திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை!

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை!
நக்கீரன்

திருகோணமலையும் திருக்கோணேசுவரமும்

(2)  

தொடர்ந்து  எழுது முன்னர் திருகோணமலை பற்றிய வரலாற்றை ஒருமுறை பின்நோக்கிப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

திருகோணமலையின் வரலாறு திருக்கோணேசுவர ஆலயம் மற்றும் அங்கு காணப்படும் குளங்கள் போன்றவற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

ஆசியாவில் உள்ள ஒரே இயற்கைத் துறைமுகம் திருகோணமலை என்பது யாவரும் அறிந்ததே.

திருகோணமலை வரலாற்றுக் காலந்தொட்டே மார்க்கோ போலோ (Marco Polo) போன்ற கடலோடிகளையும் மேற்காசியா – சீன வணிகர்களையும் ஈர்த்துள்ளது.

கிரேக்க புவியியலாளர் தொலமி (கிபி 250) தாம் வரைந்த இலங்கைப் படத்தில் திருகோணமலையைக் குறிப்பிடுகிறார்.

இதிகாசங்கள் இராவணனது மனைவி மண்டோதரி கோணேசுவர ஆலயத்தை வழிபட்டார் எனச் சொல்கின்றன.

மலையின் அடிவாரத்தின் கிழக்குப் புறத்தில் வங்காள விரிகுடா பரந்து கிடக்கிறது.

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும்; திருகோணமலை இந்துப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக விளங்கியது. அதனால் அதனைக் கைப்பற்ற போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் போட்டி போட்டார்கள். இதனால் அதனைச் சுற்றி எத்தனையோ கடற் சமர்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது (1941 – 1945) ஆசியாவில் ஆங்கிலேயர்களது மிக முக்கிய துறைமுகமாகத் திருகோணமலை விளங்கியது.

திருகோணமலையில் இருந்து 4 கல் தொலைவில் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் (7) காணப்படுகின்றன. இந்தக் கிணறுகளில் ஊறும் நீர் வெவ்;வேறு அளவு சூட்டைக் கொண்டதாக அமைந்துள்ளது.

திருக்கோணமாமலை ஆலயத்தை கட்டியவன் குளக்கோட்டன் எனக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் பவுத்தம் பரவுவதற்கு முன்னர் திருகோணமலை இந்துக்களுக்கு புனித தலமாக இருந்திருக்கிறது. இலங்கையில் விசயன் காலத்துக்கு முன்னர் இருந்த அய்ந்து ஈஸ்வரங்களில் திருக்கோணேசுவரம் ஒன்றாகும்.

திருகோணமலை என்ற சொல்லின் தோற்றம் பற்றி ஒத்த கருத்தில்லை. செல்வத்தை, அழகை, புனிதத்தைக் குறிக்கும் திரு என்ற அடைமொழி சைவம் தழைத்தோங்கிய காலத்தில் இடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழக கோயில்கள் பல திருச்செந்தூர் திருவேங்கடம், திருவெண்ணைநல்லூர் திருத்தணி திருவெங்காடு திருக்கடையூர் திருக்கோவலூர் என திரு என்ற அடைமொழி இட்டு அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை திருகோணமாமலை திருமலை திருக்குன்றுமலை எனவும் அழைக்கப்படுகின்றது. ஆலயம் கோணேசுவரம் கோணமாமலை கோணார் கோயில் சுவாமி மலை என அழைக்கப்படுகிறது. குன்று சிறு மலையைக் குறிக்கும் சொல்லாகும்.

“கோண” என்பது முதல் நூற்றாண்டில் கிழக்குத் திசையைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் எனப் பொருள் கொள்வாரும் உண்டு.
பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் (அத்தியாயம்
xxxv11) திருக்கோணேசுவர ஆலயத்தைக் குறிப்பிடுகிறது. பவுத்த அரசனான மகாசேனன் பல சிவாலயங்களை இடித்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது.

மகாவம்சம் திருகோணமலையை கோகர்ண எனக் கூறுகிறது. இது பாலி மற்றும் வடமொழி வடிவமாகும். சிங்களத்தில் புழுயெ என அழைக்கப்படுகிறது. இதுவும் தமிழ் முழுயே என்ற சொல்லின் திரிபாகும்.

சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர் (7ஆம் நூற்றாண்டு) திருநாவுக்கரசர் (சம்பந்தரின் சமகாலத்தவர்) கோணமாமலையமர்ந்த சிவனைப் பற்றிப் பாடல்கள்; பாடியிருக்கிறார்கள். இதுவே இந்த ஆலயம் பற்றிய பழைய தமிழ்க் குறிப்பாகும்.

நிரைகழல் அரவஞ் சிலம்பொலியலம்பும் நிமலர் நீறணி திருமேனி
வரைகொழுமகளோர் பாகமாப்புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற்பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலையமர்ந்தாரே.


திருஞானசம்பந்தர் பாடிய பத்துத் தேவாரப் பாடல்களில் இதுவொன்றாகும்.

பிற்காலத்தவரான அருணகிரிநாதர் திருக்கோணேசுவரம் பற்றித் திருப்புகழில் பாடியுள்ளார்.

ஆசிரியர் திரு. ஆர். வடிவேல் எழுதிய திருகோணமலைத் மாவட்ட திருத்தலங்கள் என்ற ஆய்வு நூல் திருகோணமலை பற்றிய தகவல்களைத் தருகிறது.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர் திருகோணமலை மீது செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாக சிங்கள மன்னன் மானவர்மன் (கிபி 630 – 668) காலத்தில் பல்லவரது செல்வாக்கு மேலோங்கி இருந்தது. திருகோமலையில் இருந்து 29 கல் தொலைவில் உள்ள திரியாயில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

அரச கட்டிலை அட்டதத்தன் என்ற மன்னனிடம் பறிகொடுத்த மானவர்மன் நாட்டைவிட்டு ஓடிக் காஞ்சி சென்று பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனிடம் (கிபி 630-668) அடைக்கலம் புகுந்தான். அக்கால கட்டத்தில் இடம்பெற்ற வாதாபி படையெடுப்பின் போது பல்லவப் படைப் பிரிவு ஒன்றுக்கு மானவர்மன் தலைமை தாங்கியதாகத் தெரிகிறது.

திருகோணேசுவர ஆலயத்துக்கு பல்லவ மன்னர்கள் திருப்பணி செய்தார்கள். அன்றைய ஆலயம் ஆயிரங்கால் மண்டபத்தை கொண்டதாக இருந்தது.

சோழர்களும் பாண்டியர்களும் கோணேசுவர ஆலயத்தை ஆதரித்தாகத் தெரிகிறது. பிறட்டிக் கோட்டை வாசலில் இரட்டை மீன்கள் கொண்ட இலட்சணையோடு எழுதப்பட்டிருக்கும் சொற்றொடர் அதற்குச் சான்றாக இருக்கிறது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.

போர்த்துக்கேயர் இந்த ஆலயத்தை இடித்துத் தரமட்டமாக்கிய நிகழ்ச்சியை வரலாற்று ஆசிரியர் வுநnநெவெ என்பவர் கீழ்க்கண்டவாறு விபரிக்கிறார்.

“போர்த்துக்கேயர் தங்கள் ஆட்சியின் முற்பகுதியில் திருகோணமலை பற்றி வாழாவிருந்தனர். ஆனால் ஒல்லாந்தர் 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் திருகோணமலையில் தலைகாட்டினார்கள். ஒல்லாந்த தளபதி கொன்ஸ்டன்டைன் டி சா (Constantine de Sa)  1622 இல் கண்டிய மன்னனோடு ஒப்பந்தம் எழுதிக்கொண்டது போர்த்துக்கேயரை அச்சத்துக்குள் ஆழ்த்தியது.

தங்கள் பரம்பரை எதிரிகள் இலங்கையில் காலூன்றுவதை விரும்பாது போர்த்துக்கேயர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புத் துறைமுகங்களைக் கைப்பற்றி தங்கள் மேலாண்மைக்குள் கொண்டு வந்தார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் கோணேசுவர ஆலயத்தைப் போர்த்துக்கேயர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

இந்து புத்தாண்டு நாளில் கோயில் இடிப்புத் தொடங்கியது. போர்த்துக்கேயப் படையினர் மாறு வேடத்தில் அடியார்களோடு அடியார்களாக ஆலய உள்வீதிக்குள் ஊடுருவினர். பூசை முடிந்து அடியார்கள் அங்கிருந்து அகன்ற பின்னர் இடிப்புத் தொடங்கியது. ஆலயத்தில் எஞ்சி இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். சில மணித்தியாலயங்களில் 2000 ஆண்டு காலமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

ஆயிரங்கால் மண்டபம் உட்பட ஆலயத்தை இடித்த கற்களைக் கொண்டே பிரட்றிக் கோட்டையைப் போர்த்துக்கேயர்கள் கட்டினார்கள்.
இன்றும் கோட்டை சுவர்களிலும் பீரங்கி மேடையிலும் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களைக் காணலாம்.


ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் சிலைகள் சில தம்பலகாமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

1950 இல் ஆலயத்தை அண்டியுள்ள கிணற்றில் இருந்து நான்கு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை அய்ம்பொன்னால் ஆனவை. கடலடியில் நடத்திய ஆய்வுகளின் போது பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடலடியில் பழைய ஆலயம் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏறக்குறைய 380 ஆண்டுகளுக்குப் பின்னர் கோணேசுவரர் ஆலயம் மீள் திருப்பணி செய்யப்பட்டு நாளாந்த பூசை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கடலை அண்டி பழைய ஆலயம் இருந்த இடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பூசைகள் நடைபெறுகின்றன.

திருகோணமலைப் பகுதியில் அழிந்து போன புத்த விகாரைகளும் காணப்படுகின்றன. பழைய காலத்தில் திரியாய் என்ற ஊர் தமிழ் பவுத்தர்கள் வாழ்ந்த ஊராக இருந்திருக்கிறது.

திருகோணமலை மாவட்டம் சேருவிலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்று புத்த சங்கத்துக்கு மகாசிவன் மற்றும் காகபட்டி என்ற தமிழ் வணிகர்கள் குகை ஒன்றைத் தானம் செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

அம்பாரை குடுவில் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு கல்வெட்டு “தீகவாபி குடிமக்கள் ஆன திசா (தமிழன்) அவனது மனைவி மக்கள் ஆகியோருக்குச் சொந்தமான குகை” எனக் குறிப்பிடுகிறது.

திசா என்பதும் தீசன் என்பதும் ஒரு பொருள் குறித்த சொற்களாகும். இதனால் தீசன் என்ற பெயருடையவர்கள் தமிழர்கள் எனப் பெறப்படும். தேவநம்பிய தீசன் தமிழ் மன்னன் ஆவான்.

மேலே குறிப்பிட்ட கல்வெட்டுக்கள் கிமு 2 ஆவது அல்லது 3 ஆவது நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும்.



சிங்களக் குடியேற்றங்களினால் கிழக்கில் சிறுபான்மையாகிவிட்ட தமிழர்கள்
(3)


கோணேசுவரர் ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாசலில் பிரட்றிக் கோட்டை இருக்கிறது. சற்றுத் தள்ளி உட்புறமாகப் புத்தரின் பெரிய உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோணேசுவரர் ஆலயத்துக்குப் போவோர்கள் இந்தப் புத்தர் சிலையைக் கடந்தே செல்ல வேண்டும். புத்தரின் சிலைகள் சிங்கள - பவுத்த ஆக்கிரமிப்பின் சின்னமாக திருகோணமலை மாவட்டம் முழுதும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பிரட்றிக் கோட்டை வாசலில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும்.

கடந்த ஆண்டு சிங்கள இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட சம்பூரில் இருபது ஆண்டுகள் கழித்துப் போயா நாள் கொண்டாடப்பட்டதாக கொழும்பு நாளேடு ஒன்று பெருமிதத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது. சம்பூரில் நிலைகொண்டுள்ள இராணுவம் அங்கு ஒரு புத்த விகாரையைக் கட்டி உள்ளது. அடுத்த கட்டமாக அங்கு ஒரு பவுத்த தேரர் குடிபுகுவார்.


பிரட்றிக் கோட்டை போர்த்துக்கேயரால் 1623 இல் கட்டப்பட்டது. ஒல்லாந்தர் அந்தக் கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து 1639 இல் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்கள் கோட்டையை விரிவாக்கினார்கள். ஆனால் 1672 இல் பிரஞ்சுப் படை அக்கோட்டையைத் தாக்கி அதனைக் கைப்பற்றியது.



1982 ஆம் ஆண்டு சனவரி 8 இல் பிரித்தானியப் படை பிரட்றிக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றியது. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் பிரஞ்சுப் படை அதனை மீளக் கைப்பற்றியது.


1783 இல் பிரான்ஸ் பிரட்றிக் கோட்டையை பிரித்தானியாவிற்கு கையளித்தது. பிரித்தானியா அதனை ஒல்லாந்தருக்குக் கொடுத்தது. இறுதியாக பிரித்தானியா 1795 இல் பிரட்றிக் கோட்டையைத் தாக்கி மீளக் கைப்பற்றியது. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும் வரையும் கோட்டை பிரித்தானியர் கைவசமே இருந்தது.

திருகோணமலையைக் கைப்பற்றுவதற்கு கொலனித்துவ நாடுகள் தங்களுக்குள் மோதிக் கொண்டதற்கு முக்கிய காரணம் அதன் இயற்கைத் துறைமுகமே. உலகின் 5 ஆவது பெரிய இயற்கைத் துறைமுகம் திருகோணமலையாகும். திருகோணமலையை மையமாகக் கொண்ட ஒரு கடற்படை இந்துப் பெருங்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பிரட்றிக் கோட்டை இன்று சிங்கள இராணுவத்தின் திருகோணமலை மாவட்ட தலைமையகமாகவும் அரசாங்க அதிபரின் அலுவலகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சீனன் குடாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கடற்படை அங்குள்ள ஒரு குன்றில் அருங்காட்சிக் கோபுரம் ஒன்றை நிறுவியுள்ளது. பிரித்தானியா காலத்து 3 பாரிய பீரங்கிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 கிமீ தூரத்துக்குச் சுடக்கூடிய வல்லமை வாய்ந்தவையாகும்.

1957 ஆம் ஆண்டுவரை திருகோணமலை பிரித்தானிய றோயல் கடற்படையின் முக்கிய தளமாக இருந்தது. கடற்படையில் பணியாற்றிய கடற்படையினர் பிரட்றிக் கோட்டையை குடியிருக்கப் பயன்படுத்தினர். அய்ம்பதுகளில் கடற்படையினரின் குடியிருப்புக்கு எனப் பல பங்களாக்கள் கட்டப்பெற்றன. இந்த பங்களாக்களில்தான் இன்று சிங்களப் படை அதிகாரிகள் குடியிருக்கின்றனர்.


1796 இல் கண்டி அரசு நீங்கலாக இலங்கையின் ஏனைய பகுதிகள் பிரித்தானியாவின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 1815 இல் கண்டி அரசின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராசசிங்கன் சிங்கள பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவனும் அவனது குடும்பமும் பிரித்தானிய படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கண்டி அரசை சிங்கள பிரதானிகள் பிரித்தானியாவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிற்குக் கையளித்தார்கள்.


1833 ஆம் ஆண்டு ஒக்தோபர் முதலாம் நாள் இலங்கையின் நிருவாகத்தை சீர்செய்யுமுகமாக கோல்புரூக் - கமெறூன் ஆணையம் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்தது. இந்தப் பிரிப்பு நிருவாக வசதிக்காகச் செய்யப்பட்ட ஒன்றாகும்.

1) வட மாகாணம்      - அனுராதபுரம் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னார். யாழ்ப்பாணம் அதன் தலைநகரம்.

2) கிழக்கு மாகாணம் - தம்பன்கடவை பிந்தனை கொட்டியாரம் பளுகாமம் பானமை திருகோணமலை மூதூர் மட்டக்களப்பு வெலிகந்தை குமண மற்றும் யால. மட்டக்களப்பு அதன் தலைநகரம்.

3) மேல் மாகாணம் (Western Province) - கற்பிட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோட்ட, பாணன்துறை, களுத்துறை மற்றும் குருநாகல். தலைநகர் கொழும்பு. 

4) தென் மாகாணம் - காலி தங்காலை மாத்தறை இரத்தினபுரி மற்றும் அம்பலாந்தோட்டை. தலைநகர் காலி. 

5) மத்திய மாகாணம் - கண்டி, உடுநுவர, ஊவா. தலைநகர் கண்டி.

ல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு ஒரு தமிழ் அலகும் கண்டிச் சிங்களவர்களுக்கு ஒரு அலகும் கரையோரச் சிங்களவர்களுக்கு இன்னொரு அலகும் என இலங்கை பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மூன்ற அலகுகளையுமே பிரித்தானியர் 5 மாகாணங்களாகப் பிரித்தனர்.

பின்னர் 1845 இல் வடமேற்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் தலைநகரம் குருநாக்கல். 1873 இல் வட மத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. இதில் வடமாகாணத்தில் இருந்த நுவரகலவேவா கிழக்கு மாகாணத்தில் இருந்த தம்பன்கடவை இணைக்கப்பட்டன. வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்பற்று வட மேற்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. அதன் தலைநகர் அனுராதபுரம். நாளடைவில் மாகாணங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

1904 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வாறு மாகாணங்கள் உருவாக்கப்பட்ட போது பிரித்தானிய ஆட்சியாளர் தமிழர்களது மரபுவழி தாயகத்தை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக தம்பன்கடவை தமிழ்ப் பகுதியாகும். ஆனால் அது கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வட மத்திய மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் தோற்றம் கொண்ட இன மோதலுக்கு இந்தத் தவறு முக்கிய காரணியாகும்.

மேற் குறிப்பிட்ட 9 மாகாணாங்களில் 20 மாவட்டங்கள் இருந்தன. கீழ்க்கண்ட அட்டவணை 1827 – 1981 ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் - சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காட்டைக் காட்டுகிறது.

                        கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காடு
                                                                              அட்டவணை (1)
   ஆண்டு
 தமிழ்பேசும் மக்கள் 
 சிங்களம் பேசும் மக்கள்
 1827
99.24
0.53
 1881
93.82
4.66
 1891
93.89
5.06
 1901
91.80
5.05
 1911
93.49
3.76
 1921
93.95
4.53
 1946
87.8
9.87
 1953
85.5
13.11
 1963
79.25
19.9
 1971
78.61
20.70
 1981
74.40
24.92



1955 இல் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையப்பட்டன.
கிழக்கு மாகாணம் - 10,440 ச.கிமீ இல் இருந்து 9,931 ச.கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

வட மத்திய மாகாணம் - 10,352 ச.கிமீ இல் இருந்து 10,709 ச.கிமீ ஆக அதிகரிக்கப்பட்டது.

ஊவா மாகாணம் - 8,160 ச.கிமீ இல் இருந்து 8,478 ச.கிமீ ஆக உயர்த்தப்பட்டது.

தமிழர்களது தாயக நிலப்பரப்பு படிப்படியாக திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது.

1901 ஆம் ஆண்டு வட – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு 19,100 ச.கிமீ ஆக இருந்தது. பக்கத்து சிங்கள மாகாணங்களோடு தமிழ்நிலப் பரப்பின் ஒரு பகுதி இணைக்கப்பட்டதால் அதன் பரப்பளது 7,500 ச.கிமீ ஆல் குறைக்கப்பட்டு விட்டது.

1948 இல் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 7,000 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது.
வட மாகாணத்தில் 500 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாரிய சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக சிங்களவர் தொகை திருகோணமலை மாவட்டத்தில் 15.3 (1946) விழுக்காட்டில் இருந்து 33.6 விழுக்காடாக (1981) உயர்ந்தது. கிழக்கு மாகாணத்தில் அதே கால கட்டத்தில் 8.4 விழுக்காட்டில் இருந்து 24.9 விழுக்காடாக அதிகரித்தது.

சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழந்த தமிழ்மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். 1959 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடி 91 விழுக்காடு சிங்களப் பெரும்பான்மை கொண்ட அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1975 இல் திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சிங்களப் பெரும்பான்மை கொண்ட சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது.

அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் தொகை மாற்றத்தைக் கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.

அம்பாரை மாவட்ட மக்கள் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம்
அட்டவணை 1
 
 சிங்களவர்
தமிழர்
  முஸ்லிம்கள்
 ஆண்டு
எண்ணிக்கை
 விழுக்காடு
எண்ணிக்கை
 விழுக்காடு
எண்ணிக்கை
 விழுக்காடு
1911
 4762
 7.0
 24733
 37
 36843
 55
1921
 7285
 
 25203
 
 31943
 
1953
 62160
 
 39985
 
 37901
 
1963
 623160
 29
 49220
 23.5
 67990
 45.60
1971
 82280
 30
 60519
 22
 126365
 47.0
1981
 146371
 38.01
 78315
 20
 126365
 47
இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதை நிலைநிறுத்துவதற்கு வட – கிழக்கில் பவுத்த - சிங்களவர்களை அரச ஆதரவுடன் குடியேற்றி அதனை பவுத்த – சிங்கள பெரும்பான்மைப் பிரதேசமாக மாற்றி அமைக்கும் திட்டம் 1931 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் சிங்கள அமைச்சரவைக் கூட்டத்தில் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழர்களது நிலத்தை கைப்பற்றும் நோக்கோடு வடகிழக்கு மாகாணத்தில் ஆறுகள் குளங்களை அண்டிய பகுதியில் திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கட்சி வேறுபாடின்றி அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி குடியேற்றத் திட்டங்களை துரிதப்படுத்தின. முதல் சிங்களக் குடியேற்றம் 1950 ஆம் ஆண்டு பட்டிப்பளையில் (கல் ஓயா) தொடக்கப்பட்டது.

கல்ஓயா (பட்டிப்பளை) குடியேற்றத்திட்டம்            -       டி.எஸ். சேனநாயக்கா
கந்தளாய் குடியேற்றத் திட்டம்                                     -       டி.எஸ். சேனநாயக்கா
அல்லை குடியேற்றத் திட்டம்                                       -       டி.எஸ். சேனநாயக்கா -  டட்லி சேனநாயக்கா
பதவியா (பாவற்குளம்) குடியேற்றத் திட்டம்          -        SWRD  பண்டாரநாயக்கா
மொறவேவா (முதலிக்குளம்) குடியேற்றத்திட்டம்      -       ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) குடியேற்றத்திட்டம் -   ஜே.ஆர். ஜெயவர்த்தனாஃ காமினி திசநாயக்கா
வெலி ஓயா (மணல் ஆறு) குடியேற்றத் திட்டம்                     - ஜே.ஆர். ஜெயவர்த்தனா - ஆர். பிரேமதா - காமினி திசநாயக்கா (உலகத்தமிழர் யூன் 2007) (தொடரும்)

அல்லை கந்தளை குடியேற்றத் திட்டங்கள்

(4)

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்முதல் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அய்க்கிய தேசியக் கட்சி சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரி சிங்களக் குடியேற்றம் மூலம் வட-கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை இன விழுக்காட்டை மாற்றுவதில் முனைப்போடு செயற்பட்டு வந்துள்ளன.

இலங்கையில் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவே இந்தக் குடியேற்றத்திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றிய மூளைசாலியாவார்.

டி.எஸ். சேனநாயக்காவே கிழக்கு மாகாணத்தில் (திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில்) பாரிய அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கியவர். இவரே பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை (சேருவில) கந்தளை (கந்தளாவ) பதவிக்குளம் (பதவியா) முதலிக்குளம் (மொறவேவா) மற்றும் மதுரு ஓயா திட்டங்களைத் தொடக்கியவர். இவரால் முடித்து வைக்க முடியாத திட்டங்கள் அவருக்குப் பின்னால் பிரதமராக வந்தவர்கள் முடித்து வைத்தார்கள்.

1936 ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா காணி மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த போது பட்டிப்பளை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டும் சாத்தியம் பற்றி ஆராய்ந்தார். இங்கினியாக்கலவில் கட்டப்படும் அணை மூலம் பட்டிப்பளை ஆற்றின் நீரை பெரிய ஏரியில் தேக்கத் திட்டமிட்டார்.

இந்தத் திட்டத்துக்கு கல் ஓயா பன்முக நோக்குத் திட்டம் எனப் பெயரிடப்பட்டது.

இந்த அணை 3,600 அடி நீளமும் 134 அடி உயரமும் உடையது. நீர்ப்பாசன இயக்குநராக இருந்த J. S. கென்னடி (J.S.Kennedy) என்பவர் ஏரியில் உள்ள நீர் ஆவியாகமாறி வீணாவதைத் தடுக்க அதனை நீளமாகக் கட்டுவதை விட ஆழமாகக் கட்ட வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார்.

எதிர்பார்த்தது போலவே இந்த ஏரி சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயரிடப்பட்டது. இலங்கையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரி இதுவாகும்.

கல் ஒயா மேம்பாட்டு அவை(Galoya Development Board)  இந்தக் கட்டுமானத்துக்கு 67.2 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்தது.

கல் ஓயா மேம்பாட்டு அவை டி.எஸ். சேனநாயக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட எண் 51 இன் கீழ் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க பொறியாளர்கள் Morrison Knudsen of San Francisco   இந்தத்திட்டத்தை 1947 இல் கட்டி முடித்தார்கள்.

1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 இல் அது உத்தியோக அடிப்படையில் தொடக்கி வைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தூர்ந்து கிடந்த பல குளங்களை மீள்செப்பமிட உரூபா 700 மில்லியனை ஒதுக்கியது.

மீள்செப்பமிடத் தயாரித்த குளங்களின் பட்டியலில் பதவிக்குளம், கந்தளை, குறுலுவேவா, கந்தலாமா மற்றும் கதுல்லா குளங்களும் அடங்கும்.

1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 இல் கொண்டாடப்பட்ட சுதந்திர நாள் அன்று டி.எஸ். சேனநாயக்கா நாட்டு மக்களுக்கு விடுத்த உரை ஒலிபரப்பப்பட்டது.

D.S. Senanayake in his independence day anniversary broadcast on February 4, 1951, declared, Colonization of land development activities are going at full speed and we are now able to bring more [Sinhala] colonists to lands that have been fully developed and provided with irrigation and other facilities than we have ever done before.”

அந்த உரையில் அவர் கூறியதாவது “காணி மேம்பாடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் முழு வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன் எப்பொழுதும் யாரும் செய்யாதவாறு நீர்ப்பாசனம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு முழுதாக மேம்படுத்தப்பட்ட காணிகளில் இப்போது அதிகளவு சிங்களக் குடியேற்ற வாசிகளை கொண்டுபோக முடிகிறது.”

மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்மரமாக முடுக்கிவிடப்பட்ட திட்டமிட்ட கல் ஓயா சிங்களக் குடியேற்றம் காரணமாக 1961 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் நாள் ஒரு புதிய மாவட்டம் - அம்பாரை – உருவாக்கப்பட்டது.

1959 இல் நியமிக்கப்பட்ட தொகுதி மறுசீர் ஆணையம் அம்பாரை மாவட்டத்தை உருவாக்குமாறு பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் சிங்களக் குயேற்றத்தின் வேகத்தை மேலும் பலமடங்கு கூட்ட உதவியது.

1911 இல் துண்டாடப்படாத மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த சிங்களவர்களது தொகை வெறுமனே 4,702 ஆகும். 1921 இல் சிங்களவர்களது தொகை 7,285 மட்டுமே. ஆனால் கல் ஓயா சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்ட பின்னர் சிங்களவர்களது தொகை நாலுகால் பாய்ச்சலில் அதிகரித்தது!

1936 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் இனவாரியாக மக்கள் தொகை சிங்களவர் 29.34 விழுக்காடு ஆகவும், தமிழர் 23.8 விழுக்காடு ஆகவும் முஸ்லிம்கள் 46.39 விழுக்காடு ஆகவும் இருந்தனர்.

ஆனால் 1981 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சிங்களவர்களது விழுக்காடு 37.90 ஆக உயர்ந்தது. அதே நேரம் முஸ்லிம் மற்றும் தமிழர்களது விழுக்காடு முறையே 41.82 , 20.28 ஆகக் குறைந்தது.

2001 ஆம் ஆண்டில் தமிழர்களது விழுக்காடு மேலும் சரிந்தது. தமிழர்களது விழுக்காடு 18.98 ஆக வீழ்ச்சியுற்றது. முஸ்லிம்களது விழுக்காடு சற்று அதிகரித்துக் காணப்பட்டது.

அம்பாரை மாவட்டம் மக்கள் மக்கள் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம்

                                                              அட்டவணை 2
 ஆண்டு
சிங்களவர்
%
முஸ்லிம்கள்
%
தமிழர்
%
மொத்தம்
1911
4762
7.18
36843
55.54
24733
37.28
66338
1921
7285
10.35
37901
53.85
25203
35.81
70389
1953
26450
19.48
69376
51.08
39985
29.44
135811
1963
62316
34.71
67990
37.87
49220
27.42
179526
1971
82280
30.57
126365
46.95
60519
22.48
269164
1981
146371
37.90
161480
41.82
78315
20.28
386166
1994
223652
39.34
233748
41.12
111076
19.54
568476
2001
231171
39.32
245089
41.69
111590
18.98
587850
திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம்

சிங்கள அரசு கந்தளை குளத்தை மீள்செப்பமிடும் பணியைத் தொடங்கியது.

இந்தக் குளம் மிகப் பழமை வாய்ந்தது ஆகும். பல நூற்றாண்டு காலம் நீடித்த கொலனித்துவ ஆட்சியில் அது தூர்ந்து பயன்படாது போனது. இந்தக் குளத்தில் இருந்து 50 அடி உயரமும் 25 மைல் நீளமும் கொண்ட வாய்க்கால் மூலம் 4,560 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யக் கூடியதாக இருந்தது.

அல்லை நீர் தேக்கத் திட்டம் கந்தளை குளம் ஆகியவற்றை விட திருகோணமலைக்கு வடக்கு – மேற்குத் திசைகளில் உள்ள பதவிக்குளத்தையும் பெரிய விளாங்குளத்தையும் (மகாடுவல்வேவா) மீள் செப்பமிடும் பணி தொடங்கியது.

பதவிக்குளம் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தின் பெரும் பகுதி நிலத்திற்கு நீர் வழங்கக் கூடிய குளமாகும். இதனைக் காரணம் காட்டி திருகோணமலை மாவட்டப் பகுதி காணிகளை பகிர்ந்து கொடுக்கும் பொறுப்பு அனுராதபுர மாவட்ட அரச அதிபரின் கைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் திருகோமலயில் சிங்களவர்களைக் குடியேற்றவது எளிதாக்கப்பட்டது!

இந்தக் குளங்களைச் சுற்றிய காடுகள் வெட்டப்பட்டன. அவை துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் இருந்து சிங்களக் குடியேற்றவாசிகள் பெருமளவு கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர்.

இந்தச் சிங்களக் குடியேற்றங்கள் தென்னிலங்கையில் காணியற்ற பயிர்க்குடிகளுக்கு (peasants) காணி வழங்கும் போர்வையில் செய்யப்பட்டனவாகும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 ஏக்கர் வேளாண்மை காணியும் 2 ஏக்கர் மேட்டு நிலமும் ஒதுக்கப்பட்டன. வீடு கட்டவும் கிணறு வெட்டவும் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அல்லை, கந்தளை சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் மாற்றமுடியாத அளவிற்கு திருகோணமலை மாவட்டத்தின் இனவாரியான படத்தை மாற்றி அமைத்தது.

அல்லை குடியேற்றத் திட்டம் மகாவலி கங்கையின் கிளை ஆறான வெருகல் ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்தப் பகுதி கொட்டியாரம் உப அரச அதிபர் பிரிவு என அழைக்கப்பட்டது. பின்னர் டட்லி சேனநாயக்கா பிரதமராக இருந்தபோது (1965 - 1970) அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த று. தகநாயக்கா கொட்டியாரம் உப அரச அதிபர் பிரிவை இரண்டாகப் பிரித்தார்.

மூதூர் உப அரச அதிபர் பிரிவு, சேருவல உப அரச அதிபர் பிரிவு என அவை அழைக்கப்பட்டன.

பின்னர் எண்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த மு.று. தேவநாயகம் ஈச்சிலம்பற்றை ஊரை உள்ளடக்கிய பெருநிலத்தைப் பிரித்து வெருகல் உப அரசஅதிபர் பிரிவு என ஒன்றை உருவாக்கினார். ஆக கொட்டியாரம் உப அதிபர் பிரிவு இன்று மூன்றாகப் பிரிக்கப்பட்டு விட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் நீர்பாசனத் திட்டங்களின் கீழ் பின்வரும் அடிப்படையில் காணி பகிர்ந்து கொடுக்கப்படும் என தீர்மானிக்கப்ட்டது.

1) அல்லை விரிவாக்கத் திட்டத்தில் 65 விழுக்காடு சிங்களவருக்கும் 35 விழுக்காடு முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது. தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டார்கள்.

2) கந்தளை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் காணிகள் 77 விழுக்காடு சிங்களவருக்கும் 23 விழுக்காடு தமிழ்பேசும் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது.

3) முதலிக்குளம் (மொறவேவா) திட்டத்தில் ஓரளவுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படடது. இருந்தாலும் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் காரணமாக தமிழர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

4) பதவிக்குளம் குடியேற்றத்திட்டததில் திருகோணமலை மாவட்டத்துள் அடங்கும் பகுதிகளில் காணிகள் முழுவதும் சிங்களவருக்கே கொடுக்கப்பட்டது. வட மத்திய மாகாணத்துக்குள் வரும் காணிகளும் சிங்களவருக்கே கொடுக்கப்பட்டது. (வளரும்)

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை

திருகோணமலையில் தமிழர்களைத் துரத்தி விட்டு சிங்களவர் குடி அமர்த்தப்பட்டார்கள்!

(5)

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பு வரலாற்று அடிப்படையில் தமிழர் தாயகமாகவே இருந்து வந்துள்ளது.

சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் பதவிக்கு வந்த சிங்கள அரசுகளினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்;ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம்; தமிழர் தாயகத்தில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் (தென்தமிழீழத்தில்) தமிழ் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகின்;றனர் - மாற்றப்பட்டு விட்டனர். இதுவே தற்போதைய நிலையாகும்.

தமிழர்களது எண்ணிக்கை விழுக்காடு மட்டுமல்ல தமிழர்களது தாயக நிலப்பரப்பும் படிப்படியாக திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு வந்துள்ளது.

1901 ஆம் ஆண்டு வட – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு 19,100 ச.கிமீ ஆக இருந்தது. பக்கத்து சிங்கள மாகாணங்களோடு தமிழ்நிலப் பரப்பின் ஒரு பகுதி இணைக்கப்பட்டதால் அதன் பரப்பளது 7,500 ச.கிமீ ஆல் குறைக்கப்பட்டு விட்டது.

1948 இல் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 7,000 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் 500 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக வட – கிழக்கு, முக்கியமாக கிழக்கு இனச் சுத்திகரிப்புக்கு ஆளாகியுள்ளது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல (பகுதி 3) 1901 இல் தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பு 19,100 ச.கிமீ ஆக இருந்தது. 1901 ஆண்டு இலங்கையை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்த போது வடக்கு 8700 ச.கிமீ ஆகவும் (இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 13 விழுக்காடு) கிழக்கு 10,440 ச.கிமீ (மொத்த நிலப்பரப்பில் 16 விழுக்காடு) ஆகவும் இருந்தது.

சுதந்திரத்தின் (1948) பின்னர் கிழக்கில் 7 ஆயிரம் ச.கிமீ நிலப்பரப்பும் வடக்கில் இருந்து 500 ச.கிமீ நிலப்பரப்பும் பக்கத்து சிங்கள மாகாணங்களோடு இணைக்கப்பட்டு விட்டது. தமிழர்களது கடலோர நிலப்பரப்பும் இன்று குறைந்துள்ளது. அதாவது 1901 இல் தமிழரின் மரபுவழித் தாயகம் மொத்த இலங்கையின் நிலப்பரப்பில் 29 விழுக்காடாக இருந்தது. இது 1995 இல் 17 விழுக்காடாகக் குறைந்து போனது.

1901 இல் வடக்கில் வாழ்ந்த மக்கள் தொகை 340,936 ஆகவும் (இலங்கை மக்கள் தொகையில் 10 விழுக்காடு) கிழக்கில் 173,602 ஆகவும் (இலங்கை மக்கள் தொகையில் 5 விழுக்காடு) ஆகவும் இருந்தது. இன்று (1981) இந்த (வட-கிழக்கு) விழுக்காடு 12 ஆகக் குறைந்துவிட்டது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் இன்று திருகோணமலை மாவட்டத்தில் வாழும் 86,000 சிங்களவர்களில் 46,000 பேர் (46 விழுக்காடு) கந்தளை குடியேற்றத்தின் கீழ் கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்கள் ஆவர்.

அல்லை, கந்தளை குடியேற்றத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அங்கு குடியேற்றப்பட்ட சிங்களக் குடிகளின் இனத்தவர்கள் அங்கு சென்று காடுகளை களவாக வெட்டி அதில் குடியிருந்தனர். இப்படி அடாத்தாகக் குடியேறிய சிங்களவர்களுக்கு அந்தக் காணிகள் பின்னர் உரிய முறையில் கொடுக்கப்பட்டன.

அல்லை, கந்தளை, முதலிக்குளம், பதவிக்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து திருகோணமலையில் பழமைவாய்ந்த தமிழ் ஊர்கள் விழுங்கப்பட்டு சிங்களக் கிராமங்கள் தோற்றம் பெற்றன.

இன்றைய உப அரச அதிபர் பிரிவான சேருவில முன்னர் அரிப்பு என அழைக்கப்பட்டது. கல்லாறு என்ற பழைய தமிழ் ஊர் இன்று சோமபுர என அழைக்கப்படுகிறது. தமிழ் ஊரான நீலப்பாலை இன்று நீலப்பொல என அழைக்கப்படுகிறது. பூநகரின் ஒரு பகுதி இன்று மகிந்தபுர என அழைக்கப்படுகிறது.

திருமங்கலை இன்று சிறிமங்கலகம என அழைக்கப்படுகிறது. தெகிவத்த, லங்காபட்டுன, புலஸ்திகம இன்றைய சேருவில உப அரச அதிபரது பிரிவில் காணப்படும் சிங்களக் கிராமங்கள் ஆகும். இந்த உப அரச அதிபர் பிரிவில் 17 கிராம சேவகர்கள் பிரிவு உள்ளன. மொத்தம் 20,187 மக்கள் வாழ்கிறார்கள். இதில் சிங்களவர்களது விழுக்காடு 99.00 ஆகும். இவர்கள் அனைவரும் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு திருகோணமலையில் குடியேற்றப்பட்டவர்கள் ஆவர்.

முதலிக்குளம் (மொறவேவா) 1960 ஆம் ஆண்டு சிங்களக் குடியேற்றத்துக்கு இலக்கானது.

தொடக்கத்தில் இனவிழுக்காட்டின் அடிப்படையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் ஆகியோருக்கு காணி வழங்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை காரணமாக தமிழர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள். 1970 இல் மொறவேவா தனி உதவி அரச பிரிவாக அறிவிக்கப்பட்டது. இதனால் நிலாவெளியை தனி உப அரச அதிபர் பிரிவாக அறிவிக்க இருந்த ஏற்பாடு கைவிடப்பட்டது.

மொறவேவா உப அரச அதிபர் பிரிவு 10 கிராமசேவை பணிப்பாளர்களைக் கொண்டிருக்கிறது. அதில் மொத்தம் 9,271 மக்கள் வாழ்கிறார்கள். இதில் சிங்களவர்களது விழுக்காடு 56.00 தமிழர்களது விழுக்காடு 37. 00 சிங்களவர் (5,101) அனைவரும் வெளியில் இருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டவர்கள் ஆவர்.

எண்பதுகளில் மொறவேவா உப அரச அதிபர் பிரிவிக்குள் இருக்கும் பெரியவிளாங்குள குடியேற்றத்திட்டம் தொடங்கப்பட்டது.
அய்ரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்பட்ட நிதியுதவி இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்தப்பட்டது. அப்போது திருகோணமலை அரச அதிபர் ஆக  D.J. பண்டாகொட (D.J.  Bandakoda) இருந்தார். காணி, காணிமேம்பாடு மற்றும் மகாவலி மேம்பாட்டு அமைச்சர் (Minister of Lands, Land Development and Mahaweli Development)   ஆக காமினி திசநாயக்கா (Gamini Dissanayake) இருந்தார். இந்த இருவருமே இந்தக் குடியேற்றத்தை முன்னின்றி நடத்தினார்கள்.

முதலில் காணிகள் பின்வரும் விழுக்காட்டின் படி சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டது.

இனம்                காணித்துண்டுகள்     விழுக்காடு

சிங்களவர்               348                                     82.5
தமிழர்                         55                                     19.0
முஸ்லிம்கள்              19                                       4.5

திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து முறைப்பாடு செய்ததன் காரணமாக காணிகளின் ஒதுக்கீடு பின்வருமாறு மாற்றப்பட்டது.

இனம்                          காணித்துண்டுகள்            விழுக்காடு
சிங்களவர்                  372                                          64.7
தமிழர்                           165                                          28.7
முஸ்லிம்கள்                  38                                           6.5

சில பகுதிகளில் காணிகளின் பரப்பளவு தமிழர்களையும் முஸ்லிம்களையும் பாதிக்கும் வண்ணம் குறைக்கப்பட்டது.

தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிக்குள் குடியேறி வாழ்ந்த தமிழர்களது 38 வீடுகள் 1983 ஆம் ஆண்டு ஆனி – ஆடி - ஆவணி மாதங்களில் நடந்த வன்செயல்களில் சிங்களவர்களால் எரியூட்டப்பட்டன.

பறயன்குளத்து 7 ஆம், 8 ஆம் பிரிவுகளிலும் முதலிக்குளத்திலும் (மொறவோவா) ஏனைய பகுதிகளிலும் குடியேறிய தமிழர்களை சிங்களவர்கள் அடித்துத் துரத்திவிட்டு அவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

1983 ஆம் ஆண்டு கலவரத்தினால் திருகோணமலை – அனுராதபுரம் செல்லும் சாலை அருகேயும் 30 கல்வரை உட்புறமாகவும் உள்ள சிவயோகபுரம், வெல்வேழி, பன்மதவாச்சி, பாரதிபுரம், பன்குளம், நொச்சிக்குளம் முதலிய ஊர்கள் சிங்களக் காடையரால் தாக்கப்பட்டு அழிவுற்றன. இந்த ஊர்கள் மொறவேவா உதவி அரச அதிபரது பிரிவுக்குள் அடங்கியவை ஆகும்.

இதே காலப் பகுதியில் கப்பல்துறையில் வாழ்ந்த தமிழர்களது வீடு வாசல்களை சிங்கள இராணுவத்தின் துணையுடன் சிங்கள குடியேற்றவாசிகள் தாக்கி அழித்து விட்டனர்.

கவத்திக்குடா, சீனன்குடா பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அவர்களது இடங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.

கப்பல்துறையில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவியோடு 43 வதிவிடங்களை மீள் கட்டினார்கள். ஆனால் 1984 ஆம் ஆண்டு ஆடி மாதம் 4 ஆம் நாள் சிங்களக் கடற்படையினரும் இராணுவத்தினரும் சிங்கள காணி உதவி ஆணையரோடும் கிராம சேவகரோடும் சென்று அவர்கள் கட்டிய 43 வீடுகளை இடித்துத்தள்ளி விட்டார்கள். இவர்களுள் 25 பேர் உரிய அரசாங்க அனுமதி ஆவணங்கள் வைத்திருந்த போதும் அவர்களது வீடுகளும் இடிக்கப்பட்டன.

1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 24 ஆம் நாள் திருகோணமலையிலுள்ள 500 தமிழ் ஏதிலிகள் அவர்கள் இருந்த முகாம்களில் இருந்து சிங்கள இராணுவத்தினரால் கட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்றி மலைநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் பல இடங்களில் இறக்கி விடப்பட்டார்கள். அவர்கள் குடியிருந்த காணிகளில் சிங்களவர்களை குடியமர்த்தும் நோக்கத்துடனேயே தமிழர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

1983 ஆம் ஆண்டு ஆடிக் கலவரத்தின் பின்னர் திருகோணமலையில் சிங்களவர் பெருமளவில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டார்கள்.

(1) குச்சவெளியில் திருகோணமலை – புல்மோட்டை சாலையில் புல்மோட்டை வேளாண்மை மேம்பாட்டு குழுமத்தின் கட்டிடத்துக்கு அருகேயிருந்து தென்னைமரவடி ஊருக்குத் திரும்பும் பகுதிகளில் புதிய காணிகள் மேம்படுத்தப்பட்டு சிங்களவர்கள் சட்டத்துக்கு முரணாகக்  குடியேற்றப்பட்டார்கள்.

1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் நாள் தென்னைமரவடி ஊரைத் தாக்கி அங்குள்ள தமிழர்களது 165 வீடுகளையும் 7 கடைகளையும் பல வண்டிகளையும் சிங்களவர் எரித்தார்கள். இதனால் 147 குடும்பங்களைச் சேர்ந்த 749 தமிழர்கள் அயல் ஊர்களுக்கு ஏதிலிகளாகச் செல்ல நேரிட்டது.

2) யான் ஓயா அணைக்கட்டை நோக்கிச் செல்லும் சாலை அருகிலும் உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள தென்னைமரவடிக்கு இட்டுச் செல்லும் சாலையருகில் புதிய காணிகள் மேம்படுத்தப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

3) திரியாய் கட்டுக்குளம்பற்று சாலையருகிலும் குச்சவெளி உரவி அரச அதிபர் பிரிவின் உள்ளுர் பகுதியிலும் மரமுந்திரிகை கூட்டுநிறுவனத்தினால் முந்திரி பயிரிடுவதற்கு எனும் போர்வையில் காணிகள் தயாரிக்கப்பட்டு சிங்களவர்களை குடியேற்றினார்கள்.

(4) சலப்பையாறு பகுதிகளில் சிங்களவரது அத்துமீறிய குடியேற்றம் தொடர்ச்சியாக நடந்தேறியது.

தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் பாதி திருமலை பறிபோய்விட்டது

நக்கீரன்

திருகோணமலை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத சண்டை ஒன்று மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கிழமை ஒரு மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ தாக்குதல் மூலம் மூதூர், செல்வநகர், மகிந்தபுரம் போன்ற பகுதிகளைப் பிடித்த வி.புலிகள் பின்னர் அவற்றைக் கைவிட்டு தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினார்கள். இரண்டு நாள்களுக்கு முன்னர் நோர்வே உறுதுணையாளர்களது வேண்டுகோளுக்கு இணங்க மாவிலாறு அணைக்கட்டை வி.புலிகள் திறந்து விட்டார்கள். இப்போது சேருவில பகுதியில் வாழும் பெரும்பான்மை சிங்கள விவசாயிகளுக்கும் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் விவசாயிகளுக்கும் தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் வி.புலிகள் பெருந்தன்மைகோடு தண்ணீரைத் திறந்து விட்டாலும் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மூலம் மாவிலாறு அணைக்கட்டைப் பிடிப்பதற்குத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது.; முன்னைய முயற்சி இரண்டுமுறை முறியடிக்கப்பட்டாலும் சிங்களப் படை ஆகஸ்ட் 10 ஆம் நாள் மீண்டும் ஒரு பாரிய படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. .இதை எழுதும் போது மூர்க்கத்தனமான சண்டை மாவிலாறு அணைக்கட்டுப் பகுதியை அண்டி நடந்து கொண்டிருக்கிறது. வி. புலிகளில் 12 பேர் வீரச்சாவை தழுவியுள்ளனர். இருபது பேர் காயம் அடைந்துள்ளனர். சிங்களப் படைத் தரப்பில் 32 பேர் பலியாகியுள்ளதாகவும் 200 கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் எறிகணை மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் காரணமாக சுமார் 45,000 தமிழ் மக்கள் மூதார் கிழக்கில் இருந்து வெருகல் ஆற்றைக் கடந்து  வாகரை, வாழைச்சேனை பகுதிகளுக்கு உடுத்த உடையோடு இடம் பெயர்ந்துள்ளார்கள். இப்படி உயிருக்குப் பயந்து தப்பி ஓடும் அப்பாவித் தமிழ் மக்களை இலக்கு வைத்து சிங்களப் படை நடாத்திய குண்டுத் தாக்குதில் 72 கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இறந்துள்ளார்கள். இருநூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் காயப்பட்டுள்ளார்கள். இந்த மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற செஞ்சிலுவை போன்ற தொண்டு நிறுவனங்களை சிங்களப்படை மாங்கேணியில் வைத்து திருப்பி அனுப்பியுள்ளது.

முதலில் தண்ணீரை வி.புலிகள் திறந்துவிட்டால் அடுத்த 10 மணித்துளியில் தாங்கள் இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக பாதுகாப்புத் தொடர்பாக பேச வல்ல அமைச்சர் கேகலிய இரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அணைக்கட்டை பயங்கரவாதிகளான வி.புலிகள் வசம் விடமுடியாதென்றும் அதனை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

எல்லாப் போர்களும் நிலத்துக்காகவும் தண்ணீருக்காகவுமே நடைபெறுகிறது. தமிழீழப் போர் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னரும் அதற்குப் பின்னரும் தமிழர்களது நிலத்தை கைப்பற்றும் நோக்கோடு வடகிழக்கு மாகாணத்தில் ஆறுகள் குளங்களை அண்டிய பகுதியில் திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கட்சி வேறுபாடின்றி அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வந்துள்ளன.

கல்ஓயா (பட்டிப்பளை) குடியேற்றத்திட்டம்          -       டி.எஸ். சேனநாயக்கா
கந்தளாய் குடியேற்றத் திட்டம்                                   -       டி.எஸ். சேனநாயக்கா
அல்லை குடியேற்றத் திட்டம்                                      -       டி.எஸ். சேனநாயக்கா -  டட்லி சேனநாயக்கா
பதவியா (பாவற்குளம்) குடியேற்றத் திட்டம்          -      SWRD  பண்டாரநாயக்கா
மொறவேவா (முதலிக்குளம்) குடியேற்றத்திட்டம்      -       ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) குடியேற்றத்திட்டம் -   ஜே.ஆர். ஜெயவர்த்தனாஃ காமினி திசநாயக்கா
வெலி ஓயா (மணல் ஆறு) குடியேற்றத் திட்டம்                   -   ஜே.ஆர். ஜெயவர்த்தனா - ஆர். பிரேமதா - காமினி திசநாயக்கா (உலகத்தமிழர்)

இவ்வாறு ஆயிரக்கணக்கான சிங்களவர்களை தமிழர்களது மரபுவழி தாயகத்தில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், குடி அமர்த்துவதில் சிங்கள அரசு பெருவெற்றி கண்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட பாரிய குடியேற்றத் திட்டங்களால் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக விளங்கிய தமிழர்கள் இன்று சிறுபான்மையர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் மட்டக்களப்பில் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மையாக (70 விழுக்காடு) வாழ்கிறார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகள் சுருங்கி அதன் பரப்பளவு இன்று சுருங்கி விட்டது.

சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் (திருகோணமலை, மட்டக்களப்பு, 1961 இல் உருவாக்கப்பட்ட அம்பாரை மாவட்டம்) ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றம் தமிழர்கள் தேய்ந்த கதையையும் சிங்களவர் பெருகிய கதையையும் சொல்கிறது.

அட்டவணை 2
கிழக்கு மாகாண மக்கள் குடிப்பரம்பலில் இடம்பெற்ற மாற்றங்கள் ( 1881-1981)
 
சிங்களவர்
தமிழர்
முஸ்லிம்கள்
ஆண்டு
எண்ணிக்கை
விழுக்காடு
எண்ணிக்கை
விழுக்காடு
எண்ணிக்கை
விழுக்காடு
1881
5947
4.50
75408
61.35
43001
            30.65
1891
7512
4.75
87701
61.55
51206
30.75
1901
8778
4.70
96296
57.50
62448
33.15
1911
6909
3.75
101181
56.20
70409
36.00
1921
8744
4.50
103551
53.50
75992
39.40
1946
23456
8.40
146059
52.30
109024
39.10
1953
46470
13.10
167898
47.30
135322
38.10
1963
109690
20.10
246120
45.10
185750
34.00
1971
148572
20.70
315560
43.90
248567
34.60
1981
243358
24.90
409451
41.90
315201
32.20
 1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

தமிழீழத்தின் தலைநகரம் திருமலை என நாம் கூறிக் கொண்டு வருகிறோம். இதற்கான தீர்மானம் முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு திருமலையில் நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 1948 இல் தொடக்கப்பட்ட அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் 1956 இல் முடிவுற்று விட்டன. அதனைத் தொடர்ந்து முதலிக்குளம் (மொறவேவா) மற்றும் திருமலை நகரத்தை அண்டிய பகுதிகளில் சிங்களவர்களை அரசு குடியேற்றி அக்போபுர, மகிந்தபுர, ஸ்ரீமாபுர போன்ற குடியேற்றத் திட்டங்களை உருவாக்கியது.

சிங்களவர்களை குடியேற்றுவதற்கு வசதியாக இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு தொடக்கம் இன்றுவரை சிங்களவர்களே (இரு பறங்கிய இனத்தவரைத் தவிர்த்து) திருகோணமலை அரச அதிபர்களாகவும் மாவட்ட குடியேற்ற அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்சமயம் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் சில்வா (Retired Major General Ranjith Silva) அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அரச அதிபரும் சிங்களவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1881 ஆம் ஆண்டு முதன் முறையாக மக்கள் கணக்கெடுப்பு நடத்திய போது தமிழர்கள் திருகோணமலை மாவட்டத்தில் 64.8 விழுக்காடு இருந்தனர். முஸ்லிம்கள் 25.9 விழுக்காடும் சிங்களவர் வெறுமனே 4.2 விழுக்காடு மட்டும் இருந்தனர்.

1881 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வாழ்ந்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33.6 ஆகும். அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 64.8 ஆக இருந்து 1981 இல் 36.4 ஆக வீழ்ச்சியடைந்தது. முஸ்லிம்கள் கூட 25.9 விழுக்காட்டில் இருந்து 29.0 விழுக்காடு உயர்ந்துள்ளனர்.

இந்த தலை கீழ் மாற்றங்களை பின்வரும் அட்டவணை 3 துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 3
திருகோணமலை மாவட்ட மக்கள் குடிப்பரம்பலில் ஏற்பட்ட  மாற்றங்கள் (1881-1981)                            
 ஆண்டு
 சிங்களவர்
 தமிழர்
 முஸ்லிம் 
 ஏனையோர்
 மொத்தம்
 எண்
 %
 எண்
 %
 எண்
 %
 எண்
 %
  எண்
 %
1827
250
1.30
15,663
81.76
3,245
16.94
0
0.00
19,158
100
1881
935
4.21
14,304
64.44
5,746
25.89
1,212
5.46
22,197
100
1891
1,105
4.29
17,117
66.49
6,426
24.96
1,097
4.26
25,745
100
1901
1,203
4.23
17,060
59.98
8,258
29.04
1,920
6.75
28,441
100
1911
1,138
3.82
17,233
57.92
9,700
32.60
1,684
5.66
29,755
100
1921
1,501
4.40
18,580
54.47
12,846
37.66
1,185
3.47
34,112
100
1946
11,606
15.29
33,795
44.51
23,219
30.58
7,306
9.62
75,926
100
1953
15,296
18.23
37,517
44.71
28,616
34.10
2,488
2.96
83,917
100
1963
39,925
28.82
54,452
39.30
40,775
29.43
3,401
2.45
138,553
100
1971
54,744
29.08
71,749
38.11
59,924
31.83
1,828
0.97
188,245
100
1981
85,503
33.41
93,132
36.39
75,039
29.32
2,274
0.89
255,948
100
2001
          
2007 மதிப்பீடு
84,766
25.35
96,142
28.75
152,019
45.47
1,436
0.43
334,363
100
மூலம்: குடிமக்கள் கணிப்பு திணைக்களம்
திருகோணமலை அல்லை குடியேற்றத்திட்டத்தில் 65 விழுக்காடு சிங்களவருக்கும் 35 விழுக்காடு முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டது. கந்தளாய் குடியேற்றத் திட்டத்தில் 77 விழுக்காடு சிங்களவர்களும் 23 விழுக்காடு தமிழ் பேசுவோருக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று 8 விழுக்காட்டினரே தமிழர்கள் ஆவர். மற்றவர்கள் விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர். முதலிக்குளத்திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் மக்கள் விழுக்காட்டின்படி காணி ஒதுக்கப்பட்டாலும் பின்னர் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறை காரணமாக தமிழர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டனர்.

1972 இல் நொச்சிக்குளம் நொச்சியாகம எனப் பெயர் மாற்றப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அதற்காக தமிழர்களுக்குச் சொந்தமான 5,000 ஏக்கர் நிலம் கப்பல்துறையிலும் பாலம்போட்டாற்றிலும் வாழ்ந்த தமிழர்களிடம் இருந்து அடாத்தாக கைப்பற்றப்பட்டது. இதன் சூத்திரதாரி அன்றைய அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்பாளர் கே.பி. இரத்தினநாயக்கா ஆவார்.

1973 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது 10,738 சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் குடியேற்றப்பட்டனர்.

திருகோணமலையில் கடற்கரை ஓரமாக காணப்படும் குச்சவெளி, புல்மோட்டை, கும்புருப்பிட்டி, திரியாய், தென்னமரவடியில் சிங்களவர்கள் வலோத்கரமாக குடியேற்றப்பட்டார்கள்.

எடுத்துக்காட்டாக 1983 ஆம் ஆண்டு 900 சிங்களவர் புல்மோட்டை விவசாய மேம்பாட்டு சபைக்கு அருகில் இருந்த நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள். 1984 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 இல் சிங்கள குடியேற்றவாசிகள் புல்மோட்டைக்கு வடக்கே உள்ள தென்னமரவடி கிராமத்தை தாக்கி தமிழர்களுக்குச் சொந்தமான 165 வீடுகளையும் 7 கடைகளையும் எரித்தனர். இதன் காரணமாக 147 குடும்பங்களைச் சேர்ந்த 749 தமிழர்கள் இடப்பெயர்வுக்கு ஆளானார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் திருகோணமலை நகரத்தைச் சுற்றி முழைத்தன. ஸ்ரீமாபுர, அபயபுர, மிகிந்தபுர, பட்டிஸ்புர, சுமேதங்கரபுர (Mud Clove) போன்ற கிராமங்கள் இக் காலகட்டத்தில் தொடக்கப்பட்டவையாகும்.

1984 ஆம் ஆண்டில் சீனன்குடாவிலும் காவதிக்குடா பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் துணையோடு அடித்து விரட்டப் பட்ட பின்னர் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

1987 இல் இந்திய அமைதிப்படை திருகோணமலையில் நிலைகொண்டிருந்த போது நகரைச் சுற்றிய சிங்கள சட்ட விரோத குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. அவர்கள் கோட்டைக்குப் போகும் பாதையின் இருமருங்கிலும் உள்ள நிலத்தில் குடியமர்த்தப்பட்டனர். அதற்கு சமுத்திரகம என்ற பெயரும் சூட்டப்பட்;டது. ஆனால் இந்திய அமைதிப் படை 1990 இல் திருகோணமலையை விட்டுப் போனபின்னர் சிங்கள இராணுவம் இவர்களை உயர்ந்தபாடு என்ற இடத்தில் இருந்த தமிழ் மீனவர்களைத் துரத்திவிட்டு சிங்களவர்களை அங்கு குடியேற்றியது.

1998 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் லிங்க-நகரில் (திருகோணமலை நகரில் இருந்து 1 ½ கல் தொலைவில் இருக்கிறது) வாழ்ந்த 132 தமிழ்க் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள இராணுவ முகாமை விரிவாக்கும் சாட்டில் வலோத்காரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். 1996 இல் அந்த முகாம் அமைக்கப்பட்டபோது 47 தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

1980 ஆம் ஆண்டுவரை சிங்களக் குடியேற்றங்களுக்குக் குறிவைக்கப்பட்ட பகுதிகள் பல்லின மக்கள் வாழும் பகுதிகளாக இருந்தன. இந்தக் கொள்கை பின்னர் கைவிடப்பட்டு தமிழர்கள் முற்றுமுழுதாக வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இந்த இனச் சுத்திகரிப்பு திருகோணமலையைக் கைப்பற்றி சிங்கள-பவுத்த மேலாண்மையை திருகோணமலையில் ஏற்படுத்தப்படுவதற்கு செய்யப்பட்டதாகும்.

திருகோணமலையில் பல இடங்களில் புதுப் புது புத்தர் சிலைகள் சட்டத்தை மீறி அமைக்கப்பட்டுவருவது திருகோணமலையை சிங்கள-பவுத்த மயமாக்க எடுக்கப்படும் முயற்சியின் வெளிப்பாடாகும்.

இவ்வாறு தொடர்ச்சியா மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக 1977 இல் மூதூர் தேர்தல் தொகுதிpயில் இருந்து சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தேர்தல் தொகுதியிலேயே அல்லை - கந்தளாய் சிங்களக் குடியேற்றவாசிகள் வாழ்கிறார்கள். அவர்களை அடுத்து முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்கிறார்கள். மூதூர் தேர்தல் தொகுதியில் முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்ற வரிசையில் வாழ்கிறார்கள். திருகோணமலைத் தொகுதியில் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மையாகவும் அடுத்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.

இந்த மூன்று தொகுதிகளிலும் இருந்த 5 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள். நாளடையில் சிங்களவர்களது நாடாளுமன்றப் பிரதிநித்துவம் அதிகரிக்கப்படும் நோக்கோடு சேருவில தனி நிருவாக அலகாக உருவாக்கப்பட வாய்ப்புண்டு.

தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் பாதி திருமலை பறிபோய்விட்டது. வி.புலிகளது படை பலத்தினால் மட்டுமே திருமலையைக் காப்பாற்ற முடியும். (உலகத்தமிழர் - ஆகஸ்ட் 2006)

தமிழர்களை இலங்கைச் சிவப்பு இந்தியர் ஆக மாற்றுவதே இராசபக்சேயின் இறுதிக் குறிக்கோள்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வரவு - செலவு திட்டம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் “அடுத்த வரவு-செலவுத் திட்ட விவாதம் திருமலையில நடைபெறும்” என்று சூளுரைத்தார்.

“கோணமா மலை எங்கள் மலை அதனைத் தலைபோனாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற முழக்கத்தை கடந்த அரைநூற்றாண்டு காலமாக முழங்கி வருபவர்களில் ஈழவேந்தனும் ஒருவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் திருமலை பறிபோகாது காப்பாற்றப்பட வேண்டும் என ஓயாது ஒழியாது தந்தை செல்வநாயகம் காலம் முதல் பேசி வருபவர்.

ஈழவேந்தன் என்ன முகூர்த்தத்தில் திருவாய்மலர்ந்தாரோ “அடுத்த வரவு - செலவுத் திட்ட விவாதம் திருமலையில” என்று சொல்லி அவர் வாய் மூடுமுன் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வட - கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து அவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி, தனித்தனி ஆளுநர்களையும் செயலாளர்களையும் நியமி;த்துள்ளார்.

அது மட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தைத் தனி அலகாகப்பிரித்து அதனைத் திருமலை அதிபரின் (ஓய்வுபெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் சில்வா) நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார். இந்தப் பிரிவினை சனவரி 01, 2007 இல் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. குறித்த நாளில் அரச ஊழியர்கள் அனைவரும் ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தைப் பாடிப் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள்.

வட - கிழக்க மாகாணங்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது ஸ்ரீலங்காவின் யாப்புக்கு முரணானது, செல்லுபடியாகாதது, சட்டத்துக்கு முரணானது என சிங்களவர்களை மட்டும் கொண்ட உச்ச நீதிமன்றம் சென்ற ஒக்தோபர் 16, 2006 தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தமிழர்களது தாயகக் கோட்பாட்டுக்கு விழுந்த பலத்த அடியாகும். அத்தோடு சிங்களவர்கள் மேலாண்மை செலுத்தும் ஸ்ரீலங்காவின் நீதித்துறையிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை எண்பிக்கப் பட்டுள்ளது.

வட-கிழக்கு இணைப்புக்கு இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. ஆனால் அதைப்பற்றி மகிந்த இராசபக்சே கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வட - கிழக்கு இணைப்பு 1987 யூலை 29 இல் அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் அன்றைய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்திக்கும் இடையில் கொழும்பில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பந்தி 1.4 பின்வருமாறு கூறுகிறது.

“The Northern and the  Eastern  provinces have been areas of  historical  habitation of Sri Lankan Tamil speaking   peoples, who have  at all times hitherto live d   together in this  territory with  other ethnic groups.”

“ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக வட – கிழக்கு மாகாணங்கள் விளங்கி வந்திருக்கிறது. அங்கு தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய இனக் குழுக்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.”

இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வட -கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பதைக் கண்டறிய 1988 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நேரடிப்பு வாக்கெடுப்பு நடத்ததப்படும். எனக் கூறப்பட்டது. அன்று தொட்டு 2005 ஆண்டு வரை இந்த வாக்கெடுப்பு ஆட்சித்தலைவரால் அவசர காலச்சட்டத்தின் கீழ் ஒத்திப்போடப்பட்டு வந்தது.

இந்திய - இலங்கை உடன்பாடு வட- கிழக்கு இணைப்பை தற்காலிகமாக இணைத்தாலும் அந்த இணைப்பை எதிர்க்கப்போவதாக அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அறிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுதப்பட்ட உடன்பாடு இந்தியா வி. புலிகளது ஆயுதங்களைக் களைவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. அதனால் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தற்காலிக வட- கிழக்கு இணைப்பை அரசியல் தந்திர அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சிங்கள - பவுத்த இனவாத சக்திகளுக்கு பெருந்தீனி போட்டதாக அமைந்து விட்டது.

கிழக்கு மாகாணத்தை அரச ஆதரவு குடியேற்றத்திட்டங்கள் மூலம் ஒரு சிங்கள பெரும்பான்மை மாகாணமாக மாற்றுவதே டி.எஸ். சேனநாயக்க காலம் தொடடு ஒரு எழுதாத சட்டமாக இருந்து வந்திருக்கிறது. அதில் சிங்கள அரசு பாரிய வெற்றியையும் கண்டிருக்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னரும் அதற்குப் பின்னரும் வடகிழக்கு மாகாணத்தில் ஆறுகள், குளங்கள் இரண்டையும் அண்டிய பகுதியில் திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கட்சி வேறுபாடின்றி அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வந்தன.
கல்ஓயா (பட்டிப்பளை) மற்றும் கந்தளாய் குடியேற்றத் திட்டம் டி.எஸ.; சேனநாயக்கா காலத்தில் (1947 - 1952) நிறைவேறியது.
அல்லை குடியேற்றத் திட்டம் டி.எஸ். சேனநாயக்கா ஃ டட்லி சேனநாயக்கா காலத்தில் (1947 – 1953) உருவாக்கப்பட்டது.
பதவியா (பாவற்குளம்) குடியேற்றத் திட்டம் ளுறுசுனு பண்டாரநாயக்கா காலத்திலும் (1956 – 1959) மொறவேவா (முதலிக்குளம்) குடியேற்றத்திட்டம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்திலும் (1960 – 65) நிறைவேற்றப்பட்டது.
மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) மற்றும் வெலி ஓயா (மணல் ஆறு) குடியேற்றத் திட்டம் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, காமினி திசநாயக்கா,  ஜே.ஆர். ஜெயவர்த்தா,  ஆர். பிரேமதாசா காலத்தில் (1977-1987) உருவாக்கப்பட்டன.

காமினி திசநாயக்கா காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி விரிவாக்கத் திட்ட அமைச்சராக இருந்தபோது தொடக்கி முடிக்கப்பட்ட மணல் ஆறு குடியேற்றம் (1987) காரணமாக வட - கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான தரைவழித் தொடர்பு வெட்டுப்பட்டது தெரிந்ததே.

சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் (திருகோணமலை, மட்டக்களப்பு, 1961 இல் உருவாக்கப்பட்ட அம்பாரை மாவட்டம்) ஏற்பட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் தமிழர்கள் தேய்ந்த கதையையும் சிங்களவர் பெருகிய கதையையும் சொல்கிறது.

அட்டவணை 4
கிழக்கு மாகாண மக்கள் குடிப்பரம்பலில் இடம்பெற்ற மாற்றங்கள் ( 1881-1981)
 
சிங்களவர்
 
தமிழர்
 
முஸ்லிம்கள்
 
ஆண்டு
தொகை
%
 
%
தொகை
%
1881
5947
4.50
75408
61.35
43001
30.65
1891
7512
4.75
87701
61.55
51206
30.75
1901
8778
4.70
96296
57.50
62448
33.15
1911
6909
3.75
101181
56.20
70409
36.00
1921
8744
4.50
103551
53.50
75992
39.40
1946
23456
8.40
146059
52.30
109024
39.10
1953
46470
13.10
167898
47.30
135322
34.00
1963
109690
20.10
246120
45.10
185750
34.00
1971
148572
20.70
315560
43.90
248567
34.60
1981
243358
24.90
409451
41.90
315201
32.20
1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981 இல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்கள இராணுவம் எறிகணை மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தி மாவிலாறு மற்றும் சம்பூர் ஆகிய கிராமங்களை பாரிய படையெடுப்பின் மூலம் கைப்பற்றியது.

இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக சுமார் 45,000 தமிழ்மக்கள் மூதார் கிழக்கில் இருந்து வெருகல் ஆற்றுக்கப்பால் துரத்தப்பட்டார்கள். மக்கள் வாகரை, கதிரவெளி, வாழைச்சேனை பகுதிகளுக்கு உடுத்த உடையோடு இடம் பெயர்ந்தார்கள். இந்த இடப் பெயர்வால் திருகோணமலையில் வாழ்ந்து வந்த தமிழ்மக்களது தொகை வெகுவாகக் குறைந்துள்ளது. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் மூதூரில் குடிவைக்கப்பட்டார்கள். இழப்பீடும் வழங்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட இல்லங்கள் திருத்திக் கொடுக்கப்பட்டன. ஆனால் மாவிலாறு, சம்பூர், ஈச்சிலம்பற்றை போன்ற கிராமங்களில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. அவர்கள் பசியால் மெலிந்து பட்டினியால் வாடி ஏதிலிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிந்த இராசபக்சேயின் இனவாத அரசியல் வெற்றியடையுமேயானால் யாழ்ப்பாணம் இல்லாத வட மாகாணமும், திருகோணமலை, அம்பாரை இல்லாத கிழக்கு மாகாணமும் தமிழர்களது கையில் இருக்கும் ஒரு நிலைமை உருவாகும்.

வட – கிழக்கு மாகாணத்துக்கு வரதராசப்பெருமாளை முதலமைச்சராக முடிசூட்டி அழகு பார்த்த அதே பாணியில் யாழ்ப்பாணத்திற்கு டக்லஸ் தேவானந்தாவும் மட்டக்களப்புக்கு கருணாவும் முடி சூட்டப்படலாம்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மோகன் விஜயவிக்கிரம ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஆவார். வடக்கு மாகாணத்துக்கு ஒரு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அதற்கும் அவரே ஆளுநராக இருந்து வருவார். வடக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற சந்திரா பெர்னாந்து நியமிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக திருகோணலை உட்பட வட- கிழக்கு மாகாணங்களுக்கு ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகளை நியமித்ததன் மூலம் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சி முற்றாகத் திணி;க்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் தமிழர் தாயகத்தை கூறுபடுத்தி சிங்களமயப் படுத்தப்படுவதைத் துரிதப்படுத்தும்.

கிழக்கு மாகாணத்தை தமிழர்களது கட்டுப்பாட்டில் இருந்து பிடுங்கி சிங்களக் குடியேற்றத்தின் மூலம் அதனை சிங்கள பெரும்பான்மை மாகாணமாக மாற்றுவதே இராசபக்சேயின் நோக்கமாகும்.

ஏற்கனவே திருகோணமலைக்கு முன்னாள் சிங்கள இராணுவத்தினர் சாரி சாரியாகக் கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்டு வருகிறார்கள். எண்பது முன்னாள் படைவீரர்களைக் கொண்ட முதல் பிரிவினர் கடந்த டிசெம்பர் மாதம் இராணுவ பாதுகாப்போடு திருகோணமலை கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.

வட – கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழர்களது எண்ணிக்கை பலத்தைக் குறைப்பதில் ஜாதிக விமுக்தி பெரமுன, ஹெல உருமய போன்ற தீவிர பவுத்த இனவாத அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளன.

சென்ற சனவரி 3 ஆம் நாள் சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெலிக்கந்தை (பொலனறுவ) இராணுவத்தின் 23 படைப்பிரிவின் தளபதிகளோடு ஒரு மாநாடு நடத்தினார். இந்தச் சந்திப்பில் கிழக்கில்; இருந்து வி. புலிகளை இரண்டொரு மாதத்தில் துரத்திவிடுவதற்கான இராணுவ யுக்திகள் மற்றும் தந்திரங்கள் பற்றி சரத் பொன்சேகா விளக்கினார்.

கிழக்கில் இருந்து வி. புலிகளை விரட்டிய பின்னர் வடக்கில் இருந்தும் வி. புலிகளை துரத்திவிடப் போவதாக சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.

சென்ற சனவரி 02 ஆம் நாள் கண்டி தலதா மாளிகைக்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபட்ட சரத் பொன்சேகா மல்வத்தை மகாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அவரிடமும் வி.புலிகளை ஒழித்துக் கட்டும் தனது திட்டத்தைச் சொன்னார். பின்னர் கதிர்காமம் சென்று கதிர்காமக் கந்தனையும் குடும்பத்தோடு வழிபட்டார். கதிர்காமக் கந்தன் அவருக்கு அருள்பாலித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.

புத்தாண்டுக்கு முதல்நாள் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பொன்சேகா வாகரையையும் கதிரவெளியையும் ஒரு மாதத்தில் கைப்பற்றப் போவதாகச் சொன்னார். மழையும் சீரற்ற கால நிலையுமே தாக்குதல் திட்டத்தைத் தாமதப்படுத்துவதாகவும் பயிற்சி பெற்ற வி.புலிகளின் எண்ணிக்கை 800 தான் இருக்குமென்றும் எஞ்சியவர்களது எண்ணிக்கை 2,000 மேல் இருக்காதென்றும் சொன்னார். இந்த ஆண்டு (2007) முடியு முன்னர் வி. புலிகள் கிழக்கிலும் வடக்கிலும் தோற்கடிக்கப் படுவர் எனச் சொன்னார்.

வி. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தாமதப்படுவதற்கு அரச தரப்பில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது பல்குழல் பீரங்கிகள், குண்டுகள் மற்றும் இராணுவ தளபாடங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்து சேர்வதற்கு காத்திருக்கிறார்களாம். ஸ்ரீலங்கா 200 மில்லியன் டொலர் பெறுமதியான தாங்கிகள், பலவகையான குண்டுகள், ஆளில்லாத விமானங்கள் (UAVS) கவச வாகனங்கள் போன்றவற்றை அடுத்த 18 மாதங்களில் கொள்வனவு செய்யக் கட்டளைகளை அனுப்பியிருக்கிறது.

வி. புலிகளை 2007 முடிவதற்குள் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் மறைமுக ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மகிந்த இராசபக்சேயின் ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியா அவ்வப்போது மனிதவுரிமை மீறல்கள் பற்றிக் கவலை தெரிவிப்பதும் இனச் சிக்கலுக்கு இராணுவ தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வே சரியான வழி என அறிக்கைகள் விடுவதும் தமிழ்நாடு அரசியல்வாதிகளைத் திருப்திப் படுத்துவதற்கு மட்டுமே என்றும் அது எந்தவகையிலும் ஸ்ரீலங்காவின் கைகளைக் கட்டிப் போடுவதற்கு அல்ல என்றும் அதே ஆலோசகர்கள் நினைக்கிறார்கள்.

கொலை ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது ஆனால் அந்தக் கொலைக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது பற்றி ஸ்ரீலங்கா இராணுவத்துக்குப் பயிற்சி தாராளமாக வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் வைத்து செய்தியாளர்களுக்குச் சொன்னதை அந்த ஆலோசகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்!

கிழக்கைத் தங்கள் பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்திய தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஸ்ரீலங்கா அரசு இரண்டு கைகளையும் ஏந்தி வரவேற்கிறது. இந்தியாவிற்கு எண்ணெய் குதங்களைக் குத்தகைக்குக் கொடுத்த ஸ்ரீலங்கா அரசு இப்போது திருகோணமலையில் ஒரு மின் அனல் நிலையம் நிறுவுவதற்கும் உடன்பாடு செய்துள்ளது.

மகிந்த இராசபக்சேயின் இறுதிக் குறிக்கோள்; தமிழர்களை இலங்கைச் சிவப்பு இந்தியர் ஆக மாற்றி அவர்களை அருங்காட்சிப் பொருளாகன் குறிப்பிட்ட ஒதுக்குப் பகுதிகளில் (reserves) வைப்பதே ஆகும். அதனைச் செய்து முடிப்பதற்கு இதுவே சமயம் என்றும் அதனை நழுவ விடக்கூடாதென்றும் மகிந்த இராசபக்சேயும் அவரது ஆலோசகர்களும் நம்புகிறார்கள். இப்படியான கருத்தைத் தெரிவித்திருப்பவர் இந்திய அரசின் முன்னாள் அமைச்சரவை செயலர் பி. இராமன் ஆவார். இப்போது இவர் Institute of Topical Studies  என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் ஒரு தீpவிர புலி எதிர்ப்பாளர். சிறிது காலத்துக்கு முன்னர் இவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு “India, Sri Lanka need to destroy LTTE's air, navy” (விடுதலைப் புலிகளின் வான் மற்றும் கடற்படை இரண்டையும் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் சேர்ந்து அழிக்க வேண்டும்) என்பதாகும்! (பரபரப்பு - சனவரி 9-01-2007)




பறிபோகும் தமிழ் தாயகம் இனம் புரியாமல் கனவில் நம் சமூகம்
Courtesy: உதயன் - பங்குனி 13, 2010


இரா.துரைரத்தினம்

வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக் குக் கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேச மாக இருக்கிறது என நம்பிக்கொண் டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண் டிருக்கின்றன. என்பதை உணராத நிலையில் தானே எங்களில் பலர் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டி ருக்கிறோம்........?

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுக ளின் பின்னர் இலங்கை வரை படத்தில் சரத் பொன்சேகா வெற்றி பெற்ற பிரதே சங்களை பச்சை நிறத்திலும், மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டுக் காட்டியிருந்தார்கள்.

பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங் களில் பலர் பெருமைப் பட்டுக் கொண் டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங்களை உள்ளடக் கியதே தமிழீழம் என் றும் பெருமை பேசிக்கொண்டோம்.

அப்போது வெளியான வரைபடத் தில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு காட்டப் பட்டிருந்த வடக்குக் கிழக்கு பிரதேசத்தின் பெரும் பகுதிகள் இன்று தமிழர் களின் கைகளில் இல்லை என்பதை எங்க ளில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

மின்னாமல் முழங்காமல் தமிழர் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வரு கிறன என்பதையும் அந்த இடங்களில் தமிழர் கள் இனிமேல் கால் வைக்க முடியாத வாறான கட்டமைப்புகள் சிங்களவர்க ளால் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் உணர்ந் திருக்கிறோமா? வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம், அந்த தமிழீழத்தை அடைந்தே தீருவோம். தமிழீழம் இல்லை என்றால் ஒரு துளி மண்ணும் வேண்டாம் என நாங்கள் மேற்குலக நாடுகளில் இருந்து வீரவச னம் பேசிக்கொண்டி ருக்கும் போது, எங்கள் முற்றங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு வருகின்றனவே. இந்த யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு செயற்படுங்கள் என்றுதான் நாங்கள் உங்களை மன்றாட்டமாகக் கேட்டு வருகிறோம்.

இதைச் சொல்லி வரும் துரைரத்தினம், நிராஜ் டேவிட் ஆகியோர் சம்பந்தரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டு பவர்களும் உண்டு. சம்பந்தரின் நிகழ்சிநிரல் என்று ஒரு மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை. எங்களின் நோக்கம் ஒன்றுதான். எங்கள் மண் பறிபோவதை தடுக்க வேண்டும். தமிழர் தாயகம் என்று நாங்கள் சொல்லும் இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களிடம் இல்லை. வேறு நோக்கங்களில் செயற்பட வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.

தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் தமிழர் கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு கைகட்டி சேவகம் செய்ப வர்களாக இல்லாமல், தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தக்கூடிய தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதுமே எமது நோக்கம். அந்தத் தமிழர்கள் சம்பந்தராகவும் இருக்கலாம். அல்லது எந்தக் கந்தப்பராகவும் இருக்கலாம்.

தமிழீழம்தான் என்ற உறுதியோடு இருக்கும்போது வடக்குக் கிழக்குப் பிரதேசம் எங்கள் கைகளில் இல்லை என எங்கள் உணர்வுகளை மழுங் கடிக் கப் பார்க்கிறீர்களே எங்கள் கனவுகளை கலைக்கப் பார்க்கிறீர்களே என்று வெளி நாடுகளில் உள்ள ஒரு சிலர் என் மீது ஏவுகணை வீசுவீர்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் கனவுகளுடன் மட்டும் என்னைப்போன்ற ஊடகவி யலா ளர்களால் வாழமுடியாது என்பதால் தான் யதார்த்தங்களையும் இடைக்கிடையே சொல்ல விழைகிறோம்.

முதலில் கிழக்கு மாகாணம் தமிழர் களின் கைகளில் இருக்கிறதா என்ப தைப் பார்ப்போம். கடந்த முறை எழுதிய கட்டு ரையில் தமிழர் பிரதேசம் எனச் சொல்லுகின்ற பிரதேசம் தமிழர்களின் கைகளில் இருக்கிறதா? எனக் கேட்டிருந்தேன்.

திருகோணமலை

புள்ளிவிவரத் திணைக்களத்தின் விவரங்களின்படி திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை இனவிகதாசார ரீத யில் எவ்வாறு மாற்ற மடைந்து சென்றிருக் கிறது என்பதையும் இனிப் பார்ப்போம்.

1932 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள வர்கள் கிழக்கு நோக்கிய நகர்வு களை மேற் கொள்ள ஆரம்பித்தனர். கல்லோயா திட்டம் முதல் 1977 இல் ஆரம்பிக்கப் பட்ட துரித மகாவலி அபி விருத்தித் திட்டம் வரை கிழக்கு மாகா ணத்தில் சிங்க ளக் குடியேற்றங்களை இலக்கு வைத்து 24 குடியேற்றத் திட்டங்கள் இலங்கை அரசு களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

1950ஆம் ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் வடக்குக் கிழக்குப் பிர தேசங்களை இணைத்து தமது அரசி யல் நகர்வுகளையும், அதன் பின்னர் வட கிழக்கு இணைந்த சுயாட்சிக் கோரிக்கை யையும் முன்வைத்து போராட ஆரம்பித் தனர். அப்போது சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கையும் கிழக்கையும் துண்டாடி கிழக்கை முழுமையாக சிங்கள மயப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தைத் துரிதப்ப டுத்த ஆரம் பித்தனர்.

சிங்களவர்களின் இந்த நகர்வை உணர்ந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி 1952ஆம் ஆண்டில் திரு கோணமலையில் தனது மாநாட்டை நடத்தியது. அத்துடன் அந்த மாநாட்டில் திருகோணமலையை தமிழர்களின் தலைநகராகவும் பிரகடனம் செய்தது.

திருகோணமலை தமது தலைநகர் என தமிழர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திருகோண மலையை தமது வசப்படுத்துவதற்காக சிங்கள தேசம் பாரிய செயற்றிட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது. கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபித் திட்டங்களை உருவாக்கி திருகோண மலை, அம்பாறை மாவட்டங்களில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்கிய அதேவேளை, சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லை களிலும் மாற்றங்களையும் உருவாக்கினர்.

மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்பதைப் பின்னர் பார்ப்போம்.

திருகோணமலை மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லையான தென்னமரவாடியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லை யான வெருகல் ஆறுவரை யான நீண்ட கரையோரப் பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலன்ன றுவை மாவட்டங்கள் உள்ளன.

1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் மட்டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15 ஆயிரத்து 663பேராக வும், முஸ்லிம்கள் 3 ஆயிரத்து 245 பேராகவும் காணப்பட்ட னர். இம் மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லிம்கள் 16.9 வீதமாகவும், சிங்கள வர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர்.

1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சி யடைந்த அதேவேளை, முஸ்லிம்க ளின் சனத்தொகை 37.6 வீதமாகவும், சிங்க ளவர்களின் சனத்தொகை 4.4 வீதமாக வும் உயர்வடைந்திருந்தது.

1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்களக் குடியேற்றம் மற்றும் முஸ்லிம் களின் சனத் தொகை அதிகரிப்பு என் பனவற்றை தெளிவாகக்காட்டியிருக் கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி திருமலை மாவட் டத்தில் தமிழர்கள் (71 ஆயிரத்து 749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லிம்கள் (59 ஆயிரத்து 924 பேர்) 31.8 வீத மாகவும், சிங்களவர்கள் (54 ஆயிரத்து 744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 46.5 வீதமாகவும் உயர்வ டைந்திருக்கிறார்கள். 81.76 வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறார்கள்.

இந்த விவரங்களைப் பார்க்கும் உங்க ளுக்கு திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழர் கள் இன்று மூன்றாவது நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். யுத்தம் காரணமாகவும் திருகோண மலை மாவட்டத்திலிருந்து தமிழர் கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக வும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. யுத்த அழிவு களால் ஏற்பட்ட இறப்புவீத அதிகரிப்பும் தமிழர்களின் சனத் தொகை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும்.

உலகில் முஸ்லிம்களின் சனத் தொகை பெருக்கத்தைப்போலவே கிழக்கு மாகா ணத்திலும் அவர்களின் சனத்தொகை வீதம் ஏனைய இனங்களை விட அதி கரித்து வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் இப்போது சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டு அப்பிரதே சங்களுக்கு சிங்களப் பெயர்களும் சூட் டப்பட்டிருக்கின்றன.

மக்கள் தொகையில் மட்டுமல்ல, நிலப் பரப்பைக்கூட தமிழர்கள் திருகோண மலையில் இழந்துவிட்டார்கள். 2,618.2 ச.கிமீ கொண்ட திரு கோணமலை மாவட்டத்தில் 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில்தான் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருகோணமலை மற்றும் ஈச்சிலம்பற்று, வெருகல் ஆகிய இடங்களை உள்ளடக்கிய இந்த 346 சதுர கிலோ மீற்றர் பிர தேசத்திற்குள்ளும் தற்போது சிங்களவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.

பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களான கந்தளாய், கிண்ணியா, குச்சவெளி, தம்பல காமம் பகுதிகள் இப்பொழுது முற்றுமுழு தான சிங்களப் பிரதேசங்களாக மாற்றப் பட்டு விட்டன. அந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 240 தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற் றப்பட்டிருக்கின்றன. இதுதான் எமது தமிழீழத் தலைநகரின் இன்றைய நிலை.

மட்டக்களப்பு

அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை பார்ப்போம். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டி ருந்த போதிலும், 1961ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தாவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்க ரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோ வில், பொத்துவில் ஆகிய பிரதேச செய லகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனறாகலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை) உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப் படுத்தும் திட்டத்துடனேயே திகாமடுல்ல மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட் டத்தின் வடக்குப் பக்கமாக உள்ள மன்னம்பிட்டி உட்பட பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டு பின்னர் அவை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பிரதேசங்களிலும், அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய கிராமங்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

அம்பாறை
1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 44 வீதமாகவும், சிங்களவர்கள் 29.3 வீதமாகவும், தமிழர் 25.2 வீதமாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.5 வீதமாக உயர்வடைந்திருக்கின்றனர். அதேவேளை, தமிழர்கள் 18.3 வீதமாகவும் முஸ்லிம்கள் 44 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர்.




இப்பொழுது சிங்கள மயமாக்கப்பட்டிருக்கும் பிரதேசங்கள் மீண்டும் தமிழர் கைகளுக்கு வரும் என சிலர் நம்பலாம். உலக நாடுகளில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் மீட்கப்பட்டன என உங்களில் சிலர் ஆறுதல் சொல்லலாம். ஆனால் அந்த இனங்களுக்கு உலக நாடுகளில் இருந்த ஆதரவின் ஒரு வீதமாவது எமக்கு இருக்கிறதா என்ற யதார்த்தத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தற்போது போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி என்ற பெயரில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என அண்மையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தீகவாபி புனித பிரதேசத் திட்டம் மற்றும் உல்லாசப் பிரயாண அபிவிருத்தி ஆகியவற்றின் கீழ் அம்பாறை மாவட்டத்திலும் மட்டக் களப்பு மாவட்டத்தில் குடும்பிமலை பிரதேசத்திலும் (இலங்கை அரசு வைத்த பெயர் தொப்பிகல) மேற்கொள்ளப்பட்டு வரும் "அக்ரோ' வர்த்தக அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட மேற்படி திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் சனத்தொகையை 55 வீதமாக உயர்த்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டங்களை மஹிந்த அரசில் முக்கிய அமைச்சராக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச்சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்க மேற்கொண்டு வருகிறார். அரச காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இன விகிதாசாரத்திற்கு ஏற்பவே பங்கிடப்பட வேண்டும் என காணிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். இத்திட்டங்களைச் செயற்படுத்து வதற்கு வசதியாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அரச அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு சிங்கள வர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு வடக்குக்கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண நிர்வாக உயரதிகாரிகளாக மாகாண சபை நிர்வாகத்திலும் சரி, மாவட்ட செயலகங்களிலும் சரி, சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண நிர்வாக உயர்மட்டத்திற்கு சிங்களவர்களையே நியமித்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிர்வாக சேவையைச் சேராத இராணுவ அதிகாரிகளாவர்.

திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபராக மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவும், மாவட்ட புனர்வாழ்வு இணைப்பாளராக மேஜர்ஜெனரல் அமரடேவாவும், ஆளுநரின் செயலாளராக கப்டன் ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளுநரே சகல அதிகாரங்களையும் கொண்டவராகக் காணப்படுகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படு கிறார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக முன்னாள் திருகோணமலை அரச அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரச அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் காணி அமைச்சின் செயலாளர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஆசிரியர், மாகாண செயலாளருக்கு ஒரு கடிதத்தை எழுது வதாக இருந்தால் சிங்களத்தில்தான் எழுத வேண்டும். இந்த அவலங்களுக்குக் காரணம் கிழக்கு மாகாண நிர்வாகம் சிங்களக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளுக்கு சென்றதுடன், சிங்கள அரசின் கைபொம்மையான ஒருவர் மாகாண முதலமைச்சரானமையும்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாகாணசபைக்குப் பூரண அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட அந்த மாகாணசபை தமிழர்களின் கைகளை விட்டுச் சென்றதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கிழக்கு மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அதனால்தான் சொல்லுகிறோம், மாகாண நிர்வாகமானால் என்ன நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானால் என்ன தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு அதனைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றிபெற முடியும். அது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும்.

இதை வாசித்த உங்களில் சிலர் கிழக்கு மாகாணம்தானே பறி போயிருக்கிறது, வடமாகாணம் எங்கள் கைகளில்தானே இருக்கிறது என பெருமிதம் அடையலாம். ஆனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் இன்று எங்கள் கைகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுபற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.

எமது மரபுவழித் தாயகத்தை இழப்போமா? அல்லது போராடிப் மீழப் பெறுவோமா?

(நக்கீரன்)

தமிழீழத் திருநாட்டின் தலைநகரான திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் (2000)ஆண்டை அகிலவுலக சமாதான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனை ஒட்டி 87 உலக நாடுகளின் நகரங்கள் சமாதான நகரங்களாக யூனெஸ்கோ முன்மொழிந்துள்ளது.

உருசியாவின் மொஸ்கவ், வியட்நாமின் ஹனோய், யப்பானின் ஹிரோசிமா, ,ஸ்ரேலின் ஜெரூசலம், லெபனாவின் பெயிரூட் போன்று தமிழீழத்தில் திருகோணமலை சமாதான நகரமாக யூநெஸ்கோவினால் முன்மொழியப் பட்டுள்ளது.

திருகோணமலை நகரின் சமாதான துவக்க விழா போன வாரம் மிகவும் 'கோலாகலமாகக்' கொண்டாடப்பட்டுள்ளது.

அன்புவழிபுரம் சந்தியில் எழுதப்பட்ட அலங்கார வளைவை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர திரை நீக்கம் செய்து வைத்திருக்கிறார். அத்தோடு திருமலைக் கடற்கரையில் அமைச்சர் மங்கள சமரவீர 'சமாதான நகர் நினைவுச் சின்னம்' ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

சமாதான நகர் துவக்கவிழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடந்தேறியிருக்கிறது. இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு செயல்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்டமாக யப்பான் உதவியுடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கென 150 மில்லியன் (15கோடி) ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

'இலங்கையில் மூன்று இனங்கள் வாழும் திருகோணமலை சமாதான நகரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எமது அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உறுதியுடன் உழைத்து வருகிறது. திருகோணமலை இலங்கையில் சமாதானத்தைப் பேணும் 'மாதிரி' நகரமாக மாறும். இலங்கையின் வர்த்தக நகராக திருகோணமலை நகரம் அபிவிருத்தி செய்யப்படும்'' இப்படி அமைச்சர் மங்கள சமரவீர வயிற்றுப் பிள்ளை கீழே நழுவி விழுமாறு அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சனாதிபதி சங்திரிகா குமாரணதுங்கா இந்த துவக்க விழாவையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வட-கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்த்தன வாசித்தார். அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது -

'திருகோணமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.''

திருகோணமலை நகரை சமாதான நகராகப் பிரகடனப் படுத்த யூனெஸ்கோ உண்மையாக தன்பாட்டில் முன்வந்திருந்தால்; இந்த யோசனையை முன்மொழிந்த அந்த அமைப்பின் அதிகாரிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருகோணமலை நகரம் சமாதானத்தைக் கண்டு, அதன் காற்றைச் சுவாசித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது.

திட்டமிட்ட- இடைவிடாத சிங்களக் குடியேற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையராக இருந்த சிங்களவர் இன்று பெரும்பான்மையராகவும் பெரும்பான்மையராக இருந்த தமிழர் சிறுபான்மையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை திருமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமனம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பரங்கியர் ஒருவர் அரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். ஆனால் தமிழர் ஒருவர் இதுவரை இருக்கவில்லை. அரசாங்க அதிபர் பதவி மட்டுமல்ல காணிப் பங்கீட்டுக்குப் பொறுப்பாவுள்ள மாவட்ட காணி அதிகாரி (னுளைவசiஉவ டுயனெ ழுககiஉநச) பதவியும் அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களவராலேயே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இவை ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இந்த மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு வசதியாக திட்டமிட்டே பின்பற்றப்பட்டு வரும் பேரினவாதக் கொள்கையாகும்.

வட- கிழக்கு ஆளுநர் பதவியை முன்னைய காமினி பொன்சேகா இராஜினாமா செய்த போது அவரது இடத்துக்கு இன்றைய மேஜர் ஜெனரல் அசோகாவை சந்திரிகா அரசு அவசர அவசரமாக நியமித்தது.

தனது இராணுவப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் அசோகா ஜெயவர்த்தனா வட- கிழக்கு ஆளுனராகப் பதவியேற்றார்.

வட- கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோரே இன்றும் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். எனவே ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப் படுவதே நியாயமாகும். ஒத்துழைப்புத் தமிழர்களில் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கலாம். ஒத்துழைப்புத் தமிழர் மீதும் சந்திரிகா அரசுக்கு நம்பிக்கையில்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு முஸ்லீமை ஆவது ஆளுநராக நியமித்திருக்கலாம். ஆனால் சிங்கள அரசு ஒருபோதும் அப்படிச் செய்யாது. அப்படிச் செய்வது அதன் எழுதப்படாத அல்லது பிரகடனப் படுத்தப் படாத இனவாதக் கொள்கைக்கு முரணாக இருக்கும்.

மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் அரசியல் மட்டத்தில் அடிபட்டுக் கொண்டாலும் வட-கிழக்கு மாகாணத்தில் தமிழருக்குச் சொந்தமான பூமியில் சிங்களவரைக் குடியேற்றி அதனைச் சிங்கள மயப்படுத்த பெரும்பாடுபட்டு வருகின்றன. இதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிடத் தக்க வெற்றியும் கண்டுள்ளார்கள்.

ஐ.தே.கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் குத்துப் பட்டு வெட்டுப் பட்டாலும் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடுவதைப் பொறுத்தளவில் இந்த இரண்டு கட்சிகளும் அண்ணன் - தம்பிபோல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு அம்பாரையில் சென்ற வாரம் நடந்து முடிந்த கல்லோயாத் திட்ட பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகும்.

இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அரசியலில் கீரியும் - பாம்பும் போல் சண்டை போடும் நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த இரத்வத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராம-இலட்சுமணர் போல் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.

வட-கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களை குடித் தொகை கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1881ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வதித்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33. 6. பின்வரும் அட்டவணை இந்தத் தலைகீழ் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது.

     அட்டவணை 1
திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)  
 
சிங்களவர்
தமிழர்
முஸ்லிம்கள்
ஆண்டு
தொகை
%
தொகை
%
தொகை
%
1881
935
4.2
14394
64.8
5746
25.9
1891
1109
4.3
17117
66.4
6426
25.0
1901
1203
4.2
17069
60.0
8258
29.0
1911
1138
3.8
17233
57.9
9714
32.6
1921
1501
4.4
18586
54.5
12846
37.7
1946
11606
15.3
33795
44.5
23219
30.6
1953
15296
18.2
37517
44.7
28616
34.1
1963
40950
29.6
54050
39.1
42560
30.8
1971
54744
29.1
71749
38.1
59924
31.8
1981
86341
33.6
93510
36.4
74403
29.0
கிழக்கு மாகாண  மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)


 
சிங்களவர்
தமிழர்
முஸ்லிம்கள்
ஆண்டு
தொகை
%
தொகை
%
தொகை
%
1881
5947
4.50
75408
61.35
43001
30.65
1891
7512
4.75
87701
61.55
51206
30.75
1901
8778
4.70
96296
57.50
62448
33.15
1911
6909
3.75
101181
56.20
70409
36.0
1921
8744
4.50
103551
53.50
75992
39.4
1946
23456
8.40
146059
52.30
109024
39.1
1953
46470
13.10
167898
47.30
135322
38.1
1963
109690
20.10
246120
45.10
185750
34.0
1971
148572
20.70
315560
43.90
248567
34.6
1981
243358
24.90
409451
41.90
315201
32.2
  1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981ம் ஆண்டு 24.9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881ம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (பட்டிப்பளை ஆறு), மதுறு ஓயா, திருகோணமலையில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும்.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடிசன கணிப்பீடு எடுக்கப் படவில்லை. 2001 இல் குடிவரவு கணிப்பீடு எடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது தமிழர்களது எண்ணிக்கையும் விழுக்காடும் இனக் கலவரங்கள், புலப்பெயர்வுகள், இடப்பெயர்வுகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.

திருகோணமலையை தமிழர்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீண்ட காலத் திட்டமாகும். ஐம்பதுக் கடைசிகளில் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் ஸ்ரீமாபுர, அக்போபுர குடியேற்றக் கிராமங்கள் உருவாகிவிட்டன. 'சம்பந்தர் புரம்' என்ற பெயரில் தமிழ் மீனவர் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொலைசெய்து எஞ்சியவர்களை கலைத்துவிட்டு அதில் வலோத்காரமாக குடியேறியுள்ளார்கள். இதே போல் இந்து ஆலயங்களின் தீர்த்தத் திருவிழா நடைபெறும் தீர்த்தக் கடற்கரைப் பிரதேசமும் தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தி வந்த 'உயர்ந்த பாடு' கடற்கரைப் பகுதியும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் திருகோணமலை கீரித்தோட்டப் பகுதியில் திருமலை நகரசபையால் 60 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தகர்கள் இவர்களது எதிர்ப்பால் மூடப்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் வர்த்தகம், குறிப்பாக மீன், மரக்கறி வியாபாரம் நூறு விழுக்காடு சிங்களவர்கள் கையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனப்படுத்தி அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் அங்குள்ள சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சந்திரிகா அரசின் அந்தரங்க நோக்கமும் திட்டமுமாகும்.

'திருகோணமலையை சமாதான நகராக பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு' என்று சனாதிபதி பேசியிருப்பதன் அர்த்தம் திருகோணமலையை கைப்பற்றுவதில் அரசாங்கம் வெற்றிபெறும் அதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்பதுதான்.

நமது மரபுவழித் தாயகத்தின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சிங்களக் குடியேற்றத்திற்குப் பறிகொடுத்து விட்டோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 இல் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதே காலகட்டத்தில் அம்பாரைத் தேர்தல் தொகுதியும் (1960) சேருவில தேர்தல் தொகுதியும் (1977) சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டதும் அதனை உறுதி செய்கிறது.

திருகோணமலை நகரம் சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை நாம் போர்ப் பிரகடனமாகவே அர்த்தம் கொள்ளல் வேண்டும்.

முடிவாக எமது மரபுவழித் தாயகத்தை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக இழப்போமா? அல்லது போராடி அதை மீழப் பெறுவோமா?

Trincomalee District

Trincomalee district is one of the 25 administrative districts Districts of Sri Lanka.

In Sri Lanka, districts are the second-level administrative divisions and are included in a province. There are 25 districts organized into 9 provinces. Each district is administered under a District Secretary, who is appointed by the central government of Sri Lanka.

Sri Lanka

The Democratic Socialist Republic of Sri Lanka is a country and a sovereign state off the southern coast of the Indian subcontinent. An island nation in South Asia, it was till 1972 known as Ceylon.

The district is administered by a District Secretariat headed by a District Secretary (formerly Government Agent).

The District Secretary (previously known as a Government Agent) is a Sri Lankan civil servant of the Sri Lanka Administrative Service appointed by the central government to govern a certain district of the country. The GA is the administrative head of public services in the District. As Sri Lanka has 25 districts.

Politics of Sri Lanka

Politics of Sri Lanka takes place in a framework of a presidential representative democratic republic, whereby the President of Sri Lanka is both head of state and head of government, and of a multi-party system. Executive power is exercised by the President and Cabinet of Ministers.  Legislative power is vested in  parliament.

Trincomalee

Trincomalee is a port city on the east coast of Sri Lanka, about 110 miles northeast of Kandy and with a population of approximately 100,000. The city is built on a peninsula, which divides the inner and outer harbours. It is one of the main centres of Tamil speaking culture on the island.

Before the Birth of Christ

Before the Birth of Christ Naga and Yaksha were the first settlers of the island.

The local population is a mixture of Muslims, Tamils and Sinhalese.

The name Thiru-kuna (Kunru)-malay (triangular hilly region overlooking the sea) comes from the fact that Trincomalee has holy hilly rock overlooking the sea. Gokarna is the Sanskrit name and is also a popular name.

This has made Trincomalee an excellent natural harbour. The ancient name of Tamiravarni derives from the colour of the soil. Tamira means red. Varni means colour. Thus the name Vanni or Varni and it is a mutated name from Tamiravarni, Tambravarni, Tambapanni or Tamanna. A river called Tamirabharani is located in Tuticorin area and there was a connection of land which kept both countries together during ancient times. The name Tamil is derived from Tamir.

Mahawamsa narrates that Prince Vijaya, a North Indian prince and 700 royals who were banished from their motherland, landed in Sri Lanka at this place around 543 B.C. and called this place Tambapanni. They married Tamil brides from Pandya Nadu.

Vijaya and his clan came from Lala Land in Kalinga (Orissa/Bengal).  They landed in Hela Diva. From that cross breeding, the name Sinhala came to all the progeny of these immigrants (Sind + Hela = Sinhala).

The Mahavamsa describes the Pandyan ladies as originating from "Dakkhina Madura" or "southern Madura" which most Sinhala scholars have interpreted as modern-day Madurai in Tamil Nadu, "northern Madura" being the city of Mathura in Uttar Pradesh. However, there had been more than one Madurai in Tamil history. The Tamil literary tradition holds that three academies were held to collate the poetry of the Sangam age. The last of these was held in Madurai and the second was in a city called Kapatapuram, but the first academy was held in "Then Madurai," translating to "southern Madurai." Historians believe that Then Madurai was a real city on the southeastern coast of Tamil Nadu near modern Korkai, which would have been very close to the settlement of "Thambapanni" which Vijaya had constructed in Lanka. If "Then Madurai" can be equated with "Dakkhina Madura" of the Mahavamsa, then we would have evidence that the seat of the first Sangam was a historical city, and not a myth. However, some scholars disagree.

1st Century to 4th Century Karikala Chola invaded and took thousands of prisoners. Gajabahu went to Chola Nadu and brought those prisoners and their descendents back. Along with the released prisoners, thousands of Tamils were brought and settled. They were settled in the Eastern, Western and Central Provinces.

5th Century to 9th CenturyAfter the seventh century, the principle arena for the East-West exchange trade had shifted from the Arabian Sea to the Bay of Bengal. Consequently there was an increasing interest in the north-eastern zone of Sri Lanka wherein was located Trincomalee port. It is significant that between seventh and tenth centuries A.D. four Sinhalese Kings Aggabodhi IV, Aggabodhi VII, Udaya I and Sena I left Anuradhapura and ruled from the north-eastern city of Polonnaruwa, situated on the banks of the Mahaweli Ganga within easy access to Trincomalee.

10th Century to 15th Century Rajaraja I invaded Sri Lanka in 993 CE. The copper-plate inscription mention that Rajaraja’s powerful army crossed the ocean by ships and burnt up the kingdom of Lanka. Mahinda V was the king of Sinhalas. In 991 CE, Mahinda’s army mutinied with help from mercenaries from Kerala. Mahinda had to seek refuge in the southern region of Rohana. Rajaraja utilised this opportunity and invaded the island. Chola armies occupied the northern half of Lanka and named the dominion ‘Mummudi Chola Mandalam’. Anuradhapura, the 1400-year-old capital of Sinhala kings was destroyed. The destruction was so extensive the city was abandoned. Cholas made the city of Polonnaruwa as their capital and renamed it Jananathamangalam. The choice of this city demonstrates the desire of Rajaraja to conquer the entire island. Rajaraja also built a Temple for Siva in Pollonaruwa.[2]

To complete the task began by his father of conquering the island of Srilanka, Rajendra Chola I invaded the island in 1018 C.E. As a result of the campaign, Rajendra claimed to have captured the regal jewels of the Pandya kings, which Parantaka I tried in vain to capture. Rajendra also captured the crown of the Sinhala king, his Queen and daughter. The Sinhala king Mahinda V was taken a prisoner and transported to the Chola country. He was held a prisoner for over twelve years and died in captivity. Mahavamsa gives a graphic illustration of the carnage wrought by the pillaging Chola army in the Sinhala country, claiming the invading army destroyed monasteries seeking treasure.

Mahinda’s son Kassapa became the centre of Sinhalese resistance against the Tamil Power. The war between the Cholas and the Sinhalese raged for over six months in which a great number of Tamils were killed. At the end of the battle, Kassapa managed to drive out the Chola army from the southeast corner of the island and ruled as Vikramabahu I.

Remains of a number of Hindu temples have been discovered around the Polonnaruwa area attesting to the presence of the Tamil army.

In 1041 C.E. Rajendra had to lead another expedition into Sri Lanka to quell the continuing attacks against the Chola army by Vikramabahu. Vikramabahu died soon after and anarchy reigned outside the Chola territories. An assortment of adventurers including Sinhalese, dispossessed Pandya princes and even a certain Jagaitpala from distance Kanauj asserted authority over portions of the island. Chola army had to fight and defeat them all.[2]

It was the most important port for vessels coming from South India and there was a strong Tamil element in the population of this port during most periods of history. Mannar located at the mouth of the Aruvi Aru had easy access to the capital Anuradhapura, which was located on the banks of the same river. However with the increased emphasis on the South-East Asian Sri Vijayan Kingdom as the main centre of entrepot trade after the seventh century A.D., the importance of the port of Mannar had diminished to some extent. Owing to this change even the capital Anuradhapura lost much of its attractiveness.

Thus, the emergence of Polonnaruwa and the port of Trincomalee is significant in terms of the changing patterns of trade in the Bay of Bengal and Sri Lanka's interest in it. The South Indian Chola occupation of Polonnaruva (1017–1070) was partly motivated by the commercial policy of the Cholas aimed at controlling the western seaboard of Bay of the Bengal. The importance of Trincomalee for the Bay of Bengal and South-East Asian trade was realized also by the Sinhalese rulers of Polonnaruva particularly Vijayabahu I (1070–1110) and Parakramabahu (1153–1186).

However, Mannar did not completely lose its glamour in the period between the seventh and the twelfth centuries and it functioned as an important trading centre where South Indian merchants flourished. In addition to the ancient temple of Tiruketisvaram at Mathottam another temple named Rajarajavarattu Mahadeva was constructed near the port in the eleventh century for the worship of the trading communities and soldiers living there by the Chola conqueror Rajaraja Chola I.

The new commercial policy of the southern Sung dynasty (1127–1278) of China deviated from the "tributary trading system" in South East Asian and South Asian waters. As a result, the role of the intermediaries in the Bay of Bengal trade declined drastically. Once again the coastal ports in India regained their eminent position in trade and the theatre of activity shifted from the Bay of Bengal to the Arabian Sea. Mathottam continued as the chief port of Rajarata at least up to the middle of the thirteenth century. The Rasavahini written in the Polonnaruva period implies that traders collected various commodities from Mahatittha and sold them in the interior. The Saddharmalankara refers to a merchant of Mavatupatuna who went eastwards for trade. However, by the fifteenth-century Mathottam appears no longer to be an important port. The Kokila Sandesa written during the reign of Parakramabahu VI of Kotte, in giving a description of the important places along the western littoral of the Island does not mention Mathottam.

After that, there was a local ruler who ruled from Digavapi. Later the capital shifted to Anuradhapura. When Anuradhapura was destroyed the capital changed from Anuradhapura to Polonnaruwa. When Pollonaruwa was destroyed the capital moved to Kotte and then to Kandy. Anuradhapura was destroyed by Rajaraja Cholan and Pollonaruwa was destroyed by Kalinga Magha.

As a catalyst for change, Kalinga Magha is arguably one of the most significant rulers in Sri Lankan history. His invasion marks the final - cataclysmic - destruction of the kingdom of Rajarata, which had for so long been the heart of native power on the island. The great cities of the ancient kings were now lost and disappeared into the jungle and were not rediscovered until the 19th century. Native power was henceforth centred on a kaleidoscopically shifting collection of kingdoms in south and central Sri Lanka. The north, in the meanwhile, eventually evolved into the Jaffna Kingdom, which was subjected to colonial rule by the Portuguese in 1619.

Kalinga Magha's geopolitical impact is reflected in the changing language of the Culavamsa as well. The traditional divisions of Sri Lanka, into Rajarata, Dhakkinadesa, and Ruhuna, first undergo a change of names (Rajarata becomes Pathithadesa, Dhakkinadesa becomes Mayarata), and then slip into obsolescence altogether. Their successor kingdoms tended to be geographically smaller and centred on a strong citadel-capital, such as Yapahuwa or Gampola; they also tended to be much short lived, like Sitawaka.

The bitter memory of Magha's invasion also tainted the previously close relationship between the Sinhalese and the Chola, Chera and Pandya inhabitants of southern India. Whereas the great families of Rajarata had invariably been polity-spanning clans, with extensive intermarriage between Indian and Sri Lankan branches, the royal families of the Middle Ages became more distinctive and recognisably Sinhalese in the modern sense of the word. This is not to say however that south Indian influence in Sri Lankan politics ended altogether - witness the Nayakkar dynasty of Kandy. However the age of the great, Indo-Lankan clans like the Moriya and Lambakanna was over.

Native authority on Sri Lanka, already in decline before Magha's invasion, never fully recovered from the invasion; the next three centuries were marked by near-anarchy. This period of Sri Lanka's history ended only with the arrival of a foe that would eventually subsume both the great empires of south India and the kingdoms of Sri Lanka under its authority - the forces of colonial Europe.

The Kandyan Kings have ruled Eastern Province after the fall of the Jaffna Kingdom.  Thus the racial mixture was ensured by the Kandyan kings marrying into the families of Batticaloa rulers. Dutch invasion took place through Batticaloa with the alliance of Batticaloa rulers and Kandyan king Rajasinghe. Both were Tamils and Hindus. even though the Kandyan Kingdom was Sinhala Buddhist to the core, the kings were Tamil Hindus of Madurai Nayakkar origin.

Since Kandyan kings were of Madurai origin they brought shiploads of Mappilla Muslims from Kerala as the trading partners of the kingdom and granted asylum when the Portuguese launched the Holocaust against the Muslims in Sri Lanka. Thus the Eastern Province is the residence of a majority of Muslims and a safe haven for them during the Sri Lankan Civil War.

Places like Karadiyan Aru and Urugam contain stone inscriptions in Brāhmī script which are still in existence.

History after the fall of Polonnaruwa

With the decline of the Rohana sub-kingdom and the defeat of Polonnaruwa, coming with the rise of Chola power, i.e., from about the 13th century CE, these regions became wild. The many irrigation works (tanks etc., which exist even today) became home to malaria( see History of Sri Lanka). In the meantime, the eastern coastal region remained less affected by Malaria and began to be occupied. Thus seafaring people who had begun to settle down along the coast since the Anuradhapura times, circa 6th Century CE began to flourish. The forests continued to be dominated by the Veddha population which claimed kingship ("cross-cousins") with the Sinhala kings of Kandy.[3]

Parakramabahu's coronation took place in 1236. He turned his attention to the recovery of Polonnaruwa from the Tamils and achieved this purpose by 1244. In this connection two kings are mentioned, Kalinga Magha and Jaya Bahu, who had been in power forty years, apparently reckoned from the time of the military rule after Sahasa Malla. As the Tamil war' and the `Malala war' as specifically mentioned by contemporary chronicles the two kings may have held different parts of the country. In the king's eleventh year (1244/5) Lanka was invaded by Chandrabhanu, a Javanese (Javaka) from Tambralinga, with a host armed with blow-pipes and poisoned arrows: he may have been a sea- robber, and though now repulsed descended on the Island later on.

The rest of the reign according to the contemporary records was spent in pious works; the king also held a convocation for the purpose of reforming the priesthood, whose discipline had been relaxed during the Tamil occupation. The chronicles make no mention of a great Pandyan invasion which seems to have taken place between 1254 and 1256, in which one of the kings of Lanka was slain and the other rendered tributary. From this it is clear that Parakramabahu- never had recovered the north of the Island, which certainly had been held by his great namesake.

15th Century to 20th Century and the Advent of the Europeans From Cape Comorin the Dutch Admiral Spitzburgen steered his course to Point de Galle ; but, without landing there or at any of the other places which were strongly fortified by the Portuguese, he sailed round the south coast of the Island and made for Batticaloa, where he anchored on the 31 May 1602.

He learnt that the town of Batticaloa, where the chief of the province resided, was about three miles (5 km) inland; so he sent him a messenger proposing to enter into trade with him. In the meantime, he learnt from some Tamils who came on board that there was plenty of pepper and cinnamon to be had, but that it was to be obtained from the chief of the place. These Tamils brought with them a Portuguese interpreter; for Portuguese was the only European language then heard or spoken in Ceylon, and the natives of the Island had no idea that there were other white people who spoke a different language.

The Admiral was taken from Batticaloa to Kandy and was given a liberation hero's welcome as King Rajasinghe seized the opportunity to get rid of the Portuguese, the oppressors who were slowly encroaching the island systematically and promoting subversion against Rajasinghe.

Historical sites

There are several Buddhist historical sites around the Trincomalee, meaning that there had been  Tamil Buddhist inhabitance in the area for many centuries. These include the famous Seruwila Mangala Raja Maha Vihara (Seruwila Temple), south of the Trincomalee town, which is under consideration to be declared a UNESCO world heritage site dating back to 2nd century B.C.[4] the Sri Gajaba Len Vihara (Sri Gajaba Cave Temple), Tiriyay temple and the Welgam temple.[5]

Geography

Trincomalee district is located in the east of Sri Lanka in the Eastern Province. It has an area of 2,727 square kilometres (1,053 sq mi).[6]

Natural disasters affected the Eastern Province population through out history.

Jaffna Kingdom

The Jaffna kingdom , also known as Kingdom of Aryacakravarti, of modern northern Sri Lanka came into existence after the invasion of Magha, who is said to have been from Kalinga, in India. It eventually became a tribute paying feudatory of the Pandyan Empire in modern South India in 1258. It was conquired by the Portuguese in 1619.

Mahans  geopolitical impact is reflected in the changing language of the Culavamsa as well. The traditional divisions of Sri Lanka, into Rajarata, Dhakkinadesa, and Ruhuna, first undergo a change of names (Rajarata becomes Pathithadesa, Dhakkinadesa becomes Mayarata), and then slip into obsolescence altogether. Their successor kingdoms tended to be geographically smaller and centred on a strong citadel-capital, such as Yapahuwa or Gampola; they also tended to be much short lived, like Sitawaka.

The bitter memory of Magha's invasion also tainted the previously close relationship between the Sinhalese and the Chola, Chera and Pandya inhabitants of southern India. Whereas the great families of Rajarata had invariably been polity-spanning clans, with extensive intermarriage between Indian and Sri Lankan branches, the royal families of the Middle Ages became more distinctive and recognisably Sinhalese in the modern sense of the word. This is not to say however that south Indian influence in Sri Lankan politics ended altogether - witness the Nayakkar dynasty of Kandy.

Kandy

Kandy is the English name for the city of Maha Nuvara in the centre of Sri Lanka. It lies in the midst of hills in the Kandy plateau, which crosses an area of tropical plantations, mainly tea. Kandy is one of the most scenic cities in Sri Lanka; it is both an administrative and religious city.

However the age of the great, Indo-Lankan clans like the Moriya and Lambakanna was over.

Native authority on Sri Lanka, already in decline before Magha's invasion, never fully recovered from the invasion; the next three centuries were marked by near-anarchy. This period of Sri Lanka's history ended only with the arrival of a foe that would eventually subsume both the great empires of south India and the kingdoms of Sri Lanka under its authority - the forces of colonial Europe.

The Kandyan Kings have ruled Eastern Province after the fall of the Jaffna kingdom.  Thus the racial mixture was ensured by the Kandyan kings marrying into the families of Batticaloa rulers. Dutch invasion took place through Batticaloa with the alliance of Batticaloa rulers and Kandyan king Rajasinghe. Both were Tamils and Hindus. even though the Kandyan Kingdom was Sinhala Buddhist to the core, the kings were Tamil Hindus of Madurai.

Madurai

Madurai is the oldest continuously inhabited city in the Indian peninsula. It is an ancient and prestigious city in the Indian state of Tamil Nadu, situated on the banks of the River Vaigai in Madurai district.

Nayakkar origin

Since Kandyan kings were of Madurai origin they brought shiploads of Mappilla Muslims from Kerala as the trading partners of the kingdom and granted asylum when the Portuguese launched the Holocaust against the Muslims in Sri Lanka. Thus the Eastern Province is the residence of a majority of Muslims and a safe haven for them during the Sri Lankan Civil War.

Sri Lankan civil war

The Sri Lankan Civil War, was a conflict fought on the island of Sri Lanka. Beginning on July 23, 1983, there was an on-and-off insurgency against the government by the Liberation Tigers of Tamil Eelam, a separatist militant organization which fought to create an independent Tamil state named Tamil Eelam.

Places like Karadiyan Aru and Urugam contain stone inscriptions in Brāhmī script

Brāhmī script

Brāhmī is the modern name given to the oldest members of the Brahmic family of scripts. The best-known inscriptions in Brāhmī are the rock-cut edicts of Ashoka in north-central India, dated to the 3rd century BCE. These are traditionally considered the earliest known examples of Brāhmī writing which are still in existence.

History after the fall of Polonnaruwa

With the decline of the Rohana sub-kingdom and the defeat of Polonnaruwa the second most ancient of Sri Lanka's kingdoms, was first declared the capital city by King Vijayabahu I, who defeated the Chola invaders in 1070 CE to reunite the country once more under a local leader.
, coming with the rise of Chola power, i.e., from about the 13th century CE, these regions became wild. The many irrigation works (tanks etc., which exist even today) became home to malaria (see History of Sri Lanka)

Lanka was invaded by Chandrabhanu

Chandrabhanu or Chandrabhanu Sridhamaraja was the King of the Malay state of Tambralinga in present day Thailand. He was known to have ruled from during the period of 1230 until 1270. He was also known for building a well-known Buddhist stupa in southern Thailand. Tambralinga was an ancient kingdom located on the Malay Peninsula that at one time came under the influence of Srivijaya. The name had been forgotten until scholars recognized Tambralinga as Nagara Sri Dharmaraja. Early records are scarce while estimations range from the seventh to fourteenth century.

The rest of the reign according to the contemporary records was spent in pious works; the king also held a convocation for the purpose of reforming the priesthood, whose discipline had been relaxed during the Tamil occupation. The chronicles make no mention of a great Pandyan invasion which seems to have taken place between 1254 and 1256, in which one of the kings of Lanka was slain and the other rendered tributary. From this, it is clear that Parakramabahu- never had recovered the north of the Island, which certainly had been held by his great namesake.

15th Century to 20th Century and the Advent of the Europeans

From Cape Comorin the Dutch Admiral Spitzburgen steered his course to Point de Galle; but, without landing there or at any of the other places which were strongly fortified by the Portuguese, he sailed around the south coast of the Island and made for Batticaloa, where he anchored on the 31st May 1602.

He learnt that the town of Batticaloa, where the chief of the province resided, was about three miles inland; so he sent him a messenger proposing to enter into trade with him. In the meantime, he learnt from some Tamils who came on board that there was plenty of pepper and cinnamon to be had, but that it was to be obtained from the chief of the place. These Tamils brought with them a Portuguese interpreter; for Portuguese was the only European language then heard or spoken in Ceylon, and the natives of the Island had no idea that there were other white people who spoke a different language.

The Admiral was taken from Batticaloa to Kandy and was given a liberation hero's welcome as King Rajasinghe seized the opportunity to get rid of the Portuguese, the oppressors who were slowly encroaching the island systematically and promoting subversion against Rajasinghe.

Northern Province, Sri Lanka

The Northern Province is one of the 9 provinces of Sri Lanka. The provinces have existed since the 19th century but did not have any legal status until 1987 when the 13th Amendment to the 1978 Constitution of Sri Lanka established provincial councils.

Population of Trincomalee District by ethnic group 1827 to 2007
Year
No
%
No
%
No
%
No
%
No
%
1827
3,245
16.94%
15,663
81.76%
250
1.30%
0
0.00%
19,158
100.00%
1881 Census
5,746
25.89%
14,304
64.44%
935
4.21%
1,212
5.46%
22,197
100.00%
1891 Census
6,426
24.96%
17,117
66.49%
1,105
4.29%
1,097
4.26%
25,745
100.00%
1901 Census
8,258
29.04%
17,060
59.98%
1,203
4.23%
1,920
6.75%
28,441
100.00%
1911 Census
9,700
32.60%
17,233
57.92%
1,138
3.82%
1,684
5.66%
29,755
100.00%
1921 Census
12,846
37.66%
18,580
54.47%
1,501
4.40%
1,185
3.47%
34,112
100.00%
1946 Census
23,219
30.58%
33,795
44.51%
11,606
15.29%
7,306
9.62%
75,926
100.00%
1953 Census
28,616
34.10%
37,517
44.71%
15,296
18.23%
2,488
2.96%
83,917
100.00%
1963 Census
40,775
29.43%
54,452
39.30%
39,925
28.82%
3,401
2.45%
138,553
100.00%
1971 Census
59,924
31.83%
71,749
38.11%
54,744
29.08%
1,828
0.97%
188,245
100.00%
1981 Census
75,039
29.32%
93,132
36.39%
85,503
33.41%
2,274
0.89%
255,948
100.00%
2001 Census3
          
2007 Estimate
152,019
45.47%
96,142
28.75%
84,766
25.35%
1,436
0.43%
334,363
100.00%
Sources: Census Deepartment
 
 DS Division
Main Town
GN

Divisions[7]
Area

(km2)[8]
Population (2007 Estimate)[1]
 Sri Lankan
Moor
 Sri Lankan
Tamil
 Sinhalese
 Indian
Tamil
 Burgher
 Malay
Other
Total
 Gomarankadawala
Gomarankadawala
10
285.0
0
22
5,855
0
0
0
2
5,879
 Kantalai (Kanthalai)
Kantalai (Kanthalai)
23
397.3
7,580
1,596
33,630
15
9
15
16
42,861
 Kinniya
Kinniya
31
146.9
59,055
2,503
0
0
0
0
0
61,558
 Kuchchaveli
 Kuchchaveli
24
313.3
18,971
6,646
412
1
289
0
8
26,327
 Morawewa (Muthalikkulam)
Morawewa (Muthalikkulam)
10
322.4
954
544
4,065
0
0
0
0
5,563
 Muttur (Muthur)
 Muttur (Muthur)
42
179.4
34,080
12,529
146
361
2
0
14
47,132
 Padavi Sri Pura (Padavi Siripura)
Sri Pura (Siripura)
10
217.1
0
1
10,664
1
0
0
0
10,666
 Seruvila (Seruwila)
Seruvila (Seruwila)
17
377.0
2,079
1,876
7,152
8
0
0
27
11,142
 Thambalagamuwa (Thampalakamam)
Thambalagamuwa (Thampalakamam)
12
244.4
16,799
4,352
6,005
24
0
3
389
27,572
 Trincomalee Town & Gravets
 Trincomalee
42
148.0
12,174
58,966
16,837
80
667
309
13
89,046
 Verugal & Eachchalampattu
Eachchalampattu
9
98.0
0
6,617
0
0
0
0
0
6,617
Total
230
 2,728.8
 151,692
95,652
84,766
490
967
327
469
 334,363
Trincomalee district has 13 local authorities of which two are Urban Councils and the remaining 11 are Pradeshya Sabhas.
Local government
Local Authority
Elected

Members
Area

(km2)
Population
Eachchalampaththu (Verugal) Pradeshya Sabha
   
Gomarankadawala Pradeshya Sabha
   
Kanthalai Pradeshya Sabha
11
397.3
48,632
Kinniya Pradeshya Sabha
   
Kinniya Urban Council
7
9.5
44,034
Kuchchaveli Pradeshya Sabha
9
333.3
29,967
Morawewa Pradeshya Sabha
 
116.0
10,000
Muthur Pradeshya Sabha
11
179.4
60,000
Padavi Siripura Pradeshya Sabha
9
217.1
13,000
Seruwila Pradeshya Sabha
 
277.0
13,886
Thampalakamam Pradeshya Sabha
9
244.0
33,967
Trincomalee Urban Council
12
7.5
101,958
Town & Gravets Pradeshya Sabha
   
Source: Census Department







About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply