செவ்வாய் தோசம் என்றால் என்ன?

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான தோசம், 12 தோசம் ,2 குறைவான தோசம் எனவும் சிலர் வரையறக்கின்றனர்.

– 2 இல் செவ்வாய் குடும்பத்தில் குழப்பங்களையும், மன அமை தியி ன்மையையும், வீண் செல வினத்தையும். உணவு சம்பத்த ப்பட்ட நோ யையும், சூடான வார்தைகளையும் கொடுக்க இட முண்டு.

– 4 இல் செவ்வாய் கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத் து வேறு பாடுகள் வரவும், சுக வாழ்வு இல்லாமல் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை சந்திக் கக்கூடியதாகவும், பிறந்த வீட்டு ஆதரவு இல்லாமலும் இருக்க இட முண்டு.

– 7 இல் செவ்வாய் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவும் , பிரி வும் ,இரத்த சம்பத்தப்பட்ட போன்ற அனுகூலமற்ற பலன்கள் நடை பெற இடமுண்டு.

–8 இல் செவ்வாய் சிறு வயதிலேயே வாழ்க்கை த் துணையை இழக்க அல்ல து பிரிய நேரும். திடீரென உணர்ச்சி வசப்பட்டு தற் கொலை செய்து கொள்ள லாம். எதிர்பாராமல் விபத் தில் சிக்கலாம். இல்வா ழ்வில் நிம்மதி இருக்காது. உஸ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவும் இடமுண் டு.

– 12 இல் செவ்வாய் பாத ரோகமும், பண விரயமும், உடன் பிறந்தவ ர்களால் தொல்லையும் ஏற்படக்கூடும். பூரண கட்டில் சுகம் கிடை க்க இடமில்லை.

எனவே செவ்வாய் தோசம் உள்ள பெண்ணிற்கோ, ஆணிற்கோ செவ்வாய் தோசமுள்ள ஆணை யோ, பெண்ணையோ தான் திரும ணம் செய்து வைக்க வேண்டும்  .இதனால் தோசம் நீங்கி சந்தோ சமாக வாழ்வார்கள். திருமணத்தி ற்கு முன் உங்கள் குடும்ப ஜோதி டரின் அறிவுரையின் பெயரில் உரி ய பரிகாரம் செய்வது மிகச் சிறந்த பல னைக் கொடுக்கும்.

செவ்வாய் தோசத்தின் சில விதிவிலக்குகள்

1. குருவுடன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்ட செவ்வாய் தோசமில் லை.

2. மேஷம் ,விருச்சிகம் ,மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந் தால் தோசமில்லை.

3. சூரியன், சனி, இராகு, கேதுகளு டன் சேர்ந்த செவ்வாய் தோசமில் லை.

இது மூட நம்பிக்கையே!

தமிழர்களது வீடுகளில் சாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமண ம் நடைபெறுவதில்லை. இது எழு தாத சட்டம். கல்வி, செல்வம், குடி ப்பிறப்பு போன்ற பொருத்தங்கள் மணம் பேசப்படும் ஆணுக்கும் பெ ண்ணுக்கும் இருந்தும் சாதகம் பொருந்தி வரவில்லை என்றால் அந் தத் திருமணப் பேச்சு நின்றுவிடுகிறது.
*
கல்லாதார் மட்டுமல்ல கற்றவர்களும் இந்த மூடநம்பிக்கைக்கு அடி மையாகியுள்ளார்கள். தங்கள் மூளைக்கு விலங்கு பூட்டி வைத்திரு க்கிறார்கள். உலகில் பிறக்கின்ற கோடான கோடி மனிதர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரி யாகக் கணித்துப் பலன் சொல்ல முடியும் என்கிறது சோதிடம். இது அறிவி யல் அடிப்படையில் சாத்தியமா?

பொருத்தம் பார்த்து, மங்களகரமா ன நாள், நட்சத்திரம், இலக்கினம் பார்த்து திருமணம் செய்தோர் ஓ கோ என்று வாழ்கிறார்கள் என்றா ல் அதுவும் இல்லை. பொருத்தம் பார்த்து ‘சுபயோக சுபமுகூர்த்தம்” பார்த்துச் செய்த திருமணங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. சோதிடர் வீட்டுப் பெண்களே திருமணம் ஆகி ஓராண்டு முடியு முன் னர் தாலி இழந்து கைம்பெண்ணாக வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். பொருத்தம் பார்த்துச் செய்தவர்கள் குழந்தைகள் இல்லாது இருக்கி றார்கள். சிலர் பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் மணமுறிவு செய்து                          கொள்கிறார்கள். ஆனானப்பட்ட வசிட்டர் பார்த்து சுபயோக சுப முகூர்த் தத்தில் நிச்சயித்த இராமனது முடிசூட்டு விழா தடைபட்டுப் போய் விட்டது. தடைபட்டதும் அல்லாமல் இராமன் 14 ஆண்டுகள் காடேக நேர்ந்தது!

திருமணப் பொருத்தம் மட்டுமல்ல, வீட்டில் குழந்தை பிறந்து விட்டா லோ, தொழில் நொடிந்து விட்டாலோ, நோய்வந்து பாயில் படுக்க நேரிட்டா லோ, வேலை போய் விட் டாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே சாதகத்தைக் கை யில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகி றார்கள். சோதிடர் சொல் வது போல் நடக்க வில் லையென்றால் சரியாகச் சாதகம் கணிக்கப்படவில்லை, எதுவும் விதிப்படித்தான் நடக்கும் இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியம் அல்லது தோசத்தால் இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறிச் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கிறார் கள்!

இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்ற ஆசையே சோதி டத்தைப் பற்றியும் வானியல் பற்றியும் படிக்க என்னைத் தூண்டியது. அதன் பயனாகவே சோதிடப் புரட்டு என்ற நூலை எழுதினேன். ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு மாறாக நம்புவது மூடநம்பிக்கை என்பது எனது எண்ணமாகும்.

தமிழில் சோதிடத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்து எழுதப்பட்ட ஒரு முழு நூல் சோதிடப் புரட்டு ஆகும். அதில் சோதிட நம்பிக்கைக்கு எந்த அடிப்படையும் கிடையாது என்ப தை பல சான்றுகள் மூலம் நிறு வி இருக்கிறேன். அந்த நூலை மறுத்து எந்தச் சோதிடரும் இது கால வரை எதையும் எழுதவில்லை. இப்போது அறிவியல் கண் ணோட்டத்தில் இந்தப் பேரண்டம், அண்டம், கோள்கள் (கிரகங்கள்) விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். அறிவியல் என்பது எதையும் காரண காரிய அளவைகளைக் கொண் டு ஆராய்வது. இதற்குத் தொடக்கமும் முடிவும் தேவை.அறிவியல் முறைமை அய்ந்து படிகளைக் கொண்டதாகும்.

1) ஒரு நிகழ்வை அல்லது நிகழ்வுக ளைக் கூர்ந்து அவதானித்துப் பெறப்ப டும் தரவுகளைத் துல்லியத்தோடும் (accuracy)  மெய்மை யோடும் (obje ctivity)  அளவியல் அடிப்படை யோ டும் (logical) வரை ப்படுத்தல்.

2) ஒரு நிகழ்வை விளக்குவதற்கு ஒரு புனைகோளை (hypothesis) உருவாக் குதல்.

3) இயற்பியலில் புனைகோள் கணித அடிப்படையில் அமைக்கப்படும்.

4) புனைகோளைப் பயன்படுத்தி நிகழ்வை எதிர்வுகூறல்.

5) எதிர்வுகூறலைச் சுதந்திரமான தனித்தனி சோதனை மூலம் சரி பிழை பார்த்தல்.

இயற்கை சார்ந்து காணப்படும் (படைக்கப்பட்ட) அனைத்தையும் உள்ளடக்குவதே பேரண்டம் எனப்படுகிறது. விண்வெளி முதல் புவி யில் காணப்படும் அனைத்தையும் இத ற்குள் அடக்கிவிடப்படுகிறது. பேரண் டம் பிரபஞ்சம் என வடமொழியிலும் Universe என ஆங்கிலத்திலும் குறிக் கப்படுகிறது.

கோடிக்கணக்கான விண்மீன்களின் ஒரு தொகுதிதான் அண்டம் (Galaxy) எனப்படுகிறது. நமது ஞாயிறு போன் று அண்ணளவாக 400 பில்லியன் (40,000 கோடி) நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டத்தைத்தான் பால் வழி அண்டம் அல்லது பால் வீதி அண்டம் (Milky Way Galaxy)  என்று குறிப்பிடுகின்றோம். விண்மீன் கூட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றுபோல் சுழன்று வரும் எமது பால்மண்டலப் பகுதியில் எமது ஞாயிறு குடும்பம் (Solar System)  ஒரு ஓரத்தில் காணப்படுகிறது. ஞாயிறைச் சுற்றி நமது புவி உட்பட 9 கோள்கள் வலம் வருகின்றன. இவை விண் பொருள்கள் (Heavenly Bodies) எனப்படுகிறது.  இவ்வாறான அண்டங்களின் அனைத்து ஒட்டு மொ த்த கூட்டமைப்புத்தான் பேரண்டம்!

பூமி வினாடிக்கு 30 கிமீ வேகத்திலும் சூரி யன் வினாடிக்கு 250 கிமீ வேகத்திலும் பால் வழி மண்டலம் சூரிய க்குடும்பத்துடன் சேர்ந் து வினாடிக்குத் தோ ராயமாக 390 கிமீ வே கத்திலும் அண்டவெ ளியில் நகர்ந்து கொ ண்டே செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் அண்ணளவாக 480 கிமீ வே கத்தில் பேரண்ட வெளியில் பயணிக்கிறோம். ஒரு மணி நேரத்தில் 8,04,500 கிமீ தொலைவைக் கடக்கிறோம். எதுவுமே கீழே விழா மல் மைய அழுத்தமும் ஈர்ப்பு விசையும் பார்த்துக் கொள்கின்றன.

இப்போது சோதிடத்தின் அடிப்படை பற்றியும் சாதகம் எப்படிக் கணிக்க ப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வா னில் காணப்படும் 9 கோள்கள், 12 இராசிகள், 12 வீடுகள், 27 நட்சத்தி ரங்கள் ஆகியவற்றின் இருப்பை வை த்தே சாதகம் கணிக்கப்படுகிறது.

9 கோள்கள்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. இராகு மற்றும் கேது ஆகியன கோள்களா கும். இதில் ஞாயிறு ஒரு கோள் அல்ல. அது ஒரு விண்மீன். திங்கள் கோளல்ல அது ஒரு துணைக்கோள். மேலும் பூமியைச் சுற்றியே கோள்கள் வலம் வருவதாக சோதிடம் சொல்கிறது. பூமி ஒரு கோள் என்பது தெரியாததே இந்த குருட்டு நம்பிக்கைக்குக் காரணமாகும். இராகு, கேது நிழல் கோள்கள். நெப்தியூன் மற்றும் யூறேனியஸ் கண்ணுக்குத் தெரி யாததால் சோதிடர்கள் அதை விட்டுவிட் டார்கள். சோதிடம் சில கோள்களை பகை க் (சத்துரு) கிரகங்களாகவும் சில கோள்க ளை நட்புக் (மித்துரு) கிரகங்களாகவும் சித்தரிக்கிறது. கோள்கள் பால் அடிப்படை யில் ஆண், பெண், அலி என்றும் வருண அடிப்படையில் பிராமண. சத்திரிய, வைசி ய, சூத்திர எனப்பிரிக்கிறது. கோள்களுக்கு குறைந்த, மத்திம, அதிக பலம் படைத்த பார்வை இருப்பதாகவும் சொல்கிறது. கோ ள்கள் சில இராசிகள் நீச்சம் பெறுவதா கவும் சில இராசிகள் உச்சம் பெறுவதா கவும் கூறுகிறது. இவற்றுக்கு எந்த அடிப்ப டையும் இல்லை. இவை நாகரிகம் அடையாத மனிதனது கற்பனை களே!

12 இராசிகள்

இராசிகள் என்பது விண்மீன் கூட்டங்களே! சோதிட சாத்திரம் புவி யை மையமாகக் கொண்ட முறைமை (Geocentric) ஒன்றையே பய ன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (Zodiac) எனப்படும். ஞாயிற் றின் தோற்றப்பாதைக்கு (உண்மையில் இது புவியின் சுற்றுப்பாதை) (Ecliptic) இருபுறமும் 9 பாகை அ ளவு விரிந்துள்ள வட்டப்பட்டி போ ன்ற ஒரு பகுதியாகும். இது கண் ணுக்கு புலப்படாத ஒரு கற்பனை யான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30பாகை களைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேட இராசி தொடக்கம் மீன இராசி இறுதியாக ஒவ்வொரு இராசி வீட்டிற்கும் ஒவ் வொரு பெயர் சூட்டி, அப்பெயருக் கான சின்னத்தையும் அத்தகைய இராசி வீட்டிற்கு அளித்துள்ளனர். இப்படிப் பிரிப்பதற்கு எந்த அறிவி யல் அடிப்படையும் இல்லை. வானியலாளர்கள் 13 இராசிகள் இருப் பதாகவும் அவற்றில் குறைந்தது 7 பாகை (விருச்சிகம்) கூடியது 45 பாகை (கன்னி) இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். எந்த இராசியு ம் சரியாக 30 பாகை கொண்டிருக்கவில்லை.

இந்த இராசிகளின் தோற்றம் செயற்கையானது. சிம்ம இராசி; 13 நட்சத்திரங்களைச் சேர்த்த போது சிங்கத்தின் உருவத்தைத் தோற்றுவிக்கும். அந்த சிங்கத்தி ன் தலை, விண்மீன்களைப் புள் ளிகளாக்கி இணைக்கும் போது அவை ஒரு தோற்றம் பெறுகின் றன.

சோதிடர்கள் இந்த இராசி மற்று ம் நட்சத்திரங்களின் செயற்கை யான தோற்றத்தை வைத்து அவ ற்றின் குணாம்சங்களை அந்தந்த இராசிக்கும் நட்சத்திரத்துக்கும் மாடேற்றி விடுகிறார்கள். இதனால் விருச்சிக இராசியில் பிறந்த வர்கள் தேள் போல் கொட்டுவார்கள் என்றும் சிம்ம இராசியில் பிறந் தவர்கள் யாருக்கும் தலை வணங்காத பேர்வளிகளாக இருப்பார்கள் என்றும் மனம் போன போக்கில் எழுதி வைத்துள்ளார்கள்!

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இராசிகள் (விண்மீன்கள); இப்பொழுது இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது! காரணம் பல ஒளி ஆண்டுகளுக்கு முன் னர் புறப்பட்ட ஒளியைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்! சிம்ம இராசி 78 ஒளி ஆண்டு, கன்னி இராசி 263 ஒளி ஆண்டு, மிதுன இராசி 2,700 ஒளி ஆண்டு, கும்ப இராசி 37,500 ஒளி ஆண்டு என கற்பனை செய்யமுடியாத தொலைவில் இருக்கின்றன.

27 நட்சத்திரங்கள்

நட்சத்திரங்களும் பெயருக்கு ஏற்ப நட்ச த்திரங்களின் கூட்டமே. அசுவினி நட்சத் திரம் இராசி வட்டத்தின் முதல் இராசியான மேடத்திலும் இரேவதி நட்சத்திரம் கடைசி இராசியான மீனத்திலும் அமைகின்றன. இராசிக ளைப் போலவே நட்சத்திரங்களுக்கும் அதன் செயற்கைத் தோற்ற த்தை வைத்தே பெயர் இட்டார்கள். அசுவினி நட்சத்திரக் கூட்டத்தில் மூன்று நட்சத்திரங்கள் கூடி குதிரையின் முகத்தைத் தோற்றுவிக் கிறது எனக் கருதினர். மூன்று நட்ச த்திரங்கள் அடங்கிய மிருக சீரிடம் மானின் தலையைத் தோற்றுவிப்பதா கவும் அய்ந்து நட்சத்திரங்களைக் கொண்ட புனர் பூசம் வில் போன்று தோன்றுவதாகவும் அவர்கள் கருதி னர்.

வீடுகள்

வீடுகள் கற்பனையே. ஒருநாளில் சூரியன் 12 இலக்கி;னங்களை கடக் கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த இலக்னத்தை கடந்து கொண்டு இருக்கிறதோ அது ஜெனன இலக்கினம் ஆகும். இராசிச் சக்கரத்தில் இதுவே முதல் வீடு ஆகும்.

பிறப்புக் காலத்தில், சந்திரன் நின்ற இராசி வீடே உடல் இலக்கினம் என்று சொல்லப்படுகிற ஜெனன இராசி ஆகும். சந்திரன் நின்ற நட் சத்திரமே ஜெனன நட்சத்திரம் ஆகும். சோதிடர்கள் ஜெனன இரா சியைக் கொண்டே வாழ்நாள் முழுவதும் ஒருவரது இராசி பலன்க ளைக் கோசார முறையில் கண்ட றியலாம் எனச் சொல்கிறார்கள். கோசார முறை என்பது சாதகத்தில் உள்ள கோள் நிலையையும் சாதகம் பார்த்துப் பலன் சொல்லும் பொழுது ள்ள கோள்நிலையையும் சேர்த்துச் சொல்லப்படும் பலனாகும்.

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கிரகங்கள், இராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் இருக்கைகள் அந்தக் குழந்தை யின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்று சோதிடர்கள் சொல்கி றார்கள்.

பிறப்பு என்பது ஒரு வினாடியில் நடைபெறுவதில்லை. அது ஒரு செய்முறை (process) ஆகும். இப்போது எல்லாம் மருத்துவம் ஒரு குழந்தையை முன்தள்ளியோ அல்லது பின்தள்ளியோ பிறக்க வழி கண்டுபிடித்துள்ளது. சோ திடத்தை நம்பும் சில மூட ர்கள் பிறப்பை முன் பின் தள்ளுகிறார்கள். சோதிட ர்கள் 4 நிமிட நேர வேறு பாடு இருந்தாலே சாதகக் கணிப்பு பிழைத்து விடும் என்கிறார்கள்.

மேலும் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள், நட்சத்திரங் களின் கதிர் வீச்சு மற் றும் ஈர்ப்புவிசை குழந்தையில் படிந்து விடு கிறது என்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையைச் சுற்றி நிற்கும் மருத்துவர் (06), மரு த்துவமனை (500) தாய் (20); இவர்களது ஈர்ப்பு விசையின் பெறுமதி செவ்வாய்க் கிரகத்தை (1) விடப் பல மடங்கு அதிகமானது.

சாதகம் சரிவரக் கணிக்கப்பட்டது என்று ஒரு கதைக்கு வைத்தாலும் 9 கோள்கள், 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 வீடுகள் ஆகியவற் றை மாற்றியமைத்தல் மற்று ம் கணித்தல் (Permutation and combination) முறையி ல் பலன் சொல்வது இமால யச் சிக்கலாகும். அதனால் தான் சோதிடர்கள் ஆளுக் கொரு பலன் சொல்கிறார்க ள். பொருத்தம் இல்லை என் று ஒரு சோதிடர் சொன்னால் இன்னொரு சோதிடர் பொரு த்தம் இருக்கிறது என்பார்!

சோதிட சாத்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சா ங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அன்றாட நி லைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் குறிக்கப்ப ட்டிருக்கும். ஆனால் இங்கேயும் சிக்கல் இருக்கிறது.

இலக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதா வது அந்த இலக்கினத் தின் முடிவில் பிறக்கு ம் சாதகக்காரர்களுக் கு இலக்கினம் மாறிவி டும். திருக்கணிதத்தில் கடக இலக்கினம் என்ப து, வாக்கியத்தில் சிம் ம இலக்கினம் என்று மாறிக் காட்சியளிக்கு ம். அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும் வாக்கியத்திற்கும் உள் ள 1 பாகை 57 விநாடிகள் வேறுபாடு ஆகும். இதனால்தான் சிவ ராத்திரி வெள்ளியா? சனியா? என்று சண்டை பிடிக்கிறார்கள்.

செவ்வாய் தோசம் மட்டுமல்ல சனி தோசம், ராகு, கேது தோசம், நாக தோசம், செவ்வாய் தோசம் என்பதெல்லாம் வடி கட்டிய மூட நம்பிக்கையாகும். இவை இளித்தவாயர்களிடம் கிரகபரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கச் சோதிடர்கள் செய்கின்ற தகுடுதத்தமாகும்.

எனவே சாதகத்தை கிழித்துக் குப்பையி ல் போட்டுவிட்டு தொல்காப்பியர் சொல் லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த குடிப் பிறத்தல், ஒழுக்கம், ஆள்வினை, வடிவு, அன்பு, நிறைவு, அகவை, அருள், உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் அறிவுடமை அல்ல து நுண்ணறிவு மற்றும் செல்வம் ஆகிய பொருந்தங்கள் இருந்தால் தாராளமாகத் திருமணம் செய்து வையுங்கள். (நக்கீரன் எழுதிய சோதிடப் புரட்டு நூலில் இருந்து)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply