ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

(1)

நக்கீரன்

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில்   மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட  லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55)  சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார்.  ஓகஸ்ட்  21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.

இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும்  சிறீலங்காயில் மனித உரிமைகள்  அமைப்புக்கள், ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும்  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த  நியமனம்  மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய  30-1, 34 -1  மற்றும் 40-1  தீர்மானங்களை  நடைமுறைப்படுத்துவதில்  ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச்  சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.

சனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி  அழகு பார்த்துள்ளார்.

இந்தப் பதவி உயர்வு  தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று  எல்லோருக்கும் அதிர்ச்சி தரும்  வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.

எடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில்  கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி  வசந்தா கரன்னகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல்  (Admiral of the Fleet)  பதவிக்கு உயர்த்தியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட  நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர்,  அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும்  என நினைத்து  அவரது கடவுச் சீட்டில்  அவர்   வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு  கோட்டை  நீதிபதி  தடை விதித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத்  தாக்கல் செய்து  கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால்  கைது செய்யப்படுவதற்கு எதிராகத்  தடை  உத்தரவைப் பெற்றார்.

போர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச்  செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.

சனாதிபதி  சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.

இலங்கை விமானப்படை 2006 மிக் -27  விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவைகள்  விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய  இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன்  மற்றும் உருசியாவின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும்  சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக  குற்ற விசாரணையில் உள்ளனர்.

நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பிரித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் (Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு  (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர  சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர்  போரின் கடைசிக்  கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்  ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த  அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க   சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட “Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார்.

ஈழப்போர் 1V  இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு  மீது போர் விதிகளை மீறிப் பல  தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள்  பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலைகளுக்கு  சூத்திரதாரியாக இருந்த  மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி  இருந்தார்.

பின்னர்  09 சனவரி, 2019  இல்  சவேந்திர சில்வா  இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  சனாதிபதி சிறிசேனாவால்  நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.

“நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.

மேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில்  பாரிய மனித உரிமை மீறல்கள்,  மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு  இலக்கான  இராணுவ அதிகாரி  சவேந்திர சில்வாவிற்கு  சனாதிபதி  மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த  போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக்  கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்குப்  பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழும்புகின்றது?” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பதியுள்ளன.

சவேந்திர  சில்வாவின்  நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்காயை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

மேலும் அவ்வறிக்கையில்   குறிப்பிடப்பட்டிருந்ததாவது.

“2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்  மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே  தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding of  58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம்  அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.

“இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால்  சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச்  செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)


ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! (2)

58 ஆவது  படைப்பிரிவுஅனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டது – ஐநா விசாரணை அறிக்கை!

நக்கீரன்

டந்த வாரம் புதிதாக ஒரு  அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்சவின் சிறீலங்கா பொதுசன முன்னணியும்   சிறீலங்கா சுதந்திரக் கட்சியும்  இணைந்து சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி (Sri Lanka Podujana Ekabadda Peramuna (SLPEP) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாகியுள்ளனர்.  இந்தக் கூட்டணிக்கு ப் பக்கம் கொண்ட யாப்பு வரையப்பட்டுள்ளது.  அது புதிய கூட்டணியின் அரசியல்  கோட்பாடுகளை இயம்புகிறது.Image result for à®?வà¯?ந்திர à®?ில்வா

(1) சுமார் முப்பது ஆண்டு காலம்  நடந்த  பிரிவினைவாதப் போரின்போது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத்  தியாகங்களைச்  செய்த  போர் வீரர்கள்  போர்த் தீர்ப்பாயங்களுக்கு முன் நிறுத்தப்பட  அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தல்.

(2) பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பின்பற்றுபவர்களுக்கும் எந்தத் தடையும் இருக்காது.

(3) நாட்டின் ஒற்றையாட்சி  அரசியல் முறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க  வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த அம்சங்கள் பழையவை. நிலப்பிரபுத்துவ காலக் கோட்பாடுகள்.    சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து  இந்தக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒரு இம்மியளவும் முன் நகரமாட்டார்கள் என்பதற்கு இந்த யாப்பு நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இந்த இன- மத கோட்பாடுகளைப் பகிரங்கமாக முன்வைக்கும்  கட்சிக்கும் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்சவுக்கும் தமிழர்கள் மத்தியில்  வலம் வரும்   காக்கைவன்னியர்கள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Image result for �வ�ந்திர �ில்வா

இபிடிபி கட்சியின் ஆயுட்காலச் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா சனாதிபதி தேர்தலில்  தனது கட்சி கோத்தபாய இராசபக்சவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.

இல்லாத ஊருக்கும் இலக்கற்ற  பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம், எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின்  தலைவிதியையே மாற்றியமைப்போம்.

எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.

இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச  அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.” (http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%)

சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி சார்பாகப் போட்டியிடும் கோத்தபாய இராசபக்ச தனது கட்சியின்  கொள்கைகோட்பாடு பற்றிய தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை. அவர் இராணுவக் கண்ணோடத்தோடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மட்டுமே தேர்தல் மேடைகளில் கூறிவருகிறார். புதிய அரசியல் யாப்புகாணி விடுவிப்புவலிந்து காணாமல் போனோர் தொடர்பான தீர்வுஅரசியல் கைதிகளின் விடுதலை இவை தொடர்பாக கோத்தபாய இராசபக்ச இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பின்னணியில் டக்லஸ் தேவானந்தா விழுந்தடித்து கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் வலிந்து காணாமல் போனோர்,  அரசியல் கைதிகள்காணி அபகரிப்புஅரசியல் கொலைகள் போன்றவற்றுக்கு கோத்தபாய காரணம் என்று தமிழ்மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். Image result for mullivaikkal massacre

வட்டுவாகலில் மே 18, 2009 காலை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பா.நடேசன்திருமதி நடேசன்சீவரத்தினம் புலித்தேவன்கேணல் இரமேஷ்போராளிகள்  மற்றும்  பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் அன்று மாலை வட்டுவாகலில் சரணடைந்த எழிலன்யோகிபாலகுமார்புதுவை இரத்தினதுரைதிலகர் போன்றோர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.    முன்னவரின் கட்டளைப்படி  பின்னவர் கொலைகளை நிறைவேற்றினார். இந்தக் கொலைகளுக்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.

ஆனால் தேவானந்தா எந்த வெட்கமோ துக்கமோ இன்றித் தமிழர்களின் குருதிதோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கோத்தபாயவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்னஇரண்டும் ஒன்றுதான்! Image result for LTTE surendees

ஒக்தோபர் 01, 2015 இல்  47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்  குறித்து விசாரணை செய்ய வேண்டும் என  அமெரிக்கா  ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம் (30-1) ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி அக்டோபர் 2015  நிறைவேறியது.  மேலும்   பொதுநலவாய நாட்டு நீதிபதிகள்வழங்கறிஞர்கள்வழக்குத் தொடுனர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானம் கோரியது. கலப்பு விசாரணை மன்றம் போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரச படைகள் மற்றும் வி.புலிகள் என இரு சாராரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது.

இலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றித் தொடர்ந்து கண்காணித்துமதிப்பிட்டுஅறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநாமஉ பேரவையின் ள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியிருந்தது.

கலப்பு விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையைக் கூட நடத்த சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா தான் உயிரோடு இருக்கும் வரை எந்தவொரு போர் வீரனையும் நீதிமன்ற  விசாரணைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ விட மாட்டேன். அது நடக்க வேண்டும் என்றால் தனது  சடலத்தைக் கடந்துதான் நடக்க முடியும் எனவும் சூளுரைத்து வருகிறார்.

சிறிலங்கா படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் நாட்டில் நிலவிய   பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை மீட்ட மாவீரர்கள் என மகிந்த இராசபக்ச போலவே  சிறிசேனாவும்  புகழாரம் சூட்டுகிறார். இவர்கள் இருவரும் சிங்கள – பவுத்த மேலாண்மைத் தத்துவத்தில் ஊறிப்போனவர்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

சிறிசேனா சனாதிபதியாக வருமுன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்  25 ஆண்டுகள் உறுப்பினராகவும் 15 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.

நான் சனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் இராசபக்ச  தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி மண்குழிக்குள் புதைத்திருப்பார்” என 2015 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற போது சொன்னார். தேர்தலுக்கு முந்திய நாட்களில் அவரும் அவரது குடும்பமும் அவருக்கு நெருக்கமான ஒருவரது இரப்பர் தோட்டத்தில் பதுங்கி” யிருந்ததாவும் சொன்னார்.

பிற்காலத்தில் மகிந்த இராசபக்சவை பிரதமராக நியமித்த பின்னர்  தேர்தல் பரப்புரைக்காகவே ஆறடி மண்குழிக் கதையைச் சொன்னதாக சிறிசேனா  சொன்னார். மனிதர் எப்போது பொய் சொல்கிறார்எப்போது மெய் பேசுகிறார் என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும். எனவேதான்   இரணில் விக்கிரமசிங்கவுக்குத் துணிவில்லை சிறிசேனாவுக்கு  முதுகெலும்பு இல்லை எனச் சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

ஐநாமஉ பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 30-1 போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில்ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் எனக்  கோருகின்றது.Image result for Mullivaikkal massacre

இலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்யஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்காஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்டமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த  இராசபக்ச  அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்  தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்துவெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும். ஆனால் அரசு அதனை நிராகரித்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா அப்படியான கலப்பு விசாரணையைக் கடுமையாக எதிர்க்கிறார். தான் சனாதிபதியாக இருக்கு மட்டும் அது நடக்காது எனச் சூளுரைத்துள்ளார்.

ஒரு நாட்டின் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்படுகிறதுஇது ஒரு பொதுவிதிஅப்படி அது அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் இராணுவம் எந்த இனத்தோடும் மதத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில்லைபொதுவாக வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளனஇரண்டையும் கலப்பதில்லைஒரு சனநாயக முறைமையில் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும்  ஓர் நிறைல்லோரும் ஒர் விலை” என்ற சமத்துவக்கோட்பாடுக்கு ஊறு விழைவிக்கப்படக் கூடாது என்ற கரிசனை காரணமாகவே அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.Image result for LTTE surendees

சிறிலங்கா இராணுவம் அது தன்னை ஒரு சிங்கள – பவுத்த இராணுவமாக  வெளிபடையாக எந்த ஒளிவுமறைப்பும் இன்றி அடையாளம் காட்டிக் கொள்கிறதுஅண்மையில் இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மகேஷ் சேனநாயக்க சிறிலங்கா இராணுவம் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்களைக் கொண்ட இராணுவம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்இதையிட்டு அரசோஅரசியல்வாதிகளோஏனைய மதவாதிகளோ அலட்டிக் கொள்ளவில்லைமகேஷ் சேனநாயக்கா யதார்த்தத்தைச்தானே  சொன்னார் என்பது காரணமாக இருக்கலாம்.

இராணுவ தளபதி சவேந்திரா சில்வா ஒரு சிங்கள – பவுத்த அடிப்படைத் தேசியவாதியாக கருதப்படுகிறார்அவர் பவுத்த மத பீடங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.  

பவுத்த பீடங்களான  சியாம் நிக்காய (அஸ்கிரியமல்வத்து)   அமரபுர நிக்காய மற்றும்  இராமன்னா நிக்காய மூள்றும் சேர்ந்து தாய்நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க நல்கிய சேவையைப் பாராட்டி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு   “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹயும் விஷரதா ஜோதிகாதாஜா வீரபர்த்தபா தேசமான்ய ஜாதிகா கவுரவநம  சம்மனா உபாதி சன்னாஸ்பத்ரயா”, மற்றும் வீர கஜேந்திர சங்கிரமசூரி ஜாதிக கவுரவநம சன்னாஸ்பத்ரய” மற்றும் “வீரவிக்கிரம தேசாபிமானி விஷ்வ கீர்த்தி ஸ்ரீ இரணசூர  (ஒரு  சாதாரண குடிமகன் பெறக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும்,  அண்மையில்  சிறீலங்காவின் மத்திய மலை நாட்டுப் பிரபலங்கள் மெடறட்ட அபிமானயா” (மலையகத்தின் பெருமை) என சவேந்திர சில்வா  ​​மேஜர் ஜெனரல் ஆக இருந்த காலத்தில்  கவுரவிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப்  பட்டம் பெற்ற சவேந்திர சில்வாதேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கான செயல்முறைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.(He was a graduate of Harvard University, USA and successfully completed the Senior Executives in National and International Security program.)

மேலும் புத்தர் ஞானம்பெற்ற 2600 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்ட “2600 ஆண்டுகளாக சிறீலங்காவின் அடையாளம்” என்ற நூலை எழுதியுள்ளார். (இராணுவ வலைத்தளம்).

சவேந்திர சில்வாவின் சொந்த வலைத்தளம் தமிழீழத்தின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் (தமிழ்ப் புலிகள்தோற்கடித்ததில் அவருக்கு இருக்கும்  பங்கிற்கு  அவரை ஒரு மாவீரன்” (Hero)” என வர்ணிக்கிறதுஆனால் 2012 ஆம் ஆண்டில்அவர் சிறீலங்காவின் ஐநா துணைத் தூதராக இருந்தபோது, ​​அவர் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த  ஐநா சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

சிறீலங்காவின் இராணுவ தளபதி என்ற முறையில் சவேந்திர சில்வா வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. நல்லது மட்டுமல்ல அவசியமும் கூட. போர்க் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் யார் எதிரியார் நண்பன் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டும் (Know your enemy – Know yourself – Sun Yzu).

சிறீலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப்  போர் காரணமாக இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. அதற்கு இராணுவம் கைப்பற்றிய காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம்இழுத்தடிப்பு  நல்ல எடுத்துக்காட்டு. வடக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தனியார் காணிகள் அனைத்தும்  31 டிசெம்பர் 2018 க்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என சனாதிபதி சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அங்கொன்று இங்கொன்றாக காணிகள் விடுவிக்கப்பட்டாலும் வலிகாமம் வடக்கில்  இராணுவத்தின் பிடியிலுள்ள    6381.5 ஏக்கர் காணியில் பாதிதான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி விடுவிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 73 ஏக்கர் உறுதிக்காணியைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. அங்கு இராணுவம் பாரிய நிரந்தர முகாம் அமைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.Image result for unhrc commissioner

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு  எதிராக இம்முறை ஐநாமஉ  சபையின் ஆணையாளர் மிச்செல் பசெலெட்அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனடாஐரோப்பிய ஒன்றியம்மனித உரிமை அமைப்புக்கள் மற்றும்  மனித உரிமை ஆர்வலர்கள்அரசியல்வாதிகள்  எனப் பல திசைகளிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையாளர் மிச்செல் பசெலெட் தனது  அறிக்கையில் போரின் போதுஅவரும்அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கான  தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா  சிறீலங்காவின்  இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில்இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுகவலை தரும் நிலைமை என்றுஐநா மனித உரிமை ஆணையாளர் 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில்இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவுஅனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போதுஇலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில்லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும். இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன்குறிப்பாகபாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மிக மோசமாக பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன்ஐநா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” எனத்  தெரிவித்துள்ளார். (தொடரும்)


ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! (3)

   சவேந்திர சில்வாதலைமை தாங்கும் இராணுவத்தை  அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபடுத்தி வருவது ஆட்டுக் குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைப்பதற்கு ஒப்பாகும்!

நக்கீரன்

“தமிழ் மக்கள் கடந்த 70  ஆண்டுகளுக்கு மேலாகத்  தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம்.

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் இன்று உயர்பதவிகளை வகிக்கின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட இதுவரை வழங்கவில்லை” இவ்வாறு  கடந்த  14 செப்தெம்பர், 2019 அன்று கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில்  முதன்மை   விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  தெரிவித்துள்ளார்.à®?லà®?்à®?à¯? யுத்தà®?் à®?ுற்றவாளியாà®? à®?à®?à¯?யாளப்பà®?ுத்தப்பà®?்à®?வர், ராணுவ தளபதியாà®? நியமிà®?்à®?ப்பà®?்à®?ார்

அண்மையில்  இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற  சவேந்திர சில்வா,  கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள்  படுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட  லெப். ஜெனரல்  வசந்த கருணகொட,   உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது  தொடர்பாக கைது செய்யப்பட்ட றோஷான் குணத்திலக்க போன்றோருக்கு  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதையே மாவை சேனாதிராசா தனது பேச்சில்  மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். .

இந்த மூவரும் போர்க்காலத்தில்  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருக்கமாக இருந்தார்கள். கோத்தபாய எள் என்றால் இந்த மூவரும்  எண்ணெய்யாக இருந்தார்கள்.

2009 சனவரியில்  சவேந்திர சில்வா  இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக பதவி ஏற்றம் செய்த போது எழுந்த கண்டனங்களை விட இம்முறை சகல தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனக் கணைகள் அவர் மீது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாய்ந்துள்ளன.

பாரதூரமான – நம்பகத்தன்மைமிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவியை அரசு உடன் பறித்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார் .

லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது பாரதூரமான – நம்பகத்தன்மைமிக்க போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும்கூட இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நா. உறுப்பினரும் ஆன  ம.ஏ. சுமந்திரன் போர்க்குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள  சவேந்திரா சில்வாவை  இராணுவ தளபதியாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தமிழ் மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  மேலும் கடுமையான குற்றங்கள்  சாட்டப்பட்ட ஒரு நபரை சிறீலங்காவின்  இராணுவத் தளபதியாக நியமித்தமை  தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும்.  இந்த நியமனம் குறித்து நாங்கள் ஆழமான அதிருப்தி அடைந்துள்ளோம்  எனத் தெரிவித்துள்ளார்.

The appointment of Shavendra Silva, an individual who stands accused of grave crimes as Sri Lanka’s army commander is a serious affront to the Tamil people. We are deeply dismayed by this appointment.

சவேந்திர சில்வா மட்டுமல்ல கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கப்பம் கேட்டுக் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, கப்பம் கொடுக்கப்பட்ட பின்னரும்

 படுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட லெவ். ஜெனரல் கருணகொடவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.Image result for yasmin sooka

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சான்றுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அவரின் விருப்பத்தை காண்பித்த மனிதர். அவரின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும். எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியின்போது, அதனை அடக்குவதில் சவேந்திர சில்வாவின்  வகிபாகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அக்காலக்கட்டத்தில் மரணதண்டனைகள், காணமாலாக்கப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்துவைப்பு போன்றவை தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் இருந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை “மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக சனாதிபதி சிறிசேனா நியமித்திருப்பது  போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு  எதிரான குற்றங்கள்  தொடர்பாக எந்தவித பொறுப்புக் கூறலும்  இல்லை என்பதைக் காட்டுகிறது” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சிறீலங்காயின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை சனாதிபதி நியமித்திருப்பது, ஆயுத மோதலின்  போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையான பற்றாக்குறையைக் காட்டுகிறது.

The President’s appointment of  Shavendra silva as Sri Lanka’s army commander illustrates absolute lack of accountability for war crimes and crimes against humanity during the armed conflict.

சவேந்திர  சில்வா எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளின் ஈர்ப்பு இருந்தபோதிலும், முந்தைய அல்லது தற்போதைய அரசாங்கம் அவற்றை விசாரிக்கவில்லை என்று கொழும்பை தளமாகக் கொண்ட கொள்கை மாற்றத்துக்கான மையம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. “உண்மையில், மேஜர் ஜெனரல் சில்வாவின் தொடர்ச்சியான விளம்பரங்கள் இந்த மீறல்களுக்கு எவ்வாறு வெகுமதி அளிக்கப்படுகின்றன என்பதை  எண்பிக்கிறது” என அது அறிக்கையில் கூறியுள்ளது.

போர்க் குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக” அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவித்தது.

கோத்தபாய இராசபக்ச சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் களம் இறக்கப்பட்ட நிலையில், சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாக பலர்  சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஒற்றுமையை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே சனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர். பன்னாட்டு மட்டத்தில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை,  பன்னாட்டுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக  அவர் மேலும்  குறிப்பிட்டார்.

லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் மற்றும்  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள்  கண்டனமும் எச்சரிக்கையும்  விடுத்துள்ளன. சிறிலங்காவை கண்டித்த நாடுகளில் அமெரிக்காவின் கண்டனம் சிறிலங்காவை கடுமையாக எச்சரிக்கும் பாணியில் அமைந்திருந்தது.

மோசமான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை ஆனது வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று  ஓகஸ்ட் 21  அன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராசாங்கத் திணைக்கள அதிகாரி  எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது –

“இந்த நியமனம் 2009 இல் முடிவடைந்த மிருகத்தனமான மோதலைத் தொடர்ந்து  உருவாக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு  நிலையான தாக்கங்களைக் கொண்டிருக்கும். சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.Image result for US Ambassador in Colombo

“தெளிவான  நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின்  பதவி  உயர்வு  மூலம் இந்த தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிட்ட வசமானது.  இது குறித்து  நாங்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளோம் ” என்றார்.

போரின் இறுதிக் கட்டங்களில் கருத்துவேறுபட்ட தமிழ்ப்  புலிகளுக்கு எதிராக ஒரு இராணுவப் பிரிவை வெற்றிகரமாக வழிநடத்திய ‘பெருமை’ சில்வாவுக்கு உண்டு. ஆயுத மோதலின் கடைசிக் கட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட  ‘no fire zones’ பகுதிகள் மருத்துவமனைகள் உட்பட,  தொடர்ச்சியான இராணுவ ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டது,

அமெரிக்க  அதிகாரி “இராணுவத் தளைபதி  ஒரு அறியப்பட்ட மனித உரிமை மீறல் செய்பவராக இருந்தால் இலங்கையுடன் ஒரு வலுவான இராணுவ உறவை வளர்த்துக் கொள்வதால் நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்” என்றார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால் ஆபத்துக்களை எடுக்க தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சவேந்திர சில்வாவின் பதவியுயர்வு இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உள்க் கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க  Millennium Challenge Corporation மூலம்  வழங்கப்படும் அ.டொலர்  480 மில்லியன்  மானியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அந்த அதிகாரி எடுத்துரைத்தார்.  சில்வாவின் பதவி உயர்வு MCC  முதலீட்டைப் பாதிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ஒரு நாடு சனநாயகத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அதுவும் ஒரு காரணியாகப் பார்க்கப்படும்” என்றார். இந்த ஒப்பந்தம் இலங்கையின் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.Image result for millennium challenge corporation sri lanka

அ.டொலர் 480 மில்லியன் என்பது  கொஞ்சநஞ்ச தொகையல்ல. இன்றைய இலங்கை நாணய மதிப்பீட்டில் உரூபா 86,400 மில்லியன் (8640 கோடி) ஆகும்.  வட மாகாண சபைக்கு முதலீட்டுச் செலவு உட்பட 2017 இல் உரூபா 25,308 மில்லியன், 2018 இல் உரூபா 25,684 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் முதலீட்டுச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டால் 2017 இல் உரூபா 4,733 மில்லியன், 2018 இல் உருபா 3,533 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாகக் குறிப்பிட்டுள்ளது.

ஓகஸ்ட் 19 அன்று விடுத்த செய்தி அறிக்கையில் “லெவ்டினன்ட் ஜெனரல்சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமித்ததையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.  அவருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.  அவை தீவிரமான மற்றும் நம்பகமானவை. இந்த நியமனம் இலங்கையின் பன்னாட்டு நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.  நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக  ஆக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாகக் கருதப்படும் கால கட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள கனேடிய உயர் தூதரகம் ஓகஸ்ட்  21 அன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:

இலங்கையின் ஆயுத மோதலின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை இழைத்த  லெவ். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது குறித்து கனடா கடுமையான கவலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த நியமனம் இலங்கையின் சொந்த மக்களிடமும், ஐநா மனித உரிமைகள் பேரவையுடனும் – தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கமாகக் கொண்ட கூடுதல் முயற்சிகளுக்கு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நீண்டகால அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைய வேண்டுமானால் பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் நம்பிக்கையும்,  தண்டனையிலிருந்து விலக்கும் மேலான நம்பிக்கையும் இருக்க வேண்டும்.”

இராணுவத் தளபதியாக லெவ். ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்டதிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளைப் பற்றி சிறீலங்கா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த நியமனம்  இறையாண்மை படைத்த சிறீலங்கா நாட்டின் தலைவரின் முடிவாகும். இலங்கையில் பொது சேவை மேம்பாடுகளின் முடிவுகள் மற்றும் உள் நிருவாக செயல்முறைகளைப் பாதிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனக் கூறப்பட்டது.

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தனது நியமனம் குறித்த சர்வதேச சீற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,  தான் போர்க்குற்றங்கள் செய்ததாக “யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்” என்று கூறினார். ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சில்வாவுக்கு எதிரான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை “தீவிரமான மற்றும் நம்பகமானதாக” விவரித்தது.

சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கண்டனக் கணைகளை உதறித்தள்ளினாலும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது யதார்த்தமாகும். அமெரிக்கா எச்சரிக்கையோடு நில்லாமல் செயலிலும் இறங்கியுள்ளது.  அமெரிக்காவின் மில்லேனியம்  அறைகூவல்  திட்டத்தின் கீழ் அ.டொலர் 480 மில்லியன் (உரூபா 8640 கோடி)  நிதியுதவியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிறீலங்காவின் சனாதிபதி சிறிசேனா இரண்டு இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திட மறுத்தது முக்கிய காரணம் என்றாலும் போர்க் குற்றங்கள் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக பதவி உயர்த்தப்பட்டதும் ஒரு காரணமாகும். இந்த நிதி நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட இருந்தது. பயணிகள் போக்குவரத்துச் சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை  நடைமுறைப் படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய அமெரிக்கா எண்ணியிருந்தது.

தற்போது சிறீலங்காவின் இராணுவத்தின் ஒரு பிரிவு ஐநா வின் அமைதி காக்கும் படையில்  பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. 2017  டிசெம்பரிலும்  2018 சனவரியிலும்    சிறீலங்காவின் இராணுவம் மாலி நாட்டில் ஐநா வின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்கு அனுப்பப்பட்டது. இதில்  இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொறியியலாளர்கள்,  சமிக்ஞைப் படையணி, இயந்திர காலாட்படை, மருத்துவப் படைகளின் உறுப்பினர்கள் என 184 பேர்களும், மற்றும் இராணுவத்தின் 16 அதிகாரிகளும் சென்றனர்.  லெவ். கேணல்  கலனா அமுனுபுர மற்றும் மேஜர் ஹசந்த ஹென்னடியுடன் இரண்டாவது கட்டளை அதிகாரியாக இணைந்து கொண்டார்.Image result for Lieutenant Colonel Kalana

ஆனால் அதே ஆண்டு ஒக்தோபரில் ஐநா சபை கேட்டுக் கொண்டதற்கு இணங்க லெவ்.  கேணல் கலான அமுனுபுர நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.  காரணம் சிறீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009  ஆண்டு நடந்த கடைசிக் கட்ட போரில் கலான அமுனுபுர போர்க்குற்றங்கள் இழைத்தார் என தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஐநா சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அவர் உட்பட 56  பேர்கள் மீது போர்க் குற்றச் சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. போர்க் குற்றச் சாட்டுக்கு ஆளாகிய இராணுவ அதிகாரிகள் ஐநா அமைதி காக்கும் படையில் இடம்பெறக் கூடாது என அந்த அமைப்பு கேட்டிருந்தது.

இதே போல் 2007 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டுக்கு  100 க்கும் மேற்பட்ட இலங்கை  இராணுவத்தினர் அமைதி காக்கும் படைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால்  பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளின் விளைவாக அவமானமாக ஹைட்டியில் இருந்து சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். குற்றவாளிகளை விசாரித்து அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதாக சிறீலங்கா அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. 2009 ஆம் ஆண்டில் 20  இராணுவத்தினர்  ஒழுங்கு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள போதும்  யார் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை.

ஐ.நா மற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் உட்பட அமைதி காக்கும் படையினருக்கு எதிராக ‘அமைதி காக்கும் குழந்தைகளின்’ தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும்  தந்தைவழிக் கொடுப்பனவுகளை கோரி வழக்குத் தொடர்ந்தனர்.  2004 முதல் 2007 வரை  குறைந்தது 134 இலங்கை அமைதி காக்கும் படையினர் ஹெயிட்டி நாட்டின் குழந்தைகளை பாலியல் ரீதியில்  சுரண்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னரும் சிறீலங்கா இராணுவம்  ஐநா  அமைதிப் படையில் எவ்வாறு  தொடர்ந்து – ஒருமுறையல்ல 10 முறைக்கும் அதிகமாக –  ஈடுபட்டு வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது.  அது மட்டுமல்ல ஐநா சபைக்கு அறைகூவல் விடுப்பது போலப் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டு வரும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தலைமை தாங்கும் சிறீலங்கா இராணுவத்தை ஐநா சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருவது   ஐநா சபையின் கொள்கை, கோட்பாடு, விதிகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றுக்கு முரணானது  ஆகும். ஆட்டுக்குட்டிகளுக்கு ஓநாயைக்  காவலுக்கு வைத்ததற்கு ஒப்பாகும்.  (முற்றும்)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply