ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குழப்பகரமான 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தல்
நக்கீரன்
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் எதிர்வரும் 2025 மே 6 இல் நடைபெற உள்ளது.
இலங்கையில் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தேர்தல்கள் முதலில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் தேர்தல்கள் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாகச் சொல்லப்பட்டன. ஈற்றில் 2023 இல் தேர்தல்கள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் திணைக்களம் வேட்பு மனுக்களைக் கோரியது. ஆனால் நாட்டின் மோசமான நிதி நிலைமையைக் காட்டி தேர்தலுக்கு வேண்டிய நிதியை நிதி அமைச்சு கொடுக்க மறுத்துவிட்டது. நிதி அமைச்சு சனாதிபதி இரணில் விக்கிரமங்கசிங்க அவர்களின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மை என்னவென்றால் சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை.
காலி நிர்வாக மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி அதிகார சபையை தவிர்த்து 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் உள்ளிட்ட 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நகர பிதா, துணை நகர பிதா, தலைவர், பிரதி தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் வகையில் எதிர்வரும் மே 06 இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கடந்த ஏப்ரில் 3 ஆம் திகதி தொடங்கிய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடைவடிக்கை ஏப்ரில் 07 மாலை 4.15 மணிக்கு முடிவடைந்தது. கடந்த மார்ச் மாதம் . 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனு தாக்கல் செய்த போது எண்பதற்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் மனுக்கள் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான சிக்கல், மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான சிக்கல்களால் அவை நிராகரிக்கப்பட்டன. அதனை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பெரிய சட்டவாதங்களின் பின்னர் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இதனால் மேலதிகமாக வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் நிமித்தம் இப்படியான சபைகளுக்கான
தேர்தல் இன்னொரு திகதிக்கு தள்ளிப் போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
நாட்டின் சகல உள்ளூர் அதிகார சபைகளுக்கும் உரிய வட்டாரங்களினதும், உறுப்பினர்களினதும் எண்ணிக்கை கீழே காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 1
அதிகார சபைகள், வட்டாரங்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
வட்டாரத்தின் தன்மை | வட்டாரங்களின் எண்ணிக்கை | உறுப்பினர்களின் எண்ணிக்கை |
ஒருமை உறுப்பினர் வட்டாரம் | 4,750 | 4,750 |
இரண்டு உறுப்பினர்கள் கொண்ட பன்மை வட்டாரம் | 165 | 330 |
இரண்டு உறுப்பினர்கள் கொண்ட பன்மை வட்டாரம் | 04 | 12 |
மொத்தம் | 4,919 | 5,092 |
இலங்கையில் சனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நான்கு விதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் நான்கு விதமான தேர்தல்களில் மிகவும் சிக்கலான தேர்தல் முறையாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் காணப்படுகின்றது.
மக்கள் தொகை, நிலப்பரப்பு, இன அடிப்படை ஆகியன எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அரசிதழ் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 17,296,330 இலங்கையர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் கல்முனை மாநகர சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபை , மன்னார் பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நீங்கலாக மொத்தமுள்ள 28 மாநகரசபைகள், 36 நகரசபைகள், 272 பிரதேச சபைகள் உள்ளிட்ட 336 உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினரக்ளைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். கடந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை விடவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 155,976 மேலதிக வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025ம் ஆண்டு சனவரி மாதம் 31ம் தேதி வரையான காலப் பகுதியில் 18 அகவையை நிறைவு செய்யும் அனைத்துக் குடிமக்களும் இம்முறை தேர்தலில் வாக்களிக்கத் தகுதிப் பெறுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் அடிப்படையில் நடத்தப்படுகின்றது. உள்ளூராட்சி பிரதேசங்களில் பிரதேச மட்டத்திலும், பொதுப் பட்டியலின் அடிப்படையிலும் மக்கள் பிரதிநிதிகள் கலப்பு விகிதாரச்சார முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களித்தபின் தங்களுக்குரிய 3 விருப்பு வாக்குகளை தங்களுக்குப் பிடித்த வேட்பாளரது எண்களுக்கு எதிராக புள்ளடி போட வேண்டும். இது கட்டாயம் இல்லை. போடாமலும் விடலாம். அல்லது ஒருவருக்கு அல்லது இரண்டு வேட்பாளருக்கு மட்டும் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகள் இரண்டு வெவ்வேறு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மொத்த வேட்பாளர் தொகை அந்தச் சபையின் மொத்த உறுப்பினர்கள் தொகையை ஒத்ததாக இருக்க வேண்டும். ஆனால் விகிதாசார வேட்பாளர் தொகை மேலதிகமாக மூன்று வேட்பாளர்களை கொண்டிருக்க வேண்டும்.
இளைஞர்களது விழுக்காடு 25 விழுக்காடுக்கு அதிகமாக இருக்க வேண்டும். பெண்கள் விழுக்காடு விகிதாசார வேட்பாளர் பட்டியலில் 50 விழுக்காடாகவும் நேரடித் தேர்தலில் 25 விழுக்காடாகவும் இருக்க வேண்டும். பெண்களது பிரதிநித்துவதை உறுதி செய்ய வெற்றி பெற்றவர்கள் 10 விழுக்காடாக இருக்க வேண்டும். இது விகிதாசார மற்றும் நேரடி தேர்தலில் வெற்றிபெற்றவர்களாக இருப்பர். இளைஞர்களது பிரதிநித்துவம் 25 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல.
கடைசியாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெற்றன. இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளில் (24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள்) இருந்து 8,356 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். இத்தேர்தலில் முதற்தடவையாக கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 40% உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2018 இல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேர்தலில் கட்சி அடிப்படையிலும் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களது விபரம் பின்வருமாறு.
அட்டவணை 2
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | சபைகள் | |||
---|---|---|---|---|---|---|---|
வட்டாரம் | வி.சா | மொத்தம் | |||||
இலங்கை பொதுசன முன்னணி | 5,006,837 | 40.47% | 3,255 | 181 | 3,436 | 126 | |
ஐக்கிய தேசிய முன்னணி | 3,640,620 | 29.42% | 872 | 1,561 | 2,433 | 5 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 1,497,234 | 12.10% | 204 | 844 | 1,048 | 2 | |
மக்கள் விடுதலை முன்னணி | 710,932 | 5.75% | 1 | 433 | 434 | 0 | |
மக்கள் விடுதலை முன்னணி | 337,877 | 2.73% | 389 | 28 | 417 | 2 | |
சுயேட்சைகள் | 374,132 | 3.02% | 93 | 181 | 274 | 2 | |
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[கு | 85,198 | 0.69% | 45 | 57 | 102 | 0 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 74,128 | 0.60% | 41 | 57 | 98 | 1 | |
தமிழர் விடுதலைக் கூட்டணி | 72,493 | 0.59% | 22 | 56 | 78 | 0 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[கு 9] | 92,897 | 0.75% | 44 | 29 | 73 | 0 | |
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | 85,437 | 0.69% | 21 | 44 | 65 | 0 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | 100,641 | 0.81% | 38 | 21 | 59 | 1 | |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 44,062 | 0.36% | 14 | 23 | 37 | 0 | |
தமிழ் முற்போக்குக் கூட்டணி | 50,974 | 0.41% | 2 | 24 | 26 | 0 |
மற்றவை | 199,354 | 1.61% | 33 | 95 | 128 | 2 |
---|
கட்டுப்பாட்டுக்கு வராத சபைகள் | 199 |
செல்லுபடியான வாக்குகள் | 12,372,816 | 100.00% | 5,074 | 3,634 | 8,708 | 340 |
---|---|---|---|---|---|---|
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 210,970 | 1.68% | ||||
மொத்த வாக்குகள் | 12,583,786 | 79.94% | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,742,371 |
இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவையாவன: மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள், மற்றும் கிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும். இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 38259 ஆகும்.
மாகாணம் மற்றும் மாவட்ட ரீதியாக சபைகளின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
அட்டவணை 3
உள்ளூராட்சி சபைகள் – இலங்கை | |||||
---|---|---|---|---|---|
மாகாணம் | மாவட்டம்t | உள்ளூராட்சி சபைகள் | |||
மாநகரம் | நகரம் | பிரதேச சபை | மொத்தம் | ||
மேல் | கொழும்பு | 5 | 5 | 3 | 13 |
கம்பகா | 2 | 5 | 12 | 19 | |
களுத்துறை | 1 | 3 | 13 | 17 | |
மத்திl | கண்டி | 1 | 4 | 17 | 22 |
மாத்தளை | 2 | 0 | 11 | 13 | |
நுவர ஏலியா | 1 | 2 | 9 | 12 | |
தெற்கு | காலி | 1 | 2 | 17 | 20 |
மாத்தறை | 1 | 1 | 15 | 17 | |
அம்பாந்தோட்டை | 1 | 1 | 10 | 12 | |
வடக்கு | யாழப்பாணம் | 1 | 3 | 13 | 17 |
கிளிநொச்சி | 0 | 0 | 3 | 3 | |
மன்னார் | 0 | 1 | 4 | 5 | |
வவுனியா | 1 | 0 | 4 | 5 | |
முல்லைத்தீவு | 0 | 0 | 4 | 4 | |
கிழக்கு | மட்டக்களப்பு | 1 | 2 | 9 | 12 |
அம்பாறை | 2 | 1 | 17 | 20 | |
திருகோணமலை | 1 | 1 | 11 | 13 | |
வட மேற்கு | குருநாகலை | 1 | 1 | 19 | 21 |
புத்தளம் | 1 | 1 | 10 | 12 | |
வட மத்தி | அநுராதபுரம் | 1 | 0 | 18 | 19 |
பொலநறுவை | 1 | 0 | 7 | 8 | |
ஊவா | பதுளை | 2 | 1 | 15 | 18 |
மொனறாகலை | 0 | 0 | 10 | 10 | |
சப்புரகமுவ | இரத்தினவுரி | 1 | 2 | 14 | 17 |
கோலை | 1 | 0 | 11 | 12 | |
மொத்தம் | 29 | 36 | 276 | 341 |
உறுப்பினர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?
வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களித்தபின் தங்களுக்குரிய 3 விருப்பு வாக்குகளை தங்களுக்குப் பிடித்த வேட்பாளரது எண்களுக்கு எதிராக புள்ளடி போட வேண்டும். இது கட்டாயம் இல்லை. போடாமலும் விடலாம். அல்லது ஒருவருக்கு அல்லது இரண்டு வேட்பாளருக்கு மட்டும் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகள் இரண்டு வெவ்வேறு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மொத்த வேட்பாளர் தொகை அந்தச் சபையின் மொத்த உறுப்பினர்கள் தொகையை ஒத்ததாக இருக்க வேண்டும். ஆனால் விகிதாசார வேட்பாளர் தொகை மேலதிகமாக மூன்று வேட்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். இளைஞர்களது விழுக்காடு 25 விழுக்காடுக்கு அதிகமாக இருக்க வேண்டும். பெண்கள் விழுக்காடு விகிதாசார வேட்பாளர் பட்டியலில் 50 விழுக்காடாகவும் நேரடித் தேர்தலில் 25 விழுக்காடாகவும் இருக்க வேண்டும்.
பெண்களது பிரதிநித்துவதை உறுதி செய்ய வெற்றி பெற்றவர்கள் 10 விழுக்காடாக இருக்க வேண்டும். இது விகிதாசார மற்றும் நேரடி தேர்தலில் வெற்றிபெற்றவர்களாக இருப்பர். இளைஞர்களது பிரதிநித்துவம் 25 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல.
உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.
இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.
ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். (Over Hang)
இதன் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். ஒரு கட்சி பத்து இடங்களுக்கு உரிமை பெற்றிருந்தாலும், ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால், அது அதன் முழு உரிமையை அடைய மூன்று பட்டியல் இடங்களைப் பெறுகிறது.(If a party is entitled to ten seats but wins seven constituencies, it receives three list seats to reach its full entitlement.) அந்தக் கட்சி பத்து வட்டாரத்தில் வென்றிருந்தால் என்ன நடக்கும்? அதற்கு விகிதாசார அடிப்படையில் ஒரு இருக்கையும் கிடையாது. 2018 இல் மட்டக்களப்பு மாநகர சபைக்கு நடந்த நேரடித் தேர்தலில் 33 வட்டாரங்களில் ததேகூ மொத்தம் 17,469 (36.72 %) வக்குகள் பெற்று 17 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் விகிதாசார முறைமையில் ஒரு இருக்கையும் கிடைக்கவில்லை.
இதன் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் அடிப்படையில்,
அட்டவணை 4
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை | = | 57540 |
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை | = | 26 |
சராசரி மதிப்பு | = | 57540/26 |
= | 2213 |
I. ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்
இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு x கட்சியானது 1,2,4,6,7,8,9,10,11,12,14 ஆகிய ஓருமை வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதுடன், Y கட்சி 3,5,13 ஆகிய வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர். Z கட்சி எதுவித வட்டாரத்திலும் வெற்றியீட்டாத காரணத்தினால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள்
II. பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு X கட்சியானது 15 என்னும் பன்மை வட்டாரத்தில் வெற்றியீட்டியூள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் இருவரும் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.
III. விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.
இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.
ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். (Over Hang)
இதன் அடிப்படையில்,
அட்டவணை 5
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை | = | 57540 |
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை | = | 26 |
உறுப்பினகளின் எண்ணிக்கை | = | 57540/26 |
சராசரி மதிப் | = | 2213 |
அட்டவணை 6
கட்சியின் பெயர் | பெற்றுக்கொண்ட வாக்குகள் | சராசரி தேர்ந்தெடுக்கப்பட | வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை | வட்டார மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை | விகிதாசாரமுறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை | மொத்த உறுப்பினர் எண்ணிக்கை |
X | 27938 | 2213 | 27938/2213 = 12.62 12, 1382 எஞ்சியது1382 13 | 13 | 00 | 13 |
Y | 23274 | 2213 | 23274/2213 = 10.51 10, எஞ்சியது 1144 10 | 03 | 07 | 10 |
Z | 6327 | 2213 | 6327/2213 =2.85 2 எஞ்சியது 1901 03 | 00 | 03 | 03 |
* இந்த விகிதாசார அட்டவணையின் கீழ் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது, இவ்வட்டவணையைப் போன்று தோல்வியடைந்த வட்டாரங்களிலிருந்தும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட முடியும்
பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
உதாரணம் – மேலே குறிப்பிடப்பட்ட A என்னும் பிரதேச சபை தொடர்பான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் சதவீதமும், தொகுதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு அமையும்.
அட்டவணை 7
கட்சி | பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் | வாக்காளர் எண்ணிக்கை | விழுக்காடு | வெற்றிபெற்ற தொகுதிகள் |
X | 27938 | 57540 | 48.55 | 13 |
Y | 23274 | 57540 | 40.44 | 10 |
Z | 6327 | 57540 | 10.99 | 03 |
இதன் பிரகாரம் பெண் உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படும் போது X, Y ஆகிய இரண்டு கட்சிகளும் பெற்றுக் கொண்ட வாக்குகள் மாத்திரமே கணிக்கப்படும்
உதாரணம் – மேலே குறிப்பிடப்பட்ட A என்னும் பிரதேச சபை தொடர்பான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் சதவீதமும், தொகுதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு அமையும்.
அட்டவணை 8
கட்சி | பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் | வாக்காளர் எண்ணிக்கை | விழுக்காடு | வெற்றிபெற்ற தொகுதிகள் |
X | 27938 | 57540 | 48.55 | 13 |
Y | 23274 | 57540 | 40.44 | 10 |
Z | 6327 | 57540 | 10.99 | 03 |
இதனைப் படிக்கத் தலை சுற்றுகிறதா? கவலை வேண்டாம். மாவட்டத் தேர்தல் அலுவலகம் இவற்றை கணினி உதவியுடன் கணித்துச் சொல்லுவார்கள். வட கிழக்கு மாவட்ட தேர்தல் நிலைமையை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.