திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் வரலாறு

Picture

திருவள்ளுவர் காலம்
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
திருக்குறள் காலம்
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருவள்ளுவர்

திருவள்ளுவரின் பிறப்பு முதலான வரலாற்றை அறுதியிட்டு கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில் அவர் தாயார் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும் கூறுவோர் பலர் உள்ளனர். இவர் வாசுகி என்பவரை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது.இவர் உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்கப்படும் விதத்தில் குறள் வெண்பாக்களால் ஆன செய்யுள்களை இயற்றினார். மொத்தம் ஆயிரத்து முன்னூற்று முப்பது பாடல்கள், நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் திருக்குறள் என வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தலைப்பில் அமைந்துள்ளது. அதிகாரத்திற்கு பத்து பாடல்கள் அமைந்துள்ளன.

இவருக்கு சென்னை மைலாப்பூரில் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவின் தென்முனையான குமரிக் கடலுள் நூற்று முப்பத்துமூன்று அடி உயத்தில் கல்லினாலான சிலை அமைக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை 1921 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினர் கண்டு பிடித்ததாக சொல்லப்படுகிறது. திருக்குறளை வள்ளுவர் தமிழில் எழுதவில்லை. திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார்.

கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம்.

இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள். மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் திருவள்ளுவரைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மணக்குடவர் எப்போதோ எழுதிய மூலத் தொகுப்பை கண்டு பிடித்து சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலில் அச்சில் ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் என்பவர். திருவள்ளுவர் யார் மணக்குடவர் யார் இவர்களிருவரும் எந்த இருப்பிடத்தில் எந்த காலத்தில் இருந்தவர்கள் திருவள்ளுவருக்கும் மணக்குடவருக்கும் இடைப்பட்ட தொடர்பு நட்பா அல்லது தொப்புள் கொடி உறவா என்பன பற்றிய விவரங்களை தஞ்சை ஞானப்பிரகாசன் முதன் முதலாக அச்சில் ஏற்றிய திருக்குறள் முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை.

1330 பாக்கள் உள்ள திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள் 42,194.திருக்குறள் முதன் முதலில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது. குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார். மொத்தம் நூற்றி முப்பத்திமூன்று அதிகாரங்களாகும். 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஆராய்ந்து கண்டறிந்த பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினரும் இந்த அடிப்படை விவரங்களை குறிப்பிடவில்லை. காங்கிரஸிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றிய திராவிட கட்சி ஆட்சிகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவராக இருந்த அறிஞர் அண்ணாதுரை அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராக இருந்தவர் என்ற காரணத்தினால் 1971 ல் அரசு அலுவலகங்களில் கிறிஸ்து பிறந்த ஆண்டுக்கு போட்டியாக திருவள்ளுவர் பிறந்த ஆண்டும் பின்பற்றப்பட வேண்டு மென்ற ஆணையிட்டிருந்தும் 1981ல் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சியில் தான் முதன் முதலாக அரசு அலுவலகங்களிலும் நாட்காட்டிகளிலும் அது நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு தமிழக பஞ்சாங்கங்களில் சேர்க்கப்பட்டது.

திருவள்ளுவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

தமிழ் என்ற வார்த்தை திருக்குறளில் இல்லாத போது அது தமிழினத்தை சார்ந்த நூலாக கருத முடியாது. இதனை தெரிந்தே அதனை உலக பொது மறை என மாற்றி விட்டார்கள் போலும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்த உலக பொது மறை விளம்பரம் தமிழக ஆட்சியாளர்களிடமும் நாத்திக வாதிகளாக மாறிய தமிழ் புலவர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் சிக்கி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

திருக்குறளில் வள்ளுவர் மனித வாழ்க்கையில் கடை பிடித்த அல்லது கடை பிடித்துதுணர்ந்த யதார்த்த உலக அனுபவ அல்லது பட்டறிவு கோட்பாடுகளை படித்தறிந்த 45 பேர்கள் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறளில் வட மொழி சொற்கள் விரவி எழுதப்பட்டுள்ளன. அதில் ஔ என்ற வார்த்தை இல்லை.

திருக்குறளில் மூன்று ஒன்பது எண்களைத் தவிர மற்ற வரிசை எண்கள் 1 2 4 5 6 7 8 10 ஏராளமாக கையாளப்பட்டுள்ளன. கணித மேதை இராமனுஜம் கண்டு பிடித்த 1 முதல் 10 வரையுள்ள எண்கள் திருவள்ளுவர் காலத்திலோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மணக்குடவர் காலத்திலோ பயன் பாட்டில் இல்லை. அது சென்ற நூற்றாண்டு நிகழ்வு என்பதால் முதலில் திருக்குறளை அச்சில் ஏற்றிய தஞ்சை ஞானபிரகாசன் என்பவரே எண் வரிசைகளை அதில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள நல்ல செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூல கர்த்தாக்களின் முழு வரலாற்று விவரம் சரியான ஆதாரங்களுடன் தெரியவில்லை. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை அரசு அலுவலகங்களில் பயன் படுத்த வேண்டு மென்று 1971ல் ஆணையிட்ட தமிழக அரசும் மேற்படி அடிப்படை ஆதாரங்களை முறையாக ஆய்ந்து மக்களிடம் வெளிப்படுத்த வில்லை. திருக்குறளில் கூறப்பட்டவைகள் அனைத்தும் உள்ளபடியே அப்படியே திருவள்ளுவர் கூறியது தானா என்பதை அவருக்குப் பின்னர் அதனை பல கால கட்டங்களில் பின்பற்றி எழுதியவர்கள் மொழி பெயர்த்தவர்கள் உரை எழுதியவர்கள் அச்சுக்கு கொண்டு சென்றவர்கள் எவரும் ஆராய்ந்து தெரிவிக்கவில்லை. அவர்கள் திருக்குறள் தமிழிலக்கண வரம்பிற்குட்பட்டதா என்பதையும் ஆராய்ந்து உரை நடை எழுதியதாக தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர் அவர்களுக்கு தெரிந்த பல செய்திகளையும் சிறிது சிறிதாக உள்ளே நுழைத்து தொகுத்து திருக்குறளை உறுவாக்கி யிருக்க வேண்டும்.

திருக்குறள் மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம் பொருள் காமம் என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உணர்த்துவதுடன் அதில் உள்ள குறை நிறைகளை நிதானமாக சுட்டிக்காட்டி மனித இனத்தை திருத்த முற்படுவதால் மின்சாரம் ஆகாய விமானம் ரேடியோ போன்ற மனித வாழ்வு மேம்பாட்டுக்குத் தேவையான வெளிநாட்டவர்களின் கண்டு பிடிப்புகளைப் போன்று விஞ்ஞான அறிவியிலில் அக்கறையில்லாமல் தமிழக தெருக்கூத்துகளிலும் டிராமாக்களிலும் வட நாட்டு இதிகாசங்களையும் புராணங்களையும் மக்களிடம் பரப்பி விட்டுக் கொண்டிருந்த அப்போதைய தமிழினத்தவரில் ஞானப்பிரகாசன் போன்ற நல்லவர் ஒருவர் யாராலோ எழுதப்பட்டு யாராலோ தொகுக்கப்பட்டதனை அச்சில் ஏற்றி வெளி உலகுக்கு கொண்டு வந்து பின்னால் வரும் அரசியல் தலைவர்களுக்கு பேருதவி செய்துள்ளது மறக்க முடியாதது.

அவருக்கும் ஒரு சிலை திருவள்ளுவர் சிலை அருகே அமைத்திருக்க வேண்டும். அவர் அச்சேற்றிய திருக்குறள் ஒரு நிரந்தர இலக்கிய நூலாகி திருவள்ளுவர் சிலைகளுடன் தமிழுலகில் தனித் தன்மையாக உலா வருவதும் உலக அந்தஸ்து பெற்று விட்டதும் தமிழுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லலாம்.

திருக்குறள் அரங்கேற்றம்

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300 க்கும் கி.பி.250 க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும் கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொற்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.

வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று.”

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறள் உரை

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்

1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு.
2. பதினெண்கீழ்க்கணக்கு.
3. ஐம்பெருங்காப்பியங்கள்.
4. ஐஞ்சிறு காப்பியங்கள்.இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
குறள் பெயர் வரலாறு

திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்

நூல் அமைப்பு

“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்” ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
அறத்துப்பால்
பாயிரம்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
பொருட்பால்
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
குடியியல்
காமத்துப்பால்
களவியல்
கற்பியல்
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
2. திருக்குறள் – 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
5. கற்பம் – 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
12. முப்புக்குரு – 11 பாக்கள்
13. கவுன மணி – 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
15. குருநூல் – 51 பாக்கள்நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . இந்த சிலையை வடிவமைத்தவர் , பிரபல சிற்பி , கணபதி ஸ்தபதி என்பவர்.சென்னையில் வள்ளுவர் நினைவாக , வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

லண்டன்ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள “ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்” என்னும் கல்வி நிறுவனத்தில் , வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள்,அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், திருவள்ளுவர் மறைந்தாலும்,
எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

திருவள்ளுவர் ஆசானுக்கெல்லாம் ஆசான்.அவரது புகழ் உலகம் முடியும்வரை நிலைத்து நிற்கும் என்றால் அது மிகையல்ல.

திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்

செந்நாப் புலவர்
செந்தாப் போதார்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
தெய்வத் திருவள்ளுவர்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
தெய்வப் புலவர்
தேவர்
தேவர் திருவள்ளுவர்
தேவிற் சிறந்த திருவள்ளுவர்
நாயனார்
புலவர்
பெருநாவலர்
பொய்ய மொழியார்
பொய்யில் புலவர்
மாதாநுபங்கியார்
முதற் பாவலர்
வள்ளுவ தேவன்(ர்)
வள்ளுவர்
திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்
அறம்
இரண்டு
உத்தரவேதம்
எழுதுண்டமறை
குறள்
தமிழ்மறை
திருவள்ளுவப் பயன்
திருவள்ளுவர்
தெய்வநூல்
தெய்வமாமறை
நம் மறை
பழமொழி
பால்முறை
புகழ்ச்சி நூல்
பொது மறை
பொய்யா மொழி
பொருளுரை
முதுநெறி
முதுமொழி
முப்பால்
முப்பொருள்
மெய்வைத்தசொல்
வள்ளுவ தேவன் வசனம்
வள்ளுவம்
வள்ளுவ மாலை
வள்ளுவர்
வள்ளுவர் வாய்மொழி
வள்ளுவர் வைப்பு
வள்ளுவன் வாய்ச்சொல்
வாய்மை
வாயுறை வாழ்த்து
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை”
“மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்”
“மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்கள்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்.திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு -1812
திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் -700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் -1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247  இல் –  37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் -அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றுமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து -ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து -னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் -ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் –மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10 ஆவது உரையாசிரியர் –பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் பற்றி நாம் அறியாதவை

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் உண்மை இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.  இது ஒரு குத்து மதிப்புத்தான். திருவள்ளுவர் பிறந்து இந்த ஆண்டுடன் 2049 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லாப மதத்தினருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050 இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று. (திருவள்ளுவர் மாலை)

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

வள்ளுவரின் பிறப்பிடம்

மண்ணகத்தில் முதன்முதலில் மக்களினம் தோன்றிய நாடு குமரிக்கண்டம் என்பர் ஆராய்ச்சியாளர்கள். இது தற்போதைய இந்தியப் பெருங்கடல் உள்ள பெரும் பகுதியில் மூழ்கிக்கிடக்கும் ஒரு பரந்த நிலப்பரப்பாகும். இதனை நம் முன்னோர்கள் குமரிக்கண்டம் என்றும் மேனாட்டினர் இலெமூரியா என்றும் அழைத்துள்ளனர். இங்கு குமரிக்கோடு என்ற பெரும் மலைத்தொடரும் பஃறுளியாறு என்ற ஒரு பெரும் நதி ஓடியதாகவும் இவை கடல் கோளுக்கு இரையாயின என்று இளங்கோவடிகளின் வாய்மொழியாலும், புறநானூறு (9:10 -11) இறையனார் களவியல் உரையும், சிலப்பதிகாரமும் கூறுகின்றன.அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில் குமரிகண்டத்தில் நாற்பத்தொன்பது நாடுகளைப்பற்றிய குறிப்புகளையும் தருகிறார்.

கடல் கொண்ட குமரியில் தான் தலைச்சங்கம் நடை பெற்ற தென்மதுரையும், இடைச்சங்க கபடாபுரமும் இருந்தன என்றும் கூறுகிறார்.சுவாமி விபுலானந்த அடிகளும் இதையே கூறியுள்ளார்.அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நாடுகளில் தெங்கநாடும், குறும்பனை நாடும் இன்று குமரி மாவட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து வந்துள்ளன என்றும் இன்றைய தேங்காப்பட்டினமும், குறும்பனையும் மேல் காட்டிய நாடுகளின் தலைநகரங்களாகத் திகழ்ந்தன என்றும் அறிய முடிகிறது.கடல் கொண்ட குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளியாறு, பறளியாறாகி இன்று பழையாறு என்று அழைக்கப்படுகிறது. திராவிட ஒப்பிலக்கண ஆசான் டாக்டர் கால்டுவெல் இப்பகுதியை இந்த ஆற்றின் பெயராலேயே பறளி நாடு என்று குறிப்பிடுகிறார்.

வள்ளுவரின் பிறப்பிடம் ஒரு விவாதத்திற்குரிய இடமாகவே இருந்து வருகிறது. வள்ளுவரின் கோவில் சென்னை மைலாப்பூரில் இருப்பதால் அதனை அவரின் பிறப்பிடமாக ஒருசிலர் கூறுவதும் உண்டு.

“உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கச் சென்ப இப்பக்கம்
மாதாநுபங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற் கூடற் கச்சு”

என்று கூறும் திருவள்ளுவ மாலையிலே வரும் பாடலுக்கு உபகேசியை மணந்த கண்ணபிரான் வடமதுரைக்கு அச்சு ஆவார்.
அது போல் திருக்குறள் படைத்த மாதாநுபங்கியும் செந்நாப் போதருமாகிய திருவள்ளுவர் தென்மதுரைக்கு அச்சு ஆவர் என்று கூறி வள்ளுவர் பிறந்த இடம் மதுரை என்பர்.

இங்கு முக்கியமாக கவணிக்கப்படவேண்டிய சொல் “புனற் கூடல்” என்ற சொல்லாகும்.

“புனற் கூடல்” என்பது பஃறுளியாறும் முக்கடல் நீறும் ஒன்று சேரும் இடம் என்பதனையே குறிக்கும். மேலும் மதுரை மாநகரை “கூடல்” என்று திருமுருகாற்றுப்படையும், “நான்மாடக் கூடல்” என கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. மதுரையையை “புனற்கூடல்” என்று இலக்கியமோ, கல்வெட்டோ அழைக்கவில்லை.வள்ளுவர் பிறந்தது தென்மதுரையாகிய குமரிமாவட்டம் அல்லது கடல் கொண்ட தென்குமரியின் புதைந்த மாநிலமாகவும் இருக்கலாம். அல்லது இன்றைய கன்னியாகுமரியாகவும் இருப்பதற்கு வாய்புகள்அதிகம்.மேலும் இன்றைய மைலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வணமாகவே இருந்துள்ளது. தனது கடைசி காலத்தில் வள்ளுவர் அமைதி தேடி அங்கு சென்று மடிந்திருக்கலாம். உக்கிரபாண்டிய மன்னனின் சபையில் தான் திருக்குறள் அரங்கேரியதாக வாய்மொழிசெய்திகள் உண்டு.இது உண்மையாகின் அது உக்கிரபாண்டிய மன்னனின் கபடாபுரத்தையோ அல்லது தென்மதுரையையோ தான் குறிப்பிடும். தற்போதைய கூடல் மாநகராகிய மதுரையையை அல்ல என்பதை நாம் அறிதல் வேண்டும்.

குமரிமாவட்டம் பன்டைய மலைநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் “கோடு” என்ற சொல்லை ஈற்றாகக் கொண்ட திருவிதாங்கோடு, மேலாங்கோடு, ஆதங்கோடு, குமரிக்கோடு, விளவங்கோடு போன்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊர்களை இங்கு காணலாம். வள்ளுவன் கோடு என்ற ஊரே இன்று விளங்கோடு என்று திரிந்திருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. வள்ளுவர் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாகிய வள்ளுவநாட்டை சார்ந்தவரென்றும் இவரும் நாஞ்சில் வள்ளுவனும் ஒரே குலத்தில் உதித்தவர்கள் என்று கூறுபவர்களும் உண்டு. நாஞ்சில் நாட்டையும், அதனை ஆண்ட வள்ளுவனின் சிறப்பையும் ஐந்து புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.

ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், ஒளவையார், கருவூர் கதப்பிள்ளை போன்ற சங்கப் புலவர்களும் நாஞ்சில் நாட்டையும் அதனை ஆண்ட வள்ளுவனையும் பற்றி பாடியுள்ளனர். சிலப்பம், சோதிடம், வைத்தியம், போன்ற துறைகளில் நாஞ்சில் நாட்டு மக்கள் சிறந்து வந்துள்ளனர். வள்ளுவ நாட்டு முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார் குறிச்சி தான் திருவள்ளுவர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. வள்ளுவ நாட்டின் ஆட்சித்தலைவராக திகழ்ந்த வள்ளுவர் மகாவீரர், புத்தர் போன்று அரச பதவியைத் துறந்து துறவியாக மாறி அறநெறிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்தருளினார் என்றும் மன்னனாக இருந்து துறவியாக மாறிய காரணத்தால் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனத் திருக்குறளை வகுத்தமைத்தார் என்று கருதுபவர்களும் உண்டு.

நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள பெருங்குளத்தில் உக்கிரப்பெருவழுதியின் அவையிலே திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்று கூறுவர் உளர். டாக்டர் உ.வே சாமிநாதையர் தமது “என் சரிதம்” என்ற நூலில் தான் பெருங்குளத்திலுள்ள செங்கோல் மடத்தில் தங்கியபோது மாடாதிபதி தன்னை பெருங்குளத்து சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றதையும் “அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்து சிவபெருமானை பூசித்தமையால் அவ்வூர் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்ற திருநாமம் வழங்குகிறதென்றும், அந்தப்பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப்புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடை பெற்றது என்றும் அதற்கு அடையாளமாக சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும், உக்கிரபாண்டியர் வடிவமும் உண்டு என்றும் கூறியுள்ளார். (என் சரிதம் டாக்டர் உ.வே சாமிநாதையர் பக்கம் 932) திருவள்ளுவர் உக்கிரபெருவழுதி காலத்தவர் என்று சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் பதிப்பித்த “திரிகடுகமும்
சிறுபஞ்சமூலமும்” என்ற நூலின் முன்னுரையில் எஸ்.வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார். திருவழுதி வளநாட்டின் பகுதிகளே ஸ்ரீவைகுண்டமும் பெருங்குளமும் என்று ஸ்ரீவைகுண்ட கைலாசநாதர் மற்றும் கள்ளபிரான் கோவில்களில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன.

மேலே கூறிய செய்திகளில் இருந்து திருவள்ளுவர் நெல்லை மாவட்டத்தை அடுத்துள்ள தெங்குமரியைச் சார்ந்தவர் என்ற உண்மை உறுதிப்படுகின்றது.

திருவள்ளுவர்  தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து  கி.பி.1050 இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்கள்  தெரிவிக்கின்றன.

திருவள்ளுவர்  காலத்தில்  சாதிப் பிரிவுகள்  இருந்திருக்கின்றன.  அதனால் சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று எழுதா வேதங்களை விட  திருவள்ளுவர் யாத்த திருக்குறள் உயர்ந்தது என்பது புலவர்களின் கருத்து.  அந்தப்  பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று.

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இதனை உணர்ந்த தமிழர்கள் எத்தனை விழுக்காடு? திருக்குறள் உள்ள வீடுகளின் விழுக்காடு எத்தனை?

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இலண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழ் நாட்டின் சொத்து! 

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி “இந்தியாவின் மிக பெரியசொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது. இனிமேல் அது வெறும் மண்தான். ஆகவே அது நமக்கு தேவை இல்லை” என்று கூறினாராம்.

திருக்குறள் இந்தியாவின் சொத்து என அவர் கூறியது தவறு. அது தமிழ் நாட்டின் சொத்து! ஒட்டு மொத்த தமிழினத்தின் சொத்து!

திருக்குறள் தகவல்கள்

திருக்குறள் பற்றிய முதல் அச்சிட்ட நூல் திருவள்ளுவர் கடல் திரட்டு அல்லது அறிவுக்கடல் 1794 தொகுத்தவர் கிண்டர்ச்லி – லண்டன்.அறத்துப்பாலை மட்டும் அச்சிட்டு வெளியிட்டவர் எப்.டபிள்யு எல்லிஸ் 1812

திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புடன் 304பக்கம் புத்தகம் வெளியானது.

திருக்குறள்

இலத்தின் மொழியில்அச்சிட்ட ஆண்டு 1730
பிரெஞ்ச் மொழியில்அச்சிட்ட ஆண்டு 1767
தெலுங்கு மொழியில்அச்சிட்ட ஆண்டு 1887
மலையாள மொழியில்அச்சிட்ட ஆண்டு 1915
சமஸ்கிருத மொழியில்அச்சிட்ட ஆண்டு 1922
ஹிந்தி மொழியில்அச்சிட்ட ஆண்டு 1924
திருக்குறள்  சில சேகரங்கள்!
சங்குராம் என்பவர் மிக அழகாகத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார்

மலையாளத்தில் திரு சந்திரசேகர் நாயர் 2000 இல் மொழிபெயர்த்துள்ளார்

ஹிந்தியில் த.இ.ச..ராகவன் 1978 மொழிபெயர்த்துள்ளார்

தினம் ஒரு திருக்குறள் படித்திட வேண்டும்!
திரும்பிய பக்கமெல்லாம்
அதை உணர்த்திட வேண்டும்!
மனம் அதிலே நிலைத்திட வேண்டும்!
மனிதனின் தீய குணத்தினை மாற்றிட வேண்டும்!
வள்ளுவன் வகுத்த அதிகாரமெல்லாம்
மனிதனை ஆதிக்கம் செய்ய வேண்டும்!
இதைப் போதிக்கும் திறமையில் – அனைவரும்
சாதிக்க வேண்டும்!
இரண்டு வரி வேதவாக்கு – இதை
இறுதி வரைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் நல்வாழ்வு!
மறதியில் கூட மறக்கக் கூடாத உயிர்மூச்சு இது!
பிறவியிலே நீ – பிறந்த பயன் வேண்டுமென்றால்
உறுதியோடு ஒரு துறவி போல
திருக்குறளை நீ படித்து விடு…!
படித்தபடி நீ – நடந்து கொண்டால்
நீ நினைத்தபடி வாழ்க்கை இருக்கும்!
நீ தொட்டதெல்லாம் மணமணக்கும்…!
இனிக்கும் திருக்குறளை
இனியாவது படிப்போம்!
மணக்கும் வாழ்க்கையை
மனதோடு மணந்திடுவோம்…!

நாகேன் வேலாயுதம்


 

தேடுவது பொருள் பாடுவது குறள்

பத்மன் 

28th December 2016

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று வாழ்வது வாழ்க்கையல்ல. அதற்கு ஓர் அர்த்தம், பொருள் இருக்கிறது. வாழ்க்கை ஓர் அனுபவமாக இருக்கலாம்; ஆனால், அதனை அனுபவிக்க சில அடிப்படை இலட்சியங்கள் உள்ளன. பாரத மெய்ஞான மரபின்படி, வாழ்வின் புருஷார்த்தங்கள், அதாவது அடிப்படை நோக்கங்கள் – தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு).

இதில் முதல் மூன்றான அறம், பொருள், இன்பம் முறையாக இருந்தால்தான், இறுதி இலக்காகிய வீடு (விடுதலை) கிடைக்கும். முக்தி என்பது, இறப்புக்குப் பின் அடைவது மட்டுமல்ல; இருக்கும்போதும் அனுபவிக்கக்கூடியதுதான். அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது, தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்துவிடுகிறது.

அதனால்தான், தமிழகத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மொழியும் முப்பாலாகிய திருக்குறளைப் படைத்தார். இந்த முப்பாலிலேயே அப்பாலும் (வீடுபேறும்) அடங்கிவிடுகிறது. இதைத்தான் திருவள்ளுவர்,

“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50)

என்று ஒரே குறளில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால், வானில் உறைகின்ற தெய்வத்துக்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்கிறது திருக்குறள்.

மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனையே ஈஸ்வரன் என்றுதான் அழைக்கிறோம். இதன் பொருள், அனைத்து ஐஸ்வர்யங்களையும், அதாவது பொருள் வளங்களையும் உடையவன் என்பதே. ஆக, வாழ்க்கைக்கு பொருள் அவசியமாகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கமுடியாது.

பர உலக வாழ்வுக்கு, அதாவது இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதற்கு, மோட்சப் பெருவாழ்வு வாழ்வதற்கு, அறப்பண்புகளாகிய அருள் எவ்வாறு அவசியமோ, அதேபோல, இந்த மண்ணுலகில் இக வாழ்வை நன்கு வாழ்வதற்கு பொருள், அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். பொருளின் இந்தப் பெருமையை, அறத்துப்பாலில் துறவறவியலுக்குக்குக் கீழே அருளுடைமை என்ற அதிகாரத்தில் அவர் கூறியிருப்பது கூடுதல் சிறப்புடையது. அந்தக் குறள் –

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” (குறள் 247)

ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாகக் கருதி, கடைப்பிடிக்க வேண்டும். பொருள்சார் விழிப்புணர்வு (financial awareness) அவசியம் என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் முழங்கியிருக்கிறது. உலகின் முதல் பொருள் நூல் என்று வர்ணிக்கப்படும் அர்த்த சாஸ்திரம், நம்நாட்டு அறிஞர் சாணக்கியரால்தான் படைக்கப்பட்டது.

ஆயினும், ஒருகாலத்தில் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த இந்தியா, இன்று செல்வவளம் மிகுந்த நாடாக இல்லை. இதனை ஏழைநாடு என்று சொல்வதைவிட ஏழைகள் மிகுந்த நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஏழைமை நிலையில் இருந்து விடுபட, ஒவ்வொருவரும் தமது பொருள்வளத்தைப் பெருக்கிக்கொள்வது அவசியம். இதனை, அர்த்த சாஸ்திரத்துக்கு இணையான பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இவ்விதம் எடுத்துரைக்கிறது.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.” (குறள் 751)

அதாவது, ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும், பொருள்படுத்தக்கூடியவராக, மதிக்கப்படக்கூடியவராக மாற்றக்கூடிய சிறப்பு, பொருளைத் (செல்வத்தை) தவிர வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. எவ்வளவு அழகான குறள்.

இன்னொரு குறளில், பொருள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை,

“இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.” (குறள் 752)

என்று சற்று அதிரடியாகவே கூறுகிறார் திருவள்ளுவர். இதன் பொருள், ஏழைகள் அவமதிப்புக்கு உரியவர்கள் என்பது அல்ல. செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும், இல்லாதவரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பு. ஆகையால் அதனைச் சுட்டிக்காட்டி, அனைத்து மக்களையுமே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று தூண்டுகிறார் தெய்வப்புலவர்.

பொருளியல் நோக்கில், உலகில் உள்ள மனிதர்களை சில பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பொருளைப் பொருள்படுத்தாதோர்,

2. பொருள் திரட்டும் திறனற்றோர்,

3. பொருள் ஈட்டுவதில் தயக்கமுள்ளோர்,

4. பொருளைப் பொறுப்புடன் சேர்ப்பவர்,

5. பொருளை எவ்வழியிலும் குவிப்பவர்,

6. பொருளைச் சேர்த்தும் முறையாகப் பயன்படுத்தாதவர்,

7. பொருளின் மதிப்பறியாமல் செலவழிப்பவர்,

8. பொருளைச் சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் திட்டமிட்டுச் செயல்படுபவர்,

9. பொருளை மேலும் பல ஆக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் என வகைப்படுத்தலாம்.

பொருளைப் பொருள்படுத்தாத துறவிகளுக்குக்கூட பொருள் ஒருவகையில் தேவையாக இருக்கிறது. ஆகையால், அதனை முழுமையாக யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், பலருக்குப் பொருளை எவ்வாறு ஈட்டுவது என்ற பொருள் சார்ந்த அறிவு, திறமை இருப்பதில்லை. அவ்வாறு திறமை இருந்தாலும்கூட சிலருக்கு, பொருள் சேர்ப்பது என்பது ஏதோ பாவச் செயல் என்பதுபோன்ற வீண் அச்சத்தாலோ அல்லது மிகவும் கடினமான செயல் என்பதுபோன்ற தேவையற்ற மலைப்பு அல்லது சோம்பலாலோ தயக்கம் ஏற்படுகிறது.

இந்த அச்சம், மலைப்பு, சோம்பலைக் களைந்து பொறுப்புடன் பொருளைச் சேர்ப்பவர்கள் ஓரளவிலேயே இருக்கின்றனர். எனினும், பொருளைச் சேர்ப்பவர்களில் கணிசமானோர் தீய வழிகள் உட்பட எந்த வழியிலும் அதைச் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இது மாபெரும் சமூகத் தீங்கு. மறுபுறத்தில் கஷ்டப்பட்டு ஈட்டும் செல்வத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், அதாவது முறையாகச் செலவழிக்காமல் கருமித்தனமாகப் பலர் வைத்திருக்கின்றனர். செல்வம் என்பது ஆற்றைப்போல வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒரே இடத்தில் செல்வம் தேங்கி வெளியேற வழி தெரியாதபோது, அது சாக்கடையாக மாறிவிடுகிறது. ஆற்றால் பலருக்குப் பயன், சாக்கடையால் யாருக்குப் பயன்?

இதற்கு நேர்மாறாக வேறு சிலர், தங்கள் மூதாதையர் சேர்த்துவைத்த செல்வத்தை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டும் செல்வத்தைக்கூட கண்மூடித்தனமாக ஊதாரியாகச் செலவழிக்கிறார்கள். இது அவருக்கும், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தாருக்கும் தீங்கை இழைக்கக்கூடியது. செலவழிப்பது அவசியம் என்றாலும், வகை தெரியாமல் செலவாக அழிப்பது ஏற்புடையதல்ல. மிகச் சிலரே பொருளை ஈட்டுவதிலும், அதனைச் செலவழிப்பதிலும் ஒரு வழிமுறையை வைத்துக்கொண்டு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். இவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

மிக மிகச் சிலரே தம்மிடமுள்ள செல்வத்தை மேலும் பெருக்கி, பல்வேறு ஆக்கங்களுக்கு உதவும் வகையில் அதனைப் பயன்படுத்தும் நுட்பங்களை கைக்கொள்கின்றனர். இவர்கள் போற்றத்தக்கவர்கள். இது போன்றோர் மூலம்தான், அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் மட்டுமின்றி, சமூகமும் நன்கு பயன்பெறுகிறது.

இவ்வாறாக, பொருளை நேர்மையான வழிமுறைகளில் ஈட்டுவதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் தூண்டுகோலாகவும், அவற்றை முறையாகச் செலவழித்தல், சமூகத்தில் தேவைப்படுவோருக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ள பல்வேறு யோசனைகளை, வழிமுறைகளை, அறிவுரைகளை மிக அருமையாக சின்னஞ்சிறு குறள் பாக்களில் எடுத்தியம்பியுள்ளார் திருவள்ளுவர்.

‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’ 

என்று திருக்குறளைப் புகழ்ந்துரைக்கிறார், சங்ககாலப் பெண்பாற் புலவரான ஔவையார்.

அணு என்பது மிகவும் நுண்ணியது, அதனையும் துளைத்து அதற்குள் ஏழு கடல் கொள்ளளவுள்ள விஷயங்களைப் புகட்டி நிற்கிறது குறள் என்று புகந்துரைக்கிறார் ஔவையார். அணுவைத் துளைத்துப் பகுக்க முடியும் என்பது மட்டுமல்ல, அதற்குள்ளே பல விஷயங்களைப் புகுத்தி செறிவூட்டவும் முடியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்துவைத்துள்ளனர் என்பதற்கு குறள் குறித்த ஔவையின் இந்தக் குறளே சான்று.

அந்த வகையில், அணு போன்ற சிறு வடிவில் இருந்தாலும் கடல் போன்ற பெரும் தகவல்களைத் தருகின்ற “பொருள்” நிறைந்த அந்தக் குறள்களை உங்களுடன் இனி வாரந்தோறும் பகிர்ந்துகொள்கிறேன்.


துணைத் தகவல்

சாணக்கியரும் வள்ளுவரும்

அர்த்தசாஸ்திரம் என்ற பொருளியல் நூலைப் படைத்த சாணக்கியருக்கும், பொருட்பாலை உள்ளடக்கிய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

இருவருமே, பொதுவாக கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருவருமே இன்றைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. சாணக்கியர் தமது நூலில் குமரி வழிபாடு பற்றிக் கூறுவதால், அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது சிலரது கூற்று. இதேபோல், உயர்திணையாகிய மனிதரைக் குறிப்பிடுகையில் அஃறிணைக்குரிய பேசுவார், செய்வார் என்று கூறாமல் பேசும், செய்யும் என்று குறிப்பிடுவது குமரி வட்டார மக்களின் பேச்சு வழக்கு. இதுபோல் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதால், திருவள்ளுவரை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பார் உள்ளனர்.

விஷ்ணுகுப்தர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர், தட்சசீலம் (இன்றைய பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலா என்ற நகரம்) பல்கலைக்கழகத்தில் படித்தவர், அங்கேயே ஆசானாகவும் உயர்ந்தவர். இவர் தனது அர்த்தசாஸ்திரம் நூலில் தம்மை திரமிள என்று குறிப்பிடுகிறார். அக்காலத்தில் திரமிள என்ற சொல் தமிழரையே குறிக்கும் என்பதால், இவர் தமிழ்நாட்டுப் பிராமணர் என்பது சிலரது கருத்து. எனினும், தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியைச் சேர்ந்தவர் இவர் என்பது வேறு சில ஆய்வாளர்கள் கருத்து. மலையக மக்களின் தமிழோடு சம்ஸ்கிருதம் கலப்புற்றதே இக்கால மலையாள மொழி. இம்மொழி தோன்றுவதற்கு முன்னர், கேரளத்தில் தமிழே பேசினர். மேலும், தஞ்சாவூர் உள்ளிட்ட சோழர் பகுதியில் இருந்து பிராமணர் உள்ளிட்ட தமிழர்கள், அக்காலத்திலேயே கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வசித்தனர். அவர்கள் சோழியர்கள் எனப்பட்டனர். நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரையில் அவிழ்த்த குடுமியை முடியமாட்டேன் என்று வஞ்சினம் பூண்ட சாணக்கியர், சோழியர் என்று கருதப்படுகிறார். இதைத்தான் ‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்ற பழமொழி நினைவூட்டுகிறது.

அதேநேரத்தில் கொச்சி, மலபார் உள்ளிட்ட கேரளப் பிரதேசங்கள், அதர்வண வேதத்தில் குறிப்பாக மந்திர-தந்திர வித்தைகளில் சிறந்து விளங்கின. ஆகையால் மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் சோழியர்கள் கைதேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இதேபோல் திருவள்ளுவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவர். இந்த வள்ளுவர் குலத்தினர், மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர்கள். குறி சொல்லுவதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை ‘வள்ளுவன் வாக்கு பொய்க்காது’ என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

இதேபோல், சாணக்கியர் பிகார் மாநிலம் பாட்னா அருகே பிறந்தவர் என்று ஆய்வாளர்களின் மாற்றுக் கருத்து இருப்பதைப் போலவே, திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் (திருமயிலையில்) பிறந்தவர் என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது.

எது எப்படியோ, சாணக்கியரும் திருவள்ளுவரும் உலகின் முன்னோடி பொருளியல், அரசியல் நிபுணர்கள் – ஆசான்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், திருக்குறள் எந்நாட்டவர்க்கும் ஏற்ற பொதுமறையாக இருப்பதைப்போலவே, அர்த்தசாஸ்திரத்தை பாடலிபுத்திர மௌரியப் பேரரசுக்கு மட்டுமின்றி உலகுக்குப் பொதுவாகவே சாணக்கியரும் படைத்துள்ளார்.

http://www.mobile.dinamani.com/junction/porul-tharum-kural/2016/dec/28/1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-2622165.html


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply