இலங்கை வரலாறு

“A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி”

Kandiah Thillaivinayagalingam ·

நிர்வாகி

துளி/DROP: 1809 [திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறல் (15.06.2025)]

முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான “இலங்கை வரலாறு” எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார்.

நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந்து கல்வி பயின்றோம். புராணக் கதைகள் மற்றும் இதிகாசங்களின் வரலாறுகளின் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, வரலாற்று உண்மை, தொல்லியல், அறிவியல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையின் உண்மையான வரலாற்றை வெளிக்கொணர்தலே அவரது மூல நோக்கமாக இருந்தது.

2024ம் ஆண்டு ஜூன் 15ம் நாள், கனடா ஸ்கார்பரோவில் அவர் திடீரென இயற்கை எய்தியபோது, ஏற்கனவே ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். அதில் 110 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” மிக முக்கியமானதாகும். இந்த அத்தியாயத்தில், தீபவம்சம், மகாவம்சம், மற்றும் இராசவலிய ஆகியவற்றின் உண்மை மற்றும் பிழைகள், நேர்த்தியான ஒப்பீடு, மற்றும் வரலாற்று அடித்தளங்களை வைத்து ஆராயப்படுகிறது.

அவரது கருத்து மற்றும் எழுத்து பாணியை முழுமையாக தமிழில் அப்படியே கொண்டு வருவதுடன், மேலும் பல தரவுகளைச் அல்லது விளக்கங்களைச் சேர்த்து விரிவுபடுத்திய தமிழாக்கத்தை அவரது முதல் ஆண்டு நினைவு நாளில் (15.06.2025) இருந்து, அவருக்கான பணிவான அஞ்சலியாக, 120 க்கு மேற்பட்ட பாகங்களில், ஒழுங்கான கால இடைவெளியில், பதிவிட உள்ளேன்.

இந்த பணிவான முயற்சி, இலங்கையின் சிக்கலான, பல்லின வரலாற்றை நேர்மையுடனும் துணிச்சலுடனும் வெளிச்சம் போட்டுக் காட்ட பாடுபட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள அறிஞரான எனது மறைந்த நண்பருக்கு ஒரு உண்மையான அஞ்சலியாக அமையும் என்று நம்புகிறேன்.

🔹 2025ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியிலிருந்து, திரு. கந்தையா ஈஸ்வரனின் அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” எனும் விரிவாக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு தொடராக வெளியிடப்படும். வெளியீடுகள் பின்வரும் தளங்களிலும் மற்றும் சிலவற்றிலும் தொடர்ச்சியாக வெளியிடப்படும்

In Loving Memory of Civil Engineer, Mr. Kandiah Easwaran (15.06.2025)

The unfinished historical book “History of Sri Lanka” was the life’s work of my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer by profession and a dedicated independent researcher. He spent nearly 10 to 12 years compiling this comprehensive work, drawing from numerous rare references gathered from both Sri Lanka and across the world.

Mr. Easwaran and I were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. His aim was to write a historically accurate account of Sri Lanka — not through the lens of mythical puranas and epics, but through real historical facts and critical inquiry.

By the time of his sudden passing on 15th June 2024, in Scarborough, Canada, he had completed seven chapters of the book. His analysis challenged long-held beliefs based on Sinhala Buddhist chronicles such as the Dipavamsa, Mahavamsa, Culavamsa, and Rajavaliya — evaluating them against archaeological, historical, and scientific evidence.

As a tribute on his first death anniversary (15th June 2025), I have translated Chapter 2 of his manuscript, which consists of 110 pages, titled “Ceylon Chronicle”, into Tamil. The chapter examines the truth and falsity of these chronicles by comparing their narratives, internal inconsistencies, and factual basis. The focus is especially on the period from the mythical arrival of Vijaya up to King Mahasena, as described in Dipavamsa, Mahavamsa, and Rajavaliya.

While preserving Mr. Kandiah Easwaran’s original writing, I have also expanded it with additional verified facts and references, resulting in more than 120 parts, which will begin to be posted as a humble tribute to him starting on his first anniversary (15.06.2025)

I hope this humble effort stands as a sincere tribute to my late friend — a committed scholar who strove to illuminate the complex, multi-ethnic history of Sri Lanka with integrity and courage.

🔹 From 15th June 2025 onwards, the expanded Tamil translation of Mr. Kandiah Easwaran’s Chapter 02: Ceylon Chronicle — likely in over 120 parts — will be published periodically on the following platforms & few more platforms:

என் வலைப்பதிவு / My blog: “A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி” By Kandiah Thillaivinayagalingam –

https://www.facebook.com/groups/978753388866632

எனது தனிப்பட்ட முகநூல் / My Facebook [Kandiah Thillaivinayagalingam] பக்கம்:

https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam

அறிவார்ந்த தேடல் குழு / Arivaarndha Thedal Group:

https://www.facebook.com/groups/266620958015518

யாழ் இணையம் / Yarl Inayam Website:

https://yarl.com

“தேடலின் தீபம் நீயே!”

ஒருஆண்டு கடந்தாலும் இன்னும் வாழ்கிறீர்கள்

ஒவ்வொருபக்கமும் பொழியும் சிந்தனைத் துளிகளில்!

கட்டிடக் கலைஞனாக அறிஞரின் ஒளியாக

இருட்டுக்கு அப்பால் உண்மையைத் தேடினீர்களே!

புராண மறைக்கும் பொய்கள் மறைய

கட்டுக்கதைகளை உதைத்து தள்ளினீர்கள்!

புகழுரை தவிர்த்து உரிமையை உயர்த்த

கடந்த காலத்தை தெளிவாக மாற்றினீர்களே!

புத்தகம் ஓயவில்லை குரல் மடியவில்லை

உங்கள் வரிகளில் நீங்கள் வாழ்கிறீர்கள்!

சிதறிய துளிகளிலிருந்து கடல் அகலம் வரை

உங்கள் உண்மையை எடுத்துச் செல்வோமே!

நீங்கள் மறைந்த முதல் ஆண்டில்

உங்கள் பார்வை வலிமைபெற்று நடக்கட்டும்!

A year has passed, yet you remain,

In every page, in thought and name.

A civil hand, a scholar’s light,

You sought the truth, beyond the night.

With ancient scrolls and reason’s fire,

You questioned myths, climbed ever higher.

Not for fame, but for the right,

To make the past more clear, more bright.

Your chapters paused, your voice is still,

But in your work, you live and will.

From scattered drops to ocean wide,

We carry forth your truth with pride.

On this first year since you have gone,

Your vision, strong, still marches on.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna

Kandiah Thillaivinayagalingam

“அறிவியல் நோக்கில் ‘இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]’ ஒரு பார்வை” / “A look at ‘Lanka chronicles’ from a scientific perspective” / In Tamil & English / பகுதி Part: 11]

[This detailed Tamil article is based on the unfinished historical book ‘History of Sri Lanka’ by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத “இலங்கை வரலாறு” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 11 விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / பண்டுவாச[ன்] அல்லது ‘பண்டுவாசுதேவ[ன்]’

முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன், தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு பிள்ளையும் இல்லாமல் இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரரான சுமித்தாவிடம் தனது அரசை தொடர்ந்து ஆள இலங்கைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். என்றாலும் விஜயனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சருமான உபதீச[ன்], விஜயனின் இறப்பின் பின்பாக, தன் பெயரில் உபதிஸ்ஸ நுவர எனும் ஒரு நகரத்தைக் கட்டி, இளவரன் பண்டுவாச[ன்] வரும் வரை சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington / 11 November 1876 – 7 November 1942)) எழுதியுள்ள “இலங்கையின் சுருக்கமான வரலாறு [A Short History of Ceylon – 1926]” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புத்தமதம் அப்பொழுது இலங்கையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் இதன் மூலம் தெரிகிறது. அப்படி என்றால் புத்தரின் இலங்கை வருகை, அதன் நோக்கம் மற்றும் புத்த சமயம் பரப்பவென புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயன் எல்லாம் என்னவாயிற்று?

மகாவம்சத்தின்படி சுமித்தாவின் இளைய மகன் பண்டுவாசுதேவா இலங்கைக்கு, அந்த பொறுப்பை ஏற்க வந்தான். எனவே, இவன் இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விஜயனின் தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில், உபதீசனால் அமைக்கப்பட்டு இருந்த, உபதீச நுவாரா (Upatissa Nuwara) என்ற இடத்தில் இராச்சியம் அமைத்து, (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்) அதன் மன்னரானார். ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை ‘பண்டுவாச’ என்று பெயரிடுகிறது. மேலும் விஜயனுடன் இவன், எவ்வாறு தொடர்பு கொண்டவன் என்று எந்த குறிப்பும் பதியாததால், இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர்.

உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது ‘வாசி’ யின் திரிப்பாகும், எனவே ‘பாண்டியவாசி’ என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். இவன் ‘பாண்டியவாசி’ என்பது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாகச் சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான். இராணி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், அவளின் பரிந்துரையும் அங்கு இருந்து இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். மேலும் இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.

Part: 11 / The important narrative about the consequent kings and the related affairs / ‘Panduvasudeva’

Vijaya ruled for thirty- eight years and died without any son to rule after him. He sent a message to his brother Sumitta prior to his death to come to take over his kingdom. Panduvasa came as per the Dipavamsa (Panduvasudeva as per the Mahavamsa). How Panduvasa is related to Vijaya is not given in the Dipavamsa. Panduvasudeva is the youngest son of Sumitta, the brother of Vijaya as per the Mahavamsa.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 12 தொடரும் / Will Follow

About VELUPPILLAI 3406 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply