இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு டிசம்பர் 8, 2023

டிசம்பர் 8, 2023

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தாகவும், வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம், அந்த மாகாணங்களை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்தார்.

இதன்படி, பூனரின் நகரம் எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக மாறும் என்றும் ஜனாதிபதி இரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் “இமயமலைப் பிரகடனம்” வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க வண. மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சங்க நாயக்க வண. சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், மேல் மாகாணத்தின் பிரதான சங்க நாயக மற்றும் ஸ்ரீ தர்மரக்ஷித பிரிவின் பதிவாளர் வண. கிதலகம ஹேமசார தேரர், வஜிரவங்ச பிரிவின் பதில் மகாநாயக்க பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித அபிவிருத்தி ஆய்வு மையத்தின் தலைவருமான வண,  களுபஹன பியரதன தேரர்,  மத்திய மாகாணத்தின் பாததும்பர பிரதம சங்க நாயக வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், ராமன்ய நிகாயவின் பிரதிப் பதிவாளர் வாந்துவே தம்மவங்ச தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோருடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் கலந்துகொண்டனர்.

https://pmd.gov.lk/ta/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%87%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/

info@pmd.gov.lk

+94 (0) 11 2 354 354

*****************************************************************************************************************

09 DEC, 2023

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளைமையப்படுத்திய ‘இமயமலைப் ‘ பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் கையளிக்கப்பட்டது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பௌத்த தேரர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய ஒருங்கிணைந்த தரப்பினருடனான சந்திப்பின் பின்னரேயே குறித்த பிரகடனம் கையளிக்கப்பட்டது. 

குறித்த பிரகடனத்தில், முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, 

தங்களுடைய அடையாளம்; மற்றும் பெருமையை இழந்துவிடுவோமா என்ற பயம் எந்த ஒரு சமூகத்திற்கும் ஏற்படாத வகையில் நாட்டின் பல்வகைமைத்தன்மையைப் பேணிப் பாதுகாத்தலும், ஊக்குவித்தலும்

• பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளல், உள்நாட்டு உற்பத்தியையும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் ஏனையோரின் முதலீடுகளையும், பங்களிப்பையும் ஊக்குவிக்கக்கூடிய, இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக வெற்றிப் பாதையில் செல்வதனை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமான அபிவிருத்தி மாதிரிகளைத் தெரிவு செய்தல் 

• மாகாண மட்டத்தில் போதுமானளவு அதிகாரப்பகிர்வினை உறுதிப்படுத்தியும், தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான குடியுரிமையை முன்னிலைப்படுத்தியதும் அதற்கான பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியதுமான ஒரு ரசியலமைப்பை உருவாக்குதல், அதுவரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவாறான அதிகாரப்பகிர்வினைக் கண்ணியத்துடன் நடைமுறைப்படுத்தல். 

• ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டினுள் அதிகாரத்தைப் பகிர்தலும், மத, கலாச்சார மற்றும் ஏனைய அடையாளங்களை ஏற்று அத்தகைய அடையாளங்களுக்கு மதிப்பளிப்பதோடு இனங்களுக்கிடைலான மற்றும் மதங்களுக்கிடையிலான நம்ßக்கையைக் கட்டியெழுப்ப உழைப்பதும். 

• கடந்த கசப்பான காலங்களில் இருந்து கற்றுக்கொள்ள உறுதிகொண்டு, மீண்டும் இவ்வாறான துயரங்கள் ஒருபோதும் ஏற்படாதிருக்கப்; பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒப்புரவு அடைந்த ஓர் இலங்கைக்கான தூர நோக்கு.

• இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளுக்கும் இதர சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் மதிப்பளித்து, சுயாதீனமான மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக இலங்கையானது ஜனநாயகத்துடன் கூடிய சமாதானமான, வளமான உலக நாடுகள் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டுதல்.

என்பன காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரகடனத்தில் அம்பகஹபிடிய தரப்பு அனுநாயகர் மாதம்பாகம அசாஜி திஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், ஸ்ரீ தர்மரஷக்ஷித தரப்பு பொது செயலாளர் கிதலகம ஹேமசார நாயக தேரர் வஜிரவண்ச தரப்பு செயல் மகாநாயகர் பேராசிரியர்.பல்லேகந்த ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்ரீ சத்தர்மவண்ச தரப்பு,உறுப்பினரும் மனித வள மேம்பாட்டு மையத்தின் தலைவருமான கலுபஹன பியரதன நாயக தேரர், மத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக தேரரான நாரம்பனாவே தம்மாலோக தேரர்,  ஸ்ரீ சதமவண்ச தரப்பு அனுநாயக்கர் வலதர சோபித தேரர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளர். 

அதேநேரம், உலகத்தமிழர் பேரவையின் சார்பில் வேலுப்பிள்ளை குகனேந்திரன் கலாநிதி. சாந்தினி ஜெயராஜா, தனபாலசிங்கம் சுரேந்திரன், சிறிகாந்தா பவகுகன் கலாநிதி.கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், ராஜ் தவரட்ணசிங்கம் ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர். 

இதேவேளை, புலம்பெயர் அமைப்பான உலகத்தமிழர் பேரவையும், பௌத்த தேரர்களும் ஒருங்கிணைந்துள்ள இந்தக் குழுவானது, சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் எனும் பெயரில் பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக செயலாற்றி வருகின்ற மற்றும் அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையாக, எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி, சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய அமைதிமிக்க வளமான இலங்கைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்ற சங்க உறுப்பினர்களது கூட்டணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/171285

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply