No Picture

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

October 8, 2017 VELUPPILLAI 0

புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா?  அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன்  தங்கவேலு (தலைவர்,  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்  வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள்  என்றறியாத  இயல்பினள் எனத்  தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது.  எதிர்காலத்தில் தமிழ்  மெல்லச்சாகும்   மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்  என்ற அச்சம்  அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார்  பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது.   இன்றும்  அப்படியான கருத்து  ஆங்கிலம் கற்ற  பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று  உலகில் வாழுகின்ற 600  கோடி மக்கள்  மொத்தம் 6,000  மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000  மொழிகளிலே வெறுமனே 600  மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400  மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள்.  மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000  மொழிகளை 1,000  க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள்.  அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும்  அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப்  பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு  மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக  மாறிவிடுவது. (ஈ)  […]

No Picture

இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் -1) – சிலாபம் திண்ணனுரான்

October 8, 2017 VELUPPILLAI 0

தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி தொகுதி வாரியான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துவது இந்திய வம்சாவளி மக்களுக்கு பெரும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொகுதி வாரியான தேர்தலுக்குள் விகிதாசார […]

No Picture

வட மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்!

October 7, 2017 VELUPPILLAI 1

வடக்கு  மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்! கட்சி அரசியலுக்காக சின்னத்தனமாக நடந்து கொள்ளக்  கூடாது! வடக்கு மாகாண கல்வி அமைச்சரினால் இடை நிறுத்துமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் மகா […]

No Picture

வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா?

October 7, 2017 VELUPPILLAI 0

வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா? நடராசா லோகதயாளன் வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா? என்ற அச்சம் எழுப்பும் இக் காலத்தில் அதிலிருந்து மீட்கவேண்டிய பொறுப்புனர்ந்து வட மாகாண சபை […]

No Picture

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் சனாதிபதி சந்திரிகா!

October 5, 2017 VELUPPILLAI 0

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் சனாதிபதி சந்திரிகா! நக்கீரன் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவது போல சனாதிபதி சந்திரிகா அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் அந்த சமாதானப் […]

No Picture

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (41-43)

October 5, 2017 VELUPPILLAI 0

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (41-43) 41: தங்கத்துரையின் சூளுரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை […]

No Picture

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (21-40)

October 5, 2017 VELUPPILLAI 0

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (21-40) ஆக்கம்: பாவை சந்திரன் புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961) சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் […]

No Picture

ஈழத் தமிழரின் வரலாறு-விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது

October 5, 2017 VELUPPILLAI 0

ஈழத் தமிழரின் வரலாறு-விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது March 22, 2016 718 Views  ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, […]