யாழில் இடம்பெற்ற படகு விபத்து: மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானதுa

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும் மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக மண்டைதீவு – சிறுதீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் படகு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

படகு பயணத்தின் போது, அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த படகும் பயணத்துக்கு ஏற்ற வகையில் உரிய தரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடம்பெற்ற படகு விபத்தில் குறித்த படகில் பயணித்த 7 மாணவர்களுள் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18, நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17, தனுரதன் (கொக்குவில்) 20, பிரவீன் (நல்லூர்) 20, தினேஷ் (உரும்பிராய்) 17, தனுசன் (சண்டிலிப்பாய்) 18 ஆகியோரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply