தமிழர்களின் “தூக்கத்திலும்” “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக் கொள்கின்றது

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்…” தொடர் பக்கங்கள். முன்னோட்டங்கள்… ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது.

தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்படவும்இல்லை நிரந்தரத்தீர்வும் வரவில்லை… !!! தமிழர்களின் வாக்குகளிலும் முன்னால் புலிகளின் பிரபல்யத்திலும் தம்மை இலங்கை அரசில் அங்கமாக்கிக்கொண்டவர்கள், இப்போர் ஓய்ந்தும்கூட புலிகளின் அதாவது தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தம்குரலைக்கொடுத்தார்களா என்றால், அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தைகள்… அடுத்த பேச்சுக்கள்… இனிவரப்போகும் பேச்சுக்கள்… என்று தேர்தல்களங்கள் கடந்து கொண்டே போகின்றனவொழிய “தீர்வு” அண்மித்ததாகத்தெரியவில்லை. கூட்டமைப்பின் போக்குக்கள் ஒருவகையாக அமையும் போது, மற்றைய கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களின் போக்கு அதற்கு விவாதங்கொடுப்பதோடு நின்று விடுகின்றது.

உதாரணமாக, தற்போதைய அரசியல்வாதிகளும் முன்னாள் போராளிகளுமான அமைச்சர்கள் (பிரதி அமைச்சர்கள் உட்பட) கூட்டமைப்பின் தவறே இன்றைய விடுதலைப்புலிகளின் தோல்வி மற்றும் தமிழர்களின் நிலை… என்ற கூற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்ற போதிலும் தற்போது தமிழர்களுக்கு வேண்டிய எந்த செயற்பாட்டில் அவர்கள் முன்நிற்கின்றார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை!!! இந்த போர்ச்சம்பவங்களை சாதகமாக்கி இந்தியா தனக்குத்தேவையான ஒப்பந்தங்களை இலங்கையின்பால் செய்து முடித்திருக்கின்றது என்பதே உண்மைகள். இந்தியாவின் றோ பிரிவினர் ஒருபுறம் தமிழ் அமைப்புக்களை ஆக்கிரமிப்புச்செய்ய அரசியல் போக்கில் அரசாங்கம் மறுமுணையில் ஆக்கிரமிப்புச் செய்துவருகின்றது. றோபிரிவினர் இன்றுமட்டுமல்ல முன்னைய காலங்களில் இருந்தே பல தமிழ் அமைப்புக்களை பிளவுபடுத்திக் கூத்துப்பார்த்தது என்றால், இப்போதும் அதே போக்கில் தமக்கு ஏற்ப சாதகப்போக்குடையோரை இனங்கண்டு அவர்கள் சுகபோகத்திற்காக தமிழர்களை விலைபோக வைத்துள்ளனர்.

இதில் அவர்களை எப்படி குறைசொல்வது…???? கேட்கிற நமக்கெல்லாவா அறிவு வேலை செய்ய வேண்டும். தமிழர்களின் அரசியல் சாணக்கியம் என்று கூடசந்தேகப்பட முடியவில்லையே எமது தமிழர்களின்போக்கு… இந்தியாவின் போக்கில் அடிப்படைத்திட்டமாக விம்மி நிற்பது எதவென்றால், இலங்கையில் காணப்படுகின்ற “கனிப்பொருள்” எச்சங்களால் இலங்கை ஒருவேளை நிதியில் எதிர்காலத்தில் அதிக செல்வாக்குச் செலுத்தக்கூடுமோ என்ற ஐயப்பாட்டில் இப்போதிருந்தே சீனாவும், இந்தியாவும் இன்னும் சில நாடுகளும் கங்கணம் கட்டிக்கொள்கின்றன. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் முன்னைய காலங்களில் இருந்தே ஆகாதபோதிலும் இலங்கையினை மையமாகவைத்து ஒரு உட்குத்து சமரசம் இணக்கப்பாடு தெரிவது புலனாகின்றது. எனினும் காலங்காலமாக அமேரிக்காவின் இராஜதந்திர நரர்வுகளால் சிதைவுண்ட தேசங்களின் மத்தியில் திடமாக நின்றுவந்த அமேரிக்காவின் உளவுத்துறையும் சரி, அரசியல் போக்குகளும் சரி தற்போது சற்று சிந்திக்கத் தோடங்கியுள்ளது என்றால் அது நடைமுறை உண்மையே!!!

இத்தனைக்கும் ஒரு இனத்தையே “அரசாங்கம்” அழித்தும், வாளாவிருக்கும் உலகத்தின் கண்களில் உள்ள திரைதான் என்ன??? விடுதலைப்புலிகளின் போக்கில், உலகத்தின் பால் போதிய விளக்கமின்மையும் தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையும் என்றால் அது எமது தேசியத்தையே கறைப்படுத்திவிடுமல்லவா?இதுதவிர பல விளக்கங்கள் உலகத்திற்கு எடுத்துரைக்க, எமது தமிழ்த் தலைமைத் துவங்களுக்குத் தேவைப்படுகின்றது. இலங்கை அரசானது கடந்த காலப்போரின் ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் மக்கள்மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், இல்லை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் போரில் அகப்பட்டுள்ளோர் என்பதனைத் தெரிவித்திருந்தமை தொடர்பாக யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அரசானது தனது கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் தொகையினை அறிந்து கௌ;ளமுடியாது இருந்தது என்ற பொய்ப்பிரசாரத்தை செய்யமுடியாது.

காரணம் பிறப்பில் இருந்த அனைவரின் பதிவும் அதற்கொரு ஆதாரம். இந்தவகையில், அரசு தன்னால் ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் அழிவிற்கு, தமிழர்களுக்குமட்டுமே பூதக்கண்ணாடிபோன்று தோற்றத்தைக்காட்டுகின்றது என்றும் மாறாக உலகத்திற்கு குறைக்கப்பட்ட தொகையினையும் தமது அதிகாரத்தைப்பயன்படுத்தி வெளிப்படுத்தி வருகின்றது. இவ்வாறான வெளிப்பாட்டை காட்ட எந்த தமிழ் அதிகாரிகளும் சர்வதேசத்தில் வெளிக்கொணரப்படவில்லையே??? இதன் காரணம் எதுவாகில், இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் தொகையினை மிகச்சொற்பமகக்குவதற்காதகவே, ஆரம்பத்தில் இருந்து குறைந்த தொகையினரே புலிகளின் கட்டுப்பாட்டில் இருபக்பதாக அரசுசார்பில் தெரிவித்தனர். அதன் காரணம் இன்று எமது இரத்தசொந்தங்கள் கிழிபட்டும், மானங்கள் பறிக்கப்பட்டும், வயோதிபர்கள் கர்ப்பிணிப்பெண்கள் என்ற வேறுபாடின்றி மிகக்கொடுரமான ஆயுதங்களாலும், நச்சுவாயுக்களாலும், சிங்களக்காடையராலும் அழிக்கப்பட்டனர் என்பதனை வெளியுலகு தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே போர் உச்ச கட்டம் அடைந்தபோது, பொது அமைப்புக்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது…. இதுபோன்ற விடயங்களை மட்டுமன்றி தமிழர்களின் ஆரம்பகாலத்தையும் சிங்களவர்களின் ஆரம்பகாலத்தை வெளிக்காட்டுவதோடு, திராவிட இனத்திற்கு ஆரிய இனத்தால் ஏற்பட்ட தாக்கங்களையும் வெளிக்காட்டவேண்டிய அல்லது மீட்டுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பத்தில் நாம் நிற்கின்றோம்.

1972ன் காலப்பகுதியில் இருந்தே தமிழ் இனம் ஒன்றின் விம்பத்தை புலிகளின் பெயரால் தீவிரவாத செயற்பாடுகளை ஆதாரங்காட்டி வரலாறுகளாக்க இலங்கை அரசு முயற்சிக்கின்றது. தமிழ் இலக்கியப் போக்கில் இன்றைய நிலையினை எடுத்துக்கொண்டால், எதிர்காலச்சமூகம் ஏராழ இலக்கிய நூல்களை இழந்துகொண்டிருக்கிறதென்பது அப்பட்டமான உண்மை. வாசிப்புத்திறன், எழுத்தார்வம், விமர்சனப்போக்கு என்பன ஒரு குறிப்பிட்ட நபருக்கே உரியதொன்றாக எண்ணக்கூடிய அளவுக்கு உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கணனியின் வளர்ச்சியென்பது, கண்களுக்கு, மற்றும் கைகளுக்கு எட்டாத தொலைவில் பறந்து சென்ற வேகமதிகரித்துப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இது வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்த அளவுக்கு, அறிவின் வேகத்தை அதிகரிக்கவில்லையென்பது அணைக்க முடியாத வெளிச்சம்.

“பலரின் அறியாமையே ஒருவருக்கு மாபெரும் அறிவாகிறது.

”பலரின் தூக்கத்திலேயே ஒருவரின் விழிப்புப் பலன்கொடுக்கிறது.

” இது நல்லிலக்கியம், அது இலக்கியமன்று, என்று பாகுபடுத்த நீ யார்? அதனை, இன்றைய நீயல்ல, நாளைய வரலாறு தீர்மானிக்கட்டும். இன்றைய ஏராளம் எழுத்துக்களின் தொகுப்பு, இன்றைய உண்மை நிகழ்வுகளை, நாளை மீள்பரிசீலனை செய்ய கைகொடுக்கும். ஆதிக்கச்சார்புடைய எழுத்துக்களின் அம்பலம் அவ்வப்போது வெளிவருவதில்லையே!! அவை காலந்தாழ்த்தித் தலைகுனியும். ஆதிக்கச்சார்பற்ற உண்மைகள் அமைதியாகவே தலைநிமிரும்.

அன்பனே, நாளை வாசிக்கப்படும் வரலாற்றில், நீயும் ஒரு பகுதி என்பதனை மறந்து விடாதே.

எழுத்துரிமை எழுத்தாளருக்குமட்டும் உரியதென்று ஒதுக்கப்படும் தவறான கருத்திலிருந்து உன்னை விலக்குகிறேன். “உன் சிறு கடிதங்கூட நாளைய வரலாற்றில் மாபெரும் இடத்தைப் பிடிக்கலாம்”, இன்று யாரறிவார்?! இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் நின்று பார்க்கும் போது, கூச்சப்பட்டுத், தலைகுனிந்து மனம் பொருமக்கூடியதாகவே இருக்கிறது. மனிதன் ஏன்வாழுகிறான் என்று எண்ணக்கூடிய நிலையில் எவரும் இல்லை.

சேவை அமைப்புக்களும் சரி, அரச அமைப்புக்களும்சரி, நிதி என்ற மையப்பொருளிலேயே இயங்குகின்றது. ஒரு தனிப்பட்ட உழைப்பாளி தன் சாதாரண தனி வருமானத்தைக்கொண்டு, வாழ்க்கை நடத்துவதற்கு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டுக் கண்ணீர் விடவேண்டியிருக்கிறான்; எனவே, அவன் தன் சாதாரண வருமானத்திலும் பார்க்க வேறு துணைவருமான வழியினைத்தேட முயற்சிக்கிறான். அல்லது, சாதாரண வருமானத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத காரணத்திற்கு எதிராக, தன்போன்ற பலரைச் சேர்த்துக்கொண்டு கோசம் போடமுயல்கிறான். அந்தமுயற்சியினை சமாளிக்கமுடியாத அமைப்புக்கள் அதனைத் தடைசெய்ய முயலும்போது, அந்த நபர்களின் செயற்பாடு ஒரு அமைப்பாகிறது. அது மேலும் மேலும் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்களால் (அரசால், பொதுவமைப்புகளால், சமய அமைப்புக்களால்) எதிர்க்கப்படும்போது, அது தீவிரவாதம் என்று இவ்வமைப்புக்களால் பெயர் சூட்டப்படுகிறது; அல்லது அவ்வமைப்பை அழிப்பதற்கு வகைதேடப்படுகிறது.

இதற்குமாறாக, அவர்களின் கோசத்திற்கு ஏற்றவாறு நிலைமையினை மாற்றியமைக்க எந்த அமைப்பும் முன்வருவதில்லை; அப்படி முன்வந்தாலும் அதற்கு ஏராளமான நடைமுறைகளை ஏற்படுத்தி ஒருவருக்கு சலிப்பேற்படுமட்டும் ஆட்டிப்படைத்து அந்நபரைப் பிழிந்தெடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரு சிறு விடையத்திற்கு பல மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ இழுத்தடித்து அவர் வாலிபத்தைக் கரைத்துவிடுகிறது. கல்விமுறையினை எடுத்துக்கொள்ளுங்கள், அதுகூட கேலிக்கிடமாகத்தான் தோன்றுகிறது. குறிப்பிட்ட ஒருநாட்டிலல்ல, பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது. விழுந்து விழுந்து ஒருமானவன் இரவுபகலாக கல்விகற்கிறான் அதுவும், பத்துவருடக்கல்வியின்பின் பயத்தோடு ஒரு பரிட்சை, அதில் பயத்தின்காரணமாகவோ அல்லது பிற மனம், மற்றும் உடல் சம்மந்தமான பாதிப்பாலோ அவன் அப்பரிட்சையில் பின்னடைவானாகில், அவனின் பத்துவருடமும் பாழாக்கப்பட்டதாக சமுகம் கருதிக்கொள்கிறது. ஒருவருடைய கல்வித்திறமையினை பரிட்சைமூலம்கணிப்பிடும் முட்டாள்த்தனத்திற்குப் பட்டதாரி என்று பெயர். ஒருவரின் அறிவை எடைபோட எவருக்குத் தகுதியுண்டு என்று எனக்குப்புரியவில்லை. உலகத்தில் யாரும் யாருக்கும் அறிவூட்டவோ அல்லது யாருடைய அறிவையும் அறிவிழக்கவோ செய்யமுடியாது.

மாறாக, ஒருவருக்குள் இருக்கும் அறிவினை வெளிக்காட்டவோ அல்லது உள்ளடக்கவோ மட்டுமே இன்னொருவரால் முடியும். எந்த ஆசிரியனும் மாணவருக்கு அறிவூட்டுவதில்லை, மாணவனுக்குள் இருக்கும் அறிவினை தூசிதட்டவே முற்படுகின்றார். நாற்பது மணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் சிறப்புத்தேர்ச்சி அடைகின்றார்கள் என்றால், அது யாருடைய தப்பு?! நாற்பது மாணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் தேர்ச்சியே அடையவில்லை என்றால் அது யாருடைய தப்பு!? விஞ்ஞான அறிவில் ஒருவன் தன்சிந்தனையினைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு கணித அறிவைப் புகட்டித்திணிப்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளமுடியும். தாயின் வற்புறுத்தல், தந்தையின் வற்புறுத்தல், சகோதரத்தின் வற்புறுத்தல், ஆசிரியரின் வற்புறுத்தல், நண்பனின் வற்புறுத்தல்… இவைபோன்ற ஏராளம் பாதிப்புக்கள் ஒருவனுடைய தன்நிலையினை மாற்றிவிடுகிறது. சுயமாகச்சிந்திக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

இதன்காரணம் தன்சுயநிலையில் ஆசிரியர் ஆகவேண்டிய ஒருவர், வற்புறுத்தலின் தாக்கத்தால் அவன் அதிகாரியாகிவிட்டான்; இதனால் தற்போது அவன் வீத அடிப்படையில் திறமைகுறைந்தவனாகக் காணப்படலாம் அல்லவா? திறமை குறைந்தவன் என்று நான்சுட்டிக்காட்டுவதன் கருத்தாவது: அதிகாரியாக இருப்பதிலும் பார்க்க ஆசிரியராக இருந்தால் அவன் திறமையின் வீதாசாரம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என்று காட்டவே. புவியியலில் மாவட்டரீதியில் அதிவிசேட உயர் பெறுபேறினைப்பெற்ற சிலரில் நானுமொருத்தன்; ஆனால், நான் இப்போது செய்யும் வேலைக்கும் அந்த பெறுபேற்றிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அத்தோடு அனுபவரீதியில் இப்போது அறிந்து கொண்ட கல்விமுறையே எனக்குக்கைகொடுக்கிறது. நான் எதற்காக ஏராளம் வருடங்களைப் பாழாக்கிவிட்டேன் என்று சலித்துக் கொள்கிறேன்னிப்போது. என்னைப் பொறுத்தவரையில் ஒருகுறிப்பிட்ட கற்கை காலத்தின்பின்னர் ஒவ்வொருவரும் தொழில் அடிப்படையில் பகுக்கப்படவேண்டும், பகுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவில் தொழில் பகிர்ந்தளிக்கப் படவேண்டும்.

அது மணிக்கணக்கில் கணிக்கப்படும் பரிட்சைமூலமல்ல, நாட்கணக்கில் எடுக்கப்படும் பயிற்சிக்கணிப்புமூலம் இடம்பெறவேண்டும். 10 நபரை வேலைக்கு எடுப்பதற்காக நுற்றுக்கணக்காணவரை எதற்காக வருடக்கணக்கில் அலக்களிக்கவேண்டும்? அடிப்படையில் இருந்து ஏராளமான நடைமுறைகள் கட்டுக்கட்டாகப் படிப்படியாக மாற்றப்படவேண்டும். அதற்கு அரச நடைமுறைகளையோ அல்லது அமைப்புக்களின் நடைமுறைகளையோ எதிர்பார்த்து ஏமார்ந்து போவதைக்காட்டிலும், ஒவ்வொருதனி நபரிலும் இருந்து இந்த ஒளிப்பிளம்புகள் புறப்பட வேண்டும். ஒவ்வொருவிடையத்திற்கும் சமுகத்திலிருந்து ஒவ்வொரு தலையான ஒருவரை இனி எதிர்பார்க்க முடியாது மதத்திற்காக ஒரு இயேசுகிறீஸ்துவை, அரசியலுக்காக ஒரு லெனினை, சேவைக்காக ஒரு அன்னைத் திரேசாவை, கொறில்லா முறைக்காக ஒரு சேகுவெராவை, தத்துவத்திற்கு ஒரு சோக்றடீசை, படைகளைத் தாங்குவதற்கு ஒரு ஜோன்ஒவ்ஆர்க்கை, வானியல் கண்டுபிடிப்புக்கு ஒரு கலிலேயோ கலிலேயியை, அகிம்சைக்கு ஒரு காந்தியை, கணிதமேதைக்கு ஒரு பித்தாகொராவை… இனியாரும் எதிர்பார்க்கத் தேவை இருக்கக்கூடாது.

இப்பேற்பட்ட ஆதங்கங்கள் புத்தம் புதிதாய் அருகனிடம் இருந்து வந்தகருத்துக்களல்ல, காலகாலமாக வந்திருக்கலாம், தப்பில்லை; இதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தமும், நடைமுறைப் படுத்தவேண்டிய கட்டாயத்திலும் நாம் அனைவரும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவேதான், என்னை எழுதத்தூண்டும் எண்ணங்களிலெல்லாம், மற்ற மனிதர்களின் ஆதங்க எண்ணங்கள் பிரதிபலிக்கின்றனபோலும். இப்பேற்பட்ட ஆதங்கங்களோடு உட்செல்ல விரும்புகிறேன், அவையனைத்தும் உங்கள் விம்பங்கள் காட்டும் கண்ணாடியே, வாருங்கள்…!

புலிகளின் செயற்பாடுகள் தீவிரவாதமல்ல, அது ஒரு இனத்தின் உரிமைப்போர் என்பதனை நாம்தான் வரலாறாக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் தாய்மண்ணிற்காகவும் எமது தேசியத்திற்காகவும் தம்முயிரைக் காணிக்கையாக்கிய மழலைகளை காலப்போக்கில் எமது தமிழர்களே மறந்துபோகும் துர்ப்பாதக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுவோம்.

June 17, 2010Leave a comment

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=4153&Itemid=676

தொடரும் அருகன்.


“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின்  பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2

015சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயேதமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும்சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமதுவரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில்கொடுத்துவிட்டோம்.

இன்று தமிழர்களின் ஆரம்ப வரலாற்றை விளக்குவதற்குசிங்களவனின் வரலாற்று நூலாகக்கருதப்படுகின்ற“மாகாவம்சம்” “சூழவம்சம்” என்ற வற்றை நாடும்அளவிற்கு துர்ப்பாக்கிய சாலிகளானோம். ஆயினும் வேறு பல ஆதாரங்களும், வரலாற்றுச்சம்பவங்களும் எமது தாயகம் தொடர்பாகவும் தன்னாட்சிதொடர்பாகவும் அதுகாலத்துக்குக்காலம் அயலானிடம் பறிபோயும், வஞ்சகவலைகளால் சிதைவுற்றும் சின்னாபின்னம்ஆக்கப்பட்டதும் தெளிவுறத் தெரியும் அளவிற்கு பின்னுள்ள பகுதி கைகொடுக்கும்.

தமிழ் அரசர்கள், யாழ்ப்பாணத்து அரசர்கள், இலங்கை அரசர்கள்… என்று பார்க்கும் போது, இந்தியாவின் பங்களிப்பு தற்போதண்றி ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிக்கமுடியாததாகஇருக்கிறது. விஜயனின் வருகைக்கு முன் ஒரு பாரியச் சிதைவொன்று (சுனாமியைப்போன்று) இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அச் சிதைவினால் இலங்கைப் பழங்குடி தமிழர்களின் அடியானநாகர், இயக்கர், கின்னரர் போன்றோர் சிதைவடைந்தும் சிறு அளவிலும்குறைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொகையில் சிறுமைப்பட்டிருந்த பழங்குடியினர்பெரும்பாலானோருடைய தாக்கத்திற்கு முகங் கொடுக்கமுடியாது அவர்கள் வரலாறுபுதைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அச்சமுகத்தில் இருந்து விலகியிருக்கப்பட்டிருக்கவேண்டும்.

031இலங்கையில் (வடபகுதி) யாழ் ஆட்சியாளரின் ஆரம்பம் பொதுவா“கூழாங்கைச் சக்கரவர்த்தி” என்பவனோடு ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்குமுன் இலங்கை அரசாட்சியில்லை என்று சொல்வதற்கில்லை. வரலாற்றில் வெளிப்படவில்லை என்பதற்கான ஆதாரம் மேலே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பெரும்பாலும் தமிழர்கள்பழங்குடியினராகக் காணப்பட்டமையும்சிதைவுக்குள்ளாக்கப்பட்டமையுமாகும்.

இவ்வரசனுடைய ஆட்சி தொடர்பாக சில கருத்துக்கள்தெரிவிக்கப்படுகின்றது. அதற்குமுதல் யாழ்ப்பாணத்தின் வரலாறுதொடர்பாக சிலவிடையத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழமாகத்தெரிந்து கொள்ள அதனைப் பிறிதொரு இடத்தில்பார்ப்போம். யாழ்ப்பாணம் ஆரம்பத்தில், “மணல்த்திடர்” என்றும்“மணற்றிடர்” என்றும் அழைக்கப்பட்டது. பின்னர், யாழ்ப்பாணன்என்பவனுக்குரியதாக மாறியதன் காரணத்தால் அது யாழ்ப்பாணம் என்றுபரினாமமானது. இதனுடைய உரிமையாளரான யாழ்ப்பாணன் இந்தியாவில் இருந்து அரசபரம்பரையில் உள்ள ஒருவரை அழைத்து அதனை ஆளவைத்தாராம்.

மேற்சொன்ன இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவருக்கு ஒருஇடம் சொந்தமென்றால் அதற்குச் செந்தக்காரனே அரசன். அப்படியிருக்க இன்னொரு அரசனைஉருவாக்க அவசியமென்ன? மேலும் இன்று சொல்வது போலல்லாமல், இந்தியத் தொடர்புடையஅரசு மேலும் இந்தியாவை உறவுள்ளதாக மாற்றியிருக்குமே தவிர, குறைத்திருக்காது. இன்னொருவிடையத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தமிழ் வரலாறு(இலங்கைத்தமிழ்) பிற மொழிகள் மூலமே விபரிக்கப்பட்டது. அதன் விம்பமே பெயர்கள்மாற்றப்பட்டும் வரலாறு மறைக்கப்பட்டும் உள்ளது. உதாரணம் “இயேசுக் கிறீஸ்து” “ஜீசஸ்கிறைஸ்ட்” யேசு நாதர்” என்பன ஒரே ஆளைக் குறிக்கிறது. பெயர் எக்காரணங் கொண்டும்மொழிமாற்றத்திற் குட்படக்கூடாது!!! அது போலவே இடமும்.

உண்மையிலே ஒரு சம்பவம், ஒருவருடைய பெயர் தமிழில் “செபமாலை” அவர் தனது பெயரைவெளிநாடு சென்றதும் தன்னை “றொசாறியோ” என்று அறிமுகப்படுத்தினார் இப்போது அவரைமுன்பு அறிந்தவர் பின்பு அறிந்தவர் என்று இருபகுதி காணப்படுகிறது. பாவனையில் இருக்கும்இருபெயரும் கருத்தில் ஒன்று என்பதற்காக அது சரி என்று ஒப்புக்கொள்ளலாமா? இவ்வாறானசிக்கல்களே வரலாறு மங்கியதற்கும் பிறிதாக்கப்பட்டதற்கும் காரணமாகும்.

தற்போது சிங்களவர் என்று சொல்வோர் கூட தனிச் சிங்களவர் இல்லையே! இணைப்புச் சிங்களவர். எனது ஒன்று விட்ட சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் எம்முடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போதுஅசல் தமிழர்கள். பின்னர் இடம்பெயர்ந்த காலத்தில் வவுனியாவில் அவர்கள் அசல் சிங்களவர்கள். காரணம் அவர்களுடைய தந்தை தமிழ் நன்றாய்ப்பேசக்கூடிய அசல்ச் சிங்களவர் எனவே அவர்கள்பச்சோந்தியிலும் மேலானமுறையில் காணப்பட்டனர்.

இது இப்படியிருக்க பல்லாயிரம் ஆண்டு கடந்த வரலாறு????… வரலாறு பல்வேறு இடங்களில்ஒன்றுக்கொன்று, 030முன்னுக்குப்பின் முறனான விடையங்களைச்சுட்டுகிறது, அதாவது யாழ்ப்பாண மன்னனான இவனுடைய ஆட்சியின்தொடக்கம் “சாலிவாகன் காலம் ???” கி.மு. 101 என்று ஒருசிலரும், 13ம் நூற்றாண்டு என்றும் தொடர்பு அறுந்து காணப்படுவதால்அக்காலத்திற்கும் தற்காலத்திற்கும் கணிப்பிடும் கால அளவிலும்மாற்றங்கள் இருந்திருகவேண்டும். அதன்
காரணமும் இதற்குத்தடையாக அமைந்திருக்கலாம்.

உதாரணம், ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் நமது கணிப்பீடுகள்… போத்தல், றாத்தல், கட்டை, சாண்,… அதற்குமுன்னர் ஒருபாதம்இருபாதம், ஒருகாததொலைவு, … இவ்வாறான கணிப்புகள் இருந்தனஅவற்றின் கணிப்பிற்கும், தற்போதைய கி.மீ, லீற்றர், கி.கி., மீற்றர், போன்ற கணிப்பிற்கும் பாரிய மாற்றங்கள் உள்ளன. மேலும் அக்காலஎழுத்தாளர்கள், தமது எழுத்துக்களில் ஒருசிலரைக் உருவாக்கியும், தேவைப்படும் இடத்தில் தாமே அந்த சம்பவத்தில் புகுந்தும்(ராமாயணத்தில்–வேதவியாசர், வசிஷ்டர்) வரலாற்றைப்புனைவதற்கு இலக்கணம்இடங்கொடுத்தது. எனவே வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் சற்று எமதுஎண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இலங்கையின் சரித்திரம் என்று பார்க்கும் போது, முற்காலத்தில்

  • மயன்,
  • சுரேந்திரன்,

  • அசுரேந்திரன்,

  • இச்சயம்பன்,

  • யாளிமுகன்,

  • ஏதி,

  • வித்துகேசன்,

  • சுகேசன்,

  • மாலியவான், (இலங்காபுரி என்னும் பெயர் இவன்காலத்தில்

  • உதயமானதெனலாம்),

  • சுமாலி, (சூரியப் பிரகாசம் விமானம் இருந்த காலம்) ,

  • வச்சிரவாகு,

  • வைச்சிரவாணன்(குபேரன் புட்பக விமனமம் வைத்திருந்தான்),

  • குபேரன்

  • இராவணன்

  • விபீஷணன் (பசுபதி)

  • இந்திரஜித்

  • ஆதிசகாயன்

  • … …

    போன்ற வரலாற்று நபர்களையும் புரட்டிப்பார்க்க வேண்டும். இவர்கள் வெறும் கதாபாத்திரமல்ல. அத்தோடு எல்லாளன் சரித்திரம் கி.மு. 205- 161 என சிங்கள மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமானமகாவம்சம் எடுத்துக்காட்டும் வரலாறு எங்கே போனது? துட்டகைமுனு என்னும் மன்னனால்எல்லாளன் கொல்லப்பட்டதும் எல்லாளனுடைய சமாதியின் இடத்தை (தகனம்செய்த) மரியாதைக்குரிய இடமாக தூபி அமைத்து, அனுசரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது ஆனால்காலப்போக்கில் சிங்கள இனவாத சமுகம் அதனை மாற்றி அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஆதாரம் மகாவம்சம், “The Pali Literature of Ceylon”p.34 ).

    crest_letter Ariya Chakkra varthi Kodyயாழ்ப்பாணத்துச் சரித்திரம் என்று பார்க்கும் போது சரித்திரத்தில், கூழாங்கைச் சக்கரவர்த்தி என்பவனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் அது முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. காரணம் அதற்குமுதல் வரலாறுகள்(மேற்குறிப்பிட்டவர்கள்) வெளிவராமல் போனதும், மக்கள் தொடர்புகுறைந்து காணப்பட்டதும், பலங்குறைந்து காணப்பட்டதும்காரணமாக இருந்திருக்கலாம். அதன் விபரங்கள் புராணங்கள் மூலம்நாம் புடம்போட்டுக் காட்டக்கூடியதொன்றாகும். இந்தஇலங்கையானது, “இராவணனின் இராஜதானியாக விளங்கியது. விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தென்சமுத்திரத்திலே திரிகூட பர்வதத்திலே அமைக்கப்பட்டபட்டணமாகும்” என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்என்பதை மேலே எடுத்துக்காட்டினேன். இந்த அரசானதுஆரம்பத்தில் “மால்யவானுக்கு” இராஜதானியாக இருந்தது. காலப்போக்கில் பெரும் செல்வந்தராகவிளங்கிய குபேரனுக்கு இராஜதானியாக அமைந்து அதன்பின், பெரும் பலம் கொண்டவனும், வரம்பெற்றவனுமான இராவணனால் அபகரிக்கப்பட்டது.

    இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்தமூன்றாவது புதல்வன். இந்த விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில்கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடையஎந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை! இராவணனின் தவறைச்சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான். இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாகஇருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார்இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்) இந்தவிபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில்“யாழ்”வாசித்து அவனை மகிழ்வித்த  “பாணன்” ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான்.

    அது காடு நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது அதன்பின்னர் அப்பகுதி “யாழ்ப்பாணம்” எனப்பெயர்பெற்றது. இதன்கால வரைகள் நிற்சயித்துக்கூறமுயாது உள்ளது. எனினும் இக்காலத்தில்மக்கள் இந்தியாவில் இருந்தும் சிலர் விஸ்தரிப்புக் காரணமாக வந்து குடியமற்றப்பட்டார்கள் என்பதுவரலாறு. மக்கள் அதிகரிப்பின் பின்னர் பதிவுகள் வரலாற்றில் வெளிப்படதொடங்கியது. அதன்படிவெளிப்பட்ட அரச வம்சங்களாக… கூழாங்கைச் சக்க்கரவர்த்த்தி (கோளுறு கரத்துக் குரிசில், கூ.ஆரியச்சக்கரவர்த்தி ) இலங்கையில் பொதுவாக பலசிற்றர்கள் இருந்தும் யாழ்ப்பாணத்தைபெற்ற யாழ்ப்பாணனின் காலமுடிவில் அவன் தனக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆழ பிரபல்யாமனவரலாறுகளின் தோற்றப்படி, இவ்வரசன் இந்தியாவில் இருந்த அழைக்கப்பட்டதாகவும், தசரதனின்மைத்தினனின் வம்சாவழித்தோன்றலில் ஒருவன் என்றும், சோழ வம்சத்தில் ஒருவன் என்றும், சிக்கல்ப் படுத்துகின்றனர்.

    இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்ததுஎன்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால்அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம்செல்லப் படுகிறது. மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்தியசிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர்செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின்ஆட்சிக்காக “கூழாங்கைச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    எனினும் அக்காலத்திற்கு முன்னிருந்தே ஆட்சிகள் நிலவியது என்பது இதில் இருந்து தெரிகிறது. இவனது காலக்கணக்கு 13ம் நூற்றாண்டுகள் என்பதே தற்பொதைய கணிப்பீடாகும். இக்காலப்பகுதியில்தான் நல்லூர் இராசதானி கட்டப்பட்டதனால், இவ்வரசனே அனைத்து அரசதிட்டங்களையும் யாழ்ப்பாணத்துக்கென அமைத்திருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது.

    005எனினும் நல்லூர் மேலும் மெருகுபடுத்தப்பட்டது 15 நூற்றாண்டுகளுக்குப் பின்னரே. காரணம் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் (புலிகள் உட்பட) பொதுவாக இப்பிரதேசத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தமையாகும். இவ்வரசனின் பின்னர் “குலசேகர சிங்கையாரியன்” 10 வருடகாலமாக அதாவது கி.பி 1246ல் இருந்து 1256 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் கூழாங்கைச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவன் நாட்டில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி அபிவிருத்தியைத் தூண்டுவிக்கும் பொருட்டு விவசாயத்தைப் பெருக்கினான். பின்னர் இவனுடைய குமாரனான “குலோத்துங்கசிங்கையாரியன்” ஆட்சியமர்ந்து தந்தை வழியில் நாட்டை விருத்தி செய்தான். .. தொடரும் அருகன்.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply