சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்  

2017-10-10

சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்

                                       மூத்த  சட்ட  விரிவுரையாளர் சர்வேஸ்வரன்

கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.எஸ்.இரட்­ணவேல் தலை­மையில் அண்­மையில் இடம்­பெற்ற சட்டம் தெளிவோம் நிகழ்வில் சமஷ்டி (இணைப்பாட்சி)    என்­பது பிரி­வினை அல்ல -உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு அடி­வானில் ஒரு விடி­வெள்ளி என்ற தலைப்பில் கொழும்புப் பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட மூத்த விரி­வு­ரை­யா­ளரும் சட்ட ஆய்வு நிலைய பணிப்­பா­ள­ரு­மான அ.சர்­வேஸ்­வரன் உரை­யாற்­றினார்.

சந்­தி­ர­சோமா எதிர் மாவை சேனா­தி­ராஜா என்ற வழக்கில் (SC SPL No. 03/2014) உயர்­நீ­தி­மன்­றத்தால் கடந்த மாதம் வழங்­கப்­பட்ட சமஷ்டி என்­பது பிரி­வினை என்று ஆகாது என்ற தீர்ப்­பா­னது தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­விற்­கான ஒரு படிக்கல் ஆக அமைந்­துள்­ளது என்று இங்கு உரையாற்றிய சர்வேஸ்வரன் கூறி னார்.

இவ் வழக்கின் முத­லா­வது எதிர்­வா­தி­யான இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்கள் வருகை தந்­தி­ருந்த இந்த நிகழ்வில் உரை­யாற்­று­கையில் அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது அதன் குறிக்­கோள்­களில் ஒன்­றாக இலங்கை ஆள்­பு­லத்­தினுள் தனி­யான அரசு ஒன்றை அமைப்­பதைக் கொண்­டுள்­ளது என விளம்­பு­மாறு கோரி உயர்­நீ­தி­மன்­றத்தில் இந்த வழக்கிடப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் அர­சி­ய­ல­மைப்­பிற்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட ஆறா­வது திருத்­தத்தின் மூலம் இலங்கை ஆள்­பு­லத்­தினுள் தனி­யான அரசைத்  உருவாக்க முயற்­சிப்­பது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது.

தனி­யான அரசை நிறுவ கட்­சி­யொன்று முயற்­சிப்­ப­தாக உயர்­நீ­தி­மன்றம் விளம்­பிய பின்னர் அவ்­வா­றான முயற்­சியில் அக்கட்­சி­யா­னது ஈடு­ப­டு­மாயின் அக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தால் குற்றம் புரிந்­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­வதன் மீது அவர்­க­ளது குடி­யு­ரி­மையை ஏழு வருட காலப்­ப­கு­திக்கு இழப்­ப­துடன்  அவர்­க­ளது அசையும் அசை­யாத சொத்­துக்கள் பறி­மு­த­லுக்கு உள்­ளா­வ­துடன் அவர்கள் நாடா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளாயின் அவர்­க­ளது பத­வி­யையும் இழக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்­கெ­தி­ராக வழக்­கிட்­டவர் இக் கட்­சி­யா­னது தனது யாப்­பினை 2008 இல் திருத்தி சமஷ்டி என்று இருந்த சொற்­ப­தத்தை கூட்­டாட்சி என்ற சொற்­ப­தத்தால் பத­லீடு செய்­துள்ளது எனவும் பதி­லீடு செய்­யப்­பட்ட இச் சொற்­ப­த­மா­னது தனி­யான சுதந்­திர அர­சுகள் ஒன்­றாக சேரு­வ­தையே குறிக்­கு­மென்­பதால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் குறிக்­கோள்­களில் ஒன்­றாக தனி­யான அரசு ஒன்றை இலங்கை ஆள்­பு­லத்­தினுள் தாபிப்­பது உள்­ள­தென வாதிட்டார்.

தனது வாதத்­திற்கு ஆதா­ர­மாக 1976 இல் பண்­ணா­கத்தில் இடம்­பெற்ற தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முத­லா­வது தேசிய மாநாட்டில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் அங்­கத்­துவ கட்­சி­யாக இருந்து வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் மூலம் தமிழ் ஈழம் என்ற தனி­யான அரசை ஸ்தாபிப்­பதை இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியும் ஏற்று அங்­கீ­க­ரித்­துள்­ளது என்றார்.  அவர் தனது வாதத்­திற்கு ஆதா­ர­மாக வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்­தையும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தையும் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இலங்கை தமி­ழ­ரசு கட்­சி­யா­னது தனது அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள சமஸ்­கி­ருத சொற்­ப­த­மான சமஷ்டி என்­ப­தற்கு  இணை­யான தூய தமிழ் சொற்­ப­த­மான இணைப்­பாட்சி என்ற சொற்­ப­தத்தால் பதி­லிட்­ட­தனை இவ்­வ­ழக்­கிட்­டவர் தவ­றான மொழி­பெ­யர்ப்பின் மூலம் தனி­யான சுதந்­திர அர­சுகள் ஒன்­றாக சேர்ந்து அமைக்­கின்ற கூட்­டாட்சி என்­ப­தாக அர்த்தம் புரிந்­துள்ளார் என்­ப­தையும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் நோக்கம் பிரிக்­கப்­ப­டாத ஒன்­றி­ணைந்த இலங்­கை­யினுள் தமிழ் பேசும் வடக்கு, கிழக்­கி­லான பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களில் சுய­நிர்­ணய கோட்­பா­டு­க­ளுக்கு அமைய மக்­க­ளுக்­கான சுய ஆட்­சியைப் பெறு­வ­தாகும் என்­ப­தையும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியால் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆதார ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து உயர்நீதி­மன்றம் ஏற்றுக்கொண்­டது.

தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது தனது திருத்­தப்­பட்­ட­வா­றான யாப்பின் வாச­க­மா­னது ஐக்­கிய இலங்கை இணைப்­பாட்சி அங்­க­மாக என இருப்­ப­தனை உயர்­நீ­தி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்­தி­ருந்­தது. கால­மாற்­றத்தால் தமிழ் மக்­களின் அர­சி­யலும் மாற்­றத்­திற்கு உள்­ளா­கி­ய­துடன் அன்று அர­சி­ய­ல­மைப்பின் ஆறா­வது திருத் ­தத்­திற்­க­மைய சத்­தியப் பிர­மாணம் செய்ய மறுத்து பாரா­ளு­மன்ற பத­வி­களைத் துறந் ­த­வர்கள் இன்று முக்­கி­ய­மாக பதின்­மூன்­றா­வது திருத்­தத்தின் பின்னர் நிலை­மாற்­ற­ம­டைந்து ஆறா­வது திருத்­தத்­திற்கு அமை­வாகச் சத்­தியப்பிர­மாணம் செய்து பாரா­ளு­மன்ற பத­வி­களை வகிக்­கின்­றார்கள் என்­பது எதிர்­வாதி தரப்பால் உயர் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டுவரப்­பட்­டது.

இவ் வழக்­கிலே ரொனால்ட் உவாற்ஸின் ஆக்­க­மான கன­டாவில் சமஷ்­டியும் பல்­லி­னத்­தன்­மையும் என்­பதில் மாகாண சுயாட்­சி­யா­னது ஏற்­க­னவே வழங்­கப்­ப­டா­தி­ருந்தால் பிரிந்து செல்­வ­தற்­கான இயக்­க­மா­னது பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­க­மாட்­டாது மாறாக மேலும் வலுப்­பெற்ற ஒன்­றா­கவே இருந்­தி­ருக்­கு­மென குறிப்­பிட்­ட­த­னையும் உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்­பிலே உள்­ள­டக்­கி­யி­ருந்­தது.

சம­கால சர்­வ­தேச சட்­டத்தின் அண்­மைக்­கால வளர்ச்­சி­யா­னது மக்­களின் சுய-­நிர்­ணய உரி­மை­யா­னது வெளி­யக மற்றும் உள்­ளக பரி­மா­ணங்­களைக் கொண்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. வெளி­யக சுய-­நிர்­ணய உரிமை என்­பது அந்­நிய ஆட்­சி­யி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தையும் உள்­ளக சுய-­நிர்­ணய உரி­மை­யென்­பது தமது அர­சாங்­கத்தின் தொடர்ச்­சி­யான அடக்­கு­மு­றை­யி­லி­ருந்து விடு­படும் வழியை தமது விருப்பில் தேர்வு செய்­வ­தையும் குறிக்கும் என சர்­வ­தேச நீதி­மன்­ற­மா­னது  2010 இல் கொசோவோ ஆலோ­சனை அபிப்­பி­ரா­யத்தை வழங்­கிய போது நீதி­ய­ரசர் ஹன்­காடோ ரின்­டாடே குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது இவை­களை எடுத்­துக்­காட்டி சுய-­நிர்­ணய உரி­மை­யென்­பது நாட்­டி­னுள்ளே மக்­களின் நன்­மைக்­காகப் பிர­யோ­கிக்­கப்­படக் கூடிய உள்­ளக பரி­மா­ண­மொன்­றையும் கொண்­டுள்­ளது என சமர்ப்­பணம் வைத்­துள்­ள­தென தனது தீர்ப்­பிலே உயர்நீதி­மன்றம் குறிப்­பிட்­டது. இவ்­வா­றான பின்­ன­ணியில் உயர்­நீ­தி­மன்­ற­மா­னது அர­சொன்றில் உள்­ளக சுய­நிர்­ண­யத்தைக் கோரு­வது தனி­யான அரசைக் கோரு­வது ஆகாது எனவும் அர­சொன்­றினுள் இறை­மையை மற்றும் அதி­கா­ரத்தைப் பகிர்­வதன் மூலம் சமஷ்டி முறை­யி­லான அர­சாங்­கத்தைக் கோரு­வது பிரி­வி­னையைக் கோரு­வது ஆகாது எனவும் தனது தீர்ப்பை வழங்­கி­யது.
உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்­பிலே தமிழ் அர­சியல் போராட்­டங்­க­ளுக்கு கிடைத்த எதிர்­பார்ப்­பு­க­ளையும் ஏமாற்­றங்­க­ளையும் சுட்­டிக்­காட்­டி­யது.

சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் எதிர்ப்பின் கார­ண­மாக பண்டா – செல்வா ஒப்­பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்­பந்தம் ஆகி­ய­வைகள் கிழிக்­கப்­பட்ட வர­லாற்­றையும் 1970 களில் ஆயுதப் போராட்டம் மூலம் தனி­யான அரசை நிறுவ தமிழ் இளை­ஞர்­களின் போராளி குழுக்கள் தோற்றம் பெற்­ற­தையும்  இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­காக 1985 இல் இடம்­பெற்ற திம்புப் பேச்சு வார்த்­தை­யையும் தனது தீர்ப்பில் உயர்­நீ­தி­மன்றம் உள்­ள­டக்­கி­யது இத் தீர்ப்பின் மற்­றொரு முக்­கிய அம்­ச­மாகும்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது தனி­யான அர­சொன்றைத் ஸ்தாபிக்க முயற்­சிக்­கின்­றது என விளம்­பு­மாறு கோரிய வழக்கில் உள்­ளக சுய நிர்­ணயம் பற்­றியும் சமஷ்டி முறை­யி­லான அர­சாங்கம் பற்­றியும் உயர்­நீ­தி­மன்றம் விளம்­பி­யவை வெறு­மனே அபிப்­பி­ரா­யங்­களே அன்றி அவை வடக்குஇ கிழக்­கிற்­கான உள்­ளக சுய நிர்­ணயம் அல்­லது சமஷ்டி முறை­யி­லான அர­சாங்கம் வழங்­கப்­ப­டுதல் வேண்­டு­மென்­ப­தான தீர்ப்­பாக அமை­யாது.

உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பின் இன்­றைய முக்­கி­யத்­துவம் பற்­றிய தனது கருத்தை அவர் தெரி­விக்­கையில் தமிழ் மக்­களின் அர­சியல் வர­லாறு தடம் மாறு­வ­தற்குச் சட்­டங்­களும் நீதி­மன்ற தீர்ப்­பு­களும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளன என்றார். தனிச் சிங்­களச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது அச் சட்­ட­மா­னது அப்­பொ­ழு­தி­ருந்த சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பை மீறு­கின்­றது என தீர்ப்­ப­ளிப்­பதை உயர்­நீ­தி­மன்றம் தட்­டிக்­க­ழித்­தது. இது இலங்­கையின் அர­சியல் இன­வாத அர­சி­ய­லாக இன ரீதி­யாகத் துரு­வ­ம­யப்­ப­டு­வ­தற்குப் பங்­க­ளிப்புச் செய்த கார­ணி­களில் ஒன்­றாக இருந்­தது.

சமஷ்டி என்ற கோரிக்கை வடக்கு கிழக்கில் வலுப்­பெற்று வரு­கையில் சமஷ்டி என்­பது பிரி­வினை என்ற பிர­சாரம் தென்­னி­லங்­கையை அச்­ச­முற வைக்­கையில் உயர் நீதி­மன்­றத்தின் இத் தீர்ப்­பா­னது முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாக உள்­ளது. உயர்­நீ­தி­மன்­ற­மா­னது இலங்கை தமி­ழ­ரசு கட்­சி­யா­னது தனி அரசு ஒன்றைத் தாபிக்க முற்­ப­ட­வில்லை என்று வெறு­மனே விளம்­பு­வ­துடன் நின்­று­வி­டாது அதற்­கப்­பாலும் சென்று சமஷ்டி அர­சாங்க முறைமை பற்­றியும் சமஷ்டி அர­சாங்க முறை­மையை வடக்கு, கிழக்கு மக்கள் கோரு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வை­க­ளையும் தனது தீர்ப்பில் உள்­ள­டக்­கி­யமை அதி­கார பகிர்வின் மூல­மான இனப்­பி­ரச்­சினைத் தீர்­விற்­கான நீதித் துறையின் மனப்­பான்­மையில் ஏற்­பட்­டுள்ள சாத­க­மான ஒரு மாற்­ற­மா­கவே உள்­ளது.

மேலும் பேசு­கையில் சமஷ்டி முறையில் வடக்கு, கிழக்கு மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு மிக அவ­சி­ய­மா­னது. சமஷ்டி என்­பது பிரி­வினை அல்ல என்­ப­த­னையும் பிரிக்­கப்­ப­டாத ஒன்­றி­ணைந்த அரசின் கீழான சமஷ்டி முறை­மை­யா­னது பிரி­வி­னைக்கு எதி­ரா­ன­தாக அமையும் என்­ப­தையும் நாட்டின் அர­சியல் தீர்­வாக மட்­டு­மல்­லாது அபி­வி­ருத்­திக்­கான தீர்­வா­கவும் இது அமையும் என்­ப­தையும் தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் எடுத்துச் செல்­வ­தாகும் என்றார். இது அவர்கள் மத்தியில் சந்தேகங்களைக் களைந்து அச்சத்தை நீக்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாக அமையும்.

இதற்கான ஒரு அடித்தளத்தை உயர்நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அமைத்துள்ளது. சமஷ்டி என்ற சொற்பதமா அல்லது வேறேதேனும் சொற்பதமா பயன்படுத்தப்படுகின்றது என்பதனை விட எந்தளவிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது தான் முக்கியமானது என்றார்.

உயர்­நீ­தி­மன்­றத்­தினால் அண்­மையில் வழங்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பிற்­கான இரு­ப­தா­வது திருத்­தத்­திற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஏன் அவ­சி­ய­மா­னது என்­பது பற்­றியும் கருத்துத் தெரி­வித்தார்.

மாகாண சபைக்­கான அங்­கத்­த­வர்கள் மக்­களால் ஐந்து வருட காலப்­ப­கு­திக்­கென தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றார்கள். மாகாண சபையின் தேர்­தலை பிற்­போ­டு­வதன் மூலம் மாகாண சபை­யொன்றின் காலப்­ப­கு­தியை நீடிக்கும் போது அது மக்­களின் இறை­மையை மீறு­வ­தாக அமை­கின்­றது. எனவே மாகாண சபை­யொன்றின் காலப்­ப­கு­தியை மக்­களின் அங்­கீ­கா­ர­மின்றி நீடிக்க வழி­செய்யும் இரு­ப­தா­வது திருத்­த­மா­னது பாரா­ளு­மன்­றத்­தி­லான மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையால் மாத்­தி­ர­மின்றி சர்வஜனவாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றப்படுதல் வேண்டுமென்பது அவசியமாகின்றது என்றார்.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply