அநுர அலைக்குள் மீண்டும் கரைதல்; தமிழர் அரசியலின் சாபக்கேடு!

அநுர அலைக்குள் மீண்டும் கரைதல்; தமிழர் அரசியலின் சாபக்கேடு!

(புருஜோத்தமன் தங்கமயில்)

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தலையீடுகளைச் செய்யாது விட்டால், விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ‘சுனாமி’ ஆழிப்பேரலை அனர்த்தம் தொடங்கி நாட்டில் நடைபெறும் தற்செயலான நிகழ்வுகள் ஈறாக அனைத்து விடயங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி, கட்சி நலன்சார் அரசியலே செய்து வந்திருக்கின்றது. சமாதான முன்னெடுப்புக்களைக் குழப்பி தென் இலங்கை பூராவும் இனவாதத்தீயை கொழுந்துவிட்டு எரிய வைத்து, அந்தச் சூட்டில் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள்  அநுரவும் அவரது தோழர்களும். இறுதிப் போருக்கு வித்திட்டதிலும் அவர்களின் பங்கு கணிசமானது. அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற அநுரவும் அவரது தோழர்களும் அமைத்துள்ள அரசாங்கம் இன்று தமிழ் மக்களிடம் வந்து, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்து விடயங்களிலும் அரசியல் செய்வதாக கூறுகின்றார்கள். காலம் விசித்திரமானதுதான். ஆனால், எந்த முகமூடியை அணிந்து கொண்டாலும் மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால வரலாறுகளைக் கடந்துவிட்டு அரசியல் உரையாடல்களைச் செய்துவிடலாம் என்று நினைப்பது அபத்தமானது. ‘தேசிய மக்கள் சக்தி’ என்பது, மக்கள் விடுதலை முன்னணி அணிந்திருக்கும் முகமூடி மாத்திரமல்ல. அது, மேற்கு நாடுகளுக்கு இணக்கம் காட்டுவதற்காக பின்னப்பட்ட கோணலான கொள்கைப் பிறழ்தலின் எச்ச வடிவம்.

ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற சில இராஜதந்திர நகர்வுகள் மற்றும் நாட்டு மக்களின் பசிக் கோபத்தினால் எழுந்த ‘அரகலய’ பிரசவித்ததுதான் இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். அநுரவும் அவரது தோழர்களும் ஆட்சி மாற்றத்துக்காக உழைத்தார்களா என்றால், ‘ஆம்’ அவர்கள் குறிப்பிட்டளவு உழைத்தார்கள்தான்.  ஆனால், அவர்களின் உழைப்பு என்பது ஆட்சி அமைக்கப் போதுமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அரகலயவும், அதன் உணர்வலைகளுமே தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்தியது. அதனைவிட்டுவிட்டு, தென் இலங்கையின் பாரம்பரிய கட்சிகள் போல, தேசிய மக்கள் சக்தியும், புரட்சி மாற்றம் பேசும் இளைய சகோதரர்களும் நடந்து கொள்ளும் போது, அவற்றைக் கவனிக்காது கடந்துவிட முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையொன்று தொடர்பில் சரியாக தீர்வு காண்பது என்பது, அந்த விகாரையை முழுவதுமாக அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதுதான். அதற்கு மாற்றாக அந்த விடயத்தை எவ்வாறு கையாண்டாலும், அதில் தீர்வு என்ற ஒன்று எப்போதுமே இருக்காது. அது, வழுவிய நீதியாகவே பதிவு பெறும். அரசியல் மேடைகளையும், உரைகளையும் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்கு ‘புரட்சி மாற்றம்’ பற்றிய விடயங்களைக் எடுத்துக் கையாள்வது இலகுவானது. ஆனால், மக்களின் நிலைப்பாடுகளில் நின்று, புரட்சி மாற்றத்தினை செயற்படுவதற்கு அரசியல் தற்துணிவு வேண்டும். அதனை, அநுர அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மாறாக, தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் தமிழ்க் கட்சிகள் அரசியல் தலையீடுகளைச் செய்யக் கூடாது என்று கோருவது அரசியல் அறிவிலித்தனம் இல்லையா? ஏனெனில்,  கட்சிகளின் அடிப்படையே மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வு தொடர்பில் பேசுவதுதான். அதுதான் அரசியலே. அதனை கைவிட்டுவிட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அநுர கோருவதும், அதனை அவரின் தோழர்கள்  நாளும் பொழுதும் தூக்கிச் சுமப்பதையும் எப்படி நோக்குவது? தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் தமிழ் கட்சிகள் தலையிட்டால், அதனை வைத்து தென் இலங்கையிலும் இனவாதம் பரப்பப்படும் என்று அநுர பேசுகிறார் என்றால், அவர் சின்னச் சின்ன சலசலப்புக்களுக்கு எல்லாமும் பயந்த, எந்த முடிவும் எடுப்பதற்கு தைரியம் இல்லாத ஆட்சியாளர்களின் தொடர்ச்சியாக தன்னையும் முன்னிறுத்த முனைகின்றார். 

மக்களின் சொந்தக் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பின் வடிவமாக கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்றுவது என்பது அடிப்படையானது. அதில், யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும். ஆட்சி அதிகாரம் – இராணுவ மேலாதிக்கம் இருக்கின்றது என்பதற்கான தனியார் காணிகளை அபகரித்து ஆக்கிரமிப்பின் வடிவங்களாக மத – மார்க்க நிறுவனங்களையோ, கட்டிடங்களையோ அமைத்துவிடலாம் என்பது, சர்வாதிகாரித்தின் கூறு இல்லையா? அது தொடர்பில், அநுரவின் இளைய சகோதரர்களாக வடக்குக் கிழக்கில் இணைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப மாட்டார்களா? கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களின் ஏவல் தரப்புக்களாக செயற்பட்ட ஈபிடிபி, பிள்ளையான் குழு, கருணா குழு, அங்கஜன் போன்றோருக்கும், இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்ன வித்தியாசம். மக்கள், மாற்றத்தைக் கோரித்தான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக நீங்கள் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மாற்றம் என்பது, மக்களின் அடிப்படை விடயங்களை மறந்து நின்று செயற்படுவதற்காகவா? இந்தக் கேள்விகளை தேசிய மக்கள் சக்தியின் வடக்குக் கிழக்குப் பிரதிநிதிகளை நோக்கி எழுப்பினால், அவர்கள் சமூக ஊடகங்களில் ‘தடை’ செய்கிறார்கள். அல்லது ஒழித்து ஓடுகிறார்கள். அரசியல் தீர்வு விடயத்தில்தான், தேசிய மக்கள் சக்தியின் தமிழ் பிரதிநிதிகளுக்கு எந்தவித புரிதலும் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், தையிட்டி சட்டவிரோத விகாரை போன்ற விடயங்களிலும் குரல் எழுப்புவதற்குக்கூட கட்சித் தலைமையினால் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது என்பது மிகப்பெரிய சோகம். ஏனெனில், மெளனிகள் அரசியலுக்கு பெரும் சாபக்கேடாகும். அப்படியான நிலையினை, தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகள் பிரதிபலிக்கிறார்கள். வடக்குக்   கிழக்கில் மாத்திரமல்ல, மலையக பிரதிநிதிகளின் நிலையும் அப்படித்தான் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகளின் தேர்தல் பிரச்சார உரைகள் மற்றும் பாராளுமன்ற பேச்சுக்களைக் கேட்கும்போது, ராஜபக்ஷ துதிபாடிகள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அதனையே, இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ற தனித்த அரசியல் தெளிவு என்று எதுவும் கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் அரசியல் சார்ந்த தெளிவோடு இயங்கியவர்கள் அல்ல. மாறாக, அரகலய பிரசவித்த புரட்சி மாற்றக் கோசத்திலும் அதனால் எழுந்த அநுர அலையினாலும் உள்வாங்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தனி அடையாளம்- அரசியல் என்ற ஒன்று எப்போதுமே இருந்தது இல்லை. சிலர், தமிழ் கட்சிகளில் சில ஆளுமைகளுக்குப் பின்னால் துதிபாடிகளாக மாத்திரம் கடந்த காலத்தில் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் அரசியல் தற்துணிவு, தெளிவு பற்றி எதிர்பார்ப்பது அபத்தமானதுதான். ஆனால், அந்த அபத்தத்தை நடைபெறவுள்ள   உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்று வதற்கான குறைந்த பட்ச அரசியல் தற்துணிவும் அதுசார் முடிவெடுக்கும் திறனும் இல்லாமல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்துக்குள் எல்லாவற்றுக்குமாக இவர்கள் காத்திருப்பார்கள்.

மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அநுர, தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பைத் தந்தால், அவற்றின் தேவைகளை உடனடியாக தீர்த்து வைப்போம். மாறாக, மாற்றுக் கட்சிகளிடம் ஆட்சியை வழங்கினால், அந்தச் சபைகளுக்கான நிதிப் பங்கீடு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுக்கு பத்துத் தடவைகள் ஆராய்ந்துதான் விடுவிப்போம் என்றிருக்கிறார். கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களும், ரணிலும் செய்த அதே அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அநுரவும் கையில் எடுத்திருப்பதற்கு மேற்கண்ட உரையை உதாரணமாகக் காட்டலாம். மக்களினால் தேர்தெடுக்கப்பட்ட சபைகளை, அதற்கான ஒக்கீடுகளை பொதுவான நிலைப்பாடுகளில் நின்று அணுகுவதுதான் சரியானது. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு உடனடியாக நிதிப் பங்கீடுகளைச் செய்வோம் என்பதும், மற்றக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு நிதி ஒத்துகீடுகளை பலமுறை ஆராய்ந்துதான் விடுவிப்போம் என்பது ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்ட எவராலும் முன்வைக்க முடியாத கருத்து. இந்தக் கருத்துக்கள் எல்லாமும், சுனாமி பேரழிவு காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை நீதிமன்றம் வரை சென்ற தடுத்து, இரக்கமற்ற அரசியல் செய்த மக்கள் விடுதலை முன்னணியின், முன்னணிப் பேச்சாளராக – செயற்பாட்டாளராக – சந்திரிக்கா அமைச்சரவை அமைச்சராக அநுர செயற்பட்ட காலங்களை மீண்டும் கண்முன் கொண்டு வருகின்றன. அந்தக் காலம், ராஜபக்ஷக்களுக்கோ, ரணிலுக்கோ எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை. அது, தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கொடூரமானது. தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடிக்குள் இருந்து அநுரவும் அவரது தோழர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் கொடூர முகங்களைக் காட்டுகிறார்கள். அது வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல் – அதிகார நலன்களில் என்றைக்கும் அக்கறை கொண்டிருந்தது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் முன்னால், தமிழ்த் தேசியக் கட்சிகளா தேசிய மக்கள் சக்தியா என்ற விடயம் எழுந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் உண்டு. கடந்த காலத்தில் அவர்கள் தங்களுக்கு முட்டி மோதி, தமிழர் அரசியலை நடுவீதியில் விட்டிருக்கிறார்கள் என்ற தமிழ் மக்களின் கோபம் நியாயமானது. ஆனால்,  அந்தக் கோபம் தென் இலங்கையின் இனவாத சக்திகளை வடக்குக்   கிழக்கில் வளர்த்துவிடுவதற்கு உதவக் கூடாது. நியாயமான கோபம் என்பது, தமிழ்க் கட்சிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் அளவுக்கானதாக இருக்க வேண்டும். மாறாக, அடுப்புக்குள் விழுந்து வெந்து சாவதாக இருக்கக் கூடாது. இன்றைக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி உங்களை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக கொக்கரிக்கிறார்கள். இந்த நிலை, கடந்த பொதுத் தேர்தலில், அநுர அலைக்குள் எந்தவித புரிதலும் இல்லாமல் தமிழ் மக்கள் சிக்கியதன் விளைவாக எழுந்தது. அநுர அலை தமிழ் மக்களுக்கு இதுவரையில் எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை ஒத்த மேலாதிக்க நிலைப்பாடுகளை மாத்திரமே பிரதிபலித்திருக்கிறது. அப்படியான நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அநுர அலைக்குள் அடிபட்டு அல்லாடியது போலல்லாது, தனித்த தமிழ்த் தேசிய அரசியலைக் காக்கும் நோக்கில், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு கிராமத்தினதும் தேவைகள் உணர்ந்து விடயங்கள் அணுகப்படும். அத்தோடு, அடுத்த கட்டமாக நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தல்களில் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான கட்டங்களை நோக்கி நகர உதவும். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, தமிழ் மக்களும் ஏனோதானோ என்று அணுக முடியாது. தார்மீக நோக்கோடும், தமிழ்த் தேசிய அரசியலை மீட்டெடுத்து அரசியல் போராட்டத்துக்கான குரல் மங்கிவிடாமலும் இருப்பதற்கான கட்டங்களை நோக்கி நகர வேண்டும். 

இலங்கையின் மக்களாக சிந்திப்பதில் என்ன தப்பு என்ற கேள்விகள் அல்லது புரட்சிக் குரல்கள் எழலாம். அதுவும் தேசிய மக்கள் சக்தியின் தோழர்களும் சகோதரர்களும் தமிழ் மக்களை நோக்கி எழுப்பலாம். இலங்கையர்களாக சிந்திப்பது என்பது, முதலில் இலங்கையர்களாக உணர்வதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர்கள் செய்வதில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும். தொடர்ச்சியாக அடக்கியும் ஒடுக்கியும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஆக்கிரமித்துக் கொள்ள முடியும் என்று சிந்திப்பது அபத்தமானது. அந்த சிந்தனைகளை புதிய புரட்சி மாற்றத்தின் பெயரினால் மாத்திரம் செய்துவிட முடியும் என்பதும் தார்மீகமாகாது. இலங்கையர்களாக தமிழ் மக்களை உணர வைப்பதற்கான ஏற்பாடுகளை, தென் இலங்கை ஆட்சியாளர்கள் செய்யாத வரையில், தமிழ்த் தேசிய அரசியல் போராட்டம் நிலைபெற வேண்டியது அவசியம். அந்த தார்மீகத்தை கடந்த காலத்தில் எமக்காக தங்களை அர்ப்பணித்துவிட்டவர்களை நினைத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறைக்குள் தமிழர் அடையாளம் மிஞ்சும். அதற்கு ஒவ்வொரு சின்னக் கட்டங்களிலும் எமது அரசியலைப்   பிரதிபலிப்பது அவசியம். அந்த வகையில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 

-காலைமுரசு பத்திரிகையில் (ஏப்ரல் 20, 2025) வெளியான பத்தி.

Posted 20 hours ago by maruthamooran

Labels: அநுர: தமிழரசு: தமிழ்த்தேசியம்: கட்டுரை: அரசியல்

https://draft.blogger.com/comment/frame/4130723791105698188?hl=en&po=8712056297922068410&lr=

மருதமூரான் |

  1. Apr20அநுர அலைக்குள் மீண்டும் கரைதல்; தமிழர் அரசியலின் சாபக்கேடு! (புருஜோத்தமன் தங்கமயில்)தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தலையீடுகளைச் செய்யாது விட்டால், விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ‘சுனாமி’ ஆழிப்பேரலை அனர்த்தம் தொடங்கி நாட்டில் நடைபெறும் தற்செயலான நிகழ்வுகள் ஈறாக அனைத்து விடயங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி, கட்சி நலன்சார் அரசியலே செய்து வந்திருக்கின்றது. சமாதான முன்னெடுப்புக்களைக் குழப்பி தென் இலங்கை பூராவும் இனவாதத்தீயை கொழுந்துவிட்டு எரிய வைத்து, அந்தச் சூட்டில் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள்  அநுரவும் அவரது தோழர்களும். இறுதிப் போருக்கு வித்திட்டதிலும் அவர்களின் பங்கு கணிசமானது. அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற அநுரவும் அவரது தோழர்களும் அமைத்துள்ள அரசாங்கம் இன்று தமிழ் மக்களிடம் வந்து, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்து விடயங்களிலும் அரசியல் செய்வதாக கூறுகின்றார்கள். காலம் விசித்திரமானதுதான். ஆனால், எந்த முகமூடியை அணிந்து கொண்டாலும் மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால வரலாறுகளைக் கடந்துவிட்டு அரசியல் உரையாடல்களைச் செய்துவிடலாம் என்று நினைப்பது அபத்தமானது. ‘தேசிய மக்கள் சக்தி’ என்பது, மக்கள் விடுதலை முன்னணி அணிந்திருக்கும் முகமூடி மாத்திரமல்ல. அது, மேற்கு நாடுகளுக்கு இணக்கம் காட்டுவதற்காக பின்னப்பட்ட கோணலான கொள்கைப் பிறழ்தலின் எச்ச வடிவம்.ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற சில இராஜதந்திர நகர்வுகள் மற்றும் நாட்டு மக்களின் பசிக் கோபத்தினால் எழுந்த ‘அரகலய’ பிரசவித்ததுதான் இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். அநுரவும் அவரது தோழர்களும் ஆட்சி மாற்றத்துக்காக உழைத்தார்களா என்றால், ‘ஆம்’ அவர்கள் குறிப்பிட்டளவு உழைத்தார்கள்தான்.  ஆனால், அவர்களின் உழைப்பு என்பது ஆட்சி அமைக்கப் போதுமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அரகலயவும், அதன் உணர்வலைகளுமே தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்தியது. அதனைவிட்டுவிட்டு, தென் இலங்கையின் பாரம்பரிய கட்சிகள் போல, தேசிய மக்கள் சக்தியும், புரட்சி மாற்றம் பேசும் இளைய சகோதரர்களும் நடந்து கொள்ளும் போது, அவற்றைக் கவனிக்காது கடந்துவிட முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையொன்று தொடர்பில் சரியாக தீர்வு காண்பது என்பது, அந்த விகாரையை முழுவதுமாக அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதுதான். அதற்கு மாற்றாக அந்த விடயத்தை எவ்வாறு கையாண்டாலும், அதில் தீர்வு என்ற ஒன்று எப்போதுமே இருக்காது. அது, வழுவிய நீதியாகவே பதிவு பெறும். அரசியல் மேடைகளையும், உரைகளையும் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்கு ‘புரட்சி மாற்றம்’ பற்றிய விடயங்களைக் எடுத்துக் கையாள்வது இலகுவானது. ஆனால், மக்களின் நிலைப்பாடுகளில் நின்று, புரட்சி மாற்றத்தினை செயற்படுவதற்கு அரசியல் தற்துணிவு வேண்டும். அதனை, அநுர அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மாறாக, தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் தமிழ்க் கட்சிகள் அரசியல் தலையீடுகளைச் செய்யக் கூடாது என்று கோருவது அரசியல் அறிவிலித்தனம் இல்லையா? ஏனெனில்,  கட்சிகளின் அடிப்படையே மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வு தொடர்பில் பேசுவதுதான். அதுதான் அரசியலே. அதனை கைவிட்டுவிட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அநுர கோருவதும், அதனை அவரின் தோழர்கள்  நாளும் பொழுதும் தூக்கிச் சுமப்பதையும் எப்படி நோக்குவது? தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் தமிழ் கட்சிகள் தலையிட்டால், அதனை வைத்து தென் இலங்கையிலும் இனவாதம் பரப்பப்படும் என்று அநுர பேசுகிறார் என்றால், அவர் சின்னச் சின்ன சலசலப்புக்களுக்கு எல்லாமும் பயந்த, எந்த முடிவும் எடுப்பதற்கு தைரியம் இல்லாத ஆட்சியாளர்களின் தொடர்ச்சியாக தன்னையும் முன்னிறுத்த முனைகின்றார். மக்களின் சொந்தக் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பின் வடிவமாக கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்றுவது என்பது அடிப்படையானது. அதில், யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும். ஆட்சி அதிகாரம் – இராணுவ மேலாதிக்கம் இருக்கின்றது என்பதற்கான தனியார் காணிகளை அபகரித்து ஆக்கிரமிப்பின் வடிவங்களாக மத – மார்க்க நிறுவனங்களையோ, கட்டிடங்களையோ அமைத்துவிடலாம் என்பது, சர்வாதிகாரித்தின் கூறு இல்லையா? அது தொடர்பில், அநுரவின் இளைய சகோதரர்களாக வடக்குக் கிழக்கில் இணைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப மாட்டார்களா? கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களின் ஏவல் தரப்புக்களாக செயற்பட்ட ஈபிடிபி, பிள்ளையான் குழு, கருணா குழு, அங்கஜன் போன்றோருக்கும், இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்ன வித்தியாசம். மக்கள், மாற்றத்தைக் கோரித்தான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக நீங்கள் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மாற்றம் என்பது, மக்களின் அடிப்படை விடயங்களை மறந்து நின்று செயற்படுவதற்காகவா? இந்தக் கேள்விகளை தேசிய மக்கள் சக்தியின் வடக்குக் கிழக்குப் பிரதிநிதிகளை நோக்கி எழுப்பினால், அவர்கள் சமூக ஊடகங்களில் ‘தடை’ செய்கிறார்கள். அல்லது ஒழித்து ஓடுகிறார்கள். அரசியல் தீர்வு விடயத்தில்தான், தேசிய மக்கள் சக்தியின் தமிழ் பிரதிநிதிகளுக்கு எந்தவித புரிதலும் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், தையிட்டி சட்டவிரோத விகாரை போன்ற விடயங்களிலும் குரல் எழுப்புவதற்குக்கூட கட்சித் தலைமையினால் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது என்பது மிகப்பெரிய சோகம். ஏனெனில், மெளனிகள் அரசியலுக்கு பெரும் சாபக்கேடாகும். அப்படியான நிலையினை, தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகள் பிரதிபலிக்கிறார்கள். வடக்குக்   கிழக்கில் மாத்திரமல்ல, மலையக பிரதிநிதிகளின் நிலையும் அப்படித்தான் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகளின் தேர்தல் பிரச்சார உரைகள் மற்றும் பாராளுமன்ற பேச்சுக்களைக் கேட்கும்போது, ராஜபக்ஷ துதிபாடிகள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அதனையே, இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ற தனித்த அரசியல் தெளிவு என்று எதுவும் கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் அரசியல் சார்ந்த தெளிவோடு இயங்கியவர்கள் அல்ல. மாறாக, அரகலய பிரசவித்த புரட்சி மாற்றக் கோசத்திலும் அதனால் எழுந்த அநுர அலையினாலும் உள்வாங்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தனி அடையாளம்- அரசியல் என்ற ஒன்று எப்போதுமே இருந்தது இல்லை. சிலர், தமிழ் கட்சிகளில் சில ஆளுமைகளுக்குப் பின்னால் துதிபாடிகளாக மாத்திரம் கடந்த காலத்தில் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் அரசியல் தற்துணிவு, தெளிவு பற்றி எதிர்பார்ப்பது அபத்தமானதுதான். ஆனால், அந்த அபத்தத்தை நடைபெறவுள்ள   உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான குறைந்த பட்ச அரசியல் தற்துணிவும் அதுசார் முடிவெடுக்கும் திறனும் இல்லாமல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்துக்குள் எல்லாவற்றுக்குமாக இவர்கள் காத்திருப்பார்கள்.மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அநுர, தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பைத் தந்தால், அவற்றின் தேவைகளை உடனடியாக தீர்த்து வைப்போம். மாறாக, மாற்றுக் கட்சிகளிடம் ஆட்சியை வழங்கினால், அந்தச் சபைகளுக்கான நிதிப் பங்கீடு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுக்கு பத்துத் தடவைகள் ஆராய்ந்துதான் விடுவிப்போம் என்றிருக்கிறார். கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களும், ரணிலும் செய்த அதே அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அநுரவும் கையில் எடுத்திருப்பதற்கு மேற்கண்ட உரையை உதாரணமாகக் காட்டலாம். மக்களினால் தேர்தெடுக்கப்பட்ட சபைகளை, அதற்கான ஒக்கீடுகளை பொதுவான நிலைப்பாடுகளில் நின்று அணுகுவதுதான் சரியானது. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு உடனடியாக நிதிப் பங்கீடுகளைச் செய்வோம் என்பதும், மற்றக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு நிதி ஒத்துகீடுகளை பலமுறை ஆராய்ந்துதான் விடுவிப்போம் என்பது ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்ட எவராலும் முன்வைக்க முடியாத கருத்து. இந்தக் கருத்துக்கள் எல்லாமும், சுனாமி பேரழிவு காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை நீதிமன்றம் வரை சென்ற தடுத்து, இரக்கமற்ற அரசியல் செய்த மக்கள் விடுதலை முன்னணியின், முன்னணிப் பேச்சாளராக – செயற்பாட்டாளராக – சந்திரிக்கா அமைச்சரவை அமைச்சராக அநுர செயற்பட்ட காலங்களை மீண்டும் கண்முன் கொண்டு வருகின்றன. அந்தக் காலம், ராஜபக்ஷக்களுக்கோ, ரணிலுக்கோ எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை. அது, தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கொடூரமானது. தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடிக்குள் இருந்து அநுரவும் அவரது தோழர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் கொடூர முகங்களைக் காட்டுகிறார்கள். அது வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல் – அதிகார நலன்களில் என்றைக்கும் அக்கறை கொண்டிருந்தது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் முன்னால், தமிழ்த் தேசியக் கட்சிகளா தேசிய மக்கள் சக்தியா என்ற விடயம் எழுந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் உண்டு. கடந்த காலத்தில் அவர்கள் தங்களுக்கு முட்டி மோதி, தமிழர் அரசியலை நடுவீதியில் விட்டிருக்கிறார்கள் என்ற தமிழ் மக்களின் கோபம் நியாயமானது. ஆனால்,  அந்தக் கோபம் தென் இலங்கையின் இனவாத சக்திகளை வடக்குக்   கிழக்கில் வளர்த்துவிடுவதற்கு உதவக் கூடாது. நியாயமான கோபம் என்பது, தமிழ்க் கட்சிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் அளவுக்கானதாக இருக்க வேண்டும். மாறாக, அடுப்புக்குள் விழுந்து வெந்து சாவதாக இருக்கக் கூடாது. இன்றைக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி உங்களை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக கொக்கரிக்கிறார்கள். இந்த நிலை, கடந்த பொதுத் தேர்தலில், அநுர அலைக்குள் எந்தவித புரிதலும் இல்லாமல் தமிழ் மக்கள் சிக்கியதன் விளைவாக எழுந்தது. அநுர அலை தமிழ் மக்களுக்கு இதுவரையில் எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை ஒத்த மேலாதிக்க நிலைப்பாடுகளை மாத்திரமே பிரதிபலித்திருக்கிறது. அப்படியான நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அநுர அலைக்குள் அடிபட்டு அல்லாடியது போலல்லாது, தனித்த தமிழ்த் தேசிய அரசியலைக் காக்கும் நோக்கில், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு கிராமத்தினதும் தேவைகள் உணர்ந்து விடயங்கள் அணுகப்படும். அத்தோடு, அடுத்த கட்டமாக நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தல்களில் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான கட்டங்களை நோக்கி நகர உதவும். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, தமிழ் மக்களும் ஏனோதானோ என்று அணுக முடியாது. தார்மீக நோக்கோடும், தமிழ்த் தேசிய அரசியலை மீட்டெடுத்து அரசியல் போராட்டத்துக்கான குரல் மங்கிவிடாமலும் இருப்பதற்கான கட்டங்களை நோக்கி நகர வேண்டும். இலங்கையின் மக்களாக சிந்திப்பதில் என்ன தப்பு என்ற கேள்விகள் அல்லது புரட்சிக் குரல்கள் எழலாம். அதுவும் தேசிய மக்கள் சக்தியின் தோழர்களும் சகோதரர்களும் தமிழ் மக்களை நோக்கி எழுப்பலாம். இலங்கையர்களாக சிந்திப்பது என்பது, முதலில் இலங்கையர்களாக உணர்வதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர்கள் செய்வதில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும். தொடர்ச்சியாக அடக்கியும் ஒடுக்கியும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஆக்கிரமித்துக் கொள்ள முடியும் என்று சிந்திப்பது அபத்தமானது. அந்த சிந்தனைகளை புதிய புரட்சி மாற்றத்தின் பெயரினால் மாத்திரம் செய்துவிட முடியும் என்பதும் தார்மீகமாகாது. இலங்கையர்களாக தமிழ் மக்களை உணர வைப்பதற்கான ஏற்பாடுகளை, தென் இலங்கை ஆட்சியாளர்கள் செய்யாத வரையில், தமிழ்த் தேசிய அரசியல் போராட்டம் நிலைபெற வேண்டியது அவசியம். அந்த தார்மீகத்தை கடந்த காலத்தில் எமக்காக தங்களை அர்ப்பணித்துவிட்டவர்களை நினைத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறைக்குள் தமிழர் அடையாளம் மிஞ்சும். அதற்கு ஒவ்வொரு சின்னக் கட்டங்களிலும் எமது அரசியலைப்   பிரதிபலிப்பது அவசியம். அந்த வகையில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். -காலைமுரசு பத்திரிகையில் (ஏப்ரல் 20, 2025) வெளியான பத்தி.Posted 20 hours ago by maruthamooranLabels: அநுர: தமிழரசு: தமிழ்த்தேசியம்: கட்டுரை: அரசியல் 0 Add a comment
  2. Apr13தமிழ்த் தேசிய அரசியலை புதுப்பிக்குமா குட்டித் தேர்தல்?! (புருஜோத்தமன் தங்கமயில்)உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிப்பு தொடர்பிலான நீதிமன்ற வழக்குகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன (அல்லது முடித்து வைக்கப்பட்டுவிட்டன). அதனால், எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் நடைபெறப் போகின்றது. ஆளும் தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கு நோக்கி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என்று தொடங்கி அனைத்து முக்கியஸ்தர்களும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கெடுக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் காலத்தில் முன்னெடுத்த பிரச்சார வியூகங்களுடன் தேசிய மக்கள் சக்தி, இந்தக் குட்டித் தேர்தலையும் கண்ணும் கருத்துமாக எதிர்கொள்கின்றது. பொதுத் தேர்தலில் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றிக்கான வாக்குச் சதவீதத்தினை, எந்தவொரு காரணத்தினாலும் இழந்துவிடக் கூடாது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி, குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி கவனமாக இருக்கின்றது. இரண்டு முக்கிய தேர்தல்களிலும் வெற்றிபெற்று சிறிய காலத்துக்குள்ளேயே, கிராமங்களை நேரடியாக இணைக்கும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலான ‘குட்டித் தேர்தலில்’ பின்னடைவைச் சந்திப்பது என்பது, புதிய அரசாங்கத்தின் மீதான அதிருப்திகளை வெளிப்படையாக காட்டிவிடும். அதனை உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று வாக்குகளை கவரும் திட்டங்களோடு செயற்படுகின்றது. ஆனால், மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றின் நிலை என்பது பெரும்பாலும் அந்தோ பரிதாபம்.வடக்குக் கிழக்கில் பிரதான கட்சி என்கிற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே,வேட்பாளர்கள் தெரிவு தொடங்கி வேட்புமனுத் தாக்கல் வரை பெரிய சிரமங்களின்றி இயங்கியது. அந்தக் கட்சியின் மன்னார் மாந்தை மேற்கு மன்றத்தின் வேட்புமனு மாத்திரம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தமிழரசுக் கட்சி தன்னுடைய வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களை வடக்குக்   கிழக்கு பூராவும் நடத்தவும் தொடங்கி விட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரச ஆளணி அதிகார பின்னணி இல்லாவிட்டாலும், கட்சிக் கட்டமைப்பினை ஓரளவுக்கு சரியாக கொண்டிருப்பதனால், தமிழரசுக் கட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. கருத்து மோதல்கள், குழுநிலை வாதங்கள் அந்தக் கட்சிக்குள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அதனால்,கடந்த பொதுத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த அனுபவப் பாடத்தினை உள்வாங்கிக் கொண்டு இயங்குவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட பலரையும் மன்னிப்புக் கடிதங்களை பெற்றுக்   கொண்டு தேர்தல்களில் போட்டியிட அனுமதித்துள்ளமை கவனத்தில்   கொள்ளத்தக்கது. இந்தத் தேர்தல் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வாக்கும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்டுள்ளதால், ஒருவர் பத்து வாக்குகளை திரட்டும் வல்லமை பெற்றிருக்கிறார் என்றால் அவரையும் உள்வாங்கி பயணிக்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. அந்தத் தெளிவு, தமிழரசுக் கட்சிக்கு பல தேர்தல் பின்னடைவுகளுக்குப் பின்னராவது ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஓரளவுக்கு மெச்சலாம்.  ஏனெனில், இந்தத் தேர்தலில் ஒரே குடும்பத்தில் இருந்தே இரு நபர்கள் வேறு வேறு கட்சிகளில் போட்டியிடும் காட்சிகளை தமிழர் தாயகம் பதிவு செய்கின்றது. யாழ்ப்பாணத்தில் தாய் தமிழ்த் தேசியக் கட்சியிலும், மகன் தேசிய மக்கள் சக்தியிலும் போட்டியிடும் பிரச்சார சுவரொட்டிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உலாவின. இது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் நடைபெற்றதுதான். ஆனால், இம்முறை இந்தச் சம்பங்கள், அதாவது ஒரே குடுபத்தின் நபர்கள் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுவது என்பது ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கின்றது. அதனை ஜனநாயகத்தின் நல்வடிவம் என்று கொண்டாலும், உள்ளூராட்சி தேர்தலுக்கான சட்ட திட்டங்கள், சிறிய கட்சிகளை எவ்வாறு வேட்பாளர் தேடுதலுக்காக அலைக்கழிக்கின்றன என்றும் புரிந்து கொள்ள முடியும். தமிழரசுக் கட்சி இந்தத் தேர்தலில் வடக்குக் கிழக்கில், குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலான கவனத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கட்சியொன்றின் நிலை நீடிப்பென்பது தலைவர்களின் வெற்றிகளில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. மாறாக கடைக்கோடி தொண்டனின் வெற்றியிலும் தங்கியிருக்கின்றது. அதுதான் தொடர் வெற்றிகளுக்கு அடிப்படை. அதுதான் கட்சியையும், அந்தக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை காப்பாற்றுவதற்கு உதவும். இல்லையென்றால், கட்சிகளும், அதன் கொள்கைகளும் மெல்ல மெல்லக் கரைந்து காணாமற்போய்விடும். தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்தச் சிக்கலுக்குள்தான் கடந்த சில ஆண்டுகளாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கில் கணிசமான வாக்கிழப்பினைச் சந்தித்தாலும், அதன் அடிப்படை ஆதரவு நிலையில் பெரிய பின்னடைவுகளைச் சந்திக்கவில்லை என்று கொள்ளலாம். ஏனெனில், அந்தக் கட்சியின் தேர்தல் பின்னடைவு என்பது வடக்கில் மாத்திரம் மிதக்கும் வாக்குகளினால் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள்   சக்தியிடமும், சுயேட்சை ஊசியிடமும் அந்தக் கட்சி சுமார் இருபதாயிரம் மிதக்கும் வாக்குகளை இழந்திருக்கின்றது. அந்தப் புரிதல் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டதினால்தான், ‘நாடு யாருடனும் இருக்கட்டும், கிராமம் எங்களுடன் இருக்கட்டும்’ என்ற பிரச்சாரக் கோசத்தோடு தேர்தலைச் சந்திக்கின்றது. அத்தோடு, எப்படி ஆட்சி அமைப்பது, எந்தெந்த சபைகளில் எந்தக் கட்சிகளின், குழுக்களின் ஆதரவினைக் கோருவது என்பது தொடர்பில் பேச்சுக்களையும் அந்தக் கட்சி தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அந்தக் கட்சி, தேசிய மக்கள் சக்தியிடம் சபைகளை இழந்துவிடாமல் தடுப்பதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் முஸ்லிம் கட்சிகள் தொடங்கி இணைந்து செயற்படுவதற்கான தயார் நிலையில் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி, யாருடனும் கூட்டணி ஆட்சி அமைக்காது என்கிற நிலையை, தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்   கொள்ள முடியும் என்பது தமிழரசுக் கட்சியின் நம்பிக்கை. இது, அடுத்த மாகாணச் சபைத் தேர்தல்களில் வடக்கு – கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பிலான ஓட்டத்துக்கு வலுச் சேர்க்கும் என்று அந்தக் கட்சி  நம்புகின்றது. மறுவழமாக பார்த்தால், வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களை பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை வெற்றிகளை தனித்து அவர்களினால் பெற முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனால், ஒவ்வொரு சபையிலும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழலே ஏற்படும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி எதிர் தமிழரசுக் கட்சி என்று ஆட்சி அமைப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றால், தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடியாது. அல்லது, அதனை ஆட்சி அமைக்க வைப்பதற்கான எந்த நிலைப்பாடுகளிலும் இயங்க முடியாது. அதனால், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை. கடந்த காலங்களில் துரோகிகள், அரசியல் எதிரிகள் என்று தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு புதிதாக வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி என்கிற எதிரியை வீழ்த்துவதற்கு தங்களுக்குள் சில விட்டுக்கொடுப்புக்களுடன் இணைவதைத் தவிர வேறு வழியே இல்லை. அதனால், வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளினால் வேட்பாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. அதனால்தான், வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்படுவதற்கும் காரணமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியின் நல்லூர் நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுபோல, மான் கூட்டணியின் யாழ். நகர சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. அவற்றை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் சென்றும், சரி செய்ய முடியவில்லை. இதில்,சங்குக் கூட்டணி தப்பிப் பிழைத்துவிட்டது. ஆனால், அதன் வெற்றி வாய்ப்பு என்பது ஒரு சில வட்டாரங்களில் சிலரை மாத்திரம் நேரடியாக வெற்றிபெற வைக்க முடியும் என்கிற அளவிலேயே இருக்கின்றது. ஆனால், உதிரி வாக்குகளினால் கிடைக்கும் விகிதாசார உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, எதிர்கால கூட்டணிக் கணக்குகளை போடுவது தொடர்பில் சங்குக் கூட்டணி கவனத்தோடு இருக்கின்றது. ஏனெனில், அந்தக் கூட்டணியின் தலைவர்கள் முன்னால் இப்போது இரு தெரிவுகள் உண்டு. கடந்த காலங்களில் தனியாவர்த்தனம்  செய்து, தாங்கள் தான் கொள்கை வாதிகள் மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வெற்றி தோல்வி கணக்குகளைக் கருத்தில் கொண்டு இம்முறை தேர்தல் கூட்டணிக்கு வந்துவிட்டது. தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து கடந்த காலங்களில் பிரிந்து சென்று சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு செயற்பட்டவர்களை எல்லாமும் தனிக்   கட்சிகளாக கருதி இணைத்துக் கொண்டு, தேர்தல் கூட்டணியை, முன்னணி அமைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால், தமிழரசுக் கட்சியிடம் மாத்திரம் கூட்டணிக்காக தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாமல், சங்குக் கூட்டணிக்கு சைக்கிள் கூட்டணியும் ஒரு மாற்றுத் தெரிவாக இப்போது உருவாகிவிட்டது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், சிலவேளை தமிழரசிடம் ஆசன பங்கீட்டு பேரம் படியவில்லை என்றால், சங்குக் கூட்டணி சைக்கிள் ஓடும் சூழல் ஏற்படும். அந்த வகையில், தனியாவர்த்தன முடிவில் இருந்து சைக்கிள் இறங்கி வந்தமை,  தமிழரசுக்கு எதிரான அணியை யாழ்ப்பாணத்துக்குள் ஒரளவுக்கு பலப்படுத்தும் சூழலும் மலர்ந்திருக்கின்றது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய ஆட்சி அமைப்புப் பற்றிய நடவடிக்கைகள் என்பது, தமிழரசு மற்றும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைவு என்கிற அளவிலேயே நிகழப்போகின்றது. பொது எதிரியை மறந்து தங்களுக்கு இடையில் மோதிப் பிளவுண்டு மக்களை வெறுப்படைய வைத்து, மடைமாற்றிவிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கடந்த பொதுத் தேர்தல் தோல்விகள் சிறந்த அனுபவத்தை வழங்கியது. அந்த அனுபவம், அரசியல் என்கிற தொடரோட்டத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளின் போக்கில், விட்டுக்கொடுப்புக்களுடனான ஒருங்கிணைவு என்பதை தவிர்க்க முடியாதது ஆக்கியுள்ளது. அந்த நிலைப்பாட்டிலிருந்து தவறினால், கட்சி காணாமற்போய்விடும் என்கிற யதார்த்தம் பலருக்கும் உறைத்திருக்கின்றது. அந்தப் புரிதலை, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னரான நாட்கள் பதிவு செய்யும் என்று நம்பலாம். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எரிச்சலூட்டும் தனிப்பட்ட குரோத அரசியல் நடவடிக்கைகளில் சலிப்படைந்த பல தமிழ்த் தேசியவாதிகளும், இப்போது தமிழ்த் தேசிய அரசியலைக் காப்பாற்றுவதற்காக களத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலங்களில் பதவிகள் – பகட்டுக்களுக்காக இயங்கியவர்கள் அல்லர். அவர்கள் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஒன்றை நோக்கிய ஓட்டத்தில்  குறியாக இருக்கிறார்கள். அது சாத்தியப்பட்டால் தமிழ்த் தேசிய அரசியலுக்கு நல்லது. அதனை, வரும் காலம் சாத்தியப்படுத்தும் என்று நம்பலாம். தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிகள் என்பது நம்பிக்கைகளினால் மாத்திரமே நிகழ்ந்திருக்கின்றது. -காலைமுரசு பத்திரிகையில் ஏப்ரல் 13, 2025 வெளியான பத்தி.Posted 1 week ago by maruthamooranLabels: அநுர: தமிழரசு: தமிழ்த்தேசியம்: கட்டுரை: அரசியல் 0 Add a comment
  3. Mar8உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டெழுமா? (புருஜோத்தமன் தங்கமயில்)உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான களம் ‘தேசிய மக்கள் சக்தி எதிர் ஏனைய கட்சிகள்’ என்ற வடிவில் திறந்திருக்கின்றது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வரலாற்றில் இப்படியொரு நிலமை எப்போதுமே ஏற்பட்டதில்லை. தென் இலங்கையில் பிரதான கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவும், வடக்குக் கிழக்கில் அதிக நேரங்களில் ஆளும் கட்சியை ஆதரிக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிரணியில் இருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் சூழல் என்பது தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர் ஆளும் ஆதரவு தமிழ்க் கட்சிகள் மற்றும் முன்னாள் துணை இராணுவக் குழுக்கள் என்ற அளவில்தான் காணப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பாய்ச்சல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை அந்தக் கட்சிக்கு  உறுதிப்படுத்தியது. அதில், தமிழ் மக்களும் பங்காளிகளாக நின்று, கடந்த காலங்களில் தாம் ஆதரித்து வந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளினார்கள். இது, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல தேசிய மக்கள் சக்திக்கும் அதிர்ச்சியளித்திருந்தது.பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்து ஏமாற்றமடைந்த தருணத்தில், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஏன் உங்களுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது என்று வினாவியிருக்கிறார். அதற்கு, சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர், “..எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். அதாவது அநுர அலை. அதில் தென் இலங்கை மக்கள் மாத்திரமல்ல, வடக்கு மக்களுக்கும் அள்ளுண்டு சென்றுவிட்டார்கள்…” என்று பதிலளித்திருக்கிறார்.  அந்தப் பதிலில் பகுதியளவு உண்மையுண்டு. ஆனால், மிகுதியான உண்மை என்பது, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் செய்து வரும் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிகளின் பொறுப்பற்ற தனங்களினால் ஏற்பட்டது. அதுதான், யாழ்ப்பாணத்தில் கவனக் கலைப்பானாக வந்து இன்றைக்கு பாராளுமன்றத்துக்குள் பொறுப்பற்ற கலகக்காரனான இருக்கும் வைத்தியரையும்கூட வெற்றிபெற வைத்தது. தேசிய மக்கள் சக்திதான் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தனித்து அதிக இடங்களைப் பெறப்போகின்றது என்பது தொடர்பில் எந்தத் தமிழ்த் தேசியக் கட்சிக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் உள்ள வட்டாரம் – விகிதாசார குழப்பங்களினால், தேசிய மக்கள் சக்தியினால் ஆட்சி அமைப்பது என்பது சிக்கலானது. இந்த ஆறுதலில் நின்றுதான், தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தலைப்படுகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு வடக்குக் கிழக்கில் இப்போதுள்ள நிலையில் சற்று சவால் அளிக்கும் நிலையில் தமிழரசுக் கட்சி மாத்திரமே இருக்கின்றது. ஆனால், அவர்களும் தங்களினால் எந்தச் சபையிலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற உண்மையையும் உணர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதனால்தான், தங்களின் முன்னாள் பங்காளிகள் உள்ளிட்ட, தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள எந்தத் தரப்புடனும் தேர்தல் கால உடன்படிக்கைக்கு வருவது தொடர்பில் தமிழரசுக் கட்சி என்றைக்கும் இல்லாத அளவுக்கு கீழிறங்கி நின்று பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றது. ஒரு பக்கத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் வெளிப்படையான பேச்சுக்களை நடத்துவது கடிதங்களை மாறிமாறி எழுதுவது என்று இருக்கிறார். அத்தோடு தான் எழுதிய கடிதங்களுக்கான விளக்க உரைகளை ஊடக மாநாடுகளை நடத்தி வழங்கியும் வருகிறார். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டிய நிலையில், உள்ளூர தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் அனைத்துடனும் பேச்சுக்களை நடத்த தலைப்படுகின்றனர். அதுவும் கடந்த காலங்களில் தங்களை துரோகிகளாக சித்தரித்து யாழ்ப்பாணத்துக்குள் அரசியல் செய்த தமிழ்த் தேசிய முன்னணியோடு கூட பேச்சு நடத்த தயாராக இருக்கின்றார்கள். இவையெல்லாம் ஏன் என்றால், தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மக்களுக்கு இடையிலான பாய்ச்சல் என்பது ‘அநுர அலை’ என்ற விடயம் சார்ந்தது மாத்திரமல்ல என்ற புரிதல் ஏற்பட்டதன் விளைவினாலாகும். கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்துக்குள் இருக்கும் பத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எடுத்து பார்த்து விடயங்களை ஆராய்ந்தாலே, தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த காலங்களில் கவனிக்கத் தவறிய விடயங்கள் எல்லாமும் தோல்வி என்ற பதில்களினால் நிரம்புகின்றன. குறிப்பாக, பொறுப்பற்று தலைக்கனத்துடன் நடத்து கொண்டதன் விளைவுகள்தான், தேசிய மக்கள் சக்திக்கு வலுச் சேர்த்திருக்கின்றன என்ற விடயங்கள் புலப்படும். தமிழ் மக்களை ‘தமிழ்த் தேசியம்’ என்ற உணர்வுபூர்வமான விடயத்துக்குள் சிக்க வைத்தால் போதும் காலங்காலமாக வாக்களித்து நிலை நிறுத்துவார்கள் என்பது தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் எண்ணம். அந்த எண்ணத்தினால், சமூகங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகள், சமூக அங்கீகாரம், பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது கடந்து நின்றிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் என்பது, கிட்டத்தட்ட ஒரு சில முக்கிய சமூகத்தினரைச் சுற்றி சுழல ஆரம்பித்ததன் விளைவுகள் அவை. யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் தேர்தல் தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பெரும் பின்னடைவு என்பது ஏன் என்று அறிந்து ஆய்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. உதாரணத்துக்கு, யாழ்ப்பாண மாநகர சபையின் பெரும்பான்மை வட்டாரங்களைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தொகுதிக்குள் தமிழரசுக் கட்சியினால் ஆனோல்ட் என்ற ஒரு நபரைத் தாண்டி இன்னொருவரை அடையாளப்படுத்த முடியவில்லை. அல்லது, அது தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனோல்ட் தொடர்ச்சியாக தேர்தல்களில் போட்டியிட்டு அதிகம் தோற்றவர். அவரைத் தவிர, பெரிதாக யாரையும் அங்கு வளர்க்கவில்லை. அல்லது அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவில்லை. அந்த எரிச்சல் மற்றும் ஆத்திரத்தின் விளைவினைத்தான், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை நோக்கிய வாக்குகளாக யாழ்ப்பாணத் தொகுதி  வாரி வழங்கியது. அதுபோல, நல்லூர் தேர்தல் தொகுதி என்பது யாழ்ப்பாணத்தின் உயர்மட்டச் சமூகத்தின் கோட்டை என்பது அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும், புலம்பெயர் தரப்புக்களினதும் எண்ணம். அதனால், அங்கு தொடர்ச்சியாக யாழ் மையவாத தரப்பினர்தான் அடையாளப்படுத்தப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் தொகுதியின் சமூக கட்டமைப்பு என்பது பரவலாக மாறிவிட்டது. அப்படியான சூழலில், அனைத்துச் சமூகங்களுக்குமான அங்கீகாரத்தை கொடுப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிந்ததும், தமிழரசுக் கட்சியின் பின்னடைவு தொடர்பிலான உரையாடல்களில்  இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அதனைக் குறித்து அந்தக் கட்சியோ, அதன் ஆதரவாளர்களோ பெரிதளவில் கவனம் செலுத்தவில்லை. விளைவு, கடந்த பொதுத் தேர்தலில் நல்லூர் தொகுதியில் தமிழரசுக் கட்சி மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட காட்சி அரங்கேறியது. இப்படி யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு தேர்தல் தொகுதியையும், பிரதேசத்தையும் எடுத்து காய்தல் உவர்த்தல் இன்றி ஆராய்ந்தால், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ்த் தேசியம் என்ற ஒன்றைக் காட்டிக் கொண்டு பல சமூகங்களை கைவிட்டு கடந்து நின்று ஒருசில ஆளுகை செலுத்தும் சமூகங்களின்- சாதிகளின்   கட்சியாக தன்னை காட்டிக் கொண்டதன் விளைவினால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழரசுக் கட்சி மாத்திரமல்ல அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அப்படித்தான் இயங்குகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளில் எண்பது வீதமானோர் ஒரே சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்களும் வெற்றிபெறக் கூடிய ஆளுமைகளாக இல்லை. அவர்களை ஒப்புக்காக நிறுத்தி அரசியல் செய்திருக்கிறார்கள். இந்த நிலை யாழ். மையவாத சிந்தனைகளினால் வருவது. இந்த நிலை தொடர்ந்தால், இந்தத் கட்சிகள் பேசும் மேம்போக்கு தமிழ்த் தேசியத்தைக் காட்டிலும், தங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கத் தயாராக இருக்கும் தேசிய மக்கள் சக்தியில் சரணடைவதில் தப்பில்லை என்று தோன்றும். அந்த எண்ணம் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவிட்டால், அதிலிருந்து மீட்டெடுப்பது என்பது மிகவும் சிக்கலாகிவிடும். ஏனெனில்,தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளோ, அதன் தலைவர்களோ இன விடுதலைக்கான போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் அளவுக்கான தியாகிகள் இல்லை. பதவி பகட்டுகளுக்கான போட்டி பொறாமையில் உழன்று வருபவர்கள். கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பும் அதன் பெரும் பாய்ச்சலும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அர்ப்பணிப்பின் நாயகர்களினால் நிகழ்ந்தப்பட்டது. இப்போது அவர்கள் இல்லை. அவர்களைக் காட்டிக் கொண்டு, தங்களின் ஆற்றலின்மையைக் கடந்து விடலாம் என்று நினைத்தால், இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று முட்டுச் சந்துக்குள் நிற்பதைக் காட்டிலும் மோசமான கட்டத்துக்குள் சிக்கும். அது தமிழ்த் தேசிய விடுதலைக்கான பயணத்தைத் தோற்கடித்துவிடும்.இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தரப்புக்களும் தங்களின் கடந்த கால கசடுகளை கழைந்து, மக்களை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அத்தோடு, தேர்தலுக்கு முந்தைய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலமே, தமிழ்த் தேசிய அரசியலை தொடர்ந்தும் முதன்நிலையில் வைத்திருக்க முடியும். ஏனெனில், தமிழ்த் தேசியம் தேர்தலுக்கான நிலைப்பாடு அல்ல. ஆனால், அந்தத் தேர்தல்களில் அந்த நிலைப்பாட்டினை தோல்வியின் பக்கத்துக்கு தள்ளுவது என்பது, மக்களிடம் மெல்ல மெல்ல தமிழ்த் தேசியம் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும். கடந்த காலத்தில் அங்கஜனின் வெற்றியை யாழ்ப்பாணம் பதிவு செய்த போதும், இப்போது வைத்தியரின் வெற்றி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாய்ச்சல் என்பன என்ன விடயங்களை உணர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு பெரிய புத்திஜீவிகளாக இருக்க வேண்டியதில்லை. அது சாதாரண மக்களுக்கு நன்றாக விளங்கும். ஆனால், அதனைப் புரிந்து கொண்டும் புரியாதது மாதிரி நடித்துக் கொண்டிருப்பது யாழ். மையவாத தரப்புக்களும், அதன் புலம்பெயர் ஒத்தூதும் தரப்பினருமே. இவர்கள்தான் தமிழ்த் தேசியத்தின் பெரும் பின்னடைவுகளுக்கு பெரும் காரணங்களாக மாறி வருகிறார்கள். தனி நபர்களையும், செயலற்ற – தூர நோக்கற்ற அமைப்புக்களையும் சுற்றி ஒளிவட்டங்களையும், ஜனவசிய கதைகளையும் இந்தத் தரப்பினர் வரைந்து கொண்டிருக்க தேசிய மக்கள் சக்தி போன்ற களச் செயற்பாடுள்ள தரப்பினர் ஆழ ஊடுருவி விடயங்களை சாதித்து நகர்கிறார்கள். தமிழ் அரசியல் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஆழ ஊடுருவும் அணிகள் ஏற்படுத்திய தோல்விகள் பல. அப்படியான நிலையில், அவற்றைப் புரிந்தும் புரியாமல் நின்று மேம்போக்கான அரசியல் பேசுவது அபத்தமானது. தமிழ்த் தேசிய அரசியலின் பாதுகாப்பு என்பது ஆக்கிரமித்து அட்டகாசம் புரியும் பெரும் சிங்கள மேலாதிக்க வாதத்தை எதிர்ப்பதினால் மாத்திரம் நிகழ்ந்துவிடாது. தமிழ் மக்களிடம் காணப்படும் இடைவெளிகளைக் கழைந்து, அனைத்து சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டு மேலெழுவதன் மூலமே சாத்தியமாகும். அதற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முக்கியமான கருவி. இப்போது கிடைத்திருக்கின்ற இந்த கருவியை சரியாக கையாண்டு மேலெழ வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல் மெல்லக் கரையும். இப்போது தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் விருப்பு வெறுப்புக்களை மறந்து நின்று, சபைகளைச் கைப்பற்றுவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தாக வேண்டும். அந்த இணக்கப்பாடு எழுத்துபூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதல்ல. திறந்த மனதுடன் பேச்சுக்கள் நடத்திக் காணப்பட வேண்டும். அதன்மூலமே, தமிழ்த் தேசிய அரசியலின் நீட்சியைத் தக்க வைக்க முடியும். தமிழ்த் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார், “…யாழ். மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியிடம் இழந்துவிட்டு, நாங்கள் தமிழ்த் தேசியம் பேசுவதில் பயனில்லை. அதுவொரு அடையாளம். அப்படியான நிலையில், அனைத்துத் தரப்பினரும் தனிப்பட்ட நிலைப்பாடுகள் கடந்து இணைந்து இயங்க வேண்டும். அதற்காக பேசியாக வேண்டும்…” என்றார்.  கடந்த பொதுத் தேர்தல் தோல்வி தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நல்ல படிப்பினைகளை வழங்கியிருக்கின்றது. அதிலிருந்து மீண்டுவருவது தொடர்பில் சிலர் சிந்திப்பது மாதிரியும் தெரிகின்றது. அப்படியான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அதற்கான களமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் பயன்படுத்தி மீண்டெழ வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தி போன்ற பேரலையில் சிக்கி இன்னும் இன்னும் அலைக்கழிக்கப்பட்டு தூர வீசப்பட்டுவிடும். -காலைமுரசு பத்திரிகையில் மார்ச் 09, 2025 வெளியான பத்தி.Posted 8th March by maruthamooranLabels: தமிழரசு: முன்னணி: கூட்டமைப்பு: தேர்தல்: இலங்கை 0 Add a comment
  4. Feb8மாவை…. போராளியாக எழுந்து அரசியல்வாதியாக வீழ்ந்தவர்! (புருஜோத்தமன் தங்கமயில்)இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் அந்திமகால அரசியல் போன்று அவரின் மறைவுக்குப் பின்னரான நாட்களும் மலினமான அரசியல்வாதிகளினால் கையாளப்பட்டு இறுதிப் பயணம் பெருந்துயராக முடிந்திருக்கின்றது. கடந்த ஆண்டு மறைந்த தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனை விட அதிக காலம் நேரடி அரசியல் போராட்டக் களத்தில் பயணித்தவர் மாவை சேனாதிராஜா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான அவரின் தமிழ்த் தேசியப் பயணத்தில் முதல் முப்பது ஆண்டுகள் உணர்வு மிக்க போராளியாகவும், இறுதி முப்பது ஆண்டுகள் பதவி, பகட்டுக்காக அலைந்து அதனாலேயே தன்னுடைய போராளி அடையாளத்தை இழந்த அரசியல்வாதியாகவும் நினைவுகூரப்படுவார். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அதிக காலம் தலைவராகவும், செயலாளராகவும் செயற்பட்டவர் மாவை மாத்திரமே. தமிழரசின் நிறுவனரான தந்தை செல்வா கூட, மாவை அளவுக்கு அதிக காலம் எந்தப் பதவியையும் கட்சிக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் வகித்தவர் அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணி (மே, 1972இல்) தோற்றுவிக்கப்பட்டது முதல் தமிழரசுக் கட்சி உறங்கு நிலைக்குச் சென்றது. அது உறங்கு நிலையில் இருந்த காலத்திலும் அதன் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் மாவை இருந்திருக்கிறார். 2004 பொதுத் தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால், தமிழரசுக் கட்சியும் அதன் வீட்டுச் சின்னமும் மீண்டும் செயற்பாட்டுத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. தங்களின் சொல்பேச்சினைக் கேட்கும் ஒருவராக மாவை இருப்பார் என்கிற நம்பிக்கையினாலும், தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையிலும் தமிழரசினையும், வீட்டுச் சின்னத்தையும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தலுக்கான கட்சியாக தேர்வு செய்தார். இல்லையென்றால், 2004 பொதுத் தேர்தலில்  கூட்டமைப்பின் தேர்தல் கால கட்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோ அல்லது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கமொன்றின் சின்னமோ அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழரசுக் கட்சியின் மீது எந்தவித அரசியல் கறுப்பு வரலாறுகளும், படுகொலை அடையாளங்களும் இல்லை என்கிற காரணமும், “…மாவை அண்ணன் எங்களின் ஆள், அவர் நாங்கள் சொன்னால் கேட்பார்…” என்கிற எண்ணமும்தான் கிளிநொச்சியில் இருந்து, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக வீட்டுச் சின்னம் அறிவிக்கப்பட காரணமானது. மீள உயிர்ப்பிக்கப்பட்ட தமிழரசின் தலைவராக சம்பந்தன் இருந்தாலும், அவர் மீது புலிகளுக்கு பெரிய நம்பிக்கைகள் இருக்கவில்லை. ஆனால், கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி போன்று, புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்கமாட்டேன் என்று சம்பந்தன் அறிவிக்காததனால், அவர் தமிழரசின் தலைவரானார். அதுபோல, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் புலிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆனால், தமிழரசுக் கட்சியின் மீள் வருகைக்கான காரணங்களில் மாவையின் புலிகளின் தலைமைக்கான விசுவாசம் முக்கிய காரணமாகும். அதனை தவிர்த்துவிட்டு, கூட்டமைப்பின் அரசியலையோ, இன்றைய தமிழரசுக் கட்சியின் நிலைபெறுகையையோ  பேச முடியாது. எந்த வரலாறும் காய்தல் உவர்த்தல் இன்றி பதிவு செய்யப்பட வேண்டும். அதுதான், எதிர்கால வெற்றிகளுக்கான படிப்பினைகளை வழங்கும். அந்த நிலைப்பாட்டில் இந்தப் பத்தியாளர் உறுதியாக இருக்கின்றார். அதனால்தான், மாவை தொடர்பிலான இந்தப் பத்தியிலும், தமிழ்ப் பொதுப்புத்தியில் உள்ள ஒருவரின் மறைவுக்குப்   பின்னரான நாட்களில் அவர் தொடர்பிலான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, புகழுரைகளை மாத்திரம் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை நிராகரித்து நின்று இந்தப் பத்தி எழுதப்படுகின்றது. தந்தை செல்வாவின் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பைக் கண்டு, தமிழரசுக் கட்சியில் ஓர் ஆக்ரோசமான இளைஞனாக இணைந்த மாவை, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர். ஏழு ஆண்டுகள் வரையில், பல சிறைகளிலும் அரசியல் கைதியாக வழக்கு விசாரணைகளின்றி கழித்திருக்கிறார். அதுபோல, இலங்கை பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, உடல் முழுவதும் மாறா வடுக்களைப் பெற்ற போராளி. 2001 பொதுத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்தை நோக்கிச் சென்ற கூட்டமைப்பின் குழுவினர் மீது ஊர்காவல்துறை நாரந்தனை பகுதியில் வைத்து, ஈபிடிபியின் ஆயுதக் கும்பல் தாக்குதல்களை நடத்தியது. இதில், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன்போது, மாவை சேனாதிராஜா தலையில் வெட்டுக்காயத்துக்கு உள்ளானார். என்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இன்னும் 17 பேர் படுமோசமான காயங்களுக்கு உள்ளானார்கள். இப்படியாக அவர் அரச படைகளினதும், அவர்களின் துணைக்குழுக்களாக இயங்கிய ஈபிடிபி உள்ளிட்டவற்றின் தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கியிருக்கிறார். ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் மாவை, ஒரு பதவிக்காக ஆலாய் பறந்த அரசியல்வாதியாக மாறிப்போனார். அதற்காக அவர் தன்னுடைய போராளி நிலையில் இருந்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கீழிறங்கினார். கட்சியின் சிதைவுகளுக்கும் ஒரு காரணமாகிப் போனார். தமிழரசுக் கட்சி இன்றைக்கு இரண்டாக பிளவுபட்டிருக்கின்றது. செங்குத்துப் பிளவைச் சந்திக்கவில்லை என்றாலும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் பிளவு வளர்ந்துவிட்டது. அந்தப் பிளவை, இப்போதைக்கு சரி செய்யவும் வாய்ப்பில்லை. அந்தப் பிளவை, அதிகரிக்கும் செயற்பாடுகளை மாவையின் இறுதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்களும், அவர்களின் தொண்டர்பொடிகளும்கூட செய்துவிட்டனர். மாவை, கட்சிக்கும் அவர் ஏற்ற தலைமைக்கும் கேள்விகளுக்கு அப்பாலான விசுவாசத்தினை கடந்த காலங்களில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ‘தம்பி சேனாதி…’ என்ற சம்பந்தனின் அழைப்பில் மாவை முழுவதுமாக இணங்கிப் போய்விடுவார். வடக்கு முதலமைச்சர் பதவி மீது தீராக் காதல் கொண்டிருந்தாலும், சம்பந்தனின் விருப்பம் சி.வி.விக்னேஸ்வரன் நோக்கியது என்ற காரணத்துக்காக மாவை, அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் ‘…சாம் அண்ணன் கேட்கும் போது, எப்படி மறுப்புச் சொல்ல முடியும்..’ என்ற மாவையின் கட்சித் தலைமைக்கான இறுதி அர்ப்பணிப்புப் பற்றி எல்லோரும் சிலாகிப்பது உண்டு. சம்பந்தன் வாழும் காலம் வரையில், மாவை அவரின் சொற்களை பெரிதாக மீறியதில்லை என்பது உண்மை. ஆனால், அதுதான் அரசியல்வாதியாக அவரின் தோல்விகளுக்கும் காரணமானது. மாவை எப்போதுமே, யாரோ ஒருவர் வழிநடத்த அந்தத் தடங்களை கேள்விகள் இன்றி பின்தொடரும் ஒருவராகவே இருந்திருக்கிறார். அவர் ஒரு தலைமைத்துவ பாத்திரம் இல்லை. தமிழரசுக் கட்சியின் செயலாளர்  என்பது, நிர்வாக ரீதியில் தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பதவிதான். ஆனால், அதன் செயற்பாட்டுத் தன்மை என்பது தலைவருக்கான அதிகாரங்களை பல இடங்களில் தாண்டியது. அப்படித்தான் அந்தக் கட்சியின் யாப்பு வரையறுத்திருக்கின்றது. ஆனால், அந்த அதிகாரங்களை மாவை செயலாளராக செயற்பட்ட காலத்தில் ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை. சம்பந்தன் என்ன சொல்கிறாரோ, அதனையெல்லாம் ஒரு உதவியாளர் போல நின்று செய்திருக்கின்றார். ஆனால், கட்சியின் செயலாளர் பதவிக்கான அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை, 2020 பொதுத் தேர்தலில் மாவை தோல்வியடைந்ததும் உணர்ந்து கொண்டார். கட்சியின் தலைவராக மாவை இருந்த போதிலும், கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு அவரின் விருப்பினை மீறி, கட்சியின் முடிவெடுக்கும் தலைமையாக அப்போது இயங்கிய சம்பந்தன் – எம்.ஏ.சுமந்திரன் இணை, கலையரசனை நியமித்தது. அந்த நியமனத்தினை அன்றைய செயலாளர் சி.துரைராஜசிங்கம் தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்தார். அந்த அறிவிப்பு, கட்சியின் தலைவரை மீறி செய்யப்பட்டது என்ற விடயம் அப்போது மேலழுந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்தினை சட்டரீதியாகவோ, நிர்வாக ரீதியாகவோ சவாலுக்கு உள்ளாக்கும் அதிகாரம், தலைவராக மாவைக்கு இருக்கவில்லை. அப்போதுதான், அவர் கட்சியின் யாப்பு யாருக்கு என்ன அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது என்பதை உணரத் தொடங்கினார். ஆனால், அப்போது காலம் அவரிடத்தில் இருந்து அரசியலை கிட்டத்தட்ட முழுவதுமாக பிடுங்கி விட்டிருந்தது. ‘தந்தை செல்வா, அண்ணன் அமீர், சாம் அண்ணா…. தம்பி சுமந்திரன்’ என்று அவரை யாராவது ஒருவர் கையைப் பிடித்து வழிநடத்துவதற்கு தேவையாக இருந்தது. முடிவெடுக்கும் அதிகாரமுள்ள தலைமையாக அவர் ஒருபோதும் செயற்பட்ட அனுபவம் இல்லாததால், அவரின் இறுதிக் காலத்தில் யார் யாரோவெல்லாம் அவரை கையாளத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான், அவரின் இறுதிக்கால அரசியல் வாழ்வு பெரும் இழுபறிகள் நிறைந்ததாக மாறியது. இந்தப் பத்தியாளர் 2015க்குப் பின்னரான காலத்தில் மாவையை காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதிலும், 2020 தேர்தல் காலம் தொடங்கி, அவர் மறையும் வரையிலான காலத்தில் அவரின் அரசியல் நடவடிக்கைகள் என்பது, தமிழரசுக்   கட்சியை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலையும் பின்நோக்கி இழுத்துவிடும் வேலைகளினால் நிரம்பியது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், பொதுத்   தேர்தல் காலத்திலும் அவரின் அரசியல் நடவடிக்கைகள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அபத்தங்களினால் நிரம்பியிருந்தது. இவ்வாறான நிலை, அவரின் மீதான மதிப்பை முழுவதுமாக கீழிறக்கியது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவரின் நிலைப்பாடுகளை மீறி கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தது. அந்தத் தீர்மானம் அவருக்கு உவப்பானது இல்லை என்றாலும், கட்சியின் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கட்சியின் தீர்மானத்தை ஊடக மாநாடு நடத்தி அறிவித்துவிட்டு, சில மணிநேரங்களிலேயே, இன்னொரு தரப்பினரின் மேடையில் ஏறி, கட்சியின் முடிவை நிராகரிக்கும் முகமாக பேசியமை எல்லாமும் கட்சி மீதான மதிப்பை பலமாக இறக்கம் செய்தது. அத்தோடு, பொதுத் தேர்தல் காலத்தில், கட்சியின் தலைமைப் பதவியை துறந்தமை கட்சி மீதான மக்கள் அபிமானத்தை கனதியாக குறைக்க காரணமானது. இந்த இரு முடிவுக்குப் பின்னால், வேறு நபர்களும் தரப்புக்களும் இருந்தன என்பது தொடரும் வாதம். ஆனால், நீண்ட நெடிய காலம் தமிழ்த் தேசிய அரசியலில் நீடித்துவிட்ட ஒருவர், மற்றவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கையெழுத்திடவோ, பேசவோ செய்கிறார் என்றால், அவரின் தனியாளுமைக்கு என்ன மதிப்பு? பொதுத் தேர்தல் காலத்தில் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் இராஜினாமாக் கடிததத்தை மீளப்பெற   முயன்றமை எல்லாமும் அவரின் மீதான மதிப்பை காவு வாங்கியது. இறுதியில், அவரின் இறந்த உடலை வைத்து, சில தரப்புக்கள் செத்தவீட்டு அரசியலை நடத்தியமையோடு, மாவை என்ற ஒரு மூத்த முன்னாள் போராளியின் வரலாறு முடிந்து போயிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் நீண்டகாலத் தலைவரின் உடல், அந்தக் கட்சியின் கொடியினால் போர்த்தப்பட்டாலும் கட்சியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல, இறுதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்கள் முயலவில்லை.  கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட பதினெட்டுப் பேர்தான், மாவையின் மரணத்துக்கு காரணம் என்ற பனர்கள் கட்டப்பட்டன. பேஸ்புக்கில் போலிக் கணக்குகளிலும் எழுதப்பட்டன. இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழரசுக் கட்சிக்காரர்கள் பலர், இடம் பொருள் தெரியாத சில காவாலிகளினால் சாவு வீட்டில் இடைமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனால், முரண் நகை என்னவென்றால், நாரந்தனையில் வைத்து மாவையின் தலையில் வெட்டிய ஈபிடிபி அமைப்பின் தலைவரோ, அந்த இயக்கத்தினரோ இறுதி அஞ்சலி செலுத்த எந்தவித இடையூறும் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல, மாவையின் கட்சிக்காரர், முன்னாள் சக பாராளுமன்ற உறுப்பினர், இந்நாள் சம்பந்தியான மாமனிதர் ரவிராஜின் கொலையின் சூத்திரதாரிகள், ராஜபக்ஷக்கள். அவர்களின் ஆட்சியில் வேட்டையாடப்பட்டவர்களில் முக்கிய தமிழ்த் தேசிய ஆளுமை, ரவிராஜ். ஆனால், அவரின் குடும்பத்தினருக்கோ, மாவையின் இறுதி நிகழ்வை ஒருங்கிணைத்த சிவஞானம் சிறீதரனுக்கோ, நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்த வருவது பிரச்சினையில்லை. நாமலுக்கு நோகாமல் சிரித்துப் பேசி, வழி அனுப்பி வைக்கும் அளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்திருக்கின்றது. ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களை, கொலைகாரர்களாக சித்தரித்து செய்யப்பட்ட இழிநிலை அரசியலைப் புறந்தள்ளி, அனைவரையும் ஒன்றிணைந்து, மூத்த தலைவரான மாவையின் இறுதி நிகழ்வினை நடத்தி முடிப்பதில்தான் அவர்களுக்கு சிக்கல் இருந்திருக்கின்றது. மாவை என்ற அரசியல்வாதியின் பயணத்தினை காலத்துக்கு காலம் யாரோ ஒருவர் வழிநடத்தியிருக்கிறார். அப்படித்தான், அவரின் இறுதி நாட்களும் இறுதிப் பயணமும்கூட யார் யாரோ, தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக இழுத்து பறித்து நடத்தி முடித்திருக்கிறார்கள். காலம் அவரை பலமாக அலைக்கழித்திருக்கின்றது. அந்த அலைக்கழிப்பில் இருந்து அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இனியாவது அவரது ஆன்மா ஆழ்ந்து உறங்கட்டும். மூத்த முன்னாள் போராளிக்கு அஞ்சலிகள்.-காலைமுரசு பத்திரிகையில் பெப்ரவரி 09, 2025 வெளியான பத்தி.Posted 8th February by maruthamooranLabels: தமிழரசு: மாவை: கூட்டமைப்பு: அரசியல்: கட்டுரை 1 View comments
  5. Jan18தமிழ்த் தேசிய அரசியலைக் காப்பது ‘படம்’ காட்டும் விவகாரம் அல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறி பேஸ்புக் பதிவுகள், செல்பி படங்கள், லைவ் வீடியோக்களுக்குள் சிக்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்று அச்சம் எழுகின்றது. யாழ்ப்பாணத்தில் திடீரென வைத்தியர் ஒருவர், பேஸ்புக் லைவ்கள் – ரிக்ரொக் சண்டைகளின் வழியாகப் பெற்ற பிரபலத்தினால் பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். அந்த வைத்தியரின் சுயேட்சைக் குழுவுக்குள் அவருக்கு அடுத்து வந்த இளம் சட்டத்தரணிக்கு, தமிழ்த் தேசியம் பேசி பாராளுமன்றம் சென்றிருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களை விட விருப்பு வாக்குகள் அதிகம். இது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை சமூக ஊடகத்தின் பரபரப்பு – கவனக் கலைப்பான் செல்நெறிக்குப் பின்னால் தள்ளியுள்ளதாக கருத வேண்டியிருக்கின்றது. எங்கு சென்றாலும் யாரைச் சந்தித்தாலும் அவற்றை படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் போதும் என்ற அளவுக்கு அப்பாலான நடைமுறை அணுகுமுறை அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பிலான எந்தவித முன்னேற்றங்களையும் எந்த அரசியல்வாதியும் பதிவு செய்கிறார்கள் இல்லை. அதுபோல, ஒரு சந்திப்பிற்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பது பூச்சியமாகவே இருக்கின்றது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைள் தொடர்பில் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஏன், பாரம்பரிய ஊடகங்கள் கூட அவை தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. இந்த அரசியல்வாதி அவரைச் சந்தித்தார் என்ற அளவில் படங்களை பதிவதோடு ஊடகங்களும் அவற்றைக் கடந்துவிடுகின்றன. இந்த நிலையால், அரசியல் இராஜதந்திர சந்திப்புக்கள் என்பது பேஸ்புக்கில் படங்களை பதிவதற்கான ஒரு செயற்பாடு என்கிற அளவில் சுருங்கிவிட்டது. இந்தப் படங்களை வைத்து ஒன்றிரண்டு நாட்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் தொண்டர்களும், எதிர்த்தரப்பினரும் சண்டையிடுவதோடு அடுத்த படத்துக்காக, லைவ் வீடியோக்களுக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த அளவினை மீறி ஆக்கபூர்வமான செயற்பாடுகள் என்று எதனையும் யாரும் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை.அண்மையில், தமிழ்நாடு அரசாங்கத்தினால் வருடந்தோறும் நடத்தப்படும் அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு விழாவில் யார் யாரோடு படம், செல்பி எடுப்பது என்பது தொடர்பிலான போட்டி இடம்பெற்றது. முதல்வர் ஸ்டாலினுடன் நின்று எப்படியாவது ஒரு படம் எடுத்து, அதனை தங்களின் பெரிய அரசியல் அடைவு மாதிரி காட்டி தங்களின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்திவிட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் முண்டியடித்தனர். அதில், சிலர் வெற்றிபெற்றதாக நினைத்து, ஸ்டாலினுடன் எடுத்த செல்பியை பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள். இன்னும் ஒருசில அரசியல்வாதிகள், தங்களின் பெயர்தான் அழைப்பிதழில் இருக்கின்றது என்று தலையால் நடந்தார்கள். ஆனால், தமிழ்நாடு சென்ற எந்த தமிழ் அரசியல்வாதியும், ஸ்டாலின், உதயநிதி போன்றவர்களுடன் சந்திப்புக்கள் ஏதாவது நடத்தினார்களா, அதில் என்ன விடயங்களைப் பேசினார்கள் என்றோ கூறுவதற்கு தயாராக இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால்   வடக்கு மீனவர்கள் நாளும் பொழுதும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்களா என்றால், இல்லை. சென்னையில் ஸ்டாலினின் முகம் கோணாமல் நின்று செல்பி எடுப்பதோடு விடயத்தை முடித்துவிட வேண்டும் என்பதில்தான், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறியாக இருந்தார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால் நாளும் பொழுதும் இந்தியாவையும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களையும் விமர்சிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பெயரில் நிற்கும் ஜே.வி.பி.யின் அமைச்சரான சந்திரசேகரன் கூட, தமிழ்நாட்டில் அமைதியின் பேருருவமாக மாத்திரம் இருந்துவிட்டு வந்திருக்கிறார். அவர், கடற்றொழில் அமைச்சர், தொடர்ச்சியாக வடக்கில் முகாமிட்டிருப்பவர். தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் பெற்ற வெற்றியில் மீனவ சமூகத்தின் வாக்குகள் கணிசமான தாக்கத்தைச் செலுத்தின. ஆனால், அவர் சென்னையில் தமிழ்நாட்டு மீனவர்களினால் வடக்கு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசிய காட்சிகள் ஏதும் இல்லை. உள்ளூரில் வீராதி வீரன் கதைகளை அவிழ்த்துவிட்டு படம் காட்டும் இவர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைகளாக மாத்திரம் நடந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களையோ, அரசியல்வாதிகளையோ தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளோ, தரப்புக்களோ எதிர்நிலையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்று இந்தப் பத்தியாளர் கூறத் தலைப்படவில்லை. ஆனால், அவர்களின் கட்சித் தொண்டர்கள் வெளிப்படுத்தும் அடிமை உணர்வை, நீங்களும் பிரதிபலிக்கத் தலைப்படும்போதுதான், பிரச்சினை எழுகின்றது. சம்பிரதாயபூர்வ நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு விழாவை, ஸ்டாலின் அரசாங்கம் நடத்துகின்றது. அதில், அந்த அளவில் மாத்திரம் கலந்து கொண்டோம் என்று இங்கிருந்து சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் விடயத்தினை கடந்திருந்தால், தேவையற்ற விமர்சனங்கள் எழுந்திருக்காது. மாறாக, ஸ்டாலினுடன் படம் எடுப்பதை, பெரிய அரசியல் அடைவு மாதிரி காட்டும்போதுதான் அவை பற்றி பேச வேண்டி வருகின்றது. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களோடோ, இந்திய மத்திய ஆட்சியாளர்களோடோ முரண்பட்டு முறுகிக் கொண்டு நிற்க வேண்டியதில்லை. அது, அரசியல் இராஜதந்திர ரீதியில் பெரிய பின்னடைவுகளை தமிழ் மக்களுக்கு வழங்கவும் செய்யும். அதற்காக, அவர்களின் அடிமைகளாகவும் இருக்க வேண்டியதில்லை. அப்படிச் தொடர்ச்சியாக செயற்பட்டதன் விளைவை, வடக்கு கிழக்கு தற்போது சந்தித்து நிற்கின்றது. அதிலும் வடக்கில் இந்தியாவின் தலையீடுகள் என்பது சின்னச் சின்ன விடயங்களில் எல்லாமும் நிகழ்கின்றது. தங்களுக்கான முகவர்களை தமிழ்த் தேசியக் கட்சிகள், தரப்புக்கள், அரசியல் பத்தியாளர்கள் தொடங்கி அனைத்துப் பக்கத்திலும் இந்தியா வைத்துக் கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கின்றது. நியாயமான விமர்சனங்களைக்கூட அது வெளியான அடுத்த நொடியே, துணைத் தூதரகங்கள், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர்களுக்கு போட்டுக் கொடுக்கும் தரப்பினர், அதிகரித்துவிட்டனர். இவ்வாறான நிலையின் அடுத்த கட்டங்களை நோக்கி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இன்னும் படுவேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுடனோ, இன்னொரு நாட்டு இராஜதந்திரிகளுடனோ பேசுவது தப்பில்லை. ஆனால், அவை பெரிய வெற்றியாக சமூக ஊடக வெளிச்சத்துக்காக கையாளப்படுகின்றன. கிட்டத்தட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் தங்களைவிட பெரிய ஆளுமையுள்ளவர்கள் போன்ற உடல்மொழியை தமிழ்த் தலைவர்கள் தொடர்ச்சியாக பதிவு செய்கிறார்கள். இந்த மனச்சிக்கலை தமிழ்த் தேசியக் கட்சிகளும் தரப்பினரும் முதலில் கடந்துநின்று விடயங்களை அணுகத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், படம் காட்டுதல் மாத்திரந்தான் அரசியல் என்கிற அளவில் விடயங்கள் சுருங்கத் தொடங்கிவிடும். அது, ஆதரவாளர்களுக்கு மனப்பூரிப்பை வழங்க உதவலாம். ஆனால், தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய அரசியல் மீது ஏதோவொரு நம்பிக்கையில் பற்றிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழ் மக்களை,சலிப்படைய வைக்கும். அது, தேசிய மக்கள் சக்தி போன்ற அரசியல் இயக்கங்களையும், வைத்தியர் போன்ற கவனக் கலைப்பான்களையும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் மீண்டும் எழ வைக்கும். கவனக் கலைப்பான் அரசியலை நோக்கி மக்கள் ஏன் சென்றார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளோ, தரப்பினரோ சிந்திப்பது மாதிரித் தெரியவில்லை. மாறாக, கவனக் கலைப்பான்களின் அரசியல் செல்நெறியை பின்பற்றுவது தொடர்பில் அக்கறை கொள்வது என்பது பெரும் அபத்தமாகும். குறிப்பாக, கவனக் கலைப்பான் அரசியலுக்கு பின்னால், வடக்கு மக்களில் ஒரு பகுதியினரே சென்றிருக்கிறார்கள். கிழக்கு மக்கள், கருணா – பிள்ளையான் என்கிற கடந்த கால கவனக் கலைப்பான்களையே புறந்தள்ளியிருக்கிறார்கள். அவர்கள், தமிழ்த் தேசியத்தின் வேர்களை உறுதிப்படுத்தும் அரசியலில் கவனம் செலுத்தி, கிழக்கிலிருந்து நேரடியாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொடு தேசியப் பட்டியல் ஆசனமும், கிழக்குப் பெற்றுக் கொடுத்தது. வடக்கில் தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளை வைத்து எதனையும் பெற்றிருக்க முடியாது.  வடக்கில் கவனக்கலைப்பான்களின் பின்னால், கணிசமான மக்கள் சென்றமைக்கான காரணங்களை ஆய்ந்து அறிந்து கொள்வதுதான் முதலில் செய்யப்பட வேண்டியது. எந்தப் பகுதி மக்களை தேசிய மக்கள் சக்தியும், வைத்தியர் குழுவும் வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, எந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் அறிந்து கொள்ளவாவது முயன்றிருக்க வேண்டும். ஆனால், அதனை எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சியும் செய்யவில்லை. பொதுத் தேர்தல் முடிந்துவிட்டது, இனி அடுத்து வரும் தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் மக்களை நேரடியாகச் சந்தித்து விடயங்களை அணுகுவோம் என்பது தொடர்ச்சியான தோல்விகளை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழக்கும். யாழ். மைய அரசியல்தான் தமிழ்த் தேசியத்தின் அடித்தளம் என்கிற பொய்மையை தொடர்ந்தும் பேணும் நோக்கத்தில் சில தரப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை, தங்களுக்குள் பேசிக் கலைதல் அல்லது ஏதாவது கூட்டத்தைப் போட்டு மாறி மாறி ஒலிவாங்கிகளை களைப்படைய வைத்தால் போதும் என்ற அளவில்தான் இருக்கின்றது. அல்லது, ஊடகங்களில் எழுதியும் பேசியும் விட்டால் போதும் என்று நினைக்கின்றனர். தங்களின் கடந்த காலச் செயற்பாடுகளின் படுதோல்விகள் தொடர்பில் அவர்கள் யாரும் கவனத்தில் எடுக்கிறார்கள் இல்லை. மீண்டும் மீண்டும் பொய்களின் மீது கோட்டைகளைக் கட்டுகிறார்கள். இந்த நிலையும் சேர்ந்துதான், தமிழ்த் தேசியக் கட்சிகளையும், தரப்புக்களையும் கவனக் கலைப்பான்கள் முன்னிலையில் மூக்குடைபட்டு விழக் காரணமாக அமைந்துவிடுகின்றது. இந்த நிலை தொடர்ந்தால், தோல்வியின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று, தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பை வடக்கிலிருந்து காலி செய்துவிடும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நடத்தப்படும் உரையாடல்கள் யாழ்ப்பாணத்தை அல்லது வடக்கினை மாத்திரம் மையப்படுத்தித்தான் அதிகம் நிகழ்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு கடந்த தேர்தலில் தோல்வி முகத்தில் முடிந்தது போன்று, கறுப்பு வரலாறு தொடர் நிகழ்வுகளாக மாறிவிடும். விடயங்களை அதன் தன்மைகளை உணர்ந்து, அந்தந்தப் பிரதேசத்தின் தேவைகள், பலம் பலவீனங்களை அறிந்துதான் அணுகப்பட வேண்டும். முதலில் அந்த உணர்நிலைக்கு தமிழ்க் கட்சிகளும், தலைவர்களும், தரப்பினரும் வர வேண்டும். அப்படிச் செய்வதுதான், பிரச்சினைகளின் ஆழத்தை முழுமையாக அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவும். இல்லையென்றால், சமூக ஊடக வெளிச்சத்துக்குள் அரசியலை தொலைப்பதோடு விடயங்கள் முடிவுக்கு வரும். வைத்தியர் போன்ற கவனக் கலைப்பான்களை இலகுவாக கடந்துவிடலாம். ஏனெனில், அது யாழ்ப்பாணத்துக்குள் நிகழ்ந்திருக்கும் ஓர் அபத்தம். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் தமிழ் தேசிய நிலப்பரப்பினை நோக்கிய படையெடுப்பு, தமிழ்த் தேசிய அரசியலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி, சாதாரண மக்களின் ஆணையைப் பெற்ற ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அது கடந்த கால பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களின் தொடர்ச்சி என்பதற்கான காட்சிகளையே காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று அறிவிப்பது முதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம், இனப்பிரச்சினை என்று ஏதுமில்லை, தமிழ் மக்கள் சந்திப்பது பொருளாதாரப் பிரச்சினை என்று அறிவிப்பது வரையில், தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு தொடர் அச்சுறுத்தலானது. அதனை, கடந்த பொதுத் தேர்தலோடு கடந்துவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளும், அதன் தலைவர்களும் நினைத்தால், மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கில் கிராமங்கள் வரையில் தங்களின் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை வெகு விரைவாக முன்னெடுக்கின்றனர். சில மாதங்களுக்குள்ளேயே, ஒவ்வொரு பிரதேசத்தின் தன்மையை உணர்ந்து அரசியல் செயலகங்களை திறக்கிறார்கள். அதனை, செயற்பாட்டு அளவிலும் வைத்துக் கொள்கிறார்கள். இது, கால ஓட்டத்தில் இன்னும் இன்னும் வேகமாக தேசிய மக்கள் சக்தியை நோக்கில் மக்களை இழுத்துச் செல்லும். இந்த ஆபத்துக்களை உணராமல், பேஸ்புக்கில் படங்களைப் போடுவதிலும், சண்டை பிடிப்பதிலும் கவனம் செலுத்தி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தமிழ்த் தேசிய அரசியலை தென் இலங்கையிடம் தொலைத்துவிடாதீர்கள். முதலில், கொஞ்சமாவது கண்களைத் திறந்து நின்று கள அரசியலைக் கவனியுங்கள். -காலைமுரசு பத்திரிகையில் ஜனவரி 19, 2025 வெளியான பத்தி.Posted 18th January by maruthamooranLabels: தமிழரசு: கூட்டமைப்பு: இந்தியா: அரசியல்: கட்டுரை 0 Add a comment
  6. Jan11தடுமாறும் அநுர அரசாங்கம்; எரிச்சலில் மக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)இதுவும் ஒரு தேர்தல் ஆண்டு. நல்லாட்சிக் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலையும், கடந்த ரணில் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்வது தொடர்பில் அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அதனை எதிர்கொண்டு எப்படியாவது இரு தேர்தல்களையும் நடத்திவிட வேண்டும் என்று அரசாங்கம் முனைப்பாக இருக்கின்றது. புதிய ஆட்சியாளர்கள் மீது பெரும் நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கைகள் மெல்ல மெல்ல அடிவாங்கத் தொடங்கி, விமர்சனங்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. இந்த விமர்சனங்கள் மக்களின் கோபமாக மாறுவதற்கு முன்னராக, தேர்தல்களை நடத்தினால்தான், உள்ளூராட்சி மன்றங்களையும் மாகாண சபைகளையும் கைப்பற்ற முடியும். அதனைக் கருத்தில் கொண்டு தேர்தல்களை விரைவாக நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி கவனமாக இருக்கின்றது. அத்தோடு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இந்தியாவும் அநுர குமார திசாநாயக்கவிடம் அழுத்தங்களை வழங்கியிருக்கின்றது. அது, பொருளாதார ஒத்துழைப்புக்களின் போக்கில், செய்து முடிக்கப்பட வேண்டிய கடப்பாடாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில், எதிர்க்கட்சியில் இருந்த காலம் முழுவதும் இந்திய எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் நின்ற, தேசிய மக்கள் சக்தி முகத்தில் இன்றிருக்கும் ஜே.வி.பி, ஆட்சிக்கு வந்ததும் கடந்த காலத்தில் இந்தியா தொடர்பில் காட்டிய எதிர்ப்பை நீர் ஊற்றி அணைத்திருக்கின்றது. இப்போது, அந்தக் கட்சிக்குள் இருந்து எழும் சில இந்திய எதிர்ப்புக் குரல்கள், நீர் ஊற்றி அணைக்கப்பட்ட எதிர்ப்பில் இருந்து எழும் புகை போன்றது. சில காலத்துக்குள் அதுவும் அடங்கிவிடும். எப்போதுமே, எதிர்க்கட்சியில் இருந்து விமர்சிப்பது என்பது இலகுவானது. பொறுப்புக்கள் அற்றது. ஆனால், ஆட்சியைப் பொறுப்பேற்று நடத்தும் போதுதான், அதன் கடப்பாடுகள் தரும் அழுத்தங்களின் வலி தெரியும் என்பதை, முதன் முதலாக ஆட்சிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி உணர்ந்திருக்கின்றது. அதனால்தான், அந்தக் கட்சியின் கடந்த கால எதிர்ப்புக் குரல்கள் அடங்கி சுரத்தை இழந்திருக்கின்றன. ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட ஆகவில்லை.  புதுத் தும்புத்தடிக்கு உண்டான ஆற்றலைக்கூட தேசிய மக்கள் சக்தி காட்டுவதற்கு சிரமப்படுகின்றது. புதுத் தும்புத்தடி சில நாட்களாவது ஒழுங்காக குப்பைகளை வாரிக் கூட்டும். ஆனால், தேசிய மக்கள் சக்தி, நினைத்ததைக் காட்டிலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இந்த தடுமாற்றத்தின் மீதான விமர்சனங்களை, பாரம்பரிய அரசியல்வாதிகள் இலகுவாக மக்களிடம் கோபமாக மாற்றுவார்கள். ஏனெனில், அரசாங்கத்தின் இயந்திரமாக இருப்பவர்களில் பெரும்பான்மையினர், கடந்த கால பாரம்பரிய ஆட்சியாளர்களினால் உள்வாங்கப்பட்டவர்கள். அவர்களின் விசுவாசத்தை வைத்துக் கொண்டு, தேசிய மக்கள் சக்திக்கு ஆட்டம் காட்ட பாரம்பரியக் கட்சிகள் நினக்கின்றன. இதனை, புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களே வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலைமை நெருக்கடியானது. எந்தவொரு புதிய அரசாங்கமும், அரச ஊழியர்கள் தொடர்பில் விமர்சனங்களை உடனடியாக வைப்பதில்லை. அவர்களை மெச்சிக் கொண்டு விடயங்களைக் கையாளவே முயன்றிருக்கின்றன. ஆனால், அநுரவும், புதிய அரசாங்கமும் அரச இயந்திரத்தினைக் கையாள்வது தொடர்பில் தடுமாறுகிறார்கள். ஜே.வி.பியாக அவர்கள் தொழிற்சங்கங்களைக் கையாண்டது போல, இப்போது கையாள முடியவில்லை. அதனால், அவர்களினால் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய புரட்சி மாற்றங்கள் தொடர்பிலான செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. அதற்கு மாறாக, ‘கிளீன் சிறீலங்கா’ என்கிற விடயங்களை முதன்மைப்படுத்தி, விடயங்களை மடை மாற்றுகிறார்கள். கிளீன் சிறீலங்கா விடயங்களில் ஆரோக்கியமான கட்டங்கள் இருக்கின்றன. ஆனால், சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் கையாண்டுவிட்டு, நாட்டைச் சுத்தப்படுத்தும் வேலைகளுக்குள் சென்றிருக்க வேண்டும். அத்தோடு, அதற்கான கால அவகாசகத்தை வழங்கி, திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அதனைச் செய்யாது, அநுர அவசரப்பட்டு சுத்தப்படுத்த புறப்பட்டமை, கோட்டா காலத்து வீதி ஓரங்களில் வரையப்பட்ட ஓவியங்களுக்கு ஒப்பான மாற்றமாகவே நாட்டு மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். கோட்டா ஆட்சிக்கு வந்ததும் பௌத்த சிங்கள இனவாதத்தை நாடு பூராவும் ஓவியங்கள் வழியாக வரைந்து தள்ளினார்கள். ஆனால், இரண்டு வருடங்களுக்குள்ளேயே மக்கள் இந்த மதவாத -இனவாத அடிப்படைவாத வைராக்கியங்களைக் கடந்து நின்று, ராஜபக்ஷக்களை விரட்டுவதற்காக வீதிக்கு இறங்கினார்கள். மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை கடந்து நின்று எதுவும் இங்கு உயர்வானது இல்லை. அதாவது, மக்களின் வயிற்றுப் பசிக்கு முன்னால், இங்கு எவையும் புனிதங்கள் இல்லை என்பதுதான் மனித கூர்ப்பின் அடிப்படை. அதனை உணர்ந்து, அந்தக் கட்டங்களைக் கையாள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பெரு முதலாளிகள் அரசியை பதுக்கி வைத்துக் கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறார்கள் என்பது அரசாங்கத்தின் வாதம். அது உண்மையானது. சில அரசி பெரு முதலாளிகள் முதலைகள் போல மக்களின் வயிற்றுப் பசியை உண்டு திளைக்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் பாரிய இடைவெளியை பேணுகிறார்கள். இதன்மூலம் கறுப்புப்பண – கறுப்புச் சந்தையை பெருமுதலாளிகள் வளர்க்கிறார்கள். இதனால், சாதாரண மக்கள் திண்டாடுகிறார்கள். உயர் மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்களினால் கறுப்புச் சந்தைகளில் அரிசியை வாங்கிக் கொள்ள முடியும். அவர்களுக்கும் கறுப்புச் சந்தைகளின் முகவர்களுக்கும் இடையில் நல்ல நெருக்கமும் இருக்கின்றது. இவ்வாறான நிலை அரசாங்கத்துக்கு நெருக்கடியானதுதான். ஆனால், அதனைக் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளின் ஊடாக விடயங்களை கையாண்டிருக்க வேண்டும். ரணில் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரிசி முதலாளிகள் ஆட்டம் போட்டது போலவே, இப்போதும் அவர்கள் நின்று ஆடுகிறார்கள். அதன் தொடர்ச்சி இப்போது தேங்காய், உப்புத் தொடக்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு வரையில் வந்து நிற்கின்றது. தேங்காய் தட்டுப்பாட்டிற்கு கடந்த ஆண்டுகளில் தென்னைகளின் படர்ந்த ஒருவகை நோய் காரணம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், அதனைக் காரணங்காட்டி தேங்காய் இடைத்தரகர்கள் கறுப்புச் சந்தையொன்றை திறந்திருக்கிறார்கள். அதனால்தான், 200 ரூபாய் தாண்டி தேங்காய் விலை வீங்கியிருக்கின்றது. இதனை, அரசாங்கம் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். அதனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கையாள முடியவில்லை. இந்த சின்னச் சின்ன நெருக்கடிகளைக் கையாளாமல், நாட்டின் பொருளாதார – அரசியல் பிரச்சினைகளை  புதிய புரட்சி மாற்றத்தோடு எப்படிக் கையாள முடியும் என்ற கேள்வி எழுகின்றது. சபாநாயகர் நியமன விடயத்திலேயே தேசிய மக்கள் சக்தி மூக்குடைபட்டு விட்டது. பொய்யான கலாநிதிப் பட்டத்தை வைத்து, மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது பெரும் பேசு பொருள். இதனால், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகள் தொடர்பில் சந்தேகம் எழுந்திருக்கின்றது. பலரின் கல்வித் தகமை தொடர்பிலான விபரங்கள், பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து தற்போது காணாமற்போயிருக்கின்றது. தங்களை கற்றவர்கள், புலமையாளர்கள், துறைசார் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவித்துக் கொண்ட தேசிய மக்கள் சக்தியினர், இன்றைக்கு அதிலிருந்து பெருமளவு தடுமாறுகிறார்கள். கோட்டா காலத்து ‘வியத்மக’ குழுவினர் இப்போது அநுர அரசாங்கத்தின் ஆலோசகர்களாக, அமைச்சுக் செயலாளர்களாக ஆட்சியை ஆக்கிரமிக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் அநுர வெற்றி பெற்றதன் பின்னர், அப்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரினி அமரசூரிய, வெளிநாட்டு ஊடகவியளாரின் ‘ஆட்சியை நடத்துவதற்கான அனுபவம் இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு, “எங்களுக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அனுபவம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை மீட்போம்…” என்ற தொனியிலான பதிலொன்றை வழங்கியிருந்தார். அந்தப் பதில், வெகுவாக மெச்சப்பட்டது. தேசிய மக்கள் சக்தி ஆதரவு தளத்தினால் பெருமளவில் பகிரப்பட்டது. அது, பொதுத் தேர்தல் வெற்றிகளுக்கு வலுவும் சேர்ந்தது. ஆனால், ஹரிணியின் பதிலில் தொனித்த நம்பிக்கை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளில் புதிய அரசாங்கம் எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமான செயற்படுகின்றது என்ற கேள்வி முக்கியமானது. தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த மக்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே பெரும் அதிருப்தியை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களினால், புதிய சட்டங்களையும் திருத்தங்களையும் இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது சார்ந்து சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஓடுவதுதான் ஆக்கபூர்வமான அரசாங்கமொன்று கொண்டிருக்க வேண்டிய தகமை. ஆனால், அந்தத் தகமை தொடர்பில் அநுரவும், அவரின் அமைச்சர்களும் திண்டாடுகிறார்கள். இதில், முக்கியமான விடயம் என்னவென்றால், கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் பாரம்பரிய அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை, ஆலோசனைகளை திரைமறைவில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் யார் யாரையெல்லாம் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தார்கள் என்று விமர்சித்தார்களோ, அவர்களிடமே திரைமறைவு ஆலோசனைகளுக்கு செல்லும் நிலை என்பது முதல் தோல்வியாக கொள்ள வேண்டும். ஆனால், பாரம்பரிய அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தியையும் அதன் ஆட்சியையும் சில காலம் அனுமதித்து, அதன் போதமைகளை மக்கள் உணர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், அரசாங்கத்தை அவ்வளவு தூரம் விமர்சிக்காமல், குறிப்பாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். தாங்கள் அமைதி பேணிக் கொண்டு, புதிய அரசாங்கத்தின் மீதான மக்களின் விமர்சனங்கள் கோபமாக மாறும் வரை காத்திருத்தல் என்பது தங்களின் எதிர்கால அரசியலுக்கு பலம் சேர்க்கும் என்பது பாரம்பரிய அரசியவாதிகளின் நிலைப்பாடு. அது,  காத்திருத்து வேட்டையாடும் உத்தி. அதனால்தான். அநுரவோடு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நெருக்கம் காட்டிய பாரம்பரிய அரசியல்வாதிகள் கூட, பொதுத் தேர்தலின் பின்னர், அந்த நெருக்கத்தை தவிர்த்துவிட்டார்கள். இது, தென் இலங்கை, வடக்கு கிழக்கு என்ற வேறுபாடுகள் இன்றி, பாரம்பரிய அரசியல்வாதிகள் பேணும் உத்தியாக தெரிகின்றது. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அலைக்குள் மக்கள் சிக்குண்ட நிலையானது, எதிர்பார்த்த அளவினைக் காட்டிலும் அதிகமானது. அதனைக் கடத்தல் என்பது, அதன் மீதான மக்களின் விமர்சனங்களில் இருந்து எழ வேண்டியது என்பது, பாரம்பரிய அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. அதனைப் புரிந்து கொள்ளாது, எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் செய்த அரசியலுக்கு ஒப்பான மேடைப் பேச்சு அரசியலை மாத்திரம் அநுரவும் அவரது தோழர்களும் இனியும் செய்தால், அவர்கள் வீழ்த்தப்படுவது இலகுவாகிவிடும். புதிய ஆட்சியாளர்கள் புதிய புரட்சி மாற்றத்தைப் பேசவும் வேண்டும். மக்களின் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வை உடனடியாக வழங்கவும் வேண்டும். இல்லையென்றால், வெகு சீக்கிரத்திலேயே மக்களின் நம்பிக்கையை இழந்து, வீதிக்கு வருவார்கள்.  -காலைமுரசு பத்திரிகையில் ஜனவரி 12, 2025 வெளியான பத்தி.Posted 11th January by maruthamooranLabels: அநுர: தேசிய மக்கள் சக்தி: போராட்டம்: கட்டுரை 0 Add a comment
  7. Jan4தமிழரசின் தலைமை மாற்றத்தை எதிர்ப்பவர்கள் யார்? (புருஜோத்தமன் தங்கமயில்)இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஒரு தசாப்த காலத்தின் பின்னராக, தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவாகியிருக்கிறார். ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளாக பதில் செயலாளரோடு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சி, தலைமை மாற்றத்தையும் பதில் தலைவரைக் கொண்டு நிரப்பியிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா, எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக கட்சியின் செயலாளர், அறிவித்தார். ஆனால், அந்த நிர்வாக நடவடிக்கைக்குப் பின்னராகவும், தானே தொடர்ந்தும் தலைவராக செயற்படுவதாக மாவை அறிவித்த நிலையில், கட்சியின் மத்திய குழு, மாவையின் பதவி விலகலை ஏகமனதாக அங்கீகரித்து அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கின்றது. இப்போது, அவருக்கு அரசியல் குழு தலைமைப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. நிர்வாக ரீதியில் அது அதிகாரங்கள் அற்ற ஒப்புக்கான பதவி. ‘புலி வருகிறது புலி வருகிறது…’ கதையாக கடந்த பத்து ஆண்டுகளில் மாவை ஏற்கனவே சில தடவைகள், தான் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் கடிதங்களை ஒருசில நாட்களில் அவர், மீளப்பெற்றும் இருக்கிறார். அப்போதெல்லாம், அது பேசுபொருளும் ஆகியதில்லை. ஆனால், இம்முறை அவரது பதவி விலகல் கடிதம் செயலாளருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரே, ஊடகங்களில் வெளியானது. அது, கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நிலையில்தான், அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியாக ஏமாற்று நாடகத்தை ஆடினால், ஒருநாள் அந்த நாடகத்துக்குள் சிக்கி சீரழிய வேண்டும் என்பதற்கு ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான அரசியல் அனுபவமுள்ள மாவையும் இன்னொரு உதாரணம் ஆகியிருக்கிறார்.மாவை கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை. அதனால், அவரின் மாற்றம் தொடர்பில் பெரிய எதிர்ப்புக்கள் ஏதும் கட்சிக்குள் இல்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இடைநிறுத்தப்பட்ட மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சிவமோகன் மாத்திரமே, மாவைக்காக குரலை உயர்த்தியிருக்கிறார். நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறார். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு வெளியில் இருக்கும் தரப்புக்கள் சில மாவையின் தலைமைத்துவ மாற்றத்தை கொஞ்சமும் ரசிக்கவில்லை. அதிலும், பதில் தலைவராக சிவஞானம் நியமிக்கப்பட்டதை பெரும் எரிச்சலோடு நோக்குகின்றன. குறிப்பாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் செயலாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தை விமர்சித்திருக்கிறார். அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற விடயத்தை ஏந்தி வந்த தரப்புக்களின் பொதுக் கட்டமைப்பின் சார்பில் கைச்சாத்திட்ட அரசியல் பத்தியாளர்கள் சிலரும் மாவையின் அகற்றத்தை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பு எது சார்ந்தது என்பது வெளிப்படையானது. தமிழரசுக் கட்சி எந்தவொரு தருணத்திலும் செயற்பாட்டுத் திறனுள்ள தலைமையிடம் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கங்களைக் கொண்டது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்குள் இருந்து மாத்திரம் அரசியல் செய்யும் தரப்புக்களின் (குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு எதிரான தரப்புக்களின்) இழுப்புக்களுக்கு எல்லாமும் மாவை இழுபட்டுத் திரிந்தார். தமிழரசுக் கட்சியை  தமிழ்த் தேசிய விரோத சக்தியாக மேடைகளில் பேசியும், ஊடகங்களில் எழுதிக் கொண்டும் தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மாவையைக் கொண்டு தமிழரசுக் கட்சிக்குள்ளும் முன்னெடுக்க முடியும் என்று அந்தத் தரப்பினர் நம்பினார்கள். அதனைச் செய்தும் வந்தார்கள். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பும், அதன் ஜனாதிபதி தேர்தல் கால நாடகத்திலும் மாவையும் உதிரிப் பாத்திரமாக ஆடித் தொலைத்தார். அடிப்படைகள், தூரநோக்குகள் அற்ற அரசியல் விளையாட்டுக்களை சிவஞானம் கடந்த காலங்களில் வெளிப்படையாக எதிர்த்து வந்திருக்கிறார். அப்படியான நிலையில், மாவையைக் கையாண்டது போல, சிவஞானத்தைக் கையாள முடியாது என்ற கோபமும் எரிச்சலும் தமிழரசுக் கட்சியின் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமாரும், அவரின் கடந்த கால ஆலோசகர்களும் (சில பத்தியாளர்கள்) விமர்சிக்கும் அளவுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சிகளில் தமிழரசுக் கட்சி மாத்திரமே, ஜனநாயகத் தன்மையை பேணுகின்ற ஒரே கட்சி. தமிழரசுக் கட்சிக்கு முன்னால் தோன்றிய காங்கிரஸ், அது ஆரம்பித்தது முதல் குடும்பக் கட்சி. ஆயுதப் போராட்ட இயக்கங்களாக தோன்றி, கால ஓட்டத்தில் அரசியல் கட்சிகளாகிவிட்ட கட்சிகளும் வாழ்நாள் தலைவர்களை மாத்திரம் கொண்டிருக்கின்றது. அங்கு, கட்சி தலைவர்களை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் என்பது, கட்சிக்கு கிடையாது. ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிறைய குழப்பங்களும் குளறுபடிகளும் இருந்தாலும் தங்களுக்கான நீதிக்காக போராடும் ஜனநாயகத்தை அந்தக் கட்சியின் யாப்பு உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அதனை ஒரு நடைமுறையாகவே இவ்வளவு காலமும் அந்தக் கட்சி கொண்டுமிருக்கின்றது. அதனால்தான், அந்தக் கட்சி இவ்வளவு வழக்குகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டும் நிற்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அல்லது நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் கஜேந்திரகுமார் விமர்சிப்பதெல்லாம் அபத்தமானது. உட்கட்சிக்குள்ளேயே எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத கஜேந்திரகுமார், அதனை காரணமாகக் காட்டி 2020 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு மணிவண்ணனையும், அவரது ஆதரவு குழுவினரையும் கட்சியை விட்டு தூக்கி எறிந்தது எல்லாமும் வரலாறு. அது தொடர்பில் தமிழரசுக் கட்சியோ, அதன் முக்கியஸ்தர்களோ ஒருபோதும் கருத்துக் கூறவில்லை. அதனை ஒரு கட்சியின் உள்விவகாரமாக கடந்து விட்டார்கள். ஆனால், தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மாவையின், பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டு, கட்சி நிர்வாக நடவடிக்கைகள் எடுத்ததையெல்லாம் விமர்சிப்பதை எப்படி ஆரோக்கியமான விமர்சனம் என்று கொள்ள முடியும். கட்சி ஆரம்பித்தது முதல் முன்னணியின் தலைமைப் பதவியில் இருக்கும் கஜேந்திரகுமார், அவரது குடும்பக் கட்சியான காங்கிரஸின் அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை எப்போதாவது, தங்களின் குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி வேறொருவருக்கு வழங்கிய வரலாறு உண்டா என்பதையும் ஊடகங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சிதான் இப்போதும் தலைமைக் கட்சி. ஏனையை கட்சிகள் எல்லாமும் சில பிரதேசங்களுக்குள் சுருங்கிவிட்ட உதிரிக் கட்சிகள். காங்கிரஸ், யாழ்ப்பாணத்தைத் தாண்டி ஒருபோதும் வெளிவரவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலேயே ஐந்து வீதத்துக்கும் குறைவாக வாக்குகளைப் பெற்ற   கட்சி. கிழக்கு மாகாணத்தில் அந்தக் கட்சி இரண்டு வீத வாக்குகளையே பெறவில்லை. அப்படியான நிலையில், வடக்கு கிழக்குப் பூராவும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கட்சியொன்று தொடர்பில், அதன் நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் கஜேந்திரகுமார் கருத்து வெளியிடுவது அவசியமற்றது. கூட்டமைப்பில் இருந்து முதலில் வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார், முன்னணியை தோற்றுவித்தது முதல் கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியையும், அதன் தலைமைத்துவத்தில் இருந்து வந்த இரா.சம்பந்தன், மாவை உள்ளிட்டவர்களை தமிழின துரோகிககளாகவே சித்தரித்து அரசியல் செய்து வந்திருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியையே அரசியல் எதிரியாக காட்டி வாக்குக் கேட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் வழங்கிய பாடம், அவருக்கு புதிய படிப்பினைகளை வழங்கியிருக்கலாம். அதனால்தான், கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பதுபோல, தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைக் கட்சி, தமிழரசுதான் என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், அது உண்மையிலேயே ஆழ்மனதில் வந்திருக்கும் வார்த்தைகள்தானா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், தமிழரசுக் கட்சிக்குள் தன்னால் கையாளக் கூடியவர்கள் அதிகாரத்தில் இருந்தால், தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான தலைவராக தன்னால் எழுந்துவர முடியும் அல்லது கூட்டமைப்பு போன்ற ஒன்றை மீண்டும் கட்டி, அதன் தலைமைத்துவ பீடத்தை அடையும் எதிர்பார்ப்பு ஏதாவது அவரிடம் இருக்கிறதா தெரியவில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த காலங்களில் எந்தவித கூட்டுச் செயற்பாடுகளுக்கும் இணங்காத கஜேந்திரகுமார் இப்போது, சிவஞானம் சிறீதரன் வீடு தேடிச் சென்று சந்திக்கிறார். அதுமாத்திரமின்றி, மன்னாருக்குச் சென்று செல்வம் அடைக்கலநாதனைச் சந்திக்கிறார். இந்த மாற்றங்கள், உண்மையிலேயே, தமிழ்த் தேசிய அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை கண்டடையும் நோக்கத்தை மாத்திரம் கொண்டதா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையிலேயே, தீர்வுத் திட்டத்திற்காக தமிழரசுக் கட்சியோடு இணைந்து செயற்பட வேண்டும் என்கிற நோக்கம் இருந்தால், அந்தக் கட்சியின் நிர்வாக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிடுவது அபத்தமானது. ஏனெனில், தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அந்தக் கட்சியின் மத்திய குழுவுக்கு உண்டு. மத்திய குழுவின் முடிவுக்கு மாறாக அரசியல் தீர்மானங்களை அந்தக் கட்சி ஒருபோதும் எடுத்ததில்லை. கடந்த காலத்தில், குறிப்பாக சம்பந்தன் காலத்திலேயே, சம்பந்தன் – சுமந்திரன் இணை முடிவுகளை எடுப்பதாக சொல்லப்பட்டாலும், அந்த முடிவுகளை மத்திய குழு அங்கீகரித்து வந்திருக்கின்றது. கட்சியின் மத்திய குழு அங்கீகரிக்காத எந்த முடிவுகளையும், அரசியல் முடிவுகளாக சம்பந்தன் அறிவித்தது இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவரான மாவை தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முரண்டு பிடித்தாலும், மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. அதற்குத்தான் அரசியல் அதிகாரம் இருந்தது. அந்த முடிவுகளுக்கு மாறாக, மாற்று தேர்தல் மேடைகளில் ஏறியவர்கள் இப்போது, சிக்கல்களை எதிர்கொண்டு நிற்கிறார்கள். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை வைத்து விடயங்களை கையாண்டுவிட முடியும் என்ற நோக்கில், கஜேந்திரகுமாரோ அல்லது யாழ்ப்பாணத்து அரசியல் பத்தியாளர்கள் சிலரோ நினைத்தால், அது அவர்கள் கடந்த காலங்களில் முட்டுச் சந்துகளுக்குள் மாட்டிக் கொண்ட விளைவுகளையே வழங்கும். முதலில், தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்சியின் அரசியல் தீர்மானங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு நிலையை புரியாது விடயங்களை கடக்க முடியாது. அதனால், கூட்டுச் செயற்பாடு என்பது தனித் தலைவர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் சார்ந்தது மாத்திரம் இல்லை. இன்றைக்கு தமிழரசுக் கட்சியைப் புறந்தள்ளி யாரினாலும் அரசியல் தீர்மானங்களை மக்களின் சார்பில் எடுக்க முடியாது. அதனைப் புரிந்து கொண்டு இயங்கியாக வேண்டும். அதற்கு, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கருத்துக்களை வெளியிட வேண்டியதும் இல்லை.இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியையும், சம்பந்தன் – சுமந்திரன் தரப்பினரையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர்களுக்கு, இப்போது அதனைச் செய்யாமல் இருப்பது பெரும் மனநெருக்கடியானது. ஏனெனில், யாழ்ப்பாணத்துக்குள் எல்லோருக்கும் முகத்தில் அறையும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தி முன்னோக்கி வந்திருக்கின்றது. அதிலும், தமிழ்த் தேசிய வாக்குகளை ஒருங்கிணைக்கப் போவதாக  ஆக்ரோசமாக அறிவித்த தரப்பினரின் தங்களுக்குள்ளேயே சில நாட்களுக்குள் பல துண்டுகளாக உடைந்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்ளும் அரசியலைச் செய்தார்கள். அவர்களின் தோல்வியும்தான், தேசிய மக்கள் சக்திக்கான வெற்றியை வடக்கு மாகாணத்திற்குள் சாத்தியப்படுத்தியது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர்கள், பொது வேட்பாளர் என்ற விடயத்தை தூக்காமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியோடு அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகளோடு கணிசமாக இருந்திருப்பார்கள். அதன்மூலம், தமிழரசுக் கட்சியோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசியக் கட்சியோ மேலதிக ஆசனங்களைப் பெற்றிருக்கும். அதனை நாசமாக்கிக் தொலைத்தது, யாழ்ப்பாணத்து அரசியல் பத்தியாளர்கள். தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒருங்கிணைந்த தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனின் மொழியில் சொல்வதாக இருந்தால், “…தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் சாதனை என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் அனுமதியின்றி பா.அரியநேத்திரனை, ஜனாதிபதி வேட்பாளராக்கி அதன் மூலம் அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியதும், ஜனாதிபதித் தேர்தல் கால கணக்கு வழக்குச் சட்டச் சிக்கல்களுக்குள் அவரைச் தள்ள வைத்ததுமே….” என்பது. யாரும் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்றபட்டவர்கள் அல்ல. ஆனால், ஒரு கட்சி தன்னை செயற்பாட்டு நிலைக்குள் தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக போராடுவதும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதையும் தங்களின் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து விமர்சிக்கும் போது, அது அரசியல் அபத்தங்களாவே முடியும். கடந்த பத்து ஆண்டுகளில் மாவையின் தலைமைத்துவத்தில் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாக, தமிழரசுக் கட்சி நம்புகின்றது. அதனை மாற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் முதலில் இருந்து முயன்று இப்போது, அது நிகழ்ந்திருக்கின்றது. அதனை அதன் போக்கில் சற்று அனுமதித்து விமர்சிப்பதுதன் நல்லது. அதுதான், அடுத்து வரும் தேர்தல்களிலாவது கவனக்கலைப்பான்களின் பின்னால், செல்லும் தமிழ் வாக்குகளை மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பக்கத்துக்கு இழுப்பதற்கு உதவும்.-காலைமுரசு பத்திரிகையில் ஜனவரி 05, 2025 வெளியான பத்தி.Posted 4th January by maruthamooranLabels: தமிழரசு: மாவை: சிவஞானம்: யாழ்ப்பாணம்: மட்டக்களப்பு 0 Add a comment
  8. Nov23அநுர அலைக்குள் அள்ளுண்ட தமிழ் மக்கள் சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)‘அநுர அலை’க்குள் தமிழ் மக்கள் அள்ளுண்டு போயிருக்கும் செய்தி, தமிழ்த் தேசியத் தரப்புக்களை பேசா மடந்தைகளாக்கியிருக்கின்றது. அதிக தருணங்களில் தமிழ்த் தேசிய அரசியலின் பெயரினால், அநேகரால் பேசப்படும் வார்த்தைகளுக்கும் அவர்களின் மூளைக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இருந்ததில்லை.  கண்டதையெல்லாம் உளறிக் கொட்டி மக்களை மடையர்கள் என்று நினைத்து இயங்கியதன் விளைவை, தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று எதிர்கொண்டு நிற்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் அநுர அலையினால் தோற்றுப் போகவில்லை என்ற வாதம் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுகின்றது. அதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தங்களை முன்னிறுத்தும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை முன்வைத்து, ஆசனங்களின் கணக்கு வழக்கு பார்க்கப்படுகின்றது. இது, தர்க்க ரீதியில் சரியான வாதம் போன்று தோன்றலாம். ஆனால், அதன் நடைமுறை யதார்த்தம் சார்ந்து நோக்கினால், அது அபத்தமானது. ஏனெனில், அநுர அலையை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் ஓரணியாக திரண்டு நிற்பதுதான் சரி என்றால், 75 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட தமிழ்த் தேசிய அரசியல் நீட்சியில், இந்தக் கட்சிகளின் அடைவுதான் என்ன?இந்தத் தேர்தலில் ‘தமிழ்த் தேசியம்’ தோற்றுப் போயிருப்பதாக இந்தப் பத்தியாளர் ஒருபோதும் நம்பவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாட்டுத் திறனற்ற நடவடிக்கைகளினால், மக்கள் பெருமளவு நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகள் எதுவும் இந்தத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் சாத்தியமில்லை என்ற முடிவை, ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க பெற்ற வெற்றி, தமிழ் மக்களிடமும் அறிவித்தது. அதனால்தான், யாழ்ப்பாணத்தில் இருபத்தி ஏழாயிரத்து சில்லறை வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியினால், அடுத்த ஐம்பது நாட்களுக்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக வாக்குகளைப் பெற முடிந்திருக்கின்றது. அநுர அலைக்குள் தமிழ் மக்கள் அள்ளுண்டு போயிருப்பது, பாரிய எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான அதிருப்திக்கான மாற்றுத் தெரிவு சார்ந்த பிரதிபலிப்பின் போக்கிலாகும். வடக்குக் கிழக்கில் தாங்கள் பெற்ற வெற்றியை, தேசிய மக்கள் சக்தியினர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அது, அவர்களுக்கும் ஆச்சரியமளித்திருக்கின்றது. இன்றைக்கு அவர்கள்  நாடு முழுவதும் ஆணைபெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதுவரை, ஆட்சிக்கு வந்த தென் இலங்கைத் தரப்புக்கள், வடக்குக் கிழக்கில் இவ்வாறான ஆணையை ஒருபோதும் பெற்றதில்லை. அது தொடர்பில் சிந்தித்ததுமில்லை. தேசிய மக்கள் சக்தி, எதிர்பார்க்காத வெற்றியை தமிழ் மக்களும் சேர்ந்து வழங்கியிருக்கும் நிலையில், அந்த வெற்றியை எதிர்காலத்தில் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது சார்ந்து, அவர்கள் திட்டமிட்டுச் செயற்படுவார்கள். தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகமான ஜே.வி.பி., அரசியல் செயற்பாட்டினை நிறுவன ரீதியில் திட்டமிட்டு முன்னெடுப்பது. அதற்கு குறுகிய வெற்றிகள் தொடர்பிலான அவசரம் இருப்பதில்லை. கிடைக்கும் வெற்றிகளை, எதிர்கால அடைவுகளுக்கான படிக்கற்களாக மாற்றும் உத்தி அறிந்த செயற்பாட்டு அரசியலின் சொந்தக்காரர்கள். இதுவரை தென் இலங்கையின் பாரம்பரிய சக்திகளை தோற்கடிப்பதில் கவனம் செலுத்திய ஜே.வி.பி.யினர், இனி தமிழ்த் தேசிய அரசியலின் பெயரினால் நிலைபெற்றுவிட்ட பாரம்பரிய அரசியல்வாதிகளையும் குடும்பங்களையும் இலக்கு வைத்து, அரசியலை நகர்த்துவார்கள். அது, தமிழ் மக்களிடம் எடுபடும் வாய்ப்புக்களும் உண்டு. ஏனெனில், தமிழ்த் தேசியப் போராட்டம் முழு மூச்சோடு முன்னெடுக்கப்பட்ட காலத்திற்கு பின்னராக வளர்த்துவிட்ட இளைஞர்கள் கூட்டம் ஒன்று உருவாகிவிட்டது. அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்யும் அரசியலுக்கும் இடையிலான இடைவெளி நிரப்ப முடியாத அளவுக்கு இருக்கின்றது. அந்த இடைவெளியை, தேசிய மக்கள் சக்தியினர் இலகுவாகவும் கவர்ச்சிகரமாகவும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ரிக்ரொக், றீல்ஸ் உள்ளிட்ட காணொலி தளங்களில், அநுர அலையை கொண்டாடும் நூற்றுக்கணக்கான தமிழ்க் காணொலிகள் நாளும் பொழுதும் பதியப்படுகின்றன. இலகுவாக, “யார்ரா அந்தப் பையன்… நான் தாண்டா அந்தப் பையன்..” மாதிரியான ரெண்ட் காணொலிகளை அநுரவும், அவரின் இளவல்களும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திருகோணமலையின் அருண் ஹேமச்சந்திரவும், இரத்தினபுரியின் பிரதீப்பும், யாழ்ப்பாணத்தின் இளங்குமரனும், பதுளையின் அம்பிகாவும் தமிழ் இளைஞர்களிடம் பெரும் நாயக பிம்பத்தோடு முன்வைக்கப்படுகிறார்கள். அரசியல் அதிகார ஆர்வத்தோடு இருப்பவர்களை ஈர்ப்பதற்கான வழிமுறைகளில் அது பெரு வெற்றியை ஜே.வி.பி.யினருக்கு பெற்றும் கொடுக்கும். சமூக ஊடக வெளிச்சத்தில் பெரு வெற்றிபெற்ற வாழும் உதாரணத்தை, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமும் இம்முறை பிரசவித்திருக்கின்றது. மருத்துவர் அர்ச்சுனாவுக்கு விழுந்த சுமார் 28,000 வாக்குகளில் இளைஞர்களின் வாக்குகளே அதிகமானவை. அர்ச்சுனாவும், அவரது ஆதரவுத் தரப்பினரும் கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களை நாளும் பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். முடிவுறாத சர்ச்சையைக் கிளப்பினார்கள். தமிழர் அரசியலில் அர்ச்சுனாவைத் தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு விடயம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது. அது, சாமானியர்களின் அலைபேசிகள் வரை வியாபித்தது. அதுதான், இன்றைக்கு அர்ச்சுனாவை ‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினராக மாற்றியிருக்கின்றது. அவர், வெற்றியை பெற்ற பின்னரும், சர்ச்சையின் நாயகனாக இருப்பதற்கான எல்லாக் காரியங்களையும் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதன் வழியாக அவரைக் கொண்டாடுவதற்கு ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்கின்றது என்ற செய்தி, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது. தனியொரு அர்ச்சுனாவால், இவ்வளவு கவனம்பெற முடியும் என்றால், பிரச்சார உத்திகளின் தலைமகன்களாக இலங்கை அரசியல் களத்தில், இருக்கும் ஜே.வி.பி.காரர்களினால், தமிழ் சமூக ஊடக வெளியை இலகுவாகவும், தொய்வின்றியும் ஆக்கிரமித்துக் கொள்ள முடியும். அது, இன்றைய வாக்காளர்களை மட்டுமல்ல, நாளை புதிய வாக்காளர்களாக மாறப்போகும் பதின்ம வயதினர் வரை தாக்கம் செலுத்தும்.இன்றைக்கு சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசிய அரசியல் பேசும் இளைஞர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இப்போது இவர்களின் அநேகர் நாற்பதுகளை அடைந்து கொண்டிருப்பவர்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவுகளின் கனதியை நேரடியாக சந்தித்தவர்கள் அல்லது அதனை பார்த்து மனம் வெதுப்பிய இளைஞர்களின் நீட்சி இந்தக் கூட்டம். அடுத்த பொதுத் தேர்தலுக்கு அவர்களில் அநேகர் நாற்பதுகளைக் கடந்துவிடுவார்கள். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கப் போகிறவர்கள், முள்ளிவாய்க்கால் முடிவுகள், தமிழ்த் தேசிய அரசியலின் தேவை தொடர்பில் பெரிய பட்டறிவு இன்றி வளர்ந்துவிட்ட ஒரு பெரும் கூட்டமாகும். இன்றைக்கு சமூக ஊடகங்களில் அரசியல் பேசும் தமிழ் இளைஞர்களில், யார் யார் எந்தக் கட்சியின் ஆதரவாளர், யாரின் விமர்சகர்கள் என்பது வரையில் தெளிவான உணர்நிலை உண்டு. இவர்களின் அரசியல் அணுகுமுறை என்பது, தங்களுக்குள் சண்டையிட்டு ஓய்வதோடு முடிந்துவிடும். இந்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், மாறி மாறி அடித்துக் கொண்ட இவர்களுக்கு, களம் அநுர அலைக்குள் அள்ளுண்டு செல்கின்றது என்பதை கணிக்க முடியவில்லை என்பது பெரும் சோகமாகும். இந்த வட்டத்துக்குள் புலமையாளர்கள், சட்டத்தரணிகள் தொடங்கி யாழ்ப்பாணத்தின் படித்த சமூகம் என்று தங்களை முன்னிறுத்தும் ஒரு பெரும் தொகுதியினர் அடங்கியிருந்தனர். அவர்களில் அநேகர், தமிழ்த் தேசியக் கட்சிகளில் மதியுரைஞர்களாகவும் செயற்பட்டவர்கள். ஆனால், இன்றைக்கு, தங்களுக்குள் முட்டி மோதி, கள நிலமைகளை அறியாத பழியைச் சுமந்து நிற்கிறார்கள். தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரையில் தங்களுக்குள் பழித்தும் சிரித்தும்விட்டு இறுதி நாட்களில் தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்கக் கோரிய போது, அநுர அலைக்குள் தமிழ் மக்களின் அநேகர் அள்ளுண்டு போயிருந்தார்கள். அதிலும் அரச உத்தியோகஸ்தர்கள்  பெருமளவில் அநுர அலைக்குள் அடங்கிவிட்டு, சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசிய வகுப்பு எடுத்த காட்சிகள் எல்லாமும் அரங்கேறியது. இன்றைக்கு, தமிழ்த் தேசிய அரசியலை சமூக ஊடகங்களில் பேசும் இளைஞர்கள் தரப்பு, ஆமைகள் போல தலைகளை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டுவிட்டார்கள். அவர்களுக்கு, இந்தப் பின்னடைவை, எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை.பேஸ்புக், எக்ஸ் தளங்களைத் தாண்டி இன்றைக்கு கவர்ச்சிகரமான கவனம்பெற்ற ஊடகங்களாக ரிக்ரொக்கும் றீல்ஸும் மாறிவிட்டது. அதில், இயங்கும் இளைஞர்கள் தொடர்பில் ஒருவகையினால் கீழ்த்தரமான எண்ணங்களை வெளிப்படுத்திய, மேடிமைத்தனத்துக்கும் சேர்த்துத்தான் அநுர அலையில் ஆக்கிரமிப்பு பெரும் படிப்பினையை வழங்கியிருக்கின்றது. ஏனெனில், ரிக்ரொக் போன்ற தளங்களில் கவனக் கலைப்பான்களாக இருந்தவர்களில் சிலர், தேசிய மக்கள் சக்திக்காக கிராமங்களில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது. பிரதான ஊடகங்களின் தாக்கம் இல்லாத பகுதிகளிலும் இந்த காணொலி ஊடகங்களின் வீச்சு அதிகம். அப்படியான கட்டத்தில், அதில் கவனம் பெற்றவர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் கவர்ச்சிகரமானர்களாக மாறுவார்கள். அவர்கள், நேரடியாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, காசுக்கும் சலுகைகளுக்கும் வாக்குக் கேட்டுச் செல்லும் பிரச்சாரகர்களைத் தாண்டி, இந்த சிறு காணொலி நாயகர்கள் இலகுவாக கவனம் பெறுவார்கள். தேசிய மக்கள் சக்திக்கான வாக்களிப்பை  தொகுதிவாரியாக எடுத்து நோக்கி ஆய்ந்து அறிந்தால், அது வெளிப்படுத்தும் உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் தோல்வியின் பின்னரும் தங்களில் பாரம்பரிய அரசியல் அணுகுமுறையை மாற்றுவதுபோல தெரியவில்லை. தமிழரசுக் கட்சி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு, தலைவர் பதவியில் இருந்து விலகினாரா இல்லையா என்று தெரியாத மாவை சேனாதிராஜாவின் பெயரை பரிசீலிக்கும் அளவுக்கு இருக்கின்றது. அவரும், எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல், தனக்கு பதவியை வழங்கக் கோரி கெஞ்சிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம், புதிய இளைஞர் ஒருவருக்கு பதவியை வழங்கி, கட்சி மீது நம்பிக்கை இழந்திருக்கின்ற இளைஞர்களிடம் நற்செய்தியை சொல்வதற்குப் பதிலாக தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த மருத்துவர் பா.சத்தியலிங்கத்திடம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கிறார்கள். அவர், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கின் அடிப்படையிலும் ஐந்தாவது இடத்தில் நிற்பவர். அவரைவிட சக வேட்பாளர்களான டினேசன், டலீமா போன்றவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள். இப்படியாக, தேய்ந்துபோன பாரம்பரிய அரசியல்வாதிகளாக தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்தும் செயற்பட்டால், வடக்கில் அடைந்த படுதோல்வியின் விளைவுகளை கிழக்கிலும் பெற வேண்டி வரலாம். தமிழரசுக் கட்சியின் மீட்சியை நடத்தியது கிழக்கு. அதில், மட்டக்களப்பில் சாணக்கியனின் வகிபாகம் முதன்மையானது. அவர், நம்பிக்கையளிக்கும் இளைஞராக தமிழர் அரசியலில் மாறியிருக்கிறார். அவரும் இல்லையென்றால், மட்டக்களப்பிலும் ஒரு ஆசனத்துக்குள் தமிழரசு சுருங்கியிருக்கும். இறுதியாக அனைத்துத் தேர்தல் மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்ற அளவில் கட்சி மாறியிருக்கும். மற்றப் பக்கத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முகத்தோடு இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தன்னுடைய தோல்விகரமான அரசியலை கைவிடுவதாக இல்லை. ஒரு விடயம் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னரேயே, எதிர்ப்புத்தான் அரசியல் வழி என்று அறைகூவுவது அவர்களை மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பதற்கான காரணியாகும். காங்கிரஸினால், யாழ்ப்பாணத்தைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. கிழக்கில், அந்தக் கட்சி ஒரு வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. யாழ் நிர்வாக மாவட்டத்தில் காங்கிரஸுக்கு விழும் வாக்குகளில் அதிகமானவை, பாரம்பரிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்து காலத்து வாக்குகள். அந்த வாக்குகள் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாக்குப் பிடிக்கவே போதுமானதாக இருக்காது. எஞ்சியுள்ளது சில நூறு இளைஞர்களின் வாக்குகள். அந்த எண்ணிக்கை, இன்றைக்கு இருக்கும் நிலையில் தப்பிப்பிழைப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. அத்தோடு, இனி காங்கிரஸினை ஒரு அரசியல் எதிரியாக காட்டும் வேலைகளை தமிழரசு யாழ்ப்பாணத்துக்குள் செய்யும் வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில், தமிழரசு தன்னை தேசிய மக்கள் சக்திக்கு எதிராக நிலை நிறுத்தியாக வேண்டும். இல்லையென்றால், தமிழரசு தன்னுடைய வாக்குகளை இழக்க வேண்டி வரலாம். அதனால், காங்கிரஸின் நிலை இன்னும் இன்னும் கீழிறக்கப்படும்.தமிழ்த் தேசிய அரசியல் பேசும் கட்சிகள் தங்களின் பாரம்பரிய நிறுவனக் கட்டமைப்பு மற்றும் குடும்ப, சாதி ஆதிக்க அரசியலைக் கைவிட்டு இளைஞர்களையும் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் நோக்கி செயற்பாட்டு அரசியல் செய்வதற்கு முழு மனதோடு தயாராக வேண்டும். இன்று அநுர அலைக்குள் அள்ளுண்டு சென்றிருக்கின்ற மக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். அதனை உணராமல், திரும்பத் திரும்ப அறமற்ற அழிச்சாட்டியங்களின் வழியாக விடயங்களைக் கடப்பீர்கள் என்றால், தேசிய மக்கள் சக்தி ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் ஊடுருவி, ஆழ வேரரூன்றிக் கொள்ளும். அப்போது, குய்யோ முறையோ என்று கத்திக் குழறினாலும் அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில், அதனை உணர்ந்து இளைஞர்களிடம் அரசியலை ஒப்படைத்து  செயற்பாட்டு அரசியலை அடுத்த கட்டத்துக்க நகர்த்துங்கள். இப்போதைக்கு அவசரமாக சொல்லிக் கொள்ளக் கூடியது அதுதான். -காலைமுரசு பத்திரிகையில் நவம்பர் 24, 2024 வெளியான பத்தி.Posted 23rd November 2024 by maruthamooranLabels: அநுர: தமிழரசு: தமிழ்த்தேசியம்: கட்டுரை: அரசியல் 0 Add a comment
  9. Nov17தமிழ்த் தேசியக் கட்சிகளின் முகத்தில் பாய்ந்த ‘தோல்வி’ அம்புகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)‘தேசமாய் திரள்வோம்…’ என்ற குரல்கள் மீண்டும் பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பெற்றிருக்கின்ற அமோக ‘வெற்றி’ தந்திருக்கின்ற எரிச்சல் ஏமாற்றத்துக்கான உடனடி வலி நிவாரணி, ‘தேசமாய் திரள்தல்’ என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளினதும், தரப்புக்களினதும்  எண்ணம். ஆனால், உண்மையில் தேசமாய் திரள்தல் என்பது, ஆடி ஓய்ந்தவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரப் பதவிகளுக்கும் அனுப்புதலை நோக்கமாகக் கொண்ட கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஓரணி நாடகமாக இருக்க வேண்டுமா? அல்லது தெளிவான செயற்திட்டங்களோடு, வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை மங்காது பாதுகாத்து முன்நகர்வதில் தங்கியிருக்கிறதா? என்ற கேள்விகள் சார்ந்தது. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி, தனக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட கிட்டத்தட்ட ஒன்றரை மடக்கு வாக்குகளை அதிகமாகப் பெற்றிருப்பதாக கொள்ள முடியும். இந்த வாக்குகள் எந்தெந்த தொகுதிகளுக்குள் இருந்து அதிகமாக கிடைக்கப் பெற்றிருக்கின்றன என்கிற விடயங்களை சற்று ஆராய்ந்தாலே, தேசிய மக்கள் சக்தியை நோக்கிய வாக்குத் திரட்சியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் மானிப்பாய் தேர்தல் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்ற கணிசமான வாக்குகள், தமிழ் மக்களிடையே காணப்படும் சாதிய, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக வெளிக் காட்டுகின்றன. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளாக, குழுக்களாக தங்களை முன்னிறுத்தும் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்று தொடங்கி சுயேட்சைக்குழுக்கள் வரையில் பலரையும், கணிசமான மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அந்தப் புறக்கணிப்பின் பின்னால், ஆக்கபூர்வமற்ற போலியான தேசிய உரையாடல்களும், சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை முறையாக சரிசெய்ய முடியாமை என்கிற பேதமையும் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும்பாலும், யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கானதே, தேர்தல்கள் என்ற தோரணையிலேயே, தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. சரியான அளவில், சமூகங்களுக்கு இடையிலான அதிகார பகிர்வினைச் செய்வதற்கு தயங்கி அல்லது அவ்வாறான தேவையொன்று தொடர்பில் ஒருபோதும் கண்டுகொள்ளாமல், நடந்துவிட்டு, வாக்குகளைக் கோருவது என்பது அபத்தமானது. தமிழ்த் தேசியக் கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலுக்கான வேட்பாளர்களாக மேலாதிக்க சமூகம் தவிர்ந்து எத்தனை வெற்றி வேட்பாளர்களை அடக்கப்பட்ட சமூகங்களுக்குள் இருந்து முன்னிறுத்தியது என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு தமிழ்த் தேசியம் சார் உரையாடல்களை யார் திறந்தாலும், அது பொய்களின் மீது போலியான நம்பிக்கைகளைக் கட்டுவதாகும். எந்தவொரு தமிழ்க் கட்சியும் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருந்து வேட்பாளர்களை நிறுத்தியமை என்பது ஒப்புக்கானது. அவர்களினால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே, அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தினார்கள். அப்படியான நிலை கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போது, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், தமிழ்த் தேசியம் பேசி வரும் போலியாளர்களை புறக்கணிப்பது என்பது இலகுவாக நடைபெறும். அது, 2020 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கிழப்பிலும் அங்கஜனின் வாக்குத் திரட்சியிலும் பலமாக வெளிப்பட்டது. இன்று அந்தச் சூழலை, தேசிய மக்கள் சக்தி மிக இலகுவாக அறுவடை செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் யாழ் மையவாத நிலைப்பாட்டுக்குள் நின்று உளலும் கட்சிகள். இவற்றுக்கு யாழ் நல்லூர் மேலாதிக்க சிந்தனைக்கு அப்பாலான சமூகக் கண்ணோட்டம் என்பது பெரும்பாலும் இல்லை. தமிழ்த் தேசியம் என்பது, வெளிப்படையாக உடைத்துப் பேசினால் ‘வெள்ளாள தேசியம்’ அல்ல. ஆனால், தமிழரசுக் கட்சியும், காங்கிரஸும் அந்த நிலைப்பாட்டில்தான் இன்றுவரை நிற்கின்றன. அந்த நிலைப்பாட்டினை மாற்றாது, போலி ஒருங்கிணைப்புக் கோரிக்கைகளின் வழியாக தோல்விகளைக் கடக்கலாம் என்பது ஒரு சில தேர்தல்களுக்கு வெற்றிகளை தக்க வைக்க உதவலாம். ஆனால், மறுபுறத்தில் நாடு முழுவதும் ஓரணியாக திரண்டு நல்லிணக்க முகமூடியோடு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் நிலைத்து நீடித்திருக்க முடியுமா என்கிற கேள்வி பிரதானமானது. மாத்தறையில் சரோஜா போல்ராஜும், திருகோணமலையில் அருண் ஹேமச்சந்திராவும் பெரும்பான்மை சிங்கள வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள். இவர்களை உதாரணமாகக் காட்டிக் கொண்டு வடக்குக் கிழக்கில் தங்களை இனங்களையும் இனவாதத்தையும் கடந்தவர்கள் என்ற பரப்புரையை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுக்கும். அதுபோல, மட்டக்களப்பில் அந்தக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்ற சமூகங்களுக்குள் இருந்து, மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியும் என்கிற செய்தியைச் சொல்லுவதற்கான அடையாளமாக  அங்கு பெறப்பட்ட வாக்குகள் தமிழர் தேசமெங்கும் செய்தியாகக் கொண்டுசெல்லப்படும். ஏனெனில், அது புறக்கணிக்கப்படும் சமூகங்களின் கனதியான வாக்கு வங்கியை ஒன்றாக திரட்டுவதற்கும் உதவும். இவ்வாறான நிலை மலையக தமிழ் மக்களிடத்திலும் பெருமளவில் வெற்றிக்கான கருவியாக, இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பயன்படுத்தப்பட்டது. அது, எதிர்பார்த்த அளவினைத் தாண்டிய வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பரம்பரை பண்ணையார்த்தன அரசியலைச் செய்து வந்திருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராக தொண்ணூறுகளில் புதிய புரட்சியாளர்களாக வந்த சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் அதன் பின்னராக வந்த ஏனைய கட்சிகளும் ஒரு கட்டத்தில், பழைய பண்ணையார் கட்சிகளின் தொடர்ச்சிதான் தாங்களும் என்ற தோரணையைக் காட்ட ஆரம்பித்தன. அவ்வாறான தருணத்தில், தேசிய மக்கள் சக்தி, லயன்களுக்குள் இருந்து மலைய ஆளுமைகளை, குறிப்பாக இளம் பெண்களை முன்னிறுத்தி கனதியான வெற்றியை மலையக மக்களுக்கு இடையில் பெற்றிருக்கின்றது. பதுளையில் அம்பிகா சாமுவேலின் வெற்றி, அப்படியான ஒன்றுதான்.முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது ‘ராஜபக்ஷக்கள் எதிர்ப்பு’ என்ற ஒற்றைப் புள்ளிக்குள் சுருங்கிவிட்டது. அதனை இந்தப் பத்தியாளர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்படியான சூழலில், அரங்கில் இருந்து ராஜபக்ஷக்கள் அகற்றப்பட்ட பின்னணியில், யாரை அரசியல் எதிரி என்று கட்டமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தொடர்ச்சியான சிக்கல் இருந்தது. “…ராஜக்ஷக்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம், மின்சாரக் கதிரையில் இருத்துவோம்…” என்பதுதான் தமிழரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரக் கோசமாக இருந்திருக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புக்கள், வழிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருபோதும் செயற்பாட்டு அளவின் முன்னின்று ஆக்கபூர்வமான அடைவுகளை காட்டியது இல்லை. தென் இலங்கை மக்களே, ராஜக்ஷக்களை புறந்தள்ளியிருக்கின்ற சூழலில், ராஜபக்ஷக்களை மையப்படுத்திய எதிர்ப்புப் பிரச்சாரம், தமிழர் தேசத்தில் எடுபடும் என்று கொள்ள வேண்டியதில்லை. அது, நடந்து முடிந்த தேர்தலில் எடுபடவும் இல்லை. தமிழரசுக் கட்சியும் காங்கிரஸும் யாழ்ப்பாணத்துக்குள் ஒருவரை ஒருவர் தரம்தாழ்த்தி பேசிக் கொண்டிருக்க, மற்றப் பக்கத்தினால் தேசிய மக்கள் சக்தி, உள்ளூர ஊடுருவி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2020 பொதுத் தேர்தலில் எண்ணூற்றுச் சில்லறை வாக்குகளைப் பெற்றவர்கள், இந்தப் பொதுத் தேர்தலில் எண்பதாயிரம் வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றிருக்கின்றமை என்பது, ‘அநுர’ என்கிற ஓர் அலையினால் நிகழ்ந்தது மாத்திரமல்ல. அது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதான பெரும் அதிருப்தியினாலும் உருவானது. அத்தோடு, தேசிய மக்கள் சக்தியை நோக்கிய தமிழ் மக்களின் திரட்சியின் பின்னால் உணர்த்தப்படும் இன்னொரு செய்தி, தங்களுக்கு ‘முகவர்கள்’ தேவையில்லை என்பதாகும். ராஜபக்ஷக்கள், ரணில்களைக் கையாளத்தான் வடக்குக் கிழக்கில் டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்ற அரச முகவர்கள் தேவை. ஆனால், ராஜபக்ஷக்களும் ரணிலும் அகற்றப்பட்ட பின்னர், அவர்களின் முகவர்களையும் புறக்கணிக்கும் முடிவுக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். இன்றைக்கு அவர்கள், முகவர்கள் இல்லாமல், நேரடிப் பிரதிநிதிகளை வடக்குக் கிழக்குப் பூராவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நேரடி தமிழ்ப் பிரதிநிதிகள் வென்றிருக்கிறார்கள். அவர்களை நேரடியாக அணுகமுடியும் என்ற சூழலை அந்தக் கட்சி வைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் முகவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. அந்தச் சூழலும் சேர்ந்து, இன்னமும் தமிழ்த் தேசியக் கட்சிகளில் இரட்டை மனநிலையோடு தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு கனதியான கூட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் பக்கத்துக்கு கொண்டு சேர்ந்துவிடும். அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அப்படியான சூழலில் அரசியல் அதிகாரக் கனவோடு இருக்கும் இளைஞர்களை, தேசிய மக்கள் சக்தி ஈர்த்துக் கொள்வது என்பது இன்னும் இலகுவானது. ஏனெனில், இன்றைக்கு வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வெற்றி பெற்றிருக்கின்றவர்களினால் , தமிழ்த் தேசியக் கட்சிகளில் போட்டியிட்டிருந்தால், ஒருபோதும் வெற்றிபெற்றிருக்க முடியாது. அவர்கள், அந்தக் கட்சிகளின் உதிரி வேட்பாளர்களாக மாத்திரமே கணிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிபெற்ற வேட்பாளர்கள். அதுபோல, தேர்லொன்றை எதிர்கொள்வதற்கான செலவு என்பது மலையளவு போன்றது. அவ்வாறான நெருக்கடியுள்ள சூழலில்,தமிழ்த் தேசியக் கட்சிகளில் நிலைத்திருப்பதைக் காட்டிலும் தேசிய மக்கள் சக்தி போன்ற நிறுவனக் கட்டமைப்பு உறுதியான இடத்தில் சேர்ந்தால், அவர்களே தங்களை வெற்றிபெற வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும், அவர்களை நோக்கிய இளைஞர்களின் திரட்சிக்கு வழி வகுக்கும். அவசரமாக மாகாண சபைத் தேர்தல் கள் நடத்தப்பட்டால், வடக்குக் கிழக்கில், தேசிய மக்கள் சக்தி இலகுவாக ஆட்சி அமைக்கும் சூழலுள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை பேசும் சில தரப்புக்கள், ‘சோறா சுதந்திரமா…?’ என்ற தமிழ் மக்களை நோக்கிய ஏளனமான கேள்வியை பெரிய தார்மீகக் கோட்பாட்டுக் கேள்வி மாதிரி தொடர்ச்சியாக எழுப்பி வந்திருக்கின்றன. டக்ளஸுக்கும் பிள்ளையானுக்கும் கடந்த காலங்களில் வாக்களித்து வந்திருக்கின்ற மக்களை நோக்கி, இந்த ஏளனமான வாதத்தை முன்வைத்து கேவலப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால், தொடர்ச்சியாக மூன்று தசாப்த கால போருக்குள் சிக்கி பொருளாதார பின்னடைவுகளை  சந்தித்திருக் கின்ற சமூகத்துக்குள் சோற்றுப் பிரச்சினை என்பது, பிரதான பிரச்சினை. பசியை அடக்காமல் எல்லோரையும் தியாகி திலீபன் மாதிரி சுதந்திர தாகத்தோடு இருக்கக் கோருவது அரசியல் அல்ல; அறமல்ல. அது, அதிகார, பணத் திமிரின் போக்கில் வருவது. உயிரின நிலைத்திருப்பு என்பது பசியை அடிப் படையாகக் கொண்டது. வயிற்றுப் பசி, உடல்பசி, அதிகாரப் பசி என்று அது விரிந்து செல்லும். முதலில் அடங்க வேண்டியது வயிற்றுப் பசி. அதனைச் செய்வதற்கான எந்தத் திட்டங்களை யும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளில் செய்ய வில்லை. அனைத்தையும் யாழ் மேலாதிக்கவாதிகளும், அதன் வால்கள் போல இயங்கும் புலம்பெயர் தரப்புக்களும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற ஒற்றை வார்தைக்குள் நின்று புறக்கணித்திருக்கின்றன. இன்றைக்கு, அதனையே கேள்விக்குள்ளாக்கும் வண்ணம், வடக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளைக் காட்டி, தமிழ் மக்களுக்கு இருப்பது அரசியல் அதிகாரப் பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை என்று தென் இலங்கை பேசத் தொடங்கிவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் மூளையான ரில்வின் சில்வா போன்றவர்கள், அதனை தொடர்ச்சியாக தேர்தல் மேடைகளில் பேசியும் வந்திருக்கிறார்கள். அப்படியான சூழலில், அதன் பிரதிபலிப்பை தமிழ் மக்கள் காட்டிவிட்டார்கள் என்பது உணரப்படும். தமிழ்த் தேசியம் என்பது, விடுதலைக் கோசம் மாத்திரமல்ல. நிலத்தையும், பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறைச் சக்திகளிடம் இருந்து காப்பது. அதனை முழுமையாக உணர்ந்து செயலாற்றாமல், சோறா சுதந்திரமாக என்று கேட்பதெல்லாம், திரும்பத் திரும்ப பொய்களின் மீது நம்பிக்கையைக் கட்டுவதாகவும். தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் ஒன்றாக திரண்டால் போதும், வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் நிலைநிறுத்திவிடலாம் என்பது தொடர்வாதம். ஆனால், அந்த ஒருங்கிணைவு 2020 பொதுத் தேர்தலில் பெரிய வெற்றிகளை வழங்கவில்லை. இன்றைக்கு தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கில் வெற்றிருக்கின்ற வெற்றிக்கும், கூட்டமைப்பாக கடந்த முறை பெற்ற வெற்றிருக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆக்கபூர்வமான செயற்பாட்டுத் திட்டங்கள் இன்றி, ஒருங்கிணைவுக் கோசமோ, திரட்சிக் கோசமோ எழுப்பவது, ஒரு கட்டத்தில் மருத்துவர் அர்ச்சுனா போன்றவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் அளவுக்கான நம்பிக்கைச் சிதறல்களைச் செய்யும். பொதுச் சமூக ஒழுங்கில் கலகக்காரனாக, தூசணங்களின் வழி குழப்படிக்காரனாக ஓர் ஒழுங்கு முறைக்குள் என்றைக்கும் வராத மருத்துவர் அர்ச்சுனா, தன்னை தமிழ்த் தேசியவாதியாக முன்னிறுத்துகிறார். அதிலும், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற கஜேந்திரகுமாரையும், தோல்வியுற்ற சுமந்திரனையும்விட தன்னை மக்கள் அமோக விருப்பு வாக்குகள் வழங்கி அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு, போலித் திரட்சி; ஒருங்கிணைவுக் கோசத்தை எழுப்புவர்களின் முகத்தில் வீசப்பட்ட அம்பு. அதனை தமிழரசு, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் முதலில் பிடுங்கி எடுத்து சரியான மருந்திட்டு காயத்தை ஆற்றிவிட்டு, தேசத் திரட்சி பற்றி பேசுவது நல்லது. இல்லையென்றால், இன்னும் இன்னும் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். -காலைமுரசு பத்திரிகையில் நவம்பர் 18, 2024 அன்று வெளியான பத்தி.
    Posted 17th November 2024 
  10. Nov10தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
  11. (புருஜோத்தமன் தங்கமயில்)
  12. பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே. இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு நாட்கள் அமைதிக் காலம். பொதுத் தேர்தல் அறிவிப்பு முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் வரையில்தான், நாடு மீண்டுமொரு பிரதான தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றது என்ற பரபரப்பு காணப்பட்டது. ஆனால், அதன் பின்னரான காலம்  முழுவதும் பெரும்பாலும் பிரச்சார அமைதிக் காலம் மாதிரி எந்தவித ஆர்வமும் அக்கறையுமின்றியே தொடர்ந்தது. ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டதுபோலவே, பொதுத் தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையோடு இருக்கும் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியிருக்கின்றது. அந்தக் கட்சியுங்கூட ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய பெரும் எடுப்பிலான கூட்டங்கள் போலல்லாது, ஒப்பீட்டளவில் சிறிய கூட்டங்களையே நடத்தியிருக்கின்றது.  எதிர்க்கட்சிகளைப் பொறுத்தளவில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்துகிறார்களா?, என்று கேள்வி எழுப்பும் அளவிலேயே நிலைமை இருக்கின்றது. மனதளவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தயாராகிவிட்டு தேர்தலை எதிர்கொண்டால், நிலைமை இப்படித்தான் இருக்கும். கடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் நிச்சயமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியைப் பெறுவார்கள் என்று நம்பப்பட்ட நிலையிலும்கூட எதிர்க்கட்சிகள் பெரும் எடுப்பிலான பிரச்சாரக் கூட்டங்களை நடத்தின. தேர்தலை பொதுஜன பெரமுனவுக்கான களமாக மாற்றிவிட்டு ஒதுங்காமல், இறுதி வரையில் போட்டிக்களமாகவே வைத்துக் கொள்வதற்காக போராடின. ஆனால், இந்தப் பொதுத் தேர்தல் பெரும் அசண்டையீனத்துடன் அணுகப்படுகின்றது. இதன் பிரதிபலிப்புக்களையே வடக்குக் கிழக்கு தேர்தல் களமும் அப்பட்டமாக காட்டுகின்றது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பது தொடர்பில், யாருக்கும் எந்தத் தெளிவும் இல்லை. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எந்தவிதப் புரிதலும் இல்லை. ஒரு குழப்பமான நிலையில் நின்றுதான் விடயங்களை அணுகுகின்றன. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. அதில், முதலாவது, வழக்கத்துக்கு மாறாக தென் இலங்கையின் ஆட்சியை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய முகமான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றப் போகின்றது எனும் எதிர்பார்ப்பு. இரண்டாவது, தமிழ்த் தேசியக் கட்சிகள் வாய்ப் பேச்சில் காட்டும் ஆக்ரோசத்தை செயற்பாட்டில் காட்டுவதில்லை என்கிற தொடர் ஏமாற்றம்.  மூன்றாவது, தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், ஆளுமைகள் என்று தங்களை முன்னிறுத்தும் தரப்பினர், தமிழ் மக்களிடம் நம்பிக்கையை அவசர கதியில் கோரி, அதனை தோல்விகளில் முதலிடுவது. அதற்கான அண்மைய உதாரணம் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும், அதன் வழியாக நிகழ்த்தப்பட்ட சங்குச் சின்னத்தின் அபகரிப்பும், அறமற்ற அரசியலும். ராஜபக்ஷக்கள் இந்தத் தேர்தல் களத்தில் இல்லை. அதனால் ஆட்சி பற்றிய உரையாடல்களில் அவர்கள் வரவே மாட்டார்கள். அதனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் தேர்தலை எந்தப் புள்ளியில் நின்று எதிர்கொள்வது என்பதில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான அனைத்துத் தேர்தல்களையும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான கட்டத்தில் இருந்துதான், தமிழ்த் தேசிய அரசியல் களம் எதிர்கொண்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கூட ‘ரணில் ராஜபக்ஷ’ என்ற கட்டத்தில் வைத்துத்தான் பருமட்டாக எதிர்கொண்டது. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிட்ட போதிலும், அவரைத் தாண்டி அப்போதையை ஜனாதிபதியான ரணில் மீது ராஜபக்ஷ அடையாளம் அதிகமாக இருந்தது. அதன்பேரில், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று களம் விரிந்தது. அவருக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமாக தேர்தல் திட்டங்களை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்ற கோசம் பெருமெடுப்பில் எழுந்தது. அதனால்தான், வடக்குக் கிழக்கில் ரணிலின் சிலிண்டர் சின்னமும், சங்குச் சின்னமும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் இல்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக தேர்தல்கள் என்று எது வந்தாலும், அந்தத் தேர்தல்களை ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலையில் நின்றுதான், தமிழ்த் தேசிய அரசியல் களம் அணுகி வந்திருக்கின்றது. ராஜபக்ஷக்களின் தமிழர் விரோத ஆட்சியும் நடவடிக்கைகளும் அதற்கான காரணங்களாக தொடரவும் செய்தன. தற்போது, பிரதான எதிரியை அடையாளம் காணுவதில் தமிழ் அரசியல் களம் தடுமாறுகிறது. தென் இலங்கையின் பெரும்பான்மை வாதமும் அதன் வழியாக தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டுவந்த பேரினவாத சிந்தனையும்தான் தமிழ் மக்களின் பிரதான எதிரி என்பதை தெளிவாக முன்னிறுத்தி அரசியலைச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் களம் இப்போது பின்னடிக்கின்றது. அதற்கு, கடந்த இரண்டு தசாப்த காலத்தில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக மாத்திரம் சுருங்கிவிட்ட எதிர்ப்பு மனநிலையும் கூட காரணமாகும். பேரினவாத சிந்தனையை யார் அதிகமாக பிரதிபலிப்பது என்பது தொடர்பில்தான் தென் இலங்கையின் கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்துக்கான போட்டி இருந்திருக்கின்றது. ஐ.தே.க.வுக்கு எதிராக பண்டாரநாயக்க தூண்டியதும், சிறீமாவுக்கு எதிராக ஜெயவர்த்தன தூண்டியதும் பேரினவாதத்தைத்தான். இடைக்கிடை சமாதான வேடதாரிகளும், நல்லாட்சி நாடகங்களும் அரங்கேற்றப்படுவதுண்டு. அவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் ஓரிரு ஆண்டுகள் மாத்திரமே. மீண்டும் தென் இலங்கை பேரினவாதத்தின் பக்கத்தில் சென்றுவிடும்.  சமாதான தேவதை வேடத்தோடு ஆட்சி பீடமேறிய சந்திரிக்கா, அதனை ஓரிரு மாதங்களில் கலைத்து, போர் முகங்கொண்டு ஆட்சியை நடத்தினார். மைத்திரி- ரணில் நல்லாட்சிக் காலத்திலும், பேரினவாதம் காலைச் சுற்றிய பாம்பாக நிலைகொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்த போது, மைத்திரி ராஜபக்ஷக்களோடு பின்வழியாக உறவைப் பேணினார். அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவர எத்தணித்தார். இப்போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கின்றது. அவர்கள், இதுவரையில், சில மாதங்கள் சந்திரிக்காவின் ஆட்சியின் பங்குதாரர்களாக இருந்திருக்கிறார்களே அன்றி, தனித்த ஆட்சி அதிகாரத்தை நடத்தியது இல்லை. அதனால், தங்களின் மீது புரட்சி, புதிய மாற்றங்கள் என்கிற சாயத்தை இலகுவாக பூசிக் கொள்ள முடிந்திருக்கின்றது. அதனை, பெரும் நம்பிக்கையாக தமிழ் மக்களின் ஒரு பகுதியினரும் நம்பத் தலைப்படுகிறார்கள். அதற்காக, தமிழ்க் கட்சிகளைப் புறக்கணித்து, தேசிய மக்கள் சக்தியின் மீது பந்தயம் கட்டுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர், புத்திஜீவிகள், கல்வியாளர்கள் குழாம் ஒன்று, தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவினை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. ஆனால், அந்தக் குழுவிடம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, விடுதலை மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் செயற்திட்டங்கள் என்ன என்பதற்கான எந்தவித தெளிவும் இல்லை. அது தொடர்பில் கேள்வி எழுப்பினால், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்துத்தான் தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், மற்றவை தொடர்பில் தாங்கள் பொறுப்புக் கூறா வேண்டியதில்லை என்று நழுவிச் செல்கிறார்கள். அரசியலில் பொறுப்புக் கூறல் என்பது அடிப்படையானது. அதனை செய்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும். அதுவும், தொடர் பேரினவாத அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மக்கள் கூட்டத்துக்குள் இருந்து, அடக்குமுறையை பிரயோகித்து வந்த அணியின் கூறுகளாக இருந்தவர்களை ஆதரிப்பதற்கான காரண காரியங்களை தெளிவுபடுத்த வேண்டியது அடிப்படை. ராஜபக்ஷக்கள் என்ற பெரிய எதிரியைத் தோற்கடிப்பதற்காக கடந்த காலங்களில் அதற்கு எதிரான தென் இலங்கையின் அணிகளை தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அது, பெரிய எதிரியை தோற்கடிக்கும் உத்தி சார்ந்தது. அதனை அந்த முயற்சிகளில் ஈடுபட்ட கட்சிகளும், தலைவர்களும்கூட வெளிப்படையாக அறிவித்தே செய்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கான அறிவித்தலை விடுத்தமைக்கான நியாயப்பாடுகளைக் கூட ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால், பொதுத் தேர்தல் போன்ற, இனத்துவ பிரதிநித்துவமும் அதன் வழியாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான சூழலும் காக்கப்பட வேண்டிய கட்டத்தில், அதனைப் புறந்தள்ளிக் கொண்டு, புதிய மாற்றக் கோசத்துக்குள் கரைந்து போகக் கோருவது எந்த அடிப்படையிலானது? தேசிய மக்கள் சக்தியை நோக்கி திரட்சியைக் கோரும் தமிழ்ப் புத்திஜீவிகள், திடீர் புரட்சியாளர்கள் மற்றும் மிதக்கும் வாக்காளர்கள், அந்தக் கட்சியின் தீர்மானங்களை எடுக்கும் தலைமை தொடர்பிலான தெளிவோடு இருக்கிறார்களா என்கிற சந்தேகம் எழுகின்றது. அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் நிறைவடையவில்லை. அதற்குள், தேசிய மக்கள் சக்தியினர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பேசி வந்த அரசியலுக்கும், அவர்களின் ஆட்சிக்கும் இடையில் பாரிய இடைவெளியைப் பதிவு செய்கிறார்கள். கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று பேசி வந்த, அவர்கள், இப்போது அந்தச் சட்டத்தினை அப்படியே வைத்துக் கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். அத்தோடு, மாகாண சபைகள் முறையை ஒழித்தல், சமஷ்டிக் கோரிக்கை நிராகரிப்பு, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித இனத்துக்கு விரோதமான குற்றங்களையும் யுத்த குற்றங்களையும் தண்டித்தல் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறைகளை அனுமதிக்காமை என்கிற நிலைகளையே, அவர்கள் தெளிவாக பிரதிபலிக்கிறார்கள். குறிப்பாக, ரில்வின் சில்வா, விஜித ஹேரத் போன்ற, ஜே.வி.பி.யின் முடிவெடுக்கும் தலைமை, அதில் தெளிவாக இருக்கின்றது. அப்படியான நிலையில், முடிவெடுக்கும் அதிகாரமற்ற ஹரிணி அமரசூரிய போன்றவர்களை காட்டி, தேசிய மக்கள் சக்தியில் நம்பிக்கைக் கொள்ளக் கோருவது சரியான அரசியல் முடிவல்ல. தமிழ்த் தேசிய அரசியல், தென் இலங்கையில் பேரினவாத சிந்தனை இருக்கும் வரையில் காப்பாற்றப்பட வேண்டியது. அப்படியான சூழலில் தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளை கவனக் கலைப்பான்களின் மீது முதலீடு செய்வது ஆபத்தானது. தேசிய மக்கள் சக்தி அப்படியானதொரு ஆபத்தான கவனக் கலைப்பான். அந்தக் கட்சியின் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவானாலும், அவரினால் அந்தக் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு மாறாக நின்று ஒருபோதும் செயற்பட முடியாது. அப்படிச் செயற்பட்டால் அவர்களை கட்சியை விட்டு நீக்கி, பதவியைப் பறித்துவிடுவார்கள். தமிழ் மக்களின் முதல் தெரிவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்தான் இருந்தாக வேண்டும். நிறைய நம்பிக்கையீனங்களும் விமர்சனங்களும் தமிழ்த் தேசியக் கட்சிகள், அதன் தலைவர்கள் மீது இருக்கின்றன. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அதன் பெயரினால் புறக்கணிக்க முடியாது. ஏனெனில், கட்சிகளுக்குள் தலைவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் காக்கப்பட வேண்டும். அதில் மக்கள் தங்களின் பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டும். வடக்குக் கிழக்கு பூராவும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி வாக்களிக்க வேண்டும். அதிலும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் தவிர்ந்து அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியை நோக்கியே தமிழ் மக்கள் வாக்களிப்பது சரியான உத்தியாக இருக்கும். ஏனெனில், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் தமிழ் வாக்குகள் சிதறுவதால், தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு. சுயேட்சைக்குழுக்கள், சிறிய பலமற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது, வாக்குச் சிதறலை செய்து பிரதிநிதித்துவ இழப்பை அதிகப்படுத்திவிடும். அதன் பலனை பெரும்பான்மைக் கட்சிகள் அறுவடை செய்யும். யாழ்ப்பாணத்துக்குள் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கிய வாக்களிப்பு இருப்பது ஓரளவுக்கு ஆரோக்கியமான விடயமாக இருக்கும். ஏனெனில், சங்குக் கூட்டணியாக அண்மையில் தோற்றம் பெற்றவர்களிடம் தமிழ்த் தேசியத்துக்கான கூட்டுப் பொறுப்போ, சிறிய அறமோ இல்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் காணப்பட்ட இணக்கப்பாட்டை, தேர்தல் முடிந்த ஒருசில நாட்களில் மீறிக் கொண்டு, சங்கை அபகரித்துக் கொண்ட அசிங்கமான அரசியலைச் செய்து கொண்டிருப்பவர்கள். எப்படி, ஜனாதிபதித் தேர்தல்களில் இருப்பதில் பலம் குறைந்த எதிரியை தமிழ் மக்கள் ஓரணியாக நின்று தெரிவு செய்திருக் கிறார்களோ, அதன் ஒரு பருமட்டான மறுவளமாக, பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதான கட்சியாக, வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை நோக்கிய வாக்குக் திரட்சியைக் காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் மாற்றுத் தெரிவாக முன்னணி ஓரளவுக்கு அடையாளம் பெற்றிருக்கின்றது. அந்தக் கட்சி ஒரு மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்டதால், அதனை யாழ்ப்பாணம் தாண்டி பரிசோதிப்பது அபத்தமானது. தேசிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழுக்கள் என்று திடீர் கவனக் கலைப்பான்களைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பக்கத்தில் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் பக்கத்தில் திரள்வதுதான் இருப்பதில் ஓரளவுக்கு சிறந்த வாக்களிப்பு முறையாக இருக்க முடியும். அது, வடக்குக் கிழக்கில் ஒரு பலமான அணி மீண்டும் தோற்றம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தும். அதனைவிடுத்து, தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான விமர்சனத்தினை  முன்வைத்து பெரும்பான்மைக் கட்சிகளின் மீது வாக்குகளை முதலிடுவது, சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுவதைக் காட்டிலும் மோசமானது. -காலைமுரசு பத்திரிகையில் நவம்பர் 11, 2024 வெளியான பத்தி.

Loading

About VELUPPILLAI 3371 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply