பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

நொண்டிச் சிந்து

நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த

மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார் – சொன்னமாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,

யந்திர சூனி யங்கள் – இன்னும்எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

தந்த பொருளைக் கொண்டே – ஜனம்தாங்குவர்

உலகத்தில் அரசரெல்லாம

அந்த அரசியலை – இவர்அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,

துப்பாக்கி கொண்டு ஒருவன் – வெகுதூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,

அப்பால் எவனோ செல்வான் – அவன்ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,எப்போதும் கைகட்டுவார் – இவர்யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்தநிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,

கொஞ்சமோ பிரிவினைகள்? – ஒருகோடிஎன் றால் அது பெரிதா மோ?

ஐந்துதலைப் பாம்பென் பான் – அப்பன்ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் – பின்புநெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச்

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே

கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் – ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச்

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,

ஆத்திரங் கொண்டே இவன் சைவன் – இவன்அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே –

இதைநினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,

கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்

துஞ்சி மடிகின் றாரே – இவர்துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் – இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தை கள்போல் – பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,

நண்ணிய பெருங்கலைகள் – பத்துநாலாயிரங் கோடி நயந்துநின்ற

புண்ணிய நாட்டினிலே – இவர்பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

About VELUPPILLAI 3406 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply