No Picture

கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01

November 10, 2021 editor 0

கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01 ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன் February 01, 2014 2014 commentகந்தபுராணம் மற்றும் இராமாயணம் கதைகளைப் படித்தவர்களில், இவை இரண்டுமே ஒரு கதைதான், பாத்திரங்களின் பெயர்கள்தான் வேறு என்ற உண்மையை ஊகித்திருப்போர் ஒரு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும். நமது தமிழ் சினிமாப் படங்களின் கதை எல்லாமே ஒன்றாய் இருந்தாலும், நடிப்பவர்களையும், பெயர்களையும் மாற்றி, மாற்றிப் போட்டு எத்தனையோ வித்தியாசமான(?) படங்கள் தயாரிப்பது போல, வால்மீகியின் ராமாயணத்தை அப்படியே பிரதி செய்து,வேறு பாத்திரப் பெயர்களை இட்டு, வித்தியாசமான கதையாக்கிக் கந்தபுராணம் என்ற ஒரு பெயரில் கச்சியப்பர் தந்திருக்கின்றார்.இதைத் தெளிவுபடுத்த, ஒரு சில முக்கிய எடுத்துக்காட்டுகளை இவற்றின் கதை ஓட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்து விளக்க முனைவோம். ஆன்மீகப் பேரறிவுடையோர் மன்னிப்பார்களாக!1.தெய்வம் தந்த ஏடு:கந்தபுராணம்: முருகனின் வேண்டுதலில், அவர் அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் தினமும் எழுதி ஒப்புவிக்க, அதை முருகன் தினமும் தனது கரத்தால் திருத்தி வழங்கியது.இராமாயணம் :நாரதர் கூறிய கதைக் கருவுடன், பிரம்மதேவரின் வேண்டுதலில், இவர் விளக்கிக் கூறிய காட்சிகளையும் உள்ளடக்கி, வால்மீகியால் பாடப்பட்டது 2.கர்ம வினை யாரை விட்டது!:கந்தபுராணம்::தக்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை மீறித் தேவர்கள் போனதால், கர்மவினைப்படி தேவர்கள் சூரன் பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.இராமாயணம் :(அறியாத காரணத்தின்) கர்மவினைப்படி தேவர்கள் இராவணன்  பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.3. கோட்டை விட்டீரோ!:கந்தபுராணம்:சூரன் தன் சிவ தவத்தினால் உலகில் யாராலும், எவராலும் வெல்லமுடியாத, கொல்லப்படமுடியாத வரத்தினைப் பெற்றான். ‘தேவர்களினாலும்’ என்று கேட்காது கோட்டைவிட்டு விட்டான். இராமாயணம் :இராவணன் தன் தவ வலிமையால் பெற்ற வரங்களினால், பெரும் வீரனானான். அவன் பலத்தின் முன், உலகில் உள்ள மனிதரோ, விலங்குகளோ முன்னே நிற்கவே இயலாத காரியம். அவன் பிரமாவின்பால் கடும் தவம் புரிந்து , தனக்கு ஒருகாலமும் தேவர்களால் மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். ‘மனிதர்களாலும்’ என்று வரம் […]

No Picture

முதல் பார்வை: ஜெய் பீம் – பெருமித சினிமா!

November 6, 2021 editor 0

முதல் பார்வை:  ஜெய் பீம் – பெருமித சினிமா! காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’. இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (மணிகண்டன்). […]

No Picture

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

November 5, 2021 editor 0

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர்பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 27 September 07, 2020  புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு […]

No Picture

நீதி கொன்ற நாள்! கொலையாளி ஜெயேந்திரன் விடுதலை பெற்றநாள்!

November 5, 2021 editor 0

நீதி கொன்ற நாள்! கொலையாளி ஜெயேந்திரன் விடுதலை பெற்றநாள்! வசந்தன் போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23 […]

No Picture

ஔவையார் தனிப்பாடல்கள்

November 4, 2021 editor 0

ஔவையார் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூல் தொகுப்பில் உள்ளவைபாடல்கள் மொத்தம் 70நூலில் பக்கம் 32 முதல் 42பாடல்களுக்கான குறிப்புரை செங்கைப் பொதுவன் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் […]

No Picture

இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு’ – இலங்கையில் மத சர்ச்சை

November 4, 2021 editor 0

இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு’ – இலங்கையில் மத சர்ச்சை 10 யூலை 2020 இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு […]

No Picture

வட அரைக் கோளத்தில் புவியின் காலங்களும் பருவங்களும்

November 3, 2021 editor 0

வட அரைக் கோளத்தில் புவியின் காலங்களும் பருவங்களும் நக்கீரன் எதிர்வரும் யூன் 21 ஆம் நாள் (சனிக்கிழமை) பிற்பகல் 5.43 மணிக்கு வேனில் காலம் முடிந்து கோடைகாலம் தொடங்குகிறது.  அந்த நாளை ஆங்கிலத்தில் solstice  […]

No Picture

இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டம்… அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

November 3, 2021 editor 0

இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டம்… அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! Narendran S Nov 2, 2021 வேலூர் அருகே மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக 142.16 கோடி மதிப்பீட்டில் […]