மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்? கேள்வி எழுப்புகிறார் தவராசா

 முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்!

தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே இருக்கலாம். இப்போது ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சர், அமைச்சர் வாரியத்தை கூட்டக் கூடாது எனத் “தடா” போட்டுள்ளார் ஆளுநர்.

வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் “போர் முடிந்து அடுத்த வருடம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது. குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை இரண்டு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து காட்டுகிறேன். அது ஒரு பெரிய காரியமன்று” என யாழ்ப்பாணத்தில் நடந்த சனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யூலை 4 அன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது முழங்கினார்.

இதனைப் படித்துவிட்டு வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் “மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?” எனக் கேள்வி – பதில் வடிவில் ஒரு அறிக்கை விட்டார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிருவாகம் வினைத்திறனற்ற நிருவாகம் என வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவர் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

இம் என்றால் ஊழல் குற்றச்சாட்டு, ஏன் என்றால் பதவி் பறிப்பு, நாளாந்தம் ஒரு அறிக்கை, வாரம் ஒரு தீர்மானம் என ஏடா கூடமாக நடந்து கொள்ளும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களின் அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை விடுத்தார். அதில் தவராசா எழுப்பிய கேள்விக்குப் பதில் இல்லை. மாறாக தவராசாவை கிண்டல் அடித்து “கூரை மேல் ஏறிக் குறைகூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார்” என்று பதில் அறிக்கை விட்டார்.

அந்த அறிக்கையில் தவராசா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வட மாகாண சபை சரிவர இயங்காததற்குக் காரணம் “உள்ளூராட்சி முன்னேற்றம் நகர அபிவிருத்தித் துறையால் கட்டுப்படுத்தப்படுகின்றது. காணிகள் மீதான எமது உரித்து மகாவலிச் சட்டத்தால் நலிவடைகின்றது. மாகாணப் பாடசாலைகளின் முன்னேற்றம் தேசியப் பாடசாலைகளை வைத்துக் கட்டுப்படுத்தப்படுகின்றது. எமது மருத்துவமனைகளின் முன்னேற்றம், தேசிய மருத்துவனைகளை வைத்து மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றது. சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்துக்கு வழங்கப்படவில்லை. மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி அவைத் தலைவர் ஆசியால் வைகுண்டத்திலேயே இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்து விட்டார்” என இறுமாப்போடு பதிலிறுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சும்மா இருப்பாரா? “ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார்” என தவராசா மீண்டும் பதிலடி கொடுத்தார். தவராசா தனது அறிக்கைகளில் பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில்,

(1) இந்த நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தினை வழங்கியதன் அடிப்படையில், அரசமைப்பில் அமைச்சர்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நியமன அதிகாரி (ஆளுநர்) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

In view of the findings of this Court and the interim relief granted, it is for the appointing authority to consider the constitutional restriction on the number of Ministers and take suitable action.

(2) இவ்விடைக்காலக் கட்டளை மனுதாரரை (டெனிஸ்வரன்) சட்டப்படி பதவியிலிருந்து நீக்குவதனை எவ்விதத்திலும் தடுக்காது. ஆதலினால் அவை சீர் செய்ய முடியாத விடயங்களாக பிரதி வாதிகளிற்கு (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) அமையாது.

On the other hand, the interim relief will not prevent the Petitioner from being duly removed from his post according to law. Hence there will be no irreparable mischief or injury to the Respondents.

(3) 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கூட்டுறவுத்துறை, கல்வி (வடக்கில் இயங்கும் 1098 பாடசாலை களில் 22 தேசிய பாடசாலைகள் தவிர), சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

(4) இவ்விடயப் பரப்புகளை முற்றாக மாகாண சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு உபகுழுவின் ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை மாகாண சபையினால் 14 நியதிச் சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்வது போல மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை முலமைச்சர் நடைமுறைப்படுத்தினால் இப்போதுள்ள சிக்கல் தீர்ந்து விடும். அதாவது அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர், ஆளுநர் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆளுநர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியும்.

ஆனால் முதலமைச்சர் தனக்கு ஒரு அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை என்கிறார். ஆனால் இதே முதலமைச்சர்தான் கடந்த ஆண்டு கடிதம் எழுதி டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது ஆனால் அந்த அதிகாரத்தை ஆலோசனை வடிவில் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

ஒரு அமைச்சரை நியமிக்கும் போதும் அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் போதும் முதலமைச்சரது ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆளுநர் செயற்பட வேண்டும். தனித்து முதலமைச்சரோ அல்லது தனித்து ஆளுநரோ செயற்பட முடியாது. இரண்டு பேரும் சேர்ந்து செயற்பட வேண்டும்.

வட மாகாண சபையின் அமைச்சர் வாரியம் ஆளுநரால் முடக்கப் பட்டுள்ளதையிட்டு முதலமைச்சர் கவலைப்படவில்லை. சக்கட்டைத் தொழிலாளி தனது கருவிகளை குறைகூறுவது போல முதலமைச்சர் மற்றவர்களை விமர்சிப்பதில் காலத்தைக் கழிக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தான் விட்ட பிழையை (டெனீஸ்வரனை கடித மூலம் பதவி நீக்கம் செய்தது) ஒத்துக் கொள்ள அவரது ஆணவம் தன்முனைப்பு, அகங்காரம், தற்பெருமை, திமிர் (ego) விட மாட்டேன் என்கிறது.

அதனால் “நான் பிடித்த முயுலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார். அவருக்கு இருக்கிற நோயே அதுதான்.

நக்கீரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்!


மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்?

ஆங்கிலத்தில் “வினைத்திறனற்ற ஒரு தொழிலாளி தனது கருவிகளை குறைகூறுவானாம்” (A bad workman blame his tools).  முதலமைச்சரும் அப்படித்தான். ஆளுநர் ஆக சிங்கள இராணுவ தளபதி  இருப்பதால் மாகாண சபையால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்பார்.  சிங்கள இராணுவ தளபதியை மாற்றி ஒரு சிங்கள சிவில் அதிகாரியை ஆளுநர் ஆக நியமித்தால் அப்போதும் குறை சொல்லுவார்.

முதலமைச்சருக்கு இராசதந்திரம் துளியும் கிடையாது. சனாதிபதியோடு சண்டை, பிரதமரோடு தகராறு, சக அமைச்சர்களோடு சண்டை, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தின்  கொழும்பு வதிவிடப் பிரதிநிதியோடு சண்டை. இப்படிச் சண்டை பிடிப்பதிலேயே மனிதர் கடந்த ஐந்து ஆண்டுகளைக் கடத்தி விட்டார்.

13ஏ சட்ட திருத்தத்தில் குறைபாடுகள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் காரணமாகவே அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என எண்பதுகளில் இருந்து போராடி வருகிறோம்.  அது தொடர்பான முயற்சிதான் புதிய யாப்பு உருவாக்கும் முயற்சி.

13ஏ சட்ட திருத்தத்தில் உள்ள குறைபாடுகளைத் தெரிந்து கொண்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல்களில் கலந்து கொண்டோம்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். இருக்கிற அதிகாரங்களைப் பயன்படுத்தி நிறையச் செய்யலாம். அப்படிச் செய்ய முதலமைச்சர் தவறிவிட்டார் என்பதே எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முன் வைக்கும் குற்றச்சாட்டாகும். எதிர்க்கட்சித் தலைவர் கெட்டிக்காரன் என்பதால்தான் முதலமைச்சர் மாநாடுகளில் தான் போவதற்குப் பதில் எதிர்க்கட்சித் தலைவரை அனுப்புகிறார்.

வடக்கில் உள்ள 1098 பாடசாலைகளில்(22 தேசிய பாடசாலைகள் தவிர),சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர) 110  வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஏனைய மாகாண முதலமைச்சர்கள்  தங்களுக்கு அதிகாரம் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று பஞ்சப்பாட்டுப் பாடுவதில்லை. உள்ளதை வைத்துக் கொண்டு மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தி வேலைகளைச் செய்கிறார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போரினால் அழி்ந்த வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்ப, அ்ங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த ஒரு முறையேனும் மத்திய அமைச்சர்களோடு பேசியிருக்கிறாரா? பேசி நிதி உதவி பெற்றதுண்டா?

முன்னாள் நல்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மத்திய நல்லாழ்வு அமைச்சர் இராஜித  சேனரத்தின அவர்களைக் கண்டு பேசியதன் பலனாகவே வடக்கில் நெதர்லாந்து நாட்டின் மூலம்  பெற்ற உருபா  1400 கோடி செலவில் ஆறு மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

இதுபற்றி முதலமைச்சர் என்ன சொன்னார்? அல்லது என்ன செய்தார்? அமைச்சர் சத்தியலிங்கத்தின் சாதனையை பாராட்டினரா? அவரைத் தட்டிக் கொடுத்தாரா? இரண்டும் இல்லை. தனக்குத் தெரியாமல் அமைச்சர்கள் மத்திய அரசிடம் பேசி நிதிபெறுகிறார்கள் என்று பகிரங்கமாகச் சொன்னார். சத்தியலிங்கம் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்ச விடாப்பிடியாக நின்றதற்கு இது ஒரு காரணம். இன்னொரு காரணம் அடுத்த தேர்தலில் சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சி சார்பாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார் என்று யாரோ அவருக்குப் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்!


 

ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார்
விக்கிக்கு தவராசா மீண்டும் பதிலடி
யாழ்ப்பாணம்

04-08-2018

“கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத தவராசா வானம் ஏறி வைகுண்டத்தில் காலம் கழிக்கிறார்” என நேற்று முன்தினம் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவரைக் கிண்டல் செய்த வடக்கு முதல்வருக்கு மீண்டும் பதிலடி கொடுத்திருக்கிறார் தவராசா.

ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல்  என்று கூறிக் கொண்டே இருப்பர் என்று அவர் முதல்வரைச் சாடியும் உள்ளார்.

இது தொடர்பில் தவராசா நேற்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை வருமாறு,

கேள்வி: தங்கள் கட்சி தங் களை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் அவைத் தலைவரின் ஆசியினாலேயே தாங்கள் அப் பதவியில் உள்ள தாகவும், எமது (மாகாண சபையின்) அதிகாரங்களை மற்றவர் கள் மடக்கிப் பிடித்ததால்தான் நாங்கள் (மாகாண சபை) பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளாரே. அது பற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்: நான் இன்றோ நேற்றோ பதவிக்காக அரசியலுக்கு வந்தவனும் அல்லன். ‘வாயால் வடை சுடுபவனும்’ அல்லன்.
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பார்கள். இருக்கின்ற அதிகாரங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்கு ஆளுமையும், விவேகமும் தேவை. அங்குதான் எமது திறமையை வெளிக்காட்டல் வேண் டும். வடக்கு மாகாண சபை கடந்த 5 வருடங்களில் எங்களுக்கு இருக்கும் அதிகார வரம்புக்குள் வினைத்திறனாகச் செயற்பட்டு எத்தனையோ விடயங்களைச் செயற்படுத்தி இருக்க முடியும். அந்த இயலாத் தன்மையை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு. ஆதலினாற்தான் முதலமைச்சரைப் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கோரியுள்ளேன். தற்போதும் கோரி வருகின்றேன். முதலமைச்சர் தான் கடந்த ஐந்து வருடங்களில் மாகாண சபையை வினைத்திறனாகச் செயற்படுத்தி யுள்ளார் என்பதைப் பகிரங்க விவாதத்தில் நிரூபித்துக் காட்டட்டும். நான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகின்றேன்.

மாகாண சபையின் அசமந்தப் போக்கினால் நாம் இழந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ ஏராளம். அபிவிருத்தி என்பது ஏதோ கெஞ்சிப் பெறும் விடயமல்ல. அது எமது உரிமை யின் ஓர் அம்சம். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக்கான உரிமை சாசனம் இதனைத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட் டின்மையை விமர்சிக்கவில்லை. நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக நான் அரசியல் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத் தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே செயற்படு பவர்களில் நானும் ஒருவன். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன் சம காலத்தில் சிறையில் இருந்தவன்.

அண்மையில்தான் அரசியலுக்கு வந்த முதலமைச்சருக்கு நான் இங்கு குறிப்பிடும் பெயர்களே சில வேளைகளில் தெரி யாமலிருக்கலாம்.

சந்திரிகா அம்மையாரின் ஓகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு வரைவு தொடர்பான அமர்வுகளில் தொடர்ச்சியா கப் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்தவர்களில் நானும் ஒருவன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டு (2006/2007) தொடர் அமர்வுகளில் வடக்கைச் சேர்ந்த தனி மனிதனாக நின்று தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் அரசமைப்பு வரைவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான அறிக்கையைத் தயாரிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கியவன்.

தற்போதைய அரசியல் யாப்பு வரைவுக்கான பொது மக்கள் கருத்தறி குழுவின் உறுப்பினராக இருந்து அந்தக் குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விட யங்களில் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் அறிக்கையைத் தயா ரிப்பதில் முழுமையாகப் பங்களிப்புச் செய்தவன். அத்துடன் அரசமைப்புச் சபையின் மத்தி – மாகாணங்களுக்கிடையிலான உறவு தொடர்பான நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அதன் அறிக்கை வரைவில் அதேபோல் பங்காற்றியுள்ளேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் விதத்தில் அரசமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் அமையக் கூடிய வகையிலேயே எனது முன்மொழிவுகள் எப்போதும் அமைந்திருந்தன. எனது இந்த நிலைப்பாட்டையே முதலமைச்சரும் கொண்டிருப்பதனால்தான் முதலமைச்சர் சார்பில், அன்றைய அமைச்சர் குரு குலராஜாவையும் இணைத்துச் சென்று, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் முன்னால் நான் பரிந்துரைகளை வழங்கியிருந்தேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற் படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிரா கரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கூட்டுறவுத்துறை, கல்வி (வடக் கில் இயங்கும் 1098 பாடசாலை களில் 22 தேசிய பாடசாலைகள் தவிர), சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவ் விடயப் பரப்புகளை முற்றாக மாகாண சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு உபகுழுவின் ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை மாகாண சபையினால் 14 நியதிச் சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன. 

நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபையில் ஆளணிப் பற்றாக் குறை இருப்பதால் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவற்றைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள் கூட உதவ முன்வந்தன. அவற்றைக் கூடப் பாவித்து மாகாண சபையினால் நியதிச் சட்டங்களை ஆக்கத் தெரியவில்லை. இவர்களது மந்தப் போக்கைக் கண்டு எதிர்க்கட் சித் தலைவராக இருந்தும், நான் மீன்பிடி தொடர்பான நியதிச் சட்டத்தை இயற்றிக் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்திருந்தேன். இதுவரை அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது.

மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்புகளுக்கான நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலமே அவ்விடயப் பரப்புகளுக்கான மத்திய சட்டவாக்கங்களை வட மாகாணத்துக்குள் செயலிழக்கச் செய்ய முடியும். அதுவரை மாகாண விடயங்களில் மத்தி யின் தலையீடு சட்ட ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறே என்னால் மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற் பாட்டின்மையை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘ஆடத் தெரியாதவர் மேடை கோணல்’ என்று கூறிக் கொண்டே இருப்பர் . (காலைக்கதிர்)


கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாத தவராசா
வானம் ஏறி வைகுண்டத்தில் காலம் கழிக்கிறார்
அவைத் தலைவர் ஆசியால் இது சாத்தியமானது என முதல்வர் விக்கி கிண்டல்


யாழ்ப்பாணம், 03-08-2018

“மாகாணசபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்? கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவது எப்படி?” – என நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு அதே பதில் தந்திருக்கிறார்.

இது தொடர்பில் நேற்று அவர் அனுப்பி வைத்த கேள்வி – பதில் பின்வருமாறு அமைந்தது,

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார் என்று கேட்டுள்ளார். உங்கள் பதில் என்ன?

பதில்: தன் கட்சி தன்னை எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து நீக்கியும் அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்கின்றாரே. அது போலத்தான் முடியாது என்று எதுவும் இல்லை. பொலிஸாருடனும் நீதியுடனும் தொடர்புடையவன் நான். குற்றவாளிகள் சம்பந்தமாக தொழில் ரீதியாக நான் பல வருடகாலம் செயற்பட்டவன். இப்பொழுது கூட பல தடயங்கள் எனக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வேலிகள் பயிரை மேய விடக் கூடாது. சட்டம், ஒழுங்கு எனக்குப் பரிச்சயமான ஒரு துறை. ஆனால் அதற்கு அதிகாரம் கையில் இருக்க வேண்டும். அதிகாரம் கையில் இல்லாமல் எமுடியாது.

எமது அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்தான் நாங்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம்.

எ தி ர் க் க ட் சி த் தலைலவர் மாகாணசபை சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மட்டும் படித்து விட்டுப் பத்திரிகைகளுக்கு ஒப்புவித்தால் அது போதாது. மற்றைய சட்டங்கள் எவ்வாறு மாகாண சபையை வளைத்துப் பிடித்து செயலற்றதாக்கின்றன என்பதை யும் அவர் உணர வேண்டும்.

உதாரணத்திற்கு உள்ளூராட்சியின் முன்னேற்றம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கட்டுப்படுத்தப்படுகிறது. காணிகள் மீது எமக்கிருக்கும் உரித்துக்களை மகாவலிச்சட்டம் நலிவடையச் செய்துள்ளது.

மாகாணப் பாடசாலைகளின் முன்னேற்றங்கள்தேசியப் பாட சாலைகளை வைத்து அவற்றுள் உள்நுழைந்து கட்டுப்படுத்தப் படுகின்றன. எமது வைத்தியசாலைகளின் முன்னேற்றம் தேசிய வைத்திய சாலைகள் ஊடாக மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை. மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி வைத்த தலைவர் ஆசியால் வைகுண்டத்தில் இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்துவிட்டார்.

நண்பருக்கு தெரிந்தவை பற்றி அல்லது அவருக்கு வேண்டியவை பற்றி அவர் பேசுகிறார்.

அவை அவருக்குக் கிடைக்காததால் எம் மீது கோபம் கொள்ளகின்றார். முழு வட மாகாண நிர்வாகத்திலும் அவருக்கு நன்மை தரும் விடயங்களைத்தான் நாங்கள் இதுகாறும் கவனித்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். அவை செய்யப்படாவிட்டால் எமது செயற்பாடு செயற்றிறம் அற்றது என்கிறார்.

தப்பித்தவறி அவர் முதலமைச் சராக வந்தால் (கடவுள் அதனைத் தடை செய்வாராக!) அவ்வாறான நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார் என்று தெரிகின்றது. அபிவிருத்தித் திட்டங்களை நான்தான் இங்கு கொண்டு வந்து விட்டேன் என்று மார்தட்டிக்கூறி அரியாசனத்தில் இருப்போரின் அடியை ஆசையுடன் பற்றிச் செயற்படுவார் போல் தெரிகின்றது. உரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும்.

அவர் அடுத்த தேர்தலில் தமக்கு வழி அமைக்க என்னைச் சீண்டுகின்றார். முதலில் தனக்கு வாக்களிக்கப் போகும் மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அவர்கள் நன்மதிப்பைப் பெறட்டும். என்னுடன் மோதி மக்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று அவர் நினைத்தால் அது அவரின் பகல் கனவாகும்!

கூரை மேல் ஏறி குறை கூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது.

(காலைக்கதிர்)

 


மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்?

கேள்வி எழுப்புகிறார் தவராசா

யாழ்ப்பாணம், ஓக.02, 2018

மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா.  தாம் நேற்று வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

கேள்வி: பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவேன் என முதலமைச்சர் மத்திய அரசிற்குச் சவால் விட்டிருக்கின்றாரே இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?

பதில்: “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ என்றொரு பழமொழி உண்டு. கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றனவாகவும் அதன் உச்சக் கட்டமாக இன்று அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகவும் கெட்டித்தனமாகவும் செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும் அவ்வாறுதான் செயற்படுவார்.

2016 இறுதிப் பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளிற்கு தூரக்கணிப்பான் பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையைக் கொண்டு வரவிருந்தவேளையிலே போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகாரவரம்பிற்குள் உட்பட்ட விடயமாதலினால் அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில் அரச அதிபரைத் தலையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமித்தம் அரச அதிபர் அம் முயற்சியைக் கைவிட்டார். கொழும்பில் ரூ.50.00 இற்குச் செல்ல வேண்டிய தூரத்திற்கு யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஒரு வர்த்தமானிப் பிரசுரத்தின் மூலம் ஓர் இரவில் செய்யக் கூடிய இவ் வேலையை இரண்டு வருடங்களாகச் செய்யத் தெரியாமலிருக்கும் முதலமைச்சர் இரு மாதங்களில் வன்முறையை அடக்குவார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபை யின் முழுமையான அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களிலொன்று கூட்டுறவுத் துறை. கூட்டுறவுத் துறைக்கு வேண்டிய நியதிச் சட்டத்தை ஆக்கி இன்ற தூர்ந்து போயிருக்கும் கூட்டுறவுத் துறையை ஒழுங்குபடுத்தித் திறமையான நிர்வாகச் செயற்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இருக்கின்ற அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?

முதலமைச்சரின் கடந்த காலச் செயற்பாட்டின்மையின் விளைவாக  மாகாண சபை இன்று ஒரு கேலிக்கூத்தாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. மாகாண சபைக் காலப்பகுதியில் முதலமைச்சரினால் எமது அதிகார வரம்பிற்குள் செயற்படுத்தக் கூடிய – ஆனால் செயற்படுத்தத் தவறிய – விடயங்களை அடுக்கிக் கொண்டே போனால் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். அதற்கு மேலாக எமது பிரதேசத்திற்கு வரவவிருந்த எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் அசமந்தப் போக்கினால் எம்மை விட்டுச் சென்று விட்டன. அதனால்தான் அவரை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தேன்.

அரசிற்குச் சவால் விட்டிருக் கும் முதலமைச்சர் முதலில் நான் விட்ட சவாலை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு வந்து கடந்த காலங்களில் மாகாண சபையை வினைத்திறனாகச் செயற்பட வைத்தார் என நிரூபித்துக் காட்டிவிட்டு பொலிஸ் அதிகாரத்தைக் கோரட்டும்.

கேள்வி: அண்மைய மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி டெனிஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார் என்றும் அரசமைப்பிற்கு அமைவாக மாகாண சபையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் இது தொடர்பாக முதலமைச்சரின் ஆலோசனையைக் கோரியுள்ளர் எனவும் இதுவரை முதலமைச்சர் அதற்குப் பதிலிறுக்கவில்லை எனவும் கூறுகின்றார். அதே வேளை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையத் தனக்குப் பதவி நீக்கும் அதிகாரம் இல்லை என்றும் அது ஆளுநரையே சாரும் என்றும் ஆதலினால் அது தொடர்பான நடவடிக்கையை ஆளுநரே எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?

பதில்: தங்கள் கேள்வியில் கூறப்பட்டுள்ள முதலமைச்சரின் கூற்றினைப் பார்க்கும் போது ஏதோ ஒரு படத்தில் வரும் வாழைப் பழக் கதைதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்தினு டைய தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு களில் கூறப்பட்டுள்ள விடயங்களாவன:

அ) டெனிஸ்வரன் அவர்கள் தொடர்ந்து அமைச்சராக(முன்பு வகித்த அமைச்சுப் பொறுப்புகள்) செயற்படுவதற்குப் பிரதி வாதிகள் (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) தலையீடு செய்வதற்கு அல்லது தடுப்பதற்குத தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆ)முதலமைச்சரினால் டெனிஸ்வரன் அவர்களிற்கு அவரைப் பதவி நீக்கம் செய்வதாக எழுதப்பட்ட கடிதத்தினை (உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன். ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்) நடைமுறைப்படுத்துவதனை நிறுத்தி வைத்தல்.

இ) ஏற்கனவே ஆளுநரினால் டெனிஸ்வரன் வகித்த அமைச்சுப் பொறுப்புகளிற்குப் பொறுப்பாக அமைச்சர்களை நியமித்து அறிவிக்கப்பட்டிருந்த வர்த்தமானிப் பிரசுரத்தின் மேற்படி அறிவிப்புகளின் செயற்பாட்டினை நிறுத்தி வைத்தல். இவ்விடைக்காலத் தடை உத்தரவிற்கு மேலதிகமாக நீதி மன்றத்தினால் கூறப்பட்டுள்ளவிடயங்களாவன:

இந் நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தினை வழங்கியதன் அடிப்படையில், அரசமைப்பில் அமைச்சர்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நியமன அதிகாரி (ஆளுநர்) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

(In view of the findings of this Court and the interim relief granted, it is for the appointing authority to consider the constitutional restriction on the number of Ministers and take suitable action)

இவ்விடைக்காலக் கட்டளை மனுதாரரை (டெனிஸ்வரன்) சட்டப்படி பதவியிலிருந்து நீக்குவதனை எவ் விதத்திலும் தடுக்காது. ஆதலினால் அவை சீர் செய்ய முடியாத விடயங்களாக பிரதி வாதிகளிற்கு (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) அமையாது.

(On the other hand, the interim relief will not prevent the Petitioner from being duly removed from his post according to law. Hence there will be no irreparable mischief or injury to the Respondents.)

அரசமைப்பின் பிரகாரம் அமைச்சர்களை நியமிக்கும் இவ்விடயத்தில் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டும். இங்கு ஆளுநர் நீதிமன்றக் கட்டளைக்கு அமைய அமைச்சர்களைக் குறைத்து மீள் நியமனம் செய்ய  வேண்டியிருக்கின்றது. அவ்வாறு மீள் நியமனம் செய்ய வேண்டியவர்கள் யார், யார் என்பதை ஆளுநரிற்கு ஆலோசனை வழங்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கே உரியது. இதுவரை அவர் அதனைச் செய்யத் தவறிவிட்டார்.

இதற்கு மேலும் இவ் விடயத்திற்கு விளக்கமளிக்க முற்படுவேனாயின் நானும் வாழைப் பழக் கதையின் ஓர் பாத்திரமாக மாற வேண்டியிருக்கும். (காலைக்கதிர்)

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply