வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்

வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில் 

வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் ஊடா­கவே இந்த வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன. இந்­தத் திட்­டத்துக்கு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே அங்­கீ­கா­ரம் அளித்­துள்­ளது.

தேசிய ஒருங்­கி ணைப்பு மற்­றும் நல் லி­ணக்க அமைச்சு தலை­மையில் ஏனைய சில அமைச்சுக்­கள் இணைந்து இதனை முன்­னெ­டுக்­க­வுள் ளன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் இது தொடர்­பான திட்­டம் அமைச்­ச­ர­வை­யில் முன்­வைக்­கப்­பட்டு அனுமதி பெறப்­பட்­டது.

இத்­த­கைய ஒரு திட்­டத்துக்கு அனு­மதி பெறப்­பட்­டி­ருக்­கி­றது என் ப­தை­யும் அது தொடர்­பி­லான பணி­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப் ப­டும் என்­ப­தை­யும் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் வே.சிவ­ஞா­ன­சோதி உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

வடக்கு – கிழக்­கில் 60 ஆயி­ரம் பொருத்து வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்கு முயற்சி எடுக்­கப்­பட்­டது. அதற்கு மக்­க­ளி­டம் இருந்­தும் அர­சி­யல் கட்­சி­க­ளி­டம் இருந்­தும் பெரும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. பொருத்து வீடு­கள் வடக்கு – கிழக்­குக் கால­நி­லைக்கு உகந்­த­வை­யல்ல என்று நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அத்­து­டன் அதற்­கான செல­வில் குறைந்­தது இரண்டு கல் வீடு­களை அமைக்­க­லாம் என்­றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கடும் எதிர்பை அடுத்து இந்­தத் திட்­டம் கைவி­டப்­ப­டும் நிலையை எட்­டி­யது. எனி­னும் அதில் 6000 வீடு­க­ளை­யா­வது மறு­சீ­ர­மைப்­புத் துறை அமைப்­ப­தற்கு அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் விடாப்­பி­டி­யாக முயன்ற வரு­கி­றார்.
இந்த நிலை­யில், வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­களை நிறு­வு­வ­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைக்­கப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­வீ­டு­களை அமைக்­கத் தகு­தி­யுள்ள ஒப்­பந்த நிறு­வ­னங்­கள், இந்த வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கு­ரிய நிதி­யை­யும் கொண்டு வர வேண்­டும் என்று நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிதியை அரசு நீண்ட காலக் கடன் அடிப்­ப­டை­யில் செலுத்­தும்.

இதற்கு அமை­வா­கக் கேள்­வி­கோ­ரலை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த வாரம் அது வெளி­யி­டப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. கேள்­வி­கோ­ரல் குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­வீட்­டுத் திட்­டம் அரச தலை­வ­ரின் கீழுள்ள தேசிய ஒன்­றி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும். இந்த அமைச்­சு­டன் இணைந்து வேறு சில அமைச்­சுக்­க­ளும் பணி­யாற்­றும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விட­யம் தொடர்­பில், தேசிய ஒன்­றி­ணைப்பு மற்­றும்.

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply