திருமணம், சோதிடம், கோள் பயம் – அறிவியல் பார்வையில் ஒரு விளக்கம்

தமிழ்ச் சமூகத்தில் திருமணம் என்பது ஆண், பெண் என இரண்டு தனிநபர்களின் இணைப்பு மட்டுமல்ல; அது குடும்பம், சாதி, பொருளாதாரம், மரபு, நம்பிக்கை ஆகிய பல அடுக்குகள் சேர்ந்த ஒரு சமூக நிகழ்வு. அந்த நிகழ்வின் மையத்தில் இன்று வரை வலுவாக நிலைத்திருப்பவை சோதிடம், சாதகப் பொருத்தம்,  செவ்வாய் தோசம், சனி–ராகு பயம் போன்ற நம்பிக்கைகள்.

பலருக்கு இவை கேள்விக்குரியவை அல்ல; “எப்போதும் இப்படித்தான்” என்ற இயல்பான நடைமுறைகள். ஆனால் நவீன சமூகத்தில் வாழும், கல்வி பெற்ற, தர்க்க சிந்தனை கொண்ட மனிதனுக்கு ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது:

திருமணம் போன்ற வாழ்நாள் முடிவுகளை, அறிவியல் ஆதாரம் இல்லாத சோதிட நம்பிக்கைகளின் மீது வைத்துக் கட்டுவது சரியா?

இந்தக் கட்டுரை அந்தக் கேள்வியை அறிவியல், மனவியல், சமூக விளைவுகள் ஆகிய மூன்று கோணங்களில் ஆராய முயல்கிறது.


சோதிடம் இராசிச் சக்கரமும் – உண்மை என்ன?

இராசிச் சக்கரம் என்பது சூரியன் தனது பாதையில் (ecliptic) பூமியைச் சுற்றிவரும் போது (இது ஒரு மாயத் (illusion) தோற்றம். பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது).

படம் 1

இராசி நட்சத்திரங்களின் (Zodiac constellations) வழியாக சூரியன்  தனது பாதையில் பயணிக்கிறது.

பூமியிலிருந்து  வானத்தைப் பார்க்கும் ஒருவருக்கு, ஓர் ஆண்டு காலப்பகுதியில் சூரியன் வானில் ஒரு குறிப்பிட்ட பாதையில் நகருவது  போலத்  தோன்றுகிறது. இந்தச் சூரிய பாதையை ஆங்கிலத்தில் ecliptic என்று கூறுவர். இது நட்சத்திரங்களின் பின்னணியில் மேலும் கீழும் 8 பாகை அகலத்தில்  உள்ள இராசி நட்சத்திரங்களின் (Zodiac constellations) வழியாக செல்கிறது. அது ஒரு  பட்டி ((belt)    வடிவத்தில் காணப்படுகிறது.

சூரிய மண்டலத்தின் கோள்களும் (planets) இந்தப் பாதையின் அருகே காணப்படுகின்றன, ஏனெனில் அவற்றின் வலயப்பாதைகள் பூமியின் வலயப்பாதைகளுடன் கிட்டத்தட்ட சமமான நிலையில் உள்ளன. சந்திரனும் (Moon) இவ்வேளையில் நெருங்கியதாகத் தோன்றுகிறது, ஆனால் சந்திர வலயச் சுழற்சிகள் (lunar nodes) காரணமாக சிறிது மாறுபட்டிருக்கும். சூரிய பாதையை (ecliptic ) எனப் பெயர் வைத்திருக்கப்படக்  காரணம், சூரிய மற்றும் சந்திர கிரகணம் அப்பாதையை கடந்து போகும் போது மட்டுமே சூரிய – சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

வானத்தை 360 பாகையாகக் கருதி, அதை 12 சம பகுதிகளாக தோதிடர்கள் பிரித்துக் கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். மேடம் முதல் மீனம் வரை உள்ள இராசிகள், இயற்கையில் செயல்படும் சக்திகள் அல்ல; தொலைவில் காணப்படும் விண்மீன் கூட்டங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்த போது ஒரு உருவம் தெரிந்தது. அவை ஆடு, மாடு, சிங்கம், போல் காணப்பட்டன. அவை மனிதன் தன்னிச்சையாககக் கொடுத்த பெயர்கள் மட்டுமே. ஒரு குழந்தை பிறக்குப் போது என்ன இராசியில், என்ன நட்சத்திரத்தில், அன்றைய கோள்களின் இருப்பிடம்  ஆகிய வற்றை வைத்தே சோதிடர்களால் பலன் சொல்லப்படுகிறது.

                                        படம் 2

                                    12 இராசிகள்

                                     படம் 3

உண்மையில் இந்த இராசிகளின் நீளம் சீராக இல்லாமல் பெரிதும் சிறிதுமாகக் காணப்படுகிறது.

                   இராசிகளின் சரியான தூரம் (பாகை)

E018 The Zodiac – Rasi Length - AI ML in Astrology

அறிவியல் அடிப்படையில்  பார்த்தால்:

  • கோள்களின்  ஈர்ப்பு விசை மனித வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு இல்லை (Plait, 2002)
  • புதன், சனி போன்ற கோள்களின் ஈர்ப்பு விசை, ஒரு பிரசவ அறையில் இருக்கும் மருத்துவரின் ஈர்ப்பை விடவும் குறைவு
  • இராகு, கேது போன்றவை கோள்களே அல்ல; சூரியன்–சந்திரன் பாதைகள் சந்திக்கும் கணிதப் புள்ளிகள் (Nodes). சோதிடம் இந்தக் கணிதப் புள்ளிகளை இராகு, கேது என அழைக்கின்றன.
  • பூமியின் அச்சு மாறுதலால் (Precession of Equinoxes) சோதிடம் கூறும்  இராசிகள் இன்று உண்மையான வானியல் நிலைகளுடன் பொருந்துவதில்லை (Aveni, 1997)

இந்த அடிப்படைகளைப் பார்க்கும் போது, சோதிடம் என்பது சோதிக்கக்கூடிய அறிவியல் கோட்பாடு அல்ல. அது சான்றுகளால் எண்பிக்கப்படவில்லை; மறுக்கப்படும் போதும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதுவே அறிவியல் அல்ல என்பதற்கான முக்கிய அடையாளம்.

படம் 3 சூரியனில் இருந்து எட்டுக் கோள்களின் தூரம்.

வானத்தை 360 பாகையாகக் கருதி, அதை 12 சம பகுதிகளாக சோதிடர்கள் பிரித்துக் கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். மேடம் முதல் மீனம் வரை உள்ள இராசிகள், இயற்கையில் செயல்படும் சக்திகள் அல்ல; தொலைவில் காணப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு மனிதன் கொடுத்த பெயர்கள் மட்டுமே. உண்மையில் இந்த இராசிகளின் நீளம் சீராக இல்லாமல் பெரிதும் சிறியதுமாகக் காணப்படுகிறது.

கிரகங்களின் ஈர்ப்பு விசை – எளிய கணக்குடன் விளக்கம்

ஈர்ப்பு விசை அளவை கணக்கிட நியூட்டனின் விதி பயன்படுகிறது:

F = G × (M₁M₂ / r²)

இங்கு
F = ஈர்ப்பு விசை
G = நிலையான மதிப்பு
M₁, M₂ = இரண்டு பொருள்களின் நிறை
r = அவற்றுக்கிடையிலான தூரம்

இந்தச் சமன்பாட்டில் முக்கியமானது:
👉 தூரம் அதிகரித்தால் விசை மிகவும் குறைகிறது (r² காரணமாக).


1️ பிரசவ அறையில் இருக்கும் மருத்துவர்

ஒரு 80 கிலோ நிறையுடைய மருத்துவர், குழந்தையிலிருந்து 0.5 மீட்டர் தூரத்தில் உள்ளார் எனக் கொள்வோம்.

இந்த நிலையில் உருவாகும் ஈர்ப்பு விசை மிகவும் சிறியதாக இருந்தாலும், அருகாமை காரணமாக அது கணக்கிடத்தக்க அளவில் இருக்கும்.


2️ செவ்வாய் (Mars) கோளின் ஈர்ப்புத் தாக்கம்

செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து குறைந்தபட்சம் சுமார் 5.6 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும்.

அதன் நிறை மிகப் பெரியதாயினும், மிகப்பெரிய தூரம் காரணமாக அதன் ஈர்ப்பு தாக்கம்:

👉 மருத்துவரின் ஈர்ப்பை விட பல மடங்கு குறைவு


3️ சனி (Saturn) கோளின் தாக்கம்

சனி மிகப்பெரிய கோள். அது பூமியிலிருந்து சுமார் 120 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது.

👉 அதன் ஈர்ப்பு தாக்கம் மனிதன் மீது மிக மிகச் சிறியது
👉 அன்றாட பொருட்களின் ஈர்ப்பையும் விட குறைவு

ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 150 மில்லியன் மைல்கள்.

Planetary Distances From The Sun - Astronomical Units

சனி – ராகு : ஏன் இத்தனை பயம்?

சனி, ராகு என்ற சொற்கள் பலருக்குள் உடனடி அச்சத்தை உருவாக்குகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் தாமதம், இழப்பு, நோய், மன அழுத்தம் போன்ற இயல்பான அனுபவங்களுக்கு மனிதன் வெளிப்புறக் காரணம் தேடினான். அந்தக் காரணங்களுக்கே சனி, ராகு என்று முகம் கொடுத்தான்.

இந்தப் பயம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள்:

  • தெரியாத எதிர்காலம் குறித்த அச்சம்
  • “தோஷம்” என்ற பெயரில் உருவான பரிகார பொருளாதாரம்
  • சமூக மொழி: ஏழரை சனி, ராகு காலம், கண்ட சனி போன்ற பயமூட்டும் சொற்கள்

ஆனால் ஒரே சனி காலத்தில்:

  • சிலர் தொழிலில் உயர்கிறார்கள்
  • சிலர் திருமணம் செய்கிறார்கள்
  • சிலர் குழந்தை பெறுகிறார்கள்

இதுவே கோள்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கவில்லை என்பதற்கான எளிய, ஆனால் சக்திவாய்ந்த சான்று.


கோள் பயம் – மனநிலை சிக்கல்

கோள்  பயம் என்பது வானியல் சிக்கல் அல்ல; அது முழுக்க முழுக்க மனநிலைச் சிக்கல் இந்தப் பயம் மனிதனின் தன் நம்பிக்கையைச்  சிதைக்கிறது, செயல் திறனை குறைக்கிறது, முடிவெடுக்கும் துணிச்சலை அழிக்கிறது (French & Richards, 2013).

கோள்  பயம் இருக்கும் போது:

  • பொறுப்பு கோள்கள்மீது தள்ளப்படுகிறது
  • தோல்விக்கு வெளிப்புற காரணம் கிடைக்கிறது
  • முயற்சி குறைகிறது
  • வாழ்க்கை மெதுவாக நிறுத்தப்படுகிறத

இதிலிருந்து விடுபட, பரிகாரங்கள் தேவையில்லை. தேவைப்படுவது தர்க்க சிந்தனையும் செயல்பாடும். மனிதன் செயல்படும் இடத்தில், கோள் பயம் நிலைக்க முடியாது.


திருமணமும் சாதகப் பொருத்தமும் – அறிவீனமா?

திருமணம் வெற்றி பெறுவது பல மனித காரணிகளின் கூட்டுத் தொகை:

  • உரையாடல் திறன்
  • ஒருவருக்கு ஒருவர் மரியாதை
  • ஒரே மதிப்பீடுகள் (values)
  • பொருளாதாரப் புரிதல்
  • மன–உடல்  நலம்

எந்த அம்சத்தையும் சாதகப் பொருத்தம் அளவிடுவதில்லை. 10 பொருத்தம், 8 பொருத்தம் போன்ற எண்கள்:

  • அறிவியல் அளவீடுகள் அல்ல
  • ஆய்வுகளால்  எண்பிக்கப்படாதவை
  • மனிதர்களை எண்களாகக் குறைக்கும் அபாயகரமான நடைமுறை

இதன் சமூக விளைவுகள் கடுமையானவை:

  • பொருத்தம் உள்ள ஆண் – பெண்  ‘பொருத்தம் இல்லை’ என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள்
  • வன்முறை, பொருந்தாத மனநிலை உள்ள திருமணங்கள் ‘பொருத்தம் இருக்கு’ என்ற பெயரில் தொடர்கின்றன
  • திருமணத் தோல்விக்கு பிறகு சாதகம் ஒரு வசதியான குற்றவாளியாக மாற்றப்படுகிறது

அறிவுள்ள மாற்று என்ன?

சாதகப் பொருத்தத்துக்கு மாற்றாக, திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய கேள்விகள்:

  • வாழ்க்கை இலக்குகள் ஒத்திருக்கிறதா?
  • பணம், சேமிப்பு, கடன் பற்றிய பார்வை என்ன?
  • கோபம், மோதலை எப்படிக் கையாள்கிறார்கள்?
  • பாலின சமத்துவம், மரியாதை இருக்கிறதா?
  • குடும்ப எல்லைகள் (boundaries) தெளிவாக உள்ளதா?

இவையே உண்மையான, நடைமுறையில் வேலை செய்யும் “பொருத்தங்கள்”. இவை எந்த சாதகத்திலும் இல்லை; ஆனால் திருமண வாழ்க்கையில் மிக முக்கியமானவை.


சமூக அதிகாரமும் சோதிடமும்

சோதிடம்  ஒரு தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமல்ல; அது சமூக அதிகாரத்தின் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. குடும்பத்தில் மூத்தவர்கள், சமூகத்தில் மதிப்பு பெற்றவர்கள், அல்லது ‘அறிந்தவர்கள்’ என்ற பெயரில் சிலர், சோதிடத்தை வைத்து பிறரின் வாழ்க்கை முடிவுகளை கட்டுப் படுத்துகிறார்கள்.

பெண்கள் மீது சோதிடத்தின் தாக்கம்

சாதகப் பொருத்தமும் தோஷக் கதைகளும் அதிகமாக பாதிப்பது பெண்களைத்தான்.

  • ‘செவ்வாய் தோஷம்’ என்ற பெயரில் பெண்கள் நிராகரிக்கப்படுதல்
  • வயது அதிகரிக்கும்போது ‘ஜாதகம் காரணம்’ என்ற பழி
  • தோல்வியடைந்த திருமணங்களில் குற்றம் பெண்மீது தள்ளப்படுதல்

இவை அனைத்தும் அறிவியல் சிக்கல்கள் அல்ல; பாலின சமத்துவமின்மையின் வெளிப்பாடுகள்.


சட்டமும் பொது வாழ்வும் – சோதிடத்தின் இடம்

நவீன சனநாயக சமூகத்தில்:

  • சட்டங்கள் சான்றுகளின் அடிப்படையில் இயங்குகின்றன
  • மருத்துவம் அறிவியல் சோதனைகளின் அடிப்படையில் வளர்கிறது
  • கல்வி தர்க்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் படுகிறது

இந்த அமைப்புகளில் எங்கும் சோதிடம் அதிகாரப்பூர்வ தீர்மானக் கருவியாக இல்லை. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும், குறிப்பாக திருமணத்தில், அது முழு அதிகாரம் பெற்றது போல நடக்கிறது. இந்த முரண்பாடே சோதிடத்தின் அறிவியல் தட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது.


ஏன் இவ்வளவு காலம் சோதிடம் நீடிக்கிறது?

சோதிடம் உண்மை என்பதால் அல்ல; அது சில தேவைகளை நிறைவு செய்வதால் நீடிக்கிறது:

  • உளவியல் (மனத் திருப்தி அல்லது நிம்மதி)
  • பொறுப்பிலிருந்து தப்பிக்கும் வழி
  • சமூக ஒப்புதல்
  • உறுதியற்ற வாழ்க்கைக்கு ஒரு எளிய கதை

அறிவியல் சிந்தனை கடினமானது; அது கேள்விகள் கேட்கச் சொல்கிறது. சோதிடம் எளிதானது; அது பதில்கள் தருவதாக நடித்துக்கொள்கிறது.


அறிவியல் சிந்தனை – மாற்றுப் பாதை

சோதிடத்தை மறுப்பது மட்டுமே போதாது. அதற்குப் பதிலாக வளர்க்க வேண்டியது அறிவியல் சிந்தனை:

  • சான்று கேட்கும் பழக்கம்
  • காரண–விளைவு தொடர்பைத் தேடும் மனநிலை
  • ‘நடந்ததால் உண்மை’ என்ற தவறான தர்க்கத்தை நிராகரித்தல்

இந்த சிந்தனை வளர்ந்தால், சோதிடம் தானாகவே தனது அதிகாரத்தை இழக்கும்.


விரிவான முடிவு

சோதிடம், சனி–ராகு, சாதகப் பொருத்தம் ஆகியவை மனித வாழ்க்கையின் இயல்பான சிக்கல்களுக்கு கொடுக்கப்பட்ட சமூக விளக்கங்கள். அவை அறிவியல் உண்மைகள் அல்ல; ஆனால் சமூக அடிப்படையில்  சக்திவாய்ந்த நம்பிக்கைகள்.

திருமணம் என்பது கோள்களின் சேர்க்கை அல்ல; அது ஆண் – பெண் இருவருக்கும் இடையிலான வாழ்க்கை உடன்படிக்கை. அந்த  உடன்படிக்கை வெற்றி பெறுவது சாதகத்தால் அல்ல; உரையாடல், சமத்துவம், பொறுப்பு, அன்பு, மனப் பொருத்தம்  ஆகியவற்றால்.

மனிதன் கோள்களின் கைதி அல்ல. அவன் எடுக்கும் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு. ஆண் – பெண் இருபாலாரிடத்தில் ஒத்த கல்வி, ஒத்த வேலை,  ஒத்த திரு, ஒத்த தோற்றம், ஒத்த குடிப்பிறப்பு (சாதி அல்ல) ஒழுக்கம் இருந்தால் தாராளமாக திருமணத்தை செய்து வைக்கலாம்.  சோதிடப் பொருத்தங்களை பார்த்து   சோதிடர் திருமணப் பொருத்தம் இல்லை என்பதை நம்பி ஆண் – பெண் திருமணங்களை அருள் கூர்ந்து  தள்ளிவிட வேண்டாம்.  அல்லது நிறுத்திவிட வேண்டாம்.

சாதகம் பார்க்காது செய்த திருமணங்கள் வெற்றி பெற்றுள்ளன. சாதகம் பார்த்து செய்து திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதாவது திருமணங்களின் வெற்றி, தோல்விக்கு சாதகப் பொருத்தம் காரணம் அல்ல.


Be the first to comment

Leave a Reply