இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!

நக்கீரன்

‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான  நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது.

ஏற்கனவே  சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா,  சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை  நினைவு படுத்துகிறது.  சிங்களம் மட்டும் என்ற முழக்கம்  அரசியலில் சிங்கள – பவுத்த மக்களதும் பவுத்தமத  தேரர்களதும் மேலாதிக்கத்தை நிறுவியது.  அதன் மூலம் அரசியல் மேலாண்மை சிங்கள – பவுத்தர்களது கைகளில் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாகத் திரண்டவர்களில் பெரும்பாலோர் இரமண்ண (Ramanna) மற்றும் அமரபுர (Amarapura)  பவுத்தமத  பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் ஆவர். இந்த பவுத்த பீடங்கள்  சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார சமூகத்துக்கு உரியன.  கண்டி தலதா மாளிகை சியாம் பவுத்த பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரியா  (1764) இரண்டையும்  சேர்ந்த   சிங்கள ரதல (radala)  மற்றும் கொவிகம (govigama – வெள்ளாளர்) சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றன.  எனவேதான் சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார வகுப்புப்பைச் சார்ந்தவர்கள்  அதற்குப் போட்டியாக இரமண்ண (1864)  மற்றும் அமரபுர பவுத்மத பீடங்களை (1800) நிறுவினார்கள். அமரபுர மதபீடம் சாதி அடிப்படையில் மேலும் 21  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த – ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே (Don David Hewawitharane – September 17th, 1864) என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மபாலர் ஆவர்.    இவரது தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்றை நடத்தினார். சிங்கள வணிகர்களின் பண உதவியால் இயங்கி வந்த பவுத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வணிக முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களைத் தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் திரட்டுவோர் என்றும் புகழ்ந்தது. அன்றைய இலங்கையின் பணக்கார வணிகரின் மகனாக இவர் தேரவாத பவுத்தத்தை தழுவித்  தன்னுடைய பெயரை அநகாரிக தர்மபாலர் என மாற்றிக் கொண்டார். இவருடைய கால கட்டத்திலே இலங்கையில் கிறித்தவ மதப் பரப்புரையாளர்கள் வடக்கிலும் தெற்கிலும்   மதமாற்றத்தைச் செய்து கொண்டிருந்தனர்.

அநகாரிக தர்மபாலர்

அநகாரிக தர்மபாலர்  பவுத்த மேலாண்மை கருத்தியலை வளர்ப்பதற்குச் சிங்கள பவுத்தாய என்ற பெயரில் செய்தி ஏடு ஒன்றினை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிக்கும்படி தனது செய்தித்தாளிலும் வெளியீடுகளிலும் வேண்டுகோள் விடுத்தார். சிங்கள பவுத்தாய என்ற சொற்றொடரை முதலில்  புனைந்தவர் தர்மபாலரே!

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாச சிரிசேன தனது சிங்கள ஜாதிய என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரைத்  தாக்கி எழுதினார்.

தர்மபாலர் சிங்களவர் ஆரியர்கள் என்றும் அவர்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்கள் ஆரிய நாகரிகத்தைச் சார்பு படுத்துகிறார்கள் என்றும் அவர்களது உடலில் அடிமைக் குருதி ஓடவில்லை என்றும் அவர்களை புறச்சமயிகளான தமிழர் ஆகட்டும் மூன்று நூற்றாண்டு காலம் நிலத்தையும், புராதன கோயில்களையும் நூல்நிலையங்களையும் அழித்த அய்ரோப்பிய அழிவுக்காரர் ஆகட்டும் ஒரு போதும் சிங்களவர்களை வெற்றிகொள்ளவில்லை என்று எழுதினார்.

தர்மபாலர் கிறித்துவ மதப்பரப்புரையாளர்களுக்கு மாற்றாக பவுத்தத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாது சிங்கள மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும்   ஈடுபட்டார்.  எல்லா மதங்களிலும் பவுத்த  மதமே உயர்ந்தது என்று வாதிட்டார்.  இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் எனக் கடுமையாகச் சாடினார்.

எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே!

இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்றார். முஸ்லீம்கள் ஏமாற்றிச் சம்பாதிக்கிறார்கள், மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என எழுதினார்.  ஆரிய சிங்களவர்களின் புனித பூமியான இலங்கை இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் கிறித்தவர்களாலும் அழித்தொழிக்கப்பட்டது எனவும் அதைக் காப்பது சிங்கள – பவுத்தர்களது கடமை எனவும் பரப்புரை செய்தார். அவரது எண்ணத்தின்படி இலங்கையில் தமிழர், முஸ்லிம் ஆகியோருக்கு இடமில்லை. கிறித்தவ சிங்களவர்களையும் அவர் சிங்களவர் என்று ஏற்றுக் கொள்ள  மறுத்தார்.

தர்மபாலர் தான் நடத்திய சிங்கள பவுத்தாய செய்தி ஏட்டின் வாயிலாக “முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள், அப்படி முஸ்லிம் கடைகளைப் புறக்கணிப்பவர்கள் மட்டுமே  நாட்டின் உண்மயான தேச பக்தர்கள்” என்று எழுதினார்.

அவர் மேலும் “பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர், சிங்களவருக்கு சமயத்தாலும் இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள். பவுத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தியோகத்தர்கள் சிங்களவரைச் சுடலாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்குப் பொருளாதார ஆன்மீக அடிப்படையில்  காரணங்கள் இருந்தன” என்று முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டினார்.

1915 சிங்கள – முஸ்லிம் கலவரம்

மே 29,  1915 இல் சிங்களவர் – முஸ்லிம் கலவரம் கண்டியில் வெடித்தது. இதுவே முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் ஆகும். ஒரு பவுத்தமத விழா ஊர்வலம் மசூதிக்கு அருகாமையில் போவதை முஸ்லிம்கள் ஆட்சேபித்ததன் விளைவாகவே கலவரம் வெடித்தது.   ஒன்பது நாள்கள் நீடித்த இந்தக் கலவரம் மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் சம்புரகாமுவ போன்ற மாகாணங்களுக்குப் பரவியது.  மாத்தளை, வட்டகம, கடுகண்ணாவ, கம்பொல, இரம்புக்கான, பாணத்துறை மற்றும் அக்குராசா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் ஒன்றுதிரண்டு முஸ்லிம்களையும் அவர்களது  கடைகளையும் தாக்கினார்கள். சில இடங்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கினார்கள்.  இத் தாக்குதலில்  25 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 189 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். நான்கு  முஸ்லிம் பெண்கள் பாலியல்  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 250 கடைகள், வீடுகள் எரியூட்டப்பட்டன. 4,075 கடைகள், வீடுகள்  சூறையாடப்பட்டன.

அநகாரிக தர்மபாலர்  சிங்கள இனத்தின் புகழைப் புதுப்பித்தவர் என்றும் பவுத்த மதத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்தவர் என்றும் சிங்கள – பவுத்தர்களால்  கொண்டாடப்படுகிறார். அநகாரிக தர்மபாலர் சிங்கள மக்களைச் சிலாகித்துச் சொல்லும் போது “சிங்களவர் பழைய வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆரிய இனத்தின் இனிமையான, மென்மையான, மிருதுவான பிள்ளைகள்…..இற்றை நாளில் உலகில் எமது நாட்டைப் போன்று  ஒளிமிக்க  வரலாறு கொண்டிருந்த நாடு வேறு எதுவும்  இல்லை…. …சிங்களவர்களது நாட்டை சிங்களவர்கள்தான் ஆள வேண்டும் (The sweet, tender, gentle Aryan children of an ancient, historic race. No nation in the world  has had a more brilliant  history than ourselves. The country of the Sinhalese should ruled by the  Sinhalese ……Sri Lanka and Tamil National Struggle – Chapter 4) எனக் கூறினார்.

“சிங்களம்”  ஆரிய மொழி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை சிங்கள – பவுத்த பேரினவாதிகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் ஆரிய சிங்கள இனத்தவர்  திராவிட இனத்தவற்கு மேலான உயர்குடிப் பிறப்பாளர்” என வாதிக்கலாயினர். (வளரும்)


இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல!

நக்கீரன்

(பாகம் 2)

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள்.  இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

 இனவாதசிங்களம்

1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள்  இருந்தார்கள்.  இவர்கள் ஆங்கிலேயரால்  தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல்  மலையாளிகளது  தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம்,  தொழிற்சாலை,  தேநீர் கடைகள், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர்.  இவர்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தொழிற் சங்கவாதியாக இருந்த ஏ.இ. குணசிங்கா தலைமை தாங்கினார்.

மலையாளிகளது தேநீர்க் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என கொழும்பு நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறினர். சிலர் தமிழ் அல்லது சிங்களப் பெண்களை மணந்து இலங்கையில் தங்கி விட்டனர். S.W.R.D. பண்டாரநாயக்காவின் முதல் அமைச்சரவையில் பவுத்தமத கலாசார அமைச்சராக பதவி வகுத்தவர் இந்த மலையாளிகளில் ஒருவரான ஜெயவீர குருப்பு ஆவர்!

1939 ஆம் ஆண்டு ஏ.இ. குணசிங்கா 15,000 தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனக் கேட்டுச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு அண்மையில் அரச  பணியில் சேர்ந்த தமிழர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை டி.எஸ்.  சேனநாயக்கா கொண்டு வந்தார்.

இலங்கையில் 1860  முதல் தோட்டத் தொழிலாளர் போராட்டம் நடத்திய போதும்  1899 இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு தோற்றம் பெற்ற போதிலும் 1920 இல் மட்டுமே இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.

ஒன்று ஊடகவியலாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் (Ceylon Indian Workers Federation) மற்றது  ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கம்.

1925 இல் நடேசய்யர் தனது அமைப்பை குணசிங்காவினுடைய தொழிற் சங்கத்தோடு இணைத்தார். ஆனால் 1928 ஆம் ஆண்டளவில் குணசிங்கா இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அதனால் நடேசய்யர் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.

கூலி வேலைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் 1,800 முற்பகுதி   தொடங்கி   தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயரால் கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாக (indentured labour)  அழைத்து வரப்பட்டவர்கள்.  வெள்ளைத் துரைமார்களால் கூலிகள் என அழைக்கப்பட்டவர்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நுழைந்த சில சொற்களில் இந்தக் கூலி என்ற சொல்லும் ஒன்று.  மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு அதிக நேரம் தேயிலை, இரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்தார்கள்.  லயம் என்று சொல்லுகிற தகரக் கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சமையல், சாப்பாடு. படுக்கை எல்லாம் இந்த லயத்தில்தான். இறந்த பின் இவர்களது உடல்கள் தோட்டங்களில் புதைக்கப்பட்டு தேயிலைச் செடிகளுக்கு உரம் ஆகின.

இவர்களின் குடிப்பெயர்வு மிகவும் சோகமானது. பயணம் செய்ய வேண்டிய நாளில் கையில் இரண்டொரு துணிமணியோடு வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள். கங்காணிகள் இவர்களை கால் நடையாக இராமேஸ்வரம் வரையும் கூட்டி வருவார்கள். அதற்குப் பிறகு தோணிகளில் மன்னார் கொண்டு வரப்படுவார்கள். மன்னாரை  அடைந்ததும் அங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி இடங்களுக்கு கால் நடையாகக் காடு, மலைகள் ஊடாக   அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நீண்ட, கரடு முரடான பயணத்தில் நாலில் ஒரு பகுதியினர் நோய் காரணமாக  சாவை அணைத்துக் கொண்டார்கள்.  ஏழ்மையும் வறுமையுமே  இந்த மக்களைத் தாம்  பிறந்த தாய் நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. ஏழ்மைக்குக் காரணம் கல்வி இன்மையே. சமூக ஏணியின் கடைசிப் படியில் இருந்த இந்த மக்களை சமூகம்  மக்களாகவே கணிக்கவில்லை. இந்து மதம் இவர்களைத் தீண்டாதார் என்று முத்திரை குத்திச் சேரிகளில் ஒதுக்கி வைத்தது. சாமி கும்பிடக்  கூட இந்த மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. இன்று கூட தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள்  உலகத்தில் மிக மோசமாகச் சுரண்டப் படும் தொழிலாளர்களாக  எண்ணப்படுகிறார்கள்.

1827 இல் மட்டும் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும்.  இது 1877 இல் 1,46,000 ஆக உயர்ந்தது (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). 1946 குடிமக்கள் கணக்கெடுப்பின் போது  மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,589 ஆக உயர்ந்திருந்தது.

ஏ.இ. குணசிங்கா  தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது  இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த  சேர். பொன்னம்பலம் இராமநாதன் “இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?” எனச்  சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.

இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு அகவை 78 நிறைந்திருந்தது. (பக்கம்1791 சட்டமன்றப் பதிவேடு மூன்று-1928)

சிங்கள மொழி

சிங்களம் ஓர்  இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றாலும் அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏனைய இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த குடும்ப மொழிகளில் காணப்படவில்லை. காரணம் சிங்களம் ஒன்று மட்டுமே இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்தோ – ஆரிய மொழியாகும்.

சிங்களம் மற்றும் தமிழ் இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் சிங்களம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்று கூறும் புலமையாளர்களும் இருக்கிறார்கள்.  சிங்கள புலமையாளர்களில் ஒருவரான டபுள்யூ. எவ். குணவர்த்தன தாம் எழுதிய சித்தாந்த பரிஸ்சானய என்ற நூலில் பின்வருமாறு  கூறகிறார்.

“சிங்களமொழி இலக்கணத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் ஆரிய மொழி இலக்கணத்துக்கு மாறாக உள்ளன. சிங்கள மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ்மொழியோடும் திராவிட மொழிவழக்கோடும் (idioms)  ஒத்துப் போகின்றன. இதில் இருந்து நான் ஒரு முடிவுக்குக் கட்டாயமாக வரவேண்டியிருந்தது.  அதாவது சிங்களத்தின் கட்டுமான அடித்தளம் திராவிடமாகவும் அதன் கட்டுமான மேல்தளம் அதாவது அதன் சொற்றொகுதி ஆரியமாகவும் காணப்படுகிறது என்பதுதான்.” சிங்கள மொழியை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துடன் இணைத்து மாக்ஸ்முல்லர் குறிப்பிட்டார். திராவிட மொழிக் குடும்பத்துக்குள் சிங்களம் வராது என கால்டுவெல் சொன்னார். இதனால்  சிங்களம் ஒரு இந்தோ – ஆரிய மொழி என்ற கருதுகோளே மேலோங்கிக் காணப்படுகிறது.

மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யும் சமூக – மொழியியலாளர்கள் இரண்டு வெவ்வேறு மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் போது அவை பல வழிகளில் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றன எனக் கூறுகிறார்கள். இதில் எந்த மொழி வல்லமை மற்றும் பெருமை படைத்ததோ அந்த மொழி அன்பளிப்புச் செய்யும் மொழியாகவும், இரண்டாவது மொழி அன்பளிப்பை வாங்கும் மொழியாகவும் மாறிவிடுகிறது.  சிங்கள – தமிழ் ஊடாடத்தில் தமிழ் கொடுக்கும்  மொழியாகவும் சிங்களம் அதனை வாங்கும் மொழியாகவும் இருக்கின்றன.

சிங்களத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை சிங்கள பாஷேவய தெமிள வாசன அகராதிய (A Glossary of Tamil Words in Sinhala) என்ற நூலில் தொகுத்துள்ளார்கள்.

தமிழ்மொழி சிங்களமொழியின் மீது செல்வாக்குச் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் மற்றும் உன்னதமான இடத்தைக் காலத்துக்குக் காலம் வகுத்தமையே.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள்

கிமு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 247) கிமு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்துள்ளனர்.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு தமிழர்கள் (பாலி மொழியில் தெமிள) – சேனன், குத்திகன் – அனுராதபுரத்தைப் பிடித்து 22 ஆண்டுகள் ஆண்டதாக மகாவம்சம் சொல்கிறது. அடுத்ததாக எல்லாளன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் (கிமு 145 – 101) ஆட்சி செய்தான்.

ஆயினும் இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் பவுத்த மதத்துக்கு பெருமை தேடித் தந்த வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகைமுனுவின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது.  இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

எல்லாளனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் புன்நெறியைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனக்  கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும் தன் பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் குறை கூறுகிறது.

“எல்லாளன்  –  துட்டகைமுனு இடையிலான போர் சிங்களவர் –  தமிழர்  போர் என  மகாநாம தேரர்  கெட்ட எண்ணத்தோடு சித்திரிக்கிறார். கைமுனுவின்  குடிவழியைக் கவனமாக ஆராய்ந்தால் எல்லாளனைப் போலவே அவனும் ஒரு தமிழனே. ஒரேயொரு வேறுபாடு. கைமுனு பவுத்தன். எல்லாளன் இந்து. எல்லாளன் பவுத்தத்தின் எதிரியல்ல.  உண்மையில் அவனைப் பவுத்தர்கள் நேசித்தார்கள். கைமுனுவிடம் காணப்பட்ட  பலமான இந்து மரபுவழி காரணமாக அவன்  கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான்.”

(The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle. Dr.S.K. Vadivel – Tamil Canadian)

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்தற்குக் காரணம் தனது மூதாதையர் ஆண்ட அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும்.  மகாநாம தேரர்  துட்டகைமுனுவின் போர் முழக்கம்  “இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு” என்ற கதையைப் புனைந்துள்ளார்.

துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் என்றொரு இனம் இருக்கவில்லை. அவன் தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். மேலும் மகாநாம தேரர் காலத்திலும் (6 ஆம் நூற்றாண்டு) சிங்களவர் இருக்கவில்லை. சிங்களமொழியும் இருக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே இன அடையாளம் இன உணர்வு இருக்கவில்லை. சாதி, சமய  பிரிவுகளே இருந்தன. இனம் (Race) என்ற சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்த ஒன்றாகும். தமிழில் இனம் என்ற சொல் சுற்றத்தை அல்லது  குலத்தைக் குறிக்கும்.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும்  தரும் என்பது திருக்குறள். இந்தக் குறள் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

இனம் என்ற சொல் அபிராமி அந்தாதியில் சுற்றம் அல்லது நட்பு என்ற பொருளில் பாடப்பட்டிருக்கிறது. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் … என்பது பாடல்.

அண்மையில் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அந்தோனி தெரிவித்திருந்தார்.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பவுத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக  எண்பிக்க  ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் மகிந்த இராசபக்சேக்கு   மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.

ஜக்சன்  இலங்கையின்  தொடக்க  கால வரலாறு பற்றித்  தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் படி சனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே ஜக்சன்  மகிந்த இராசபக்சே  துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்ற மகாவம்ச  கூறும்  கதையின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.  துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தாம் என்று எண்பிக்கும் வகையில் இப்போது  அனுராதபுரம் முழுதும்  தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி வருகிறார்கள்!

மகாவம்ச கதையின் அடிப்படையில் கவுதம  புத்தர் தொட்டு  மகிந்த இராசபக்சே  வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.

கவுதம புத்தரின் தந்தை                                – சுத்தோதனன்
சுத்தோதனனின் உடன்பிறப்பு                 – அமிதோத்தனன்
அமிதோதனனின் மகன்                             –  பாண்டுசாக்கிய
பண்டுசாக்கியாவின் மகள்                        – பட்டககச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பாண்டுவாசுதேவனை மணக்கின்றாள். அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன்                      – பாண்டுகாபயன்
பண்டுகாபயவின் மகன்                            –  முத்துசிவன்
மூத்தசிவனின் மகன்                                 – தேவநம்பிய தீசன்
தேவநம்பிய தீசனின்  உடன்பிறப்பு     –   மகாநாகன். இவனே உருகுணைக்கு தனது மனைவியோடு தப்பிச் சென்று புதிய  இராசதானியை உருவாக்கியவன்.
மகாநாகவின் உடன்பிறப்பு                   –  யடாலதிஸ்ஸ

யடாலதிஸ்ஸவின் சகோதரன்            –  கோத்தபாய

கோத்தபாயாவின் மகன்                       –  காகவண்ண தீசன்
காகவண்ண தீசன் மகன்                       –  துட்டகைமுனு

மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது. (வளரும்)


இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல!

நக்கீரன்

(பாகம் 3)

அநகாரிக தருமபாலர், ஏ.இ.குணசிங்கா போன்றோரைப் பின்பற்றியே டி.பி. விஜயதுங்க சிங்களவர்களை மரத்துக்கும் தமிழர்களை அம்மரத்தைச் சுற்றிப் படரும் கொடிக்கும் அந்தக் கொடிக்கு மரத்துக்கு அப்பால் வாழ்வு இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.

“The majority race should be safeguarded for the livelihood of the minority races. When the tree is safe, the vines can get entangled in it and grow. If the majority race is divided and it seeks the assistance of minority races for power, no fruitful activity could take place.” (Sunday Times, 30 January 1994)

ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடு

சிங்கள – பவுத்த கடும்போக்காளர்களில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா “தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டைச் சேராதவர்கள் எப்படித் தனிநாடு கோரமுடியும்?” என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் (1995) கேட்டிருந்தார். அதற்கு முன்னர் அனுராதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும், நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று பேசியிருந்தார்.(http://www.sangam.org/taraki/articles/2006/11-29_Kumaratunge.php?uid=2092)

செப்தெம்பர் 23, 2008 இல் கனடாவில் வெளிவரும் National Post  என்ற நாளேட்டுக்கு செவ்வி கொடுத்த படைத்தளபதி சரத் பொன்சேகா இப்படியான இனவாதக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

“I strongly believe that this country belongs to the Sinhalese but there are minority communities and we treat them like our people…We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country…We are also a strong nation … They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things.” (http://www.nationalpost.com/news/story.html?id=832374)

“இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது. ஆனால் சிறுபான்மை சமூகங்களும் இருக்கின்றன. அவர்களை நாங்கள் எங்களைப் போலவே நடத்துகிறோம் ……….. நாங்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள் – 75 விழுக்காடு – எனவே இந்தநாட்டைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு. அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்….நாங்கள் பலம்வாய்ந்த நாட்டை உடையவர்கள் …. அவர்கள் (சிறுபான்மையினர்) எங்களோடு இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் – சிறுபான்மை என்ற போர்வையில் – தேவைக்கு அதிகமானவற்றை கோர எத்தனிக்கக் கூடாது.”

சரத் பொன்சேகா போலவே சுற்றுச் சூழல் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சம்பிக இரணவக்க கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

The Minister of the Environment, Champika Ranawaka, who belongs to the extremist Jathika Hela Urumaya group, went further and opined that “The Sinhalese are the only organic race of Sri Lanka. Other communities are all visitors to the country, whose arrival was never challenged out of the compassion of Buddhists. But they must not take this compassion for granted. The Muslims are here because our kings let them trade here and the Tamils because they were allowed to take refuge when the Moguls were invading in India. What is happening today is pure ingratitude on the part of these visitors.” (http://www.nation.lk/2008/10/26/newsfe6.htm)

“சிங்கள இனம் மட்டுமே ஸ்ரீலங்காவின் ஒரே பூர்வீக இனமாகும். ஏனைய சமூகங்கள் இந்த நாட்டுக்கு வந்துள்ள வருகையாளர்கள்  ஆவர். அவர்களது வருகையை நாம் பவுத்தர்களுக்குரிய இரக்க குணம் காரணமாக எதிர்ப்புக் காட்டாது விட்டு விட்டோம். ஆனால் இந்தக் கருணையை அவர்கள் வெறுமனே எடுத்துக் கொள்ளக் கூடாது. இங்கே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால் எமது அரசர்கள் அவர்களை வாணிகம் செய்ய அனுமதித்தார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்கள் இந்தியாமீது மொகலாயர்கள் படையெடுத்த போது அடைக்கலம் கேட்க அனுமதிக்கப்பட்டவர்கள். இப்போது நடப்பது என்னவென்றால் அந்த வருகையாளர்கள் முற்றிலும் செய்நன்றி இல்லாது நடந்து கொள்கிறார்கள்.”

சிங்கள – பவுத்த பேரினவாதிகள் இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் இலங்கை சிங்கள – பவுத்தர்களுக்கு உரிய நாடென்றும் தமிழர்கள் படையெடுத்து வந்தவர்கள்,  காலிகள், கொள்ளைக்காரர்கள், புறசமயத்தவர்  என்றும் மகாவம்சம் சித்திரிக்கிறது. இன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகள் மலைநாட்டுத் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்கிறார்கள். அந்த மக்கள் இந்த நாட்டில் குடியேறி 200 ஆண்டுகளாகி விட்டன. மாடாக உழைத்து காடுகளைப் பசும் தோட்டங்களை உருவாக்கி ஓடாகப் போனவர்கள். அப்படியிருந்தும் அந்த மக்களைக் கேவலமாகப் பார்க்கும் போக்கே காணப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை இந்த சிங்கள – பவுத்த இனவாதிகள் தென்னிலங்கையில் விதைத்து வருகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலத்தை அபகரித்து அவர்களது அடையாளத்தை அழித்து விடத் திட்டமிட்டுச் செய்யப்படும் எத்தனம் இதுவாகும். மறுபுறம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது. பாவற்குளத்தில் ஆசியாவில் மிக உயரமான புத்தர் சிலை கட்டுவதற்கான ஆயத்தங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாவற்குளம் நூறு விழுக்காடு தமிழ்க் கிராமமாகும்.  இதே  வேகத்தில் சிங்களக் குடியேற்றம் தொடருமானால் கிழக்கு மாகாணம் போல வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவர் என்பது நிச்சயம்.                                                                                                                                                                                                                 பாவற்குளம்Image result for பாவற்குளம்

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  தலைவர் ஞானசார கல பொட தேரர் கூறியிருக்கிறார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் “இந்த நாட்டின் ஆதிக் குடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கல பொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும். ஏன் பவுத்த மதம் கூட இந்தியாவில் இருந்து வந்தது தான். அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறைச் சாத்தியமில்லாத கூற்றுக்கள் கூறுவதை நிறுத்த வேண்டும்” என கொழும்பில் மே 22, 2013 அன்று  இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து அய்க்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் “தமிழர்களின் நிலம், கடல் பறி போகின்றது. தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழித்தொழிக்கப்படுகின்றது. அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் என்ற உரிமையைக் கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள, பவுத்த நாடு என்று அறிவிக்கின்றீர்கள்.  விமல்வீரவன்ஸ, சம்பிக்க இரணவக்க, குணராசஅமரசேகர, ஞானசார கல பொட தேரர் ஆகியோர் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் இந்த அரசு இருக்கின்றது”  எனக் குற்றம் சாட்டினார்.

“செப்தெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கிவிட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடமில்லாத நிலைமை ஏற்படப் போகின்றது” என்றார்.

சிங்கள – பவுத்த பேரினவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது  எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர்  இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும் கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.

விஜயனது வருகைக்கு முன்னர் நாகர்,  இயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களே இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மகோதரன், குலோதரன் ஆகிய நாகவம்ச  மன்னர்களும், குவேனி, மஹாகல சேனன் ஆகிய இயக்க வம்ச மன்னர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

இலங்கையில் உள்ள நாகர் புத்தர் சிலை

மகாவம்சம் மற்றும் ஜாதக கதைகள் இலங்கையை தம்பபாணி எனக் குறிப்பிடுகிறது. இலங்கையில் உள்ள  நாகதீபம், கல்யாணி (இன்றைய களனி) என்ற இடங்களையும் அங்கே இயக்கர்களும் இயக்கிகளும் வாழ்ந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. மகாவம்சம் இயக்கர்கள் தெற்கிலும் (மகியங்கன) நாகர்கள் வடக்கிலும் (நாகதீபம்) வட மேற்கிலும் (கல்யாணி) வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள் திராவிட இன மக்களாவர்.

இந்த நாகர்கள் கோதாவரி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடையில் மற்றும் அவந்தி மற்றும் மவுரியக் காலங்களில் மற்றும் அதற்குப் பின்பும் வாழ்ந்த நாகர்களுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. பழைய தமிழ் மரபுப்படி பல்லவ வம்சத்தின் பாரம்பரியம் பீலிவளை என்ற நாக இளவரசியை சோழன் கிள்ளிவளவன் திருமணம் செய்து கொண்டதன்  மூலம் உருவானது எனச் சொல்லப்படுகிறது.

தென்பகுதி துணைக்கண்டத்தில் அவர்களுடைய பெயருடன் தொடர்புள்ள நாகர்கோவில், நாகப்பட்டினம்,நாக்பூர் போன்ற ஊர்கள் உள்ளன.

ஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள்  தமிழ் (திராவிட) இனமக்கள் வாழ்ந்ததை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன காணப்படுகின்றன. ஆனைக்கோட்டை,  கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள ‘கோவேந்தன்” ‘கோவேதன்” என்ற சொற்கள்   பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகரி தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.

பவுத்தம் இலங்கையில் பரவி ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே பவுத்த நாகர்களுக்கும்  பவுத்த தமிழர்களுக்கும் சிங்கள அடையாளம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.

பின்னால்  வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களைப்  பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி தமிழ்மக்களை சிங்களவர்களாக இனம் மாற்றம் செய்துவிட்டது. மலைநாட்டுத் தமிழர்கள் அயல் கிராமங்களில் உள்ள சிங்களப் பெண்களை மணம் செய்து கொள்வதால் அவர்களும் சிறிது சிறிதாக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்து வருகிறார்கள். ஈழத்தில்  தமிழர்கள் சிறுபான்மையாக மாறியதற்கு இந்த மதமாற்றமும் மொழி மாற்றமும் காரணிகளாகும்.

கிபி 140அளவில் கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தார். இதில் இலங்கைத் தீவை தப்ரபேன் (Tabrobana) என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில் குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே காணப்படுகின்றன.

தப்பிரபேன் என்பது தாமிரபரணி என்ற பெயரின்  ஒரு உருமாற்றம்.  தீபவம்சத்தில் இந்தப் பெயர் தம்பபாணி என்றும் கிரேக்கர்கள் இதை தழுவி தப்ரபேன் என அழைக்கலானார்கள்.  விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடத்தில் (புத்தளம்) ஒரு நகரை உருவாக்கி அதற்கு தம்பபாணி (செப்புநிற பூமி) என்று  பெயர் இட்டதாக  மகாவம்சம் (அதிகாரம் VII) கூறுகிறது.


 


நாகர்கள் இலங்கையின் பழங்குடி மக்கள்

 நக்கீரன்

(பாகம் 5)

நாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை  ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika)  மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara)  ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு  நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று இளைப்பாறினார். பின்னர் திகவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிய பின்னர் மீண்டும் ஜெத்வனத்துக்குத் திரும்பினார்.  நதியருகே தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் ஸ்தூபி கட்டப்பட்டது. களனியிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று தனது அடிச்சுவட்டைப் பதித்தார்.

முன்னர் குறிப்பிட்டவாறு புத்தர் தனது வாழ்நாளில் வட இந்தியாவை விட்டு வேறு எங்கும் பயணம் செய்யவில்லை.  தென்னாட்டுக்குக் கூடப் புத்தர் வந்ததாக வரலாறு இல்லை. இலங்கை தொன்று தொட்டு ஒரு பவுத்த நாடென்றும் அந்த நாட்டுக்கு புத்தர் வருகை தந்து அதனைப் புனிதப்படுத்தினார் என்பதை நிறுவவே மகாவம்ச ஆசிரியர் இந்தக் கதைகளை கட்டியுள்ளார்.

புத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பது மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.

விஜயன்  சந்ததி இல்லாத இறந்த போது நாக வம்சத்தைச் சார்ந்த அரசர்களே கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களது பெயர்கள் நாக என்ற  பின்னொட்டோடு முடிகிறது.

மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்தப் புனைந்துரையைப் புகுத்தியுள்ளார். “வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என” இலங்கையின் பழைய வரலாறு” என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்குப் படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.

இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலப் புலவர்களில் சிலர் வேடர் மற்றும் நாகர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால்வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.

இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.

கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடி  என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.

நாகர்கள் வரலாறு

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆராய்பவர்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையின்  ஆதிக்  குடிகள் என்ற முடிவுக்கு வருவார்கள்.  சிறப்பாக இயக்கர் என அழைக்கப்பட்டோர்.  இராவணன் இயக்க குல அரசன் என்பது இராமாயணம் போன்ற இதிகாசங்களால் அறியப்படும்.

நாகர்கள், இயக்கர்கள் என்பவர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே ஒருமைப்பாடு இன்னமும் ஏற்படவில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண்பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர்களாக – தமிழர்களாக – இருக்கவேண்டும் என்ற கருதுகோள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனிமாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர்களோடும் திராவிடமன்னர்களோடும் வேறுபாடுகாட்டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

பண்டைக்காலத் தமிழக்கத்திலே சேரநாடு என்று பெயர்பெற்றிருந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியாக அமைந்து, இன்று தமிழோடு ஒப்புமைகள் பலவற்றைக் கொண்டுவிளங்கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்தில் நாயர் என்ற சமூகத்தினர் வாழுகின்றனர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் கானப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம்.

நாகர், இயக்கர் இனங்களே இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று மகிந்த தேரரால் வெல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பவுத்த நூலும் இயக்கர்களை  மகிந்த தேரர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர் வடக்கே இமயம் வரையும் தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர்.நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நாகர்கள்  நாகபாம்பை வழிபட்டு வந்தவர்கள். இயக்கர்கள் இறந்த மூதாதையரை வழிபட்டு வந்தவர்கள்.  அச்சத்தின் காரணமாக இந்த வழிபாடு தொடங்கி இருக்கலாம். இந்த வழிபாடு  தமிழர்கள் மத்தியிலும்  பரவலாகக்  காணப்படுகின்றது.

மேலே குறிப்பிட்டவாறு சங்க காலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர்  சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார்.  இவர்கள் நாகவுருவைத்  தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட  கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.

மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழ்க்  குடிகளே ஆவர். தமிழக வரலாற்றின்படி நாகர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர்.

நாகர் வழிபாட்டு முறைமை  சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. மேலும் இலங்கை நாகர்கள் தமிழக அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

மகாவம்சம் மட்டுமின்றி தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. தொலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெரிகின்றது. அன்று நாகர்களும் பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பகுதிகளாகக் காணப்படுகின்றன.

‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை. அதே மணிமேகலை சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினர் என்று  கூறுகிறது.

மணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பற்றிய கதையைக் கூறுகிறது. அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருள் தீர்ந்த பின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

நாலைக்கிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.

பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவுக் கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.

நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள நாகலாந்து நாகர்களது  சொந்த நாடாகும்.

நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும் நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.

நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே.  நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.

முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர்  சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். (வளரும்)



The Origin Of Sinhalese

By: Dr. S. K. Vadivel

After vanquishing King Elara, Gemunu had to fight thirty-two minor Tamil kings (Kshatriyas) in Ruhunu before ruling as a single sovereign over Lanka (101- 77 B.C.).So genuine was Gemunu’s admiration of King Elara’s valour and bravery that he erected a monument in the latter’s honour at the very spot he fell. King Gemunu decreed that the tomb shall be always honoured, i.e. all persons passing by the tomb are to silence their music, get down from their vehicles/horses and walk in silence until they pass the tomb.

In direct contrast, the Sinhala-dominated government in 1948, during the period Dr. S. Paranavithame was commissioner of archaeology, maliciously built the government medical officers’ quarters over the tomb of a king who once ruled over Lanka justly and wisely, over friend and foe alike, without fear or favour for a period of 44 years (145-101 B.C.).

King Duttu Gemeunu died in 77 B.C. The Ruwanwali Seya, the Brazen Palace and the Mirisaveti stupa stand in his memory. His brother Saddha Tissa (77-59 B.C.) succeeded him. In Saddha Tissa’s memory stands the vihara at Digavapi.

Between the reign of Duttu Gemunu and the next important sovereign Valgambha are Thulatha Nagan, (59 BC for forty days), succeeded by his brother Lanja Tissa (59-50 B.C.). His brother Khallata Nagan (50-44 B.C.) succeeded Lanja Tissa. Khallata Nagan was succeeded by his younger brother Vatta Gamini alias Valgambha, who within six months of rule was chased out by a Brahmin named Tissa, who revolted against him.

Seven Tamils who came with their armies from south India supported the Brahmin. Undaunted, Valganlbha collected an army and chased away the seven brothers and regained his kingdom and ruled from (29-11 B.C.). Valgambha demolished the monastery at Giri and in its place built the much-venerated Abhayagiri vihara, in Ailuradhapura. Valgambha was succeeded by his nephew Mahasuli Maha Tissa (11-3 B.C. who was followed by Valgambha’s son Cora Nagan. Cora Nagan’s wife Anula poisoned him; she also poisoned her second husband Kutta Kanna, son of Mahasuli Maha Tissa.

It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father’s side Kavan Tissa, and his mother’s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith.

There is ample evidence that the districts of Hambantota, Galle, Amparai and Ratnapura were the home of Tamils of the Hindu faith who embraced the Buddhism during the 3rd –2nd centuries B.C. and adopted Sinhala as their mother tongue. The shrine dedicated to Lord Murukan at Kathirkamam and Lord Vishnu at Devinuwara is evidence of this. A shrine dedicated to Lord Chandreswara at Hambantota is no more due to the lack of patronage and subsequent neglect. Dr. Edward Muller, onetime commissioner of archaeology, in his “Records of Ceylon,” published in 1883 states, “There are Tamil Brahmi and Asokan Brahmi inscriptions on stones belonging to the 3rd century B.C. The earliest inscriptions in Sinhala are only of the 8th A.D.

Tamil inscriptions of the 2nd century B.C at Thalangoda Vihara, Matale will testify to the fact that Tamil-speaking Buddhist monks lived in caves in the neighbourhood of the vihara. Buddhists, who lived in the neighbourhood of the Diga Vapi vihara, built by King Saddha Tissa in the 2nd century B.C and Buddhists who lived in the neighbourhood of the Naga Vihara at Naga Deepa (Jaffna) were Tamils. Thousands of Tamils of the Buddhist faith who lived in south India during that era, i.e. 8th century A.D. later returned to the Hindu faith.

The Bovatagala inscriptions (30 miles off Kathirkamam) carry the engraved fish symbol of the Pandians. King Duttu Gemunu had to fight 32 Pandian chieftains at Ruhuna to become the sole ruler of Lanka. King Valgambha had to fight seven petty Pandian chieftains to reassume sovereignty at Anuradhapura.

According to Hugh Neville the oli of the Southern Province seen in the villages of Bope, Tiranagama, Madawatte and Bandattara are descendants of the Tamils of south India. They function as astrologers and ritual priests, conducting exorcism – tovil, bali and gara yakka (Matara suniam).

Dr. R. L. Brohier in ‘Discovering Ceylon,’ says, “a tank in Hambantota now called Magama wewa, was in ancient days known as “Pandikulam” – Ooru situ wewa, while even Dr. S. Paranavithana confirms that Ruhuna was the homeland of the Tamils in the pre-Christian era. The Murukan kovil at Kathirkamam and Vishnu kovil at Devinuwara confirm that fact.

Ratnapura, the Gem city: gem in Sinhala is menik; in Tamil it is ratna. The fact that the city is called Ratnapura and not Menik pura is evidence that the inhabitants of Sabaragamuwa in the ancient days were Tamils.

Nuwar Eliya: Nuwara is the corrupted form of the Tamil world Nagara. Eliya is the corrupted form of the Tamil word ‘veliye’ (outside) i.e. outside the city.

Nallathanni in Tamil is, ‘good (fresh) water.’ A village on the road to Adam’s Peak is called ‘Nalla thanni.’ This is evidence that the earliest pilgrims to Adam’s Peak were Tamil-speaking Hindus.

At Devol Devale, Seenigama, among other rituals devotees also walk on embers or red-hot cinders. The Buddha denounced self-immolation. This is evidence that the present Buddhists inherited these practices from their Hindu ancestors who embraced Buddhim in 246 B.C.

The Hindu element is patent in the lifestyle of every Sinhala-Buddhist. The 14th day in the month of April is not Hindu New Year’s day as erroneously believed. It is the New Year’s day of the Tamils. Buddhists in Sri Lanka observe that day as their New Year too. Buddhists get their heads anointed, tie the ‘pirith noola,’ indulge in ‘ganu-denu,’ perform rituals, recite prayers, light incense to the Gods every morning before commencing business for the day, lay foundations at auspicious times etc. etc. It may therefore not be incorrect to assume that Sri Lankan Buddhists, who profess to follow Theravada Buddhism, are descendants of the Tamils (Hindus). No king of Lanka during its 2000 years history claimed that he was from an Aryan dynasty.

There are no walawuas and pattus in north India. The walawuas and pattus of south India became the walauwas and pattus of Lanka. There are no Nayakes in north India. Senanayake, Bandaranaike, Alahakone, Kulathunge, Wickrema, Anuradha, Gunasinghe, Gunaratna etc are obviously Tamil names. Caste divisions are identical with those of the Tamils. North Indians do not worship Lord Mauruka but the Sinhalese worship Lord Muruka with great piety.

H. A. J. Hulugalle, in his booklet ‘Information for Tourists, 1947’ says in the first paragraph on page one: “The Sinhalese are a mixed race, their language has been vastly enriched with words from the Tamil vocabulary.” Mudliyar W. F. Gunawardene says the Sinhala language is primarily a Dravidian language. The structural foundation of Sinhala is Dravidian while the super-structure is Aryan.


Sinhse, Tamils and Buddhismale

October 24, 2012

By Vinod Moonesinghe

A persistent myth, which has helped create disharmony in Sri Lanka, is that the Sinhalese and Tamils have had a continuous history of mutual antagonism from the earliest past. In fact, ethnic enmity in Sri Lanka has modern roots, based in the divisive race politics of the British colonial power. Historically, ethnicity was not really a cause of dissension.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) adopted as their emblem the tiger, the totemic emblem of the Chola emperors, as a challenge to the ‘Sinhalese lion’ of the ‘Lion Flag’. In fact, the ‘Lion Flag’ is an adaptation of the royal standard of the Tamil Nayakkar king of Kandy, Sri Wickrama Rajasinghe.

In the latter stages of the Kandyan kingdom, the Nayakkar royal family and much of the aristocracy were of South Indian Tamil origin – many of whom signed the Kandyan Convention in Tamil. Indeed, such was the hold of the Tamil nobility that each anti-British rebellion, right down to 1848, required a Nayakkar pretender to the throne.

The imagined ancient hostility between Sinhalese and Tamils comes from an erroneous reading of our history; in particular from taking the Pali chronicles, the Mahawamsa and the Culawamsa, out of context.

The colonialists promoted a picture of ‘Aryan’ Sinhalese at odds with ‘Dravidian’ Tamils, so that they could adopt an analogous position: ‘Aryan’ British liberating ‘Aryan’ Kandyans from ‘Dravidian’ Nayakkar domination.

However, to the dismay of the British Raj, the nascent Sinhalese Buddhist bourgeoisie turned these ‘Aryan’ arguments against the British themselves. Unfortunately, the dichotomy between Sinhalese and Tamils was exacerbated – as intended by the colonial power. In the early 20th century the Tamil elite, reacting against ‘Aryanism’, began asserting the superiority of the ‘pure’ Dravidian races over the ‘hybrid mongrel’ Sinhalese.

In this era of post-war reconciliation, we must adjust our exclusivist historiographies. Like our ancestors, we should both emphasise the similarities and enjoy the diversity. The first step could be, as the late Regi Siriwardena suggested, highlighting ‘the diverse ethnic strands that have gone into the making of our nationhood and the various elements that these ethnic groups have contributed to our culture, and indeed to our daily existence’.

Genetic studies indicate that the differences between ‘Sinhalese’ and ‘Tamils’ in Sri Lanka are minor. It should be remembered that entire castes of various origins were assimilated into both ethnic groups; there have also been extensive intermarriages between them and a large part of the ‘pre-Vijayan’ population of the island were absorbed into both.

Archaeological findings indicate that the original population was probably Veddha (Vannialaetto), with whom genetic studies show the Sinhalese have a slight affinity. At some time, there appear to have been migrations of people from India (possibly from central India). Who these people were, we do not know – although they were probably related both to the Bengalis and to south Indian peoples.

Studies on the skeletal remains in the Pomparippu urn burials, part of Sri Lanka’s megalithic Iron Age, indicate the affinity of this population to the modern Sinhalese. Similar urn burials have been found in South India.

The oldest Pali chronicles, the Dipawamsa and the Mahawamsa indicate that they were Yakkhas and Nagas. There appears to be confirmation of this in the statements of ‘Rachias’, the head of the embassy to Claudian Rome, in the Mahayanist ‘Avalokitesvara-Guna-Karandavyuha Sutra’, and in the Chinese monk Fa Hsein’s ‘Record of the Buddhistic kingdoms’.

It is possible that these ‘Nagas’ may have been related to the ‘Nagas’ who lived between the Godavari and Narmada rivers and in Avanti in Mauryan times and later. The south of the subcontinent certainly abounds in their name: Nagercoil, Nagapattinam, Nagpur and so on. The seven-headed Naga (cobra) was associated with lakes and tanks, indicating that the Nagas may have been responsible for the hydraulic civilisation of Sri Lanka and southern India.

It has been suggested the Nagas were ‘Tamils’, which is improbable. The cobra, associated with the Nagas, is ‘Naga’ in the Indo-Aryan languages, but not in the Dravidian. In Tamil it is ‘nalla paambu’ (‘good or correct snake’) or ‘naaga pambu’ (‘Naga snake’); it is also referred to as the ‘Naga snake’ in Telugu and Kannada. This suggests that Dravidian speakers associated the cobra with the Nagas, but were not Nagas themselves.

According to ancient Tamil tradition, the Pallava dynasty had its origins in the union of a Naga princess with a Chola king. The Pallavas may have been a central Indian clan, possibly from the same area as occupied by the Nagas.

In the middle of the 1st Millennium BC, a group of people calling themselves ‘Sinhala’, arrived from North India. Both the Dipawamsa and the Mahawamsa mention that the legendary King Vijaya came from Sinhapura in the Lala country (Gujarat), tarrying at Broach (Bharukkaccha) and/or Sopara (Supparaka) on the way.

This indicates that the settlers came from Gujarat rather than from Bengal, which accords with the linguistic evidence – Sinhala and Dhivehi are closer to Gujarati and Marathi than to Bengali and Gujarat, but not Bengal, was a habitat for lions, associated with Sinhalas in legend. The Kathiawar city of Sihor has been identified with Sinhapura.

Recent genetic evidence has also suggested that Gujarat may have been the place of origin of at least a section of the Sinhalese; a small admixture of Punjabi genes accords with the chronicles’ legends of brides being brought from ‘Madda’ and from ‘beyond the Ganges’.

Variants of the Vijaya legend, which may have a historical core, were extant in the early first Millenium AD, as evidenced by the ‘Avalokitesvara-Guna-Karandavyuha Sutra’, which speaks of a prince called ‘Sinhala’, son of ‘Sinha’ coming to ‘Tamradvipa’, and that henceforth the island was known as ‘Sinhala Dvipa’. This legend was later associated with the Sindhi mariner Sinbad.

Tamradvipa is a modification of Tamraparni, the name of the island mentioned in the Emperor Asoka’s rock edicts. The name is rendered in the Dipavamsa as ‘Tambapanni’ and the Greeks used an adaptation, ‘Taprobane’.


Sinhalese, Tamils and Buddhism

October 25, 2012

By Vinod Moonesinghe

(Part I of this article appeared yesterday)

In ancient times, the name of a people referred mainly to its elite, the ruling class which held most of the cultural capital. In Herodotus’ debate between Darius and the others about which type of state was desirable, ‘the people’ refer to the upper class. Karl Kautsky has pointed out how the Jews kept their identity only because of the preservation in exile in Babylon of their elite.

Similarly, ‘Sinhalese’ and ‘Tamil’ in the context of ancient Sri Lanka and South India must relate mainly to their upper social strata, which superimposed their own languages and cultures on the indigenous populations. When Dutugemunu waged war against Ellalan (Sinhala ‘Elara’), it was a battle between two dynasties, one Sinhalese and the other Tamil, not two peoples.

The picture emerges of an indigenous population (Nagas and Yakshas), related to populations in South India and in Bengal, being overlaid by an elite stratum of Indo-Aryan speakers, who spread out from the Tambapanni area and establish cultural hegemony over the rest the island. Certainly, by the 5th century BC, there was evidence of Prakrit writing in the Brahmi script at Anuradhapura.

This viewpoint is given added plausibility by studies done on Iron Age remains at Pochampad in Andhra Pradesh which indicate that there was a continuity of populations over time, rather than abrupt demographic displacement, and a gradual merging of invading peoples with the existing populations.

The spread of Tamil would have followed a similar pattern. Tamil was a relative newcomer to the ‘Tamil homeland’, Tamilakam. Some linguistic studies have indicated that the Godavari valley was the homeland of the Dravidian speakers, but others suggest that they have migrated to this area from the North West. The split between Telugu and Tamil took place about 1000 BC, so the arrival of Tamil-speakers in Tamilakam was probably later than this.

The Chola, Pandya and Satiyaputra dynasties are mentioned in the Asokan rock edicts from the third century BC. About this time began Sangam literature, associated mainly with the Pandyan capital Madurai.

However, Indologist Aska Parpola has suggested that the Pandyas were an Indo-Aryan dynasty ruling over a Dravidian population. Interestingly, 2nd century BC Brahmi script inscriptions at Kodumanal, near Coimbatore, have revealed Indo-Aryan names, such as Sumanan, Tissam, and Visaki, along with rather more Tamil-sounding ones.

The discovery of Brahmi characters in the Tamil language, incised on pottery in Adichanallur, near Tirunelveli, may push the boundary back a couple of centuries. It is significant that the discovery has been made directly across the Gulf of Mannar from Anuradhapura, the site of the contemporary Brahmi script pottery, suggesting a common origin.
The earliest evidence we have of Tamil-speakers in Sri Lanka comes from the Mahavamsa, which mentions the ‘Damila’ sons of a horse-shipper, Sena and Guttika about the 2nd century BC. It also mentions, shortly after this, that Elara was a ‘Damila’ nobleman who came from the Chola country.

In terms of religion, there was no clear-cut differentiation into ‘Sinhalese Buddhists’ and ‘Tamil Hindus’. Jainism and Ajivakism, as well as Buddhism, flourished in Sri Lanka. The Mahawamsa says that Pandukabhaya built dwellings for Brahmins, Ajivakas and Jains (‘Niganthas’). Vattagamani Abhaya built the Abhayagiri Buddhist monastery on the site of Pandukabhaya’s Jain Tittharama, in revenge for the taunts of a Nigantha called Giri.

Jainism and Buddhism also had a strong hold among contemporary Tamils. The term ‘Sangam’ in the description of classical Tamil literature refers to the Jain Sangha. ‘Aimperumkappiyam’, the five great epics of ancient Tamil literature are: ‘Silappatikaram’, a neutral work by a Jain author, Ilango Adigal; the Buddhist ‘Manimekalai’ and ‘Kundalakesi’; and the Jain ‘Civaka Cintamani’ and ‘Valayapathi’.

The city of Kaveripattinam (modern Puhar) appears to have been central to Buddhism in Tamilakam. Significantly, it is considered to be the birthplace of the deities Pattini and Devol. The Manimekalai says it had seven Buddhist monasteries, built by ‘Indra’ (possibly the Arhant Mahinda).

It is possible that Mahinda and Aritta, a relative of the Sinhala king Devanampiya Tissa, proselytised Tamilakam. Near Madurai is the hill of Arittapatti, originally a Buddhist site, now holy to Siva.

In the 5th century AD a celebrated Tamil monk, Ven Buddhadatta studied at the Mahavihara at Anuradhapura. He later composed Buddhist works in Tamilakam, at Kaveripattinam, Uragapuram, Bhutamangalam and Kanchipuram. He was one of many learned Tamil Buddhist monks, of whom the names of at least thirty have come down to us.

The Buddhism practised in Tamilakamam (where it seems to have existed until the 13th century) was liberal and open-minded, allowing much speculation considered heretical by the orthodox Mahavihara in Anuradhapura. Thus Mahayanism and Tantrism flourished. Aspects of the southern Bhakti belief also began to intrude into Buddhism. Evidently, Tamilakam was the origin of Bodhisattva worship.

There was a legend that Agastya, the father of Tamil, learnt the language from the Bodhisattva Avalokitesvara, the god of the Potiyil hill to which he had withdrawn. According to the Japanese scholar Shu Hikosaka, Potiyil is derived from ‘Bodhi-il’ (‘Buddhist place’) and is the same as Mahayanist Potalaka (‘Buddha Loka). He identified it with the Pothigai hills (also known as Agastiyar Malai) near Tirunelveli.

One is tempted to draw a connection between ‘Pothigai’ or ‘Potiyil’ with the Potgul Vehera in Polonnaruwa. Interestingly, former Archaeological Commissioner, Raja de Silva has identified the statue at the Potgul Vehera, commonly assumed to be Parakramabahu, as Agastya. Could this have been a Mahayanist institution, associated with Avalokitesvara?

Avalokitesvara had many of the attributes of the pre-Brahmanical deity Siva (also known as Isvara), including the possession of two gender aspects – the female ‘Shakti’ being Tara. It is hence not surprising that many south Indian Buddhist places of worship subsequently became Siva temples.

This may be a clue to the Mahavamsa’s attitude to Tamils. Historians have tended to focus on the fact that the chronicle was written at the time of Dhatusena, who had just completed a struggle against several Tamil kings, which they consider the reason for this antipathy.

However, the Mahawamsa was primarily an ecclesiastical document of the Mahavihara, seeing the world through orthodox Theravada Buddhist eyes. Its concern with worldly activities was mainly limited to maintaining royal patronage. The primary threat to that patronage came from what it saw as heresies.

The Mahawamsa’s treatment of Elara is moderate; it not only praises the justice of his rule, thus making him the prototype ‘good Soli king’ of later folk lore. It says he ‘freed himself from the guilt of walking in the path of evil… though he had not put aside false beliefs’. Nor does it speak badly of the ‘Seven Damilas’ who overthrew Vattagamani Abhaya; it merely mentions that, on being asked whether Buddhism would prosper under the former or the latter, the Sangha took the King’s side.

On the other hand, its treatment of Sanghamitta, ‘a bhikkhu from the Cola people who was versed in the teachings concerning the exorcism of spirits, and so forth’, is clearly antagonistic. This ‘lawless’ bhikkhu (apparently of the Dharmmaruci sect) was embittered against the Mahavihara, it says, and ingratiated himself with the future king Mahasena.

Under the last-named, Theravada was persecuted and the Dhammaruci sect was triumphant. Under Dhatusena and his sons too, that is, in the period the Mahawamsa was written, Theravada Buddhism was embattled. Archaeological evidence indicates that Sigiriya, to which Dhatusena’s son Kasyapa retreated, was a Mahayanist monastery complex.

So the Mahavihara was threatened not by Tamil monarchs or armies, but by Buddhist schismatics influenced by Tamil priests from Tamilakam. Hence, what we read in the chronicles is not antagonism towards Tamil people, but antipathy to ‘heresies’ carried hither by Tamil Buddhist prelates.
(Concluded)


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply