தமிழினியின் ஒரு கூர்வாளின் கீழ்

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

வ.ந.கிரிதரன்

14 November 2016

இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். – வ.ந.கி ]

ஒரு கூர்வாளின் நிழலில் எனக்கு தெரிந்த தமிழினியைக் காணவில்லை - Eela Malar

தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் ‘இது கூர்வாளல்ல. மொட்டை வாள்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

“ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.  தொடர்ந்தும் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென நான் நினைக்கவில்லை…. ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச்சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியும் என நம்பத் தொடங்கினேன்.” (பக்கம் 31)

இவ்விதமாக மாணவியொருத்தி எவ்விதம் ஆயுதம் தாங்கிய பெண் போராளியாகப் பரிணாமம் அடைகின்றார் என்பதை விளக்குமொரு வாக்குமூலமாக இந்நூலினைக் குறிப்பிடலாம்.

2. தமிழினி என்னும் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த போராளியொருவரின் சுயசரிதை என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூலில் தமிழினி தன் குடும்பம், பள்ளி வாழ்க்கை, தான் பிறந்த நகரம் எவ்விதம் போர்ச்சூழல் மிக்க நகராக மாறுகின்றது என்பது பற்றிய விபரங்கள், தன் இயக்க வாழ்க்கை, இயக்கத்தில் தனது அரசியல் மற்றும் ஆயுதப்போராளியாக செயற்பட்டமை  பற்றிய விபரங்கள், வெற்றிகரமான விடுதலைப்புலிகளின் போர்களில் ஈடுபட்ட தனது வரலாறு, யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இயக்கத்தின் நிலை, மக்களின் நிலை, தனது அனுபவங்கள் எனப் பல்விதமான அனுபவங்கள், யுத்தத்தின் பின்னரான தடுப்பு முகாம், மற்றும் புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றில் அவரது அனுபவங்கள் என தன் வாழ்வின் முக்கிய விடயங்கள் அனைத்தையும் விபரித்திருக்கின்றார். அதிக பக்கங்களை உடைய பெரிய நூல் என்றில்லாவிட்டாலும், அத்தியாயம் ஒவ்வொன்றுமே விரிவான தகவல்களை உள்ளடக்கியுள்ளன. அவசரப்பட்டுச் சுருக்கமாக விடயங்கள் விபரிக்கப்படவில்லை. அந்த வகையில் கட்டுக்கோப்பானதொரு சுயசரிதையாக இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

3. விடுதலைப்புலிகளின் முக்கிமான உறுப்பினராக இருந்தவர் தமிழினி. அந்த வகையில் அவர் தன் இயக்க அனுபவங்களை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றார். அது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவே இந்நூலின் முக்கியமான சிறப்புக்குக் காரணம். இவ்வளவு விரிவாக விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு யாரும் தம் இயக்கத்தைப்பற்றிச் சுய விமர்சனம் செய்ததில்லை. பலர் எழுதியிருக்கின்றார்கள். அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றைக்கூறும் பிரச்சாரங்கள். அல்லது சுய விமர்சனம் தவிர்ந்த இயக்கத்தின் வெற்றியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் படைப்புகள்.

இந்நூலில் புலிகள் அமைப்பு பற்றித் தமிழினி வைத்துள்ள சுய விமர்சனத்தில் முக்கியமானவையாக நான் கருதுவது:

A அமைப்பு முழுவதும் தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். ஆரம்பத்தில் ஏனைய இயக்கப் போராளிகளைப்போல் அவரும் ஒரு தலைமை என்னும் அடிப்படையில்தான் இயங்குகின்றார். ஆனால் அதுவே பின்னர் பேரழிவுகளுக்குக் காரணமாக விளங்கும்போது அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியற்துறைச்செயலாளராக விளங்கிய தமிழ்ச்செல்வன் இறுதி வரையில் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையுடன் இருந்ததை தமிழினி நினைவு கூர்கின்றார். பொட்டம்மான் கூட இறுதி யுத்தக்காலத்தில் கூடத் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்றுதான் போராளிகளுக்குக் கூறுகின்றார்.

எல்லாம் தலைவரே என்பது பற்றிக்குறிப்பிடுகையில் ‘எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம்……  தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும் , நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் எனவும், தலைவர்  ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக  ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம்.. தலைவர்  எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.  எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று..’ (பக்கம்  164)

இது பற்றி இன்னுமோரிடத்தில் ‘எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது’ (பக்கம் 206) என்று கடுமையாகச் சாடியிருப்பார்.

இவ்விதமான அவரது சாடல்களெல்லாம் தனிப்பட்ட மனிதர் மீதான சாடல்களல்ல. தான் சார்ந்த அமைப்பு மீதான, அதன் கட்டமைப்பு மீதான சாடல்களே.

இயக்கத்தின் உச்சக்கட்ட காலகட்டத்தில் ‘இயக்கத்தின் நடவடிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இருந்த சரி பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்துக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்துக்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. ‘மேலும்  கள முனையில்  நாளாந்தம் எந்தக் கேள்விகளும் கேட்காது  எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்கள்.  அந்தத்தியாகங்களுக்கு  முன்னால்  வேறு எதுவுமே  எழுந்து நிற்க முடியாதிருந்தது.  வீரமரணம் அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்ப்தைத்தவிர  எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை’ (பக்கம் 53 & 54) என்று தமிழினி கூறுவது அக்காலகட்ட  யதார்த்த நிலையினை வெளிப்படுத்தும்.

B முகாம் செயற்பாடுகளை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். இயக்கம் பற்றிய சுய விமர்சனங்களில் ஒன்று சில பயிற்சி முகாம்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றிக்குறிப்பிட்டிருக்கின்றார். இவரது நெருங்கிய தோழியான சாம்பவி தனது பயிற்சி முகாம் அனுபவங்களைக் கூறியிருக்கின்றார். அதுபற்றிக்குறிப்பிடும் தமிழினி

“குறுகிய மனப்பாங்கும் , வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும்போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான  வார்த்தைகளும்  , தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய  சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன” (பக்கம்  58 & 59)

ஆனால் எவ்வகையான சித்திரவதைகள் அவை எனத் தமிழினி நூலில் விரிவாக எடுத்துரைக்கவிலை.

C. முஸ்லீம் மக்களைக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றித் தமிழினி இவ்விதம் கூறுகின்றார்:

‘மிகவும் சராசரியான வாழ்க்கைத்தரத்தைக்கொண்டிருந்த அந்த மக்களைச்சந்தித்தபொழுது  என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.  அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட  எமது இயக்கம்  இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கியதன்  நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ல முடியாமலிருந்தது.’ (பக்கம்  66)

D. 1996இல் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இயக்கத்தின் கட்டளைக்கேற்ப   அனைத்து மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்ததைப் பற்றிக் கூறும்போது ‘சில மணி நேரத்திற்குள்  ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலத்தைக் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும்  புரிய வைக்க முடியாத மனித அவலம் என்றே கூறவேண்டும்.’ என்று கூறியிருப்பார்.

கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மானின் பிரிவினைத்தொடர்ந்து  இயக்கத்திற்குள் நடந்த சகோதர யுத்தத்தைப்பற்றிக்குறிப்பிடுகையில் தமிழினி ‘கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.  பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.’ (பக்கம் 162) என்று கூறுவார்.

இயக்கத்தின் இன்னுமொரு விடயத்தையும் தமிழினி விமர்சனத்துக்கு ள்ளாக்குகின்றார் இந்நூலில். அது இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு. ‘இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய இன்னொரு விடயம் இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு’ என்பார் அவர். (பக்கம்  166) சமாதானக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ போராளிகளுக்கிடையிலும் விமர்சனங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகவும் தமிழினி குறிப்பிடுகின்றார் (பக்கம் 180). அத்துடன் ‘தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு. இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் , பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக்கொண்டிருந்தனர்’ (பக்கம்  181)என்றும் தமிழினி கூறுவார். இந்த விடயத்தில் இவரது முரண்பட்ட நிலை காரணமாக அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக இன்னொரு பெண் போராளி நியமிக்கப்பட்டதாகவும் தனது நூலில் தமிழினி குறிப்பிடுகின்றார்.

G. விடுதலைப்புலிகள் அமைப்பு அது பெற்ற வெற்றிகளின் காரணமாகத் தன்னை ஓர் அரச இயந்திரமாக விசாலித்துக்கொண்டது அதன் வளர்ச்சியைத் தடைசெய்ததாகவும் தமிழினி கருதுவதை நூலின் வாயிலாக அறிய முடிகின்றது. ‘ஓர் அரச இயந்திரம்போல் தன்னை விசாலித்துக்கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப்பலம் நிர்வாகச்சிக்கலில் வீணே சிதறடிக்கப்பட்டது……. பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச்சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக்கொண்டிருந்தனர்’ (பக்கம் 182) என்று கூறுவது அதனையே புலப்படுத்துகின்றது.

இராணுவரீதியில் சாதனைகளைப் படைத்த இயக்கத்தால் சமாதான காலகட்டத்தில் அரசியல்ரீதியில் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. அதுபற்றி அவர் ‘யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலைய நோக்கி முன்னேற முடியாமல் திணறினார்’ என்பார் (பக்கம் 168).

‘ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப்போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன்.  இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது , எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை.’ (பக்கம் 218)

நூலின் முன்னுரையில் அவர் இவ்விதம் கூறுவார்: “போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன்.  போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம்.  கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.” (பக்கம் 7)

அதே நேரம் மக்களுக்கும் புலிகளின் போரியல் வெற்றிகளில் இருந்த நம்பிக்கை அவர்களது அரசியலில் இருக்கவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. ‘புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த  பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில்  எப்போதுமே இருந்ததில்லை. (பக்கம் 15)

I. நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றிய அவரது சுய விமர்சனமும் முக்கியமானது. பின்வரும் அவரது கூற்றுகள் நியாயமான கூற்றுகள்.

* :” எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை.” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 73)

*  “பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப் பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். ” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 75 & 76)

*  “பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது.” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 76)

* “பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று  கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும்முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை.” ((‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 77)

* “அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும் ,  மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன்” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 77)

4. இந்த நூலில் பெண்கள் பற்றிய சமூகம் மீதான விமர்சனத்தையும் மிகவும் காத்திரமாக வைத்திருக்கின்றார். ‘அந்த அர்ப்பணிப்பின் அனுகூலங்களை அனுபவிக்கச் சித்தமாயிருக்கும் சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வை கொச்சைப்படுத்தியே பார்க்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி, அரசியல் பிழைப்பு நடத்துகிறது.  போராடத்தில் பங்குபற்றி, உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது எத்தனை மோசமான இழிசெயல்?’

5.  இந்நூலின் இன்னுமொரு முக்கிய சிறப்பு இந்நூல் பல விடயங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல், போர்ச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றது. புலிகளின் வன்னிப்போர்கள் பலவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகப் பூநகரிச்சமரான தவளைப்பாய்ச்சல் பற்றி விரிவாகவே ஆவணப்படுத்தியிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்காலத்து அனுபவங்களை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. போரின் பின்னரான தடுப்பு முகாம் , வெலிக்கடைச்சிறை வாழ்வு மற்றும் பூந்தோட்டத்துப் புனர்வாழ்வு வாழ்க்கை ஆகியவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது.

நூலின் ஆரம்பத்தில் தமிழினி அமைப்பில் சேர்ந்தபொழுது , ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்னர்  தான் ஆற்றிய அரசியல் பணிகளைப்பற்றி விரிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு விதத்தில் அவரது இயக்க அரசியல் பணிகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின என்றே கூறுவேன். பொதுவாகப்புலிகள் என்றால் ஆயுதப்பித்துப்பிடித்தவர்கள் என்றே மாற்றுக்கருத்துள்ள அனைவராலும் விமர்சிக்கப்படுபவர்கள். மக்களைப்பற்றி அவர்கள் எண்ணுவதில்லை என்றே விமர்சிக்கப்படுபவர்கள். ஆனால் இந்நூலில் தமிழினி குறிப்பிட்டுள்ள அரசியற் செயற்பாடுகள், அவரது அச்செயற்பாடுகள் பற்றிய சிந்தனைகள், விமர்சனங்கள் எல்லாம் புலிகளின் மக்களுடனான அரசியல் நடவடிக்கைகளை விபரிக்கின்றன.

நூலில் பூநகரி முகாம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

“1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்.” (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

” இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன.” (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் ‘தவளைப்பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

“புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் தவளை’ என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது.” (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் ‘தவளைப்பாய்ச்சல்’.

மேற்படி சமரானது புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாளர்  பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட சமரென்று நூலில் தமிழினி விபரிப்பார்.

இந்தச்சமரில் ஈடுபட்ட போராளிகள் உணர்வுகளையும் தமிழினி பதிவு செய்திருக்கின்றார்.

“பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கு பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில்  பங்குபற்றும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது.” (பக்கம் 57)

இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை இயக்கம் அடைகின்றது. இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் ‘யுத்த டாங்கி’ ஒன்று கைப்பற்றப்படுகின்றது. இது பற்றியெல்லாம் விபரிக்கும் நூலில் தமிழினி இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விபரித்திருக்கின்றார். அவர்களது காதல் போன்ற அந்தரங்க உணர்வுகளை, நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது இழப்பை விபரித்திருப்பார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது விபரிப்பைக் கூறலாம்.

“வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச்சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக்குடித்துக்கொண்டிருந்தன.  சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்து கொண்டிருந்தோம்.  எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து  திடீரென ‘ஹக்’ என வினோதமான சத்தம் கேட்டது.  திரும்பிப்பார்த்தேன்.  அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது.  நான் அவளது தலையை நிமிர்த்திப்பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.” (பக்கம் 59).

இச்சமரில் பலியாகிய இன்னுமொரு தோழியான தாமரை பற்றியும் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

“‘நீ யாரை நினைப்பாய் தாமரை?’ அவளின் வழமையான சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. ‘நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்.’ அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப்புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக்காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்.”

இவ்விதமாகப் போராளிகளின் உணர்வுகளைத் தமிழினி இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இவ்விதமான விபரிப்பு, போரொன்றில் நேரடியாகப்பங்குபற்றிய அவரது அனுபவத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கின்றதென்பேன்.

5. மிகவும் புகழ்பெற்ற ஆன்ஃப்ராங்கின் நாட்குறிப்பு என்னும் நூல் யூதச்சிறுமியொருத்தியின் இரண்டாம் உலக மகாயுத்தக்காலத்து அனுபவங்களை விபரிக்கும் சிறப்பு மிக்க ஆவணம் என்பதுடன் அந்நாட் குறிப்பில் அவர் பாவித்துள்ள எழுத்திச்சிறப்பு இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவாதல் உலக இலக்கியங்களிலொன்றாக அது கருதப்படுகின்றது. அந்நூலில் அவர் தன் உணர்வுகளை அந்நாட்குறிப்பினைத்தோழியாக்கி அதனுடன் விபரித்திருப்பார். அதுவே அந்நாட்குறிப்பினை இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவதற்காக முக்கிய காரணம். அது போன்றே தமிழினியின் இந்நூலும் வெறும் விபரங்களை மட்டுமே தருமொரு நூலல்ல. அவர் தன் உணர்வுகளை தன் வாழ்வின் சம்பவங்களை விபரிக்கையில் வெளிப்படுத்தியிருப்பார். அவரது எழுத்துச்சிறப்பு, சில இடங்களில் வெளிப்படும் கவித்துவமான மொழிச்சிறப்பு ஆகியன காரணமாக இந்நூலானது இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் விளங்குகின்றது. கவித்துவமான மொழிச்சிறப்பு என்று நான் கூறுவதற்கு முக்கிய காரணம் அவர் பாவித்துள்ள படிமச்சிறப்பு, இயற்கை பற்றிய விபரிப்பு போன்றவைதாம்.

6. இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பாக நான் கருதுவது அவரது எழுத்தில் விரவிக்கிடக்கும் மானுட நேயம்.

பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்கதாக விளங்கிய அவரது எழுத்து என்னைக் கவர்ந்தது. போர்க்களக்காட்சிகளை அவர் விபரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்கியது கண்டு மகிழ்ச்சியே ஏற்பட்டது. இந்த யுத்தம் பின்னர் யுத்தம் பற்றிய புரிதல்களையும் தமிழினிக்கு அளிக்கிறது. அது பற்றியும் நூல் விபரிக்கின்றது.

“போர்க்களத்தில்  கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது.  இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன.  அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.  எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை” (பக்கம் 60).

இந்தச் சுய விமர்சனத்தால் அவர் வந்தடையும் முடிவுதானென்ன? இதற்கான விடையினை அவர் நூலின் ஆரம்பத்தில் ‘தொடர்ந்து போராடுவேன்’ என்னும் குறிப்பில் குறிப்பிடுவார்.

‘எனது மாணவப்பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான செயலை ஆற்ற வேண்டுமென்ற பெரு விருப்போடுதான் ஒரு போராளியாக மாறினேன்.  எனது வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒரு போராளியாகவே இருந்து மக்களுக்கு உதவ விரும்புகின்றேன். ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமாகவோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் நாம் செய்து விட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத்தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக்காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.’

தான் கூறியபடியே அவரது இறுதிவரை போராடியே அவர் மறைந்திருக்கின்றார். அவரது இந்தக் கூர்வாள் கூறும் விடயத்தைப்பொறுத்தவரையில் கூரிய வாள்தான். தேசம் ஜெயபாலன் கூறுவது போல் மொட்டை வாளல்ல ஆனால் யாரையும் காயப்படுத்தாத கூர் வாள். வாசிப்பவர் நெஞ்சங்களைச் சிந்திக்க வைக்கும் கூர்வாள் இது. இதுவரை காலமும் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைக் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சுய விமர்சனம் செய்யும் கூர்வாள். மேலும் தர்க்கச்சிறப்புள்ள விமர்சனங்கள் கூர்மையானவை. இந்நூலின் சுய விமர்சனமும் அத்தகையதே. ஆனால் இந்நூலுக்கு ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்று பெயர் வைத்ததற்குக் காரணம் இது கூறும் விமர்சனம் கூர்வாளைப்போன்றதால் என்பதல்ல. இந்நூல் விமர்சிப்பது அவர் இணைந்து இயங்கிய மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய இயக்கமொன்றினை. அதனை விமர்சிப்பதால் அது கூர்வாளின் நிழலிலிருந்து செய்யும் விமர்சனம் என்னும் அர்த்தத்தைத்தருமென்பதாக இருக்கக் கூடும். அல்லது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு தான் சார்ந்திருந்த இயக்கத்தையும், இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் விமர்சிக்கின்றார். அவ்விதம் கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்கத் தயங்காத இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழிருந்துகொண்டு அதனை விமர்சிப்பதால் இந்தப்பெயரை வைத்திருக்கக் கூடும்.

இந்த நூல் கூறாத பல விடயங்களுள்ளன. ஆனால் அதற்காக இதன் முக்கியத்துவம் ஒருபோதுமே குறைந்துபோய் விடப்போவதில்லை. முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவராக விளங்கிய ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார். அது வரவேற்கத்தக்கது. சுய விமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை. எதிர்காலத்தில் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவை. அதுவே இந்நூலின் முக்கியத்துவமும் கூட.

ngiri2704@rogers.com

——————————————————————————————————————

புத்தகப் பார்வை

ஒரு கூர்வாளின் நிழலில்

ஹரன் பிரசன்னா

சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.

புலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

ஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,

“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”

என்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.

“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”

இயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.

“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”

இயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

புலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது

என்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.

“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”

என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.

போரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.

“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.

சகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.

“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்து கொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”

இந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.

பெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:

குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.” 

இப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.

அதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.

“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”

இன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.

“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”

பாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.

“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”

புலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:

“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”

தமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.

ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.

நான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.htmlhttp://idlyvadai.blogspot.in/2010/09/2.htmlhttp://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.

http://www.haranprasanna.in/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/


புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு

முன்னுரை

தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.

தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார்.

இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர்.

thamilini

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப் பட்டார்.

2013இல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார் தமிழினி. 2014இல் புற்றுநோய்க்குள்ளாகி மரணமடைந்தார்.

போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் அதிக ஈடுபாட்டோடு இருந்த தமிழினியின் பல கட்டுரை களும் கதைகளும் கவிதைகளும் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன.

சிறையிலும் சிறை மீண்ட பின்னரும் அவர் எழுதியவை தனி நூல்களாக வெளிவரவுள்ளன. புலிகளின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனையையும் தன் சாட்சியமாக இந்த நூலின் வழியாகத் தமிழினி தந்திருக்கிறார்.

Oct232015  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) Oct 23 2015
என்னுரை (தமிழினி தன்னுரையில்)

எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளை யும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்.

இது முழுமை யான வரலாறு எனக் கூற  முடியாது. எனக்கு நினைவு தெளிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்பட வில்லை.

இருப்பினும் நினைவழியாத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பைக் கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.

எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.

ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.

போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட  விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன்.

போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன்.

index  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) index12

நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம்.

இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது.

எதையுமே நம்பாதவர் களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப்போகிறவர்களாக, யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாகப் பின்னடித்துப் போகிறார்கள்.

முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது.

எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை.

இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன்.

இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக் கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக் கூடாது.

எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும்.

poonakari  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) poonakari

போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.

கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கிய மான, வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை.

ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன்.

எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன.

அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.

அந்த வகையில் எனது இறுதிக் காலம்வரை எனது எனது போராட்டம் தொடரும். போருக்கான பாதையைவிடக் கடினமானது  உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன்.

எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கான முன்முயற்சியை இந்தப் புத்தகம் உணர்த்தும். மானுட நேயமும் உண்மையான சமூகப் பற்றும் கொண்ட ஆயிரமாயிரம் சமாதானப் போராளிகள் என்னுடன் கைகோத்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் கைகளை உயர்த்துகிறேன்.

——————————————————————————————————-

புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு

முன்னுரை

தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.

தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார்.

இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர்.

thamilini

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப் பட்டார்.

2013இல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார் தமிழினி. 2014இல் புற்றுநோய்க்குள்ளாகி மரணமடைந்தார்.

போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் அதிக ஈடுபாட்டோடு இருந்த தமிழினியின் பல கட்டுரை களும் கதைகளும் கவிதைகளும் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன.

சிறையிலும் சிறை மீண்ட பின்னரும் அவர் எழுதியவை தனி நூல்களாக வெளிவரவுள்ளன. புலிகளின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனையையும் தன் சாட்சியமாக இந்த நூலின் வழியாகத் தமிழினி தந்திருக்கிறார்.

Oct232015  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) Oct23 2015
என்னுரை (தமிழினி தன்னுரையில்)

எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளை யும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்.

இது முழுமை யான வரலாறு எனக் கூற  முடியாது. எனக்கு நினைவு தெளிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்பட வில்லை.

இருப்பினும் நினைவழியாத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பைக் கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.

எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.

ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.

போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட  விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன்.

போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன்.

index  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) index12

நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம்.

இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது.

எதையுமே நம்பாதவர் களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப்போகிறவர்களாக, யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாகப் பின்னடித்துப் போகிறார்கள்.

முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது.

எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை.

இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன்.

இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக் கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக் கூடாது.

எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும்.

poonakari  ’ஒரு கூர்வாளின் நிழலில்' இருந்து...: "புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) poonakari

போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.

கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கிய மான, வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை.

ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன்.

எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன.

அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.

அந்த வகையில் எனது இறுதிக் காலம்வரை எனது எனது போராட்டம் தொடரும். போருக்கான பாதையைவிடக் கடினமானது  உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன்.

எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கான முன்முயற்சியை இந்தப் புத்தகம் உணர்த்தும். மானுட நேயமும் உண்மையான சமூகப் பற்றும் கொண்ட ஆயிரமாயிரம் சமாதானப் போராளிகள் என்னுடன் கைகோத்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் கைகளை உயர்த்துகிறேன்.

தமிழினி

“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)

“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)

13 02 2017

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களின் வாசனை காற்றிலே கலந்து எங்கும் பரவியிருந்தது.உளுவிந்தம் மரக் கொப்புகளில் தொங்குமான்கள் அச்சமின்றி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. உடும்புக் குட்டிகள் தமது வளைகளை விட்டு வெளியேறி உலவப் போய்க்கொண்டிருந்தன, புற்படுக்கைகளில் தெறித்துக் கிடக்கும் பனித்துளிகளில் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தன காட்டு முயல்கள்.காலை இளவெயிலில் தமது தோகையை விரித்துச் சிலுப்பிச் சிலுப்பிக் காயவைத்துக்கொண்டிருந்த கான மயில்களும் இரை தேடிப் புறப்பட்டிருந்த கானாங் கோழிகளும் புளுனிக் க கிடைத்த பேரமைதியின் சூழலில் உல்லாசமாகத் திளைத்துக் கிடந்தது வன்னிக்காடு.

2002ஆம் ஆண்டு இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் யுத்த நிறுத்தம் என்ற இணக்கத் திற்கு வந்திருந்ததன்.முதற்கட்டமாக ஏ9 நெடுஞ்சாலையை மக்கள் பாவனைக்குத் திறந்துவிடுவது என்ற உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள கண்டி நகரத்தையும் வடக்கு முனையாகிய யாழப்பாண நகரத்தையும் இணைக்கின்ற இந்த வீதியானது முன்னூற்று இருபத்தைந்து கிலோ மீற்றர் நீளமானது.ஆசியாவின் பிரதான வீதிகளில் ஒன்றாகத் தர நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இவ்வீதி இலங்கையின் பல நகரங்களை ஊடறுத்துச் செல்கின்றது.இலங்கை அரச படைகளுக்கு எதிராகத் தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிய கால கட்டத்தில் 1984 தொடக்கம் 2006 வரை பல தடவைகள் இந்த வீதி மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு மூடப்பட்டு வந்திருந்தது.

2002 பெப்ரவரி பதினைந்தாம் திகதி திறக்கப்படவிருந்த இந்த வீதியின் இருபது சதவீதமான பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், ஏ9 நெடுஞ்சாலை திறப்பு நிகழ்வானது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை மகளிர் சார்பாக நானும் சில பெண் போராளிகளுடன் ஓமந்தைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன்.அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சுதா (தங்கன்) புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் வேறு பல போராளிகளும் நிகழ்வில் பங்கு பெற்றிருந்தனர்.இலங்கை இராணுவத்தினரின் காவலரண்களும் விடுதலைப் புலிகளின் காவலரண்களும் எதிரும் புதிருமாக அமைந்திருந்தன.அவற்றின் குறுக்காக ஏ9 வீதி மண் அரண்களாலும் மறைப்புகளாலும் மூடப்பட்டிருந்தது. சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த வீதி பொதுமக்களது பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது.ஆயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்திருந்த அவ்வீதியின் மறுகரையில் இராணுவத்தினரும் எம்மைப் போலவே கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.அவர்களும்

நாங்களும் பரஸ்பரம் கைகளை அசைத்துப் புன்னகைத்தபடி சமாதானத்தைத் தெரிவித்துக்கொண்டாலும் எமது மறு கரங்கள் ஆயுதங்களை இறுகப் பற்றியபடியே இருந்தன.காரணமாகவே.. இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது என்கிற வெற்றி மயக்கமும், அவை எமக்குச் சர்வதேச அங்கீகாரத்தை ஈட்டித் தந்துவிட்டன என்ற கருத்து நிலையும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

ஊடகவியலாளர்கள் பெரும் கூட்டமாக ஏ9 வீதியில் திரண்டு வந்திருந்தனர். யுத்தம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வன்னிப் போர் வலயத்திற்குள் ஊடகத்தினர் நுழைவதற்கான அனுமதி புலிகளாலும், இராணுவத்தினராலும் முற்றாக மறுக்கப் பட்டிருந்தது.அங்கு வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கண்டபோது உலகத்தின் கண்கள் எம்மை நோக்கித் திரும்பியிருப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.பளிச் பளிச் என மின்னலடிக்கும் புகைப்படக் கருவிகளும் வீடியோ கருவிகளும் நீண்டிருந்த ஒலிவாங்கிகளும் ஒலிப்பதிவுக் கருவிகளுமாக, ஊடகப்படையொன்றினால், வரிச்சீருடை தரித்து ஆயுதங்களுடன் நின்றிருந்த புலிகளாகிய நாங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தோம்.அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் தமது கேள்விகளால் எம்மைத் துளைத்தெடுக்கத் தொடங்கினர். ஆனாலும் எல்லாக் கேள்விகளுமே ஒரே அடிப்படையைக் கொண்டதாகவே இருந்தது.தாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த பதில்களைப் போராளி களின் வாய் மொழியூடாகப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் பெரிதும் முயற்சி செய்வது போலிருந்தது.
ஆயதமேந்திப் போராடிய நீங்கள் ஏன் சமாதான வழிமுறைக்கு வந்திருக்கிறீர்கள்? தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டீர்களா?

உங்களுடைய சக போராளிகள் ஆயிரக்கணக்காக மரணித்துப் போயிருக்கிற நிலையில் உங்களது தலைவர் தமிழீழத்தைக் கைவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?மீண்டும் யுத்தம் வருமா? உங்களுக்குச் சமாதானத்தில் நம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவீர்களா? வீட்டுக்குப் போக விருப்பமில்லையா?காதலிப்பீர்களா? கலியாணம் செய்வீர்களா? இயக்கம் இவற்றுக்கான அனுமதியைத் தருமா? ஏன் கூந்தலை இப்படி வளைத்துக் கட்டியிருக்கிறீர்கள்? ஏன் இடுப்புப் பட்டி கட்டியிருக்கிறீர்கள்? உங்களுக்கும் சமூகப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மீண்டும் சமூகம் உங்களை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கிறீர்களா?”

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் அங்கிருந்த போராளிகளை நோக்கி வீசப்பட்டன. இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் விடுக்கப்படும் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள், செய்திகள் என்பவற்றுக்கு அப்பால் சாதாரண போராளிகளினதும், இடைநிலைப் பொறுப்பாளர்களினதும் சராசரி மனநிலையைத் துருவிப் பார்ப்பதே ஊடகங்களின் தந்திரமாக இருந்தது இயக்கத்தில் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அனுமதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருந்தது.ஆகையால் இப்படியான சந்தர்ப்பங்கள் அமையும்போது பல போராளிகள் புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு நழுவிப் போய்விடுவார்கள்.

நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகங்களின் கேள்விகளுக்கு நானும் மற்றும் தங்கன், புலித்தேவன் ஆகியோரும் பதிலளிக்க அனுமதிக்கப் பட்டிருந்தோம்.நீண்ட காலத்திற்குப் பின்பு மக்களுக்குக் கிடைத்திருந்த அமைதியும், பாதை திறப்பு மற்றும் பொருளாதாரத் தடைநீக்கம் என்பனவும் பொது மக்களுடைய முகத்தில் புதிய ஒளியைத் தோற்றுவித்திருந்தது. ஆனாலும் இந்தச் சமாதான சூழ்நிலையை நீடிக்கச் செய்து ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிப் புலிகள் முன்னேறிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை மக்களது வார்த்தைகளில் காண முடியவில்லை.மாறாக எப்போது இந்தச் சமாதானம் முறிவடையுமோ என்கிற குழப்பமான மனநிலையுடன் கிடைக்கிற காலத்திற்குள் தமது வாழ்க்கையைச் சிறிதளவேனும் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும் என்ற பதற்றத்துடன் செயல்படத் தொடங்கியிருந்தனர்.

தமிழர் பிரதேசங்களுக்கூடாகச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் இராணுவ, அரசியல் ரீதியான நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.இதன் காரணமாக அந்த வீதியை அண்மித்து நடைபெற்றிருந்த கொடூர யுத்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல ஆயிரங் களையும் கடந்திருந்தன.1995 தொடக்கம் 2002 வரையான காலப் பகுதியில் நான் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சம்பவங் களின் அடிப்படையில் இந்த வரலாற்றை விரித்துச் செல்வது பயனுள்ளது என நினைக்கிறேன்.

1995 டிசம்பர் மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியதன் பின்னர். விடுதலைப் புலிகள் இயக்கம் வன்னிப் பெருநிலப்பரப்பைத் தமது பிரதான தளமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் இழப்பு, புலிகளுக்கு ஈடுசெய்துகொள்ள முடியாததாகவே இருந்தது.இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆளணி மற்றும் பொருளாதாரத்தை உவந்தளிக்கும் வளப் பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்ததுடன், 1990 தொடக்கம் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாகவும் யாழ்ப்பாணமே விளங்கியது.அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் தாக்கம் பற்றிப் போராளிகள் மத்தியில் உணர்வு ரீதியாகப் பல தடவைகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மீண்டும் யாழ்ப்பாணத்தை விரைவாகக் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புலிகள் செயற்படத் தொடங்கினார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேசங்களை நன்கு அறிந்திருந்த ஆண் பெண் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு யாழ் செல்லும் படையணி உருவாக்கப்பட்டிருந்தது. லெப்.கேணல் மகேந்தி மற்றும் லெப். கேணல் தணிகைச்செல்வி ஆகியோர் அந்த அணிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர்.பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார்.
-தமிழினி- தொடரும்..

ilakkiyainfo 25 03 2016

முழு நூலையும் படிக்க கீழ்க்கண்ட இணையதள முகவரியை சொடுக்கவும்.

https://vmove.org/wp-content/uploads/2017/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.pdf

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply