எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்

எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்

2018-01-18

திரு­கோ­ண­மலை நக­ர­சபை, வேட்­பா­ளர்­க­ளுடன் கூடிய மக்கள் கலந்­து­ரை­யா­ட­லொன்று செவ்­வாய்க்­கி­ழமை மாலை மட்­டிக்­களி ராஜ­வ­ரோ­தயம் சதுக்கம் விநா­ய­க­பு­ரத்தில் நக­ர­சபை அப­ய­புர வட்­டார வேட்­பாளர் தம்­பி­ராஜா ராஜ்­குமார் தலை­மையில் நடை­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்ண சிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்­டா­யு­த­பாணி, நக­ர­சபை வேட்­பா­ளர்­க­ளான த.ராஜ்­குமார், ரமேஷ், என் ராச­நா­யகம், க. செல்­வ­ராஜா, திரு­மலை நவம், திரு­மதி. சரோ­ஜினி, கோகி­ல­ராஜா, வ.ராஜ்­குமார், தனராஜ், சே.ஸ்ரீஸ்­கந்­த­ராஜா மற்றும் பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­ச­சபை வேட்­பா­ளர்­களும் கலந்து கொண்­டனர்.

இங்கு எதிர்க்கட்சித்தலைவர் உரையாற்றுகையில்,

“கொடிய ஆட்­சி­யொன்றை இறக்கி, நல்­லாட்­சி­யொன்­றைக்­கொண்டு வந்­தார்கள். அவ்­வாட்­சியை மாற்றிக் காட்­டு­வோ­மென சிலர் சூளு­ரைக்­கின்­றார்கள். அந்­நி­லைமை ஏற்­ப­டு­மானால் யார் ஆட்­சிக்கு வரு­வார்கள் என்­பதை மக்கள் உணர்ந்து புத்­தி­சா­லித்­த­ன­மாக செயற்­ப­ட­வேண்டும். உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வ­டைந்த பின்பு இந்த நாட்டின் பிர­தமர் கதி­ரையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ ஏறுவார் என்று முன்னாள் அமைச்­சரும் எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கூறி­யுள்­ளதை பத்­தி­ரி­கையில் படித்தேன்.

அதேபோல் நடை­பெ­ற­வுள்ள இந்த உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. ஏனெனில் தேர்­தலின் முடி­வுகள் இலங்­கையில் தமி­ழீழம் உரு­வாகப் போகின்­றதா? அல்­லது ஒற்­றை­யாட்சி தொடரப் போகின்­றதா/ என்­பதை தீர்­மா­னிக்கப் போகி­றது என்று முன்னாள் தலைவர் ஜனா­தி­பதி மஹிந்த கூறி­யி­ருந்தார். இதி­லி­ருந்து தேர்­தலின் முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­ள­வேண்டும் தமிழ் மக்கள். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை நாம் தீவி­ர­மாக கையா­ள­வில்­லை­யென்றும் எம்­மீது குற்­றச்­சாட்­டு­களை சுமத்த முயற்­சிக்­கின்­றார்கள்

அது தவறு. நாங்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளல்ல. நாங்கள் அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வி­களை ஏற்­க­வில்லை. ஏற்­கவும் மாட்டோம். தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும்­வரை நாம் எதையும் ஏற்­கப்­போ­வ­தில்லை. அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருக்­கப்­போ­வ­து­மில்லை. உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு தரப்­பட வேண்டும். அவர்கள் வாழும் பிர­தே­சங்­களில் அவர்­களின் கரு­மங்­களை தாமே கையா­ளக்­கூ­டிய நிலைமை உரு­வா­கும்­வ­ரையில் நாங்கள் அமைச்சர் பத­வி­களை ஏற்­க­மாட்டோம்.

இந்­நாட்டில் ஏலவே ஒரு கொடூ­ர­மான ஆட்­சி­யி­ருந்­தது. எமது மக்­களின் ஆத­ர­வுடன் 2015 ஆம் ஆண்டு அவ்­வாட்­சிக்கு முடிவு கட்­டப்­பட்­டது. மக்­களின் ஜன­நா­யக உரி­மையின் முழு­மை­யான பலம் அந்த தேர்­தலில் பயன்­ப­டுத்­தியே மேற்­படி கொடிய ஆட்சி மாற்­றப்­பட்­டது. அம்­மாற்­றத்தைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண அர­சியல் சாசன ரீதி­யாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் காணு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முயற்­சிகள் எடுத்து வரு­கின்றோம்.

சம்­பூரில் 1000 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட மக்­க­ளு­டைய காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் முல்­லைத்­தீவு கேப்­பா­பு­லவு ஆகிய இடங்­களில் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 10 நாட்­க­ளுக்கு முன்பு 133 ஏக்கர் காணி கேப்­பா­பு­லவில் மக்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இன்னும் 70 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட வேண்டும். இது சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­திக்கு கடு­மை­யான கடிதம் எழு­தி­யி­ருக்­கிறேன். கிளி­நொச்­சியில் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. வலி­காமம் மற்றும் மயி­லிட்டி துறை­முகம் திருப்பி மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது எனவே பல கரு­மங்கள் நடை­பெ­று­கின்­றன.

சிறை­யி­லி­ருந்த 50 வீத­மான கைதிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். காணா­மல்­போனோர் தொடர்பில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்டு அவ்­வி­சா­ர­ணைகள் விரை­வில்­ஆ­ரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் தாமதம் நில­வு­கி­றது என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். இது விடயம் தொடர்பில் கார­சா­ர­மாக அர­சாங்­கத்தை கண்­டித்து வரு­கின்றோம். சர்­வ­தேச சமூ­கத்­துடன் பேசும்­போது அர­சாங்­கத்தை கண்­டித்­தி­ருக்­கின்றோம். கூடிய அழுத்­தங்­களை கொடுத்து வரு­கிறோம்.

பத­விக்­காக மக்­க­ளு­டைய உரி­மை­களை விற்­ப­வர்கள் நாங்­க­ளல்ல. அதை நாம் ஒரு­போதும் செய்­ய­மாட்டோம். நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் நீங்கள் அளிக்­கப்­போ­கின்ற வாக்­குகள் தமி­ழர்­க­ளு­டைய நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­க­வேண்டும். எமது மக்கள் ஒரு­மித்து ஒற்­று­மை­யாக அளிக்­கின்ற வாக்­குகள் ஒரு­மித்த நாட்­டுக்குள் நாடு பிரிக்­கப்­ப­டாமல் வர­லாற்று ரீதி­யாக தமிழ் மக்கள் வாழ்ந்­து­வந்த பிர­தே­சங்­களில் தமது இறை­மையின் அடிப்­ப­டையில் ஆரோக்­கி­ய­மான, கௌர­வ­மான அந்­தஸ்­தைப்­பெ­று­வ­தற்கு உறு­தி­யான தீர்வு வெளி­வ­ர­வேண்டும். அதுதான் இந்த தேர்­தலில் நாம் அடை­யக்­கூ­டிய முக்­கி­ய­மான விடயம்.

உள்­ளூ­ரட்சி மன்­றப்­பட்­டி­யலை, அதிக பலத்­துடன் உரு­வாக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அது மட்­டு­மன்றி நிறை­வேற்று அதி­கா­ரத்தை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு ஒப்­ப­டைக்க ஒழுங்கு செய்­யப்­பட வேண்­டு­மென்ற கருத்து தற்­பொ­ழுது நிலவி வரு­கி­றது அதை நாம் வர­வேற்­கின்றேம். அந்த நிலைமை ஏற்­ப­டு­மாக இருந்தால் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் நியா­ய­மான அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி கரு­மங்­களை கையா­ளக்­கூ­டிய ஒரு நிலைமை உரு­வாகும்.

எங்கள் மக்­களின் கைகளில் எப்­பொ­ழுதும் இருக்­கின்ற பலம் வாய்ந்த ஆயுதம் மக்­க­ளு­டைய வாக்­காகும். மக்­க­ளு­டைய வாக்­கென்­பது இறை­மை­யு­டைய முத­லம்­ச­மாகும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை நாட்­டி­லுள்­ள­வர்கள் சர்­வ­தேச சமூ­கத்­தினர் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வட­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் என்­ன­வி­த­மாக வாக்­க­ளிக்கப் போகி­றார்கள் என்று தமிழ் மக்கள் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து வாக்­க­ளிப்­பார்­களா என்­பதை மிக உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தமிழ் மக்கள் குறிப்­பிட்ட கொள்­கைக்­காக நீண்ட கால­மாக போராடி வந்­திக்­கி­றார்கள். தங்கள் இறைமை மதிக்­கப்­ப­ட­வேண்டும். உள்­ளக சுய­நிர்­ணய உரிமை மதிக்­கப்­பட வேண்டும். தாங்கள் வாழும் பிர­தே­சங்­களில் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தங்­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி காக்­க­வேண்­டிய உரிமை இருக்க வேண்­டு­மென்று கரு­து­கி­றார்கள்.

ஐ.நா.வின் சர்­வ­தேசப் பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டையில் குறித்த மக்­களை ஆட்சி புரி­வ­தற்கு அடிப்­படை ஒழுங்கு என்­ன­வெனில் அம்­மக்­களின் சம்­ம­த­மாகும். மக்­க­ளு­டைய சம்­ம­த­மில்­லாமல் அம் மக்­களை ஆட்சி புரிய முடி­யாது. கடந்த எழு­பது வரு­டங்­க­ளாக நாட்டை ஆண்­ட­வர்கள் தமிழ் மக்­க­ளு­டைய சம்­ம­த­மில்­லாமல் தமிழ் மக்­களை ஆட்சி புரிந்து வந்­தி­ருக்­கின்­றார்கள். இது ஒரு தொடர்­க­தை­யாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. நாங்கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எமது சம்­ம­தத்தை தெரி­விக்­க­வில்­லை­யென நான் கூறு­வ­தற்கு கார­ண­மென்­ன­வென்றால் 1947 ஆம் ஆண்டு தொட்டு வடகிழக்கில் இன்றுவரை ஜனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த முடிவுகளை நோக்கினால் ஆட்சி புரிந்தவர்களுக்கு எம்மை ஆளுவதற்கு நாம் சம்மதம் வழங்கவில்லை.

சம்மதம் இல்லாமல்தான் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்.போர் முடிந்த பின் ஐ.நா. முன்னை நாள் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அவரை நான்  த.தே.கூ. அமைப்பினரோடு சென்று சந்தித்தேன். யாழில் சந்தித்தவேளை அவரிடம் ஒரு விடயத்தை தெளிவாக கூறினேன். இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் சம்மதத்துடன் ஆட்சி புரியப்படவில்லை. மாறாகவே அவர்கள் மீது ஆட்சி புரியப்பட்டிருக்கிறது. இது ஐ.நா. பிரகடனத்துக்கு மாறான விடயமென்று கூறியதுடன் இது தொடர முடியாது எனக் கூறினேன் என்றார்.

http://tnaseiithy.com/home-news/we-will-have-to-change-the-regime-without-our-consent


நேர்காணல்கள்MORE

நாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார்  அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு

MORE

EPLRF Trying To Create Confusion; Ilankai Tamil Arasu Katchi Secretary Thurairasasingham

Ilankai Tamil Arasu Katchi (ITAK) Secretary and former Minister of Agriculture for the Eastern Province, Krishnapillai Thurairasasingham said there will be no change just because the EPRLF broke away from the Tamil National Alliance (TNA).

MORE

http://tnaseiithy.com/home-news/we-will-have-to-change-the-regime-without-our-consent


 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply