உலகமொழிகளில் பக்திமொழி என்று பாராட்டத்தக்க பாடல்கள் அமைந்த மொழி தமிழே என அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். அருளிச் செயல்களில் அமைந்துள்ள தமிழ்த்திறம் முதன்மைக் காரணமாக அமைந்தது. இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அன்பர் வழிபாட்டினை ஏற்றருள் புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமுறையாசிரியர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும், இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் அருளாளர்கள் பலரும் தமிழை அடைகொடுத்துப் போற்றி் பாடியுள்ளனர். அத்திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
திருஞானசம்பந்தரின் செந்தமிழ்
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய மூவருள்ளும் முதன்மையானவர். மறையவர் மரபில் தோன்றி முதல் மூன்று திருமுறைகள் பாடிய ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
`ஞானத்துயர் சம்பந்தன்
நலங்கொள் தமிழ்’ (14)
`எந்தையடி வந்தணுரு
சந்தமொடு செந்தமிழ்’ (326)
`பாரின்மலி கின்ற புகழ்நின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
உரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள்’ (333)
`முத்தமிழ் விரகனே
நானுரைத்த செந்தமிழ் பத்துமே’ (373)
பல இடங்களில் செந்தமிழ்ச் சிறப்புகளை விளக்கியுள்ளார்.
அப்பரின் செந்தமிழ்
தேவார மூவரில் இரண்டாமவர் திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம் மற்றம் ஆறாம் திருமுறைகளைப் பாடியருளியவர் தமிழில் பரமன் புகழைப் பாடுதலே தன் பணியாகப் பொறித்துள்ளார். உருக்கம் மிக்க ஒண்தமிழ்ப் பாடல்கள் அப்பர் அருளிச் செயல்கள் திருக்கடைக்காப்புப் பாடுதல் இவர் வழக்கமன்று. நமச்சிவாயத் திருப்பதிகத்திற்கு மட்டும் இவர் பயன் கூறியிருப்பினும் தன் பெயரைச் சுட்டவில்லை. ஒரு பாடலில் செந்தமிழ் (91) என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.
`தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ (1)
`முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்’ (23)
`ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ (23)
எனவரும் திருத்தொண்டகப் படற்பகுதிகள் புலப்படுத்துகின்றன. ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் காணப்பெறும் தமிழ் பற்றிய தனிச்சிறப்பினைக் காணலாம்.
சுந்தரர் செந்தமிழ்
திருஞானசம்பந்தருக்கு அடுத்த நிலையில் மிகுதியான பண்களைப் பயின்றவர் சுந்தரர் தமிழிசையின் மாண்பினை உணர்ந்தவர்.
`பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே’ (24)
`பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்’ (29)
என்ற சிவனடி போற்றுகிறார் சுந்தரர்.
`நாளும் இன்னிசையில் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை’ (62)
இப்பாடலில் `தமிழ்’ என்ற சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது. தமிழ்க்கலை, நெறி, பண்பாடு அனைத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளது.
இப்பகுதியில் நற்றமிழ், தண்தமிழ், அருந்தமிழ், ஒண்தமிழ், செந்தமிழ், வண்தமிழ், இன்தமிழ் முதலிய அமுதச் சொற்களினால் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைச் சுந்தரர் கூறுகிறார்.
திருவாசகத் தமிழ்
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறைகளில் ஒன்று சங்கம் வைத்துத் தமிழாராய்ந்த மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்ட வழியின் நட்பினை.
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை (8-10)
உளங்குளிரச் செய்யும் உயரியல்பால் தண்தமிழ் என்றும் நம் மொழியைத் திருமுறையாசிரியர்கள் உணர்ந்து பாராட்டினார்கள்.
`உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ’
என்ற பாடலில் மணிவாசகப்பெருமான் சங்கத் தமிழின் மாண்பினை விளக்கியுள்ளார்.
திருவிசைப்பாவில் செந்தமிழ்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பக்தி நலங்கனிந்த பதிகங்களைத் தமிழின் மேல்வரம்பாகக் கொண்ட சுந்தரரைப் போலவே திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய சேந்தனாரும் கொண்டுள்ளார். பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர் என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில் இவர் போற்றியுள்ளார்.
`பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும்’ (4-2)
`ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை’ (5-1)
`அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப்
பால்நேர் பாடல்பத்தும்’ (7-3)
தமிழைப் போற்றும் பாங்கில் தேவார மரபினைத் திருவிசைப்பா அடியொற்றிச் சென்றுள்ள உண்மையினை மேற்கோள் பகுதிகள் உறுதிப்படுத்துகின்றன.
திருமந்திரத்தில் தமிழ்
திருமூலர் தமிழ், வடமொழி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளில் புலமை படைத்தவர். இம் மொழிகள் யாவும் நாவல நாடாகிய இந்தியாவிலும், ஈழம் தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றன.
மொழிப்பொதுமை பேணிய திருமூலர் இம்மொழிகளில் சிறப்பாக வியந்து கூறப்பெறும் தமிழ் வடமொழி ஆகிய இருபெரும் மொழிகளையும் உமையம்மைக்கு ஈசனே புகட்டியதாகத் திருமூலர் சுட்டியுள்ளார்.
`ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே’ (65)
`தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே’ (66)
மெய்ப்பொருள் நூலினைத் தமிழ்ச் சாத்திரம் (87) என்று திருமூலர் குறித்தனர். திருமந்திரம் முதல் தமிழ் ஆகமம் என்பதைச் சேக்கிழார் சுட்டினார்.
இறைவனைத் தமிழால் வழிபடுவதைப் பெரிதும் விரும்பியுள்ளார் திருமூலர். எனவே,
`செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு’ (1089)
`தமிழ் மண்டலம் ஐந்தும் தழுவிய ஞானம்’ (1646)
எனவே `பஞ்சத்திராவிடம்’ என்ற கொள்கை ஒரு வகையில் பொருத்தம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. திருமூலரின் மொழிக்கொள்கை பரந்த பார்வை கொண்டது என்பது தமிழ்மொழியினைப் பெரிதும் போற்றியதால் தெரிகின்றது.
தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு’ என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.
செந்தமிழ் பிரபந்தமாலை எனப் போற்றப்படும் பதினோராம் திருமுறை செந்தமிழ் பற்றிச் சிறந்த கருத்துகளைக் கொண்டுள்ளது. தமிழில் முதன் முதலில் பதிகம் பாடிய சிறப்புக்குரியவர் காரைக்காலம்மையார். இவர் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில்
`செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்’ (11)
தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ எனற் சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு’ என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.
சுந்தரர் செந்தமிழ்த் திறத்தையும் நம்பியாண்டார் நம்பி உணர்ந்து மகிழ்ந்தவர். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடிய செந்தமிழ்ப் பாசுரங்களில் திளைத்து இன்புற்ற சுந்தரர் அருளிய தண்டமிழ்ப் பதிகங்களின் மாண்பினைச் செந்தமிழ் பாடி (33-32) என்ற தொடரில் குறித்துள்ளார்.
பெரியபுராணத்தில் தமிழ்
நம்பியாண்டார் நம்பியை் போலவே சேக்கிழார் திருஞானசம்பந்தரைத் தமிழாகரர் என்றும் போற்றியுள்ளார்.
`அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன்’ (1256)
`ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழாம்’ (1-5) –
என்ற சேக்கிழார் பாடுகின்றார். மேலும் பல பாடல்களில் அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ், இன்தமிழ், நற்றதமிழ், வண்தமிழ் என்றெல்லாம் பாடிப் பரப்புகிறார். குலோத்தங்கச் சோழனின் தலைமை அமைச்சராக விளங்கிய அரசியல் பணிபுரிந்தவரும், பின்னர் அரசியலைத் துறந்து ஆன்மிக நெறியில் ஈடுபாடு கொண்டு தொண்டர் வரலாற்றைப் பக்தி நனிசொட்டச் சொட்டப் பாடித் `தொண்டர்சீர் பரவுவார்’ எனப் போற்றப்பெற்ற சேக்கிழார் செந்தமிழ்ச் சீர்பரவுவார் என்று பாராட்டைப் பெற்றவர். திருமுறையாசிரியர்களின் இறைநெறி சார்ந்த செந்தமிழ்ப் பற்றும் பிறமொழிகளை ஒப்பமதிக்கும் பண்பும் புலனாகிறது.
உலகநோக்கே தமிழ்நோக்கு, தமிழின் தலையாய இலக்கியங்கள் பலவும் திருமுறையின் உலகப் பார்வையை மேலும் சிறப்பித்துக் கூறுகின்றன.
தமிழ்மொழியே சிறப்பானது என்பது திருமுறையாளர்கள் கருத்தாகம். தாய்மொழியைக் காக்கும் பெரும் பொறுப்பினை ஏற்றுத் திருமுறையில் செந்தமிழ் முழக்கம் இருப்பதை நன்கு உணரலாம்.

தேவார காலத்தில் நாயன்மார்கள் சமயத்தையும் தமிழையும் வளர்த்தார்கள். சலம் பூவொடு துாபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாட மறந்தறியேன் என நாவுக்கரசரும்
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய மூவருள்ளும் முதன்மையானவர். ஞானசம்பந்தரின் தமிழ்ப் பற்று சைவ உலகம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் எல்லோரும் நன்கு அறிந்ததே. பல இடங்களில் செந்தமிழ்ச் சிறப்புகளை விளக்கியுள்ளார்.
மறையவர் மரபில் தோன்றி முதல் மூன்று திருமுறைகள் பாடிய ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
`ஞானத்துயர் சம்பந்தன் நலங்கொள் தமிழ்’
`எந்தையடி வந்தணுரு சந்தமொடு செந்தமிழ்’
`பாரின்மலி கின்ற புகழ்நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
உரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள்’
`முத்தமிழ் விரகனே நானுரைத்த செந்தமிழ் பத்துமே’
திருஞானசம்பந்தருக்கு அடுத்த நிலையில் மிகுதியான பண்களைப் பயின்றவர் சுந்தரர் தமிழிசையின் மாண்பினை உணர்ந்தவர்.
`பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே’ (24)
`பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்’ (29)
என்ற சிவனடி போற்றுகிறார் சுந்தரர்.
`நாளும் இன்னிசையில் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை’ (62)
இப்பாடலில் `தமிழ்’ என்ற சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது. தமிழ்க்கலை, நெறி, பண்பாடு அனைத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளது.
இப்பகுதியில் நற்றமிழ், தண்தமிழ், அருந்தமிழ், ஒண்தமிழ், செந்தமிழ், வண்தமிழ், இன்தமிழ் முதலிய அமுதச் சொற்களினால் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைச் சுந்தரர் கூறுகிறார்.
திருவாசகத் தமிழ்
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறைகளில் ஒன்று சங்கம் வைத்துத் தமிழாராய்ந்த மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்ட வழியின் நட்பினை.
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை (8-10)
உளங்குளிரச் செய்யும் உயரியல்பால் தண்தமிழ் என்றும் நம் மொழியைத் திருமுறையாசிரியர்கள் உணர்ந்து பாராட்டினார்கள்.
`உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ’
என்ற பாடலில் மணிவாசகப்பெருமான் சங்கத் தமிழின் மாண்பினை விளக்கியுள்ளார்.
ஆனால் இன்றைய போலிச் சைவர்கள் தமிழை மறந்து வட மொழிக்கு அடிமையாகி விட்டார்கள். உங்களது கும்பாவிஷேக அறிவித்தல் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
கும்பாவிஷேகம் வட சொல். குடமுழுக்கு தமிழ்ச் சொல். தமிழ்ச் சொல் இருக்க செத்த மொழியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
ஆரம்பம் வட சொல். தொடக்கம் தமிழ்ச் சொல். தொடக்கம் என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினால் தமிழ் வளர்ந்துவிடும் என சைவர்கள் அச்சப்படுகிறார்களா?
பூசை தமிழ்ச் சொல். அதனை தமிழர்களே சமற்கிருத மயப்படுத்தி பூஜை என எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.
இதுபோலவே திருவிழா இருக்க மஹோற்சவம் ஏன்?
அறிவித்தல் இருக்க விஞ்ஞாபனம் ஏன்?
கோயில் இருக்க ஆலயம் ஏன்?
சைவத்தமிழர்களை நான் கேட்டுக் கொள்வது யாதெனில் தமிழை வாழ விடுங்கள்!
நாயன்மார்களை போற்றுவதற்கு முன்னர் அவர்கள் போற்றிய தமிழை வாழ விடுங்கள்!
நக்கீரன்


Leave a Reply
You must be logged in to post a comment.