இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: எப்படி நடக்கிறது?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: எப்படி நடக்கிறது?

10 ஆகஸ்ட் 2015புதுப்பிக்கப்பட்டது 13 ஆகஸ்ட் 2015

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கடந்த தேர்தலில் வாக்களிக்க, வட பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் கூடியிருந்த மக்கள்
படக்குறிப்பு,கடந்த தேர்தலில் வாக்களிக்க, வட பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் கூடியிருந்த மக்கள்

அதற்கான பிரச்சாரம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்றே வித்தியாசமானது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை வாங்கியவர் யாரோ அவரே தேர்வு செய்யப்படுவார்.

பாகிஸ்தானிலும் இதேபோல தொகுதிவாரித் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு சில உறுப்பினர்கள் நியமன முறையில் நியமிக்கப்படுகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வம் இம்முறை இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது
படக்குறிப்பு,ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வம் இம்முறை இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது

நேபாளத்தில் பெரும்பாலும் தொகுதிவாரியாகவும் சில உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.

வங்கதேசத்திலும் பாகிஸ்தானிலும் தொகுதிவாரியான தேர்தல்கள் நடைபெற்ற பிறகு சில உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் 30 பெண் உறுப்பினர்களை அந்த 300 உறுப்பினர்கள் தேர்தெடுப்பார்கள்.

விகிதாச்சார முறை

இலங்கையில் 1978ஆம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.

அந்தப் புதிய அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விகிதாச்சார அடிப்படையில் நடைபெற ஆரம்பித்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும்.

அந்தத் தேர்வும் இரண்டு கட்டமாக நடைபெறும்.

தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும்.

யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான மாதிரி வாக்குச் சீட்டு
படக்குறிப்பு,யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான மாதிரி வாக்குச் சீட்டு

அந்த வாக்குச்சீட்டில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அவர்களின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும்.

அதற்குக் கீழே வேட்பாளர்களுக்குரிய இலக்கங்களும் காணப்படும்.

முதலாவதாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் குறியிட்டு, தமது வாக்கைப் பதிவுசெய்வார்கள்.

பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூவருக்கு விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

எனினும் வாக்களார்கள் தனது விருப்ப வாக்கை வழங்காமலும் விடலாம்.

தேர்தல் மாவட்டங்கள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிவாரியாக இல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் நடைபெற்றாலும் நாடு முழுவதும், பல தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்படும்.

அந்த வகையில் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் உபரி (போனஸ்) இடங்களும் வழங்கப்படும்.

மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்களும், 36 உறுப்பினர்கள் போனஸ் இடங்களின் அடிப்படையிலும் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இப்படித் தேர்வுசெய்யப்பட்ட 196 பேர் தவிர மீதமுள்ள 29 பேர் தேசியப் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெறுவார்கள்.

தேர்தலில் நாடுதழுவிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் விகிதாச்சார அடிப்படையில் தேசியப் பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும், அந்த மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கு குறைவாக இருந்தால், தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்று உறுப்பினர்களை கூடுதலாக போட்டியிட நியமிக்க வேண்டும்.

அதேவேளை தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டு இருக்குமாயின், தேர்வாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஆறு பேரை போட்டியிட நியமிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த இலங்கையிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 19 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் செறிவாக வாழும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் 4 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
படக்குறிப்பு,இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
வாக்கு எண்ணப்படும் முறை

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் இடம் அளிக்கப்படும்.

பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். அவர்கள் சார்பில் யாரும் நாடாளுமன்றம் செல்ல முடியாது.

இதையடுத்து ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்களின் கூட்டு வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும்.

இலங்கைத் தேர்தல்களில் வாக்குப் பதிவு முடிந்தவுடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்
படக்குறிப்பு,இலங்கைத் தேர்தல்களில் வாக்குப் பதிவு முடிந்தவுடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்

இந்தக் கணக்கீட்டுக்கு பிறகு அந்த மாவட்டத்துக்குண்டான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.

இதில் கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும்.

அந்த எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் என்பது முடிவாகிறது.

விருப்ப வாக்குகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு

ஒவ்வொரு உறுப்பினரும் தேர்வாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தில் எவ்வளவு வாக்குகள் தேவையோ, அது முடிவான பிறகு, அம்மாவட்டத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழு பெற்றுள்ள வாக்குகளால் அது வகுக்கப்படும்.

அதன் அடிப்படையில் கட்சிகளுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும்.

பின்னர் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும்.

தென்னிலங்கையுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கில் தேர்தல் பரபரப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது
படக்குறிப்பு,தென்னிலங்கையுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கில் தேர்தல் பரபரப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது

இதையடுத்து களத்தில் இருக்கும் கட்சிகளிடம் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்றவர்களுக்கு, இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் இடங்கள் எஞ்சியிருக்குமாயின் அது ஒதுக்கீடு செய்யப்படும்.

இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று தீர்மானிக்கப்படும்.

அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

செல்லாத வாக்குகள்

வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டவுடன் முதலாவதாக தாம் விரும்பும் கட்சி/சுயேச்சைக் குழுவுக்கான வாக்கைச் கட்டாயம் குறியிட்டு செலுத்த வேண்டும்.

இல்லையெனில் அந்த வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.

இலங்கையில் பெண் வாக்காளர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தும் 5 சதவீத பெண்களே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்
படக்குறிப்பு,இலங்கையில் பெண் வாக்காளர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தும் 5 சதவீத பெண்களே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்

அதேபோன்று விருப்ப வாக்கு என்று வரும்போது, மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கைப் பதிவு செய்தால் அந்த வாக்கும் உறுப்பினர் தேர்வுக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்படும்.

ஆனாலும் அது கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு மட்டும் கிடைத்த வாக்காக கருதப்பட்டு எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும்.

https://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150810_lankaelexn_explainer

யாழ்ப்பாணம் மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு
கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி                    207577  69.12 வீதம்  5
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                  30232   10.07 வீதம் 1        
ஐக்கிய தேசியக் கட்சி                              20025        6.67 வீதம்    1      
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    17309 5.76 வீதம் 
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்          15022    5 .00வீதம் 
தமிழர் விடுதலைக் கூட்டணி                   1515          0.50 வீதம் 
ஈழவர் ஜனநாயக முன்னணி                    1277         0.43 வீதம் 
அகில இலங்கை தமிழர் மகாசபை          383         0.13 வீதம் 
ஐக்கிய சோசலிச கட்சி                             303             0.10 வீதம் 
ஜனசெத பெரமுன                                    250              0.08 வீதம் 

யாழ்ப்பாண மாவட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 207,57769.12% 5
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி  30,23210.07%1
ஐக்கியதேசிய கட்சி                        20,0256.67%1

யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி வெற்றியீட்டியோர்
18 August 2015
யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி வெற்றியீட்டியோர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெற்றோர் விபரம்
1. திரு. சிவஞானம் சிறீதரன் – 72058
2. திரு. மாவை சேனாதிராசா – 58732
3. திரு. மதியாபரணம் சுமந்திரன் – 58043
4. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 53743
5. திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் – 432236.
6. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
கே.என்.டக்ளஸ் தேவானந்தா – 16399
7. ஐ.தே.க விஜயகலா மகேஸ்வரன் 13071
———————————————————————
வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி-
18 August 2015
வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி-
வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
————————————————————————————————————
திருகோணமலை மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு
18 August 2015

திருகோணமலை மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு
கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி                                 83638            46.36  வீதம்      2
இலங்கைத் தமிழரசுக் கட்சி                       45894            25.44 வீதம்       1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு      38463            21.32 வீதம்      
மக்கள் விடுதலை முன்னணி                       2556              1.42 வீதம்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்              1144               0.63 வீதம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                        581                0.32 வீதம்
தமிழர் விடுதலைக் கூட்டணி                       380                0.21 வீதம்
ஜனநாயகக் கட்சி                                         279                0.15 வீதம்
முன்னிலை சோஷலிஸ கட்சி                     243                0.13 வீதம்
அகில இலங்கை தமிழர் மகாசபை                211                0.12 வீதம்


About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply