இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாய மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் !!!

அவர் மேலும் தெரிவித்ததாவது:

Dr Murali
2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மதிப்பீட்டின்படி உலகில் 50 நாடுகளில் 75 மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னைதக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம் 2.1 இலும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இரு பிள்ளைகள் ஆவது இளம்வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்கமுடியும்.

மேலும் 2008இல் வெளியிடப்ட்ட முஸ்லீம்களின் குடித்தொகைப்பரம்பல் ‘Muslim demographics’ (https://www.youtube.com/watch?v=6-3X5hIFXYU) என்னும் youtube விடியோ உலகஅளவில் முஸ்லிம்களின் குடித்தொகை அவர்களது அதிகரித்த கருவளம் காரணமாக அதிகரிப்பதைக்காட்டுகிறது.

Coference-Jaffna
ஏனைய இனங்களின் கருவளவீதம் நன்றாக குறைந்துவிட்ட நிலையில் அதிகரித்துவரும் முஸ்லிம்களின் குடி தொகையும்பரம்பலும் 2050 இல் உலகில் பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லீம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்று காட்டுகிறது.பிரான்சு நாட்டில் பிரான்சியர்களின் கருவள வீதம் 1.8ஆக இருக்க அங்கே குடிபெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் கருவளவீதம் 8.1ஆக க்காணப்படுகிறது. இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் 34 வருடங்களில் பிரான்ஸ் இஸ்லாமியக்குடியரசாக மாறிவிடும். கடந்த 30 வருடங்களில் ஐக்கியஇராச்சியத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 மடங்காக அதிகரித்து இருக்கிறது.

இன்னும் 11 வருடங்களில் நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதிக்கு மேலாக அதிகரித்துவிடும். 1970 இல் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்தனர்.ஆனால் 2008 இல் 9 மில்லியனாக அதிகரித்தனர். இன்னும் சில ஆண்டுகளில் ரஸ்யா இராணுவத்தில் 40 சதவீதம் முஸ்லிம்களே இருப்பர்.

chart-1
இலங்கையைப் பொறுத்தவரையில் 1911 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைத்தமிழர்‚ இந்தியவம்சாவழித்தமிழர் என்று தமிழர்கள் பாகுபடுத்தப்பட்டு குடித்தொகைமதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து இரு தமிழ் இனங்களின் வீதம் குறைந்துவரும் அதேவேளை சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவந்துள்ளது. இந்தநிலைநீடித்தால் புள்ளிவிவரவியல் எதிர்வுகூறலின்படி இன்னும் 12 வருடம் அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் குடித்தொகை தமிழரின் குடித்தொகையை விட அதிகமாகிவிடும். அதாவது 2031இல் குடித்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ளப்படும்போது தமிழர்கள் மூன்றாவது சிறுபான்மையினமாகிவிட்டதை வெளிப்படுத்தும். இலங்கையில் முஸ்லிம்களின் அதிகரிப்புக்குக் காரணம் பலதாரமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் இளம் வயதிலேயே திருமணம் செய்து அதிகமான பிள்ளைகளைப் பெறுவதுமேயாகும்.

மருத்துவ நிபுணர் மேலும் தெரிவிக்கையில் வடகிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் கட்டாய கருத்தடையையும் அதற்கு வடக்குமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் உண்மைக்குமாறான அறிக்கைகள் வெளியிட்டமையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். வலைப்பாடு‚ வேரவில்‚ கிராஞ்சி முதலான இடங்களில் பெண்கள் போசாக்குத் தொடர்பான மருத்துவமுகாம் என்று கூறி அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு கருத்தடை செய்ய சம்மதிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்காணல் ஆதாரத்துடன் தனது கருத்துரையின் போது வெளிப்படுத்தினார்.

force-contracep
அரசபுள்ளிவிவரத்தின்படி 2012 இல் 2877 சிங்களவர்களுக்கும் 1035 தமிழர்களுக்கும் 450 முஸ்லிம்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டது. இருப்பினும் இன விகிதாசார அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகமாகவே கருத்தடைசெய்யப்பட்டுள்ளது.

மலையகத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் கடந்த பல தசாப்தங்களாகத் திட்டமிட்டமுறையில் கருத்தடை செய்யும் நடைமுறை இருந்துவருகின்றமையையும் நிரந்தரக் கருத்தடைக்கு 500 ரூபா சன்மானமும் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இதேவேளை 2009 இலிருந்து அனைத்து ஆயுதப்படையினருக்கும் மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொண்டால் ஒரு இலட்சம் ரூபா ஊக்கத்தொகையை அரசு வழங்கி இனத்தை பெருக்குகிறது.

steralisation-chart
தமிழனத்தின் பிறப்பு வீதம் குறைந்தமைக்கு மேலும் பல காரணங்களை வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் முன்வைத்தார். தமிழ் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெண்கள் தமக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு குறையக் காரணமாக உள்ளது. பெண்கள் பலர் உயர்கல்வி முதலான காரணங்களால் 30 வயதிற்குப் பின்னரே திருமணம் செய்கின்றனர். இயற்கையாக பெண்களின் கருவளம் 30 வயதுக்கு பின்னர் வீழ்ச்சி அடைவதனால் தாமதமாகத் திருமணம் செய்வோருக்கு பிள்ளைகள் பெறுவதற்கான வாய்ப்புக் குறைகின்றது. தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள சாதியப்பாகுபாடுகள், உயர்வடைந்து செல்லும் சீதனம் முதலானவையும், இடப்பெயர்வுகளும் வாழ்வாதாரம் அற்ற நிலையும் திருமணமாதவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது அல்லது தாமதமான திருமணத்துக்கு இட்டுச் செல்லுகின்றது.

போருக்குப்பின்னரானகுழந்தைகளின்பிறப்புவீதஅதிகரிப்பு (Baby Booming) தமிழ்ப் பகுதியில் நிகழவேயில்லை. அதிகமான ஆண்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டமையும் அதிகமானோர் காணமற்போயிருப்பதும் இந்நிலைக்குக்காரணமென வைத்தியநிபுணர் தெரிவித்தார்.

வடகிழக்கில் 89000 பெண்கள் ஆண் துணையை இழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ச் சமூகம் இவர்களுக்கு கோழிவளர்ப்பு முதலான சுயதொழில் வாய்ப்புப் பற்றியே சிந்திக்கிறது. 18 – 40 வயது வரையான பெண்களுக்கு மறுவாழ்வு அழிப்பது பற்றி சமூக சமயத் தலைவர்களோ அரசியல் வாதிகளோ சிந்திப்பதில்லை. இப்பெண்களுக்கான இயற்கையான பாலியல் தேவை பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க மறுக்கிறது. இப்பெண்கள் மாற்று இனத்தவர்களால் விபசாரத்துக்கு உட்படுத்துவது பற்றி கதைப்பது சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையே காண்பிக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு உள்ள சட்டங்களைப் போல் தமிழர்களும் போருக்குப் பின்னரான நிலையை எதிர்கொண்டு சமூகத்தை நிலைநிறுத்த சட்டங்களை உருவாக்க வேண்டும். பலதாரமண திருமணச் சட்டத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் உருவாக்கல் குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இந்து சாம்ராஜ்ஜியங்கள் தோல்வியடைந்த போது தீவளர்த்து பெண்கள் கூட்டாகத் தீயில் பாய்ந்து அழித்துக் கொண்ட வரலாறுகள் உண்டு. இதே வேளை முஸ்லிம்கள் போரின் பின்னர் கணவனை இழந்த அனைத்துப் பெண்களையும் மறுமணம் செய்தார்கள்.

பிரிட்டிஸ்காரர் இந்தியாவைக் கைப்பற்றியிருக்காவிடில் இன்று இந்தியா இஸ்லாமியக்குடியரசாக இருந்திருக்கும் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதும் நோக்கத்தக்கது.

singala-1
ஏனைய இனங்கள் தங்கள் பிறப்புவீதத்தை அதிகரிக்க‚ இனத்தைப் பாதுகாக்க அக்கறைகாட்டும் வேளையில் போரினால் அழிவடைந்துள்ள தமிழினத்தின் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் தமிழினத்தின் அழிவு குறித்து இதுவரை சிந்திக்காதிருப்பது இனத்தின் துரதிஷ்டம் என்கிறார்.

அழிவடைந்த தமிழனத்தின் பிறப்பு வீதத்தைக்கூட்ட மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்வோருக்கு ஊக்குவிப்பு வழங்க தமிழரசியல் தலைமையோ அல்லது வேறு எவருமோ இதுவரை முன்வரவில்லை. இலங்கையில் இந்நிலை நீடிக்குமெனில் கடந்த காலத்தில் பெருமையுடன் வாழ்ந்து தற்போது அழிவு அபாயத்தை எதிர்நோக்கும் காட்டுயானை, சிறுத்தை, திமிங்கிலம் முதலான உயிரினங்கள் இனங்கள் போல் தமிழினமும் ஆகிவிடும் என்று கூறி தனது கருத்துரையை நிறைவு செய்தார்.

ஈழம்ஈநியூஸ்.

இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாய மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் !!!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply