சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்

சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் பிறப்புரிமை. அதாவது பிறந்த ஒவ்வொருவரும் எதுவித தடையோ, தடுப்போ, அச்சமோ இன்றி வாழ்வதே ஒரு தனிமனிதனின் சுதந்திரமாகின்றது. ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டிற்கமைய தானும் வாழ்ந்து ஏனையவர்களும் நிம்மதியாக வாழ வழிவிடுவதே சுதந்திரத் தத்துவம்.

மற்றையவர்களுக்கு உள்ளத்தாலும், உடலாலும் அதுபோன்ற வேறு எவ்வகையிலாவது இடையூறு செய்யலாம் என்றும், அதற்குத் தமக்குச் சுதந்திரம் உண்டென்றும் எவராவது கருதினால் அவர்கள் சுதந்திரமென்பதன் பொருள் புரியாதவர்களேயாவர். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் நிம்மதியாக வாழவைப்பதே நாகரிக மனிதன் கண்ட சுதந்திரம். அது தனி மனிதனுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் ஏற்புடையது. அத்துடன் அது மொழி, சமயம் என்று பலவாறாக வேறுபட்ட சமூகத்தவருக்கும் ஒத்ததாகும்.

இன்று நமது நாடு அந்நியர் அதாவது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த நாளைக் கொண்டாடுகின்றது. சுதேசிகளின் ஆட்சி மலர்ந்த நாளாக இந்நாள் நினைவு கூரப்படுகின்றது. சுதந்திரம் பெற்றுத் தந்த தேசபிதா என்று முன்னாள் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க பெருமைப்படுத்தப்படுகின்றார்.

சுதந்திரத்திற்காக அதாவது இந்நாட்டில் சுதேசிகள் ஆட்சி மலர வேண்டுமென்று குரல் கொடுத்தவர் வரிசையிலே டி. எஸ். சேனாநாயக்கவிற்கு முன்பே குரல் கொடுத்தவர்களில் தமிழர்களும் அடங்குகின்றனர். சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம், ஹன்டி பேரின்பநாயகம் போன்றவர்களின் பட்டியலுடன் இந்துப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அடங்குகின்றார்.

அந்நிய ராட்சியிலிருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களைத் தேசபக்தர்களாக, சுதந்திர வீரர்களாக கணிப்பிட்டு மரியாதை செய்யும் இவ்வேளையிலே, இந்நாடு அந்நியராட்சிக்கு அதாவது அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அன்று போராடியவர்களையும் இன்று நினைவிற்கொண்டு மரியாதை செய்வது நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். அதனால் வரலாற்றை மீட்டிப் பார்ப்பதும் இன்றைய வேளையில் அவசியமாகின்றது.

கி.பி. 1505 நவம்பர் மாதம் 3 ஆந் திகதி லோரன்ஸ் த அல்மேதா என்ற போர்த்துக்கேய மாலுமி இலங்கையின் காலித்துறைமுகத்தில் கரையொதுங்கிய நாளே ஐரோப்பியர் இந்நாட்டை அடிமைப்படுத்த வழிகோலிய முதல் நாளாகும்.

அக்காலத்தில் இலங்கைத்தீவில் மூன்று பிரதான சுதந்திர நாடுகள் இருந்துள்ளன. வடக்கில் யாழ்ப்பாணம் என்ற தமிழரின் ஆதிக்கத்துக்குட்பட்ட நாடும், மேற்கில் கோட்டை இராச்சியமும், மத்தியிலே கண்டி இராச்சியமுமே அவையாகும். வன்னி பகுதியில் வன்னியென்ற தமிழ்ச் சிற்றரசும் இருந்துள்ளதாகப் பதிவுகள் பகர்கின்றன.

வியாபார நோக்கில் இலங்கைக்குள் புகுந்த போர்த்துக்கேசருக்கு கோட்டை இராச்சியம் சுயவிருப்பின் பேரில் அதன் அரசனான தர்மபாலவினால் 1580 ஆகஸ்ட் மாதம் 12ஆந் திகதி ஒப்பந்தம் மூலம் கையளிக்கப்பட்டது.

1602 மே மாதம் 31 ஆம் திகதி ஜேரிஸ் பன்ஸ் பீல் பர்ஜன் என்ற கடற்படைத் தளபதி தலைமையிலான ஒல்லாந்தப் படை மட்டக்களப்புக்குள் பிரவேசித்தது. போர்த்துக்கேயருக்கு எதிராக கண்டி அரசன் 2ஆம் இராச சிங்கனுக்கும் ஒல்லாந்தருக்கு மிடையே 1638 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1630 வரை சுதந்திரமாக இயங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னரே போர்த்துக்கேயர் கைப்பற்றினர். குறித்த யாழ்ப்பாண அரசும், அதன் அரசர்களும் போர்த்துக்கேய

Be the first to comment

Leave a Reply