இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு கூட்டம் ; முழுவிபரம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு கூட்டம்  முழுவிபரம்

 2017-11-15

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்றார்

இந்தக் கூட்­டத்தில் இடைக்­கால அறிக்கை குறித்தும், உள்­ளு­ராட்சி தேர்­தலை எதிர்­கொள்­வது குறித்தும் விரி­வாக ஆராய்ந்து முடி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூட்டம் முடி­வ­டைந்­ததன் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்குக் கருத்து வெளி­யிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தில்லை என ஈபி­ஆர்­எல்எவ் கட்சி அறி­வித்­துள்­ள­போ­திலும், அது குறித்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு இன்னும் தகவல் கிடைக்­கில்லை என கேள்­வி­யொன்­றுக்குப் பதி­ல­ளித்த தலைவர் இரா.சமப்ந்தன் அவ்­வாறு ஒரு தகவல் கிடைத்தால், அது­பற்றி பரி­சீ­லித்து, கருத்து தெரி­விக்­கப்­படும் என கூறினார்.

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போது சுமந்­திரன் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்கை குழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்கை பற்­றிய விவாதம் நரை­ட­பெற்­றுள்­ளதன் பின்­ன­ணி­யிலே அந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதிலே சொல்­லப்­பட்ட விட­யங்கள் முன்­மொ­ழி­வுகள் எப்­ப­டி­யா­னவை இந்த அறிக்கை என்­ன­மா­தி­ரி­யான அறிக்கை என்­பது பற்றி கலந்து பேசினோம்.

இது ஒரு வரைபு அல்ல. இடைக்­கா­லத்­திலே வெளி­வந்­துள்ள ஓர் அறிக்கை. இது இறு­தி­யிலே வந்த அறிக்­கை­யு­மல்ல. அது சம்­பந்­த­மாக சில சில முன்­மொ­ழி­வுகள் நாட்­டி­னு­டைய சுபாவம் பற்றி, ஆட்சி முறை பற்றி அதி­காரப் பகிர்வைப் பற்றி இதிலே சொல்­லப்­பட்­டுள்ள முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் பல அவ­தா­னிக்­கப்­பட்­டன. சில விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­ப­டா­ம­லி­ருப்­பது என்­பது இந்த அறிக்­கை­யிலே வெளிப்­ப­டை­யாகச் சொல்­லப்­பட்­டுள்­ளது.

உதா­ர­ணத்­திற்கு மாகா­ணங்கள் இணை­வது சம்­பந்­த­மாக இன்னும் கூடு­த­லாகப் பேசப்­பட வேண்டும் என்று தெளி­வாக அதிலே சொல்­லப்­பட்டு மூன்று மாற்றுத் தெரி­வுகள் அதிலே போடப்­பட்­டுள்­ளது. ஆகை­யி­னாலே இந்த இடைக்­கால அறிக்­கைக்குப் பின்னர் வரு­கின்ற வழி­ந­டத்தல் குழு கூட்­டங்­க­ளிலே இன்­னமும் இணங்­காமல் இருக்­கின்ற அல்­லது இணக்கம் காhணப்­பட வேண்­டிய விட­யங்கள் சம்­பந்­த­மாக கட்­சியின் உறுப்­பி­னர்கள் வழி­ந­டத்தல் குழு­விலே என்­ன­மா­தி­ரி­யாக அவற்றைக் கையாள வேண்டும் என்ற யோச­னைகள் பல முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­நே­ரத்­திலே இந்த இடைக்­கால அறிக்­கை­யிலே எங்­க­ளு­டைய கட்­சியின் கொள்­கை­யோடு இணங்­கிய பல முற்­போக்­கான விட­யங்கள் வெளி­வந்­துள்ள போதிலும், இது சரி­யான முறை­யிலே மக்­களைச் சென்­ற­டை­ய­வில்லை என பல உறுப்­பி­னர்­க­ளினால் எடுத்­தி­யம்­பப்­பட்­டது. விசே­ட­மாக கட்­சிக்கு வெளியில் இருந்து வரு­கின்ற விமர்­ச­னங்­களும், ஊட­கங்­க­ளிலே பர­வ­லாகச் சொல்­லப்­ப­டு­கின்ற விமர்­ச­னங்­களும், அதா­வது ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­விட்­டார்கள் என்­பது- ஒரு உதா­ரணம்.

இலங்­கைக்கு ஒற்­றை­யாட்சி பொருத்­த­மற்­றது என்று அறிக்­கை­யிலே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. அப்­படி தெளி­வாகச் சொல்­லப்­பட்­டுள்ள போதிலும், பல விமர்­ச­னங்கள் ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­விட்­டார்கள் என்­ப­தாக இருக்­கின்­றது. அது ஒரு உதா­ரணம். அப்­ப­டி­யான பொய்­யான பரப்­பு­ரை­ய­களை மக்கள் நம்­பாமல் வெளி­வந்­துள்ள அறிக்­கையை சரி­யான விதத்­திலே மக்கள் மத்­தி­யிலே எடுத்­துச்­செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை கட்சி எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்­பி­னர்­களும் கேட்­டுக்­ கொண்­டி­ருக்­கின்­றார்கள். தங்கள் தங்கள் மாவட்­டங்­க­ளுக்கு வந்து இது சம்­பந்­த­மான விழிப்­பு­ணர்வு கூட்­டங்கள் வைக்க வேண்டும் என்று            கேட்­டி­ருக்­கின்­றார்கள்.

ஏற்­க­னவே தொகு­தி­வா­ரி­யாக பல கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இன்­றைய கூட்­டத்­திலே விசே­ட­மாக கிழக்கு மாகா­ணத்­திலே ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு சரி­யான நிலை­மையை விளங்­கப்­ப­டுத்­து­கின்ற கூட்­டங்­களை நாங்கள் ஒழுங்கு செய்­தி­ருக்­கின்றோம்.

அத்­துடன், வரு­கின்ற உள்­ளு­ராட்சி தேர்தல் எவ்­வாறு சந்­திக்­கப்­படப் போகின்­றது என்­பது குறித்து ஆராய்ந்­தி­ருக்­கின்றோம். புதிய தேர்தல் முறை சம்­பந்­த­மாக பல தெளி­வு­ப­டுத்­தல்கள் அவ­சி­ய­மா­கி­யி­ருந்­தது.

ஏற்­க­னவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சிகள் மூன்று யாழ்ப்­பா­ணத்­திலே சந்­தித்து சில முன் நட­வ­டிக்i­கை­கள எடுத்­தி­ருக்­கின்றோம். அதைத் தொடர்ந்து மாவட்­டங்­க­ளிலே சில சந்­திப்­புக்­களை நடத்தி என்ன வித­மான நாங்கள் சேர்ந்து போட்­டி­யி­டு­வது என்று முடி­வுகள் எடுக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அது சம்­பந்­த­மாக ஒவ்­வொரு மாவட்­டத்தில் இருந்தும், அந்த மாவட்­டத்தின் சூழ்­நி­லையை அனு­ச­ரித்து பல கருத்­துக்கள் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றன. இவை எல்­லா­வற்­றையும் ஒன்று சேர்த்து, தமி­ழ­ர­சுக்­கட்­சியின் அர­சியல் குழு அது சம்­பந்­த­மான முடி­வு­களை வருங்­கா­லத்­திலே எடுக்கும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி: தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வது சம்­பந்­த­மாக தமி­ழ­ர­சுக்­கட்சி சர்­வா­தி­காரப் போக்கைக் கடைப்­பி­டிப்­ப­தாக சில பங்­கா­ளிக்­கட்­சிகள் குற்றம் சாட்­டி­யி­ருக்­கின்­றன இதற்கு என்ன சொல்­கி­றீர்கள்?

பதில்: தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இப்­போது 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. பல தேர்­தல்­களை நாங்கள் கூட்­ட­மைப்­பாக சந்­தித்­தி­ருக்­கிறோம். இன்­னு­மொரு கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­ப­டா­ததன் கார­ண­மாக எந்­த­வி­த­மான பின்­வாங்­கல்­களும் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­ப­ட­வில்லை. அது தவிர முத­லிலே ஒரு புரிந்­து­ணர்வு எழு­தப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­பட்டு, படிப்­ப­டி­யாக நாங்கள் முன்­னே­றலாம் என்ற இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. அதற்­கான வரைபும் தயா­ரிக்­கப்­பட்டு ஒவ்­வொரு கட்­சிக்கும் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அது ஒரு­வ­ராலும் இன்னும் செய்­யப்­ப­ட­வில்லை.

ஆனால் இதில் பங்­கா­ளி­க­ளாக இருக்­கின்ற ஒவ்­வொரு கட்­சியும் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சிகள். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வ­தாக இருந்தால் ஐந்­தா­வது கட்­சி­யாகப் பதிவு செய்­வ­தாக இருக்கும். ஆகை­யினால் அது சம்­பந்­த­மாக தமி­ழ­ர­சுக்­கட்­சி­யிடம் இணக்­கப்­பாடு இருக்கவில்லை. பங்காளிக்கட்சிகள் அனைத்தும் இணங்கிளால்தான் இன்னுமொரு புதிய கட்சியை உருவாக்க முடியும்.

ஆனால் அப்படியான மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையாக இதுகால வரையிலும் தேர்தல்களை சந்திப்பது மட்டுமல்ல மக்களுடைய அங்கீகாரத்தை முழுமையாகப் பெறுவதிலே நாங்கள் எந்தவிதமான பின்னடைவையும் காணவில்லை.

கேள்வி: வீட்டுச் சின்னத்தில் ஈபிஆர்எல்எவ் போட்டியிடுவதில்லை என்று கூறியிருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்கள் வெளியில் செல்வதை தமிழரசுக் கட்சி சம்மதிக்கின்றதா?

இந்தக் கேள்விக்கு சம்பந்தன் பதிலளித்தபோது, அவ்விதமான ஒரு தகவலும் ஈபிஆர்எல்எவ் கட்சியினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குக் கிடைக்கவில்லை. அவ்விதமான ஒரு தகவல் கிடைத்தால், அதற்குப் பிறகு அந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பரிசீலித்து, எமது கருத்தைக் கூறுவோம் என தெரிவித்தார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply