தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி!

 

தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி!

டிசெம்பர்  26,  2017

தமி­ழர்­க­ளுக்கு அதி­யுச்ச அதி­கா­ரத்தை வழங்கி நாட்­டைப் பிள­வு­ ப­டுத்­தும் சதித்­திட்­டத்தை இந்த அரசு முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. அதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கும் அனை­வ­ரை­யும் தம்­மு­டன் கைகோர்க்­கு­மா­றும் அவர் அறை­கூ­வல் விடுத்­தார். இந்த அரசை வீழ்த்­தும் போராட்­டத்துக்குத் தலைமை தாங்க தாம் தயார் என­வும் முழக்­க­மிட்­டார்.

சிறி­லங்கா பொதுமக்­கள் முன்­ன­ணி ­யின் மக்­கள் சந்­திப்பு கோமா­கம பிரதே­சத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­வித்­ததா­வது:

நாம் வென்று கொடுத்த சுதந்­தி­ரத்தை மூன்று ஆண்­டு­க­ளில் அரசு நாச­மாக்­கி­யுள்­ளது. வெளி­நா­டு­க­ளுக்கு நிலங்­களை விற்­றும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு எமது வளங்­க­ளைத் தாரை வார்த்­தும் வரும் பணத்­தி­லேயே அரசு தனது செல­வு­க­ளைப் பார்த்­துக்­கொள்­கின்­றது. நாம் மோச­டி­க­ளைச் செய்­தோம், கள­வு­களை செய்­தோம், மக்­க­ளின் சொத்­துக்­க­ளைச் சூரை­யா­டி­னோம் என்று கூறி ஆட்­சிக்கு வந்த நபர்­கள் எம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்­கள் தொடர்­பில் எந்­த­வொரு ஆதா­ரத்­தை­யும் வெளிப்­ப­டுத்த        முடி­யாது தடு­மாறி வரு­கின்­ற­னர். மாறாக இவர்­கள் பட்­டப்­ப­க­லில் கொள்­ளை­ய­டித்து வரு­கின்­ற­னர்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்கி நாட்­டைத் துண்­டா­டும் சதித் ­திட்­ட­மும் முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்­க­ளுக்கு அதி­யுச்ச அதி­கா­ரங்­கள் என்று அனைத்­தை­யும் வழங்கி இந்த நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இந்த நாடு பிள­வு­பட வேண்­டுமா அல்­லது இணைந்து செயற்­பட வேண்­டுமா என்­பதை நாட்டு மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்­டும். இந்த நாடு பிள­வு­ப­டு­வதை விரும்­பாத சக­ல­ரும் தேர்­த­லில் எம்­மு­டன் கைகோ­ருங்­கள்.

சிறி­லங்கா பொது மக்­கள் முன்­னணி மக்­க­ளின் ஆத­ரவை பெற்று வரு­கின்ற நிலை­யில் எமது மக்­கள் எதனை விரும்­பு­கின்­ற­னரோ அதையே நாமும் செய்ய வேண்­டும். மக்­கள் விரும்­பாத எதை­யும் நாம் முன்­னெ­டுக்­கத் தயா­ராக இல்லை. மக்­க­ளுக்­கா­கத் தலைமை தாங்க நாம் தயா­ரா­கவே உள்­ளோம். இம்­முறை தேர்­த­லில் மக்­கள் ஆத­ரவை பெற்று எமது பலத்­தினை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் இருந்தே உறு­திப்­ப­டுத்­து­வோம்  என்­றார்.

தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி!


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply