மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களிலிருந்து படை­யினர் வெளி­யே­றி­யி­ருக்க வேண்டும். ஆனால் அது இங்கு நடை­பெ­ற­வில்லை. தமிழர்  கிரா­மங்­க­ளிலும் பொது­மக்­க­ளு­டைய காணி­க­ளிலும் படை­யினர் நிரந்­த­ர­மான முகாம்­களை அமைத்து அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  படை­யினர் வச­முள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு, இடம்­பெ­யர்ந்­துள்ள அந்த மக்­களை மீள்­கு­டி­யேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளாலும், ஐ.நா. மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அந்தக் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலை­மையே இன்னும் தொடர்­கின்­றது. புண்­ணி­யத்­திற்­காகக் கிள்ளிக் கொடுப்­பதைப் போன்று படைகள் வச­முள்ள காணிகள் சிறிய சிறிய அள­வி­லேயே கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

யுத்தம் முடிந்து 10 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்ற போதிலும், காணி­களை மீளக் கைய­ளிக்கும் நட­வ­டிக்­கைகள் இன்னும் இழு­பறி நிலை­யி­லேயே இருக்­கின்­றன. காணி­களை மீட்­ப­தற்­காக மக்கள் வீதி­களில் இறங்கி ஆர்ப்­பாட்டம் செய்­தார்கள். கண்­டன ஊர்­வ­லங்­களை நடத்­தி­னார்கள். ஆனால் பலன் கிடைக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து, புதுக்­கு­டி­யி­ருப்பு, கேப்­பாப்­பு­லவு, கிளி­நொச்சி, பர­விப்­பாய்ஞ்சான் உள்­ளிட்ட பல இடங்­களில் தொடர் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மண் மீட்­புக்­கான இந்தப் போராட்டம் கேப்­பாப்­புலவில் முடி­வின்றி இன்னும் தொடர்­கின்­றது.

அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­பதில் ஒரு வகையில் கண்­மூ­டித்­த­ன­மான செயற்­பாடே அரச தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. தேசிய பாது­காப்பு அர­சாங்­கத்தின் முன்­னு­ரிமை பெற்ற ஒரு செயற்­பா­டாக இருந்தபோதிலும் இறை­மை­யுள்ள மக்­களின் குடி­யி­ருப்பு காணி­களை இரா­ணு­வத்தின் பிடியில் வைத்துக்கொண்டு அவற்றை விடு­விப்­ப­தற்கு அர­ச ­ப­டை­களை மேவிச் செயற்­பட முடி­யாத ஒரு நிலை­யி­லேயே அர­சாங்கம் காணப்­ப­டு­கின்­றது. மேலோட்­ட­மான பார்­வையில் இது அபத்­த­மா­னது. ஆனால் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்­கு­மு­றையின் உச்­சக்­கட்ட நட­வ­டிக்­கை­யாக இது அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது என்­பதே உண்­மை­யான நிலைப்­பா­டாகும்.

பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான கிரா­மங்கள், காணி­களில் நிலை­கொண்­டுள்ள படை­யினர், அவற்றை மீளக்கைய­ளிக்கும் போது, அங்­குள்ள பொது­மக்­களின் வீடுகள், பொதுக்­கட்­டி­டங்கள் என்­ப­னவற்றைத் தரை­மட்­ட­மாக்கி வெற்­றுக்­கா­ணி­க­ளா­கவும், பெரு­ம­ளவில் இடி­பா­டுகள் நிறைந்த காட­டர்ந்த பிர­தே­ச­மா­க­வுமே கைய­ளித்­தி­ருக்­கின்­றார்கள். யாழ். மாவட்­டத்தில் கிட்­டத்­தட்ட 3 தசாப்­தங்­க­ளாகக் கைந­ழு­வி­யி­ருந்த வலி­காமம் வடக்குப் பிர­தேச காணிகள் இந்த நிலை­மை­யி­லேயே சிறிது சிறி­தாகக் கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

காஞ்­சி­ர­மோட்­டையின் கதி

அதே­வேளை, சட்டவிதி­களைப் பயன்­ப­டுத்தி இடம்­பெ­யர்ந்­துள்ள பொது­மக்­களின் காணி­களை அப­க­ரிக்­கின்ற கைங்­க­ரி­யத்தில் வன­ப­ரி­பா­லன திணைக்­களம் பகி­ரங்­க­மாக இறங்­கி­யுள்­ளது. குறிப்­பாக வவு­னியா வடக்குப் பிர­தே­ச­மா­கிய நெடுங்­கேணி பிர­தேச செய­லகப் பிரி­வுக்குட்­பட்ட காஞ்­சி­ர­மோட்டை கிராமம், இவ்­வாறு வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்தின் ஆக்­கி­ர­மிப்­புக்குள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

யுத்­த­மோ­தல்கள் தீவி­ர­ம­டை­வ­தற்கு முன்னால், கிரா­மங்கள் தேடு­த­லுக்­காகச் சுற்றிவளைக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் சிவி­லு­டை­யில்­ ஆ­யு­த­மேந்தி வந்து ஆட்­களைக் கைது செய்தும், அடை­யாளம் தெரி­யாத வகையில் ஆட்­களைக் கடத்திச் சென்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நெடுங்­கேணி பிர­தேசம் அச்­சத்தில் உறைந்து போயி­ருந்­தது. வெடி­வைத்­த­ கல்லு பகு­தியில் 3 பேர் இவ்­வாறு அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­க­ளினால் கடத்திச் செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தப் பிர­தே­சத்தில் மக்கள் பெரும் பீதி­ய­டைந்­தி­ருந்­தார்கள். இதனால் தமது சொந்தக் கிரா­மங்­களில் அவர்கள் குடி­யி­ருப்­ப­தற்கு அஞ்சி பாது­காப்புத்தேடி வேறி­டங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தார்கள்.

அவ்­வாறு இடம்­பெ­யர்ந்த கிரா­மங்­களில் காஞ்­சி­ர­மோட்­டையும் ஒன்று. இங்கு வசித்த குடும்­பங்­களில் சில கடல் கடந்து தமி­ழ­கத்தில் சென்று தஞ்­ச­ம­டைந்­தன. ஏனைய குடும்­பங்கள் உள்­ளூ­ரி­லேயே பல இடங்­களில் தஞ்­ச­ம­டைந்து யுத்தம் முடிந்த பின்னர் காலம் தாழ்த்­தியே மீள்­கு­டி­யே­று­வ­தற்­காகத் தமது சொந்தக் காணி­க­ளுக்குத் திரும்­பி­யி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு திரும்­பிய குடும்­பங்கள் அரச அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யு­டனும், மீள்­கு­டி­யேற்ற உத­வித்­திட்­டங்­களின் அடிப்­ப­டை­யிலும்  காடாகக் கிடந்த தமது காணி­களைத் துப்­ப­ுரவு செய்து தற்­கா­லிக வீடு­களை அமைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த மக்கள் அந்தக் காணி­களில் நிரந்­த­ர­மாகக் குடி­யி­ருப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் எத­னையும் மேற்­கொள்ள முடி­யாது. அபி­வி­ருத்­திச்­செ­யற்­பா­டு­களை மேற்­கொள்ளக்கூடாது என்று அங்கு சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் அந்த மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

சொந்­தக்­கி­ரா­மத்­திற்குத் திரும்பி வந்த போதிலும், தமக்கு சட்­ட­ரீ­தி­யாகச் சொந்­த­மான காணி­களில் குடி­யி­ருப்­ப­தற்கு வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் தடை விதித்­த­தை­ய­டுத்து, அவர்கள் திகைப்­ப­டைந்­தார்கள். என்ன செய்­வது என்று தெரி­யாமல் சிவில் நிர்­வாக அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­டார்கள். அதே­போன்று இந்தக் கிரா­மத்­தையும் உள்­ள­டக்­கிய மரு­தோடை கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்­தினர் இந்த நிலைமை குறித்து வட­மா­காண சபை உறுப்­பினர் ஜி.ரி.லிங்­க­நா­தனின் கவ­னத்­திற்குக் கொண்டுவந்து உரிய நட­வ­டிக்கை எடுத்து இந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு வழி­செய்­யு­மாறு கோரி­யி­ருந்­தார்கள்.

மாகா­ண­சபை உறுப்­பினர் லிங்­க­நாதன் இந்த விட­யத்தை ஒரு தீர்­மா­னத்தின் ஊடான தீர்வைப் பெறு­வ­தற்­காக மாவட்ட ஒருங்­கி­ணைப்புக்குழு கூட்­டத்தின் கவ­னத்­திற்கு, அர­சாங்க அதி­ப­ருக்கு எழு­திய ஒரு கடி­தத்தின் ஊடாகக் கொண்­டு­வந்தார்.

மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்­டத்தில் வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரி­களின் இந்தச் செயற்­பாடு கடும் கண்­ட­னத்­திற்குள்­ளா­கி­யது. இத­னை­ய­டுத்து, கூட்­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்த வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் குழுவின் இணைத்­த­லை­வர்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­தி­களும் வாக்­கு­வா­தப்­பட்­டதன் பின்னர், அந்த மக்­க­ளுக்கு எந்த இடை­யூறும் ஏற்­ப­டுத்தக் கூடாது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இருப்­பினும் மறுநாள் அந்தப் பகு­திக்குச் சென்ற வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் அரச உயர் மட்­டத்­திற்கு இந்­த­வி­டயம் கடிதம் மூல­மாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அங்­கி­ருந்து பதில் வரும் வரையில் எந்தவித­மான அபி­வி­ருத்தி வேலை­களும் மேற்­கொள்ளக்கூடாது என அந்த மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்தக் கிரா­மத்தின் காணிகள் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மா­னது என 2005ஆம் ஆண்­ட­ளவில் வர்த்­த­மா­னியின் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்ற ஒரு தக­வலும் உண்டு. எவ்­வா­றா­யினும், இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­று­வது என்­பது சர்­வ­தேச சட்­ட­மு­றை­மை­க­ளுக்கு அமைய இடம்­பெ­யர்ந்த மக்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். உள்ளூர்ச் சட்­டத்­திற்­க­மை­ய இடம்­பெ­யர்ந்­தி­ருந்த போதிலும், இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற வகையில் இறை­மை­யுள்ள அந்த மக்கள் தமது சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­ய­மர்­வது என்­பது அவர்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். அந்த உரி­மையைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் உள்­ளிட்ட எந்த ஒரு தரப்­பி­ன­ருக்கும் உரி­மையும் அதி­கா­ரமும் கிடை­யாது.

இந்த நிலையில் வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் காஞ்­சி­ர­மோட்டை கிரா­மத்து மக்­களை அவர்களுடைய காணிகளில் நிரந்தர கட்டிடங்களோ வேறு அமைப்புக்களையோ கட்டக்கூடாது என்று எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துள்ளார்கள் என்பது கேள்விக்குரியது. வனங்களையும் அவற்றின் வளங்களையும் கண்காணிப்பதும், பாதுகாத்து நிர்வகிப்பதுமே வனபரிபாலன திணைக்களத்தின் வெளிப்படையான  பொறுப்பும் கடமையுமாகும்.

சட்ட ரீதியாகக்குடியேறி வசிப்பதற்கென அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் குடியிருக்க முடியாது என்றோ அல்லது நிரந்தரமான கட்டிடங்களை அமைக்கக்கூடாது என்றோ உத்தரவிடுவதற்கு வனபரிபாலன திணைக்களத்திற்கு எந்த வகையில் அதிகாரம் உள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வது என்பது இயல்பானது. இயற்கையானது. இயற்கைச் சட்ட நெறிமுறைக்கமைய அது தடுக்கப்பட முடியாத உரிமையுமாகும். இதனால்தான் வேறு பல இடங்களில் தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக மண்மீட்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

நிலைமை அவ்வாறிருக்க வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இடையூறு செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் எந்த வகையில் அதிகாரம் பெற்றிருக்கின்றார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவது என்பது அடிப்படை உரிமை சார்ந்த விடயம். அந்த அடிப்படை உரிமையை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்குப் பின்னரும் வனபரிபாலன அதிகாரிகள் மீறியிருப்பது சாதாரண விடயமல்ல. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இதற்கு சிவில் நிர்வாகச்செயற்பாட்டு நெறிமுறைகளின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் நீதியும் நியாயமும் தேடப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்ற அரச தரப்பினருடைய கபடத்தனமான நடவடிக்கைகள் தடுப்பார் எவருமின்றி தொடர்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. அத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-08#page-1


ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்

2 weeks 3 days ago
Maithripala-Ranil-W-Piv-Via-MSs-FB-780x4

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார்.

பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு

மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, தமிழ் மக்­கள் பிரச்­சி­னை­கள் எது­வு­மின்றி வாழ்­வது போன்­ற­தொரு தோற்­றம் வெளித் தெரிந்­தா­லும், உண்மை நிலை அது­வல்ல என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­ கொள்ள வேண்­டும். ஏரா­ள­மான பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம்கொடுத்த வண்­ணம் தமிழர்கள் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர்.

இவற்­றுள் இனப்­பி­ரச்­சினை முக்­கி­ய­ மா­ன­தா­கும். இதற்­குத் தீர்வு காணா­த­தன் கார­ண­மா­கவே இன­மோ­தல்­கள் அடிக்­கடி ஏற்­பட்­ட­தோடு நீண்ட போர் ஒன்­றும் இடம்­பெற்­றது. இவை மீண்­டும் இடம்­பெ­றா­மல் பார்த்­துக் கொள்­வது ஆட்­சி­யா­ளர்­க­ளின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பா­கப் பல­ரும் பேசி­வ­ரு­கின்­ற­னர். அர­ச­த­லை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இதன் உரு­வாக்­கம் தொடர்­பாகத் தமிழ்த் தலை­வர்­க­ளி­டம் பல தட­வை­கள் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­யுள்­ள­னர். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் இதன் கார­ண­மா­கவே புதிய அர­ச­மைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்­பிக்­கை வெளி­யிட்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளும் அதை முற்­று­மு­ழு­தாக நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் அனைத்­தும் ஏமாற்­றத்­தி­லேயே முடிந்­துள்­ளன.

புதிய அர­ச­மைப்பு மிக­மிக அவ­சி­யம்

புதிய அர­ச­மைப்­பின் கீழ் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து வழங்­கு­வ­தன் ஊடாகத் தமி­ழர்­கள் சுயாட்­சி­ யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஒற்­றை­யாட்சி முறை­யி­லான ஆட்­சி­முறை தமி­ழர்­களை அதி­கா­ரங்­கள் எவற்­றை­யும் பெற­மு­டி­யாத நிலைக்­குக் கட்­டிப்­போட்­டுள்­ளது.

மாகாண சபை­கள் அதி­கா­ரங்­கள் எவை­யு­மற்ற வெறும் சபை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இத­னால் எதை­யுமே செய்ய முடி­யாத நிலை­யில் அவை காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர் பகு­தி­க­ளில் அத்­து­மீ­றிய சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம் பெறு­வ­தற்­கும், சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து காணப்­ப­டு­வ­தற்­கும் இதுவே கார­ண­மா­கும். காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தால் இவற்றை மாகாண சபை­க­ளால் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டா­த­தால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடி­ய­வில்லை.

இந்த நாடு மூன்று இனத்­த­வர்­க­ளை முதன்மையானவர்களாகக் கொண்­டது. மத ரீதி­யி­லும் மக்­கள் வேறு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­ற­னர். சிறு­பான்­மை­யின மக்­கள் அடிக்­கடி பாதிப்­புக்­குள்­ளா­வதை இங்கு காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதற்கு, இந்த நாடு தமக்­கு­ரி­ய­தெனப் பெரும்­பான்­மை­யின மக்­கள் கரு­து­வதே கார­ண­மா­கும். சுமார் 70 வீத­மா­ன­பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறு­பான்மை இனத்­த­வரை மதிக்­கின்ற மன­நி­லை­யில் இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும்.

அந்­த­ அள­வுக்கு இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் அவர்­களை மூளைச் சலவை செய்­துள்­ள­னர். இன நல்­லி­ணக்­கம் மக்­க­ளின் அடி­ம­னங்­க­ளி­லி­ருந்து தானா­கவே உரு­வாக வேண்­டும். பிறர் மீதான காழ்ப்­பு­ணர்­வும், வெறுப்­பும் இருக்­கும் வரை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டவே முடி­யாது. இன ஐக்­கி­யத்­தின் வாயி­லா­கவே நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் கொண்­டு­செல்ல முடி­யு­மென்­பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உண­ரும்­போது இன நல்­லி­ணக்­கம் தானா­கவே உரு­வா­கி­வி­டும். ஆனால் அதை அவர்­கள் உண­ரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எவற்றையும் இது­வரை காண­முடியவில்லை.

உரி­மை­கள் மறுக்­கப்­பட்­டால் வன்­முறை வெடிப்­பது வர­லாறு

ஒரு குறிப்­பிட்ட இன மக்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்டு அவர்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே உல­கில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்­கங்­கள் உரு­வெ­டுத்­தன. பாதிக்­கப்­பட்ட இன மக்­கள் தமது உரி­மை­களை அகிம்சை வழி­யில் பெறு­வ­தற்கு இய­லா­து­விட்­டால் ஆயுத நட­வ­டிக்­கை­கள் மூல­மா­க­வா­ வது அவற்­றைப் பெறு­வ­தற்கு முயற்சி செய்­வார்­கள்.

எமது நாட்­டில் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­தும் இத­னால்­தான். ஆனால் அவர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு அழித்­தொ­ழிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆனால் தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான வேட்கை இன்னமும் தணிந்து விட­வில்லை.

ஆகவே ஆட்­சிக்கு மாறி­மாறி வரு­கின்ற பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­கள் இந்த யதார்த்­தத்தை இனி­யா­வது புரிந்­து­ கொண்டு செயற்­ப­டு­வ­து­தான் நாட்­டின் மீட்­சிக்கு வழி­வ­குக்­கும்.

https://newuthayan.com/story/12/ஏமாற்றத்தின்-விளிம்பில்-ஈழத்-தமிழ்-மக்கள்.html

https://www.yarl.com/aggregator/sources/11?page=3

 


சீனாவும் இலங்கை இனப்பிரச்சினையும். – வ.ஐ.ச.ஜெயபாலன்

ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும்….மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை

SAMAKALAM010918-PG03-R1Page1Image0002-ff1965659ac85c2160351b9a77c4705adaf512cb.jpg

 

ஒரு ஒடுக்­கப்­பட்ட இனக்­கு­ழுமம். அதன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள், அவை பற்­றிய அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்­லிம்கள். ரக்கைன் மாநி­லத்தில் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைகள். இவை பற்றி ஐக்­கிய நாடுகள் சபையின் குழு­வொன்று விசா­ரித்­தது.

இந்­தோ­னே­ஷி­யாவின் முன்னாள் சட்­டமா அதிபர் இலங்கை மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­னவர். மர்­சுக்கி தாருஸ்மான் தலை­மை­யி­லான குழு­வினர் வரைந்த அறிக்கை. சுருக்­க­மாக சொன்னால், இன்­னொரு தாருஸ்மான் அறிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரக்கைன் மாநி­லத்தில் தீவிர வன்­மு­றைகள் நிகழ்ந்­தன. கூட்டுப் படு­கொ­லைகள், பாலியல் வன்­பு­ணர்­வுகள், சூறை­யா­டல்கள். இவற்றில் இருந்து உயிர் தப்­பு­வ­தற்­காக இலட்­சக்­க­ணக்­கான மக்கள் புலம்­பெ­யர்ந்­தார்கள்.

ரோஹிங்கிய முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றையை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­கெ­னவே இனச்­சுத்­தி­க­ரிப்­பாக வர்­ணித்­தது. இன்று தாருஸ்மான் அறிக்கை இன அழி­வாக விப­ரித்­துள்­ளது. இந்தக் குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்­கி­றது.

தாருஸ்மான் குழு­வி­ன­ருக்கு மியன்மார் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவர்கள் செய்­மதிப் படங்கள், புகைப்­ப­டங்கள், வீடி­யோக்கள் போன்­ற­வற்றை பரி­சீ­லித்­தனர். சுமார் 875 பேருடன் ஆழ­மான நேர்­கா­ணல்­களை நடத்­தி­னார்கள்.

இவற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை, கடந்த திங்­கட் கி­ழமை வெளி­யா­னது. இந்த அறிக்கை ரக்கைன் மாநி­லத்தில் நிகழ்ந்­த­வற்றை தெளி­வாக படம் பிடித்துக் காட்­டு­கி­றது. வன்­மு­றை­களின் ஆணி­வேர்­களை ஆராய்­கி­றது.

இந்த வன்­மு­றையால் எத்­தனை பேர் இறந்­தார்கள் என்­பது யாருக்கும் தெரி­யாது. எனினும், குறைந்­த­பட்சம் 10,000 மர­ணங்­க­ளா­வது நிகழ்ந்­தி­ருக்­கக்­கூடும் என ஐ.நா.வின் தகவல் அறியும் குழு கூறு­கி­றது.

ரோஹிங்கிய மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­கொ­டு­மை­களின் தன்­மையை அறிக்கை விப­ரிக்­கி­றது. இவை சர்­வ­தேச சட்­டங்­களின் கீழ் மிகவும் தீவி­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளாக இருக்­கக்­கூடும் எனவும் குறிப்­பி­டு­கி­றது.

இவை புதி­யவை அல்ல. ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குத்­தரெஸ் அவர்­களும் விப­ரித்­தவை. இம்­முறை புதிய விடயம் உண்­டெனின், அது ஆறு இரா­ணுவ மேல­தி­கா­ரி­களைப் பெய­ரிட்­டமை தான்.

மியன்­மாரின் இரா­ணுவத் தள­பதி அடங்­க­லாக ஆறு பேர். இனப்­ப­டு­கொலை, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், போர்க் குற்­றங்கள் பற்றி விசா­ரிப்­ப­தாயின் இவர்­க­ளையே முதன்­மைப்­ப­டுத்த வேண்டும் என தாருஸ்மான் அறிக்கை கூறு­கி­றது.

மியன்­மாரின் நிகழ்­நிலைத் தலைவி ஆங் சான் சூகி அம்­மையார் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்கள் பற்­றியும் அறிக்கை பேசு­கி­றது. ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பு வாளா­தி­ருந்து வன்­மு­றை­க­ளுக்கு துணைபோன விதத்தை விப­ரிக்­கி­றது.

ஆன் சான் சூகி உள்­ளிட்ட தலை­வர்கள் இனப்­ப­டு­கொ­லையில் நேர­டி­யாக பங்­கேற்­க­வில்லை. ஆனால், வன்­மு­றை­களின் முன்­னி­லையில் மௌனம் சாதித்து, குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­தார்கள்.

அத்­துடன், ஆட்­சி­யா­ளர்­களை ஆதா­ரங்­களை அழித்து, சர்­வ­தேச சமூ­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு இட­ம­ளிக்க மறுத்­தார்கள் எனவும் தாருஸ்மான் அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்கை சொல்­வதை சாராம்­சப்­ப­டுத்­தலாம். ரக்கைன் மாநி­லத்தில் ரோஹிங்கியர்­களின் படு­கொலை இன-­அ­ழிப்­பிற்கு சம­மா­னது. மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரிகள் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

இந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் பார­தூ­ர­மா­னவை. இவை ஐ.நா. பாது­காப்பு சபையின் கவ­னத்தைப் பெறும். அறிக்­கையில் கூறப்­படும் விட­யங்கள் ஒட்­டு­மொத்த உல­கத்­திற்கும் உரத்துக் கூறப்­படும். அது மாத்­தி­ரமே.

ஏனெனில், தாருஸ்மான் குழு பரிந்துரைக்க மாத்­தி­ரமே முடியும். இவர் குற்­ற­வாளி என்று தீர்­மா­னிக்கும் அதி­காரம் குழு­விற்குக் கிடை­யாது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்கும் அதி­கா­ரமும் அதற்கு இல்லை.

இந்த நிலையில், ரோஹிங்கிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கொடுமை புரிந்­த­வர்கள் முறை­யாக விசா­ரிக்­கப்­ப­டு­வார்­களா, அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை கிடைக்­குமா என்­பது முக்­கி­ய­மான கேள்வி. அதுவே முதன்­மை­யா­னதும் கூட.

இன-­அ­ழிவு, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்றம் போன்­ற­வற்றை விசா­ரிப்­ப­தற்கு பொருத்­த­மான அமைப்­பென்றால், அது ஐ.நா. கட்­ட­மைப்­பிற்குள் வரும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றமே.

அது தவிர, ஐ.நா.வின் தீர்ப்­பா­யங்­களை ஸ்தாபிக்­கலாம். யுகொஸ்­லா­விய நெருக்­கடி, ருவாண்­டாவின் முரண்­பாடு போன்­ற­வற்றில் நிகழ்ந்த அட்­டூ­ழி­யங்­களை விசா­ரிப்­ப­தற்­காக அத்­த­கைய தீர்ப்­பா­யங்கள் ஸ்தாபிக்­கப்­பட்­டன.

ஆனால், ரோஹிங்கிய அக­திகள் விவ­கா­ரத்தை அவ்­விரு நீதி­மன்­றங்­க­ளிலும் பாரப்­ப­டுத்­து­வது அர­சியல் நடை­மு­றை­யாகும். இந்த அர­சியல் ஐ.நா. பாது­காப்பு சபையை சார்ந்­த­தாகக் காணப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு சபையில் வீற்றோ அதி­காரம் படைத்த நாடுகள் நினைக்கும் பட்­சத்தில், சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் விவ­காரம் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தடுக்­கலாம்.

சீனாவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் தண்­டிக்­கப்­ப­டு­வதை சீனா விரும்­ப­மாட்­டாது. ஏனெனில், மியன்­மா­ருடன் கூடு­த­லான வர்த்­தக, பொரு­ளா­தார உற­வு­களைப் பேணும் நாடாக சீனா திகழ்­கி­றது.

அது தவி­ரவும், தமக்கு அரு­கி­லுள்ள நாடுகள் மீது வெளித்­த­லை­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை சீனா அனு­ம­திப்­ப­தில்லை. குறிப்­பாக, மேற்­கு­லகத் தலை­யீ­டுகள் என்றால் சீனா­விற்கு அலர்ஜி.

பூகோள அர­சி­யலை ஆராய்ந்தால், மியன்மார் விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதை ரஷ்­யாவும் விரும்பப் போவ­தில்லை. அந்­நாடும் வீற்றோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தலாம்.

அமெ­ரிக்­காவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் இரா­ணுவ மேல­தி­கா­ரிகள் சிலர் மீது சமீ­பத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒரு­த­லைப்­பட்­ச­மான பொரு­ளா­தாரத் தடை­களை விதித்தார். இவர்­களில் தாருஸ்மான் அறிக்­கையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட­வரும் உள்ளார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்­த­வ­ரையில், சிரியா, ஆப்­கா­னிஸ்தான், யெமன் போன்ற நாடுகள் அள­விற்கு மியன்மார் முக்­கி­ய­மா­னது அல்ல. அங்கு ‘ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்­து­வதில்’ ட்ரம்­பிற்கு அவ்­வ­ள­வாக ஆர்வம் இல்லை.

அது தவிர, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சேரவும் இல்லை. இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபிக்க வழி­வ­குத்த ரோமன் சட்­டத்தில் அமெ­ரிக்­காவும், ரஷ்­யாவும் கைச்­சாத்­திட்­டன. ஆனால் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபித்த நாடு­களுள் ஒன்­றாக பிரிட்டன் திகழ்­கி­றது. முன்னர் பர்மா என்­ற­ழைக்­கப்­பட்ட மியன்­மாரின் கால­னித்­துவ ஆட்­சி­யா­ள­ராக இருந்த பிரிட்டன், பாது­காப்புச் சபையில் மியன்­மாரை வழி­ந­டத்­து­கி­றது.

இது­வரை காலமும் மியன்­மாரை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்­சி­களை பிரிட்டன் ஆட்­சே­பித்து வந்­தது. இந்தப் பிரச்­ச­ினையில் உலக நாடுகள் மத்­தியில் கருத்­தொற்­றுமை இல்­லை­யென பிரிட்டன் கூறி­யது.

இந்த வல்­ல­ரசு நாடு­களின் கபட நாடகம் புதி­யதல்ல. தமக்கு நன்மை தரு­மாயின் மனித உரி­மைகள், போர்க்­குற்­றங்கள் பற்றி பேசுவதும், மாறி நடந்தால் மௌனம் காப்பதும் வல்லரசுகள் காலங்காலமாக அனுசரித்த தந்திரம்.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதி நெருக்கடி பற்றிய தாருஸ்மான் அறிக்கையை ஒருபுறம் தள்ளி வைப்போம். அந்த முஸ்லிம்கள் மீது பாரதூரமான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது.

இன்று குற்றமிழைக்கப்பட்டிருப்பதை அறிந்தும், குற்றமிழைத்தவர்கள் இவர்களென உறுதியாகத் தெரிந்தும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாமல் இருக்கிறது.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதிகள் என்ற பிரச்சினை, மனிதகுல நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விடயம் மாத்திரமல்ல, சர்வதேச சட்டத்தின் ஆற்றலைப் பரிசோதிக்கும் பலப்பரீட்சையாகவும் இருக்கிறது என்பதே உண்மை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-3

https://www.yarl.com/aggregator/sources/11?page=3


இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்

Screen-Shot-2018-09-05-at-2.55.09-PM.png

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால‌ நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை காட்டித்தருகிறது. அத‌னூடாக இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும் போது ஊடகங்களில் நாம் பொதுவாக வாசிப்பதை விட வித்தியாசமானதொரு பார்வையை எம்மால் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வியத் மக

இராணுவத்தின் பங்களிப்பு அல்லது அதன் பங்களிப்பின்னை பற்றிய தலைப்பு இன்றைய இலங்கை அரசியலில் வழமைக்கு மாறான ஒரு சூழலில் மேலெழுந்திருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் நிறுத்தி, பலப்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளால் வழிநடாத்தப்படும் ‘வியத் மக’ எனும் புதிய அரசியல் குழுவின் தோற்றம் சர்ச்சைகளை தூண்டியிருக்கும் அதேவேளை அதிக கவனத்தையும் பெற்றிருக்கிறது. ராஜபக்‌ஷ கூட முன்னாள் இராணுவ அதிகாரியே. இவ்வதிகாரிகள் குழு விடுதலைப் புலிகளது கிளர்ச்சியின் கடைசிக் கட்ட போராட்டத்தில் முன்னணியில் இயங்கியவர்கள். அதன் காரணமாக “போர் வீரர்கள்” எனும் பட்டத்தையும் தமதாக்கிக்கொண்டனர். பிரிவினைவாத அமைப்பை தோற்கடிப்பதில் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையை மீட்டுக்கொடுத்தல் காரணமாக நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை வரைவதில் தமக்கென்றொரு இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக அவரகள் உணர்வது போல் உள்ளது.

இவ்வுணர்வு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள், இலங்கையின் போருக்கு பின்னரான சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளானது நிலைமாறுகால நீதி மற்றும் போர் குற்றங்களுக்கான விசாரணைகளை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துவதன் காரணமாக மேலும் உயர்ந்திருக்கிறது. இப்பின்புலத்தில், விடுதலைப் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியை அடக்கும் போராட்டத்தை திறம்பட வழிநடாத்திய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் தமது தனிநபர் மற்றும் நிறுவன நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தம்மை ஒரு குழுவாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது ஓரளவு தெளிவான விடயமாகும். முன்னாள் கடற்படைத் தளபதியும் பின் 2015 நாடாளுமன்றத் தேர்தலுடன் நாடாளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவருமான சரத் வீரசேகர இம்முயற்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறார் எனலாம்.

வீரசேகர மிக முக்கிய பேச்சாளராக இருக்கும் வியத் மக, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசியல் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பதுதான் அதன் புதிய பரிணாமம் ஆகும். இது ஒரு சமூக இயக்கத்தை ஒத்திருக்கிறது. இலங்கையின் அடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் தலையிடுவதற்கான நிகழ்ச்சி நிரலொன்றும் அதனிடம் இருக்கின்றது. அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கிய பகுதி இது.

எச்சரிக்கை

ஆரம்பத்திலேயே ஓர் எச்சரிக்கை வார்த்தை அவசியப்படுகிறது. இலங்கையின் ஆயுதப் படை மற்றும் நீதித்துறை ஆகிய இரு பொது நிறுவனங்களும் நாட்டின் சமூக மற்றும் அரசியல் தளமாற்றங்களில் ஆற்றும் நிறுவனரீதியான பங்களிப்புகள் இலங்கை ஊடகங்களில் அடிக்கடி வந்துசெல்கின்றன. ஊடகங்கள் சாதாரண அறிவிப்புக்களாக அன்றி, சிறப்பறிக்கைகள் சமர்ப்பிக்குமளவிலான ஆய்வுகள் நோக்கி நகர்வதாக இல்லை என்று தோன்றுகிறது.

இவ்வகையான ஆய்வுகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் சுயாதீனத்துக்கான‌ அச்சுறுத்தல்களாக அந்நிறுவனங்களின் தலைமைகளால் பொருள்கொள்ளப்பட்டு, எதிர்பாராத மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்ற பயம் அதற்கான மூல‌ காரணமாக சிலவேளை இருக்கலாம். விமர்சன ரீதியான பொது கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிறுவனம் நீதித்துறை என்ற ஆழ்ந்த‌ நம்பிக்கையினூடாக தோற்றம்பெற்றிருக்கும் பாரம்பரிய நடைமுறைகள் அந்நிறுவனத்தை பாதுகாக்கின்றன. மறுபுறம் ஆயுதப் படைகளது செயற்பாடுகள் மீதான பொது கண்காணிப்பு தேசிய பாதுகாப்பு சார்ந்த அதன் இயங்குதளங்களில் தலையிடும் நிலைமையை தோற்றுவிக்கலாம் எனும் ஊகத்தினடிப்படையில் அந்நிறுவனம் இயங்குகிறது. இதன் காரணமாக இக்கட்டுரையில், நான் ஓர் அரசியல் ஆய்வாளராக இருப்பினும், எனது கருத்தாக்கங்களையும் சமன்பாடுகளையும் மிக எச்சரிக்கையாகவே பிரயோகிக்கிறேன்.

வியத் மகயில் புதியது

வியத் மக நோக்கி ஒரு அரசியல் ஆய்வாளனின் கவனத்தைப் பெறச் செய்தது எது? இலங்கை அரசியலில் புதியதொரு தோற்றப்பாட்டை அது உள்ளடக்கியிருப்பதும் சுதந்திரத்தின் பின்னரான இலங்கை ஜனநாயகம் பின்பற்றி வந்த சிவில்-இராணுவ தொடர்பை மீள்வடிவமைப்பதற்கான சாத்தியங்களையும் அது கொண்டிருப்பது முக்கிய காரணங்கள். அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை போன்ற பாரம்பரிய ஜனநாயக நிறுவனங்களது கலவையிலும் அதன் வகிபாகங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதனூடாக இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் பிரதியீடொன்றை முன்வைக்குமளவிலான ஓர் வளர்ச்சியாகவும் அது இருக்கிறது.

எனது பார்வையில், UNP, SLFP, SLPP போன்ற அனைத்து சிவில் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமது தேர்தல் உள்ளக பகைகளுடன் சேர்த்து இப்புதிய பரிமாணம் மீதும் கவனம் குவிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

பின்னணி

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, இனநல்லுறவு, சமூக முரண்பாடுகள், தேச பொதுநலன் போன்ற பகுதிகளை முகாமை செய்வதில் பல பின்னடைவுகள் இருப்பினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவன கட்டமைப்பை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டிருக்கிறது எனலாம். இருகட்சிகளுடைய செல்வாக்குடன் கூடிய பலமான பல கட்சியமைப்பு, துடிப்பான சிவில் சமூகம், பரவலாக இயங்கக்கூடிய இடதுசாரி அமைப்பு, வர்த்தக சங்கம், அரசியல் விழிப்புடன் கூடிய பிரஜைகள், கூடிய சதவீனத்தினரின் தேர்தல் பங்கேற்பு போன்றன அவற்றின் மிக அடிப்படை பண்புகள். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக பிரிடிஷ் பாரம்பரியத்தில் உருவான இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் பலமான சிவில் சமூகம் என்பதையும் கருத முடியும்.

இலங்கையும் இந்தியாவும் பாகிஸ்தான் மற்றும் பிற்கால பங்களாதேசை விட முற்றிலும் வித்தியாசப்படும் இடங்களுள் ஒன்று இது. இவ்விரு நாடுகளிலும், சுதந்திரமடைந்து பத்து ஆண்டுகளுக்குள், இராணுவ அதிகாரிகள் கொண்ட அரசியல் குழுக்களால் சிவில் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது. ஜனநாயக ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனமயப்படுத்துவதற்கும் சிவில் அரசியல் தலைமைகள் தோல்வியடைந்தமை அதற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்று.

அதேநேரம், 1962, 1966 களில் தோல்வியுடன் முடிவுற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் அதிகாரத்தில் இருந்த, அதிகாரத்துக்கு வெளியில் இருந்த சிவில் அரசியல் தலைவர்களிடத்தில் இலங்கையின் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னரான தேசத்தை நிர்வகித்தல் மீதான புதியதொரு சிந்தனையை – உடன்பட்ட கருத்து எனவும் கூறலாம்- தோற்றுவித்தன. ஆயுதப்படையையும் பாதுகாப்பு அமைச்சையும் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட சிவில்கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதே அது. அதனை அவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்தது எவ்வாறு என்பது தனியானதொரு கட்டுரையில் விளக்கப்பட வேண்டும். ஓர் ஆய்வுப் பகுதியாகவும் அதனை வடிவமைக்கலாம். 1971 களிலிருந்து – நான்கு தசாப்த காலமாக தொடர்ந்த சிவில் யுத்த நேரத்தில் கூட சிவில்-இராணுவ தொடர்பை நிர்வகித்தலில் UNP மற்றும் SLFP இருகட்சிகளுக்கிடையிலான உடன்பாடு இலங்கையில் ஜனநாயகம் வாழ்வதற்கு குறிப்பிட்டுக் கூறுமளவிலான பங்களிப்பை செய்திருக்கிறது. இலங்கையின் அரசியல் விஞ்ஞான கற்கையில் இத்தலைப்பு போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதும் உண்மையே.

2009 க்குப் பின்னரான மாற்றம்

சிவில்-இராணுவ தொடர்பின் இயல்பில் மாற்றமேற்பட ஆரம்பித்திருக்கிற‌து. இராணுவம் அளவுகடந்த பலம் பெற்றிருந்த சிவில் போர் காலத்திலல்ல மாற்றம் நிகழ்ந்தது. மாறாக, இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு சுமை மிகவும் குறைந்திருக்கும் போரின் பின்னரான காலப்பகுதியில்.

இலங்கையின் போரின் பின்னரான அரசியலில் பாதுகாப்பு அமைச்சு பலம்பொருந்திய நிறுவனமாக தோற்றம்பெற்றதிலிருந்தே வழமைக்கு மாற்றமான போக்கு ஆரம்பித்திருக்கிறது. சிவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கீழே பாதுகாப்பு அமைச்சு இருந்தது. பாதுகாப்புச் செயலாளராக, சிவில் ஜனாதிபதியுடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தார். உண்மையில் அக்கட்டத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ சிவிலியனாகவே இருந்தார். எனினும், அவரது இராணுவ நற்சான்றும் இராணுவ மனோநிலையும் அவரை சிவில் அரச அதிகாரி என்பதிலிருந்து இராணுவ தலைவர் என்ற நிலைக்கு மாற்றியிருக்கிறது.

நீண்ட உரையாடலை சுருக்கமாகக் கூறுவதாயின், 2009-2014 காலப்பிரிவில் இலங்கையின் பொதுக்கொள்கையில், குறிப்பாக பாதுகாப்பு, சட்டம், நீதித்துறை, வெளிநாட்டுதொடர்பு மற்றும் இராஜதந்திரம், கல்வி, நகர அபிவிருத்தி, கலாச்சார விவகாரம், மனித உரிமை, சமாதான முன்னெடுப்புகள் போன்ற பகுதிகளிலெல்லாம் அரசியல் பங்களிப்புக்காக பாதுகாப்புதுறை இயங்கும் போக்கொன்று உருவாக்கப்படுகிறது.

போரின் பின்னரான காலப்பகுதியில் அரசியலிலும் ஆட்சியிலும் உருவான முன்னெப்போதுமில்லாத அவ் ஒருங்கிணைப்பை ஜனவரி 2015 ஆட்சி மாற்றம் தடுத்து நிறுத்தியது. ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணிலுடைய நல்லாட்சி அரசாங்கம் பல மோசமான அரசியல் தோல்விகளை அடைந்தாலும், போரின் பின்னரான இலங்கையில் ஜனநாயக ஆட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தோன்றிய அப்புதிய போக்கை தடுத்து நிறுத்தியமைக்கான பாராட்டை பெற்றே ஆகவேண்டும். இத்தலைப்பு கூட ஓர் ஆய்வுக்கட்டுரையை வேண்டி நிற்கும் தலைப்பு.

பொன்சேகாவின் வருகை

விடுதலைப் புலிகளுக்கெதிரான களப்போராட்டத்தை மிக வெற்றிகரமாக தலைமைதாங்கிச் சென்ற இராணுவ தளபதி சரத் பொன்சேகா இலங்கையின் போருக்குப் பின்னரான அரசியலில் சிவில்-இராணுவ தொடர்பின் இன்னொரு தோற்றப்பாட்டை உருவாக்குகிறார்.

இரு ராஜபக்‌ஷ சகோதரர்களதும் அரசியல் மற்றும் நிறுவன கண்கானிப்பின் கீழ் போராட்டத்தை தலைமைதாங்கி செல்லும் காலப்பகுதிகளிலேயே, குறிப்பாக 2008, 2009 களில், பொன்சேகாவின் தனிப்பட்ட இலக்குகளில் அவ்விருவரும் மிக எச்சரிக்கையாக இருந்தனர். போராட்டக் களத்தில் இராணுவ ரீதியாக பல்வேறுபட்ட அதிகாரங்களை அவர் கொண்டிருந்தார். கொழும்பு சார்ந்த இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் நாட்டின் அதிகாரமிக்க மனிதர்களாக சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்‌ஷ, மகிந்த ராஜபக்‌ஷ ஆகிய மூவரும் – இதே ஒழுங்கில் – கருதப்படுகின்றனர் என்ற‌ நகைச்சுவையொன்று வலம்வந்து கொண்டிருந்தது. போராட்டம் முடிந்தவுடன் ராஜபக்‌ஷ சகோதரர்கள் முன்னெப்போதுமில்லாத வகையிலும் ஆச்சர்யமூட்டும் வகையிலும் பொன்சேகாவை அவரது அதிகாரமிக்க இராணுவ தலைமையிலிருந்து நீக்கியதோடு சந்தேகத்துக்குரிய பதவியுயர்வை வழங்கி ஆயுதம் களையச் செய்தனர். இத்தீர்மானம் தனிப்பட்ட போட்டியாக முன்வைக்கப்பட்டது.

பொன்சேகா கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் இரு கிளை-சதிகளை அது கொண்டிருக்கிறது. 2009 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு சவால்விடும் பொன்சேகாவின் தீர்மானம் அதில் ஒன்று. மிகவும் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரத்தில் பொன்சேகா, ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கிடையிலான தனிப்பட்ட போட்டிகளும் குரோதங்களுமே கோடிட்டுக் காட்டப்பட்டன. பலம் பொருந்திய எதிர்கட்சியாக இருந்த UNP உடைய ஆதரவு பொன்சேகாவுக்குக் கிடைக்கிறது. பலம்பொருந்திய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால்விடும் பொது வேட்பாளராக களம் இறங்குகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடியும் கட்டத்தில், மிக சொற்ப ஊடகவியலாளர்களும் பார்வையாளர்களும் அவதானித்தது போல, பொன்சேகாவுடைய தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் உற்சாகம் UNP தலைவர்களிடத்தில் மெதுமெதுவாக குறைந்து வந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி இரு வாரங்களாக ராஜபக்‌ஷ குழுவின் தாக்குதல் பொன்சேகாவின் தலைமையில் உருவாகி வரும் இராணுவ அரசாங்கத்தின் அபாயம் என்ற கருப்பொருளை சுழல்வதாகவே இருந்தது. கொழும்பில் சில வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பொன்சேகா முன்னால் இராணுவ அதிகாரிகள் குழுவொன்றை, குறிப்பாக தனக்கு விசுவாசமானவர்களை, கடைசி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க மட்டுமன்றி தேர்தல் வெற்றியின் பின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவும் புதிய அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தவும் தெரிவுசெய்திருப்பது ரணில் விக்கிரமசிங்க முகாமை அதிருப்தியடையச் செய்திருக்கிறது என்பது அவற்றுள் முதன்மையானது. UNP தலைமைகளோடு கலந்தாலோசிக்காமலே அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தானாகவே வகுத்ததாகவும் கூறப்பட்டது.

உண்மையில் வதந்திகள் இருந்தன. எனினும், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க இருவருக்குமிடையில் 2009 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுபவர் சிவில் அரசியல் தலைவராகவே தொடர்ந்திருக்க வேண்டும் என்ற‌  இறுதி நேர பரஸ்பர புரிந்துணர்வொன்று இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது ஓர் எடுகோள். இதனை பரீட்சிக்க மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் நேர்காணல் செய்வதே ஏகவழி.

ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் இருவரும் சரத் பொன்சேகா எனும் தோற்றப்பாட்டை எவ்வாறு கையாண்டார்கள்? சிவில்-இராணுவ தொடர்பு பின்புலத்தில் இதனை அணுகும் போது ஆர்வமூட்டக்கூடிய கருத்தொன்றை வடிவமைக்க முடிகிறது. இலங்கை சிவில் அரசியல் தலைவர்களது பழைய ஏகோபித்த முடிவான அரசியல் அபிலாஷைகள் கொண்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் கடுமையான சிவில் கட்டுப்பாட்டின் கீழே வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை தொடர்பவர்களாகவே ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகின்றனர். அவர்களிருவரதும் விவேகமுள்ள அரசியல் நகர்வாக சரத் பொன்சேகாவுக்கு/ பீல்ட் மார்ஷல் எனும் பதவியுயர்வு கொடுத்து, பின் சில முக்கியம் குறைந்த அமைச்சு பதவிகளை கொடுத்ததைக் கருதலாம்.

அடுத்தது என்ன?

கோட்டாபய ராஜபக்‌ஷவுடைய ஜனாதிபதி ஆசைகள், மறைவில்லாத அரசியல் இலக்குகளை கொண்டிருக்கும் முன்னால் சிரேஷ்ட இராணுவ தலைவர்கள் குழுவினால் விளம்பரப்படுத்தடுகின்றன என்பதை இப்பின்னணிகளுடன் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக தோற்றம்பெற்றிருக்கும் இப்போக்கை ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – முன்னணி வகிக்கும் மூன்று சிவில் அரசியல் கட்சிகளை தலைமை தாங்கும் மூன்று சிரேஷ்ட சிவில் அரசியல் தலைவர்கள் – ஆகிய மூவரும் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பது அரசியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் ஆர்வமான ஒன்றாக உள்ளது.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட எழுதி கொழும்பு ரெலிகிராப்பில் வெளியாகிய “Military, Ex-Military, & Current Politics In Sri Lanka” என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் ரிஷாட் நஜிமுடீன்

http://maatram.org/?p=7098


சாமானிய நோக்கில் சமஷ்டி.

க. நவம்-

2 weeks 5 days ago

சமஷ்டி என்றால் என்ன என்று விலாவாரியாக அறிய இந்தத் தேடல் எனக்கு உதவியது. விரும்பியவர்கள் நேரம் எடுத்து வாசித்துத் தெளிவடையலாம்

ஐந்து விரல்களாய்ப் பிரிந்து நில் அவசியமானால் இணைந்து கொள்!

சமகால சர்வதேச அரசியற் போக்கு

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலாக, அனைத்துலக அரசியலில் இருவேறுபட்ட போக்குகள் இடம்பெறலாயின. நடைமுறையில் இருந்துவரும் அரசியற் கட்டமைப்புக்கள் குலைந்து, அதன் விளைவாகப் புதிய தேசிய அடையாளங்கள் முனைப்புப் பெற்று வருதல், ஒன்று. சோவியத் ஒன்றியத்தின் உடைவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் சிதைவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இதேவேளை சுதந்திர நாடுகள் பல தமது இறைமை உரிமைகள் சிலவற்றை விட்டுக் கொடுத்து, பாரிய கட்டமைப்புக்களை நிறுவும் வகையில் ஒன்றுபட ஆரம்பித்துள்ளமை, இரண்டாவது போக்காகும். சமஷ்டி என்ற பெயருடனான கூட்டாட்சி முறையை ஸ்பெயின், பிரேஸில் போன்ற நாடுகள் அண்மைக் காலங்களில் தழுவிக்கொண்டுள்ளன. இதே கூட்டாட்சி முறையின் சில சிறப்பு அம்சங்களை உள்ளடக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் பல ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றியத்தினை நிறுவிக்கொண்டன. இந்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற விருப்புடன் கிரேக்கம், றொமேனியா, பல்கேரியா என்பன உட்பட, மேலும் பல நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனைத்துலகினதும் ஏகபிரதிநிதியாக இருந்து செற்பட்டு வரும் ஐ. நா. அமைப்பை ஏன் ஒரு சமஷ்டி அமைப்பாக மாற்றக்கூடாது என்றவாறான கோரிக்கைகூட அண்மைக் காலங்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மேலாக இனம், மதம், நிறம், மொழி போன்ற காரணங்களின் அடிப்படையிலான தீராத பிரச்சினைகளால் சிதைந்துபோயிருக்கும் நாடுகள் பலவும், இப்பிரச்சினைகளுக்கான பிணி தீர்க்கும் மருந்தாக சஷ்;டியையே பின்பற்ற முன்வருவதையும் இந்நாட்களில் அவதானிக்க முடிகின்றது. ‘சமஷ்டிப் புரட்சியானது முழு உலகையுமே அடித்துச் செல்ல ஆரம்பித்திருக்கின்றது’ என்று டானியல் எலஸார் எனும் அரசியல் விமர்சகர் அண்மையில் குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சமஷ்டி என்றால் என்ன என்பதை சாதாரணரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் மீது மிகச் சிறியதாய் ஒரு பொட்டொளியைப் பாய்ச்சுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

சமஷ்டி என்றால் என்ன?

அரசியல் என்பது அதிகாரத்தை உருவாக்கி அதனைப் பங்கிடும் ஒரு சமூக முறைமையாகும். ஒரு சமூகத்துக்காக அதிகாரத்துடன் கூடிய தீர்மானங்களை எடுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறை, அரசியல் முறை எனப்படும்;. அரசியல் முறையின் பல பிரிவுகளில் ஜனநாயகம் முக்கியமான ஒன்று. ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒற்றை ஆட்சிமுறை, சமஷ்டி ஆட்சிமுறை என்பன இரு பிரதான கூறுகளாகும்.

அதிகாரம் பிளவுபடா வகையில் அதனை நாடு முழுவதும் பிரயோகிப்பது, ஒற்றை ஆட்சிமுறை. இதற்கு பிரித்தானிய, இலங்கை ஆட்சி முறைகள் எமக்கு நன்கு பரிச்சயமான உதாரணங்கள். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுவது சமஷ்டி ஆட்சிமுறை. இது கனடா, இந்தியா, சுவிற்ஸலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது.

சமஷ்டியின் குணாம்சங்கள்

ஒரு சமஷ்டி அமைப்பில் எப்போதும் வரலாறு, இடம், இனம், மதம், மொழி, கலாச்சாரம் போன்ற ஒன்றிணைக்கும் அம்சங்களில் ஒன்றினாலோ அல்லது பலவற்றினாலோ மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட சிறு நாடுகளின் பொது அமைப்பு ஒன்று இருக்கும். கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பொது அமைப்பை சமஷ்டி அல்லது மத்திய அல்லது தேசிய அரசாங்கம் என்றும், சுவிற்ஸலாந்தில் இதனை அரசாங்கம் என்றும், அவுஸ்திரேலியாவில் இதனை பொதுநலவாயம் என்றும் அழைப்பர். இப்பொது அமைப்பின் கீழுள்ள சிறிய அங்கத்துவ நாடுகளை கனடாவில் மாகாணங்கள் / நிலப்பரப்புக்கள் என்றும், இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் மாநிலங்கள் என்றும், சுவிற்ஸலாந்தில் கன்ரோன்கள் என்றும் கூறுவர். சிறிய அங்கத்துவ நாடுகளை, பொது அமைப்பான சமஷ்டி அரசு ஒரு மேலான, பாரிய, மையப்படுத்தப்படாத, தேசிய அமைப்பினுள் ஒன்றுபடுத்தி வைத்திருக்கும். அதே வேளை, ஒவ்வொரு அங்கத்துவ நாடும் தனது சுயாதீனம், சுய அடையாளம் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அது அனுமதிக்கின்றது. அங்கத்துவ நாட்டவர்களிடத்தே தேசிய ஒற்றுமைக்கான விருப்புடன், தத்தமது நாடுகளது சுதந்திரத்தைப் பேணுவதற்கான மன உறுதியும் திடசங்கற்பமும் பிரதான அம்சங்களாகக் காணப்படும்.

சமஷ்டி முறையில் அதிகாரம் சமஷ்டி அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றது. வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கும் என மத்திய அரசும் அங்கத்துவ அரசுகளும் வெவ்வேறு அதிகாரங்களைத் தத்தமக்கென்று வகுத்து வைத்துக்கொள்கின்றன. நாட்டின் பொது விவகாரங்களில் ஒவ்வொரு அங்கத்துவ அரசும் தனது அதிகாரத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்குப் பிரித்துக் கொடுக்கச் சம்மதிக்கின்றது. கனடாவில் குடிவரவு, தேசிய பாதுகாப்பு போன்ற பொறுப்புக்கள் மத்திய அரசிடமும், கல்வி, சுகாதாரம் போன்றவை மாகாண அரசுகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறாக அதிகார மையப்படுத்தாமை சமஷ்டி ஆட்சி முறையின் ஒரு முக்கிய பண்பாகும். மேலும் மத்திய அரசே அண்மைக்காலம் வரை பல நாடுகளில் அதிகாரம் மிக்கதாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது ஒரு காலம் கடந்த நடைமுறையாக இந்நாட்களில் கருதப்படுகின்றது. பதிலாக அங்கத்துவ அரசுகள் கூடுதலான அதிகாரம் பெற்றுவரும் தன்மை தற்போது இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சமஷ்டி ஆட்சி முறையில் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதனால் அவை தம்மைத் தாமே நிர்வகிக்கக்கூடியனவாக அமையப் பெறுகின்றன. இவ்வாறு அதிகாரத்தைப் பரவலாக்கிப் பகிர்ந்தளிப்பதற்கென்று அங்கு அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பரவலாக்கம் வலியுறுத்தப்பட்டிருக்கும். சமஷ்டி ஆட்சிமுறையில் இந்த அரசியல் அமைப்புச் சட்டமே அதியுச்ச அதிகாரத்தைக் கொண்டது. இதன் வழியாகவே அங்கத்துவ அரசுகள் நிறுவப்பட்டு, அவற்றின் அதிகார வரம்புகள் வரையறுக்கப்படுகின்றன. சமஷ்டி அரசியல் அமைப்புச் சட்டம் இறுக்கமானதாகவும், நெகிழ் தன்மை அற்றதாகவும், மக்கள் அங்கீகாரம் இன்றி இலகுவில் மாற்றியமைக்கப்பட முடியாததாகவும் காணப்படும்.

ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு வௌ;வேறு நிறுவனங்கள் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டும் என்ற கொள்கையை சமஷ்டி அரசியல் முறை ஏற்றுக்கொள்கின்றது. சில விடயங்கள் சிறிய உள்ளுர்ப் பிரதேசம் ஒன்றை மட்டும் பாதிப்பதாக இருக்கலாம். வேறுசில, நாடளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு அங்கத்துவ நாட்டுக்குரிய விவகாரம் அதன் அரச நிறுவனத்தினாலேயே தீர்த்து வைக்கப்படுகின்றது. முழு நாட்டுக்கும் பொதுவான விடயம் மத்திய அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்படுகின்றது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை தவிர்ந்த ஏனைய விவகாரங்கள் பெரும்பாலும் கீழ் மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களாலேயே தீர்த்து வைக்கப்படவேண்டும் என்ற ‘குறைந்த பட்சக் கொள்கை’ சமஷ்டி ஆட்சி முறையினால் பின்பற்றப்படுகின்றது. உதாரணமாக அவுஸ்திரேலியாவில் பூர்வீகக் குடியினர் தொடர்பான பிரச்சினைகள் பிரதானமாக தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே பெருமளவில் கூர்மையடைந்திருந்தது. இதனால் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அம்மாநில அரசு, பூர்வீகக் குடியினருக்கான நிலவுரிமை மற்றும் சமூக நல சீர்திருத்தங்கள் பலவற்றை அறிமுகம் செய்தது. அதில் அந்த நாட்டின் பொதுநலவாய அரசு தலையிட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

சமஷ்டிக்குச் சாதகமான சூழல்கள்

• சமஷ்டியை விரும்பும் மனோபாவம் சகல தரப்பினரிடத்தும் காணப்படவேண்டும். புவியியல், வரலாறு, இனம் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களிடத்தே எல்லோரும் ஒரே தேசிய இனம் என்ற மனப்பான்மை இருத்தல் வேண்டும். அத்துடன் ஒன்றுபடுதலுக்கான விருப்பும் நாட்டு மக்களிடத்தே இருத்தல் வேண்டும். இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தமிழ் நாடு, காஷ்மீர், பஞ்சாப், அஸாம் போன்ற மாநிலங்களில் பிரிவினைக் கோரிக்கைகள் தீவிரமடைந்திருந்தன. தற்போது தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய பல மாநிலங்களில் இது தொடர்பாக இடம்பெற்று வரும் வன்செயல்களுடன் கூடிய போராட்டங்கள் காரணமாக, இந்தியாவில் உறுதியற்ற சமஷ்டி முறையே காணப்படுகின்றது. கனடாவில் பாரிய வன்செயல்களின்றி இடம்பெற்று வரும் கியுபெக் பிரிவினைப் போராட்டம் காரணமாக இங்கு ஓரளவு உறுதியான சமஷ்டி நிலவி வருகின்றது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் சுவிற்ஸலாந்து நாட்டவர்களிடமோ சமஷ்டியை விரும்பும் மனோபாவமும், தேசிய இனம் என்ற மனப்பான்மையும், ஒன்றுபடுதலுக்கான விருப்பமும் காணப்படுவதால் அங்கு உறுதியான சமஷ்டி நிலவி வருகின்றது.

• ஓர் உறுப்பு நாட்டின்மீது ஏனையன அதிகாரம் செலுத்தாத வாறு, சகல அங்கத்துவ அரசுகளும் சம அந்தஸ்தும் பலமும் உடையனவாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஊடாக அங்கத்துவ நாடுகளுக்குள் அந்தஸ்தும் அதிகாரமும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுதல் அவசியம். தவறின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே போட்டிகளும் மோதல்களும் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது போய்விடும். மேலதிகமான அல்லது விசேடமான அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கனடாவின் கியுபெக் மாநிலம் விடுத்துவரும் கோரிக்கை இதன் காரணமாகவே ஏனைய மாநிலங்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. கியுபெக் மாகாணத்துக்கு விசேட அந்தஸ்து வழங்குவதற்கென மேற்கொள்ளப்பட்ட 1987 மீச்லேக், 1992 சார்லற்ரவுன் உடன்படிக்கைகள் ஏனைய ஆங்கில மாநிலங்களால் தோற்கடிக்கப்பட்டன. சமச்சீரற்ற சமஷ்டிக்கு நாட்டை இட்டுச் செல்லக்கூடிய இவ்வாறான விசேட அந்தஸ்து, கியுபெக் மாநிலத்தின் அரசியல், பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிடும் என்ற அச்சமே இந்த நிராகரிப்புக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால் மேலதிகமான அதிகாரங்களைப் பெறுவதற்கு மட்டுமன்றி தேசிய அங்கீகாரம் ஒன்றை உறுதி செய்துகொள்வதற்காகவுமே தேசிய சிறுபான்மையோர் விசேட அந்தஸ்தைக் கோருகின்றனர் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். தேசிய சிறுபான்மையோர்க்கு அல்லது பின்தள்ளப்பட்ட இனத்தவர்களுக்கு – பிரதேசத்தவர்களுக்கு, பொறுமை மிக்க அரசியல் கலாச்சாரத்தின் கீழ் உண்மையான சுயாதிக்கம், சுதந்திரம் என்பவற்றை வழங்குவதே பிரிவினைவாதக் கோரிக்கையை பலவீனப்படுத்தும். சமஷ்டி ஆட்சி முறைக்கு வலுவூட்டும். இந்த நோக்குடன் முயற்சிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டதன் விளைவாக கனேடிய சமஷ்டி தனது உறுதிச் சமநிலையை இழந்ததுள்ளதாகக் கூறப்படுகின்றது.

• உறுப்பு நாடு மீதான பற்றும் சமஷ்டி நாட்டின் மீதான பற்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று சமமாக இருத்தல் வேண்டும். உறுப்பு நாடு மீது பற்று அதிகமானால் சமஷ்டி உடைந்து, பிரிவினை ஏற்படும். சோவியத் ஒன்றியத்துக்கும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் நேர்ந்த கதி இதுவேயாகும். அதே போன்று சமஷ்டி நாட்டின் மீதான அளவு கடந்த பற்றுதல், ஒற்றை ஆட்சியை ஏற்படுத்திவிடும். 50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில் மக்கள் சமஷ;டி மீது அதிக பற்றுதலும் மதிப்பும் நாட்டமும் கொண்டுள்ள காரணத்தினால் மாநில அரசுகள் வலுவிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வலுவடைந்து வருதல் அவதானிக்கப்படுகின்றது.

• அங்கத்துவ நாட்டின் மீதான பற்றுதலையும் விஞ்சிய பொதுவான தேசாபிமானம் இல்லாதபோதும் சமஷ்டி தோல்வி அடைந்துவிடும். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இந்நிலைமை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்தியா மீதான தேசாபிமானத்துக்கும் மேலாக பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், அஸாம், திரிபுரா போன்ற பல மாநிலத்தவர்களும் தத்தமது பிரதேசங்கள் மீது அதீத பற்றுதலும் அபிமானமும் கொண்டு காணப்படுதல் இந்திய சமஷ்டிக்கு ஒரு பலத்த சவாலாகவே இருந்து வருகின்றது.

• சில சமூக, அரசியல், பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கென சமஷ்டி முறையில் அங்கத்துவ அரசுகள் ஐந்து விரல்கள் போலத் தனித் தனியே சுதந்திரமான அரசுகளாக இருக்க விரும்ப வேண்டும். அதேபோன்று அவசியமான, பாதுகாப்பு போன்ற வேறுசில நோக்கங்களுக்காக ஒன்றுபடவேண்டும் என்ற விருப்பும் அவற்றிற்கிடையே இருக்க வேண்டும். கனடாவின் மாகாணங்களான அல்பேர்ட்டா தனது எண்ணெய் வளத்தையும், சாஸ்கச்சுவான் தனது விவசாய வளத்தையும், பிரிட்டிஷ் கொலம்பியா தனது வன வளத்தையும், நோவஸ்கோஷியா, நியூ ஃபவுண்லாந்து என்பன தமது கடல் வளத்தையும் பயன்படுத்தி, பிரதேச ரீதியில் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கென, தனிப்பட்ட சுதந்திர அலகுகளாக இயங்க விரும்பின. இதேவேளை நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘யானை ஒன்றுக்கருகே படுத்துறங்கும் நாடு, கனடா’ என்ற முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் கூற்று, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக கனடாவின் மாகாணங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. இராணுவப் பாதுகாப்பின்மையும், அதனால் உண்டான பீதியும், பொதுவான இராணுவப் பாதுகாப்பு அவசியம் என்ற எண்ணமும் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சமஷ்டிக்கான சில முக்கிய காரணங்களாகும்.

• கொள்கை ஆக்கத்தின்போது மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் அவசியம். இந்த உறவுகளும் தொடர்புகளும் சட்ட விதிமுறைகளுக்கமையவே இடம்பெற வேண்டும். இவற்றிற்கிடையிலான முரண்பாடுகளும் உடன்பாடின்மைகளும் மோதல்களோ அல்லது சண்டைகளோ இன்றிச் சமாதானமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். மேலும் அங்கத்துவ அரசுகளிடையே சச்சரவுகள் ஏற்படும்போதும், அவற்றிற்கும் மத்திய அரசுக்கும் பிணக்குகள் ஏற்படும்போதும் மத்தியஸ்தம் செய்வதற்கென சமஷ்டி நீதிமன்றம் நிறுவுவதற்கான விசேட நீதி ஒழுங்குகளும் இருத்தல் அவசியம்.

சமஷ்டியின் நன்மைகள்

• பன்முகப்படுத்தப்பட்ட, பிரதேச அடிப்படையிலான வழிமுறைகளில் ஒரு நாட்டின் அபிவிருத்தியை சமஷ்டி ஆட்சிமுறை ஊக்குவிக்கின்றது.

• சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கெனத் தனித்துவமான, புதுமையான வழிமுறைகளைக் கையாள்வதற்கு சமஷ்டி ஆட்சிமுறை அனுமதிக்கின்றது.

• பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குச் சமஷ்டி தடைபோடுகின்றது.

• மக்களுக்கு மிக நெருக்கமாக அங்கத்துவ அரசு இருப்பதை சமஷ்டி உறுதி செய்கின்றது.

• பொதுவான இராணுவப் பாதுகாப்பை ஏற்படுத்தி, அச்சமின்றி மக்கள் வாழ இது உதவுகின்றது.

• அந்நிய ஆதிக்கத்திலிருக்க விரும்பாமல் சுதந்திரமாக இருப்பதற்கும், அதன் பொருட்டு சிறிய அரசுகள் அல்லது சமூகங்கள் விரும்பி ஒன்றுபடுவதற்கும் இது உதவுகின்றது.

• மொழி, இனம், மதம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமைப்பாடு உடைய சமூகங்கள் சமஷ்டி ஆட்சியில் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் இது உதவுகின்றது.

சமஷ்டியின் தீமைகள்

• ஒரு நாட்டிற்கான பொதுக் கொள்கைகளின் பிரதான பகுதிகள் சிலவற்றை அலட்சியம் செய்துவிடுவதற்கு சமஷ்டி சில சமயங்களில் வழிவகுத்துவிடுகின்றது.

• ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுபட்ட முரணான கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கும் சமஷ்டி காரணமாக அமைந்துவிடுகின்றது.

• மாநிலங்களிடையே சமத்துவம் இல்லாமை ஏற்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டிகளும் பொறாமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

• ஒரு மத்திய அரசு, பல அங்கத்துவ அரசுகள், ஏராளமான உள்ளூர் ஆட்சி சபைகள் ஆகியவற்றை சமஷ்டி முறை ஏற்படுத்துவதனால் அதிக பண விரயம் ஏற்பட இடமுண்டு.

• பலவித வரிச்சுமைகளை மக்கள் சுமக்கவேண்டி ஏற்படுகின்றது.

• பல அதிகாரங்களுக்கு மக்கள் அடிபணிய வேண்டியிருக்கின்றது.

சமஷ்டி குறித்து முடிவாக

ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து உறுதிசெய்து கொள்வதற்குச் சமஷ்டி ஒரு நல்ல கருவி என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்த சமஷ்டி அமைப்பின் உறுதியானது முன்னர் கூறப்பட்ட பல அம்சங்களுடன் அரசியல் அமைப்புச் சட்டம், நிதி ஏற்பாடுகள், கட்சி அமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் தங்கியிருக்கின்றது. மேலும் அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது எனக் கருதப்படுகின்ற போதிலும், சமஷ்டி அமைப்பு ஒன்றில் அது பிளவுபட்டிருக்கின்றது என்பதுவே உண்மையாகும். இந்த யாதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, மாநில அடிப்படையில் இறைமையின் உண்மையான செயற்படுதன்மையை அங்கீகரிப்பதே சமஷ்டியின் உறுதி நிலைக்கு உத்தரவாதமளிக்கும். குறிப்பாக இன, மத, மொழி அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் கொண்ட சமஷ்டிக்கு இது மிகமிக இன்றியமையாததாகும்.

சில நாடுகளில் மத்திய அரசுக்கும் தேசிய சிறுபான்மையினருக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் காரணமாக இடம்பெற்று வரும் மோதல்களை ‘மூன்றாம் உலக யுத்தம்’ என்று இக்கால அரசியல் விமர்சகர்கள் சிலர் பெயரிட்டுள்ளனர். மயன்மார், திபெத், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் சமஷ்டியின் மிக முக்கிய மூலகமான பிரதேச சுயாட்சியை வேண்டி தேசிய சிறுபான்மையினர் தத்தமது நாட்டு அரசுகளுடன் போராடி வருவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தமது தனித்துவங்களைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டிக் காத்தவாறு, ஒன்றிணைந்து வாழ முடியும் என நிரூபித்துள்ள சமஷ்டி முறை, இந்த யுத்தங்களுக்கு உகந்த பரிகாரமாக அமைய முடியும் என்றும் இதன் காரணமாகவே இன்று பல நாடுகள் சமஷ்டி குறித்து ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன என்றும் இவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘ஒன்றோடொன்று போட்டியிடும் – சிலவேளைகளில் முரண்பட்டு மோதிக்கொள்ளும் – வேறுபாடுடமையை ஏற்று, அதனை உள்வாங்கி, செயற்படும் திறனிலேயே சமஷ்டியின் வெற்றி பெரிதும் தங்கியிருக்கின்றது. சகிப்புத்தன்மை, மரியாதை, விட்டுக்கொடுப்பு, பேரம்பேசல், பரஸ்பர அங்கீகாரம் என்பன அத்திறனின் முக்கிய கூறுகள். சுயாதிக்கத்துடன் கூடிய ஒன்றிணைப்பு அதன் உயிர் நாடி’ என்ற மைக்கல் பேர்கஸ் எனும் அரசியல் ஆய்வாளரது கருத்து இங்கு மிகுந்த கவனிப்புக்குரியது. சமஷ்டியில் உள்ள பலவீனங்கள் சிலவற்றிற்கும் மேலாக, பலங்கள் பலவற்றிற்காக அதனை உலக நாடுகள் பல இன்று பெரிதும் விரும்புகின்றன. இதுவே சமஷ்டியின் வெற்றி என்று பல நாடுகள் கருதுகின்றன!

https://knavam.wordpress.com/2013/01/02/சாமானிய-நோக்கில்-சமஷ்டி/

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply