மீண்டும் அரியணை ஏறும் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 04) நடைபெற இருக்கிறது. 234 தொகுதிகளை கொண்ட இந்தச் சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகின்றன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு வீதம் 85.15 விழுக்காடு ஆகும். இது புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.

2021 தேர்தலில் 73.63 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இம்முறை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த உயர்வை நேரடியாக அரசியல் தீர்ப்பாக எடுத்துக் கொள்வது சிக்கலானது. வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள்—பெரிய அளவில் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு—இந்த விழுக்காடு உயர்வைப் பாதித்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மேற்கு வங்காளத்திலும் வாக்குப் பதியு உயர்ந்துள்ளது.

இந்தத் தேர்தல் வெளிப்படையாகப் பார்க்கும்போது பல முனைப் போட்டி போல தோன்றினாலும், நடைமுறையில் இது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கிடையேயான இருமுனைப் போட்டியாகவே அமைந்துள்ளது. விஜயின் தமிழர் வெற்றிக் கழகம் (TVK) போன்ற புதிய அரசியல் சக்திகள், வெற்றி எண்ணிக்கையை விட வாக்கு வித்தியாசத்தை பாதிக்கும் காரணிகளாகவே உள்ளன. வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு (Exit Poll) பின்வருமாறு அமைந்துள்ளன.

ஒருங்கிணைந்த கருத்துக் கணிப்பு

அட்டவணை 1

கருத்துக் கணிப்பு நிறுவனம்திமுக+அதிமுக+TVK / பிறர்முக்கிய கணிப்பு
  India Today – Axis My India125–14090–1050–5திமுக தெளிவான முன்னிலை
ABP – C Voter115–13095–1100–5திமுக முன்னிலை, நெருக்கமான போட்டி
Times Now – ETG120–13590–1100–5திமுக முன்னிலை
Republic – P-MARQ110–125100–1150–5கடுமையான போட்டி
NewsX – Polstrat105–120105–1200–5சமநிலை
Jan Ki Baat110–13095–1150–5திமுக சிறிய முன்னிலை

இந்த அட்டவணை ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகிறது:

*  பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் சாத்தியம் இருப்பதாகக் காட்டுகின்றன.
* ஆனால் வித்தியாசம் நிலையாக இல்லை — பெரிய வெற்றி முதல் நெருக்கமான போட்டி வரை மாறுபாடு உள்ளது.

மண்டல வாரியான அரசியல் படிமம் இந்தத் தேர்தலின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்துகிறது. வட தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை பெறும் வாய்ப்பு அதிகம். மேற்கு தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி தனது பாரம்பரிய வலிமையைத் தக்க வைத்திருக்கிறது. தென் தமிழ்நாடு இறுதி முடிவை தீர்மானிக்கும் சமநிலை மண்டலமாகவே உள்ளது. டெல்டா பகுதிகள் திமுக அணிக்குச் சாதகமாக இருக்கலாம்.

மண்டல வாரியாக தேர்தலுக்குப் பிந்திய வாக்குப் பதிவு(Exit Poll)  

அட்டவணை 2

மண்டலம்முன்னிலைஅரசியல் நிலை
வட தமிழ்நாடுதிமுக+நகர்ப்புற ஆதரவு அதிகம்
மேற்கு தமிழ்நாடுஅதிமுக+பாரம்பரிய வலிமை
தென் தமிழ்நாடுகலப்புமுடிவு தீர்மானிக்கும் மண்டலம்
டெல்டா / மத்தியதிமுக+நிலையான ஆதரவு

இந்தத் தேர்தலில் பெண்களின் வாக்குப் பதிவு குறிப்பிடத்தக்க அம்சமாகும். பல இடங்களில் பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட அதிகமாக இருந்துள்ளது. குடும்ப நலத் திட்டங்கள், விலைவாசி, மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை பெண்களின் வாக்கு மனநிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. நெருக்கமான போட்டி நிலவும் தொகுதிகளில் பெண்களின் வாக்கு இறுதி முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கக்கூடும்.

விஜயின் தமிழர் கழகம் (TVK) இந்தத் தேர்தலில் இருக்கைகள் வெல்லும் சக்தியாக இல்லாமல், வாக்கு வித்தியாசத்தை மாற்றும் “marginal factor” ஆக செயல்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் 2 – 5% வாக்கு மாற்றமே முடிவை பாதிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் சில ஊடகங்கள் நடிகர்  விஜய்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார், அவர்தான் அடுத்த முதலமைச்சர், அமைச்சரவைப்  பட்டியல் தயாராகிவிட்டது எனப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றன.

மொத்தத்தில், இந்தத் தேர்தல் ஒரு தெளிவான அலைத் தேர்தல் அல்ல; மாறாக, மண்டல வேறுபாடுகள், பெண்களின் வாக்கு மற்றும் வாக்குப் பிளவு ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக உருவான நெருக்கமான போட்டி. திமுக கூட்டணி முன்னிலை பெறும் வாய்ப்பு இருந்தாலும், அதிமுக கூட்டணியின் மண்டல வலிமைகள் காரணமாக இறுதி முடிவு கடைசி வரை திறந்த இழுபறி  இருக்கும்.

வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்துள்ளன. பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது தமிழ்நாட்டில் ஒரு கலாசாரமாக வளர்க்கப்பட்டு விட்டது. இது மக்களாட்சிக்கு நல்தல்ல.

தேர்தலுக்குப் பிந்திய பெரும்பாலான கருத்துக் கணிப்பு மு.க. ஸ்டாலின்  மீண்டும் அரியணை ஏறுவார் என்றே கூறுகின்றன. ஆனால் மே 4 இல் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே மக்களது திருவுள்ளம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்காக மாறியதா இல்லையா என்பது தெளிவாகும். 

About nakkeran 209 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply