683% அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்து.. 86% கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள் – ADR அறிக்கை!

683% அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்து.. 86% கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள் – ADR அறிக்கை!

09-05-2021

சட்டமன்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு முன்னாள் அமைச்சரின் சொத்து 577 சதவிகிதமும், மற்றொரு முன்னாள் அமைச்சரின் சொத்து 683 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. யார் அவர்கள்..?!

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ADR).

இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்புதான் ஏ.டி.ஆர். 1999-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமணப் பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் 234 எம்.எல்.ஏ-க்களில் 224 எம்.எல்.ஏ-க்களின் பிரமாணப் பத்திரங்களை, `தமிழ்நாடு எலெக்‌ஷன் வாட்ச்’ என்ற அமைப்போடு இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர் அமைப்பு. `மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களின் (தி.மு.க 8, காங்கிரஸ் 2) பிரமாண பத்திரங்கள் தெளிவாக இல்லையென்பதால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை’ என்று ஏ.டி.ஆர் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்களில், 86 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர்!

கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள்!

தமிழக சட்டமன்றத்திலுள்ள 192 பேர் (86%) கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஏ.டி.ஆர் தகவல் வெளியிட்டிருக்கிறது. தி.மு.க-வில் 111 பேரும், அ.தி.மு.க-வில் 58 பேரும், காங்கிரஸில் 14 பேரும், வி.சி.க-வில் இரண்டு பேரும், சி.பி.ஐ-ல் ஒருவரும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளில் தலா மூன்று பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர்.

புதிய சட்டசபை
புதிய சட்டசபை

டாப் 5 கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள்!

2021 சட்டமன்றத்தில், 200 கோடிக்கும் அதிகமாகச் சொத்துகள் வைத்திருக்கும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் முதலாமவர், அம்பாசமுத்திரம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. இவர் அசையும் அசையாச் சொத்துகள் என ரூ. 246 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார். அடுத்த இடத்தில், அண்ணா நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, எம்.கே.மோகன் ரூ. 211 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார். அடுத்த மூன்று இடங்களில்…

எஸ்.கதிரவன் (தி.மு.க, மணச்சநல்லூர்) – ரூ. 121.21 கோடி

ஐட்ரீம்ஸ் மூர்த்தி (தி.மு.க, ராயபுரம்) – ரூ. 112.19 கோடி

கே.ஆர்.ஜெயராம் (அ.தி.மு.க, சிங்காநல்லூர்) – ரூ. 90.32 கோடி

குறைந்த சொத்துகள் வைத்திருக்கும் எம்.எல்.ஏ-க்கள்!

2021 சட்டமன்றத்தில் மிகக் குறைந்த அளவில் சொத்து வைத்திருப்பவர், திருத்துறைப்பூண்டி சி.பி.ஐ எம்.எல்.ஏ மாரிமுத்து. இவர் அசையும் அசையாச் சொத்துகள் என 3.30 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்தாக வைத்திருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் கந்தர்வகோட்டை சி.பி.எம் எம்.எல்.ஏ சின்னத்துரை ரூ. 4.73 லட்சம் சொத்து வைத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில், தி.மு.க கூட்டணி கட்சியான ம.ம.க-வைச் சேர்ந்த மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமத், ரூ. 10.64 லட்சம் சொத்து வைத்திருக்கிறார்.

மறுதேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரம்!

கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போது மீண்டும் தேர்வாகியிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் சொத்துகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறாக உயர்ந்திருக்கிறது என்பது குறித்த தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர்.

விராலிமலை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், கடந்த 2016-ல் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், அசையும் அசையாச் சொத்துகள் எனத் தன்னிடம் ரூ. 9.08 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது 2021-ல் 577 சதவிகித அதிகரித்து தற்போது ரூ. 61.50 கோடியாக இருக்கிறது.

அதேபோல 2016-ல் ரூ.170.97 கோடியாக இருந்த அண்ணா நகர் தி.மு.க எம்.எல்.ஏ, எம்.கே.மோகனின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு, 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்து (24% உயர்வு) ரூ. 211.20 கோடியாக இருக்கிறது. கும்பகோணம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, ஜி.அன்பழகனின் சொத்து மதிப்பு 2016-ல் ரூ. 20.02 கோடியாக இருந்தது. 2021-ம் ஆண்டில் 108 சதவிகிதம் அதிகரித்து 41.73 கோடி ரூபாயாக இருக்கிறது.

சட்டமன்றம்
சட்டமன்றம்
கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்
கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் ‘சைலஜா’ டீச்சர்

பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனின் சொத்து மதிப்பு, கடந்த 2016-ம் ஆண்டைவிட 683 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2016-ல் ரூ.2.40 கோடியாக இருந்த அன்பழகனின் சொத்து மதிப்பு தற்போது ரூ.18.83 கோடியாக இருக்கிறது.

ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ, எஸ்.ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு 2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது 581 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2016-ல் 2.18 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2021-ல் ரூ. 14.89 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்திருப்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது!

https://www.vikatan.com/government-and-politics/politics/adr-report-on-assests-of-tn-mlas-2021

——————————————————————————————————————–

முழு ஊரடங்கு விதிமீறல்: எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு!

ஊரடங்கின் முதல் நாளான மே 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி கேட்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் முழு ஊரடங்கு விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 250 அதிமுகவினர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே 7-ம் தேதி, அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முடிவு எதும் எட்டப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. அதன் பின்னர், புதிதாக முதல்வராக பொறுப்பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கூட்டம்
அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கூட்டம்

ஊரடங்கின் முதல் நாளான மே 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி கேட்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது. காலை 9:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. நீண்ட இழுபறி, கடுமையான வாக்குவாதம், தீவிர ஆலோசனைக்கு பின்னர், அதிமுகவின் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், காவல்துறை அனுமதியளித்த எண்ணிக்கைக்கும் அதிகமான கூட்டம் கூடி, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக, இராயப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட சுமார் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கும்பகோணம்: அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கும் எம்.எல்.ஏ!’

கே.குணசீலன்ம.அரவிந்த்

'கும்பகோணம்: அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கும் எம்.எல்.ஏ!'

‘கும்பகோணம்: அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கும் எம்.எல்.ஏ!’

லாக்டெளன் முடியும்வரை தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கு வதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் வருமானத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தினக் கூலி வேலைக்கு செப்லபவர்கள், அடிதட்டு மக்கள் பயன்பெறும் வகையில் லாக்டெளன் முடியும்வரை தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கு வதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்.

உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்
உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.இங்கு காலையில் டிபன் மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை,புளி உள்ளிட்ட சாதங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் காலை, மதியம் என இரண்டு வேளை உணவுக்கான செலவை வழங்கி வருகிறார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரவும் உணவும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி தினமும் இரவு டிபன்,மதியம் காய்கறி கூட்டுடன் சேர்த்து சாதம் வழங்குவதற்கு தேவைப்படும் பணத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.


`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!’ – முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்
`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்
எளிமை, மனிதநேயம், நிர்வாகத்திறன், துணிச்சலான செயல்பாடுகளால் தஞ்சை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்தவர் இந்த சண்முகம்.
தமிழக முதலமைச்சரின் செயாளர்களில் ஒருவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.எஸ்.சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவர் மிகவும் நேர்மையான அதிகாரி, பாரத் நெட் டெண்டரில் முறைகேடு இருப்பதாக, அந்தக் கோப்பில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இவரைப் பற்றி வெளியுலகுக்கு அதிகம் தெரியாத, நெகிழவைக்கும் சம்பவங்கள் ஏராளம். எளிமை, மனிதநேயம், நிர்வாகத்திறன், துணிச்சலான செயல்பாடுகளால் தஞ்சை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்தவர்.
`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்
பத்தாண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், தனது சிறப்பான செயல்பாடுகளாலும் பன்முகத்தன்மையாலும் இப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தவர். அரசு அதிகாரிகள் பெரும்பாலும், தங்களுக்கு உடல்நிலை பிரச்னை என்றால் அரசு மருத்துவமனையின் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் இவரோ, தன் மனைவிக்கு தஞ்சை அரசு பொது மருத்துவமனையில்தான் பிரசவம் பார்த்தார். அப்போது அவள் விகடன் சார்பில் நேரில் வாழ்த்துச் சொல்லி கட்டுரை வெளியிடப்பட்டது. “அரசு அலுவலர்கள், கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பயன்படுத்தினால்தான், அங்க வரக்கூடிய மக்களுக்கு என்னென்ன சிரமங்கள் இருக்கு, வேற என்னவெல்லாம் வசதிகள் தேவைங்கிறதை அனுபவபூர்வமாக உணர முடியும். அதிகாரிகள் அங்க சிகிச்சைக்குப் போனால்தான், மருத்துவர்களும் ஊழியர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்றுவாங்க’’ என அப்போது தெரிவித்து நெகிழ வைத்தார்.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கும், ஜெனரல் வார்டுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். பிரசவமான தாய்மார்களை, திறந்தவெளியில்தான் வீல் சேரில் அழைத்துச் செல்வார்கள். வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அதுதான் நிலை. அதைக் கண்டு நொந்துபோன எம்.எஸ்.சண்முகம், உடனடியாக 14 லட்சம் ரூபாய் செலவில், மேற்கூரையுடன் கூடிய கேரிடார் அமைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் கவுன்டரில் மக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் நின்றுதான் மனு கொடுக்க வேண்டிய அவலநிலை. மேற்கூரை கிடையாது. குடிநீர், நாற்காலி வசதிகளும் கிடையாது. எம்.எஸ்.சண்முகம் இங்கு ஆட்சியராக வந்தவுடன், இதற்கான வசதிகளை ஏற்படுத்தியதோடு, கவுன்டர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார்.

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

தஞ்சை வல்லம் பகுதியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த இல்லத்தை நடத்தியவர், மாற்றுத்திறனாளிகளை விரட்டி அடித்துவிட்டு, வெளியில் நன்கொடை மற்றும் பல்வேறு உதவிகளைப் பெற்று அனுபவித்து வந்தார். விரட்டியடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தஞ்சை கீழவாசல் பகுதியில் கழிவறை சுத்தம் செய்து வாழ்க்கையை நகர்த்தினார்கள். அதில் சிறுமிகளும் இருந்ததுதான் வேதனையின் உச்சம். இந்தத் தகவலை அப்போது எம்.எஸ்.சண்முகத்தின் கவனத்துக்கு ஜூனியர் விகடன் கொண்டு சென்றது. உடனடியாக அந்த இல்லம் சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த மாற்றுத்திறனாளிகள், மூன்று சக்கர சைக்கிள்கூட இல்லாமல் சிரமப்பட்டு வந்தார்கள். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, பைண்டிங் செய்யும் தொழிற்கூடம் அமைத்துக் கொடுத்தார் எம்.எஸ்.சண்முகம். அந்த நிறுவனத்தை இவரே திறந்து வைத்ததோடு, பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ஆர்டர்களும் பெற்றுத் தந்தார். புத்தாண்டு, பொங்கல், தீபாவளியின்போது பலரும் தனக்கு அளிக்கும் அன்பளிப்புகளை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிடுவார்.

பாபநாசம் அருகில் உள்ள தேனாம்படுகை கிராமத்தில் ஓர் அணை சிதிலமடைந்து கிடந்தது. ஊர்மக்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும், அந்த அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதை அப்போதைய ஆட்சியர் எம்.எஸ்.சண்முகத்தின் கவனத்துக்கு பசுமை விகடன் கொண்டு சென்றது. அந்த அணையை நேரில் பார்வையிட்டதோடு, பல லட்சம் ரூபாய் செலவில், உடனடியாக அதைச் சீரமைத்துக் கொடுத்து, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் எம்.எஸ்.சண்முகம். விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். தஞ்சைக்கு எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் ஆட்சியராக வந்தவுடன், “விவசாயிகளுக்கான கூட்டத்துல போலீஸ் எதுக்கு? உங்களோட நேரமும் வீணடிக்கப்படுது. நீங்க சட்டம் ஒழுங்கு பணிகளை கவனிக்கப் போகலாம்’’ என அன்பாகக் கூறி காவல்துறையினரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
தலைமைச் செயலகம்தலைமைச் செயலகம்
குறைதீர்க்கும் கூட்டங்களின்போது, விவசாயிகளிடம் அன்பாகப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்தார். “கலெக்டர் ஆபீஸுக்கு வந்து உங்களோட நேரத்தை வீணடிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. உங்களோட பிரச்னைகள் கண்டிப்பாகத் தீர்க்கப்படும்’’ என விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். விவசாயிகளில் சிலர் பயிர் இன்ஷூரன்ஸுக்கு காப்பீடு செலுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். “இந்த வருஷம் கண்டிப்பா மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம். இப்போதைக்கு உடனடியா, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள், உங்க பணத்தைப் போட்டு ப்ரீமியத்தைக் கட்டிடுங்க. பின்னாடி இந்தப் பணத்தை விவசாயிகள் கொடுத்துடுவாங்க’’ என விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டினார்.
மனிதநேயத்தால் மட்டுமல்ல… அதிரடியான செயல்பாடுகளாலும் விவசாயிகளைப் பெரிதும் ஈர்த்தவர். மழை, வறட்சி நிவாரணம் வழங்குவதில் முறைகேடுகள் செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடுகளை, தன்னால் இயன்றவரை கட்டுப்படுத்தினார். பட்டுக்கோட்டை பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மணல் திருட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.

பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகரை அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், எம்.எஸ்.சண்முகமோ, தனது பதவிக்கேற்ற கண்ணியத்தோடு நடந்துகொண்டார். 2010-ம் தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற எம்.எஸ்.சண்முகத்தின் கடுமையான உழைப்பும் நிர்வாகத்திறணும் முக்கியக் காரணங்கள். இதனால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றார். தஞ்சை பெரியகோயில் முன்பு தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள், சாலையில்தான் கடை அமைத்திருந்தார்கள். இதனால் பலவித இன்னல்களுக்கு ஆளானார்கள். இவர்களுக்காக கோயிலின் எதிரில் நிரந்தமாக இடம் அமைத்துக் கொடுத்து, வியாபாரிகளை நிம்மதி அடையச் செய்தார்.
2011-ம் ஆண்டு தானே புயலில் கடலூர் மாவட்ட கிராமங்களுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக ககன்தீப் சிங் பேடியும், எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டார்கள். படகில் பயணம் மேற்கொண்டு, அப்பணிகளை வெற்றிகரமாகச் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

பெரியகோயில்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply