கியூபா பயணக் கட்டுரை (41-50)

  
கியூபா பயணக் கட்டுரை (41)
ஒரு பருந்தின் நிழலில்!
உலகின் தலைவிதியை மாற்றிய பயணம்

கொலம்பசின் நண்பர்கள் சன்மானத்தை குறைக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். பேராசை பெரும் நட்டம். சன்மானத்தை குறைக்காவிட்டால் கொலம்பஸ் எல்லாவற்றையும் இழந்து ஒட்டாண்டியாகப் போக  நேரிடலாம் என்று எச்சரித்தார்கள். ஆனால் கொலம்பஸ் கீழிறங்கி வரத் தயாராக இல்லை. “என்னால் எதைச் செய்ய முடியும், எதனைச் சாதிக்க முடியும்  என்பது எனக்குத் தெரியும். அதுமட்டும் அல்லாது இசுப்பானிய நாட்டு அரசருக்கும் அரசிக்கும் என்னால் எதையெதைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இசுப்பானிய அரசரும் அரசியும் உதவி செய்ய மறுத்தால் அல்லது முடியாதென்றால் நான் வேறு நாட்டு அரசர்களது உதவியை நாடுவேன்” என்றார். 

“சரி அப்படியே போய்த் தொலை” என்று அரசியாரும் அவரது ஆலோசகர்களும் சொன்னார்கள். கொலம்பஸ் தனது ஊர்  திரும்ப முடிவு செய்து கோவேறு கழுதையில் ஏறிப் பயணப்பட்டார். இசுப்பானிய நாடு தன்னைக்கைவிட்ட நிலையில் பிரான்சு நாட்டு அரசரை மீண்டும் அணுகி அவரது ஆதரவை கேட்டுப் பெறுவதென கொலம்பஸ் தனக்குள் முடிவு செய்தார். 

நல்லகாலம் அரண்மனைக் கருவூலப் பொறுப்பாளராகராகக் கடமையாற்றிய  Luis de Santangel என்பவரும்இ வேறொரு அதிகாரியான Quintanilla என்பவரும் கொலம்பசின் திட்டத்தினால் இசுப்பானிய நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய புகழ், செல்வம், செல்வாக்கு இவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள். அவர்கள் இருவரும் அவற்றை இழக்க விரும்பவில்லை. இசுப்பானிய நாடு கொலம்பசைப் பயன்படுத்தா விட்டால்  இன்னொரு நாடு அவரைப் பயன்படுத்தி இசுப்பானிய நாட்டுக்கு வரவேண்டிய புகழையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தட்டிக் கொண்டு போய்விடும் என்று அந்த இரண்டு அதிகாரிகளும்  பயந்தார்கள். அப்படி நடக்கவிடக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.   

உடனே அவர்கள் ஓட்டமும் நடையுமாக இசுப்பெல்லா அரசியாரின் அந்தப் புரம் நோக்கி விரைந்தார்கள். அரசியாரிடம் கொலம்பசிற்கு சார்பாக   வாதாடினார்கள். “நீங்கள் கிறித்துவ நாடுகளது  பெரிய பேரரசியாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கொலம்பசின் கோரிக்கைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். கொலம்பஸ் இந்தப் பயணத் திட்டத்தை உருவாக்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டி ருக்கிறார். அதனால்தான் அவர் சன்மானமாகக் கூடுதல் பங்கு கேட்கிறார். இசுப்பானியாவிற்குக் கிடைக்கக் கூடிய ஆதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் கேட்கும் பங்கு மிகவும் சொற்பமானது. கிறனாடாவை மீட்பதற்கு சோனகரோடு நாங்கள் தொடுத்த யுத்தத்திற்கு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்திருக்கிறோம். யுத்தத்தினால் கருவூலம் ஏற்கனவே காலியாகி விட்டது.  கொலம்பஸ் ஒருவரால்தான் அதனை நிரப்ப முடியும்.   

இந்தியாவும் காதேயும் (Cathay) தங்கம், நவரத்தினங்களால்  நிரம்பி வழியும் நாடுகள்  என்று சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் திரட்டி கொலம்பஸ் கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து எங்களுக்குத் தருவார். எல்லாவற்றிற்கும் மேலாக கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நாடுகளில் உள்ளவர்கள் மத நம்பிக்கையீனர்கள் (heathen).  அவர்களை கொலம்பஸ் கிறித்துவ மதத்திற்கு மாற்ற நிச்சயம் உதவுவார். இசுப்பானியா சோனகரை யுத்தத்தில் வென்றுவிட்டது. அதேபோல் கொலம்பஸ் நாங்கள் காதேயை வெல்ல உதவி செய்வார்.”

அரண்மனை அதிகாரிகள் மிகவும் பவ்வியத்தோடும், பணிவோடும் அதே சமயம் ஆணித்தரமாகவும்  கொலம்பசுக்காக அரசியாரோடு கடுமையாக வாதாடினார்கள். பார்த்தார் அரசியார். தனது அரண்மனை அதிகாரிகள் எடுத்து வைத்த வாதத்தில் நிறைய வலு இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. புதிய நாடுகளைப் பிடிப்பது, அந்த நாடுகளின் திரண்ட செல்வத்தை கைப்பற்றி இசுப்பானியாவிற்கு கொண்டு வருவது, அதனால் இசுப்பானியாவிற்கு ஏற்படக்கூடிய  புகழ், மரியாதை, அந்தஸ்து அரசியாரது மனத்திரையில் திரைப்படம்போல் ஓடி அவரை மகிழ்வித்தது.  

“உடனே கொலம்பசை திரும்பி வருமாறு செய்தி அனுப்புங்கள். அரசியார் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் அவரிடம் சொல்லுங்கள். அரசர் பெர்டினன்ட் இதற்குச் சம்மதிக்காவிட்டால் பருவாயில்லை.  இப்படியான ஒரு பங்கு சளைம யை அவர் எடுக்க விரும்பாவிட்டாலும் பாதகமில்லை. நான் சம்மதிப்பதாக கொலம்பசுக்குச் சொல்லுங்கள். கொலம்பஸ் பிரான்சு நாட்டுக்குள் நுழையு முன்னர் ஆளைப் பிடித்து வாருங்கள். ஊம் – சீக்கிரம்…” அரசியாரின் கட்டளைகள்  காற்றிலும் கூடிய வேகத்துடன் பிறப்பிக்கப்பட்டன.   

அரச காவல்காரன் சிறிதளவும் தாமதம் செய்யயாமல் வேகமாக ஓடக்கூடிய குதிரை ஒன்றில் பாய்ந்தேறி அதனை கொலம்பஸ் திரும்பிக் கொண்டிருக்கும் திக்கு நோக்கி தட்டிவிட்டான். குதிரை நாலுகால் பாய்ச்சலில் பறந்தது.  

கொலம்பசின் மனோநிலை அந்த நேரத்தில் பெரிதும் குழம்பிப் போயிருந்தது. தனது பயணத்திட்டம் இசுப்பானிய அரசியாரால் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது வேறு நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதைவிட வேறு வழியே இல்லை. இந்த அரசர், அரசிகளை நம்பவே கூடாது. 

அப்போது கொலம்பசுக்கு சிறு வயதில் தான்படித்த பைபிள் புத்தகத்தில் இருந்த  ஒரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. “அரசிகள் மீது நம்பிக்கை  வையாதே.”  கவலை, ஏமாற்றம், தனிமை கொலம்பசின் மனதை வாட்டியெடுத்தன. தனது கோவேறு கழுதையில் மெல்ல ஊர்ந்து  கொண்டிருந்தார். பிரான்சு நாட்டு மன்னனை அணுகலாம். ஆனால் அவன் என்ன சொல்வானோ? மீண்டும் அவனிடம் போவதில் ஏதாவது பலன் இருக்கிறதா” கொலம்பசின் மனதில் அவரை அறியாமல் விரக்தி தலைகாட்டியது. ஆனால் தனக்குப் பின்னால் ஆகூழ் நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு வருவதை அவர் உணரவில்லை.  

அப்போது கொலம்பஸ் ஒரு சின்னப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். அந்தப் பாலம் கிறனடாவில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தது. அதன் பெயர் Bridge of Piononos  என்பதாகும். குதிரையின் குளம்புச் சத்தம் இப்போது மிக அண்மையில் தெளிவாகக் கேட்டது. அந்தப் பாலம் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு பெயர்போனது.  கொலம்பசின்  பயணப் பையில்  அரசியார் கொடுத்த பணத்தில் கொஞ்சம் மிஞ்சி இருந்தது. அந்தப்  பணம்  முழுவதையும்  திருடரிடம் பறிகொடுக்கப் போகிறோமோ என்ற பயம் கொலம்பசை கவ்விக் கொண்டது.  

இப்போது குதிரையின் குளம்புச் சத்தம் மிகக் கிட்டிய தூரத்தில் கேட்டது. அதில் வந்த வீரன் உரத்த குரலில் பலமாகக் கத்தினான். “திரும்பு! உடனே திரும்பு! அரசியார் உன்னை உடனடியாக கிறனடா  திரும்புமாறு கட்டளை இடுகிறார். அவர் உனது கோரிக்கைகள் அத்தனையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.”  

கொலம்பஸ் தயங்கினார். “அரசிகள் மீது நம்பிக்கை வையாதே.”என்ற  பைபிள் வாசகம்  அவரது மனதில் பட்டுத் தெறித்தது. அரசியாரின் பேச்சை நம்பி திரும்பிப் போனால் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதைபோல் தான் மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளாகக் கூடும் என்ற கவலை கொலம்பசைப் பீடித்தது. இருந்தும் திரும்பிச் சென்று இன்னும் ஒருமுறைஇ கடைசி முறைஇ முயற்சிக்க எண்ணினார். யார்  கண்டார்கள்? இப்போது அரசியார் உண்மையில் மனம் மாறி இருக்கக் கூடும்!  

அந்தப் பாலத்தில் நடுவில் நின்று கொண்டு கிறனடாவுக்கு திரும்பிச்  செல்ல முடிவு  செய்தார். கிறனடாவை நோக்கி கோவேறு கழுதையைத் திருப்பினார். வந்த வழியில் கோவேறு கழுதை நடக்கத்  தொடங்கியது. 

அரசியாரைத்  திரும்பவும் கொலம்பஸ் சந்தித்தபோது அவரது கோரிக்கைகள் எல்லாவற்றையும் அரசியார் ஏற்றுக் கொண்டார் என்று நான் சொல்ல வேண்டிய தில்லை. மேலும் பல வாரங்கள் நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 1492 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஒப்பந்தம் ஒன்று உருவானது. அதில் அரசரும், அரசியாரும், கொலம்பசும் கையெழுத்திட்டார்கள்.   

இந்தியாவைக் கண்டு பிடித்தால் கொலம்பஸ் பயணம் செய்யும் கடல்கள், சமுத்திரங்கள் எல்லாவற்றிற்கும் கடற்படைத் தளபதியாக அவரது ஆயுள் பூராவும் இருப்பார். கண்டு பிடிக்கப்படும்  நாடுகள், தீவுகளை ஆளும் ஆளுநராக ஆகவும் கொலம்பஸ் நியமிக்கப்படுவார். அங்கிருந்து கொண்டுவரப்படும் தங்கம், முத்து, வைரம், வைடூரியம் மற்றும் திரவியங்கள் அனைத்திலும் கொலம்பசுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்படும். கப்பல் பயணச் செலவில் எட்டில் ஒரு பங்கை கொலம்பஸ் கொடுக்க வேண்டும். அதேபோல் அந்தப் பயணத்தால் வரும் இலாபத்தில் கொலம்பசுக்கு எட்டில் ஒரு பங்கு கொடுக்கப்படும்.    

பதினேழு ஆண்டுகாலமாக தொடர்சியாக எடுத்த விடாமுயற்சியின்  பயனை கொலம்பஸ் அறுவடை செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவைக் கண்டுபிடிக்க மேற்கு நோக்கிப் பயணம் செய்யும் கொலம்பசின் பயணத் திட்டத்தை ஒரு பயித்தியக்காரனின் ஏட்டுச் சுரக்காய் என்று எள்ளி நகையாடியவர்களின் வாயை அடைக்க ஒரு வாய்ப்பு அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.    

அரண்மனை அதிகாரிகள் கொலம்பசை ” டொன் கிறிஸ்தோபர் கொலம்பஸ்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். “மாண்புமிகு மேதகையீர்” (Your Excellency)  “கடற்படைத் தளபதி” (Admiral ) என அவர் விளிக்கப்பட்டார்.    
 
கொலம்பஸ் உடனே Palos de Front என்ற துறைமுகப் பட்டினத்துக்கு ஓகஸ்ட் 03, 1492 அன்று பயணப்பட்டார். அந்தப் பயணம் வரலாறோடு அவர் செய்துகொண்ட சந்திப்பாகவும் உலகின் தலைவிதியை மாற்றும் பயணமாகவும் இருந்தது.  

போகும் வழியில் ரபீடா மடத்தின் மதத் தலைவர் Friar Juan Perez அவர்களைச் சந்தித்து அவர் தனக்குச் செய்த பேருதவிக்கு   தனது நன்றியைத் கொலம்பஸ் தெரிவித்துக் கொண்டார்.  தனது பயணத்திட்டம்  வெற்றியடையக்  கூடிய சாத்தியம் பிரகாசமாக  இருக்கிறது என்று அவரிடம் கொலம்பஸ் எடுத்துரைத்தார்.  

பாலோஸ் என்ற துறைமுகப் பட்டினம் ரின்ரோ (Tinto) என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இசுப்பானிய நாட்டு வரைபடத்தைப் பார்த்தால் பாலோஸ் அந்த நாட்டின் தென்மேற்கில் போர்த்துக்கல் நாட்டின் எல்லைக்கு அண்மையாக இருப்பதைக் காணலாம். இப்போது இந்த துறைமுகத்தின் பெரும்பகுதியை கடல் விழுங்கி விட்டது. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அது பெரிய துறைமுகமாக விளங்கியது. அப்போதெல்லாம் இசுப்பானிய நாடு அதிகளவு பெரிய எண்ணிக்கையுள்ள துறைமுகங்களைக் கொண்ட நாடாக இருக்கவில்லை.  

தனது பயணத்தை பாலோஸ் துறைமுகத்தில் இருந்து தொடங்க கொலம்பஸ் விரும்பினார். காரணம் அங்குதான் மாலுமிகள் பலர் இருந்தனர். அதனால் தனக்கு வேண்டிய மாலுமிகளை அங்கு திரட்டுவது சுலபம் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது நினைப்பு தவறாகப் போய்விட்டது என்பதை அவர் அப்போது உணர்ந்து இருக்கவில்லை.

————————————————————————————————————–


கியூபா பயணக் கட்டுரை (41)
ஒரு பருந்தின் நிழலில்!
உலகின் தலைவிதியை மாற்றிய பயணம்


கொலம்பசின் நண்பர்கள் சன்மானத்தை குறைக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். பேராசை பெரும் நட்டம். சன்மானத்தை குறைக்காவிட்டால் கொலம்பஸ் எல்லாவற்றையும் இழந்து ஒட்டாண்டியாகப் போக  நேரிடலாம் என்று எச்சரித்தார்கள். ஆனால் கொலம்பஸ் கீழிறங்கி வரத் தயாராக இல்லை. “என்னால் எதைச் செய்ய முடியும், எதனைச் சாதிக்க முடியும்  என்பது எனக்குத் தெரியும். அதுமட்டும் அல்லாது இசுப்பானிய நாட்டு அரசருக்கும் அரசிக்கும் என்னால் எதையெதைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இசுப்பானிய அரசரும் அரசியும் உதவி செய்ய மறுத்தால் அல்லது முடியாதென்றால் நான் வேறு நாட்டுஅரசர்களது உதவியை நாடுவேன்” என்றார். 

“சரி அப்படியே போய்த் தொலை” என்று அரசியாரும் அவரது ஆலோசகர்களும் சொன்னார்கள். கொலம்பஸ் தனது ஊர்  திரும்ப முடிவு செய்து கோவேறு கழுதையில் ஏறிப் பயணப்பட்டார். இசுப்பானிய நாடு தன்னைக்கைவிட்ட நிலையில் பிரான்சு நாட்டு அரசரை மீண்டும் அணுகி அவரது ஆதரவை கேட்டுப் பெறுவதென கொலம்பஸ் தனக்குள் முடிவு செய்தார்.   நல்லகாலம் அரண்மனைக் கருவூலப் பொறுப்பாள ராகராகக் கடமையாற்றிய  Luis de Santángel என்பவரும், வேறொரு அதிகாரியான Quintanilla என்பவரும் கொலம்பசின் திட்டத்தினால்  இசுப்பானிய நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய புகழ்ää செல்வம்ää செல்வாக்கு இவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள். அவர்கள் இருவரும் அவற்றை இழக்க விரும்பவில்லை. இசுப்பானிய நாடு கொலம்பசைப் பயன்படுத்தா விட்டால்  இன்னொரு நாடு அவரைப் பயன்படுத்தி இசுப்பானிய நாட்டுக்கு வரவேண்டிய புகழையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தட்டிக் கொண்டு போய்விடும் என்று அந்த இரண்டு அதிகாரிகளும்  பயந்தார்கள். அப்படி நடக்கவிடக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.   

உடனே அவர்கள் ஓட்டமும் நடையுமாக இசுப்பெல்லா அரசியாரின் அந்தப் புரம் நோக்கி விரைந்தார்கள். அரசியாரிடம் கொலம்பசிற்கு சார்பாக   வாதாடினார்கள். “நீங்கள் கிறித்துவ நாடுகளது  பெரிய பேரரசியாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கொலம்பசின் கோரிக்கைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். கொலம்பஸ் இந்தப் பயணத் திட்டத்தை உருவாக்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செல விட்டிருக் கிறார். அதனால்தான் அவர் சன்மானமாகக் கூடுதல் பங்கு கேட்கிறார்.

இசுப்பானியாவிற்குக் கிடைக்கக் கூடிய ஆதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் கேட்கும் பங்கு மிகவும் சொற்பமானது. கிறனாடாவை மீட்பதற்கு சோனகரோடு நாங்கள் தொடுத்த யுத்தத்திற்கு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்திருக்கிறோம். யுத்தத்தினால் கருவூலம் ஏற்கனவே காலியாகி விட்டது.  கொலம்பஸ் ஒருவரால்தான் அதனை நிரப்ப முடியும்.   

இந்தியாவும் காதேயும் (Cathay) தங்கம், நவரத்தினங்களால்  நிரம்பி வழியும் நாடுகள்  என்று சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் திரட்டி கொலம்பஸ் கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து எங்களுக்குத் தருவார். எல்லாவற்றிற்கும் மேலாக கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நாடுகளில் உள்ளவர்கள் மத நம்பிக்கையீனர்கள் (heathens). அவர்களை கொலம்பஸ் கிறித்துவ மதத்திற்கு மாற்ற நிச்சயம் உதவுவார். இசுப் பானியா சோனகரை யுத்தத்தில் வென்றுவிட்டது. அதேபோல் கொலம்பஸ் நாங்கள் காதேயை வெல்ல உதவி செய்வார்.”

அரண்மனை அதிகாரிகள் மிகவும் பவ்வியத்தோடும்ää பணிவோடும் அதே சமயம் ஆணித்தரமாகவும்  கொலம்பசுக்காக அரசியாரோடு கடுமையாக வாதாடினார்கள். பார்த்தார் அரசியார், தனது அரண்மனை அதிகாரிகள் எடுத்து வைத்த வாதத்தில் நிறைய வலு இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. புதிய நாடுகளைப் பிடிப்பது, அந்த நாடுகளின் திரண்ட செல்வத்தை கைப்பற்றி இசுப்பானியாவிற்கு கொண்டு வருவது, அதனால் இசுப்பானியாவிற்கு ஏற்படக்கூடிய  புகழ், மரியாதை அந்தஸ்து அரசியாரது மனத்திரையில் திரைப்படம்போல் ஓடி அவரை மகிழ்வித்தது.  

“உடனே கொலம்பசை திரும்பி வருமாறு செய்தி அனுப்புங்கள். அரசியார் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் அவரிடம் சொல்லுங்கள். அரசர் பெர்டினன்ட் இதற்குச் சம்மதிக்காவிட்டால் பருவாயில்லை.  இப்படியான ஒரு risk யை அவர் எடுக்க விரும்பாவிட்டாலும் பாதகமில்லை. நான் சம்மதிப்பதாக கொலம்பசுக்குச் சொல்லுங்கள். கொலம்பஸ் பிரான்சு நாட்டுக்குள் நுளையு முன்னர் ஆளைப் பிடித்து வாருங்கள். ஊம் – சீக்கிரம்…” அரசியாரின் கட்டளைகள்  காற்றிலும் கூடிய வேகத்துடன் பிறப்பிக்கப்பட்டன.   

அரச காவல்காரன் சிறிதளவும் தாமதம் செய்யயாமல் வேகமாக ஓடக்கூடிய குதிரை ஒன்றில் பாய்ந்தேறி அதனை கொலம்பஸ் திரும்பிக் கொண்டிருக்கும் திக்கு நோக்கி தட்டிவிட்டான். குதிரை நாலுகால் பாய்ச்சலில் பறந்தது.  

கொலம்பசின் மனோநிலை அந்த நேரத்தில் பெரிதும் குழம்பிப் போயிருந்தது. தனது பயணத்திட்டம் இசுப்பானிய அரசியாரால் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது வேறு நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதைவிட வேறு வழியே இல்லை. இந்த அரசர், அரசிகளை நம்பவே கூடாது. 

அப்போது கொலம்பசுக்கு சிறு வயதில் தான்படித்த பைபிள் புத்தகத்தில் இருந்த  ஒரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. “அரசிகள் மீது நம்பிக்கை  வையாதே.”  கவலை, ஏமாற்றம், தனிமை கொலம்பசின் மனதை வாட்டியெடுத்தன. தனது கோவேறு கழுதையில் மெல்ல ஊர்ந்து  கொண்டிருந்தார். பிரான்சு நாட்டு மன்னனை அணுகலாம். ஆனால் அவன் என்ன சொல்வானோ? மீண்டும் அவனிடம் போவதில் ஏதாவது பலன் இருக்கிறதா” கொலம்பசின் மனதில் அவரை அறியாமல் விரக்தி தலைகாட்டியது. ஆனால் தனக்குப் பின்னால் ஆள்கூழ் நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு வருவதை அவர் உணரவில்லை.  

அப்போது கொலம்பஸ் ஒரு சின்ன பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். அந்தப் பாலம் கிறனடாவில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தது. அதன் பெயர் Bridge of Pinos என்பதாகும். குதிரையின் குளம்புச் சத்தம் இப்போது மிக அண்மையில் தெளிவாகக் கேட்டது. அந்தப் பாலம் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு பெயர்போனது.  கொலம்பசின்  பயணப் பையில்  அரசியார் கொடுத்த பணத்தில் கொஞ்சம் மிஞ்சி இருந்தது. அந்தப்  பணம்  முழுவதையும்  திருடரிடம் பறிகொடுக்கப் போகிறோமோ என்ற பயம் கொலம்பசை கவ்விக் கொண்டது.  

இப்போது குதிரையின் குளம்புச் சத்தம் மிகக் கிட்டிய தூரத்தில் கேட்டது. அதில் வந்த வீரன் உரத்த குரலில் பலமாகக் கத்தினான் ” திரும்பு! உடனே திரும்பு! அரசியார் உன்னை உடனடியாக கிறனடா  திரும்புமாறு கட்டளை இடுகிறார். அவர் உனது கோரிக்கைகள் அத்தனையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.”  

கொலம்பஸ் தயங்கினார். “அரசிகள் மீது நம்பிக்கை வையாதே.”என்ற  பைபிள் வாசகம் அவரது மனதில் பட்டுத் தெறித்தது. அரசியாரின் பேச்சை நம்பி திரும்பிப் போனால் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதைபோல் தான் மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளாகக் கூடும் என்ற கவலை கொலம்பசைப் பீடித்தது. இருந்தும் திரும்பிச் சென்று  இன்னும் ஒருமுறைää கடைசி முறைää முயற்சிக்க எண்ணினார். யார்  கண்டார்கள். இப்போது அரசியார் உண்மையில் மனம் மாறி இருக்கக் கூடும்!  
அந்தப் பாலத்தில் நடுவில் நின்று கொண்டு கிறனடாவுக்கு திரும்பிச்  செல்ல முடிவு  செய்தார். கிறனடாவை நோக்கி கோவேறு கழுதையைத் திருப்பினார். வந்த வழியில் கோவேறு கழுதை நடக்க ஆரம்பித்தது. 

அரசியாரைத்  திரும்பவும் கொலம்பஸ் சந்தித்தபோது அவரது கோரிக்கைகள் எல்லாவற்றையும் அரசியார் ஏற்றுக் கொண்டார் என்று நான் சொல்ல வேண்டிய தில்லை. மேலும் பல வாரங்கள் நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 1492 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ஒன்று உருவானது. அதில் அரசரும், அரசியாரும்இ கொலம்பசும் கையெழுத்திட்டார்கள்.   

இந்தியாவைக் கண்டு பிடித்தால் கொலம்பஸ் பயணம் செய்யும் கடல்கள்ää சமுத்திரங்கள் எல்லாவற்றிற்கும் கடற்படைத் தளபதியாக அவரது ஆயுள் பூராவும் இருப்பார். கண்டு பிடிக்கப்படும்  நாடுகள், தீவுகளை ஆளும் ஆளுநராகவும் கொலம்பஸ் நியமிக்கப்படுவார். அங்கிருந்து கொண்டு வரப்படும் தங்கம், முத்து, வைரம், வைடூரியம் மற்றும் திரவியங்கள் அனைத்திலும் கொலம்பசுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்படும். கப்பல் பயணச் செலவில் எட்டில் ஒரு பங்கை கொலம்பஸ் கொடுக்க வேண்டும். அதேபோல் அந்தப் பயணத்தால் வரும் இலாபத்தில் கொலம்பசுக்கு எட்டில் ஒரு பங்கு கொடுக்கப்படும்.   

பதினேழு ஆண்டு காலமாக தொடர்சியாக எடுத்த விடாமுயற்சியின்  பயனை கொலம்பஸ் அறுவடை செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவைக் கண்டுபிடிக்க மேற்கு நோக்கிப் பயணம் செய்யும் கொலம்பசின் பயணத் திட்டத்தை ஒரு பயித்தியக்காரனின் ஏட்டுச் சுரக்காய் என்று எள்ளி நகையாடியவர்களின் வாயை அடைக்க ஒரு வாய்ப்பு அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.   

அரண்மனை அதிகாரிகள் கொலம்பசை ” டொன் கிறிஸ்தோபர் கொலம்பஸ்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். “மாண்புமிகு மேதகையீர்” (Your Excellency)  “கடற்படைத் தளபதி” (Admiral) என அவர் விளிக்கப்பட்டார்.     

கொலம்பஸ் உடனே Palos de la Front என்ற துறைமுகப் பட்டினத்துக்கு பயணப்பட்டார். அந்தப் பயணம் வரலாறோடு அவர் செய்துகொண்ட சந்திப்பாகவும் உலகின் தலைவிதியை மாற்றும் பயணமாகவும் இருந்தது.  

போகும் வழியில் ரபீடா மடத்தின் மதத் தலைவர் Friar Juan அவர்களைச் சந்தித்து  அவர் தனக்குச் செய்த பேருதவிக்கு   தனது நன்றியைத் கொலம்பஸ் தெரிவித்துக் கொண்டார்.  தனது பயணத்திட்டம்  வெற்றியடையக்  கூடிய சாத்தியம்  பிரகாசமாக  இருக்கிறது என்று அவரிடம் கொலம்பஸ் எடுத்துரைத்தார்.  

பாலோஸ் என்ற துறைமுகப் பட்டினம் ரின்ரோ (Tinto) என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இசுப்பானிய நாட்டு வரைபடத்தைப் பார்த்தால் பாலோஸ் அந்த நாட்டின் தென்மேற்கில் போர்த்துக்கல் நாட்டின் எல்லைக்கு அண்மையாக இருப்பதைக் காணலாம். இப்போது இந்த துறைமுகத்தின் பெரும்பகுதியை கடல் விழுங்கி விட்டது. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அது பெரிய துறைமுகமாக விளங்கியது. அப்போதெல்லாம் இசுப்பானிய நாடு அதிகளவு பெரிய எண்ணிக்கையுள்ள துறைமுகங்களைக் கொண்ட நாடாக இருக்கவில்லை.  

தனது பயணத்தை பாலோஸ் துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்க கொலம்பஸ் விரும்பினார். காரணம் அங்குதான் மாலுமிகள் பலர் இருந்தனர். அதனால் தனக்கு வேண்டிய மாலுமிகளை அங்கு திரட்டுவது சுலபம் என்றுஅவர் நினைத்தார். ஆனால் அவரது நினைப்புத் தவறாகப் போய்விட்டது என்பதை அவர் அப்போது உணர்ந்து இருக்கவில்லை.

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை (42)
ஒரு பருந்தின் நிழலில்!
கொலம்பசின் கனவு பலித்தது

பாலோஸ் ( Palos) துறைமுகப் பட்டினக் குடிமக்களுக்கும் இசுப்பானிய அரசர் மற்றும் அரசியர் இடையில் நல்லுறவு இருக்கவில்லை. அந்தப் பட்டினத்து குடிமக்களை அரசரும் அரசியாரும் தண்டிக்க விரும்பினார்கள்.  தண்டனையாக ஒரு ஆண்டு காலத்துக்கு இரண்டு சிறிய கப்பல்களை கூலி ஏதும் பெற்றுக் கொள்ளாமல் அரசரதும் அரசியாரதும் சார்பில் கொலம்பஸ் பயணம் செய்யக் கொடுத்து உதவவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக் பட்டது.  

கொலம்பஸ் பாலோஸ் பட்டினத்தில் வாழ்ந்த தலையாரிகள் அனைவருக்கும் அரச கட்டளைகளை கேட்டறிய புனித யோர்ச் தேவாலயத்தில் (Church of St. George) சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் வந்தார்கள். ஆனால் தாங்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள்இ  என்ன செய்யவேண்டும் என்பது  அவர்களுக்கு  முதலில் தெரியாமல் இருந்தது. தாங்கள் அரச கட்டளைப்படி இரண்டு கப்பல்களையும்  பல மாலுமிகளையும் கொடுத்து உதவ வேண்டும் என்பதை அறிந்தபோது அவர்களை பயம் கவ்விக் கொண்டது.  திக்குத் திசை தெரியாத, முன்பின் பழக்கம் இல்லாத, இருண்ட கடலில் பயணப்படுவதற்கு மாலுமிகளைத் கொடுத்து உதவ வேண்டும் என்ற உத்தரவு  அவர்களுக்குப் பெரும் அச்சத்தை விளைவித்தது.   

அரசரதும் அரசியாரதும் கட்டளைப்படி கொலம்பசுக்கு இரண்டு கப்பல்களைக்  கொடுத்துதவ அவர்கள் முன்வந்தார்கள்.  ஆனால் கப்பல்களைச் செலுத்தும்  மாலுமிகளைக் கொடுத்துதவ தாங்கள் தயாரில்லை என்று சொன்னார்கள். தொடக்கமே கொலம்பசுக்கு அபசகுனமாக இருந்தது. கப்பலைச் செலுத்துவதற்கு வேண்டிய மாலுமிகளைத் திரட்டுவதில் அவருக்குப் பெரிய முட்டுக்கட்டைகைள் எழுந்தன.    

அரச நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாது முழித்தார்கள். பலமாக யோசித்தும் ஒரு வழியும் தோன்றவில்லை. முடிவில் அரச செயலாளர் மாலுமிகளைத் திரட்டுவதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார். சிறையில் வாடும் கைதிகளில்  யாராவது கப்பலில் மாலுமிகளாகப் போக விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை வழங்கப்படும்  என அறிவித்தார். மாலுமிகளது கூலிப் பயணத்துக்குப் பின்னர் அல்ல, பயணத்துக்கு முன்னர் முற்பணமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். என்ன செய்தும் இரண்டு கப்பல்களைச் செலுத்தப் போதுமான மாலுமிகளைத் திரட்டுவது வில்லங்கமாக இருந்தது.  

இந்தக் கட்டத்தில் கொலம்பசின் முயற்சிக்குக் கைகொடுக்க லா றபிடா  (La Rabida) மடத்தை சேர்ந்த சுவாமிகளும்,  மாட்டின் அலன்சோ பின்சொன் (Martín Alonso) என்ற  தண்டயலும் முன்வந்தார்கள். இதில் பின்சொன் இந்தப் பயணத்தில் சேர்ந்து கொள்ளவும்  முன்வந்தார். பின்சொன் மிகவும் அனுபவம் வாய்ந்த கடலோடி. சொல்லப்போனால் கொலம்பசை விட அவருக்குக் கடலோடும் அனுபவம் கூடுதலாக இருந்தது. பின்சனோடு அவரது  இரண்டு உடன்பிறப்புக்களும் சேர்ந்து கொண்டார்கள்.   

தண்டயல் பின்சொன் பயணத்துக்கு வேண்டிய மாலுமிகளைத் திரட்டுவதற்காக களத்தில் இறங்கினார். இரண்டு கப்பலோடு மூன்றாவது கப்பல் ஒன்றையும் “கப்பல்படையில்” சேர்த்தார். மாலுமிகளுக்கு வாக்குறுதிகளையும் ஆசை வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இப்படி கிழமைக் கணக்காக உழைத்ததன் பயனாக  மூன்று கப்பல்களுக்கும் தேவையான 90 மாலுமிகளை திரட்டுவதில், அரச நிர்வாகிகளால் முடியாத காரியத்தில் பின்சொன் வெற்றி கண்டார்.   

முதல் கப்பல்   la Santa Clara (Niña). அது Cristobal Quintero  என்பவருக்குச் சொந்தமானது. இரண்டாவது கப்பல் லா பின்ரா (la Pinta). Juan de Costa என்பவருக்குச் சொந்தமானது. மூன்றாவது கப்பலின் பெயர் Santa Maria.  இது Juan de la Costa என்பவருக்குச் சொந்தமானது. பயணம் புறப்படுவதற்கு முன்னர் கப்பிட்டினா என்ற கப்பல்  சாந்தா மாரியா (Santa Maria)  எனப் பெயர்  மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அது உள்ளதில் பெரிய கப்பலாக இருந்தபடியால் அதுவே  கொடிமரக் கப்பல் (flag ship) ஆகக் கருதப்பட்டது.   

கொலம்பஸ் தானே சாந்தா மாரியாவின் தண்டயல்ப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், லா பின்ராவின் தண்டயல் பொறுப்பை மார்ட்டின் அலோன்சோ பின்சோன் ஏற்றுக் கொண்டார். லா சன்ரா கிளாறா (நினியா) வின் தண்டயல் பொறுப்பை அவரது சகோதரர்கள் பிரான்சிஸ் மார்ட்டின் மற்றும் விசென்ட் யானேஸ் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

மூன்று கப்பல்களிலும் இருந்த மொத்த குழுவிலும் 90 பேர் இருந்திருக்கலாம் (சான்ரா மரியா 40, லா நினா 24, லா பின்ரா 26) என்றாலும் சில வரலாற்றாசிரியர்கள் 120 ஆண்களைக் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கப்பல்கள் எப்படிக் கட்டப்பட்டன, கட்டிய தச்சர்கள் யார், யார்  என்ற தரவுகள்பற்றி அதிகம் தெரியவில்லை. உள்ள சாட்சியங்களின் அடிப்படையில்  நீனோ மற்றும் பின்ரா கப்பல்கள் 54 மீட்றிக் தொன் நிறையும் 21-24 மீட்டர் நீளமும் உடையதாக இருந்தன. பெரிய கப்பலான சாந்தா மேரியாவின் நிறை 80-90 மீட்றிக் தொன் இருக்கும். அதன் நீளம் ஏனைய இரண்டு கப்பல்களைவிட கொஞ்சம் அதிகம். இந்த மூன்று கப்பல்களிலும் பின்ராதான் அதிவேகமாகச் செல்லக் கூடிய கப்பல். 

இன்றைய மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட  கப்பல்களோடு ஒப்பிடும்போது இவற்றை “கப்பல்கள்” என்று சொல்வதே தவறு. ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படியான கப்பல்களே பாவனையில் இருந்தன. அந்தக் காலத்துக்கு இவை “மிக நவீன” கப்பல்களாகக் கருதப்பட்டன. 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 3ஆம் நாள் விடிகாலை மூன்று கப்பல்களும்  Palos ed Frontera துறைமுகத்தில் இருந்து கண்காணாத இடத்துக்குப் பயணம் புறப்பட்டன.   

நாற்பத்தொரு வயது நிரம்பிய “கடற்படைத் தளபதி ‘  டொன் கிறிஸ்தோப்பர் கொலம்பஸ் உட்பட 39 பேர்  சாந்தா  மேரியில் பயணம் செய்தார்கள். இருபத்தாறு பேர் பின்ரோவில் இருந்தார்கள். நீனோவில்  22 பேர் பயணம் செய்தார்கள்.  பெரும்பாலான மாறுமிகள் இசுப்பானிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் பாலோஸ் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். அதிக எண்ணிக்கையானவர்கள் நல்ல அனுபவம் நிறைந்த மாலுமிகள். ஒரு சில அரச ஊழியர்களும் இருந்தார்கள்.  ஆனால் மதகுருமார்களோ, சிப்பாய்களோ அல்லது குடியேற்றவாசிகளோ அந்தக் கப்பல்களில் இருக்கவில்லை.  

கொலம்பஸ் சாந்தா மேரியா கப்பலின் அணியத்தில் நின்று கொண்டு இசுப்பானிய கடற்கரை அடிவானத்துக் கீழ் மறைந்து போவதைக் கண்டார். புதிய நாட்டை மேற்கு நோக்கிப் பயணப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்என்ற அவரது கால்நூற்றாண்டு உழைப்பு வெற்றியில் முடியுமா  அல்லது தோல்வியைத் தழுவுமா என்பது அவருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் பத்தாண்டு காலமாக இரவு பகல் கனவு கண்டு வந்த இந்தியாவிற்கான பயணம் பலித்தது கொலம்பசுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.   
கப்பலில் வாழ்க்கை வசதிகள் எப்படி இருந்தது என்பதுபற்றி அதிகம்  தெரியவில்லை. அது இன்றுபோல் வசதியாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

மாலுமிகளுக்குத் தனியான அறைகள் இருக்கவில்லை. உணவு பரிமாறும் கூடங்களும் ( mess halls) இருக்கவில்லை. கப்பல் தண்டயல்களுக்கும் ( captains) சுக்கானிகளுக்கும் ( pilot)  மட்டும் சிறிய அறைகள் இருந்தன. மாலுமிகள்  இரவில்  நித்திரை  கொள்வதற்கு ஒரு  குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் எங்கே இடம் இருக்கிறதோ  அங்கு படுத்துக் கொண்டார்கள். நித்திரையில் இருக்கும்போது அலைகளால் கடலில் வீசப்படாமல் இருக்கும்பொருட்டு கயிற்றில் தங்கள் கால்களைக் கட்டினார்கள்.  

பயண  நாட்கள் பிரார்த்தனை,  தொழுகை, பாடல்கள், கதைகள், வேலைகள், சாப்பிடுதல், வெறுமனே குந்தியிருத்தல் போன்றவற்றில் கழிந்தன. முன்பின் பார்த்திராத ஆகாயத்தையும் விண்மீன்களையும் உற்றுப் பார்ப்பதில் இரவுப் பொழுதுகள் கரைந்தன.   கப்பலில் ஒரு ஆண்டுக்குப் போதுமான உணவு வகைகள் கையிருப்பில் இருந்தன. அந்தக் காலத்தில் தொடர்ந்து இரண்டு கிழமைகள் கப்பலில் பயணிப்பது நீண்ட பயணமாக எண்ணப்பட்டது.  

அரிசி, தண்ணீர், கருவாடு, உப்புப் போட்ட இறைச்சி,  உயிர்ப் பன்றிகள், கோழிகள், வெண்ணெய், கடல்வழிச்செலவுக்கு (பயணத்துக்கு) வேண்டிய வரைபடங்கள், கடல்விபர விளக்கப்படங்கள் (charts) திசைகாட்டிகள் (compass)  காந்தக்கற்கள் (magnets) கருவிகள், நாழிகை வட்டில்கள் (hour glasses) அடிமட்டங்கள் ( rulers) போன்றவை கையிருப்பில் இருந்த பொருட்களின் பட்டியலில் அடங்கும்.  மேலும் கண்ணாடி மணிகள் (glass beads) பித்தளை மோதிரங்கள் (brass rings) தைத்த தொப்பிகள், தங்கம், வெள்ளி, முத்துக்கள், நறுமணச் சரக்குகள் (spices) போன்ற வாணிகப் பொருட்களும் கையிருப்பில் இருந்தன.
 
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடற்செலவுக்கு (யேஎபையவழைn)  வேண்டிய திசைகாட்டிகள் ( compasses) காந்தக்கற்கள் ( magnets) நாழிகை வட்டில்கள்  அடிமட்டங்கள் ( rulers) போன்ற  கருவிகள் பல இருந்தும் அது ஒரு துல்லியமான அறிவியலாக  ( exact science) இருக்கவில்லை. விண்மீன்களை (hour glasses) அண்;ணாந்து பார்த்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதுதான் பெரு வழக்காக இருந்தது. இருந்தும் விண்மீன்காட்டித் (astrolabe) தட்டைப் பயன்படுத்திக் கப்பலின் இடத்தைக் கணிப்பது நடைமுறையில் இருந்தது.

இந்த விண்மீன் காட்டி என்பது முக்கிய விண்மீன்கள் வரையப்பட்ட ஒரு  positioning உலோகத் தட்டாகும். முன்பின் தெரியாத கடலில் பயணம் செய்யும் போது ஒரு கடலோடி (mariner) விண்ணை அண்ணாந்து பார்த்து மேலே காணும் வின்மீன்களின் நிலைக்கு அமையத் அதனை வைத்துப் பார்ப்பதன் மூலம் (positioning) கப்பலின் நிலையைக் கண்டு பிடிக்க முடியும். ஆனால்இ இந்த இரண்டு வழிகளிலிலும் ஒரு பெரும் குறைபாடு இருந்தது. வானம் மங்கலாகவும்இ மப்பும் மந்தாரமாகவும் இருக்கும்போது சரியான  நிலையைக் கண்டுபிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.
 
கப்பலின் நிலையைக் கண்டு பிடிப்பதற்கு இன்னொரு வழிமுறையும் நடைமுறையில் இருந்தது. இதில் கப்பலின் நிலையை அது கடைசியாக இருந்த நிலையில் இருந்து எந்தத் திசையில் கப்பல் சென்றதுஇ அதன் வேகம் என்னஇ எத்தனை நாழிகை பயணித்தது என்பவற்றை வைத்துக்கொண்டு புதிய நிலையைக் கண்டு கொள்வதுதான் அந்த வழிமுறை.
 
கொலம்பஸ் கடைசியாகச் சொன்ன வழிமுறையைத்தான் பெரும்பாலும் பின்பற்றினார். வானத்து விண்மீன்களின் நிலையைப் பார்த்துக் கப்பலின் நிலையைக் கணிப்பது அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. மாறாக இயற்கையின் மாற்றத்தைக் கவனித்தல்இ பறவைகளின் நடமாட்டத்தைக் கவனித்தல், காற்றின் மணம், வானத்தின் நிறம், கடலின் தன்மை, கடலில் மிதக்கும் குப்பை கூழங்கள் போன்றவற்றை வைத்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதில் கொலம்பசுக்கு அசாத்திய திறமை இருந்தது.
 
செப்தெம்பர் மாதம் 25 ஆம் நாள் இந்திய நிலப்பரப்பைக் கண்டுவிட்டதாகக் கொலம்பசும் மற்றவர்களும் நினைத்தார்கள். ஆனால்இ அவர்கள் கண்டது நிலம் அல்ல. அவர்களது கண்கள்  அவர்களை ஏமாற்றிவிட்டன. அவர்கள் எதைக் கண்டு ஏமாந்தார்கள்? 

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை (43)
ஒரு பருந்தின் நிழலில்!
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்!

கொலம்பஸ் இயற்கையின் மாற்றத்தைக் கவனித்தல், பறவைகளின் நடமாட்டத்தைக் கவனித்தல், காற்றின் மணம், வானத்தின் நிறம், கடலின் தன்மை, கடலில் மிதக்கும் குப்பைகூழங்கள் போன்றவற்றை வைத்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதில் கொலம்பசுக்கு அசாத்திய திறமை இருந்தது என்று கண்டோம். இருந்தும் அவரது மனதின் ஒரு மூலையில் அடிக்கடி அவநம்பிக்கை எண்ணங்களும் வந்து வந்து அலைமோதிப் போகத் தவறவில்லை.
 
கொலம்பஸ் பாலோஸ் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டு சில கிழமைகள்தான் ஆகியிருந்தன. ஆனால்இ அவை சில ஆண்டுகள் போல் தெரிந்தன.
 
கொலம்பசின் சிந்தனைகள் பின்நோக்கிப் பறந்தன. ஜெனோவா நகரில் ஆட்டு மயிரில் இருந்து கம்பளி நெசவு செய்து பிழைத்த ஒரு ஏழை நெசவாளிக்குப் பிறந்த பிள்ளைக்கு இன்று இசுப்பானிய நாட்டு அரசியார் புரவலர்.  பதினாலு வயதில் கப்பல் ஒன்றில் எடுபிடியாக ஏறிய பையனுக்கு இன்று “கடற்படைத் தளபதி” என்ற உயரிய பட்டம்! ஒரு நேரச் சாப்பாடு வாங்கி உண்ணப் பணம் இல்லாது அல்லாடிய சிறுவனது பெயருக்கு முன்னால் ‘டொன்’ (Don)  என்ற அடைமொழி! நாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் அந்தக் குடியேற்ற நாடுகளின் ‘ஆளுநர்” பதவி! புதிய உலகத்தில் தங்கமும் வெள்ளியும் வைரமும் வைடூரியமும் கிடைக்கும் பட்சத்தில் அதில் பத்தில் ஒரு பங்கு!
 
இப்படியான பட்டங்களும் விருதுகளும் மேட்டுக் குடியில் பிறந்த சீமான்களுக்கும் கோமான்களுக்கும் மட்டுமே கிடைக்கக் கூடியது. அவை இப்போது சாதாரண கொலம்பசுக்கு கிடைத்திருக்கின்றன.
 
பாலோஸ் துறைமுகப் பட்டினத்தில் இருந்து கப்பல்கள் புறப்பட்டபோது யுவான் பேரஸ் (Juan Perez) என்ற பாதிரியார் கைகளை வானத்தைப் பார்த்து உயர்த்தி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே! இந்தப் பயணம் வெற்றியடைய கொலம்பசையும் அவரது சகாக்களையும் ஆசீர்வதிப்பீராக! அவர்களை எல்லாவித ஆபத்தில் இருந்தும் காப்பாற்றி அருள்வீராக” எனப் பிரார்த்தனை செய்தது கொலம்பசின் மனக்கண்ணில் மீளத் தெரிந்தது.
 
கண்காணாத இடத்துக்கு தங்கள் பிள்ளைகளையும் உடன்பிறப்புக்களையும் உற்றார்களையும் இத்தாலிநாட்டில் இருந்து இசுப்பானிய நாட்டுக்குக் குடியேறிய ஒரு பயித்தியக்காரன் இழுத்துப் போகிறான் என்று பாலோஸ் துறைமுகப் பட்டினத்துக் குடிமக்கள் திட்டியது கொலம்பஸ் காதில் எதிரொலித்தது.
 
“அந்த மூன்று சின்னக் கப்பல்களும் உலகத்தின் விழிம்பிற்குச் சென்று கீழே விழுந்தபின் பாதாள லோகத்தில் வாழும் பயங்கரப் பூதங்களும் வேதாளங்களும் அந்த அப்பாவி மாலுமிகள் அனைவரையும் விழுங்கக் காத்திருக்கின்றன” என்று மக்கள் பயமுறுத்தியது கொலம்பசின் நினைவிற்கு வந்தது.
 
புதிய உலகத்தை நிச்சயம் கண்டு பிடிக்கப் போகிறோம், அங்கு விதம்விதமான மக்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புத் தொடக்கம் முதல் கொலம்பசிடம் இருந்தது. அதனால் தன்னோடு யார் யாரை எல்லாம் கப்பல்களில் அழைத்துப் போகவேண்டும் என்பதை முன்கூட்டியே நிச்சயித்துக் கொண்டார்.
 
முதலில் ஒரு சட்டத்தரணி. கொலம்பஸ் சந்திக்கப் போகும் அரசர், அரசியர்களோடு எழுதப்பட்டு பிரகடனப்படுத்தப்பட இருக்கும் ஒப்பந்தங்களைத் தயாரிப்பது அவரது பணியாகும். இரண்டாவது ஒரு செயலர் வரலாற்றாசிரியர். கொலம்பசின் பிரயாணத்தில் இடம்பெறும் சம்பவங்களையும், கண்டு பிடிக்கும் நாடுகளையும் மக்களையும் பற்றி எழுதுவது இவரது பணியாகும். மூன்றாவது ஒரு பன்மொழிப் புலவர்,  பெயர் லூயி (Louis) யூத இனத்தவரான அவருக்கு 12 கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. இந்தியாஇ காதே (காதே என்பது யப்பானுக்கு அருகிலுள்ள தீவுகள்) போன்ற நாடுகளில் சந்திக்க இருக்கும் மக்கள் எந்த மொழியில் பேசினாலும் அதைப் புரிந்து கொள்ளக் கொலம்பஸ் முன்னெச்சரிக்கையோடு மேற்கொண்ட ஏற்பாடு இவையாகும். .
 
கொலம்பசின் பயண ஆயத்தங்கள் இ;த்தோடு நின்று விடவில்லை. கப்பலில் நவரத்தினங்கள் பற்றியும் தங்கத்தைப் பற்றியும் வெள்ளி பற்றியும் சகலதும் தெரிந்த ஒரு பொற்கொல்லரும் நவரத்தின வியாபாரியம் அழைத்துச் செல்லப்பட்டனர். கொலம்பஸ் கப்பல் கப்பலாக ஏற்றி இறக்கப்போகும் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் போன்றவற்றின் தரத்தை ஆய்வு செய்யத்தான் இந்த முன்னேற்பாடு.
 
இவர்களை விட ஒரு மருத்துவர்இ அறுவைமருத்துவர் (surgeon) மடைப்பள்ளித் தொழிலாளர்கள்; (cooks)  கொலம்பசின் கப்பலுக்கு மட்டும் ஒரு கபின் பையன் (cabin boy) கப்பல்களில் செலவு செய்தார்கள்.
 
இந்தப் பயணத்துக்கான செலவு எவ்வளவு என்று தெரிய வேண்டாமா? இஸ்பெல்லா அரசியாருக்கு 67,000 டொலர்கள் செலவு என்று சொல்லப்படுகிறது. ஆனால், வேறு சிலர் அன்றைய இசுப்பானிய நாணயத்தை டொலருக்கு மாற்றினால் அது 3,000 அல்லது 4,000 க்கு மேல் போகாது என்று சொல்கிறார்கள். இந்தப் பணத்தில் பெரும்பகுதியைப் பெர்டினன்ட் அரசர் கடனாகக் கொடுத்து உதவினார். காரணம் அவருக்கு இலாபத்தில் பங்கு இல்லை. இலாபத்தை அரசியாரும் கொலம்பசும் பங்கிடுவது என்பதுதான் ஒப்பந்தம்.  
 
பகலில் முன்பின் தெரியாத சாலையில் பயணம் செய்வது வில்லங்கம். அதே சாலையில் இரவில் பயணம்செய்வது அதைவிட வில்லங்கம். அப்படி இருக்கும் போது முன்பின் தெரியாத சமுத்திரத்தில் இரவு பகல் பயணம் செய்வது என்பது இலேசான அலுவலா என்ன?
 
கொலம்பசுக்கே போகுமிடம் நிச்சயமாகத் தெரியவில்லை. போகும் பாதை இருட்டாகவே இருந்தது. மூன்று கப்பல்களில் இருந்த மற்ற மாலுமிகளின் மன நிலைபற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்கள் சின்னக் குழந்தைகளைவிட மோசமான மனநிலையில் இருந்தார்கள். கொலம்பசில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. குருடர்களுக்குக் குருடன் வழிகாட்டுகிறான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
 
கனறிஸ் தீவுகள் என்பது ஏழு தீவுகள் கொண்ட நிலப்பரப்பாகும். ஆபிரிக்காவின் வட மூலையில்இ மொறக்கோ நாட்டிற்கு மேற்கே 60 மைல் தொலைவில் இருந்தது. இந்தத் தீவுகளுக்குப் பெயர் வைத்தவர்கள் உரோமர். நாய்க்கு இலத்தீன் மொழியில் கனிஸ் (canis) என்று பெயர். அந்த வேர்ச் சொல்லில் இருந்துதான் கனறிஸ் என்ற பெயர் பிறந்தது. அந்தத் தீவுகளில் ஏராளமான நாய்கள் அந்தக் காலத்தில் காணப்பட்டனவாம். கனறிஸ் என்ற பெயருடைய பறவைகளும் அந்தத் தீவில் காணப்பட்டன. இந்தத் தீவுகள் பற்றிய செய்தி இசுப்பானியர்களுக்கும் ஏனைய ஐரோப்பிய மாலுமிகளுக்கும் கொலம்பசுக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னரே தெரிந்திருந்தன.
 
கனறிஸ் தீவில்தான் கொலம்பசுக்கு தொல்லை ஆரம்பித்ததை முன்னர் கண்டோம். பின்ரா கப்பலின் சுக்கான் முதலில் தளர்ந்து, பின்னர் உடைந்துஇ கடைசியாக கழன்று விழுந்ததை அடுத்து அதன் திருத்த வேலைகள் நடந்தது. அந்தச் சுக்கானை அந்தக் கப்பலில் பயணம் செய்த அதன் சொந்தக்காரர்களே பயப்பீதி காரணமாக உடைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கப்பலை செயல் இழக்கச் செய்தால் அதனையும் மாலுமிகளையும் கைவிட்டு கொலம்பஸ் தனது பயணத்தை தொடர்வார் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள்.
 
ஆனால், கொலம்பஸ் கொமேரா (Gomera) என்ற தீவுக்குச் சென்று அங்கு தனக்கு முன்பே தெரிந்திருந்த மாலுமிகளின் துணையுடன் உடைந்த சுக்கானை மீண்டும் சரிப்படுத்தினார்.
 
கனறிஸ் தீவில் கப்பல்கள் நங்கூரம் இட்டுக்கொண்டிருந்த வேளை ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஏழு தீவுகளில் ஒன்றான வுநநெசகைக தீவில் உள்ள 12,000 அடி உயர மலை திடீரென தீ கக்கியது. அதில் இருந்து கிளம்பிய புகை மேக மண்டலத்தை மறைத்தது. அந்த அப்பாவி மாலுமிகளுக்கு அது எரிமலை என்பது தெரிந்திருக்கவில்லை. யாரோ மலைக்குத் தீ வைத்து விட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். பயந்து நடுங்கிய மாலுமிகள் தங்களைத் திரும்பவும் புறப்பட்ட பாலோஸ் பட்டினத்துக்கே கொண்டு போகுமாறு கொலம்பசை கெஞ்சி மன்றாடத் தொடங்கினார்கள். கொலம்பஸ் அசைந்து கொடுக்கவில்லை.
 
இதற்கிடையில் போர்த்துக்கேய மன்னரின் கோபம் கொலம்பஸ் மீது திரும்பியது. மன்னருக்கு கொலம்பஸ் இசுப்பானிய நாட்டின் அரசர், அரசியரிடம் இருந்து கப்பல்களைப் பெற்றுக் கொண்டது பிடிக்கவில்லை. போர்த்துக்கேய மன்னர் கொலம்பசையும், கொலம்பசின் கப்பல்களைக் கைப்பற்றுமாறு தனது நாட்டுக் கப்பற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார். கொலம்பஸ் இந்த ஆபத்தில் இருந்து எப்படியோ தப்பிப் பிழைத்தார். மாலுமிகளோ தங்களை போர்த்துக்கேயரது கப்பற்படை கைதுசெய்யப் போகிறதென பயந்து செத்தார்கள்.
 
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) கனறிஸ் தீவுகளை விட்டு மூன்ற கப்பல்களும் மேற்கு நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தன. கனறிஸ் தீவுகளில் கடைசித் தீவான Ferro கண்ணுக்குத் தெரியாது மறைந்தபோது கப்பல் மாலுமிகள் பெருமூச்சு விட்டார்கள். கண்ணீர்கூட வந்தது. இனிமேல் தாங்கள் பிறந்த நாட்டுக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்ற ஏக்கம் அவர்களை வாட்டி எடுத்தது.
 
பாலோஸ் துறைமுகப் பட்டினத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் பறந்தோடி விட்டது. அதுவரை பயணம் செய்த தூரம் ஒரு நூறு மைல்கள்தான் இருக்கும். எங்கே பார்த்தாலும் பிரமாண்டமான சமுத்திரம். பேரிச்சலோடு வீசும் பேய்க் காற்று. இரவில் மேலே தாமரைத் தடாகம் ஒன்றில் தாமரை மலர்கள் பூத்திருப்பது போல் விண்மீன்கள். வளர்ந்தும் தேயும் வெண்நிலா. ஆனால்இ அவர்கள் கண்ணில் தரை மட்டும் புலப்படவே இல்லை.
 
நம்பிக்கை இழந்து மனம்தளர்ந்துபோன தனது மாலுமிகளுக்கு போகுமிடம் வெகு தூரமில்லை என்பதைக் காட்ட கொலம்பஸ் ஒரு ‘சதி’ செய்தார்.

—————————————————————————————————————–
 
 
கியூபா பயணக் கட்டுரை (44)
ஒரு பருந்தின் நிழலில்!
உன் கண் உன்னை ஏமாற்றினால்

கொலம்பஸ் தனது கப்பல் பயணத்தையிட்டு இரண்டு வெவ்வேறு பதிவுகளை வைத்திருந்தார். ஒன்று சரியான பதிவு. அதனை அவர் யாருக்கும் காட்டாமல் தன்னுடனேயே இரகசியமாக வைத்திருந்தார். இரண்டாவது பொய்யான பதிவு. இதைத்தான் தனது மாலுமிகளுக்குக் கொலம்பஸ் காட்டினார். அதைப் பார்த்த மாலுமிகள் கப்பல் மிகவும் மெதுவாக ஓடுகிறதென்றும் தாங்கள் பயணித்த தூரம் அதிகம் இல்லையென்றும் அத்திலாந்திக் பெருங்கடல் அப்படியொன்றும் பெரிய பெருங்கடல் அல்லவென்றும் நம்பினார்கள். அதேசமயம் கொலம்பஸ் தான் வைத்திருந்த பதிவுகள் மூலம் கப்பல் புறப்பட்ட இடத்தில் இருந்து அகண்ட பெருங்கடலில் பல நூறு மைல்கள் கடந்து மேற்கு நோக்கி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.
 
மாலுமிகளை கவலையில் மூழ்கடிக்குமாறு இன்னொரு சம்பவம் இடம் பெற்றது. அந்தக் காலத்தில் சுக்கானிகள் தாங்கள் வைத்திருந்த திசையறிகருவியின் (Magnetic Compass) உதவியுடனேயே கப்பலைச் செலுத்தினார்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய தில்லை. இந்தத் திசையறி கருவியின் ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டும். அதற்குக் காரணம் வடதுருவத்தில் காணப்படும் காந்த வயலாகும் (Magnetic field). இந்தத் திசையறி கருவியைக் கண்டு பிடித்தவர்கள் சீனர்களாவர். ஐரோப்பாவில் கொலம் பசுக்கு முன்னரே கி.பி 1183 ஆம் ஆண்டளவில் நீர்வழிச் செலவில் (Navigation) இந்தத் திசையறி கருவியைப் பயன்படுத்தும் உத்தி நடைமுறைக்கு வந்துவிட்டது. இருந்தும் ஒரு சிலருக்கே அந்தக் கருவியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரிந்திருந்தது.
 
1492 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் பெருங்கடலின் மையப் பகுதியை அடைந்துவிட்டது. அதனால் வட திசைக் கோடு மாறியது. அதைத் தொடர்ந்து திசையறிகருவியின் ஊசி காட்டும் திசையும் மாறியது. இந்த மாலுமிகள் திறையறிகருவியின் ஊசி எப்போதுமே வடக்குத் திசையையே காட்டும் அது ஒருபோதும் மாறமாட்டாது என பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டவர்கள். இப்போது ஊசியின் திசை மாறியதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தார்கள். திசையறிகருவி தங்களை ஏமாற்றுகிறது, அதனால் தாங்கள் நடுப் பெருங்கடலில் ஒரு பொறிக்குள் சிக்குப் பட்டுவிட்டதாக நம்பினார்கள்.
 
அந்தப் பெருங்கடலில் மறைந்திருக்கும் பூதங்கள் தங்களை விழுங்கி ஏப்பமிடுவதற்காக திசையறிகருவியின் ஊசியை வேண்டுமென்றே பிழையான திசையைக் காட்டுமாறு செய்து விட்டன என எண்ணினார்கள். “ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும்,  எங்களை இசுப்பானியாவிற்குக் கொண்டு போங்கள்” என்று கேட்டு அந்த மாலுமிகள் ஓ என்று ஒப்பாரிவைத்து அழத் தொடங்கிவிட்டார்கள்!
 
கொலம்பஸ் அதற்கு விளக்கம் அளித்தார். திசையறி கருவியில் பழுதில்லை என்று சொன்னார். தனது விளக்கம் பிழை என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தும் அந்த நேரத்தில் அப்படிப் பொய் சொல்ல வேண்டியிருந்தது. துருவ விண்மீன் இருக்கும் திசையையே எப்போதும் காட்டும் திசையறிகருவியின் ஊசி அந்த விண்மீன் இடம் மாறிவிட்டதால் ஊசி காட்டும் திசையும் மாறிவிட்டது” என்று கொலம்பஸ் விளக்கினார். அந்த விளக்கத்தை நம்பி மாலுமிகள் கொஞ்சம் அமைதி அடைந்தார்கள்.
 
போலோஸ் துறைமுகப் பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு சுமார் 40 நாள்கள் கழிந்து விட்டன. இப்போது கப்பல் சார்கஸ்சோ கடலில் (Sargasso Sea) பயணம் செய்து கொண்டிருந்தது. சார்கஸ்சோ கடல் வட அந்திலாந்திக் பெருங்கடலுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் மற்றும் அசோர்ஸ் (Azores) தீவுக்கும் இடையில் இருக்கிறது (வடக்கே குறுக்குக் கோடு 20 பாகைக்கும் 35 க்கும் இடையில்). பெர்முடா தீவுகள் இந்தக் கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கின்றன. இந்த மேட்டுக் கடலில் சுழியோட்டம் இல்லாததால் (வடக்கும் தெற்குமாக ஓடும் சுழிகள் இதன் ஊடாகச் செல்லாது இருமருங்கிலும் ஓரமாக விலகிச் செல்கின்றன) இந்தக் கடலில் பெருமளவிலான சாதாளை (seaweed) கரையை நோக்கித் தள்ளப்படாமல் இருந்த இடத்திலேயே எப்போதும் மிதந்து கொண்டு இருக்கும். விளைவு? கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் வேகம் தடைபட்டது.
 
கப்பலின் வேகம் குறைய ஆரம்பித்ததால் கப்பல் ஓடுவதற்குப் பதில் ஊரத் தொடங்கியது. இந்த வேகக் குறைவும் கடலின் மாயத் தோற்றமும் கப்பலில் இருந்த மாலுமிகளின் அடிவயிற்றைக் கலக்கியது. சந்தேகம் இல்லாமல் உலகத்தின் விழிம்பிற்குத் தாங்கள் வந்துவிட்டதாக அவர்கள் பயந்தார்கள். தாங்கள் கேள்விப்பட்ட பூதங்கள் கப்பலைத் தடுத்து இந்தச் சாதாளையால் எல்லோரையும் மூடிக் கட்டிக் கொண்டு கடலின் அடிக்கு இழுத்துச்செல்லப் போகின்றன என எண்ணி நடுங்கினார்கள்.
 
கிட்டத்தட்ட ஒரு வார காலமாக கப்பல் மெல்ல மெல்ல இந்த மேலைக் கடலில் பயணம் செய்தது. அதனைக் கடந்தபோது அவர்களுக்கு அதிட்டம் காத்திருந்தது. அத்திலாந்திக் -பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் குறுக்குக் கோடு  (latitude) 30 பாகை வடக்கு-தெற்குக்கு உட்பட்ட வெப்ப மண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை (equator) நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் காற்று வீசுகிறது. இதனை ஆங்கிலத்தில் trade winds என்று அழைப்பார்கள். இப்போது அந்தக் காற்று கொலம்பசின் கப்பலை மேற்கு நோக்கி இழுத்துச் சென்றது. ஆனால், மாலுமிகளோ இதனை அதிட்டமாகக் கருதவில்லை. ஒரேயடியாக கப்பல் மேற்குத் திசையில் அள்ளுப்பட்டுப் போவதால் இனித் தாங்கள் மறுபக்கமாகத் திரும்பி இசுப்பானியா விற்குப் போகும் வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்தக் கவலை அவர்களை வாட்டியது.
 
இப்படி மாலுமிகள் பயத்தினால் செத்துப் பிழைப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒருவேளை சிரிப்பாக இருக்கலாம். ஆனால், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முன்பின் தெரியாத பெருங்கடலில் பயணம் செய்த அந்தக் கப்பலில் நாங்கள் இருந்திருந்தால் நாங்களும் அந்த மாலுமிகளின் மனநிலையில்தான் இருந்திருப்போம். சொல்லப் போனால் இன்னும் மோசமான மனநிலையில் இருந்திருப்போம்.
 
இப்படி 50 நாள்களுக்கும் மேலாக பெருங்கடலில் பயணம் செய்த பின்னர் செப்தெம்பர் மாதம் 2 ஆம் நாள் ஒரு மாலுமி திடீரென “தரை” “தரை” எனக் உரத்த குரலில் கூக்குரல் இட்டான்.
 
எல்லோரும் எங்கே? எங்கே? என்று அடித்து விழுந்து கொண்டு அவன் நின்ற பக்கம் ஓடினார்கள். ஆகா! என்ன ஆச்சரியம்? அவர்கள் கண்ணுக்கு நேர் எதிரே பச்சை நிறத் தீவுகள்! உயர்ந்த மலைத்தொடர்கள். அழகானநகரம். அங்கே பாரதியார் “தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் – அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டித் தரவேண்டும்” என்று கேட்டாரே?அது போன்ற ஒன்றல்ல பல மாளிகைகள்! அரண்மனைகள்! தேவாலயங்கள்! இவையெல்லாம் சூரியஒளியில் குளித்துத்  தகதக என மின்னிக் கொண்டிருந்தன!
 
அந்தக் காட்சியைக் கண்ட பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். இறைவனைப் போற்றித் தோத்திரப் பாடல்களைப் பாடினார்கள். “ஆகா காதே வந்து விட்டது! நாம் நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட காதே இதோ எங்கள் கண்முன்னே! இனி எங்கள் கவலைகள் ஒழிந்தன! எம்மைப் பிடித்த பீடைகள் தொலைந்தன! நல்ல காலம் பிறந்தது!” என்று மகிழ்ச்சியால் ஆடிப் பாடினார்கள். அடுத்த கணம் கப்பல் அந்த ஒளி உமிழும் நகரை நோக்கி விரைந்தது!
 
என்ன வியப்ப? திடீரென அந்த நகரம் மறைந்தது! அத்தோடு அவர்கள் பார்த்த மாளிகைகள், அரண்மனைகள், தேவாலயங்கள் எல்லாமே ஒரு நொடியில் மறைந்தன! மந்திரவாதி டேவிட் கொப்பர்பீல்ட் (David Copperfield) சீனாவின் நெடுஞ்சுவரைத் தனது தந்திரத்தால் மறையச் செய்வாரே! அதேபோல் இந்த நகரமும் மறைந்து விட்டது.
 
அவர்களது கண்களுக்கு இப்போது அகண்டு விரிந்து கிடந்த பெருங்கடல்தான் தென்பட்டது. அவர்கள் கண்டது கானல் நீர். கொளுத்தும் ஞாயிறு, பரந்து கிடக்கும் பெருங்கடல், தலைக்கு மேலே ஓடும் மேகக் கூட்டங்கள் என இந்த மூன்றும் சேர்ந்து அவர்களது கண்களை ஏமாற்றி விட்டன. அவர்கள் எதைக் காண உளமார விரும்பினார்களோ அது அவர்கள் கண்களுக்குப் பட்டது. ஆங்கிலத்தில் இதனை mirage அல்லது hallucination  என்று அழைப்பார்கள்.
 
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் கொலம்பஸ்பாடு பெரும் பாடாகிப் போய்விட்டது. தங்களைக் கொலைக் களத்திற்கு அழைத்துப் போகிறான் என்று முன்னரைவிட இப்போது பலமாக மாலுமிகள் நம்ப ஆரம்பித்தார்கள்.
 
மாலுமிகளது பொறுமை சோதனைக்கு உள்ளாகியதுஇ  பதட்டம் அதிகரித்தது, புலம்பல் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது. கொலம்பசுக்கு எதிராகப் பயமுறுத்தல்கள் எழுந்தன. “இந்த இத்தாலிக்காரன் எங்களையும் இந்தக் கப்பல்களையும் எந்த ஐயத்துக்கும் இடம் இல்லாமல் அழிவு நோக்கிக் கொண்டு போகிறான்” என அவர்கள் கொலம்பசைத் திட்டினார்கள்.
 
கொலம்பஸ் மனம் தளரவில்லை. தன்நம்பிக்கையோடும் பொறுமையோடும் பயணத்தைத் தொடர்ந்தார். தலைக்கு மேலே பறவைகள் பறக்க ஆரம்பித்தன. அது தரை அண்மையில் இருக்கலாம் என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுத்தது. மேலும் பெருங்கடலில் முன்னர் பார்த்திராத பொருட்கள் மிதப்பதையும் கண்டார்.
 
1492 ஆம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 7 ஆம் நாள் கொலம்பஸ் நாள்தோறும் பதிவு செய்திருந்த குறிப்புக்கள் கனரீஸ்தீவுகளை விட்டுப் புறப்பட்ட நேரம் தொடங்கி இதுவரை 27,000 மைல்கள் பயணம் செய்ததைக் காட்டியது. கொலம்பஸ் வைத்திருந்த பொய்ப் பதிவுகள் (மாலுமிகள் பார்த்த பதிவகள்) 2,200 மைல்கள் மட்டுமே பயணம் செய்ததாகக் காட்டியது!
 
இந்த இடத்தில் கொலம்பஸ் ஒரு தவறு செய்தார். அவர் போன திசையில் நேரே பயணம் செய்திருந்தால் Carolina பகுதியில் தரையிறங்கி இருப்பார். அப்படித் தரை இறங்கி இருந்தால் வட அமெரிக்காவின் தீவு முதலான புறப் பகுதிகள் நீங்கலான தலைநிலப்பரப்பை (Mainland) கொலம்பஸ் கண்டு பிடித்திருந்திருப்பார். அவரது பொல்லாத காலம் தண்டயல் அலன்சோ பின்சொன் (Captain Alonso Pinzon) தெற்கு நோக்கிக் கிளிகளின் சாயலில் பறந்த ஒரு கூட்டம் பறவைகளைக் கண்டார். கண்டதும் தரை மேற்குத்திசையில் இல்லை, தென்மேற்குத் திசையில்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
 
உடனே மேற்குத் திசைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த கப்பலின் திசையை தென்மேற்காகத் திருப்புமாறு கடற்தளபதி கொலம்பசிடம் பின்சொன் கெஞ்சி மன்றாடினார். கொலம்பஸ் முதலில் சம்மதிக்கவில்லை. இருந்தும் தனது விருப்பத்துக்கு மாறாக தென்மேற்குத் திசையில் கப்பலைத் திருப்பினார். கப்பல் இப்போது கியூபா இருக்கும் திசை நோக்கி விரைந்தது

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை (45)
ஒரு பருந்தின் நிழலில்
நேரமும் தூரமும்

 

கொலம்பஸ் நாள் தோறும் பதிவு செய்திருந்த குறிப்புக்கள் கனரீஸ் தீவுகளை விட்டு 1492 ஆம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் 7 ஆம் நாள் புறப்பட்ட நேரம் தொடங்கி அதுவரை 27,000 மைல்கள் பயணம் செய்ததை கொலம்பசின் பதிவுகள் காட்டியதாகப் பார்த்தோம். அதே சமயம் கொலம்பஸ் வைத்திருந்த பொய்ப் பதிவுகள் (மாலுமிகள் பார்த்த பதிவுகள்) 2,200 மைல்கள் மட்டுமே பயணம் செய்ததாகக் காட்டியது! கொலம்பஸ் எப்படி? எதன் அடிப்படையில் இந்தத் தூரத்தைக் கணித்தார்?
 
பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற் செலவுக்கு வேண்டிய (Navigation) திசைகாட்டிகள் (compasses)  காந்தக்கற்கள் (magnets) நாழிகை வட்டில்கள் (hour-glasses) அடிமட்டங்கள் (rulers) கருவிகள் பல இருந்தும் அது ஒரு துல்லியமான அறிவியலாக (exact science) இருக்கவில்லை என முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
 
மேலும் விண்மீன்களை அண்ணாந்து பார்த்துக் கப்பலின் இடத்தை நிருணயிப்பதுதான் அப்போதய பெரு வழக்காக இருந்தது. இருந்தும் விண்மீன்காட்டி (astrolabe) தட்டைப் பயன்படுத்தி கப்பலின் இடத்தைக் கணிப்பதும் நடைமுறையில் இருந்தது. இந்த விண்மீன் காட்டி என்பது முக்கிய விண்மீன்கள் வரையப்பட்ட ஒரு positioning உலோகத் தட்டாகும். முன்பின் தெரியாத கடலில் பயணம் செய்யும்போது ஒரு கடலோடி (mariner) விண்ணை அண்ணாந்து பார்த்து மேலே காணும் வின்மீன்களின் நிலைக்கு அமைய (positioning) வைத்துப் பார்ப்பதன் மூலம் இடத்தைக் கண்டு பிடிக்கலாம் என்று எழுதியிருந்தேன்.
 
கடல் பயணத்தில் கப்பல் செல்லும் வேகம், அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல எடுக்கும் நேரம் இந்த இரண்டும் தெரிந்தால் ஒன்றை மற்றதால் பெருக்குவதன் மூலம் கப்பல் கடந்த தூரத்தைத் திருத்தமாகக் கணக்கிட்டு விடலாம்.
 
இப்போதெல்லாம் நேரத்தை ஒரு நொடி (second) பிசகாமல் அணுக்கடிகாரத்தின் உதவியால் கணித்து அதனை சரிசெய்து கொள்கிறார்கள். அணுக்கள் கோடிக்கணக்கான ஆண்டு காலமாக எந்தவித மாற்றத்துக்கும் உள்ளாகாமல் இருந்தமாதிரியே இருப்பதால் அணுக்கடிகாரம் எந்தப் பிசகும் இல்லாமல் நேரத்தைக் காட்டுகின்றன.
 
உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அதே சமயம் ஞாயிற்றைச் சுற்றி வரும்போது சில சமயங்களில் சுழற்சியில் ஏற்படுகிற பிறழ்ச்சி (wobble) காரணமாக நேர வேறுபாடு  ஏற்படுகிறது. அந்த நேர வித்தியாசத்தைத் திருத்த அணுக் கடிகாரத்தைச் சரிசெய்கிறார்கள். சென்ற ஆண்டு (2001) அணுக்கடிகாரத்தை ஒரு நொடியினால் குறைத்தார்கள்.
 
ஒரு பாழ்வெறுமையில் வைக்கப்பட்டிருக்கும் 133 அணுக்கள் கொண்ட ஒளிக்கோட்டின் (டிநயஅ ழக உநளரைஅ யவழஅள)  மீது மைக்கிறோ அலையைப் பாய்ச்சி இலக்றோன்களைப் புவியின் சுழற்சிக்கு ஏற்றவாறு மாற்றி வைத்து விடுகிறார்கள். அப்படி ஒரு நொடியை 9இ192இ631இ770 அதிர்வுகளாகப் பிரித்து அணுநேரத்தைக் கணிக்கிறார்கள். அமெரிக்காவில்தான் இந்த அணுக்கடிகாரம் இருக்கிறது. அதனோடு வானலைகள் மூலம் தொடர்பு கொண்டு பெறப்படும் சமிக்ஞைகளை வைத்து அணுக் கைக்கடிகாரத்தின் நேரத்தை சரிசெய்து கொள்ளலாம். அணுக்கைக் கடிகாரங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. விலை அதிகம் இல்லை. 2,500 அமெரிக்க டொலர்கள்தான்!
 
புவியின் சுழற்சிவேகம் குறைந்து கொண்டு வருவது உங்களுக்குத் தெரியும். சுமார் தொண்ணூறு கோடி ஆண்டுகளுக்கு முன் புவி ஞாயிற்றை சுற்றிவர 217 நாள்கள் மட்டுமே எடுத்தது. புவியின் சுழற்சி வேகம் குறையக் குறைய அது ஞாயிற்றைச் சுற்றிவரும் நாள்கள் அதிகரிக்கும். பயப்பட வேண்டாம். ஒரு நாள் அதிகரிக்க ஒரு கோடி வருடம் எடுக்கலாம். எனவே இந்த அதிகரிப்பைப்பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

அது சரி. இந்தக் நேரம் பற்றி அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள்? சிலர் இது கடவுளை மனிதன் படைத்ததுபோல மனிதலால் அவனது கற்பனையில் படைக்கப்பட்ட பொருள் என்கிறார்கள். இன்னொரு சாரார் நேரத்தை பிரித்துப் பெருக்கிப் பார்க்கிறோம். அதன் தாக்கத்தை ஒவ்வொருநாளும் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக எம்மை சுற்றியிருப்பவை, நாங்கள் உட்படஇ முதுமை அடைந்து அழிந்து போகிறோம். எனவே நேரம் என்ற ஒரு பொருள் இருக்கிறது என்கிறார்கள்.
 
வரலாற்றுக் காலம் தொடக்கம் மனிதர்கள் நேரத்தைப்பற்றி அறிந்து கொள்ளப் படாதபாடு பட்டிருக்கிறார்கள். நாங்கள் வாழும் புவி பால் வழி மண்டலத்தில் (Milky Way Galaxy) ஒரு சராசரி அளவுடைய விண்மீனை (ஞாயிறு) வலம் வருகிறது. இதனைப் புதிய கற்கால மனிதர்கள் (Neolithlc)  கவனித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வானியல் ஐந்தொகுதிகளைக் (Astronomical Calendars)  கண்டு பிடித்து நேரத்தைக் கணித்தார்கள். இங்கிலாந்தில் சலிஸ்பரி சமவெளியில் (Salisbury Plains)  உள்ள இராட்சத வட்டக் கல் அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்தத் தூண் எதற்காக, யாரால் நிறுவப்பட்டது என்ற விபரம் இன்று கிடைக்கவில்லை. ஆனால், அதன் அமைப்பைப் பார்த்தால் காலங்களையும், பருவங்களையும், சூரிய-சந்திர கிரகணங்களையும் கணிப்பதற்கு அது நிறுவப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரைகிறிஸ் – யூபிரட்டிஸ் நதிப் பள்ளத்தாக்கில் (இன்றைய இராக் ) வாழ்ந்த சுமேரியர்கள் உருவாக்கிய ஐந்தொகுதி ஒரு ஆண்டை ஒவ்வொன்றும் முப்பது நாள்கள் கொண்ட 12 மாதங்களாகப் பிரித்தார்கள். ஒரு நாளை 12 காலங்களாகவும் (ஒரு காலம் இன்றைய 2 மணித்தியாலத்திற்கு ஒத்ததாக) ஒரு காலத்தை மீண்டும் 30 பாகங்களாகவும் (ஒரு பாகம் இன்றைய 4 விநாடிகளை ஒத்ததாக) சுமேரியர்கள் பகுத்தார்கள். இதே இராக்கில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த பாபிலோனியர்கள் ஒரு ஆண்டை 29-30 நாள்கள் அடங்கிய 12 சந்திர மாதங்களாக வகுத்து ஒரு ஆண்டில் 354 நாள்கள் இருப்பதாகக் கணக்கிட்டார்கள்.
 
பாபிலோனியர்கள் போலலே முதலில் எகித்தியர்கள் காலத்தை நிலாவை வைத்தே கணக்கிட்டார்கள். பின்னர் இப்போது சைரஸ் என்று அழைக்கப்படும் நாய் நட்சத்திரம் (Canis Major which now called Sirius)  சூரியனுக்குப் பின்னால் ஒவ்வொரு 365 நாள்களுக்கு ஒருமுறை உதிப்பதைப் பார்த்து ஒரு ஆண்டில் 365 நாள்கள் கொண்ட ஐந்தொகுதியை கிமு 423 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழைய ஐந்தொகுதியாகும்.
 
மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இனத்தவர் 365 நாள்களைக் கொண்ட ஐந்தொகுதியைக் கணிக்க சந்திர- சூரியர்களை மட்டுமல்ல வெள்ளிக் கோளையும் சேர்த்துக் கொண்டார்கள். மாயன் நாகரிகம் கிமு 2000 – கி.பி. 1500 ஆண்டுவரை நிலைத்து இருந்தது. இவர்கள் விட்டுப்போன ஆவணங்களில் இருந்து இந்தஉலகம் கிமு 311 ஆம் ஆண்டு படைக்கப்பட்டதாக அவர்கள் நம்பியது தெரிகிறது. அவர்களது ஐந்தொகுதியின் அடிப்படையிலேயே பின்னர் வந்த அஸ்ரெக் (Aztec) இனத்தவர்கள் ஐந்தொகுதியை உருவாக்கினார்கள்.
 
பண்டைய கிரேக்கர்கள் ஞாயிறு வட்டில்கள் (sundials) கணிதம், தத்துவம் இவற்றின் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிட்டார்கள்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் இருந்த நகரங்கள், அமெரிக்காவில் இருந்த நகரங்கள் இவை ஒவ்வொன்றும் அந்தந்த நகரத்தில் ஞாயிறின் உதயம், ஞாயிற்றின் மறைவு இவற்றின் அடிப்படையில்  நேரத்தை வைத்துக் கொண்டார்கள். ஆனால்இ தொடர்வண்டிகள் கண்டு பிடிக்கப்பட்டு நீண்ட பெருஞ்சாலைகள் போடப்பட்ட பின்னர் இப்படி ஒவ்வொரு நகரமும் வெவ்வேறு நேரங்களைக் காட்டியது பெரிய குழப்பத்தை உண்டாக்கியது. எடுத்துக் காட்டாக ஒரு தொடர்வண்டி ஒரு நகரத்தில் இருந்து புறப்பட்டால் அடுத்த நகரத்துக்கு என்ன நேரத்தில் போகும் என்பதை கணிக்க முடியாமல் இருந்தது. அமெரிக்க தொடர்வண்டி – நெடுஞ்சாலை கம்பனிகள் நாடு முழுதும் காணப்பட்ட 80 கும் அதிகமான நேரங்களைக் கணக்கிட வேண்டியிருந்தது.
 
இப்படி நாட்டுக்கு, நகரத்துக்கு ஒரு நேரம் என்ற குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய அறிவியலாளர்கள் 1884 ஆம் ஆண்டு வோஷிங்டன் தலைநகரிலில் கூடி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அவர்கள் சீரான நேரத்தைக் (standard time) கண்டு பிடித்தார்கள். அதற்குத் தோதாகப் புவியை 24 நேர மண்டலங்களாகப் பிரித்தார்கள். அப்போது இங்கிலாந்து நாடுதான் உலகில் கொடிகட்டிப் பறந்த நாடு. எனவே இங்கிலாந்தில் உள்ள கிறீன்விச் (Greenwich) என்ற நகரம் சுழியம் (zero) பாகை (இது வடக்குத் தெற்காக வடதுருவத்தையும் – தென்துருவத்தையும் இணைக்கும் ஒரு கற்பனைக் கோடு) தொலைவில் உள்ளதெனத் தேர்ந்தெடுத்தார்கள்.
 
இந்த நகரம் தேம்ஸ் நதியிலிருந்து இலண்டன் பக்கமாக 4 மைல் தொலைவில் இருக்கிறது. இந்த நகரைத் தேர்ந்தெடுத்தற்கு பிரஞ்சுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், அவர்களால் பிரித்தானியர்களை எதிர்த்துப் போட்டி போடவோ அவர்களது செல்வாக்குக்கு ஈடு கொடுக்கவோ முடியவில்லை. அப்படிப் போட்டி போட முடிந்திருந்தால் இந்த சுழியம் கோடு கிறீன்விச் நகரத்துக்குப்பதில் பாரிஸ் நகரத்தை ஊடறுத்து வரையப்பட்டிருக்கும். கிறீன்விச் சுழியக் கோட்டில் நேரம் நண்பகல் 12 மணியென்றால் அதற்கு கிழக்கே ஒவ்வொரு பாகைக்கும் 4 மணித்துளி கூடிக்கொண்டு போகும். மேற்கே அதேயளவு குறைந்து கொண்டு போகும்.
 
கிழக்கே 180 பாகையில் (12 மணித்தியால வித்தியாசம்) அனைத்துலக நேரம் தொடங்குகிறது. அதாவது பொழுது விடிந்து பகல் தொடங்குகிறது.
 
இங்கிலாந்தில் காணப்படும் இந்த கிறீன்விச் பூச்சியக் கோட்டை நேரில் பார்த்திருக்கிறேன். வடதிசையைப் பார்த்துக் கொண்டு கோட்டின் இருமருங்கிலும் கால்களை வைத்தால் இடது கால் மேற்குத் திசையிலும் வலது கால் கிழக்குத் திசையிலும் ஒரே நேரத்தில் இருக்கும்!

—————————————————————————————————- 
 

கியூபா பயணக் கட்டுரை (46)
ஒரு பருந்தின் நிழலில்
கிரேக்க அறிவியாலர்கள்
 

கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்துஇ சரியாகச் சொன்னால் மீள் கண்டுபிடித்து 500 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இந்த அசுர சாதனையின் 500 ஆண்டு நிறைவை வட- தென் அமெரிக்கர்கள் தடபுடலாகக் கொண்டாடினார்கள். கொலம்பசின் அமெரிக்கக் கண்டுபிடிப்பால் பூர்விகக் குடிமக்கள் போரினாலும்இ நோயினாலும் பெருமளவு அழிந்துதொழிந்தார்கள் என்பது உண்மைதான். அது கொலம்பசின் அமெரிக்கக் கண்டுபிடிப்புப் பற்றிய வரலாற்றின் இருண்ட பகுதியாகும். இருந்தும் கொலம்பசின் சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
 
மகாகவி பாரதியார்
 

சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
 
என்று பாடியதை வைத்துக் கொண்டு மேடை எல்லாம் தமிழர் வீரத்தை முழங்குகின்றோம்.
 
முதலாம் இராசராச சோழனும் (இயற்பெயர் அருண்மொழித்தேவன்) அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழனும் (இயற்பெயர் மதுராந்தகன்) 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழப் பேரரசை நிறுவினார்கள். இந்திய வரலாற்றில் பெரிய கடற்படையை வைத்திருந்த பெருமையும் இவர்களையே சேரும். கடல்கடந்து படையெடுத்து ஈழம், கடாரம், சாவகம், புட்பகம், முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் (மாலைதீவு) கலிங்கம் போன்ற நாடுகளை வென்று அங்கு தங்கள் புலிக்கொடியைப் பறக்க விட்டார்கள். ஈழத்தை ஆண்ட ஐந்தாம் மகிந்தனைச் சிறப்பிடித்ததோடு நில்லாமல் ஈழ மன்னனிடம் பாண்டியர் அடைக்கலம் வைத்த சுந்தரமணிமுடியும் இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றி இராசேந்திரன் தமிழகம் மீண்டான். ஈழத்தை சோழர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக சோழப் பேரரசின் மண்டலங்களில் ஒன்றாகவும் (9 வது மண்டலம்) ஜெகநாதமங்களபுரத்தை (பொலனறுவை) அதன் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்தார்கள்.
 
பொருகட லீழத் தரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும்இ இந்திரன் ஆரமும்
தெண்டரை ஈழ மண்டல முழுதும்
 
என்ற கல்வெட்டு ஈழமண்டலம் முழுதும் சோழர்வசம் ஆகியதை உறுதிப் படுத்துகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் கனகவிசயர் என்ற வடபுல வேந்தர் அருந்தமிழின் நேர்மையும், சீர்மையும்இ அருமையும், பெருமையும் தெரியாது, மூவேந்தர்களின் தோள்வலியும் வாள்வலியும் புரியாது செருக்கோடு இழித்துப் பழித்தார்கள் எனக் கேட்டு வெகுண்டெழுந்து வடநாடு மீது படை நடத்திச் சென்று கனகனையும் விசயனையும் போரில் தோற்கடித்து, சிறைப் பிடித்து அவர்கள் தலையில் இமயத்தில் இருந்து பெயர்த்தெடுத்த கல்லைச் சுமத்திக் கொண்டுவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான். அதனை இளங்கோ அடிகள் தான் படைத்த சிலப்பதிகார காவியத்தில் கால்கோட் காதையில் பெருமிதத்தோடு இனிமையான தமிழில் வடித்திருக்கிறார்.
 
இவற்றையே பாரதியார் புகழ்ந்து பாடியிருக்கிறார். ஆனால்இ இராசராசனும், இராசேந்திரனும் வாள்முனையில் பிடித்த நாடுகள் ஒன்றேனும் தமிழர்களுக்குச் சொந்தமாகவில்லை. கடாரம், சாவகம், புட்பகம், மாலைதீவு போன்ற நாடுகளில் மருந்துக்கும் தமிழன் இல்லை. அருகிலுள்ள ஈழத்தின் பெரும்பகுதி கைவிட்டுப்போனது மட்டுமல்ல அருகிலுள்ள மாலைதீவும் கோட்டை போனது.
 
எங்கள் காலத்தில் கச்சதீவை சிங்களத்துக்கு தாரைவார்த்த காரணத்தால் தமிழகத் தமிழன் கச்சையையும் இழந்து தவிக்கிறான்!
 
ஒருவேளை அன்றைய மூவேந்தர்கள் இத்தகைய படையெடுப்புக்களைத் தங்கள் தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுக்கவும், தமிழ் மறத்தை திசையெட்டும் பறையறையவும் மேற்கொண்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. அவர்களுக்கு அன்று நாடு கொள்ளும் ஆசை இருக்கவில்லை போலும்.
 
இதற்கு நேர்மாறாக கொலம்பஸ் ஒரு கண்டத்தையே கண்டுபிடித்தார். அல்லது கண்டுபிடிக்கக் கால்கோள் நாட்டினார். அதனால் இன்று அமெரிக்காக் கண்டம் ஆங்கிலேயர், யப்பானியர், போர்த்துக்கேயர்இ ஒல்லாந்தர், பிரஞ்சுக்காரர் போன்றோரது நாடுகளாக, சுதந்திர நாடுகளாகஇ அவர்களது மொழி பேசப்படும் நாடுகளாக தலை நிமிர்ந்து நிற்கின்றன.
 
எனவேதான் என் பார்வையில் கொலம்பசின் சாதனை அசுர சாதனை எனப் போற்றத் தோன்றுகிறது. அவரது ஊக்கவுடமைஇ துணிச்சல், வினை செயல், வினைத் திட்பம் வியப்பை அளிக்கிறது. அவரது வெற்றிக்கு அன்றைய அறிவியலே அச்சாணியாக இருந்திருக்கிறது.
 
உலக நாகரிகத்திற்கும் அறிவியலுக்கும் கிரேக்கத்தின் பங்குபற்றி முன்னர் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒரு துறையில் மட்டுமல்ல பல்துறைகளிலும் அவர்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். கணக்கியல், நிலவியல், வானியல், தாவரவியல், இயற்பியல், வரலாறு இப்படி எந்தத் துறையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
 
ஐரோப்பா கண்டம் இருண்ட காலத்தில் இருந்து வெளிச்சத்திற்கு வரவும்இ நாகரிகம் அடையவும் சோக்கிறட்டீஸ்இ பிளட்டோஇ அரிஸ்தோட்டல்இ பைத்தாக்கிரஸ், இக்குலிட் (Euclid) ஆர்க்கிமிடீஸ்  (Archimedes) தொலமி (Ptolemy) போன்ற எண்ணிறந்த கிரேக்க அறிவியலாளர்களின் சிந்தனையில் பூத்த பூக்களே பயன்பட்டன.
 
ஒருபுறம் கற்பனைக் கடவுள்கள் பற்றிச் சிலர் புராணங்கள், இதிகாசங்கள், புனைகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது மறுபுறம் கிரேக்க தத்துவாசிரியர்கள் இயற்கைபற்றி ஆராய்ச்சி செய்து அதில் புதைந்து கிடந்த மர்மங்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டார்கள். சோக்கிறட்டிஸ்
 
அரிஸ்தோட்டல் (யுசளைவழவடந) அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். கெறடோற்ரஸ் (Herodotus BC 485 – 425) வரலாற்றின் தந்தை எனப் புகழப்படுகிறார். கிப்போகிறேதிஸ் (ர்ippழஉசயவநள) மருத்துவத்தின் தந்தை எனப் பெயரெடுத்துள்ளார். அவர் தனது மாணாக்கர்களுக்குச் செய்து வைத்த உறுதிமொழியே இன்றளவும் உலகத்தில் உள்ள அத்தனை மருத்துவ மாணவர்களும் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறும் போது எடுத்துக் கொள்கிறார்கள்.
 
இவர்களில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய இன்னொரு தத்துவாசிரியர் இருக்கிறார். அவரது பெயர் தேல்ஸ் (Thales Miletus 624 – 546 BC). பண்டைய கிரேக்கத்தின் ஏழு அறிஞர் பெருமக்களில்; இவர் ஒருவர். இவர்தான் கிரேக்கத்தின் இயற்கை தத்துவாசிரியர்கள் (கிரேக்கத்தில் எல்லா அறிவியலாளர்களையும் தத்துவாசிரியர்கள் என்ற ஒரே சொல்லில் அழைத்தார்கள்) வரிiசியில் முதல் அறிவியலாளர். பண்டைய கிரேக்க நாட்டின் சிந்தனையாளர்களது ஐயோனியன் என்ற பிரிவிவைத் தோற்றுவித்தவரும் (குழரனெநச ழக வாந ஐழnயைn ளஉhழழட ழக யnஉநைவெ புசநநம வாiமெநசள) இவரே.
 
இவர் எகிப்தின் புகழ்பெற்ற பிரமிட் கோபுரங்களை அளந்தவர் எனச் சொல்லப்படுகிறது. கணக்கியலைப் பயன்படுத்தி கடற்கரையில் இருந்து வெகுதொலைவில் பயணம் செய்யும் கப்பல்களின் தூரத்தை இவர் கணித்துச் சொல்லிவிடுவாராம். கி.பி. 585 இல் ஏற்பட்ட ஞாயிறு கிரகணத்தையும் இவர் முன்கூட்டியே கணித்துச் சொன்னாராம். கணக்கியலில் ஐந்து தேற்றங்களைக் கண்டுபிடித்த பெருமையும் இவரைச் சார்ந்ததாம். அதில் ஒன்று ஒரு அரைவட்டத்தினுள் கீறப்பட்ட முக்கோணத்தில் ஒன்று செங்கோணமாக இருக்கும் என்பதாகும். இயற்கையில் காணப்படும் பொருட்களின் மூலப்பொருள் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து அது நீராக இருக்கலாம் என்ற கருத்தை இவர் வெளியிட்டார்.
 
கிரேக்கத்தைப் புராண காலத்தில் இருந்து ஏன்? எதற்காக? எப்படி? என்ற அறிவியல் ஆராய்ச்சி உலகுக்கு இழுத்து வந்த பெருமை தேல்ஸ் உடையதாகும். இத்தியாதி காரணங்களுக்காகத் தேல்சை மெய்யியலின் நிறுவனர் என்று அரிஸ்தோட்டல் பாராட்டி இருக்கிறார்.
 
கிபி 450 ஆம் ஆண்டளவில் ஏதன்ஸ் நகரில் தோன்றிய தத்துவம்இ அறிவியல் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். கி.பி. 470 ஆம் ஆண்டு பிறந்த சோக்கிறட்டிசுடனேயே அறிவியல்  தொடங்குகிறது. யாரைப்பற்றித் தெரியாவிட்டாலும் சோக்கிறட்டிஸ்பற்றி ஓரளவாவது நாம் அறிந்து வைத்திருக்கிறோம். “உன்னையே நீ அறிவாய்” (“Know thyself?) என்ற அவரது வாக்கியம் மிகவும் பிரபல்யமானது. இவர் நுண்மாண் நுழைபுலம்படைத்த மிகப் பெரிய சிந்தனையாளர். ஒன்றும் தெரியாத அறிவிலிபோல் நடித்துஇ கேள்வி கேட்பவர்களிடம் மேலும் கேள்விகளைக் கேட்டுஇ அவரைப் புத்திசாலிபோல் முதலில் நம்பவைத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி கேட்பவரின் அறியாமையை நோகாமல் எடுத்துச் சொல்லி உண்மையை நிலைநாட்டுவது இவரது பாணி.
     

கியூபா பயணக் கட்டுரை (47)
ஒரு பருந்தின் நிழலில்
“எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதென்பதுதான்”
 

மெய்யியலை (மெய்யறிவின் மீதான விருப்பு) மதத்தில் இருந்து பிரிப்பது கடினம். அதனை அறிவியல் மற்றும் கணக்கியல் இவற்றில் இருந்து பிரிப்பதும் கடினமாகும். மெய்யியலின் குறிக்கோள் இயற்கையில் நிகழும் இயக்கங்களில் ஒரு ஒழுங்கைக் கண்டு அது புலவுணர்வுக்குப் பொருந்தி வருகிறதா என்பதை கண்டறிவதாகும்.
 
முதலாவது பிரிவினர் அறவொழுக்கம் பற்றி (நுவாiஉள) விசாரணை செய்தவர்கள். இவர்கள் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சரி பிழை என்று ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதனை எப்படி இனங்கண்டு கொள்வது? சரியும் பிழையும் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியா? அல்லது சிலரைப் பொறுத்தளவில் அதுபற்றிய விதிகள் வேறா? யார் இந்த விதிகளைச் செய்தார்கள்? இன்பம்தான் மனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானதா?
 
இரண்டாவது பிரிவினர் எல்லாம் விதிவழி (குயவந ழச Pசநனநளவiயெவழைn) என்பவர்கள். இவர்கள் இந்த உலகத்தின் இயக்கத்தைப்பற்றி அக்கறை செலுத்தியவர்கள். விதி என்றொன்று உண்டா? மக்கள் தங்கள் விதியைத் தாங்களே நிருணயித்துக் கொள்கிறார்களா? அல்லது வானத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் தெய்வங்கள் தீர்மானிக்கின்றனவா? விதியை மாற்றி எழுத முடியுமா? எதிர்காலத்தை தெரிந்து கொள்ள மனிதனுக்கு வழி உண்டா? மனிதனால் அது முடியுமா?
 
மூன்றாவது வகையினர் மக்களைவிட இந்த இயற்கை உலகத்தைப் பற்றிய (யேவரசயட றுழசடன) தத்துவ விசாரணையில் இறங்கியவர்கள். இந்த உலகம் எங்கிருந்து வந்தது? அதனைப் படைத்தவன் அல்லது அதன் காரணகர்த்தா யார்? உலகம் ஏன் படைக்கப்பட்டது? அது யாருக்காகப் படைக்கப்பட்டது? அண்ட கோளங்கள்எல்லாம் ஒரு ஒழுங்கில் காணப்படுவதற்கு ஏதாவது பொருள் உண்டா அல்லது அது தற்செயலான நிகழ்வா?
 
இப்படியான தத்துவ விசாரணைகளில் பண்டைய பபிலோனியர்கள்இ எகிப்தியர்கள்இ யூதர்கள்இ உரோமர்கள்இ கிரேக்கர்கள் ஈடுபட்டார்கள். இருந்தும் கிரேக்கர்களேஇ குறிப்பாக அரிஸ்தோட்டல்இ இயற்கை உலகம் பற்றிய விசாரணையில் சிறந்து விளங்கினார்கள்.
 
ஏதன்ஸ் நகரத்தின் மெய்யியல்வாதிகள் மூவரில் சோக்கிறட்டிஸ் முதன்மையானவர். எஞ்சிய இருவரும் பிளாட்டோவும் அரிஸ்தோட்டலும் ஆவர். இந்த மும்மூர்த்திகளே கிரேகத்தின் அறிவியலுக்குக் கால்கோள் இட்ட சிந்தனையாளர்கள்.
 
சோக்கிறட்டிஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் ஒரு சிற்பியாவார். அவரது தாயார் ஒரு மருத்துவிச்சி. தனது தந்தை போலவே சோக்கிறட்டிஸ் கொஞ்சக்காலம் சிற்பியாகத் தொழில் செய்தார் எனத் தெரிகிறது. பெலொப்னீசியன் யுத்தம் (Peloponnesian War) தொடங்கியபோது ஏதன்ஸ் நகரம் சார்பாக சோக்கிறட்டிஸ் யுத்தமுனையில் போரிட்டார்.
 
தனது 40 ஆவது அகவையில் தன்னைச் சுற்றிய இந்த உலகத்தை அறிய முயற்சித்தார். கடினமான பல கேள்விகளுக்கு விடைகாண முயன்றார். கேள்விகளுக்கு விடை காண்பது அவர் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமான விடயமல்ல என்பதைக் கண்டார்.
 
அறிவு என்றால் என்ன? அழகின் வரைவிலக்கணம் என்ன? சரியென்று செய்யப்படுவவை எவை? இந்தக் கேள்விகளுக்கு தனித்து விடை காண்பது அரிதென்பதால் பலரையும் சேர்த்துஇ சிந்திக்க வைத்துஇ அவர்களது யோசனையின் அடிப்படையில் விடைகாண முயன்றார். அதற்காக ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி வந்து தான் காணும் மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அறிவு என்றால் என்ன? கடவுள்பற்று என்றால் என்ன? இவைபோன்ற கேள்விகளை அவர் கேட்டார்.
 
பலர் தாங்கள் சோலியாக இருப்பதாகவும் தங்களுக்கு நேரம் இல்லையென்று சாட்டுச் சொல்லித் தட்டிக் கழித்தார்கள். சிலர் அவரது கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சித்தார்கள். அப்படிச் சொல்லும் போது மேலும் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு தர்க்கரீதியாக அவர்களைச் சிந்திக்கச் சொல்வார். இதனால் விடை சொன்னவர்களின் கோபத்தையும் சோக்கிறட்டிஸ் சம்பாதிக்க வேண்டி நேரிட்டது.
 
மிக விரைவில் சோக்கிறட்டிசைச் சுற்றி ஒரு இளைஞர் கூட்டம் திரண்டது. சோக்கிறட்டிஸ் சொல்வதைக் கவனமாகச் செவிமடுத்துத் தெளிவாகச் சிந்திப்பது எப்படி என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொண்டார்கள். இப்படிப் படிப்பிப்பதற்குத் தனது மாணாக்கர்களிடம் இருந்து சோக்கிறட்டிஸ் பணம் வாங்குவதில்லை. ஊதியம் வாங்காமலேயே படிப்பித்தார்.
 
சோக்கிறட்டிஸ் மனிதர்களது அபிப்பிராயங்களை உண்மை என்ற கோலை வைத்து அளக்கும் போது தான் உட்பட எல்லோருமே அறிவிலிகள் (fools) என வாதித்தார். சோக்கிறட்டிஸ் தனக்கு அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரியாதென்றார். சாதாரண பேர்வழிகள் அப்படி நினைக்கவில்லை. அவருக்கு அனைத்தும் தெரியுமென்று நினைத்தார்கள். அதனால் மனிதர்களுக்குள் சோக்கிறட்டிஸ் மிகவும் புத்திசாலி என மற்றவர்கள் எண்ணினார்கள்.
 
சோக்கிறட்டிசின் பணிவுக்கு எடுத்துக் காட்டாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருமுறை அவரைப் பார்த்த உடல்மருத்துவர் (physiology) அவர் பொய் பேசக் கூடியவர், வயிறுபுடைக்கச் சாப்பிடுபவர், குடிகாரன் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்ட சோக்கிறட்டிசின் மாணாக்கர்களுக்கு மகா கோபம் வந்தது. தங்களது ஆசிரியரை அவ்வாறு கேவலமாகப் பேசியவரை அடிக்கப் போனார்கள். ஆனால்இ சோக்கிறட்டிஸ் அப்படிச் செய்யக்கூடாது என அவர்களைத் தடுத்தார். “அமைதியாக இருங்கள். அவர் உண்மையைத்தான் சொன்னார். தன்னடக்கத்திற்கு நான் ஆள்படாவிட்டிருந்தால் அவர் வர்ணித்த மாதிரியே நான் இருந்திருப்பேன்” என்றார்.
 
கிமு 399 ஆம் ஆண்டளவில் இளைஞர்களை சோக்கிறட்டிஸ் தவறான பாதையில் அழைத்துச் சென்று அவர்களைக் கெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுப் பலமாக எழுந்தது. எனவே அவர் கடவுளர்களை மதிக்க மறுக்கிறார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இந்த நீதிமன்றம் சோக்கிறட்டிஸ் குற்றவாளி எனக் கண்டு அவருக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கியது. இந்தப் புகழ்பெற்ற நீதிமன்ற விசாரணை உங்கள் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.
 
நல்ல கேள்விகளே அறிவு பற்றிய தேடலின் ஆரம்பமாகும். ஒரு விடயம் பற்றி நாங்கள் இன்னொருவரோடு விவாதிக்கும்போது பல கேள்விகளைக் கேட்கிறோம். அந்தக் கேள்விகள் பொருள் நிறைந்ததாக இருந்தால் விவாதிக்கப்பட்ட விடயம் சம்பந்தமான உண்மையை ஓரளவாவது தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. இந்த வழியையே சோக்கிறட்டிஸ் உண்மையைத் தேடி அறிவதற்கு மேற்கொண்டார். இதனால் சிலர் கோபம் அடைந்தார்களஇ சிலர் பாராட்டினார்கள். இதுதான் சோக்கிறட்டிஸ் மேற்கொண்ட விசாரணையால் அவருக்குக் கிடைத்த நன்மையும் தின்மையுமாகும்.
 
தான் சந்திக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் கேள்விகளைக் கேட்பதின் மூலம் ஒரு விடயம்பற்றிய உண்மையை அல்லது பொய்மையை சோக்கிறட்டிஸ் நிறுவ முயன்றார். பிளாட்டோ
 
தலை சிறந்த தத்துவாசிரியரான சோக்கிரட்டிஸ் உயிரோடு இருந்தபோது தனது மாணாக்கர்களுக்குப் படிப்பித்த தத்துவங்கள் எதனையும் நூல் வடிவில் எழுதி வைக்கவில்லை. ஆனால்இ அவர் இறந்தபின் அவரது தலை மாணாக்கர்களில் ஒருவரான பிளாட்டோ (கிமு 427-347) சோக்கிறட்டிஸ் கற்பித்தவற்றை விரிவாக எழுத்தில் வடித்தார். அப்படி எழுதிய நூல்களில் வுhந யுpழடழபல ஒன்றாகும்.   யுpழடழபல பல என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் தன்னிலை விளக்கமாகும் (னுநகநnஉந ளுpநநஉh).
 
இந்த நூலில் சோக்கிறட்டிசின் தலைசிறந்த தத்துவார்த்த உரையாடல்களையும் பேச்சுக்களையும் கற்பித்தல்களையும் பிளாட்டோ பதிவு செய்துள்ளார். உலகமே எதிர்த்து நின்;றாலும் ஒருவர் தான் எவற்றைச் சரியென்று நினைக்கிறாரோ அதனைச்; செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் எப்படிப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியிலும் மெய்யறிவைத் தேட வேண்டும் என்பது சோக்கிறட்டிசின் தத்துவமாகும்.
 
சோக்கிறட்டிசின் தத்துவ விசாரணையின் பாணிபற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன். தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்டு, கேள்வி கேட்டவரின் கேள்விகளில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி அவரது ஆரம்ப துணிபுரை (original assertion) தவறானது என எண்பிப்பதே அவரது பாணியாகும். அந்தக் கேள்விகளைக் குறுக்கு விசாரணை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
 
சோக்கிறட்டிஸ் தன்னைப் பொறுத்தளவிலும் எந்தத் துணிபுரையையும் நிலைப்பாடாகக் கொள்வதில்லை. த அப்பொலொஜி *The Apology) என்ற நூலில் சோக்கிறட்டிஸ் தனக்கு ஒன்றுமே தெரியாது என்ற நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார்.
 
தனக்குத் தெரிந்ததெல்லாம் தனக்கொன்றும் தெரியாதென்பதுதான்! தான் கண்டு பிடித்த உண்மை என்னவென்றால் தான் உண்மை எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான்!
 
அறம் (virtue) என்ற சொல்லுக்கு மட்டும் அவர் வரைவிலக்கணம் கூறியுள்ளார். “அறம் என்றால் அறிவு” (virtue is knowledge) என்பதே அவர் சொல்லிய வரைவிலக்கணமாகும். ஒருவருக்கு நல்லது எது என்பது மட்டும் தெரிந்துவிட்டால் அவர் எப்போதும் நல்லதையே செய்வார். அதில் இருந்து பெறப்படும் உண்மை என்னவென்றால் தீமை செய்பவர் எது நன்மை என்று தெரியாததாலேயே தீமை செய்கிறார். ஒருவருக்கு அறம்இ ஒழுக்கம்இ அன்பு அல்லது வேறு ஏதாவது அறம்பற்றிப் பிழையான சிந்தனைகள் இருந்தால் அவர் சரியானவற்றைச் செய்வார் என்று நம்பமுடியாது.

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை (48)
 ஒரு பருந்தின் நிழலில் 
இன்றைய மக்களாட்சிமுறை கிரேக்கர்களது நன்கொடை!


 கியூபா பயணக் கட்டுரையை முழக்கம் வாசகர்கள் பலர் ஆர்வத்தோடு படித்து வருகிறார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரா வாரம் முழக்கம் செய்தித்தாளை எடுத்தவுடன் நீங்கள் எழுதும் கியூபா கட்டுரையைப் படித்து விட்டுத்தான் மறுவேலை” என்று என்னைத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் நேரில் காணும் போதும் தொலைபேசியிலும் சொல்கிறார்கள். அவர்கள் உண்மையாகச் சொல்கிறார்களோ வெறுமனே முகமனுக்காகச் சொல்கிறார்களோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கீதவாணி இராஜ்குமார் போன்றவர்கள் சொல்லும்போது அதனை நம்ப வேண்டியுள்ளது.
 
இளமைக் காலத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது இலங்கைப் பயணத்தை வைத்து எழுதிய தொடர் கட்டுரையைப் படித்திருக்கிறேன். “அக்கரைச் சீமையில் ஆறுவாரம்” என்பது அந்தத் தொடர் கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்று ஞாபகம். கல்கியைப் போலலே “கல்கி” இதழின் உதவி ஆசிரியராக இருந்த பகீரதனும் தனது இலங்கைப் பயணத்தை தொடர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். அவர் இலங்கை வரும்போது நான் இரத்தினபுரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கும் வந்திருந்தார். மலைநாட்டின் கொள்ளை அழகைப் பருக வேண்டும் என்றால் இரத்தினபுரி, பலாங்கொடை போன்ற நகரங்களுக்குப் போக வேண்டும்.
 
காலையில் மலையில் இருந்து வழியும் அருவியில்தான் குளியல். இல்லாவிட்டால் பக்கத்தில் பாய்ந்தோடும் களுகங்கை ஆற்றில் நீச்சல் அடிக்கலாம். இரத்தினபுரி நவரத்தினங்களுக்குப் பெயர்போன நகரம். அங்கு கிணறு தோண்டுவதுபோல அரசுக்குச்; சொந்தமான நிலத்தைத் தோண்டி கல்லும் மண்ணும் சேர்ந்த சேற்றை அள்ளி வெளியில் கொண்டு வந்து அதனைத் தண்ணீரில் அரித்துக் கழுவி இரத்தினக் கற்களை எடுப்பார்கள். அவற்றையெல்லாம் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டினோம். அவற்றைப் பின்னர் தனது பயணக் கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தார்.
 
ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக இருந்து பின்னர் இதயம் பேசுகிறது என்ற சொந்தக் கிழமை இதழை ஆரம்பித்த மணியனும் அமெரிக்கா உட்பட தனது உலகப் பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார். லேனா தமிழ்வாணனும் பல பயணக் கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.
 
எழுத்தாளர் சோமலெ 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சுற்றிப்பார்த்து அமெரிக்காவைப் பார் என்ற நூலைஎழுதியுள்ளார். இந்த நூல் ஏழு பதிப்புக்களைக் கண்டுள்ளது!
 
1996 ஆம் ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து நடாத்திய ஐந்தாவது ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் மூன்று மாதகாலம் அமெரிக்காவிலுள்ள இருபத்து இரண்டு மாநிலங்களைச் சுற்றிப் பார்த்துக் கவிதை வடிவில் உன் வீட்டிற்க்கு நான் வந்திருந்தேன்…. வால்ட் விட்மன் என்ற நூலையும்இ உரைநடையில் அணைக்கவா  அமெரிக்கா” என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.
 
அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் உத்தியோகபூர்வ எழுச்சி திங்கள் ஏட்டின் ஆசிரியராக இருந்தபோது (1959-1966) சங்கத்தின் ஆண்டு மாநாடுகளை வித்தியாசமான முறையில் எழுதி வெளியிடுவேன். இந்தப் பட்டறிவுதான் கியூபா பயணக் கட்டுரையை எழுத உதவி உள்ளது என நினைக்கிறேன்.
 
ரோமக் குடியரசின் சர்வாதிகாரி யூலியஸ் சீசர் (கிமு 102-44) கிரேக்கத்தை வென்றபின், கிரேகத்தை விட்டுத் தப்பி ஓடிய பொம்பேயைத் தேடி எகிப்து சென்றான். அங்கு பொம்பேயை வென்று கிளியோப்பற்றாவை மணந்து அவளை எகிப்திய ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினான். தொடர்ந்து அண்டை நாடான ஆசியா மைனர் மற்றும் பொன்ரஸ் நகரங்களைக் கைப்பற்றிய பின்;னர் ரோமாபுரியில் இருந்த மேல்சபை உறுப்பினர்களுக்கு (Senators) ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற செய்தி ஒன்றை அனுப்பினான் “வந்தேன், பார்த்தேன், வென்றேன்” (“veni, vidi, vici, “- “I came, I saw, I won”) என்று சொன்ன பாணியில் இக்கட்டுரைத் தொடரை எழுதலாம். ஆனால்இ அதை நான் விரும்பவில்லை.
 
இந்தத் தொடர் கட்டுரை மூலம் கொலம்பசின் வெற்றிக்கு அறிவியல்தான் காரணி என்பதை வற்புறுத்தி வருகிறேன். இதிகாச புராண காலத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட இடைக்கால, பிற்காலத் தமிழர்களை அதிலிருந்து விடுவித்து அறிவுலகத்துக்கு இழுத்து வருவது எனது குறிக்கோளாகும். மூடநம்பிக்கைகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டுத்  தமிழர்கள் பகுத்தறிவோடு சிந்திக்கவும் வாழவும் இந்தத் தொடர் கட்டுரை கொஞ்சமாவது உதவும் என்பது எனது நம்பிக்கை. மதியம் திரும்பியவர்களுக்கு அல்லாது பெரும்பாலும் இளைய தலைமுறையினருக்காகவே இதனை எழுதுகிறேன்.
 
கிரேக்க அறிவியல் ஆசான்களில் சிலரது அறிவியல் பங்களிப்பைஇ குறிப்பாக வானியல் பற்றிய அறிவியல் பங்களிப்பை சொல்லிவிட்டுஇ கொலம்பஸ் கியூபா உட்பட மேற்கிந்திய தீவுகளில் தரையிறங்கியதைப்பற்றி எழுத இருக்கிறேன். அப்புறம் ஹாவானாவில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டிவிட்டுஇ கியூபாவின் வரலாற்றையும்இ வரலாற்று நாயகர்களையும் பற்றி எழுதி விட்டு இந்தக் கட்டுரைத் தொடரை முடிக்க இருக்கிறேன். இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்.
 
சோக்கிறட்டிஸ் பற்றி மேலும் அறிய விரும்புவோர் அவர் பற்றி வெளிவந்துள்ள புத்தகங்களைப் படிக்கலாம். வை. சாமிநாத சர்மா பிளாட்டோவின் அரசியல் என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். ஆங்கிலத்தில் “Morality the good life?” என்ற நூல் அன்றைய இன்றைய மெய்யிலாளர்கள் பற்றி விரிவாகச் சொல்கிறது. இவற்றைவிட சோக்கிறட்டிஸ் பற்றிப் பெருந்தொகையான தனித்தனி நூல்கள் இருக்கின்றன.
 
சோக்கிறட்டிசின் தலைசிறந்த மாணாக்கர் பிளாட்டோ ஆவார். இவரது காலம் கிமு 429-347 ஆகும்.  சோக்கிறட்டிசிடம் இருந்து பலவற்றைப் பிளாட்டோ படித்துத் தெரிந்து கொண்டார். எப்படிச் சிந்திப்பது, எப்படிப்பட்ட கேள்விகள் பற்றிச் சிந்திப்பது என்பவற்றை எல்லாம் பிளாட்டோ சோக்கிறட்டிசிடம் இருந்தே கற்றுக் கொண்டார்.
 
சோக்கிறட்டிஸ் போலல்லாது பிளாட்டோ பணம் படைத்த மேட்டுக் குடியில் பிறந்தவர். அவரது உறவினர்கள் ஏதன்ஸ் நகர அரசியலில் முக்கிய பதவி வகித்தவர்கள். இன்றுவரை பிளாட்டோ உலகத்தின் தலைசிறந்த தத்துவவாதியெனப் போற்றப் படுகிறார்.
 
கிபி 399 இல் சோக்கிறட்டிஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்த போது பிளாட்டோவுக்கு வயது 30 மட்டுமே. சோக்கிறட்டிசின் உரையாடல்களை உடனிருந்து செவிமடுத்த பிளாட்டோ அவற்றை ஏட்டில் எழுத ஆரம்பித்தார். பின்னர் அவற்றைப் பல தொகுதிகளைக் கொண்ட நூலாக எழுதி முடித்தார். இன்று நாம் சோக்கிட்டிஸ்பற்றித் தெரிந்து கொள்ளும் தரவுகள் அனைத்தும் பிளாட்டோ எழுதி வைத்தவகையாகும். தனது ஆசிரியரது பாடங்களை முதலில் சொல்லிக் கொடுத்து வந்த இவர் பின்னர் தனது சொந்தக் கழகத்தை (Academy) நிறுவித் தனது தத்துவசிந்தனைகளை மாணாக்கர்களுக்குப் படிப்பித்தார்.
 
பிளாட்டோ எழுதிய குடியரசு (Republic) என்ற நூல் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. ஏதன்ஸ் அரசைவிடச் சிறந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை இந்த நூலில் எழுதியுள்ளார். குடியரசு என்ற நூல் மேற்குநாட்டுத் தத்துவக் கருத்துக்கள் மீது மிகவும் செல்வாக்குச் செலுத்தியது. இந்த நூல் உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ்வது எப்படி? அதன் தொடர்பாக எழும் சமாந்தரக் கேள்விகளான-

 (அ) அரச நீதி என்பது என்ன? அல்லது ஒரு இலட்சிய அரசு எப்படி இருக்க வேண்டும்?

(ஆ) நீதியான மனிதன் என்றால் என்ன பொருள்?
 
இந்தக் கேள்விகள் இயற்கையாகவே மேலும் பல கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் குடிமகனுக்கு எவ்வாறு கல்வி புகட்டல் வேண்டும்? எத்தகைய கலைகள் ஊக்கிவிக்கப் படவேண்டும்? அரசு எத்தகைய வடிவத்தில் உருவாக்கப்பட வேண்டும்? யார் அரசாட்சி செய்ய வேண்டும்? அவர்களுக்கு எதனை ஊழியமாகக் கொடுக்கலாம்? ஆன்மா எப்படிப்பட்டது? அதன் குணாதிசயங்கள் என்ன? கடைசியாக தெய்வீக தண்டனைஇ மறுபிறப்பு (இவை இருந்தால்) அவற்றை எப்படி எண்பிப்பது? இப்படி உலகியல்; சிக்கல்களைப் பற்றி எழும் ஐயங்களுக்கு பிளாட்டோ இந்த நூல் மூலம் விடை காண முயல்கிறார்.
 
நீதி என்றால் என்ன? இதற்காக முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணம் எதுவுமே போதியதாக இருக்கவில்லை. சோக்கிறட்டிசின் மாணாக்கர்களில் ஒருவரான திறாசிமச்சுஸ் (Thrasymachus) என்ற இளைஞர் மட்டும் அதற்கான வரைவிலக்கணத்தைf; கூறுகிறார்.
 
வல்லோர்கள் எதை நீதி என்று தீர்மானிக்கிறார்களோ அதுதான் நீதி. வல்லோர்கள் தங்கள் நலனுக்கு எது உவந்ததோ அதனை நீதி எனத் தீர்மானிக்கிறார்கள்.
 
சோக்கிறட்டிஸ் இந்த வாதத்தை தள்ளி விடுகிறார். வல்லோர்கள் மிக அருமையாகவே தங்களுக்கு எது நல்லது என்பதை கண்டுகொள்ள முடியும். அது நீதியாக இருக்காது. காரணம் நீதி நல்ல காரியத்தைப் பற்றியது.
 
இதைக் கேட்ட திறாசிமச்சஸ் கோபித்துக் கொண்டு வெளியேறுகிறார். சோக்கிறட்டிஸ் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வல்லோர்கள் எதை நீதி என்று தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்கிறார்.
 
ஒருவர் நீதியான அரசு எப்படிப்பட்டது என்று தீர்மானித்தால்இ அதனை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு நீதியான மனிதருக்கு வரைவிலக்கணம் சொல்லிவிடலாம்.
 
பிளாட்டோ இப்போது அந்தக் கேள்விக்கான நீண்ட விடையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ஒரு அரசு நான்கு அறங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அவையாவன அஞ்சாமைஇ அறிவுடமை. நடுவுநிலமைஇ நீதி. “குடியரசு” நூலின் நீளமான மீதிப்பகுதி நீதியான அரசுபற்றிய தத்துவ விசாரணையாக அமைந்துள்ளது. பிளாட்டோவின் எண்ணப்படி பெரும்பாலான மக்கள் முட்டாள்கள். எனவே அவர்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென எண்ணினார். சமுதாயத்தில் உள்ள சிறந்த மனிதர்களைத் தெரிந்தெடுத்து அவர்களை மற்றவர்களது பாதுகாவலர்களாக வைக்க வேண்டும் என்பது அவரது யோசனையாகும். பிளாட்டோ செல்வச் செழிப்பான மேட்டுக் குடியில் பிறந்தவர் என்பது நினைவு கூர்ந்தால் அவரது இந்தக் கருத்தோட்டங்களையிட்டு ஆச்சரியப்பட வேண்டி இருக்காது.
 
புலனளவிலான அரசியல் தத்துவம் பற்றி (யடிளவசயஉவ pழடவைiஉயட வாநழசல) ஒழுங்காகவும் விரிவாகவும் எழுதப்பட்ட முதல் நூலாக “குடியரசு” இன்றுவரை எண்ணப்படுகிறது.
 
கிரேக்கர்களும்இ உரோமர்களும் கிமு ஆம் நூற்றாண்டளவில் முடியாட்சிக்கு முடிவுகட்டி குடியாட்சி அரசியல் முறையைக் கொண்டுவந்து விட்டார்கள். இன்றைய மக்களாட்சித் தத்துவம் கிரேக்கர்களது நன்கொடையாகும்.
 
தமிழர்கள் கடைசிவரை “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று இருந்து விட்டார்கள். அதில் தப்பில்லை. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் செங்கோல் கோணாது குடிதழிஇக் கோலோச்சி இருக்கிறார்கள். அதற்காக நாம் பெருமைப்படலாம்.
 
கோவலனைத் தீர விசாரியாது கொலை செய்ததன் மூலம் தனது செங்கோல் வளைந்தபோது “தாழ்ந்த குடையன்இ தளர்ந்த செங்கோலன்இ பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதைகாக்கும் தென்புலக் காவல் என்முதற் பிழைத்ததுஇ கெடுக என் ஆயுள்!” என பாண்டியன் நெடுஞ்செழியன் அரியணையில் இருந்து மயங்கிக் கீழே விழுந்து உயிரை விடுகிறான். இது நீதிபற்றி அந்த மன்னன் கொண்டிருந்த உயரிய எண்ணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.
 
பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தை ஆண்ட எட்டாவது ஹென்றி மன்னன் (கிபி 1491-1547) ஆண்வாரிசு இல்லாததைக் காரணம் காட்டித் தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான். மணமுறிவுக்கு அனுமதி மறுத்த ரோமாபுரி போப்பாண்டவருடன் இருந்த உறவை வெட்டிக் கொண்டு ஊhரசஉh ழக நுபெடயனெ என்ற தனி தேவாலயத்தை உருவாக்கினான். பின்னர் அடுத்தடுத்து ஐந்து மனைவியர்களை மணந்து கொண்டவன். இதில் இரண்டு மனைவியர்களது தலைகளை சோரம் போனார்கள் என்ற குற்றச் சாட்டில் வெட்டியவன். அவனது அமைச்சரான குறம்வெல் தலையையும் சீவியவன். இவனது மகளே புகழ் பெற்ற முதலாவது எலிசபெத் மகாராணியாவார்.
 
தமிழர்கள் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு நாகரிகம் படைத்த இனமாக இருந்தார்கள் என்பதும்இ ஆங்கிலேயர்கள் ஒரு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதற்கும் மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகளும் சான்று கூறுகின்றன.

——————————————————————————————————————–
 

  
கியூபா பயணக் கட்டுரை (49)
ஒரு பருந்தின் நிழலில்
பிளாட்டோவின் இலக்கியல் குடியரசு!

ஒரு இலக்கியல் (இலட்சிய) அரசு அல்லது குடியரசு (An ideal state of Republic)  பற்றிக் கற்பனை பண்ணுவதை கிரேக்கத்தில் ருவழியைn சிந்தனை என்று வர்ணிப்பார்கள். உத்தோப்பியன் என்ற சொல்லுக்கு “இடம் இல்லை அல்லது வெற்றிடம்” என்பது பொருளாகும்.
 
பிளாட்டோ (சோக்கிறட்டிஸ் மூலம்) மக்களை அவர்களது இயற்கையான புத்திசாலித்தனம்இ பலம்இ வீரம் இவற்றின் அடிப்படையில் பகுக்கிறார். அதிகம் புத்திசாலித்தனம்இ பலம்இ வீரம் இல்லாதவர்கள் வேளாண்மைஇ கொற்தொழில்இ கட்டிட நிர்மாணம் போன்றவற்றிற்கு தகுதியானவர்கள். ஓரளவு புத்திசாலித்தனம்இ பலம்இ மிகுந்த வீரம் உடையவர்கள் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ளத் தகுதியானவர்கள். மிகவும் புத்திசாலித்தனம்இ வீரம் படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்குப் பொருத்தமானவர்கள்.
 
பிளாட்டோவின் இலக்கியல் அரசு மேற்குடி அல்லது உயர்குடி ஆட்சியாகும் (Aristocracy) அதாவது “திறமைசாலிகள் கோலோச்சுகிற ஆட்சி.” ஆக மக்கள் சமூகத்தை பிளாட்டோ மூன்று வகுப்பினராகப் பிரிக்கிறார். கீழ் மட்டத்தில் பெரும்பான்மைப் பலம் கொண்ட தொழிலாளர்கள்இ விவசாயிகள் (பொதுமக்கள்). இடை மட்டத்தில் பாதுகாப்புத் தொழிலில் இருக்கும் படைவீரர்கள். ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாகக் கையில் வைத்திருக்கும்மிகச் சிறுபான்மையான தத்துவவாதிகள்.
 
பிளாட்டோவின் இலக்கியல் அரசில் வீரம் படையினரோடும்இ புத்திசாலித்தனம் அல்லது மெய்யறிவு தத்துவவாதிகளோடும் உடலுழைப்பு பொதுமக்களோடும் தொடர்பு படுத்தப்படுகிறது.
 
ஒரு விதத்தில் பிளாட்டோவின் சிந்தனை ஆரியரின் நால்வர்ண தர்மத்தோடு ஒத்துப் போவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. உழைப்போர் (சூத்திரர்)இ படையினர் (சத்திரியர்) மற்றும் தத்துவாதிகள் (பிராமணர்கள்) இருசாராருக்கும் அடங்கி நடக்க வேண்டும். படையினர் தத்துவதாதிகளது சொற்படி நடப்பது மட்டுமல்ல அப்படி நடந்து கொள்வதையிட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதும்இ சூத்திரர் (உழைப்பாளர்கள்) ஏனைய பிராமணர்இ சத்திரியர் (வீரர்கள்)இ வைசிகருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதும்இ வைசிகர் ஏனைய இரு வர்ணாத்தாருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும்இ சத்திரியர் பிராமணரது சொற்கேட்டு ஆட்சி செய்ய வேண்டும் என்பதும் நால்வர்ண தர்மத்தை (வைசிகர் நீங்கலாக) ஒத்திருக்கிறது.
 
பிளாட்டோவின் இலக்கியல் குடியரசு இன்றைய காலத்துக்கு ஒத்து வருமா? இன்றைய அமெரிக்க அல்லது இந்திய மக்களாட்சிபற்றி பிளாட்டோ என்ன நினைத்திருப்பார்?
 
பிளாட்டோ மக்கள் சமூகத்தை மூன்று படிகளாகப் பிரித்திருப்பது சரியா என்பது விவாதத்துக்குரியது. இன்றைய சமூகத்திலும் கீழ்மட்ட, மத்திய, மேல்மட்டப் பிரிவுகள் இருப்பது கண்கூடு. ஆள்வோர் பெரும்பாலும் பணம் படைத்த உயர்மட்டத்தில் இருந்தே வருகிறார்கள். ஒரு வித்தியாசம். கீழ் இருப்போர் எப்போதும் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டியதில்லை. கடும் உழைப்புஇ கொஞ்சம் அதிட்டம் இருந்தால் அவர்கள் மத்திய, உயர்மட்டத்துக்கு உயர வாய்ப்புண்டு. ஆனால்; இந்த வாய்ப்பு எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் மிகச்சிறுபான்மையினரே அப்படி வாழ்க்கையில் உயர்வதைப் பார்க்கிறோம்.
 
மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் பிள்ளை படித்து டாக்டராக வரும் வாய்ப்பைவிட ஒரு ஆசிரியராக வரும் வாய்ப்புத்தான் அதிகம். ஆனால்இ ஆசிரியரின் பிள்ளை டாக்டராக வரும் வாய்ப்பு இருக்கிறது. முதல் தலைமுறை உழைப்பாளர்களாகவும்இ இரண்டாவது தலைமுறை மத்திய வகுப்பாராகவும் மூன்றாவது தலைமுறை முதலாளிகளாகவும்மாற இன்றைய சமூக ஒழுங்கு ஓரளவு இடம்கொடுக்கிறது. இருந்தும் அதனை விதியாகக் கொள்ளாது விதிவிலக்கு எனக் கொள்ளப்படுவதே சிறந்தது. இப்படியான சமூக அசைவை (social mobility) நாம் மேற்குலக சமூக நடைமுறையில் காணக் கூடியதாக இருக்கிறது.
 
மேற்கு நாடுகளில் பொதுவுடமைத் தத்துவம் தலைதூக்காமல் போனதற்குக் காரணம் ஒவ்வொரு தொழிலாளியும் நாளை முதலாளியாக வந்து விடலாம் எனக் கனவு காண்பதுதான்!
 
ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது சமூக ஏணியில் கீழோர் கீழோராகவும், மேலோர் மேலோராகவும் இருப்பதையே காண முடிகிறது. முதலாளித்துவ சமூகத்தில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதும் ஏழை மேலும் ஏழையாவதே நியதியாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் குபேரர்களும் கோவணாண்டிகளும், கோபுரங்களும் குடிசைகளும் பெரும்பான்மை -சிறுபான்மையாக அருகருகே இருப்பதைக் காணலாம்!
 
எது எப்படி இருப்பினும் ஒரு இலக்கியல் குடியரசுபற்றி மிக ஆழமாகவும்இ விரிவாகவும்இ நுட்பமாகவும் 2இ300 ஆண்டுகளுக்கு முன்னர் பிளாட்டோ (சோக்கிறட்டிஸ்) சிந்தித்து அதையிட்டு விவாதித்திருப்பது போற்றத் தக்கது.
 
நமது முன்னோர்கள் இப்படி எல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக எண்ணப்படும் திருவள்ளுவர் ஒருவரே முடியாட்சி அரசியல்பற்றி சிந்தித்து அதுபற்றி ஓரளவு விரிவாக எழுதியிருக்கிறார். பொருட்பாலில் அரசியலின் கீழும் அங்க இயலின் கீழும் இறைமாட்சி, அமைச்சு, சொல்வன்மை, வினைத் தூய்மை, வினைத் திட்பம், தூது, மன்னரைச் சார்ந்திருத்தல், நாடு, அரண், படைமாட்சி, படைச்செருக்கு, பகைமாட்சி, பகைத்திறம், உட்பகை பற்றித் தனித்தனி அதிகாரம் படைத்துள்ளார்.
 
பிளாட்டோ இந்த உலகத்தைப் பற்றியும் அதன் இயக்கத்தைப்பற்றியும் ஆழ்ந்து சிந்தித்தார். அவரது சிந்தனையின்படி எல்லாப் பொருட்களுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது என்பது அவர் துணிபு. எடுத்துக் காட்டாக ஒரு குதிரைக்கு ஒரு வடிவம் இருக்கிறது. குதிரைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டாலும் அதன் வடிவம் மாறுவதில்லை (ஒரு குதிரை 50வது மாடி வீட்டில் இருந்து விழுந்தால் அப்போது அது குதிரையாக இருக்காது என்றாலும் வடிவம் மாறாது). ஏன் குதிரைகள் இந்த உலகத்தில் இருந்து ஒழிந்து போனாலும் அதன் வடிவம் மாறாது.
 
பிளாட்டோ இந்த உலகத்தை இரண்டு பகுதியாகப் பிரித்தார். ஒன்று நாம் காணும் உலகம். மற்றது புலன்களுக்குத் தென்படாத உலகம். காணும் உலகத்தைப்பற்றி நாங்கள் ஒரு அபிப்பிராயத்தை (Opinion) வைத்திருக்கலாம். காணா உலகத்தைப்பற்றி நாங்கள் அறிவினால் அறிந்து கொள்ளலாம்.
 
காணும் உலகம் அல்லது மாறும் உலகத்தை மேலும் இரண்டாகப் பகுக்கலாம். கீழ்ப்பகுதி நிழல், பிரதிபிம்ப,ம், ஓவியம், கவிதை போன்றவற்றை உள்ளடக்கிய “மாயை” (illusion). மேல்ப் பகுதி மாறும் பொருட்கள்பற்றிய அறிவு (எடுத்துக் காட்டாகக் குதிரை) “நம்பிக்கை” (belief). நம்பிக்கை சிலசமயம் அல்லது பெரும்பாலும் சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சில வேளைகளில் அது பிழையாக (காணும் உலகத்தில் பொருட்கள் மாறுவதால்) இருக்காலாம். நம்பிக்கை நடைமுறைச் சாத்தியமானது. அது வாழ்க்கைக்கு நம்பும்படியான வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால்> நிசம் என்று சொல்லும் அளவுக்கு இருக்காது.
 
மேல்ப்பகுதி கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளப்படும் அறிவு (எடுத்துக் காட்டு கணக்கியல் உண்மைகள்) மற்றது கூர்மதி.
 
பிளாட்டோ ஆன்மாபற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஆன்மாவை மூன்றாகப் பிரிக்கிறார். அவை மூன்றுவிதமான நலன்களோடுஇ மூன்றுவித அறங்களோடு. மூன்றுவித ஆளுமையோடு சம்பந்தப்பட்டுள்ளது.

பிளாட்டோவின் இலட்சிய நிலையில் ஆன்மாவின் மூன்று பகுதிகளுடன் தொடர்புடைய மூன்று முக்கிய வகுப்புகள் உள்ளன. தத்துவஞானிகளான பாதுகாவலர்கள் நகரத்தை ஆளுகின்றனர். துணைப்படையினர் அதைப் பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் குறைந்த வகுப்பில் உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்இ கைவினைஞர்கள்இ முதலியோர்) உள்ளனர்.

பிளாட்டோ ஆன்மாபற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஆன்மாவை மூன்றாகப் பிரிக்கிறார். அவை மூன்றுவிதமான நலன்களோடுஇ மூன்றுவித அறங்களோடுஇ மூன்றுவித ஆளுமையோடு சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றைப் பின்வரும் அட்டவணை மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அட்டவணை

ஆன்மாநலன்கள்வகுப்பு        குணம் 
புத்திஞானம்தத்துவவாதிகள் மெய்யறிவு நீதி
ஆவிபெருமிதம்படைவீரர்கள்ஆண்மை 
அவாஇன்பங்கள்உழைப்போர்நிதானம் 

——————————————————————————————————————–
 

கியூபா பயணக் கட்டுரை (50)
ஒரு பருந்தின் நிழலில்
மானிட வரலாற்றில் மிகப் பெரிய சிந்தனையாளர் அரிஸ்தோட்டல்!

 

அரிஸ்தோட்டல் (கிமு 384 – 322) தனது ஆசான் பிளாட்டோவினால் “அறிவுத்திறம்” படைத்தவர் என்று அழைக்கப்பட்டவர். உண்மையில் அரிஸ்தோட்டல் கிரேக்க தத்துவவாதிகளுக்குள் தலை சிறந்த சிந்தனையாளர். ஏன் முழு மானிட வரலாற்றில் அவர்தான் மிகப் பெரிய சிந்தனையாளராக எனப் போற்றப்படுகிறார்.
 
அப்போது மசிடோனியா மன்னராக இருந்த பிலிப் தனது 13 அகவை நிரம்பிய மகன் அலெக்சாந்தருக்குப் பாடம்சொல்லிக் கொடுக்க அரிஸ்தோட்டலையே நியமித்தான். ஐந்தாண்டுகள் அலெக்சாந்தர் அரிஸ்தோட்டலிடம் பாடம் கற்றான். மன்னன் பிலிப் இறந்தபோது அலெக்சாந்தர் ஆட்சிபீடம் ஏறினான்.
 
அரிஸ்தோட்டல் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? ஏறத்தாழ ஆயிரம். ஆனால்இ இவற்றுள் பெரும்பகுதி சங்க நூல்கள் அழிந்துபட்டது போல அழிந்துபட்டு விட்டன. ஆனால்இ அவரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய நூல்கள் காலவெள்ளத்தில் அள்ளுண்டு போகாது தப்பிவிட்டன!
அரிஸ்தோட்டலின்
 
அரிஸ்தோட்டலின் நூல்கள் முழுதும் முதன் முறையாக கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த அன்றோனிக்கஸ் என்பவரால் (Andronicus of Rhodes) “பிரசுரம்” செய்யப்பட்டது. அரிஸ்தோட்டலின் நுண்மான்நுழைபுலத்துக்கு (பல நூல்கள் கற்பதால் வரும் அறிவு) அவர் எழுதிய நூல்களும் அவற்றின் பாடுபொருளும் சான்று பகர்கின்றன.
 
(உ) ஆன்மாபற்றிய விசாரணை ( மூன்று புத்தகங்கள்)
 
(3) நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics)
 
அரிஸ்தோட்டலின் நுண்பொருள் கோட்பாட்டியல்பற்றிப் 14 புத்தகங்களாக வகைப்படுத்துப்பட்டுள்ளன. இவையாவும் அரிஸ்தோட்டல் மறைந்த பின் தொகுக்கப் பட்டவையாகும்.
   
(4) ஒழுக்கவியல் மற்றும் அரசியல் (Ethics and Politics)
 
(அ) நிச்சோமச்சியான் ஒழுக்கவியல் (Nicomachean Ethics)
(ஆ) யுடெமியன் ஒழுக்கவியல் (eudemian Ethics)
(ஈ) மாபெரும் ஒழுக்கவியல்
(உ) அரசியல் (முடிவு பெறாத எட்டுப் புத்தகங்கள்)
 
(5) வெற்றுரை மற்றும் செய்யுட்கள் (Rhetoric and Poetry)
 
(அ) அணியிலக்கணம் (மூன்று புத்தகங்கள்)
(ஆ) செய்யுட்கள் (இரண்டு புத்தகங்கள்)
 
இவை அரிஸ்தோட்டல் எழுதிய புத்தகங்களின் ஒரு பகுதியே. இதனைப் பட்டியல் இட்டுக் காட்டுவதற்குக் காரணம் அவரது நுண்மாண்நுழைபுலத்தை வெளிக்காட்டவே.
 
அரிஸ்தோட்டலின் கூற்றுப்படி சுத்தமான அறிவுக்குரிய சிறந்த வழி ஒன்றுக்கு ஒன்று தொடர்படைய முக்கூற்று முடிவு (ளுலடடழபளைஅ) வழியாகும். அதாவது முதல் இரண்டு கூற்றின் (pசநஅளைநள) அடிப்படையில் மூன்றாவது உண்மையை அல்லது முடிவை மனம் கண்டுபிடிப்பதாகும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
எல்லா மனிதரும் (கருத்துப் படிவம்) இறந்து படுபவர்களே (தர்க்கப் பயனிலை)
 
சோக்கிறட்டிஸ் (எழுவாய்) ஒரு மனிதன் (கருத்துப் படிவம்) எனவே சோக்கிறட்டிஸ் (எழுவாய்) இறந்துபடுபவரே (தர்க்கப் பயனிலை)
 
முடிவு முதல் இரண்டு கூற்றின் உண்மையைப் பொறுத்திருக்கிறது. முதல் இரண்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முடிவும் உண்மையாக இருக்கும். அப்படியில்லாத போது முடிவு பொருளற்றதாக இருக்கும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
காகம் ஒரு பறவை
காகம் கருப்பு
எனவே எல்லாப் பறவைகளும் கருப்பு
 
தருக்கவியலில் இதனை Ab-initio  என்று கூறுவார்கள். அதாவது தொடக்க முதலே பொருளற்ற கூற்று ஆகும்.   
 
ஒழுக்கவியல் என்பது மனிதன் இயற்கை நியதிப்படி எதனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் பற்றியும், அவனது மகிழ்ச்சி எந்த மூலத்தில் இருந்து வருகிறது என்பது பற்றியும் சொல்வதாகும்.
 
மனிதன் பகுத்தறிவு படைத்த விலங்கு. எனவே அறிவைத் தேடிக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். அரிஸ்தோட்டலின் எண்ணப்படி ஒழுக்கம் வாழ்வின் முடிவு அல்ல. முடிவுக்கு அது ஒரு வழி மட்டுமே. மனிதனது செயல்கள் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
 
அரிஸ்தோட்டல் அரசியலைப்பற்றிச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதனது குறிக்கோள் ஒழுக்கத்தோடு வாழுதல் ஆகும். மனிதன் ஒரு அரசியல் விலங்கு என்று வரைவிலக்கணம் சொல்கிறோம் அல்லவா? அதற்குக் காரணம் அவன் இயற்கையாகவே அரசோடு பிணைக்கப்பட்டுள்ளான். அது போலவே மனிதன் இயற்கையாகவே தன் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாழ விரும்புகிறான். பின்னர் மற்ற மனிதர்களோடு கூடி ஒரு சமூகமாக வாழ விரும்புகிறான்.
 
குடும்பம் மனிதனுக்கு இயற்கையானது. தனியுடமை குடும்பத்திற்கு இன்றியமையாதது. (இங்கே அரிஸ் தோட்டல் பிளாட்டோ மற்றும் சோக்கிறட்டிசோடு முரண்படுவதைப் பார்க்கலாம். இவர்கள் குடும்பம் பொதுவுடமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்). அரிஸ்தோட்;டலின் குடும்பம் பின்வருமாறு வகுக்கப்பட்டது.
 
(அ) குழந்தைகள்
(ஆ) மனைவி
(இ) சொத்துக்கள்
(ஈ) அடிமைகள்
 
குடும்பத்தின் தலைவன் குடும்ப விவகாரங்களைக் கவனிக்கிறான். குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அவன் வழிகாட்டியாக இருக்கிறான். சொத்துக்கள் மூலம் மனிதன் இலாபத்தை ஈட்ட வேண்டும். சொத்துக்கள் பயன்தர அவன் உயிரற்றஇ உயிருள்ள இரண்டையும் பயன் படுத்துகிறான். அடிமைகள் உயிருள்ளவை. அரிஸ்தோட்டல் கால கிரேக்கத்தில் உடல் உழைப்பு இழிவாகக் கருதப்பட்டது (வருணாச்சிர தர்மத்தின் படியும் உழவர்கள்இ கைவினையாளர்கள் போன்ற உடல் உழைப்பார்கள் இழிவாகக் கருதப்பட்டார்கள்).
 
எனவே அரிஸ்தோட்டல் சமூகத்தை உயர்ந்தோர்இ அடிமைகள் என இரண்டாகப் பகுத்தார். இதனால் அரிஸ்தோட்டல் அடிமை முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டும் அல்ல கல்வி கற்கும் உரிமை உயர்ந்தோருக்கு மட்டும் உண்டென்பதை ஏற்றுக் கொள்கிறார். அடிமைகளுக்கு அது மறுக்கப்பட்டதை அவர் எதிர்க்கவில்லை.
 
அரிஸ்தோட்டலின் சமகாலத்தவாரான தொல்காப்பியரும் சமூகத்தை அந்தணர்இ அரசர்இ வணிகர்இ வேளாளர் என நான்குவகையாக (இந்தவகை வகுப்பு பிற்காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருக்கல் எனக் கருதப்படுகிறது) வகுக்கிறார். மேலும் தொழில் அடிப்படையில் உயர்ந்தோர் இழிந்தோர் என மக்களை வகைப்படுத்துகிறார். உழவுத்தொழில் செய்வோர் உயர்ந்தோராகவும் உப்பு விற்கும் உமணர் இழிந்தோராகவும் கருதப்பட்டார்கள். ஆனால்இ கல்வி இழிந்தோர்க்கு மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 
சங்க காலப் புலவர்களின் எண்ணிக்கை ஐந்நூற்றுக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. இவர்களில் அரசர் சிலர். வணிகர் சிலர். ஆசிரியர் சிலர். குறவர் குலத்தில் பிறந்த குறியெயினியும்இ இளவெயினியும்இ குயவர் குலத்தில் பிறந்த வெண்ணிக் குயத்தியும் சிறந்த பெண் புலவர்களாக விளங்கினார்கள்.
 
இது சங்ககாலத்தில் எல்லோரும் பால் வேறுபாடு இல்லாது, தொழில் வேறுபாடு இல்லாது கல்வி கற்றதைக் காட்டுகிறது. அது மட்டும் அல்லாது அதே காலகட்டத்தில் கிரேக்கம் உட்பட வேறெந்த நாட்டிலும் இத்துனைப் புலவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால்இ அவர்கள் படைத்தது இலக்கியம், இலக்கணம் மட்டுமே. கிரேக்க தத்துவவாதிகள் போல் அரசு பற்றியும் ஏரணம் (தர்க்கம்) பற்றியும் இயற்பியல் பற்றியும் கணக்கியல் பற்றியும் வானியல்பற்றியும் தாவரங்கள் விலங்குகள் பற்றியும் தனிப் பாடல்கள் தனி நூல்கள் எழுதவில்லை. ஒருவேளை எழுதியிருந்தாலும் அவை இன்று கிடைத்திலது.
 
நான் முன்னர் எழுதியவாறு தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர் ஒருவரே சோக்கிறட்டிஸ் பிளாட்டோ, அரிஸ்தோட்டல் போன்ற தத்துவவாதிகளுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் சிந்தனையாளராகத் திகழ்கிறார்.
 
அரிஸ்தோட்டலுக்குப் பின்னரே தத்துவத்தில் இருந்து அறிவியல் தனி இயலாகப் பரிணமித்தது. அரிஸ்தோட்டலுக்குப் பின் தோன்றியவர்கள் அறிவியல் அடிப்படையில் சிந்தித்துஇ ஆய்வு செய்துஇ அறிவியலை வளர்த்தார்கள்.
 
அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் பிற்காலத்தில் கிரேகத்திற்கு அப்பால் உள்ள ஐரோப்பியஇ அரபு நாடுகளுக்குப் பரவி அந்த நாடுகளின் சிந்தனை வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக கிறித்தவ சிந்தனைகளுக்கு அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் உந்துசக்தியாக அமைந்தன.
 
கிரேக்கர்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகம்இ சொர்க்கம்இ ஆன்மாஇ இயற்கை இவைபற்றி எவ்வளவு ஆழமாகச் சிந்தித்தார்கள் என்பதைக் காட்டவே தத்துவ உலகின் மும்மூர்த்திகளான சோக்கிரட்டிஸ், பிளாட்டோ, அரிஸ்தோட்டல் பற்றி சுருக்கமாக எழுதினேன்.

கியூபா பயணக் கட்டுரை (50) 
ஒரு பருந்தின் நிழலில் 
மானிட வரலாற்றில் மிகப் பெரிய சிந்தனையாளர் அரிஸ்தோட்டல்!

 
அரிஸ்தோட்டல் (கிமு 384 – 322) தனது ஆசான் பிளாட்டோவினால் “அறிவுத்திறம்” படைத்தவர் என்று அழைக்கப்பட்டவர். உண்மையில் அரிஸ்தோட்டல் கிரேக்க தத்துவவாதிகளுக்குள் தலை சிறந்த சிந்தனையாளர். ஏன் முழு மானிட வரலாற்றில் அவர்தான் மிகப் பெரிய சிந்தனையாளராக எனப் போற்றப்படுகிறார்.
 
அப்போது மசிடோனியா மன்னராக இருந்த பிலிப் தனது 13 அகவை நிரம்பிய மகன் அலெக்சாந்தருக்குப் பாடம்சொல்லிக் கொடுக்க அரிஸ்தோட்டலையே நியமித்தான். ஐந்தாண்டுகள் அலெக்சாந்தர் அரிஸ்தோட்டலிடம் பாடம் கற்றான். மன்னன் பிலிப் இறந்தபோது அலெக்சாந்தர் ஆட்சிபீடம் ஏறினான்.
 
அரிஸ்தோட்டல் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? ஏறத்தாழ ஆயிரம். ஆனால்இ இவற்றுள் பெரும்பகுதி சங்க நூல்கள் அழிந்துபட்டது போல அழிந்துபட்டு விட்டன. ஆனால்இ அவரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய நூல்கள் காலவெள்ளத்தில் அள்ளுண்டு போகாது தப்பிவிட்டன!
அரிஸ்தோட்டலின்
 
அரிஸ்தோட்டலின் நூல்கள் முழுதும் முதன் முறையாக கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்;ந்த அன்றோனிக்கஸ் என்பவரால் (யுனெவசழniஉரள ழக சுhழனநள) “பிரசுரம்” செய்யப்பட்டது. அரிஸ்தோட்டலின் நுண்மான்நுழைபுலத்துக்கு (பல நூல்கள் கற்பதால் வரும் அறிவு) அவர் எழுதிய நூல்களும் அவற்றின் பாடுபொருளும் சான்று பகர்கின்றன.

இவை அரிஸ்தோட்டல் எழுதிய புத்தகங்களின் ஒரு பகுதியே. இதனைப் பட்டியல் இட்டுக் காட்டுவதற்குக் காரணம் அவரது நுண்மாண்நுழைபுலத்தை வெளிக்காட்டவே.
 
அரிஸ்தோட்டலின் கூற்றுப்படி சுத்தமான அறிவுக்குரிய சிறந்த வழி ஒன்றுக்கு ஒன்று தொடர்படைய முக்கூற்று முடிவு (ளுலடடழபளைஅ) வழியாகும். அதாவது முதல் இரண்டு கூற்றின் (pசநஅளைநளகாக) அடிப்படையில் மூன்றாவது உண்மையை அல்லது முடிவை மனம் கண்டுபிடிப்பதாகும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
எல்லா மனிதரும் (கருத்துப் படிவம்) இறந்து படுபவர்களே (தர்க்கப் பயனிலை)
 
சோக்கிறட்டிஸ் (எழுவாய்) ஒரு மனிதன் (கருத்துப் படிவம்) எனவே சோக்கிறட்டிஸ் (எழுவாய்) இறந்துபடுபவரே (தர்க்கப் பயனிலை)
 
முடிவு முதல் இரண்டு கூற்றின் உண்மையைப் பொறுத்திருக்கிறது. முதல் இரண்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முடிவும் உண்மையாக இருக்கும். அப்படியில்லாத போது முடிவு பொருளற்றதாக இருக்கும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
காகம் ஒரு பறவை
காகம் கருப்பு
எனவே எல்லாப் பறவைகளும் கருப்பு
 
தருக்கவியலில் இதனை ab initio என்று கூறுவார்கள். அதாவது தொடக்க முதலே பொருளற்ற கூற்று ஆகும்.   
 
ஒழுக்கவியல் என்பது மனிதன் இயற்கை நியதிப்படி எதனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் பற்றியும்இ அவனது மகிழ்ச்சி எந்த மூலத்தில் இருந்து வருகிறது என்பது பற்றியும் சொல்வதாகும்.
 
மனிதன் பகுத்தறிவு படைத்த விலங்கு. எனவே அறிவைத் தேடிக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். அரிஸ்தோட்டலின் எண்ணப்படி ஒழுக்கம் வாழ்வின் முடிவு அல்ல. முடிவுக்கு அது ஒரு வழி மட்டுமே. மனிதனது செயல்கள் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
 
அரிஸ்தோட்டல் அரசியலைப்பற்றிச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதனது குறிக்கோள் ஒழுக்கத்தோடு வாழுதல் ஆகும். மனிதன் ஒரு அரசியல் விலங்கு என்று வரைவிலக்கணம் சொல்கிறோம் அல்லவா? அதற்குக் காரணம் அவன் இயற்கையாகவே அரசோடு பிணைக்கப்பட்டுள்ளான். அது போலவே மனிதன் இயற்கையாகவே தன் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாழ விரும்புகிறான். பின்னர் மற்ற மனிதர்களோடு கூடி ஒரு சமூகமாக வாழ விரும்புகிறான்.
 
குடும்பம் மனிதனுக்கு இயற்கையானது. தனியுடமை குடும்பத்திற்கு இன்றியமையாதது. (இங்கே அரிஸ் தோட்டல் பிளாட்டோ மற்றும் சோக்கிறட்டிசோடு முரண்படுவதைப் பார்க்கலாம். இவர்கள் குடும்பம் பொதுவுடமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்). அரிஸ்தோட்;டலின் குடும்பம் பின்வருமாறு வகுக்கப்பட்டது.
 
(அ) குழந்தைகள்
(ஆ) மனைவி
(இ) சொத்துக்கள்
(ஈ) அடிமைகள்
 
குடும்பத்தின் தலைவன் குடும்ப விவகாரங்களைக் கவனிக்கிறான். குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அவன் வழிகாட்டியாக இருக்கிறான். சொத்துக்கள் மூலம் மனிதன் இலாபத்தை ஈட்ட வேண்டும். சொத்துக்கள் பயன்தர அவன் உயிரற்றஇ உயிருள்ள இரண்டையும் பயன் படுத்துகிறான். அடிமைகள் உயிருள்ளவை. அரிஸ்தோட்டல் கால கிரேக்கத்தில் உடல் உழைப்பு இழிவாகக் கருதப்பட்டது (வருணாச்சிர தர்மத்தின் படியும் உழவர்கள்இ கைவினையாளர்கள் போன்ற உடல் உழைப்பார்கள் இழிவாகக் கருதப்பட்டார்கள்).
 
எனவே அரிஸ்தோட்டல் சமூகத்தை உயர்ந்தோர்இ அடிமைகள் என இரண்டாகப் பகுத்தார். இதனால் அரிஸ்தோட்டல் அடிமை முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டும் அல்ல கல்வி கற்கும் உரிமை உயர்ந்தோருக்கு மட்டும் உண்டென்பதை ஏற்றுக் கொள்கிறார். அடிமைகளுக்கு அது மறுக்கப்பட்டதை அவர் எதிர்க்கவில்லை.
 
அரிஸ்தோட்டலின் சமகாலத்தவாரான தொல்காப்பியரும் சமூகத்தை அந்தணர்இ அரசர்இ வணிகர்இ வேளாளர் என நான்குவகையாக (இந்தவகை வகுப்பு பிற்காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருக்கல் எனக் கருதப்படுகிறது) வகுக்கிறார். மேலும் தொழில் அடிப்படையில் உயர்ந்தோர் இழிந்தோர் என மக்களை வகைப்படுத்துகிறார். உழவுத்தொழில் செய்வோர் உயர்ந்தோராகவும் உப்பு விற்கும் உமணர் இழிந்தோராகவும் கருதப்பட்டார்கள். ஆனால்இ கல்வி இழிந்தோர்க்கு மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 
சங்க காலப் புலவர்களின் எண்ணிக்கை ஐந்நூற்றுக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. இவர்களில் அரசர் சிலர். வணிகர் சிலர். ஆசிரியர் சிலர். குறவர் குலத்தில் பிறந்த குறியெயினியும்இ இளவெயினியும்இ குயவர் குலத்தில் பிறந்த வெண்ணிக் குயத்தியும் சிறந்த பெண் புலவர்களாக விளங்கினார்கள்.
 
இது சங்ககாலத்தில் எல்லோரும் பால் வேறுபாடு இல்லாதுஇ தொழில் வேறுபாடு இல்லாது கல்வி கற்றதைக் காட்டுகிறது. அது மட்டும் அல்லாது அதே காலகட்டத்தில் கிரேக்கம் உட்பட வேறெந்த நாட்டிலும் இத்துனைப் புலவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால்இ அவர்கள் படைத்தது இலக்கியம்இ இலக்கணம் மட்டுமே. கிரேக்க தத்துவவாதிகள் போல் அரசு பற்றியும்இ ஏரணம் (தர்க்கம்) பற்றியும்இ இயற்பியல் பற்றியும்இ கணக்கியல் பற்றியும்இ வானியல்பற்றியும்இ தாவரங்கள்இ விலங்குகள் பற்றியும் தனிப் பாடல்கள்இ தனி நூல்கள் எழுதவில்லை. ஒருவேளை எழுதியிருந்தாலும் அவை இன்று கிடைத்திலது.
 
நான் முன்னர் எழுதியவாறு தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர் ஒருவரே சோக்கிறட்டிஸ்இ பிளாட்டோஇ அரிஸ்தோட்டல் போன்ற தத்துவவாதிகளுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் சிந்தனையாளராகத் திகழ்கிறார்.
 
அரிஸ்தோட்டலுக்குப் பின்னரே தத்துவத்தில் இருந்து அறிவியல் தனி இயலாகப் பரிணமித்தது. அரிஸ்தோட்டலுக்குப் பின் தோன்றியவர்கள் அறிவியல் அடிப்படையில் சிந்தித்துஇ ஆய்வு செய்துஇ அறிவியலை வளர்த்தார்கள்.
 
அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் பிற்காலத்தில் கிரேகத்திற்கு அப்பால் உள்ள ஐரோப்பியஇ அரபு நாடுகளுக்குப் பரவி அந்த நாடுகளின் சிந்தனை வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக கிறித்தவ சிந்தனைகளுக்கு அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் உந்துசக்தியாக அமைந்தன.
 
கிரேக்கர்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகம்இ சொர்க்கம்இ ஆன்மாஇ இயற்கை இவைபற்றி எவ்வளவு ஆழமாகச் சிந்தித்தார்கள் என்பதைக் காட்டவே தத்துவ உலகின் மும்மூர்த்திகளான சோக்கிரட்டிஸ்இ பிளாட்டோஇ அரிஸ்தோட்டல் பற்றி சுருக்கமாக எழுதினேன்.

கியூபா பயணக் கட்டுரை (41)
ஒரு பருந்தின் நிழலில்!
உலகின் தலைவிதியை மாற்றிய பயணம்
கொலம்பசின் நண்பர்கள் சன்மானத்தை குறைக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். பேராசை பெரும் நட்டம். சன்மானத்தை குறைக்காவிட்டால் கொலம்பஸ் எல்லாவற்றையும் இழந்து ஒட்டாண்டியாகப் போக  நேரிடலாம் என்று எச்சரித்தார்கள். ஆனால் கொலம்பஸ் கீழிறங்கி வரத் தயாராக இல்லை. “என்னால் எதைச் செய்ய முடியும்ää எதனைச் சாதிக்க முடியும்  என்பது எனக்குத் தெரியும். அதுமட்டும் அல்லாது இசுப்பானிய நாட்டு அரசருக்கும் அரசிக்கும் என்னால் எதையெதைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இசுப்பானிய அரசரும் அரசியும் உதவி செய்ய மறுத்தால் அல்லது முடியாதென்றால் நான் வேறு நாட்டுஅரசர்களது உதவியை நாடுவேன்” என்றார். 
“சரி அப்படியே போய்த் தொலை” என்று அரசியாரும் அவரது ஆலோசகர்களும் சொன்னார்கள். கொலம்பஸ் தனது ஊர்  திரும்ப முடிவு செய்து கோவேறு கழுதையில் ஏறிப் பயணப்பட்டார். இசுப்பானிய நாடு தன்னைக்கைவிட்ட நிலையில் பிரான்சு நாட்டு அரசரை மீண்டும் அணுகி அவரது ஆதரவை கேட்டுப் பெறுவதென கொலம்பஸ் தனக்குள் முடிவு செய்தார்.  Luis de Santagel.

நல்லகாலம் அரண்மனைக் கருவூலப் பொறுப்பாளராகராகக் கடமையாற்றிய  டுரளை னந ளுயவெ?பநட என்பவரும்ää வேறொரு அதிகாரியான ஞரiவெயnடைடய என்பவரும் கொலம்பசின் திட்டத்தினால்  இசுப்பானிய நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய புகழ், செல்வம், செல்வாக்கு இவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள். அவர்கள் இருவரும் அவற்றை இழக்க விரும்பவில்லை. இசுப்பானிய நாடு கொலம்பசைப் பயன்படுத்தா விட்டால்  இன்னொரு நாடு அவரைப் பயன்படுத்தி இசுப்பானிய நாட்டுக்கு வரவேண்டிய புகழையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தட்டிக் கொண்டு போய்விடும் என்று அந்த இரண்டு அதிகாரிகளும்  பயந்தார்கள். அப்படி நடக்கவிடக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.   

உடனே அவர்கள் ஓட்டமும் நடையுமாக இசுப்பெல்லா அரசியாரின் அந்தப் புரம் நோக்கி விரைந்தார்கள். அரசியாரிடம் கொலம்பசிற்கு சார்பாக   வாதாடினார்கள். “நீங்கள் கிறித்துவ நாடுகளது  பெரிய பேரரசியாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கொலம்பசின் கோரிக்கைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். கொலம்பஸ் இந்தப் பயணத் திட்டத்தை உருவாக்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டிருக்கிறார். அதனால்தான் அவர் சன்மானமாகக் கூடுதல் பங்கு கேட்கிறார். இசுப்பானியாவிற்குக் கிடைக்கக் கூடிய ஆதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்  கேட்கும் பங்கு மிகவும் சொற்பமானது. கிறனாடாவை மீட்பதற்கு சோனகரோடு நாங்கள் தொடுத்த யுத்தத்திற்கு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்திருக்கிறோம். யுத்தத்தினால் கருவூலம் ஏற்கனவே காலியாகி விட்டது.  கொலம்பஸ் ஒருவரால்தான் அதனை நிரப்ப முடியும்.   
இந்தியாவும் காதேயும் (ஊயவாயல) தங்கம்ää நவரத்தினங்களால்  நிரம்பி வழியும் நாடுகள்  என்று சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் திரட்டி கொலம்பஸ் கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து எங்களுக்குத் தருவார். எல்லாவற்றிற்கும் மேலாக கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நாடுகளில் உள்ளவர்கள் மத நம்பிக்கையீனர்கள் (hநயவாநn).  அவர்களை கொலம்பஸ் கிறித்துவ மதத்திற்கு மாற்ற நிச்சயம் உதவுவார். இசுப்பானியா சோனகரை யுத்தத்தில் வென்றுவிட்டது. அதேபோல் கொலம்பஸ் நாங்கள் காதேயை வெல்ல உதவி செய்வார்.”
அரண்மனை அதிகாரிகள் மிகவும் பவ்வியத்தோடும்ää பணிவோடும் அதே சமயம் ஆணித்தரமாகவும்  கொலம்பசுக்காக அரசியாரோடு கடுமையாக வாதாடினார்கள். பார்த்தார் அரசியார். தனது அரண்மனை அதிகாரிகள் எடுத்து வைத்த வாதத்தில் நிறைய வலு இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. புதிய நாடுகளைப் பிடிப்பதுää அந்த நாடுகளின் திரண்ட செல்வத்தை கைப்பற்றி இசுப்பானியாவிற்கு கொண்டு வருவதுää அதனால் இசுப்பானியாவிற்கு ஏற்படக்கூடிய  புகழ்ää மரியாதைää அந்தஸ்து அரசியாரது மனத்திரையில் திரைப்படம்போல் ஓடி அவரை மகிழ்வித்தது.  
“உடனே கொலம்பசை திரும்பி வருமாறு செய்தி அனுப்புங்கள். அரசியார் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் அவரிடம் சொல்லுங்கள். அரசர் பெர்டினன்ட் இதற்குச் சம்மதிக்காவிட்டால் பருவாயில்லை.  இப்படியான ஒரு சளைம யை அவர் எடுக்க விரும்பாவிட்டாலும் பாதகமில்லை. நான் சம்மதிப்பதாக கொலம்பசுக்குச் சொல்லுங்கள். கொலம்பஸ் பிரான்சு நாட்டுக்குள் நுளையு முன்னர் ஆளைப் பிடித்து வாருங்கள். ஊம் – சீக்கிரம்…” அரசியாரின் கட்டளைகள்  காற்றிலும் கூடிய வேகத்துடன் பிறப்பிக்கப்பட்டன.   

அரச காவல்காரன் சிறிதளவும் தாமதம் செய்யயாமல் வேகமாக ஓடக்கூடிய குதிரை ஒன்றில் பாய்ந்தேறி அதனை கொலம்பஸ் திரும்பிக் கொண்டிருக்கும் திக்கு நோக்கி தட்டிவிட்டான். குதிரை நாலுகால் பாய்ச்சலில் பறந்தது.  

கொலம்பசின் மனோநிலை அந்த நேரத்தில் பெரிதும் குழம்பிப் போயிருந்தது. தனது பயணத்திட்டம் இசுப்பானிய அரசியாரால் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது வேறு நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதைவிட வேறு வழியே இல்லை. இந்த அரசர்ää அரசிகளை நம்பவே கூடாது. 

அப்போது கொலம்பசுக்கு சிறு வயதில் தான்படித்த பைபிள் புத்தகத்தில் இருந்த  ஒரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. “அரசிகள் மீது நம்பிக்கை  வையாதே.”  கவலைää ஏமாற்றம்ää தனிமை கொலம்பசின் மனதை வாட்டியெடுத்தன. தனது கோவேறு கழுதையில் மெல்ல ஊர்ந்து  கொண்டிருந்தார். பிரான்சு நாட்டு மன்னனை அணுகலாம். ஆனால் அவன் என்ன சொல்வானோ? மீண்டும் அவனிடம் போவதில் ஏதாவது பலன் இருக்கிறதா” கொலம்பசின் மனதில் அவரை அறியாமல் விரக்தி தலைகாட்டியது.  ஆனால் தனக்குப் பின்னால் அதிட்டம் நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு வருவதை அவர் உணரவில்லை.  

அப்போது கொலம்பஸ் ஒரு சின்ன பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். அந்தப் பாலம் கிறனடாவில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தது. அதன் பெயர் டீசனைபந ழக Piழெள   என்பதாகும். குதிரையின் குளம்புச் சத்தம் இப்போது மிக அண்மையில் தெளிவாகக் கேட்டது. அந்தப் பாலம் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு பெயர்போனது.  கொலம்பசின்  பயணப் பையில்  அரசியார் கொடுத்த பணத்தில் கொஞ்சம் மிஞ்சி இருந்தது. அந்தப்  பணம்  முழுவதையும்  திருடரிடம் பறிகொடுக்கப் போகிறோமோ என்ற பயம் கொலம்பசை கவ்விக் கொண்டது.  
இப்போது குதிரையின் குளம்புச் சத்தம் மிகக் கிட்டிய தூரத்தில் கேட்டது. அதில் வந்த வீரன் உரத்த குரலில் பலமாகக் கத்தினான் ” திரும்பு! உடனே திரும்பு! அரசியார் உன்னை உடனடியாக கிறனடா  திரும்புமாறு கட்டளை இடுகிறார். அவர் உனது கோரிக்கைகள் அத்தனையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.”  

கொலம்பஸ் தயங்கினார். “அரசிகள் மீது நம்பிக்கை வையாதே.”என்ற  பைபிள் வாசகம்  அவரது மனதில் பட்டுத் தெறித்தது. அரசியாரின் பேச்சை நம்பி திரும்பிப் போனால் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதைபோல் தான் மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளாகக் கூடும் என்ற கவலை கொலம்பசைப் பீடித்தது. இருந்தும் திரும்பிச் சென்று  இன்னும் ஒருமுறை, கடைசி முறை முயற்சிக்க எண்ணினார். யார்  கண்டார்கள். இப்போது அரசியார் உண்மையில் மனம் மாறி இருக்கக் கூடும்!  
அந்தப் பாலத்தில் நடுவில் நின்று கொண்டு கிறனடாவுக்கு திரும்பிச்  செல்ல முடிவு  செய்தார். கிறனடாவை நோக்கி கோவேறு கழுதையைத் திருப்பினார். வந்த வழியில் கோவேறு கழுதை நடக்க ஆரம்பித்தது. 

அரசியாரைத்  திரும்பவும் கொலம்பஸ் சந்தித்தபோது அவரது கோரிக்கைகள் எல்லாவற்றையும் அரசியார் ஏற்றுக் கொண்டார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. மேலும் பல வாரங்கள் நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 1492ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ஒன்று உருவானது. அதில் அரசரும், அரசியாரும்ää கொலம்பசும் கையெழுத்திட்டார்கள்.  

இந்தியாவைக் கண்டு பிடித்தால் கொலம்பஸ் பயணம் செய்யும் கடல்கள்ää சமுத்திரங்கள் எல்லாவற்றிற்கும் கடற்படைத் தளபதியாக அவரது ஆயுள் பூராவும் இருப்பார். கண்டு பிடிக்கப்படும்  நாடுகள்ää தீவுகளை ஆளும் ஆளுநராகவம் கொலம்பஸ் நியமிக்கப்படுவார். அங்கிருந்து கொண்டுவரப்படும் தங்கம்ää முத்துää வைரம்ää வைடூரியம் மற்றும் திரவியங்கள் அனைத்திலும் கொலம்பசுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்படும். கப்பல் பயணச் செலவில் எட்டில் ஒரு பங்கை கொலம்பஸ் கொடுக்க வேண்டும். அதேபோல் அந்தப் பயணத்தால் வரும் இலாபத்தில் கொலம்பசுக்கு எட்டில் ஒரு பங்கு கொடுக்கப்படும்.    
பதினேழு ஆண்டுகாலமாக தொடர்சியாக எடுத்த விடாமுயற்சியின்  பயனை கொலம்பஸ் அறுவடை செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவைக் கண்டுபிடிக்க மேற்கு நோக்கிப் பயணம் செய்யும் கொலம்பசின் பயணத் திட்டத்தை ஒரு பயித்தியக்காரனின் ஏட்டுச் சுரக்காய் என்று எள்ளி நகையாடியவர்களின் வாயை அடைக்க ஒரு வாய்ப்பு அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.    
அரண்மனை அதிகாரிகள் கொலம்பசை ” டொன் கிறிஸ்தோபர் கொலம்பஸ்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். “மாண்புமிகு மேதகையீர்” (லுழரச நுஒஉநடடநnஉல)  “கடற்படைத் தளபதி” (யுனஅசையட) என அவர் விளிக்கப்பட்டார்.     
கொலம்பஸ் உடனே Pயடழள னந டய குசழவெ என்ற துறைமுகப் பட்டினத்துக்கு பயணப்பட்டார். அந்தப் பயணம் வரலாறோடு அவர் செய்துகொண்ட சந்திப்பாகவும் உலகின் தலைவிதியை மாற்றும் பயணமாகவும் இருந்தது.  
போகும் வழியில் ரபீடா மடத்தின் மதத் தலைவர் குசயைச துரயn Pநசநண அவர்களைச் சந்தித்து  அவர் தனக்குச் செய்த பேருதவிக்கு   தனது நன்றியைத் கொலம்பஸ் தெரிவித்துக் கொண்டார்.  தனது பயணத்திட்டம்  வெற்றியடையக்  கூடிய சாத்தியம்  பிரகாசமாக  இருக்கிறது என்று அவரிடம் கொலம்பஸ் எடுத்துரைத்தார்.  
பாலோஸ் என்ற துறைமுகப் பட்டினம் ரின்ரோ (வுiவெழ) என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இசுப்பானிய நாட்டு வரைபடத்தைப் பார்த்தால் பாலோஸ் அந்த நாட்டின் தென்மேற்கில் போர்த்துக்கல் நாட்டின் எல்லைக்கு அண்மையாக இருப்பதைக் காணலாம். இப்போது இந்த துறைமுகத்தின் பெரும்பகுதியை கடல் விழுங்கி விட்டது. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அது பெரிய துறைமுகமாக விளங்கியது. அப்போதெல்லாம் இசுப்பானிய நாடு அதிகளவு பெரிய எண்ணிக்கையுள்ள துறைமுகங்களைக் கொண்ட நாடாக இருக்கவில்லை.  
தனது பயணத்தை பாலோஸ் துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்க கொலம்பஸ் விரும்பினார். காரணம் அங்குதான் மாலுமிகள் பலர் இருந்தனர். அதனால் தனக்கு வேண்டிய மாலுமிகளை அங்கு திரட்டுவது சுலபம் என்றுஅவர் நினைத்தார். ஆனால் அவரது நினைப்பு தவறாகப் போய்விட்டது என்பதை அவர் அப்போது உணர்ந்துஇருக்கவில்லை.
 
கியூபா பயணக் கட்டுரை (42)
ஒரு பருந்தின் நிழலில்!
கொலம்பசின் கனவு பலித்தது
பாலோஸ் ( Pயடழள) துறைமுகப் பட்டினக் குடிமக்களுக்கும் இசுப்பானிய அரசர் மற்றும் அரசியர் இடையில் நல்லுறவு இருக்கவில்லை. அந்தப் பட்டினத்து குடிமக்களை அரசரும் அரசியாரும் தண்டிக்க விரும்பினார்கள்.  தண்டனையாக ஒரு ஆண்டு காலத்துக்கு இரண்டு சிறிய கப்பல்களை கூலி ஏதும் பெற்றுக் கொள்ளாமல் அரசரதும் அரசியாரதும் சார்பில் கொலம்பஸ் பயணம் செய்யக் கொடுத்து உதவவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக் பட்டது.  

கொலம்பஸ் பாலோஸ் பட்டினத்தில் வாழ்ந்த தலையாரிகள் அனைவருக்கும் அரச கட்டளைகளை கேட்டறிய புனித யோர்ச் தேவாலயத்தில் ( Church of St. George) சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் வந்தார்கள். ஆனால் தாங்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள்,  என்ன செய்யவேண்டும் என்பது  அவர்களுக்கு  முதலில் தெரியாமல் இருந்தது. தாங்கள் அரச கட்டளைப்படி இரண்டு கப்பல்களையும்  பல மாலுமிகளையும் கொடுத்து உதவ வேண்டும் என்பதை அறிந்தபோது அவர்களைப் பயம் கவ்விக் கொண்டது.  திக்குத் திசை தெரியாதஇ முன்பின் பழக்கம் இல்லாத இருண்ட கடலில் பயணப்படுவதற்கு மாலுமிகளைத் கொடுத்து உதவ வேண்டும் என்ற உத்தரவு அவர்களுக்கு பெரும் அச்சத்தை விளைவித்தது.   

அரசரதும் அரசியாரதும் கட்டளைப்படி கொலம்பசுக்கு இரண்டு கப்பல்களைக்  கொடுத்துதவ அவர்கள் முன்வந்தார்கள்.  ஆனால் கப்பல்களைச் செலுத்தும்  மாலுமிகளைக் கொடுத்துதவ தாங்கள் தயாரில்லை என்றுசொன்னார்கள். தொடக்கமே கொலம்பசுக்கு அபசகுனமாக இருந்தது. கப்பலைச் செலுத்துவதற்கு வேண்டிய மாலுமிகளைத் திரட்டுவதில் அவருக்கு பெரிய முட்டுக்கட்டைகைள் எழுந்தன.    
அரச நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாது முழித்தார்கள். பலமாக யோசித்தும் ஒரு வழியும் தோன்றவில்லை. முடிவில் அரச செயலாளர் மாலுமிகளைத் திரட்டுவதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார். சிறையில் வாடும் கைதிகளில்  யாராவது கப்பலில் மாலுமிகளாகப் போக விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை வழங்கப்படும்  என அறிவித்தார். மாலுமிகளது கூலிப் பயணத்துக்குப் பின்னர் அல்ல பயணத்துக்கு முன்னர் முற்பணமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். என்ன செய்தும் இரண்டு கப்பல்களைச் செலுத்தப் போதுமான மாலுமிகளைத் திரட்டுவது வில்லங்கமாக இருந்தது.

இந்தக் கட்டத்தில் கொலம்பசின் முயற்சிக்குக் கைகொடுக்க லா றபிடா (La Rabida) மடத்தை சேர்ந்த சுவாமிகளும்  மாட்டின் அலன்சோ பின்சொன் ( Captain Alonso Pinzon) என்ற  தண்டயலும் முன்வந்தார்கள். இதில் பின்சொன் இந்தப் பயணத்தில் சேர்ந்து கொள்ளவும்  முன்வந்தார். பின்சொன் மிகவும் அனுபவம் வாய்ந்த கடலோடி. சொல்லப்போனால் கொலம்பசை விட அவருக்குக் கடலோடும் அனுபவம் கூடுதலாக இருந்தது. பின்சனோடு அவரது  இரண்டு உடன்பிறப்புக்களும் சேர்ந்து கொண்டார்கள்.   
தண்டயல் பின்சொன் (Captain Pinzon) பயணத்துக்கு வேண்டிய மாலுமிகளைத் திரட்டுவதற்காக களத்தில் இறங்கினார். இரண்டு கப்பலோடு மூன்றாவது கப்பல் ஒன்றையும் “கப்பல்படையில்” சேர்த்தார். மாலுமிகளுக்கு வாக்குறுதிகளையும் ஆசை வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இப்படி கிழமைக் கணக்காக உழைத்ததன் பயனாக  மூன்று கப்பல்களுக்கும் தேவையான 90 மாலுமிகளை திரட்டுவதில் அரச நிர்வாகிகளால் முடியாத காரியத்தில்ää பின்சொன் வெற்றி கண்டார்.   

முதல் கப்பல் Crystal Quintero  என்பவருக்குச் சொந்தமானது. அதன் பெயர் பின்ரா (Pinta) இரண்டாவது கப்பல் நீனோ. Juan Nino என்பவருக்கு சொந்தமானது. மூன்றாவது கப்பலின் பெயர் ஊயிவையயெ.  இது Juan de Costa என்பவருக்குச் சொந்தமானது. பயணம் புறப்படுவதற்கு முன்னர் கப்பிட்டினா என்ற  கப்பல்  சாந்தா மாரியா ( Santa Maria)  எனப் பெயர்  மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அது உள்ளதில் பெரிய கப்பலாக இருந்தபடியால் அதுவே  கொடிக் கப்பல் (Flag ship) ஆகக் கருதப்பட்டது.   

இந்தக் கப்பல்கள் எப்படிக் கட்டப்பட்டனää கட்டிய மேத்திரிகள் யார் யார்  என்ற தரவுகள்பற்றி அதிகம் தெரியவில்லை. உள்ள சாட்சியங்களின் அடிப்படையில்  நீனோ மற்றும் பின்ரா கப்பல்கள் 54 மீட்றிக் தொன் நிiயும் 21-24 மீட்டர் நீளமும் உடையதாக இருந்தன. பெரிய கப்பலான சாந்தா மேரியாவின் நிறை 80-90 மீட்றிக் தொன் இருக்கும். அதன் நீளம் ஏனைய இரண்டு கப்பல்களைவிட கொஞ்சம் அதிகம். இந்த மூன்று கப்பல்களிலும் பின்ராதான் அதிவேகமாகச் செல்லக் கூடிய கப்பல். 

இன்றைய மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட  கப்பல்களோடு ஒப்பிடும்போது இவற்றை “கப்பல்கள்” என்று சொல்வதே தவறு. ஆனால் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படியான கப்பல்களே பாவனையில் இருந்தன. அந்தக் காலத்துக்கு இவை “மிக நவீன” கப்பல்களாகக் கருதப்பட்டன.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 3ஆம் நாள் விடிகாலை மூன்று கப்பல்களும்  Pயடழள னந டய குசழவெநசய துறைமுகத்தில் இருந்து கண்காணாத இடத்துக்குப் பயணம் புறப்பட்டன.   
நாற்பத்தொரு வயது நிரம்பிய “கடற்படைத் தளபதி ‘  டொன் கிறிஸ்தோப்பர்  கொலம்பஸ் உட்பட 39 பேர்  சாந்தா  மேரியில் பயணம் செய்தார்கள். இருபத்தாறு பேர் பின்ரோவில் இருந்தார்கள். நீனோவில்  22 பேர் பயணம் செய்தார்கள்.  பெரும்பாலான மாறுமிகள் இசுப்பானிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் பாலோஸ் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். அதிக எண்ணிக்கையானவர்கள் நல்ல அனுபவம் நிறைந்த மாலுமிகள். ஒரு சில அரச ஊழியர்களும் இருந்தார்கள்.  ஆனால் மதகுருமார்களோää சிப்பாய்களோ அல்லது குடியேற்றவாசிகளோ அந்தக் கப்பல்களில் இருக்கவில்லை.  

கொலம்பஸ் சாந்தா மேரியா கப்பலின் அணியத்தில் நின்று கொண்டு இசுப்பானிய கடற்கரை அடிவானத்துக் கீழ் மறைந்து போவதைக் கண்டார். புதிய நாட்டை மேற்கு நோக்கிப் பயணப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்என்ற அவரது கால்நூற்றாண்டு உழைப்பு வெற்றியில் முடியுமா  அல்லது தோல்வியைத் தழுவுமா என்பது அவருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் பத்தாண்டு காலமாக இரவு பகல் கனவு கண்டுவந்த இந்தியாவிற்கான பயணம் பலித்தது கொலம்பசுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.   
கப்பலில் வாழ்க்கை வசதிகள் எப்படி இருந்தது என்பதுபற்றி அதிகம்  தெரியவில்லை. அது இன்றுபோல் வசதியாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.  

மாலுமிகளுக்குத் தனியான அறைகள் இருக்கவில்லை. உணவு பரிமாறும் கூடங்களும் ( அநளள hயடடள) இருக்கவில்லை. கப்பல் தண்டயல்களுக்கும் ( Captain) சுக்கானிகளுக்கும் (pilots)  மட்டும் சிறிய அறைகள் இருந்தன. மாலுமிகள்  இரவில்  நித்திரை  கொள்வதற்கு ஒரு  குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் எங்கே இடம் இருக்கிறதோ  அங்கு ப:டுத்துக் கொண்டார்கள். நித்திரையில் இருக்கும்போது அலைகளால் கடலில் வீசப்படாமல் இருக்கும்பொருட்டு கயிற்றில் தங்கள் கால்களைக் கட்டினார்கள்.  

பயண  நாட்கள் பிரார்த்தனைää  தொழுகைää பாடல்கள்ää கதைகள்ää வேலைகள்ää சாப்பிடுதல்ää வெறுமனே குந்தியிருத்தல் போன்றவற்றில் கழிந்தன. முன்பின் பார்த்திராத ஆகாயத்தையும் விண்மீன்களையும் உற்றுப் பார்ப்பதில் இரவுப் பொழுதுகள் கரைந்தன.   

கப்பலில் ஒரு ஆண்டுக்குப் போதுமான உணவு வகைகள் கையிருப்பில் இருந்தன. அந்தக் காலத்தில் தொடர்ந்து இரண்டு கிழமைகள் கப்பலில் பயணிப்பது நீண்ட பயணமாக எண்ணப்பட்டது.  

அரிசிää தண்ணீர்ää கருவாடுää உப்புப் போட்ட இறைச்சிää  உயிர்ப் பன்றிகள்ää கோழிகள்ää வெண்ணெய்ää கடல்வழிச்செலவுக்கு ( பயணத்துக்கு) வேண்டிய வரைபடங்கள்ää கடல்விபர விளக்கப்படங்கள் ( charts), திசைகாட்டிகள் ( compasses )  காந்தக்கற்கள் ( magnets) கருவிகள், நாழிகை வட்டில்கள் (hழரசபடயளளநள) அடிமட்டங்கள் ( சரடநசள) போன்றவை கையிருப்பில் இருந்த பொருட்களின் பட்டியலில் அடங்கும்.  
மேலும் கண்ணாடி மணிகள் ( படயளள டிநயனள) பித்தளை மோதிரங்கள் (டிசயளள சiபௌ) தைத்த தொப்பிகள்ää தங்கம்ää வெள்ளிää முத்துக்கள்ää நறுமணச் சரக்குகள் (ளிiஉநள) போன்ற வாணிகப் பொருட்களும் கையிருப்பில் இருந்தன.
 
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடற்செலவுக்கு (யேஎபையவழைn)  வேண்டிய திசைகாட்டிகள் ( உழஅpயளளநள) காந்தக்கற்கள் ( அயபநெவள) நாழிகை வட்டில்கள்  அடிமட்டங்கள் ( சரடநசள) போன்ற  கருவிகள் பல இருந்தும் அது ஒரு துல்லியமான அறிவியலாக  ( நஒயஉவ ளஉநைnஉந) இருக்கவில்லை. விண்மீன்களை (hழரச படயளளநள) அண்;ணாந்து பார்த்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதுதான் பெரு வழக்காக இருந்தது. இருந்தும் விண்மீன்காட்டித் (யளவசழடயடிந ) தட்டைப் பயன்படுத்திக் கப்பலின் இடத்தைக் கணிப்பது நடைமுறையில் இருந்தது.

இந்த விண்மீன் காட்டி என்பது முக்கிய விண்மீன்கள் வரையப்பட்ட ஒரு  pழளவைழைniபெ உலோகத் தட்டாகும். முன்பின் தெரியாத கடலில் பயணம் செய்யும் போது ஒரு கடலோடி (mariner) விண்ணை அண்ணாந்து பார்த்து மேலே காணும் வின்மீன்களின் நிலைக்கு அமையத் அதனை வைத்துப் பார்ப்பதன் மூலம் ( positioning) கப்பலின் நிலையைக் கண்டு பிடிக்க முடியும். ஆனால், இந்த இரண்டு வழிகளிலிலும் ஒரு பெரும் குறைபாடு இருந்தது. வானம் மங்கலாகவும்ää மப்பும் மந்தாரமாகவும் இருக்கும்போது சரியான  நிலையைக் கண்டுபிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.
 
கப்பலின் நிலையைக் கண்டு பிடிப்பதற்கு இன்னொரு வழிமுறையும் நடைமுறையில் இருந்தது. இதில் கப்பலின் நிலையை அது கடைசியாக இருந்த நிலையில் இருந்து எந்தத் திசையில் கப்பல் சென்றதுää அதன் வேகம் என்னää எத்தனை நாழிகை பயணித்தது என்பவற்றை வைத்துக்கொண்டு புதிய நிலையைக் கண்டு கொள்வதுதான் அந்த வழிமுறை.
 
கொலம்பஸ் கடைசியாகச் சொன்ன வழிமுறையைத்தான் பெரும்பாலும் பின்பற்றினார். வானத்து விண்மீன்களின் நிலையைப் பார்த்துக் கப்பலின் நிலையைக் கணிப்பது அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. மாறாக இயற்கையின் மாற்றத்தைக் கவனித்தல்ää பறவைகளின் நடமாட்டத்தைக் கவனித்தல்ää காற்றின் மணம்ää வானத்தின் நிறம்ää கடலின் தன்மைää கடலில் மிதக்கும் குப்பை கூழங்கள் போன்றவற்றை வைத்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதில் கொலம்பசுக்கு அசாத்திய திறமை இருந்தது.
 
செப்தெம்பர் மாதம் 25 ஆம் நாள் இந்திய நிலப்பரப்பைக் கண்டுவிட்டதாகக் கொலம்பசும் மற்றவர்களும் நினைத்தார்கள். ஆனால்ää அவர்கள் கண்டது நிலம் அல்ல. அவர்களது கண்கள்  அவர்களை ஏமாற்றிவிட்டன. அவர்கள் எதைக் கண்டு ஏமாந்தார்கள்? 

கியூபா பயணக் கட்டுரை (43)
ஒரு பருந்தின் நிழலில்!
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்!


கொலம்பஸ் இயற்கையின் மாற்றத்தைக் கவனித்தல், பறவைகளின் நடமாட்டத்தைக் கவனித்தல், காற்றின் மணம்ää வானத்தின் நிறம்ää கடலின் தன்மைää கடலில் மிதக்கும் குப்பைகூழங்கள் போன்றவற்றை வைத்துக் கப்பலின் நிலையை நிருணயிப்பதில் கொலம்பசுக்கு அசாத்திய திறமை இருந்தது என்று கண்டோம். இருந்தும் அவரது மனதின் ஒரு மூலையில் அடிக்கடி அவநம்பிக்கை எண்ணங்களும் வந்து வந்து அலைமோதிப் போகத் தவறவில்லை.
 
கொலம்பஸ் பாலோஸ் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டு சில கிழமைகள்தான் ஆகியிருந்தன. ஆனால்ää அவை சில ஆண்டுகள் போல் தெரிந்தன.
 
கொலம்பசின் சிந்தனைகள் பின்நோக்கிப் பறந்தன. ஜெனோவா நகரில் ஆட்டு மயிரில் இருந்து கம்பளி நெசவு செய்து பிழைத்த ஒரு ஏழை நெசவாளிக்குப் பிறந்த பிள்ளைக்கு இன்று இசுப்பானிய நாட்டு அரசியார் புரவலர்.  பதினாலு வயதில் கப்பல் ஒன்றில் எடுபிடியாக ஏறிய பையனுக்கு இன்று “கடற்படைத் தளபதி” என்ற உயரிய பட்டம்! ஒரு நேரச் சாப்பாடு வாங்கி உண்ணப் பணம் இல்லாது அல்லாடிய சிறுவனது பெயருக்கு முன்னால் ‘டொன்’ (னுழn)  என்ற அடைமொழி! நாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் அந்தக் குடியேற்ற நாடுகளின் ‘ஆளுநர்” பதவி! புதிய உலகத்தில் தங்கமும் வெள்ளியும் வைரமும் வைடூரியமும் கிடைக்கும் பட்சத்தில் அதில் பத்தில் ஒரு பங்கு!
 
இப்படியான பட்டங்களும்ää விருதுகளும் மேட்டுக் குடியில் பிறந்த சீமான்களுக்கும் கோமான்களுக்கும் மட்டுமே கிடைக்கக் கூடியது. அவை இப்போது சாதாரண கொலம்பசுக்கு கிடைத்திருக்கின்றன.
 
பாலோஸ் துறைமுகப் பட்டினத்தில் இருந்து கப்பல்கள் புறப்பட்டபோது யுவான் பேரஸ் (துரயn Pநசநண) என்ற பாதிரியார் கைகளை வானத்தைப் பார்த்து உயர்த்தி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே! இந்தப் பயணம் வெற்றியடைய கொலம்பசையும் அவரது சகாக்களையும் ஆசீர்வதிப்பீராக! அவர்களை எல்லாவித ஆபத்தில் இருந்தும் காப்பாற்றி அருள்வீராக” எனப் பிரார்த்தனை செய்தது கொலம்பசின் மனக்கண்ணில் மீளத் தெரிந்தது.
 
கண்காணாத இடத்துக்கு தங்கள் பிள்ளைகளையும் உடன்பிறப்புக்களையும் உற்றார்களையும் இத்தாலிநாட்டில் இருந்து இசுப்பானிய நாட்டுக்குக் குடியேறிய ஒரு பயித்தியக்காரன் இழுத்துப் போகிறான் என்று பாலோஸ் துறைமுகப் பட்டினத்துக் குடிமக்கள் திட்டியது கொலம்பஸ் காதில் எதிரொலித்தது.
 
“அந்த மூன்று சின்னக் கப்பல்களும் உலகத்தின் விழிம்பிற்குச் சென்று கீழே விழுந்தபின் பாதாள லோகத்தில் வாழும் பயங்கரப் பூதங்களும் வேதாளங்களும் அந்த அப்பாவி மாலுமிகள் அனைவரையும் விழுங்கக் காத்திருக்கின்றன” என்று மக்கள் பயமுறுத்தியது கொலம்பசின் நினைவிற்கு வந்தது.
 
புதிய உலகத்தை நிச்சயம் கண்டு பிடிக்கப் போகிறோம் அங்கு விதம்விதமான மக்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புத் தொடக்கம் முதல் கொலம்பசிடம் இருந்தது. அதனால் தன்னோடு யார் யாரை எல்லாம் கப்பல்களில் அழைத்துப் போகவேண்டும் என்பதை முன்கூட்டியே நிச்சயித்துக் கொண்டார்.
 
முதலில் ஒரு சட்டத்தரணி. கொலம்பஸ் சந்திக்கப் போகும் அரசர்ää அரசியர்களோடு எழுதப்பட்டு பிரகடனப்படுத்தப்பட இருக்கும் ஒப்பந்தங்களைத் தயாரிப்பது அவரது பணியாகும். இரண்டாவது ஒரு செயலர் சக வரலாற்றாசிரியர். கொலம்பசின் பிரயாணத்தில் இடம்பெறும் சம்பவங்களையும்ää கண்டு பிடிக்கும் நாடுகளையும் மக்களையும் பற்றி எழுதுவது இவரது பணியாகும். மூன்றாவது ஒரு பன்மொழிப் புலவர்,  பெயர் லூயி (Louis) யூத இனத்தவரான அவருக்கு 12 கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. இந்தியா, காதே (காதே என்பது யப்பானுக்கு அருகிலுள்ள தீவுகள்) போன்ற நாடுகளில் சந்திக்க இருக்கும் மக்கள் எந்த மொழியில் பேசினாலும் அதைப் புரிந்து கொள்ளக் கொலம்பஸ் முன்னெச்சரிக்கையோடு மேற்கொண்ட ஏற்பாடு இவையாகும். .
 
கொலம்பசின் பயண ஆயத்தங்கள் இ;த்தோடு நின்று விடவில்லை. கப்பலில் நவரத்தினங்கள் பற்றியும் தங்கத்தைப் பற்றியும் வெள்ளி பற்றியும் சகலதும் தெரிந்த ஒரு பொற்கொல்லரும் நவரத்தினவியாபாரியம் அழைத்துச் செல்லப்பட்டனர். கொலம்பஸ் கப்பல் கப்பலாக ஏற்றி இறக்கப்போகும் தங்கம்ää வெள்ளிää நவரத்தினங்கள் போன்றவற்றின் தரத்தை ஆய்வு செய்யத்தான் இந்த முன்னேற்பாடு.
 
இவர்களை விட ஒரு மருத்துவர், அறுவைமருத்துவர் (surgeon) மடைத்தொழிலாளர்கள், (cooks)  கொலம்பசின் கப்பலுக்கு மட்டும் ஒரு கபின் பையன் (cabin boy) கப்பல்களில் செலவு செய்தார்கள்.
 
இந்தப் பயணத்துக்கான செலவு எவ்வளவு என்று தெரிய வேண்டாமா? இஸ்பெல்லா அரசியாருக்கு 67,000 டொலர்கள் செலவு என்று சொல்லப்படுகிறது. ஆனால், வேறு சிலர் அன்றைய இசுப்பானிய நாணயத்தை டொலருக்கு மாற்றினால் அது 3,000 அல்லது 4,000 க்கு மேல் போகாது என்று சொல்கிறார்கள். இந்தப் பணத்தில் பெரும்பகுதியைப் பெர்டினன்ட் அரசர் கடனாகக் கொடுத்து உதவினார். காரணம் அவருக்கு இலாபத்தில் பங்குஇல்லை. இலாபத்தை அரசியாரும் கொலம்பசும் பங்கிடுவது என்பதுதான் ஒப்பந்தம்.  
 
பகலில் முன்பின் தெரியாத சாலையில் பயணம் செய்வது வில்லங்கம். அதே சாலையில் இரவில் பயணம்செய்வது அதைவிட வில்லங்கம். அப்படி இருக்கும் போது முன்பின் தெரியாத சமுத்திரத்தில் இரவு பகல் பயணம் செய்வது என்பது இலேசான அலுவலா என்ன?
 
கொலம்பசுக்கே போகுமிடம் நிச்சயமாகத் தெரியவில்லை. போகும் பாதை இருட்டாகவே இருந்தது. மூன்று கப்பல்களில் இருந்த மற்ற மாலுமிகளின் மன நிலைபற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்கள் சின்னக் குழந்தைகளைவிட மோசமான மனநிலையில் இருந்தார்கள். கொலம்பசில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. குருடர்களுக்குக் குருடன் வழிகாட்டுகிறான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
 
கனறிஸ் தீவுகள் என்பது ஏழு தீவுகள் கொண்ட நிலப்பரப்பாகும். ஆபிரிக்காவின் வட மூலையில்ää மொறக்கோ நாட்டிற்கு மேற்கே 60 மைல் தொலைவில் இருந்தது. இந்தத் தீவுகளுக்குப் பெயர் வைத்தவர்கள் உரோமர். நாய்க்கு இலத்தீன் மொழியில் கனிஸ் (உயnளை) என்று பெயர். அந்த வேர்ச் சொல்லில் இருந்துதான் கனறிஸ் என்ற பெயர் பிறந்தது. அந்தத் தீவுகளில் ஏராளமான நாய்கள் அந்தக் காலத்தில் காணப்பட்டனவாம். கனறிஸ் என்ற பெயருடைய பறவைகளும் அந்தத் தீவில் காணப்பட்டன. இந்தத் தீவுகள் பற்றிய செய்தி இசுப்பானியர்களுக்கும் ஏனைய ஐரோப்பிய மாலுமிகளுக்கும் கொலம்பசுக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னரே தெரிந்திருந்தன.
 
கனறிஸ் தீவில்தான் கொலம்பசுக்கு தொல்லை ஆரம்பித்ததை முன்னர் கண்டோம். பின்ரா கப்பலின் சுக்கான் முதலில் தளர்ந்து, பின்னர் உடைந்து, கடைசியாக கழன்று விழுந்ததை அடுத்து அதன் திருத்த வேலைகள் நடந்தது. அந்தச் சுக்கானை அந்தக் கப்பலில் பயணம் செய்த அதன் சொந்தக்காரர்களே பயப்பீதி காரணமாக உடைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கப்பலை செயல் இழக்கச் செய்தால் அதனையும் மாலுமிகளையும் கைவிட்டு கொலம்பஸ் தனது பயணத்தை தொடர்வார் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள்.
 
ஆனால், கொலம்பஸ் கொமேரா (Gomera) என்ற தீவுக்குச் சென்று அங்கு தனக்கு முன்பே தெரிந்திருந்த மாலுமிகளின் துணையுடன் உடைந்த சுக்கானை மீண்டும் சரிப்படுத்தினார்.
 
கனறிஸ் தீவில் கப்பல்கள் நங்கூரம் இட்டுக்கொண்டிருந்த வேளை ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஏழு தீவுகளில் ஒன்றான வுநநெசகைக தீவில் உள்ள 12,000 அடி உயர மலை திடீரென தீ கக்கியது. அதில் இருந்து கிளம்பிய புகை மேக மண்டலத்தை மறைத்தது. அந்த அப்பாவி மாலுமிகளுக்கு அது எரிமலை என்பது தெரிந்திருக்கவில்லை. யாரோ மலைக்குத் தீ வைத்து விட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். பயந்து நடுங்கிய மாலுமிகள் தங்களைத் திரும்பவும் புறப்பட்ட பாலோஸ் பட்டினத்துக்கே கொண்டு போகுமாறு கொலம்பசை கெஞ்சி மன்றாடத் தொடங்கினார்கள். கொலம்பஸ் அசைந்து கொடுக்கவில்லை.
 
இதற்கிடையில் போர்த்துக்கேய மன்னரின் கோபம் கொலம்பஸ் மீது திரும்பியது. மன்னருக்கு கொலம்பஸ் இசுப்பானிய நாட்டின் அரசர், அரசியரிடம் இருந்து கப்பல்களைப் பெற்றுக் கொண்டது பிடிக்கவில்லை. போர்த்துக்கேய மன்னர் கொலம்பசையும்ää கொலம்பசின் கப்பல்களைக் கைப்பற்றுமாறு தனது நாட்டுக் கப்பற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார். கொலம்பஸ் இந்த ஆபத்தில் இருந்து எப்படியோ தப்பிப் பிழைத்தார். மாலுமிகளோ தங்களை போர்த்துக்கேயரது கப்பற்படை கைதுசெய்யப் போகிறதென பயந்து செத்தார்கள்.
 
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) கனறிஸ் தீவுகளை விட்டு மூன்ற கப்பல்களும் மேற்கு நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தன. கனறிஸ் தீவுகளில் கடைசித் தீவான குநசசழ கண்ணுக்குத் தெரியாது மறைந்தபோது கப்பல் மாலுமிகள் பெருமூச்சு விட்டார்கள். கண்ணீர்கூட வந்தது. இனிமேல் தாங்கள் பிறந்த நாட்டுக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்ற ஏக்கம் அவர்களை வாட்டி எடுத்தது.
 
பாலோஸ் துறைமுகப் பட்டினத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் பறந்தோடி விட்டது. அதுவரை பயணம் செய்த தூரம் ஒரு நூறு மைல்கள்தான் இருக்கும். எங்கே பார்த்தாலும் பிரமாண்டமான சமுத்திரம். பேரிச்சலோடு வீசும் பேய்க் காற்று. இரவில் மேலே தாமரைத் தடாகம் ஒன்றில் தாமரை மலர்கள் பூத்திருப்பது போல் விண்மீன்கள். வளர்ந்தும் தேயும் வெண்நிலா. ஆனால்ää அவர்கள் கண்ணில் தரை மட்டும் புலப்படவே இல்லை.
 
நம்பிக்கை இழந்து மனம்தளர்ந்துபோன தனது மாலுமிகளுக்கு போகுமிடம் வெகு தூரமில்லை என்பதைக் காட்ட கொலம்பஸ் ஒரு ‘சதி’ செய்தார்.

——————————————————————————————————————– 
 
கியூபா பயணக் கட்டுரை (44)
ஒரு பருந்தின் நிழலில்!
உன் கண் உன்னை ஏமாற்றினால் 

கொலம்பஸ் தனது கப்பல் பயணத்தையிட்டு இரண்டு வௌ;வேறு பதிவுகளை வைத்திருந்தார். ஒன்று சரியான பதிவு. அதனை அவர் யாருக்கும் காட்டாமல் தன்னுடனேயே இரகசியமாக வைத்திருந்தார். இரண்டாவது பொய்யான பதிவு. இதைத்தான் தனது மாலுமிகளுக்குக் கொலம்பஸ் காட்டினார். அதைப் பார்த்த மாலுமிகள் கப்பல் மிகவும் மெதுவாக ஓடுகிறதென்றும் தாங்கள் பயணித்த தூரம் அதிகம் இல்லையென்றும் அத்திலாந்திக் பெருங்கடல் அப்படியொன்றும் பெரிய பெருங்கடல் அல்லவென்றும் நம்பினார்கள். அதேசமயம் கொலம்பஸ் தான் வைத்திருந்த பதிவுகள் மூலம் கப்பல் புறப்பட்ட இடத்தில் இருந்து அகண்ட பெருங்கடலில் பல நூறு மைல்கள் கடந்து மேற்கு நோக்கி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.
 
மாலுமிகளை கவலையில் மூழ்கடிக்குமாறு இன்னொரு சம்பவம் இடம் பெற்றது. அந்தக் காலத்தில் சுக்கானிகள் தாங்கள் வைத்திருந்த திசையறிகருவியின் (ஆயபநெவiஉ ஊழஅpயளள) உதவியுடனேயே கப்பலைச் செலுத்தினார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தத் திசையறி கருவியின் ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டும். அதற்குக் காரணம் வடதுருவத்தில் காணப்படும் காந்த வயலாகும் (ஆயபநெவiஉ கநைடன). இந்தத் திசையறி கருவியைக் கண்டு பிடித்தவர்கள் சீனர்களாவர். ஐரோப்பாவில் கொலம்பசுக்கு முன்னரே கி.பி 1183 ஆம் ஆண்டளவில் நீர்வழிச் செலவில் (யேஎபையவழைn) இந்தத் திசையறிகருவியைப் பயன்படுத்தும் உத்தி நடைமுறைக்கு வந்துவிட்டது. இருந்தும் ஒரு சிலருக்கே அந்தக் கருவியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரிந்திருந்தது.
 
1492 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் பெருங்கடலின் மையப் பகுதியை அடைந்துவிட்டது. அதனால் வட திசைக் கோடு மாறியது. அதைத் தொடர்ந்து திசையறிகருவியின் ஊசி காட்டும் திசையும் மாறியது. இந்த மாலுமிகள் திறையறிகருவியின் ஊசி எப்போதுமே வடக்குத் திசையையே காட்டும் அது ஒருபோதும் மாறமாட்டாது என பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டவர்கள். இப்போது ஊசியின் திசை மாறியதைப் பார்த்துக் கலக்கம்; அடைந்தார்கள். திசையறிகருவி தங்களை ஏமாற்றுகிறதுää அதனால் தாங்கள் நடுப் பெருங்கடலில் ஒரு பொறிக்குள் சிக்குப் பட்டுவிட்டதாக நம்பினார்கள்.
 
அந்தப் பெருங்கடலில் மறைந்திருக்கும் பூதங்கள் தங்களை விழுங்கி ஏப்பமிடுவதற்காக திசையறிகருவியின் ஊசியை வேண்டுமென்றே பிழையான திசையைக் காட்டுமாறு செய்து விட்டன என எண்ணினார்கள். “ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும்ää  எங்களை இசுப்பானியாவிற்குக் கொண்டு போங்கள்” என்று கேட்டு அந்த மாலுமிகள் ஓவென்று ஒப்பாரிவைத்து அழத் தொடங்கிவிட்டார்கள்!
 
கொலம்பஸ் அதற்கு விளக்கம் அளித்தார். திசையறி கருவியில் பழுதில்லை என்று சொன்னார். தனது விளக்கம் பிழை என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தும் அந்த நேரத்தில் அப்படிப் பொய் சொல்ல வேண்டியிருந்தது. “துருவ விண்மீன் இருக்கும் திசையையே எப்போதும் காட்டும் திசையறிகருவியின் ஊசி அந்த விண்மீன் இடம் மாறிவிட்டதால் ஊசி காட்டும் திசையும் மாறிவிட்டது” என்று கொலம்பஸ் விளக்கினார். அந்த விளக்கத்தை நம்பி மாலுமிகள் கொஞ்சம் அமைதி அடைந்தார்கள்.
 
போலோஸ் துறைமுகப் பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு சுமார் 40 நாள்கள் கழிந்து விட்டன. இப்போது கப்பல் சார்கஸ்சோ கடலில் (Sargasso Sea) பயணம் செய்து கொண்டிருந்தது. சார்கஸ்சோ கடல் வட அந்திலாந்திக் பெருங்கடலுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் மற்றும் அசோர்ஸ் (Azres) தீவுக்கும் இடையில் இருக்கிறது (வடக்கே குறுக்குக் கோடு 20 பாகைக்கும் 35க்கும் இடையில்). பெர்முடா தீவுகள் இந்தக் கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கின்றன. இந்த மேட்டுக் கடலில் சுழியோட்டம் இல்லாததால் (வடக்கும் தெற்குமாக ஓடும் சுழிகள் இதன் ஊடாகச் செல்லாது இருமருங்கிலும் ஓரமாக விலகிச் செல்கின்றன) இந்தக் கடலில் பெருமளவிலான சாதாளை (seaweed) கரையை நோக்கித் தள்ளப்படாமல் இருந்த இடத்திலேயே எப்போதும் மிதந்து கொண்டு இருக்கும். விளைவு? கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் வேகம் தடைபட்டது.
 
கப்பலின் வேகம் குறைய ஆரம்பித்ததால் கப்பல் ஓடுவதற்குப் பதில் ஊர ஆரம்பித்தது. இந்த வேகக் குறைவும் கடலின் மாயத் தோற்றமும் கப்பலில் இருந்த மாலுமிகளின் அடிவயிற்றைக் கலக்கியது. சந்தேகம் இல்லாமல் உலகத்தின் விழிம்பிற்குத் தாங்கள் வந்துவிட்டதாக அவர்கள் பயந்தார்கள். தாங்கள் கேள்விப்பட்ட பூதங்கள் கப்பலைத் தடுத்து இந்தச் சாதாளையால் எல்லோரையும் மூடிக் கட்டிக் கொண்டு கடலின் அடிக்கு இழுத்துச்செல்லப் போகின்றன என எண்ணி நடுங்கினார்கள்.
 
கிட்டத்தட்ட ஒரு வார காலமாக கப்பல் மெல்ல மெல்ல இந்த மேலைக் கடலில் பயணம் செய்தது. அதனைக் கடந்தபோது அவர்களுக்கு அதிட்டம் காத்திருந்தது. அத்திலாந்திக் -பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் குறுக்குக் கோடு  (latitude) 30 பாகை வடக்கு-தெற்குக்கு உட்பட்ட வெப்ப மண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை (equator) நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் காற்று வீசுகிறது. இதனை ஆங்கிலத்தில் trade winds என்று அழைப்பார்கள். இப்போது அந்தக் காற்று கொலம்பசின் கப்பலை மேற்கு நோக்கி இழுத்துச் சென்றது. ஆனால்ää மாலுமிகளோ இதனை அதிட்டமாகக் கருதவில்லை. ஒரேயடியாக கப்பல் மேற்குத் திசையில் அள்ளுப்பட்டுப் போவதால் இனித் தாங்கள் மறுபக்கமாகத் திரும்பி இசுப்பானியாவிற்குப் போகும் வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்தக் கவலை அவர்களை வாட்டியது.
 
இப்படி மாலுமிகள் பயத்தினால் செத்துப் பிழைப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒருவேளை சிரிப்பாக இருக்கலாம். ஆனால்ää ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முன்பின் தெரியாத பெருங்கடலில் பயணம் செய்த அந்தக் கப்பலில் நாங்கள் இருந்திருந்தால் நாங்களும் அந்த மாலுமிகளின் மனநிiலியில்தான் இருந்திருப்போம். சொல்லப்போனால் இன்னும் மோசமான மனநிலையில் இருந்திருப்போம்.
 
இப்படி 50 நாள்களுக்கும் மேலாக பெருங்கடலில் பயணம் செய்த பின்னர் செப்தெம்பர் மாதம் 2ஆம் நாள் ஒரு மாலுமி திடீரென “தரை” “தரை” எனக் உரத்த குரலில் கூக்குரல் இட்டான்.
 
எல்லோரும் எங்கே? எங்கே? என்று அடித்து விழுந்து கொண்டு அவன் நின்ற பக்கம் ஓடினார்கள். ஆகா! என்ன ஆச்சரியம்? அவர்கள் கண்ணுக்கு நேர் எதிரே பச்சை நிறத் தீவுகள்! உயர்ந்த மலைத்தொடர்கள். அழகானநகரம். அங்கே பாரதியார் “தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் – அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டித் தரவேண்டும்” என்று கேட்டாரே?அது போன்ற ஒன்றல்ல பல மாளிகைகள்! அரண்மனைகள்! தேவாலயங்கள்! இவையெல்லாம் சூரியஒளியில் குளித்து தகதக என மின்னிக் கொண்டிருந்தன!
 
அந்தக் காட்சியைக் கண்ட பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். இறைவனைப் போற்றித் தோத்திரப் பாடல்களைப் பாடினார்கள். “ஆகா காதே வந்து விட்டது! நாம் நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட காதே இதோ எங்கள் கண்முன்னே! இனி எங்கள் கவலைகள் ஒழிந்தன! எம்மைப் பிடித்த பீடைகள் தொலைந்தன! நல்ல காலம் பிறந்தது!” என்று மகிழ்ச்சியால் ஆடிப் பாடினார்கள். அடுத்த கணம் கப்பல் அந்த ஒளி உமிழும் நகரை நோக்கி விரைந்தது!
 
என்ன ஆச்சரியம்? திடீரென அந்த நகரம் மறைந்தது! அத்தோடு அவர்கள் பார்த்த மாளிகைகள்ää அரண்மனைகள்ää தேவாலயங்கள் எல்லாமே ஒரு நொடியில் மறைந்தன! மந்திரவாதி டேவிட் கொப்பர்பீல்ட் (David Copperfield) சீனாவின் நெடுஞ்சுவரைத் தனது தந்திரத்தால் மறையச் செய்வாரே! அதேபோல் இந்த நகரமும் மறைந்து விட்டது.
 
அவர்களது கண்களுக்கு இப்போது அகண்டு விரிந்து கிடந்த பெருங்கடல்தான் தென்பட்டது. அவர்கள் கண்டது கானல் நீர். கொளுத்தும் ஞாயிறுää பரந்து கிடக்கும் பெருங்கடல்ää தலைக்கு மேலே ஓடும் மேகக் கூட்டங்கள் என இந்த மூன்றும் சேர்ந்து அவர்களது கண்களை ஏமாற்றி விட்டன. அவர்கள் எதைக் காண உளமார விரும்பினார்களோ அது அவர்கள் கண்களுக்குப் பட்டது. ஆங்கிலத்தில் இதனை mirage அல்லது hallucination என்று அழைப்பார்கள்.
 
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் கொலம்பஸ்பாடு பெரும் பாடாகிப் போய்விட்டது. தங்களைக் கொலைக் களத்திற்கு அழைத்துப் போகிறான் என்று முன்னரைவிட இப்போது பலமாக மாலுமிகள் நம்ப ஆரம்பித்தார்கள்.
 
மாலுமிகளது பொறுமை சோதனைக்கு உள்ளாகியதுää  பதட்டம் அதிகரித்ததுää புலம்பல் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது. கொலம்பசுக்கு எதிராகப் பயமுறுத்தல்கள் எழுந்தன. “இந்த இத்தாலிக்காரன் எங்களையும் இந்தக் கப்பல்களையும் எந்த ஐயத்துக்கும் இடம் இல்லாமல் அழிவு நோக்கிக் கொண்டு போகிறான்” என அவர்கள் கொலம்பசைத் திட்டினார்கள்.
 
கொலம்பஸ் மனம் தளரவில்லை. தன்நம்பிக்கையோடும் பொறுமையோடும் பயணத்தைத் தொடர்ந்தார். தலைக்கு மேலே பறவைகள் பறக்க ஆரம்பித்தன. அது தரை அண்மையில் இருக்கலாம் என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுத்தது. மேலும் பெருங்கடலில் முன்னர் பார்த்திராத பொருட்கள் மிதப்பதையும் கண்டார்.
 
1492 ஆம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 7 ஆம் நாள் கொலம்பஸ் நாள்தோறும் பதிவு செய்திருந்த குறிப்புக்கள் கனரீஸ்தீவுகளை விட்டுப் புறப்பட்ட நேரம் தொடங்கி இதுவரை 27ää000 மைல்கள் பயணம் செய்ததைக் காட்டியது. கொலம்பஸ் வைத்திருந்த பொய்ப் பதிவுகள் (மாலுமிகள் பார்த்த பதிவகள்) 2ää200 மைல்கள் மட்டுமே பயணம் செய்ததாகக் காட்டியது!
 
இந்த இடத்தில் கொலம்பஸ் ஒரு தவறு செய்தார். அவர் போன திசையில் நேரே பயணம் செய்திருந்தால் ஒன்றில் புளறிடா (குடழசனைய) அல்லது தென்கறோலினா (ளுழரவா ஊயசழடiயெ) பகுதியில் தரையிறங்கி இருப்பார். அப்படித் தரை இறங்கி இருந்தால் வட அமெரிக்காவின் தீவு முதலான புறப் பகுதிகள் நீங்கலான தலைநிலப்பரப்பை (ஆயiடெயனெ) கொலம்பஸ் கண்டு பிடித்திருந்திருப்பார். அவரது பொல்லாத காலம் தண்டயல் அலன்சோ பின்சொன் (Captain Alonso Pinzon) தெற்கு நோக்கிக் கிளிகளின் சாயலில் பறந்த ஒரு கூட்டம் பறவைகளைக் கண்டார். கண்டதும் தரை மேற்குத் திசையில் இல்லைää தென்மேற்குத் திசையில்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
 
உடனே மேற்குத் திசைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த கப்பலின் திசையை தென்மேற்காகத் திருப்புமாறு கடற்தளபதி கொலம்பசிடம் பின்சொன் கெஞ்சி மன்றாடினார். கொலம்பஸ் முதலில் சம்மதிக்கவில்லை. இருந்தும் தனது விருப்பத்துக்கு மாறாக தென்மேற்குத் திசையில் கப்பலைத் திருப்பினார். கப்பல் இப்போது கியூபா இருக்கும் திசை நோக்கி விரைந்தது.

கியூபா பயணக் கட்டுரை (45)
ஒரு பருந்தின் நிழலில்
நேரமும் தூரமும்

 
கொலம்பஸ் நாள் தோறும் பதிவு செய்திருந்த குறிப்புக்கள் கனரீஸ் தீவுகளை விட்டு 1492 ஆம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் 7 ஆம் நாள் புறப்பட்ட நேரம் தொடங்கி அதுவரை 27ää000 மைல்கள் பயணம் செய்ததைக் காட்டியதாகப் பார்த்தோம். அதே சமயம் கொலம்பஸ் வைத்திருந்த பொய்ப் பதிவுகள் (மாலுமிகள் பார்த்த பதிவுகள்) 2ää200 மைல்கள் மட்டுமே பயணம் செய்ததாகக் காட்டியது! கொலம்பஸ் எப்படி? எதன் அடிப்படையில் இந்தத் தூரத்தைக் கணித்தார்?
 
பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற்செலவுக்கு வேண்டிய (யேஎபையவழைn) திசைகாட்டிகள் (உழஅpயளளநள)  காந்தக்கற்கள் (அயபநெவள) நாழிகை வட்டில்கள் (hour -glasses) அடிமட்டங்கள் (rulers) கருவிகள் பல இருந்தும் அது ஒரு துல்லியமான அறிவியலாக (exact science) இருக்கவில்லை என முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
 
மேலும் விண்மீன்களை அண்ணாந்து பார்த்துக் கப்பலின் இடத்தை நிருணயிப்பதுதான் பெரு வழக்காக இருந்தது. இருந்தும் விண்மீன்காட்டி (astrolabe) தட்டைப் பயன்படுத்தி கப்பலின் இடத்தைக் கணிப்பதும் நடைமுறையில் இருந்தது. இந்த விண்மீன் காட்டி என்பது முக்கிய விண்மீன்கள் வரையப்பட்ட ஒரு pழளவைழைniபெ உலோகத் தட்டாகும். முன்பின் தெரியாத கடலில் பயணம் செய்யும்போது ஒரு கடலோடி (mariner) விண்ணை அண்ணாந்து பார்த்து மேலே காணும் வின்மீன்களின் நிலைக்கு அமைய (positioning) வைத்துப் பார்ப்பதன் மூலம் இடத்தைக் கண்டு பிடிக்கலாம் என்று எழுதியிருந்தேன்.
 
கடல் பயணத்தில் கப்பல் செல்லும் வேகம் அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல எடுக்கும் நேரம் இந்த இரண்டும் தெரிந்தால் ஒன்றை மற்றதால் பெருக்குவதன் மூலம் கப்பல் கடந்த தூரத்தைத் திருத்தமாகக் கணக்கிட்டு விடலாம்.
 
இப்போதெல்லாம் நேரத்தை ஒரு நொடி (second) பிசகாமல் அணுக்கடிகாரத்தின் உதவியால் கணித்து அதனை சரிசெய்து கொள்கிறார்கள். அணுக்கள் கோடிக்கணக்கான ஆண்டு காலமாக எந்தவித மாற்றத்துக்கும் உள்ளாகாமல் இருந்தமாதிரியே இருப்பதால் அணுக்கடிகாரம் எந்தப் பிசகும் இல்லாமல் நேரத்தைக் காட்டுகின்றன.
 
உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அதே சமயம் ஞாயிற்றைச் சுற்றி வரும்போது சில சமயங்களில் சுழற்சியில் ஏற்படுகிற பிறழ்ச்சி ( wobble) காரணமாக நேர வேறுபாடு  ஏற்படுகிறது. அந்த நேர வித்தியாசத்தைத் திருத்த அணுக் கடிகாரத்தைச் சரிசெய்கிறார்கள். சென்ற ஆண்டு (2001) அணுக்கடிகாரத்தை ஒரு நொடியினால் குறைத்தார்கள்.
 
ஒரு பாழ்வெறுமையில் வைக்கப்பட்டிருக்கும் 133 அணுக்கள் கொண்ட ஒளிக்கோட்டின் (beam of cesium atoms)  மீது மைக்கிறோ அலையைப் பாய்ச்சி இலக்றோன்களைப் புவியின் சுழற்சிக்கு ஏற்றவாறு மாற்றி வைத்து விடுகிறார்கள். அப்படி ஒரு நொடியை 9,192,631,770 அதிர்வுகளாகப் பிரித்து அணுநேரத்தைக் கணிக்கிறார்கள். அமெரிக்காவில்தான் இந்த அணுக்கடிகாரம் இருக்கிறது. அதனோடு வானலைகள் மூலம் தொடர்பு கொண்டு பெறப்படும் சமிக்ஞைகளை வைத்து அணுக் கைக்கடிகாரத்தின் நேரத்தை சரிசெய்து கொள்ளலாம். அணுக்கைக் கடிகாரங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. விலை அதிகம் இல்லை. 2ää500 அமெரிக்க டொலர்கள்தான்!
 
புவியின் சுழற்சிவேகம் குறைந்து கொண்டு வருவது உங்களுக்குத் தெரியும். சுமார் தொண்ணூறு கோடி ஆண்டுகளுக்கு முன் புவி ஞாயிற்றை சுற்றிவர 217 நாள்கள் மட்டுமே எடுத்தது. புவியின் சுழற்சி வேகம் குறையக் குறைய அது ஞாயிற்றைச் சுற்றிவரும் நாள்கள் அதிகரிக்கும். பயப்பட வேண்டாம். ஒரு நாள் அதிகரிக்க ஒரு கோடி வருடம் எடுக்கலாம். எனவே இந்த அதிகரிப்பைப்பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

அது சரி. இந்தக் நேரம் பற்றி அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள்? சிலர் இது கடவுளை மனிதன் படைத்ததுபோல மனிதலால் அவனது கற்பனையில் படைக்கப்பட்ட பொருள் என்கிறார்கள். இன்னொரு சாரார் நேரத்தை பிரித்துப் பெருக்கிப் பார்க்கிறோம். அதன் தாக்கத்தை ஒவ்வொருநாளும் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக எம்மை சுற்றியிருப்பபைää நாங்கள் உட்படää முதுமை அடைந்து அழிந்து போகிறோம். எனவே நேரம் என்ற ஒரு பொருள் இருக்கிறது என்கிறார்கள்.
 
வரலாற்றுக் காலம் தொடக்கம் மனிதர்கள் நேரத்தைப்பற்றி அறிந்து கொள்ளப் படாதபாடு பட்டிருக்கிறார்கள். நாங்கள் வாழும் புவி பால் வழி மண்டலத்தில் (ஆடைமல றுயல புயடயஒல) ஒரு சராசரி அளவுடைய விண்மீனை (ஞாயிறு) வலம் வருகிறது. இதனைப் புதிய கற்கால மனிதர்கள் (நேழடiவாiஉ)  கவனித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வானியல் ஐந்தொகுதிகளைக் (Astronomical Calendars) கண்டு பிடித்து நேரத்தைக் கணித்தார்கள். இங்கிலாந்தில் சலிஸ்பரி சமவெளியில் (Salisbury Plains)  உள்ள இராட்சத வட்டக்கல் அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்தத் தூண் எதற்காகää யாரால் நிறுவப்பட்டது என்ற விபரம் இன்று கிடைக்கவில்லை. ஆனால்ää அதன் அமைப்பைப் பார்த்தால் காலங்களையும்ää பருவங்களையும்ää சூரிய-சந்திர கிரகணங்களையும் கணிப்பதற்கு அது நிறுவப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரைகிறிஸ் – யூபிரட்டிஸ் நதிப் பள்ளத்தாக்கில் (இன்றைய இராக் ) வாழ்ந்த சுமேரியர்கள் உருவாக்கிய ஐந்தொகுதி ஒரு ஆண்டை ஒவ்வொன்றும் முப்பது நாள்கள் கொண்ட 12 மாதங்களாகப் பிரித்தார்கள். ஒரு நாளை 12 காலங்களாகவும் ( ஒரு காலம் இன்றைய 2 மணித்தியாலத்திற்கு ஒத்ததாக) ஒரு காலத்தை மீண்டும் 30 பாகங்களாகவும் ( ஒரு பாகம் இன்றைய 4 விநாடிகளை ஒத்ததாக) சுமேரியர்கள் பகுத்தார்கள். இதே இராக்கில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த பாபிலோனியர்கள் ஒரு ஆண்டை 29-30 நாள்கள் அடங்கிய 12 சந்திர மாதங்களாக வகுத்து ஒரு ஆண்டில் 354 நாள்கள் இருப்பதாகக் கணக்கிட்டார்கள்.
 
பாபிலோனியர்கள் போலலே முதலில் எகித்தியர்கள் காலத்தை நிலாவை வைத்தே கணக்கிட்டார்கள். பின்னர் இப்போது சைரஸ் என்று அழைக்கப்படும் நாய் நட்சத்திரம் (Canis which now called Sirius )  சூரியனுக்குப் பின்னால் ஒவ்வொரு 365 நாள்களுக்கு ஒருமுறை உதிப்பதைப் பார்த்து ஒரு ஆண்டில் 365 நாள்கள் கொண்ட ஐந்தொகுதியை கிமு 423 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழைய ஐந்தொகுதியாகும்.
 
மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இனத்தவர் 365 நாள்களைக் கொண்ட ஐந்தொகுதியைக் கணிக்க சந்திர- சூரியர்களை மட்டுமல்ல வெள்ளிக் கோளையும் சேர்த்துக் கொண்டார்கள். மாயன் நாகரிகம் கிமு 2000 – கி.பி. 1500 ஆண்டுவரை நிலைத்து இருந்தது. இவர்கள் விட்டுப்போன ஆவணங்களில் இருந்து இந்தஉலகம் கிமு 311 ஆம் ஆண்டு படைக்கப்பட்டதாக அவர்கள் நம்பியது தெரிகிறது. அவர்களது ஐந்தொகுதியின் அடிப்படையிலேயே பின்னர் வந்த அஸ்ரெக் (Aztec) இனத்தவர்கள் தங்களது ஐந்தொகுதியை உருவாக்கினார்கள்.
 
பண்டைய கிரேக்கர்கள் ஞாயிறு வட்டில்கள் ( ளரனெயைடள) கணிதம்ää தத்துவம் இவற்றின் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிட்டார்கள்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் இருந்த நகரங்கள்ää அமெரிக்காவில் இருந்த நகரங்கள் இவை ஒவ்வொன்றும் அந்தந்த நகரத்தில் ஞாயிறின் உதயம்ää ஞாயிற்றின் மறைவு இவற்றின் அடிப்படையில்  நேரத்தை வைத்துக் கொண்டார்கள். ஆனால்ää தொடர்வண்டிகள் கண்டு பிடிக்கப்பட்டு நீண்ட பெருஞ்சாலைகள் போடப்பட்ட பின்னர் இப்படி ஒவ்வொரு நகரமும் வெவ்வேறு நேரங்களைக் காட்டியது பெரிய குழப்பத்தை உண்டாக்கியது. எடுத்துக் காட்டாக ஒரு தொடர்வண்டி ஒரு நகரத்தில் இருந்து புறப்பட்டால் அடுத்த நகரத்துக்கு என்ன நேரத்தில் போகும் என்பதை கணிக்க முடியாமல் இருந்தது. அமெரிக்க தொடர்வண்டி – நெடுஞ்சாலை கம்பனிகள் நாடு முழுதும் காணப்பட்ட 80 கும் அதிகமான நேரங்களைக் கணக்கிட வேண்டியிருந்தது.
 
இப்படி நாட்டுக்குää நகரத்துக்கு ஒரு நேரம் என்ற குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய அறிவியலாளர்கள் 1884 ஆம் ஆண்டு வாஷிங்டன் தலைநகரிலில் கூடி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அவர்கள் சீரான நேரத்தைக் (Standard Time) கண்டு பிடித்தார்கள். அதற்குத் தோதாகப் புவியை 24 நேர மண்டலங்களாகப் பிரித்தார்கள். அப்போது இங்கிலாந்து நாடுதான் உலகில் கொடிகட்டிப் பறந்த நாடு. எனவே இங்கிலாந்தில் உள்ள கிறீன்விச் (Greenwich) என்ற நகரம் சுழியம் (zero) பாகை (இது வடக்குத் தெற்காக வடதுருவத்தையும் – தென்துருவத்தையும் இணைக்கும் ஒரு கற்பனைக் கோடு) தொலைவில் உள்ளதெனத் தேர்ந்தெடுத்தார்கள்.
 
இந்த நகரம் தேம்ஸ் நதியிலிருந்து இலண்டன் பக்கமாக 4 மைல் தொலைவில் இருக்கிறது. இந்த நகரைத் தேர்ந்தெடுத்தற்கு பிரஞ்சுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், அவர்களால் பிரித்தானியர்களை எதிர்த்துப் போட்டி போடவோ அவர்களது செல்வாக்குக்கு ஈடு கொடுக்கவோ முடியவில்லை. அப்படிப் போட்டி போட முடிந்திருந்தால் இந்த சுழியம் கோடு கிறீன்விச் நகரத்துக்குப்பதில் பாரிஸ் நகரத்தை ஊடறுத்து வரையப்பட்டிருக்கும். கிறீன்விச் சுழியக் கோட்டில் நேரம் நண்பகல் 12 மணியென்றால் அதற்கு கிழக்கே ஒவ்வொரு பாகைக்கும் 4 மணித்துளி கூடிக்கொண்டு போகும். மேற்கே அதேயளவு குறைந்து கொண்டு போகும்.
 
கிழக்கே 180 பாகையில் (12 மணித்தியால வித்தியாசம்) அனைத்துலக நேரம் தொடங்குகிறது. அதாவது பொழுது விடிந்து பகல் தொடங்குகிறது.
 
இந்த கிறீன்விச் பூச்சியக் கோட்டை நேரில் பார்த்திருக்கிறேன். வடதிசையைப் பார்த்துக் கொண்டு கோட்டின் இருமருங்கிலும் கால்களை வைத்தால் இடது கால் மேற்குத் திசையிலும் வலது கால் கிழக்குத் திசையிலும் ஒரே நேரத்தில் இருக்கும்!  
 

கியூபா பயணக் கட்டுரை (46)
 
ஒரு பருந்தின் நிழலில்
 கிரேக்க அறிவியாலர்கள்
 
கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்துää சரியாகச் சொன்னால் மீள் கண்டுபிடித்து 500 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இந்த அசுர சாதனையின் 500 ஆண்டு நிறைவை வட- தென் அமெரிக்கர்கள் தடபுடலாகக் கொண்டாடினார்கள். கொலம்பசின் அமெரிக்கக் கண்டுபிடிப்பால் பூர்விகக் குடிமக்கள் போரினாலும் நோயினாலும் பெருமளவு அழிந்துதொழிந்தார்கள் என்பது உண்மைதான். அது கொலம்பசின் அமெரிக்கக் கண்டுபிடிப்புப் பற்றிய வரலாற்றின் இருண்ட பகுதியாகும். இருந்தும் கொலம்பசின் சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
 
மகாகவி பாரதியார்
 
சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
 
என்று பாடியதை வைத்துக் கொண்டு மேடை எல்லாம் தமிழர் வீரத்தை முழங்குகின்றோம்.
 
முதலாம் இராசராச சோழனும் (இயற்பெயர் அருண்மொழித்தேவன்) அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழனும் (இயற்பெயர் மதுராந்தகன்) 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசை நிறுவினார்கள். இந்திய வரலாற்றில் பெரிய கடற்படையை வைத்திருந்த பெருமையும் இவர்களையே சேரும். கடல் கடந்து படையெடுத்து ஈழம், கடாரம், சாவகம், புட்பகம். முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் (மாலைதீவு) கலிங்கம் போன்ற நாடுகளை வென்று அங்கு தங்கள் புலிக்கொடியைப் பறக்க விட்டார்கள். ஈழத்தை ஆண்ட ஐந்தாம் மகிந்தனைச் சிறப்பிடித்ததோடு நில்லாமல் ஈழ மன்னனிடம் பாண்டியர் அடைக்கலம் வைத்த சுந்தரமணிமுடியும் இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றி இராசேந்திரன் தமிழகம் மீண்டான். ஈழத்தை சோழர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக சோழப் பேரரசின் மண்டலங்களில் ஒன்றாகவும் (9 வது மண்டலம்) ஜெகநாதமங்களபுரத்தை (பொலனறுவை) அதன் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்தார்கள்.
 
பொருகட லீழத் தரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்டரை ஈழ மண்டல முழுதும் …

 
என்ற கல்வெட்டு ஈழமண்டலம் முழுதும் சோழர்வசம் ஆகியதை உறுதிப் படுத்துகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் கனகவிசயர் என்ற வடபுல வேந்தர் அருந்தமிழின் நேர்மையும்ää சீர்மையும்ää அருமையும்ää பெருமையும் தெரியாதுää மூவேந்தர்களின் தோள்வலியும் வாள்வலியும் புரியாது செருக்கோடு இழித்துப் பழித்தார்கள் எனக் கேட்டு வெகுண்டெழுந்து வடநாடு மீது படை நடத்திச் சென்று கனகனையும் விசயனையும் போரில் தோற்கடித்து, சிறைப் பிடித்து அவர்கள் தலையில் இமயத்தில் இருந்து பெயர்த்தெடுத்த கல்லைச் சுமத்திக் கொண்டுவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான். அதனை இளங்கோ அடிகள் தான் படைத்த சிலப்பதிகார காவியத்தில் கால்கோட் காதையில் பெருமிதத்தோடு இனிமையான தமிழில் வடித்திருக்கிறார்.
 
இவற்றையே பாரதியார் புகழ்ந்து பாடியிருக்கிறார். ஆனால், இராசராசனும் இராசேந்திரனும் வாள்முனையில் பிடித்த நாடுகள் ஒன்றேனும் தமிழர்களுக்குச் சொந்தமாகவில்லை. கடாரம், சாவகம், புட்பகம், மாலைதீவு போன்ற நாடுகளில் மருந்துக்கும் தமிழன் இல்லை. அருகிலுள்ள ஈழத்தின் பெரும்பகுதி கைவிட்டுப்போனது மட்டுமல்ல, அருகிலுள்ள மாலைதீவும் கோட்டை போனது.
 
எங்கள் காலத்தில் கச்சதீவை சிங்களத்துக்கு தாரைவார்த்த காரணத்தால் தமிழகத் தமிழன் கச்சையையும் இழந்து தவிக்கிறான்!
 
ஒருவேளை அன்றைய மூவேந்தர்கள் இத்தகைய படையெடுப்புக்களைத் தங்கள் தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுக்கவும்ää தமிழ் மறத்தை திசையெட்டும் பறையறையவும் மேற்கொண்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. அவர்களுக்கு அன்று நாடு கொள்ளும் ஆசை இருக்கவில்லை போலும்.
 
இதற்கு நேர்மாறாக கொலம்பஸ் ஒரு கண்டத்தையே கண்டுபிடித்தார். அல்லது கண்டுபிடிக்கக் கால்கோள் நாட்டினார். அதனால் இன்று அமெரிக்காக் கண்டம் ஆங்கிலேயர்ää இசுப்பானியர்ää போர்த்துக்கேயர்ää ஒல்லாந்தர்ää பிரஞ்சுக்காரர் போன்றோரது நாடுகளாகää சுதந்திர நாடுகளாகää அவர்களது மொழி பேசப்படும் நாடுகளாக தலை நிமிர்ந்து நிற்கின்;றன.
 
எனவேதான் என் பார்வையில் கொலம்பசின் சாதனை அசுர சாதனை எனப் போற்றத் தோன்றுகிறது. அவரது ஊக்கவுடமைää துணிச்சல்ää வினை செயல்ää வினைத் திட்பம் வியப்பை அளிக்கிறது. அவரது வெற்றிக்கு அன்றைய அறிவியலே அச்சாணியாக இருந்திருக்கிறது.
 
உலக நாகரிகத்திற்கும் அறிவியலுக்கும் கிரேக்கத்தின் பங்குபற்றி முன்னர் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒரு துறையில் மட்டுமல்ல பல்துறைகளிலும் அவர்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். கணக்கியல்ää நிலவியல்ää வானியல்ää தாவரவியல்ää இயற்பியல்ää வரலாறு இப்படி எந்தத் துறையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
 
ஐரோப்பா கண்டம் இருண்ட காலத்தில் இருந்து வெளிச்சத்திற்கு வரவும்ää நாகரிகம் அடையவும் சோக்கிறட்டீஸ்ää பிளட்டோää அரிஸ்தோட்டல்ää பைத்தாக்கிரஸ்ää இக்குலிட் (நுரஉடனை ) ஆர்க்கிமிடீஸ்  (யுசஉhiஅநனநள) தொலமி (Pவழடநஅல) போன்ற எண்ணிறந்த கிரேக்க அறிவியலாளர்களின் சிந்தனையில் பூத்த பூக்களே பயன்பட்டன.
 
ஒருபுறம் கற்பனைக் கடவுள்கள் பற்றிச் சிலர் புராணங்கள்ää இதிகாசங்கள்ää புனைகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது மறுபுறம் கிரேக்க தத்துவாசிரியர்கள் இயற்கைபற்றி ஆராய்ச்சி செய்து அதில் புதைந்து கிடந்த மர்மங்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டார்கள். சோக்கிறட்டிஸ்
 
அரிஸ்தோட்டல் (Aristotle) அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். கெறடோற்ரஸ் (Herodotus B.C. 485-425) வரலாற்றின் தந்தை எனப் புகழப்படுகிறார். கிப்போகிறேதிஸ் (ர்ippழஉசயவநள)  மருத்துவத்தின் தந்தை எனப் பெயரெடுத்துள்ளார். அவர் தனது மாணாக்கர்களுக்குச் செய்து வைத்த உறுதிமொழியே இன்றளவும் உலகத்தில் உள்ள அத்தனை மருத்துவ மாணவர்களும் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறும் போது எடுத்துக் கொள்கிறார்கள்.
 
இவர்களில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய இன்னொரு தத்துவாசிரியர் இருக்கிறார். அவரது பெயர் தேல்ஸ் ( Thales of Miletus 624 – 546 BC.) பண்டைய கிரேக்கத்தின் ஏழு அறிஞர் பெருமக்களில்; இவர் ஒருவர். இவர்தான் கிரேக்கத்தின் இயற்கை தத்துவாசிரியர்கள் (கிரேக்கத்தில் எல்லா அறிவியலாளர்களையும் தத்துவாசிரியர்கள் என்ற ஒரே சொல்லில் அழைத்தார்கள்) வரிசையில் முதல் அறிவியலாளர். பண்டைய கிரேக்க நாட்டின் சிந்தனையாளர்களது ஐயோனியன் என்ற பிரிவிவைத் தோற்றுவித்தவரும் (Founder of the  Ionian school of ancient Greek thinkers)இவரே.
 
இவர் எகிப்தின் புகழ்பெற்ற பிரமிட் கோபுரங்களை அளந்தவர் எனச் சொல்லப்படுகிறது. கணக்கியலைப் பயன்படுத்தி கடற்கரையில் இருந்து வெகுதொலைவில் பயணம் செய்யும் கப்பல்களின் தூரத்தை இவர் கணித்துச் சொல்லிவிடுவாராம். கி.பி. 585 இல் ஏற்பட்ட ஞாயிறு கிரகணத்தையும் இவர் முன்கூட்டியே கணித்துச் சொன்னாராம். கணக்கியலில் ஐந்து தேற்றங்களைக் கண்டுபிடித்த பெருமையும் இவரைச் சார்ந்ததாம். அதில் ஒன்று ஒரு அரைவட்டத்தினுள் கீறப்பட்ட முக்கோணத்தில் ஒன்று செங்கோணமாக இருக்கும் என்பதாகும். இயற்கையில் காணப்படும் பொருட்களின் மூலப்பொருள் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து அது நீராக இருக்கலாம் என்ற கருத்தை இவர் வெளியிட்டார்.
 
கிரேக்கத்தைப் புராண காலத்தில் இருந்து ஏன்? எதற்காக? எப்படி? என்ற அறிவியல் ஆராய்ச்சி உலகுக்கு இழுத்து வந்த பெருமை தேல்ஸ் உடையதாகும். இத்தியாதி காரணங்களுக்காகத்  தேல்சை மெய்யியலின் நிறுவனர் என்று அரிஸ்தோட்டல் பாராட்டி இருக்கிறார்.
 
கிபி 450 ஆம் ஆண்டளவில் ஏதன்ஸ் நகரில் தோன்றிய தத்துவம்ää அறிவியல் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். கி.பி. 470 ஆம் ஆண்டு பிறந்த சோக்கிறட்டிசுடனேயே அறிவியல்  தொடங்குகிறது. யாரைப்பற்றித் தெரியாவிட்டாலும் சோக்கிறட்டிஸ்பற்றி ஓரளவாவது நாம் அறிந்து வைத்திருக்கிறோம். “உன்னையே நீ அறிவாய்” (“Know Thyself) என்ற அவரது வாக்கியம் மிகவும் பிரபல்யமானது. இவர் நுண்மாண் நுழைபுலம் படைத்த மிகப் பெரிய சிந்தனையாளர். ஒன்றும் தெரியாத அறிவிலிபோல் நடித்து, கேள்வி கேட்பவர்களிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு, அவரைப் புத்திசாலிபோல் முதலில் நம்பவைத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி கேட்பவரின் அறியாமையை நோகாமல் எடுத்துச் சொல்லி உண்மையை நிலைநாட்டுவது இவரது பாணி.
     

கியூபா பயணக் கட்டுரை (47)
ஒரு பருந்தின் நிழலில்
“எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதென்பதுதான்”

 
 மெய்யியலை (மெய்யறிவின் மீதான விருப்பு) மதத்தில் இருந்து பிரிப்பது கடினம். அதனை அறிவியல் மற்றும் கணக்கியல் இவற்றில் இருந்து பிரிப்பதும் கடினமாகும். மெய்யியலின் குறிக்கோள் இயற்கையில் நிகழும் இயக்கங்களில் ஒரு ஒழுங்கைக் கண்டு அது புலவுணர்வுக்குப் பொருந்தி வருகிறதா என்பதை கண்டறிவதாகும்.
 
முதலாவது பிரிவினர் அறவொழுக்கம் பற்றி (Ethics) விசாரணை செய்தவர்கள். இவர்கள் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சரி பிழை என்று ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதனை எப்படி இனங்கண்டு கொள்வது? சரியும் பிழையும் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியா? அல்லது சிலரைப் பொறுத்தளவில் அதுபற்றிய விதிகள் வேறா? யார் இந்த விதிகளைச் செய்தார்கள்? இன்பம்தான் மனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானதா?
 
இரண்டாவது பிரிவினர் எல்லாம் விதிவழி (குயவந ழச Pசநனநளவiயெவழைn) என்பவர்கள். இவர்கள் இந்த உலகத்தின் இயக்கத்தைப்பற்றி அக்கறை செலுத்தியவர்கள். விதி என்றொன்று உண்டா? மக்கள் தங்கள் விதியைத் தாங்களே நிருணயித்துக் கொள்கிறார்களா? அல்லது வானத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் தெய்வங்கள் தீர்மானிக்கின்றனவா? விதியை மாற்றி எழுத முடியுமா? எதிர்காலத்தை தெரிந்து கொள்ள மனிதனுக்கு வழி உண்டா? மனிதனால் அது முடியுமா?
 
மூன்றாவது வகையினர் மக்களைவிட இந்த இயற்கை உலகத்தைப் பற்றிய (Natural World) தத்துவ விசாரணையில் இறங்கியவர்கள். இந்த உலகம் எங்கிருந்து வந்தது? அதனைப் படைத்தவன் அல்லது அதன் காரணகர்த்தா யார்? உலகம் ஏன் படைக்கப்பட்டது? அது யாருக்காகப் படைக்கப்பட்டது? அண்ட கோளங்கள்எல்லாம் ஒரு ஒழுங்கில் காணப்படுவதற்கு ஏதாவது பொருள் உண்டா அல்லது அது தற்செயலான நிகழ்வா?
 
இப்படியான தத்துவ விசாரணைகளில் பண்டைய பபிலோனியர்கள்ää எகிப்தியர்கள், யூதர்கள், உரோமர்கள், கிரேக்கர்கள் ஈடுபட்டார்கள். இருந்தும் கிரேக்கர்களே, குறிப்பாக அரிஸ்தோட்டல், இயற்கை உலகம் பற்றிய விசாரணையில் சிறந்து விளங்கினார்கள்.
 
ஏதன்ஸ் நகரத்தின் மெய்யியல்வாதிகள் மூவரில் சோக்கிறட்டிஸ் முதன்மையானவர். எஞ்சிய இருவரும் பிளாட்டோவும் அரிஸ்தோட்டலும் ஆவர். இந்த மும்மூர்த்திகளே கிரேகத்தின் அறிவியலுக்குக் கால்கோள் இட்ட சிந்தனையாளர்கள்.
 
சோக்கிறட்டிஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் ஒரு சிற்பியாவார். அவரது தாயார் ஒரு மருத்துவிச்சி. தனது தந்தை போலவே சோக்கிறட்டிஸ் கொஞ்சக்காலம் சிற்பியாகத் தொழில் செய்தார் எனத் தெரிகிறது. பெலொப்னீசியன் யுத்தம் (Pநடிpழnநௌயைn றுயச) தொடங்கியபோது ஏதன்ஸ் நகரம் சார்பாக சோக்கிறட்டிஸ் யுத்தமுனையில் போரிட்டார்.
 
தனது 40 ஆவது அகவையில் தன்னைச் சுற்றிய இந்த உலகத்தை அறிய முயற்சித்தார். கடினமான பல கேள்விகளுக்கு விடைகாண முயன்றார். கேள்விகளுக்கு விடை காண்பது அவர் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமான விடயமல்ல என்பதைக் கண்டார்.
 
அறிவு என்றால் என்ன? அழகின் வரைவிலக்கணம் என்ன? சரியென்று செய்யப்படுவவை எவை? இந்தக் கேள்விகளுக்கு தனித்து விடை காண்பது அரிதென்பதால் பலரையும் சேர்த்து சிந்திக்க வைத்து அவர்களது யோசனையின் அடிப்படையில் விடைகாண முயன்றார். அதற்காக ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி வந்து தான் காணும் மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அறிவு என்றால் என்ன? கடவுள்பற்று என்றால் என்ன? இவைபோன்ற கேள்விகளை அவர் கேட்டார்.
 
பலர் தாங்கள் சோலியாக இருப்பதாகவும் தங்களுக்கு நேரம் இல்லையென்று சாட்டுச் சொல்லித் தட்டிக் கழித்தார்கள். சிலர் அவரது கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சித்தார்கள். அப்படிச் சொல்லும் போது மேலும் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு தர்க்கரீதியாக அவர்களைச் சிந்திக்கச் சொல்வார். இதனால் விடை சொன்னவர்களின் கோபத்தையும் சோக்கிறட்டிஸ் சம்பாதிக்க வேண்டி நேரிட்டது.
 
மிக விரைவில் சோக்கிறட்டிசைச் சுற்றி ஒரு இளைஞர் கூட்டம் திரண்டது. சோக்கிறட்டிஸ் சொல்வதைக் கவனமாகச் செவிமடுத்துத் தெளிவாகச் சிந்திப்பது எப்படி என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொண்டார்கள். இப்படிப் படிப்பிப்பதற்குத் தனது மாணாக்கர்களிடம் இருந்து சோக்கிறட்டிஸ் பணம் வாங்குவதில்லை. ஊதியம் வாங்காமலேயே படிப்பித்தார்.
 
சோக்கிறட்டிஸ் மனிதர்களது அபிப்பிராயங்களை உண்மை என்ற கோலை வைத்து அளக்கும் போது தான் உட்பட எல்லோருமே அறிவிலிகள் (கழழடள) என வாதித்தார். சோக்கிறட்டிஸ் தனக்கு அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரியாதென்றார். சாதாரண பேர்வழிகள் அப்படி நினைக்கவில்லை. அவருக்கு அனைத்தும் தெரியுமென்று நினைத்தார்கள். அதனால் மனிதர்களுக்குள் சோக்கிறட்டிஸ் மிகவும் புத்திசாலி என மற்றவர்கள் எண்ணினார்கள்.
 
சோக்கிறட்டிசின் பணிவுக்கு எடுத்துக் காட்டாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருமுறை அவரைப் பார்த்த உடல்மருத்துவர் (phலளழைபழெஅளைவ) அவர் பொய் பேசக் கூடியவர்ää வயிறுபுடைக்கச் சாப்பிடுபவர்ää குடிகாரன் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்ட சோக்கிறட்டிசின் மாணாக்கர்களுக்கு மகா கோபம் வந்தது. தங்களது ஆசிரியரை அவ்வாறு கேவலமாகப் பேசியவரை அடிக்கப் போனார்கள். ஆனால்ää சோக்கிறட்டிஸ் அப்படிச் செய்யக்கூடாது என அவர்களைத்; தடுத்தார். “அமைதியாக இருங்கள். அவர் உண்மையைத்தான் சொன்னார். தன்னடக்கத்திற்கு நான் ஆள்படாவிட்டிருந்தால் அவர் வர்ணித்த மாதிரியே நான் இருந்திருப்பேன்” என்றார்.
 
கிமு 399 ஆம் ஆண்டளவில் இளைஞர்களை சோக்கிறட்டிஸ் தவறான பாதையில் அழைத்துச் சென்று அவர்களைக் கெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுப் பலமாக எழுந்தது. எனவே அவர் கடவுளர்களை மதிக்க மறுக்கிறார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இந்த நீதிமன்றம் சோக்கிறட்டிஸ் குற்றவாளி எனக் கண்டு அவருக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கியது. இந்தப் புகழ்பெற்ற நீதிமன்ற விசாரணை உங்கள் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.
 
நல்ல கேள்விகளே அறிவு பற்றிய தேடலின் ஆரம்பமாகும். ஒரு விடயம் பற்றி நாங்கள் இன்னொருவரோடு விவாதிக்கும்போது பல கேள்விகளைக் கேட்கிறோம். அந்தக் கேள்விகள் பொருள் நிறைந்ததாக இருந்தால் விவாதிக்கப்பட்ட விடயம் சம்பந்தமான உண்மையை ஓரளவாவது தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. இந்த வழியையே சோக்கிறட்டிஸ் உண்மையைத் தேடி அறிவதற்கு மேற்கொண்டார். இதனால் சிலர் கோபம் அடைந்தார்களää சிலர் பாராட்டினார்கள். இதுதான் சோக்கிறட்டிஸ் மேற்கொண்ட விசாரணையால் அவருக்குக் கிடைத்த நன்மையும் தின்மையுமாகும்.
 
தான் சந்திக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் கேள்விகளைக் கேட்பதின் மூலம் ஒரு விடயம்பற்றிய உண்மையை அல்லது பொய்மையை சோக்கிறட்டிஸ் நிறுவ முயன்றார். பிளாட்டோ தலை சிறந்த தத்துவாசிரியரான சோக்கிரட்டிஸ் உயிரோடு இருந்தபோது தனது மாணாக்கர்களுக்குப் படிப்பித்த தத்துவங்கள் எதனையும் நூல் வடிவில் எழுதி வைக்கவில்லை. ஆனால், அவர் இறந்தபின் அவரது தலை மாணாக்கர்களில் ஒருவரான பிளாட்டோ (கிமு 427-347) சோக்கிறட்டிஸ் கற்பித்தவற்றை விரிவாக எழுத்தில் வடித்தார். அப்படி எழுதிய நூல்களில் The Apology ஒன்றாகும்.  Apology என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் தன்னிலை விளக்கமாகும் (னுநகநnஉந ளுpநநஉh).
 
இந்த நூலில் சோக்கிறட்டிசின் தலைசிறந்த தத்துவார்த்த உரையாடல்களையும் பேச்சுக்களையும் கற்பித்தல்களையும் பிளாட்டோ பதிவு செய்துள்ளார். உலகமே எதிர்த்து நின்றாலும் ஒருவர் தான் எவற்றைச் சரியென்று நினைக்கிறாரோ அதனைச் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் எப்படிப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியிலும் மெய்யறிவைத் தேட வேண்டும் என்பது சோக்கிறட்டிசின் தத்துவமாகும்.
 
சோக்கிறட்டிசின் தத்துவ விசாரணையின் பாணிபற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன். தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்டுää கேள்வி கேட்டவரின் கேள்விகளில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி அவரது ஆரம்ப துணிபுரை (ழசபைiயெட யளளநசவழைn) தவறானது என எண்பிப்பதே அவரது பாணியாகும். அந்தக் கேள்விகளைக் குறுக்கு விசாரணை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
 
சோக்கிறட்டிஸ் தன்னைப் பொறுத்தளவிலும் எந்தத் துணிபுரையையும் நிலைப்பாடாகக் கொள்வதில்லை. த அப்பொலொஜி என்ற நூலில் சோக்கிறட்டிஸ் தனக்கு ஒன்றுமே தெரியாது என்ற நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார்.
 
தனக்குத் தெரிந்ததெல்லாம் தனக்கொன்றும் தெதியாதென்பதுதான்! தான் கண்டு பிடித்த உண்மை என்னவென்றால் தான் உண்மை எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான்!
 
அறம் (எசைவரந) என்ற சொல்லுக்கு மட்டும் அவர் வரைவிலக்கணம் கூறியுள்ளார். “அறம் என்றால் அறிவு” (ஏசைவரந ளை மழெறடநனபந) என்பதே அவர் சொல்லிய வரைவிலக்கணமாகும். ஒருவருக்கு நல்லது எது என்பது மட்டும் தெரிந்துவிட்டால் அவர் எப்போதும் நல்லதையே செய்வார். அதில் இருந்து பெறப்படும் உண்மை என்னவென்றால் தீமை செய்பவர் எது நன்மை என்று தெரியாததாலேயே தீமை செய்கிறார். ஒருவருக்கு அறம்ää ஒழுக்கம்ää அன்பு அல்லது வேறு ஏதாவது அறம்பற்றிப் பிழையான சிந்தனைகள் இருந்தால் அவர் சரியானவற்றைச் செய்வார் என்று நம்பமுடியாது.

ஒரு இலக்கியல் (இலட்சிய) அரசு அல்லது குடியரசு (An ideal state or Republic) பற்றிக் கற்பனை பண்ணுவதை கிரேக்கத்தில் Utopian சிந்தனை என்று வர்ணிப்பார்கள். உத்தோப்பியன் என்ற சொல்லுக்கு “இடம் இல்லை அல்லது வெற்றிடம்” என்பது பொருளாகும்.
 
பிளாட்டோ (சோக்கிறட்டிஸ் மூலம்) மக்களை அவர்களது இயற்கையான புத்திசாலித்தனம்,பலம், வீரம் இவற்றின் அடிப்படையில் பகுக்கிறார். அதிக புத்திசாலித்தனம், பலம், வீரம் இல்லாதவர்கள் வேளாண்மை, கொற்தொழில், கட்டிட நிர்மாணம் போன்றவற்றிற்கு தகுதியானவர்கள். ஓரளவு புத்திசாலித்தனம், பலம், மிகுந்த வீரம் உடையவர்கள் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ளத் தகுதியானவர்கள். மிகவும் புத்திசாலித்தனம், வீரம் படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்குப் பொருத்தமானவர்கள்.
 
பிளாட்டோவின் இலக்கியல் அரசு மேற்குடி அல்லது உயர்குடி ஆட்சியாகும் (Aristocracy) அதாவது “திறமைசாலிகள் கோலோச்சுகிற ஆட்சி” ஆக மக்கள் சமூகத்தை பிளாட்டோ மூன்று வகுப்பினராகப் பிரிக்கிறார். கீழ் மட்டத்தில் பெரும்பான்மைப் பலம் கொண்ட தொழிலாளர்கள்ää விவசாயிகள் (பொதுமக்கள்). இடை மட்டத்தில் பாதுகாப்புத் தொழிலில் இருக்கும் படைவீரர்கள். ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாகக் கையில் வைத்திருக்கும் மிகச் சிறுபான்மையான தத்துவவாதிகள்.
 
பிளாட்டோவின் இலக்கியல் அரசில் வீரம் படையினரோடும்ää புத்திசாலித்தனம் அல்லது மெய்யறிவு தத்துவவாதிகளோடும், உடலுழைப்பு பொதுமக்களோடும் தொடர்பு படுத்தப்படுகிறது.
 
ஒரு விதத்தில் பிளாட்டோவின் சிந்தனை ஆரியரின் நால்வர்ண தர்மத்தோடு ஒத்துப் போவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. உழைப்போர் (சூத்திரர்), படையினர் (சத்திரியர்) மற்றும் தத்துவாதிகள் (பிராமணர்கள்) இருசாராருக்கும் அடங்கி நடக்க வேண்டும், படையினர் தத்துவதாதிகளது சொற்படி நடப்பது மட்டுமல்ல அப்படி நடந்து கொள்வதையிட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதும், சூத்திரர் (உழைப்பாளர்கள்) ஏனைய பிராமணர், சத்திரியர் (வீரர்கள்), வைசிகருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதும், வைசிகர் ஏனைய இரு வர்ணாத்தாருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும், சத்திரியர் பிராமணரது சொற்கேட்டு ஆட்சி செய்ய வேண்டும் என்பதும் நால்வர்ண தர்மத்தை (வைசிகர் நீங்கலாக) ஒத்திருக்கிறது.
 
பிளாட்டோவின் இலக்கியல் குடியரசு இன்றைய காலத்துக்கு ஒத்து வருமா? இன்றைய அமெரிக்க அல்லது இந்திய மக்களாட்சி பற்றி பிளாட்டோ என்ன நினைத்திருப்பார்?
 
பிளாட்டோ மக்கள் சமூகத்தை மூன்று படிகளாகப் பிரித்திருப்பது சரியா என்பது விவாதத்துக்குரியது. இன்றைய சமூகத்திலும் கீழ்மட்ட, மத்திய, மேல்மட்டப் பிரிவுகள் இருப்பது கண்கூடு. ஆள்வோர் பெரும்பாலும் பணம் படைத்த உயர்மட்டத்தில் இருந்தே வருகிறார்கள். ஒரு வித்தியாசம். கீழ் இருப்போர் எப்போதும் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டியதில்லை. கடும் உழைப்பு, கொஞ்சம் அதிட்டம் இருந்தால் அவர்கள் மத்திய, உயர்மட்டத்துக்கு உயர வாய்ப்புண்டு. ஆனால், இந்த வாய்ப்பு எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் மிகச் சிறுபான்மையினரே அப்படி வாழ்க்கையில் உயர்வதைப் பார்க்கிறோம்.
 
மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் பிள்ளை படித்து டாக்டராக வரும் வாய்ப்பைவிட ஒரு ஆசிரியராக வரும் வாய்ப்புத்தான் அதிகம். ஆனால், ஆசிரியரின் பிள்ளை டாக்டராக வரும் வாய்ப்பு இருக்கிறது. முதல் தலைமுறை உழைப்பாளர்களாகவும், இரண்டாவது தலைமுறை மத்திய வகுப்பாராகவும் மூன்றாவது தலைமுறை முதலாளிகளாகவும் மாற இன்றைய சமூக ஒழுங்கு ஓரளவு இடம்கொடுக்கிறது. இருந்தும் அதனை விதியாகக் கொள்ளாது விதிவிலக்கு எனக் கொள்ளப்படுவதே சிறந்தது. இப்படியான சமூக அசைவை (social mobility) நாம் மேற்குலக சமூக நடைமுறையில் காணக் கூடியதாக இருக்கிறது.
 
மேற்கு நாடுகளில் பொதுவுடமைத் தத்துவம் தலைதூக்காமல் போனதற்குக் காரணம் ஒவ்வொரு தொழிலாளியும் நாளை முதலாளியாக வந்து விடலாம் எனக் கனவு காண்பதுதான்!
 
ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது சமூக ஏணியில் கீழோர் கீழோராகவும், மேலோர் மேலோராகவும் இருப்பதையே காண முடிகிறது. முதலாளித்துவ சமூகத்தில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதும் ஏழை மேலும் ஏழையாவதே நியதியாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் குபேரர்களும் கோவணாண்டிகளும், கோபுரங்களும் குடிசைகளும் பெரும்பான்மை -சிறுபான்மையாக அருகருகே இருப்பதைக் காணலாம்!
 
எது எப்படி இருப்பினும் ஒரு இலக்கியல் குடியரசுபற்றி மிக ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் பிளாட்டோ (சோக்கிறட்டிஸ்) சிந்தித்து அதையிட்டு விவாதித்திருப்பது போற்றத் தக்கது.
 
நமது முன்னோர்கள் இப்படி எல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக எண்ணப்படும் திருவள்ளுவர் ஒருவரே முடியாட்சி அரசியல்பற்றி சிந்தித்து அதுபற்றி ஓரளவு விரிவாக எழுதியிருக்கிறார். பொருட்பாலில் அரசியலின் கீழும், அங்க இயலின் கீழும் இறைமாட்சி, அமைச்சு, சொல்வன்மை, வினைத் தூய்மை, வினைத் திட்பம், தூது, மன்னரைச் சார்ந்திருத்தல், நாடு, அரண், படைமாட்சி, படைச்செருக்கு, பகைமாட்சி, பகைத்திறம், உட்பகை பற்றித் தனித்தனி அதிகாரம் படைத்துள்ளார்.
 
பிளாட்டோ இந்த உலகத்தைப் பற்றியும் அதன் இயக்கத்தைப்பற்றியும் ஆழ்ந்து சிந்தித்தார். அவரது சிந்தனையின்படி எல்லாப் பொருட்களுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது என்பது அவர் துணிபு. எடுத்துக் காட்டாக ஒரு குதிரைக்கு ஒரு வடிவம் இருக்கிறது. குதிரைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டாலும் அதன் வடிவம் மாறுவதில்லை (ஒரு குதிரை 50வது மாடி வீட்;டில் இருந்து விழுந்தால் அப்போது அது குதிரையாக இருக்காது என்றாலும் வடிவம் மாறாது). ஏன் குதிரைகள் இந்த உலகத்தில் இருந்து ஒழிந்து போனாலும் அதன் வடிவம் மாறாது.
 
பிளாட்டோ இந்த உலகத்தை இரண்டு பகுதியாகப் பிரித்தார். ஒன்று நாம் காணும் உலகம். மற்றது புலன்களுக்குத் தென்படாத உலகம். காணும் உலகத்தைப்பற்றி நாங்கள் ஒரு அபிப்பிராயத்தை (opinion) வைத்திருக்கலாம். காணா உலகத்தைப்பற்றி நாங்கள் அறிவினால் அறிந்து கொள்ளலாம்.
 
காணும் உலகம் அல்லது மாறும் உலகத்தை மேலும் இரண்டாகப் பகுக்கலாம். கீழ்ப்பகுதி நிழல், பிரதிபிம்பம், ஓவியம், கவிதை போன்றவற்றை உள்ளடக்கிய “மாயை” (illusion). மேல்ப் பகுதி மாறும் பொருட்கள்பற்றிய அறிவு (எடுத்துக் காட்டாகக் குதிரை) “நம்பிக்கை” (belief). நம்பிக்கை சிலசமயம் அல்லது பெரும்பாலும் சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சில வேளைகளில் அது பிழையாக (காணும் உலகத்தில் பொருட்கள் மாறுவதால்) இருக்காலாம். நம்பிக்கை நடைமுறைச் சாத்தியமானது. அது வாழ்க்கைக்கு நம்பும்படியான வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால், நிசம் என்று சொல்லும் அளவுக்கு இருக்காது.
 
மேல்ப்பகுதி கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளப்படும் அறிவு (எடுத்துக் காட்டு கணக்கியல் உண்மைகள்) மற்றது கூர்மதி.
 
பிளாட்டோ ஆன்மாபற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஆன்மாவை மூன்றாகப் பிரிக்கிறார். அவை மூன்றுவிதமான நலன்களோடுää மூன்றுவித அறங்களோடு மூன்றுவித ஆளுமையோடு சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றைப் பின்வரும் அட்டவணை மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
 
  அட்டவணை

ஆன்மாநலன்கள்வகுப்பு        குணம் 
புத்திஞானம்தத்துவவாதிகள் மெய்யறிவு நீதி
ஆவிபெருமிதம்படைவீரர்கள்ஆண்மை 
அவாஇன்பங்கள்உழைப்போர்நிதானம் 


ஆவி (spirit) என்று பிளாட்டோ குறிப்பிடுவது ஆன்ம சக்தியை. ஒரு குதிரையை இயக்குவது அதன் ஆன்மாதான். நிதானம் அல்லது தன்னடக்கம் (temperance) என்பது அவாவைக் கட்டுப்படுத்தல். இப்போது இந்தச்சொல் மதுவிலக்கைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆன்மாவின் பிரிவுகள் உடம்பின் மூன்று அங்கங்களோடு ஒத்திருக்கிறது. புத்தி தலையோடுää ஆவி இதயத்தோடுää அவா ஆசையைத் தூண்டும் பொறிகளோடு. கட்டுக்கடங்காத அவாதான் எல்லாச் சிக்கல்களுக்கும் மூல காரணம் எனப் பிளாட்டோ நம்பினார்.
 
புத்தி தலையோடு சம்பந்தப்பட்டது என்பது பிளாட்டோ அல்லது சோக்கிரட்டிஸ் செய்து கொண்ட புத்திசாலித்தனமான ஊகமாகும். அரிஸ்தோட்டல் புத்தியை இதயத்தோடு தொடர்பு படுத்தியிருந்தார். எகிப்தியர்கள் மமிகளைப் பதம்செய்யும்போது மூளையை எறிந்துவிட்டு இதயத்தைத்தான் உடம்போடு வைத்துப் பாதுகாத்தார்கள்.
 
பிளாட்டோவின் இலக்கிய குடியரசில் தத்துவவாதிகளும் வீரர்களுமே அரசின் காவலர்கள். இந்தக் காவலர்களுக்கு பிளாட்டோ சில விதிகளை அல்லது கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.
 
(அ) பாதுகாவலர்கள் எளிய வாழ்க்கை வாழவேண்டும். சொத்துக்களை பொதுச் சொத்துக்களாக வைத்திருக்க வேண்டும்.  
 
(ஆ) பாதுகாவலர்களின் குடும்பங்கள் பொதுவுடமையாக இருக்க வேண்டும்! குழந்தைகள் தாய் தந்தையர் யார் என்பது தெரியாத வகையில் வளர்க்கப்படுவார்கள். தாய் தந்தையருக்கு தங்கள் குழந்தைகள் யார் என்பது தெரியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் புத்திசாலிக் குழந்தைகளாகப் பிறப்பதற்கு புத்திசாலித் தாய் தந்தையரைப் தெரிவு செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது இரகசியமாக வைக்கப்படும்.
 
(இ) பாதுகாவலர்கள் துறையறக் கல்வி கற்றல் வேண்டும். குடியரசு என்ற நூலின் பெரும்பகுதி கல்வியைப்பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியுமே சொல்கிறது.
 
பிளாட்டோவின் இலக்கியக் குடியரசுபற்றிக் குறைகள் அல்லது முரண்பாடுகள் இருக்கின்றன. அதில் முக்கியமாக இரண்டைக் குறிப்பிடலாம்.
 
(1) தத்துவவாதி என்பவர்கள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாதவர்கள் என்பதுதான் தத்துவவாதிகளுக்குப் பிளாட்டோ கொடுக்கும் வரைவிலக்கணம். ஆனால்ää தத்துவவாதிகள் பாதுகாவலர்கள் என்னும்போது அவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற படிநிலையில் இருந்தே பிளாட்டோ வாதிக்கிறார். தத்துவவாதிகள் புத்திசாலிகளாக இல்லாத பட்சத்தில் நிலைமை என்ன?
 
(2) பிளாட்டோ ஆன்மா மூன்று பாகங்களைக் கொண்டது என்கிறார். ஆனால், அதனை மூன்று சமூக வர்க்கங்களோடு இணைக்கும்போது அதில் ஒரு பாகத்தைத்தான் குறிப்பிடுகிறார்.
 
(3) பாதுகாவலர்கள் ஆசைகளைத் துறந்து எளிய வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆசை துறவோரைத்தவிர மற்ற எல்லோருக்கும் பொதுவானது.
 
பிளாட்டோவின் குடியரசு நூல் பற்றி மேலும் அறிய விரும்புவர்கள் மொத்தம் பத்து அதிகாரங்களைக் கொண்ட அந்த நூலைப் படிக்க வேண்டும். தத்துவம் மிகவும் சிக்கலானது. ஆனால், தத்துவம் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. அடுத்த கிழமை பிளாட்டோவின் மாணவர் அரிஸ்தோட்டலைப் பற்றிப் பார்ப்போம்.

——————————————————————————————————————–
 
 

கியூபா பயணக் கட்டுரை (50)
 ஒரு பருந்தின் நிழலில்
மானிட வரலாற்றில் மிகப் பெரிய சிந்தனையாளர் அரிஸ்தோட்டல்!

அரிஸ்தோட்டல் (கிமு 384 – 322) தனது ஆசான் பிளாட்டோவினால் “அறிவுத்திறம்” படைத்தவர் என்று அழைக்கப்பட்டவர். உண்மையில் அரிஸ்தோட்டல் கிரேக்க தத்துவவாதிகளுக்குள் தலை சிறந்த சிந்தனையாளர். ஏன் முழு மானிட வரலாற்றில் அவர்தான் மிகப் பெரிய சிந்தனையாளராக எனப் போற்றப்படுகிறார்.
 
அப்போது மசிடோனியா மன்னராக இருந்த பிலிப் தனது 13 அகவை நிரம்பிய மகன் அலெக்சாந்தருக்குப் (கி. மு. 336 – கி. மு. 323) பாடம்சொல்லிக் கொடுக்க அரிஸ்தோட்டலையே நியமித்தான். ஐந்தாண்டுகள் அலெக்சாந்தர் அரிஸ்தோட்டலிடம் பாடம் கற்றான். மன்னன் பிலிப் இறந்தபோது அலெக்சாந்தர் ஆட்சிபீடம் ஏறினான்.
 
அரிஸ்தோட்டல் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? ஏறத்தாழ ஆயிரம். ஆனால், இவற்றுள் பெரும்பகுதி சங்க நூல்கள் அழிந்துபட்டது போல அழிந்துபட்டு விட்டன. ஆனால், அவரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய நூல்கள் காலவெள்ளத்தில் அள்ளுண்டு போகாது தப்பிவிட்டன!

அரிஸ்தோட்டல்

அரிஸ்தோட்டலின் நூல்கள் முழுதும் முதன் முறையாக கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்;ந்த அன்றோனிக்கஸ் என்பவரால் (யுனெவசழniஉரள ழக சுhழனநள) “பிரசுரம்” செய்யப்பட்டது. அரிஸ்தோட்டலின் நுண்மான்நுழைபுலத்துக்கு (பல நூல்கள் கற்பதால் வரும் அறிவு) அவர் எழுதிய நூல்களும் அவற்றின் பாடுபொருளும் சான்று பகர்கின்றன.
 
 (1) தருக்கவியல் (Logic)
 
(அ) வகைகள் (Categories)
(ஆ) பொருள் விளக்;கம் (On interpretation)
(இ) முன்னைப் பகுப்பாராய்ச்சி (Prior Analytics on Demonstration)
(ஈ)  பின்னைப் பகுப்பாராய்ச்சி
(உ) விவாதப் பொருள்
(ஊ) சோபிஸ்டு (Sophistic) மறுப்புக்கள்
 
(2) இயற்பியல் (Physics)  
 
(அ) இயற்பியல் (எட்டுப் புத்தகங்கள்)
(ஆ) சொர்க்கம் பற்றியது ( நாலு புத்தகங்கள்)
(இ) பிறப்பு மற்றும் ஊழல் பற்றியது (இரண்டு புத்தகங்கள்)
(ஈ) வானிலை (நாலு புத்தகங்கள்)
(உ) ஆன்மாபற்றிய விசாரணை ( மூன்று புத்தகங்கள்)
 
(3) நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics)
 
அரிஸ்தோட்டலின் நுண்பொருள் கோட்பாட்டியல்பற்றிப் 14 புத்தகங்களாக வகைப்படுத்துப்பட்டுள்ளன. இவையாவும் அரிஸ்தோட்டல் மறைந்த பின் தொகுக்கப்பட்டவையாகும்.
 
(4) ஒழுக்கவியல் மற்றும் அரசியல் (Ethics and Politics)
 
(அ) நிச்சோமச்சியான் ஒழுக்கவியல் (Nichomachean Ethics)
(ஆ) யுடெமியன் ஒழுக்கவியல் (Eudemian Ethics)
(ஈ) மாபெரும் ஒழுக்கவியல்
(உ) அரசியல் (முடிவு பெறாத எட்டுப் புத்தகங்கள்)
 
(5) வெற்றுரை மற்றும் செய்யுட்கள் (Rhetoric Poetry)
 
(அ) அணியிலக்கணம் ( மூன்று புத்தகங்கள்)
(ஆ) செய்யுட்கள் (இரண்டு புத்தகங்கள்)
 
இவை அரிஸ்தோட்டல் எழுதிய புத்தகங்களின் ஒரு பகுதியே. இதனைப் பட்டியல் இட்டுக் காட்டுவதற்குக் காரணம் அவரது நுண்மாண்நுழைபுலத்தை வெளிக்காட்டவே.
 
அரிஸ்தோட்டலின் கூற்றுப்படி சுத்தமான அறிவுக்குரிய சிறந்த வழி ஒன்றுக்கு ஒன்று தொடர்படைய முக்கூற்று முடிவு (ளுலடடழபளைஅ) வழியாகும். அதாவது முதல் இரண்டு கூற்றின் (pசநஅளைநள) அடிப்படையில் மூன்றாவது உண்மையை அல்லது முடிவை மனம் கண்டுபிடிப்பதாகும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
எல்லா மனிதரும் (கருத்துப் படிவம்) இறந்து படுபவர்களே (தர்க்கப் பயனிலை)
 
சோக்கிறட்டிஸ் (எழுவாய்) ஒரு மனிதன் (கருத்துப் படிவம்) எனவே சோக்கிறட்டிஸ் (எழுவாய்) இறந்துபடுபவரே ( தர்க்கப் பயனிலை)
 
முடிவு முதல் இரண்டு கூற்றின் உண்மையைப் பொறுத்திருக்கிறது. முதல் இரண்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முடிவும் உண்மையாக இருக்கும். அப்படியில்லாத போது முடிவு பொருளற்றதாக இருக்கும். இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.
 
காகம் ஒரு பறவை
காகம் கருப்பு
எனவே எல்லாப் பறவைகளும் கருப்பு
 
தருக்கவியலில் இதனை Ab initio  என்று கூறுவார்கள். அதாவது தொடக்க முதலே பொருளற்ற கூற்று ஆகும்.   
 
ஒழுக்கவியல் என்பது மனிதன் இயற்கை நியதிப்படி எதனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் பற்றியும், அவனது மகிழ்ச்சி எந்த மூலத்தில் இருந்து வருகிறது என்பது பற்றியும் சொல்வதாகும்.
 
மனிதன் பகுத்தறிவு படைத்த விலங்கு. எனவே அறிவைத் தேடிக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். அரிஸ்தோட்டலின் எண்ணப்படி ஒழுக்கம் வாழ்வின் முடிவு அல்ல. முடிவுக்கு அது ஒரு வழி மட்டுமே. மனிதனது செயல்கள் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
 
அரிஸ்தோட்டல் அரசியலைப்பற்றிச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதனது குறிக்கோள் ஒழுக்கத்தோடு வாழுதல் ஆகும். மனிதன் ஒரு அரசியல் விலங்கு என்று வரைவிலக்கணம் சொல்கிறோம் அல்லவா? அதற்குக் காரணம் அவன் இயற்கையாகவே அரசோடு பிணைக்கப்பட்டுள்ளான். அது போலவே மனிதன் இயற்கையாகவே தன் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாழ விரும்புகிறான். பின்னர் மற்ற மனிதர்களோடு கூடி ஒரு சமூகமாக வாழ விரும்புகிறான்.
 
குடும்பம் மனிதனுக்கு இயற்கையானது. தனியுடமை குடும்பத்திற்கு இன்றியமையாதது. (இங்கே அரிஸ் தோட்டல் பிளாட்டோ மற்றும் சோக்கிறட்டிசோடு முரண்படுவதைப் பார்க்கலாம். இவர்கள் குடும்பம் பொதுவுடமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்). அரிஸ்தோட்டலின் குடும்பம் பின்வருமாறு வகுக்கப்பட்டது.
 
(அ) குழந்தைகள்
(ஆ) மனைவி
(இ) சொத்துக்கள்
(ஈ) அடிமைகள்
 
குடும்பத்தின் தலைவன் குடும்;ப விவகாரங்களைக் கவனிக்கிறான். குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அவன் வழிகாட்டியாக இருக்கிறான். சொத்துக்கள் மூலம் மனிதன் இலாபத்தை ஈட்ட வேண்டும். சொத்துக்கள் பயன்தர அவன் உயிரற்ற, உயிருள்ள இரண்டையும் பயன் படுத்துகிறான். அடிமைகள் உயிருள்ளவை. அரிஸ்தோட்டல் கால கிரேக்கத்தில் உடல் உழைப்பு இழிவாகக் கருதப்பட்டது (வருணாச்சிர தர்மத்தின் படியும் உழவர்கள், கைவினையாளர்கள் போன்ற உடல் உழைப்பார்கள் இழிவாகக் கருதப்பட்டார்கள்).
 
எனவே அரிஸ்தோட்டல் சமூகத்தை உயர்ந்தோர், அடிமைகள் என இரண்டாகப் பகுத்தார். இதனால் அரிஸ்தோட்டல் அடிமை முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டும் அல்ல கல்வி கற்கும் உரிமை உயர்ந்தோருக்கு மட்டும் உண்டென்பதை ஏற்றுக் கொள்கிறார். அடிமைகளுக்கு அது மறுக்கப்பட்டதை அவர் எதிர்க்கவில்லை.
 
அரிஸ்தோட்டலின் சமகாலத்தவாரான தொல்காப்பியரும் சமூகத்தை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்குவகையாக (இந்தவகை வகுப்பு பிற்காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருக்கல் எனக் கருதப்படுகிறது) வகுக்கிறார். மேலும் தொழில் அடிப்படையில் உயர்ந்தோர் இழிந்தோர் என மக்களை வகைப்படுத்துகிறார். உழவுத்தொழில் செய்வோர் உயர்ந்தோராகவும் உப்பு விற்கும் உமணர் இழிந்தோராகவும் கருதப்பட்டார்கள். ஆனால்ää கல்வி இழிந்தோர்க்கு மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 
சங்க காலப் புலவர்களின் எண்ணிக்கை 449 கும் அதிகமாக இருந்திருக்கிறது. இவர்களில் அரசர் சிலர். வணிகர் சிலர். ஆசிரியர் சிலர். குறவர் குலத்தில் பிறந்த குறியெயினியும் இளவெயினியும் குயவர் குலத்தில் பிறந்த வெண்ணிக் குயத்தியும் சிறந்த பெண் புலவர்களாக விளங்கினார்கள்.
 
இது சங்ககாலத்தில் எல்லோரும் பால் வேறுபாடு இல்லாது, தொழில் வேறுபாடு இல்லாது கல்வி கற்றதைக் காட்டுகிறது. அது மட்டும் அல்லாது அதே காலகட்டத்தில் கிரேக்கம் உட்பட வேறெந்த நாட்டிலும் இத்துனைப் புலவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் படைத்தது இலக்கியம், இலக்கணம் மட்டுமே. கிரேக்க தத்துவவாதிகள் போல் அரசு பற்றியும் ஏரணம் (தர்க்கம்) பற்றியும் இயற்பியல் பற்றியும் கணக்கியல் பற்றியும் வானியல்பற்றியும் தாவரங்கள்ää விலங்குகள் பற்றியும் தனிப் பாடல்கள் தனி நூல்கள் எழுதவில்லை. ஒருவேளை எழுதியிருந்தாலும் அவை இன்று கிடைத்திலது.
 
நான் முன்னர் எழுதியவாறு தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர் ஒருவரே சோக்கிறட்டிஸ்ää பிளாட்டோää அரிஸ்தோட்டல் போன்ற தத்துவவாதிகளுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் சிந்தனையாளராகத் திகழ்கிறார்.
 
அரிஸ்தோட்டலுக்குப் பின்னரே தத்துவத்தில் இருந்து அறிவியல் தனி இயலாகப் பரிணமித்தது. அரிஸ்தோட்டலுக்குப் பின் தோன்றியவர்கள் அறிவியல் அடிப்படையில் சிந்தித்துää ஆய்வு செய்து அறிவியலை வளர்த்தார்கள்.
 
அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் பிற்காலத்தில் கிரேகத்திற்கு அப்பால் உள்ள ஐரோப்பியää அரபு நாடுகளுக்குப் பரவி அந்த நாடுகளின் சிந்தனை வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக கிறித்தவ சிந்தனைகளுக்கு அரிஸ்தோட்டலின் சிந்தனைகள் உந்துசக்தியாக அமைந்தன.
 
கிரேக்கர்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகம், சொர்க்கம், ஆன்மா, இயற்கை இவைபற்றி எவ்வளவு ஆழமாகச் சிந்தித்தார்கள் என்பதைக் காட்டவே தத்துவ உலகின் மும்மூர்த்திகளான சோக்கிரட்டிஸ் பிளாட்டோ அரிஸ்தோட்டல் பற்றி சுருக்கமாக எழுதினேன். (வளரும்)

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply