மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

killing 3

லண்டன் சுவாமிநாதன்
13 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை

மாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.

1)“தர்ம அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.

2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).

3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை!!
150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் (?? !!) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

புராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.

மஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை!!!

படுகொலைப் பட்டியல்:—

1)அத்தியாயம் 4

பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
உதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.
முண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.

மக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே!” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.
அவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.

அப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).

killing 2

2) அத்தியாயம் 5
பிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.
(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை!! ))

3) அத்தியாயம் 7
விஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.

4) அத்தியாயம் 9
இளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.

5) அத்தியாயம் 10
இளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.

killing 1

தமிழர் படுகொலைகள்

6)அத்தியாயம் 33
தளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.
பாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.
படைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.
பணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.
தாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
இந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.

தனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்
கபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்

7) அத்தியாயம் 34

ராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.
அடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.
பின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.
அந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.

8) அத்தியாயம் 35

இலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்!!
தீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.
சுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று!!

வசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.

9) அத்தியாயம் 36:
குஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.
அபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
மூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.
அவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.

ஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.

10) அத்தியாயம் 37
மகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.

போரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.

அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்


“மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”

????????????????????????

லண்டன் சுவாமிநாதன்
12 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா? என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.

மகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.

மகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.

அற்புதச் செய்தி 1
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.

srilanka landing

அற்புதச் செய்தி 2
தேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்பி முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள்! பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல!!

அற்புதச் செய்தி 3
மகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.

அற்புதச் செய்தி 4
புத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.

அற்புதச் செய்தி 5
17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.

sl stamps2

அற்புதச் செய்தி 6
19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.

அற்புதச் செய்தி 7
12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.

இதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.

gem sl
gem2

அற்புதச் செய்தி 8
28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.

தமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.

sl stamp3

அற்புதச் செய்தி 9
12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது!

அற்புதச் செய்தி 10
36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.

???????????????

இது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க!!


Why did Asoka kill his 99 brothers?

killing 1

Research Paper written by London swaminathan
Post 1282: dated 11th September 2014.

There were two Asokas in India. One was Black Asoka (Kalasoka) who was good and convened the Second Buddhist Council. The other one was world famous Indian emperor Dharma Asoka who was full of Adharma in his early life. Mysteries in Indian history are not solved yet. Nobody knew who the Black Asoka was! Nobody knew that the famous Asoka killed all his 99 brothers and cousins born to different mothers. Mahavamsa never mentioned the Kalinga War!!

Mahavamsa, the chronicle of Sri Lanka is full of murders and mayhem. It painted a gloomy picture of early Indian kings. Mahavamsa says that Dharma Asoka killed all his 99 brothers!

There is lot of confusion in Buddhist, Jain and Hindu versions of Indian history. “scholars” from foreign countries did not accept Hindu History narrated in the Puranas. If they had accepted it, it would have contradicted the story told by the Christians that the world was created in October, 4004 BCE. Moreover they were afraid of ex communication from the church or blinding or execution like Galileo and Copernicus. Millions of women including the most famous Joan of Arc were burnt alive for worshipping pagan gods or following pagan beliefs. The women were dubbed as witches.

But foreigners accepted the Buddhist history because they thought Buddhism as a rebellion against Vedic Hindus, which is not true. One must read the Introduction to Dhammapada by philosopher Dr Radhakrishnan. Buddhist and Jain versions were also as confusing as Hindu Puranas. But the “scholars” compromised with the dates and rejected Kalasoka and other conflicting matters. About Jains they were least bothered. Since they were not in any other country except India at that time, they did not matter to them. Moreover they couldn’t digest the strict non violence and vegetarianism of the Jains. All the foreign “scholars” were beef eaters and (whisky) drinkers. This and their belief in the Biblical date of World creation greatly influenced their angled, biased, crooked, distorted, jaundiced, one sided and perverted thinking and dating.
Mahavamsa gives us a long list of murders, yet to be confirmed by a secondary source in history. Following is the list of murders and mayhem:
killing 2

Murder mysteries in Mahavamsa:

Mahavamsa Chapter-4:
Bimbisara’s son Ajatasatru slew (killed) his father.

Mahavamsa Chapter-4:
Ajatasatru’s son Udayabhaddaka slew his father.
Udayabhaddaka’s son Aniruddha slew his father
Aniruddha’s son Munda slew his father
Munda’s son Nagadasaka slew his father
People became angry about these patricides and banished Nagadasaka and appointed Sisunaga as the king.
His son Kalasoka ruled for 28 years.
Who is this Kalasoka who ruled for 28 long years?
No mention about this king Indian history books written 150 years ago by the British, still studied by the stupid Indians!!!

Mahavamsa Chapter-5:
Asoka, son of Bindusara, slew 99 brothers born of different mothers and won the sovereignty of Jambudvipa (India).
No mention of the Kalinga War which made Asoka to convert to Buddhism!!

Mahavamsa Chapter-7:
Vijaya’s first wife Kuvanna was killed by Yakshas (when he sent her out of the palace after marrying a Tamil Pandya girl).

killing 3
Mahavamsa Chapter-9:
Princes killed slave Kalavela and herdsman Citta.

Mahavamsa Chapter-10

The prince’s men killed all the soldiers of enemy and the eight uncles with them and they raised a pyramid of skulls.

Mahavamsa Chapter-34
Queen Anula married city carpenter Vaduka and killed him by poison after falling in love with a wood-cutter.
She killed wood- cutter Tissa by poison and married Niliya.
She poisoned Brahmin Niliya and ruled the country for 4 months.
Later Kutakanna Tissa killed Anula in a battle.

Mahavamsa Chapter-35

Kanirajanu Tissa slew his brother and reigned for three years.
Having slain his brother in the festival sports at the Tissa tank his younger brother Yassalakatissa ruled for 7 years.
Subha the guard ordered to slain the king and reigned for 6 years.

Mahavamsa Chapter-36
Three Lambakarnas killed king Vijayan and one of them, Samghatissa ruled for 4 years.
He was killed by poisoned fruits. People who hated him mixed the poison.
King Jethatissa killed all the treacherous ministers in his father’s funeral procession. He was behind the procession allowing his brother to take the body out of the gate of the palace. As soon as the body passed the gate, he ordered the gate to be closed and killed all the ministers and impaled their bodies around his father’s pyre.

Mahavamsa Chapter-37:
The last chapter of Mahavamsa ended with the killing of a thera. One of the wives of Mahasena was sad about the destruction of a Mahavihara. He asked one labourer to finish off the thera. Samghamitra and a lawless minister Sona were killed while they were coming to destroy Thuparama.

Mahavamsa, has lot of murders and killings from the beginning to the end apart from the lawful killings in the battles. I have not included the war deaths because they are considered lawful from the ancient days till today.
Contact swami_48@yahoo.com

மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள்

soothsayer-1a

லண்டன் சுவாமிநாதன்
11 செப்டம்பர் 2014

மகாவம்சம் என்றால் என்ன?

இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இந்நூல்   இயம்புகிறது.

காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.

அக்கால சோதிட, ஆரூட நம்பிக்கைகளைச் சுருக்கித் தருகிறேன்.

சங்க காலத் தமிழரின் ஜோதிட நம்பிக்கைகள், கிளி ஜோதிடம் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். மஹாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆருடக்காரர்கள் எப்படி அதைச் சொன்னார்கள் என்று எழுதப்படவில்லை. குஷ்டரோகிகளும் குருடர்களும் கூட ஆரூடம் சொன்னதை அது எடுத்துரைக்கிறது. ஒருவேளை உள்ளுணர்வால் (இன் ட்யூஷன்) அல்லது சாமுத்ரிகா லட்சணத்தால் இப்படிச் சொல்லி இருக்கலாம். இந்தியாவில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்துக்கூட மந்திரி ஆவாய், அரசன் ஆவாய் என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

adilabad kili
ஆரூடம் 1

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் என்பது பத்தாவது அத்தியாயத்தின் பெயர். அவனைக் கொல்ல பல சதிகள் நடந்ததால் ஒளிந்துவாழ வேண்டிய நிலை. அப்போது பண்டுலா என்னும் பணக்கார, வேதம் கற்ற பிராமணன் அவனைச் சந்தித்து நீ தான் பாண்டு அபயனா என்று கேட்கிறார். அவன் ஆம் என்றவுடன் நீ அரசன் ஆகப் போகிறாய், எழுபது ஆண்டுகள் அரசாட்சி புரிவாய். இப்போதே ராஜ தர்மங்களைக் கற்றுக் கொள் என்கிறார். அவனும் அவருடைய மகன் சந்தனும் அவருக்கு அரசாளும் கலையைக் கற்றுத் தருகின்றனர்.

இதில் வேறு சில உண்மைகளையும் உய்த்தறியலாம். 2600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஒரு கிராமத்தில்கூட வேதம் கற்ற பிராமணன் இருந்தான். அவன் பணக்காரன். அவன் முக்காலமும் உணர வல்லவன். அவன் மாற்றானுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்தான். அவனும் அவன் மகனும் போர்க்கலையிலும் ராஜ தந்திரத்திலும் வல்லவர்கள்.
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன நாம் எல்லோரும் அறிவோம்

மஹாபாரத காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் தான் பாண்டவ ,கௌரவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் எனபது நமக்குத் தெரிந்த விஷயமே. இலங்கையில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கற்றறிந்த பிரமணன் இருந்தான் என்றால் தமிழ்நாடு என்ன சளைத்ததா?

ஒல்காப்புகழ் தொல்காப்பியனுக்கே, நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தான் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தார். அவருக்கு முன்னால் அகத்தியன் என்னும் வேதியன் என்பான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.

1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் (பாரதியார் பாடல்)

ஆரூடம் 2

மகாவிகாரை என்னும் 15-ஆவது அத்தியாயத்தில் மன்னனிடம் தேரர் கூறுகிறார்: உன்னுடைய சகோதரன் மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயகதீசன் இனிமேல் அரசன் ஆவான். அவன் மகன் கோத அபயன், அவன் மகன் காகவனதீசன், அவன் மகன் அபயன் ஆகியோர் அடுத்தடுத்து அரசன் ஆவர். அபயன் என்பவன் துட்டகாமனி என்னும் பெயருடன் புகழ்பெற்று விளங்குவான் என்பது ஆருடம்.

புண்ய புருஷர்கள், சாது சந்யாசிகள் ஆகியோர், எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. மக்கள் அவர்கள் சொல்வதை நம்பினர் என்பதை மஹாவம்ச சரிதம் காட்டுகிறது. இது போன்ற விஷயங்கள் பவிஷ்ய புராணத்திலும் இருக்கிறது.

Congress Yagna

Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi doing Yagas as instructed by their astrologers. Individually they won the elections, but their party failed miserably!

ஆரூடம் 3

12 அரசர்கள் என்ற 35-ஆவது அத்தியாயத்தில் வசபன் என்ற லம்பகர்ணன் அரசன் ஆவான் என்று ஒரு ஆருடம் இருந்தது. அவனைப் பார்த்த ஒரு குஷ்டரோகியும் கூட இதை அவனிடம் சொல்கிறான். முன்னரே வசபன் என்ற பெயருள்ளவன் அரசன் ஆவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயர்கொண்ட எல்லா வாலிபர்களியும் தீர்த்துக் கட்டினான் மன்னன். அப்படியும் ஆருடப் படியே ஒரு வசபன் அரசன் ஆனான். உடனே தனது ஆயுட்காலம் பற்றி ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். அவன் இவனுக்கு 12 வருடமே ஆயுள் என்றவுடன் புத்தமத தேரர்களைச் சந்தித்து ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிகிறான். அதன்படி தான தருமங்களைச் செய்கிறான்.

ஆரூடம் 4

13 அரசர்கள் என்ற 36-ஆவது அத்தியாயத்தில் ஒரு அந்தகன் ஆரூடம் சொன்ன அதிசய சம்பவம் வருகிறது. சங்கதீசன், சங்கபோதி, கோதகாபயன் என்ற மூன்று லம்பகர்ணர்கள் நடந்துவரும் காலடி சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கண்பார்வையற்ற ஆள், மூன்று மன்னர்களை இந்த மண் தாங்கிநிற்கிறது என்றான். அவர்கள் மூவரும் விஜயகுமரன் என்ற அரசனிடம் சேவகம் செய்து பின்னர் அவனைக் கொன்றுவிடுகின்றனர். சங்கதீசன் என்ற லம்பகர்ணனை மற்ற இருவரும் சேர்ந்து முடி சூட்டுகின்றனர்.

இந்த சம்பவங்கள் அக்காலத்தில் ஜோதிடர்கள் இருந்ததையும் அவர்களை மன்னர்கள் அல்லது எதிர்கால மன்னர்கள் கலந்தாலோசித்தனர் என்பதையும் காட்டுகின்றன.

அடுத்தாற்போல “மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”, “மகாவம்சத்தில் படுகொலைகள்”, “மகாவம்சத்தில் தமிழ் வரலாற்றுச் செய்திகள்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும்.

(கட்டுரைக்கு உதவிய மூல நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சென்னை, 1962)

Miracles in Mahavamsa!

????????????????????????

London swaminathan
Post No. 1280; dated 10th September 2014.

Mahavamsa Research article No-2. Yesterday I posted “Astrology in Mahavamsa”.

There are lot of miraculous anecdotes in the Mahavamsa as any old book would have. Some of the stories have remarkable coincidence with Sangam Tamil Period anecdotes. Stories resembling Manuneethi Choza and Kumanan episodes of Sangam age are in the book. Buddha’s miracles in Sri Lanka are also reported in the book. If we get rid of the miracle portion of those stories, we can get some historical information.

What is Mahavamsa?

Mahavamsa is a book in Pali language narrating the history of Kings of Sri Lanka. It gives a continuous history from the date Vijayan from Bengal ( India ) landed in Sri Lanka. It covers the period between 543 BCE and 361 CE. The book was called Mahavamsa following the Raguvamsa of Kalidasa in which Kalidasa gives history of solar race that ruled Northern India. Mahavamsa means Great Dynasty or Great Chronicle.

Miracle 1
In the chapter 10 on consecration of Pandu abhayan, we hear about a miracle of banyan leaves changing into gold cups. Later the princess was called Swarnapali (Swarna means god). We have similar stories in Mahabaharta. Whoever donates food can change something into gold. Half of A mongoose changes into gold by rolling on the leftover food of a poor charitable family.

srilanka landing

Miracle 2
In chapter 11 on King Devanampiya Tissa, we hear about miracles of gemstones coming out of earth on its own. Eight types of pearls were heaped on sea shores. He decided to send them as gifts to his friend, the great king of India, Asoka. But they had never met until then. It is similar to Tamil king Kopperunchoza and poet Pisiranthaiyar who became great friends without meeting.

Miracle 3
A few “earth quake miracles” are in Mahavamsa. In Chapter 15 on The acceptance of the Mahavihara, when the king donated the Mahamegha park area to the Buddhist brotherhood, the earth shook. The king asked the (thera) Guru why the earth quaked, and he said, “Because the doctrine is founded in the island”. When the thera scattered the jasmine flowers given by the king, again the earth shook. Now the thera gave another explanation about the Bhodi tree getting rooted in the island.

sl stamps2

Miracle 4
A lot of miracles are about Buddha or his disciples travelling through sky and landing like air planes. We hear about such stories in the Hindu Puranas. Narada is one of the space travellers. He is an interplanetary and inter galactic traveller according to Hindu mythology. This type of miracle is found throughout Mahavamsa.(Eg.Chapter 14)

Miracle 5
In Chapter 17- The Arrival of the Relics, the urn containing Buddha’s bones and ashes rose in the air from the back of an elephant to the amazement of the king and the people.

Miracle 6
In the chapter 19- The Coming of the Bodhi Tree, the tree rose into air 80 cubits high and was floating and sending forth six colour rays. When it landed the earth shook. Though Hindus wore worshipping trees from time immemorial, Sri Lankan Buddhists took the tree worship to new heights. It was worshipped, decorated, taken into processions and temples were built over them.

sl4

Miracle 7
In the chapter 28 on building a Thupa, we hear about iguana miracle. Hindus have similar stories in most of the temples: some animals or birds worshipping or indicating the divinity or sanctity of the place. Here an angel appeared in the form of an iguana and led the hunters to a brick kiln. He immediately informed the king about bricks in the middle of the forest which can be utilised for building a Stupa. Later different types of precious metals and gem stones appeared everywhere. People gathered them and presented them to the king.

???????????????
Miracle 8
I have already reported Elephant Miracles from Indian literature separately. We have such reports in Mahavamsa as well. One of them is in chapter 35- Twelve Kings. A servant maid takes a child to an elephant to be beheaded by the elephant. When she said to the elephant that the queen has sent the child for beheading, the elephant cried and went to the prison where the king was imprisoned. It broke open the prison gates and took the king on its back and helped him to cross the river. He came back after three years with a big army and won his territory back and the same elephant was made the royal elephant.
Tamil literature is full of elephant miracles:
a)Tamil saint Murthy Nayanar was crowned as a king by an elephant
b)Famous Tamil king Karikalan was made a king by an elephant.
c)Mighty king Mahendra Pallava sent an elephant to behead saint Appar, but it refused to kill him.
d)Tamil Choza king ordered beheading of a child, but a bold poet stopped it
e)An elephant stopped grazing the crops and listened to a Tamil girl’s song.
f)Kanchi Paramacharya made one hesitant elephant to be on its track again.
g)U.Ve.Swaminatha Iyer, Doyen of Tamil literature, also gave a similar story about a crying elephant in his essays.
h)The elephant name Asvattama changed the course of the Mahabharata war.
i)Kalidasa gives information about elephant bridge for the army.
j)Hannibal took the first elephant to Europe.
k)Hindus lost war because of cats scaring the elephants in North West Frontier.
l)Pallavas had a mysterious elephant crown like an Indo-Greek king.
m)Tiruvanaikaval Temple is based on a spider and elephant story.
n)Gajendra Moksha story happened again in African jungle
o)Buddha tamed elephant Nalagiri
p)Udayana and Kovalan tamed elephants.
q)Hindu temples and religious Mutts do Gaja Puja (Elephant worship) every day.

I have posted all the proverbs and anecdotes about elephants in my earlier posts. So Mahavamsa story is not uncommon.

sl stamp3

Miracle 9
I have reported all the Rain Miracles separately. We have a similar rain miracle in Chapter 36- Thirteen Kings. King Sangabhodi made a vow to bring rain to drought affected areas. He went into Maha Vihara (Buddhist temple) and lied in the corridor. Until the Devas (angels) bring rains to my land I woudn’t budge an inch. I will die here if there is no rain, he said. Immediately there was copious rain which was brought by the Devas.

There are a lot of miracles about Buddha’s visit to the island in The Mahavamsa.

contact swami_48@yahoo.com


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply